Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

நெகேமியாவின் புத்தகம் வேதபாடம் 17
உங்கள் சிந்தனைக்கு.

நெகேமியாவின் புத்தகம் வேதபாடம் 17


Expository commentary on the book of Nehemiah.

இந்த புத்தகத்தின் ஒன்பதாவது அதிகாரத்தில் வருகின்ற இந்த ஜெபம் என்பது
தனிப்பட்ட ஜெபம் அல்ல; மக்கள் முழுவதும் ஒன்றிணைந்து செய்த தங்கள் இனத்திற்கான அல்லது ஒரு தேசத்திற்கான மனந்திரும்பும் ஜெபம். It is one of the great congregational prayer in Scripture.
இது மாதிரியான ஜெபங்கள் வேதத்தில் இன்னும் இரண்டு இடங்களில் வருகிறது.
ஏஸ்ரா மற்றும் தானியேல் புத்தகங்களில் ஒன்பதாவது அதிகாரத்தில் வருகிறது.
இந்த ஜெபத்தின் சிறப்பு அம்சங்கள்.
1. முதலில் தேவனை புகழ்ந்தார்கள்.
2. கடவுள் கடந்த காலங்களில் தங்களுக்கு செய்த நன்மைகளை நினைவுகூர்ந்தார்கள்
3.மக்கள் தங்கள் பாவங்களையும் முன்னோர்களின் பாவங்களையும் ஒப்புக்கொண்டு பாவ அறிக்கை செய்தார்கள்.

மக்கள் அகங்காரமாய் இருந்தாலும் கடவுள் அவர்களை மன்னித்தார் என்று உணர்ந்தார்கள்
4. தாங்கள் பல தடவை தவறு செய்தாலும் கைவிடாத அவருடைய கிருபையை எண்ணி மனம் வருந்தினார்கள்.
5. தற்போதைய நிலையை எண்ணி வருந்தினார்கள்.
6. மனம் திரும்பி
உறுதிமொழியுடன் ஒப்புக்கொடுத்தார்கள்.
ஒரு உண்மையான சபையை மனம் விரும்புவதற்கும் மறுமலர்ச்சிக்கும் இந்த ஆறு முக்கிய கூறுகள் மிகவும் அவசியம்
இந்த விண்ணப்பத்தில் மூன்று முக்கிய காரியங்களை நாம் பார்க்கலாம்
1. தேவனுடைய மகத்துவம்
The greatness of God
2. தேவன் யூதர்கள் செய்த நன்மைகள்
The goodness of God
3. கடவுள் அவர்கள் மீது வைத்துள்ள கிருபை
The grace of God


சபைகளின் மறுமலர்ச்சிக்கு இம்மாதிரியான ஜெபங்கள்.அவசியம்‌
தேவனை துதித்து அவர் செய்த நன்மைகளை நினைத்து அவருடைய உண்மையை உணர்ந்து தங்கள் தவறுகளுக்கு மனம் வருந்தி ஒப்புக்கொடுக்கிற ஒரு ஜெபம் உண்மையிலேயே மகா வல்லமை உள்ளது.
ஒரு ஆவிக்குரிய மறுமலர்ச்சிக்கு தேவனை அறிந்து தங்கள் நிலைய உணர்ந்து ஒப்புக் கொடுக்க வேண்டும்.
மக்களுடைய பாவங்களை தங்களுடைய பாவங்களாக கருத வேண்டும் ‌ இதுதான் உண்மையான மறுமலர்ச்சியின் அடிப்படை கூறு. ‌ சபை தவறு செய்து விட்டது. தலைவர்கள் விலை போய் விட்டார்கள் என்று மற்றவரை குற்றம் சுமத்துவதை விடுத்து நாம் தவறு செய்து விட்டோம் என்ற ஒரு நிலையோடு ஒரு குழுவாக தேசத்திற்காக கடவுளை நோக்கி‌ ஏறெடுக்கும் ஜெபம் மிகுந்த வல்லமை உள்ளது.
அன்றைய காலகட்டத்தில் இஸ்ரவேல் மக்களுடைய பின் மாற்றத்திற்கும் இன்றைய சபைகளின் நிலைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இல்லை.
இன்றைய சபைகளில் சடங்காச்சாரங்கள் பெருகிவிட்டது.
பல சபைகளில் கடவுள் இருப்பது போல் ஒரு தோற்றம்தான் காணப்படுகிறது.
ஜாதி வெறி தலை விரித்து ஆடுகிறது.
சபைகள் தங்கள் ஆதி அன்பைவிட்டுவிட்டது.
கடவுள் தம் ஜனங்கள் மீது காட்டுகின்ற நீடிய பொறுமையை உணராமல் இருக்கிறார்கள்.
வேத வசனத்தை நேசிக்காத,தியானிக்காத, வேத போதனைகளை விரும்பாத ஒரு குழுவாக சபை காணப்படுகிறது.
உலக மக்களும் அருவருக்கத்தக்க பாவங்களும், ஒழுக்க கேடுகளும், பண ஆசையும் ,அரசியல் மோகமும், ஆடம்பரங்களும், சுயநலமும், எல்லா தரப்பட்ட விசுவாசிகளும்
தேவனுடைய சரீரத்தில் அங்கத்தினராக இருக்கிறோம் என்கிற புரிதல் இல்லாமையும் சபையை சூழ்ந்து கொண்டிருக்கிறது.
நமது சபையை கடவுள் எதிரிகளிடம் ஒப்புக்கொடுத்துவிட்டார் என்கிற புரிதலே இல்லாமல் இருக்கிறார்கள். ‌ இதற்கெல்லாம் ஒரே தீர்வு சபை மறுமலர்ச்சி அடைய வேண்டும் இந்த புத்தகத்தினுடைய ஒன்பதாவது அதிகாரம் அதற்கான வழிமுறைகளை ஆலோசனைகளை தெளிவாக விளக்குகிறது இதை ஒரு குழுவாக, சபையாக பாரத்தோடு ஏறெடுக்கும் ஜெபங்கள் தேவனுடைய பார்வையில் அங்கீகரிக்கப்படக்கூடிய அளவில் காணப்படும்‌.
இதில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த மிகப்பெரிய சாதனையை சாதிப்பதற்கு தேவன் பயன்படுத்திய நபர் ஒரு ஆசாரியனோ ஒரு தீர்க்கதரிசியோ ஒரு அரசனும் அல்ல. சாதாரண அரசு ஊழியன்
ஒரு layman .
இதையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். சபையின் மறுமலர்ச்சி எங்கிருந்து தோன்றும் யாரால் தோன்றும் என்பதை நம்மால் கவனிக்க முடியாது அப்படிப்பட்ட காலங்களுக்காக நாம் காத்திருப்போம்..