Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

2 நாளாகமம் / குறிப்பேடுகள் புத்தகம் வேத பாடம் – 17 ஆய்வுக் கட்டுரை
உங்கள் சிந்தனைக்கு
2 நாளாகமம் / குறிப்பேடுகள் புத்தகம்
வேத பாடம் – 17
ஆய்வுக் கட்டுரை
யூத அரசன் மனாசே பாபிலோனுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக சொல்லப்படுவது சரியா?
பரிசுத்த ஆவியானவரால் தூண்டப்பட்டு எழுதப்பட்ட இந்த வேத புத்தகத்தில் வரலாற்றுப் பிழைகள் உள்ளன, வேதம் பிழையற்றது அல்ல என்று சொல்லக்கூடிய குற்றச்சாட்டுகள் பல உண்டு. அவற்றில் ஒன்றுதான் “மனாசே பாபிலோனுக்கு எடுத்துச் செல்லப்பட்டான்” என்கிற வாக்கியம்.
முதலில் யார் இந்த மனாசே? என்பதைப் பார்க்கலாம்.
இவருடைய தகப்பன் எசேக்கியா ராஜா – யூத வம்சத்தை ஆண்ட மிகச் சிறந்த அரசர்களில் ஒருவன். ஆனால் அவனுடைய மகன்தான் மனாசே. மனாசே மிகப் பெரிய தீமைகளைச் செய்த அரசன்.
அவனுடைய பாவ வாழ்க்கையைப் பற்றி 2 நாளாகமம் 33:1–10-ல் நாம் விரிவாக வாசிக்கிறோம். அவன் செய்த அக்கிரமங்கள்:
பாகாலுக்கு விக்கிரகங்களை உருவாக்கினான்
வான சேனைகளை வழிபட்டான்
தன் மகனை அக்கினியில் நடக்கச் செய்தான்
மந்திரவாதம், சூனியம் செய்தான்
கர்த்தருக்கு பிரியமில்லாத பல தீமைகளைச் செய்தான்
தேவன் பலமுறை எச்சரித்தும், அவன் தன் வழிகளை விட்டு விலகவில்லை.
எனவே யெகோவா, அசீரிய அரசனின் இராணுவத் தளபதிகளை அவர்களுக்கு எதிராகக் கொண்டுவந்தார். அவர்கள் மனாசேயை கைதியாக்கி, அவனுடைய மூக்கில் கொக்கியை மாட்டி, வெண்கலச் சங்கிலியால் அவனைக் கட்டி, பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.
இந்த இடத்தில் “மனாசே பாபிலோனுக்கு எடுத்துச் செல்லப்பட்டான்” என்ற சொற்றொடர் மிகப் பெரிய விவாதத்தை ஏற்படுத்துகிறது.
காரணம் என்ன?
மனாசேயை கைப்பற்றிய அசீரிய அரசாங்கத்தின் தலைநகரம் நினைவே பட்டணம். ஒரு அரசியல் கைதியை அந்த நாட்டின் தலைநகருக்குத்தான் கொண்டு செல்வார்கள்.
பாபிலோன் அசீரிய அரசாங்கத்தின் தலைநகரம் அல்ல.
எனவே,
“மனாசே பாபிலோனுக்கு கொண்டு செல்லப்பட்டான்” என்ற கருத்து தவறானது,
வேதம் தவறான தகவலைப் பதிவு செய்துவிட்டது,
வேதம் பிழையற்றது என்கிற கூற்று இதன் மூலம் பொய்யாகிவிட்டது
என்று பலர் விமர்சனம் செய்கிறார்கள்.
வேதத்தின் பிழையற்ற தன்மையைப் பற்றிய சந்தேகக் கேள்விகளை எழுப்புகிறார்கள்.
இந்த சந்தேகம் நியாயமானதா?
அல்லது வரலாற்று உண்மைகளை முழுமையாக அறியாததால் ஏற்பட்ட தவறான முடிவா?
என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
நினைவே பட்டணம் அசீரிய அரசாங்கத்தின் தலைநகரம் என்பது உண்மைதான்.
ஆனால் இந்த தகவலை வரலாற்று ஆவணங்களோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
இந்த காலகட்டத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகளைப் பார்த்தால்:
பாபிலோன், அந்த நேரத்தில் அசீரிய அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்ட நகரம் என்பது தெளிவாகிறது.
வரலாற்று–அரசியல் பின்னணி (Historical–Political Context)
மனாசே வாழ்ந்த காலம்: கி.மு. 697–642
இந்த காலத்தில் அசீரிய அரசர்களாக இருந்தவர்கள்:
எசர்ஹத்தோன் (Esarhaddon)
அசூர்பனிபால் (Ashurbanipal)
மனாசேயை சிறைபிடித்து கைப்பற்றிய அரசன் எசர்ஹத்தோன் (Esarhaddon).
இந்த எசர்ஹத்தோன்:
பாபிலோனில் ஒரு அரண்மனையை கட்டினான்
அங்கே தங்கி ஆட்சி செய்தான்
ஒரு காலப்பகுதியில் பாபிலோனே அவனுடைய அரசியல் மையமாக (royal residence) இருந்தது
அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் அசீரிய அரசர்கள் நினைவே பட்டணத்தையே தலைநகராக வைத்திருந்தார்கள்.
ஆனால் எசர்ஹத்தோன் மட்டும் பாபிலோனில் வாழ்ந்து ஆட்சி செய்த அரசன்.
எனவே, மனாசே கைப்பற்றப்பட்டபோது,
அவனை அசீரிய அரசனின் அரசியல் தலைமையகமான பாபிலோனுக்கே கொண்டு செல்லப்பட்டது
என்று வரலாற்று ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன.
அதனால், “மனாசே பாபிலோனுக்கு எடுத்துச் செல்லப்பட்டான்” என்று வேதம் பதிவு செய்ததில்
எந்த வரலாற்றுத் தவறும் இல்லை.
இந்த சம்பவம் மூலமாக, வேதத்தின் நம்பகத்தன்மை (Trustworthiness of Scripture)
மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்படுகிறது.
The Bible is inerrant in its original manuscripts and is infallible.
இந்த இடத்தில் இன்னொரு முக்கியமான கருத்தையும் குறிப்பிட விரும்புகிறேன்.
வேதத்தின் மதிப்பீட்டின்படி,
யூதா தேசத்தை ஆண்ட மன்னர்களில் மிகவும் தீய வழியில் நடந்தவன் என்ற பட்டம்
மனாசேக்கு வழங்கப்படுகிறது.
“முன்பு அரசாட்சி செய்த எல்லா அரசர்களையும் விட மோசமானவன்”
— 2 இராஜாக்கள் 21:9
ஆனாலும், அவன் தன் பாவங்களை உணர்ந்து, தன்னைத் தாழ்த்தி, தேவனை நோக்கி கெஞ்சிக் விண்ணப்பித்தபோது,
தேவன் அவனுடைய வேண்டுதலைக் கேட்டார்.

அவனை மீண்டும் எருசலேமில் உள்ள தன் அரசாட்சிக்கு திரும்பச் செய்தார்.
“அந்த நேரத்தில் மனாசே, கர்த்தர் தான் தேவன் என்பதை அறிந்துகொண்டான்.”
— 2 நாளாகமம் 33:13
ஒவ்வொரு பரிசுத்தவானுக்கும் ஒரு கடந்த காலம் உண்டு.
ஒவ்வொரு பாவிக்கும் தேவனிடத்தில் மன்னிப்பின் எதிர்காலம் உண்டு.

“Every saint has a past, and every sinner has a future.”
— Oscar Wilde.