Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

எஸ்தர் புத்தகம் – வேதபாடம் 13 *Expository Commentary on the Book of Esther
*உங்கள் சிந்தனைக்கு*

எஸ்தர் புத்தகம் – வேதபாடம் 13

*Expository Commentary on the Book of Esther.*

*God Is Always in Control*

எஸ்தர் புத்தகம் 5:14 முதல் 6:5 வரையிலான வசனங்களை இணைத்துப் பார்த்தால், ஒரு முக்கியமான சத்தியம் நமக்குத் தெளிவாகப் புலப்படும்: இந்த உலகம் முழுவதும் தேவனுடைய கட்டுப்பாட்டில்தான் இயங்குகிறது. *ஒரு இமைப்பொழுதுகூட அவர் out of control ஆக இருப்பதில்லை.*

*இமைப்பொழுதும் நம்மைக் கைவிடாத தேவன்* என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சிறந்த உதாரணமாகும். ஒரு கணம்கூட அவர் நம்மைக் கைவிட்டுவிட்டால், நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான விபரீதங்கள் ஏற்படக்கூடும்.

இந்த வசனங்களில் இடம்பெறும் நிகழ்வுகளை ஒன்றோடொன்று இணைத்துப் பார்க்க வேண்டும்.

ஆமான், எழுபத்தைந்து அடி உயரமுள்ள ஒரு தூக்கு மரத்தைச் செய்து, மறுநாள் காலையில் மொர்தெகாயை அதில் தூக்கிலிட அரசனிடம் அனுமதி கேட்கத் திட்டமிட்டிருந்தான். இந்த ஆலோசனையை அவனுடைய மனைவியும் நண்பர்களும் அவனுக்குக் கொடுத்திருந்தனர்.

ஆனால் அந்த இரவில் அரசனுக்கு நித்திரை வரவில்லை. எனவே, தனது அரசாட்சியின் நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டிருந்த வரலாற்றுப் புத்தகத்தைக் கொண்டுவந்து தனக்கு வாசித்துக் காட்டும்படி கட்டளையிட்டான்.

அப்போது, அகாஸ்வேரு அரசனைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியிருந்த வாசல் காவலர்களான பிக்தானா மற்றும் தேரேசு ஆகிய இருவரையும் மொர்தெகாய் காட்டிக்கொடுத்திருந்ததாகப் பதிவு செய்யப்பட்டிருந்ததை வாசித்துக் காட்டினார்கள்.

அதை கேட்ட அரசன், “இதற்காக மொர்தெகாய்க்கு என்ன கௌரவமும் மதிப்பும் கொடுக்கப்பட்டது?” என்று கேட்டான். அதற்கு, “எதுவும் கொடுக்கப்படவில்லை” என்று பதில் வந்தது.

அந்த நேரத்தில்தான் அரசன், “முற்றத்தில் நிற்பது யார்?” என்று கேட்டான். அதே சமயத்தில், தானே அமைத்திருந்த தூக்கு மரத்தில் மொர்தெகாயைத் தூக்கிலிடுவதற்கான அனுமதியைப் பெற ஆமான் அரண்மனையின் வெளிமுற்றத்திற்குள் வந்திருந்தான்.

அரசனின் ஏவலாட்கள், “முற்றத்தில் ஆமான் நிற்கிறான்” என்று சொல்ல, அரசன் அவனை உள்ளே வரும்படி கட்டளையிட்டான்.

அதன்பிறகு நடந்ததெல்லாம் நமக்குத் தெரியும். மொர்தெகாயைக் கொல்ல நினைத்த ஆமானையே பயன்படுத்தி, அரசன் மொர்தெகாயைக் கனம் பண்ணினான்.

இங்கே நாம் சிந்திக்க வேண்டிய முக்கியமான காரியம் என்னவென்றால், *ஆமான் சிறிது நேரம் முன்னதாக வந்திருந்தால், தனது வேண்டுகோளை* *அரசனிடம் சொல்லி, மொர்தெகாயைக் கொல்வதற்கான* *அனுமதியைப் பெற்றிருக்கலாம்.* *ஆனால் அப்படி நடக்க தேவன் அனுமதிக்கவில்லை* .

ஆமான் அரசனைச் சந்திக்க வந்த நேரமும், மொர்தெகாயைக் கௌரவிக்க வேண்டும் என்ற உணர்வு அரசனுக்குள் எழுந்த நேரமும் ஒன்றாக இணைந்து வரும்படி தேவன் கிரியையாற்றினார்.

இந்த நிகழ்வின் மூலம், சரியான நேரத்தில் ஆமானை அரசனைச் சந்திக்க வரவழைத்து, மொர்தெகாயை தேவன் காப்பாற்றினார்.

தேவன் *தம்முடைய பிள்ளைகளைக் காப்பாற்றுவதில் ஒருபோதும் காலம்* *தாழ்த்துவதில்லை* . ஏற்ற நேரத்தில், ஏற்ற சமயத்தில் தலையிட்டு அதிசயங்களைச் செய்வார். *அவருடைய கால அட்டவணை மிகவும் நேர்த்தியானது* ; அது மாற்றத்திற்கு உட்பட்டதல்ல.

*அவர் எல்லாவற்றையும் அதனதன் காலத்தில் நன்மைக்கு ஏதுவாக முடித்துக் கொடுப்பார். இந்த விசுவாசம்* *நம் அனைவருக்கும் மிகவும் அவசியமானது.*

இந்த சத்தியம் நம் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருந்தால், நாம் பதற்றப்பட மாட்டோம். பல நேரங்களில் நம்முடைய விசுவாசம் குறைவுபடுவதால்தான் பதற்றங்களும் கவலைகளும் ஏற்படுகின்றன.

நெருக்கடிகளும் நிர்பந்தங்களும் வரும்போது நாம் பற்றிக்கொள்ள வேண்டிய ஒரே சத்தியம்:

“ *God is in control.”*

ஆனால் மோசேயைப் போல நாம் பல நேரங்களில் பதறி, தேவனுடைய செயல்திட்டத்தைப் புரிந்துகொள்ளாமல் திணறுகிறோம்.

நமக்குப் பதற்றப்படாத விசுவாசத்தையும், அவருடைய பரிபூரண பரிபாலனத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையையும் தேவன் தாமே அருள்வாராக.