Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

போலி பக்தியும் அதன் 17 வெளிப்பாடுகளும்.* 2 திமொத்தேயு 3:1–5ன் உண்மையான விளக்கம்
உங்கள் சிந்தனைக்கு

போலி பக்தியும் அதன் 17 வெளிப்பாடுகளும்.*

2 திமொத்தேயு 3:1–5ன் உண்மையான விளக்கம்


பவுல் தீமோத்தேயுக்கெழுதிய இரண்டாவது கடிதமே அவர் எழுதிய கடைசி கடிதம்.
ரோமாபுரி சிறைச்சாலையில், இறுதி விசாரணைக்கும் மரணத்திற்கும் காத்திருந்த அந்த வேளையில் எழுதப்பட்ட இந்தக் கடிதம், மிகவும் கனமான ஆவிக்குரிய எச்சரிக்கைகளை கொண்டுள்ளது.
கடைசி நாட்களில் எழும் போலி பக்தி குறித்து பவுல் அளிக்கும் விளக்கம், இந்தக் கடிதத்தின் மூன்றாவது அதிகாரத்தில் காணப்படுகிறது. குறிப்பாக 2–5 வசனங்கள், இன்றைய சபைகள் மிக கவனமாக ஆராய வேண்டிய பகுதியாகும்.

⚠️ மொழிபெயர்ப்புச் சிக்கல்
நாம் பயன்படுத்தும் சில தமிழ்ப் மொழிபெயர்ப்புகளில்,
“தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதன் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்”
என்று 2 திமொத்தேயு 3:5 தனியாகக் குறிப்பிடப்படுவது போல தோன்றுகிறது.
ஆனால், மூல கிரேக்கமும் பல ஆங்கில / கத்தோலிக்க மொழிபெயர்ப்புகளும் காட்டுவது என்னவென்றால்:
? இது தனியான 18-வது குணம் அல்ல.
? 2–4 *வசனங்களில் சொல்லப்பட்ட 17 குணங்களின் தொகுப்பே
“தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து, அதன் வல்லமையை மறுதலிக்கும் நிலை” ஆகும்.

? சரியான அர்த்தம் (2 திமொத்தேயு 3:1–5)
இறுதி நாட்களில் மனிதர்கள்:
தன்னலம் நாடுவோர்
பணப்பிரியராய் இருப்போர்
வீம்பும் அகந்தையும் உடையோர்
பெற்றோருக்குக் கீழ்ப்படியாதோர்
நன்றியற்றோர், பரிசுத்தமற்றோர்
இயல்பான அன்பில்லாதோர்
ஒத்துப் போகாதோர், அவதூறு செய்பவர்கள்
தன்னடக்கமற்றோர், கொடுமையுள்ளோர்
நல்லோரைப் பகைப்போர்
துரோகிகளாய், துணிகரமாய்
தற்பெருமை கொள்வோர்
தேவனை விட சுகபோகத்தை அதிகம் விரும்புவோர்
? இவர்கள் இறைப்பற்று உள்ளவர்கள் போல தோன்றுவார்கள்*
? ஆனால், அந்த இறைப்பற்றின் வல்லமை அவர்களிடம் இருக்காது.

இதனால்தான் பவுல் தெளிவாகச் சொல்கிறார்:
“இத்தகையவர்களோடு சேராதே!” (2 திமொ. 3:5)

? முக்கியமான ஆவிக்குரிய உண்மை
போலி பக்தி என்பது ஒரு தனிக் குணம் அல்ல.
அது —
➡️ 17 விதமான குணங்களில் வெளிப்படும்‌.

➡️ வெளிப்புற பக்தி, உட்புற மாற்றமில்லாத நிலை
யேசு கண்டித்த பரிசேயரின் பாத்திரம் போல,
வெளிப்புறம் சுத்தம்
உட்புற சுத்தம் ரெண்டு முக்கியமானது.

? இறைப்பற்று உள்ளதுபோல் தோன்றும்
? ஆனால் இறைப்பற்றின் வல்லமை இல்லாத வாழ்க்கை
⛪ இன்றைய சபைக்கு ஒரு எச்சரிக்கை.

இன்றைக்கு சபைகள் உலகத்திற்கு முன்பாக சாட்சியற்றுப் போவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று —
இந்த போலி பக்தி வேஷம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.


பல சபைகள்,
? *ஆவிக்குரிய பரிசேயர்களால் *நிரம்பி
? வெளிச்சமாக* இருக்க வேண்டிய அழைப்பை இழந்து நிற்கின்றன*
? முடிவுச் ஜெபம்
உலகத்திற்கு வெளிச்சமாக இருக்க நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.
அந்த அழைப்பில் நிலைத்திருக்க,
கர்த்தர் நமக்கு கிருபை தருவாராக.