Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

விசுவாசிகளுக்கு எதிரான கண்ணுக்குப் புலப்படாத யுத்தம்* ( *An Invisible War Against the Children of God)*
*உங்கள் சிந்தனைக்கு.*

**உங்கள் சிந்தனைக்கு.*

*விசுவாசிகளுக்கு எதிரான கண்ணுக்குப் புலப்படாத யுத்தம்*
( *An Invisible War Against the Children of God)*

மனம் திரும்பிய ஒவ்வொரு விசுவாசிக்கும் எதிராக பிசாசினால் நடத்தப்படும் ஒரு *கண்ணுக்குப் புலப்படாத யுத்தம்* *உள்ளது* . தேவன் ஏதேன் தோட்டத்தில் சர்ப்பத்தைச் சபித்த நாள் முதல், இந்த யுத்தம் தேவனுடைய பிள்ளைகளுக்கு எதிராக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த உண்மையை ஒவ்வொரு விசுவாசியும் அடிப்படையாகப் புரிந்துகொள்ள வேண்டும். நமக்கு எதிராக ஒரு கண்ணுக்குப் புலப்படாத ஆவிக்குரிய யுத்தம் இருக்கிறது என்பதை அறியாமல், ஆவிக்குரிய வாழ்க்கையில் வெற்றிபெற முடியாது.

சாத்தான் பெரும்பாலும் நேரடியாக மோதுவதில்லை. சர்ப்பத்தைப் போல, நாம் எதிர்பாராத நேரங்களில், எதிர்பாராத வழிகளில், எதிர்பாராத நபர்கள் மூலமாகத் தாக்குதல்களை நடத்துகிறான். நம்முடைய நற்சாட்சியையும் புகழையும் களங்கப்படுத்த முயற்சிக்கிறான்.

அவன் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தலாம்; நல்ல உறவுகளைப் பிரிக்க முயற்சிக்கலாம்; சில நேரங்களில் கொடிய நோய்களின் மூலம் மனச்சோர்வை உண்டாக்கலாம். குடும்பங்களில் தந்திரமான பிரிவினைகளை உருவாக்கலாம். கணவன்–மனைவி உறவுகளிலும், பெற்றோர்–பிள்ளைகள் உறவுகளிலும் மறைமுகமாக நுழைந்து, அவற்றை சீர்செய்ய முடியாத அளவிற்கு பாதிக்க முயற்சிக்கிறான்.

எனவே, சாத்தானை அலட்சியமாக எடுத்துக்கொள்ள முடியாது. தொடர்ந்து ஜெபிப்பதும், வேதத்தை வாசிப்பதும், தேவப் பிள்ளைகளோடு ஐக்கியத்தில் நிலைத்திருப்பதும் மிகவும் அவசியம்.

*மறைமுக போராட்டம்

*ஆவிக்குரிய போராட்டம் முழுநேர ஊழியர்களுக்கு* *மட்டுமல்ல; விசுவாசிகளுக்கும் அதிகமாகவே உள்ளது.* " *முழுநேர ஊழியர்களுக்குத்தான் சோதனைகள் அதிகம்;* *சாதாரண விசுவாசிகளுக்கு அவ்வளவு சோதனைகள் இருக்காது" என்ற* *எண்ணம் பிசாசின் ஒரு தந்திரமாக இருக்கலாம்* . *இதை விசுவாசிகள் புரிந்துகொள்ள வேண்டும்.*

*எந்த அளவுக்கு விசுவாசிகளை அவன் வீழ்த்துகிறானோ, அந்த அளவுக்கு அவனுடைய ராஜ்யம் இந்த உலகத்தில் வலிமை பெறுகிறது.*


*அநேக நேரங்களில் உலக மக்கள், ஊழியர்களைவிட *விசுவாசிகளையே கிறிஸ்துவின் உண்மையான பிரதிநிதிகளாகப் பார்க்கிறார்கள். இந்த உண்மை மிகவும் முக்கியமானது.**

ஊழியர்கள் சந்திக்கும் சோதனைகளைத் தாங்கிக்கொள்ள உதவ பலர் முன்வரலாம். ஆனால் அதேபோன்ற உதவி ஒரு உண்மையான விசுவாசிக்குப் பல நேரங்களில் கிடைக்காமல் போகலாம். அதனால், விசுவாசிகள் தங்களுடைய ஆவிக்குரிய போராட்டங்களை தனித்து எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படுகின்றன.

*எந்த நாளில் விசுவாசிகளைப் பிசாசு வீழ்த்தி வெற்றி காண்கிறானோ,* *அந்த நாளில் சபை தனது வல்லமையை இழக்கத்* *தொடங்கும்* .

ஆகையால், விசுவாசிகள் ஆவிக்குரிய வாழ்க்கையை ஒரு போராட்டக்களமாகக் கருத வேண்டும்.

விசுவாசிகளுடைய வாழ்க்கையில் பிலேயாம் போன்றவர்களும் வருவார்கள். தியோத்திரேப்பு போன்றவர்களும் நுழையலாம். மேலும், தேமா, யூதாஸ், நன்மையும் நியாயமும் எது என்று அறிந்தும் அதைச் செய்ய மறுத்த பிலாத்து, இயேசுவை இரகசியமாகப் பின்பற்றிய நிக்கொதேமு போன்ற பல்வேறு மனிதர்களை சாத்தான் பயன்படுத்த முயற்சிக்கலாம்.

இவற்றை மேற்கொள்ளவும், வெற்றிகரமாக எதிர்கொள்ளவும், விசுவாசிகளுக்கு தேவ கிருபை, பட்டயமாகிய தேவ வார்த்தை மற்றும் உறுதியான ஜெப வாழ்க்கை மிகவும் அவசியம்.

இந்த சத்தியங்களில் விசுவாசிகளை வளர்க்கும் பொறுப்பு ஆவிக்குரிய தலைவர்களுக்குள்ளது. இதை அவர்கள் புறக்கணித்தால், வல்லமையுள்ள அடுத்த தலைமுறை விசுவாசிகளை உருவாக்க முடியாது.

படிக்க: ஆதியாகமம் 3:13-15, எபேசியர் 6:12, 2 கொரிந்தியர் 11:3.

எசேக்கியேல் சண்முகவேல்
மனம் திரும்பிய ஒவ்வொரு விசுவாசிக்கும் எதிராக பிசாசினால் நடத்தப்படும் ஒரு *கண்ணுக்குப் புலப்படாத யுத்தம்* *உள்ளது* . தேவன் ஏதேன் தோட்டத்தில் சர்ப்பத்தைச் சபித்த நாள் முதல், இந்த யுத்தம் தேவனுடைய பிள்ளைகளுக்கு எதிராக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த உண்மையை ஒவ்வொரு விசுவாசியும் அடிப்படையாகப் புரிந்துகொள்ள வேண்டும். நமக்கு எதிராக ஒரு கண்ணுக்குப் புலப்படாத ஆவிக்குரிய யுத்தம் இருக்கிறது என்பதை அறியாமல், ஆவிக்குரிய வாழ்க்கையில் வெற்றிபெற முடியாது.

சாத்தான் பெரும்பாலும் நேரடியாக மோதுவதில்லை. சர்ப்பத்தைப் போல, நாம் எதிர்பாராத நேரங்களில், எதிர்பாராத வழிகளில், எதிர்பாராத நபர்கள் மூலமாகத் தாக்குதல்களை நடத்துகிறான். நம்முடைய நற்சாட்சியையும் புகழையும் களங்கப்படுத்த முயற்சிக்கிறான்.

அவன் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தலாம்; நல்ல உறவுகளைப் பிரிக்க முயற்சிக்கலாம்; சில நேரங்களில் கொடிய நோய்களின் மூலம் மனச்சோர்வை உண்டாக்கலாம். குடும்பங்களில் தந்திரமான பிரிவினைகளை உருவாக்கலாம். கணவன்–மனைவி உறவுகளிலும், பெற்றோர்–பிள்ளைகள் உறவுகளிலும் மறைமுகமாக நுழைந்து, அவற்றை சீர்செய்ய முடியாத அளவிற்கு பாதிக்க முயற்சிக்கிறான்.

எனவே, சாத்தானை அலட்சியமாக எடுத்துக்கொள்ள முடியாது. தொடர்ந்து ஜெபிப்பதும், வேதத்தை வாசிப்பதும், தேவப் பிள்ளைகளோடு ஐக்கியத்தில் நிலைத்திருப்பதும் மிகவும் அவசியம்.

*மறைமுக போராட்டம்

*ஆவிக்குரிய போராட்டம் முழுநேர ஊழியர்களுக்கு* *மட்டுமல்ல; விசுவாசிகளுக்கும் அதிகமாகவே உள்ளது.* " *முழுநேர ஊழியர்களுக்குத்தான் சோதனைகள் அதிகம்;* *சாதாரண விசுவாசிகளுக்கு அவ்வளவு சோதனைகள் இருக்காது" என்ற* *எண்ணம் பிசாசின் ஒரு தந்திரமாக இருக்கலாம்* . *இதை விசுவாசிகள் புரிந்துகொள்ள வேண்டும்.*

*எந்த அளவுக்கு விசுவாசிகளை அவன் வீழ்த்துகிறானோ, அந்த அளவுக்கு அவனுடைய ராஜ்யம் இந்த உலகத்தில் வலிமை பெறுகிறது.*


*அநேக நேரங்களில் உலக மக்கள், ஊழியர்களைவிட *விசுவாசிகளையே கிறிஸ்துவின் உண்மையான பிரதிநிதிகளாகப் பார்க்கிறார்கள். இந்த உண்மை மிகவும் முக்கியமானது.**

ஊழியர்கள் சந்திக்கும் சோதனைகளைத் தாங்கிக்கொள்ள உதவ பலர் முன்வரலாம். ஆனால் அதேபோன்ற உதவி ஒரு உண்மையான விசுவாசிக்குப் பல நேரங்களில் கிடைக்காமல் போகலாம். அதனால், விசுவாசிகள் தங்களுடைய ஆவிக்குரிய போராட்டங்களை தனித்து எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படுகின்றன.

*எந்த நாளில் விசுவாசிகளைப் பிசாசு வீழ்த்தி வெற்றி காண்கிறானோ,* *அந்த நாளில் சபை தனது வல்லமையை இழக்கத்* *தொடங்கும்* .

ஆகையால், விசுவாசிகள் ஆவிக்குரிய வாழ்க்கையை ஒரு போராட்டக்களமாகக் கருத வேண்டும்.

விசுவாசிகளுடைய வாழ்க்கையில் பிலேயாம் போன்றவர்களும் வருவார்கள். தியோத்திரேப்பு போன்றவர்களும் நுழையலாம். மேலும், தேமா, யூதாஸ், நன்மையும் நியாயமும் எது என்று அறிந்தும் அதைச் செய்ய மறுத்த பிலாத்து, இயேசுவை இரகசியமாகப் பின்பற்றிய நிக்கொதேமு போன்ற பல்வேறு மனிதர்களை சாத்தான் பயன்படுத்த முயற்சிக்கலாம்.

இவற்றை மேற்கொள்ளவும், வெற்றிகரமாக எதிர்கொள்ளவும், விசுவாசிகளுக்கு தேவ கிருபை, பட்டயமாகிய தேவ வார்த்தை மற்றும் உறுதியான ஜெப வாழ்க்கை மிகவும் அவசியம்.

இந்த சத்தியங்களில் விசுவாசிகளை வளர்க்கும் பொறுப்பு ஆவிக்குரிய தலைவர்களுக்குள்ளது. இதை அவர்கள் புறக்கணித்தால், வல்லமையுள்ள அடுத்த தலைமுறை விசுவாசிகளை உருவாக்க முடியாது.

படிக்க: ஆதியாகமம் 3:13-15, எபேசியர் 6:12, 2 கொரிந்தியர் 11:3.