*நெகேமியாவின் புத்தகம் – வேதபாடம் 16* *Expository Commentary on the Book of Nehemiah.*
✍️ *உங்கள் சிந்தனைக்கு* .
*நெகேமியாவின் புத்தகம் – வேதபாடம் 16*
*Expository Commentary on the Book of Nehemiah.*
தியானிக்க வேண்டிய வேதப் பகுதி: நெகேமியா 9:38
“இவை எல்லாவற்றின் நிமித்தமாகவும் ஒரு உறுதியான ஒப்பந்தம் செய்து அதை நாங்கள் எழுதி வைக்கிறோம். எங்கள் தலைவர்களும், லேவியரும், ஆசாரியரும் அதில் தங்கள் முத்திரைகளைப் பதித்திருக்கிறார்கள்.”
நெகேமியா 9:38 வசனம்
ஒரு தனித்துவமான நிகழ்வை எடுத்துக்காட்டுகிறது.
வேதாகமத்தில் பல இடங்களில் மக்கள் தேவனுடன் உடன்படிக்கை செய்தாலும், தாங்கள் செய்த பாவங்களுக்காக மனந்திரும்பி, இனி அதையே செய்யமாட்டோம் என்று உறுதி செய்து, அதை எழுதி வைத்து கையொப்பமிட்ட நிகழ்வு இங்கு மிகத் தெளிவாகக் காணப்படுகிறது.
அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள்
அவர்கள் வெறும் வார்த்தைகளால் மட்டும் அல்லாமல், குறிப்பிட்ட தீர்மானங்களை எடுத்தனர்:
புறஜாதி மக்களுடன் திருமண உறவு ஏற்படுத்த மாட்டோம்
(நெகேமியா 10:30)
ஓய்வு நாளை தேவனுடைய கட்டளையின்படி கடைப்பிடிப்போம்.
ஆண்டுதோறும் தேவனுடைய ஆலயப்பணிக்காக மூன்றில் ஒரு சேக்கல் கொடுப்போம்
(நெகேமியா 10:32)
இவற்றைப் போன்ற பல தீர்மானங்களை எடுத்த அவர்கள், அவற்றை நிறைவேற்றுவதாக கையெழுத்திட்டு உறுதி செய்தார்கள்.
இதற்கு ஒத்த வேதாகம நிகழ்வுகள்
வேதாகமத்தில் “எழுதப்பட்ட” உடன்படிக்கைகள் பல உள்ளன:
யாத்திராகமம் 24:4
மோசே தேவன் சொன்னவற்றை எழுதி வைத்தான்
ஆனால் யாரும் கையொப்பமிடவில்லை.
யோசுவா புத்தகம் 24:26
யோசுவா உடன்படிக்கையை எழுதிவைத்தான்
ஆனால் மக்களின் கையொப்பம்
குறிப்பிடப்படவில்லை
2 ராஜாக்கள் புத்தகம் 23
→ யோசியா ராஜாவின் சீர்திருத்தம்
உடன்படிக்கை இருந்தாலும், கையெழுத்து குறிப்பிடப்படவில்லை.
? முக்கிய வித்தியாசம்
மேற்கண்ட நிகழ்வுகளில்:
? தலைவர்கள் உடன்படிக்கையை எழுதினர்
? மக்கள் அதை ஏற்றுக்கொண்டார்கள்
ஆனால்,
நெகேமியா 9:38ல்:
? மக்கள், தலைவர்கள், ஆசாரியர்கள் — அனைவரும் இணைந்து
? தாங்களே முடிவு செய்து
? எழுதி, கையெழுத்திட்டு உறுதி செய்தார்கள்
இது ஒரு ஒட்டுமொத்த சமூகத்தின் மனந்திரும்புதல்.
நாம் கற்றுக்கொள்ள வேண்டியது
மனந்திரும்புதல் என்பது:
*தலைவர்கள் சொல்வதினால் மட்டும் வருவது அல்ல*
*மற்றவர்கள் அழைப்பினால் மட்டும் நிகழ்வதும் அல்ல,*
*அது,
தவறை செய்தவர்கள் தாங்களே உணர்ந்து, மனமாறி, மாற்றம் செய்யும்**ன ஆழமான அனுபவம்.
நெகேமியா காலத்தில் மக்கள் உண்மையாக மனந்திரும்பி, அதை ஒரு ஆவணமாக உறுதி செய்தார்கள்.
இறுதியாக
இன்று நாம் கையெழுத்திட்டு உடன்படிக்கை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால்,
உள்ளத்தில் உண்மையாக ஏற்படும் மனந்திரும்புதல்.
எந்த எழுத்துப்பூர்வ ஆவணத்தையும் விட உயர்ந்தது .