Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

எஸ்றா 4:1–3 பின்னணியும்* பாடமும் வேத பாடம் எட்டு
உங்கள் சிந்தனைக்கு

எஸ்றா 4:1–3

பின்னணியும்* பாடமும்

வேத பாடம் எட்டு

?எஸ்றாவின் புத்தகம்

யூதா-பென்யமீன் மக்களின் சத்துருக்கள் யார்?
இவர்கள் சமாரியர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

சாலொமோன் அரசாட்சிக்குப் பிறகு யூதா தேசம் வடக்கு-தெற்கு என இரண்டாகப் பிரிந்தது.

வடக்குப் பகுதி இஸ்ரவேல் என்று அழைக்கப்பட்டது.

இந்தத் தேசம் அசீரியர்களால் கைப்பற்றப்பட்ட போது, அந்த அரசாங்கம் தங்கள் ஜனங்களை அந்தத் தேசத்தில் குடியமர்த்தினது.

அப்படி குடியமர்த்தப்பட்டவர்கள் அங்கே இருந்த இஸ்ரவேல் ஜனங்களோடு கலந்துவிட்டார்கள்.

இவர்களே சமாரியர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

இந்தச் சமாரியர்கள் சிலைகளையும், யூத பாரம்பரியங்களையும் ஒரே நேரத்தில் பின்பற்றினார்கள் —

யெகோவாவையும் வணங்கினார்கள்; மற்ற கடவுள்களையும் சிலைகளையும் வணங்கினார்கள்.

சமாரியர்களின் கோரிக்கை என்ன?
"நாங்களும் கட்டிடத்தைக் கட்ட உதவிசெய்வோம்.

ஏனெனில் உங்களைப் போல நாங்களும் உங்கள் இறைவனைத் தேடுகிறோம்;

அசீரியாவின் அரசன் எசரத்தோன் எங்களை இங்கு கொண்டுவந்த நாள் முதல், நாங்கள் அவருக்குப் பலி செலுத்தி வருகிறோம்."
— எஸ்றா 4:2

மேலோட்டமாகப் பார்க்கும்போது இந்தக் கோரிக்கை நியாயமானதாகத் தோன்றலாம்.

ஆனால் உண்மையில் இது மிகவும் ஆபத்தான கோரிக்கை.

ஏன் செருபாபேலும் யெசுவாவும் நிராகரித்தார்கள்?
பாபிலோனில் சிறைப்பட்டிருந்த யூதர்களிலே சிலர் தங்கள் குடும்பங்கள் இஸ்ரவேல் வழிவந்தவர்கள் என்று நிரூபிக்க முடியாத காரணத்தால், செருபாபேலும் யெசுவாவும் அவர்களை தங்கள் சொந்த ஜனமாக ஏற்றுக்கொள்ளவில்லை.

அவர்களில் சில ஆசாரியர்கள் கூட தேவனுடைய பணியை செய்ய அனுமதிக்கப்படவில்லை.

அப்படியிருக்க, உலக இனங்களோடு கலந்துவிட்ட சமாரியர்கள் — கறைபடாத யூதா கோத்திரத்தோடு இணைந்து ஆலயக் கட்டுமானத்தில் பங்குகொண்டால், அது கோத்திரத்தை கலப்படமாக்கி, யூத கோத்திரமும் கறைப்பட்டுவிடும்.

இது தேவனுடைய கட்டளைகளுக்கு நேரடியாக விரோதமானது:
? உபாகமம் 7:1–11 *12:1–3

இஸ்ரவேல் ஜனங்கள் தேவனால் பிரித்தெடுக்கப்பட்ட ஒரு இனம்.

மற்ற இனங்களோடு திருமணமோ, நெருங்கிய உறவோ வைத்துக் கொள்ளக் கூடாது என்று கட்டளையிடப்பட்டிருந்தது.

எனவேதான் செருபாபேலும் யெசுவாவும் அவர்களின் கோரிக்கையை உறுதியாக நிராகரித்தார்கள்.

சபை கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்
1. சபை உலகத்தோடு கலவாமல் இருக்க வேண்டும்
உலகத்தின் சித்தாந்தங்கள், கோட்பாடுகள், தவறான உபதேசங்கள் இவற்றை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவத்தை கறைப்படுத்திவிடக் கூடாது.
2. திருமண விஷயங்களில் விழிப்பாயிருக்க வேண்டும்.

நம்பிக்கையற்றவர்களோடு சம்பந்தம் வைத்துக் கொள்வதில் பவுல் தெளிவாக எச்சரிக்கிறார்:

"அவர்களைவிட்டு வெளியே வந்து, பிரிந்திருங்கள்; அசுத்தமான எதையும் தொடாதேயுங்கள்; அப்பொழுது நான் உங்களை ஏற்றுக் கொள்வேன் என்று கர்த்தர் சொல்கிறார்."
2 கொரிந்தியர் 6:17

இருப்பினும் ஒரு முக்கியமான சமநிலை

" The church should be separated, but not isolated."

சபை வேறுபட்டிருக்க வேண்டும் — ஆனால் தனிமைப்பட்டுவிடக் கூடாது.

வேறுபட்டிருப்பதற்கும், தனிமைப் பட்டிருப்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.

சபை உலகத்திலிருந்து முற்றிலுமாக விலகிவிட்டால், உலகிற்கு வெளிச்சமாக இருக்க முடியாது.

இரண்டையும் சமநிலைப்படுத்தி வாழ்வதே கிறிஸ்தவனின் அழைப்பு.