Expository Commentary on the Book of Job* *வேதபாடம் – 2
*உங்கள் சிந்தனைக்கு*
*Expository Commentary on the Book of Job*
*வேதபாடம் – 2*
*தியானிக்க வேண்டிய வேதப்பகுதி: முதல் அதிகாரம்*
கடவுளுக்கு பயப்படுதல் என்றால் என்ன?
*கடவுளுக்கு பயப்படுதல் என்பது அவரைக் கண்டு அச்சத்தோடு வாழ்வது* *அல்ல; மாறாக, அவரை மதித்து, அவருடைய வார்த்தைகளுக்கு* *கீழ்ப்படிந்து, அவர் நமக்குச் செய்த நன்மைகளை நன்றியோடு நினைவுகூர்ந்து வாழ்வதாகும்.*
Warren Wiersbe இதை இவ்வாறு சுருக்கமாகக் கூறுகிறார்:
“ **To respect what He is, what He says, and what He does.”**
*அதாவது, தேவன் யார் என்பதை மதிக்க வேண்டும்; அவர் சொல்வதை மதிக்க வேண்டும்; அவர்* *செய்கிறவற்றை மதிக்க வேண்டும்* .
ஒரு வார்த்தையில் சொன்னால், தேவனை மதிக்க வேண்டும், அவருடைய வார்த்தையை மதிக்க வேண்டும், அவர் நமக்குத் தந்த இரட்சிப்பை மதிக்க வேண்டும். இதுவே தேவபயம் என்பதன் உண்மையான அர்த்தம். இது அடிமைத்தனமான பயமல்ல; ஒரு நல்ல மகன் தன் தந்தையிடம் காட்டும் அன்பும் மரியாதையும் போன்றது.
*இந்த அதிகாரம் நமக்குக் கற்றுத் தரும் சில முக்கிய* *சத்தியங்கள்*
1. தேவன் அனுமதித்தாலன்றி சாத்தானுக்கு தேவனுடைய பிள்ளைகள் மீது அதிகாரம் இல்லை
யோபுவின் வாழ்க்கையில் நடந்த சோதனைகள் அனைத்தும் தேவனுடைய அறிவுக்கும் அனுமதிக்கும் உட்பட்டவையாக இருந்தன. யோபுவைத் தொடுவதற்கு முன்பு சாத்தான் தேவனிடத்தில் அனுமதி பெற்றான். ஆகவே சாத்தானின் அதிகாரம் வரம்புக்குட்பட்டது; தேவனுடைய இறையாண்மையே உன்னதமானது.
2. சாத்தான் இன்னும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான்
யோபு 1-ல் சாத்தான் தேவனுடைய சந்நிதியில் தோன்றுகிறான். வேதாகமம் அவனை இந்த உலகத்தில் சுற்றித்திரிகிறவனாகவும், விசுவாசிகளுக்கு எதிராக குற்றஞ்சாட்டுகிறவனாகவும் சித்தரிக்கிறது. இறுதியில் அக்கினிக் கடலில் தள்ளப்படும் நாள் வரைக்கும் அவனுக்கு குறிப்பிட்ட அளவிலான செயல்பாட்டு சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது.
குளம்
3. குற்றமில்லாதவரிடத்திலும் குற்றம் காண்பவன் சாத்தான்
யோபுவைப் பற்றி தேவனே, “அவனைப்போல உத்தமனும் நேர்மையானவனும் இல்லை” என்று சாட்சியளித்தார். இருந்தபோதிலும் சாத்தான் யோபுவின் நோக்கங்களையே சந்தேகப்படுத்தினான்.
இன்றும் அவன் தேவனுடைய மக்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டுகிறான். ஆனால் நமக்கு ஆறுதல் என்னவென்றால், நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து பிதாவின் சந்நிதியில் நமக்காக பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார்.
4. தேவனுடைய அனுமதியோடு சாத்தான் இயற்கை நிகழ்வுகளையும் பயன்படுத்த முடியும்
யோபு 1:16-ல் “தேவனுடைய அக்கினி வானத்திலிருந்து விழுந்தது” என்று வேலைக்காரன் கூறுகிறான். அது அவன் கண்ட நிகழ்வைப் பற்றிய அவனுடைய புரிதலாக இருக்கலாம். ஆனால் அதிகாரத்தின் முழு சூழலைப் பார்க்கும்போது, யோபுவைச் சோதிப்பதற்காக தேவனுடைய அனுமதியோடு செயல்பட்டது சாத்தானே என்பதை காண்கிறோம்.
ஆகவே, இந்த நிகழ்வில் தேவன் தமது இறையாண்மையில் அனுமதித்தார்; சாத்தான் அதற்குக் கருவியாகச் செயல்பட்டான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
5. வாழ்க்கையின் எல்லா கேள்விகளுக்கும் உடனடியாக பதில் கிடைக்காது
யோபுவின் துன்பங்களுக்கு உடனடியாக விளக்கம் கொடுக்கப்படவில்லை. பூமியில் நடந்தவற்றிற்கான சில பதில்கள் விண்ணகத்தில் இருந்தன. அதுபோல நம்முடைய வாழ்க்கையிலும் சில நிகழ்வுகளின் அர்த்தம் உடனடியாகப் புரியாமல் போகலாம்.
ஆனால் யோபுவி ன் புத்தகம் ஒரு பெரிய உண்மையை நமக்குக் கற்பிக்கிறது: தேவன் கட்டுப்பாட்டை ஒருபோதும் இழப்பதில்லை. நாம் புரிந்துகொள்ளாத சூழ்நிலைகளிலும் அவர் தமது இறையாண்மையையும் நோக்கத்தையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.
எசேக்கியல் சண்முகவேல்.