Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

2 Kings – Bible Lesson 8

Just for your thoughts: 2 Kings – Bible Lesson 8 What lessons does Naaman teach us? Naaman was the commander of the army of the king of Aram (Syria). Through him, the Lord had given victory to Aram, so he was highly esteemed and greatly valued by his master, the king. Although he was a mighty warrior, Naaman was afflicted with leprosy. In his household was a young Israelite girl who had been taken captive and served Naaman’s wife. She said to her mistress: “If only my master would see the prophet who is in Samaria! He would cure him of his leprosy.” The great commander of Syria humbled himself to listen to the advice of this slave girl working in his house, and decided to go to Israel. The king of Syria also agreed and sent him with a large gift: in today’s value, about one billion dollars worth of silver, gold, and fine clothes (source: The IVP Bible Background Commentary). When Naaman came to see the prophet Elisha, Elisha did not come out to meet him in person. Instead, he sent his servants to say: “Go, wash yourself seven times in the Jordan, and your flesh will be restored and you will be cleansed.” Hearing this, Naaman became very angry. In those times, it was common for priests and religious leaders to heal diseases by praising their gods, chanting incantations, and placing their hands on the affected areas. Naaman had expected Elisha to do the same. But unexpectedly, Elisha did not even come out; instead, he sent word through a servant, telling Naaman simply to bathe in the river. Naaman could not accept this and got ready to return to his country. At that moment, his servant approached him and said : “My father, if the prophet had told you to do some great thing, would you not have done it? How much more, then, when he tells you, ‘Wash and be cleansed’!” (2 Kings 5:13 Listening to this advice, Naaman humbled himself and dipped himself seven times in the Jordan River. As a result, he was completely healed of his leprosy. This is the great turning point of this incident. A powerful military commander accepted the counsel of those far lower than him in worldly status, acted upon it, and received deliverance. His humility brought him healing. The key lessons we learn from this passage: 1.Humility is a virtue the Bible teaches us with great emphasis. 2.As Jesus said, whoever humbles himself will be exalted. 3.A true leader accepts good advice, no matter from whom it comes. 4.Pride leads us to reject good counsel, which ultimately harms us. Born-again believers must strive to reject and overcome two great sins: pride and jealousy. In my view: May God grant us the mindset to always receive advice humbly – whoever it may come from! Ezekiel Shanmugavel ?

இரண்டு அரசர்கள் புத்தகம் – வேதப் பாடம் 8

உங்கள் சிந்தனைக்கு: இரண்டு அரசர்கள் புத்தகம் – வேதப் பாடம் 8 நாகமான் நமக்கு உணர்த்தும் பாடங்கள் என்ன? நாகமான் சீரிய அரசனின் படைத்தளபதியாய் இருந்தவன். இவனைக் கொண்டு யெகோவா சீரியருக்கு வெற்றியைக் கொடுத்திருந்தபடியால், அவன் தன் அரசனின் பார்வையில் மிகவும் மதிக்கப்படுவனாகவும் முக்கியமானவனாகவும் இருந்தான். பலம் வாய்ந்த போர் வீரனாயிருந்தாலும், அவன் குஷ்டரோகியாக இருந்தான். அவன் வீட்டில், இஸ்ரேல் தேசத்திலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு சிறிய பெண் வேலைக்காரியாக இருந்தாள். அவள் தன் எஜமானியை நோக்கி: “என் எஜமான் சமாரியாவிலிருக்கிற இறைவாக்கினனிடம் போனால், அவர் இந்தக் குஷ்டரோகத்தைச் சுகப்படுத்துவார்” என்றாள். சீரியாவின் மிகப் பெரிய படைத்தளபதி தன் வீட்டில் வேலை செய்யும் அந்த அடிமைப் பெண்ணின் ஆலோசனையை செவிமடுக்கத் தன்னைத் தாழ்த்தி, இஸ்ரேல் தேசத்திற்கு செல்லத் தீர்மானித்தான். சீரியா தேசத்து மன்னனும் அதை அனுமதித்தது. கூடவே, இன்றைய மதிப்பில் சுமார் ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள வெள்ளி, தங்கம் மற்றும் மாட்டு உடைகளையும் எடுத்துச் செல்ல அனுமதித்தான். (ஆதாரம்: The IVP Bible Background Commentary). நாகமான் இறைவாக்கினன் எலிசாவைச் சந்தித்தபோது, எலிசா நேரில் வராமல் தன் வேலையாள் மூலமாக: “நீர் போய் யோர்தானில் ஏழுமுறை முழுகும்; அப்போது உமது சரீரம் மீண்டும் முன்போல் சுத்தமாகும்” என்று சொல்லச் சொன்னான். இதைக் கேட்ட நாகமான் கடும் கோபமடைந்தான். அந்தக் காலங்களில் நோய்களைப் போக்க மத குருமார்கள் தங்கள் தேவர்களைப் புகழ்ந்து, சில மந்திரங்களைச் சொல்லி, நோய் பட்ட இடத்தில் கைகளை வைத்துப் பூஜைகள் செய்தே சுகப்படுத்துவார்கள். இந்த நம்பிக்கைதான் அவனுக்கிருந்தது. அதேபோல் எலிசா செய்யப்போவான் என்று நினைத்து இருந்தான். ஆனால் எதிர்பாராதபடி எலிசா நேரில் கூட வராமல் வேலையாட்கள் மூலமாக மூலம் நதியில் மூழ்க சொன்னதை அவன் மனப்பூர்வமாக ஏற்கவில்லை. அவன் தன் நாட்டிற்கு கிளம்ப தயாரானான் அப்போது அவனுடைய வேலைக்காரர்கள் அவனிடம் சொன்னான் : “என் தகப்பனே, அந்த இறைவாக்கினன் உம்மை பெரியதொரு காரியம் செய்யுமாறு கூறியிருந்தால், அதைச் செய்திருப்பீர்களே! ‘கழுவிச் சுத்தமாகும்’ என்று கூறும்போது, இன்னும் கூடுதலாகக் கீழ்ப்படிய வேண்டியதுதானே?” (2 இராஜாக்கள் 5:13) . இந்த அறிவுரையைக் கேட்டு நாகமான் தன்னைத் தாழ்த்தி, யோர்தானில் ஏழுமுறை முழுகினான். அதனால் அவன் குஷ்டரோகத்திலிருந்து முழுவதும் சுகமடைந்தான். இதுதான் இந்த நிகழ்வின் மிகப் பெரிய திருப்புமுனை. ஒரு மிகப்பெரிய படைத்தளபதி தன்னை விட உலகப்பிரகாரமாக மிகவும் கீழான இடத்தில் இருந்த வேலைக்காரனின் அறிவுரையைக் கேட்டு அதன்படி நடந்து விடுதலை பெற்றான். அவனுடைய தாழ்மையே அவனுக்குச் சுகத்தை வழங்கியது. இந்த வேத பகுதியின் மூலம் நமக்குக் கிடைக்கும் முக்கியமான பாடங்கள்: மனத் தாழ்மை வேதம் மிக முக்கியமாகப் போதிக்கும் தத்துவம். இயேசு கூறியபடி, தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். உண்மையான தலைவன் யாரிடமிருந்தும் வரும் நல்ல ஆலோசனையை ஏற்றுக்கொள்வான். பெருமையால் நல்ல ஆலோசனைகளை நிராகரிப்பது நமக்கே நஷ்டமாக முடியும். மறுபடியும் பிறந்த விசுவாசிகள் தங்கள் சுயத்தை வெறுத்து விரட்ட வேண்டிய இரண்டு பெரிய பாவங்கள்: பெருமை மற்றும் பொறாமை. இது என்னுடைய பார்வை: கடவுள் நமக்கு அறிவுரையை – அது யார் மூலம் வந்தாலும் – எப்போதும் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை தாராக! எசேக்கியேல் சண்முகவேல்

இரண்டு அரசர்கள் புத்தகம் – வேதப் பாடம் 8

உங்கள் சிந்தனைக்கு: இரண்டு அரசர்கள் புத்தகம் – வேதப் பாடம் 8 நாகமான் நமக்கு உணர்த்தும் பாடங்கள் என்ன? நாகமான் சீரிய அரசனின் படைத்தளபதியாய் இருந்தவன். இவனைக் கொண்டு யெகோவா சீரியருக்கு வெற்றியைக் கொடுத்திருந்தபடியால், அவன் தன் அரசனின் பார்வையில் மிகவும் மதிக்கப்படுவனாகவும் முக்கியமானவனாகவும் இருந்தான். பலம் வாய்ந்த போர் வீரனாயிருந்தாலும், அவன் குஷ்டரோகியாக இருந்தான். அவன் வீட்டில், இஸ்ரேல் தேசத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒரு சிறிய பெண் வேலைக்காரியாக இருந்தாள். அவள் தன் எஜமானியை நோக்கி: “என் எஜமான் சமாரியாவிலிருக்கிற இறைவாக்கினனிடம் போனால், அவர் இந்தக் குஷ்டரோகத்தைச் சுகப்படுத்துவார்” என்றாள். சீரியாவின் மிகப் பெரிய படைத்தளபதி தன் வீட்டில் வேலை செய்யும் அந்த அடிமைப் பெண்ணின் ஆலோசனையை செவிமடுக்கத் தன்னைத் தாழ்த்தி, இஸ்ரேல் தேசத்திற்கு செல்லத் தீர்மானித்தான். சீரியா தேசத்து மன்னனும் அதை அனுமதித்தது. கூடவே, இன்றைய மதிப்பில் சுமார் ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள வெள்ளி, தங்கம் மற்றும் மாட்டு உடைகளையும் எடுத்துச் செல்ல அனுமதித்தான். (ஆதாரம்: The IVP Bible Background Commentary). நாகமான் இறைவாக்கினன் எலிசாவைச் சந்தித்தபோது, எலிசா நேரில் வராமல் தன் வேலையாள் மூலமாக: “நீர் போய் யோர்தானில் ஏழுமுறை முழுகும்; அப்போது உமது சரீரம் மீண்டும் முன்போல் சுத்தமாகும்” என்று சொல்ல சொன்னான். இதைக் கேட்ட நாகமான் கடும் கோபமடைந்தான். அந்தக் காலங்களில் நோய்களைப் போக்க மத குருமார்கள் தங்கள் தேவர்களை புகழ்ந்து, சில மந்திரங்களைச் சொல்லி, நோய் பட்ட இடத்தில் கைகளை வைத்து பூஜைகள் செய்தே சுகப்படுத்துவார்கள். இந்த நம்பிக்கைதான் அவனுக்கிருந்தது. அதேபோல் எலிசா செய்யப்போவான் என்று நினைத்து இருந்தான். ஆனால் எதிர்பாராதபடி எலிசா நேரில் கூட வராமல் வேலையாட்கள் மூலமாக மூலம் நதியில் மூழ்க சொன்னதை அவன் மனப்பூர்வமாக ஏற்கவில்லை. அவன் தன் நாட்டிற்கு கிளம்ப தயாரானான் அப்போது அவனுடைய வேலைக்காரர்கள் அவனிடம் சொன்னான் : “என் தகப்பனே, அந்த இறைவாக்கினன் உம்மை பெரியதொரு காரியம் செய்யுமாறு கூறியிருந்தால், அதைச் செய்திருப்பீர்களே! ‘கழுவிச் சுத்தமாகும்’ என்று கூறும்போது, இன்னும் கூடுதலாக கீழ்ப்படிய வேண்டியதுதானே?” (2 இராஜாக்கள் 5:13) . இந்த அறிவுரையை கேட்டு நாகமான் தன்னைத் தாழ்த்தி, யோர்தானில் ஏழுமுறை முழுகினான். அதனால் அவன் குஷ்டரோகத்திலிருந்து முழுவதும் சுகமடைந்தான். இதுதான் இந்த நிகழ்வின் மிகப் பெரிய திருப்புமுனை. ஒரு மிகப்பெரிய படைத்தளபதி தன்னை விட உலகப்பிரகாரமாக மிகவும் கீழான இடத்தில் இருந்த வேலைக்காரனின் அறிவுரையைக் கேட்டு அதன்படி நடந்து விடுதலை பெற்றான். அவனுடைய தாழ்மையே அவனுக்கு சுகத்தை வழங்கியது. இந்த வேத பகுதியின் மூலம் நமக்கு கிடைக்கும் முக்கியமான பாடங்கள்: மனத் தாழ்மை வேதம் மிக முக்கியமாக போதிக்கும் தத்துவம். இயேசு கூறியபடி, தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். உண்மையான தலைவன் யாரிடமிருந்தும் வரும் நல்ல ஆலோசனையை ஏற்றுக்கொள்வான். பெருமையால் நல்ல ஆலோசனைகளை நிராகரிப்பது நமக்கே நஷ்டமாக முடியும். மறுபடியும் பிறந்த விசுவாசிகள் தங்கள் சுயத்தை வெறுத்து விரட்ட வேண்டிய இரண்டு பெரிய பாவங்கள்: பெருமை மற்றும் பொறாமை. இது என்னுடைய பார்வை: கடவுள் நமக்கு அறிவுரையை – அது யார் மூலம் வந்தாலும் – எப்போதும் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை தாராக! எசேக்கியேல் சண்முகவேல்

2 Kings – Bible study ,Seven

Ezekiel Shanmugavel, [7/5/2025 8:38 PM] Just for your thoughts. 2 Kings – Bible study ,Seven Title: Today’s Gehazi – A Great Need and Warning for Church Leaders. First, let’s look at the context in which Elisha and Gehazi lived. King Ahab and his wife Jezebel had turned Israel into a nation that followed Baals. The kings who came after Ahab also did not follow God faithfully like David did. After Elijah, Elisha was the prophet who proclaimed the word of the Lord and warned the people. It was during a time when the king of Syria was constantly waging war against Israel. In this period of crisis, Gehazi served as Elisha’s personal attendant. Gehazi had a great responsibility. When a leader walks faithfully in the way of the Lord, it is the duty of his servant to walk faithfully with him – to absorb the thinking of his master and act according to his master’s vision. But Gehazi did not do that. From the beginning, we can see in the verses that Gehazi had a certain disdain for the poor and an affection for the rich. The Shunammite woman, who had long been childless, bore a child according to Elisha’s word. When that child grew up and died, the mother came to Elisha, fell at his feet, and pleaded with him. At that moment, Gehazi, unable to understand her feelings, stepped forward to push her away (2 Kings 4:27). This shows his lack of compassion. Yet at the same time, when Naaman the Syrian was healed and was about to return to his country, Elisha refused to accept the gifts Naaman had brought. But Gehazi said to himself, “As surely as the Lord lives, I will run after him and get something from him.” And so he quickly ran after Naaman. Gehazi, who ran to get gifts from a rich man, had earlier tried to stop a poor woman from expressing her feelings to the prophet. In Gehazi’s heart, love for money had taken root. As a result, Gehazi committed these sins: 1.He misused the name of the Lord. 2.He lied to Naaman. 3.He misused his master’s name before Naaman. 4.He ultimately lied to his own master. He failed to see what a time he was living in – a time when there was a need to serve faithfully, to show the Gentiles that his master had no greed for money. Ignoring all this, he turned that period into a time to acquire silver, olive groves, vineyards, flocks, herds, male and female servants. The result? Gehazi became leprous, white as snow. We must compare this with today’s context. Leaders in these last days talk about the Lord’s coming, yet there is little thought about living as people free from the love of money. They turn God’s gracious gifts into business opportunities, and they – along with their families – amass wealth to pass down for generations. At the same time, I am truly thankful for those who serve faithfully. As for Gehazi, he had no special gift. Even when Elisha, who had gifts, rejected Naaman’s gifts, Gehazi – who had no such qualification – ran after and took silver and clothing. Today, likewise, some use gifts freely given by God to trap the rich into their nets. Meanwhile, they push aside humble believers and keep them at a distance. We must deal cautiously with such Gehazis. Lips that should teach the Word of God instead tell lie upon lie, claiming God is with them when He is not, deceiving the people. Even though they know the truth that “the love of money is the root of all evil,” they reject it, and live in luxury with money collected from believers. In such a time, like the prophet Haggai, we must boldly ask: “Is it a time for you yourselves to be living in paneled houses, while God’s house remains a ruin?” So every believer must have the courage to ask leaders “Is this the time to take money, and to take clothes, olive groves, vineyards, sheep and cattle, male and female servants?” Ezekiel Shanmugavel, [7/5/2025 8:38 PM] If we don’t have that courage, at least we should stop sending offerings to such leaders. This is something believers should do. Believers should bravely stand up and resist such practices. In these days, when the world barely respects the Church, when we face many oppositions, and when there is a great need for a life of testimony, our so-called spiritual leaders should live sacrificial and committed lives. Instead, with money sacrificially given by believers through sweat and hard work, they bribe tax officials, give offerings to politicians, invest in real estate, and send only their own children abroad to study by spending huge sums – while failing to help the poor in their churches who cannot even pursue higher education. In what way is this just? The only question Scripture would ask them is this : “Is this the time to take money, and to take clothes, olive groves, vineyards, sheep and cattle, male and female servants? ”ezekiel Shanmugavel

Kings – Bible study Seven

Just for your thoughts. 2 Kings – Bible study Seven Title: Today’s Gehazi – A Great Need and Warning for Church Leaders. First, let’s look at the context in which Elisha and Gehazi lived. King Ahab and his wife Jezebel had turned Israel into a nation that followed Baals. The kings who came after Ahab also did not follow God faithfully like David did. After Elijah, Elisha was the prophet who proclaimed the word of the Lord and warned the people. It was during a time when the king of Syria was constantly waging war against Israel. In this period of crisis, Gehazi served as Elisha’s personal attendant. Gehazi had a great responsibility. When a leader walks faithfully in the way of the Lord, it is the duty of his servant to walk faithfully with him – to absorb the thinking of his master and act according to his master’s vision. But Gehazi did not do that. From the beginning, we can see in the verses that Gehazi had a certain disdain for the poor and an affection for the rich. The Shunammite woman, who had long been childless, bore a child according to Elisha’s word. When that child grew up and died, the mother came to Elisha, fell at his feet, and pleaded with him. At that moment, Gehazi, unable to understand her feelings, stepped forward to push her away (2 Kings 4:27). This shows his lack of compassion. Yet at the same time, when Naaman the Syrian was healed and was about to return to his country, Elisha refused to accept the gifts Naaman had brought. But Gehazi said to himself, “As surely as the Lord lives, I will run after him and get something from him.” And so he quickly ran after Naaman. Gehazi, who ran to get gifts from a rich man, had earlier tried to stop a poor woman from expressing her feelings to the prophet. In Gehazi’s heart, love for money had taken root. As a result, Gehazi committed these sins: 1.He misused the name of the Lord. 2.He lied to Naaman. 3.He misused his master’s name before Naaman. 4.He ultimately lied to his own master. He failed to see what a time he was living in – a time when there was a need to serve faithfully, to show the Gentiles that his master had no greed for money. Ignoring all this, he turned that period into a time to acquire silver, olive groves, vineyards, flocks, herds, male and female servants. The result? Gehazi became leprous, white as snow. We must compare this with today’s context. Leaders in these last days talk about the Lord’s coming, yet there is little thought about living as people free from the love of money. They turn God’s gracious gifts into business opportunities, and they – along with their families – amass wealth to pass down for generations. At the same time, I am truly thankful for those who serve faithfully. As for Gehazi, he had no special gift. Even when Elisha, who had gifts, rejected Naaman’s gifts, Gehazi – who had no such qualification – ran after and took silver and clothing. Today, likewise, some use gifts freely given by God to trap the rich into their nets. Meanwhile, they push aside humble believers and keep them at a distance. We must deal cautiously with such Gehazis. Lips that should teach the Word of God instead tell lie upon lie, claiming God is with them when He is not, deceiving the people. Even though they know the truth that “the love of money is the root of all evil,” they reject it, and live in luxury with money collected from believers. In such a time, like the prophet Haggai, we must boldly ask: “Is it a time for you yourselves to be living in paneled houses, while God’s house remains a ruin?” So every believer must have the courage to ask leaders “Is this the time to take money, and to take clothes, olive groves, vineyards, sheep and cattle, male and female servants?” Ezekiel Shanmugavel, [7/5/2025 8:38 PM] If we don’t have that courage, at least we should stop sending offerings to such leaders. This is something believers should do. Believers should bravely stand up and resist such practices. In these days, when the world barely respects the Church, when we face many oppositions, and when there is a great need for a life of testimony, our so-called spiritual leaders should live sacrificial and committed lives. Instead, with money sacrificially given by believers through sweat and hard work, they bribe tax officials, give offerings to politicians, invest in real estate, and send only their own children abroad to study by spending huge sums – while failing to help the poor in their churches who cannot even pursue higher education. In what way is this just? The only question Scripture would ask them is this : “Is this the time to take money, and to take clothes, olive groves, vineyards, sheep and cattle, male and female servants?

இரண்டு அரசர்கள் புத்தகம். வேத பாடம் ஏழு

உங்கள் சிந்தனைக்கு. இரண்டு அரசர்கள் புத்தகம். வேத பாடம் ஏழு தலைப்பு இன்றைய கேயாசிகள் கேயாசி வாழ்க்கை, இன்றைய சபைகளுக்குத் தலைவர்களுக்கு மிகப்பெரிய தேவன் கொடுத்தும் எச்சரிக்கை. முதலில் எலிசா கேயாசி‌ வாழ்ந்த காலத்தின் சூழ்நிலையைப் பார்க்க வேண்டும். ஆகாப் அரசனும் அவருடைய மனைவி யேசபேலும் இஸ்ரவேல் தேசத்தைப் பாகால்களைப் பின்பற்றுகிற தேசமாக மாற்றிய காலகட்டம். ஆகாப்புக்கு பின்வந்த அரசர்களும் கடவுளைத் தாவீதைப் போல உத்தமமாகப் பின்பற்றவில்லை. எலியா தீர்க்கதரிசிக்கு பிறகு எலிசா கர்த்தருடைய வார்த்தைகளை ஜனங்களுக்குச் சொல்லி எச்சரிக்கிற தீர்க்கதரிசியாகக் காணப்பட்டார். இஸ்ரவேல் தேசத்திற்கு விரோதமாகச் சீரிய அரசன் யுத்தம் பண்ணிக் கொண்டிருந்த காலம். ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் எலிசாவின் உடல் ஊழியனாகக் கேயாசி இருந்தான் ஒரு மிகப்பெரிய பொறுப்பு கேயாசிக்கு இருந்தது. ஒரு தலைவன் கர்த்தருடைய வழியில் உண்மையாக நடக்கும்பொழுது அவனுடைய உடன் ஊழியக்காரன் தன் தலைவனுக்கு உத்தமமாக நடக்க வேண்டியது அவனுக்குள்ள பொறுப்பு, தன் தலைவனுடைய சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டு தலைவருடைய தரிசனத்தில் நடக்க வேண்டும். ஆனால் கேயாசி‌ அப்படியாக நடக்கவில்லை. ஆரம்பம் முதலே அவனுக்கு எளியவர்கள் மீது ஒரு வெறுப்பும், பணக்காரர்கள்மீது ஒரு பாசமும் இருப்பதை வசனத்தை நன்கு கவனிக்கும்போது புரிந்து கொள்ளலாம் சூனேமியாளுக்கு அனேக நாள் குழந்தை இல்லாமல் இருந்து பிறகு எலிசாவில் வார்த்தையின் படி ஒரு குழந்தை பிறந்தது. அந்தப் பிள்ளை பெரியவனாகி மரித்தபோது அந்தத் தகவலைச் சொல்வதற்காக அவள் எலிசாவிடம் வந்து அவருடைய கால்களைப் பிடித்து மன்றாடியபோது, எதையும் அறிந்து கொள்ளாமல் கேயாசி அவளுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் அவளை விலக்கி விட முன்வந்தான். 4:27 இது அவனுடைய இரக்கமற்ற குணத்தை காட்டுகிறது. ஆனால் அதே வேளையில் நாகமான் அதிசயத்தைப் பெற்று தன்னுடைய நாட்டுக்குத் திரும்பும்பொழுது ‘தனது எஜமான் சீரியனான நாகமான் கொண்டுவந்தவற்றை ஏற்றுக்கொள்ளாமல் விட்டுவிட்டார், யெகோவா இருப்பது நிச்சயமெனில், நான் அவனுக்குப் பின்னாலே ஓடி அவனிடமிருந்து ஏதாவது ஒரு பொருளைக் கேட்டுவாங்குவேன்” என்று தனக்குள்ளே யோசித்த நாகமானை அவசரமாய்ப் பின்தொடர்ந்தான்.” பணக்காரனிடமிருந்து பரிசைப் பெறுவதற்காக ஓடிய கேயாசி ஏழைப் பெண்மணி தன் உணர்வுகளைத் தீர்க்கதரிசியிடம் வெளிப்படுத்த தடுத்தான். அவன் உள்ளத்தில் பண ஆசை வேறொன்றி காணப்பட்டது. விளைவாக அவன் செய்த தவறுகள் 1யெகோவாவின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தினான். 2. நாகமானிடம் பொய் சொன்னான். 3. நாகமானிடம் தன் எஜமான் பெயரைத் தவறாகப் பயன்படுத்தினான் 4. இறுதியாகத் தன் எஜமானிடமே பொய் சொன்னான். தான் வாழ்ந்த காலம் எப்படிப்பட்ட காலம், எவ்வளவு உண்மையாகப் பணி செய்ய வேண்டிய நேரம், புறயின மக்களிடம் எப்படி தன் எஜமானனை போல் பண ஆசை இல்லாதவனாகக் காணப்பட வேண்டிய நேரம், இவற்றையெல்லாம் சற்றும் கவனிக்காமல் அலட்சியப்படுத்தி தன்னுடைய காலத்தை, அங்கிகள், ஒலிவத்தோப்புகள், திராட்சைத் தோட்டங்கள், செம்மறியாட்டு மந்தைகள், மாட்டு மந்தைகள், வேலைக்காரர், வேலைக்காரிகள் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டிய சமயமாக மாற்றி விட்டான். விளைவு கேயாசி உறைபனியின் வெண்மையைப் போல் குஷ்டரோகி ஆனான். இதை இன்றைய சூழ்நிலையோடு நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். தலைவர்கள் இந்தக் கடைசி காலகட்டங்களில் வருகையைப் பற்றிப் பேசுகின்ற இந்தக் காலகட்டங்களில் எப்படிபட்ட பண ஆசை‌ இல்லாதவர்களாக வாழ வேண்டும்‌ என்கிற‌ சிந்தனை சிறிது கூட இல்லாமல் காணப்படுகிறார்கள். கடவுள் தங்களுக்கு கொடுத்த கிருபை வரங்களை வியாபாரமயமாக்கி அவர்களும் அவருடைய குடும்பங்களும் தலைமுறை தலைமுறைக்குச் சொத்துக்களை சேர்த்து குவிக்கின்றனர். அதே வேளையில் ஸஉண்மையாக ஊழியம் செய்கிற ஊழியர்களுக்காக மிக்க நன்றி செலுத்துகிறேன். இந்தக் கேயாசியை பொறுத்த அளவில் அவன் எந்த வரத்தையும் பெற்றவன் அல்ல . வரத்தை உடைய எலிசாவே நாகமானின் பரிசுகளை வேண்டாம் என்று சொன்னபிறகு அந்தப் பரிசைப் பெறுவதற்கு இவ்வளவேனும் தகுதி இல்லாத கேயாசி வெள்ளிக்கட்டிகளையும் அங்கிகளையும் பெற்றுக் கொண்டது போல இன்றைக்கு தேவனால் இலவசமாய் பெற்ற வரங்களைப் பயன்படுத்தி பணக்காரர்களைத் தங்கள் வலைக்குள் இழுத்து கொள்கிறார்கள். அதே வேளையில் எளிய விசுவாசிகளை ஒதுக்கப்பட்டவர்களை தூரத்தில் நிற்க வைத்து அனுப்பி விடுகிறார்கள். இத்தகைய கேயாசிகளை நாம் எச்சரிக்கையோடு அணுக வேண்டும். வேதத்தைப் போதிக்க வேண்டிய உதடுகள் பொய்கள்மேல் பொய்களைச் சொல்லித் தங்களோடு கடவுள் இல்லாதிருந்தும் இருப்பதாகச் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள். பண ஆசையே எல்லா தீமைக்கும் அடிப்படையாக இருக்கிறது என்கிற சத்தியத்தை அறிந்தும் அந்தச் சத்தியத்தை புறம்பே தள்ளிவிட்டு விசுவாசிகளிடமிருந்து பெற்ற பணத்தை கொண்டு அவர்கள் மட்டும் அலங்காரமான வீடுகளில் வாழும் காலமா இது?” என்று ஆகாய் தீர்க்கதரிசியை போல் கேட்க வேண்டிய சூழலில் உள்ளது எனவே ஒவ்வொரு விசுவாசியும் கேயாசியை போன்ற தலைவர்களை நோக்கி"பணத்தை வாங்குகிறதற்கும், வஸ்திரங்களையும், ஒலிவத்தோப்புகளையும் திராட்சத்தோட்டங்களையும் ஆடுமாடுகளையும் வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் வாங்குகிறதற்கும் இது காலமா? என்று தைரியமாகக் கேட்பதற்கு முன்வர வேண்டும். அப்படி தைரியம் இல்லை என்றால் அப்படிப்பட்ட தலைவர்களுக்கு உங்கள் காணிக்கை அனுப்பாதீர்கள். இந்த ஒரு காரியத்தை யாவது விசுவாசிகள் செய்ய வேண்டும். விசுவாசிகள் தைரியமாக இது மாதிரியான காரியங்களை எதிர்த்துப் போராட முன் வர வேண்டும். நம்முடைய தலைவர்களைச் சபையை இந்த உலகம் ஒரு பொருட்டாகவே மதிக்காத இந்தக் காலகட்டத்தில் நம்மைச் சூழ்ந்து வரும் அநேக எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டிய இந்த நேரத்தில் எவ்வளவு சாட்சியுள்ள வாழ்க்கை வேண்டும் என்கிற அவசியம் உள்ள இந்தக் காலகட்டத்தில்ஆன்மீகத் தலைவர்கள் என்று பேசிக்கொள்ளும் நம்முடைய தலைவர்கள் எவ்வளவு தியாகமாக அர்ப்பணிப்புடன் சாட்சியாக வாழ வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் விசுவாசிகள் வியர்வை சிந்தி கொடுத்த காணிக்கைகளை வருமான வரி அதிகாரிகளுக்கு லஞ்சமாகக் கொடுப்பதும் அரசியல்வாதிகளுக்குக் காணிக்கை கொடுப்பதும் ரியல் எஸ்டேட் தொழில்களில் ஈடுபடுவதும் உயர் கல்வி படிக்க முடியாத தன் சபையில் உள்ள ஏழைகளுக்கு உதவ முடியாமல் தங்கள் பிள்ளைகளை மட்டும் லட்சக்கணக்கில் பணம் செலவழித்து வெளிநாட்டில் படிக்க வைப்பதும் எந்த வகையில் நியாயம் அவர்களுக்கு வேதம் கேட்கக்கூடிய ஒரே கேள்வி இதுதான் 'சுகபோகமாக வாழ்வதற்கும் விதவிதமான வாகனங்கள் வாங்குவதற்கும் ஆடம்பரமாகச் செலவு செய்வதற்கும் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் சேர்த்து வைப்பதற்கும் இதுவா காலம்'

2 Kings – Bible study, Seven

Just for your thoughts. 2 Kings – Bible study, Seven Title: Today’s Ghazi – A Great Need and Warning for Church Leaders. First, let’s look at the context in which Elisha and Gehazi lived. King Ahab and his wife, Jezebel, had turned Israel into a nation that worshipped Baal. The kings who came after Ahab also did not follow God faithfully like David did. After Elijah, Elisha was the prophet who proclaimed the word of the Lord and warned the people. It was during a time when the king of Syria was constantly waging war against Israel. In this period of crisis, Gehazi served as Elisha’s personal attendant. Gehazi had a great responsibility. When a leader walks faithfully in the way of the Lord, it is the duty of his servant to walk faithfully with him – to absorb the thinking of his master and act according to his master’s vision. But Gehazi did not do that. From the beginning, we can see in the verses that Gehazi had a certain disdain for the poor and an affection for the rich. The Shunammite woman, who had long been childless, bore a child according to Elisha’s word. When that child grew up and died, the mother came to Elisha, fell at his feet, and pleaded with him. At that moment, Gehazi, unable to understand her feelings, stepped forward to push her away (2 Kings 4:27). This shows his lack of compassion. Yet at the same time, when Naaman the Syrian was healed and was about to return to his country, Elisha refused to accept the gifts Naaman had brought. But Gehazi said to himself, “As surely as the Lord lives, I will run after him and get something from him.” And so he quickly ran after Naaman. Gehazi, who ran to get gifts from a rich man, had earlier tried to stop a poor woman from expressing her feelings to the prophet. In Gehazi’s heart, love for money had taken root. As a result, Gehazi committed these sins: 1.He misused the name of the Lord. 2.He lied to Naaman. 3.He misused his master’s name before Naaman. 4.He ultimately lied to his own master. He failed to see what a time he was living in – a time when there was a need to serve faithfully, to show the Gentiles that his master had no greed for money. Ignoring all this, he turned that period into a time to acquire silver, olive groves, vineyards, flocks, herds, male and female servants. The result? Gehazi became leprous, white as snow. We must compare this with today’s context. Leaders in these last days talk about the Lord’s coming, yet there is little thought about living as people free from the love of money. They turn God’s gracious gifts into business opportunities, and they – along with their families – amass wealth to pass down for generations. At the same time, I am truly thankful for those who serve faithfully. As for Gehazi, he had no special gift. Even when Elisha, who had gifts, rejected Naaman’s gifts, Gehazi – who had no such qualification – ran after and took silver and clothing. Today, likewise, some use gifts freely given by God to trap the rich into their nets. Meanwhile, they push aside humble believers and keep them at a distance. We must deal cautiously with such Gehazis. Lips that should teach the Word of God instead tell lie upon lie, claiming God is with them when He is not, deceiving the people. Even though they know the truth that “the love of money is the root of all evil,” they reject it, and live in luxury with money collected from believers. In such a time, like the prophet Haggai, we must boldly ask: “Is it a time for you yourselves to be living in paneled houses, while God’s house remains a ruin?” So every believer must have the courage to ask leaders “Is this the time to take money, and to take clothes, olive groves, vineyards, sheep and cattle, male and female servants?” Ezekiel Shanmugavel, [7/5/2025 8:38 PM] If we don’t have that courage, at least we should stop sending offerings to such leaders. This is something believers should do. Believers should bravely stand up and resist such practices. In these days, when the world barely respects the Church, when we face many oppositions, and when there is a great need for a life of testimony, our so-called spiritual leaders should live sacrificial and committed lives. Instead, with money sacrificially given by believers through sweat and hard work, they bribe tax officials, give offerings to politicians, invest in real estate, and send only their own children abroad to study by spending huge sums – while failing to help the poor in their churches who cannot even pursue higher education. In what way is this just? The only question Scripture would ask them is this : “Is this the time to take money, and to take clothes, olive groves, vineyards, sheep and cattle, male and female servants?"

இரண்டு அரசர்கள் புத்தகம். வேத பாடம் ஏழு

உங்கள் சிந்தனைக்கு. இரண்டு அரசர்கள் புத்தகம். வேத பாடம் ஏழு தலைப்பு இன்றைய கேயாசிகள் கேயாசி வாழ்க்கை, இன்றைய சபைகளுக்குத் தலைவர்களுக்கு மிகப்பெரிய தேவன் கொடுத்தும் எச்சரிக்கை. முதலில் எலிசா கேயாசி‌ வாழ்ந்த காலத்தின் சூழ்நிலையைப் பார்க்க வேண்டும். ஆகாப் அரசனும் அவருடைய மனைவி யேசபேலும் இஸ்ரவேல் தேசத்தைப் பாகால்களைப் பின்பற்றுகிற தேசமாக மாற்றிய காலகட்டம். ஆகாப்புக்கு பின்வந்த அரசர்களும் கடவுளைத் தாவீதைப் போல உத்தமமாகப் பின்பற்றவில்லை. எலியா தீர்க்கதரிசிக்கு பிறகு எலிசா கர்த்தருடைய வார்த்தைகளை ஜனங்களுக்குச் சொல்லி எச்சரிக்கிற தீர்க்கதரிசியாகக் காணப்பட்டார். இஸ்ரவேல் தேசத்திற்கு விரோதமாகச் சீரிய அரசன் யுத்தம் பண்ணிக் கொண்டிருந்த காலம். ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் எலிசாவின் உடல் ஊழியனாகக் கேயாசி இருந்தான் ஒரு மிகப்பெரிய பொறுப்பு கேயாசிக்கு இருந்தது. ஒரு தலைவன் கர்த்தருடைய வழியில் உண்மையாக நடக்கும்பொழுது அவனுடைய உடன் ஊழியக்காரன் தன் தலைவனுக்கு உத்தமமாக நடக்க வேண்டியது அவனுக்குள்ள பொறுப்பு, தன் தலைவனுடைய சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டு தலைவருடைய தரிசனத்தில் நடக்க வேண்டும். ஆனால் கேயாசி‌ அப்படியாக நடக்கவில்லை. ஆரம்பம் முதலே அவனுக்கு எளியவர்கள் மீது ஒரு வெறுப்பும், பணக்காரர்கள்மீது ஒரு பாசமும் இருப்பதை வசனத்தை நன்கு கவனிக்கும்போது புரிந்து கொள்ளலாம் சூனேமியாளுக்கு அனேக நாள் குழந்தை இல்லாமல் இருந்து பிறகு எலிசாவில் வார்த்தையின் படி ஒரு குழந்தை பிறந்தது. அந்தப் பிள்ளை பெரியவனாகி மரித்தபோது அந்தத் தகவலைச் சொல்வதற்காக அவள் எலிசாவிடம் வந்து அவருடைய கால்களைப் பிடித்து மன்றாடியபோது, எதையும் அறிந்து கொள்ளாமல் கேயாசி அவளுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் அவளை விலக்கி விட முன்வந்தான். 4:27 இது அவனுடைய இரக்கமற்ற குணத்தை காட்டுகிறது. ஆனால் அதே வேளையில் நாகமான் அதிசயத்தைப் பெற்று தன்னுடைய நாட்டுக்குத் திரும்பும்பொழுது ‘தனது எஜமான் சீரியனான நாகமான் கொண்டுவந்தவற்றை ஏற்றுக்கொள்ளாமல் விட்டுவிட்டார், யெகோவா இருப்பது நிச்சயமெனில், நான் அவனுக்குப் பின்னாலே ஓடி அவனிடமிருந்து ஏதாவது ஒரு பொருளைக் கேட்டுவாங்குவேன்” என்று தனக்குள்ளே யோசித்த நாகமானை அவசரமாய்ப் பின்தொடர்ந்தான்.” பணக்காரனிடமிருந்து பரிசைப் பெறுவதற்காக ஓடிய கேயாசி ஏழைப் பெண்மணி தன் உணர்வுகளைத் தீர்க்கதரிசியிடம் வெளிப்படுத்த தடுத்தான். அவன் உள்ளத்தில் பண ஆசை வேறொன்றி காணப்பட்டது. விளைவாக அவன் செய்த தவறுகள் 1யெகோவாவின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தினான். 2. நாகமானிடம் பொய் சொன்னான். 3. நாகமானிடம் தன் எஜமான் பெயரைத் தவறாகப் பயன்படுத்தினான் 4. இறுதியாகத் தன் எஜமானிடமே பொய் சொன்னான். தான் வாழ்ந்த காலம் எப்படிப்பட்ட காலம், எவ்வளவு உண்மையாகப் பணி செய்ய வேண்டிய நேரம், புறயின மக்களிடம் எப்படி தன் எஜமானனை போல் பண ஆசை இல்லாதவனாகக் காணப்பட வேண்டிய நேரம், இவற்றையெல்லாம் சற்றும் கவனிக்காமல் அலட்சியப்படுத்தி தன்னுடைய காலத்தை, அங்கிகள், ஒலிவத்தோப்புகள், திராட்சைத் தோட்டங்கள், செம்மறியாட்டு மந்தைகள், மாட்டு மந்தைகள், வேலைக்காரர், வேலைக்காரிகள் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டிய சமயமாக மாற்றி விட்டான். விளைவு கேயாசி உறைபனியின் வெண்மையைப் போல் குஷ்டரோகி ஆனான். இதை இன்றைய சூழ்நிலையோடு நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். தலைவர்கள் இந்தக் கடைசி காலகட்டங்களில் வருகையைப் பற்றிப் பேசுகின்ற இந்தக் காலகட்டங்களில் எப்படிபட்ட பண ஆசை‌ இல்லாதவர்களாக வாழ வேண்டும்‌ என்கிற‌ சிந்தனை சிறிது கூட இல்லாமல் காணப்படுகிறார்கள். கடவுள் தங்களுக்கு கொடுத்த கிருபை வரங்களை வியாபாரமயமாக்கி அவர்களும் அவருடைய குடும்பங்களும் தலைமுறை தலைமுறைக்குச் சொத்துக்களை சேர்த்து குவிக்கின்றனர். அதே வேளையில் ஸஉண்மையாக ஊழியம் செய்கிற ஊழியர்களுக்காக மிக்க நன்றி செலுத்துகிறேன். இந்தக் கேயாசியை பொறுத்த அளவில் அவன் எந்த வரத்தையும் பெற்றவன் அல்ல . வரத்தை உடைய எலிசாவே நாகமானின் பரிசுகளை வேண்டாம் என்று சொன்னபிறகு அந்தப் பரிசைப் பெறுவதற்கு இவ்வளவேனும் தகுதி இல்லாத கேயாசி வெள்ளிக்கட்டிகளையும் அங்கிகளையும் பெற்றுக் கொண்டது போல இன்றைக்கு தேவனால் இலவசமாய் பெற்ற வரங்களைப் பயன்படுத்தி பணக்காரர்களைத் தங்கள் வலைக்குள் இழுத்து கொள்கிறார்கள். அதே வேளையில் எளிய விசுவாசிகளை ஒதுக்கப்பட்டவர்களை தூரத்தில் நிற்க வைத்து அனுப்பி விடுகிறார்கள். இத்தகைய கேயாசிகளை நாம் எச்சரிக்கையோடு அணுக வேண்டும். வேதத்தைப் போதிக்க வேண்டிய உதடுகள் பொய்கள்மேல் பொய்களைச் சொல்லித் தங்களோடு கடவுள் இல்லாதிருந்தும் இருப்பதாகச் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள். பண ஆசையே எல்லா தீமைக்கும் அடிப்படையாக இருக்கிறது என்கிற சத்தியத்தை அறிந்தும் அந்தச் சத்தியத்தை புறம்பே தள்ளிவிட்டு விசுவாசிகளிடமிருந்து பெற்ற பணத்தை கொண்டு அவர்கள் மட்டும் அலங்காரமான வீடுகளில் வாழும் காலமா இது?” என்று ஆகாய் தீர்க்கதரிசியை போல் கேட்க வேண்டிய சூழலில் உள்ளது எனவே ஒவ்வொரு விசுவாசியும் கேயாசியை போன்ற தலைவர்களை நோக்கி"பணத்தை வாங்குகிறதற்கும், வஸ்திரங்களையும், ஒலிவத்தோப்புகளையும் திராட்சத்தோட்டங்களையும் ஆடுமாடுகளையும் வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் வாங்குகிறதற்கும் இது காலமா? என்று தைரியமாகக் கேட்பதற்கு முன்வர வேண்டும். அப்படி தைரியம் இல்லை என்றால் அப்படிப்பட்ட தலைவர்களுக்கு உங்கள் காணிக்கை அனுப்பாதீர்கள். இந்த ஒரு காரியத்தை யாவது விசுவாசிகள் செய்ய வேண்டும். விசுவாசிகள் தைரியமாக இது மாதிரியான காரியங்களை எதிர்த்துப் போராட முன் வர வேண்டும். நம்முடைய தலைவர்களைச் சபையை இந்த உலகம் ஒரு பொருட்டாகவே மதிக்காத இந்தக் காலகட்டத்தில் நம்மைச் சூழ்ந்து வரும் அநேக எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டிய இந்த நேரத்தில் எவ்வளவு சாட்சியுள்ள வாழ்க்கை வேண்டும் என்கிற அவசியம் உள்ள இந்தக் காலகட்டத்தில்ஆன்மீகத் தலைவர்கள் என்று பேசிக்கொள்ளும் நம்முடைய தலைவர்கள் எவ்வளவு தியாகமாக அர்ப்பணிப்புடன் சாட்சியாக வாழ வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் விசுவாசிகள் வியர்வை சிந்தி கொடுத்த காணிக்கைகளை வருமான வரி அதிகாரிகளுக்கு லஞ்சமாகக் கொடுப்பதும் அரசியல்வாதிகளுக்குக் காணிக்கை கொடுப்பதும் ரியல் எஸ்டேட் தொழில்களில் ஈடுபடுவதும் உயர் கல்வி படிக்க முடியாத தன் சபையில் உள்ள ஏழைகளுக்கு உதவ முடியாமல் தங்கள் பிள்ளைகளை மட்டும் லட்சக்கணக்கில் பணம் செலவழித்து வெளிநாட்டில் படிக்க வைப்பதும் எந்த வகையில் நியாயம் அவர்களுக்கு வேதம் கேட்கக்கூடிய ஒரே கேள்வி இதுதான் “பணத்தை வாங்குகிறதற்கும், வஸ்திரங்களையும் ஒலிவத்தோப்புகளையும் திராட்சத்தோட்டங்களையும் ஆடுமாடுகளையும் வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் வாங்குகிறதற்கும் இது காலமா”

‌2 அரசர்கள் புத்தகம் வேத பாடம் ஐந்து

உங்கள் சிந்தனைக்கு. 2 அரசர்கள் புத்தகம் – வேத பாடம் 5 தேவனுடைய பிள்ளைகளிடம் வெளிப்பட வேண்டிய முக்கியமான காரியம். இந்த புத்தகத்தின் மூன்றாவது அதிகாரத்தில், ஏதோம் அரசனை எதிர்த்து யுத்தத்திற்குப் புறப்பட்டபோது, அவர்களுடைய படைவீரருக்கும், அவர்களுக்கும், அவர்களுடன் இருந்த மிருகங்களுக்கும் சிறிது தண்ணீர்கூட மீதமிருக்கவில்லை. இதனால் இஸ்ரவேல் அரசனும், யூதா அரசனும் இணைந்து எலிசாவை பார்க்கச் சென்றனர். அப்போது யூத அரசன் யோசபாத் எலிசாவைப்பற்றி சொன்னது: "கர்த்தருடைய வார்த்தை அவனிடத்தில் இருக்கிறது" – 2 இராஜாக்கள் 3:12 எலிசா அதுவரை இரண்டு அதிசயங்களை செய்திருந்தாலும், அந்த அதிசயங்கள் எலிசாவை நோக்கி இழுத்துக் கொண்டு வரவில்லை. அவனிடத்தில் வெளிப்பட்ட தேவவசனமே அரசர்களை அசைத்தது. கர்த்தருடைய வார்த்தைக்காகவே அரசர்கள் அவனை நோக்கி ஓடினார்கள். இயேசு கிறிஸ்து உயிரோடு இருந்த நாட்களிலும், அவருடைய அதிசயங்களுக்காக மட்டுமல்ல, அவருடைய வார்த்தையை கேட்பதற்காகவும் மக்கள் அவரை நெருங்கினார்கள் என்று லூக்கா 5:1ல் பார்க்கலாம்: "பின்பு அவர் கெனேசரேத்து கடலருகே நின்றபோது, திரளான ஜனங்கள் தேவவசனத்தைக் கேட்கும்படி அவரிடம் நெருங்கினார்கள்." – லூக்கா 5:1 இன்று சபைகளில் அதிசயங்கள், அற்புதங்களை நடத்திக்கொண்டிருக்கும் ஊழியர்களை நோக்கி பெருங்கூட்டம் சென்று கொண்டிருக்கிறது. அது தேவையானதே, இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அதே வேளையில், அற்புதங்களை பெற்றவர்கள் அதிலேயே திருப்தியடையாமல், தேவவசனத்தையும் தேட வேண்டும். இன்றைக்கு தேவவசனம் ஊழியர்களிடம் வெளிப்படுவது அரிதாக இருக்கிறது. வேதத்தைக் கடுமையாகத் தியானித்து, சத்திய வசனத்தை நிதானமாக, சரியான முறையில் வியாக்கியாணம் செய்து (rightly dividing the word) போதிக்கிறவர்கள் மிகவும் குறைவு. விசுவாசிகள் வசனத்தை தேட வேண்டும், தியானிக்க வேண்டும், அதன்படி நடக்க வேண்டும் என்ற சிந்தனை இன்று மிகவும் குறைவாக காணப்படுகிறது. அந்த வெற்றிடத்தை உலக அதிசயங்கள், நன்மைகள், பொருளாதார ஆசைகள் நிரப்பி விட்டன. பில்லி கிரகாம் தேவவசனத்தை தூய்மையாய் பிரசங்கித்து அதன்படி வாழ்ந்ததால், அரசியல்வாதிகள் அவரை நோக்கி ஓடினார்கள். ஆனால் இன்றைய கிறிஸ்தவ தலைவர்கள் அரசியல்வாதிகளை நோக்கி ஓடுகிறார்கள் . காரணம் – அரசியல்வாதிகளை ஈர்க்கக்கூடிய தேவவசனம் அவர்களிடம் இல்லாததுதான். ஆதித் திருச்சபை எழுப்பப்பட வேண்டும் என்றால், அப்போஸ்தலர் 6:7, 19:20 போன்ற நிகழ்வுகள் நடக்கவேண்டும் : "தேவவசனம் விருத்தியடைந்தது; சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகியது; ஆசாரியர்களில் அநேகரும் விசுவாசத்துக்குக் கீழ்ப்பட்டார்கள்." – அப்போஸ்தலர் 6:7 "இவ்வளவு பலமாய்க் கர்த்தருடைய வசனம் விருத்தியடைந்து மேற்கொண்டது." – அப்போஸ்தலர் 19:2 கிறிஸ்தவம் தமிழகத்தில் உண்மையாக வளர வேண்டும் என்றால், நற்செய்தி பணியோடு வேத தியானமும் சரியாக போதிக்கப்பட வேண்டும். நான் இரட்சிக்கப்பட்ட காலங்களில் அரை மணி நேர வேதப் பாடத்துக்காக பல மணி நேரம் பயணம் செய்து தியான கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். வேதத்தைப் படிக்க வேண்டும், தியானிக்க வேண்டும் என்ற ஒரு அக்னி இன்றைய விசுவாசிகளின் உள்ளங்களில் காணப்படாதது பரிதாபம். இன்றைய சபைகள் விசுவாசிகளை வசனத்தை நேசிக்கவும், தியானிக்கவும் பழக்கப்படுத்துவதில் தோல்வியடைந்துள்ளன. வசனத்திற்குத் திரும்புவதே இன்று சபைகளில் காணப்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் சரியான மருந்து. எசேக்கியேல் சண்முகவேல்

‌2 அரசர்கள் புத்தகம் வேத பாடம் ஐந்து

உங்கள் சிந்தனைக்கு. 2 அரசர்கள் புத்தகம் – வேத பாடம் 5 தேவனுடைய பிள்ளைகளிடம் வெளிப்பட வேண்டிய முக்கியமான காரியம். இந்த புத்தகத்தின் மூன்றாவது அதிகாரத்தில், ஏதோம் அரசனை எதிர்த்து யுத்தத்திற்குப் புறப்பட்டபோது, அவர்களுடைய படைவீரருக்கும், அவர்களுக்கும், அவர்களுடன் இருந்த மிருகங்களுக்கும் சிறிது தண்ணீர்கூட மீதமிருக்கவில்லை. இதனால் இஸ்ரவேல் அரசனும், யூதா அரசனும் இணைந்து எலிசாவை பார்க்கச் சென்றனர். அப்போது யூத அரசன் யோசபாத் எலிசாவைப்பற்றி சொன்னது: "கர்த்தருடைய வார்த்தை அவனிடத்தில் இருக்கிறது" – 2 இராஜாக்கள் 3:12 எலிசா அதுவரை இரண்டு அதிசயங்களை செய்திருந்தாலும், அந்த அதிசயங்கள் எலிசாவை நோக்கி இழுத்துக் கொண்டு வரவில்லை. அவனிடத்தில் வெளிப்பட்ட தேவவசனமே அரசர்களை அசைத்தது. கர்த்தருடைய வார்த்தைக்காகவே அரசர்கள் அவனை நோக்கி ஓடினார்கள். இயேசு கிறிஸ்து உயிரோடு இருந்த நாட்களிலும், அவருடைய அதிசயங்களுக்காக மட்டுமல்ல, அவருடைய வார்த்தையை கேட்பதற்காகவும் மக்கள் அவரை நெருங்கினார்கள் என்று லூக்கா 5:1ல் பார்க்கலாம்: "பின்பு அவர் கெனேசரேத்து கடலருகே நின்றபோது, திரளான ஜனங்கள் தேவவசனத்தைக் கேட்கும்படி அவரிடம் நெருங்கினார்கள்." – லூக்கா 5:1 இன்று சபைகளில் அதிசயங்கள், அற்புதங்களை நடத்திக்கொண்டிருக்கும் ஊழியர்களை நோக்கி பெருங்கூட்டம் சென்று கொண்டிருக்கிறது. அது தேவையானதே, இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அதே வேளையில், அற்புதங்களை பெற்றவர்கள் அதிலேயே திருப்தியடையாமல், தேவவசனத்தையும் தேட வேண்டும். இன்றைக்கு தேவவசனம் ஊழியர்களிடம் வெளிப்படுவது அரிதாக இருக்கிறது. வேதத்தைக் கடுமையாகத் தியானித்து, சத்திய வசனத்தை நிதானமாக, சரியான முறையில் வியாக்கியாணம் செய்து (rightly dividing the word) போதிக்கிறவர்கள் மிகவும் குறைவு. விசுவாசிகள் வசனத்தை தேட வேண்டும், தியானிக்க வேண்டும், அதன்படி நடக்க வேண்டும் என்ற சிந்தனை இன்று மிகவும் குறைவாக காணப்படுகிறது. அந்த வெற்றிடத்தை உலக அதிசயங்கள், நன்மைகள், பொருளாதார ஆசைகள் நிரப்பி விட்டன. பில்லி கிரகாம் தேவவசனத்தை தூய்மையாய் பிரசங்கித்து அதன்படி வாழ்ந்ததால், அரசியல்வாதிகள் அவரை நோக்கி ஓடினார்கள். ஆனால் இன்றைய கிறிஸ்தவ தலைவர்கள் அரசியல்வாதிகளை நோக்கி ஓடுகிறார்கள் . காரணம் – அரசியல்வாதிகளை ஈர்க்கக்கூடிய தேவவசனம் அவர்களிடம் இல்லாததுதான். ஆதித் திருச்சபை எழுப்பப்பட வேண்டும் என்றால், அப்போஸ்தலர் 6:7, 19:20 போன்ற நிகழ்வுகள் நடக்கவேண்டும் : "தேவவசனம் விருத்தியடைந்தது; சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகியது; ஆசாரியர்களில் அநேகரும் விசுவாசத்துக்குக் கீழ்ப்பட்டார்கள்." – அப்போஸ்தலர் 6:7 "இவ்வளவு பலமாய்க் கர்த்தருடைய வசனம் விருத்தியடைந்து மேற்கொண்டது." – அப்போஸ்தலர் 19:2 கிறிஸ்தவம் தமிழகத்தில் உண்மையாக வளர வேண்டும் என்றால், நற்செய்தி பணியோடு வேத தியானமும் சரியாக போதிக்கப்பட வேண்டும். நான் இரட்சிக்கப்பட்ட காலங்களில் அரை மணி நேர வேதப் பாடத்துக்காக பல மணி நேரம் பயணம் செய்து தியான கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். வேதத்தைப் படிக்க வேண்டும், தியானிக்க வேண்டும் என்ற ஒரு அக்னி இன்றைய விசுவாசிகளின் உள்ளங்களில் காணப்படாதது பரிதாபம். இன்றைய சபைகள் விசுவாசிகளை வசனத்தை நேசிக்கவும், தியானிக்கவும் பழக்கப்படுத்துவதில் தோல்வியடைந்துள்ளன. வசனத்திற்குத் திரும்புவதே இன்று சபைகளில் காணப்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் சரியான மருந்து. எசேக்கியேல் சண்முகவேல்

2 அரசர்கள் புத்தகம் வேத பாட நாள் 4

உங்கள் சிந்தனைக்கு 2 அரசர்கள் புத்தகம் வேதபாடம் - 4 எலியாவின் சால்வையும் எலிசாவின் தலைமைப் பொறுப்பும் யூதர்களின் வரலாற்றில் எலியா தனிப்பட்ட சிறப்பைப் பெற்றவர். உயிரோடே பரலோகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டவர். (ஏனோக்கு 300 ஆண்டுகள் தேவனோடு நடந்து, பின்னர் எடுத்துக் கொள்ளப்பட்டார். ஆனால் எலிசா அப்படி அல்ல.) மூன்று ஆண்டுகள் ஆறு மாதங்கள் மழை பெய்யாதபடியாக இயற்கையின் மீது ஆளுகை செலுத்தியவர். மரித்தவரை உயிருடன் எழுப்பியவர். பாகாலின் தீர்க்கதரிசிகள் முன்னிலையில் வானத்திலிருந்து அக்கினியை இறக்கச் செய்தவர். ஏறத்தாழ 16 அதிசயங்களைத் தேவன் மூலமாக நிகழ்த்தியதாகவே வேதாகமம் குறிப்பிடுகிறது. இஸ்ரவேல் மக்களிடையே மிகப்பெரிய தீர்க்கதரிசியாக அறியப்பட்டவர். இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாய் இருந்தவராகக் காணப்பட்டவர். ஆனாலும் எந்த ஒரு மிகப்பெரிய ஊழியக்காரராக இருந்தாலும் அவர்கள் அழியாதவர்கள் அல்ல. அவர்களுடைய ஊழியத்தின் கால அளவு நிரந்தரமானது அல்ல. இந்த ஒரு மனிதரை வைத்துதான் கடவுள் தன்னுடைய ஊழியத்தை நிறைவேற்றுவார் என்கிற கட்டாயத்திற்கு உட்பட்டவர் அல்ல நமது கடவுள். Nobody is indispensable. எனவே அவர் இருக்கும் காலத்திலேயே எலியாவின் ஸ்தானத்தில் எலிசாவை முன்குறித்தார். எலியாவைக் கொண்டே எலிசாவை, எலியாவின் அடுத்த வாரிசாக அபிஷேகம் செய்ய வைத்தார். அதற்கு அடையாளமாக, எலியா அவனுக்குக் கிட்டப்போய் தன் மேலுடையை அவன்மேல் எறிந்தான். மேலாடை அவன்மேல் விழுந்தது. இந்த நிகழ்வுக்குப் பிறகு பல ஆண்டுகள் இருவரும் சேர்ந்து பணி செய்தார்கள். அதற்குப் பிறகு எலியா பரலோகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டபோது, தன் உடைகளைக் கிழித்து, கீழே விழுந்த எலியாவின் மேலாடையை எடுத்து, யோர்தானின் தண்ணீரில் அடித்து, "எலியாவின் தேவன் எங்கே?" என்று சொல்லி நதியை இரண்டாகப் பிரித்துத் தான் எலியாவின் வாரிசு என்று இஸ்ரவேல் ஜனங்களுக்கு நிரூபித்துக் காட்டினான். இந்த நிகழ்வுகள்மூலம் தேவன் உணர்த்தும் பாடங்கள்: 1. எலியாவைப் பொறுத்த அளவில்: தான் மட்டும்தான் "கடவுளுக்காக வைராக்கியமாக இருக்கிறேன்" என்கிற சிந்தனையைத் தேவன் புறந்தள்ளி விட்டார். தீர்க்கதரிசிகள் என்று அடையாளப்படுத்தப்படாத, அதே வேளையில் தீர்க்கதரிசிகள் குழுவில் இல்லாத ஒரு எலிசாவை தேவன் தேர்ந்தெடுத்த காரியம், யாரைக் கொண்டும் தேவன் நம்முடைய பணியை நிறைவேற்ற முடியும் என்பதை எலியாவுக்கு கடவுள் உணர்த்தினார். 2. எலிசாவைப் பொறுத்த அளவில்: தன் சால்வையை எலியா தன் மேல் போட்டதன் மூலம், தன்னை எலியாவின் வாரிசாகக் கடவுள் அபிஷேகம் செய்துவிட்டார் என்று அறிந்திருந்தான். ஆனாலும் அவன் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்தது. உடனடியாக செயல்பாட்டில் இறங்கவில்லை. எலியாவோடு கடைசி வரை, பரலோகத்திற்கு எடுத்துச் செல்லப்படும் காலம் வரை இடைவிடாது எலியாவை எலிசா பின் தொடர்ந்தான். கடவுள் நியமித்த காலம் வரைக்கும் பொறுமையாக காத்தான். கடவுளுடைய நேரத்திற்கு முன்பாகச் செயல்படவில்லை. 3. எலியா எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு தன்னுடைய உடையைக் கிழித்துவிட்டு, தன் மேல் விழுந்த சால்வையை எடுத்து, யோர்தானை இரண்டாகப் பிரித்தான். இது எதைக் காட்டுகிறது என்றால், எலிசா தன்னுடைய அடையாளத்தை மறைத்து, எலியாவின் தொடர் ஊழியத்தில் தன்னை இணைத்துக் கொண்டதை காட்டுகிறது. தனக்கென ஒரு சுயாதீன கொள்கையைப் பின்பற்றாமல், கடவுள் எந்த நோக்கத்திற்காக எலியாவை பயன்படுத்தினாரோ, அந்த நோக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டதை காட்டுகிறது. அதிகாரம் என்கிற சால்வை தேவன் நம்மில் விழச்செய்ய வேண்டும். அதே வேளையில், ஏற்ற நேரத்தில் நாமும் விழுந்த மேலாடையை பெற்றுக்கொள்ள வேண்டும். தலைமைப் பொறுப்பை எல்லோரும் அடைய விரும்புவது இயல்புதான். அந்தச் சால்வை எல்லோர்மீதும் விழாது. இறைவனால் முன்குறிக்கப்பட்டவர்கள் மேல்தான் அந்தச் சால்வை விழும். இது தேவனுடைய தெரிவு. அதே வேளையில் விழுந்த சால்வையை நாமும் பெற்றுக்கொண்டு, அதைப் புறக்கணிக்காமல், அதில் நம்மை விட்டு நழுவிப்போகாதபடி விழிப்புடன் இருக்க வேண்டும். தலைமைப் பொறுப்பில் தேவனுடைய தெரிவும், தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் ஒரு விழிப்புணர்வும் மிகவும் அவசியம். முடிவு சிந்தனை: தேவன் நம்மை தேர்வு செய்வதும், தயாரிப்பதும் தேவனுடைய நேரத்திலும், திட்டத்தின்படியும் தான் நடைபெறும். சால்வை விழுந்தது ஒரு தொடக்கமே; அதை உரிமை செய்தல், அதனை முறையாக நடத்துதல் நமது பொறுப்பு. தலைமை, அதிகாரம் என்பது தன்னை உயர்த்திக்காட்டுவது அல்ல; தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்ற உதவும் ஒரு ஊழிய பணி. சுய அடையாளம் மறைந்து, தேவனுடைய திட்டத்திற்கே ஒத்துப்போக வேண்டும். இரண்டாவது தலைமுறை தயார் செய்யப்பட வேண்டும். தனக்கென்று தனி அடையாளம் இல்லாமல், எலியாவின் தொடர் ஊழியத்தையே தன் பணி என எடுத்துக் கொண்டான். எசேக்கியேல் சண்முகவேல்

2 Kings – Bible study 1

2 Kings – Bible study 1 Was it right that Elijah called down fire from heaven to destroy the captains and their fifty soldiers sent by King Ahaziah? Background: After chapter 21 of 1 Kings, Elijah reappears in this book. Following the death of King Ahab, his son Ahaziah became king of Israel. He followed in the evil ways of his father Ahab and mother Jezebel, walking in ways that displeased the Lord and worshipping Baal. Ahaziah fell through the lattice of his upper room in Samaria and was seriously injured. So he sent messengers with this instruction: “Go and inquire of Baal-Zebub, the god of Ekron, whether I will recover from this injury.” At that time, the angel of the Lord spoke to Elijah and said: “‘Go up and meet the messengers of the king of Samaria and ask them, “Is it because there is no God in Israel that you are going off to consult Baal-Zebub, the god of Ekron ‘You will not leave the bed you are lying on. You will surely die.’” Elijah delivered this message to the king’s messengers, and they reported it to Ahaziah. Enraged, the king sent a captain with fifty soldiers to arrest Elijah. The soldiers found Elijah sitting on top of a hill. The captain commanded him , “Man of God, come down! ” Elijah replied “If I am a man of God, may fire come down from heaven and consume you and your fifty me Immediately, fire fell from heaven and consumed them. The same thing happened with the second group sent by the king. When the third group arrived, the captain approached Elijah humbly and pleaded “Man of God, please have respect for my life and the lives of these fifty servants " At that moment, the angel of the Lord said to Elijah, “Go down with him; do not be afraid " Two Key Lessons We Learn from This: Born-again children of God cannot be threatened or intimidated by human authority. God does not permit His servants to be forced into submission by fear. This event should not be compared with the incident recorded in Luke 9:51–56. In that passage, when the Samaritans did not receive Jesus, His disciples wanted to call down fire from heaven, as Elijah did. But Jesus rebuked them. That act would have been an aggressive attack, not a divine judgment. In Elijah’s case, calling down fire from heaven was a necessary act to defend himself and to prove that he was a true servant of God. But in the case of the disciples, doing the same would have been a direct attack on the Samaritans . Moreover, the teaching of the New Testament differs from that of the Old Testament. Many servants of God and believers today imitate Old Testament incidents without discerning the difference between the two covenants — which is inappropriate. “In Luke, the action of the disciples was offensive, while Elijah’s action was defensive and an act of God’s judgment.” — New Spirit-Filled Life Bible Ezekiel Shanmugavel

2 அரசர்கள் புத்தகம் – வேதப் பாடம் ஒன்று

2 அரசர்கள் புத்தகம் – வேதப் பாடம் ஒன்று எலியா, அகசியா அரசனின் தளபதிகளையும், அவர்களது ஐம்பது மனிதர்களைக் கொண்ட குழுவையும் பரலோகத்திலிருந்து நெருப்பை வரவழைத்து சுட்டெரித்தது சரியா? பின்னணி: ஒன்று அரசர்கள் புத்தகம் 21-ஆம் அதிகாரத்திற்குப் பிறகு, எலியாவை மீண்டும் இந்த புத்தகத்தில் பார்க்கலாம். இஸ்ரவேலின் அரசனான ஆகாப் மரித்தபின், அவனுடைய குமாரன் அகசியா அரசனாகினான். அவனும் தன் தந்தையைப் போலவும், தாய் யேசபெலைப் போலவும் கர்த்தருக்குப் பிரியமில்லாத வழியில் நடந்தான்; பாகாலைப் பின்பற்றினான். அகசியா, சமாரியாவில் உள்ள மேல்மாடியின் ஜன்னலின் வழியாக கீழே விழுந்து காயம் பெற்றான். அப்போது அவன் தன் ஆட்களிடம், "எக்ரோனின் தெய்வமாகிய பாகால் சேபூபிடம் போய், இந்த காயத்திலிருந்து நான் குணமாகுமா எனக் கேட்டு வாருங்கள்" என்று அனுப்பினான். அப்போது கர்த்தருடைய தூதன், எலியாவை நோக்கி: "நீ சமாரியாவின் அரசனுடைய தூதுவரைச் சந்தித்து, ‘இஸ்ரவேலில் தேவன் இல்லையா, எக்ரோனின் தெய்வமான பாகால் சேபூபிடம் ஆலோசனை கேட்கப் போகிறீர்கள்?’ என்று கேள். மேலும், ‘நீ படுக்கையில் இருந்து எழ முடியாது; நிச்சயமாக சாவாய்’ என்று சொல்லு" என்று கூறினார். எலியா, இந்த செய்தியை அகசியாவின் தூதுவர்களுக்குச் சொன்னார். அவர்கள் அரசனிடம் இதை தெரிவித்தனர். இதைக் கேட்ட அகசியா, எலியாவை கைது செய்ய ஒருவரை தளபதியாக நியமித்து ஐம்பது ஊழியர்களுடன் அனுப்பினான். நிகழ்வுகள்: மலையின் மீது இருந்த எலியாவை, அவர்கள் அதிகாரத்தோடு கீழே வரச் சொன்னார்கள். அதற்கு எலியா : “நான் தேவனுடைய மனுஷனாக இருந்தால், வானத்திலிருந்து நெருப்பு இறங்கி உங்களையும் உங்கள் ஐம்பது ஊழியர்களையும் சுட்டெரிக்கட்டும்” என்றார். உடனே அக்கினி இறங்கி அவர்கள் எல்லாரையும் அழித்தது . இதேதான் இரண்டாவது குழுவுடனும் நடந்தது. மூன்றாவது குழு வந்தபோது, தளபதி பயந்து, எலியாவை நேரில் சந்தித்தபோது , “இறைவனுடைய மனுஷனே, தயவுசெய்து எனது உயிருக்கும், இந்த ஐம்பது ஊழியர்களின் உயிருக்கும் இரக்கம் காட்டுங்கள்” என்று மண்டியிட்டு கெஞ்சினார். அப்பொழுது தேவனுடைய தூதன் எலியாவிடம், “அவர்களோடு பயப்படாமல் போ” என்று கூறினார் இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் இரு பாடங்கள்: மறுபிறப்புற்ற தேவனுடைய பிள்ளைகளை யாராலும் பயமுறுத்த முடியாது; அவர்களை அச்சுறுத்தி கீழ்ப்படைய தேவன் அனுமதிக்கமாட்டார் இந்த நிகழ்வை, லூக்கா 9:51–56 வசனங்களில் சொல்லப்படும் நிகழ்வுடன் ஒப்பிடக்கூடாது. அங்கு, இயேசுவை சமாரியர்கள் ஏற்கவில்லை என்பதற்காக, சீஷர்கள் எலியாவைப் போல நெருப்பை வரவழைக்க இயேசுவிடம் கேட்டனர். ஆனால் இயேசு அதைப் கடிந்து கூறினார். ஏனெனில், அங்கே தாக்குதல் தேவனுடைய தீர்ப்பல்ல, மனித இக்கோபத்தின் வெளிப்பாடு. எலியாவை பொறுத்த அளவில் தன்னைத் தற்காத்துக் கொள்ளவும்  தான் தேவனுடைய ஊழியக்காரன் என்பதை நிரூபிக்கவும் அக்கினியை விண்ணகத்திலிருந்து வரவழைத்தது அவசியமாய் இருந்தது. ஆனால் லூக்கா நற்செய்தி சொல்லப்பட்ட நிகழ்வுகளை பொறுத்த அளவில் அது அப்படி அல்ல . அப்படி செய்தால் அது சமாரியர்களுக்கு நேராக நடத்தப்படும் தாக்குதலாக கருதப்படும். மேலும் புதிய ஏற்பாட்டின் உபதேசம் என்பது வேறு பழைய ஏற்பாட்டின் உபதேசம் என்பது வேறு. இந்த இரண்டு வித்தியாசத்தை புரியாமல் இன்றைக்கு ஊழியக்காரர்கள், விசுவாசிகள் பழைய ஏற்பாட்டு நிகழ்வுகளை அப்பியாசப்படுத்துவது ஏற்புடையதல்ல. “In Luke, the action of the disciples was offensive, while Elijah’s action was defensive and an act of God’s judgment.” — New Spirit-Filled Life Bible Ezekiel Shanmugavel

The book 2 Kings – Bible study 2

The book 2 Kings – Bible study 2 What lesson does Elisha’s first miracle teach us? Right after Elijah was taken up, the first miracle Elisha performed was striking the waters of the Jordan River and dividing it into two. This is a very significant act. On that same day, Elisha’s spiritual mentor, Elijah, had done the same—he took his cloak, struck the water, and parted the Jordan. Although both performed the same miracle, there is one key difference: Elijah struck the water with his own cloak. Elisha, however, took up Elijah’s cloak, which had fallen when Elijah was taken up into heaven, and used that to strike the water. Elisha followed Elijah’s method. But more than that, he focused on God by asking: "Where is the Lord, the God of Elijah?" Then he struck the waters, and they parted to the right and to the left. From this, we can learn the following lesson: It is not wrong to follow the practices of the previous generation. But those practices must glorify the name of God. God must remain at the center. In many organizations, people strictly follow the exact paths laid down by former leaders. But in doing so, the focus on God is often lost. The ideas and doctrines of past leaders seem to remotely control today’s leaders, even if they no longer align with the present time. New leaders must seek to understand the will of God, keep Him at the center, and surrender themselves fully to be led by Him. Yes, Elisha did take Elijah’s cloak. But when he used it, he exalted God. Like his master, Elisha performed a mighty miracle as his first act. He made a difference. We don't need to do everything exactly as the previous generation did. Instead, the new generation must, according to God's will, bring about changes appropriate for their time. Ezekiel Shanmugavel

2 அரசர்கள் புத்தகம் – வேத பாடம் 2

2 அரசர்கள் புத்தகம் – வேத பாடம் 2 எலிசாவின் முதல் அற்புதம் சொல்லும் பாடம் என்ன? எலியா மறைந்த உடன், எலிசா நிகழ்த்திய முதல் அற்புதம் – யோர்தான் நதியின் தண்ணீரை அடித்து அதை இரண்டாகப் பிரித்தது – மிக முக்கியமானதாகும். அதே நாளில் அவனுடைய ஆன்மீகக் குருவான எலியா, இதேபோல் தன்னுடைய சால்வையை எடுத்துத் தண்ணீரை அடித்து யோர்தானை இரண்டாகப் பிரித்தார். இருவரும் ஒரே அற்புதத்தை நிகழ்த்தினாலும், இதில் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது: எலியா தன்னுடைய சால்வையை கொண்டு தண்ணீரை அடித்தார். எலிசா, எலியா பரலோகத்துக்கு எடுத்துச் செல்லப்படுகையில் அவனுடைய சால்வை தன்னிடம் விழுந்ததை எடுத்துக் கொண்டு அதனை பயன்படுத்தினான். எலிசா, எலியாவின் வழிமுறையை பின்பற்றினான். ஆனால், அதோடு மட்டுமின்றி, "எலியாவின் தேவனாகிய யெகோவா இப்போது எங்கே?" என்று கேட்டபடி, தேவனை மையப்படுத்தி தண்ணீரை அடித்தபோது, அது வலது பக்கமாகவும் இடது பக்கமாகவும் பிரிந்தது. இதிலிருந்து நாம் இப்படி ஒரு பாடத்தைப் பெறுகிறோம்: முந்தைய தலைமுறையின் வழிமுறைகளை பின்பற்றுவது தவறு அல்ல. ஆனால் அந்த வழிமுறைகள் வழியாக கடவுளின் நாமம் மகிமைப்பட வேண்டும். கடவுளே மையமாக இருக்க வேண்டும். பல அமைப்புகளில், முன்னோடியான தலைவர்கள் பின்பற்றிய வழிகளை நூற்றுக்கு நூறு சதவீதம் பின்பற்றுகிறார்கள். ஆனால், அந்த வழிமுறைகளில் கடவுளே மையப்படுத்தப்படுவதில்லை. பழைய தலைவர்களின் சிந்தனைகள் மற்றும் கோட்பாடுகள், தற்போதைய தலைமுறையையும் "ரிமோட் கண்ட்ரோல்" போல ஆள்கிறதாகவே தெரிகிறது. புதிய தலைவர்கள், தேவனுடைய சித்தத்தை அறிந்து, அவரையே மையமாக வைத்து, தங்களை முழுமையாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து நடக்க வேண்டும். எலிசா, எலியாவின் சால்வையை எடுத்தது உண்மைதான். ஆனால், அதை பயன்படுத்தும் பொழுது தேவனை உயர்த்தினான். தன் எஜமானனைப் போலவே, அவனும் தனது முதல் நிகழ்வில் மிகப்பெரிய அதிசயத்தைச் செய்தான். He made a difference. முந்தைய தலைமுறை செய்ததை நாம் ஒரே மாதிரியாகவே செய்ய வேண்டும் என்பதில்லை. தேவனுடைய சித்தத்தின் படி, புதிய தலைமுறை, புதிய மாற்றங்களை, காலத்துக்கேற்ப உருவாக்க வேண்டும். Ezekiel Shanmugavel

The book of 2 Kings – Bible study 3

The book of 2 Kings – Bible study 3 Elisha’s second miracle – some critical reflections As Elisha was walking along the road near the city of Bethel, some young men came out and mocked him, shouting, “Go up, you baldhead! Go up, you baldhead!” Elisha then turned around and, in the name of the Lord, cursed them. Immediately, two bears came out of the forest and mauled forty-two of them. This incident remains one of the most controversial and debated passages in the Bible. People often ask: “Was such a severe punishment justified?”, “Why did he have to curse them?”, “Couldn’t he have forgiven them instead?” Let’s reflect briefly on this. Key points: Bethel – A city in Israel with deep religious significance. Prophets and servants of God were to be honored here. Young men – The term translated as “young men” is explained by many Bible scholars to mean individuals over 30 years old—old enough to discern right from wrong. The insult to Elisha – The phrase “Go up, you baldhead!” had a deeper meaning. It was a challenge suggesting, “You can’t be like Elijah.” This was an insult not only to Elisha himself but also to God’s divine calling and ministry. It is worth noting that even Joram, the son of Ahab, who did not walk in God’s ways, still recognized Elisha as a true prophet of the Lord (2 Kings 3:1 –13). Immediate punishment – In the Old Testament, at the start of certain critical moments, God punished those who treated sacred things lightly: Nadab and Abihu when the tabernacle worship began (Leviticus 10) Achan’s family under Joshua’s leadership (Joshua 7) Similarly, in the New Testament, Ananias and Sapphira faced immediate judgment (Acts 5). Historical context – This was a moment when it was necessary to establish clearly that Elisha was indeed God’s chosen prophet. Mocking him was effectively questioning God’s own appointment. Relevance for today – We cannot say that God’s ministers today should do similar things, especially when we compare it with the New Testament context. Today, we live in the age of grace, where God’s servants are called to respond with patience and love. This event in 2 Kings 2: 3–25 should ultimately be seen as a manifestation of God’s justice. Though it is a challenging and thought-provoking passage, understanding its background, context, and the theological principles behind it helps us see the deeper message it holds. Ezekiel Shanmugavel If

2 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 3

2 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 3 எலிசாவின் இரண்டாவது அதிசயம் –அதைப் பற்றிய விமர்சனங்கள். எலிசா பெத்தேல் நகரத்தின் வழியாக நடந்து கொண்டிருக்கும்போது, சில வாலிபர்கள் வந்து, “மொட்டைத் தலையா, ஏறிப் போ! மொட்டைத் தலையா, ஏறிப் போ!” என்று அவனை கேலி செய்தனர். அப்போது எலிசா திரும்பிப் பார்த்து, யெகோவாவின் நாமத்தில் அவர்களைச் சபித்தான். உடனே காட்டிலிருந்து இரண்டு கரடிகள் வந்து, அவர்களில் நாற்பத்திரண்டு பேரைக் கொன்று போட்டன. இந்த சம்பவம் உலகில் பலராலும் விவாதிக்கப்படும் ஒரு பரபரப்பான வேதத்துணுக்காகவே இருக்கிறது. “இவ்வளவு பெரிய தண்டனை நியாயமானதா?”, “அவர்களை ஏன் சபிக்க வேண்டும்?”, “மன்னித்து விட்டிருக்கலாமே?” என்ற கேள்விகள் எழுகின்றன. இதைப் பற்றி சுருக்கமாக தியானிக்கலாம். முக்கியமான குறிப்புகள்: பெத்தேல் – இஸ்ரவேல் தேசத்தில் மதப்பண்பாடுகளுக்கு முக்கியமான நகரமாகும். இங்கு தீர்க்கதரிசிகளும் தேவ ஊழியர்களும் மதிக்கப்படவேண்டும். வாலிபர்கள் – இங்கே "வாலிபர்கள்" என்று சொல்லப்படுவது 30 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என்றும்,நன்மல–தீமை என்ன என்பதை அறிவதற்குரியவர் என்றும் வேத ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். எலிசாவின் அவமதிப்பு – “மொட்டைத் தலையா, ஏறிப் போ!” என்பதன் உள்ளார்ந்த அர்த்தம், “நீ எலியாவைப் போல் ஆக முடியாது” என்பதான சவாலாகும். இது ஒரு தீர்க்கதரிசியையும், கடவுளின் ஊழியத்தையும் அவமதிப்பது. கடளுடைய வழிகளில் நடக்காத ஆகாபின் மகன் யோராமே எலிசாவை உண்மையான தீர்க்கதரிசியாக கருதியாக கருதியதாக 2 இராஜாக்கள் 3:11-13ல் நாம்  பார்க்கலாம் உடனடி தண்டனை – பழைய ஏற்பாட்டில் சில முக்கிய நிகழ்வுகளின் தொடக்கத்தில் கடவுள் தன்னைத் தூசிக்கொண்டவர்களுக்கு உடனடி தண்டனையை அளித்துள்ளதை நாம் பார்க்கிறோம்: ஆசரிப்பு கூடாரம் தொடங்கும்போது நாதாபும், அபியூவும் தங்கள் (லேவி 10) யோசுவா தலைமையின் கீழ் ஆகானின் குடும்பம் (யோசுவா 7) புதிய ஏற்பாட்டில் அனனியா, சப்பீரா (அப்போஸ்தலர் 5). கால சூழ்நிலை – எலிசா இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட தீர்க்கதரிசி என்பதை உறுதிப்படுத்த வேண்டிய கட்டத்தில் இருந்தார். அவரை கேலி செய்வது கடவுளின் நியமத்தையே கேள்விக்குள்ளாக்குவதாக இருந்தது. தற்போதைய காலத்திற்கான பொருத்தம் இந்த சம்பவத்தை புதிய ஏற்பாட்டுடன் ஒப்பிட்டு, நம் கால ஊழியக்காரர்கள் இந்த மாதிரியான சபைகளைச் செய்ய வேண்டும் என்று கூற இயலாது. இன்று நாம் கிருபையின் காலத்தில் வாழ்கிறோம். இன்று கடவுளுடைய ஊழியக்காரர்கள் பொறுமையுடனும், அன்புடனும் செயல்பட அழைக்கப்படுகிறோம்.. 2 இராஜாக்கள் 2:23–25ல் இடம்பெற்ற இந்த சம்பவம் கடவுளின் நீதியின் ஒரு வெளிப்பாடாகவே பார்க்கப்படவேண்டும். இது ஒரு சிக்கலான மற்றும் மனதில் கேள்விகளை எழுப்பக்கூடிய சம்பவமாக இருந்தாலும், அதன் பின்னணி, சூழ்நிலை, மற்றும் வேதத்திலுள்ள தத்துவ அடிப்படைகளை புரிந்துகொண்டால், அதில் மறைந்துள்ள ஆழமான செய்தியை நன்கு புரிந்து கொள்ளலாம். எசேக்கியேல் சண்முகவேல்

Bible Study - The book of 2 Kings - Lesson 4

Bible Study - The book of 2 Kings - Lesson 4 The Mantle of Elijah and the Leadership of Elisha. In the history of the Jews, Elijah holds a unique and special place. He was taken to heaven alive. (Enoch walked with God for 300 years and was taken up, but Elisha did not have such a long time.) Elijah had authority over nature, stopping rain for three years and six months. He raised the dead to life. He called down fire from heaven in front of the prophets of Baal. The Bible records that nearly 16 miracles were performed through him by God. He was recognized as a great prophet among the people of Israel. He was seen as the chariots and horsemen of Israel. However, no matter how great a servant of God may be, they are not indispensable. Their time of ministry is not permanent. God is not bound to fulfill His work through only one person. Nobody is indispensable. Therefore, even while Elijah was alive, God pointed out Elisha as his successor. Through Elijah himself, Elisha was anointed as his next heir. As a sign of this, Elijah approached Elisha and threw his mantle upon him. The mantle fell on him. After this incident, both of them worked together for several years. Later, when Elijah was taken up to heaven, Elisha tore his own garments, picked up Elijah's fallen mantle, struck the waters of the Jordan, and said, "Where is the Lord, the God of Elijah?" The waters divided, and thus, Elisha proved to the people of Israel that he was Elijah's successor. Spiritual Lessons from These Events 1. Regarding Elijah: Elijah thought, "I alone am zealous for the Lord," but God rejected that notion. God chose Elisha, who was not even known as a prophet or a part of any prophetic group. Through this, God made it clear to Elijah that His work can be accomplished through anyone. 2. Regarding Elisha: When Elijah's mantle fell upon him, Elisha understood that God had anointed him as Elijah's successor. But he had to wait for many years. He did not jump into action immediately. He followed Elijah faithfully, right up to the moment Elijah was taken to heaven. Elisha waited patiently for God's appointed time. He did not act ahead of God's timing. 3. After Elijah was taken up: Elisha tore his garments, took up the fallen mantle, and divided the Jordan. This shows that Elisha hid his personal identity and joined himself fully in the continuation of Elijah's ministry. He did not pursue his own independent agenda, but aligned himself with God's purpose, the same purpose for which God had used Elijah. Additional Reflections The mantle, which symbolizes authority, must fall upon us by God's will. At the same time, we must also be prepared to receive the mantle at the right time. It is natural for everyone to desire leadership and authority. But not everyone receives that mantle. The mantle falls only upon those preordained by God. This is God's sovereign choice. At the same time, when the mantle falls upon us, we must not neglect it. We should be vigilant so that we do not slip away from the responsibility that comes with it. In leadership, both God's choosing and the awareness of the chosen ones are essential. Final Thought God's calling and preparation in our lives happen in His time and according to His plan. The mantle falling upon us is only the beginning; Accepting it with responsibility and handling it properly is our duty. Leadership and authority are not meant for self-exaltation, But to fulfill God's purpose and serve His people. We must set aside our personal identity and fully align with God's plan. The second generation of leadership must be prepared. Without seeking a personal reputation, Elisha made Elijah's continuing ministry his own. - Ezequiel Shanmugavel

2 அரசர்கள் புத்தகம் வேத பாட நாள் 4

உங்கள் சிந்தனைக்கு 2 அரசர்கள் புத்தகம் வேதபாடம் - 4 எலியாவின் சால்வையும் எலிசாவின் தலைமைப் பொறுப்பும் யூதர்களின் வரலாற்றில் எலியா தனிப்பட்ட சிறப்பைப் பெற்றவர். உயிரோடே பரலோகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டவர். (ஏனோக்கு 300 ஆண்டுகள் தேவனோடு நடந்து, பின்னர் எடுத்துக் கொள்ளப்பட்டார். ஆனால் எலிசா அப்படி அல்ல.) மூன்று ஆண்டுகள் ஆறு மாதங்கள் மழை பெய்யாதபடியாக இயற்கையின் மீது ஆளுகை செலுத்தியவர். மரித்தவரை உயிருடன் எழுப்பியவர். பாகாலின் தீர்க்கதரிசிகள் முன்னிலையில் வானத்திலிருந்து அக்கினியை இறக்கச் செய்தவர். ஏறத்தாழ 16 அதிசயங்களைத் தேவன் மூலமாக நிகழ்த்தியதாகவே வேதாகமம் குறிப்பிடுகிறது. இஸ்ரவேல் மக்களிடையே மிகப்பெரிய தீர்க்கதரிசியாக அறியப்பட்டவர். இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாய் இருந்தவராகக் காணப்பட்டவர். ஆனாலும் எந்த ஒரு மிகப்பெரிய ஊழியக்காரராக இருந்தாலும் அவர்கள் அழியாதவர்கள் அல்ல. அவர்களுடைய ஊழியத்தின் கால அளவு நிரந்தரமானது அல்ல. இந்த ஒரு மனிதரை வைத்துதான் கடவுள் தன்னுடைய ஊழியத்தை நிறைவேற்றுவார் என்கிற கட்டாயத்திற்கு உட்பட்டவர் அல்ல நமது கடவுள். Nobody is indispensable. எனவே அவர் இருக்கும் காலத்திலேயே எலியாவின் ஸ்தானத்தில் எலிசாவை முன்குறித்தார். எலியாவைக் கொண்டே எலிசாவை, எலியாவின் அடுத்த வாரிசாக அபிஷேகம் செய்ய வைத்தார். அதற்கு அடையாளமாக, எலியா அவனுக்குக் கிட்டப்போய் தன் மேலுடையை அவன்மேல் எறிந்தான். மேலாடை அவன்மேல் விழுந்தது. இந்த நிகழ்வுக்குப் பிறகு பல ஆண்டுகள் இருவரும் சேர்ந்து பணி செய்தார்கள். அதற்குப் பிறகு எலியா பரலோகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டபோது, தன் உடைகளைக் கிழித்து, கீழே விழுந்த எலியாவின் மேலாடையை எடுத்து, யோர்தானின் தண்ணீரில் அடித்து, "எலியாவின் தேவன் எங்கே?" என்று சொல்லி நதியை இரண்டாகப் பிரித்துத் தான் எலியாவின் வாரிசு என்று இஸ்ரவேல் ஜனங்களுக்கு நிரூபித்துக் காட்டினான். இந்த நிகழ்வுகள்மூலம் தேவன் உணர்த்தும் பாடங்கள்: 1. எலியாவைப் பொறுத்த அளவில்: தான் மட்டும்தான் "கடவுளுக்காக வைராக்கியமாக இருக்கிறேன்" என்கிற சிந்தனையைத் தேவன் புறந்தள்ளி விட்டார். தீர்க்கதரிசிகள் என்று அடையாளப்படுத்தப்படாத, அதே வேளையில் தீர்க்கதரிசிகள் குழுவில் இல்லாத ஒரு எலிசாவை தேவன் தேர்ந்தெடுத்த காரியம், யாரைக் கொண்டும் தேவன் நம்முடைய பணியை நிறைவேற்ற முடியும் என்பதை எலியாவுக்கு கடவுள் உணர்த்தினார். 2. எலிசாவைப் பொறுத்த அளவில்: தன் சால்வையை எலியா தன் மேல் போட்டதன் மூலம், தன்னை எலியாவின் வாரிசாகக் கடவுள் அபிஷேகம் செய்துவிட்டார் என்று அறிந்திருந்தான். ஆனாலும் அவன் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்தது. உடனடியாக செயல்பாட்டில் இறங்கவில்லை. எலியாவோடு கடைசி வரை, பரலோகத்திற்கு எடுத்துச் செல்லப்படும் காலம் வரை இடைவிடாது எலியாவை எலிசா பின் தொடர்ந்தான். கடவுள் நியமித்த காலம் வரைக்கும் பொறுமையாக காத்தான். கடவுளுடைய நேரத்திற்கு முன்பாகச் செயல்படவில்லை. 3. எலியா எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு தன்னுடைய உடையைக் கிழித்துவிட்டு, தன் மேல் விழுந்த சால்வையை எடுத்து, யோர்தானை இரண்டாகப் பிரித்தான். இது எதைக் காட்டுகிறது என்றால், எலிசா தன்னுடைய அடையாளத்தை மறைத்து, எலியாவின் தொடர் ஊழியத்தில் தன்னை இணைத்துக் கொண்டதை காட்டுகிறது. தனக்கென ஒரு சுயாதீன கொள்கையைப் பின்பற்றாமல், கடவுள் எந்த நோக்கத்திற்காக எலியாவை பயன்படுத்தினாரோ, அந்த நோக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டதை காட்டுகிறது. அதிகாரம் என்கிற சால்வை தேவன் நம்மில் விழச்செய்ய வேண்டும். அதே வேளையில், ஏற்ற நேரத்தில் நாமும் விழுந்த மேலாடையை பெற்றுக்கொள்ள வேண்டும். தலைமைப் பொறுப்பை எல்லோரும் அடைய விரும்புவது இயல்புதான். அந்தச் சால்வை எல்லோர்மீதும் விழாது. இறைவனால் முன்குறிக்கப்பட்டவர்கள் மேல்தான் அந்தச் சால்வை விழும். இது தேவனுடைய தெரிவு. அதே வேளையில் விழுந்த சால்வையை நாமும் பெற்றுக்கொண்டு, அதைப் புறக்கணிக்காமல், அதில் நம்மை விட்டு நழுவிப்போகாதபடி விழிப்புடன் இருக்க வேண்டும். தலைமைப் பொறுப்பில் தேவனுடைய தெரிவும், தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் ஒரு விழிப்புணர்வும் மிகவும் அவசியம். முடிவு சிந்தனை: தேவன் நம்மை தேர்வு செய்வதும், தயாரிப்பதும் தேவனுடைய நேரத்திலும், திட்டத்தின்படியும் தான் நடைபெறும். சால்வை விழுந்தது ஒரு தொடக்கமே; அதை உரிமை செய்தல், அதனை முறையாக நடத்துதல் நமது பொறுப்பு. தலைமை, அதிகாரம் என்பது தன்னை உயர்த்திக்காட்டுவது அல்ல; தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்ற உதவும் ஒரு ஊழிய பணி. சுய அடையாளம் மறைந்து, தேவனுடைய திட்டத்திற்கே ஒத்துப்போக வேண்டும். இரண்டாவது தலைமுறை தயார் செய்யப்பட வேண்டும். தனக்கென்று தனி அடையாளம் இல்லாமல், எலியாவின் தொடர் ஊழியத்தையே தன் பணி என எடுத்துக் கொண்டான். எசேக்கியேல் சண்முகவேல்

1 Kings Bible Study 31:

Just for your thoughts: Bible Study 31: The Remnant – People Who Fulfill God's Purpose 1 Kings 19:18 “The remnant may be small. But God accomplishes His great purpose through them.” The truth that “those who remain (the remnant) are the ones who fulfill God’s purpose” is powerfully revealed in 1 Kings 19:18. The remnant may be few, but God chooses them to accomplish His mighty works. Throughout every era in the Bible, God has done great things through this preserved group—the remnant. The word “remnant” appears in the Bible approximately 87 to 100 times, showing us a consistent pattern in God’s work: He does not always choose the majority, but rather those few individuals who remain faithful to Him. Through these people, God fulfills His plans. The Same Truth in Church History Church history also reflects this same principle. In every generation, the church has been sustained and kept alive by the remnant—those who remained passionate and faithful to God. In the dark ages of spiritual decline, during times of persecution and doctrinal corruption, and when Christianity seemed to be on the brink of extinction—even then—God preserved a faithful few. These are the people who have kept the church alive to this day. In the eyes of the world—even within Christian circles—they may appear to be a minority. But in God’s eyes, they are the true majority. They do not always appear as an organized group; rather, they are often scattered individuals who stand strong in their faith wherever they are. The Time of Elijah – A Powerful Example The time of Elijah was one of great darkness and danger for the nation of Israel. Under the oppression of Jezebel, Baal worship and idolatry were forced upon the people. God's prophets were murdered, and faithful believers were hunted down, forcing them to hide in forests and mountains. Even the powerful prophet Elijah, who was used mightily by God, reached a point where he said, “I alone am left.” But God answered him: “Yet I reserve seven thousand in Israel—all whose knees have not bowed to Baal and whose mouths have not kissed him.” — 1 Kings 19:18 These 7,000 were not known to Elijah. The Bible does not mention that he met them or encouraged them. They remained faithful in their own places, without human leadership, acknowledging only God as their leader. They lived righteously, and through them, God’s purpose was fulfilled. And God protected them. The Remnant in Our Time Today, we see similar issues in churches: disorder, personality-centered worship, false teachings, and leadership confusion. In the midst of all this, there still exists a passionate remnant who stand firmly for God. They serve God faithfully and uprightly in their ministries. These are today’s remnants. Thousands of such individuals exist even in Tamil Nadu. Without being known to church leaders or pastors, they are participating in God’s great purposes. Because of them, Christianity is still alive and active. Our Responsibility To Elijah, who proudly declared, “I alone am left,” God responded: “Yet I reserve seven thousand in Israel—all whose knees have not bowed to Baal and whose mouths have not kissed him.” — 1 Kings 19:18 This verse is relevant to every generation. We are called to pray that the number of such God-preserved individuals will continue to grow. Conclusion God’s purposes are not fulfilled by the crowd's greatness but by the remnant's faithfulness. They may be few, but in God's eyes, they are mighty. They uphold the Kingdom of God through their service, faith, and way of life. Ezekiel Shanmugavel

What we have received is not a “Mercy Seat” but “the Throne of Grace.”

Just for your thoughts: What we have received is not a “Mercy Seat” but “the Throne of Grace.” It is the “Throne of Grace,” not the “Mercy Seat.” Hebrews 4:16 has been translated in the Power Version as, “Let us therefore come boldly unto the Mercy Seat.” However, the Catholic Tamil translation correctly renders it as: “Let us approach the Throne of Grace with confidence.” Similarly, the Sri Lankan Tamil translation states: “the Throne of Grace.” This is the accurate translation. “Let us therefore come boldly unto the throne of grace, that we may obtain mercy, and find grace to help in time of need.” – KJV “So let us come boldly to the throne of our gracious God. There we will receive his mercy, and we will find grace to help us when we need it most.” – NLT In the Old Testament, the Most Holy Place in the Tabernacle included the Mercy Seat. Once a year, the high priest (Aaron) would enter the Most Holy Place, offering a bull for his own sins and those of his household. He would sprinkle its blood seven times before the Mercy Seat. Then, he would slaughter the goat for the people’s sin offering and sprinkle its blood the same way (Leviticus 16:1–17). The term “Mercy Seat” used here (cf. Exodus 25:22) is reflected in the Old Testament and is also seen in older translations of Hebrews. However, in Hebrews 4:16, the correct term in the New Covenant context is “Throne of Grace.” In the New Covenant, Jesus Christ, our great High Priest, has offered Himself once for all as the atoning sacrifice and has entered the heavenly sanctuary, where He is now seated at the Throne of Grace in the presence of God. This throne is full of mercy and grace. Jesus Christ sits upon it. We no longer need to stand outside the Tabernacle with fear as the people of the Old Covenant did. This throne is not just one of judgment but one of compassion and kindness. Therefore, we can approach it boldly. The Mercy Seat in the Old Covenant was where only the High Priest could enter once a year — it was where God met His people. But now, under the New Covenant, we do not approach a “Mercy Seat” but the “Throne of Grace.” Anyone may approach this throne: The fearful The sinful The weak Even if we are not victorious like Caleb or Joshua, even if we are like Peter who denied, Even if we are poor, sick, or uneducated — it does not matter. Because we have a High Priest—Jesus Christ — who was tested in all things just like us, yet without sin. He understands our feelings. He knows our weaknesses and failures. That is why we are not left outside the temple like the Jews of old. We now have the privilege to boldly enter His presence. Everyone has direct, equal access and can receive mercy and grace at any time. This is the glory of the New Covenant priesthood: We have equal, unlimited, and free access to the Throne of Grace. Equal status means whether someone is a new believer or a mature Christian with decades of experience — both have the same standing before God. Direct access means: no need for a mediator; we can approach the Father directly through the Son. At all times means, unlike the Old Covenant high priest who could enter only once a year, we can approach God’s presence 24/7 through Jesus Christ. This is the confidence we have — full assurance to enter into the presence of God. What more does a believer need than this? We can receive anything from God, according to His will, directly in His presence. This is the glory of the New Covenant priesthood. Ezekiel Shanmugavel

நமக்குக் கிடைத்திருப்பது கிருபாசனம் அல்ல “அருள் நிறைந்த இறை* *அரியணை”. "கிருபையின் அரியணை”.

உங்கள் சிந்தனைக்கு: நமக்குக் கிடைத்திருப்பது கிருபாசனம் அல்ல “அருள் நிறைந்த இறை* *அரியணை”. "கிருபையின் அரியணை”. It is not “Mercy seat” but “Throne of Grace”. எபி.4:16 இவ்வாறாகப் பவர் மொழிபெயர்ப்பில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது “தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்”. . (எபி.4:16) ஆனால் கத்தோலிக்க மொழி மொழிபெயர்ப்பில் “ *அருள் நிறைந்த இறை அரியணையைத்* துணிவுடன் அணுகிச் செல்வோமாக. (எபி.4:16) என்று மொழியாக்கம் பண்ணப்பட்டுள்ளது. இலங்கையின் இலகுthe மொழிபெயர்ப்பில் “கிருபையின் அரியணை ” என்று சொல்லப்பட்டிருக்கிறது . இதுதான் சரியான மொழிபெயர்ப்பு Let us therefore come boldly unto the throne of grace, that we may obtain mercy, and find grace to help in time of need.KJV So let us come boldly to the throne of our gracious God. There we will receive his mercy, and we will find grace to help us when we need it most. NLT VERSION பழைய ஏற்பாட்டில் தேவாலயத்தில் மகா பரிசுத்த ஸ்தலத்தில் கிருபாசனத்தைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. வருடத்திற்கு ஒரு தடவை பிரதான ஆசாரியன் மகா பரிசுத்த ஸ்தலத்துக்கு சென்று (ஆரோன்) தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படி, தன்னுடைய பாவநிவாரணத்துக்கான காளையைக் கொண்டுவந்து, அதைக் கொன்று, காளையின் இரத்தத்திலே கொஞ்சம் எடுத்துக் கிருபாசனத்துக்கு முன்பாக, ஏழுதரம் தன் விரலினால் தெளிப்பான். பின்பு, ஜனத்தினுடைய பாவநிவாரணபலியான வெள்ளாட்டுக்கடாவை அவன் கொன்று, அதின் இரத்தத்தைத் திரைக்கு உட்புறமாகக் கொண்டுவந்து, காளையின் இரத்தத்தைத் தெளித்ததுபோல, அதின் இரத்தத்தையும் கிருபாசனத்தின்மேலும் அதற்கு முன்பாகவும், தெளிப்பான். பாவநிவிர்த்தி செய்யும்படி அவன் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து, தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் இஸ்ரவேல் சபையார் அனைவருக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, வெளியே வருமளவும் ஆசரிப்புக் கூடாரத்தில் ஒருவரும் இருக்கலாகாது. லேவி 16:1-17 இங்குச் சொல்லப்பட்டிருக்கும் வார்த்தைகிருபாசனம் என்பது ஆங்கிலத்தில்" MERCY SEAT" என்று சொல்லப்பட்டிருக்கிறது.. யாத்தி25;22 இதே வார்த்தையைத் தான் ( கிருபாசனம் )புதிய ஏற்பாட்டில் எபிரேயருக்கு எழுதின நிருபத்தில் பழைய மொழிபெயர்ப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால்இந்த இடத்தில் சரியான மொழிபெயர்ப்பு 'அருள் நிறைந்த இறை* *அரியணை' (Throne of Grace) என்பது புது மொழி பெயர்ப்பு* புதிய ஏற்பாட்டில் மகா பிரதான ஆசாரியரான இயேசு கிறிஸ்து பாவநிவாரணபலியாக ஒரே ஒரு தரம் தன்னையே பலியாகச் செலுத்தி வானங்களின் வழியாகப் பிரவேசித்து இன்று தேவனுடைய சன்னிதானத்தில் அருள் நிறைந்த இறை ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார். அருள் நிறைந்த இறை ஆசனம், இரக்கமும் கிருபையும் நிறைந்த ஒரு ஆசனம். அதில் இயேசு கிறிஸ்து வீற்றிருக்கிறார். பழைய ஏற்பாட்டு மக்களைப் போல நடுக்கத்தோடு ஆசரிப்புக் கூடாரத்தில் வெளியே நிற்பதுபோல நாம் இன்று தேவ சன்னிதானத்தில் நிற்க வேண்டாம். இந்த ஆசனம் கிருபை, இரக்கம்இணைந்த, நிறைந்த ஆசனம். எனவே, இதற்குள் தைரியமாக நாம் செல்லலாம். வெறுமனே பிரதான ஆசாரியர் மட்டுமே செல்லும் இடம் இரக்கத்தின் இருக்கை " *MERCY* *SEAT* ". இங்கு இஸ்ரவேல் மக்களைத் தேவன் சந்திக்கும் இடம். ஆனால் புதிய ஏற்பாட்டில் நாம் சந்திக்கும் இடம் " *அருள் நிறைந்த இறை ஆசனம் "* இங்கு எந்தக் கோழையும் செல்லலாம். எந்தப் பாவியும் செல்லலாம். எந்தப் பலவீனரும் செல்லலாம். நாம் காலேபைப் போல, யோசுவாவைப் போல வெற்றி வீரராக இல்லாமல் இருக்கலாம். பேதுருவைப் போல மறுதலித்து கூட இருக்கலாம். ஏழையாகக் கூட இருக்கலாம். நோயாளியாகக் கூட இருக்கலாம். படிப்பறிவு இல்லாத மக்களாகக் கூட இருக்கலாம். நம்மைப் போல எல்லாவிதத்திலும் சோதிக்கப்பட்டு எல்லா நிலைகளிலும் பாடுகள் அனுபவித்து, எல்லாராலும் கைவிடப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு ஆனாலும் பாவம் செய்யாத பிரதான ஆசாரியர் இயேசுக்கிறிஸ்து நமக்கு இருக்கிறபடியால் அவர் நம் உணர்வுகளைப் புரிந்து கொள்வார். நம்முடைய நிலைமைகளை அறிந்து கொள்வார். நம்முடைய பலவீனங்கள் தோல்விகள் எல்லாவற்றையும் அவர் அறிந்து கொள்ள வல்லவராயிருக்கிறார். எனவேதான் பழைய ஏற்பாட்டு யூதர்களைப் போலத் தேவாலயத்திற்கு வெளியே நிற்காமல் இந்தச் சன்னிதானத்தில் தைரியமாக நுழைய நமக்கு அனுக்கிரகம் கிடைத்திருக்கிறது. எல்லோரும் இங்கு நேரடியாக, சம அந்தஸ்துடன், எந்நேரமும் இரக்கமும் கிருபையும் பெற தைரியமாக இங்குச் செல்லலாம் . இது தான் புதிய ஏற்பாட்டு ஆசாரியத்துவம். *We have equal unlimited and free access to the “Throne of Grace”* சம அந்தஸ்து என்றால் இன்றைக்கு புதிதாகப் பிறந்த கிறிஸ்தவனாக இருந்தாலும் எவ்வளவு ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த கிறிஸ்தவனாக இருந்தாலும் இருவருக்கும் ஒரே நிலை.(Equal Status) நேரடியாக என்றால் எந்த மத்தியஸ்தம் இல்லாமல் தைரியமாகக் குமாரன் மூலம் பிதாவை நெருங்கலாம். எந்நேரமும் என்றால் பழைய ஏற்பாட்டு பிரதான ஆசாரியன் அடிக்கடி கிருபாசனத் தண்டை நெருங்க முடியாது நாம் அப்படி அல்ல 24 மணி நேரமும் தேவனுடைய சன்னிதானத்தில் குமாரன் மூலம் நுழையக் கிருபை பெற்றிருக்கிறோம். இந்த நம்பிக்கையில்தான் நாம் முழு நிச்சயத் தோடும் தைரியமாகத் தேவ சந்நிதியில் பிரவேசிக்க நமக்கு அருளப்பட்டிருக்கிறது. *இதைவிட ஒரு விசுவாசிக்கு வேறு என்ன ஆசீர்வாதம் தேவை? தேவ சந்நிதியில் எதையும் அவரது சித்தத்தின் அடிப்படையில் நாம் தேவனிடத்தில் நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும். இது தான் புதிய ஏற்பாட்டு ஆசாரியத்துவ மகிமை*

A Gentle Whisper? A Great Wind? An Earthquake? A Fire? How Does God Speak to Us?

. Just for your thoughts: 1 Kings 19 – bible study 30 A Gentle Whisper? A Great Wind? An Earthquake? A Fire? How Does God Speak to Us? In 1 Kings chapter 19, we find a remarkable encounter where God speaks to Elijah. This passage has prompted various interpretations and explanations among Bible scholars. God uses many ways to speak to those with a troubled heart. He does not reveal Himself to those who know Him in the same way He reveals Himself to those who do not. On Mount Carmel, when Elijah prayed in the presence of the prophets of Baal and the backslidden Israelites, fire came down from heaven and consumed the sacrifice on the altar. Through this visible event, it was made undeniably clear to everyone that Yahweh is God. Yet, the same Elijah, when he was staying in a cave on Mount Horeb, heard God say, "Go out and stand on the mountain in the presence of the Lord, for the Lord is about to pass by." Then: A great and powerful wind tore through the mountains, An earthquake followed, Then came a fire. But the Lord was not in any of these. Afterward came a gentle whisper. When Elijah heard it, he came out of the cave. It was after this that God spoke to him directly. This experience showed that the God who did not reveal Himself in the wind, the earthquake, or the fire, chose to engage with Elijah through the gentle whisper. Though this passage has many interpretations, my understanding is this: To the people of the world, and to those who are turning back to God, He often reveals Himself through signs and actions. But to those who already know Him, He most often chooses to speak through the still, small voice—especially when they meditate on the Word. No one can dictate how God must speak. He speaks to each of His children according to their spiritual maturity, growth, and the situations they face. God spoke to: Abraham directly and through visions, Moses from the burning bush, Paul through a voice from heaven. A common but mistaken belief is that “God speaks only through loud prayers, joyful praise, or grand worship experiences.” This is not true. Sitting silently in the presence of God, without shouting or noise, is not a sign of weakness. Even in those quiet moments, God can speak through the gentle whisper. In conclusion: God speaks through both the loud and the quiet. Both are necessary and important for a believer. Both experiences are profound and valuable.

மெல்லிய சத்தமா? பெருங்காற்றா? பூமி அதிர்ச்சியா?

உங்கள் சிந்தனைக்கு : 1 அரசர்கள் 19: வேத பாடம் 30 மெல்லிய சத்தமா? பெருங்காற்றா? பூமி அதிர்ச்சியா? நெருப்பா? தேவன் எப்படி நம்முடன் பேசுகிறார்? 1 அரசர்கள் புத்தகத்தின் 19வது அதிகாரத்தில் தேவன் எலியாவோடு பேசிய அதிசயமான நிகழ்வை மையமாகக் கொண்டு, வேத பண்டிதர்கள் பல்வேறு விளக்கங்களையும், கருத்துகளையும் முன்வைத்துள்ளனர். தேவன் மனக்குலத்தோடு பேசுவதற்கு பல வழிகளைப் பயன்படுத்துகிறார். தேவனை அறியாத மக்களுக்குத் தன்னை வெளிப்படுத்தும் முறையை, தம்மை அறிந்தவர்களிடம் அவர் பயன்படுத்தமாட்டார். கர்மேல் மலையில், பாகால் தீர்க்கதரிசிகள் முன்னிலையிலும், பின்வாங்கிய இஸ்ரவேல் ஜனங்கள் மத்திலும் எலியா விண்ணப்பம் செய்தபோது, வானத்திலிருந்து இறங்கிய தேவனுடைய அக்கினி வழிபீடத்தில் உள்ள பலியை எரித்தது. இந்த வெளிப்படையான நிகழ்வின் மூலம் "யகோவாவே கடவுள்" என்று அங்கிருந்த அனைவருக்கும் தெளிவாக அறியப்பட்டது. அதே எலியா, ஒரேப் மலையின் குகையில் தங்கியிருந்தபோது, தேவன் அவனிடம், "இதோ, யெகோவா மலையைக் கடந்துபோகப் போகிறார்; ஆகையால் நீ வெளியே போய் மலையின்மேல் யெகோவா முன்னிலையில் நில்," என்று கூறினார். அப்போது: பெருங்காற்று உண்டாயிற்று பூமி அதிர்ந்தது நெருப்பு ஏற்பட்டது ஆனால் இவைகளில் எதிலும் தேவன் காணப்படவில்லை. அதன் பின்னர் மெல்லிய காற்றின் சத்தம் உண்டானது. அந்தச் சத்தத்தை உணர்ந்த எலியா குகையை விட்டு வெளியே வந்தான். அதன் பின் தேவன் அவனோடு நேரடியாக உரையாடினார். இந்த அனுபவம், பெருங்காற்றிலும், பூமி அதிர்ச்சியிலும், நெருப்பிலும் தன்னை வெளிப்படுத்தாத தேவன், மெல்லிய சத்தத்தின் மூலமாக எலியாவோடு உறவாடிய விதமாகும். இந்த நிகழ்வுக்குப் பலவிதமான விளக்கங்கள் இருந்தாலும், நான் புரிந்துகொண்டதாவது: உலக மக்களுக்கும், பின்மாற்றத்தில் உள்ளவர்களுக்கும் தேவன் தன்னை அடையாளங்களின் மூலமாகவும், செயல்களின் வழியாகவும் வெளிப்படுத்துவார். ஆனால் தேவனை அறிந்தவர்களுக்கு, அவர் அற்புதங்களும் அடையாளங்களும் இல்லாமல், வேதத்தைத் தியானிக்கும் நேரங்களில் மெல்லிய சத்தத்திலேயே பேசுவதை தேர்வு செய்வார். தேவன் நம்மோடு எப்படி பேச வேண்டும் என்பதை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அவரவர் ஆவிக்குரிய முதிர்ச்சிக்கும், வளர்ச்சிக்கும், தேவைக்கும் ஏற்பத் தேவன் தம்முடைய பிள்ளைகளோடு பேசுவார். ஆபிரகாமோடு தேவன் நேரடியாகவும், தரிசனங்களின் வழியாகவும் பேசினார். மோசேயோடு முச்செடியில் தோன்றி பேசினார். பவுல் வானத்திலிருந்து வந்த சத்தத்தைக் கேட்டார். எப்போதும் நான் நினைக்கும் ஒரு தவறான பார்வை: “சத்தமாக ஜெபிப்பது, ஆர்ப்பரித்து மகிழும் ஆராதனைகள், பிரம்மாண்ட நிகழ்வுகள் மூலமாகத்தான் தேவன் பேசுவார்” என்பது. இது தவறான கருத்தாகும். அமைதியாகத் தேவ சமூகத்தில், ஆரவாரம் இல்லாமல் அமர்ந்து தேடுவது ஒரு பலவீனமான நேரம் அல்ல. அந்த நேரத்திலும் தேவன் மெல்லிய சத்தத்திலேயே நம்மோடு பேச முடியும். முடிவாக: ஆரவாரத்திலும் தேவன் பேசுகிறார், அமைதியிலும் தேவன் பேசுகிறார். இரண்டும் விசுவாசிக்குத் தேவையானவையும், முக்கியமானவையும். இரண்டு அனுபவங்களும் மேன்மையானவை.

1 Kings – Bible study 29

Just for your thoughts: 1 Kings – Bible study 29 Elijah prayed, “Take my life.” But the Lord took him without death. Lessons Taught by God No matter how great a person may be, the Bible records their weaknesses, failures, and disappointments. For example, our father of faith, Abraham, went down to Egypt without trusting God. Moses, who was known for his gentle nature, lost his temper just once at Kadesh. David’s moral failures are also recorded. Although these were all people of God, their failures were not hidden but openly revealed. Power and Downfall in Elijah's Life In 1 Kings chapter 18, Elijah stood alone against the 450 prophets of Baal and called down fire from heaven, proving before all that “The Lord—He is God.” This was no ordinary act. Elijah brought God’s glory before the world. But in the very next chapter, Jezebel sent a messenger to Elijah, threatening, “May the gods deal with me, be it ever so severely, if by this time tomorrow I do not make your life like that of one of them.” Elijah was afraid and ran for his life. The same Elijah who faced 450 prophets of Baal couldn’t withstand Jezebel’s threat. He sat under a broom tree and cried out, “I have had enough, Lord. Take my life” (1 Kings 19:4). In Victory and in Defeat – Still God’s Servant In chapter 18, Elijah had captured Israel’s attention. But in chapter 19, he experienced a great spiritual collapse. This can happen to any believer—even to spiritual leaders. We often admire leaders for their grand victories, but we don’t see the mountain-like failures they face in their personal lives. So, believers should never idolize human leaders. In chapter 18, Elijah followed God in faith. But in chapter 19, though he saw God, he began to walk in fear and faced defeat. He no longer believed that the same God who glorified Himself before the prophets of Baal could do so before Jezebel, too. Stay Where God Places You, Not Where Circumstances Push You Elijah ran to Horeb instead of staying where God had placed him. Do you know what the safest place is for a believer? It is the place God has appointed. Even if it appears dangerous, it is the most secure place for a believer or a servant of God. Elijah failed to understand this. Grace and Hope Still, God did not reject Elijah for his weaknesses. He did not grant Elijah’s request to die. Instead, God continued to show him grace and restored him to his ministry. Even today, Elijah holds a special place in Scripture. He once prayed, “Take my life.” Yet God took him without death—an amazing thing. Often, under difficult circumstances, when someone says, “Take my life,” God is not quick to be angry with them. Instead, He upholds them and fulfills His purposes through them.

1 அரசர்கள் புத்தகம் – வேத பாடம் 29

உங்கள் சிந்தனைக்கு: 1 அரசர்கள் புத்தகம் – வேத பாடம் 29 "என்னை எடுத்துக் கொள்ளும்" என்று வேண்டினான் எலியா. மரிக்காமலே எடுத்துக் கொண்டார் ஆண்டவர். கடவுள் போதிக்கும் பாடங்கள் எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும், அவர்களுடைய பலவீனங்களையும், தோல்விகளையும், ஏமாற்றங்களையும் வேதம் பதிவு செய்து வைத்திருக்கிறது. நம் விசுவாச தந்தையான ஆபிரகாம் கடவுளை நம்பாமல் எகிப்திற்கு சென்ற நிகழ்வு, காதேசில் சாந்த குணம் கொண்டவனான மோசேயின் ஒரு நிமிட கோபம், தாவீதின் பலவீனங்கள் – இவை அனைத்தும் கடவுளின் மக்களாக இருந்தாலும், அவர்களது தோல்விகள் மறைக்கப்படாமல் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. எலியாவின் வாழ்வில் வல்லமையும், வீழ்ச்சியும் 1 அரசர்கள் 18வது அதிகாரத்தில், எலியா தனியாகப் பாகாலின் தீர்க்கதரிசிகளை எதிர்த்து, நெருப்பால் பதிலளிக்கும் யெகோவாவே கடவுள் என்று மக்களின் முன்னிலையில் தேவனின் வல்லமையை வெளிப்படுத்தினார். இது ஒரு சாதாரண காரியம் அல்ல. தேவனின் மகிமையை உலகத்திற்கு கொண்டு வந்தவர் எலியா. ஆனால் அடுத்த அதிகாரத்தில், யேசபேல் எலியாவிடம் ஒரு ஆளை அனுப்பி, “நாளை இந்நேரம் நீ அவர்களுக்குச் செய்ததுபோல் உன் உயிருக்கும் செய்யாவிட்டால், தெய்வங்கள் என்னைத் தண்டிக்கட்டும்” என்று பயமுறுத்தினாள். இதைக் கேட்ட எலியா, தன் உயிரைக் காக்க தப்பி ஓடினான். 450 பாகாலின் தீர்க்கதரிசிகளை எதிர்த்த எலியா, யேசபேலின் மிரட்டலை சமாளிக்க இயலவில்லை. சூரைச்செடியின் கீழ் அமர்ந்து, “யெகோவாவே, நான் பட்ட பாடு போதும்; என்னுடைய உயிரை எடுத்துக் கொள்ளும்” என்று கதறினார் (1 இராஜாக்கள் 19:4). வெற்றியிலும், வீழ்ச்சியிலும் தேவமனிதர்கள். 18வது அதிகாரத்தில் எலியா இஸ்ரவேலின் கவனத்தை பெற்றிருந்தார். ஆனால் 19வது அதிகாரத்தில், ஆவிக்குரிய மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தார். இது அனைத்து விசுவாசிகளுக்கும், ஆவிக்குரிய தலைவர்களுக்கும் ஏற்படக்கூடிய ஒன்று. வெற்றியில் தலைவர்களைக் கதாநாயகனாகப் பார்க்கிறோம். ஆனால் அவர்களது தனிப்பட்ட வாழ்வில் ஏற்படும் இமாலயத் தோல்விகள் நம் கண்களுக்குத் தெரியாது. எனவே, யாரையும் வைத்து விசுவாசத்தில் ரசிகனாக மாறக் கூடாது. 18வது அதிகாரத்தில் எலியா கடவுளை விசுவாசித்து பின்பற்றினார். ஆனால் 19வது அதிகாரத்தில் தேவனை தரிசித்தபின் நடக்க ஆரம்பித்துத் தோல்வியைச் சந்தித்தார். பாகாலின் தீர்க்கதரிசிகள் முன் தன்னை உயர்த்திய தேவன், யேசபேலின் முன் தன்னை மகிமைப்படுத்துவார் என்ற விசுவாசம் இல்லை. சுற்றுச்சூழலுக்கு பதிலாகக் கடவுள் வைத்த இடத்தில் இருங்கள் கடவுள் வைத்த இடத்தில் இல்லாமல், எலியா ஓரேபுக்கு தப்பிச் சென்றார். விசுவாசிக்குப் பாதுகாப்பான இடம் எது தெரியுமா? தேவன் வைத்த இடம்தான். பார்வைக்கு ஆபத்தாக இருந்தாலும், அது விசுவாசிக்கும் மிகுந்த பாதுகாப்பான இடமாக இருக்கும். இதை எலியா புரிந்து கொள்ள தவறினார். கிருபையும் நம்பிக்கையும் ஆனால் கடவுள், எலியாவின் பலவீனங்களை எடுத்துக்கொண்டார். அவரது வேண்டுகோளை உடனே நிறைவேற்றவில்லை. அதற்குப் பிறகும், அவனுக்குப் பல கிருபைகளை அளித்து ஊழியத்தில் நிலைபெற வைத்தார். இன்றும் வேதத்தில் எலியாவுக்கு ஒரு தனி இடம் உள்ளது. எலியா “என்னை எடுத்துக் கொள்ளும்” என்று கூறினார். கடவுள் அவனை மரணமின்றி எடுத்துக் கொண்டது ஆச்சரியமானது. சிறிது நேரம், சூழ்நிலை காரணமாக “என்னை எடுத்துக் கொள்ளும்” என்று சொல்பவர்கள்மீது கர்த்தர் கோபப்பட மாட்டார். அவர் அவர்களையும் நிலைப்படுத்தி, தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவார்.

hy Did Caleb Request Hebron?

Just for your thoughts: Tamil Bible Study Why Did Caleb Request Hebron? "Now therefore give me this mountain" — Joshua 14:12 Among the twelve men sent to spy out the land of Egypt, ten gave a discouraging report, saying that the inhabitants of Canaan were giants, the descendants of Anak, and too strong to overcome. Only Joshua and Caleb stood firm in faith and declared that the land could surely be taken. So God not allow them to enter into Canaan Forty years later, a new generation entered Canaan. They drove out the prominent tribes and took possession of the land. Now came the time to divide the land among the tribes. How was the land to be divided? In Numbers 26:55, the Lord clearly explains: The size of the land was determined by the number of people in each tribe, but the location of the land was determined by casting lots. "Size was determined by the number, but location was determined by lot." Accordingly, land was allocated to all tribes. Caleb belonged to the tribe of Judah. When the land of Canaan was first divided, Judah was the first tribe to receive its allotment. However, even before the allocation to Judah began, Caleb requested the mountainous region of Hebron. At that time, the descendants of Anak were still living there. Recalling the promise Moses had made before all the Israelites 45 years earlier (Deuteronomy 1:34–36), Caleb asked for that very land. Why Hebron? Hebron was a significant location in the history of the Jews. It was the place where Caleb's forefathers—Abraham, Isaac, and Jacob—had lived. Moreover, Sarah’s tomb was also located there (Genesis 13:18; 23:17–20; 35:27). Perhaps Caleb did not want such a spiritually important place to remain in the hands of the Anakim. Believing that with God on his side he could overcome any enemy (Numbers 14:8), Caleb desired to fulfill, even in his old age, the declaration of faith he had made decades earlier. Caleb: A Man of Faith The Bible mentions six times that Caleb followed the Lord “wholeheartedly.” He was not only a man of faith, but also one who had a zeal to preserve the history of his people. In Joshua chapter 15, the land for the tribe of Judah is determined. However, from Joshua 14:12, we know that Caleb had already requested Hebron even before the lot was cast for Judah. Two possibilities arise: The lot for Hebron may have fallen to Judah in alignment with Caleb’s desire. Or perhaps Joshua, remembering Moses' promise, gave Caleb the land without relying on the casting of lots. Faith Proven Through Action Caleb successfully drove out the sons of Anak from Hebron (Joshua 15:13–17). He fulfilled in action the very things he had once declared in faith. A Lesson for Our Lives When we walk uprightly before God, even after many years, He will fulfill the promises we claimed in faith. The Kingdom of God is not just in word, but in power. In today’s political and social climate, each believer is called to become like Caleb in their workplace—demonstrating to the world that God is with us. May God grant us grace to live this way. — Bro. Ezekiel Shanmugavel Sources Used: Devotional Commentary – Lawrence O. Richards Believer's Commentary – William MacDonald South Asia Bible Commentary The Bible Exposition Commentary – Warren W. Wiersbe Bible Handbook – Harold Wilmington

காலேபு ஏன் எபிரோனை விரும்பிக் கேட்டுக் கொண்டான்?

உங்கள் சிந்தனைக்கு: Tamil Bible Study காலேபு ஏன் எபிரோனை விரும்பிக் கேட்டுக் கொண்டான்? "இந்த மலைநாட்டை எனக்குத் தாரும்" — யோசுவா 14:12 எகிப்து தேசத்தை வேவு பார்க்க அனுப்பப்பட்ட 12 நபர்களில், 10 நபர்கள் கானான் தேசத்தில் வசிக்கும் மக்கள் பெரியவர்கள் என்றும், அங்கே வசிக்கும் ஏனாக்கின் குமாரர்கள் ராட்சதர்கள் என்றும் கூறி மக்களின் விசுவாசத்தை பலவீனப்படுத்தினார்கள். ஆனால் யோசுவாவும் காலேபும் மட்டும், அந்தத் தேசத்தை எளிதாகக் கைப்பற்றி விடலாம் என்ற விசுவாச அறிக்கையிட்டார்கள். 40 ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய சந்ததி கானானுக்குள் நுழைந்தது. அவர்கள் கானானில் முக்கியமான ஜாதிகளை விரட்டியடித்து அந்த நிலங்களைக் கைப்பற்றினார்கள். இப்போது அந்த நிலங்களை ஜனங்களுக்குள் பங்கிட வேண்டியது ஏற்பட்டது. எப்படி பங்கிட வேண்டும்? எண்ணா 26:55ல், ஆண்டவர் தெளிவாக விளக்குகிறார்: ஒவ்வொரு கோத்திரத்திற்கும் உள்ள மக்கள் தொகையின் அடிப்படையில் நிலத்தின் அளவு நிர்ணயிக்கப்படும். ஆனால் எந்த இடம் யாருக்கெனத் தீர்மானிக்கப்படும் என்பது சீட்டு (lot) போடுவதன் மூலம் முடிவு செய்யப்படும். "Size was determined by the number, but location was determined by lot." இந்த முறையின் படியே அனைத்து கோத்திரங்களுக்கும் இடங்கள் வழங்கப்பட்டன. காலேபு யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவன். முதல் முறையாகக் கானான் தேசத்தைப் பிரித்துக் கொடுத்தபோது, அந்த வரிசையில் முதலாவதாக யூதா கோத்திரம் வந்தது. ஆனால் யூதா கோத்திரத்துக்கான நிலத்தை வழங்கும் முன்பாகவே, காலேபு மலைநாடான எபிரோனை விரும்பிக் கேட்டான். அந்த இடத்தில் ஏனாக்கியரின் குமாரர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். 45 ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரவேல் ஜனத்தின் முன்னிலையில் மோசே கொடுத்த வாக்குறுதியை நினைவுபடுத்தி, அந்த இடத்தைக் கேட்கின்றான் (உபா 1:34–36). ஏன் எபிரோன்? இந்த எபிரோன் மலைநகரம், யூதருடைய வரலாற்றில் சிறப்பான இடமாக உள்ளது. இங்குத் தான் காலேபின் முற்பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு வாழ்ந்தார்கள். மேலும், சாராளின் கல்லறையும் இங்குதான் உள்ளது (ஆதி 13:18; 23:17–20; 35:27). தன் இனத்தோடு தொடர்புடைய இந்தத் இடம் ஏனாக்கியரின் கைகளில் இருப்பது காலேபுக்கு ஏற்றதாக இல்லையென்றும், அதனால் அந்த இடத்தை விரும்பினானென நம்மால் யூகிக்கலாம். தேவன் தன்னுடன் இருப்பின் எதிரிகளை எளிதில் வெல்லலாம் என்று நம்பிய காலேபு (எண் 14:8), தன் சொன்ன விசுவாச அறிக்கையை வாழ்க்கையின் இறுதி காலத்திலும் நிறைவேற்ற விரும்பினான். விசுவாச வீரன் காலேபு வேதத்தில் காலேபு கடவுளை “உத்தமமாய் பின்பற்றினவன்” என்று ஆறு தடவைகள் சொல்லப்படுகிறது. அவன் ஒரு விசுவாசமுள்ளவனாகவும், தன் இனத்தின் வரலாற்றைப் பாதுகாக்கும் வைராக்கியமுள்ளவனாகவும் விளங்குகிறான். யோசுவா 15வது அதிகாரத்தில் தான் யூதா கோத்திரத்துக்கான இடம் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் யோசுவா 14:12ல், யூதா கோத்திரத்துக்கான சீட்டு போடுவதற்கு முன்பாகவே காலேபு எபிரோனை கேட்டதாக நமக்குத் தெரிகிறது. காலேபின் விருப்பத்தின் அடிப்படையில், சீட்டு விழுந்திருக்க வேண்டும். அல்லது, யோசுவா, மோசே அளித்த வாக்குறுதியை நினைவுகூர்ந்து, சீட்டுப் போடும் முறையைப் பின்பற்றாமல் நேரடியாக யோசுவா கொடுத்திருக்கலாம். செயலில் காணப்பட்ட விசுவாசம் காலேபு ஏனாக்கியரின் குமாரரை அந்த இடத்திலிருந்து வெற்றிகரமாக வெளியேற்றினான் (யோசு 15:13–17). விசுவாசத்தோடு சொன்ன காரியத்தைச் செயலால் நிரூபித்தான். நம் வாழ்வுக்கும் பாடம் நாம் தேவனுக்குத் தூய்மையாய் நடக்கும்போது, காலம் கடந்தாலும் நாம் விசுவாசத்தில் சொன்ன காரியங்களைத் தேவன் நமக்கு வாய்க்கச் செய்வார். தேவனுடைய அரசாங்கம் வெறும் பேச்சில் அல்ல. இன்றைய அரசியல் சூழ்நிலையில், ஒவ்வொரு விசுவாசியும் தங்கள் வேலையிடங்களில் காலேபாக மாறி, "தேவன் நம்மோடு இருக்கிறார்" என்பதை உலகத்துக்கு வெளிப்படுத்தும் பொறுப்புள்ளவர்களாக வாழ்வோம்.! — பயன்படுத்திய நூல்கள்: Devotional Commentary – Lawrence O. Richards Believer's Commentary – William MacDonald South Asia Bible Commentary The Bible Exposition Commentary – Warren W. Wiersbe Bible Handbook – Harold Wilmington

Bible Study 28 from the Book of 1 Kings

Just for your thoughts: Bible Study 28 from the Book of 1 Kings. Immediate and Delayed Responses to Elijah's Prayers in 1 Kings Chapters 17 and 18. Elijah the prophet is one of the most important prophets in the Old Testament. In chapter 17 of this book, he appears suddenly, astonishing the people of Israel. Boldly, he approaches King Ahab and says, “There will be neither dew nor rain in the coming years except at my word” (1 Kings 17:1). And indeed, no rain fell according to his word. While staying in the house of a widow, her son fell ill and died. Elijah stretched himself out on the child three times and cried out, “O Lord my God, let this boy’s life return to him!” The Lord heard Elijah’s cry, and the boy’s life returned to him, and he lived (1 Kings 17:22). Here we see that God responded immediately to Elijah’s prayer. On Mount Carmel, the 450 prophets of Baal danced around the altar they had built from morning till evening, but they could not call down fire from heaven to consume their sacrifice. However, when Elijah prayed, “Answer me, Lord, answer me,” the fire of the Lord fell and burned up the sacrifice, the wood, the stones, the soil, and also licked up the water in the trench (1 Kings 18:38). In all these events, we see God responding immediately to Elijah’s petitions. However, after several years, God told Elijah, “I will send rain.” Elijah conveyed this to King Ahab. Yet, the rain did not come immediately. Elijah went up to the top of Mount Carmel, bent down to the ground, put his face between his knees, and prayed. He told his servant to go and look toward the sea to see if there was any sign of rain. Six times the servant saw nothing. Still, Elijah did not give up. Since God had already spoken, “I will send rain,” Elijah did not remain idle. He kept praying until the promise was fulfilled. The seventh time, the servant reported, “A cloud as small as a man’s hand is rising from the sea.” Elijah had been in continual prayer until then. Lessons we can learn from this: We should not expect that every prayer we offer will receive an immediate answer. Sometimes, answers are delayed. Even when God gives us promises about certain things, we should not remain idle. Instead, we must keep praying until those promises are fulfilled. This principle applies to all believers, including the most gifted servants of God. In our lives too, we must persevere in prayer until the promises God has given us are fulfilled. This is God’s desire, and we see this clearly in the life of Elijah

1 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 28.

. உங்கள் சிந்தனைக்கு: 1 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 28. ஒன்று இராஜாக்கள் 17 மற்றும் 18 அதிகாரங்களில் எலியாவின் ஜெபங்களுக்கு கிடைத்த உடனடி பதிலும் தாமதமான பதிலும். எலியா தீர்க்கதரிசி பழைய ஏற்பாட்டில் மிக முக்கியமான தீர்க்கதரிசிகளில் ஒருவர். இந்தப் புத்தகத்தின் 17வது அதிகாரத்தில் திடீரென்று தோன்றி இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஆச்சரியத்தை அளித்தவர். தைரியமாக ஆகாப் அரசனிடம் வந்து, “அடுத்துவரும் சில வருடங்களுக்கு நான் சொன்னாலன்றி, நாட்டில் மழையோ பனியோ பொழிவதில்லை” என்று வீரமாகக் கூறினான் (ஒன்று இராஜாக்கள் 17:1). அவன் வாக்கின்படியே மழையும் பெய்யவில்லை. அவன் தங்கியிருந்த வீட்டின் சொந்தக்காரியான விதவையின் மகன் நோயுற்று மரித்தான். இப்பொழுது எலியா பிள்ளையின் மேல் முகங்குப்புறமாகக் கிடந்து, “என் இறைவனாகிய யெகோவாவே! இந்தச் சிறுவனின் உயிர் இவனுக்குள் திரும்பி வரட்டும்” என்று கதறி அழுதான். கர்த்தர் எலியாவின் கூப்பிடுதலைக் கேட்டார். சிறுவனின் உயிர் திரும்பவும் அவனுக்கு வந்தது. அவன் உயிர் பெற்றான் (ஒன்று இராஜாக்கள் 17:22). இங்கு எலியாவின் ஜெபத்திற்கு கர்த்தர் உடனடியாகப் பதிலளித்ததை பார்க்கலாம். கர்மேல் மலையில் நானூற்றைம்பது பாகால் தீர்க்கதரிசிகள் காலை முதல் மாலைவரை தாங்கள் கட்டிய பலிபீடத்தில் ஆடிக் குதித்தும், அவர்களால் நெருப்பை விண்ணிலிருந்து வரவழைத்துக் காளையைத் தகனம் செய்ய முடியவில்லை. ஆனால் எலியா கர்த்தரை நோக்கி, “பதில் தாரும், யெகோவாவே, எனக்குப் பதில் தாரும்” என்று மன்றாடியபோது, யெகோவாவின் நெருப்பு இறங்கி பலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் எரித்து, வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் முழுவதுமாக வற்றச்செய்தது (ஒன்று இராஜாக்கள் 18:38). இதுவரை நடைபெற்ற நிகழ்வுகளில் எலியாவின் விண்ணப்பத்திற்கு கர்த்தர் உடனடியாகப் பதில் அளித்ததை காணலாம். ஆனால், வருடங்கள் கழித்து, “நான் மழையை அனுப்பப் போகிறேன்” என்று கடவுள் எலியாவிடம் கூறினார். எலியாவும் அதனை ஆகாப் ராஜாவிடம் தெரிவித்தார். இருந்தும் மழை உடனடியாக வரவில்லை. எலியா மலை உச்சிக்கு ஏறி, தனது முழங்கால்களுக்கு இடையில் தன் முகத்தை வைத்து, நிலம்வரை குனிந்து, கர்த்தரை நோக்கி விண்ணப்பித்தான். தனது வேலைக்காரனை நோக்கி, “மழை வருகிறதா?” என்று பார்க்கச் சொன்னான். ஆறு தடவைகள் பார்த்தும் மழை வரவில்லை. இருந்தும் அவன் விடவில்லை. கர்த்தர் சொன்னபடி: “நிச்சயமாக மழை வரும்.” எனினும், சும்மா இருந்துவிடாமல், மழை வரும்வரை அவன் ஜெபித்தே கொண்டிருந்தான். ஏழாவது தடவை வேலைக்காரன், “ஒரு மனிதனின் கை அளவுள்ள சிறிய மேகம் கடலிலிருந்து எழும்புகிறது” என்று கூறினான். அதுவரை கடவுளிடம் விண்ணப்பித்துக் கொண்டே இருந்தான். இதன் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்: 1. எப்போதும் நாம் ஜெபிக்கும் போதெல்லாம் அதற்குப் பதில் உடனடியாகக் கிடைக்கும் என்று எண்ணக் கூடாது. 2. சில நேரங்களில் பதில் தாமதமாக வரலாம். 3. தேவன் சில நேரங்களில் நமக்குச் சில காரியங்களைப் பற்றி வாக்குறுதி அளித்திருந்தாலும், அதை வைத்துக்கொண்டு சும்மா இருக்கக் கூடாது. அது நிறைவேறும் வரை நாம் தொடர்ந்து ஜெபித்துக் கொண்டே இருக்க வேண்டும். இந்தக் கொள்கை விசுவாசிகளுக்கும், எவ்வளவு பெரிய வரம் பெற்றஊழியக்காரர்களுக்கும் பொருந்தும். நம் வாழ்க்கையில் சில காரியங்களுக்காக இடைவிடாமல், கர்த்தர் நமக்குக் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேறும் வரை ஜெபிக்க வேண்டியதுதான் தேவனுடைய விருப்பம். அதையே எலியாவின் வாழ்க்கையில் நாம் காணலாம்..

Why did God destroy all the firstborn in Egypt?

Just for your thoughts: Why did God destroy all the firstborn in Egypt? What lesson can we learn from this? God refers to Israel as His firstborn son (Exodus 4:22). Pharaoh had all the male children born to the Israelites killed and thrown into the Nile River. Therefore, from the beginning, God warned Pharaoh that if he did not allow His firstborn son, the Israelites, to worship Him, He would kill Pharaoh's firstborn son. However, even after facing nine plagues, Pharaoh hardened his heart and still did not allow the Israelites to worship God. As a result, from the firstborn of Pharaoh, who sat on the throne, to the firstborn of the female servant who worked at the hand mill, and even the firstborn of the animals, God brought death to all the firstborn in Egypt (Exodus 11:5). A man reaps what he sows. There is no change in this principle: "Do not be deceived: God is not mocked. A man reaps what he sows." — Galatians 6:7 Just as Pharaoh punished God's people, God repaid Pharaoh with His righteous judgment. "The Lord simply paid Pharaoh back with his currency." — W.W. Wiersbe Many in the Bible faced consequences for their wrongdoings — Jacob, David, Haman, to name a few. Even those of us who have experienced salvation must understand this: if we do wrong or act unjustly toward others, God may forgive us when we ask, but we must still face the consequences of those actions in this world. There is no exception to this. We must be cautious in matters where we harm others. We will reap what we sow. Believers may not always be able to do good to everyone, but we must be afraid to do injustice to anyone.

– Bible Study from 1 Kings, Lesson 27

Just for your thoughts: – Bible Study from 1 Kings, Lesson 27 In the Bible, Elijah holds a special place. Unlike prophets from Isaiah to Malachi, Elijah did not write any prophetic books. He is not a writing prophet. In the New Testament, John the Baptist is compared to Elijah, and Jesus Christ Himself speaks about Elijah. Elijah is one of the two people in the Bible who were taken up to heaven without experiencing death. He is also the first person in the Bible to raise a dead person back to life. When we examine Elijah’s life, we can observe several remarkable aspects: 1. An Introduction Without Background The Bible does not give us any prior introduction about Elijah—no details about his parents, tribe, or past. He suddenly appears in 1 Kings 17 as a prophet sent by God. Without any preface, recognition, or known background, God introduces Elijah to the world in a single day. Likewise, if a person is known by God, He can elevate and reveal that person to the world in a single day. We cannot fully understand God’s ways. He is a God of wonders. 2. Remarkable Obedience Even after making a bold declaration that "there shall not be dew or rain except at my word," Elijah obediently followed God's word: "Leave here, turn eastward and hide in the Kerith Ravine, east of the Jordan" (1 Kings 17:3) — he obeyed immediately. "Go at once to Zarephath in the region of Sidon and stay there" (1 Kings 17:9) — again, he promptly obeyed. Later, God told him, "Go and present yourself to Ahab" (1 Kings 18:1), and without fear, he obeyed—even though King Ahab and Queen Jezebel were killing the Lord’s prophets and promoting Baal worship throughout the land. Even Moses hesitated at first when God called him to confront Pharaoh. But Elijah obeyed without hesitation. He faithfully completed all three tasks that God gave him (1 Kings 19:15–21). 3. A Man of Great Courage He stood alone against the prophets of Baal and lifted up the name of the Lord. 4. Authority Over Nature Through Prayer Elijah controlled the weather in Israel through his prayers — He controlled the weather in Israel. 5. A Holy Man with Testimony While staying at the house of a Gentile widow, she declared, "Now I know that you are a man of God and that the word of the Lord from your mouth is the truth" (1 Kings 17:24). Today, in some churches, we see worship that resembles the chaotic dancing of Baal’s prophets (1 Kings 18:26). But it is rare to find servants like Elijah, who cry out from the altar saying, "Lord, hear my prayer." Just as praying for the unsaved is important, it is equally essential to weep and pray for the brokenness and corruption within the church.

1 அரசர்கள் புத்தகம் வேதப் பாடம் 27

உங்கள் சிந்தனைக்கு – 1 அரசர்கள் புத்தகம் வேதப் பாடம் 27 வேதத்தில் எலியாவுக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு. ஏசாயா தீர்க்கதரிசி முதல் மல்கியா தீர்க்கதரிசி வரை உள்ள தீர்க்கதரிசிகள் போல, இவர் எந்தத் தீர்க்கதரிசனப் புத்தகத்தையும் எழுதி வைக்கவில்லை. அவர் ஒரு எழுத்து தீர்க்கதரிசி அல்ல. He is not a writing prophet. புதிய ஏற்பாட்டில் யோவான் ஸ்நானகரர் எலியாவோடு ஒப்பிடப்படுகிறார். இயேசு கிறிஸ்துவும் எலியாவைப் பற்றிக் குறிப்பாகக் கூறியுள்ளார். மரணத்தைக் காணாமல் விண்ணேற்கப்பட்ட இருவரில் ஒருவர் இவராக இருக்கிறார். மேலும் வேதத்தில் முதன் முதலில் மரித்த ஒருவரை உயிருடன் எழுப்பியவர் இவர்தாம். எலியாவின் வாழ்க்கையை கவனித்து பார்ப்போம் என்றால் சில பிரமிக்கத் தக்க காரியங்களைக் காணலாம்: 1. பின்புலம் இல்லாத அறிமுகம் எலியாவைப் பற்றி வேதம் ஆரம்பத்தில் எந்த அறிமுகமும் தரவில்லை. அவருடைய பெற்றோர்கள், கோத்திரம், பழைய நிகழ்வுகள் – எதுவும் குறிப்பிடப்படவில்லை. திடீரென்று 1 இராஜாக்கள் 17ஆம் அதிகாரத்தில் அவர் தோன்றுகிறார். ஆனால் அவர் தேவனால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசி. முன்னுரை இல்லாமல், அடையாளம் இல்லாமல் இருந்த எலியாவை தேவன் ஒரே நாளில் உலகிற்கு அறிமுகப்படுத்துகிறார். அதேபோல், ஒருவர் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டிருந்தால், தேவன் ஒரே நாளில் அவரை உலகுக்கு உயர்வாக நிலைநிறுத்துவார். கடவுளின் செயல்களை நாம் முழுமையாகப் புரிந்து கொள்ள இயலாது. அவர் அதிசயங்களின் தேவன். 2. ஆச்சரியப்படத் தக்க கீழ்ப்படிதல் “என் வாக்கின்படியே அல்லாமல் தேசத்தில் மழை பெய்யாது” என்று சாகசமாகப் பிரகடனம் செய்த பின்னரும், அவர் தேவனின் வார்த்தைக்கேற்ப: “நீ இந்த இடத்தைவிட்டு கிழக்குப் பக்கம் திரும்பி, யோர்தானுக்குக் கிழக்கேயுள்ள கேரீத் பள்ளத்தாக்கில் ஒளிந்துகொள்” (1 இராஜாக்கள் 17:3) என்ற கட்டளைக்கு உடனடியாகக் கீழ்ப்படிந்தார். “சாரெபாத் ஊருக்குப் போய் அங்கே தங்கியிரு” என்ற கட்டளைக்கும் (17:9) உடனே சென்று கீழ்ப்படிந்தார். பின்னர், “ஆகாபுக்கு முன் போய் நில்” (18:1) என்ற கடவுளின் வார்த்தைக்கேற்ப, பயம் இல்லாமல் கொடுங்கோலரசன் ஆகாபின் முன்பாக நின்றார். அந்த நேரத்தில் ஆகாபும், யேசபெலும் பாகால் வழிபாட்டைப் பரப்பிக் கர்த்தருடைய தீர்க்கதரிசிகளை கொலை செய்துகொண்டிருந்தனர். மோசே கூடப் பார்வோனை எதிர்க்கத் தேவன் அழைத்தபோது தயங்கினார். ஆனால் எலியா தயக்கமின்றி கீழ்ப்பட்டார். இறுதியில், தேவன் கொடுத்த மூன்று கட்டளைகளையும் அவர் முழுமையாக நிறைவேற்றுகிறார் (1 இராஜாக்கள் 19:15–21). 3. மிகப்பெரிய தைரியசாலி தனியாகப் பாகாலின் தீர்க்கதரிசிகளை எதிர்த்து, தேவனுடைய நாமத்தை உயர்த்தினார். 4. இயற்கையின் ஆளுமையை ஜெபத்தால் கட்டுப்படுத்தினார் இஸ்ரவேலில் காலநிலைச் சுழற்சியைக் கட்டுப்படுத்தியவர் – He controlled the weather in Israel. 5. சாட்சியமான பரிசுத்தவான் புறயின விதவையின் வீட்டில் தங்கி இருந்தபோது, அவள், “நீர் ஒரு இறைவனுடைய மனிதன் என்றும், உம்முடைய வாயிலிலிருந்து வரும் கர்த்தருடைய வார்த்தை உண்மை என்றும் இப்பொழுது அறிகிறேன்” (1 இராஜாக்கள் 17:24) என்று சொன்னாள். இன்றைய சில சபைகளில், பாகாலின் ஊழியர்களைப் போன்று பலிபீடத்தில் ஆடி குதிக்கும் காரியங்களைக் காணலாம் (1 இராஜாக்கள் 18:26). ஆனால் எலியாவைப் போன்று, “கர்த்தாவே என் ஜெபத்தைக் கேளும்” என்று கதறி அழைக்கும் ஊழியர்கள் மிக அரிதாகக் காணப்படுகிறார்கள். இரட்சிக்கப்படாத மக்களுக்காக ஜெபிப்பது அவசியம். அதேபோல், சபையின் சீர்கேடுகளுக்காகவும் கண்ணீர் விடுவது மிக மிக அவசியம்.

கர்த்தர் பார்வோனின் இருதயத்தை கடினப்படுத்தியதில் யூதர்களைக் குறித்த அவரின் நோக்கம்

: உங்கள் சிந்தனைக்கு: கர்த்தர் பார்வோனின் இருதயத்தை கடினப்படுத்தியதில் யூதர்களைக் குறித்த அவரின் நோக்கம் கர்த்தர் பார்வோனின் இருதயத்தை கடினப்படுத்தியதற்கான காரணங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். 1. பார்வோனைப் பொறுத்த அளவில்: பார்வோன் தன் கடவுள்களின் மேல் வைத்திருந்த அனைத்து நம்பிக்கைகளையும் இழந்து, வெறுமையாக நிற்க வேண்டிய நிலைக்கு வர வேண்டும். தேவன் அனுப்பிய பத்து வாதைகளும் எகிப்து தேசத்தில் அவர்கள் கொண்டிருந்த மத நம்பிக்கையோடு மற்றும் கடவுள்களோடு தொடர்புடையவையாக இருந்தன. அந்தத் தெய்வங்கள் தன்னை காப்பாற்ற முடியாது என்பதை உணர்த்தும் நிலைக்கு அவன் தள்ளப்பட வேண்டும். 2. உலகத்துக்கும் யூதர்களுக்கும் தேவனின் மெய்மையை வெளிப்படுத்துதல்: யூதர்கள் வணங்கும், ஆராதிக்கும் கர்த்தரே மெய்யான சர்வ வல்லமையுள்ள கடவுள் என்பதை பார்வோனுக்கும், உலகத்திற்கும் நிரூபிக்க வேண்டும். ஆனால் இதே வேளையில், யூதர்களைக் குறித்தும் தேவனுக்கு ஒரு நோக்கம் உள்ளது. இதைத் தான் யாத்திராகமம் 10:2ல் காணலாம்: "“மேலும், நான் எப்படி எகிப்தியர்களைக் கடினமாய் நடத்தினேன் என்றும், எப்படி என் அடையாளங்களை அவர்கள் மத்தியில் செய்து காட்டினேன் என்றும் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கும், உங்கள் பேரப்பிள்ளைகளுக்கும் சொல்லும்படியும், இதனால் நானே யெகோவா என்று நீங்கள் அறிந்துகொள்ளும்படியுமே இப்படிச் செய்தேன்” என்றார். யாத்திராகமம் 10:2 ஆம், யூதர்கள் தேவன் தங்களை விடுதலையாக்குவதற்காக எகிப்தியர்களின் மத்தியில் செய்த அதிசயங்களை, அற்புதங்களைத் தங்களோடு அடக்கிக் கொள்ளாமல், அவர்களுடைய பிள்ளைகளுக்கும் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் பரப்ப வேண்டும். இதுவும் தேவனுடைய நோக்கங்களில் ஒன்றாகும். அப்பொழுதுதான், அவர்கள் ஆராதிக்கும் முன்னோர்களின் கடவுள் மெய்யான கடவுள் என்பதையும், அவர்களின் தலைமுறை அறிந்து கொள்ளவும் முடியும். இதைத்தான் ஆண்டவர் ஆதி 18:19ல் தெளிவாகக் கூறுகிறார். ஆம், கர்த்தருடைய வழிகளையும், அவர் நம் குடும்பத்தில் காண்பித்த அதிசயங்களையும், அற்புதங்களையும் நம் பிள்ளைகளுக்கும், பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் கடத்த வேண்டும் என்ற நிச்சயம் தேவனுக்கு இருக்க வேண்டும். கிறிஸ்தவ வாழ்க்கை என்பது ஒரு தொடர் ஓட்டம். நம் ஓட்டத்தை முடித்து, அடுத்த பகுதியைத் தொடர நம்முடைய பிள்ளைகளைப் பழக்கி வைக்க வேண்டும். அதுதான் பெற்றோர்களாகிய நம்முடைய பிரதான கடமை. நாம் நம் பிள்ளைகளைத் தேவனுடைய கட்டளைக்கேற்ப நேராக வளர்க்காவிட்டால், அடுத்த கிறிஸ்தவ தலைமுறையை எதிர்பார்க்க முடியாது. இந்த எதிர்பார்ப்பை நாம் சரியாக நிறைவேற்ற வேண்டும். ஆபிரகாம் கட்டளையிடுவான் என்று ஆண்டவர் சொன்னது போல, நம் ஒவ்வொருவருடைய குடும்பத்தையும் கர்த்தர் குறித்த ஒரு சாட்சியாக எதிர்பார்க்கிறார். மல்கியா 2:15ல் தேவன் எதிர்பார்க்கும் காரியமும் இதுதான். நாம் தெய்வ பக்தி உள்ள சந்ததியை நம் குடும்பத்தில் உருவாக்கத் தவறினால், நம்மை அழைத்த தேவனின் நோக்கத்தை நிறைவேற்றத் தவறியவர்களாகவே காணப்படுவோம். எனவே, நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் பிரதான கடமை – நம்மையும் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு நேராக நம்முடைய குடும்பத்தையும் நடத்த வேண்டும். நம் ஆவிக்குரிய ஓட்டம் 100 மீட்டர் ஓட்டம் அல்ல – அது ஒரு தொடர் ஓட்டம் (Relay). ezekiel Ezekiel Shanmugavel

God’s Purpose Concerning the Israelites in Hardening Pharaoh’s Heart.

Just for your thoughts: God’s Purpose Concerning the Israelites in Hardening Pharaoh’s Heart. God’s reason for hardening Pharaoh’s heart can be divided into two aspects. 1. With regard to Pharaoh himself: Pharaoh had to come to a point where he lost all confidence in his gods and was left helpless. The ten plagues that God sent upon Egypt were directly connected to the religious beliefs and deities of the Egyptians. Pharaoh needed to be brought to a realization that those gods could not save him. 2. To reveal God's supremacy to the world and to the Israelites: It had to be shown to Pharaoh and the entire world that the God whom the Israelites worship and serve is the one true, all-powerful God. At the same time, God had a purpose for the Israelites in this as well. This is clearly stated in Exodus 10:2: " "that you may tell your children and grandchildren how I dealt harshly with the Egyptians and how I performed my signs among them, and that you may know that I am the LORD." Yes, the Israelites were expected to remember and recount the miracles and wonders that God performed among the Egyptians for their deliverance. They were to pass on these testimonies not just to their children but to future generations. This, too, was part of God’s purpose. Only by doing so would each generation know that the God their ancestors worshiped is the true God. As God clearly says in Genesis 18:19, He expects us to instruct our families in His ways and recount His wonders from generation to generation. Christian life is a relay race – not a 100-meter sprint. We are called to finish our lap and prepare the next generation to continue the race. That is the primary responsibility of every parent. If we fail to raise our children according to God’s commandments, we cannot expect a faithful Christian generation to follow. We must fulfill this expectation diligently. Just as God said about Abraham that he would command his children, He expects the same testimony from each of our families. This is also emphasized in Malachi 2:15 – God desires godly offspring. If we fail to raise a generation that is devoted to God, we will be seen as those who failed the very purpose for which God called us. Therefore, the foremost duty of our spiritual life is not only to protect ourselves but to rightly guide our families so they too may walk in God’s ways. Our spiritual race is not a 100-meter dash – it is a relay.

Know your enemy

Just for your thought: Know your enemy. Just as our strength is important to win the battle, knowing our enemy is equally essential. In this post, let us learn some important characteristics about our enemy. He is a created being. He is not omnipresent, not all-knowing, and not all-powerful. God has taken away the authority to accuse us at the cross. His primary weapons are deceit, lies, and trickery. He does everything in his power to make mankind worship him. He is a murderer and the very embodiment of pride. Without God’s permission, he cannot touch a believer. When we resist him, he will flee from us. He cannot stand before the blood of Jesus Christ. He is the ruler of darkness; we are citizens of the Kingdom of Light. His world is different from the one in which God has placed us. He was created as an angel; we are created in the image of God. Satan can disguise himself as an angel of light. He knows the Scriptures well. He even has a counterfeit trinity. He has his own doctrines. He has dominions, thrones, kingdoms, messengers, ministers, and armies. He sows weeds in the church, twists the Scriptures, and accuses us before the Father. Ultimately, he is counting down his final days. Unless God allows, he has no authority over us. Satan never voluntarily retreats from the battlefield. Even if he is defeated in battle—or appears to be—he remains present on the field. Many times, Christians win the battle but later lose the war. Let us learn to stay alert! — Ezekiel Shanmugavel

1 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 26

உங்கள் சிந்தனைக்கு: 1 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 26. ஒபதியா என்கிற பெயரில் 12 ‌நபர்களைக் குறித்து வேதம் குறிப்பிடுகிறது.அதில் இரண்டு பேர் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள். 1 அரசர்கள் புத்தகம் 18-வது அதிகாரத்தில் எலியாவின் காலத்தில் வாழ்ந்த ஒபதியாவும் , தீர்க்கதரிசியான ஒபதியாவும் குறிப்பிடத்தக்கவர்கள். இந்தப் பதிவில் எலியாவின் காலத்தில் வாழ்ந்த ஒபதியாவைக் குறித்து தியானிக்கலாம். அரசுப் பணியில் பணியாற்றுகின்ற ஒரு கிறிஸ்தவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இவன் ஒரு நல்ல உதாரணம்.புதிய ஏற்பாட்டில் இயேசுவின் சரீரத்தை அடக்கம் செய்வதற்கு உதவி செய்த அரிமத்தியா பட்டணத்தைச் சேர்ந்த யோசேப்பு மற்றும் நிக்கொதேமுவும் போன்றவர்களும் தங்கள் அதிகாரத்தை எப்படி பயன்படுத்தலாம் என்பதற்கு சாட்சியாக இருந்தவர்கள்.இந்த ஒபதியா இஸ்ரவேல் தேசத்தை ஆண்ட ஆகாப் மன்னனுடைய ஆட்சியில் அரண்மனைக்குப் பொறுப்பாயிருந்தவன். ஒபதியா செல்வாக்கு மிகுந்த அதிகாரியாக இருந்தவன்.ஆகாபின் மனைவிதான் யேசபேல்‌. இவள் தான் கடவுளுடைய தீர்க்கதரிசிகளை கொடுமைப்படுத்தி கொலை செய்வதற்கு காரணம். இஸ்ரவேல் தேசத்தில் சிலை வழிபாட்டை ஊக்குவித்தவள்.அந்தக் காலம் தேவனுடைய பிள்ளைகளுக்கு ஒரு கொடுமையான காலமாக இருந்தது. கர்த்தருடைய தீர்க்கதரிசிகள் மலைகளிலும் குகைகளிலும் ஒதுங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.மிகப்பெரிய வல்லமையான தீர்க்கதரிசியான எலியாவே அவளுக்குப் பயந்து சூரைச் செடியில் பதுங்கிய காட்சிகளை நாம் வேதத்தில் பார்க்கலாம். தேவனுடைய பிள்ளைகளுக்கும், தீர்க்கதரிசிகளுக்கும் இக்கட்டான காலம் அது.ஆனால் இந்தக் காலத்தில்தான் ஒபேதியா அரசாங்கத்திற்கு பயப்படாமல் தன்னுடைய விசுவாச கடமைகளை நிறைவேற்றினார். ஒபதியா நூறு இறைவாக்கு உரைப்பவர்களை அழைத்து இரண்டு குகைகளில் ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்து, உணவும் தண்ணீரும் கொடுத்துப் பாதுகாத்தான். அரசனுக்கும் விசுவாசமாக இருந்து அதே வேளையில் தேவனுடைய பிள்ளைகளையும், ஊழியர்களையும் பாதுகாத்த மிகப்பெரிய தைரியசாலி. இன்றைக்கு ஒபேதியா போன்ற அரசு ஊழியர்களை இந்தக் காலத்தில் நாம் பார்ப்பது அரிதாக இருக்கிறது.கர்த்தர் கொடுத்த உயர்வை ஆசிர்வாதங்களை தேவனுடைய பணிகளுக்கும் தேவனுடைய பிள்ளைகளுக்கும் தைரியமாகத் தங்கள் கழுத்தைக் கொடுக்கக் கூடியவர்கள் வெகுசிலரே.அரசாங்கத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பது உண்மைதான்; அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.அதே வேளையில் தேவனுடைய அரசுக்கும் தேவனுடைய பிள்ளைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலை ஏற்படும்பொழுது அவர்களுக்குத் தைரியமாக உதவக்கூடிய கிறிஸ்தவ அதிகாரிகள் இன்றைக்கு நமக்குத் தேவை.அரசாங்கத்தில் சமீப காலங்களில் அரசு பதவிகளில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.எல்லோரும் பணத்திற்காகக் கம்ப்யூட்டர் படித்துவிட்டு வெளிநாடுகளிலும் இங்கே செழிப்பான MNC-ல் வேலைகளைத் தேடி ஓடி விடுகிறார்கள்.ஊழியக்காரர்கள் என்கிற போர்வையில் இருக்கும் அரசியல்வாதிகள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று அரசியல் குதிக்க ஆர்வம் காட்டுகிறார்கள் ‌. அது தமிழகத்தில் ஏன் இந்தியாவிலும் ஒருக்காலும் ஒருக்காலும் சாத்தியமில்லை. அதிகாரம் வேண்டுமென்கிற ஆன்மிகத் தலைவர்கள் தங்கள் விசுவாசிகளை ஊக்குவித்து அரசாங்கத்தின் உயர் பதவிகளில், குறிப்பாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணை ஆட்சியர், மருத்துவர்கள், பொறியாளர்கள் போன்ற பதவிகளில் கொண்டுவருவதற்கு முயற்சி செய்தால் அதுவே நாம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதாக எடுத்துக் எடுத்துக்கொள்ளலாம் .இது புரியாமல் சாக்கடை அரசியலில் குதிக்க வேண்டும் என்று சொல்வது என்னைப் பொறுத்த அளவில் மதீயீனம்.இதைப் படிக்கின்ற போதகர்கள் அவைகளில் உள்ள விசுவாசிகளை அரசாங்கத்தில் உயர் பதவிகளில் வருவதற்கு அவர்களுக்கு உதவி செய்யுங்கள், உற்சாகப்படுத்துங்கள், பொருளாதாரத்தால் தாங்குங்கள். இதுவே நீங்கள் ஆண்டவருக்கு செய்கின்ற மிகப்பெரிய தொண்டு. நாமும் இந்தக் கடைசி காலத்தில் ஒபேதியா போல மனிதர்கள் அரசு பணிகளில் வருவதற்கு ஜெபிப்போமாக. Ezekiel Shanmugavel

பவுலும் கொரிந்து சபையும்

உங்கள் சிந்தனைக்கு ! பவுலும் கொரிந்து சபையும் பவுல் உண்டாக்கிய சபைகளிலேயே அவருக்கு மிகவும் சவாலாக இருந்தது கொரிந்து சபைதான். சபையை ஆரம்பித்ததிலிருந்து அதை நிலைநிறுத்துவது வரை அவர் சமாளித்த சவால்கள் ஏராளம் ஏராளம். இங்குச் சபையை உருவாக்குவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. கொரிந்து ஒரு மிகப் பெரிய வணிக நகரம். .கடற்கரை நகரமும் கூட. செல்வ செழிப்பில் ஊறின நகரம்.அதே வேளையில் விபச்சாரம் வேசித்தனம் குடி போதை போன்ற பாவங்களில் உச்சத்தை தொட்ட நகரம். சரீரத்தில் செய்யும் எந்தப் பாவமும் ஆவிக்குரிய காரியங்களைக் கட்டுப்படுத்தாது என்ற கிரேக்க தத்துவத்தைப் பின்பற்றுகிற நகரம். The worst aspect of thinking of the separation of the physical and spiritual was prevalent in Corinth city. இதன் விளைவாகத்தான் பவுல் "உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? என்று கூறுகிறார். மேலும் இந்த நகரத்தில் ‘Aphroite” என்கிற கோயில் இருந்தது . அதில் உள்ள 1000கும் மேலான கோவிலில் உள்ள (தேவதாசிகள்) sacred prostitutes தினமும் மலை நேரங்களில் விபசாரத்திற்காக வருகின்ற நிகழ்வுகளும் உண்டு. “Paul would be forgiven for wondering if people so busy would ever have time to listen to the Gospel”. இந்தச் சவாலான நகரத்தில் தேவனுடைய சபையைப் பவுல் உருவாக்கினதே ஒரு மிகப் பெரிய தேவனுடைய கிரியை. கொரிந்து நகரத்தைச் சந்தித்த தேவன் எந்த நகரத்தையும் சந்திக்க வல்லமையுள்ள தேவனாயிருக்கிறார். இந்த நகரத்தில் 18 மாதங்கள் தங்கி ஊழியம் செய்து பலதரப்பட்ட மக்களை மந்தைக்குள் கொண்டுவந்தார்.ஆனல் அவர் போனபிறகு சில ஆண்டுகளுக்குள் அந்தச் சபை பிரிந்து கறைபட்டு மகிமை இழந்த சபையாக மாறிவிட்டது. It became a divided, defiled, and disgraced Chruch. தான் வளர்த்த, ஆதரித்த, இடைவிடாமல் ஜெபித்த அந்தச் சபை, தன்னுடைய தோற்றத்தை, பேச்சை, அப்போஸ்தல அதிகாரத்தை நேர்மையை கேள்விக்குள்ளாக்கியது. நாம் 2 கொரிந்தியார் அதிகாரம் 10 முதல் 13 வரை படித்தால் பவுலுடைய கதறலை படிக்கலாம். . எந்த சபையிலும் அவர் இங்கு போல் வேறு எங்கும் இவ்வாறு அவமானப்பட்டு மனம் உடைந்தது இல்லை . இதில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை இந்த பதிவில்பார்க்கலாம் கொரிந்து சபையின் மிக பெரிய இரண்டு குழப்பங்கள். 1 பிரிவினைகள் நிறைந்த சபை இயேசுவை பின்பற்றாமல் தலைவர்களை பின்பற்றி கிறிஸ்துவை புறம்பே தள்ளிவிட்டார்கள். "சிலர் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் " சொல்லி பல குழுக்களாக சபை பிரிந்து காணப்பட்டது. கறைபடிந்த சபை. விபசாரம் மலிந்து காணப்பட்ட சபை.இது பற்றி பவுல் எழுதும் போது " உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே, ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே" என்று சொல்லி கதறுகிறார் . ஆவியானவரின் வரங்களை பற்றி பவுலடியார் அதிகமாக கொரிந்து சபையில் பேசியது போல் வேறுஎங்கும் பேசவில்லை. ஆனால் ஆவியானவரின் வரங்களை நன்கு பயன்படுத்திய சபைதான் இந்தவித குழப்பங்களையும் சந்தித்தது. Exercising the spiritual gifts will not substantiate individual spiritual growth இதன் மூலம் சில முக்கியமான ஆவிக்குரிய உண்மைகளை நாம் அறிந்து கொள்ளலாம். 1 நல்ல ஆவிக்குரிய தலைவர்கள் ஒரு சபையை அல்லது இயக்கத்தை அல்லது நிறுவனத்தை கர்த்தரின் அழைப்பை பெற்று ஆரம்பித்தாலும் கூட அந்த சபை அல்லது இயக்கம் அல்லது நிறுவனம் கறை படாமல், பிரிவினை இல்லாமல் பாவங்களுக்கு ஆட்படாமல் இருக்கும் என்று சொல்ல முடியாது. 2 கடைசி மட்டும் ஒரு சபை அதன் ஸ்தாபகரின் ஆதி உபதேசத்தில் நிலைத்துநிற்கும் என்றும் முடியாது . உதாரணம் காலத்திய சபை. 3 ஒரு சபையின் குறைகளுக்கு அதன் ஸ்தாபகர் தான் காரணம் என்றும் கூறமுடியாது. பவுல் அவ்வளவு கஷ்டப்பட்டு பாடுபட்டு ஸ்தாபித்த சபையே பாவத்தில் விழும் போது மற்ற சபைகளை பற்றி நாம் என்ன சொல்லமுடியும்? 4 ஒரு தலைவர் அல்லது போதகர் தன் கீழ் உள்ள மக்களுக்கு வழிகாட்டலாம், முன்மாதிரியாக இருக்கலாம், போதிக்கலாம். ஆனால் ஆவிக்குரிய வளர்ச்சி என்பது தனிப்பட்டவர்களுடைய முயற்சியை சார்ந்தது . எனவே போதகர் அல்லது தலைவர் நல்ல ஆவிக்குரியவர் என்பதினாலே சபை அல்லது இயக்கம் முழுவதும் ஆவிக்குரியதாகக் காணப்படும் என்று சொல்ல முடியாது.

Commitment is not a one-way traffic.

உங்கள் சிந்தனைக்கு! இன்றைய சபையின் சோகமான நிகழ்வு என்னவென்றால், சபை தலைவர்கள் தங்களின் கீழுள்ள விசுவாசிகளைத் தங்களின் தேவைகளை நிறைவேற்றும் வங்கிகளாகப் பார்க்கிறார்களே அன்றி, தேவனுடைய சரீரமாகிய சபையில் அவர்களுக்கும் ஒரு பணியைத் தேவன் வைத்திருக்கிறார் என்றும், அதைச் செயல்படுத்தத்தான் தன்னை தலைவராக வைத்திருக்கிறார் என்றும் அறியாமல் இருப்பதுதான். எந்த அளவுக்கு விசுவாசிகள் தலைவர்களுக்குக் கீழ்படிந்து ஒப்புக்கொடுப்பது அவசியமோ, அந்த அளவுக்குச் சபை மற்றும் இயக்கத்தின் தலைவர்கள் விசுவாசிகளுக்கு இசைந்து, அவர்களைத் தேவன் பயன்படுத்துவதற்கு ஒப்புக் கொடுக்க வேண்டும். Commitment is not a one-way traffic. ஆண்டவருக்கு பவுலும் பர்னபாவும் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு ஸ்தேவானும் பிலிப்பும் அவசியம். இன்றைய தேவை: விசுவாசிகளின் கிருபைகளை, தாலந்துகளை உணர்ந்து, அறிந்து, அதை பயன் படுத்த சபையும் இயக்கத்தின் தலைவர்களும் அனுமதிக்க வேண்டும். அந்நிய பாஷையை விசுவாசிக்காத Brethren Church விசுவாசிகளின் தாலந்துகளை பயன்படுத்துவதில் சிறந்த உதாரணமாக என் பார்வைக்கு தெரிகிறது. எசேக்கியேல் சண்முகவேல்

What is the difference between "God appeared" and "God revealed Himself"?

Just for your thought: What is the difference between "God appeared" and "God revealed Himself"? What lesson does Exodus 6:3 teach us? "I appeared to Abraham, to Isaac, and to Jacob as God Almighty, but by My name 'LORD' I did not make Myself known to them." – Exodus 6:3 God appeared to Abraham, Isaac, and Jacob as God Almighty (El Shaddai). But He did not reveal Himself to them by His personal name, “Yahweh” (YHWH). However, God revealed Himself to Moses—and not just to Moses, but also to the people of Israel—by the name “Yahweh” (Exodus 3:14). In short, God introduced Himself to Abraham, Isaac, and Jacob as the God of the covenant (Exodus 6:4). But to Moses, He revealed Himself as the eternal and self-existing God. What this truly means is: He is "the One who is"—in other words, the God who eternally exists. The promises He made to Abraham, Isaac, and Jacob, He reveals Himself now as the One who fulfills them for the people of Israel. Lessons: Our God is not only the One who makes promises, but also the One who fulfills them. Furthermore, He is more than a fulfiller—He is the eternal, complete God who surpasses all things. God does not reveal Himself to all His children in the same way. Depending on each person's situation and calling, God uniquely reveals Himself. No one in this world has received the full revelation of God.

Commitment is not a one-way traffic.

உங்கள் சிந்தனைக்கு! இன்றைய சபையின் சோகமான நிகழ்வு என்னவென்றால், சபை தலைவர்கள் தங்களின் கீழுள்ள விசுவாசிகளைத் தங்களின் தேவைகளை நிறைவேற்றும் வங்கிகளாகப் பார்க்கிறார்களே அன்றி, தேவனுடைய சரீரமாகிய சபையில் அவர்களுக்கும் ஒரு பணியைத் தேவன் வைத்திருக்கிறார் என்றும், அதைச் செயல்படுத்தத்தான் தன்னை தலைவராக வைத்திருக்கிறார் என்றும் அறியாமல் இருப்பதுதான். எந்த அளவுக்கு விசுவாசிகள் தலைவர்களுக்குக் கீழ்படிந்து ஒப்புக்கொடுப்பது அவசியமோ, அந்த அளவுக்குச் சபை மற்றும் இயக்கத்தின் தலைவர்கள் விசுவாசிகளுக்கு இசைந்து, அவர்களைத் தேவன் பயன்படுத்துவதற்கு ஒப்புக் கொடுக்க வேண்டும். Commitment is not a one-way traffic. ஆண்டவருக்கு பவுலும் பர்னபாவும் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு ஸ்தேவானும் பிலிப்பும் அவசியம். இன்றைய தேவை: விசுவாசிகளின் கிருபைகளை, தாலந்துகளை உணர்ந்து, அறிந்து, அதைப் பயன் படுத்த சபையும் இயக்கத்தின் தலைவர்களும் அனுமதிக்க வேண்டும். அந்நிய பாஷையை விசுவாசிக்காத Brethren Church விசுவாசிகளின் தாலந்துகளை பயன்படுத்துவதில் சிறந்த உதாரணமாக என் பார்வைக்கு தெரிகிறது. எசேக்கியேல் சண்முகவேல்

1 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 24

உங்கள் சிந்தனைக்கு: 1 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 24 சாலமோனுடைய மகன் ரெகோபெயாமின்‌ ஆட்சி காலத்தில் ஒருமைப்பட்ட இஸ்ரவேல் தேசம் இரண்டாகப் பிரிந்தது. யூதா கோத்திரத்தில் சார்ந்த ரெகோபெயாம் ஒரு பிரிவாகவும் மற்ற அனைத்து கோத்திரங்களும் யெரொபெயாம் தலைமையில் ஒரு பிரிவாகவும் ஆக இரண்டு பிரிவுகளாகத் தேசம் பிளவு பட்டது. யெரொபெயாம் தலைமையில் வடக்கில் உள்ள 10 கோத்திரங்கள் இணைந்து ஒரு அரசாக மாறியது. இது இஸ்ரவேல் தேசம் என்றும் எப்பிராயீம் என்றும் அழைக்கப்பட்டது. இந்த ராஜ்யத்தை ஏறக்குறைய 9 வம்சங்கள் ஆட்சி செய்தது. இதில் ஆட்சி செய்த அத்தனை அரசர்களும் தேவனுக்கு பிரியமான வாழ்க்கை வாழ வில்லை இவர்கள் வரலாற்றை ஆராய்ந்து பார்க்கும்பொழுது இவர்கள் எதை விதைத்தார்களோ அதையே அறுத்தார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். இதைப் பற்றியுள்ள ஒரு சிறு பதிவு. இந்த இஸ்ரவேல் ராஜ்யத்தின் முதல் அரசன் யெரொபெயாம் சாதாரண நிலையில் இருந்த இவனைக் கடவுள் சாலமன் செய்த பாவங்களின் நிமித்தம் ஒருமைப்பட்ட தேசத்தை இரண்டாகப் பிரித்து ஒரு பகுதியை இவனுக்கு அரசாளத் தேவன் வாய்பளித்தார். ஆனால் ஆனால் இவன் கர்த்தருக்கு பிரியமான வழியில் நடக்கவில்லை. இவன் 22 வருடங்கள் ஆட்சி செய்தான். இவனுக்குப் பிறகு இவன் மகன் நாதாப் அரியணை ஏறினான். இவன் இரண்டு வருடங்கள் தான் ஆட்சி செய்தான். இவனை இசக்கார் வம்சத்தை சேர்ந்த பாஷா கொலை செய்து ஆட்சியைக் கைப்பற்றினான். அதோடு யெரொபெயாமின் வம்ச ஆட்சி முடிவுக்கு வந்தது. யெரொபெயாம் கடவுளுடைய பார்வையில் உத்தமமாக நடந்திருந்தால் இவனுடைய வம்ச ஆட்சியில் தொடர்ந்திருக்கும். ஆனால் அதற்கு இவனே முற்றுப்புள்ளி வைத்து விட்டான். அடுத்து வந்தவன் பாஷா இவன் 24 ஆண்டுகள் ஆட்சி செய்தான் இவன் யெரொபெயாமின் வம்சத்து சொந்தங்களை வேரோடு அழித்தான் 16:17 இவனுக்குப் பிறகு வந்த பாஷாவின் மகன் ஏலா இரண்டு வருடங்கள் மட்டுமே ஆட்சி செய்தான். இவன் குடித்து வெறித்திருக்கையில்‌ சிம்ரி என்பதன் இவனைக் கொலை செய்து ஆட்சியைக் கைப்பற்றினான். இதோடு பாஷாவின் வம்சம் முடிவடைந்தது. பாஷா எப்படி ஏலாவை கொலை செய்து ஆட்சியைக் கைப்பற்றினானோ அதேபோல் இவனுடைய மகனும் கொலை செய்யப்பட்டு ஆட்சியை இழந்தான்.சிம்ரி பாட்ஷாவின் குடும்பத்தை அடியோடு அழித்தான். இவைகள் எல்லாம் கர்த்தருடைய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளின்படி நடந்தாலும் பாஷா தான் தான் விதைத்ததையே அறுத்தான். யெகோவா தன் பணியாளனாகிய சீலோனியனான அகியாவின் மூலமாய்க் கொடுத்த வாக்கின்படியே, யெரொபெயாமுக்குச் சொந்தமான சுவாசமுள்ள எதையும் விட்டுவைக்காமல் எல்லாவற்றையும் பாஷா கொன்றான். 1 இராஜாக்கள் 15:29 யெகூ என்ற இறைவாக்கினன் மூலம் பாஷாவுக்கு எதிராக யெகோவா கூறிய வார்த்தை நிறைவேற்றும்படியாகச் சிம்ரி பாஷாவின் முழுக் குடும்பத்தையும் அழித்தான். நமக்குத் தேவன் நமக்கு உணர்த்தும் பாடம் என்னவென்றால் எல்லாம் தேவனுடைய இறையாண்மையால் நடத்தப்படுகிறது என்றாலும் நாம் அல்லது ஒரு அரசு எந்த ஆயுதத்தைப் பயன்படுத்துகிறதோ அந்த கருவியே‌அந்த அரசுக்கு எதிராக மாறிவிடும். ஒருமைப்பட்ட பாகிஸ்தான் மதம் என்கிற ஆயுதத்தைப் பயன்படுத்தி இந்தியாவிலிருந்து பிரிந்தது. ஆனால் அந்த ஆயுதம் பின் நாட்களில் அவர்களுக்குப் பயன்படவில்லை மொழியின் அடிப்படையில் அந்த நாடு பாகிஸ்தான் பங்களாதேஷ் என்று இரண்டாகப் பிரிந்தது. வரலாற்றில் இது ஒரு உதாரணம். நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம். தனிப்பட்ட நபர்களுக்கும் பொருந்தும், உலக அரசுகளுக்கும் பொருந்தும். கர்த்தருடைய வார்த்தையின்படி உருவாக்கப்பட்ட USA இன்றும் நீடித்து ஒருமைப்பட்ட நாடாகக் காணப்படுகின்றது.(பல குறைகள் இருந்தாலும்) உலகத்தையே ஆட்சி செய்த இங்கிலாந்து தன்னுடைய காலணி ஆதிக்கத்தில் உள்ள நாடுகளைச் சுரண்டி, கொடுமைப்படுத்தினபடியினால் அந்த நாடு எல்லாவற்றை இழந்து ஏன் ஆண்டவரை விட்டே வெகுதூரமாகக் காணப்படுகிறது. நமக்குள்ள ஒரே பாதுகாப்பு ஆண்டவருக்கு வாழ்கின்ற வாழ்க்கை மட்டுமே. தேவன் எல்லாவற்றையும் நடத்துகிறவர். நாம் அவருடைய கைகளில் நன்மையான திட்டங்களைப் பயன்படுத்துகிற நபராகக் காணப்பட வேண்டுமே அல்லாமல் அநீதியை நிலைநாட்டுகிற ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படக் கூடாது‌ எசேக்கியேல் சண்முகவேல்

1 Kings – Bible Lesson 24

Just for your thoughts: 1 Kings – Bible Lesson 24 During the reign of Rehoboam, the son of Solomon, the united kingdom of Israel was divided into two. Rehoboam, from the tribe of Judah, led one portion, while the rest of the tribes followed Jeroboam, resulting in the division of the nation into two kingdoms. Under the leadership of Jeroboam, ten tribes in the northern region united to form a kingdom, which came to be known as the Kingdom of Israel or Ephraim. This kingdom was ruled by approximately nine dynasties. However, none of the kings who reigned over this kingdom lived lives pleasing to God. When we study their history, we realize that they reaped exactly what they sowed. Here is a brief account: The first king of this northern kingdom of Israel was Jeroboam. Though he was of humble beginnings, God gave him the opportunity to rule over part of the divided kingdom as a consequence of Solomon’s sins. However, Jeroboam did not walk in the ways that pleased the Lord. He reigned for 22 years. After him, his son Nadab ascended the throne and ruled for only two years before being killed by Baasha from the tribe of Issachar, who then seized the throne. Thus, the dynasty of Jeroboam came to an end. Had Jeroboam walked righteously in the sight of God, his dynasty would have continued. But he brought an end to it himself. Next came Baasha, who ruled for 24 years. He destroyed every member of Jeroboam’s household (1 Kings 15:29). Baasha's son Elah succeeded him but reigned for only two years. While drunk and out of control, he was assassinated by Zimri, who then took over the kingdom. Thus, the dynasty of Baasha also came to an end. Just as Baasha had killed Nadab to gain the throne, his own son was killed and lost the throne. Zimri wiped out Baasha’s entire household. All these events happened according to the word of the Lord spoken through His prophets. Yet, Baasha reaped what he had sown. “As soon as Baasha began to reign, he struck down all the house of Jeroboam. He did not leave to Jeroboam anyone that breathed, until he had destroyed him, according to the word of the Lord that he spoke by his servant Ahijah the Shilonite.” — 1 Kings 15:29 “Zimri destroyed all the household of Baasha, in accordance with the word of the Lord spoken against Baasha through the prophet Jehu.” The lesson God teaches us through this is that although everything is orchestrated under His sovereign will, whatever weapon a person or a kingdom uses will eventually be turned against them. A united Pakistan used religion as a tool to separate from India. But that very weapon did not serve them in the end. On the basis of language, Pakistan was later divided into Pakistan and Bangladesh. This is an example from history. Whatever we sow, we shall reap. This applies to individuals and to nations alike. The United States of America, founded on the Word of the Lord, still exists today as a united nation (despite many flaws). On the other hand, Britain, which once ruled the world, exploited and oppressed its colonies. As a result, it lost everything and is now seen as a nation far removed from God. Our only safety lies in living a life that is pleasing to the Lord. God is the one who governs all things. We must be vessels used by Him for good and not instruments for establishing unrighteousness. — Ezekiel Shanmugavel

சிலுவையின் சில நிகழ்வுகளை நாம் எப்படி தியானிக்க வேண்டும்?

உங்கள் சிந்தனைக்கு: சிலுவையின் சில நிகழ்வுகளை நாம் எப்படி தியானிக்க வேண்டும்? சிலுவையைப் பற்றி நாம் தியானிக்கும்போது, சில முக்கியமான நிகழ்வுகளை மிகுந்த கவனத்துடன் மனத்தில் கொண்டு தியானிக்க வேண்டும். கல்வாரியில் நடந்த அந்த மறக்கமுடியாத நிகழ்வுகளை நாம் மனக்கண் முன் கொண்டு வந்து, ஆவியால் உணர்ந்தால்தான் அதன் மகிமையும், அதே நேரத்தில் பதைபதைக்கும் சூழ்நிலையும் நம்முள் பதியும். இல்லையென்றால், அவை வெறும் வார்த்தைகளாகவே நம் மனதைத் தொட்டு செல்லாமல் மறைந்து போய்விடும். அந்த நிகழ்வுகள் நம் உள்ளத்தில் எப்போதும் இருந்தால், நாம் ஒருபோதும் பாவம் செய்ய துணியமாட்டோம். முதலில் பிதாவின் தீர்மானத்தின் அன்பை புரிந்து கொள்ள வேண்டும் குமாரன், மனித குலத்தின் சார்பாக அதன் பாவங்களைச் சுமந்து பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டபோது நடந்த சில காரியங்களை இப்போது தியானிக்கலாம்: “தம்முடைய சொந்தக் குமாரனென்றும் பாராமல், நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர்” (ரோமர் 8:32) இதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால், தேவனாகிய குமாரன் உலகத்தின் பாவங்களை ஏற்று பாவமானபோது, பிதா தம் சொந்த மகனில் பாவத்தைக் கண்டதும், அவரை நம் அனைவருக்காக மரணத்திற்கு ஒப்புவித்தார். பிதா தான் குமாரனை உலகத்திற்கு அனுப்பினார். ஆனாலும் குமாரனில் பாவத்தைப் பார்த்தபோது, அதாவது உலகத்தின் பாவங்களை அவர் சுமந்தபோது, சில வேத அறிஞர்களின் கருத்துப்படி, பிதா தன்னுடைய உறவைத் துண்டித்துக் கொண்டார். அந்த விநாடியின் வேதனை: இது உண்மையாக இருந்தால், அது உண்மையில் பதைபதைக்கும் செய்தி. குமாரனும் பிதாவும் உள்ள அந்த உன்னதமான உறவு, அந்த ஒரே விநாடியில் துண்டிக்கப்பட்டது. இதைக் குறித்து “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று அவர் பரிதாபமாகக் கதறுகிறார். சில வேத வல்லுனர்கள் இதை உண்மை என்கிறார்கள்; சிலர் மறுக்கிறார்கள். ஆனால், குமாரன் அந்த வார்த்தைகளைச் சொன்னதற்கேற்ப அவர் தள்ளப்பட்டார் என்பதே உண்மை. நீதியின் பொருட்டு திருப்பம்: பிதாவும் தம்முடைய நியாய தீர்ப்பில் நீதியாய் இருக்க வேண்டும் என்பதற்காக—even though it was His own Son—உலகத்தின் பாவங்களைச் சுமந்த குமாரனை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார். பாவம் குமாரனின் மேல் இருப்பதைப் பார்த்த பிதா, தம் சொந்த மகனென்றும் பாராது அவரை விட்டுவிட நேர்ந்தது. நாம் மனத்தில் கொள்ள வேண்டியது: குமாரனும், உணர்வியல் அடிப்படையில், பிதா தன்னை கைவிட்டதாகவே உணர்கிறார். அந்தக் கதறல், அந்த உன்னத உறவு துண்டிக்கப்படும்போது ஏற்பட்ட வேதனை—இவை அனைத்தும் நம் உள்ளத்தில் எப்போதும் நிறைந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் எந்தச் சூழ்நிலையிலும் பாவம் செய்யத் துணியமாட்டோம்; அவரைவிட்டு விலகப் போகமாட்டோம். குமாரனுடைய அன்பைவிட உலகத்தின் செல்வங்களை மதிக்கமாட்டோம்; அதன் பின்னே ஓடமாட்டோம்; அதற்காக உழைக்கமாட்டோம். எவ்வளவு அன்புள்ள தேவன், எவ்வளவு கிருபையுள்ள இரட்சகர்! எசேக்கியேல் சண்முகவேல்

We are called to be living epistles

Just for your thoughts We are called to be living epistles. Only when we are so, will the works of the Holy Spirit be revealed in the divine message we proclaim. In this, the power of God will be clearly manifested. But if we do not read the epistles, how can we become living epistles ourselves? When the epistles are not spoken of or taught in the church, how can their impact be seen in our lives? To become living epistles, the epistles of the New Testament must be preached and meditated upon more in our churches. When even the foundational doctrines of the New Testament remain unclear to believers—or are deliberately not taught—how can they ever become living epistles? When dance, music, and drama overflow in the name of 'worship' within the church, how can believers be transformed into living epistles? This is the primary reason behind the decline hidden beneath today's apparent church growth and the rising opposition to the gospel. We must first transform today’s youth into living epistles. Those who understand this are truly blessed. Preachers who refuse to preach the truths of the New Testament, and believers who lack the desire to listen with eagerness, are not assets to today’s churches. They are liabilities to the body of Christ. "You yourselves are our letter, written on our hearts, known and read by everybody. You show that you are a letter from Christ, the result of our ministry, written not with ink but with the Spirit of the living God, not on tablets of stone but on tablets of human hearts." 2 Cori 3:2,3

நாம் நடமாடும் நிரூபங்களாக இருக்க அழைக்கப்பட்டிருக்கிறோம்

உங்கள் சிந்தனைக்கு: நாம் நடமாடும் நிரூபங்களாக இருக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். அப்படியிருந்தால்தான் நாம் அறிவிக்கும் கடவுளுடைய அருட் செய்தியில் பரிசுத்த ஆவியானவரின் கிரிகைகள் வெளிப்படும். அதில் தேவனுடைய வல்லமை தெளிவாகக் காணப்படும். நிரூபங்களையே படிக்காமல் இருந்தால், எப்படி நாம் நடமாடும் நிரூபங்களாக மாற முடியும்? சபையில் நிரூபங்களைப் பேசாமல், போதிக்காமல் இருக்கும்போது, அந்த நிரூபங்களின் தாக்கம் நம்முடைய வாழ்வில் எப்படி வெளிப்படும்? நடமாடும் நிரூபங்களாக மாறுவதற்கு, புதிய ஏற்பாட்டின் நிரூபங்களை சபைகளில் அதிகமாகப் போதிக்கவும், தியானிக்கபட வேண்டும். புதிய ஏற்பாட்டு சத்தியங்களைப் பற்றிய ஆனா, ஆவன பாடமே விசுவாசிகளுக்குப் புரியாமல் இருக்கும்போது, அல்லது அதைப் புரியவைக்க மறுக்கும்போது, அவர்கள் எப்படி நடமாடும் நிரூபங்களாக மாறுவார்கள்? ஆட்டமும், பாட்டும், கூத்தும் ‘ஆராதனை’ என்கிற பெயரில் சபையில் பெருகும்போது, விசுவாசிகள் எப்படி நடமாடும் நிரூபங்களாக மாறுவார்கள்? இன்றைய சபையின் வளர்ச்சிக்குப் பின்னால் உள்ள வீழ்ச்சியும், நற்செய்திக்கு எதிரான அலைக்கும் இதுவே முக்கிய காரணமாக உள்ளது. இன்றைய வாலிபர்களை, நாம் நடமாடும் நிரூபங்களாக முதலில் மாற்ற வேண்டும். இதைப் புரிந்து கொள்ளும்வர்கள் பாக்கியவான்கள். புதிய ஏற்பாட்டு சத்தியங்களை போதிக்க மறுக்கும் போதகர்களும், அதை ஆர்வத்தோடு கேட்கும் மனம் இல்லாத விசுவாசிகளும், இன்றைய சபைகளில் சொத்துகளாக இல்லை. They are Liabilities to the body of Christ. "எங்கள் இருதயங்களில் எழுதப்பட்டும், சகல மனுஷராலும் அறிந்து வாசிக்கப்பட்டும் இருக்கிற எங்கள் நிருபம் நீங்கள்தானே. ஏனெனில் நீங்கள் எங்கள் ஊழியத்தினால் உண்டாகிய கிறிஸ்துவின் நிருபமாயிருக்கிறீர்கள் என்று வெளியரங்கமாக இருக்கிறது; அது மையினாலல்ல, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும்; கற்பலகைகளிலல்ல, இருதயங்களாகிய சதையான பலகைகளிலேயும் எழுதப்பட்டிருக்கிறது." — 2 கொரிந்தியர் 3:2,3

சிலுவையின் சில நிகழ்வுகளை நாம் எப்படி தியானிக்க வேண்டும்?

உங்கள் சிந்தனைக்கு: சிலுவையின் சில நிகழ்வுகளை நாம் எப்படி தியானிக்க வேண்டும்? சிலுவையைப் பற்றி நாம் தியானிக்கும்போது, சில முக்கியமான நிகழ்வுகளை மிகுந்த கவனத்துடன் மனத்தில் கொண்டு தியானிக்க வேண்டும். கல்வாரியில் நடந்த அந்த மறக்கமுடியாத நிகழ்வுகளை நாம் மனக்கண் முன் கொண்டு வந்து, ஆவியால் உணர்ந்தால்தான் அதன் மகிமையும், அதே நேரத்தில் பதைபதைக்கும் சூழ்நிலையும் நம்முள் பதியும். இல்லையென்றால், அவை வெறும் வார்த்தைகளாகவே நம் மனதைத் தொட்டு செல்லாமல் மறைந்து போய்விடும். அந்த நிகழ்வுகள் நம் உள்ளத்தில் எப்போதும் இருந்தால், நாம் ஒருபோதும் பாவம் செய்யத் துணியமாட்டோம். முதலில் பிதாவின் தீர்மானத்தின் அன்பை புரிந்து கொள்ள வேண்டும் குமாரன், மனித குலத்தின் சார்பாக அதன் பாவங்களைச் சுமந்து பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டபோது நடந்த சில காரியங்களை இப்போது தியானிக்கலாம்: “தம்முடைய சொந்தக் குமாரனென்றும் பாராமல், நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர்” (ரோமர் 8:32) இதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால், தேவனாகிய குமாரன் உலகத்தின் பாவங்களை ஏற்று பாவமானபோது, பிதா தம் சொந்த மகனில் பாவத்தைக் கண்டதும், அவரை நம் அனைவருக்காக மரணத்திற்கு ஒப்புவித்தார். பிதா தான் குமாரனை உலகத்திற்கு அனுப்பினார். ஆனாலும் குமாரனில் பாவத்தைப் பார்த்தபோது, அதாவது உலகத்தின் பாவங்களை அவர் சுமந்தபோது, சில வேத அறிஞர்களின் கருத்துப்படி, பிதா தன்னுடைய உறவைத் துண்டித்துக் கொண்டார். அந்த விநாடியின் வேதனை: இது உண்மையாக இருந்தால், அது உண்மையில் பதைபதைக்கும் செய்தி. குமாரனும் பிதாவும் உள்ள அந்த உன்னதமான உறவு, அந்த ஒரே விநாடியில் துண்டிக்கப்பட்டது. இதைக் குறித்து “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று அவர் பரிதாபமாகக் கதறுகிறார். சில வேத வல்லுனர்கள் இதை உண்மை என்கிறார்கள்; சிலர் மறுக்கிறார்கள். ஆனால், குமாரன் அந்த வார்த்தைகளைச் சொன்னதற்கேற்ப அவர் தள்ளப்பட்டார் என்பதே உண்மை. நீதியின் பொருட்டு திருப்பம்: பிதாவும் தம்முடைய நியாய தீர்ப்பில் நீதியாய் இருக்க வேண்டும் என்பதற்காக—even though it was His own Son—உலகத்தின் பாவங்களைச் சுமந்த குமாரனை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார். பாவம் குமாரனின் மேல் இருப்பதைப் பார்த்த பிதா, தம் சொந்த மகனென்றும் பாராது அவரை விட்டுவிட நேர்ந்தது. நாம் மனத்தில் கொள்ள வேண்டியது: குமாரனும், உணர்வியல் அடிப்படையில், பிதா தன்னை கைவிட்டதாகவே உணர்கிறார். அந்தக் கதறல், அந்த உன்னத உறவு துண்டிக்கப்படும்போது ஏற்பட்ட வேதனை—இவை அனைத்தும் நம் உள்ளத்தில் எப்போதும் நிறைந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் எந்தச் சூழ்நிலையிலும் பாவம் செய்யத் துணியமாட்டோம்; அவரைவிட்டு விலகப் போகமாட்டோம். குமாரனுடைய அன்பைவிட உலகத்தின் செல்வங்களை மதிக்கமாட்டோம்; அதன் பின்னே ஓடமாட்டோம்; அதற்காக உழைக்கமாட்டோம். எவ்வளவு அன்புள்ள தேவன், எவ்வளவு கிருபையுள்ள இரட்சகர்!

The Tears of the Child Who Brought Down Pharaoh

Just for your thought: The Tears of the Child Who Brought Down Pharaoh The very weapon Pharaoh tried to use to destroy the Jews was the weapon by which he himself fell. The Lord defeated Satan with the very tool he wielded. Pharaoh attempted to wipe out the Jewish race by killing all newborn male children. Yet, it was through one child who survived Pharaoh’s own decree that he ultimately fell. Everything that happened in Moses' infancy was part of God's foreordained plan. The daughter of Pharaoh found the child lying in a papyrus basket along the banks of the Nile. The baby wept. Moved by compassion, Pharaoh's daughter chose to raise the child. Through Moses’ sister, his own mother was appointed as his nurse. Later, when he grew older, this same child was handed over to Pharaoh's palace, where he received training in all the wisdom of Egypt. None of these events occurred by chance. Each was divinely orchestrated. If the child had not cried at that moment, Pharaoh’s daughter might not have chosen to adopt him. That infant’s tears became the tool that led to Pharaoh’s downfall. God used a small act to bring down a mighty empire. Just as He often uses the weak, the overlooked, and the humble to accomplish great things, so He used the cries of a three-month-old baby as a powerful instrument. He is a God of profound wisdom. In the life of someone known by God, nothing happens by accident. We must never take lightly anything that God allows in our lives. Often, such events may be part of His long-term divine plan. Based on the commentary of W.W. Wiersbe. By Ezekiel Shanmugavel

எபிரேயருக்கெழுதிய நிருபம் – ஒரு பார்வை

உங்கள் சிந்தனைக்கு: எபிரேயருக்கெழுதிய நிருபம் – ஒரு பார்வை பிரசங்கத்தில் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட நிகழ்வுகளையே அதிகமாக முக்கியப்படுத்தும் போதகர்கள் தியானிக்க வேண்டிய நூல் இது. மார்ட்டின் லூதர் கூட இந்தப் புத்தகத்தை ஆரம்பத்தில் தேவனால் அங்கீகரிக்கப்பட்ட வார்த்தையாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இந்தப் புத்தகம் எழுதப்படாமல் இருந்திருக்குமானால், பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டிருக்கும் பல பதங்களுக்குப் புதிய ஏற்பாட்டின் வெளிச்சத்தில் அர்த்தம் தெரியாமல் இருந்திருக்கும். குறிப்பாகப் பலிபீடம், எருசலேம் தேவாலயம், ஆசாரியத்துவம், பலிகள், பிரதான ஆசாரியன் போன்ற வார்த்தைகளுக்கு இந்த மடலில்தான் சரியான ஆவிக்குரிய அர்த்தத்தைக் கண்டுகொள்ள முடியும். இந்த மடல் பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் இணைக்கும் ஒரு பாலம். இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பிறகு யூதர்களுடைய உபத்திரவத்தினால் இடறல் அடைந்து, தாங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷம் சரியானதுதானா என்ற கேள்வியோடு உள்ள யூதர்களுக்கு, இயேசு கிறிஸ்து எப்படி யூத மார்க்கத்தைவிட, பழைய பிரமாணங்களைவிட மேன்மையானவர் என்பதை விவரிப்பதற்காக எழுதப்பட்டதுதான் இந்த நிருபம். இந்த நிகழ்வோடு தற்போதைய சூழ்நிலையை ஒப்பிட்டு இதைத் தியானிக்கலாம். இந்தக் கால சூழ்நிலையில், பிரசங்கத்தில் 90% பழைய ஏற்பாட்டு நிகழ்வுகளையே பேசும் போதகர்கள், பிரசங்கிகளுக்கு புதிய ஏற்பாட்டின் மேன்மையை அறிய இந்த நூல் அவசியம். இது ஒரு சிறந்த ஆவிக்குரிய மடல். ஆதி திருச்சபை கிறிஸ்தவர்களுக்கு, தாங்கள் ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவம் மேன்மையானதுதானா என்ற சந்தேகத்தைப் போக்க எழுதப்பட்டது. ஆனால் இன்றோ, பழைய ஏற்பாட்டைச் சுற்றியே பேசக்கூடிய, எழுதக்கூடிய போதகருக்கு – பங்கு பங்காகப் பல்வேறு நிலைகளில் சொல்லப்பட்ட வெளிப்பாடுகளைவிட, குமாரன் மூலம் வெளிப்படுத்தப்பட்டவை – இந்தக் கடைசி கால, புதிய ஏற்பாட்டு சத்தியங்கள் எவ்வளவு மேலானது, நித்தியமானது, பூரணமானது என்பதை உணர்ந்து கொள்ள இந்த நூல் அவசியமாகத் தியானிக்கப்பட வேண்டிய மடல். It is a better revelation. It is of eternal things. It is a perfect revelation. எந்தப் பிரசங்கமானாலும் ஆபிரகாமைப் பற்றியும் தாவீதைப் பற்றியும் தானியேலைப் பற்றியும் யோசேப்பைப் பற்றியும் பேசுகின்ற போதகருக்கு, பவுலைப் பற்றியோ, பவுலின் மடல்களைப் பற்றியோ, பேதுருவைப் பற்றியோ, யோவானைப் பற்றியோ, பர்னபாவைப் பற்றியோ பேசுவது அரிதாகிவிட்டது. இந்தக் குற்றச்சாட்டுக்கு எவ்வளவு பெரிய சபைகளும், எவ்வளவு பெரிய போதகர்களும் தப்பிக்க முடியாது. மிகப்பெரிய சபைகளில் கூட, மிகப்பெரிய போதகர் கூடத் தங்கள் பிரசங்கங்களில் பழைய ஏற்பாட்டைச் சுற்றியே வருவார்கள். புதிய ஏற்பாட்டின் சுவிசேஷங்களுக்கோ, அப்போஸ்தலர் நடப்படிகள் புத்தகத்திற்கோ, கடிதங்களுக்கோ எட்டிப் பார்ப்பது கூட அரிதான காரியமாக உள்ளது. குமாரன் மூலம் உரைக்கப்பட்ட இந்தக் கடைசி கால செய்திகளை, வெளிப்பாடுகளை அதிகமாகத் தியானிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். பழைய ஏற்பாட்டின் நிகழ்வுகளைப் போதிக்கிறவர்கள், அந்தச் சம்பவங்கள் எப்படி புதிய ஏற்பாட்டு சத்தியத்தோடு தொடர்புடையது என்பதையும் போதிக்க வேண்டும். அதுதான் என் சபையில் காணப்படவில்லை. இந்த நூல் விசுவாசிகளின் ஆசாரியத்துவத்தை மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறது. ஆசாரியத்துவ மாற்றத்தை நாம் நன்கு புரிந்து கொண்டால்தான் விசுவாசிகளை உண்மையான புதிய ஏற்பாட்டின் வெளிச்சத்திற்குள் வளர்க்க முடியும். இந்தக் கடிதத்தில் உள்ள 11வது மற்றும் 12வது அதிகாரத்தை மாத்திரம் அதிகம் தியானிக்கும் போதகர்கள், இதில் உள்ள முதல் ஒன்பது அதிகாரத்தில் உள்ள ஆவிக்குரிய உண்மைகளை அதிகமாகப் பேசுவதில்லை. இதற்காக நான் பழைய ஏற்பாட்டைப் பற்றித் தியானிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை; ஆனால், எந்த அளவுக்குப் பழைய ஏற்பாட்டு சத்தியங்களை, நிகழ்வுகளைக் குறித்து பிரசங்கத்தில் பேசுகிறீர்களோ, அதே அளவுக்குப் புதிய ஏற்பாட்டில் குமாரன் மூலமாக வெளிப்படுத்தப்பட்ட சத்தியங்களை சமநிலையோடு பிரசங்கிக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம். “When you combine these three words — Better, Perfect, and Eternal — we can discover the better and eternal blessings and a perfect standing before God.” – W. W. Wiersbe விசுவாசிகளின் தேவைகளை உணர்ந்தவனாக இந்தக் கட்டுரையை எழுதுகிறேன், யாரையும் மனம் புண்படும்படியாக அல்ல.

பார்வோனை வீழ்த்திய குழந்தையின் கண்ணீர்

உங்கள் சிந்தனைக்கு: பார்வோனை வீழ்த்திய குழந்தையின் கண்ணீர் பார்வோன் யூதர்களை அழிக்க எந்த ஆயுதத்தைப் பயன்படுத்த முயற்சி செய்தானோ, அதே ஆயுதத்தால் அவன் விழுந்தான். சாத்தான் கையில் எடுத்த ஆயுதத்தைக் கொண்டு தான் கர்த்தர் அவனைத் தோற்கடித்தார். யூதக் குலத்தை முற்றிலும் அழிக்க, கருவறுக்கப் பிறந்த ஆண் குழந்தைகளைப் பார்வோன் கொன்று குவித்தான். ஆனால், அவனுடைய உத்தரவைத் தவிர்த்து உயிர் வாழ்ந்த ஒரு குழந்தையின் மூலமாகவே பார்வோன் வீழ்ந்தான். மோசேயின் குழந்தைப் பருவத்தில் நடந்த அனைத்தும் தேவனுடைய முன்கூட்டிய திட்டங்களின் பகுதிகளே. நைல் நதி ஓரத்தில் நாணற் பெட்டியில் கிடந்த அந்தக் குழந்தையைப் பார்வோனின் குமாரத்தி கண்டாள். குழந்தை அழுதது. அந்த அழுகையின் மீது இரக்கம் கொண்டு பார்வோனின் குமாரத்தி குழந்தையை வளர்ப்பதற்காக, மோசேயின் அக்காவின் வழியாக, மோசேயின் தாயையே தாதியாக வைத்தாள். பின்னர், வளர்ந்த பிறகு, தாதியாக இருந்த தாயால் அந்தக் குழந்தை பார்வோனின் அரண்மனையில் ஒப்படைக்கப்பட்டது. அங்கு மோசே சகல கலைகளையும் கற்றுக் கொண்டான். இவை எதுவும் தற்செயலாக நடந்தவை அல்ல. அனைத்தும் தேவன் முன்குறித்த நிகழ்வுகளே. அந்தக் குழந்தை அன்றைக்கு அழாமல் இருந்திருந்தால், பார்வோனின் குமாரத்தி அதை வளர்த்திருக்க மாட்டாள். அந்தச் சிறு குழந்தையின் அழுகைதான் பார்வோனை வீழ்த்தியது. ஒரு சிறு காரியத்தின் மூலம் தேவன் ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை வீழ்த்தினார். உலகில் அற்பமான, புறக்கணிக்கப்பட்ட, எளிமையான மனிதர்களைத் தேவன் பயன்படுத்தி பெரிய காரியங்களைச் செய்யும் விதத்தைப் போலவே, அந்த மூன்று மாத குழந்தையின் அழுகையையும் கர்த்தர் ஒரு கருவியாகக் கொண்டார். அவர் யோசனையில் பெரியவர். தேவனால் தெரிந்து கொள்ள பட்டவனுடைய வாழ்க்கையில் எந்த நிகழ்வும் தற்செயலான காரியங்கள் அல்ல. நாமும் நம்முடைய வாழ்க்கையில் தேவன் அனுமதிக்கும் எந்தக் காரியங்களையும் அலட்சியம் செய்யக் கூடாது. அவைகள் பல நேரங்களில் தேவனுடைய நீண்ட கால திட்டங்களாகக் கூட இருக்கலாம் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. மூலக் கருத்து: W.W. Wiersbe அவர்களின் விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. Ezekiel Shanmugavel

Fresh Perspective on the Epistle to the Hebrews

Just for your thoughts: A Fresh Perspective on the Epistle to the Hebrews Introduction The Epistle to the Hebrews is a crucial book that every preacher who heavily emphasizes Old Testament events must deeply meditate upon. Even Martin Luther, in his early days, struggled to accept it as divinely inspired. However, without this book, many important Old Testament terms—such as altar, temple of Jerusalem, priesthood, sacrifices, and high priest—would remain unclear without the illuminating light of the New Testament. The Role of Hebrews This epistle stands as a strong bridge between the Old and New Testaments. It was specifically written to encourage Jewish Christians who, after accepting Christ, faced persecution and began doubting whether the Gospel they had embraced was truly right. The author demonstrates how Jesus Christ is superior to Judaism and the Old Covenant. Today, this same message is incredibly relevant. In many contemporary churches, sermons often focus 90% on the Old Testament. Preachers must turn to Hebrews to recognize and preach the supremacy of the New Covenant. The Necessity for Modern Preachers Hebrews is a deeply spiritual epistle and is absolutely essential for today's preachers, because: It clarifies that the revelations given through the Son are better, eternal, and perfect. It provides vitaJust for your thoughts: A Fresh Perspective on the Epistle to the Hebrews Introduction The Epistle to the Hebrews is a crucial book that every preacher who heavily emphasizes Old Testament events must deeply meditate upon. Even Martin Luther, in his early days, struggled to accept it as divinely inspired. However, without this book, many important Old Testament terms—such as altar, temple of Jerusalem, priesthood, sacrifices, and high priest—would remain unclear without the illuminating light of the New Testament. The Role of Hebrews This epistle stands as a strong bridge between the Old and New Testaments. It was specifically written to encourage Jewish Christians who, after accepting Christ, faced persecution and began doubting whether the Gospel they had embraced was truly right. The author demonstrates how Jesus Christ is superior to Judaism and the Old Covenant. Today, this same message is incredibly relevant. In many contemporary churches, sermons often focus 90% on the Old Testament. Preachers must turn to Hebrews to recognize and preach the supremacy of the New Covenant. The Necessity for Modern Preachers Hebrews is a deeply spiritual epistle and is absolutely essential for today's preachers, because: It clarifies that the revelations given through the Son are better, eternal, and perfect. It provides vital context to understand Old Testament practices in the light of New Testament truths. It emphasizes that Jesus Christ is not only a continuation but the fulfillment and perfection of God's plan. It is a better revelation. It is a revelation of eternal things. It is the perfect revelation. A Critical Observation In most churches today, preachers frequently speak about figures such as Abraham, David, Daniel, and Joseph. However, it is rare to hear teachings about Paul, Peter, John, Barnabas, or their writings. Even the largest churches and most celebrated preachers often remain within the framework of the Old Testament. This pattern must change. We are called to focus more on the last days' messages and revelations delivered through Jesus Christ, as Hebrews highlights. Those who preach Old Testament events must also reveal how those events point to the truths found in the New Testament. Unfortunately, many sermons fail to make this essential connection. Key Teachings from Hebrews Hebrews clearly explains the priesthood of all believers. Only by understanding the change in priesthood (from the Levitical to the Melchizedekian priesthood through Christ) can believers be truly guided into the light of the New Covenant. Sadly, while many focus only on Hebrews chapters 11 and 12, the first nine chapters, which contain profound spiritual truths, are often neglected. A Balanced Approach I am not saying we should stop meditating on the Old Testament. Rather, just as we preach Old Testament truths, we must equally emphasize the truths revealed through the Son in the New Testament. As Warren Wiersbe beautifully said: "When you combine these three words—Better, Perfect, and Eternal—you can discover the better and eternal blessings and gain a perfect standing before God." Conclusion I write this article not to offend, but to meet the genuine spiritual needs of believers. It is a heartfelt call for preachers and teachers to recognize and proclaim the superiority of the New Covenant, and to lead the Church to grow in the fullness of the Gospel revealed through Jesus Christ. Ezekiel Shanmugavell context to understand Old Testament practices in the light of New Testament truths. It emphasizes that Jesus Christ is not only a continuation but the fulfillment and perfection of God's plan. It is a better revelation. It is a revelation of eternal things. It is the perfect revelation. A Critical Observation In most churches today, preachers frequently speak about figures such as Abraham, David, Daniel, and Joseph. However, it is rare to hear teachings about Paul, Peter, John, Barnabas, or their writings. Even the largest churches and most celebrated preachers often remain within the framework of the Old Testament. This pattern must change. We are called to focus more on the last days' messages and revelations delivered through Jesus Christ, as Hebrews highlights. Those who preach Old Testament events must also reveal how those events point to the truths found in the New Testament. Unfortunately, many sermons fail to make this essential connection. Key Teachings from Hebrews Hebrews clearly explains the priesthood of all believers. Only by understanding the change in priesthood (from the Levitical to the Melchizedekian priesthood through Christ) can believers be truly guided into the light of the New Covenant. Sadly, while many focus only on Hebrews chapters 11 and 12, the first nine chapters, which contain profound spiritual truths, are often neglected. A Balanced Approach I am not saying we should stop meditating on the Old Testament. Rather, just as we preach Old Testament truths, we must equally emphasize the truths revealed through the Son in the New Testament. As Warren Wiersbe beautifully said: "When you combine these three words—Better, Perfect, and Eternal—you can discover the better and eternal blessings and gain a perfect standing before God." Conclusion I write this article not to offend, but to meet the genuine spiritual needs of believers. It is a heartfelt call for preachers and teachers to recognize and proclaim the superiority of the New Covenant, and to lead the Church to grow in the fullness of the Gospel revealed through Jesus Christ. Ezekiel Shanmugavel

Fresh Perspective on the Epistle to the Hebrews

Just for your thoughts: A Fresh Perspective on the Epistle to the Hebrews Introduction The Epistle to the Hebrews is a crucial book that every preacher who heavily emphasizes Old Testament events must deeply meditate upon. Even Martin Luther, in his early days, struggled to accept it as divinely inspired. However, without this book, many important Old Testament terms—such as altar, temple of Jerusalem, priesthood, sacrifices, and high priest—would remain unclear without the illuminating light of the New Testament. The Role of Hebrews This epistle stands as a strong bridge between the Old and New Testaments. It was specifically written to encourage Jewish Christians who, after accepting Christ, faced persecution and began doubting whether the Gospel they had embraced was truly right. The author demonstrates how Jesus Christ is superior to Judaism and the Old Covenant. Today, this same message is incredibly relevant. In many contemporary churches, sermons often focus 90% on the Old Testament. Preachers must turn to Hebrews to recognize and preach the supremacy of the New Covenant. The Necessity for Modern Preachers Hebrews is a deeply spiritual epistle and is absolutely essential for today's preachers, because: It clarifies that the revelations given through the Son are better, eternal, and perfect. It provides vitaJust for your thoughts: A Fresh Perspective on the Epistle to the Hebrews Introduction The Epistle to the Hebrews is a crucial book that every preacher who heavily emphasizes Old Testament events must deeply meditate upon. Even Martin Luther, in his early days, struggled to accept it as divinely inspired. However, without this book, many important Old Testament terms—such as altar, temple of Jerusalem, priesthood, sacrifices, and high priest—would remain unclear without the illuminating light of the New Testament. The Role of Hebrews This epistle stands as a strong bridge between the Old and New Testaments. It was specifically written to encourage Jewish Christians who, after accepting Christ, faced persecution and began doubting whether the Gospel they had embraced was truly right. The author demonstrates how Jesus Christ is superior to Judaism and the Old Covenant. Today, this same message is incredibly relevant. In many contemporary churches, sermons often focus 90% on the Old Testament. Preachers must turn to Hebrews to recognize and preach the supremacy of the New Covenant. The Necessity for Modern Preachers Hebrews is a deeply spiritual epistle and is absolutely essential for today's preachers, because: It clarifies that the revelations given through the Son are better, eternal, and perfect. It provides vital context to understand Old Testament practices in the light of New Testament truths. It emphasizes that Jesus Christ is not only a continuation but the fulfillment and perfection of God's plan. It is a better revelation. It is a revelation of eternal things. It is the perfect revelation. A Critical Observation In most churches today, preachers frequently speak about figures such as Abraham, David, Daniel, and Joseph. However, it is rare to hear teachings about Paul, Peter, John, Barnabas, or their writings. Even the largest churches and most celebrated preachers often remain within the framework of the Old Testament. This pattern must change. We are called to focus more on the last days' messages and revelations delivered through Jesus Christ, as Hebrews highlights. Those who preach Old Testament events must also reveal how those events point to the truths found in the New Testament. Unfortunately, many sermons fail to make this essential connection. Key Teachings from Hebrews Hebrews clearly explains the priesthood of all believers. Only by understanding the change in priesthood (from the Levitical to the Melchizedekian priesthood through Christ) can believers be truly guided into the light of the New Covenant. Sadly, while many focus only on Hebrews chapters 11 and 12, the first nine chapters, which contain profound spiritual truths, are often neglected. A Balanced Approach I am not saying we should stop meditating on the Old Testament. Rather, just as we preach Old Testament truths, we must equally emphasize the truths revealed through the Son in the New Testament. As Warren Wiersbe beautifully said: "When you combine these three words—Better, Perfect, and Eternal—you can discover the better and eternal blessings and gain a perfect standing before God." Conclusion I write this article not to offend, but to meet the genuine spiritual needs of believers. It is a heartfelt call for preachers and teachers to recognize and proclaim the superiority of the New Covenant, and to lead the Church to grow in the fullness of the Gospel revealed through Jesus Christ. Ezekiel Shanmugavell context to understand Old Testament practices in the light of New Testament truths. It emphasizes that Jesus Christ is not only a continuation but the fulfillment and perfection of God's plan. It is a better revelation. It is a revelation of eternal things. It is the perfect revelation. A Critical Observation In most churches today, preachers frequently speak about figures such as Abraham, David, Daniel, and Joseph. However, it is rare to hear teachings about Paul, Peter, John, Barnabas, or their writings. Even the largest churches and most celebrated preachers often remain within the framework of the Old Testament. This pattern must change. We are called to focus more on the last days' messages and revelations delivered through Jesus Christ, as Hebrews highlights. Those who preach Old Testament events must also reveal how those events point to the truths found in the New Testament. Unfortunately, many sermons fail to make this essential connection. Key Teachings from Hebrews Hebrews clearly explains the priesthood of all believers. Only by understanding the change in priesthood (from the Levitical to the Melchizedekian priesthood through Christ) can believers be truly guided into the light of the New Covenant. Sadly, while many focus only on Hebrews chapters 11 and 12, the first nine chapters, which contain profound spiritual truths, are often neglected. A Balanced Approach I am not saying we should stop meditating on the Old Testament. Rather, just as we preach Old Testament truths, we must equally emphasize the truths revealed through the Son in the New Testament. As Warren Wiersbe beautifully said: "When you combine these three words—Better, Perfect, and Eternal—you can discover the better and eternal blessings and gain a perfect standing before God." Conclusion I write this article not to offend, but to meet the genuine spiritual needs of believers. It is a heartfelt call for preachers and teachers to recognize and proclaim the superiority of the New Covenant, and to lead the Church to grow in the fullness of the Gospel revealed through Jesus Christ. Ezekiel Shanmugavel

எபிரேயருக்கெழுதிய நிருபம் – ஒரு பார்வை

உங்கள் சிந்தனைக்கு: எபிரேயருக்கெழுதிய நிருபம் – ஒரு பார்வை பிரசங்கத்தில் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட நிகழ்வுகளையே அதிகமாக முக்கியப்படுத்தும் போதகர்கள் தியானிக்க வேண்டிய நூல் இது. மார்ட்டின் லூதர் கூட இந்த புத்தகத்தை ஆரம்பத்தில் தேவனால் அங்கீகரிக்கப்பட்ட வார்த்தையாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இந்த புத்தகம் எழுதப்படாமல் இருந்திருக்குமானால், பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டிருக்கும் பல பதங்களுக்கு புதிய ஏற்பாட்டின் வெளிச்சத்தில் அர்த்தம் தெரியாமல் இருந்திருக்கும். குறிப்பாக பலிபீடம், எருசலேம் தேவாலயம், ஆசாரியத்துவம், பலிகள், பிரதான ஆசாரியன் போன்ற வார்த்தைகளுக்கு இந்த மடலில்தான் சரியான ஆவிக்குரிய அர்த்தத்தை கண்டுகொள்ள முடியும். இந்த மடல் பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் இணைக்கும் ஒரு பாலம். இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பிறகு யூதர்களுடைய உபத்திரவத்தினால் இடறல் அடைந்து, தாங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷம் சரியானதுதானா என்ற கேள்வியோடு உள்ள யூதர்களுக்கு, இயேசு கிறிஸ்து எப்படி யூத மார்க்கத்தைவிட, பழைய பிரமாணங்களைவிட மேன்மையானவர் என்பதை விவரிப்பதற்காக எழுதப்பட்டதுதான் இந்த நிருபம். இந்த நிகழ்வோடு தற்போதைய சூழ்நிலையை ஒப்பிட்டு இதை தியானிக்கலாம். இந்த கால சூழ்நிலையில், பிரசங்கத்தில் 90% பழைய ஏற்பாட்டு நிகழ்வுகளையே பேசும் போதகர்கள், பிரசங்கிகளுக்கு புதிய ஏற்பாட்டின் மேன்மையை அறிய இந்த நூல் அவசியம். இது ஒரு சிறந்த ஆவிக்குரிய மடல். ஆதி திருச்சபை கிறிஸ்தவர்களுக்கு, தாங்கள் ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவம் மேன்மையானதுதானா என்ற சந்தேகத்தை போக்க எழுதப்பட்டது. ஆனால் இன்றோ, பழைய ஏற்பாட்டை சுற்றியே பேசக்கூடிய, எழுதக்கூடிய போதகருக்கு – பங்கு பங்காக பல்வேறு நிலைகளில் சொல்லப்பட்ட வெளிப்பாடுகளைவிட, குமாரன் மூலம் வெளிப்படுத்தப்பட்டவை – இந்த கடைசி கால, புதிய ஏற்பாட்டு சத்தியங்கள் எவ்வளவு மேலானது, நித்தியமானது, பூரணமானது என்பதை உணர்ந்து கொள்ள இந்த நூல் அவசியமாக தியானிக்கப்பட வேண்டிய மடல். It is a better revelation. It is of eternal things. It is perfect revelation. எந்த பிரசங்கமானாலும் ஆபிரகாமைப் பற்றியும் தாவீதைப் பற்றியும் தானியேலைப் பற்றியும் யோசேப்பைப் பற்றியும் பேசுகின்ற போதகருக்கு, பவுலைப் பற்றியோ, பவுலின் மடல்களைப் பற்றியோ, பேதுருவைப் பற்றியோ, யோவானைப் பற்றியோ, பர்னபாவைப் பற்றியோ பேசுவது அரிதாகிவிட்டது. இந்தக் குற்றச்சாட்டுக்கு எவ்வளவு பெரிய சபைகளும், எவ்வளவு பெரிய போதகர்களும் தப்பிக்க முடியாது. மிகப்பெரிய சபைகளில் கூட, மிகப்பெரிய போதகர் கூட தங்கள் பிரசங்கங்களில் பழைய ஏற்பாட்டை சுற்றியே வருவார்கள். புதிய ஏற்பாட்டின் சுவிசேஷங்களுக்கோ, அப்போஸ்தலர் நடப்படிகள் புத்தகத்திற்கோ, கடிதங்களுக்கோ எட்டிப் பார்ப்பது கூட அரிதான காரியமாக உள்ளது. குமாரன் மூலம் உரைக்கப்பட்ட இந்த கடைசி கால செய்திகளை, வெளிப்பாடுகளை அதிகமாக தியானிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். பழைய ஏற்பாட்டின் நிகழ்வுகளை போதிக்கிறவர்கள், அந்த சம்பவங்கள் எப்படி புதிய ஏற்பாட்டு சத்தியத்தோடு தொடர்புடையது என்பதையும் போதிக்க வேண்டும். அதுதான் என் சபையில் காணப்படவில்லை. இந்த நூல் விசுவாசிகளின் ஆசாரியத்துவத்தை மிக தெளிவாக குறிப்பிடுகிறது. ஆசாரியத்துவ மாற்றத்தை நாம் நன்கு புரிந்து கொண்டால்தான் விசுவாசிகளை உண்மையான புதிய ஏற்பாட்டின் வெளிச்சத்திற்குள் வளர்க்க முடியும். இந்த கடிதத்தில் உள்ள 11வது மற்றும் 12வது அதிகாரத்தை மாத்திரம் அதிகம் தியானிக்கும் போதகர்கள், இதில் உள்ள முதல் ஒன்பது அதிகாரத்தில் உள்ள ஆவிக்குரிய உண்மைகளை அதிகமாக பேசுவதில்லை. இதற்காக நான் பழைய ஏற்பாட்டை பற்றி தியானிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை; ஆனால், எந்த அளவுக்கு பழைய ஏற்பாட்டு சத்தியங்களை, நிகழ்வுகளை குறித்து பிரசங்கத்தில் பேசுகிறீர்களோ, அதே அளவுக்கு புதிய ஏற்பாட்டில் குமாரன் மூலமாக வெளிப்படுத்தப்பட்ட சத்தியங்களை சமநிலையோடு பிரசங்கிக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம். “When you combine these three words — Better, Perfect, and Eternal — we can discover the better and eternal blessings and a perfect standing before God.” – W. W. Wiersbe விசுவாசிகளின் தேவைகளை உணர்ந்தவனாக இந்த கட்டுரையை எழுதுகிறேன், யாரையும் மனம் புண்படும்படியாக அல்ல. – Ezekiel Shanmugavel

பழைய ஏற்பாட்டை எப்படி தியானிக்க வேண்டும்?

உங்கள் சிந்தனைக்கு: பழைய ஏற்பாட்டை எப்படி தியானிக்க வேண்டும்? பழைய ஏற்பாட்டை நாம் தியானிப்பதற்கும், புதிய ஏற்பாட்டை தியானிப்பதற்கும் ஒரு மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது என்று நான் கருதுகிறேன். புதிய ஏற்பாட்டின் எழுத்துக்கள் அனைத்தும் இயேசு கிறிஸ்துவின் பாடுகள் மற்றும் மரணத்துடன் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதால், விசுவாசிகளாகிய நமக்கு அவற்றைப் புரிந்து கொள்வதற்குத் தேவனுடைய வெளிச்சம் ஓரளவுக்கு இருந்தாலே போதும். ஆனால், பழைய ஏற்பாட்டைப் பொருத்தவரை, அதில் சொல்லப்பட்ட காரியங்களை வெறும் சரித்திர நிகழ்வுகளாக, கதையாகப் படிப்பதால் நமக்கு எந்த ஆவிக்குரிய பயனும் கிடையாது. அதாவது, அந்த நிகழ்வுகளைப் பற்றிப் பொது அறிவை பெறவேண்டும், அதில் உள்ள ஆறுதலான வசனங்களை எடுத்துக் கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே படித்தால்கூட, தேவன் அவற்றை எழுதி வைத்திருக்கும் உண்மையான நோக்கத்தை நாம் புரிந்து கொள்ள முடியாது. பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்ட பல நிகழ்வுகளுக்கும் ஆழமான ஆவிக்குரிய அர்த்தம், பார்வை உள்ளது. அவை நமக்கு உணர்த்தும் ஆவிக்குரிய செய்திகளை, நம்முடைய இன்றைய வாழ்க்கையோடு இணைத்து நோக்க வேண்டும். அப்போதுதான், ஆவியானவர் அவற்றை எழுதிக் கொடுத்த நோக்கம் நமக்குள் நிறைவேறும். ஒரு கட்டுப்பாட்டோடு—ஒரு நாளைக்கு இவ்வளவு அதிகாரம் படிக்கவேண்டும் என்ற கடமையுணர்வோடு பழைய ஏற்பாட்டை படித்தால், அந்த நிகழ்வுகள் மூலம் தேவன் நமக்கு சொல்ல விரும்பும் சத்தியங்கள் நம்முடைய கண்களுக்கு மறைந்துவிடும். இது தான் பல விசுவாசிகளின் வாழ்க்கையில் நடக்கிறது. தேவன் எந்த நிகழ்வையும் நோக்கமின்றி தவறுதலாக எழுதி வைத்திருக்க மாட்டார். அவைகளைப் படிக்கும்போது, புதிய ஏற்பாட்டுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அந்த சரித்திர நிகழ்வுகள் நமக்கு கொடுக்கும் எச்சரிக்கை என்ன? அறிவுரை என்ன? ஆறுதல் என்ன? என்பதை நம் உள்ளத்தில் உணர்ந்துகொள்ள வேண்டும். அப்படித் தியானித்தால்தான், பழைய ஏற்பாட்டை தேவன் எழுதி வைத்த நோக்கம் நம் வாழ்க்கையில் நிறைவேறும். வெறும் கதைகளைப் போலப் படித்தால், நமக்கு எந்த ஆவிக்குரிய பயனும் கிடையாது. புதிய ஏற்பாட்டை நாம் கவனமாக, ஆர்வத்துடன் படிப்பது போலவே, பழைய ஏற்பாட்டையும் ஏனோ தானோ என்று இல்லாமல், ஆழமான அக்கறையோடு, கவனத்தோடு, பல்வேறு வேத விளக்கவுரைகளோடு ஒப்பிட்டு, "இந்த நிகழ்வு எனக்கு என்ன சொல்கிறது?" என்ற எண்ணத்துடன் படிக்க வேண்டும். பழைய ஏற்பாட்டை இந்த எண்ணத்தோடு தியானிக்கும் போது மட்டுமே, அது நமக்கு பயனுள்ளதாக இருக்கும். இல்லையெனில், வெறும் ஆறுதலான வசனங்களை மட்டும் தேர்ந்தெடுத்து பயன்படுத்திக் !, நாம் “திருப்பிப் போடாத அப்பம்” போல ஆகிவிடுவோம். இறுதியாக ஒரு வேண்டுகோ ள்: அன்பு சகோதரர்களே, பழைய ஏற்பாட்டை ஒரு கதையாகவோ, நிகழ்வாகவோ மட்டும் படிக்க வேண்டாம். அவைகளை புதிய ஏற்பாட்டுடன் ஒப்பிட்டு, இன்றைய நம்முடைய வாழ்க்கையையும் பார்த்து, பழைய ஏற்பாட்டு வீரர்கள் நமக்காக என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை கண்டு கொள்ளுங்கள். Ezekiel Shanmugavel

Bible is the living word

பரிசுத்த வேதாகமம் என்பது தேவனுடைய வார்த்தைகளாக பாதுகாக்கப்பட்ட பழமையான ஆவணங்கள் அல்ல. அது ஜீவனுள்ள (உயிருள்ள) தேவனிடமிருந்து, உயிருள்ள மனிதர்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட ஜீவனுள்ள வார்த்தையாகும். அந்த வார்த்தை எல்லா காலத்திற்கும் பொதுவானது. It is a living word to living people from the living God.

1 kings . Bible lesson 21

Just for your thoughts: 1 Kings, Bible Lesson 22: A great punishment God gives to a disobedient man is this — He allows him to go his own way. This is something Bible scholar Wiersbe would often write. This is exactly what happened in the life of Jeroboam. God appointed a man with no background or special talent as the leader of Israel. He took the kingship away from the family of David and gave it to Jeroboam. But Jeroboam did not obey God’s commands or laws (1 Kings 14:7–8). Right from the beginning, God warned him — through an ordinary man of God whose name was not even mentioned. Just as that man of God said, the altar split apart, and ashes poured out. When the king stretched out his hand, it shriveled and became stiff, unable to return to its former position. Only when the man of God prayed to the Lord did the king’s hand return to normal. Even after witnessing such great miracles, Jeroboam did not repent or walk in the ways of the Lord. Instead, he hardened his heart and disregarded God’s warning. He failed to appoint godly men to positions of leadership and instead appointed priests for the high places from among all kinds of people. Anyone who wanted to become a priest was consecrated for service. The Bible mentions Jeroboam’s sins in 22 places. It is very rare for someone’s sins to be recorded this many times — it shows that there was no one quite like him. Because Jeroboam ignored God’s warnings, God let him go down the path he chose. As a result, his son died. That wasn’t the end — another son, Nadab, became king of the nation and was murdered by Baasha within two years (1 Kings 15:25–31). The life of Jeroboam stands as a serious warning for us: "He who is often rebuked and hardens his neck will suddenly be destroyed, and that without remedy.” — Proverbs 29:1 Ezekiel Shanmugavel

Bible is the living word

பரிசுத்த வேதாகமம் என்பது தேவனுடைய வார்த்தைகளாக பாதுகாக்கப்பட்ட பழமையான ஆவணங்கள் அல்ல. அது ஜீவனுள்ள (உயிருள்ள) தேவனிடமிருந்து, உயிருள்ள மனிதர்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட ஜீவனுள்ள வார்த்தையாகும். அந்த வார்த்தை எல்லா காலத்திற்கும் பொதுவானது. It is a living word to living people from the living God.

1 அரசர்கள் புத்தகம், வேதப் பாடம் 22:

: உங்கள் சிந்தனைக்கு: 1 அரசர்கள் புத்தகம், வேதப் பாடம் 22: கீழ்ப்படியாத ஒரு மனிதனுக்குக் கடவுள் தரும் மிகப்பெரிய தண்டனை என்னவென்றால் — அவனை அவன் விரும்பிய வழியிலே செல்ல அனுமதிப்பதுதான் என்று வியர்ஸ்பி எனும் ஒரு வேத பண்டிதர் அடிக்கடி எழுதுவார். இது தான் யெரொபெயாமின் வாழ்க்கையில் நடந்தது. அறிமுகமில்லாத, எந்த திறமையும் இல்லாத ஒருவனை இஸ்ரவேலருக்குத் தலைவனாக கடவுள் நியமித்தார். தாவீதின் குடும்பத்திலிருந்து அரசாட்சியைப் பிரித்தெடுத்து, அவனுக்குக் கொடுத்தார். ஆனால் யெரொபெயாம் கடவுளின் கட்டளைகளையும் சட்டங்களையும் கைக்கொள்ளவில்லை. (1 இராஜாக்கள் 14:7-8) கடவுள் ஆரம்பத்திலேயே அவனை எச்சரித்தார் — சாதாரண மனிதனைக் கொண்டு. அந்தப் பெயர் குறிப்பிடாத தேவமனிதன் சொன்னபடி, பலிபீடம் இரண்டாகப் பிளந்தது, சாம்பல் கொட்டப்பட்டது. மன்னன் கை நீட்டியபோது, அவனது கை உறைந்து திரும்ப முடியாதபடி மடங்கியது. அந்த தேவமனிதன் கர்த்தரிடம் மீண்டும் வேண்டியபோது, அவனது கை பழைய நிலைக்குத் திரும்பியது. இந்த மிகப்பெரிய அதிசயங்களைப் பார்த்தபிறகாவது அவன் மனம் மாறி, கர்த்தருடைய வழிகளில் நடக்கத் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் அவன் கடவுளின் எச்சரிப்பை பொருட்படுத்தவில்லை; இருதயத்தை கடினமாக்கினான். அதிலேயே மாறாது, கடவுளுக்கு பிரியமானவர்களை பதவிகளில் நியமிக்காமல், எல்லா விதமான மனிதர்களில் இருந்து வழிபாட்டு மேடைகளுக்குப் பூசாரிகளை நியமித்தான். பூசாரியாக வர விரும்பும் எவனையும் அங்கே வேலை செய்ய அர்ப்பணித்தான். அவனுடைய பாவங்களைப் பற்றி 22 இடங்களில் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வளவு முறை ஒருவனுடைய பாவங்களைப் பற்றி கூறப்படுவது என்பது மிகவும் அபூர்வம். இது அவனைப் போல வேறு யாரும் இல்லை என்பதைக் காட்டுகிறது. எச்சரிப்பை பொருட்படுத்தாத அவனை, கடவுள் அவன் விரும்பிய வழியில் செல்ல அனுமதித்தார். விளைவாக, அவனுடைய மகன் மரித்தான். அதில் முடிவில்லை — இன்னொரு மகன் நாதாப், தேசத்தின் அரசனாகி, இரண்டு வருடங்களிலேயே பாஷா என்பவனால் கொலை செய்யப்பட்டான் (1 இராஜாக்கள் 15:25-31). யெரொபெயாமின் வாழ்க்கை நமக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கை: "அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன், சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்." — நீதிமொழிகள் 29:1

1 அரசர்கள் புத்தகம் – வேதப்பாடம் 21

1 அரசர்கள் புத்தகம் – வேதப்பாடம் 21 பெயர் சொல்லப்படாத தேவனுடைய மனிதனிடம் இருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள் 1. இஸ்ரவேல் ராஜ்யத்தின் அரசனான யெரொபெயாமை நேரடியாக தைரியமாக கர்த்தருடைய வார்த்தையை சொல்லி எச்சரித்த அந்த பெயர் தெரியாத தேவ மனிதன், சாதாரணமான ஒருவராக இருந்தாலும், தேவனால் வலிமை பெற்றவர். அவன் மன்னனை எச்சரித்து தீர்க்கதரிசனம் கூறினான், அவன் சொன்னபடி பலிபீடம் இரண்டாக பிளந்தது, சாம்பல் கொட்டப்பட்டது, மன்னன் கை நீட்டிய போது, அவன் கை மடங்கி திரும்ப முடியாதபடி உறைந்தது, தேவ மனிதன் கர்த்தரிடம் மீண்டும் வேண்டியபோது, அந்த கை பழைய நிலைக்கு திரும்பியது. இந்த ஒரு நாளில் தேவன் அவனை புகழின் உச்சிக்கு எடுத்துச் சென்றார். இந்த மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அவன் இன்னும் விழிப்புடன் இருந்திருக்க வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால், யெரொபெயாமின் எதிர்ப்பை எதிர்கொண்ட இந்த தேவ மனிதன், வயதான போலித் தீர்க்கதரிசியின் பொய்யை நம்பி தவறு செய்தான். "This man could not be deceived by a wicked king, but could be fooled by a retired old prophet." – Wiersbe நம்மில் பலர் கர்ஜிக்கும் சிங்கத்தை (நேரடி அபாயங்களை) வெல்லக்கூடியவர்கள். ஆனால் வஞ்சகமான சர்ப்பத்தின் (நுணுக்கமான சதிகள்) கண்ணியில் விழக்கூடியவர்களாக இருக்கிறோம். 2. இந்த தேவ மனிதன் தன்னுடைய கீழ்ப்படியாமையினால் மரணத்தை சந்தித்தான். அவன் உரைத்த தீர்க்கதரிசனம் நூறு சதவீதம் தேவனுடைய வார்த்தைதான். ஆனால் அவனுடைய நடத்தை தேவனுக்கு பிரியமானதாக இருக்கவில்லை. இன்றைக்கு பல தீர்க்கதரிசிகள் மற்றும் போதகர்கள் கர்த்தருடைய வார்த்தைகளை நன்றாக போதிக்கலாம். ஆனால், அவர்கள் வாழ்க்கை தேவனுக்குப் பிரியமில்லாததாக இருந்தால், தேவன் அவர்களையும் தண்டிப்பார். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. 3. மெய்யான தேவனுடைய மனிதர்களையே அவர்களுடைய தவறுகளுக்காக தேவன் தண்டிக்கும்போது, போலியான தீர்க்கதரிசிகள் தேவனுடைய நியாய தீர்ப்பிலிருந்து எப்படி தப்பிக்க முடியும்? “நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்? 1 பேதுரு 4:18 ஆவிக்குரிய வாழ்க்கையில் வெற்றி பெற நாம் எவ்வளவு விழிப்புடன் இருக்க வேண்டுமோ, அதைவிட அதிக விழிப்புடன் வெற்றிக்கு பிறகும் இருக்க வேண்டியது நம்முடைய கடமை. இந்த விழிப்பையும் கிருபையையும் நம்முடைய வாலிபர்களுக்கும் கர்த்தர் அருள்வாராக.

உங்கள் சிந்தனைக்கு :

உங்கள் சிந்தனைக்கு : விசுவாசிகளைத் தேவனை நேரடியாக நெருங்க விடமால் தடுக்கும் எந்தச் செயலும் விவாசிகளுடைய ஆசாரியத்துவத்தை மறுதலிப்பதாகும்

1. அரசர்கள் புத்தகம் – வேதப் பாடம் 20

உங்கள் சிந்தனைக்கு: 1. அரசர்கள் புத்தகம் – வேதப் பாடம் 20 ஒருமைப் பட்ட யூத தேசம் இரண்டாகப் பிளந்தபோது, பத்து கோத்திரங்களை உடைய இஸ்ரவேல் அரசாங்கத்தின் முதல் மன்னனாக யெரொபெயாம் முடிசூட்டப்பட்டான். ஆனால், அவனுடைய ராஜ்யத்தின் கட்டுப்பாட்டில் எருசலேம் நகரம் இல்லை. எனவே, தன் கீழ் உள்ள மக்கள் எருசலேம் நகரத்திற்கு சென்று தேவனை ஆராதிக்கும்போது அங்கே ஆளும் ரெகொபெயாமுக்கு ஆதரவாகச் சென்றுவிடுவார்கள் எனப் பயந்தான். அதனால், யெரொபெயாம் இரண்டு தங்கக் கன்று குட்டிகளைச் செய்து, ஒன்றை பெத்தேலிலும் மற்றொன்றைத் தாணிலும் வைத்து மக்களை அவற்றை வழிபடச் செய்தான். மேலும், அந்த வழிபாட்டுக்கு லேவியர்கள் அல்லாதவர்களை ஆசாரியர்களாக நியமித்தான். தானும் பலிகளைச் செலுத்த பலிபீடத்திற்குப் போனான். அப்பொழுது, யெகோவாவின் வார்த்தையின்படி யூதாவிலிருந்து பெத்தேலுக்கு ஒரு தேவனுடைய மனிதன் வந்து, “பலிபீடமே, பலிபீடமே, யெகோவா சொல்வது இதுவே: தாவீதின் சந்ததியில் யோசியா என்ற பெயருள்ள ஒரு மகன் பிறப்பான். இம்மேடையில் பலிசெய்யும் பூசாரிகளை அவன் உன்மேல் பலியிடுவான். உன்மேல் மனித எலும்புகள் எரிக்கப்படும்” என்று தீர்க்கதரிசனம் சொன்னார். (1 இராஜாக்கள் 13:1–2) இது நடந்த ஒரு வரலாற்று சம்பவம். இதிலிருந்து அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய உண்மைகள்: 1. இங்கே அரசனை எதிர்த்து மிகத் தைரியமாகத் தீர்க்கதரிசனம் சொன்ன தேவ மனிதனின் பெயர் குறிப்பிடப்படவில்லை. பெயர் குறிப்பிடப்படாத ஒருவரைப் பயன்படுத்தி தேவன் ஒரு அரசனை எச்சரித்தார். அதாவது, தேவன் ஒரு உண்மையுள்ள மனிதனைப் பயன்படுத்தத் தயங்குவதில்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. அவன் பெயர் குறிப்பிடப்படாத போதிலும், அவன் சொன்ன யெகோவாவின் வார்த்தை 200 அல்லது 300 ஆண்டுகள் கழித்து நிறைவேறியது என்றால், அந்தத் தீர்க்கதரிசனத்தின் வல்லமை எவ்வளவு பெரிது என்பதை உணரலாம். இந்த இடத்தில் அவன் ஒரு நபரின் பெயரைக் தீர்க்கதரிசனமாகக் குறிப்பிட்டான்– யோசியா. அவன் யூத தேசத்திலிருந்து எழுவான் என்று தீர்க்கதரிசனம் கூறப்பட்டது. இப்படி முன்கூட்டியே பெயர் சொல்லப்பட்டு தீர்க்கதரிசனம் செய்யப்பட்ட மற்றொரு நபர் கோரேசு மன்னன் – (ஏசாயா 44:28) 2. இந்தப் பெயர் குறிப்பிடப்படாத தேவ மனிதன் சொன்ன தீர்க்கதரிசனம் 200 அல்லது 300 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேறியது. (வியர்சிபி மற்றும் William MacDonald அவர்கள் 300 ஆண்டுகள் என்றும், Harold L. Willmington அவர்கள் 200 ஆண்டுகள் எனவும் கூறுகிறார்கள்.) இந்தத் தீர்க்கதரிசனம் 2 இராஜாக்கள் 23:15-16 வசனங்களில் நிறைவேறியது என்பதை நாம் பார்க்கலாம். ஒரு தீர்க்கதரிசனம் உண்மையாக இருக்குமெனில், அது காலம் கடந்தாலும் நிறைவேறும் என்பதை இதில் அறிந்து கொள்ளலாம். பெயர் குறிப்பிடப்படாத தீர்க்கதரிசி ஒரு சாதாரண மனிதனாக இருந்தாலும், தேவன் அவனைப் பயன்படுத்தினார். நாமும் புதிய ஏற்பாட்டில் தேவனால் தீர்க்கதரிசிகள் என்று அழைக்கப்பட்டுள்ளோம். நாம் உண்மையுடன், வசனத்தின் படி நடக்கும்போது, தேவன் நம்மை நன்மைக்காகவும், சபைகளில் நடக்கும் தவறுகளை எச்சரிக்கவும் பயன்படுத்த விரும்புகிறார். அதற்காகத் தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பது – பயமற்ற, சமரசம் இல்லாத தைரியம். அந்தத் தைரியம், அந்தத் தேவ மனிதனிடம் இருந்தது. அதனால்தான் தேவன் அவரைப் பயன்படுத்தினார். Ezekiel Shanmugavel

பஞ்சத்தில் வாடிய எகிப்தியர், செழிப்பாக இருந்த யாக்கோபின் சந்ததியர்.

உங்கள் சிந்தனைக்கு : பஞ்சத்தில் வாடிய எகிப்தியர், செழிப்பாக இருந்த யாக்கோபின் சந்ததியர். எகிப்து தேசத்தில் ஏற்பட்ட ஏழு வருட பஞ்ச காலத்தில் யோசேப்பு தன் தகப்பனையும், சகோதரர்களையும் பத்திரமாகக் கோசேன் என்கிற இடத்தில் குடியேற செய்து பஞ்சத்திலிருந்து அவர்களைப் பாதுகாத்தான். அதே வேளையில் அந்த நாட்டின் பூர்வ குடிகள், அதாவது மண்ணின் மைந்தர்கள் பஞ்சத்தில் மிகவும் பாதிக்கப்பட்டார்கள். தங்கள் கையில் உள்ள பணத்தை எல்லாம் பார்வோனிடம் கொடுத்து உணவை வாங்கினார்கள். பணம் காலியானபோது ஆடு மாடுகளைக் கொடுத்து உணவை வாங்கினார்கள். அதுவும் இல்லாமல் போனபோது அவர்கள் தங்கள் நிலத்தை விற்று தானியத்தை வாங்கினார்கள். ஆனால் அதே வேளையில் யாக்கோபும் அவனுடைய பிள்ளைகளும் இந்தப் பஞ்சத்தினால் எந்தப் பாதிப்புமின்றி பாதுகாக்கப்பட்டனர். குடியேற வந்தவர்கள் பாதுகாக்கப்பட்டனர். மண்ணின் மைந்தர்கள் பாதிக்கப்பட்டனர். இதைப் பற்றி ஆதி 47 :27 ல் பார்க்கும்பொழுது "இஸ்ரவேலர் எகிப்து தேசத்தில் உள்ள கோசேன் நாட்டிலே குடியிருந்தார்கள். அங்கே நிலங்களைக் கையாட்சி செய்து, மிகவும் பலுகிப் பெருகினார்கள்." என்று மொழியாக்கம் பண்ணப்பட்டுள்ளது. நமது தமிழ் மொழிபெயர்ப்பு தவறாக உள்ளது. NLT ஆங்கில மொழிபெயர்ப்பில் Meanwhile, the people of Israel settled in the region of Goshen in Egypt. There they acquired property, and they were fruitful, and their population grew rapidly. என்று உள்ளது Meanwhile என்கிற வார்த்தை கவனிக்க வேண்டியது. "எகிப்தியர் பட்டினியாகக் கஷ்டப்பட்ட வேளையில் யூதர்கள்‌ பலுகிப் பெருகினார்கள் "என்பதுதான் உண்மையான அர்த்தம். கர்த்தருடைய சித்தத்தின் மத்தியில் நாம் வாழும்போது நமக்கு மிகப்பெரிய பாதுகாப்பு உண்டு. அந்தப் பாதுகாப்பு புறஜாதிகளிலிருந்தும் நமக்குக் கிடைக்கும். தேவனுடைய பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு தேவனுடைய பிள்ளைகளிடமிருந்து தான் வரும் என்பது சரியல்ல. கர்த்தர் யாரைக் கொண்டும் தம்முடைய பிள்ளைகளைப் பாதுகாப்பார். நேபுகாத்நேச்சார், பார்வோன், கோரேசு என்று சொல்லிக் கொண்டே போகலாம். இவர்களுடைய காலத்தில் இஸ்ரவேல் மக்கள் கடுமையான நெருக்கப்பட்ட நேரத்தில் இவர்கள் பாதுகாக்கப்பட்டார்கள். நாம் அறிந்து கொள்ளக்கூடிய காரியம் என்னவென்றால் நாம் எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடம் கர்த்தருக்கு பிரியமான இடமாக இருக்க வேண்டும். நம்முடைய விருப்பத்தின்படி இடங்களைத் தெரிந்துகொண்டு வாழும்பொழுது தேவனுடைய பாதுகாப்பு இருக்காது.தேவன் யாக்கோபுக்கு எகிப்த்துக்கு செல்ல அனுமதி கொடுத்துப் பாதுகாப்பேன் என்று வாக்குறுதி கொடுத்தார். நம்முடைய வீடு, தொழில், வேலை ,அலுவலகம் இவைகள் மத்தியில் கர்த்தருடைய மக்கள் தேவனுடைய சித்தத்தின் மத்தியில் இருக்க வேண்டும். அதுவே நமக்கு மிகப்பெரிய பாதுகாப்பு .தேவன் கானானை யாக்கோபுக்கு வாக்கு தத்தமாகக் கொடுத்திருந்தாலும் உலகெங்கும் பஞ்சம் ஏற்பட்டபோது கர்த்தர் அவர்களை எகிப்துக்கு கொண்டு சென்று அவர்களைப் பாதுகாத்து அங்குப் பலுகிப் பெருக செய்து அவர்களை ஆசீர்வதித்தார். நானூறு வருடங்கள் அவர்களை ஆசிர்வதித்தார்.நாம் இருக்கிற இடம் நம் வாழ்கின்ற இடம் தேவன் சித்தத்தில் மத்தியில் ‌இருக்கிற இடமா ? என்பதை நாம் முதலில் உறுதி செய்ய வேண்டும்.அதுவே நமக்கு மிகப்பெரிய பாதுகாப்பு. நம்முடைய தேசத்தில் கூடச் சபையாக ,இயக்கமாக, குடும்பமாக நாம் தேவனுடைய சித்தத்தின் மத்தியில் வாழும்பொழுது நம்மை எதிர்ப்பவர்கள் கூட நமக்கு உதவி செய்பவர்களாக மாறுவார்கள்.

1 அரசர்கள் புத்தகம் வேதபாடம்19

உங்கள் சிந்தனைக்கு: . 1 அரசர்கள் புத்தகம் வேதபாடம்19 "Beware of letting other believers tell you God's will for your life, "W. Wiersbe உங்களைக் குறித்த கடவுளின் சித்தத்தை மற்றவர்கள் உங்களுக்குச் சொல்வதைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். இந்தப் புத்தகத்தின் 13 வது அதிகாரத்தில் யெரொபெயாமை எச்சரித்த தேவனுடைய மனிதனை குறித்தும் அவனுடைய முடிவைக் குறித்து நாம் பார்க்கலாம். ஆரம்பத்தில் முழுமையாகத் தேவனுடைய சித்தத்தை தேவனிடத்திலிருந்து அறிந்து அதன்படி நடந்தான். யெரொபெயாமை எச்சரித்தான். அப்பொழுது அவனுக்கு எதிராக நீட்டப்பட்ட யெரொபெயாமின் கைத்திரும்ப எடுக்க முடியாதபடி மரத்துப்போயிற்று. அதை பழைய நிலைக்குக் கொண்டு வரத் தீர்க்கதரிசியை யெரொபெயாம் கேட்டுக் கொண்டபோது அவன் கடவுளிடம் மன்றாடி அவனுக்குச் சுகத்தை வாங்கி கொடுத்தான். பின்பு அந்தத் தேவனுடைய மனுஷன் கடவுளின் கட்டளைப்படி அவனுடைய வெகுமதியை வாங்க மறுத்து அவனுடன் அவனுடைய வீட்டிற்கு சென்று இளைப்பாற மறுத்து விட்டான். பின்பு தான் வந்த வழியே போகாமல் வேறு வழியே போனான். இந்த நிகழ்வுவரைக்கும் அவன் தேவன் சொன்ன கட்டளையை நிறைவேற்றினான். அதற்குப் பிறகு தான் ஒரு வயதான தீர்க்கதரிசி கடவுள் சொன்னதாகப் பொய்சொல்லி அதைக் கர்த்தருடைய வார்த்தையாக நம்ப வைத்து அவனைத் தன் வீட்டிற்கு வரவழைத்து அவனுக்கு உணவளித்தான்.. இதனிமித்தம் அவன் தேவனுடைய கட்டளையை மீறினான். தேவன் ஒரு திட்டத்தைக் கொடுத்திருக்கும்பொழுது அந்தத் திட்டத்தை மாற்றத் தேவன் நினைத்திருந்தால் அதை அவனிடமே சொல்லியிருப்பார். வேறொரு தீர்க்கதரிசி மூலமாகத் தேவன் சொல்லமாட்டார். தன்னைக் குறித்த தனது திட்டத்தைத் தன்னிடம் தான் சொல்லுவார் என்கிற புரிதல் இல்லாமல் அவன் பொய்யான தீர்க்கதரிசியை நம்பினபடியினால் அவன் வழியிலேயே ஒரு சிங்கம் எதிர் கொண்டு அவனைக் கொன்று போட்டது. இதில் தேவன் நமக்கு உணர்த்தும் மிகப்பெரிய சத்தியம் என்ன. ? கடவுள் நம்மைக் குறித்த தமது திட்டத்தை, சித்தத்தை நம்மிடம்தான் முதலில் உணர்த்துவார், பேசுவார். வேறு எந்த மிகப்பெரிய ஊழியக்காரர்கள் கொண்டும் அதை நமக்கு உணர்த்த மாட்டார். நம்மை அவர் மட்டுமே வழிநடத்த முடியும். புதிய ஏற்பாட்டில் இது நிதர்சனமான உண்மை. மற்ற ஊழியர்கள் நம்மை உற்சாகப்படுத்தலாம் ஆறுதல் படுத்தலாம் ஆலோசனைகள் கூறலாம் எச்சரிக்கையும் விடலாம் ஆனால் நம்மைக் குறித்த தேவனுடைய சித்தத்தை அவர் மட்டுமே நம்மிடத்தில் உணர்த்த முடியும் ,பேச முடியும். இதில் மூன்றாவது தனி நபர் முறையீடு என்பது வேதத்தின் படி எவ்வளவும் சரியல்ல. இதை விசுவாசிகள், வாலிபர்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் அவருடைய சித்தத்தை உண்மையாக விரும்பி அவரை நோக்கி ஜெபிக்கும்பொழுது அவரே தமது சித்ததை நமக்குப் பல்வேறு விதங்களில் வெளிப்படுத்துவார். இது ஒவ்வொரு விசுவாசியின் அடிப்படை பாடமாக இருக்க வேண்டும். கடவுளுடைய சித்தத்தை இன்னொரு மனிதன் மூலமாக நாம் அறிய முற்படுவது ஆவிக்குரிய மடமை, முட்டாள்தனம். இது ஒருபோதும் விசுவாசிகள் அனுமதிக்க கூடாது. அனுமதித்தால் ஆவிக்குரிய வாழ்க்கையில் நமக்கு ஆவிக்குரிய மரணங்கள் ஏற்பட அநேக வாய்ப்புகள் உண்டு. கடவுள் நமது தகப்பன். அவர் நம்மோடு பேசுகிறவர். வாழ்க்கையில் சர்ப்பத்தின் பொய்கள், சத்தங்கள் நம்மை ஆதாமை போல் நம்மை ஏமாற்றி விடும். விசுவாசிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இன்றைய கிறிஸ்தவ உலகத்தைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. எவ்வளவு மகா பெரிய தேவனை தகப்பனாகக் கொண்டிருக்கிற நாம் அந்த உறவைப் பயன்படுத்தத் தெரியாமல் வாடகைக்கு விட்டு விடுகிற அவலம் மகா பரிதாபமானது. கடவுளின் சித்தத்தை கடவுள் மூலமாக அறிந்து கொள்கிற மனிதனை எந்த ஒரு விபத்தும் அசைக்க முடியாது. நம்முடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது. 1 யோவான் 1:3. இந்த உறவின் ஆழம் உயரம் அகலம் நீளம் இவற்றை மனித அறிவைக் கொண்டு புரிந்து கொள்ள முடியாது ‌ இந்த உறவை நாம் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது.

1 அரசர்கள் புத்தகம் வேதபாடம் 18

உங்கள் சிந்தனைக்கு 1 அரசர்கள் புத்தகம் வேதபாடம் 18 கடவுளை நம்பாமல் யெரொபெயாம் செய்த மூன்று பெரும் தவறுகள். கடவுள் தாவீதின் வம்சத்திலிருந்து பெரும்பான்மையான பகுதிகளைப் பிரித்து யெரொபெயாமுக்கு கொடுத்து அவனை அரசன் ஆக்கினார். கடவுள் அவனுக்கு மிகப்பெரிய உயர்வைக் கொடுத்தார்.14; 7,8 தன்னை அரசனாக்கிய கடவுள் தன் ராஜ்யத்தை கடைசி மட்டும் தனக்கு நிலை நிறுத்துவார் என்ற நம்பிக்கை அவனுக்கு இல்லை. ‌ அதற்கு மாறாகத் தேவனுடைய திட்டத்திற்கு விரோதமாகப் பல காரியங்களைச் செய்தான். எருசலேம் தேவாலயம் என்பது தேவனுடைய மிகப்பெரிய திட்டம். ஒருமித்த இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் வழிபடுவதற்காகத் தேவன் அந்த ஆலயத்தை ஆசீர்வதித்தார்.9: 3 இஸ்ரவேல் ஜனங்களின் ஆவிக்குரிய மையமாக எருசலேம் தேவாலயம் காணப்பட்டது. இதை யெரொபெயாம் புரிந்து கொள்ளாமல் தன்னுடைய ஆட்சியில் உள்ள ஜனங்கள் எருசலேம் தேவாலயத்திற்கு சென்று அங்கே தேவனை வழிபட்டால் அவர்கள் ரெகொபெயாம் பின்னால் சென்று விடுவார்களோ என்று பயந்தான். “இந்த மக்கள் எருசலேமில் உள்ள யெகோவாவின் ஆலயத்துக்குப் பலி செலுத்துவதற்குப் போனால், அவர்கள் தங்கள் தலைவனான யூதாவின் அரசன் ரெகொபெயாமின் பக்கம் சாயக்கூடும். அவர்கள் என்னைக் கொலைசெய்து அவனிடமே திரும்புவார்கள்” என்று நினைத்தான். 1 இராஜாக்கள் 12:27 இந்தப் பயத்தின் விளைவாக அவன் கடவுளை ஆராதிக்க எருசலேமுக்கு பதிலாக இரண்டு நகரங்களைத் தேர்ந்தெடுத்தான். இது அவன் செய்த முதல் தவறு அடுத்தது அதைத் தன் கீழ் உள்ள ஜனங்கள் கடவுளை ஆராதிப்பதற்காக இரண்டு தங்க கன்று குட்டிகளைச் செய்து அங்கே ஆராதிக்க தூண்டினான். இது அவன் செய்த இரண்டாவது பாவம். மூன்றாவது தவறு லேவியர்கள் அல்லாதவர்களை அந்த ஆலயத்திற்கு ஆசாரியர்களாக நியமித்தது. இந்த மூன்று காரியங்களும் தேவனுடைய அநாதி தீர்மானத்திற்கு விரோதமானது. அவன் பாவத்தின் மேல் பாவத்தைச் செய்தான் இவை அனைத்திற்கும் காரணம் அவன் ஒரு பாதுகாப்பின்மையை உணர்ந்தான்(Insecurity). தேவன் தனக்கு கொடுத்த ராஜ்யத்தை கடைசி மட்டும் அவர் நிலைநிறுத்திக் கொடுப்பார் என்கிறநம்பிக்கை இல்லாமல் சுய புத்தியை சார்ந்து மிகப் பெரிய இழப்பைச் சம்பாதித்தான். 1 அரசர்கள் 14:10-12 படித்துப் பார்க்கும்பொழுது மிகப்பெரிய ஒரு அழிவை அவனுக்கும் அவன் குடும்பத்தாருக்கும் கடவுள் கட்டளையிட்டார். இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான தேவனுடைய வார்த்தை 14:16 தான்‌. யெரொபெயாம் செய்த பாவத்தினால் மட்டுமல்ல, இஸ்ரயேலைப் பாவஞ்செய்யப்பண்ணிய காரியமும் தேவனுடைய கோபத்தை ஏற்படுத்தியது. பாவங்களில் இரண்டு வகை உண்டு. 1 நம்முடைய தனிப்பட்ட பாவங்கள் அது நம்மைத் தாமே அழிவுக்கு நேராக நடத்தி விடும். அடுத்தது நம்முடைய பாவம் மற்றவர்களைப் பாவம் செய்யத் தூண்டுவது. இது பாவத்தின் இரண்டாவது கொடிய பகுதி. இதைச் செய்ததின் மூலம் யெரொபெயாம் மிகப் பெரிய அழிவைச் சம்பாதித்தான். தேவன் நமக்குக் கொடுத்த ஆசீர்வாதத்தை அதை நாம் அனுபவிக்க தேவனே அதை வாய்க்கப் பண்ணுவார். இந்த அடிப்படை நம்பிக்கை நமக்கு மிகவும் அவசியம். நம்முடைய செயல்கள் ஒருபோதும் மற்றவர்களைப் பாவம் செய்யத் தூண்டுவதற்கு ஏதுவாக அமைந்து விடக் கூடாது. மற்றவர்களுக்கு இடறலாக‌ நம் வாழ்க்கை ஒரு போதும் மாறக் கூடாது. நாம் ஒரு இடறலற்ற வாழ்க்கை வாழத் தேவன் நமக்குக் கிருபை தருவாராக "என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும். மத்தேயு 18

1 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 17

உங்கள் சிந்தனைக்கு: 1 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 17 கடவுளுக்குப் பிரியம் இல்லாமல் நடந்து தகப்பனாகிய சாலமன் தனக்கு அளித்த எல்லா ஆசிர்வாதங்களையும் இழக்க காரணமானவன் ரெகொபெயாம். 14:25-28 அதே வேளையில் யெரொபெயாம் தனக்கு அரசுரிமையை வழங்கிய தேவனை மறுதலித்து விக்கிரகங்களை உருவாக்கிக் குடும்பத்தையும் தன் மகனையும் இழக்க காரணமானவன்.14:1-10. இந்த இரண்டு அரசர்கள்மூலம் நமக்கு வேதம் உணர்த்தும் பாடங்கள் அநேகம். ரெகொபெயாமை எடுத்துக் கொண்டால் அவன் எந்தப் போர்க்களத்தையும் சந்திக்காதவன். பாடுகளை அனுபவிக்காதவன். தகப்பன் சாலமோனின் ஆசிர்வாதங்களை சாலமோனுடைய மகன் என்கிற ஒரே காரணத்தால் அனைத்தையும் பெற்றுக் கொண்டவன். தன் மக்களுக்குத் தான் ஊழியக்காரன் என்பதை மறந்து மூப்பர்களின் ஆலோசனையைப் புறக்கணித்து விடலைகளின் துர் ஆலோசனைப்படி நடந்தான். விளைவு அவனுடைய அரசாட்சியை பெரும் பகுதியை இழந்தான். அவனுக்கு ஆதரவாகப் பெஞ்சமின் கோத்திரமும் சிமியோன் கோத்திரம் மட்டுமே அவனோடு இருந்தது.12: 21 கடவுளின் பார்வைக்கு பொல்லாப்பை செய்துபடியினால். அவனது ஆட்சியின் ஐந்தாம் வருடம் எகிப்திய அரசனான சீஷாக் எருசலேமைத் தாக்கி யெகோவாவின் ஆலயத்திலும், அரண்மனையிலும் இருந்த எல்லா செல்வங்களையும் சூறையாடிக் கொண்டுபோனான். சாலொமோன் செய்துவைத்திருந்த எல்லா தங்கக் கேடயங்கள் உட்பட அனைத்தையும் எடுத்துக்கொண்டு போனான். 14:25,26 நம்முடைய வாழ்க்கையில் நாம் நம் பிள்ளைகளுக்குச் செல்வங்களை, ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை சேர்த்து வைத்தாலும் நம் பிள்ளைகள் கர்த்தருக்கு பிரியமான வழிகளில் நடக்காவிட்டால் நாம் சேர்த்து வைத்த ஆசீர்வாதங்களை அவர்கள் இழந்து விடுவார்கள் என்பதற்கு ரெகொபெயாமின் வாழ்க்கை வாழ்க்கை நமக்கு ஒரு எச்சரிக்கை. இதுபோலச் சபைகளில் போதகரின் மகன் என்கிற ஒரே காரணத்தின் அடிப்படையில் தலைமை பதவியை அடைகின்ற வாலிப தலைவர்கள் தாங்கள் சபைக்கு வேலைக்காரர்கள் என்பதையும் மூப்பர்கள் சபையின் சொத்து என்பதையும் மறந்து விடக் கூடாது அதேபோல யெரொபெயாம் வாழ்க்கையில் கடவுள் சாதாரணமாகக் காணப்பட்ட அவனை எழுப்பித் தன் மக்களாகிய இஸ்ரயேலருக்குத் தலைவனாக நியமித்தார். 1 இராஜாக்கள் 14:7 தாவீதின் குடும்பத்திலிருந்து அவனுடைய அரசாட்சியைப் பிரித்தெடுத்து, கொடுத்தார். ஆனால் அவன் உலோகத்தால் செய்யப்பட்ட விக்கிரகங்களான வேறே தெய்வங்களைத் தனக்கு உண்டாக்கி கடவுளுக்குக் கோபமூட்டி கடவுளைதள்ளி ஒதுக்கிவிட்டான் அது மட்டும் அல்ல. தானும்பாவம் செய்து இஸ்ரயேலைப் பாவஞ்செய்யப்பண்ணியதாலும் அவனுடைய குடும்பத்திற்கு மிகப்பெரிய அழிவைத் தேவன் வரச் செய்தார். அவனுடைய மகனும் நோய்வாய்ப்பட்டு மரணம் அடைந்தான்‌. நாம் கடவுளை விட்டு விலகி, மற்றவர்களுக்கு இடறலாக,,கடவுளுக்குப் பிரியம் இல்லாத வழிகளில் நடக்கும்பொழுது அதன் விளைவாக நம்முடைய குடும்பங்களிலும் தேவன் மிகப்பெரிய இழப்புகளை அனுமதிப்பார்.இதுஉண்மை. எப்படி நாம் நம் பிள்ளைகளுக்கு செயல்பாடுகள் மூலமாக ஆசீர்வாதமாக இருக்கிறோமோ, அதுபோல நம்முடைய பின் மாற்றங்கள், பாவங்கள் மூலமாக நம்முடைய குடும்பங்களுக்கும் பிள்ளைகளுக்கும் நாம் மிகப்பெரிய இழப்புகளை நேரிடப் பண்ணுவோம் இதுவும் உண்மை. எனவே ஆவிக்குரிய வாழ்க்கை என்பது ஒரு விளையாட்டு அல்ல. நியமிக்கப்பட்ட ஓட்டத்தில் ஆசீர்வாதத்தோடு ஓட தேவன் அழைத்திருக்கிறார்.

1 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 15

உங்கள் சிந்தனைக்கு: 1 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 15 சாலமோனுடைய மகன் ரெகோபெயாமின்‌ ஆட்சி காலத்தில் ஒருமைப்பட்ட இஸ்ரவேல் தேசம் இரண்டாகப் பிரிந்தது. யூதா கோத்திரத்தில் சார்ந்த ரெகோபெயாம் ஒரு பிரிவாகவும் மற்ற அனைத்து கோத்திரங்களும் யெரொபெயாம் தலைமையில் ஒரு பிரிவாகவும் ஆக இரண்டு பிரிவுகளாகத் தேசம் பிளவு பட்டது. நேபாத்தின் மகனான யெரொபெயாமுக்கு சீலோவைச் சேர்ந்த அகியா என்ற இறைவாக்கினன் மூலம் கூறிய கடவுளின் வார்த்தையை நிறைவேற்றும்படி, இந்த மாறுதலான நிகழ்வுகள் நடந்தன. 1 இராஜாக்கள் 12:15 ரெகொபெயாம் கப்பம் வசூலித்து வந்த அதோராமை இஸ்ரவேலரோடு சமாதானம் பண்ண அனுப்பினான். ஆனால் எல்லா இஸ்ராயேலரும் அவனைக் கல்லெறிந்து கொன்றுவிட்டார்கள். அரசன் ரெகொபெயாம் எப்படியோ ஒரு வழியாகத் எருசலேமுக்குத் தப்பி ஓடினான். 1 இராஜாக்கள் 12:18 ரெகொபெயாம் எருசலேமை வந்தடைந்தபோது, யூதா முழுவதிலும் பென்யமீன் கோத்திரத்திலும் 1,80,000 போர்வீரரை ஒன்றுகூட்டினான். இஸ்ரயேலுக்கு எதிராகப் போரிட முன்வந்தான் ஆனால் இறைவனின் மனிதன் செமாயாவுக்கு கடவுளின் வார்த்தை வந்தது. அவன் ரெகொபெயாமிடம் "உங்கள் சகோதரர்களாகிய இஸ்ரயேலருக்கு எதிராக யுத்தம்செய்யப் போக வேண்டாம். இது எனது செயல்; நீங்கள் ஒவ்வொருவரும் வீட்டிற்குத் திரும்புங்கள் என்று யெகோவா சொல்கிறார்’'என்றான். எனவே அவர்கள் யெகோவாவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, அவர் கட்டளையிட்டபடியே மீண்டும் வீட்டிற்கு போனார்கள். 1 இராஜாக்கள் 12:24. இப்படியாக ஒரு மிகப்பெரிய சகோதரர் யுத்தம் தடுக்கப்பட்டது. ஒற்றுமையாக இருந்த யூத தேசம் இரண்டாகப் பிரிந்தது. இதுவும் தேவனுடைய சித்தம். பிளவு பட்ட கோத்திரங்கள் மறுபடியுமாக ஒன்றாக இணைந்ததாக வரலாற்றில் காண முடியவில்லை. சகோதரர்களின் பிரிவினைகள் வேதத்தில் பல இடங்களில் காணப்படுகின்றது. ஆபிரகாம் லோத்தின் பிரிவு. யாக்கோபு ஈசாவின் பிரிவினை. இந்தப் பிரிவினை தலைமறை தலைமுறையாகக் கடந்து சென்றது. யோசேப்பை அவனுடைய சகோதரர்கள் வெறுத்தது. ஆரோன், மிரியாம் மோசேக்கு விரோதமாகக் குறை சொன்ன காரியம். ‌ இப்படி சகோதரர்கள் பிரிவினை, குடும்ப பிரிவினை என்பது வேதத்தில் காணக்கூடிய ஒன்றாக இருக்கிறது. அனைவருமே தேவனால் அழைக்கப்பட்டவர்கள், தெரிந்து கொள்ள பட்டவர்கள். ஆனாலும் பிரிவினைகளைத் தடுக்க முடியவில்லை. இந்தப் பிரிவினைகள் மூலமாகத்தான் தேவன் தம்முடைய திட்டத்தை நிறைவேற்றுகிறார். கடவுளுடைய திட்டத்தைக் குடும்ப பிரிவினைகள் தடுக்க முடியாது. இந்தப் பிரிவினைகள் பல தேவனால் அனுமதிக்கப்பட்டும், சில பிரிவினைகள் மனித தவறுகளால் ஏற்படுத்தப்பட்டும் காணப்படுகிறது. இவைகள் எல்லாவற்றிலும் தேவன் தம்முடைய இறையாண்மையை நிறைவேற்றுகிறார். எனவே சகோதரர்கள் பிரிவினை என்பது காலம் தொட்டு காணப்படுகிறது. நம்முடைய குடும்பத்திலும் சகோதரர்கள் பிரிவினை காணப்பட்டால் அதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அந்தப் பிரிவினைகள் கசப்புணர்ச்சியை ஏற்படுத்தி விடக் கூடாது. கடவுள் நம்மை அனுமதித்த வழிகளில் நடக்க நாம் ஒப்புக்கொடுக்க வேண்டும் அவ்வளவே

1 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 14

உங்கள் சிந்தனைக்கு: 1 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 14 யூதர்களின் முதல் அரசன் சவுல். இவன் அரசாண்ட காலத்தில் எல்லா யூத இனக் குழுக்களும் (Tribes)ஒன்றாக இணையவில்லை‌. எல்லா கோத்திரங்களையும் இணைத்து ஒரு ஒருமித்த யூதர்களுக்கான அரசை உருவாக்கியவன் தாவீது. அதை வலுப்படுத்தியவன் சாலமோன். அதற்குப் பிறகு அவனுடைய மகன் ரெகொபெயாம் அரசனானன்‌. அவன் முதியோர்களின் ஆலோசனையைப் புறந்தள்ளிவிட்டு வாலிபர்களின் பேச்சைக் கேட்டு யூத மக்கள்மீது சாலமோன் விதித்த வரி சுமையைக் குறைக்க மறுத்துவிட்டான். தான் அரசன் ஆனதும் தான் ஒரு பாதுகாப்பு வளையத்திற்குள் வந்து விட்டதாக தவறாக எண்ணிவிட்டான். அதன் விளைவாக யூதாவைத் தவிர மற்ற கோத்திரங்கள் அனைவரும் இணைந்து யெரொபெயாமுக்கு ஆள் அனுப்பி அவனை அழைப்பித்து அவனைத் தங்கள் அரசனாக்கினார்கள். இதன் விளைவாக ஒருமைப்பட்ட யூத தேசம் வடக்கு, தெற்கு என்று இரண்டாகப் பிரிந்தது. யெரொபெயாம் தலைமையில் வடக்கில் உள்ள 10 கோத்திரங்கள் இணைந்து ஒரு அரசாக மாறியது. இது இஸ்ரவேல் தேசம் என்றும் எப்பிராயீம் என்றும் அழைக்கப்பட்டது. இந்த இஸ்ரவேல் தேசம் அசீரியா மன்னனால் கைப்பற்றப்படுகிற காலம்வரை(BC722) இதை ஆண்ட அனைத்து அரசர்களும் தேவனுடைய வழியில் நடக்கவில்லை. அசீரியா அரசால் இஸ்ரவேல் தேசம் கைப்பற்றப்பட்ட பிறகு ஒரு தேசமாகப் பின்னால் உருவாக முடியவில்லை. தெற்கில் உள்ள தேசம் யூத தேசம் என்று அழைக்கப்பட்டது. அதன் முதல் அரசனாக ரெகொபெயாம் மாறினான். இந்த யூத வம்சத்தில் இருந்துதான் இயேசு கிறிஸ்து பிறந்தார் என்பதை மறந்து விடக் கூடாது. இந்த தேசத்தைப் பாபிலோனியர்கள் கைப்பற்றிய காலம்வரைக்கும் ( 586) ‌ இதனை ஆண்ட அரசர்களில் சிலர் தேவனுக்கு பிரியமானவர்களாகவும் சிலர் தேவனுக்கு தூரமானவர்களாகவும் காணப்பட்டார்கள். பாபிலோனிய அரசாங்கத்தால் சிறைப்பட்ட மக்கள் 70 ஆண்டுகளுக்குப் பிறகு எஸ்ரா, நெகேமியா காலங்களில் தங்கள் தேசத்திற்கு திரும்பி வந்தார்கள். ஆனால் அவர்கள் அடுத்த 500 ஆண்டுக் காலம் புறயின அரசர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தார்கள். இந்த வரலாற்றை நான் சொல்வதற்கு காரணம் ஒரு மனிதனின் பிடிவாதம், ஆணவம் முதியவர்களை மதிக்காத தன்மை தாவீது தேவனோடு இருந்து கட்டிய ஒருமைப்பட்ட தேசம் பின்னால் இரண்டாகப் பிளவுபட காரணமாயிற்று. இந்தக் காரியங்கள் அனைத்தும் கர்த்தருடைய வார்த்தையின்படியே நடந்தாலும் மனித தவறுகளையும் நாம் மறந்து விடக் கூடாது கிறிஸ்தவர்களாக நம்முடைய வாழ்க்கையிலும் மிகவும் விழிப்பாக இருக்காவிட்டால் சில வேலைகளில் நாம் எடுக்கிற சில தவறான தீர்மானங்கள் வாழ்நாள் தவறுகளாக மாறிவிடும். இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவுடன் நாம் ஒரு comfort zoneக்குள் வந்து விட்டோம் என்று பிரசிங்கிமார்கள் கூறுவது தவறு. நாம் ஒரு போர் வீரனாகப் போர்க்களத்துக்குள் வந்துவிட்டோம் என்பதே உண்மை. ‌ இந்தச் சத்தியத்தை வாலிபர்களுக்குப் புரிய வைத்தால் நலம். வாலிபர்கள் முதியவர்களை மதித்து அவர்களது ஆலோசனைகளைப் பெற்று நடக்க வேண்டும். கடவுள் தங்களை உயர்த்தும் நேரம்வரைக்கும் காத்திருக்க வேண்டும். புதிதாக வளர்ந்து வருகிற விசுவாசிகள் எவ்வளவு தாலந்துகள் பெற்றிருந்தாலும் எவ்வளவு சிறந்த ஆராதனை வீரர்களாக இருந்தாலும் இருந்தாலும் திடீர் உயர்வை அடைய விரும்பினால் ,அவன் வீண்பெருமை அடைந்து, பிசாசு அடைந்த நியாயத்தீர்ப்புக்குள் விழக்கூடும். 1 தீமோத்தேயு 3:6 ரெகொபெயாமின் வாழ்க்கை இன்றய இளைஞர்களுக்கு ஒரு மிகப்பெரிய எச்சரிக்கை. இளைஞர்கள் கடவுள் அவர்களுக்கு ஏற்படுத்தி இருக்கும் கால அட்டவணையைக் கடந்து போகக்கூடாது இந்தப் பதிவில் சொல்லப்பட்ட தகவல்கள் அனைத்தும் William MacDonald அவர்களின் Believer'sBible Commentary என்கிற விளக்க உரையிலிருந்து எடுக்கப்பட்டது. Ezekiel Shanmugavel

எபிரேயருக்கு எழுதிய நிருபம் 1:3 ன்விளக்கம்

உங்கள் சிந்தனைக்கு ! எபிரேயருக்கு எழுதிய நிருபம் 1:3 ன்விளக்கம் இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்தில் உள்ள மகத்தவமானவருடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார். எபிரேயர் 1:3 மகிமையின் பிரகாசம் அல்லது மகிமையின் ஒளி அல்லது கடவுளின் மாட்சிமை வீசும் சுடரொளி என்றால் என்ன? ஆங்கிலத்தில் His effulgency or radiance or brightness of His glory என்று மொழியாக்கம் பண்ணப்பட்டுள்ளது ‌ இதன் அர்த்தம் என்ன ? இராஜரீகம் அவர்கள் மொழியாக்கத்தில் "கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாக" காணப்பட்டார் என்று காணப்படுகிறது சூரியனையும் அதன் வெளிச்சத்தையும் பிரிக்க முடியாது. வெளிச்சம் இல்லாத சூரியன் என்று ஒன்றும் கிடையாது. ஆனால் சூரியன் வேறு அதன் பிரகாசம் வேறு. இரண்டும் வெவ்வேரானவை. சூரியனுடைய மகிமை அதன் சூரிய கதிர்கள்தான். அதன் மகிமை அதன்பிரகாசம்தான். . All the glory of the sun is its brightness. சூரியனுடைய பிரகாசத்தின் தன்மையும் சூரியன் வெளியேற்றும் சுடரொளியின் தன்மையும் ஒன்றே. அதைப் போலப் பிதாவின் மகிமையானவர் குமாரன். கடவுளுடைய மாட்சிமையின்(மகிமையின்) சுடரொளி குமாரன். ஆனால்பிதா வேறு. குமரன் வேறு‌ பிதாவின் மகிமையாகக் குமாரன் வெளிப்பட்டார் But" the Son is no whit inferior to the Fathe but every way His equal " படிக்க யோவான் 1:1, 5:17 8:42 10;30:9 17:5. சுருக்கமாகச் சொல்லப்போனால் பிதாவாகிய சூரியனிலிருந்து வெளிபட்ட சுடரொளி தான்(மகிமை) குமாரன். "Son was the brightness, brightness of His Father, yes also the brightness of His Father's glory '" ARHUR W. PINK Ref 1 Exposition of the The Epistle to Hebrews by JOHN BROWN 2. The Daily Study Bible “The letter to Hebrews “By WILLIAM BARCLAY 3. An Exposition of Hebrews by ARTHUR W.PINK 4. The Bible Exposition commentary by WARREN W. WIERSBE

எபிரேயருக்கு எழுதப்பட்ட நிருபம் 1:1ன்விளக்கம் (2)

உங்கள் சிந்தனைக்கு ! எபிரேயருக்கு எழுதப்பட்ட நிருபம் 1:1ன்விளக்கம் (2) முற்காலத்தில் இறைவன் பலமுறை, வெவ்வேறு விதங்களில் இறைவாக்கினர்கள் மூலமாய் நமது முற்பிதாக்களுடன் பேசினார். எபிரெயர் 1:1 ''இந்தக் கடைசி நாட்களில் '' ''அல்லது இவ்விறுதி நாள்களில்'' என்றால் என்ன அர்த்தம்? ஆங்கில மொழிபெயர்ப்பில் “in these last days “என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒரு வார்த்தையை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு விளக்கத்தைக் கொடுக்க முடியாது. காலத்தை இரன்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றினபூர்வகாலங்கள். .அடுத்தது குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றின தற்போதய காலம். ஆங்கிலத்தில் "has in these last days spoken to us by His Son,"என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொல்லப்போனால் ஒரு முறை அல்லது யுகம் ( Dispensation or system period ) முடிந்து இன்னொரு முறையின் ஆரம்பம். It is the termination of the period assigned for the duration of the Mosaic economy and the beginning of a new era of Jesus Christ. John Brown மோசேயின் பிரமாணங்களுக்கு அளிக்கப் பட்ட காலம் முடிவு பெற்று தேவனுடைய குமாரனின் ஆளுகையின் ஆரம்பம் என்று பொருள். “இந்தக் கடைசி நாட்களில்” 'அல்லது இவ்விறுதி நாள்களில்' என்றால் குமாரன் மூலமாகத் தொடங்கும் கிருபையின் யுகத்தின் நாட்கள் என்று அர்த்தம். இதைப் பவுலடியாரும் பல நேரங்களில் குறிப்பிடுகிறார் . குறிப்பாக கலா 4:4 ல் இவ்வாறு எழுதுகிறார் "காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்." இங்கு “காலம் நிறைவேறினபோது” என்கிற வார்த்தையைக் கவனிக்க வேண்டும் மேலும் எபே 4:9 ல் "காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி' என்றும் சொல்லுகிறார். இதே எபிரேய நிருபத்தில் இவ்வாறு கூறப்படுகிறது. "அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும்பொருட்டாக இந்தக் கடைசிக்காலத்தில் ஒரேதரம் வெளிப்பட்டார்."9:26 இங்கு “இந்தக் கடைசிக்காலத்தில்” என்பதை கவனிக்கவும். எனவே இறுதி காலம் என்பது யூதர்களுடைய முறை முடிந்து குமாரன் மனிதனாய் வெளிப்பட்ட காலத்தைக் குறிக்கிறது. மேலும் இது தான் பிதாவின் இறுதி வெளிப்பாடு (Final revelation ) ‘He(Father) has nothing now in reserve.He has no futher revelation to make’-Arthur W. Pink இனி புதிதாக எந்த வெளிப்பாடும் கிடையாது. Jesus Christ is the final spokesman of the deity manifested in the last days. இறுதி காலம் என்பது புதிய திராட்சை ரசம் இறுதி காலம்என்பது நிஜம் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின பூர்வகாலங்கள் என்பது நிழல் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றினபூர்வகாலங்கள் என்பது பழைய திராட்சை ரசம் தொடரும் Ref 1 Exposition of the The Epistle to Hebrews by JOHN BROWN 2. The Daily Study Bible “The letter to Hebrews “By WILLIAM BARCLAY 3. An Exposition of Hebrews by ARTHUR W.PINK 4. The Bible Exposition commentary by WARREN W. WIERSBE

எபிரேயருக்கு எழுதப்பட்ட நிருபம் 1:1,2 ன்விளக்கம்.1

உங்கள் சிந்தனைக்கு! எபிரேயருக்கு எழுதப்பட்ட நிருபம் 1:1,2 ன்விளக்கம். "பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன்," இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்." (எபிரெயர் 1:1,2) யூதர்களுக்குக் கொடுக்கப்பட்ட கடவுளுடைய வெளிச்சங்களும் (God’s revelation) கிறிஸ்தவர்களாகிய நமக்குக் கிடைத்த வெளிப்படுத்தல்களும் எல்லாமே பிதா மூலம் பெறப்பட்டவை.(Divine orgin). ஆனால் சில வேறுபாடுகள் 1.யூதர்களுக்குத் தீர்க்கதரிசிகள் மூலமாய் கடவுள் சிறு சிறு அளவில் வெவ்வேறான வழிகளில் பேசினார். அதாவது முழுமை பெறாத வெளிப்படுத்தல்‌ Fragmentated and incmplete revelation. But it continues ஆனால் நாம் குமாரன் மூலமாகபெற்ற வெளிச்சம் முழுமையானது. It is a complete revelation by the Father through his Son அடுத்தது 'திருவுளம்பற்றின தேவன்" என்றால் என்ன என்பதை பற்றித் தியானிக்கலாம். நம்முடைய கடவுள் பேசுகின்ற தேவன். இந்த உலகை படைப்பதற்கு முன்பும் அவர் பேசினார் என்று பார்க்கிறோம். ஆங்கிலத்தில் “And God said, Let there be light: and there was light” என்று பார்க்கலாம்.ஆதி1:3 நம் தேவன் ஆதி முதல் பேசுகின்ற தேவன். பேசாத மரமோ கல்லோ அல்ல. தேவன் உலகை படைத்த நாள் முதல் இந்த நாள்வரை பேசிக்கொண்டேஇருக்கிறார்.நாம் முழுமையாகக் கேட்பதற்கு ஆயத்தமாக இல்லை. அடுத்தது "பங்குபங்காகவும் வகைவகையாகவும்," என்றால் என்ன ? அதாவது தேவன் பலமுறைகளில், பலவகைகளில் இஸ்ரவேல் மக்களிடம் பேசினார் என்று பொருள். அடுத்து பங்குபங்காக அல்லது பலமுறைகளில் என்பது எதைக் குறிக்கும்? ஆங்கிலத்தில் "at sundry times" அல்லது at many times என்று பொருள். அதாவது பல கால கட்டங்களில் கடவுள் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றினார். அதாவது தேவன் 1500 ஆண்டு கால இடைவெளியில் படிப்படியாக Gradually இஸ்ரவேல் மக்களோடு பேசினார்.பழைய ஏற்பாடு ஒரே நாளில் உண்டானது அல்ல. 1500 ஆண்டு கால இடைவெளியில் எழுதப்பட்ட முற்று பெறாத புத்தகம். பழைய ஏற்பாடு. கடவுளுடைய வெளிப்படுத்தல் குமாரனுடைய பிறப்பில் முற்றுப்பெறுகிறது(இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம் பற்றினார்). அது மோசேயின் நூல்களாக, தாவீதின் சங்கீதங்களாக, வரலாற்று நூல்களாக, தீர்க்கதரிசன உரைகளாகக் கொடுக்கப்பட்டது.ஆபிரகாம் முதல் மல்கியா தீர்க்கதரிசி காலம்வரை வரை தேவன் இஸ்ரவேல் மக்களோடு பேசினார் "வகைவகையாக" அல்லது பலவகைகளில் என்றால் என்ன ? அதாவது தேவன் தரிசனங்களாகக் கனவுகள் மூலமாக(Visions and dreams) தேவனின் சத்தத்தின் மூலமாக, தூதர்கள் மூலமாக ஆவியானவரின் உந்துதல் மூலமாக என்று பல வகையில் பேசினார். அவைகள் உவமைகளாக, உருவகங்களாக, எச்சரிப்புகளாகவும் இருந்தது. Ref 1 Exposition of The Epistle to Hebrews by JOHN BROWN 2. The Daily Study Bible “The letter to Hebrews “By WILLIAM BARCLAY 3. An Exposition of Hebrews by ARTHUR W.PINK 4. The Bible Exposition Commentary by WARREN W. WIERSBE

அரசர்கள் புத்தகம் வேத பாடம் 13

உங்கள் சிந்தனைக்கு: அரசர்கள் புத்தகம் வேத பாடம் 13 முதியவர்களை மதிக்காத ரெகொபெயாம் இவனுடைய ஆட்சி காலத்தில் தான் ஒருமைப்பட்ட இஸ்ரவேல் தேசம் இரண்டாகப் பிரிந்தது. இவன் தெற்கு பகுதியில் யூத கோத்திரத்து மன்னனாக ஆண்டான். தன்னுடைய மதீயீனத்தால் மூத்தவர்களை அரவணைக்கத் தவறிய காரணத்தால் தன் தகப்பன் சாலமனிடமிருந்து பெற்ற ஒருமைப்பட்ட இஸ்ரேல் தேசத்தைக் கட்டி காக்க முடியாமல் இரண்டாகப் பிரிவதற்கு காரணமாகிவிட்டான். இவனுடைய தாய் அம்மோனியப் பெண்ணாகிய நாமாள் என்பவள்.14:21. இவனுடைய பின் மாற்றத்திற்கு இதுவும் ஒரு காரணம் என்று எண்ணத் தோன்றுகிறது. தாவீதுக்கு விரோதமாகக் கலகம் பண்ணின‌‌ அப்சலோமின் தாயார் ஒரு சீரியா தேசத்தில் உள்ள கேசூரின் அரசனின் குமாரத்தி. சாலமோனின் தாயார் உரியாவின் மனைவியாகிய பத்சேபாள். இவள் யூத குல பெண்மணி.2 சாமு 3:3 சில நேரங்களில் தாய்மார்களின் கலாச்சார பின்னணி மற்றும் மத வழிபாடுகள் பிள்ளைகளின் ஆவிக்குரிய பழக்கவழக்கங்களைப் பாதிக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது. இவனுடைய வீழ்ச்சிக்குச் சாலமோன் இஸ்ரவேல் ஜனங்களின் மீது விதித்த அதிகமான வரிச்சுமையும் ஒரு காரணம் என்றாலும், அதைச் சரிகட்ட ஒரு வாய்ப்பு கிடைத்தும் அந்த வாய்ப்பைச் சரியான முறையில் பயன்படுத்தவில்லை. ரெகொபெயாம் முதியோர் தனக்குக் கூறிய புத்திமதியை உதாசீனம் செய்துவிட்டு, தன்னுடன் வளர்ந்த வாலிபரின் ஆலோசனின் படி ஜனங்களின் பாரத்தை அதிகமாக்க ஆணை பிறப்பித்தான் 1 இராஜாக்கள் 12:8-14 இதனால் இஸ்ரேல் ஜனங்கள் யெரொபெயாமை இஸ்ரயேலருக்கும் அவனை அரசனாக்கினார்கள். யூதா கோத்திரம் மட்டுமே தாவீதின் குடும்பத்துக்கு உண்மையாயிருந்தது. 1 இராஜாக்கள் 12:20 யெரொபெயாம் அரசனாக்கப்பட்ட நிகழ்வு சீலோவைச் சேர்ந்த அகியா என்ற இறைவாக்கினன் மூலம் கூறிய யெகோவாவின் வார்த்தையைஉறுதிப்படுத்தியது 1 இராஜாக்கள் 12:15 ரெகொபெயாமின் வாழ்க்கை இன்றய சபைத் தலைவர்களுக்கு இயக்கத் தலைவர்களுக்கு ஒரு எச்சரிக்கை. புதிதாகப் பொறுப்பேற்கும் தலைவர்கள் மூத்த தலைவர்களின் ஆலோசனைகளையும் அறிவுறிகளையும் அவர்களின் அனுபவங்களையும் மதிக்க வேண்டும். அவர்களைக் காலத்துக்கு ஒவ்வாதவர்கள் என்று புறந்தள்ளி விடக் கூடாது. இன்றைய தொழில்நுட்பம் அவர்களுக்குப் புரியாது. அவர்களது அறிவுரை ஏட்டுச் சுரக்காய் போல இருக்கிறது என்று புறம் தள்ளி விடக் கூடாது. முதியவர்களின் ஆலோசனைகளைப் பயன்படுத்திக் கொள்கிற தலைவன் மிகப்பெரிய சாதனைகளைச் சாதிப்பான். அதே வேளையில் இளைஞர்களையும் அணைத்துக் கொள்ள வேண்டும். இன்றைய நவீன தொழில்நுட்பத்தில் இளைஞர்களின் தாலந்துகளை திறமைகளை அறிவாற்றலை பயன்படுத்திக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். வாலிபர்களையும் முதியவர்களையும் சமநிலையோடு பார்க்கிற தலைவர்கள் இன்றைக்கு தேவை. இன்றய இளைஞர்களுக்கு அதிகாரத்தைத் துரிதமாக அடைய வேண்டுமென்ற ஆசை ஏராளம். அதைத் தலைவர்கள் உணர்த்தி புரிய வைக்க வேண்டும். ரெகொபெயாம் தனக்கு கிடைத்த அரிய வாய்ப்பை முதியோர்கள் மூப்பர்கள் கொடுத்த அறிவுரைகளைப் பயன்படுத்தி இருந்தால் ஒரு வேளை அவனது ஆட்சி காலத்திலாவது ஒருமைப்பட்ட யூத தேசத்தைக் காப்பாற்றி இருக்கலாம் We should honour age and maturity. At the same time, we should not worship youth "It’s a two-way street. I cultivate the friendship of young people because I need them, and they need me. I help them catch upon the past, and they help me catch up on the present". W.wiersbe

ஆதியாகமம் புத்தகம் 38-வது அதிகாரம் உணர்த்தும் ஆவிக்குரிய சத்தியம்

உங்கள் சிந்தனைக்கு : ஆதியாகமம் புத்தகம் 38-வது அதிகாரம் உணர்த்தும் ஆவிக்குரிய சத்தியம் என்ன? ஆதியாகமம் புத்தகம் 37-வது அதிகாரம் முதல் ஐம்பதாவது அதிகாரம்வரை யோசேப்பின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளைக் கொண்டு எழுதப்பட்டது. ஆனால் 38 வது அதிகாரத்தில் யூதாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தைத் தேவ ஆவியானவர் எழுதி வைத்திருக்கிறார். சம்பந்தம் இல்லாமல் இந்த ஒரு அதிகாரம் இடையில் ஏன் எழுதப்பட்டது என்பதை அறிந்தால் ஒரு மிகப்பெரிய ஆவிக்குரிய புரிதல் நமக்கு ஏற்படும். வேதம் என்பது மீட்பின் திட்டத்தையும் மீட்பின் திட்டத்தில் நடு நாயகமாக விளங்கும் இயேசு கிறிஸ்துவை பற்றியும் சம்பவங்கள் அடக்கியது. உலகத்தின் இரட்சகர் யூதா கோத்திரத்திலிருந்து தோன்றியவர். இந்த 38 வது அதிகாரத்தில் இந்த ‌யூதா‌‌ தடம் மாறிப் போய்க் கானானிய பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதையும் அதனால் முதல் முதல் யூத கோத்திரம் புற ஜாதிகளால் கறைபட்டதையும் பார்க்கலாம். ஆனால் அடுத்த அதிகாரத்தில் தடம் புரளாத யோசேப்பை குறித்தும் பார்க்கலாம். இந்த 38 வது அதிகாரத்தினுடைய முக்கிய குறிப்பு என்னவென்றால் யூதா ‌தாமாரினிடத்தில் பாரோசை பெற்றான் என்பது தான். அதில் யார் இந்த தாமார் என்றால்‌‌ இவன் யூதாவின் முதல் மகனான ஏர் என்பவனின் மனைவி. இவன் கொடுமையான மனிதனாக இருந்த காரணத்தினால் தேவன் அவனைச் சாகடித்தார். இதனால் அவளுக்கு வாரிசு இல்லாமல் போய்விட்டது. அவளுக்கு வாரிசு கொடுக்கும்படியாக அடுத்த பையன் ஓனானை யூதா கேட்டுக் கொண்டான் .அது நிறைவேறாமல் போகவே மூன்றாவது மகன் கல்யாண பருவத்துக்கு வரும் வரை காத்திருக்க சொன்னான். தாமார் காலம் விரைந்து ஓடுவதை பொறுக்காமல் வேசியின் வேடம் அணிந்து தன் மாமனாரோடு உறவு கொண்டு பெற்ற குழந்தை தான் பாரேஸ். வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால் மாமனாருக்கும் மருமகளுக்கும் நடந்த தவறான உறவு முறையில் பிறந்தவன் தான் இந்த பாரேஸ். இந்த பாரேஸ் இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில் இடம் பெறுகிறான். அதாவது இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில் தவறான உறவு முறையில் பிறந்த பாரேசும் இணைக்கப்படுகிறான் என்பதுதான் நாம் அறிய வேண்டிய சத்தியம். Christ's lineage included this illegitimate child. இங்கு நாம் பேசுகின்ற இனத் தூய்மை, ஜாதி தூய்மை எல்லாம் கிறிஸ்துவத்திற்கு ஏற்றதல்ல. புறஜாதிகளோடு கலக்கக் கூடாது என்பது தான் தேவனுடைய சித்தம். ஆனால் இப்படிப்பட்ட தவறான உறவு முறைகள் மூலமாகவும், ராகாப் போன்ற விலை மாந்தர்‌ மூலமாகவும், பத்சேபாள் மூலமாகவும் உலகத்தில் பிறந்தவர்தான் உலகத்தின் மீட்பர் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. இந்த நிகழ்வுகளின் ஆவிக்குரிய அர்த்தத்தை உண்மையாகப் புரிந்து கொண்டால் நாம் ஜாதிப் பெருமையை ஒருக்காலும் ஒரு நிமிடம் கூட ஒரு வினாடி கூட மேன்மை பாராட்டமாட்டோம். யூதர்களுக்கு வேண்டுமானால் இனத் தூய்மை முக்கியமாக இருக்கலாம். ஆனால் இரட்சகருக்கோ இரட்சகரின் பிள்ளைகளான நமக்கோ பரிசுத்தம் என்கிற தூய்மையைத் தவிர வேறு எந்தத் தூய்மையும் நமக்கு அவசியமும் இல்லை. முக்கியமுமல்ல. இந்த உண்மையைக் கிறிஸ்தவர்கள் சரியாகப் பின்பற்றி இருந்தால், புரிந்தி ருந்தால், தலைவர்கள் சரியாகப் போதித்திருந்து அதன்படி நடந்திருந்தால், கிறிஸ்துவ மதத்தில் காணப்படும் சகோதரத்துவம் இஸ்லாத்தில் காணப்படுகின்றன சமத்துவத்தை காட்டிலும் எவ்வளவு மேன்மையானது என்பதை இந்த உலகம் அறிந்திருக்கும். என்ன பரிதாபம் அது நடக்கவில்லை. எசேக்கியேல் சண்முகவேல்

தியாகம் இல்லாமல் வெற்றி இல்லை

உங்கள் சிந்தனைக்கு: There is no success without sacrifice. If you succeed without sacrifice, it is because someone has suffered before you. If you sacrifice without success, it is because someone will succeed after. --Rick Joyner தியாகம் இல்லாமல் வெற்றி இல்லை. தியாகம் செய்யாமல் நீங்கள் வெற்றி பெறுகிறீர்கள் என்றால் அதற்குக் காரணம் உங்களுக்கு முன் யாரோ ஒருவர் கஷ்டப்பட்டிருப்பதால் தான். நீங்கள் வெற்றி பெறாமல் தியாகம் செய்தால் அதற்குப் பிறகு யாராவது வெற்றி பெறுவார்கள். --ரிக் ஜாய்னர். தாவீதைப் பொறுத்தளவில் அவன் வாழ்க்கையில் அவன் அடைந்த ஏமாற்றங்கள் சந்தித்த துரோகங்கள், வலிகள், வேதனைகள், ஏராளம். அவன் சவுலை மிகவும் அதிகமாக நேசித்தான் மதித்தான். ஆனால் சவுல் அவன்மீது பொறாமை கொண்டு வாழ்நாள் முழுவதும் அவனைக் கொல்வதற்காகத் துரத்திக் கொண்டே இருந்தான். தாவீது அவனிடமிருந்து தப்பித்து பிழைக்க இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே வந்தான். தான் மிகவும் நேசித்த தன் மகன் அப்சலோமால் அவமானப்பட்டு ஆட்சி இழந்து மிகுந்த மனவேதனை அடைந்தான். அவன் நம்பி இருந்த படைத்தளபதி யோவாப் அவனுக்கு நூற்றுக்கு நூறு உண்மையாக இருக்கவில்லை. அவனுடைய பாடுகள், தியாகங்கள்,மூலமாக ஒரு மிகப்பெரிய ஒருமைப்பட்ட இஸ்ரவேல் தேசத்தை உருவாக்கினான் ஆனால் அவன் மகன் சாலமோன் எந்தப் பாடுகளையும், கஷ்டங்களையும் அனுபவிக்காமல் சுலபமாகத் தகப்பன் சம்பாதித்த ஒருமைப்பட்ட இஸ்ரவேல் தேசத்தைச் சொந்தமாக்கிக் கொண்டான். ‌ தகப்பன் சம்பாதித்த சேர்த்துவைத்த பணத்தில் தேவனுக்கென்று ஒரு ஆலயத்தைச் சாலமன் கட்டினான். தாவீது உருவாக்கிய நிர்வாக அமைப்பை அப்படியே தனதாக்கி கொண்டான். இந்த வெற்றிக்கு எல்லாம் காரணம் தாவீதினுடைய பாடுகளும் தியாகமுமே. அதுபோல நம்முடைய வாழ்க்கையிலும் அநேக நேரங்களில் நம்முடைய வெற்றிகளுக்கு நம்முடைய பாடுகள் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்திருக்கலாம். ஆனால் நம்முடைய பிள்ளைகள் எந்தப் பாடுகளையும் அனுபவிக்காமல் நாம் பெற்ற வெற்றிகளைச் சுவைக்கலாம். சில நேரங்களில் நாம் மிகவும் கஷ்டப்பட்டு பாடுபட்டு எந்தப் பயனையும், வெற்றியையும் பெற முடியாமல் கடந்து போகலாம். ஆனால் அதன் பலனை நம்முடைய சந்ததி நிச்சயமாகப் பெறக்கூடும். இது முழுக்க முழுக்க தேவனுடைய இறையாண்மை சார்ந்த காரியம்‌ நம்முடைய உழைப்புக்கு தகுந்த உயர்வை நாம் ஏன் பெறவில்லை என்று தேவனை கேட்கவும் முடியாது. நாம் அடைய முடியாத சிகரங்களை நம்முடைய பிள்ளைகள் அடையும்போது அதைக் குறித்து ஆச்சரியமடையவும் கூடாது. தாங்கள் விதைத்த ஆன்மீக காரியங்களை அறுவடை செய்த வெற்றி வீரர்களும் உண்டு. விதைத்ததின் பலனை அனுபவிக்காமல் கடந்து போனவர்களும் உண்டு. மற்றவர்கள் விதைத்ததை அறுவடை செய்தவர்களும் உண்டு. இவைகள் அனைத்தும் தேவனுடைய திட்டத்தில் உண்டு. நாம் எந்த நிலையில் அழைக்கப்பட்டிருக்கிறோமோ அந்த நிலையிலேயே நம்முடைய பணிகளைச் செய்து பரலோகத்தில் நிறைவான பலனைப் பெற்றுக் கொள்வோமாக.

தியாகம் இல்லாமல் வெற்றி இல்லை

உங்கள் சிந்தனைக்கு: There is no success without sacrifice. If you succeed without sacrifice, it is because someone has suffered before you. If you sacrifice without success, it is because someone will succeed after. --Rick Joyner தியாகம் இல்லாமல் வெற்றி இல்லை. தியாகம் செய்யாமல் நீங்கள் வெற்றி பெறுகிறீர்கள் என்றால் அதற்குக் காரணம் உங்களுக்கு முன் யாரோ ஒருவர் கஷ்டப்பட்டிருப்பதால் தான். நீங்கள் வெற்றி பெறாமல் தியாகம் செய்தால் அதற்குப் பிறகு யாராவது வெற்றி பெறுவார்கள். --ரிக் ஜாய்னர். தாவீதைப் பொறுத்தளவில் அவன் வாழ்க்கையில் அவன் அடைந்த ஏமாற்றங்கள் சந்தித்த துரோகங்கள், வலிகள், வேதனைகள், ஏராளம். அவன் சவுலை மிகவும் அதிகமாக நேசித்தான் மதித்தான். ஆனால் சவுல் அவன்மீது பொறாமை கொண்டு வாழ்நாள் முழுவதும் அவனைக் கொல்வதற்காகத் துரத்திக் கொண்டே இருந்தான். தாவீது அவனிடமிருந்து தப்பித்து பிழைக்க இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே வந்தான். தான் மிகவும் நேசித்த தன் மகன் அப்சலோமால் அவமானப்பட்டு ஆட்சி இழந்து மிகுந்த மனவேதனை அடைந்தான். அவன் நம்பி இருந்த படைத்தளபதி யோவாப் அவனுக்கு நூற்றுக்கு நூறு உண்மையாக இருக்கவில்லை. அவனுடைய பாடுகள், தியாகங்கள், மூலமாக ஒரு மிகப்பெரிய ஒருமைப்பட்ட இஸ்ரவேல் தேசத்தை உருவாக்கினான் ஆனால் அவன் மகன் சாலமோன் எந்தப் பாடுகளையும், கஷ்டங்களையும் அனுபவிக்காமல் சுலபமாகத் தகப்பன் சம்பாதித்த ஒருமைப்பட்ட இஸ்ரவேல் தேசத்தைச் சொந்தமாக்கிக் கொண்டான். ‌ தகப்பன் சம்பாதித்த சேர்த்துவைத்த பணத்தில் தேவனுக்கென்று ஒரு ஆலயத்தைச் சாலமன் கட்டினான். தாவீது உருவாக்கிய நிர்வாக அமைப்பை அப்படியே தனதாக்கி கொண்டான். இந்த வெற்றிக்கு எல்லாம் காரணம் தாவீதினுடைய பாடுகளும் தியாகமுமே. அதுபோல நம்முடைய வாழ்க்கையிலும் அநேக நேரங்களில் நம்முடைய வெற்றிகளுக்கு நம்முடைய பாடுகள் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்திருக்கலாம். ஆனால் நம்முடைய பிள்ளைகள் எந்தப் பாடுகளையும் அனுபவிக்காமல் நாம் பெற்ற வெற்றிகளைச் சுவைக்கலாம். சில நேரங்களில் நாம் மிகவும் கஷ்டப்பட்டு பாடுபட்டு எந்தப் பயனையும், வெற்றியையும் பெற முடியாமல் கடந்து போகலாம். ஆனால் அதன் பலனை நம்முடைய சந்ததி நிச்சயமாகப் பெறக்கூடும். இது முழுக்க முழுக்க தேவனுடைய இறையாண்மை சார்ந்த காரியம்‌ நம்முடைய உழைப்புக்கு தகுந்த உயர்வை நாம் ஏன் பெறவில்லை என்று தேவனை கேட்கவும் முடியாது. நாம் அடைய முடியாத சிகரங்களை நம்முடைய பிள்ளைகள் அடையும்போது அதைக் குறித்து ஆச்சரியமடையவும் கூடாது. தாங்கள் விதைத்த ஆன்மீக காரியங்களை அறுவடை செய்த வெற்றி வீரர்களும் உண்டு. விதைத்ததின் பலனை அனுபவிக்காமல் கடந்து போனவர்களும் உண்டு. மற்றவர்கள் விதைத்ததை அறுவடை செய்தவர்களும் உண்டு. இவைகள் அனைத்தும் தேவனுடைய திட்டத்தில் உண்டு. நாம் எந்த நிலையில் அழைக்கப்பட்டிருக்கிறோமோ அந்த நிலையிலேயே நம்முடைய பணிகளைச் செய்து பரலோகத்தில் நிறைவான பலனைப் பெற்றுக் கொள்வோமாக.

தியாகம் இல்லாமல் வெற்றி இல்லை

உங்கள் சிந்தனைக்கு: There is no success without sacrifice. If you succeed without sacrifice, it is because someone has suffered before you. If you sacrifice without success, it is because someone will succeed after. --Rick Joyner தியாகம் இல்லாமல் வெற்றி இல்லை. தியாகம் செய்யாமல் நீங்கள் வெற்றி பெறுகிறீர்கள் என்றால் அதற்குக் காரணம் உங்களுக்கு முன் யாரோ ஒருவர் கஷ்டப்பட்டிருப்பதால் தான். நீங்கள் வெற்றி பெறாமல் தியாகம் செய்தால் அதற்குப் பிறகு யாராவது வெற்றி பெறுவார்கள். --ரிக் ஜாய்னர். தாவீதைப் பொறுத்தளவில் அவன் வாழ்க்கையில் அவன் அடைந்த ஏமாற்றங்கள் சந்தித்த துரோகங்கள், வலிகள், வேதனைகள், ஏராளம். அவன் சவுலை மிகவும் அதிகமாக நேசித்தான் மதித்தான். ஆனால் சவுல் அவன்மீது பொறாமை கொண்டு வாழ்நாள் முழுவதும் அவனைக் கொல்வதற்காகத் துரத்திக் கொண்டே இருந்தான். தாவீது அவனிடமிருந்து தப்பித்து பிழைக்க இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே வந்தான். தான் மிகவும் நேசித்த தன் மகன் அப்சலோமால் அவமானப்பட்டு ஆட்சி இழந்து மிகுந்த மனவேதனை அடைந்தான். அவன் நம்பி இருந்த படைத்தளபதி யோவாப் அவனுக்கு நூற்றுக்கு நூறு உண்மையாக இருக்கவில்லை. அவனுடைய பாடுகள், தியாகங்கள், மூலமாக ஒரு மிகப்பெரிய ஒருமைப்பட்ட இஸ்ரவேல் தேசத்தை உருவாக்கினான் ஆனால் அவன் மகன் சாலமோன் எந்தப் பாடுகளையும், கஷ்டங்களையும் அனுபவிக்காமல் சுலபமாகத் தகப்பன் சம்பாதித்த ஒருமைப்பட்ட இஸ்ரவேல் தேசத்தைச் சொந்தமாக்கிக் கொண்டான். ‌ தகப்பன் சம்பாதித்த சேர்த்துவைத்த பணத்தில் தேவனுக்கென்று ஒரு ஆலயத்தைச் சாலமன் கட்டினான். தாவீது உருவாக்கிய நிர்வாக அமைப்பை அப்படியே தனதாக்கி கொண்டான். இந்த வெற்றிக்கு எல்லாம் காரணம் தாவீதினுடைய பாடுகளும் தியாகமுமே. அதுபோல நம்முடைய வாழ்க்கையிலும் அநேக நேரங்களில் நம்முடைய வெற்றிகளுக்கு நம்முடைய பாடுகள் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்திருக்கலாம். ஆனால் நம்முடைய பிள்ளைகள் எந்தப் பாடுகளையும் அனுபவிக்காமல் நாம் பெற்ற வெற்றிகளைச் சுவைக்கலாம். சில நேரங்களில் நாம் மிகவும் கஷ்டப்பட்டு பாடுபட்டு எந்தப் பயனையும், வெற்றியையும் பெற முடியாமல் கடந்து போகலாம். ஆனால் அதன் பலனை நம்முடைய சந்ததி நிச்சயமாகப் பெறக்கூடும். இது முழுக்க முழுக்க தேவனுடைய இறையாண்மை சார்ந்த காரியம்‌ நம்முடைய உழைப்புக்கு தகுந்த உயர்வை நாம் ஏன் பெறவில்லை என்று தேவனை கேட்கவும் முடியாது. நாம் அடைய முடியாத சிகரங்களை நம்முடைய பிள்ளைகள் அடையும்போது அதைக் குறித்து ஆச்சரியமடையவும் கூடாது. தாங்கள் விதைத்த ஆன்மீக காரியங்களை அறுவடை செய்த வெற்றி வீரர்களும் உண்டு. விதைத்ததின் பலனை அனுபவிக்காமல் கடந்து போனவர்களும் உண்டு. மற்றவர்கள் விதைத்ததை அறுவடை செய்தவர்களும் உண்டு. இவைகள் அனைத்தும் தேவனுடைய திட்டத்தில் உண்டு. நாம் எந்த நிலையில் அழைக்கப்பட்டிருக்கிறோமோ அந்த நிலையிலேயே நம்முடைய பணிகளைச் செய்து பரலோகத்தில் நிறைவான பலனைப் பெற்றுக் கொள்வோமாக.

1 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 12

உங்கள் சிந்தனைக்கு: 1 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 12 பரிசுத்த வேதத்தில் சொல்லப்பட்ட நபர்களில் சாலமோனை போலக் கடவுள் ஒரு மனிதனை ஞானத்திலும், செல்வத்திலும் மிகவும் அதிகமாக ஆசீர்வதித்ததாக யாரும் கிடையாது. சாலமோன் கடவுளிடம் கேட்டது தன் அரசாங்கத்தை நிர்வாகம் பண்ண வேண்டிய ஞானத்தை மட்டும்தான். ஆனால் கடவுள் அவன் கேட்காத செல்வத்தையும், ஞானத்தோடு சேர்த்து அளவு இல்லாமல் வழங்கினார். இப்படிப்பட்ட இரட்டை ஆசீர்வாதத்தை வேதத்தில் பெற்றவர்கள் யாரும் கிடையாது. அந்த அளவுக்கு அவனுடைய ஞானமும், அவருடைய செல்வ செழிப்பும் அவனுடைய ஆட்சி காலத்தில் சிறந்து விளங்கியது. சாலொமேனின் ஞானத்தைக்கேட்ட பூமியின் சகல ராஜாக்களிடத்திலுமிருந்து நானாஜாதியான ஜனங்களும் அவனுடைய ஞானத்தைக் கேட்கிறதற்கு வந்தார்கள். (1 இராஜாக்கள் 4:34.) சகல கிழக்கத்திப் புத்திரரின் ஞானத்தையும் எகிப்தியரின் சகல ஞானத்தையும் பார்க்கிலும் சாலொமோனின் ஞானம் சிறந்ததாயிருந்தது. (1 இராஜாக்கள் 4:30) இதற்கெல்லாம் காரணம் தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்ததுதான். (1 இராஜாக்கள் 4:29) அதன் விளைவாக அவன் மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னான். ஆயிரத்து ஐந்து. பாட்டுக்களையும் எழுதினான். (1 இராஜாக்கள் 4:32) அதேபோலவே அவனுக்கு அளவில்லாத செல்வத்தையும் கடவுள் அளித்தார். அவனுடைய நாட்களில் வெள்ளி ஒரு பொருளாய் எண்ணப்படவில்லை. சாலமனுடைய ஆண்டு வருமானம் 25 டன் தங்கம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அவனுடைய சிங்காசனம் தந்தத்தினால் செய்யப்பட்டு பசும்பொன் தகட்டினால் மூடப்பட்டது. அந்தக் காலத்தில் எந்த அரசாங்கத்திலும் செய்யப்படாத‌ அளவுக்குச் சிங்காசனமும் அதில் ஏறுகின்ற படிக்கட்டுகளும் அமைந்து இருந்தது. இதைத் தவிர சாலொமோன் இரதங்களையும், குதிரைவீரரையும் சேர்த்தான், அவனுக்கு ஆயிரத்து நானூறு இரதங்கள் இருந்தது, பன்னீராயிரம் குதிரைவீரரும் இருந்தார்கள், அவைகளை இரதங்கள் வைக்கும் பட்டணங்களிலும், அவர்களை எருசலேமில் தன்னிடத்திலும் வைத்திருந்தான். (1 இராஜாக்கள் 10:26) எல்லாவற்றிற்கும் மேலாகக் கடவுளின் கட்டளையை மீறி சாலொமோன், பார்வோனின் குமாரத்தியை நேசித்ததுமல்லாமல், மோவாபியரும், அம்மோனியரும், ஏதோமியரும், சீதோனியரும், ஏத்தியருமாகிய அந்நிய ஜாதியாரான அநேகம் ஸ்திரீகள்மேலும் ஆசைவைத்தான். 1 இராஜாக்கள் 11:1. இதன் விளைவாகச் சாலமோன் தேவனுடைய இரண்டு முக்கியமான கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் போனான். 1 உபா17:6 சொல்லப்பட்டபடி அரசன் குதிரைகளைச் சம்பாதியாமலும், அநேக குதிரைகளைச் சம்பாதிக்கும்படிக்கு ஜனங்களைத் திரும்ப எகிப்துக்குப் போகப்பண்ணாமலும் இருக்கக்க வேண்டும் என்கிற கட்டளையை மீறினான். 2. உபா 7:1-6 ல் சொல்லப்பட்டபடி, ஜனம் பெருத்த ஜாதிகளாகிய ஏத்தியர், கிர்காசியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர்களௌடு சம்பந்தம் கலக்காமால், குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமலும், அவர்கள் குமாரத்திகளை குமாரருக்குக் கொள்ளாமலும் இருப்பாயாக என்கிற கட்டளையையும் மீறினான். இதைக் குறித்து தேவன் இரண்டு முறை எச்சரித்தும் சாலமோன் அதற்குச் செவி சாய்க்கவில்லை. இதனால் கர்த்தர் அவன்மேல் மிகவும் கோபம் கொண்டார்.11: 10 தான் எழுதிய நீதிமொழிகளையே தன்னால் பின்பற்ற முடியாமல் போயிற்று. நீதி19:3. தன்னுடைய இறுதி நாட்களிலா தன் தகப்பனாகிய தாவீதைப் போலக் கர்த்தரைப் பூரணமாய்ப் பின்பற்றாமல், கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். (1 இராஜாக்கள் 11:6) சாலொமோன் எருசலேமுக்கு எதிரான மலையிலே மோவாபியரின் அருவருப்பாகிய காமோசுக்கும், அம்மோன் புத்திரரின் அருவருப்பாகிய மோளோகுக்கும் மேடையைக் கட்டினான். (இராஜாக்கள் 11:7.) தன் தகப்பன் தாவீதை போல் கஷ்டப்படாமல் பாடுபடாமல் அரசாங்கத்தையும், தேவனுடைய ஆசீர்வாதத்தையும் சுலபமாகச் சம்பாதித்த சாலமோன் இறுதி நாட்களில் கடவுளை மறுதலித்து பிற தேவர்களைப் பின்பற்றினான் இதன் மூலம் நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள். 1. செல்வ செழிப்பு, உலக ஞானம் ஆடம்பரங்கள் இவைகள் நிரந்தரமான ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் அல்ல. 2. நாம் எப்பொழுதும் பிரித்தெடுக்கப்பட்ட தேவனுடைய இனக்குழு என்பதை ஒருபோதும் மறந்து விடக் கூடாது. விசுவாசிகளுடைய உறவு என்பது இயேசு கிறிஸ்து நமக்காகச் சிந்திய இரத்தத்தினால் ஏற்பட்டது. இந்த உறவில் மொழி, இன, சாதி இவற்றின் அடிப்படையிலான இரத்த பந்தங்கள் இணையக் கூடாது. இந்த உபதேசத்தை சபை உறுதியாகப் பின்பற்ற வேண்டும் ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நாம் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவுபெறப்போகிற புத்தியீனராகக் காணப்படக் கூடாது கலாத்தியர் 3:3

எபிரேயருக்கு எழுதப்பட்ட கடிதத்தின் சில முக்கிய சிறப்புகள்.

உங்கள் சிந்தனைக்கு ! எபிரேயருக்கு எழுதப்பட்ட கடிதத்தின் சில முக்கிய சிறப்புகள். 1 பல கேள்விகளுக்குப் பதில் கிடைக்காத ஒரு புதிராக‌ உள்ள கடிதம். யார் எழுதினார்? யாருக்காக எழுதப்பட்டது? எப்பொழுது எழுதப்பட்டது? என்பது தேவனுக்கு மட்டுமே தெரியும். 2.விசுவாசிகளின் ஆசாரியத்துவத்தை தெளிவாக விளக்கும் ஒரு நிருபம். 3. எல்லோருக்கும் தேவனிடத்தில் நெருங்க இலவசமான சமவாய்ப்பு என்பதே எபிரேய நிருபத்தின் முக்கிய சாரம். we have free, equal, and unlimited access to God. A manual for a believer 4.தேவனுடைய பிள்ளைகள் பின்வாங்கிப்போகலாம் என்பதை எச்சரிக்கும் ஒரு அருமையான நிருபம். 5.It throws more light on Jesus Christ than any other New Testament part. கிறிஸ்துவை பற்றிப் புதிய ஏற்பாட்டில் உள்ள மற்ற கடிதங்களில் சொல்லப்படாத, விளக்கப்படாத, பல காரியங்களை இந்தப் புத்தகத்தில் நாம் படிக்கலாம். 6.இந்த நூல் ஐந்தாவது நற்செய்தி நூல் என்றும் சொல்லப்படுகிறது. ஏனென்றால் இந்த நூலில் தான் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தற்போதைய ஊழியத்தைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. இதுபற்றி வேறு எந்தப் புதிய ஏற்பாட்டு நூலிலும் சொல்லப்படவில்லை. its emphasis on Christ’s present work. 7. மேலும் இந்த நூல் புதிய ஏற்பாட்டையும் பழைய ஏற்பாட்டையும் இணைக்கும் ஒரு பாலமாகத் திகழ்கிறது. பழைய ஏற்பாட்டில் மையப் பொருள்களாக உள்ள ஆசரிப்பு கூடாரம், பலிகள், தேவாலயம், ஆசாரியத்துவம் போன்றவைகளைப் பற்றி வேறு எந்த நிரூபத்திலும் சொல்லப்படாத கருத்துக்கள் இந்தக் கடிதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தக்கடிதம் வேதாகமத்தில் சேர்க்கப்படாமல் இருந்திருக்குமானால் இயேசு கிறிஸ்துவின் மகா பிரதான ஆசாரிய ஊழியத்தைப் பற்றிய ஒரு மிகத் தெளிவான புரிதல் சபைகளுக்குக் கிடைத்திருக்காது . 8.மேலும் விசுவாச வீரர்களின் பட்டியலைப் பற்றிய மிக அழகான ஒரு விளக்கம் வேறு எந்தப் புதிய ஏற்பாட்டு கடிதங்களிலும், நூல்களிலும், கிடையாது. இதை ஒரு மகிழ்ச்சியான புத்தகமாக நாம் படிக்கும்போது உண்மையாகவே நம் உள்ளத்தில் பழைய ஏற்பாட்டு பற்றிய பல புரிதல்கள் நமக்கு உண்டாகும். 10.It was regarded as the best Greek in NT இந்தக் கடிதம் மிக உயரிய கிரேக்க நடையில் எழுதப்பட்டது. புதிய ஏற்பாட்டில் உள்ள மற்ற அனைத்து நூல்களும் எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் சாதாரண கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. ஆனால் இந்தக் கடிதம் மட்டும் மிக உயர்ந்த கிரேக்க (classical Language)நடையில் எழுதப்பட்டது என்று பலரும் சொல்லுகிறார்கள். 'We should be thankful to God for the work of this great nameless one who wrote with incomparable skill and beauty about Jesus' WILLIAM BARCLAY

Divisions in the life of Jacob

உங்கள் சிந்தனைக்கு: Divisions in the life of Jacob வேதத்தில் பிரிவினைகளால் (Divisions)மிகவும் பாதிக்கப்பட்ட முதல் மனிதன் யார் என்றால் யாக்கோபுதான். பிறக்கும்போதே மிகப்பெரிய ஆளுகை அழைப்போடு தெரிந்து கொள்ளப்பட்டவன்‌. ஆனால் தன்னுடைய தாய் தகப்பன் இடையே காணப்பட்ட ஒற்றுமையின்மையால் தகப்பனின் ஆசிர்வாதத்தை தாயின் தவறான வழிமுறையின் மூலமாகப் பெற முற்பட்டபோது அதன் விளைவாக வீட்டை விட்டு வெளியேறித் தனது மாமா வீட்டுக்குச் சென்று 20 வருடங்கள் கழித்த பிறகும் கூடத் தன் தாயைப் பார்க்க முடியாமல் போய்விட்டது‌.இது பிரிவினையால் யாக்கோபுக்கு வந்த முதல் சோதனை. மேலும் அதன் மூலமாக ஏசாவுக்கும், யாக்கோபுக்கும் ஏற்பட்ட சகோதர பிரிவினை. யாக்கோபு அதிகமாக நேசித்தது ராகேலைதான். ஆனால் அந்த முயற்சியில்அவனுக்கு கிடைத்த இரண்டு மனைவிகளுக்கு இடையில் ஏற்பட்ட ஒற்றுமையின்மை.(Division) யாக்கோபின் அன்பை பெற இரண்டு மனைவிகளுக்கு இடையில் ஏற்பட்ட பிரிவினை. தான் நேசித்த ராகேல் மரித்தபிறகு அவளுடைய மூத்த குமாரனை நேசித்த காரணத்தினால் மற்ற பத்து குமாரர்களுக்கும் யோசேப்புக்கும் இடையில் ஏற்பட்ட பிரிவினை . இது போக ஆதியாகமம் 32 1-3 ல் சொல்லப்பட்டபடி தேவதூதர்களுக்கு ஒரு முகாம் அமைத்தான்.பிறகு தன் குடும்பத்திற்கென்று தனியாக முகாம் அமைத்தான். இந்த இரண்டு முகாம்களின் மத்தியில் அவன் தனித்து விடப்பட்டான். அனைத்து பிரிவினைகளும் அவன் தானே ஏற்படுத்திக் கொண்ட பிரிவினைகள் அல்ல. அவன்மேல் திணிக்கப்பட்ட பிரிவினைகள். அப்படி திணிக்கப்பட்ட காரணத்தினால் தான் அவன் எல்லாவற்றையும் மேற்கொள்ள முடிந்தது. நாம் கற்றுக் கொள்ளக்கூடிய காரியங்கள் 1. பிரிவினைகளை நாமே உண்டாக்கினால் அந்தப் பிரிவினைகளினால் நாம் அழிந்து போய் விடுவோம். 2. பிரிவினைகள் நம்மேல் திணிக்கப்படுமானால் அதை மேற்கொள்ள ஜெயம் கொள்ள நமக்குக் கடவுள் கிருபை தருவார்‌

Divisions in the life of Jacob

உங்கள் சிந்தனைக்கு: Divisions in the life of Jacob வேதத்தில் பிரிவினைகளால் (Divisions)மிகவும் பாதிக்கப்பட்ட முதல் மனிதன் யார் என்றால் யாக்கோபுதான். பிறக்கும்போதே மிகப்பெரிய ஆளுகை அழைப்போடு தெரிந்து கொள்ளப்பட்டவன்‌. ஆனால் தன்னுடைய தாய் தகப்பன் இடையே காணப்பட்ட ஒற்றுமையின்மையால் தகப்பனின் ஆசிர்வாதத்தை தாயின் தவறான வழிமுறையின் மூலமாகப் பெற முற்பட்டபோது அதன் விளைவாக வீட்டை விட்டு வெளியேறித் தனது மாமா வீட்டுக்குச் சென்று 20 வருடங்கள் கழித்த பிறகும் கூடத் தன் தாயைப் பார்க்க முடியாமல் போய்விட்டது‌.இது பிரிவினையால் யாக்கோபுக்கு வந்த முதல் சோதனை. மேலும் அதன் மூலமாக ஏசாவுக்கும், யாக்கோபுக்கும் ஏற்பட்ட சகோதர பிரிவினை. யாக்கோபு அதிகமாக நேசித்தது ராகேலைதான். ஆனால் அந்த முயற்சியில்அவனுக்கு கிடைத்த இரண்டு மனைவிகளுக்கு இடையில் ஏற்பட்ட ஒற்றுமையின்மை.(Division) யாக்கோபின் அன்பை பெற இரண்டு மனைவிகளுக்கு இடையில் ஏற்பட்ட பிரிவினை. தான் நேசித்த ராகேல் மரித்தபிறகு அவளுடைய மூத்த குமாரனை நேசித்த காரணத்தினால் மற்ற பத்து குமாரர்களுக்கும் யோசேப்புக்கும் இடையில் ஏற்பட்ட பிரிவினை . இது போக ஆதியாகமம் 32 1-3 ல் சொல்லப்பட்டபடி தேவதூதர்களுக்கு ஒரு முகாம் அமைத்தான்.பிறகு தன் குடும்பத்திற்கென்று தனியாக முகாம் அமைத்தான். இந்த இரண்டு முகாம்களின் மத்தியில் அவன் தனித்து விடப்பட்டான். அனைத்து பிரிவினைகளும் அவன் தானே ஏற்படுத்திக் கொண்ட பிரிவினைகள் அல்ல. அவன்மேல் திணிக்கப்பட்ட பிரிவினைகள். அப்படி திணிக்கப்பட்ட காரணத்தினால் தான் அவன் எல்லாவற்றையும் மேற்கொள்ள முடிந்தது. நாம் கற்றுக் கொள்ளக்கூடிய காரியங்கள் 1. பிரிவினைகளை நாமே உண்டாக்கினால் அந்தப் பிரிவினைகளினால் நாம் அழிந்து போய் விடுவோம். 2. பிரிவினைகள் நம்மேல் திணிக்கப்படுமானால் அதை மேற்கொள்ள ஜெயம் கொள்ள நமக்குக் கடவுள் கிருபை தருவார்‌

1 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 12

உங்கள் சிந்தனைக்கு: 1 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 12 "கர்த்தர் நம்முடைய பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, அவர்களோடே பண்ணின உடன்படிக்கை இருக்கிற பெட்டிக்காக அதிலே ஒரு ஸ்தானத்தை உண்டாக்கினேன் என்றான்." (I இராஜாக்கள் 8:21) The art of the covenant had now a settled abode. இந்தத் தேவனுடைய பெட்டி இருக்கும் இடம்தான் மகா பரிசுத்த ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது. புதிய ஏற்பாட்டைப் பொறுத்த அளவில் நாம் கூடுகின்ற திருச்சபையும் தேவனுடைய ஆலயம் என்று அழைக்கப்படுகின்றது. 1கொரி3:16 விசுவாசிகளாகிய நாமும் கூடத் தேவனுடைய ஆலயமாகக் கருதப்படுகிறோம். 2 கொரி 6:16 இவைகள் இரண்டிலும் மையமாக இருக்க வேண்டியது தேவனுடைய வார்த்தைகளே. எந்த ஒரு திருச்சபை தேவனுடைய வார்த்தைகளை அதிகமாகத் தியானித்து, ஆராய்ந்து வார்த்தைகளுக்கு அதிக முக்கியத்துவத்தை கொடுத்து,  தேவனுடைய வார்த்தைகளைச் சிங்காசனத்தில் வைத்திருக்கிறதோ அந்தச் சபை கர்த்தருடைய பார்வையில் ஒரு மகிமையான சபையாகக் கருதப்படும். எந்தச் சபை ஞாயிற்றுக்கிழமை ஆராதனைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை வேதப் பாட வகுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விசுவாசிகளை வரவழைத்து அவர்களுக்கு வசனத்தைப் போதிக்கின்றதோ நிச்சயமாக அந்தச் சபை அடுத்த தலைமுறையைத் தாண்டிச் செல்லும். அப்படி இல்லாவிட்டால் வெறும் கட்டடங்கள் தான் காலத்தைக் கடந்து செல்லும். அப்.20:7 ல் சொல்லப்பட்ட நிகழ்வுகள் இன்றைக்கு சபைகளில் நடக்கின்றதா? (வாரத்தின் முதலாம் நாளிலே, நாங்கள் அப்பம் பிட்கும்படி ஒன்று கூடியிருந்தோம். பவுல் மக்களுக்குப் பிரசங்கித்துக் கொண்டிருந்தான். அவன் மறுநாள் போக எண்ணியிருந்ததினாலே, நடு இரவுவரை பேசிக்கொண்டேயிருந்தான். (அப்போஸ்தலர் 20:7) முழு இரவு ஜெபம் என்று பேசுகிறோம்.ஆனால் முழு இரவு வேத பாடம் அல்லது வேத ஆராய்ச்சி அல்லது பிரசங்கம் என்று இன்றைக்கு சபைகளில் வேத வசனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து   வேத போதனைகள்‌ நடைபெறுகிறதா? புதிய ஏற்பாட்டின் ஆரம்ப காலத்தில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றது என்பது இன்றைக்கு எத்தனை விசுவாசிகளுக்குத் தெரியும்? வேத ஆராய்ச்சி தியானம் என்பது மிகவும் மகிழ்ச்சியான காரியம். தேவனை மணிக்கணக்கில் ஆராதிக்க கூடுமானால் தேவனுடைய வேதத்தையும் அதைவிட மணிக்கணக்கில் தியானம் செய்ய நம்மால் முடியும்.  இப்படி சபைகளில் காரியங்கள் நிகழும்போது தான் அந்தச் சபையில் வேதம் தன்னுடைய இடத்தில் இருக்கிறது என்று அர்த்தம். அதேபோல் விசுவாசியும் தங்களுடைய வாழ்க்கையில் ஆராதனையைப் போல வேத ஆராய்ச்சியையும் மகிழ்ச்சியாகச் செய்யும்பொழுது அவன் ஒருக்காலும் இடறமாட்டான். அனேக மக்களுக்கு ஆசீர்வாதமாகக் காணப்படுவான். தன் இதயத்திலே வேதத்தை வைத்துத் தியானிக்க கூடிய விசுவாசிகளை இன்றைக்கு பார்ப்பது அரிதாக இருக்கிறது. இன்றைக்கு வேத தியானம், வேத ஆராய்ச்சி போன்ற சொற்கள் விசுவாசிகளுக்கு ஒரு கசப்பான மருந்தாக இருக்கிறது. எத்தனை விசுவாசிகள் தங்கள் போதகர்களை வேத பாடம் நடத்த சொல்லி நிர்பந்திக்கிறார்கள் என்பது கேள்விக்குறியே. எப்படி சாலொமோன்  கட்டின ஆலயத்தில் தேவனுடைய உடன்படிக்கை பெட்டி இருந்த இடம் தேவனுடைய சமூகம் இருந்த இடமாகக் கருதப்பட்டதோ அதுபோல் தேவனுடைய வசனத்தைத் தன் இருதயத்தில் வைத்து அதன்படி  வாழ்கிறவன் தேவனுடைய பிரசன்னத்தில் வாழ்பவனாகக் கருதப்படுவான். போதகர்கள் அப்படி நடத்த இயலாவிட்டால் அனுபவம் வாய்ந்த  நன்கு கற்றறிந்த முதிர்ந்த விசுவாசிகள் வேத தியானத்தில் ஆர்வம் உள்ள இளம் விசுவாசிகளை வைத்துப் போதிப்பதில் எந்தத் தவறும் இல்லை. நோக்கங்கள் கடவுளுடைய பார்வையில் சீராக இருக்க வேண்டும். 20 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு சில இரவு வேத பாடங்களை அடியேனும் நடத்தியிருக்கிறேன். அது ஒரு மகிழ்ச்சியான அனுபவங்கள். இன்றைக்கு வேதத்தைத் தூக்கிப் பிடிக்கிற சபையும் விசுவாசிகளும் தேவை.

1 அரசர்கள் புத்தகம் வேதபாடம் 11

உங்கள் சிந்தனைக்கு: 1 அரசர்கள் புத்தகம் வேதபாடம் 11 சாலமோன் அரசன் கடவுளுடைய திட்டத்தின் படியும் தாவீதின் விருப்பத்தின்படியும் மிகப் பிரம்மாண்ட பொருட்செலவிலான ஒரு ஆலயத்தைத் தேவனுக்காகக் கட்டினான். அந்த ஆலயம் கட்டி முடித்துப் பதினோரு மாதங்கள் கழித்து தேவனுடைய உடன்படிக்கை பெட்டியையும், ஆசரிப்புக் கூடாரத்தில் உள்ள தளவாடங்களையும் கொண்டு வந்து அந்த ஆலயத்தில் நிலை நிறுத்தினான். சாலமோன் கட்டின ஆலயத்தில் வைக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டியில் இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டபின் கர்த்தர் அவர்களோடே உடன்படிக்கை பண்ணுகிறபோது, மோசே ஓரேபிலே அந்தப் பெட்டியில் வைத்த இரண்டு கற்பலகைகளே அல்லாமல் அதிலே வேறொன்றும் இருந்ததில்லை. (I இராஜாக்கள் 8:9) ஆனால் ஆசரிப்புக் கூடாரத்தில் உள்ள அந்தப் பெட்டியிலே மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரமும், ஆரோனுடைய தளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன. (எபிரெயர் 9:4, யாத்16:33,எண்ணா17:10) ஏலி‌ பிரதான ஆசாரியனாக இருந்த காலத்தில் பெலிஸ்தியரோடு ஏற்பட்ட போரில் உடன்படிக்கை பெட்டி எதிரிகளால் கைப்பற்றப்பட்டது. பிறகு 70 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியுமாக அது தாவீதின் நகரத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் ஆரோனுடைய தளிர்த்த கோலும் மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரமும் எதிரிகளால் கைப்பற்றப்பட்டு இருக்கலாம் அல்லது காணாமல் போய் இருக்கலாம். ஆனால் தேவனுடைய வார்த்தைகள் எழுதப்பட்ட கற்பலகைகள் பாதுகாக்கப்பட்டது. இதை ஒரு சாதாரண நிகழ்வாக நாம் பார்க்கக் கூடாது. தேவனுடைய அனுமதியின்றி எந்த ஒரு நிகழ்வும் நடக்க முடியாது. தேவனுடைய வார்த்தைகள் பொறிக்கப்பட்ட கற்பலகைகளை தேவன் பாதுகாக்க முடியுமானால் ஆரோனுடைய துளிர்த்த கோலையும், மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரத்தையும் அவரால் பாதுகாத்திருக்க முடியும். ஆனால் புதிய தேவாலயத்தில் அவைகள் வைக்கப்பட அவசியமில்லையெனக் கடவுள் கருதி இருக்கலாம். இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்திர வாழ்க்கையை கடந்து ஒரு புதிய பரிமாணத்திற்குள் வந்து விட்டார்கள். அவர்களுக்கென்று ஒரு ஒரு அரசையும் மன்னனையும் ஏற்படுத்தி விட்டார்கள். கூடாரத்தில் தங்கின தேவ சமூகம் இப்பொழுது ஆலயத்திற்கு வந்து விட்டது. வனாந்தர வாழ்க்கைக்கு அடையாளமாக இருந்த அந்தப் பொருள்கள்‌ இந்தப் புதிய மாறுபட்ட அமைப்பிற்கு தேவை இல்லை என்று கர்த்தர் கருதி இருக்கலாம். இனி அவர்களுக்கு வேண்டியது ஆண்டவருடைய வார்த்தைகள் மட்டுமே. அன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் நமக்குத் தேவை வேத வாக்கியங்கள்தான் என்பதற்கு அடையாளமாகக் கற்பனைகள் தேவனுடைய ஆலயத்தில் வைக்கப்பட்டது. இதன் மூலம் தேவன் நமக்கு உணர்த்தும் பாடங்கள். சபை பாரம்பரியங்கள், ஒழுங்குகள், பண்டிகை, காலங்கள், நேரங்கள் அவைகள் உருவாக்கப்பட்ட காலங்களுக்குத் தேவையாக இருந்திருக்கலாம், பயனுள்ளவைகளாக இருந்திருக்கலாம். ஆனால் காலங்களும் நேரங்களும் சூழ்நிலைகளும் மாறுகின்றபொழுது அதே பாரம்பரியங்களை, பண்டிகைகளைச் சபை ஒழுங்குகளை நாம் பின்பற்ற வேண்டும் என்கிற அவசியம் கிடையாது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம். நாம் கடைபிடிக்க வேண்டியது வேத வசனத்தை மட்டும் தான் அவைகள் போதிக்கின்ற காரியங்கள்தான். பாரம்பரியங்களும் சடங்குகளும் வசனத்தில் போதிக்கப்படும், வலியுறுத்தப்படும் சத்தியங்களுக்கு இணையானவைகள் அல்ல. அவைகளை கடந்து நாம் செல்ல வேண்டும். சடங்குகள், பண்டிகைகள் நம்மைச் சிறை படுத்தக் கூடாது. எவ்வளவு உயர்ந்த நோக்கத்திற்காக அவைகள் உருவாக்கப்பட்டிருந்தாலும் அவைகள் வசனங்கள் போதிக்கின்ற உபதேசங்களுக்கு இணையானவைகள் அல்ல. சாலமோன் தேவாலயத்தில் தேவன் பாதுகாத்த கர்த்தருடைய வார்த்தைகள் இன்றைக்கும் சபைகளில் உயர்த்தப்பட வேண்டும். பாரம்பரியங்கள் அல்ல. கடவுள் தான் ஏற்படுத்திய ஒழுங்கு முறைகளையே காலத்துக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளும்பொழுது மனிதர்களுடைய பாரம்பரியங்கள், ஒழுங்குகள் எம்மாத்திரம்? இவைகளை சபை சிந்திக்க வேண்டும். மனிதர்கள் ஏற்படுத்திய பாரம்பரியங்களை, சடங்குகளை, வல்லமையுள்ள ஜீவனுள்ள வசனத்திற்கு கீழாக வைக்கும்பொழுது தேவன் அந்தச் சபைகளை விட்டுக் கடந்து போய் விடுவார். சாலமன் கட்டிடன தேவாலயம் பாபிலோனியர்களால் தகர்க்கப்பட்டபோது அந்த உடன்படிக்கை பெட்டியும் காணாமல் போய்விட்டது. மறுபடியுமாகப் புதுப்பிக்கப்பட்ட ஆலயத்தில் உடன்படிக்கைப் பெட்டி இல்லாத ஆலயமாகத்தான் அந்த ஆலயம் காணப்பட்டது. இதுவும் இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுடைய வசனங்களுக்கு எவ்வளவு விலகி இருந்தார்கள் என்பது ஒரு அடையாளம். இன்று நமது வீடுகளில் வேதம் ஒரு அலங்கார பொருளாகக் காட்சியளிக்கின்றன. அல்லது ஞாயிற்றுக்கிழமை தோறும் எடுத்துச் செல்லுகின்ற ஒரு பொருளாகக் காணப்படுகின்றது. இன்னும் சிலருக்கு ஏதோ கடமைக்காகப் பாடத்தைப் படிக்கின்ற மாணவன் கையில் உள்ள புத்தகத்தைப் போல் இருக்கிறது. இன்றைய கிறிஸ்தவர்களுக்கு வேதத்தின் மகத்துவங்களை பற்றிய ஒரு புரிதல் காலத்தின் கட்டாயம்.

1அரசர்கள் புத்தகம் வேத பாடம் 10

உங்கள் சிந்தனைக்கு 1அரசர்கள் புத்தகம் வேத பாடம் 10 சாலமோன் கடவுளின் கட்டளைப்படி மிகப் பிரம்மாண்டமான மகிமையான ஒரு தேவாலயத்தைக் கட்டினான். அதைக் கட்டி முடிக்க அவனுக்கு ஏழு ஆண்டுகள் ஆயிற்று. ஆனாலும் உடன்படிக்கைப் பெட்டியும் ஆசரிப்பு கூடாரத்தின் தளவாடங்களும் ஆலயத்திற்குள் கொண்டுவரப்படவில்லை. ஆலயம் கட்டி முடித்துப் பதினோரு மாதங்களுக்குப் பிறகு சாலமோன் தாவீதின் பட்டணமான சீயோனிலிருந்து உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவருவதற்காக, இஸ்ரயேலின் முதியவர்களையும், எல்லா கோத்திரத் தலைவர்களையும், இஸ்ரயேல் குடும்பத் தலைவர்களையும் எருசலேமில் ஒன்றுகூடும்படி தன்னிடம் வரவழைத்தான். 1 இராஜாக்கள் 8:1-2 Solomon summoned the elders, heads of the tribe, and the chiefs of Israelite families. கடவுளின் பெட்டியையும் ஆசாரியரும், சபைக் கூடாரத்தையும், அதனுள்ளிருந்த பரிசுத்த பொருட்களை லேவியரும் தூக்கிக்கொண்டு வந்தனர். அவனோடே கூடிநின்ற இஸ்ரயேலின் முழுசபையும் உடன்படிக்கைப் பெட்டியின் முன் வந்து, அநேக செம்மறியாடுகளையும், ஆடுமாடுகளையும் பலியிட்டனர். அவற்றின் எண்ணிக்கையைக் கணக்கிடவோ குறித்துவைக்கவோ அவர்களால் முடியவில்லை. 1 இராஜாக்கள் 8:4-5 அதன்பின் ஆசாரியர்கள் யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியை எடுத்து, ஆலயத்தின் உட்புற பரிசுத்த இடமான மகா பரிசுத்த இடத்துக்குக் கொண்டுபோய், அங்கிருந்த கேருபீன்களின் செட்டைகளின் கீழ் வைத்தார்கள். 1 இராஜாக்கள் 8:6. அதன் பிறகு ஆசாரியர்கள் பரிசுத்த இடத்தைவிட்டு வெளியே வந்தபோது, கடவுளின் ஆலயத்தை மேகம் நிரப்பியது. அந்த மேகத்தின் நிமித்தம் ஆசாரியர்கள் தாங்கள் செய்யவேண்டிய பணிகளைச் செய்யமுடியாமல் இருந்தார்கள். ஏனெனில் கடவுளின் மகிமை அவருடைய ஆலயத்தை நிரப்பியது. 1 இராஜாக்கள் 8:10-11 இந்த நிகழ்வுகளில் நாம் கவனிக்க கூடிய காரியம் ஒன்று உண்டு மிகவும்பிரம்மாண்டமான கட்டப்பட்ட ஆலயம். தேவனுடைய திட்டத்தின் படி கட்டப்பட்ட ஆலயம். இஸ்ரேல் மக்கள் ஒருமித்து ஆதரவு கொடுத்து இணைந்து கட்டிய ஆலயம். இந்தநிகழ்வில் இஸ்ரவேல் கோத்திரத்து தலைவர்களும் லேவியர்களும் ஆசாரியர்களும் ஏன் சாலமோன் அரசனும் அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்கள். இவைகள் எல்லாம் சிறப்பான காரியங்கள் தான் ஆனாலும் அதைவிட மகிமையான காரியம் ஒன்று உண்டு அது என்னவென்றால் தேவனுடைய உடன்படிக்கை பெட்டி மகா பரிசுத்த ஸ்தலத்தில் வைத்துவிட்டு ஆசாரியர்கள் வெளியே வந்தவுடனே தேவனுடைய மகிமை அளவு இல்லாமல் நிரப்பிய அந்த நிகழ்வுதான். இந்த நிகழ்வோடுதான் தேவனுடைய ஆலய பிரதிஷ்டை என்கிற ஒரு நிகழ்வு முடிவடைகிறது. உடன்படிக்கைப் பெட்டி என்பது தேவனுடைய சமூகத்தைக் குறிப்பது. Symbol of presence of the Lord உடன்படிக்கைப் பெட்டி என்பது இயேசு கிறிஸ்துவை குறிப்பது. (Typical of Christ) அந்த உடன்படிக்கையில் இருந்தது கடவுள் கொடுத்த கட்டளைகள். நம்முடைய வாழ்க்கையில் இயேசு கிறிஸ்துவும் அவருடைய வார்த்தைகளும் நம்மோடு இல்லாவிட்டால் நாம் மகிமை நிறைந்த ஒரு வாழ்க்கை வாழ முடியாது. எவ்வளவுதான் நம்முடைய வெளித்தோற்றம் எவ்வளவு பிரம்மாண்டமாக இருந்தாலும், ஆதரவாக இருப்பவர்கள் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும், நமக்காக ஜெபிக்க கூடியவர்கள் எவ்வளவு சிறந்த ஊழியக்கார்களாக இருந்தாலும் தேவனுடைய பெட்டியாகிய இயேசு கிறிஸ்துவும் அவருடைய வார்த்தைகளும் நம்மோடு இல்லாவிட்டால் நாம் இயேசுவுக்காக அவர் மகிமை வெளிப்படும்படியான ஒரு வாழ்க்கை நிச்சயமாக வாழ முடியாது. நம்முடைய மையப்புள்ளி இயேசு கிறிஸ்து தான். நம்முடைய வாழ்வாதாரம் வசனம் தான். இயேசு கிறிஸ்துவையும் அவருடைய வார்த்தைகளையும் நாம் ஒதுக்கித் தள்ளி விட்டு வாழ்கின்ற வாழ்க்கை சாலமோன் கட்டி 11 மாதங்கள் எதுவுமே நடைபெறாமல், இருந்த தேவப்பிரசன்னம் இல்லாமல் இருந்த அந்த ஆலயம்போல் இருக்கும். அதுபோல் இன்றைக்கு ஆலயங்கள் பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கலாம் கோடிக்கணக்கில் செலவழித்து உலக மக்களை அசத்தலாம் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே வந்து செல்லலாம். மிகப்பெரிய தேவனுடைய ஊழியர்கள் பிரசங்கம் பண்ணலாம். ஆனால் அந்தச் சபையில் கிறிஸ்து உண்மையான ஆவிக்குரிய தலைவராக இருக்கிறாரா? அவருடைய வார்த்தைகள் கலப்படம் இல்லாமல் போதிக்கப்படுகிறதா? அந்தச் சபையில் தேவன் மகிமைப்படுகிறாரா ?அல்லது மனிதர்கள் உயர்த்தப்படுகிறார்களா? காணக்கூடிய கட்டிடத்தில் மாமிச கண்ணுக்குப் புலப்படாத தேவனை உணர முடிகிறதா? ஆதி நாட்களில் சிறிய சபைகளில் கூடாரங்களில் ஆராதனையில் நான் பெற்ற மகிழ்வு இன்று மெகா‌ சபைகளில் நான் தேவ பிரசன்னத்தை உணர முடியவில்லை. இதுஎன்னுடைய பார்வை. அவ்வளவு பிரம்மாண்டமான ஆலயம் கட்டப்பட்டு 500 ஆண்டுகளைக் கூடத் தாண்ட முடியவில்லை. தேவன் அந்தக் கட்டிடத்தை விட்டுக் கடந்து போய்விட்டார். நம்முடைய வாழ்க்கையில் என்றென்றைக்கும் பிரிக்க முடியாதவைகள் இயேசு கிறிஸ்துவும் அவருடைய வார்த்தைகள் மட்டுமே

வேதம் எப்படி தொகுக்கப்பட்டது என்பதை பற்றி உள்ள ஒரு புரிதல் எல்லா விசுவாசிகளுக்கும் அவசியம்

உங்கள் சிந்தனைக்கு: வேதம் எப்படி தொகுக்கப்பட்டது என்பதை பற்றி உள்ள ஒரு புரிதல் எல்லா விசுவாசிகளுக்கும் அவசியம். சாலமோன் அரசன் மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னான்; அவனுடைய பாட்ல்கள் ஆயிரத்து ஐந்து. 1 இராஜாக்கள் 4:32 ஆனால் அந்த 3000 நீதிமொழிகளில் சில நூறுகள்தான் வேத புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது சங்கீதங்கள் புத்தகத்தில் இரண்டு சங்கீதங்கள் மட்டும் சாலமோன் எழுதியதாகச் சொல்லப்படுகிறது (72,127) வேத புத்தகத்தில் சாலமனை போல் கடவுளிடமிருந்து ஞானத்தை அறிவைப் பெற்றவர் எவரும் கிடையாது. நிர்வாகத்தை நடத்துவதற்கு ஏற்ற ஞானத்தையும், உலக ஞானத்தையும் அளவு இல்லாமல் தேவன் அவனுக்குக் கொடுத்தார். அதன் விளைவாக‌ அவன் எழுதிய நீதிமொழிகள், பாடல்கள் அனேகம். ஆனாலும் அவைகள் எல்லாம் வேத புத்தகத்தில் இடம் பெறவில்லை. அவைகள் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. அதைத் தேவன் அனுமதித்தார். எவ்வளவு ஞானத்தை தேவன் அவனுக்குக் கொடுத்திருந்தாலும் எவ்வளவு சிறந்த சங்கீதங்களை, நீதி மொழிகளை எழுதி இருந்தாலும் அவைகள் அக்கால ஜனங்களுக்குப் பயனுள்ளவைகளாக இருந்தாலும் கடவுள் எல்லாவற்றையும் தேவனுடைய வார்த்தைகளாக அங்கீகரிக்க அனுமதிக்கவில்லை. எவைகள் எக்காலத்திற்கும் தேவனுடைய வார்த்தைகளாகப் பொருந்துமோ அவைகளை மட்டுமே கடவுள் கால வெள்ளத்தில் நிலை நிற்கச் செய்தார். இதில் தேவனுடைய அனாதி ஞானம் வெளிப்படுகிறது. புதிய ஏற்பாடு காலத்திலும் நூற்றுக்கணக்கான கடிதங்கள் பேதுரு, பவுல், யோவான் ,யாக்கோபு பெயர்களில் சபைகளில் படிக்கப்பட்டு வாசிக்கப்பட்டு காணப்பட்டாலும் இவைகள் எல்லாம் திருச்சபை தலைவர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஆவியானவரால் அருளப்பட்ட வார்த்தைகளாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இவற்றைத் தீர்மானிக்க ஏறக்குறைய 300 ஆண்டுகள் சபைத் தலைவர்கள் எடுத்துக் கொண்டார்கள். விவாதித்து விவாதித்து தியானித்து தியானித்து ஜெபித்து ஜெபித்து இவைகள் தான் தேவனுடைய வார்த்தைகள் என்று சபைத் தலைவர்கள் கிபி 393ல் தான் 27 புத்தகங்களைக் கடவுளால் அருளப்பட்ட வார்த்தைகள் என்று முடிவு செய்தார்கள். எவைகள் தேவனுடைய வார்த்தைகளாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்கிற அறிவு சபை தலைவர்களுக்கும் விசுவாசிகளுக்கும் கட்டாயம் அவசியம். இதை ஒரு இறையியல் பாடமாகக் கருதக் கூடாது. தவறான உபதேசங்களை சபைகள் நிராகரிப்பதற்கு இந்தப் புரிதல் மிகவும் அவசியம். தள்ளுபடி ஆகமங்கள் ஏன் நிராகரிக்கப்பட்டது என்பதை பற்றி உள்ள புரிதல் ஒவ்வொரு விசுவாசிக்கும் ஆதி திருச்சபை மக்கள் ஏன் புதிய ஏற்பாட்டில் இந்த 27 புத்தகங்களை மட்டும் தெரிந்தெடுத்தார்கள் என்கிற சத்தியம் மிகவும் அவசியமான ஒன்று. இந்த அடிப்படை அறிவை சபைத் தலைவர்கள் போதகர்கள் தங்கள் விசுவாசிகளுக்குப் போதித்தால் மிகவும் நலம். அப்பொழுதுதான் விசுவாசிகளுக்கும் இந்தக் கடைசி காலங்களில் இந்த உபதேசங்களை நிராகரிக்க வேண்டும் என்கிற தெளிவு ஏற்படும். சபைத் தலைவர்கள் இதனைப் போதிக்க தவறும்பொழுது நூதனமான உபதேசங்கள் எவைகள் என்று விசுவாசிகள் தெரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். வஞ்சகத்தில் விழுந்து விடுகிறார்கள், திசை மாறிப் போய்விடுகிறார்கள் அழைப்பை இழந்து விடுகிறார்கள் The knowledge of the canon of the Scripture is a must for every believer.

1 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 9

உங்கள் சிந்தனைக்கு: 1 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 9 எருசலேமில் சாலமோன் கட்டின தேவாலயம் மிகப்பிரமாண்டமானது. அதைக் கட்டி முடிக்க ஏழு வருடங்கள் ஆயிற்று. டன் கணக்கில் தங்கத்தையும் வெள்ளியையும் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்களையும் தொழில் நுட்ப கலைஞர்களையும் கொண்டு உருவாக்கப்பட்டது. புறயின மக்கள் இந்த ஆலயத்தைக் கட்டுவதற்கு தங்களால் இயன்ற பங்களிப்பு செய்தார்கள். ஆலயத்தில் ஏறெடுக்கப்படும் ஜெபத்திற்கு தேவன் சிறப்பான வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தார். அந்த ஆலயத்தில் கடவுளுடைய நாமம் என்றைக்கும் விளங்கத்தக்கதாக, அதைப் பரிசுத்தமாக்கி அவருடையகண்களும் இருதயமும் எந்நாளும் அங்கேயிருக்கும் என்று வாக்களித்தார் 1 இராஜாக்கள் 9:3. அப்படி கட்டப்பட்ட அந்த ஆலயத்தின் ஆயுட்காலம் 410 ஆண்டுகள் தான். காரணம் இஸ்ரேல் ஜனங்கள் தேவனுக்கு பிரியமான வாழ்க்கை வாழவில்லை ‌ அதற்குப் பிறகு எழுப்பப்பட்ட ஆலயமும் 480 ஆண்டுக் காலம் நீடித்தது. அதுவும் இறுதியாக ரோம சாம்ராஜ்யத்தால் இடித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டது. என்னதான் பிரம்மாண்டமான ஆலயங்களில் தேவன் குடியிருந்தாலும் அதைவிட மேன்மையாக இந்தப் புதிய ஏற்பாட்டு காலத்தில் தம்முடைய சரீரத்தில் கடவுள் ஆலயமாக இருக்கிறார். நாம் வேதத்தைப் படிக்கும் போதெல்லாம், ஆராய்ச்சி செய்யும் போதெல்லாம் ஆராதிக்கின்ற நேரங்களில் எல்லாம் அவர் நமக்குள்ளே உலாவித் தங்கி நம்மோடு வாசம் செய்து வாழ்கிறார். எருசலேம் தேவாலயத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் தேவனை சந்தித்த அனுபவங்களைவிட தேவன் அவர்களோடு இடைப்பட்ட காரியங்களைவிட இன்றைக்கு புதிய ஏற்பாட்டு காலத்தில் இலவசமாக 24 மணி நேரமும் அவர் நம்மில் வாசம் செய்கிற இந்த அனுபவம் உலகத்தில் வேறு எந்த மக்களுக்கும் கிடைக்கவில்லை. கடவுளை இவ்வளவு நெருக்கமாக உணர்வுபூர்வமாக அவரையும் அவருடைய பிரசன்னத்தை உணர்கிற, அனுபவிக்கிற நம்மைவிடப் பாக்கியம் பெற்ற ஜனங்கள் வேறு யாரும் இருக்க முடியாது. இதை விசுவாசிகள் உணரும்பொழுது, தியானிக்கும்பொழுது விசுவாசிகள் நிச்சயமாகப் பழைய வாழ்க்கையை வாழமாட்டார்கள். பின் மாற்றம் அடைய மாட்டார்கள். இரகசிய பாவத்தில் ஈடுபட மாட்டார்கள் விசுவாசத்தை ஒருபோதும் மறுதலிக்க மாட்டார்கள் கடவுள்தாமே நம்முடைய சரீரத்தில் தங்கி இருக்கிறார் என்பதை பற்றி உள்ள உன்னதமான வெளிப்படுத்தலை ஒவ்வொருவருக்கும் கடவுள் தருவாராக ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம். 1 கொரிந்தியர் 3:17 " நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே." 2 கொரிந்தியர் 6:16 நாம் தேவனுடைய ஆலயமாக இருக்கிறோம் என்கிற சத்தியம் வேறு எந்த மார்க்கத்திலும் அதிகமாக வலியுறுத்தப்படாத ஒன்று. மனிதனும் தெய்வமாகலாம் என்று மற்றவர்கள் சொல்லுவார்கள். ஆனால் அந்தத் தெய்வமே நம்மிடத்தில் இருக்கிறார் என்பது எவ்வளவு மகிமையான காரியம்

1 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 8

உங்கள் சிந்தனைக்கு: 1 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 8 வேதத்தில் தாவீதை போல ஆலய கட்டுமான பணிகளுக்குச் செல்வத்தை வாரி இறைத்தவன் வேறு எவரையும் பார்க்க முடியாது. கூடாரத்தில் ஆராதித்த தேவனை நிலையான கட்டடத்துக்குள் வைத்துத் தேவனை ஆராதிக்க வேண்டும் என்று அவனுடைய வாழ்நாள் ஆசையாக இருந்தது. அதை வேதத்தில் பல்வேறு இடங்களில் நாம் பார்க்கலாம் அவன் தன் வீடாகிய கூடாரத்தில் பிரவேசிப்பதுமில்லை என்றும் படுக்கையாகிய கட்டிலின்மேல் ஏறுவதுமில்லை என்றும் தான் கர்த்தருக்கு ஒரு இடத்தையும், ஒரு வாசஸ்தலத்தையும் காணுமட்டும், தன் கண்களுக்கு நித்திரையையும், இமைகளுக்கு உறக்கத்தையும் வரவிடுவதுமில்லை என்று கர்த்தருக்கு ஆணையிட்டு பொருத்தனைபண்ணினான். (சங்கீதம் 132:3-5) கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், தன் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே விரும்பினான் (சங்கீதம் 27:4). அதை எதிர்நோக்கி தான் போர்க்களத்தில் அடைந்த பொருட்களில் பெரும் பகுதியை ஆலயப் பணிகளுக்கெ ன்று ஒதுக்கினான். ஒரு லட்சம் தாலந்து பொன்னையும், பத்துலட்சம் தாலந்து வெள்ளியையும் நிறுத்து முடியாத திரளான வெண்கலத்தையும் இரும்பையும் சவதரித்தும், மரங்களையும் கற்களையும் சவதரித்தும் வைத்தான் 1 நாளாகமம் 22:14 இவைகள் 3750டன் எடையுள்ள தங்கத்திற்கும், 37500 தன் எடையுள்ள வெள்ளிக்கும் சமம் என்று வியர்ஸ்பி என்கிற வேத பண்டிதர் கூறுகிறார். இதைத் தவிர ஆலயப் பணிகளுக்கு அவன் சேர்த்து வைத்ததை 1 நாளா29:1-5ல் நாம் சற்று விவரமாகப் பார்க்கலாம். இது தவிர தன்னுடைய சொந்த கருவூலத்திலிருந்தும் அதிகமாகக் கொடுத்தான். ஆக மொத்தம் அவன் 4050 டன் எடையுள்ள தங்கத்தையும் 38000 டன் எடையுள்ள வெள்ளியையும் ஆலயப் பணிகளுக்காகச் சேர்த்து வைத்தான். அப்பப்பா எவ்வளவு பிரம்மாண்டமான காணிக்கை பாருங்கள். தாவீதை போல இவ்வளவு அதிகமாகத் தேவனுக்கு கொடுத்தவர்கள் வேதத்தில் இதுவரை யாரும் சொல்லப்படவில்லை. தேவனுக்கு ஆலயம் கட்ட வேண்டும் அதிலே ஆராதிக்க வேண்டும் என்கிற ஆசை எவ்வளவு உச்ச நிலையில் இருந்தது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. ஆம் தாவீதைப் போல் கடவுளுக்குக் கொடுத்தவர் எவரும் கிடையாது. அது பழைய ஏற்பாடு. ஆனால் அதைவிட மேன்மையான ஒரு அனுபவத்தை மறுபடியும் பிறந்த நமக்குத் தேவன் கிருபையாகக் கொடுத்திருக்கிறார். ஆம் நம்முடைய சரீரத்தையே அவர் ஆலயமாகத் தங்கி நம்மில் வாசம் செய்கிறார். கடவுள் நம்மில் தங்கி வாசம் செய்கிறார் என்கிற சிந்தனயை கருத்தை ஆவிக்குரிய சத்தியத்தை நாம் எந்த அளவுக்கு அதிகமாக உணர்கிறோமோ அந்த அளவுக்கு நாம் தேவனுடைய சாயலாகப் பரிசுத்த வாழ்க்கையில் நாம் உச்சநிலையை அடைய முடியும் எந்த ஒரு காசு பணத்தையும் செலவழிக்காமல் இலவசமாகத் தேவன் நமக்குக் கொடுத்த இந்த விலையேறப் பெற்ற ஆசிர்வாதத்தை நாம் எவ்வளவு அலட்சியமாகக் கருதுகிறோம் என்பது இன்றய கிறிஸ்தவ உலகத்தைப் பார்த்தால் தெரியும். பரிசுத்தம் இல்லாமல் தேவனை ஒருக்காலும் ஒருவனும் தரிசிக்க முடியாது. வெளித்தோற்றத்தில் மட்டுமல்ல உள்ளான மனதிலும் நாம் பரிசுத்த வாழ்க்கையை எப்படி நிலைநிறுத்துகிறோம் என்பதை தேவன் மட்டுமே அறிந்திருக்கிறார். அன்றைக்கு தாவீது தன்னுடையதை எல்லாம் இழந்து தேவனுக்கு ஆலயம் கட்ட முற்பட்டான். இன்று நாம் நம்மை அர்ப்பணித்து தேவன் நமக்குள் இருக்கிற அந்த உண்மையை ஒவ்வொரு நாளும் நாம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். தேவனை தேடி நாம் எங்கும் ஓடி அலைய வேண்டாம் அவர் நம்மைத் தேடி வந்து நமக்குள்ளே இருக்கிறார். எவ்வளவு மகிமையான தேவன். இந்தத் தேவனை தன்னுடைய சொந்த கடவுளாகப் பெற்ற மக்கள் பாக்கியவான்கள். என்பது இன்றைக்கு கண்ணுக்குப் புலப்படாத ஆலயமாக இருக்கிறது. இந்த ஆலயத்திற்காகப் பக்தி விருத்திக்காக முன்னேற்றத்திற்காக நாம் எந்த அளவுக்கு உழைக்கிறோம் கொடுக்கிறோம் அர்ப்பணிக்கிறோம் நம்மை இழக்கிறோம் என்பதையும் தேவன் பார்க்கிறார். தேவனுடைய பணிக்கு ஓய்வு என்பதே இல்லை. நாம் எல்லோரும் ஏதாவது ஒரு தேவனுடைய ஆலயக் கட்டுமான பணியில் ஈடுபட்டிருக்க தேவன் விரும்புகிறார். இந்த இரண்டு சத்தியங்களையும் சம நிலையில் நாம் பார்க்க வேண்டும். புதிய ஏற்பாட்டில் ஒவ்வொருவருக்கும் தாவீதைப் போல ஆலயத்தைப் பற்றிய ஒரு புரிதல் நமக்குத் தேவை

ELECTION

உங்கள் சிந்தனைக்கு: Election தேவனுடைய தெரிந்து கொள்ளுதலை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய 4 முக்கிய சத்தியங்கள். 1. Election is according to God’s foreknowledge தேவனுடைய தெரிந்து கொள்ளுதல் என்பது அவருடைய முன்னறிவை சார்ந்தது. 1 பேது1:2 2. Election is wholly of grace, apart from human merit. தேவனுடைய தெரிந்துகொள்ளுதல் என்பது மனிதனுடைய நன்மையான காரியங்கள் எதையும் சாராமல் தேவனுடைய கிருபையை முழுக்க முழுக்க சார்ந்த காரியம். ரோம 9:11,11:5,6 3. Election is the sovereign act of God, whereby certain are chosen from among mankind for Himself மனுக்குலத்திலிருந்து ஒரு சில பேரைத் தெரிந்து கொள்வது என்பது அவருடைய இறையாண்மையை சார்ந்த காரியம்.யோவா15:19 4. Election is God’s sovereign act whereby certain elect persons are chosen for His distinctive service (Luke 6:13; Acts 9:15; I Corinthians 1:17,18 அப்படி தெரிந்து கொள்ள பட்டவர்களில் ஒரு சில நபர்களைச் சில குறிப்பிட்ட பணிகளுக்குத் தேர்ந்தெடுப்பதும் அவருடைய இறையாண்மையை சார்ந்தது.லூக்6:13. இது போன்ற கடவுளைப் பற்றிய நமது இரட்சகரை பற்றிய, நமது இரட்சிப்பை பற்றிய அடிப்படை சத்தியங்களை விசுவாசிகள் கற்றுக் கொள்வது மிகவும் அவசியம். மேலே குறிப்பிட்டுள்ள குறிப்புகள் கால்வின் அவருடைய 'இரட்சிப்பு அழியாதது'(Eternal securiy of the saints)என்கிற உபதேசத்தை அடிப்படையாகக் கொண்டது. Ref.All the doctrines of the Bible-Herbert Lockyer

இறையாண்மையும் மற்றும் மனிதனின் பொறுப்பும்.

உங்கள் சிந்தனைக்கு:Sovereignty of God and human responsibility. Before He chose His 12 apostles, Jesus spent a whole night in prayer (Luke 6:12-16), so we must believe that it was the Father’s will that Judas be among them (John 8:29). But the selection of Judas did not seal his fate; rather, it gave him the opportunity to watch the lord closely, believe, and be saved.God, in His sovereignty, had determined that His son would be betrayed by a friend, but divine foreknowledge does not destroy human responsibility or accountability. Judas made each decision freely and would be judged accordingly, even though he still fulfilled the decree of God. (Acts 2:23). W. Wiersbe இறையாண்மையும் மற்றும் மனிதனின் பொறுப்பும்.இயேசு கிறிஸ்து தனது 12 அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுக்கும்முன்பு, இயேசு ஒரு இரவு முழுவதும் ஜெபத்தில் கழித்தார் (லூக்கா 6:12-16), எனவே யூதாஸ் அவர்களிடையே இருக்க வேண்டும் என்பது தந்தையின் விருப்பம் என்று நாம் நம்ப வேண்டும் (யோவான் 8:29)ஆனால் யூதாஸ் இன் தேர்வானது அவனது விதியை மாற்றவில்லை; மாறாக, இறைவனை உன்னிப்பாகக் கவனிக்கவும், நம்பவும், இரட்சிக்கப்படவும் அவனுக்கு வாய்ப்பளித்தது.கடவுள் தனது இறையாண்மையில் தனது ஒரே பேறான குமரன் ஒரு நண்பரால் காட்டிக்கொடுக்கப்படுவார் என்று தீர்மானித்தார்.ஆனால் தெய்வீக முன்னறிவு மனிதன் தான் செய்ய வேண்டிய கடமையிலிருந்தும் பொறுப்பிலிருந்தும் அவனுக்கு விலகளிக்கவில்லை.யூதாஸ் ஒவ்வொரு முடிவையும் சுதந்திரமாக எடுத்தான், அதற்கேற்ப தீர்ப்பளிக்கப்படுவான். என்றாலும், அவன் தேவனுடைய திட்டத்தை நிறைவேற்றினான் என்று தான் கூற முடியும் (அப்போஸ்தலர் 2:23). W. Wiersbe Order of salvation தேவன் எப்படி நம் வாழ்க்கையில் கிரியை செய்கிறர்‌.1. foreknowledge/predestination/election (God’s choice of some unto salvation) 2. effectual Call/regeneration (the new birth) 3. conversion (repentance and faith) 4. Justification (declaration of right legal standing) 5. Adoption (being placed into the family of God) 6. Sanctification (progressive growth in holiness) 7. Perseverance (remaining in Christ)8. glorification (receiving a resurrection body)John MacArthur எனவே தேவனுடைய முன்னறிவு என்பது நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் starting point வாழ்க்கையில் அதே வேளையில் நம்முடைய பொறுப்பையும் தட்டிக் கழிக்க முடியாது இதுதான் சமநிலை

Doubting God's word is the first step in unbelief.

Doubting God's word is the first step in unbelief. Unbelief is serious because it challenges the very character of God and rebels against the will of God. W W.Wiersbe  Unbelief is very dangerous. Because it challenges God's character. It prevents us from doing God's will. One of the basic attributes of God is that He is faithful to those who seek Him. God is always faithful. Its explanation is that he does not let down those who believe in him. But unbelief challenges the character of that God. Our adversary, Satan, will tell us that God has abandoned us when we face problems, crises, dangers, and when we are abandoned by everyone. He will say that there is no further future for us. Everything is over. He will make us fear that our spiritual life is over. But when we firmly believe in that basic characteristic that God is faithful, unbelief will never appear in us. 6,03,548 people of Israel died in the wilderness without entering the Canaan because of this unbelief. They did not believe His trustworthiness that God would take them to Canaan. At first, they doubted God's promise. That was the beginning of their downfall.  Because they completely believed what the ten leaders told them. They rebelled against God because they did not believe in God's promise and God's protection in the past and were afraid of the scenes they had seen in the wilderness. As a result, all the people who rebelled in 40 years of wilderness life died. Next, unbelief prevents us from doing God's will. If the Jews had believed God's promise without doubt, they would have done God's will and reached Canaan. That unbelief kept them from doing God's will. In the same way, when we do not believe in God, many times we deviate from God's will and fail to fulfill God's plan in our lives. As the Scripture says, it is impossible to please God without faith. First doubt turns to disbelief. Unbelief eventually turns into rebellion against God. So if the poisonous seed of doubt is nipped in the bud, the life of faith will wither. Ezekiel Shanmugavel

The strategy of Satan and the resources of Lord Jesus Christ

The strategy of Satan and the resources of Lord Jesus Christ ஆவிக்குரிய போராட்டத்தில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய இரண்டு முக்கிய சத்தியங்கள். The strategy of Satan and the resources of Lord Jesus Christ சாத்தானின் தந்திரங்களையும் இயேசு இயேசு கிறிஸ்து நமக்கு அளிக்கும் வாய்ப்புகளையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். நம்முடைய ஆவிக்குரிய வெற்றி மேற்கூறிய இரண்டு காரியங்களை நாம் எப்படி புரிந்து கொண்டிருக்கிறோம் என்பதை பொறுத்து இருக்கிறது. சாத்தானுடைய கர்சிக்கும் சிங்கத்தைப் போல் உள்ள செயல்பாடுகளையும் பாம்பைப் போல் தந்திரமாகச் செயல்படும் காரியங்களையும் நாம் சமநிலையில் புரிந்து கொள்ள வேண்டும். . சாத்தானுடைய தந்திரங்களை நாம் புரிந்து கொள்ள வேதத்தில் அவனைப் பற்றிச் சொல்லிய காரியங்கள் வேத முழுவதுமாக அவன் அடைந்த தோல்விகள் மனுக்குலத்தின்‌மேல்‌ தேவனுடைய பிள்ளைகள்மீது அவன் தொடுத்த யுத்தங்கள் அவன் பயன்படுத்திய தந்திரங்கள் இவைகளை புரிந்து கொண்டால் நாம் அவனுடைய போர் யுக்திதைகளை அறிந்து கொள்ள முடியும். என்னதான் இயேசு கிறிஸ்து சிலுவையை நமக்காக யாவற்றையும் செய்து முடித்தாலும், சிலுவையில் அவருடைய ஆயுதங்களைப் பலம் இழக்கச் செய்தாலும் நாம் எபே 6:10 ல் சொல்லப்பட், கர்த்தரிலும், அவருடைய பெரிதான வல்லமையில் பெலப்பட்ட வேண்டும் எபேசியர் 6:10. எந்த ஒரு காரியத்தையும் வசனமாகிய சத்தியத்தை கொண்டு நிதானிக்கக்கூடிய தெளிவு நமக்கு வேண்டும். அவருடைய நீதியினால் நாம் தரிப்பிக்கப்பட வேண்டும் நம்முடைய சுயநிதியை அருவருக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கையே மற்றவர்களுக்கு நற்செய்தியாக இருக்க வேண்டும்.l சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும் தேவன் மீது வைத்துள்ள விசுவாசத்தை உறுதியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். இரட்சிப்பை ஒருபோதும் இழக்க அனுமதிக்க கூடாது.இரட்சிப்பு நிறைவேற நாம் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். தேவ வசனத்தைச் சரியான முறையில் கையாள தெரிந்திருக்க வேண்டும். We should know how to handle the word of God மேற்கூறிய காரியங்களை நாம் பின்பற்றும்பொழுது நாம் அவருடைய தத்துவத்தையும் அவருடைய வல்லமையும் தரித்து கொள்பவர்களாகக் காணப்படுவோம். These are the resources of God. ஆவிக்குரிய போர்க்களத்தில் நாம் தடுப்பு யுக்தியையும், தாக்குதல் யுத்தியையும் கையாள வேண்டும். சாத்தானைப் பற்றிய அறிவு என்பது தற்காப்பு போர்க்கலை. கடவுள் நமக்கு அளிக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்துவது தாக்குதல் போர்க்கலையாகும். we should use both defensive and offensive strategies ezekiel shanmugavel

There is no relaxation in following God's commandments.

There is no relaxation in following God's commandments. There is no relaxation in obeying the word of God. The best example of this is the event in Saul's life. The king of the people of Israel did not fully obey the commandments of God before he invaded the enemies first time, causing relaxation and disobeying them. Examples of this can be found in the 13th chapter of 1 Samuel.  The Philistines gathered themselves together to fight with Israel, thirty thousand chariots, six thousand horsemen, and people as the sand which is on the seashore in multitude, and they came up and pitched in Michmash, eastward from Beth-aven.  Some Hebrews crossed the fords of the Jordan to the land of Gad and Gilead. Saul was still at Gilgal, and all the people followed him, trembling. Burnt offerings should be offered to the Lord and then they should go to the battlefield. He was waiting for Samuel. But as said, the prophet Samuel did not come at the right time for offering the burnt offering to the Lord   On seeing this, some of his soldiers went back. So Saul was nervous. So he himself offered the burnt offerings to the LORD. He may have thought that the prophet Samuel would not come.  'If my soldiers are gone, we will be defeated on the battlefield,'  so he could have considered this an exception and offered burnt offerings to God. The 3000 people who were already with him eventually came down to 600. The Philistines were superior to the people of Israel in terms of armor. Their weapon stockpile is very high. All these circumstances caused Saul to change his mind. Seeing the situation, he forgot the commandment of the Lord. Yet this is a great sin in the sight of the Lord. The Lord commands that only the priest should pay the burnt offerings to God. This rule should not be violated, no matter what the circumstances may be. But Saul blamed the circumstances and broke those rules. He was not a little nervous when the prophet Samuel heard about it. Saul said, “When I saw that the people were scattering from me, and that you did not come within the days appointed, and that the Philistines had mustered at Michmash, Now the Philistines will come down against me at Gilgal, and I have not sought the favor of the Lord.’ So I forced myself and offered the burnt offering.” 1 Samuel 13:11,12 He may have done this as an exception considering the circumstances, without realizing that what he did was contrary to God's commandments and without worrying a little. But in this matter, the answer given by the prophet Samuel is important. “You have behaved wisely! You have not kept the commandment which Jehovah your Lord has given you,” said the prophet Samuel. Yes, there are no exceptions, no compromises, no relaxations in keeping the stores of God. Our urgency or necessity is not an excuse for disobeying God's word. With our brain knowledge, we cannot ask for an exemption. The price he paid for this disobedience was very high. Maybe we should take pity on Saul. The Lord turned away from him. The kingdom was taken away from him. It can be assumed that in our view the punishment of the Lord is excessive. But God's vision is different. In short, obedience is superior to our ministry. We cannot relax God's rule. But it is in God' hand  ezekiel Shanmugavel.

கடவுளுடைய கட்டளைகளைப் பின்பற்றுவதில் தளர்வுகள் கிடையாது. 

கடவுளுடைய கட்டளைகளைப் பின்பற்றுவதில் தளர்வுகள் கிடையாது.  There is no relaxation in obeying the God's word. இதற்குச் சிறந்த உதாரணம் சவுலின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுதான். இஸ்ரவேல் ஜனங்களின் அரசனானகி எதிரிகளை நோக்கிப் படையெடுப்பதற்கு முன்பாகவே தேவனுடைய கட்டளைகளுக்கு முழுமையாகக் கீழ்ப்படியாமல் அதற்குத் தளர்வுகளை ஏற்படுத்திக் கீழ்ப்படியாமல் போனார். இதைப் பற்றிய நிகழ்வுகளை 1 சாமுவேல் 13வது அதிகாரத்தில் பார்க்கலாம்.  பெலிஸ்தர் இஸ்ரவேலோடு யுத்தம் பண்ணும்படி முப்பதினாயிரம் இரதங்களோடும், ஆறாயிரம் குதிரைவீரரோடும், கடற்கரை மணலத்தனை ஜனங்களோடும் கூடிக்கொண்டுவந்து, பெத்தாவேலுக்குக் கிழக்கான மிக்மாசிலே பாளயமிறங்கினார்கள். சவுலோ இன்னும் கில்காலில் இருந்தான்; சகல ஜனங்களும் பயந்துகொண்டு அவனுக்குப் பின்சென்றார்கள். கடவுளுக்குத் தகன பனி செலுத்தி விட்டுப் போர்க்களத்துக்கு செல்ல வேண்டும். அதற்காகக் காத்திருந்தான். ஆனால் சொன்னபடி  சாமுவேல் தீர்க்கதரிசி  பலியிடுவதற்காக ஏற்ற நேரத்தில் வரவில்லை. நேரமாக ஆக ஆகச் சவலுடன் இருந்தவர்கள் அவனை விட்டு விலகிப் போனார்கள். இதனால் பதட்டமடைந்த சவுல்  சர்வாங்க தகனபலிகளை தானே கர்த்தருக்கு செலுத்தினான். அவன் சாமூவேல் தீர்க்கதரிசி இனிவரமாட்டார் என்று நினைத்திருக்கலாம்.  என்னோட இணைந்த போர் வீரர்களும் போய்விட்டால் போர்க்களத்தில் தோற்றுப் போய் விடுவோம், எனவே இதை ஒரு விதிவிலக்காகக் கருதி தேவனுக்கு தகன பலிகளை செலுத்த முன் வந்திருக்கலாம்.  ஏற்கனவே அவனுடன் இருந்த 3000 பேர் இறுதியில்  600 பேராக மாறிவிட்டார்கள். பெலிஸ்தியர்கள் ஆயுதபலத்தில் இஸ்ரவேல் ஜனங்களைவிட மேலானவர்கள்.  அவர்களுடைய ஆயுதங்கள் கையிருப்பு மிக அதிகம். இந்தச் சூழ்நிலைகள் எல்லாம் சவுலை மனம் மாற வைத்தது.  சூழ்நிலை பார்த்துக் கர்த்தருடைய கட்டளை மறந்து விட்டான். ஆனாலும் இது கர்த்தருடைய பார்வையில் பெரிய பாவம். தகன பலிகளை ஆசாரியன் மட்டும் தான் தேவனுக்கு செலுத்த வேண்டும் என்பது கர்த்தருடைய கட்டளை.   சூழ்நிலைகள் எப்படிப்பட்டதாக இருந்தாலும் இந்த விதி மீறப்படக் கூடாது.  ஆனால் சவுல் சூழ்நிலைகளைக் காரணம் காட்டி அந்த விதிகளை மீறினான். சாமுவேல் தீர்க்கதரிசி இதைப் பற்றிக் கேட்டபொழுது கொஞ்சமும் பதட்டப்படாமல். “மனிதர் என்னை விட்டுச் சிதறிப்போனதையும், நீர் குறிப்பிட்ட நாளில் இங்கு வராததையும், பெலிஸ்தியர் மிக்மாசிலே கூடிவந்திருப்பதையும் நான் கண்டேன். பெலிஸ்தியர் எனக்கு எதிராகக் கில்காலுக்கு வரப்போகிறார்களே. நானோ இன்னும் யெகோவாவினுடைய தயவைத் தேடவில்லை’ என்று எண்ணியே தகன காணிக்கையைச் செலுத்தத் துணிந்தேன்” என்றான். 1 சாமுயேல் 13:11,12 தான் செய்தது தேவனுடைய கட்டளைகளுக்கு மாறானது என்பதை புரியாமல், கொஞ்சம் கூடக் கவலைப்படாமல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு ஒரு விதிவிலக்காக இது செய்திருக்கலாம். ஆனால் இந்தக் காரியத்தில் இதற்குச் சாமுவேல் தீர்க்கதரி சொன்ன பதில் முக்கியமானது.  "புத்தியீனமாய் நடந்துவிட்டாயே! உன் இறைவனாகிய யெகோவா உனக்குக் கொடுத்த கட்டளையை நீ கைக்கொள்ளவில்லை" சாமுவேல் தீர்க்கதரிசி உரைத்தார். ஆம் தேவனுடைய கடைகளைக் கடைபிடிப்பதில் விதிவிலக்குகள், சமரசங்கள், தளர்வுகள் எதுவும் கிடையாது.  Our urgency or   necessity  is not an  excuse for disturbing God's word. நம்முடைய மூளை அறிவைக் கொண்டு கடவுளுடைய கற்பனைகளுக்கு விலக்கு கேட்க முடியாது. இந்தக் கீழ்படியாமைக்கு அவன் கொடுத்த விலை மிக அதிகம்.  ஒரு வேளை சவுல் மீது நாம் பரிதாபம் கொள்ளலாம். அவனை விட்டுக் கர்த்தர் விலகி விட்டார்.அரசு அவனை விட்டுக் கடந்து போய்விட்டது. இது நம்முடைய பார்வையில் கர்த்தருடைய தண்டனை அதிகமானதாக இருக்கிறது என்று எண்ணலாம். ஆனால் கடவுளுடைய பார்வை என்பது வேறு.  சுருக்கமாகச் சொன்னால் நம்முடைய செயலைக் காட்டிலும் கீழ்ப்படிதிலே மேன்மையானது. We cannot relax God's rule.But it is in God' hand. ezekiel shanmugavel

1 அரசர்கள் புத்தகம். வேத பாடம் 7

உங்கள் சிந்தனைக்கு: தேவ ஞானத்தை தனிப்பட்டவாழ்க்கையில் பயண்படுத்த தவறிய சாலமோன் : 1 அரசர்கள் புத்தகம். வேத பாடம் 7 சாலமோனை பற்றிப் பழைய ஏற்பாட்டில் 300 இடங்களிலும் புதிய ஏற்பாட்டில் 12 இடங்களிலும் வருவதாக வேத பண்டிதர்கள் குறிப்பிடுகிறார்கள். இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில் இவன் பெயர் காணப்படுகிறது. அவன் சிறப்புக்கும்(Splendor) ஞானத்திற்கும்(Wisdom). எருசலேம் ஆலயத்தைக் கட்டினவனாகவும், அடையாளப்படுத்தப்படுகிறான். அது தவிர திருக்கோவிலில் அவன் பெயரில் மண்டபம் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. மத்1-6-7,6:29,லூக்12:27.யோவா 10:23 தாவீதும் சாலமோனும் சங்கீதங்களை இயற்றியதாகச் சொல்லப்பட்டாலும் சங்கீதங்களின் புத்தகத்தில்72,127ம் சங்கீதங்கள் மட்டும் இவனுடையதாகச் சொல்லப்படுகிறது. வேதத்தில் காணப்படுகின்ற நீதிமொழிகள் இவன் எழுதியதாகச் சொல்லப்படுகிறது. அதே வேளையில் அவனுடைய 3000 நீதிமொழிகள் வேத புத்தகத்தில் காணப்படவில்லை. தாவீதை போல எந்தப் போர்க்களத்தையும் சந்திக்காதவன். தகப்பனுடைய நிழலிலும் ஆசீர்வாதத்திலும் செல்வத்திலும் வாழ்ந்தவன். கடவுள் அவன் கனவில் தோன்றிஅவனிடம் என்ன வேண்டும் என்று கேட்டபோது மிகப்பெரிய அரசாங்கத்தை நிர்வாகம் பண்ண தேவையான ஞானத்தை கேட்டான்.3:5-12 அந்த ஞானத்தை தன் ஆவிக்குரிய வாழ்க்கையில் பயன்படுத்தத் தவறி விட்டான். தேவன் கொடுத்த ஞானத்தை கொண்டு தன்னுடைய அரசாங்கத்தை நிர்வாகம் பண்ணினான். தேவனுடைய ஆலயத்தைக் கட்டினான் ஆனால் தேவனுடைய உறவில் கரிசனையற்ற அரசனாகக் காணப்பட்டான். அவனுக்கும் தேவனுக்கும் உள்ள உறவு பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தது. ஆரம்ப நாட்களிலேயே சாலொமோன் எகிப்தின் அரசனான பார்வோனுடன் நட்புக்கொண்டு அவனுடைய மகளைத் திருமணம் செய்தான். இதுதான் அவன் செய்த முதல் திருமணம். 1 இராஜாக்கள் 3:1 இது அவன் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறுகளின் ஆரம்பம். அதன் விளைவு அவனுக்கு 700 மனைவிகளும் 300 வைப்பாட்டிகளும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.11:3 தாவீதைப் போலப் பாவத்திற்கு மனம் திரும்பாத சிந்தனை உள்ளவனாய் இருந்தபடியினால் தாவீதை கண்டித்த நாத்தான், காத் போன்ற தீர்க்கதரிசிகளை இவனுடைய வாழ்க்கையில் இவன் சந்திக்ககும் வாய்ப்பைக் கடவுள் தரவில்லை. இதுவும் அவனுடைய சீர்கேட்டுக்கு ஒரு மிகப்பெரிய காரணம். மிகப்பெரிய செல்வத்தைப் பெற்றான். ஞானத்தை பெற்றான் செல்வாக்கைப் பெற்றான். ஆனால் தேவனோடு உள்ள உறவு இழந்து விட்டான். அநேக நாடுகளுள் அவனைப் போல ஒரு அரசனும் இருந்ததில்லை. "அவனுடைய இறைவன் அவனில் அன்புவைத்து, இஸ்ரயேல் முழுவதற்கும் அவனை அரசனாக்கினார். அப்படியிருந்தும் அந்நிய நாட்டுப் பெண்களால் அவன் பாவத்துக்கு இழுபட்டான்." நெகேமியா 13:26 சாலமோனுடைய வாழ்க்கையில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் அநேகம் இருந்தாலும் முக்கியமான இரண்டு பாடங்கள். 1. திருமண உறவில் புறயின மக்களோடு கலக்கக் கூடாது. 2. தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்க்கையை எந்தக் காரியத்திற்காகவும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. உலக செழிப்பு அல்ல ஆவிக்குரிய வளர்ச்சியே முக்கியம்.

நொடி பொழுதில் ஏற்படும் அதிசயமான மாற்றங்கள்.

ங்கள் சிந்தனைக்கு: நொடி பொழுதில் ஏற்படும் அதிசயமான மாற்றங்கள். மறுபடியும் பிறந்த எல்லோருடைய வாழ்க்கையிலும் இரட்சிப்பின் அனுபவம் மிக முக்கியமான நிகழ்வாகும். நாம் இயேசுவை பின்பற்ற வேண்டும் என்று நாம் எடுத்த அந்தத் தீர்மானம் நம்பமுடியாத விளைவுகளை நம் வாழ்வில் ஏற்படுத்தியிருப்பதை நாம் அறியாமல் இருப்பதுதான் மிகப் பெரிய பரிதாபம். நாம் மறுபடியும் பிறக்கும் அந்த நாளில் அந்த வினாடியில் ஆண்டவர் நம்மில் நடப்பித்த விவரிக்க முடியாத செயல்களை இப்போது தியானிக்கலாம். 1.நம் பாவங்களை மன்னித்து நம்மைக் குற்றமில்லாதவராக அறிவிப்பதோடு ஆண்டவர் தமது நீதியை நமக்கு அளித்து, நம்மை அவருடைய பிள்ளைகளாக்கி நம்மை அவருக்குச் சொந்தமாக்கினார்(யோவான் 1:12, ரோமன் 5:1,1 கொரி 6:20) 2.நாம் இயேசுவுக்குள் பூரணமாயிருக்கிறோம் (கொலோ 2:10) 3.நாம் தேவனோடு நேரடியாக உறவாடக்கூடிய உரிமையை அளித்திருக்கிறார்(.எபே2:18) 4.நாம் தேவனுடைய ஆசாரியராக நியமிக்கப்பட்டிருக்கிறோம் 5.நாம் இருளின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று பரலோக இராச்சியத்தின் குடிமக்களாக மாற்றப்பட்டிருக்கிறோம். (பிலி3:20) 6.அவர் நம்மை உன்னதங்களில் இயேசுவோடுகூட உட்கார வைத்திருக்கிறார். இப்படி சொல்லிகொண்டே போகலாம். இந்த ஆசீர்வாதங்கள் எல்லாம் ஓர் நொடிப்பொழுதில் நமக்கு வந்து சேருகிறது, ஒரே வினாடியில் நம் நிலை, நம் உயர்வு, நம் ஆசிர்வாதம், நாம் நினைத்துப் பார்க்கமுடியாத அளவில் உயர்த்தப்படுகிறது. தேவனுடைய பிள்ளை என்ற அதிகாரத்தோடு நாம் முழுவதும் பாதுகாக்கப்பட்ட நிலைக்கு (fully protected) நம்மைத் தேவன் உயர்த்துகிறார். எனவே அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் நமது இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுவோம். எசேக்கியேல் சண்முகவேல்

we must believe in the attributes of God.

உங்கள் சிந்தனைக்கு! we must believe in the attributes of God. படிக்க ரோமர் 4:17-21 "அவன் தான் விசுவாசித்தவருமாய், மரித்தோரை உயிர்ப்பித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவனுக்கு முன்பாக நம்மெல்லாருக்கும் தகப்பனானான். உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லப்பட்டபடியே, தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான்" இந்தப் பதிவில் ஆபிரகாம் விசுவாசம் பற்றிச் சற்று விரிவாகப் பார்க்கலாம். நாம் எண்ணுகிறபடி ஆபிரகாமினுடைய விசுவாசம் கண்மூடி தனமான விசுவாசம் அல்ல. அவனுடைய விசுவாசம் தேவனுடைய சில குணாதிசயங்களை (Attributes)சார்ந்து இருந்தது. தேவனை பற்றிய சில அடிப்படையான சில குணங்களை நம்பி விசுவாசித்தான். அந்த விசுவாசம் தேவனுடைய படைப்பின் வல்லமை மற்றும் உயிர்தெழுதலின் வல்லமை ஆகியவற்றை சார்ந்து இருந்தது. இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல் அழைக்கிற தேவனை விசுவாசித்தான் என்று நாம் வாசிக்கும்போது நமக்கு நினைவில் வருவது எபி12;2தான். ("இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால்உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம்;) ஆபிரகாம் தான் விசுவாசிக்கும் தேவன் சிருஷ்டிப்பின் தேவன்(God of creation) என்று விசுவாசித்தான். எனவே சரீரஞ்செத்தவனென்று எண்ணத்தகும் தன்மூலம் வானத்தில் உள்ள பெருக்கமான நட்சத்திரங்களைப்போலவும் கடற்கரையில் உள்ள எண்ணிறந்த மணலைப்போலவும், மிகுந்த ஜனங்கள் பிறக்க வைக்கத் தேவனால் முடியும் என்று நம்பினான். அடுத்தது அவன் ஈசாக்கை பலியிட முன்வந்த‌போது அவன் தான் நம்பும் தேவன் மரித்தோரை எழுப்ப வல்லமை உள்ளவர் என்று அவன் தேவனுடைய உயிர்த்தெழுதலின் வல்லமையை நம்பினான்.(God of resurrection) நாம் தேவனுடைய எந்தக் குணாதிசியங்களை நம்பி விசுவாசிக்கின்றோமோ அந்த அளவுக்கு அந்தக் குணாதிசியங்கள் நமக்குப் பலிக்கும். கண்மூடி தனமான விசுவாசம் அவசியம் இல்லை. we must believe in the attributes of God. Nothingness and death are no problem for God. Creation and resurrection are and remain the two major manifestations of God's power. Abraham believed both.

1 அரசர்கள் புத்தகம். வேத பாடம் 6

உங்கள் சிந்தனைக்கு: 1 அரசர்கள் புத்தகம். வேத பாடம் 6 தாவீது ஏன் யோவாபை ஏன் தண்டிக்கவில்லை? தாவீதின் படைத்தளபதி யோவாப். தாவீது மரிக்கும் வரை அவன் தான் No 1 படைத்தளபதியாக இருந்தான். தாவீதின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நபர். மிகச்சிறந்த போர் தளபதி. அம்மோனியரையும் சீரியரையும் தோற்கடித்ததில் யோவாப் மிகச்சிறந்த பங்காற்றினார் ‌.2 சாமு 10:1-14 பழைய ஏற்பாட்டில் கூறப்பட்ட பல படைத்தளபதிகளில் யோவாப் முக்கியமானவன். ஆரம்ப காலத்தில் தாவீதுக்கு பல போர்க்களங்களில்ச வெற்றிக்குக் காரணமாக இருந்தான்.1 இராஜா11:15-16. மிகவும் தந்திரமானவன். சவுலின் படைத்தளபதி அப்னேரை தாவீதோடு நெருங்க விடாமல் தந்திரமாகக் கொலை செய்தவன். தாவீதின் மகன் அப்சலோமை உயிருடன் பிடிப்பதற்கு வாய்ப்புகள் இருந்தும் அவனைக் கொலை செய்தவன். தாவீதுக்கு நெருக்கமாக வந்த அப்சலோமின் படைத்தளபதி அமாசாவை வஞ்சகமாகக் கொலை செய்தவன். தன் மகனைக் கொலை செய்த அந்த வருத்தம் தாவீதுக்கு கடைசி வரை நீங்கவில்லை. ஆனாலும் தாவீது அவனைக் கண்டிக்கவும் இல்லை கொலை செய்யவும் இல்லை. காரணம், He had no moral courage. பத்சேபாள் விவகாரத்தில் எந்த விதத்திலும் சம்பந்தப்படாத அநியாயமான முறையில் பத்சேபாளின் கணவன் உரியாவை வஞ்சகமாகக் கொலை செய்வதற்கு கட்டளையிட்டான். அநியாயமாக அவனுடைய ரத்தம் இந்த மண்ணில் சிந்தப்படுவதற்கு காரணமாகக் காணப்பட்டான்.சங்கீ 51:14 அதனால்தான் தன்னுடைய படைத்தளபதியை கண்டிக்க அவனால் முடியவில்லை. எனவே அந்தப் பொறுப்பைச் சாலமோனிடம் ஒப்படைத்து விட்டான். தேவன் உணர்த்தும் பாடம். நாம் மற்றவர்களைக் குற்றம் சுமத்தும் பொழுதும் கண்டிக்கும் பொழுதும் அதைக் கண்டிப்பதற்கு முன்பு நாம் முதலில் அதற்குத் தகுதியுள்ள நபரா என்று ஆராய்ந்து யோசிக்க வேண்டும். ('Weather we have the moral right to criticize others')நம்மிடத்தில் பல்வேறு குறைகளை வைத்துக்கொண்டு தலைவன் என்கிற ஒரே காரணத்திற்காக மற்றவர்களைக் குற்றம் சுமத்துவது, சிறுமைப்படுத்துவது, தண்டிப்பது, அவமானப்படுத்துவது, கண்டிப்பது எந்த விதத்திலும் ஏற்புடையது அல்ல. சாலமோன் தன் ஆட்சிக் காலத்தில் பெரிய யுத்தங்கள் எதையும் நடத்தவில்லை. சமாதானத்தின் அரசன் என்று கருதப்படுகிறார் (Man of peace) 1நாளா22:6-10 சாலமனுடைய ஆட்சிக்காலத்தில் சிந்தப்பட்ட இந்த ரத்துளிகள் நியாயமானதாகக் காணப்படுகிறது. எனவே தலைவர்கள் தங்கள் ஆவிக்குரிய குணாதிசயங்களை, ஆளுமைகளை, தைரியத்தை ஒருபோதும் இழந்து விடக் கூடாது. அப்படி இழந்துவிட்டால் அவர்கள் சபைகளில் அமைப்புகளில் தங்கள் அதிகாரத்தை நிலை நிறுத்த முடியாது.

லாபான் வீட்டில்வீட்டில் யாக்கோபு கற்றுக் கொண்ட பாடங்கள்

உங்கள் சிந்தனைக்கு: லாபான் வீட்டில்வீட்டில் யாக்கோபு கற்றுக் கொண்ட பாடங்கள் ஏசாவின் கோபம் தணியும் மட்டும் கொஞ்ச காலம் லாபானுடைய வீட்டுக்கு யாக்கோபின் தாயும் தந்தையும் அவனை அனுப்பினார்கள். அந்தப் பயணத்தைத் தேவன் ஆசீர்வதித்து அவனோடு கூட இருப்பேன் என்று சொல்லியது மட்டுமல்லாமல் மீண்டும் அவனைத் திரும்ப அந்த இடத்துக்கே கொண்டு வருவேன் என்று தேவன் உறுதியளித்தார். லாபானுடைய வீட்டில் ஏறக்குறைய 20 ஆண்டுகள் தங்கி வாழ்ந்தான். மாறுபட்ட சூழ்நிலைகளில் தன்னுடைய மிகப்பெரிய குடும்பத்தை நடத்த வேண்டிய பொறுப்பை அறிந்த யாக்கோபு தன் தகப்பன் வீட்டுக்குத் திரும்ப விரும்பினான். அதற்கு ஏற்பத் தேவனுடைய கட்டளையும் வெளிப்பட்டது இந்த 20 வருடத்தில் அவன் கற்றுக் கொண்ட பாடங்கள் அனேகம். 1.தேவன் ஆசீர்வதிக்கும் வரை காத்திருக்காமல் தானாகவே ஏசாவின் பிறப்புரிமையை பெற்று கொண்டான். தகப்பனுடைய ஆசிர்வாதத்தை தாயினுடைய பேச்சைக் கேட்டுத் தகப்பனை ஏமாற்றி பெற்றுக் கொண்டான். ஆனால்தான் இந்த 20 வருட காலத்தில் அவன் பல விதங்களில் ஏமாற்றப்பட்டபோது ஏமாற்றுகிற காரியம் எவ்வளவு வலியுள்ளது என்பதை உணர்ந்தான். 2.கர்த்தருடைய நேரம் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்து 20 வருடம் அங்கே காத்திருந்தான். 3.தாழ்மையை கற்றுக் கொண்டான். 4.ஆண்டவர் சொல்லும் வரை ஆண்டவர் வைத்த இடத்தில் இருப்பது என்பது மிகப் பெரிய ஆசீர்வாதம் என்பதை அவன் இப்பொழுது உணர்ந்து கொண்டான். 5.காலத்துக்கு முந்தித் தான் எதையும் செய்து விடாதபடி தன்னை பாதுகாத்துக் கொண்டான். ஏமாற்றுக்காரனாக இருந்த யாக்கோபு இப்பொழுது விசுவாச வீரனாக மாறிவிட்டான். இனி வரப்போகிற போராட்டங்களில் கர்த்தரையே சார்ந்து இருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய நம்பிக்கையைப் பெற்றுக் கொண்டான். காலம் நமக்குக் கற்பிக்கிற பாடங்களை மாதிரி வேறு எதுவும் நமக்குக் கற்பிக்காது.ஆதி 27:44, 28:15, 31:3 எசேக்கியேல் சண்முகவேல்

1 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 6

உங்கள் சிந்தனைக்கு. 1 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 6 புதிய நிர்வாகத்திற்கான வெற்றி சூத்திரம் புதிய நிர்வாகமும் களையெடுப்பும். தாவீது தான் மரிக்கப்போகின்ற இறுதி காலகட்டத்தில் தான் அரசனாக்கிய தன்னுடைய மகன் சாலமோனுக்கு கொடுத்த அறிவுரைகளில் இரண்டு பக்கங்கள் உண்டு. 1 அவன் எப்படி ஞானமுள்ளவனாக நடந்து கொள்ள வேண்டும் என்பது. 2. இரண்டாவது புதிய நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அதை எப்படி நிவர்த்தி செய்ய வேண்டும் என்கிற அறிவுரைகள். எப்பொழுதுமே புதிய தலைவர்கள் நிர்வாகப் பொறுப்பை ஏற்கும்பொழுது அவர்கள் செய்கின்ற இரண்டு காரியங்கள். ஒன்று தனக்கு வேண்டிய நபர்களை முக்கியமான பொறுப்புக்களில் நியமனம் செய்வார்கள். அடுத்தது பழைய நிர்வாகத்தில் இருக்கின்ற தேவையில்லாதவர்களை விலக்கி வைப்பார்கள். (களையெடுப்பு) இது எல்லா நிர்வாகத்திலும் தலைமைப் பொறுப்பு மாறும்போது நடக்கின்ற காரியம். ‌ இதைத்தான் தாவீது 2000 ஆண்டுகளுக்கு முன்பாகச் சாலமோனுக்கு எடுத்துரைக்கின்றான். களையெடுப்பு: யோவாப். தாவீது மரிக்கும் வரை தாவீதின் No 1 படைத்தளபதியாக இருந்தவன். ஆரம்ப காலத்தில் தாவீதுக்கு பல போர்க்களங்களில் வெற்றிக்குக் காரணமாக இருந்தான். 1 இராஜா11:15-16. ஆனால் மிகவும் தந்திரமானவன்.சவுலின் படைத்தளபதி அப்னேரை தாவீதோடு நெருங்க விடாமல் தந்திரமாகக் கொலை செய்தவன். தாவீதின் மகன் அப்சலோமை உயிருடன் பிடிப்பதற்கு வாய்ப்புகள் இருந்தும் அவனைக் கொலை செய்தவன். தாவீதுக்கு நெருக்கமாக வந்த அப்சலோமின் படைத்தளபதி அமாசாவை வஞ்சகமாகக் கொலை செய்தவன். தன் மகனைக் கொலை செய்த அந்த வருத்தம் தாவீதுக்கு கடைசி வரை நீங்கவில்லை. எனவேதாவீது அவனைக் குறித்து எச்சரித்து அவனுக்குரிய தண்டனை வழங்கும்படி‌ மறைமுகமாகக் கேட்டுக் கொண்டான். அதன்படி சாலமோன் அவனை ஏற்ற நேரத்தில் கொலை செய்தான். யோவாப் சாலமோனுக்கு விரோதமாகத் தாவீதின் இன்னொரு மகனான அதோனியாவின் பக்கம் சாய்ந்தபோது அவன் சாலமோன் அனுப்பிய பெனாயாவினால் கொலை செய்யப்பட்டான். அதைப் போலச் சீமேயுவையும் "அவனுடைய நரைத்த தலையை இரத்தத்துடன் பாதாளத்துக்குப் போகக் கட்டளையிட்டான்” இதையும் தாவீது நிறைவேற்றினான் அதே வேளையில் கீலேயாத்தியனான பர்சிலாயின் மகன்களுக்கு இரக்கம் காட்ட சொன்னான். 1 இராஜாக்கள் 2:7 சாலமோன் இதையும்நிறைவேற்றினான். தாவீது சொன்ன ஆலோசனைகளைச் சாலமோன் 100% அப்படியே நிறைவேற்றினான். ஆனால் இன்றைக்கு இயக்கங்களின் புதிய நிர்வாகம் பொறுப்பேற்கும்பொழுது இரண்டையும் செய்கிறார்கள். அத்தோடு தேவையில்லாத வேறு இரண்டு காரியங்களையும் செய்கிறார்கள். 1. தமக்கு வேண்டியவர்களை அதே நேரத்தில் தகுதி இல்லாதவர்களை, உண்மை இல்லாதவர்ளை உழைக்காதவர்களை நேர்மையில்லாதவர்களை தங்களுக்கு வெண்சாம்பரம் வீசுகிறவர்களை உயர் பதவிகளில் நிறுத்தி அழகு பார்க்கிறார்கள். அதே நேரத்தில் இன்னொரு தவறையும் செய்கிறார்கள் பழைய நிர்வாகத்தில் நேர்மையாக உண்மையாகக் கர்த்தருக்காக உழைத்தவர்களை கருவேப்பிலை போலத் தூக்கி எறிந்து விடுகிறார்கள். இந்த இரண்டு மாபெரும் தவறுகள் நிர்வாகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. நேர்மையானவர்களை வெளியேற்றுவது நிர்வாகத்திற்கு அழகல்ல. தகுதி இல்லாதவர்களை உயர்த்துவது ஆபத்தானது. இன்றைக்கு பல இயக்கங்களின் இந்தக் காரியங்கள் நடைபெற்று நிர்வாகங்கள் சீரழிக்கப்படுகிறது. தேவனுடைய பிள்ளைகள்‌ தேவனுக்கென்று கொடுக்கும் அர்ப்பணிப்புள்ள காணிக்கைகள் தவறான முறையில் கையாளப்படுகிறது. அது நாளடைவில் மிகப்பெரிய சீர்கேட்டை விளைவித்து விடுகிறது. இயக்கங்கள் இயந்திரங்களாக மாறிவிடுகிறது. அவைகள் நினைவுச் சின்னங்களாகக் காலப்போக்கில் மாறிவிடும். தாவீது சாலமனுக்கு கொடுத்த அறிவுரைகள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடியவைகள் அவற்றோடு எதையும் கூட்டமும் வேண்டாம் கழிக்கவும் வேண்டாம்.இதுதான் புதிய நிர்வாகத்திற்கான வெற்றி சூத்திரம்

2 தீமோ 3:5 ன் சரியான விளக்கம்.

உங்கள் சிந்தனைக்கு: 2 தீமோ 3:5 ன் சரியான விளக்கம். இந்த அதிகாரத்தில் இறுதி நாட்களில் கொடிய காலத்தில் உலகம் எப்படிப்பட்ட மக்களால் நிறைந்திருக்கும் என்பதை பற்றிய பதினெட்டு குறிப்புகள் கூறப்பட்டுள்ளன. 2:26ல் அந்தக் குறிப்பு தொடங்குகிறது. இதில் 5வது வசனம் நாம் பயன்படுத்தும் பவர் மொழிபெயர்ப்பில் இவ்வாறு உள்ளது. "தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்" இதை மேலெழுந்த வாரியாகப் படிக்கும்போது மேலே சொல்லப்பட்ட மனிதர்களின் 18 குணங்களை போலவே தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிற குணமும் அதில் ஒன்று என்பது போல உள்ளது. ஆனால் அதன் அர்த்தம் அப்படி அல்ல. உண்மையான அர்த்தம் இதுதான் தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிற குணம் அந்த 18 குணகளை போல ஒன்று அல்ல. தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்கள் மேலே குறிப்பிட் 18 குணங்களை உடையவர்களாக இருப்பார்கள் என்பதுதான் 2 தீமோ 3:5 ன் சரியான விளக்கம். தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிற குணம் அந்த 18 குணகளை போல ஒன்று அல்ல. அதாவது தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும் இருப்பார்கள். பல ஆங்கில மொழிபெயர்ப்புகளிலும் மற்றும் கத்தோலிக்க மொழிபெயர்ப்புகளிலும் இந்த அர்த்தத்தில்தான் காணப்படுகிறது. "இவர்கள் இறைப்பற்று உடையவர்கள் போன்று காணப்படுவார்கள். ஆனால், இறைப்பற்றின் வல்லமையோ அவர்களிடம் இராது" (கத்தோலிக்க மொழிபெயர்ப்பு) இந்த இடத்தில் "இவர்கள் "என்கிற வார்த்தை மிகவும் முக்கியமானது. இவர்கள் என்கிற வார்த்தை மேலே குறிப்பிட்ட குணங்களை உடையவர்களைக் குறிப்பதாகும். They will act religious, but they will reject the power that could make them godly. Stay away from people like that! NLT. ஆங்கில மொழிபெயர்ப்பில் "They" என்கிற வார்த்தை முக்கியமானது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் பாத்திரத்தின் வெளிப்புற சுத்திகரிப்பை பற்றி அதிகம் பேசிப் பாத்திரத்தின் உட்புற சுத்திகரிப்பை விட்டுவிடுகிறவர்கள், இறைப்பற்று டையவர்கள் போன்று காணப்படுவார்கள். ஆனால், இறைப்பற்றின் வல்லமையோ அவரிடம் காணப்படாது. எசேக்கியல் சண்முகவேல்

Joshua's formula for success

உங்கள் சிந்தனைக்கு: Joshua's formula for success யோசுவா எகிப்தில் பிறந்தவன். அவனுடைய உண்மையான பெயர் ஓசேயா எண்13:8. இரட்சிப்பு என்பது இதன் அர்த்தம். மோசே இவனுடைய பெயரை யோசுவா என்று மாற்றிவிட்டான். இதன் அர்த்தம் ''Jehovah saves" which is the Hebrew form of "Jesus "மத் 1:21. எனவே யோசுவா இயேசு கிறிஸ்துவுக்கு அடையாளமாக இருக்கிறான். யோசுவா கானானுக்கு இஸ்ரேல் மக்களை நடத்த வேண்டிய பொறுப்பைஏற்றுக் கொண்டபோது அவனுக்கு வயது 70 இருக்கும். இஸ்ரவேல் ஜனங்கள் செங்கடலை கடந்து சென்றபோது கூட இருந்தவன். மோசேயின் வாழ்க்கையில் ஏற்பட்ட முக்கியமான நிகழ்வுகளில் கூட இருந்தவன். பத்து கட்டளைகளை மோசே கடவுளிடமிருந்து பெற்றுக்கொள்ள சீனாய் மலைக்குச் சென்றபோது குறிப்பிட்ட இடம்வரைக்கும் அவனோடுகூட‌ யோசுவா சென்றான் இஸ்ரவேல் ஜனங்கள் அமேலேக்கியரோடு நடந்த போரில் இவர் தளபதியாக இருந்து வெற்றியைப் பெற்றவன். கானானுக்கு நேராக மக்களை வழிநடத்தி‌ செல்வதற்கு முன்பாகக் கடவுள் அவனை உற்சாகப்படுத்தி வாக்குறுதிகளைக் கொடுத்தார். அப்பொழுது தேவன் சொன்ன முக்கியமான ஒரு காரியத்தை யோசுவா 1:8 ல் பார்க்கலாம். இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக. இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக. அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய். யோசுவா 1:8 இதுதான் அவனுடைய வெற்றிக்கு அடித்தளம். யோசுவாவின் வெற்றி அவனுக்கு மோசேயோடு உடன் இருந்த அனுபவத்தின் அடிப்படையிலோ, ஒரு திறமையான படைத்தளபதி என்பதினாலோ, தேவன் அவனை உற்சாகப்படுத்தின காரியத்தினாலோ, வாக்குத்தத்தங்களை பெற்ற காரணத்தினாலோ அல்ல. அவனுடைய வெற்றி எங்கே இருந்தது என்றால் அவன் கர்த்தருடைய கற்பனைகளை இரவும் பகலும் தியானித்து அதைக் கடைபிடித்த காரியத்தில்தான் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். கிறிஸ்தவ வாழ்க்கையின் வெற்றி என்பது நாம் இரட்சிப்பை பெற்றதினால் மட்டும் அல்ல அது ஒரு ஆரம்பம். நாம் எந்த அளவுக்கு வேதத்தை இரவும் பகலும் தியானித்து அதன்படி நடக்க நம்மை ஒப்பு கொடுக்கும் போதுதான் நாம் செய்கிற எந்த வேலையும் உலக வேலைகளானாலும் ஆவிக்குரிய ஊழியங்களானாலும் வெற்றி பெறும். நாம் எந்த அளவுக்கு வார்த்தையாக வெளிப்பட்ட ஆண்டவரை தியானிக்கிறோமோ அந்த அளவுக்குத்தான் நாம் கிறிஸ்துவுக்குள் பரிபூரணமாக இருக்க முடியும்.கொலோ2:9,10 நாம் வேதத்தோடு இடைபடாவிட்டால் வேதம் நம்மோடு பேசாது கடவுள் நம்மோடு பேசாவிட்டால் கடவுளுக்கும் ‌நமக்கும் உள்ள உறவு பாதிக்கப்படும். தனிப்பட்ட வேத தியானத்தை புறக்கணித்த காரணத்தினால்தான் உலகம் எதிர்பார்க்கிற ஆவிக்குரிய சத்துவம் நம்மிடத்தில் காணப்படவில்லை. வெறுமனே நடனம் ஆடல் பாடல் சத்தமான பிரசங்கம் உணர்ச்சியினால் தூண்டப்பட்ட ஆராதனை இவைகளினால் இருள் சூழ்ந்த இந்த உலகத்தை நாம் அசைக்க முடியாது. வேத வசனத்தால் நிறைந்து சாட்சியோடு வாழ்கின்ற வாழ்க்கையை பற்றிக் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அதிகமாகப் போதிக்கப்படாத காரணத்தினால் இன்றைக்கு சபைகள் உலகத்தார் முன்பு கேலிக்கூத்தாகக் காணப்படுகிறது. வேத வசனங்களின் ஆசிரியர் பரிசுத்த ஆவியானவர் என்பதை மறந்து விட்டு அந்த ஆவியானவரை புறம்பே தள்ளி விட்டு வெறுமனே கூச்சல் போடுவதால் நம் தேசத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. தேவன் யோசுவாவுக்கு கொடுத்த Formula வைத்தான் புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து நமக்கு வைத்திருக்கிறார். காதுள்ளவன் கேட்ககடவன்.

1 அரசர்கள் புத்தகம் வேதபாடம் 4

உங்கள் சிந்தனைக்கு: 1 அரசர்கள் புத்தகம் வேதபாடம் 4 சாலமோனுக்கு தாவீது கூறிய‌ ஆலோசனையின் சிறப்பு அம்சம். தாவீது தான் மரணமடைவதற்கு முன்பாகத் தன் மகன் சாலமோனுக்கு கூறிய ஆலோசனைகள் இந்தப் புத்தகத்தின் இரண்டாவது அதிகாரத்தில் 1-9 வரை உள்ள வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் ஆலோசனை அவன் திடமனதாக இருக்க வேண்டும். அடுத்தது அவன் எல்லா காரியத்திலும்புத்தி மானாக இருக்க வேண்டும். சாலமோன் தாவீதை போல் போரை நடத்தியவன் அல்ல சாலமோன் தாவீதை போலப் போர்க்களத்தை பார்த்தவனும் அல்ல. நிர்வாக அமைப்பைத் தெரிந்தவனும் அல்ல. இளம் வயது முதல் போராட்ட வாழ்க்கையை நடத்தியவனும் அல்ல. தகப்பன் நிழலிலே வாழ்ந்தவன். முதல் முதலாக மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை ஆளக்கூடிய பொறுப்பு மட்டுமல்ல தேவனுக்கு முதல் முதலாக ஒரு ஆலயத்தைக் கட்ட வேண்டும் என்கிற மிகப் பெரிய பொறுப்பும் அவனுக்கு இப்பொழுது கொடுக்கப்பட்டிருக்கிறது. எல்லாவற்றிலும் தகுதி பெற்ற தாவீதை தேவனுடையஆலயத்தை கட்ட வேண்டாம் என்று தேவன் தடுத்து விட்டார். தேவனுடைய ஆலயத்தைக் கட்டக்கூடிய மிகப்பெரிய பொறுப்பைப் பெற்ற சாலமனுக்கு தாவீது கூறிய இந்த ஆலோசனைகளைச் சற்று ஆராய்ந்து பார்த்தால் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் அநேகம். இன்றைக்கு வாலிபர்களுக்கு நாம் கூறும் ஆலோசனைகளை நாம் ஆராய்ந்து பார்த்தால் அதில் சில குறைபாடுகளை நாம் பார்க்கலாம். பொதுவாக வாலிபர்களுக்குக் கூறும் அறிவுரைகள் வேதத்தைப் படிக்க வேண்டும், ஆராதிக்க வேண்டும், ஊழியம் செய்ய வேண்டும் என்ற மூன்று கோட்பாடுகளின் அடிப்படையில் இருக்கும். இவைகள் முக்கியம்தான். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் அது போதாது என்பதை தாவீது சாலமனுக்கு கூறிய அறிவுரையிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இளைஞர்களுக்கு நாம் வலியுறுத்திக் கூற வேண்டிய இரண்டு ஆலோசனைகள். ஒன்று அவர்கள் மன தைரியம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். அடுத்தது அவர்கள் ஞானமுள்ளவர்களாக இருக்க வேண்டும். இன்னொரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் ஆவிக்குரிய விழிப்புணர்வு பெற்றவர்களாக இருக்க வேண்டும். இந்த அறிவுரைகள் வாலிபர்களுக்கு மிகவும் அவசியம். இன்றைய வாலிபர்கள் புதிதாக மனம் திரும்பி ஆண்டவரை ஏற்றுக்கொண்டவர்கள். அந்த வாலிபர்கள் ஆவிக்குரிய போராட்டத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள். ‌ சாத்தானுடைய சதிகளை, ஆவிக்குரிய சுழல்களை, சுனாமிகளை, கண்ணிகளை, புதைகுழிகளை அவர்களால் நிதானிக்க முடியாது. எதையும் வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கக் கூடியவர்கள். மேடையில் பேசுகின்ற பிரசிங்கிமார்களை உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்ப்பவர்கள். சபை மேய்பர்களை கடவுளைப் போல் நினைப்பவர்கள். ஆவிக்குரிய உறவுகளை‌ உண்மையாக நம்புபவர்கள். இவர்கள் சாத்தானை நேரடியாக எதிர்க்க ஆவிக்குரிய தைரியம் கொண்டவர்கள். ஆனால் சாத்தான் எப்பொழுதும் பட்சிக்கிற சிங்கம்போல் வரமாட்டான். சில நேரங்களில் வஞ்சிக்கும் சர்ப்பத்தை போல் வருவான். ஏமாற்றும் சர்ப்பத்தையும் இளைஞர்களால் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியாது. அதுவும் ஆண்டவருக்காக வைராக்கியமாக இருக்கும் வாலிபர்களை அவன் வீழ்த்துவதற்கு தந்திரங்களைத் தான் பயன்படுத்துவான். திருமண காரியங்களில் ஆவிக்குரிய உறவுகளில் தலைவர்களோடு ஏற்படக்கூடிய நட்புகளில் சபை உறவுகளில் பலவித ஆவிக்குறிய மறைமுக வலைகளை, சுழல்களை, சுனாமிகளை உருவாக்குவான். ‌ இதை அடையாளம் கண்டு கொண்டு வாலிபர்கள் எல்லா காரியங்களிலும் ஞானம் உள்ளவனாக நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் எடுக்கும் தீர்மானங்களில் கர்த்தருடைய சித்தம் வெளிப்பட வேண்டும். தேவனுடைய நோக்கம் நிறைவேற வேண்டும். இதைப் பற்றி வாலிபர்களுக்கு நாம் போதிக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில் தாங்கள் எடுக்கும் தவறான தீர்மானங்கள், முடிவுகள், சரிகட்ட முடியாத ஆவிக்குரிய வீழ்ச்சிகளை அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்படுத்தி விடும். வாலிப வாழ்க்கை மகிழ்ச்சியான தைரியமான வாழ்க்கை. ஆனால் அதில் பல்வேறு சாத்தானுடைய சதி திட்டங்களும் அடங்கியிருக்கும். இதை அறிந்து கொண்டு ஒவ்வொரு வாலிபனும் எந்தக் காரியத்திலும் புத்திமானாக நடக்க அவர்களுக்குப் பயிற்சி கொடுக்க ஆவிக்குரிய தலைவர்கள் முன்வர வேண்டும். அப்படிப்பட்ட ஒரு காரியத்தைத்தான் தாவீது சாலமனுக்கு முதல் அறிவுரையாகச் சொன்னான் என்பது இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே வாலிபர்களுக்கு நாம் எப்படி ஞானமாக ஆவிக்குரிய போராட்டங்களைக் கையாள வேண்டும் என்கிற அடிப்படை சத்தியங்களை சொல்லிக் கொடுத்தால் பின்னாட்களில் அவர்கள்‌ தங்கள் ஆவிக்குரிய ஓட்டத்தை வெற்றிகரமாக முடிப்பார்கள். எதையோ தவற விட்டு விட்டோம் இழந்து விட்டோம் என்று வருத்தப்பட மாட்டார்கள்.

இறையியல் கல்வி கடினமான பாடம் அல்ல

உங்க சிந்தனைக்கு: இறையியல் கல்வி கடினமான பாடம் அல்ல இயேசு கிறிஸ்துவை பற்றிய இறையியலை நன்கு புரிந்து கொண்டவன் அதை எளிய முறையில் ஒரு விசுவாசிக்கு விளக்கும்போது அந்த விசுவாசிக்கு இறையியல் கல்வி என்பது மற்ற எல்லா பாடங்களையும் விட மிகவும் பிடித்த பாடமாக மாறிவிடும். பிரச்சனை எங்கே இருக்கிறது என்றால் இன்றைக்கு உள்ள இறையியல் போதகர்கள் இறையியல் கல்வியை ஒரு கடினமான ஒரு பாடம் என்கிற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி அதை விசுவாசிகளுக்கு முன்பாக அதைக் காண்பிப்பதால் இறையியல் பாடம் என்பது விசுவாசிகளுக்கு எட்டாத கனியாக இருக்கிறது இறையியல் பாடத்தை எளிமையான முறையில் விளக்கும்போது அதை விசுவாசிகள் மிகுந்த ஆர்வத்துடன் கேட்பார்கள். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பிரச்சனை பாடத்தில் அல்ல அந்தக் கல்வியை மற்றவர்களுக்குப் போதிக்கின்ற விதத்தில் இருக்கிறது‌.இது என்னுடைய பார்வை

1 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 2

உங்கள் சிந்தனைக்கு: 1 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 2 அதோனியாவின் வீழ்ச்சிக்கு வழிகாட்டிய தாவீது. அப்சலோம், அம்மோனுக்கு பிறகு உயிரோடு இருந்த தாவீதின் குழந்தைகளில் மூத்தவன். சட்டப்படி தாவீதுக்கு பிறகு அரசனாகக்கூடிய தகுதி பெற்றவன்‌. ஆகீத்திற்குப் பிறந்த அதோனியா என்பவன்,"நான் ராஜா ஆவேன்" என்று சொல்லி, தன்னைத்தான் உயர்த்தி, தனக்கு இரதங்களையும் குதிரை வீரரையும், தனக்குமுன் ஓடும் ஐம்பது காலாட்களையும் சம்பாதித்தான். (I இராஜாக்கள் 1:5) தனக்குப் பிறகு சாலமோன் தான் அரசனாக வேண்டியவன் என்று தாவீதுக்கு தேவன் சொல்லி இருந்தும்(1நாளா22:9,10) ‌ அதோனியா தன்னைத்தானே அரசனாக அறிவித்துக் கொள்கிற அந்த முயற்சியைத் தாவீது கண்டிக்கவில்லை என்பதை 1:6 ன் மூலம் அறிந்து கொள்ளலாம். அவனுடைய முயற்சியை ஆரம்ப நிலையில் தாவீது தடுத்திருக்கலாம். 70 வயது ஆனாலும் அதோனியா தன்னைத்தானே அரசனாக அறிவித்ததை தெரிந்த உடனே தன்னுடைய ஒரே கட்டளையினால் சாலமோனை அரசனாக்ககூடிய ஒரு மிகப்பெரிய அதிகாரத்தைத் தாவீது கொண்டிருந்தான்.(1:32-35) அப்படிப்பட்ட தாவீது அதோனியா தேவனுடைய சித்தத்துக்கு விரோதமாகத் தன்னைத்தானே அரசனாக முயற்சி செய்கிற அந்த ஆரம்ப நிகழ்வுகளைக் கண்டனம் செய்யாமல், அசட்டையாகக் கண்டிக்காமல் விட்டு விட்டான். ஒருவேளை அவன் அந்தோனியாவை அழைத்து, எச்சரித்து இருந்தால் அதோனியா தான்தான் அரசனாகக்கூடிய அந்த முயற்சியைக் கைவிட்டு இருப்பான். தாவீது அதோனியாவை ஆரம்பித்தில் கண்டிக்காமல் விட்டதினால் பின்னால் அவனை இழக்கக்கூடிய ஒரு சோக நிகழ்வு அவனுடைய வாழ்க்கையில் ஏற்பட்டது. அம்மோன் , அப்சலோம் மரணத்திற்கு தாவீதை பொறுப்பாளியாக்க முடியாது. ஆனால் இந்த நிகழ்வில் அதோனியாவின் மரணத்திறகு அதோனியாவை கண்டிக்காமல் விட்ட அந்த ஆரம்ப தயக்கம் மிகப்பெரிய காரணமாயிற்று. இதன் மூலம் நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள் 1. தேவசித்தம் இல்லாத காரியங்கள் நம்முடைய வாழ்க்கையில் நடைபெறுகின்ற அந்த ஆரம்ப நிலையிலேயே அவற்றை அகற்றி விட வேண்டும். தேவசித்தம் இல்லாத காரியங்களை நாம் நம்முடைய வாழ்க்கையில் வளரவிட்டால் அது நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும். அந்த மாதிரி தேவ சித்தமில்லாத காரியங்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். 2. பிள்ளைகளைக் கண்டிப்பதில் கவனத்துடன் இருக்க வேண்டும். நம்முடைய பிள்ளைகள் தேவனுடைய சித்தத்திற்கு விரோதமான காரியங்களில் செயல்பட ஆரம்பிக்கும் அந்த ஆரம்ப நிலையிலேயே நாம் அவற்றைக் கண்டிக்க தவறிவிட்டால் பின்னால் ஒருபோதும் அவற்றைக் கண்டிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடும். இதனால் பிள்ளைகளுடைய ஆவிக்குரிய வாழ்க்கை பாதிக்கப்படும். நம்முடைய சந்தோஷம் மறைந்துவிடும். தேவ சித்தத்தை நிறைவேற்றத் தவறிவிடுவோம். நம்முடைய பிள்ளைகள் விஷயத்தில் நாம் தேவ சித்தம் செய்யத் தவறும்பொழுது அதன் விளைவுகளை வாழ்நாள் முழுவதும் அனுபவித்தே ஆக வேண்டும். பிள்ளைகள் விஷயத்தில் நாம் எப்பாடுபட்டாவது தேவ சித்தத்தை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும். அப்படி தவறும்பொழுது நம்முடைய இறுதி நாட்களில் கண்ணீரோடு ஓட்டத்தை முடிக்க வேண்டியிருக்கும். தாவீதின் வாழ்க்கையில் அதோனியின் காரியத்தில் தாவீதின் அலட்சியம் நமக்கு ஒரு மிகப்பெரிய பாடம்.

தீமோத்தேயு 2:11,12 ன் உண்மையான பொருள் என்ன?

உங்கள் சிந்தனைக்கு: தீமோத்தேயு 2:11,12 ன் உண்மையான பொருள் என்ன? நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார். நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார். 2 தீமோத்தேயு 2:11,12. இந்த வார்த்தையை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். 1.நாம் அவரை மறுதலித்தால், கடவுளும் நம்மை மறுதலிப்பார். 2.நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், கடவுள் உண்மையுள்ளவராயிருக்கிறார்; 3.கடவுள் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார். இதன்  முதல் கூற்றைப் பற்றித் தியானிக்கலாம். "நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்" இதன்  விளக்கம் மத்தே 10:33 ல் இயேசு கிறிஸ்து  சொல்லிய வார்த்தையில் உள்ளது "மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்". . அடுத்து இரண்டாவது  முதல் கூற்றைத் தியானிக்கலாம். 'நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்' இதன் விளக்கம் "நாம் நம்பத்தகாதவரெனினும் அவர் நம்பத்தகுந்தவர்." நம்முடைய செயல்கள் உண்மை குறைவாக இருந்தாலும் நாம் மீட்பை ஒருபோதும் இழக்க மாட்டோம்.  நியாதீர்ப்பின்  நாளில் நமக்குள்ள பரிசுகளை   வேண்டுமானால் இழக்கலாம். அவர் நம்மை தள்ளிவிடமாட்டார். கைவிடமாட்டார். அதன் விளைவாக நாம் நமது இரட்சிப்பை இழந்து போகமாட்டோம் கடைசியாக "அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்' அதாவது ஏனெனில் தம்மையே மறுதலிக்க அவரால் இயலாது. அவருடைய அடிப்படை குணங்களான Divine attributes) இரக்கம்  நீதி தயவு   நியாயத்தீர்ப்பு  போன்ற   இவைகளுக்கு மாறாக  எதையும்  செய்யமாட்டார்,  செய்ய இயலாது .அவரால் செய்ய முடியாத செயல் ஓன்று இருக்குமானால் அது தம்முடய அடிப்படை சுபாவங்களுக்கு  மாறாக எதையும் செய்ய இயலாத செயல்தான். The one and only thing He cannot do, because He will not do is to deny Himself or contrary to Himself. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் அதாவது நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார். "நாம் நம்பத்தகாதவரெனினும் அவர் நம்பத்தகுந்தவர்." இது அவரின் நம்பகத்தன்மையையை  சார்ந்த குணம். கடைசியாகச் சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் எனவே அவர் ஒருபோதும் தம்முடைய தெய்வீக பண்புக்கூறுகளுக்கு  மாறாக எதையும் செய்யமாட்டார். The one and only thing He cannot do, because He will not do, is to deny Himself or contrary to Himself. Ezekiel Shanmugavel

1 அரசர்கள் புத்தகம் . வேத பாடம் 1

உங்கள் சிந்தனைக்கு: 1 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 1 படிக்க முதலாவது அதிகாரம். வயதான தேவனுடைய பிள்ளைகளுடைய ஆவிக்குரிய வல்லமையை குறைத்து மதிப்பிடக் கூடாது. தாவீதின் இறுதிக்காலம். அப்போது அவருடைய வயது 70 இருக்கும். தாவீதின் மூத்த புதல்வர்கள் அம்மோன், அப்சலோம் கொலை செய்யப்பட்டு விட்டபிறகு அடுத்தவன் அதோனியா தாவீதுக்கு பிறகு அரசாள நினைத்தான். தாவீதின் வயதை கருத்தில் கொண்டு அதற்கான திட்டங்களை வகுத்தான். தன் தகப்பனுடைய வயது மூப்பை மனதில் கொண்டு அவனுடைய ஆவிக்குரிய திறமையை, வல்லமையை, ஞானத்தை குறைத்து மதிப்பிட்டான். வயது சென்றாலும் தன் தகப்பன் தேவனால் முன் குறிக்கப்பட்டவன், பயன்படுத்தப்பட்டவன் என்கிற சிந்தையை மறந்து விட்டான். அதோனியா மிகவும் அழகிய தோற்றமுள்ளவனாய் இருந்தான். அவனுடைய தாயின் பெயர் ஆகீத் அவனுக்குத் தேர்களையும், குதிரைகளையும், ஐம்பது மனிதரையும் அவனுக்கு முன் செல்வதற்கு கொடுத்து அவனை அரசனாய் ஆக்குவதற்கு உற்சாகப்படுத்தினாள்.1:5 ஆரம்பத்தில் தாவீதும் இவனுடைய செயல்களை, திட்டங்களைத் தடுக்கவில்லை. அது மாத்திரம் அல்ல அவனுக்கு உதவியாகத் தாவீதினுடைய தளபதி யோவாபும், ஆசாரியன் அபியத்தாரும் கூட இருந்தனர். ஆனால் ஆசாரியனான சாதோக்கும், யோய்தாவின் மகன் பெனாயாவும், இறைவாக்கினனான நாத்தானும், சீமேயியும், ரேயியும் தாவீதின் விசேஷ காவலனும் அதோனியாவுடன் சேரவில்லை. 1 இராஜாக்கள் 1:8 மேலும்‌தேவனுடைய சித்தம் தாவீதுக்கு பிறகு சாலமோன் அரசாள வேண்டும் என்பதே. அதோனியா தன்னையே அரசனாக அறிவித்து ஒரு பெரிய விருந்தை ஏற்பாடு செய்து அதில் கலந்து கொள்ள தன்னுடைய சகோதரரையும், அரசனின் மகன்களையும், யூதாவிலிருந்த அரச அதிகாரிகளான எல்லா மனிதர்களையும் அழைத்தான். நிலைமை கை மீறிப் போவதை உணர்ந்த நாத்தான், சாலமோனின் தாயாகிய பத்சேபாளிடம் போய், அதோனியா தாவீதுக்குத் தெரியாமலேயே அரசனாகத் தன்னை அறிவித்த காரியத்தைத் தெரிவித்தான். 1 இராஜாக்கள் 1:11 தனது மகன் சாலமோன்‌தான் தாவீதுக்கு பிறகு அரசன் ஆவான் என்று தாவீது தனக்கு கொடுத்த வாக்குறுதியைத் தாவீதுக்கு நினைவுருத்தும்படி‌ அவளைத் தாவீதிடம் அனுப்பினான். அவளும் அதை வலியுறுத்திக் கேட்கும் சமயத்தில் நாத்தானும் தாவீதிடம் சாலமோனை அரசனாக வலியுறுத்தினான். பிறகு தாவீது சாலமோனை அரசனாக்க ஆசாரியனான சாதோக்கை அழைத்து சாலமோனை அபிஷேகம் பண்ண கட்டளையிட்டான். சாலமோன் அரசன் ஆக்கப்பட்டான். மக்கள் மிகப்பெரிய ஆதரவை அளித்தார்கள். மிக விரைவில் காரியம் மாறுதலாய் முடிந்தது. தாவீது துரிதமாக நடவடிக்கை எடுத்துத் தன் ஆளுமையை வெளிப்படுத்தினான். இதை அதோனியா எதிர்பார்க்கவில்லை. இதைக் கேள்விப்பட்டதும் அதோனியா சிதறி ஓடிவிட்டான். வயதான காலத்திலும் 70 வயது ஆனபோதும் தன்னுடைய அதிகாரத்தைத் தாவீது நிலை நிறுத்தினான். தாவீது தேவனுடைய திட்டத்தைச் சாலமோனை அரசனாக்கினதன் மூலம் நிறைவேற்றினான்‌. நாமும் பல நேரங்களில் வயதான தேவனுடைய பிள்ளைகளுடைய ஆவிக்குரிய திறமைகளை, அவர்கள் தேவனோடு இருக்கின்ற உறவைப் புரிந்து கொள்ளாமல் அவர்களை அற்பமாக எண்ணிவிடுகிறோம். அவர்களை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை முக்கியமான ஆலோசனைகளில் அவர்களுக்குரிய மதிப்பு அளிப்பதில்லை. அவர்களைக் கலந்து ஆலோசிப்பதில்லை. இது தேவனுடைய பார்வையில் சரியில்லை. என்னதான் அறிவியல் வளர்ச்சி வளர்ந்திருந்தாலும் வயதான தேவனுடைய பிள்ளைகளுடைய ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் கேட்டுப் பின்பற்றி நடக்கிற விசுவாசிகள் பாக்கியவான்கள். வயதான விசுவாசிகள் தேவனோடு வைத்திருக்கின்ற அந்த ஐக்கியத்தை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தாவீதின் வயது, அவன் சாதித்த வெற்றிகள், தேவனால் பயன்படுத்தப்பட்ட காரியங்கள், தேவனிடம் அவனுக்குள்ள உறவு இவற்றை அலட்சியம் செய்து அதோனியா எடுத்த முயற்சி பலன் அளிக்கவில்லை. தன் விருப்பத்தைத் தாவீதிடம் சொல்லி ஆலோசனை கேட்டிருக்கலாம். இறுதியில் அவன் செய்த இன்னொரு சதி திட்டத்தால் சாலமோன் கட்டளைப்படி கொலை செய்யப்பட்டான்.2:13-26 வயது முதிர்ந்த ஆவிக்குரிய விசுவாசிகளை யாரும் அற்பமாக எண்ணக் கூடாது. இதுவே நாம் கற்றுக் கொள்ளும் ஆவிக்குரிய பாடம்.

கணக்கெடுப்பை நடத்த தாவீது யாரால் தூண்டப்பட்டான்?

உங்கள் சிந்தனைக்கு: ணக்கெடுப்பை நடத்த தாவீது யாரால் தூண்டப்பட்டான்? 2 சாமுவேல் புத்தகம் வேத பாடம் 14 கர்த்தருடைய கோபம் திரும்ப இஸ்ரவேலின்மேல் வந்தது. இஸ்ரவேல் யூதா என்பவர்களை எண்ணிக்கை பார் என்று அவர்களுக்கு எதிராகச் சொல்லுகிறதற்கு தாவீது தூண்டப்பட்டான். .1 நாளாகமம் 21:1 "யெகோவாவின் கோபம் மறுபடியும் இஸ்ரயேலுக்கு எதிராக மூண்டது, அவர் அவர்களுக்கு விரோதமாய் தாவீதை ஏவி, “நீ போய் இஸ்ரயேலரையும், யூதாவையும் கணக்கிடு” என்றார்." 2 சாமுயேல் 24:1 இலகு இலங்கை மொழிபெயர்ப்பு. 2 சாமுவேல் புத்தகத்தில் கடவுள் கணக்கெடுப்பை எடுக்கும்படி தாவீதை தூண்டினார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் நாளாகமம் புத்தகத்தில் சாத்தான் தூண்டியதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. எதில் எந்தக் கருத்து உண்மையானது? இவைகள் இரண்டுமே உண்மை என்று வியர்ஸ்பி மற்றும் வில்லியம் மெக்டொனால்ட் கூறுகிறார்கள். ‘'God permitted Satan to tempt David in order to accomplish the purpose He had in mind" பொதுவாக இம்மாதிரி கணக்கெடுப்பு நடத்தும்பொழுது மக்களிடமிருந்து அரைச்சேக்கல் ஆலயத்திற்கு கொடுக்க வேண்டும். இந்த அரைச்சேக்கல் யெகோவாவுக்கான ஒரு காணிக்கையாகும்..இதுTemple tax அழைக்கப்படும். யாத்திராகமம் 30:13. ஆனால் இந்தக் கணக்கெடுப்பில் அப்படி வரி வசூலித்ததாகத் தெரியவில்லை . இது முழுக்க முழுக்க தாவீது தன்னுடைய ராணுவ பலத்தை உலகுக்கு அறிவிக்க வேண்டும், அதைத் தெரிவிக்க வேண்டும் என்கிற பெருமையினால் செய்யப்பட்ட காரியம். கடவுள்மீது நம்பிக்கை வைக்காமல் தன் ராணுவத்தின் மீது பெருமை கொள்வதற்காக இந்தக் காரியத்தைத் தாவீது செய்தான். 20 வயதுக்கு மேற்பட்டவர்களை அறிந்து கொள்ள கணக்கெடுக்கப்பட்டது. அதாவது ராணுவத்திற்கு தயாராக உள்ள எண்ணிக்கைபற்றி அறிவதற்காக எடுக்கப்பட்டது. தாவீது பத்சேபாள் விவகாரத்தில் தாவிது மாமிச பலவீனத்தினால் வீழ்ந்து போனான். இங்கே அவன் தன்னுடைய ஆவிக்குரிய பெருமையையினால் தன் தன்னுடைய ஜனத்திற்கு பெரும் தீமையை வரவழைத்தான். அதன் விளைவு ஏழு வருடங்கள் பஞ்சம் அல்லது மூன்று மாதங்கள் எதிரிகள் பின்தொடர தாவீதுஅவர்களுக்கு முன்பாக ஓடிப்போக வேண்டும், அல்லது தேசத்தில் மூன்று நாட்கள் கொள்ளைநோய் உண்டாக வேண்டும் என்கிற மூன்று தண்டனைகளில் ஏதாவது ஒரு தண்டனையைத் தெரிந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டான். அதற்குத் தாவீது “ நாம் கர்த்தருடைய கையிலே விழுவோமாக; அவருடைய இரக்கங்கள் மிகப்பெரியது; மனிதர்கள் கையிலே விழாமல் இருப்பேனாக என்றான்”. கர்த்தர் இஸ்ரவேலிலே அன்று காலமே தொடங்கி குறித்தகாலம்வரைக்கும் கொள்ளைநோயை வரப்பண்ணினார்; அதினால் எழுபதினாயிரம்பேர் செத்துப்போனார்கள். 2 சாமுவேல் 24:15. இது தாவீதி செய்த இரண்டாவது பாவம் தாவீது பத்சேபாளோடு ஏற்பட்ட தவறான உறவைவிடத் தான் கணக்கெடுப்பு நடத்தியதை" மிகவும் பாவஞ்செய்தேன்"என்றான் சங்கீத41:4, ("I have sinned greatly') 1 நாளாகமம் 21:8.,சங்கீத41:4, இதற்குப் பரிகாரமாகத் தாவீது தரிசனக்காரனான காத்தின் கட்டளைப்படி "அர்வனாவின் சூடடிக்கும் களத்திற்குப் போய் அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினானன்" 2 சாமுயேல் 24:18. அன்றையதினம் காத் தாவீதிடம் சென்று, “நீ எபூசியனான அர்வனாவின் சூடடிக்கும் களத்திற்குப் போய் அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டு” என்றான். அங்கே தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் பலியிட்டான். அப்பொழுது நாட்டிற்காகச் செய்யப்பட்ட வேண்டுதலுக்கு யெகோவா பதிலளித்தார், இஸ்ரயேலின்மேல் வந்த கொள்ளைநோய் நின்றுபோனது. 2 சாமுயேல் 24:18, 25 இந்த இடம் என்பது ஆபிரகாம் தன் மகன் ஈசாக்கை பலியிட முன்வந்த இடம்.(ஆதி22). இந்த இடத்தில் தான் சாலமோன் பின் நாட்களில் பிரம்மாண்டமான ஒரு தேவாலயத்தைக் கட்டினான் இதன் மூலம்தேவன் நமக்கு உணர்த்தும் பாடங்கள். தாவீதுக்கு தேவனுடைய திட்டத்தில் மிகப்பெரிய பங்கு உள்ளது. அவனது வம்சத்தில் உலகத்தின் இரட்சகர் பிறந்தார். அவனுடைய 73 சங்கீதங்கள் சங்கீத புத்தகத்தில் காணப்படுகிறது. இவ்வளவு பெரிய தேவனுடைய மனிதனின் தவறுகளையும் பலவீனங்களையும் வேத புத்தகமும் தெளிவாக எழுதி இருக்கிறது. தாவீது செய்த இரண்டு மிகப்பெரிய பாவங்களிலும் இரண்டு மிகப்பெரிய நன்மைகளை இந்த உலகத்திற்கு தேவன் அளித்தார் என்பதுதான் நம்மால் புரிந்து கொள்ள முடியாத காரியம். 1தாவீதுக்கு அநேக மனைவிகள் இருந்தாலும் உரியாவின் மனைவியாக இருந்து பின் நாட்களில் தாவீதின் மனைவியான பத்சேபாள் மூலமாகப் பிறந்த சாலமோன் தான் தாவீதுக்கு பிறகு அரசன் ஆனான்.தேவனுடைய ஆலயத்தைக் கட்டினான். 2. தன்னுடைய பெருமையினால் ராணுவத்தில் சேர தகுதியானவர்களின் கணக்கெடுப்பை நடத்தியதற்கு பரிகாரமாக ஒரு இடத்தில் பலிபீடம் கட்டினான். பிறகு அங்குத் தான் தேவனுடைய ஆலயம் கட்டப்பட்டது. இந்த இரண்டு காரியங்களையும் நம்மால் புரிந்து கொள்ள முடியாது நம்முடைய தோல்விகளை உலகம் பரிகாசம் செய்யும்பொழுது நகைப்பிற்குரியவர்களாக மாற்றும்பொழுது தேவன் அந்தப் பலவீனங்கள் மூலமாகச் சில வேலைகளில் தேவன் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவார் என்பதை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். தேவனுடைய சித்தத்தின் மத்தியில் இருப்பவர்களுக்குச் சகலமும் (ஏன் நம்முடைய பாவத்தின் மூலம் ஏற்படும் விளைவுகளும்) நன்மைக்கு ஏதுவாகவே வாழ்க்கையில் மாறும்

ஈசாக்கு வாழ்க்கையின்’ கடைசி நேரத்தில் தேவனுடைய சித்தத்தை அறிந்த மனிதன்

அன்பு செலுத்துவதில் பாரபட்சம் கூடாது . ஆபிரகாம், ஈசாக்கு. யாக்கோபு. யோசேப்பு என்று நான்கு முற்பிதாக்கள் பற்றி வேதத்தில் சொல்லப்பட்டாலும் ஈசாக்கு 180ஆண்டுகள் வாழ்ந்தாலும் , அவரைப்பற்றி வேதத்தில் சொல்லப்பட்ட கருத்துக்கள் மிக மிக குறைவு . (இரண்டே அதிகாரங்கள் ) அவர் தேவனுடைய வெளிப்படுதலை, தேவனுடைய சித்தத்தை கடைசி நேரத்தில்தான் புரிந்த முற்பிதா. ஒரு நல்ல நேர்மையான பாரபட்சமற்ற குடும்பத் தலைவனாக அவர் காணப்படவில்லை. பாரபட்சமாக ஏசாவை நேசித்தார் . அற்பமான உணவிற்காக அவன்மீது அன்பு செலுத்தினார்."ஏசா வேட்டையாடிக் கொண்டுவருகிறது ஈசாக்கினுடைய வாய்க்கு ருசிகரமாயிருந்ததினாலே ஏசாவின்மேல் பட்சமாயிருந்தான்: ஆதி 25:28 மரித்துப் போகும் நேரத்திலாவது தன் குடும்பத்தைக் குறித்து , “அதாவது மூத்தவன் இளையவனை சேவிப்பான்” என்கிற தேவனுடைய வெளிப்படுதலை தன் மனைவிரெபெக்கா மூலம் பெற்றிருப்பானேயானால் அவன் ஏசாவை அழைத்து “நன்கு உணவை சமைத்துக் கொண்டு வா உன்னை ஆசீர்வதிக்கிறேன்” என்று சொல்லியிருக்க மாட்டார் . தேவ சித்தத்தை தன் மனைவி ரெபெக்காளிடமிருந்து அறிந்து செயல்பட்டிருந்தால் தன் மனைவி ரெபெக்காள் தனக்கு விரோதமாக தன்னுடைய இன்னொரு மகனை பொய் சொல்ல சொல்லி ஏமாற்றி ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ள சொல்லியிருக்க வேண்டி சூழ் நிலை ஏற்பட்டிருக்காது. ஆனால் தேவனுடைய அனாதி திட்டம் ஈசாக்கு யாக்கோபுவை ஆசிர்வதித்ததை திரும்பப் பெற்றுக் கொள்ளவில்லை.(அவனை ஆசீர்வதித்தேனே, அவன் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் இருப்பான் " ஆதி 27:33) அந்த ஒரு காரியத்தில் மாத்திரம்தான் அவன் தேவனுடைய சித்தத்தை அறிந்து அதை அதை விட்டு பின்வாங்கவில்லை. அதனால் தான் அவன் பெயர் விசுவாச வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றது.எபி 11:20 ஈசாக்கின் பலவீனங்கள். 1ஒரு குடும்பத் தலைவனாக பாரபட்சமில்லாமல் தன் குழந்தைகளை நேசிக்க தவறிவிட்டார் 2. தன் குடும்பத்தைப் பற்றிய தேவ சித்தத்தை அறிந்து செயல்படாமல் இறுதிக் கட்டம் வரை வாழ்ந்தவர்"?("மூத்தவன் இளையவனைச் சேவிப்பான்")ஆதி 25:28 3 ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப் பற்றிய புரிதல் இல்லமல் அவனை கண்டிக்காமல் அவனுக்கு ஆதரவாக இறுதிவரை இருந்தவன் எபி 12:16

1சாமுவேல் புத்தகம் வேதபாடம் 8

சவுலை தேவன் நிராகரிக்க எது காரணமாயிற்று? சவுலுடைய கீழ்ப்படியாமையா? அல்லது யூதா குலத்தைக் குறித்த தேவனுடைய தெரிந்து கொள்ளுதலா? யாக்கோபு தன்னுடைய 12 குழந்தைகளில் யூதாவை குறித்து சொல்லும்போது "செங்கோல் யூதாவைவிட்டு நீங்காது" என்று தீர்க்கதரிசன உரைத்தார். Judah was the Kingly tribe. ஆனால் தேவன் இஸ்ரவேல் ஜனங்களுடைய நிர்பந்தத்துக்காகச் சவுலை முதலில் தெரிந்தெடுத்தார். அவன் யூதா குலத்தைச் சேர்ந்தவன் அல்ல. ஆனால் யூதா கோத்திரத்தில் இருந்துதான் உலகத்தின் இரட்சகர் பிறக்க வேண்டும் என்பது தேவனுடைய அனாதி திட்டம். அதே வேலையில் சவுல் தன்னை ஆசாரியனாக நினைத்துச் சாமுவேல் தீர்க்கதரிசி வருவதற்கு முன்பாகவே கடவுளுக்குச் சர்வாங்க தகன பலியை செலுத்தினார் 13:12 ஆதலால் சவுலூடைய‌ ராஜ்யபாரம் நிலைநிற்கவில்லை. கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனைத் தமக்குத் தேடி, அவனைக் கர்த்தர் தம்முடைய ஜனங்கள்மேல் தலைவனாயிருக்கக் கட்டளையிட்டார். ‌காரணம் கர்த்தர் விதித்த கட்டளையைச் சவுல் கைக்கொள்ளவில்லை என்பதே 1 சாமுவேல் 13:14. முதலில் கடவுள் அவனை அரசன் ஆக்கியது பின்பு அவனுடைய மீறுதலால் அவனை விலக்கியது பிறகு தாவீதை அரசனாக்கியது இவைகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்துப் பார்க்கும்பொழுது எனக்குப் புரிந்தது. கடவுள் மனிதனுக்கு கொடுத்த சுயாதீனம் (Liberty)மனிதனைக் குறித்த அவருடைய முன்னறிவிப்பு (His foreknowledge) அவருடைய தெரிந்து கொள்ளுதல்(Predestination), இறுதியாக அவருடைய இறையாண்மை (sovereignty). இதே போல் தான் கடவுள் உலகத்தைப் படைத்து ஆதாம் ஏவாளை உருவாக்கினது அதற்குப் பிறகு அவர்களுடைய கீழ்படியாமை அதன் விளைவாக முழு மனுக்குலதிற்கும் அவருடைய குமாரன் மூலமாக இரட்சிப்பு இவைகள் அனைத்தையும் இனைத்துப் பார்க்க வேண்டும். இந்த எல்லா நிகழ்வுகளிலும் மேலோங்கி இருப்பது தேவனுடைய இறையாண்மையே. யூதாஸை இயேசு கிறிஸ்து சீடராகத் தெரிந்து கொண்டது அவனவரை காட்டிக் கொடுத்தது அதன் விளைவாக இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டது அதன் விளைவாக உலகத்திற்கு கிடைத்த இரட்சிப்பு இவைகள் அனைத்தையும் ஒரே கோட்டில் இணைத்துப் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. தேவனுடைய திட்டத்தில் அவருடைய முன்னறிவிப்பு, அவருடைய தெரிந்து கொள்ளுதல், அவருடைய இறையாண்மை இவைகளோடு மனிதனுக்கு அவர் கொடுத்த சுயாதீனம் இவைகள் அனைத்தும் இந்த உலகத்தில் செயலாற்றி கொண்டிருக்கிறது. Free wiii God's foreknowledge God's election. God's sovereignty. These are the for fundamental principles of God's working in the world. ezekiel shanmugavel

1 Samuel Book. Bible study 8

What caused God to reject Saul? Saul's disobedience? Or God's election of the tribe of Judah as kingly tribe. When Jacob mentions Judah among his 12 children  "The scepter shall not depart from Judah," he prophesied. So Judah should be the kingly tribe. But God chose Saul first because of the pressure of the people of Israel. He was not of the tribe of Judah. But it was God's eternal plan that the world's Savior should be born from the tribe of Judah. At the same time  Saul acted as a priest and offered burnt offerings to God before Samuel the prophet came. 13:12 Therefore Saul's kingdom did not last. The Lord looked for a man after His own heart, and the Lord appointed him to be a leader over His people. The reason is that Saul did not obey the Lord's commandment. 1 Samuel 13:14. First, God made Saul king, then removed him because of his transgression, and then made David king. Liberty, His foreknowledge of man, His predestination, and finally His sovereignty. This is God's way of working.  In the same way, God created the world and then Adam and Eve, and then followed their disobedience and the resulting salvation of all mankind through His Son. God's sovereignty prevails in all these events. It is my opinion that all these things should be connected in one line when Jesus Christ chose Judas as a disciple, betrayed him, and as a result, Jesus Christ was crucified and the salvation of the world as a result. In God's plan, His foreknowledge, His sovereignty, and the freedom He has given to man are all at work in this world. Free will God's  foreknowledge God's election. God's sovereignty. These are the fundamental principles of God's working in the world.  ezekiel shanmugavel

1 சாமுவேல் புத்தகம்.வேதபாடம்7

70 பேருடன் எகிப்துக்கு சென்ற யாக்கோபின் குடும்பம் ஏறக்குறைய 400 ஆண்டுகள் அங்கே அடிமைகளாக வாழ்ந்தார்கள். அப்பொழுது அவர்கள் பலுகி பெருகினார்கள். அவர்கள் எகிப்தைவிட்டு கடக்கும்பொழுது அவர்களுடைய ஜனத்தொகை 20 லட்சம்  இருந்திருக்கும் என்று பல வேத அறிஞர்கள் சொல்லுகிறார்கள். அவர்கள்  கானானை நோக்கிப் பயணப்பட்டார்கள். அந்த ஜனங்களை மோசே 40 ஆண்டுகள் வழி நடத்தினார். அதற்குப் பிறகு யோசுவா 52 ஆண்டுகள் அவர்களை நியாயம் விசாரித்தார். பிறகு 500 ஆண்டுகள் பல்வேறு நியாயாதிபதிகள் இஸ்ரவேல் ஜனங்களை நியாயம் விசாரித்தார்கள். அவர்களின் கடைசி நியாயாதிபதி சாமுவேல். இந்தச் சாமுவேல் மட்டும் இஸ்ரவேல் ஜனங்களை ஏறக்குறைய 60 ஆண்டுகள் நியாயம் விசாரித்தார். இறுதியாக அவர்கள் மன்னர் ஆட்சியை விரும்பிக் கேட்டார்கள். சாமுவேல் தீர்க்கதரிசி கடைசியாக இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுத்த செய்தி பல வகைகளில் சிறப்பானது அதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம். படிக்க 1 சாமு புத்தகம் 12 வது அதிகாரம். Farewell address of Samuel. அவரது இறுதிப் பேச்சில் ஒரு முக்கிய காரியத்தைச் சாமுவேல் தீர்க்கதரிசி குறிப்பிடுகிறார். அதுதான் கர்த்தருடைய வழிகளைப் பின்பற்றுகிற காரியம். மோசே நடத்தினாலும், யோசுவா நடத்தினாலும், நியாயாதிபதிகள் நடத்தினாலும், அவர்களை உண்மையாக இஸ்ரவேல் ஜனங்களை நடத்தினவர் கடவுள் என்பதை அவர்கள் உணர வேண்டும். அவர்கள் பல்வேறு நேரங்களில் கர்த்தருக்கு பிரியம் இல்லாத காரியங்களைச் செய்து கர்த்தருக்கு கோபமூட்டினாலும் கர்த்தர் அவர்களைத் தமக்கு ஜனமாக்கிக்கொள்ளப் பிரியமானபடியினால், கர்த்தர் தம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனத்தைக் கைவிடவில்லை. 1 சாமுவேல் 12:22. மேலும் இறுதியாக சாமுவேல் ஜனங்களுக்குச் சொன்ன செய்தி " இந்தப் பொல்லாப்பையெல்லாம் செய்தீர்கள்; ஆகிலும் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை உங்கள் முழுஇருதயத்தோடும் சேவியுங்கள்." 1 சாமுவேல் 12:20. . ஒரு புதிய அமைப்புக்குள் அதாவது மன்னராட்சி முறைக்குள் இஸ்ரவேல் ஜனங்கள் செல்லப் போகிறார்கள். ஆனால்‌ அந்த அமைப்புக்குள்ளும் அவர்கள் ஆண்டவருக்கு கீழ்ப்படிந்து நடந்தால்தான்  பாதுகாப்பு. வெறுமனே மன்னராட்சி அமைப்பு மட்டுமே அவர்களைப் பாதுகாக்காது. எனவே தேவனுக்கு கீழ்ப்படிந்து வாழ்வதுதான் இஸ்ரவேல் ஜனங்களுக்குப் பாதுகாப்பு என்பது தான் அவருடைய இறுதி செய்தியின் சாராம்சம்‌. இதை வைத்து இன்றைய சூழ்நிலையைப் பொருத்திப் பார்ப்போம் என்றால் நம் தேசத்தை ஆளுகின்றவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவர்களை ஆளுகிறவர் தேவன். நாம் அவருக்குக் கீழ்ப்படிந்து அவருடைய வழிகளில் நடக்கும்போது கர்த்தருடைய பாதுகாப்பு. நமக்குக் கிடைக்கும். இதுவரைக்கும் நம்முடைய வாழ்க்கையில் தேவன் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்து, கர்த்தருக்குப் பயந்து, நமது முழுஇருதயத்தோடும் அவரைப் பின்பற்ற வேண்டும் 1 சாமுவேல் 12:24 இனி வருங்காலங்களில்‌ நம்முடைய தேசத்தில் அரசியலில்எத்தகைய அரசியல் மாற்றங்கள் வருமோ, பொருளாதாரத்தில் எத்தகைய வீழ்ச்சி ஏற்படுமோ, என்னென்ன பாதகங்கள் ஏற்படுமோ நம்முடைய மத சுதந்திரத்தில் என்னென்ன தாக்கங்கள் ஏற்படுமோ இவைகள் பற்றி எல்லாம் எல்லாம் நமக்குத் தெரியாது. நாம் அதற்காக ஜெபிக்க வேண்டியது நம்முடைய கடமை. அதே வேலையில் நாம் அவரை உண்மையாய் சேவித்து சாட்சியாக வாழ்ந்து உலக மக்கள் மத்தியில் அவருடைய நாமத்தை உயர்த்தும்போது நிச்சயமாக அவருடைய பாதுகாப்பு நம்மிடத்தில் இருக்கும். தவிர வேறு மாற்று வழி கிடையாது. நாம் எவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்தாலும் அது அவர்களுக்குப் பாதுகாப்பு அல்ல. நம்முடைய ஒரே பாதுகாப்பு அவருடைய வழியில் நடந்து அவருடைய சித்தத்தை செய்வது மட்டுமே. அதுபோலச் சபைகளில் இயக்கங்களில் கால சூழ்நிலைகளுக்கு ஏற்பப் பலவிதம் மாற்றங்கள் நடந்து கொண்டே இருக்கும். ஆனால் அடிப்படைக் கொள்கை அவருக்குப் பிரியமாக வாழ வேண்டும் என்பதே. கடவுளுடைய வார்த்தை, விசுவாசத்தின் அவசியம் அவருடைய குணாதிசயங்கள் ஒருபோதும் மாறாதது எசேக்கியேல் சண்முகவேல். Methods are many, principles are few; Methods always change, principles never do.W.W.Wiersbe.

Extra luggage in our spiritual life.

இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தை விட்டுக் கடந்து வந்தபிறகு அவர்கள் அதிக நாட்கள் தங்கிய‌ இடம் சீனாய்மலை. இந்த இடத்தில் ஏறக்குறைய ஒரு வருடம் தங்கினார்கள். இங்குதான் ஆசரிப்பு கூடாரம் உருவாக்கப்பட்டது. லேவியர் ஆசாரியர்களின் பணிகள் வரையறுக்கப்பட்டது. வானத்திலிருந்து மன்னா பொழியப்பட்டு ‌இஸ்ரவேல் ஜனங்கள் அதை உணவாகச் சாப்பிட்டார்கள். தேவனுடைய பாதுகாப்பில் சுகமாகத் தங்கினார்கள். இதற்குப் பிறகு அவர்கள் பிரயாணப்பட்டு போகிற நிகழ்வுகளைக் குறித்து எண்ணாகம புத்தகம் 10:11முதல்12:16ல் சொல்லப்பட்டுள்ளது. இஸ்ரவேலர் எகிப்தை விட்டுப் புறப்பட்டபோது ஏறக்குறைய 20 லட்சம் பேர் சென்றனர். எகிப்தை விட்டுப் புறப்பட்ட மூன்றாவது நாளிலேயே தண்ணீருக்காக முறுமுறுத்த யூதர்கள் இப்பொழுது கானானை நோக்கிப் புறப்பட்ட மூன்றாவது நாளில் இறைச்சிக்காக முறுமுறுத்தார்கள். எகிப்தில் தாங்கள் உண்ட உணவைக் குறித்து இச்சை கொண்டார்கள். எகிப்தில் சாப்பிட்ட மீன், வெள்ளரிக்காய் வெள்ளைப் பூண்டு இவற்றை நினைத்து ஏங்கினார்கள். தேவன் வானத்திலிருந்து பொழிந்த மன்னாவை அலட்சியம் பண்ணி உணவுக்காகக் கூடார வாசலில் நின்று கதறினார்கள். இதற்குக் காரணம் எகிப்திலிருந்து இவர்களோடு இணைந்து வந்த யூதர்கள் அல்லாத ஒரு கூட்டம்தான்.(A mixed multitude). இவர்கள் எதற்காக யூதர்களோடு புறப்பட்டு வந்தார்கள் என்று நமக்குத் தெரியாது. ஆனால் இவர்கள் இஸ்ரவேலருக்கு மிகப்பெரிய இடறலாகக் காணப்பட்டார்கள். எப்படி என்றால் ஆண்டவர் அவர்களுக்கு ‌அளித்த மன்னாவின் மீது ஒரு வெறுப்பை உண்டாக்கியவர்கள் இவர்கள்தான். இதனால் யூதர்கள், தேவன் வானத்திலிருந்து‌ பொழிந்த மன்னாவை அலட்சியம் பண்ணி உணவுக்காகக் கூடார வாசலில் நின்று கதறினார்கள். இதைப் பார்த்து மோசே ஆண்டவரிடம் "நான் இவர்களைப் பெற்றேனா? என்னைக் கொன்றுவிடும் இந்தப் பாரத்தை என்னால் சுமக்க முடியாது "என்று விரக்தியில் ஆண்டவரிடம் புலம்பியதை பார்க்கலாம்‌. விரக்தியின் உச்ச கட்டத்திற்கே மோசே சென்று விட்டான். இதைப் பார்த்து ஆண்டவர் ஒரு காற்றை அனுப்பி கடலில் இருந்த காடை பறவைகளை அடித்து முகாம் முழுவதும் நிரப்பினார். அந்தக் காடைகளை யூதர்கள் விழுங்குவதற்கு முன்பாகக் கர்த்தருடைய கோபம் மூண்டு கொடிய கொள்ளை நோயினால் பாதிப்பு ஏற்பட்டது. .இவ்வளவு பெரிய பாதிப்புக்கு அடித்தளமிட்டவர்கள் யூதர்களோடு இணைந்து வந்த யூதர்கள் அல்லாத மக்கள்தான். இந்த நிகழ்வுகள் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் உணர்த்தும் பாடங்கள் என்ன? 1.இந்த நிகழ்வுகள் நமது‌ஆண்டவர்‌‌ களைகளைக் குறித்் ஓடும் மத்13:24-30,36-43 ல் சொன்ன வார்த்தைகளை நினைவுபடுத்துகிறது. சபைகளில் எப்பொழுதுமே பயிர்களோடு களைகளையும் பிசாசு விதைத்து விடுவான். இந்தக் களைகளும் பயிர்களைப் போலவே காட்சியளிக்கும். இவர்களும் மனம் திரும்பிய விசுவாசிகளைப் போல எல்லா நிலைகளிலும் காட்சியளிப்பார்கள். சமயம் வரும்போது பிசாசு இவர்களைப் பயன்படுத்துவான். இவர்கள் கள்ள சகோதரர்கள் கலா2:4,2கொரி11:26. இவர்கள் ஊழியக்காரர்களைப் போல் தோற்றமளிக்கும் போலியான ஊழியக்காரர்கள்.2கொரி 11:13. இந்தக் களைகள் எப்பொழுதும் சபைகளில் காணப்படும். நாம் தான் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் விழிப்பாக இருக்க வேண்டும். 2.இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கிய குறிப்பு. எப்பொழுதுமே நம்முடைய ஆவிக்குரிய பயணத்தில் கர்த்தருக்கு சித்தம் இல்லாதவர்கள், தேவையில்லாதவர்கள் நம்மோடு பயணிக்கும்போது அவர்கள் பல நேரங்களில் நமக்கு இடறலாக மாறிவிடுவார்கள். நம்மைத் தேவனுடைய சித்தத்தை விட்டு வழி விலகச் செய்து விடுவார்கள். நம்மைக் கொண்டு கர்த்தர் கொண்டிருக்கும் சித்தத்தை செயல்படுத்த விடாமல் தடுத்து விடுவார்கள். சில நேரங்களில் பாவங்களுக்கு நேராக வழி நடத்துவார்கள். எனவே நம்மோடு ஆவிக்குரிய பயணத்தில் நம்மோடுபயணம் செய்வர்களை குறித்து நாம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். எல்லா மனிதர்களும் நமக்கு ஆவிக்குரிய உதவி செயபவர்கள் என்று எண்ணிவிட முடியாது. அதில் களைகளும் இருக்கும். இதே போல் தான் ஆபிரகாம் கர்த்தருக்கு சித்தம் இல்லாமல் எகிப்துக்கு சென்றபோது பார்வோன் அளித்த வெகுமதியில் வந்த வேலைக்கார பெண் ஆகார் மூலமாகத் தேவை இல்லாத சந்ததி உருவாயிற்று. எனவே நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் 'ஆண்டவரே என் வாழ்க்கையில் தேவையில்லாத நட்புகளை உறவுகளை, ஐக்கியங்களைஅகற்றி விடும்'என்று ஜெபிப்பது அவசியமான ஒன்று. படிக்க யாத்12:38 எண்ணாகமம் 11வது அதிகாரம் ஆதி12:15,16. Ezekiel Shanmugavel

The Book of 1 Samuel  Bible Study 6

Samuel the prophet judged the people of Israel for about 60 years. For about 500 years, the judges exercised spiritual authority over the people of Israel. Prophet Samuel was the last of the judges. After him, the rule of the king started.  The people of Israel asked for a system of government to govern them like the people of the world. From the day he forgot his mother's milk, Samuel devoted himself to the work of the Tabernacle and served the people of Israel faithfully. The questions posed to its people at the time of the changeover of the system are profound.   "Here I stand. Testify against me in the presence of the Lord and his anointed. Whose ox have I taken? Whose donkey have I taken? Whom have I cheated? Whom have I oppressed? From whose hand have I accepted a bribe to make me shut my eyes? If I have done any of these things, I will make it right." 1 Samuel 12:3 This witness is important in the lives of every individual believer and in the lives of leaders. When we think about the paths we have travelled in the end times to complete the spiritual journey we have lived, we should have a witness as contented as the prophet Samuel. How we lived, how honest we were, how holy we were, how honestly we served God, how free we worked in the office, how much we sacrificed, how much we did not harm anyone. Our conscience will tell us the right answer. We may not have achieved great things in our lives, but what matters is how our lives have been before God. May God grace us to complete our spiritual course with such contentment. It doesn't matter how much the Lord has done through us. What matters is what kind of witness we live for the Lord.  Who among you can accuse me and prove that I have sinned? (John 8:46)  This is the challenge of Jesus Christ. A great lesson for us is that Samuel challenged his testimony a thousand years ago, just as Jesus Christ challenged. No matter how many hardships we face in our lifetime, we should never try to compromise our integrity, holiness, and integrity. A balance sheet is prepared at the end of every financial year in commercial companies. They will calculate how many assets and liabilities their company has. Likewise, if we look at the account of spiritual life like this, we will know   to how many people I have been an asset and to how many people I have been a liability. May God himself give us grace to run our spiritual race like Samuel . Ezekiel Shanmugavel

1 சாமுவேல் புத்தகம் வேதபாடம் 6

சாமுவேல் தீர்க்கதரிசி ஏறக்குறைய 60 ஆண்டுகள் இஸ்ரேல் ஜனங்களை நியாயம் விசாரித்தார். சுமார் 500 ஆண்டுகள் நியாயாதிபதிகள் இஸ்ரவேல் ஜனங்களின் மேல் ஆவிக்குரிய அதிகாரத்தைச் செலுத்தினார்கள். சாமுவேல் தீர்க்கதரிசி தான் நியாயாதிபதிகளின் கடைசி நபர். அவருக்குப் பிறகு மன்னர் ஆட்சி முறை தொடங்கிவிட்டது. இஸ்ரேல் ஜனங்கள் தங்களை ஆளுகை செய்வதற்கு உலக மக்களைப் போலத் தங்களுக்கும் அரசாட்சி முறை வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். சாமுவேல் தாயின் பாலை மறந்த நாள் முதல் ஆசாரிப்பு கூடாரப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தி இஸ்ரவேல் ஜனங்களை உண்மையும் உத்தமமுமாய் அவர்களுக்கு ஊழியம் செய்தார். ஒரு நிர்வாக அமைப்பு மாறுகின்ற அந்த வேளையில் தன் ஜனங்களை நோக்கி வைத்த அந்தக் கேள்விகள் மிகவும் ஆழமானவைகள். "இதோ, இருக்கிறேன்; கர்த்தரின் சந்நிதியிலும் அவர் அபிஷேகம்பண்ணி வைத்தவருக்கு முன்பாகவும் என்னைக்குறித்துச் சாட்சி சொல்லுங்கள்; நான் யாருடைய எருதை எடுத்துக்கொண்டேன்? யாருடைய கழுதையை எடுத்துக்கொண்டேன்? யாருக்கு அநியாயஞ்செய்தேன்? யாருக்கு இடுக்கண்செய்தேன்? யார் கையில் பரிதானம் வாங்கிக்கொண்டு கண்சாடையாயிருந்தேன்? சொல்லுங்கள்; அப்படியுண்டானால் அதை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பேன் என்றான். 1 சாமுவேல் 12:3 ஒவ்வொரு தனிப்பட்ட விசுவாசியின் வாழ்க்கையிலும் தலைவர்கள் வாழ்க்கையிலும் இந்தச் சாட்சி முக்கியம். நாம் வாழ்ந்த ஆவிக்குரிய ஓட்டத்தை முடிக்கும் இறுதி காலத்தில் நாம் கடந்த வந்த பாதைகளை யோசிக்கும்பொழுது சாமுவேல் தீர்க்கதரிசியை போல மனநிறையுள்ள ஒரு சாட்சியை நாம் பெற வேண்டும். நான் எப்படி வாழ்ந்தோம், எப்படி நேர்மையாக இருந்தோம், எவ்வளவு பரிசுத்தமாக இருந்தும், எந்த அளவுக்கு நாம் கடவுளுக்கு நேர்மையாக ஊழியம் செய்தோம், எந்த அளவுக்குக் கையூட்டு வாங்காமல் நாம் அலுவலகத்தில் வேலை செய்தோம், எவ்வளவு தியாகம் இருந்தும், எந்த அளவுக்கு யாருக்கும் கெடுதல் செய்யாமல் இருந்தோம் என்பதற்கு நம்முடைய மனசாட்சியே சரியான பதிலை நமக்குச் சொல்லும். நாம் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனைகளைச் சாதிக்காமல் இருந்திருக்கலாம் ஆனால் நமது வாழ்க்கை தேவனுக்கு முன்பாக எப்படி இருந்தது என்பது தான் முக்கியம். இப்படிப்பட்ட மனநிறைவோடு நாம் நமது ஆவிக்குரிய ஓட்டத்தை முடிக்கத் தேவன் நமக்குக் கிருபை செய்ய வேண்டும். நம்மைக் கொண்டு ஆண்டவர் எவ்வளவு ஊழியங்களை செய்தார் என்பது முக்கியமில்லை. நாம் ஆண்டவருக்காக எப்படிப்பட்ட சாட்சி உள்ளவளாக வாழ்ந்தோம் என்பதே முக்கியம். நான் பாவம் செய்தேன் என்று என்னைக் குற்றம் சாட்டி நிரூபிக்க உங்களில் எவனால் முடியும்? (யோவா8:46) என்று இயேசு கிறிஸ்து சவால் விட்டது போல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே சாமுவேல் தன் சாட்சியைக் குறித்து சவால் விட்டது நமக்கு ஒரு மிகப்பெரிய பாடம். நாம் வாழ்கின்ற காலத்தில் எவ்வளவு பாடுகள் கஷ்டங்கள் இருந்தாலும் நம்முடைய நேர்மையையும் பரிசுத்தத்தையும் உத்தமத்தையும் சமரசம் செய்து கொள்ள ஒருக்காலும் முயற்சிக்கக் கூடாது. வணிக நிறுவனங்களில் ஒவ்வொரு நிதிஆண்டு முடிவிலும் Balance sheet தயாரிப்பார்கள்‌. ‌ தங்களுடைய நிறுவனத்திற்கு எவ்வளவு Assets இருக்கிறது எவ்வளவு Liability என்று கணக்கு பார்ப்பார்கள். அதுபோல நாமும் இப்படி ஆவிக்குரிய ஓட்டத்தின்கணக்கை பார்த்தால் நமக்கு நான் எத்தனை பேருக்கு Assets ஆக இருந்தோம் எத்தனை பேருக்குLiability ஆக இருந்தோம் என்று தெரியும். சாமுவேலை போல நம்முடைய ஆவிக்குரிய ஓட்டத்தை ஓட கர்த்தர் கிருபைநமக்குத் தருவாராக. ezekiel shanmugavel .

ஆபிரகாம் தெரியாத 7 வார்த்தைகள்

“ஆதாம் சகலவித நாட்டுமிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், சகலவிதக் காட்டுமிருகங்களுக்கும் பேரிட்டான்" இன்றைக்கு 3500 வகையான பாலூட்டிகளும், 8600 வகை பறவைகளும் 5500 வகையான ஊர்வன, நீர்நில வாழ்வனவைகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது. அப்படியென்றால் ஆதாம் இருந்த காலத்தில் இதைவிட எவ்வளவு அதிகமாக விடப் பாலூட்டிகளும் பறவைகளும் ஊர்வன நீர்நில வாழ்வனவைகளும் இருந்திருக்கவேண்டும்என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அவைகள் அத்தனையையும் ஆதாம் அழைத்துப் பெயர்களைச் சூட்டினான் இந்த மண்ணில் பிறந்த மிகப் பெரிய அறிவாளி ஆதாம்தான். மிகச் சிறந்த ஞாபக சக்தி உள்ளவன் Adam had tremendous vocabulary. ஆனால் அவனுக்குத் தெரியாத 7 வார்த்தைகள் 1 மரணம் 2 நிர்வாணம் 3 சாபம் 4 வருத்தம 5 முள் 6 வியர்வை 7 பட்டயம். இந்த 7 வார்த்தைகளையும் ஆதாம் தன் வீழ்ச்சிக்குப் பிறகு தான் அறிந்துகொண்டான். ஆனால் இரண்டாம் ஆதாம் இயேசு கிறிஸ்து சிலுவையில் இந்த 7 சாபங்களையும் நீக்கி விட்டார் கொலோ 2:14 இதைப் போல்தான் நம் அகராதியில் கூட நாம் மறுபடி பிறப்பதற்கு முன், மறுபடி பிறப்பதற்கு பின், என்று பிரித்துப் பார்த்தால் பல வார்த்தைகள் சேரலாம், அதன் அர்த்தங்கள் மாறலாம் சேரலாம். பல வார்த்தைகள் நம்முடைய அகராதியில் இல்லாமலே இருக்கலாம். தேவையில்லாத வார்த்தைகள் ஒழிந்து கொண்டிருக்கும். எதுவுமே மாறாமல் இருந்தால் அது மறு பிறப்பின் அனுபவம் அல்ல. எசேக்கியல் சண்முகவேல்

Four truths we should know about devil's false teachings

Colo. 2nd chapter  1. Knowledge of who Jesus Christ is (Colossians 2:3,9,10) 2 What He Has Done for Us (2:13-15) 3 Who we are (2:10, 12) 4 What we must do (2:6,7) If we read and prayerfully meditate on the entire letter to the Colossians, we will not fall prey to Satan's tricks and lose our wager. The second chapter of this letter is significant. Deep truths and many secrets are found in this chapter that we cannot grasp. Colossians is a warning letter to the churches today. Two of the best verses of this chapter are verses 9 and 10. You are complete in Him, who is the head of all [principality] and power. Colo 2:10 Yes, in Christ we are complete. We can see the reason for this in verse 9. In Him dwells all the fullness of the Godhead [a]bodily; NKLV Christ, all the fullness of the Deity lives in bodily form. NIV Col 2:9,10. Even after reading it so many times, we cannot properly understand the depth of these two verses. "Paul gives one of the most sublime and unmistakable verses in the Bible on the deity of the Lord Jesus Christ." William McDonald. We are complete in Christ. We have to trust the all-sufficiency of Christ. We have everything we need for our holiness, righteousness, wisdom, and way of life. We can get it for free. My only regret is that this truth has not been preached more deeply in the churches, especially in the Pentecostal churches. If these teachings had been taught deeply—the teaching about taking away, adding, celibate life is superior, teaching about clothes, teaching about days of worship rather than worship—all these would not have been followed beyond the limit. This is my humble opinion. If we understand these 4 truths, we will not be deceived by Satan.  "What a great truth! What a great declaration! What a great affirmation! What a great exhortation!" Ezekiel shanmugavel

இயேசு கிறிஸ்து யார் என்கிற அறிவு

நமது  பந்தயப்பொருளை   இழந்துபோகும்படி  பிசாசின்  கள்ள போதனைகளினால் வஞ்சியாதிருக்கப்படாதிருக்க நாம் அறிந்து கொள்ள  வேண்டிய   நான்கு  வழிகள்.              கொலோ  2 வது  அதிகாரம். 1 இயேசு கிறிஸ்து யார் என்கிற அறிவு (கொலோ   2:3,9,10)       Know who Jesus is 2 அவர் நமக்குச் செய்த காரியங்கள் (2:13-15)         Know what He has done 3  நாம்  யார் (2:10,12)   Know who we  are 4 நாம்  செய்ய  வேண்டிய காரியம்(2:6,7)       Know what we are to do for Him கொலோசெயர் நிருபம் முழுவதையும்  நாம் படித்து ஜெபத்தோடு  தியானித்தால் சாத்தானின் தந்திர வழிகளில் சிக்கி  கொள்ளாமல்   நமது  பந்தயப்பொருளை   இழந்து போகமாட்டோம். குறிப்பாக இந்தக் கடிதத்தின் இரண்டாவது அதிகாரம் மிக முக்கியமானது. ஆழமான சத்தியங்கள் நம்மால் கிரகித்துக் கொள்ள முடியாத அநேக ரகசியங்கள் இந்த அதிகாரத்தில் காணப்படுகின்றன. இன்றய  சபைகளுக்குக் கொலோசெயர் நிருபம் ஒரு எச்சரிக்கை  நிருபம். இந்த அதிகாரத்தின் மிகச்சிறந்த இரண்டு வசனங்கள் 9 மற்றும் 10 “சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்.” கிறிஸ்துவுக்குள் நாம் நிறைவாக இருக்கிறோம் இதற்கான காரணத்தை வசனம் 9ல் நாம் பார்க்கலாம். ஏனெனில் இறைவனின் முழுநிறைவும் மனித உடலின்படி கிறிஸ்துவில் குடிகொண்டிருக்கிறது. கொலோசேயர் 2:9. Christ all the fullness of the Deity lives in bodily form,. கொலோ 2:9,10. இத்தனை தடவை படித்தாலும் இந்த இரண்டு வசனங்களின் ஆழத்தை அதனுடைய ஆழத்தை நாம் சரியாகப் புரிந்து கொள்ள முடியாது. "Paul gives one of the most sublime and unmistakable verses  in the Bible on the deity of Lord Jesus Christ."William McDonald. நாம் கிறிஸ்துவுக்குள் முழு நிறைவாக இருக்கிறோம். We are complete in him We have to trust the all sufficiency of Christ. நம்முடைய பரிசுத்தத்திற்கு நம்முடைய நீதிக்கு நம்முடைய ஞானத்திற்கு வாழ்க்கை முறைக்குத் தேவையான அனைத்தும் அவரிடத்தில் இருக்கிறது. அதை நாம் இலவசமாகப் பெற்றுக் கொள்ள முடியும். எனக்குள்ள ஒரே வருத்தம் இந்தச் சத்தியம் ஆழமாகச் சபைகளில் குறிப்பாகப் பெந்தகோஸ்தே சபைகளில்‌ பிரசிங்கிக்கப்படவில்லை என்பதுதான். இந்தப் போதனைகள் ஆழமாகப் போதிக்கப்பட்டு இருந்தால் கழட்டுவது, சேர்ப்பது, திருமணம் செய்யாத வாழ்க்கை உயர்ந்தது என்று போதிப்பது உடைகளைப் பற்றிய போதனை ஆராதனை விட ஆராதனை நாட்களைப் பற்றிய போதனைகள் இவைகள் அனைத்தும் குறிப்பிட்டு எல்லைக்கு மீறிப் பின்பற்றப்படாமல் இருந்திருக்கும். இது அடியேன் உடைய தாழ்மையான எண்ணம். கொலோ 2 இரண்டாவது அதிகாரத்தைப் பற்றி Herald Wlilmington இப்படி கூறுகிறார் What a great truth! What a great declaration! What a great affirmation! What a great exhortation!. ezekiel shanmugavel

What does it mean that "I hated Esau"?

What does it mean to say, "So I loved Jacob and hated Esau"? Romans 9:13 In Rjareegam translation, it is translated as "I do not want Esau." There are many interpretations of this, but I will share only two important explanations. This area has been misunderstood by many. Why should God hate Esau? Why should Esau be rejected even before he was born? Is our God unjust? It can't be like that. The true meaning of hating Esau is that I loved Jacob more than Esau. Because it depends on the sovereignty of God. . Both were born of Adam's transgression. Both were born in sin. There was no merit in both. There is no fairness. So we can blame God if we ignore the righteousness of one and do injustice to the other. But both were born in sin. We cannot blame God when He wants to love someone too much. Because when there are so many great people in the world, knowing only ourselves depends on God's love and sovereignty. "Unless he hates father and mother and wife and children and brothers and sisters and his own life, he cannot be my disciple." This must be matched with the words of Jesus Christ. Jesus Christ did not say to hate father, mother, wife, children, brother, and sister. They wanted to love him more than they did. Another interpretation These words (I hated Esau) were not mentioned at the place where the event occurred. Genesis 25:21-27. Malachi 1:2-3. It is in the prophetic book of Malachi that he wrote a thousand years later. When many scribes write about the reason for this, it is said that this was based on the many things that the descendants of Esau (Edomites and Moabites) did against the people of Israel (Numbers 24:17, 18; Hebrews 12:17; Isaiah 11:6, 11, 1, 14). So the real truth is that God does not hate anyone fundamentally.. ezekiel Shanmugavel

ஏசாவை வெறுத்தேன் என்பதன் உண்மையான* அர்த்தம் என்ன?

'அப்படியே, யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன் '' என்பதின் உண்மையான அர்த்தம் என்ன ? ரோம 9:13 ராஜரிகம் அவர்கள் மொழிபெயர்ப்பில் "ஏசாவை விரும்பவில்லை" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதற்குப் பல்வகையான வியாக்கியானங்கள் இருந்தாலும், முக்கியமான இரண்டு விளக்கங்களை மட்டும் நான் பகிர்ந்து கொள்கிறேன். உண்மையாகவே இந்தப் பகுதி பலரால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒரு பகுதி. தேவன் ஏசாவை ஏன் வெறுக்க வேண்டும் ? அதுவும் பிறப்பதற்கு முன்பாகவே ஏன் ஏசாவை புறக்கணிக்க வேண்டும் ?அப்படிப்பட்ட ஒரு நிலைக்குத் தேவன் ஏன் வர வேண்டும். நம் கடவுள் அநீதி உள்ளவரா? அப்படி இருக்க முடியாது. ஏசாவை வெறுத்தேன் என்பதற்கு உண்மையான அர்த்தம் நான் ஏசாவை விட யாக்கோபை அதிகமாகச் சிநேகித்தேன் என்று அர்த்தம் கொள்ளலாம். ஏனென்றால் இது தேவனுடைய இறையாண்மையை சார்ந்தது . இருவருமே ஆதாமின் மீறுதலால் பிறந்தவர்கள். இருவருமே பாவத்தில் பிறந்தவர்கள். இருவரிடதிலும் எந்தத் தகுதியும், நியாயமும் கிடையாது. அதனால் ஒருவனுடைய நீதியை புறக்கணித்து மற்றவனுக்கு அநீதி செய்திருந்தால் நாம் தேவன் மீது குற்றம் சுமத்த முடியும். ஆனால் இருவருமே பாவத்தில் பிறந்தவர்கள். ஒருவனிடத்தில் அதிகமாக அன்பு கூர தேவன் நினைக்கும்பொழுது அதை நாம் குறை கூற முடியாது. ஏனென்றால் நம்மையும் கூட உலகத்தில் மேன்மையானவர்கள் எவ்வளவோ பேர் இருக்கும்பொழுது நம்மை மாத்திரம் தெரிந்து கொண்ட அந்தக் காரியம் தேவனுடைய அன்பையும் இறையாண்மையை சார்ந்ததது. "தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான். " என்கிற இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளோடு இதைப் பொருத்தி பார்க்க வேண்டும் . அதாவது இயேசு கிறிஸ்து தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளை வெறுக்க சொல்லவில்லை. அவர்களைவிட தன்னை அதிகமாக நேசிக்க விரும்பினர். இன்னொரு வியாக்கியானம் அந்த நிகழ்வு உண்டான இடத்தில் இந்த வார்த்தைகள்( ஏசாவை வெறுத்தேன்) சொல்லப்படவில்லை. ஆதி 25:21-27. ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு மல்கியா எழுதிய தீர்க்கதரிசன புத்தகத்தில் தான் இந்த வார்த்தை சொல்லப்படுகிறது. மல்கி 1:2-,3. இதற்கான காரணம்பற்றிப் பல வேத பண்டிதர்கள் எழுதும்போது ஏசா வழி வந்த சந்ததியினர் சந்ததியினர் (ஏதோமி யர், மோவாபியர் ) இஸ்ரவேல் மக்களுக்கு விரோதமாகச் செய்த பல காரியங்களின் அடிப்படையில் இவ்வாறு கூறப்பட்டதாகச் சொல்லப்படுகிறது (எண்ணா24;17,18, எபி12:17 ஏசாயா11:,6,11,1,14). எனவே தேவன் யாரையும் அடிப்படையில் வெறுக்க மாட்டார் என்பது தான் உண்மையான சத்தியம் எசேக்கியேல் சண்முகவேல்

Saul's early life was remarkable. 

He was seen as a humble man. 1 Sam 9:21 He was a person who did not identify himself with the power . Sam 10:16 Even though he was anointed as king, he hesitated to take that responsibility and hid himself. 10:22.  What these qualities show is that he was naturally reluctant to identify himself with the power. As soon as he was anointed as the king, when we look at his history God changed his heart. 1 Samuel 10:9 The reason The Spirit of God came upon him with power. He became a different person. 1 Samuel 10:6. Although the Spirit of God came upon him and God gave him another heart, his character did not change completely. Eventually he committed suicide.  Because he did not obey God's words, he showed himself as a priest and tried to take revenge on David for no reason. He committed a series of sins He lived for many years without knowing that God had passed away from him by committing such a series of sins. One thing we must understand. The purpose of God's Spirit descending upon him was to fulfill the ministry or task given to him by God. "He was God's man officially. But he was not a true believer." William MacDonald  Many such events took place in the lives of a few people in the Old Testament.  Exodus 31:3, Numbers 11:17,25, Judges 6:34, 14:6, Necho 9:20, Isaiah 61:1, Ezekiel 2:2, Micah 3:8. The purpose of the Spirit of God descending upon certain individuals in the Old Testament was to fulfill the work God had given them.  When that work is done, the Spirit of God will pass away from him. But not so in the New Testament. The purpose for which the Holy Spirit has been given to us is to do His ministry and to receive all the graces necessary for us to become like Jesus Christ. From the day I am born again until the day I die, the Holy Spirit will continue to dwell in us and make a difference in our lives. This is the difference between the Spirit of God descending upon a man in the Old Testament and a man being born of the Spirit in the New Testament. The Old Testament period is the period of God's commandments. The New Testament age is the age of the Holy Spirit. Ezekiel Shanmugavel

சவுலுடைய ஆரம்ப வாழ்க்கை மிகவும் சிறப்பானது.

1.ஒரு தாழ்மை உள்ள மனிதனாகக் காணப்பட்டான். 1சாமு9:21 2. தன்னை உலகத்திற்கு அடையாளம் காட்டாத நபராக இருந்தார் 1சாமு10:16 3‌‌. தான் அரசனாக அபிஷேகம் பண்ணப் பட்டபோதிலும் அந்தப் பொறுப்பை எடுப்பதற்கு தயங்கி தன்னை மறைத்துக் கொண்டான்.10:22. இந்தக் குணங்கள் எதைக் காட்டுகிறதுது என்றால் அவன் இயற்கையிலேயே உலகத்திற்கு தன்னை அடையாளம் காட்ட விரும்பாதவனாகக் காணப்பட்டான். இவனுடைய வரலாற்றை ஆராய்ந்து பார்க்கும்பொழுது அரசனாக அபிஷேகம் பண்ண பட்டவுடனே இறைவன் அவன் இருதயத்தை மாற்றினார். 1 சாமுயேல் 10:9 காரணம் கடவுளின் ஆவியானவர் வல்லமையுடன் அவன்மேல் இறங்கினார். அவன் வித்தியாசமான மனிதனாய் மாறினான். 1 சாமுயேல் 10:6. கடவுளின் ஆவியானவர் அவன்மேல் இறங்கின போதிலும் அவனுக்கு வேறொரு இருதயத்தை கடவுள் கொடுத்தபோதிலும் அவனுடைய குணநலன்கள் முற்றிலும் மாறவில்லை. இறுதியில் அவன் தற்கொலை செய்து கொண்டான். காரணம் தேவன் சொன்ன வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியவில்லை, தானே ஆசாரியனாகத் தன்னை காண்பித்துக் கொண்டான், தாவீது மேல் காரணம் இல்லாமல் பழிவாங்க முயற்சி செய்த காரியம். இப்படி அடுக்கடுக்காய் பாவங்களைத் தொடர்ந்து செய்து தேவன் தன்னை விட்டுக் கடந்து போனதை அறியாமல் பல ஆண்டுகள் வாழ்ந்தான் இதில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அவனிடத்தில் கடவுளுடைய ஆவியானவர் இறங்கிய நோக்கம் அவனுக்குத் தேவன் அளித்த ஊழியத்தை அல்லது பணியை நிறைவேற்றுவதற்காகத் தான். "He was God 's man officially. But he was not a true believer."William MacDonald இது போன்ற பல நிகழ்வுகள் பழைய ஏற்பாட்டில் ஒரு சில மனிதர்கள் வாழ்க்கையில் நடைபெற்றுள்ளது. யாத்31:3, எண்ணா11:17,25,நியா6:34,14:6,நெகோ9:20,ஏசை61:1,எசேக2:2,மீக3:8. பழைய ஏற்பாட்டில் ஒரு சில நபர்கள்மேல் தேவனுடைய ஆவியானவர் இறங்கிய நோக்கம் அவர்கள் தேவன் அவர்களுக்குக் கொடுத்த பணியை நிறைவேற்றுவதற்காகத்தான். அந்தப் பணி முடிந்ததும் கடவுளின் ஆவியானவர் அவனை விட்டுக் கடந்து போய் விடுவார். ஆனால் புதிய ஏற்பாட்டில் அப்படி அல்ல. நமக்குப் பரிசுத்த ஆவியானவர் அருளப்பட்ட நோக்கம் அவருடைய ஊழியத்தை செய்வதற்காகவும் இயேசு கிறிஸ்துவை போல் நாம் மாறுவதற்காக அதற்கு வேண்டிய சகல கிருபைகளையும் பெற்றுக் கொள்வதற்காக. நான் மறுபடியும் பிறந்த நாள் முதல் மரிக்கும் நாள்வரை பரிசுத்த ஆவியானவர் நம்மில் தங்கி நம்முடைய வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்கிக் கொண்டே இருப்பார். இதுதான் பழைய ஏற்பாட்டில் கர்த்தருடைய ஆவியானவர் மனிதன் மேல் இறங்குவதற்கும் புதிய ஏற்பாட்டில் ஒரு மனிதன் ஆவியினால் பிறப்பதற்கும் உள்ள வித்தியாசம். பழைய ஏற்பாடு காலம் தேவனுடைய பிரமாணங்களில் காலம். புதிய ஏற்பாட்டு காலம் பரிசுத்த ஆவியானவரின் காலம். எசேக்கியேல் சண்முகவேல்

நான் விரும்பும் மேய்ப்பர்.

1.எந்த  மேய்ப்பர் தன் விசுவாசிகளை உண்மையாகவே தன் குடும்பமாக நினைக்கிறாரோ அவரே என் மேய்ப்பர். 2.எந்த  மேய்ப்பர் ஊழிய காரியங்களில் விசுவாசிகளுடைய ஆலோசனையைக் கருத்தில் கொள்வாரோ அவரே என் மேய்ப்பர். 3.எந்த மேய்ப்பர் விசுவாசிகளைப் போலவே நானும் சபையில் ஒரு உறுப்பினர் என்று எண்ணுகிறாரோ அவரே என் மேய்ப்பர். 4.எந்த மேய்ப்பர் நான் விசுவாசிகளைவிட ஒரு படி உயர்ந்தவன் என்று எண்ணத்தில் கூட நினைக்காமல் இருக்கிறாரோ அவரே என் மேய்ப்ர். 5.எந்த மேய்ப்பர் சபை தன்னுடைய சொத்து அல்ல அது விசுவாசகளின் சொத்து என்று எண்ணுகிறாரோ அவரே என் மேய்ப்பர். 6. எந்த மேய்ப்பர் தகுதியுள்ள விசுவாசிகளைத் தன் குடும்பத்தில் உள்ள நபர்களை எப்படி பயன்படுத்துகிறாரோ அவர்களைப் போல விசுவாசிகளையும் உழியத்தில் பயன்படுத்துகிறாரோ அவரே என் மேய்ப்பர். 7. ஒரு மேய்ப்பர் எப்படி தகுதி இல்லாத விசுவாசிகளை ஊழியத்தில் நிராகரிக்கிறாரோ அதைப் போலத் தகுதி இல்லாத குடும்ப நபர்களையும் தயவு தாட்சண்யம் இல்லாமல் பயன்படுத்த மறுக்கிறாரோ அவரே என்று மேய்ப்பர்‌. 8. எந்த மேய்ப்பர் தன் சபையை இறுமாப்பாக ஆளுகை செய்யாமல் இருக்கிறாரோ அவரே என் மேய்ப்பர். 9. எந்த மேய்ப்பர் தன்னுடைய ஆத்மாக்களுக்கு இறைவனிடத்தில் கணக்குக் கணக்கு கொடுப்பவராகத் தன்னை கருதுகிறாரோ   அவரே என் மேய்பர். 10. எந்த மேய்ப்பர் நான்தான் ஆத்துமாக்களுக்கு உத்திரவாதி என்று மிரட்டாமல் இருக்கிறாரோ அவரே என் மேய்ப்பர். இன்றைக்கு பெரும்பாலான பெந்தேகோஸ்து சபைகளில் போதகரின் ஆதீனத்தில் தான் சபைகள் இயங்குகின்றன. எனவே போதகரைப் பற்றிய சிந்தனை விசுவாசியில் உள்ளத்தில் மாற வேண்டும். வேதத்தின் அடிப்படையில் போதகர்கள் என்பவர் யார் விசுவாசிகள் என்பவர்கள் யார் என்ற சரியானசிந்தனை ஏற்பட்டாலொழிய இந்தச் சபைகளில் எழுப்புதல் என்பது வெறும் கனவே.எசேக்கியேல் சண்முகவேல்

கடவுள் ஏன் யூத ஜனங்களுக்கு மன்னர் ஆட்சியை அனுமதிக்க தயங்கினார்?

மோசே மரித்தபிறகு இஸ்ரவேல் ஜனங்களை யோசுவாவும், அதற்குப் பிறகு நியாயாதிபதிகளும் வழிநடத்தினார்கள். இதுதான் அவர்களைக் குறித்த தேவனுடைய சித்தம். இந்த முறையின்படி கடவுளே அவருடைய காண முடியாத ராஜாவாக(invisible king)செயல்பட்டார். ஆனால் இந்த முறையை இஸ்ரவேல் ஜனங்கள் விரும்பவில்லை. உலக மக்களின் ஆளுகையின் வழியில் அவர்கள் தங்களை வழிநடத்த அரசர்கள் ஆளுகின்ற முறையை விரும்பிக் கேட்டுக் கொண்டார்கள். இது கடவுளுக்கு வருத்தமாக இருந்தாலும் யூதர்கள் கேட்டுக்கொண்டபடி அதை அவர்களுக்கு அனுமதித்தார். கடவுள், அரசர்கள் ஆளுகின்ற முறையை அனுமதிக்காமல் இருந்ததற்கு வேறொரு காரணம் இருந்தது. இதை 1சாமு 8:10-22 வரை உள்ள வசனங்களில் பார்க்கலாம். இன்றைய வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் மன்னர் ஆட்சி முறையை நடைமுறைப்படுத்துவதால் இஸ்ரவேல் அதிகமாக வரிகள் செலுத்த வேண்டியது இருக்கும். Establishment charges for establishing a dynasty. அரசரைச் சார்ந்து அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் ராணுவத்திற்கும் உண்டாகக்கூடிய நிர்வாகச் செலவுகள் அனைத்தும் மக்களால் சரி செய்யப்பட வேண்டும். இது காலப்போக்கில்மிக அதிகமாகக் காணப்பட்டது. இது சாலமனுடைய ஆட்சி காலத்தில் உச்சத்தை தொட்டது. மக்கள் வரி செலுத்த முடியாமல் விழி பிதுங்கினார்கள். கீழ்க்கண்ட வசனம் அது ஒரு உதாரணம். “உமது தகப்பன் எங்கள்மேல் பாரமான சுமையை வைத்தார். ஆனால் இப்பொழுது நீர் அவர் எங்கள்மேல் வைத்த கடினமான உழைப்பையும், பாரமான சுமையையும் இலகுவாக்கும். அப்பொழுது நாங்கள் உமக்குப் பணிந்திருப்போம்” என்றனர். 1 இராஜாக்கள் 12:4. கடவுள் இதையெல்லாம் முன் குறித்துதன் ஜனங்களை எச்சரித்த போதும் அதற்கு அவர்கள் செவிமடுக்கவில்லை. ஒருவேளை இதனால் வரும் கஷ்டங்களை மன்னராட்சியை எங்களுக்குத் தாரும் என்று கேட்ட சந்ததியர் அதை அனுபவிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் பின்னால் வந்த சந்ததியார் அதை அனுபவித்து அரசனை நோக்கி நோக்கிக் கதறினார்கள். நம்முடைய வாழ்க்கையில் கூடத் தேவனுக்கு பிரியம் இல்லாத காரியங்களைப் போராடி பெற்றுக்கொள்ளும்போது அதனுடைய தீங்கை நாம் தற்போது உணராமல் இருக்கலாம் அதை உணரக்கூடிய காலம் ஒன்று உருவாகும். நம்முடைய சந்ததியார் அதை உணரலாம். அவர்கள் அந்தப் பாடுகளை அனுபவிக்கலாம். எனவே நமக்குத் தேவையான ஒரு காரியத்தை விரும்பிக் கேட்டு அதைத் தேவன் நிராகரிக்கும்பொழுது வேத வசனத்தின் மூலமாக அப்பொழுது தேவன் பேசும் எச்சரிப்புகளை நாம் புறம்பே தள்ளக் கூடாது. அப்படி நாம் நிராகரித்தால் பல நேரங்களில் ஒருவேளை நாம் தப்பித்துக் கொள்வோம். ஆனால் நம்முடைய சந்ததி நிச்சயம் பாதிக்கப்படும். உதாரணமாக நம்முடைய குடும்பக் கவுரவத்திற்காகத் தற்காலிக பலன்களுக்காக நாம் பிறந்த ஜாதிக்காக இனத்திற்காக நம்முடைய பிள்ளைகளுடைய படிப்பைக் குறித்தும் அவர்களுடைய திருமணத்தைக் குறித்தும் பிள்ளைகளை நிர்பந்தம் பண்ணி எடுக்கும் முடிவுகள்பின் நாட்களில் நம் பிள்ளைகள் தேவனுடைய சித்தத்தை பரிபூரணமாக நிறைவேற்ற முடியாமல் செய்துவிடும் கடவுள் தாமே இதைப் பற்றிய புரிதலை நமக்குத் தருவாராக ‌ எனவே நம்முடைய விருப்பத்தைத் தேவனிடத்தில் கேட்கும்பொழுது பின் நாட்களில் அது நம்முடைய பிள்ளைகளைப் பாதிக்குமா என்கிற அடிப்படையில் நாம் எதையும் தேவனிடத்தில் கேட்க வேண்டும். பெற்றோர்களுடைய கடமை என்பது ஏதோ இந்த உலகத்திற்கு உரிய நன்மைகளை நம்முடைய பிள்ளைகளுக்கு அளிப்பது மட்டுமல்ல நம்முடைய குழந்தைகள் எதிர்காலத்தில் ஆவிக்குரிய சந்ததியாக வளர்வதற்கு நாம் வாழ்கின்ற இந்தக் காலத்திலே நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும். Ezekiel Shanmugavel

கடவுளை அவசரப்படுத்தக் கூடாது.

கடவுளை அவசரப்படுத்தக் கூடாது. சாமுவேல் தீர்க்கதரிசியின் இறுதி நாட்களில் இஸ்ரவேல் ஜனங்கள் தங்களை ஆளுகை செய்வதற்கு அரசன் வேண்டுமென்று கேட்டபொழுது அதற்குத் தேவன் சொன்ன பதில் "அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத் தான் தள்ளினார்கள்."என்பதே 1 சாமுவேல் 8:7 யூத ஜனங்கள் கடவுளை நிராகரித்தது இதில் முதல் தடவை அல்ல. மோசே சீனா மலையிலிருந்து இறங்கி வருவதற்கு காலதாமதமானபொழுது அவர்கள் ஆரோனை நோக்கி " எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும் என்றார்கள். யாத்திராகமம் 32:1 இதை முன்பே அறிந்துதான் தேவன் " உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்."என்று சொல்லி இருந்தார். ஆதியாகமம் 17:6 யாக்கோபு தன்னுடைய 12 குழந்தைகளில் யூதாவை குறித்து சொல்லும்போது "செங்கோல் யூதாவைவிட்டு நீங்காது" என்று தீர்க்கதரிசன உரைத்தார். Judah was the Kingly tribe. அவர் யூத யூதா கோத்திரத்தில் பிறந்த தாவீதை யூதர்களின் அரசனாக்க முன்குறித்திருந்தார். ஆனால் யூத ஜனங்கள் தங்களுக்கு ஒரு அரசர் வேண்டும் அதுவும் உடனடியாக வேண்டும் என்று கேட்டபடியினால் சவலை தேவன் தேர்ந்தெடுத்தார். சவுலின் தெரிந்தெடுப்பு தேவனுடைய பரிபூரண சித்தம் அல்ல. யூத ஜனங்கள் தங்களுக்கு ஒரு அரசனை தாரும் என்று கேட்டது தவறு அல்ல. தவறு எதுவென்றால் அதை உடனடியாகத் தரும்படியாகக் கேட்டதுதான் இதைத்தான் பல நூற்றாண்டுகளுக்குப் பின்வந்தததத ஓசியா இதைப் பற்றி இவ்வாறுஎழுதுகிறார். "எனக்கு ராஜாவையும் அதிபதிகளையும் ஏற்படுத்த வேண்டும் என்றாயே; இப்போதும் உன்னுடைய எல்லாப் பட்டணங்களிலும் உன்னை இரட்சிக்கும் ராஜா எங்கே? உன் நியாயாதிபதிகள் எங்கே? நான் கோபத்திலே உனக்கு ராஜாவைக் கொடுத்தேன்; என் உக்கிரத்திலே அவனை எடுத்துக்கொண்டேன்". ஓசியா 13:10,11 நம்முடைய விருப்பங்களை இறைவனிடத்தில் கேட்பதில் தவறில்லை. ஆனால் அந்த விருப்பங்கள் உடனடியாக நிறைவேற வேண்டுமென்று ஆண்டவரிடத்தில் போராடுவது, ஆண்டவரை நிர்பந்தம் பண்ணுவது, அதற்காக ஆண்டவர் கோபித்துக் கொள்வது போன்ற காரியங்கள் நம்முடைய வாழ்க்கையில் தேவையற்ற குழப்பங்களை, இழப்புகளைச் சந்திக்க நேரிடும். தேவன் நமது ஜனங்களுக்குக் கொடுக்கும் மிகப்பெரிய தண்டனை என்னவென்றால் நாம் விரும்புகிற வழியிலேயே நாம் ஆவிக்குரிய ஓட்டத்தை ஓட அனுமதிப்பதுதான். "The greatest judgement the God can give us is to let us have our own way" W.W.Wirrdbe இதுதான் நம்முடைய வாழ்க்கை சந்திக்கும் மிகப்பெரிய இழப்பு. தேவனிடத்தில் போராடி போராடி நாம் பெற்றுக்கொள்ள விரும்பும் ஆசிர்வாதங்களை விட நம்முடைய விருப்பங்களை, ஆசைகளை அவருடைய கரத்தில் ஒப்புக் கொடுத்து அவர் அனுமதிக்கிற நேரத்தில் நாம் பெரும் ஆசீர்வாதங்கள் மிகச் சிறப்பானவை. நம்முடைய தேவைகளை நம்மைவிட மிக நேர்த்தியாக, சரியாகப் புரிந்து கொண்டவர் கடவுள் மட்டுமே. அவர் கொடுக்கும் வரை நாம் காத்திருப்பது தான் நமக்கு நல்லது. கடவுளிடம் 'fast food' என்பதெல்லாம் கிடையாது சமைத்த நல்ல உணவைத்தான் அவர் நமக்கு தருவார். எசேக்கியேல் சண்முகவேல்

ஆலயங்களில் காணப்படும் சிலைகளைவிட நம் உள்ளத்தில் காணப்படும் சிலைகளே நமக்கு மிகவும் ஆபத்தானவைகள்.

ஆலயங்களில் காணப்படும் சிலைகளைவிட நம் உள்ளத்தில் காணப்படும் சிலைகளே நமக்கு மிகவும் ஆபத்தானவைகள். ஆவிக்குரிய வாழ்க்கையை சீரழிப்பவைகள். கடவுளுக்குரிய இடத்தை எது ஆட்கொள்கிறதோ கடவுளுக்குக் கொடுக்க வேண்டிய கனத்தையும் மகிமையும் ஆராதனைகளையும் எவைகள் பறித்துக் கொள்கிறது அவைகளை சிலைகள். Idols in the heart are far more dangerous than idols in the temple. கடவுளுக்குக் கொடுக்க வேண்டிய நேரத்தைக் கொடுக்காமல் அவருடைய வசனத்தைத் தியானிப்பதற்கு சரியான நேரத்தை ஒதுக்காமல் அதற்குப் பதிலாக அவருடைய ஊழியங்களில் ஈடுபடுவது கூட ஒரு சிலை வழிபாடு என்று நான் நம்புகிறேன். ஊழியங்கள் அவசியம். ஆனால் அவைகள் தேவன் நாம் வைத்திருக்கும் உறவையும் அவருடைய வசனத்தைத் தியானிப்பதற்கான நேரத்தையும்அவைகள் தட்டிப் பறித்து விடக் கூடாது. நாம் அவருடைய ஊழியத்திற்காகச் செலவழிக்கும் நேரத்தைவிட அவரோடு உறவாடுவதற்காக நான் எடுத்துக் கொள்ள நேரங்கள் அதிக முக்கியமானவைகள். நான் அவரோடு செலவழிக்கும் நேரங்களில் அடிப்படையில் தான் நம்முடைய ஆவிக்குரிய தரம் வெளிப்படும். அதன் மூலமாக நம்முடைய பிரசங்கத்தில் எழுத்துக்களில் அவருடைய வார்த்தை வெளிப்படும். நம்முடைய அழைப்பிற்கு ஏற்றபடி நாம் நேரங்களை ஒதுக்க வேண்டும். குறிப்பாகப் போதிக்கிறவர்கள் எந்த அளவுக்குத் தேவனுடைய சமூகத்தில் காத்திருந்து அவருடைய வசனத்தைத் தியானிக்கிறார்களோ அந்த அளவுக்கு அவருடைய பிரசங்கத்தில் தேவனுடைய வல்லமை வெளிப்படும். இல்லாவிட்டால் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பதை பார்க்கலாம். ஊழியம் என்பது ஒரு மந்திரப் பெட்டி அல்ல. அனேக நேரங்களில் நம்முடைய ஊழியங்கள் கூட நம்மைக் காப்பாற்றாது அதே நேரத்தில் தேவனோடு நாம் வைத்திருக்கும் உறவு சரியான முறையில் இருக்கும் என்றால் அந்த உறவு நிச்சயம் நம்மைக் காப்பாற்றும். இந்தத் தவறை தான் அன்றைக்கு இஸ்ரவேல் ஜனங்கள் செய்தார்கள். கர்த்தருடைய வழிகளின் நடவாமல் உடன்படிக்கைப் பெட்டி நம்மைக் காப்பாற்றும் என்று அதைப் போர்க்களத்துக்கு எடுத்துச் சென்றார்கள்.விளைவு வரலாற்றில் என்றைக்கும் இல்லாத வகையில் அது பிடிக்கப்பட்டு புற இனத்தார் கைகளில் சிக்கிக் கொண்டது. ஊழியம் என்பது தேவன் தேவனுக்காக நாம் செய்யும் வேலை. கடவுளோடு நாம் உறவாடும் நேரம் என்பது அவர் நமக்குள் செய்யும் ஊழியம். கடவுளோடு உறவாடும் நேரத்தைக் கடவுளுக்காகச் செய்யும் ஊழியங்கள் எடுத்துக் கொள்ளும்போது அது சிலை வழிபாடாக மாறிவிடுகிறது. பவுலடியார் கூறிய அந்த வார்த்தைகள் நமக்கு மிகப்பெரிய motivational word ஆக இருக்கிறது. "நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் ". அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:4. இது முழுஊழியக்காரர்களுக்கு மட்டுமல்ல மறுபடியும் பிறந்த ஊழியத்தில் ஆர்வம் உள்ள எல்லோருக்கும் பொருந்தும். எனவே இந்தச் சிலை வழிபாட்டைக் குறித்து எச்சரிக்கையாக இருப்போமாக. எசேக்கியேல் சண்முகவேல்

எபி 11:13 ன் உன்மையான அர்த்தம் என்ன?

எபி 11:13 ன் உன்மையான அர்த்தம் என்ன? "இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள்'” தேவன் ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் பண்ணி ஆணையிட்டுக் கொடுத்த ஆசீர்வாதம் என்றால் என்ன? இதைப் புரிந்து கொள்ள ஆதி. 22:16-18 மற்றும் கலா. 3:16 ஆகிய இந்த இரண்டு வார்த்தைகளையும் இணைத்து நீங்கள் பார்க்க வேண்டும். இதில் சொல்லப்பட்ட மூன்று பதங்களைக் கவனிக்க வேண்டும் . 1.உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன். 2. உன் சந்ததிக்குள் பூமியில் உள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும். 3.என்பேரில் ஆணையிட்டேன். “உன் சந்ததி” என்று இந்த இடத்தில் சொல்லப்படுவது இயேசுவினுடைய சந்ததியைக் குறிப்பதாகும். இதுகுறித்து பவுல் கலாத்தியருக்கு எழுதிய நிருபத்தில்(3:16) தெளிவாக விளக்குகிறார். . “ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள் பண்ணப்பட்டன; சந்ததிகளுக்கென்று அநேகரைப் பற்றிச் சொல்லாமல், உன் சந்ததிக்கென்று ஒருவனைக்குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்தச் சந்ததி கிறிஸ்துவே” இவர்கள் கிறிஸ்துவின் மூலமாகப் பிறக்கும் ஒரு புதிய ஆவிக்குரிய சந்ததி. ஆபிரகாமின் சந்ததியில் திரித்துவத்தின் இரண்டாவது பகுதியான தேவகுமாரன் மனிதனாகப் பிறந்தார். இதற்குப் பிறகுதான் ஆதி 17:8 ல் சொல்லப்பட்ட" நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்தரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன் என்றார். வாக்குத்தத்தத்தை கவனித்து பார்க்க வேண்டும். இந்தக் கானான்தேசத்தை ஆபிரகாம். ஈசாக்கு, யாக்கோபு, மற்றும் அவனுடய பிள்ளைகள் யாரும் அவர்கள் இருக்கும் வரை சொந்தமாகக் கொள்ளவில்லை. சுமார் 500 ஆண்டுகள் கழித்துதான் ஆபிரகாமுக்கு பின்வந்த சந்ததி கானான் தேசத்தைச் சொந்தமாக்கி கொண்டார்கள் . ஆனால் அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட முழு கானான் தேசத்தை அவர்கள் அடையவே இல்லை/ The Hebrew nation never occupied all the land that had been promised to it எபி 11:13 என்பது எதைக் குறிப்பது என்றால் அவர்களுடைய சந்ததி பெறப் போகிற கானான் தேசத்தைப் பற்றியது அல்ல. தேவன் தம்முடைய குமாரனை உலகத்திற்கு அனுப்பி அவர் தங்களுடைய வம்சத்தில் பிறப்பார். அதன் மூலம் உலகத்திற்கு மிகப்பெரிய இரட்சிப்பு வரும் என்பதை அவர்கள் தூரத்திலிருந்தே கண்டு அனைத்து அதை நம்பி விசுவாசத்தில் மரித்தார்கள். இது முழுக்க முழுக்க ஆவிக்குரிய ஆசீர்வாதத்தை குறிக்கிறது. இதைத்தான் இயேசுகிறிஸ்து யூதர்களுக்கு "உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார். மோசேயும் இந்த ஆசிர்வாதத்தை தான் இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்தில் உள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான். உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களை எதிர் நோக்கி அவைகளை தூரத்திலே கண்டு அணைத்து அவர்கள் விசுவாசத்தில் மரிக்கவில்லை. இதுதான் இந்தப் பகுதியின் உண்மையான விளக்கம் நம் தேவன் ஆபிரகாமுக்கு கொடுத்த ஆவிக்குரிய ஆசிர்வாதத்தை உலக ஆசிர்வாதத்தோடு இணைத்துக் கொச்சை படுத்தக் கூடாது Ref – 1.THE DAILY STUDY BIBLE- THE LETTER TO THE HEBREWS” BY W.BARCLAY 1. AN EXPOSITION OF HEBREWS- A.W.PINK 2. AN EXPOSITION OF THE EPISTLE TO THE HEBREWS-JOHN BROWN Ezekiel shanmugavel

துர் உபதேசங்களை முளையிலேயே கிள்ளியெறிய பவுலுடைய நிதானிக்கும் அறிவு நம்முடைய போதகர்களுக்குத் தேவை.

துர் உபதேசங்களை முளையிலேயே கிள்ளியெறிய பவுலுடைய நிதானிக்கும் அறிவு நம்முடைய போதகர்களுக்குத் தேவை. பவுலடியார் தேவனுடைய மிகப் பெரிய அப்போஸ்தலர். 14 க்கும் மேலான சபைகளை உருவாக்கியவர் புதிய ஏற்பாட்டு  நூல்களில்   13கடிதங்களில் அவர் எழுதியதாகச் சொல்லப்படுகிறது. அவர் எழுதிய கடிதங்களில் அநேகமாக எல்லா கடிதங்களும் மிகப் பெரிய  நகரங்களில்  உள்ள சபைக்குத்தான் எழுதினார்.  (கொலோசெ பட்டணத்தில் உள்ள  சபையைத் தவிர) குறிப்பாக  ரோமாபுரி  எபேசிய போன்ற  இடங்கள் சிறப்பு    மிக்க  நகரங்கள். ஆனால்     கொலோசெ  பட்டிணம்  மிகச் சிறிய முக்கியத்துவம்  இல்லாத ஒரு  இடம். According to Lightfoot an English theologian says “Colosse was the the most unimportant town to which Paulever wrote a letter” பவுலடியார்  ஏன் ஒரு மிகச் சிறிய, முக்கியத்துவம்  இல்லாத  இடத்தில்  உள்ள  ஒரு  சபைக்கு மிகச் சிறந்த, இயேசுவின்  சிறப்பை, மேன்மையை  புதிய ஏற்பாடு நூல்களிலே மிக அதிகமாக  விளக்கிக் கூறுகின்ற ஒரு நிருபத்தை எழுத  வேண்டும்? அதுவும் தான் பார்க்காத, கட்டாத, சந்திக்காத ஒரு சபைக்கு  எழுத வேண்டும்?(கொலோ 2:1) இதற்குக் காரணம் அந்தக் கொலோசெ பட்டணத்தில் உள்ள  சபையில் ஊடுருவிய துர் உபதேசமும் அதனால்  கிறிஸ்தவத்திற்கு   நேர்ந்த அபாயத்தைப் பவுல் நிதானித்து அறிந்த புரிதல்தான். கொலோசெ சபையில் பலவித துர்  உபதேசங்கள் காணப்பட்டாலும்  முக்கியமாக Gnosticism  என்கிற உபதேசம் சபையை ஊடுருவிப் பாழாக்கியது அதன்படி இயேசு கிறிஸ்து   தரும் இரட்சிப்பைவிட மேலான    ஒன்று  தேவை என்றும், அதைப் பெற்றுக்கொள்ள   தனிப்பட்ட  ஒரு secret knowledge தேவை என்றும், இயேசு எல்லாவற்றையும்  மேன்மை அடைந்தவர்  இல்லை என்றும் போதிக்கிறது. இந்த உபதேசத்தின் ஆபத்தை  உணர்ந்துதான் பவுலடியார் கொலோசிய சபைக்கு இயேசு  கிறிஸ்துவே  மேலானவர் என்றும், அவர் போதுமானவர்  என்றும், கடிதம் எழுதுகிறார். இப்படி கடிதம் எழுதிச் சபையை எச்சரித்துக் கொலோசெ சபையை மட்டுமல்ல முழுகிருஸ்துவத்தையும் காப்பாற்றினார். (.ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது. மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்.” கொலோ 2:9.10) நான்  நிறுவாத சபைக்கேன் கடிதம்  எழுத வேண்டும்? என்று எண்ணாமல் தனுக்குள்ள அப்போஸ்தல அதிகாரத்தைப் பயன் படுத்தி கடிதம் எழுதுகிறார். அன்றைக்கு அவர் அப்படி கடிதம் எழுதாமல் இருந்திருந்தால் கிறிஸ்துவத்தை  காப்பாற்றியிருக்க  முடியாது. இன்றைக்கு சபையைப் பாழாக்குகின்ற அநேக உபதேசங்களை ஆரம்ப  நிலையிலேயே  சபை  போதகர்கள், தலைவர்கள்  வேதபண்டிதர்கள் நிதானித்துப் புரிந்து தடுத்திருந்தால் எவ்வளவு நலமாய் இருந்திருக்கும். ஆரோக்கியமான உபதேசங்களை போதிக்கும் தலைவர்களை வேத  பண்டிதர்களை மிகப் பெரிய,   வளர்ந்த சபைகள் புறக்கணித்து   அவர்களைப் பயன்படுத்தத் தவறியதும் வருந்தத்தக்கது. தவறான போதனைகளை நிதானித்துஅறியும் சபை தலைவர்களும், ஆரோக்கியமான உபதேசங்களை போதிக்கும்   வேத  பண்டிதர்களும் இன்றய தேவை. செழிப்பின் சுவிசேஷத்தை பேசும் பிரசங்கிகளை  பயன்படுத்தும் சபைகள் ஆரோக்கியமான உபதேசங்களை போதிக்கும்  வேத  பண்டிதர்களையும்  பயன்படுத்த வேண்டும். It is the duty to the Body of Christ .It is very dangerous for the body of Christ to boycott the Bible teachers who preach sound doctrine The church should not neglect the teaching ministry. and  at the same time the church leaders should have the discerning spirit to forewarn the unBiblical doctrine. எசேக்கியேல் சண்முகம்

பெருமை

பெருமை என்கிற ஆயுதம் சாத்தானுடைய கைகளில் உள்ள மிகவும் வல்லமையுள்ள ஒரு ஆயுதம். இந்த இந்தக் கருவியைக் கொண்டு எப்படிப்பட்ட ஆவிக்குரிய பெரிய மனிதர்களையும் சாத்தான் எளிதாக வென்று விடுவான். பெருமை என்பது தேவனுக்கு சேர வேண்டிய கனத்தையும் மகிமையும் தானே அடைய நினைப்பது. பெருமை என்பது ஒரு போலியான பாதுகாப்பை நம்மில் உருவாக்கும். பெருமையினால் வீழ்ந்த முதல் நபர் யார் என்றால் சாத்தான் தான். ஏசை14:12-15. தன்னுடைய இனத்தைக் குறித்தோ அழகைக் குறித்து தேவன் தனக்கு அளித்த கிருபைகளைக் குறித்தோ அல்லது எதைக் குறித்தும் மேன்மை பாராட்டக் கூடாது. கடவுள் எதிர்த்து நிற்கிற பெருமையோடு நாம் கூட்டணி அமைத்து விடக் கூடாது. பெருமையினால் பாபேல் கோபுரம் விழுந்தது. பெருமைதான் நாம் மேற்கொள்ள வேண்டிய இறுதி பகைவன். பெருமைகளிலே மிகவும் மோசமான பெருமை ஆவிக்குரிய பெருமைதான். தேவன் தன்னை பயன்படுத்திய காரியத்தைக் குறித்து, தனக்கு அளித்த கிருபைகளை குறித்து, தேவன் தனக்கு அளித்த உயர்வைக் குறித்து மனதிற்குள் மேன்மை பாராட்டாத ஆவிக்குரிய மனிதர்கள் இந்த உலகில் மிக மிகக் குறைவு. பெருமை என்பது நம்முடனே 24 மணி நேரமும் பயணம் செய்து கொண்டிருக்கும் ஒரு மறைமுகமான, மறைந்து நின்று நம்மை விட்டுப் பிரியாத ஒரு ஆயுதம் என்பதை மறந்து விடக் கூடாது. பெருமையுள்ள எவருக்கும், அவர்கள் தேவனுடைய பிள்ளைகளாய் இருந்தாலும் அவர்களுக்கு எதிராகத் தேவன் எதிர்த்து நிற்கிறார் என்கிற எச்சரிப்பை கவனத்தோடு பின்பற்ற வேண்டும். இறுதியாகப் பெருமையைக் குறித்து ஒரு சில வார்த்தைகள் இந்தக் கருத்தை நான் எழுதுவதற்காக மிகவும் வருந்துகிறேன். முழுநேர பணியாளர்கள் மத்தியில் நான் விசுவாசிகளைவிட ஒருபடி உயர்ந்தவன் என்கிற பெருமையைபோல மிகவும் தந்திரமான ஆபத்தான‌ வேறு ஒரு ஆவிக்குரிய பெருமையை கிறிஸ்தவ உலகத்தில் நான் பார்க்கவில்லை.இது ஒரு தேவனுடைய சரிமாகிய சபையில் சாத்தான் உருவாக்கும் பிரிவினையாகிய பெருமை. Pride is one of Satan’s chief weapons in his battle against the Lord and His people. Pride is the ground in which all the other sins grow, and the parent from which all the other sins come .William Barclay

யேகோவாவினுடைய உடன்படிக்கைப் பெட்டி

யேகோவாவினுடைய உடன்படிக்கைப் பெட்டி இஸ்ரவேல் ஜனங்களை ஏமாற்றியதா? கீழ்க்கண்ட வசனங்களைக் கவனமாகப் படிக்கவும்.1சாமு4:3-10 பெலிஸ்தியர் இஸ்ரவேலரை எதிர்கொள்ளும்படி தங்கள் படையை அணிவகுத்தார்கள். யுத்தம் பெருத்தபோது இஸ்ரவேலர் பெலிஸ்தியரால் தோற்கடிக்கப்பட்டார்கள். யுத்தகளத்தில் ஏறக்குறைய நாலாயிரம் இஸ்ரவேலரை பெலிஸ்தியர் கொன்றார்கள். இஸ்ரவேல் ஜனங்களின் இராணுவ வீரர்கள் முகாம்களுக்குத் திரும்பியபோது இஸ்ரவேலின் முதியவர்கள், “ஏன் இன்று யெகோவா பெலிஸ்தியருக்கு முன் எங்களைத் தோல்வியடைச் செய்தார்? யேகோவாவினுடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சீலோவிலிருந்து கொண்டுவருவோம். அது எங்களுடன் இருந்தால் பகைவரிடமிருந்து அது நம்மைத் தப்புவிக்கும்” என்றார்கள். எனவே மக்கள் சீலோவுக்கு ஆட்களை அனுப்பினார்கள். அவர்கள் கேரூபீன்களுக்கு நடுவில் அரியணையில் அமர்ந்திருக்கும் சேனைகளின் யேகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவந்தார்கள். அங்கே ஏலியின் இரு மகன்களான ஓப்னியும், பினெகாசும் இறைவனுடைய உடன்படிக்கைப் பெட்டியோடு வந்தார்கள். யேகோவாவினுடைய உடன்படிக்கைப்பெட்டி முகாமுக்குள் வந்தவுடன் நிலம் அதிரத்தக்கதாக இஸ்ரவேல் மக்கள் பெரிய சத்தமிட்டு ஆர்ப்பரித்தார்கள். அதே வேளையில் பெலிஸ்தியர் இஸ்ரவேலரை எதிர்கொள்ளும்படி தங்கள் படையை அணிவகுத்தார்கள். யுத்தம் பெருத்தபோது இஸ்ரவேலர் பெலிஸ்தியரால் தோற்கடிக்கப்பட்டார்கள். யுத்தகளத்தில் ஏறக்குறைய நாலாயிரம் இஸ்ரவேலரை பெலிஸ்தியர் கொன்றார்கள். 1சாமு 4:3-10. இஸ்ரவேல் ஜனங்கள் ஏன் உடன்படிக்கைப் பெட்டியைப் போர்க்களத்துக்கு கொண்டு வர வேண்டும். காரணம் இதற்கு முன்பு யோசுவாவும் மோசேயும் அந்தக் காரியத்தைச் செய்தார்கள். படிக்க எண்ணா10:33-36,யோசுவா 3,4 மற்றும் ஆறாவது அதிகாரங்கள். யோர்தான் நதியைக் கடப்பதற்கு முன்பாக ஆசாரியர்கள் உடன்படிக்கை பெட்டியை எடுத்துக்கொண்டு முன்னதாகச் சென்றார்கள். அதுபோல வனாந்தரத்தில் பயணம் செய்த போதெல்லாம் பயணத்தின் முன்பாக உடன்படிக்கை பெட்டி முன்னதாகச் சென்றது. மோசேயும் யோசுவாவும் செய்த அதே காரியங்களை இப்பொழுது இஸ்ரவேல் ஜனங்களின் மூப்பர்கள் செய்தார்கள். உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துச் சென்றது யாரென்றால் ஏலியின் இரண்டு குமாரர்கள். ஏலியன் இந்த இரண்டு குமாரர்கள் ஆலயத்தில் பெண்களோடு தவறான உறவில் ஈடுபட்டவர்கள். இஸ்ரேல் ஜனங்கள் கர்த்தருக்கு கொடுக்கின்ற காணிக்கையை வெறுக்கும்படியான எண்ணத்தை உருவாக்கியவர்கள். கர்த்தரை அறியாதவர்கள். இப்படிப்பட்டவர்கள் தேவனுடைய உடன்படிக்கை பெட்டியைச் சுமந்தால் தேவன் எப்படி வெற்றியைத் தம் ஜனங்களுக்கு அளிப்பார்.? இந்தச் சிந்தனை மூப்பர்களுக்கு வரவில்லை. இதுதான் தோல்வியின் முதல் காரணம். மூப்பர்கள் ஏலியின் புத்திரர்கள் மோசேயும் அல்ல யோசுவாவும் அல்ல என்கிற அடிப்படை சிந்தனை கூட அறியாமல் இருந்தது தான். இங்கே நாம் சிந்திக்க வேண்டிய அனேக காரியங்கள் உண்டு. 1. கடவுளுடைய வழிகளைப் பின்பற்றாதவர்கள் தம்மை பயன்படுத்தத் தேவன் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். This is called"using God". கடவுள் நம்மைப் பயன்படுத்த வேண்டும். நாம் அவரைப் பயன்படுத்த ஒருபோதும்முயற்சிக்கக் கூடாது 2. தேவனுடைய ஜனங்களுக்குத் தேவன் எப்படிப்பட்டவர், எப்படிப்பட்ட ஜெபங்களுக்கு தேவன் பதில் கொடுப்பார் என்பதைப் பற்றிய மிகவும் அடிப்படையான புரிதல் அவசியம். 3. தேவனுடைய பிள்ளைகளை நடத்துகிறவர்கள், அவர்களுக்கு வழிகாட்டுகிறவர்கள், இவர்களின் வாழ்க்கையின் அடிப்படையிலே இவர்களைப் பின்பற்றுகிற தேவ ஜனங்களின் வெற்றி அமைந்திருக்கிறது. விசுவாசிகள் எல்லோரையும் பவுலாகவும் பேதுருவாகவும் மார்ட்டின் லூத்தராகவும் நினைப்பதுதான் இன்றைய சபையின் மிகப்பெரிய பிரச்சனை. 4. கர்த்தருக்கு பிரியம் இல்லாத, கர்த்தருடைய வழிகளில் நடவாத, பாவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தலைவர்களைப் பின்பற்றி நாமும் நடப்போமென்றால் நமக்கும் தோல்வி நிச்சயம். தலைவருடைய வாழ்க்கை நம்முடைய கண்களுக்கு வெளிப்படையாகத் தெரிந்திருந்தும் அவர்களை நம்பி தங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையை ஒப்புக்கொடுத்து நடப்பவர்களை என்னவென்று சொல்வது. இவர்களுக்கு ஒரு ஐயோ என்று சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும். 5.எப்படிப்பட்ட அழகான ஜெபங்களை நாம் ஏறெடுத்தாலும், எவ்வளவு உயர்வான தேவனுடைய வாக்குத்தத்தங்களை பயன்படுத்தி ஜெபித்தாலும், எவ்வளவு விசுவாசத்தோடு ஜெபிப்பதாகக் காட்டிக் கொண்டாலும் நம்முடைய வாழ்க்கை தேவனுக்கு பிரியமாகக் காணப்படாவிட்டால் நமக்குக் கிடைப்பது சுழியமே. உடன்படிக்கை பெட்டி என்பது ஒரு மந்திர சொல் அல்ல. தேவனுடைய சமூகத்தைப் பற்றிய புரிதல் அவர்களுக்குச் சரியாக இருந்திருக்குமென்றால் தேவனுடைய உடன்படிக்கை பெட்டி அவர்களை விட்டுக் கடந்து சென்று இருக்காது. நாமும் கூடத் தேவனுடைய சமூகம் எப்படிப்பட்டது என்பதை உணர்ந்து அதற்குத் தகுந்தபடி நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாவிட்டால் நாமும் நம்மிடத்தில் தேவ சமூகம் இருப்பதாகக் கருதி கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வோம். Ezekiel shanmugavel

Census

*603550-x* *601730✓* இஸ்ரவேல் மக்களின்முதல் குடிசன மதிப்பின் படி (Census)ராணுவத்தில் பணிபுரியக்கூடிய தகுதி வாய்ந்தவர்கள் 603550. இவர்களில் காலேப் யோசுவாவை தவிர மற்ற அனைவரும் 38 வருட வனாந்தர வாழ்க்கையில் மரித்துப் போனார்கள். 38 வருடங்களுக்குப் பிறகு இரண்டாவது குடிசன மதிப்பில் ராணுவத்தில்‌ போர் புரிய தகுதி உள்ளவர்கள் 601730. இந்த‌ 601730 நபர்கள் முதலில் சொல்லப்பட்ட 603550 பேர்களின் சந்ததியார். இந்த 601730 பேர்கள் எகிப்து தேசத்திலே அடிமைகளாக வாழாதவர்கள். எகிப்தியர்களின் கொடுமைகளை, சித்திரவதைகளை, எந்த பாடுகளையும் சகிக்காத வர்கள். அவமானங்களை அனுபவிக்காதவர்கள். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானானுக்கு செல்லும்படியான‌ நேரடி அழைப்பைப் பெறாதவர்கள். இவர்கள் வனாந்தரத்தில் பிறந்தவர்கள். ஆனால் பாலும் தேனும் ஓடுகிற கானானை சுதந்தரித்துக் கொண்டவர்கள். எகிப்து தேசத்திலே கஷ்டங்களையும் அவமானங்களையும் சகித்தவர்கள். கானானுக்குள் நுழைய முடியவில்லை. காரணம், 1. வாக்குத்தத்தங்களை பெற்றிருந்தாலும் இவர்கள் விசுவாசம் இல்லாத சந்ததியார். தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிச்சயமாக கொடுப்பார்‌ என்கிற நம்பிக்கை ,விசுவாசம் இல்லாமல் வாழ்ந்தவர்கள். 2.அடுத்தது தேவன் நம்மை நடத்துகிற வழியை அறியாதவர்கள். தேவன் நடத்துகிற வழியின் முடிவில் அவர்‌ தமது சித்தத்தை நிறைவேற்றுவார் என்பதை அறியாதவர்கள். இறுதியாக வழுவிப் போகிற இதயம் உள்ளவர்கள். அதாவது கர்த்தருடைய கற்பனைகளை விட்டு விலகிப் போகிறார்கள். நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் விசுவாசிகளாகிய‌ நாமும் கூட பரலோக அழைப்பைப் பெற்றிருந்தாலும் 1. நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் விசுவாசம், நம்பிக்கை ஆகிய இரண்டும் நமக்கு வேண்டும். 2.கர்த்தர் நடத்துகிற வழியை புரிந்து கொள்ளும் ஆவிக்குரிய பார்வை வேண்டும்.நம்முடைய வழிகள் வேறு.அவரது வழிகள் வேறு. 3. எந்த நிலையிலும் கர்த்தருடைய கற்பனைகளை விட்டு விலகாத மன உறுதி வேண்டும். வனாந்தரத்தில் மரித்த 603548 பேருடைய வாழ்க்கை, ஆவிக்குரிய வனாந்தர வாழ்க்கை, வாழும்‌ நமக்கு ஒரு மிகப்பெரிய பாடம். புதிய திராட்சை ரசத்தை புதிய துருத்தியில்தான் ஊற்ற வேண்டும். படிக்க 95 வது சங்கீதம் .எண்ணாகமம் 1:24-46,26:51, லூக்கா 5:37. எசேக்கியல் சண்முகவேல்

கிறிஸ்தவ உலகத்தில் உள்ளவர்களை மூன்று வகையாக பிரிக்கலாம்

இன்றைய கிறிஸ்தவ உலகத்தில் உள்ளவர்களை மூன்று வகையாக பிரிக்கலாம். முதல் வகை: கிறிஸ்தவ உலகத்தில் என்ன நடக்கிறது என்பதைக் கூட அறியாமல் இருக்கிற ஒரு கூட்ட மக்கள். இரண்டாவது வகை: என்ன நடக்கிறது என்பதை பார்க்கக் கூடிய பார்வையாள ராக மட்டுமே இருப்பவர்கள். மூன்றாவது வகை: இந்தக் கூட்ட மக்கள் ஏதாவது ஒரு காரியத்தை ஆண்டவருக்காக நடப்பிக்கிற மக்களாக காணப்படுவார்கள். இன்றைய சபைகளில் குறிப்பாக விசுவாசிகளில் முதல் இரண்டு வகைகளை சேர்ந்தவர்கள்தான் 95 சதவீதம் காணப்படுகிறார்கள். ஒவ்வொரு விசுவாசியும் ஏதாவது ஒரு காரியத்தை ஆண்டவருக்காக நடப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். எனக்கு ஒன்றும் தெரியவில்லையே என்று சும்மா இருப்பதற்காக விசுவாசிகளை ஆண்டவர் தெரிந்தெடுக்கவில்லை. அவர்களுக்கு தெரிந்தது எதுவோ, கைக்கு கிடைத்தது எதுவோ, அறிந்தது எதுவோ, புரிந்தது எதுவோ, முடிந்தது எதுவோ அதை ஆண்டவருக்கு பயன்படுத்துகிற நபராக விசுவாசிகள் காணப்பட வேண்டும். விசுவாசிகள் சரீரமாகிய சபையில் ஒரு உறுப்பினர், அல்லது அங்கம் என்கிற சிந்தனையை அவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இதை உணர்த்துவது போதகருடைய முக்கிய கடமையாக இருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை. ஒன்று விசுவாசிகள் சபையில் என்ன நடக்கிறது என்பதை அறியாமல் இருப்பார்கள். மற்றொரு பிரிவினர், எது நடந்தால் நமக்கு என்ன? நாம் உண்டு நமது வேலை உண்டு கோயிலுக்கு வந்தோமா காணிக்கை கொடுத்தோமா என்கிற அளவில் தம்முடைய ஆவிக்குரிய ஓட்டத்தை சுருக்கிக் கொள்வார்கள். இவர்களால் ஆண்டவருடைய ராஜ்ஜியத்திற்கு எந்த பயனும் கிடையாது. இப்படி இருப்பதற்கு காரணம் ஊழியம் என்பது ஒரு குறிப்பிட்ட பிரிவிற்கு மட்டுமே சொந்தம் என்கிற ஒரு சிந்தனை விசுவாசிகளின் மனதில் ஆழப் பதிந்து விட்டது. இந்த வேரை பிடுங்கி எறியாவிட்டால் எந்த சபையும் ஆண்டவருக்கு முழுமையாக பயன்படுகிற சபை என்று சொல்ல முடியாது. புதிய ஏற்பாட்டு சத்தியத்தில் எங்கும் காணப்படாத இப்படிப்பட்ட பிரிவினை சபையின் அதிகாரம் மட்டத்தில் மேலோங்கி நிற்கிறது. ஒவ்வொரு விசுவாசியும் ஏதாவது ஒரு காரியத்தை ஆண்டவருக்காக நடப்பிக்கிற ஒரு காரியத்தில் ஈடுபட வேண்டும். ஆண்டவருக்கு முன்பாக நாம் கணக்கு ஒப்புவிக்கும் போது நாம் படித்த வேதம் தான் நம்மை நியாயம் தீர்க்கும். நமக்கு உதவியாக எந்த சபையோ, சபை போதகமோ ஊழியர்களோ உதவிக்கு வர முடியாது. இதை விசுவாசிகள் புரிந்து கொள்ள வேண்டும். பழைய ஏற்பாட்டில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பரிசுத்த ஆவியானவர் ஒரு சில நபர்கள் மேல் இறங்குவார். அந்தப் பணி முடிந்ததும் அவர் அவர்களை விட்டு கடந்து போய் விடுவார். அந்தப் பணி முடிந்து விட்டது. புதிய ஏற்பாட்டில் ஒவ்வொரு விசுவாசிகள் மத்தியிலும் பரிசுத்த ஆவியானவர் கடைசி மட்டும் இருப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஊழியம் அவர்கள் மரிக்கும் வரை இருக்கிறது என்பதே. அப்படி இல்லாவிட்டால் பரிசுத்த ஆவியானவர் ஊழியம் செய்கிற குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் தான் ஊற்றப்படுவார். ஆனால் அப்படி அல்ல. புதிய ஏற்பாட்டில் விசுவாசிகளும் இறுதிவரை ஊழியம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் பரிசுத்த ஆவியானவர் அவர்களோடு இணைந்து காணப்படுகிறார். நமக்கு அளிக்கப்பட்ட பரிசுத்த ஆவியை விருதாவாக நாம் அலட்சியப்படுத்தி விடக்கூடாது‌‌. இந்த சிந்தை விசுவாசிகள் உள்ளத்தில் காட்டுத்தீயைப்போல பற்றி எரிய வேண்டும். அப்பொழுது மட்டுமே சபைகளில் உண்மையான எழுப்புதல் ஏற்படும்.எசேக்கியேல் சண்முகவேல்

Slavery and cast differences

சபைகளில் ஜாதி வித்தியாசங்களை அரசியலாக்கலாமா? அன்றைய அடிமைத்தனமும் இன்றைய ஜாதி பிரிவுகளும். Slavery and cast differences ஜாதிப் பிரிவினைகளை அதிகமாக சபையில் முக்கியப்படுத்த வேண்டுமா? ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு அனுப்பப்பட்ட நோக்கம், ஆன்மீக விடுதலையை கொடுப்பதற்காகவே. பாவத்தில் வீழ்ந்த மனிதனுக்கு அதிலிருந்து விடுதலை கொடுப்பதற்காக மீட்கும் பொருளாக தன்னையே அர்ப்பணித்தார். அவர் ஒரு சமுதாய புரட்சியை உருவாக்குவதற்காக வரவில்லை. அவருடைய செய்திகளில் சமத்துவம் காணப்பட்டது என்பது உண்மைதான். பெண் அடிமைத்தனத்தை ஆதரிக்கவில்லை என்பதும் உண்மைதான். இவைகள் எல்லாம் அவருடைய போதகத்தின் ஒரு பகுதி. பிரதான நோக்கம் ஆன்மீக விடுதலையே. இதற்கு ஒரு நல்ல உதாரணம்‌‌, இயேசு கிறிஸ்து உயிரோடு இருந்த நாட்களில் ஏறக்குறைய 60 மில்லியன் பேர் அடிமைகளாக ரோம சாம்ராஜ்ஜியத்தில் இருந்ததாக‌ வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோ, பவுலோ இதைப்பற்றி புதிய ஏற்பாட்டில் எங்கும் கடிந்து கொண்டதாக காணப்படவில்லை. அப்படியென்றால் இயேசு கிறிஸ்துவை விட பவுலடியாரை விட அடிமைத்ததனத்தை ஒழிக்க போராடிய William Wilberforce மேன்மையானவரா ? இதைப் பற்றி சற்று விவரமாக விவாதிக்கலாம். அந்தக்காலங்களில் அடிமைத்தனம் என்பது சமுதாயத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு அமைப்பாக இருந்தது. அடிமைத்தனம் என்பது அரசாங்க சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டது. பெரும்பான்மை மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஒரு பொருளை வாங்குவது போல அடிமைகளை வாங்கிக் கொள்ளலாம் என்கிற பழக்கம் பரவலாக எல்லா நாடுகளிலும் காணப்பட்டது. பழைய ஏற்பாட்டில் யூதர்கள் பிற இனத்தில் உள்ள யூதர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ளலாம் என்று லேவியராகமம் 25:44-46 ல் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்த காரணத்தால் யூதர்கள் மற்ற யூதர்களை அடிமைகளாக நடத்தக்கூடாது.லேவி25:42 இதே நடைமுறை புதிய ஏற்பாட்டில் ஆரம்ப காலங்களில் தொடர்ந்தது. அந்த நடைமுறையை எதிர்த்து குரல் கொடுத்திருந்தால் பவுல் ஒரு கலகக்காரராக மாறி இருப்பார். அவருடைய ஆன்மீக விடுதலைப் போராட்டம் தோல்வியில் முடிந்திருக்கும். அதே வேளையில் அடிமைகளின் விடுதலையை அவர் எதிர்க்கவில்லை. 1கொரி 7:21,22. வேலைக்காரர்களை அன்புடன் நடத்த வேண்டுமென்று அவர் வலியுறுத்துகிறார்.கொலோ4:1. ஒரு காலத்தில் பிலேமோனிடம் அடிமையாய் இருந்த ஒநேசிமுக்காக அவரிடம் போய் மன்றாடுகிறார். நான் பெற்ற என் மகனாகிய ஒநேசிமுக்காக உம்மை மன்றாடுகிறேன். என்று கதறுகிறார். பிலேமோன் 1:10 அது மாத்திரமல்ல ஆதி திருச்சபைகளில் அடிமைகள் போதகர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்று சபை குறிப்புகளில் உள்ளன. இதைத்தான் அவரவர்கள் என்ன நிலையில் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அதே நிலையில் இருக்கலாம் என்று பவுல்‌ சொல்லுகிறார். அன்றைய கால சூழ்நிலையில் அடிமைத்தனம் என்பது ஒரு அங்கீகரிக்கப்பட்ட பழக்கமாக இருந்த படியினாலே அதை எதிர்த்து குரல் கொடுத்தால் அது கலவரமாக மாறிவிடும். எனவே பவுல் ஆன்மீக விடுதலையை, பாவ மன்னிப்பின் விடுதலையை முக்கியப்படுத்தினார். எபேசி6:5-8, கொலோ 3:22, 1தீமோ6:2 காலப்போக்கில் பின் நாட்களில் தேவனுடைய பிள்ளைகளின் அடிமைத்தனத்தை அகற்றுவதில் பெரும்பங்கு வகித்தனர். அதே போல தான் இன்றைய சமுதாயத்தில் காணப்படுகின்ற சாதி சட்டமைப்பு. இதை எதிர்த்து கலகம் செய்ய கிறிஸ்தவம் அழைக்கவில்லை. ஆனால் அன்றைக்கு தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு கட்டளையிட்ட மாதிரி நம்முடைய சகோதரர்களை கர்த்தரால் மீட்டெடுக்கப்பட்டவர்களை அடிமைகளாக நடத்தக் கூடாது. சம நிலையில் நடத்த வேண்டும். யாராக இருந்தாலும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாக இணைக்கப்பட்டு இருக்கிறோம் என்கிற சிந்தை உள்ளவன் அதை செயலில் நடைமுறைப்படுத்துவான். தான் உண்மையாகவே மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனாக இருப்பானென்றால் அவன் பேச்சில் அல்ல செயலிலும். எண்ணத்திலும், எல்லா காரியங்களிலும் அதைப் பின்பற்றி உண்மையான கிறிஸ்தவனாக இருப்பான். இந்த மெய்யான இரட்சிப்பைப் பற்றி தான் அதிகமாக பேச வேண்டுமே தவிர வெறுமனே‌ சபைகளில்‌ காணப்படுகின்ற ஜாதிப் பிரிவுகளை அரசியல் ஆக்கக் கூடாது. இயேசு கிறிஸ்துவின் இரத்தம், அவருடைய வார்த்தை, பரிசுத்த ஆவியானவருடைய கிரியை, செய்ய முடியாததை நம்முடைய ஜாதி எதிர்ப்பு அரசியல் எந்த தாக்கத்தையும் நம்முடைய ஆன்மீக வாழ்க்கையில் ஏற்படுத்தாது. சரியான மனந்திரும்புதலுக்கேற்ற செய்திகளே இந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதை விடுத்து ஜாதி எதிர்ப்பு ஒன்றையே வாழ்நாள் முழுவதும் பேசிக் கொண்டிருந்தால் எந்த பயனும் எந்த தாக்கத்தையும் கிறிஸ்தவத்தில் ஏற்படுத்த முடியாது .இது என்னுடைய ஜய உண்மையான நம்பிக்கை. இதைப் பதிவிடுகிற நான் சொல்லிலும் செயலிலும் ஜாதிக்கு அப்பாற்பட்டவன். எசேக்கியேல் சண்முகவேல்

1 சாமுவேல் புத்தகம்  வேத பாடம் 8

1 சாமுவேல் புத்தகம்  வேத பாடம் 8 சாமுவேல் தீர்க்கதரிசி தன் தாய் அன்னாளின் வயிற்றில் இருக்கும் போது ஆண்டவருக்கென்று அர்ப்பணிக்கப்பட்டவன்..  அதன் பிறகு  அவன்  தன் தாயிடம் பால் குடிப்பது மறந்த பிறகு கடவுளிடம் அர்ப்பணிக்கப்பட்டான்.   அது முதற்கொண்டு அவன் அப்போதைய பிரதான ஆசாரியன் ஏலியின் கட்டுப்பாட்டில் வளர்ந்தான்.. பிறகு 12 வயது இருக்கும் பொழுது கடவுள் அவனோடு பேசினார்.  சாமுவேல் ஆசாரியன் ஏலியின் மேற்பார்வையில் யேகோவாவுக்குப் பணிவிடைசெய்துகொண்டிருந்தான். சாமுவேல் யேகோவாவினுடைய இறைவாக்கினன் என உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறான் என்பதை, தாணிலிருந்து பெயெர்செபா வரையுள்ள எல்லா இஸ்ரவேலரும் அறிந்துகொண்டார்கள். தொடர்ந்து யேகோவா சீலோவிலே தோன்றி அவர் தமது வார்த்தைகளின் மூலம் சாமுவேலுக்குத் தன்னை வெளிப்படுத்தினார். 1 சாமுவேல் 3:20-21. ஏலியும் அவனது இரண்டு மகன்களும் தேவனால் தண்டிக்கப்பட்ட பிறகு இஸ்ரவேல் ஜனங்களின் விருப்பத்திற்கு ஏற்ப சவுலை கடவுளுடைய கட்டளையின்படி அரசனாக அபிஷேகம் பண்ணினார்.9:16 சவுல் அரசனாக இருந்தாலும் அவன் ஆசாரியனாக செயல்பட்டபடியி னால் அவனைக் கடிந்து கொண்டார் 13:1-14 சவுல்,அமலேக்கியரின் அரசனான ஆகாகை  கொலை செய்யாமல் உயிரோடே பிடித்தபடியினால் அவனைக் கடிந்து கொண்டார்.15:10-35 பிறகு தாவீதை அபிஷேகம் பண்ணினார்.  இந்த அளவுக்கு தன்னால் வாழ்நாள் முழுவதும் கடவுளின் சித்தத்தின்படி தன் ஊழியத்தை நிறைவேற்றினார்.. அவன் எவ்வளவு உத்தமமாக வாழ்ந்தான் என்பதை கீழ்க்காணும் வசனங்கள் உறுதிப்படுத்தும்.  நான் யாருடைய எருதை எடுத்துக்கொண்டேன்? யாருடைய கழுதையை எடுத்துக்கொண்டேன்? யாருக்கு அநியாயஞ்செய்தேன்? யாருக்கு இடுக்கண் செய்தேன்? யார் கையில் பரிதானம் வாங்கிக்கொண்டு கண்சாடையாயிருந்தேன்? சொல்லுங்கள்; அப்படியுண்டானால் அதை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பேன் என்றான். 1 சாமுவேல் 12:3. இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தவன் தான் சாமுவேல்.  அவனுடைய காலத்திலேயே அவனுடைய பிள்ளைகள் இஸ்ரவேல் ஜனங்களை நியாயம் விசாரித்தபொழுது அவர்கள் வழி விலகிப் போனார்கள். அவன் மகன்கள் தகப்பன் சாமுவேலின் வழிகளைப் பின்பற்றவில்லை. அவர்கள் நேர்மையற்ற முறையில் ஆதாயம் பெற விரும்பி இலஞ்சம் பெற்று, நீதியைப் புரட்டினார்கள். 1 சாமுவேல் 8:3 இதனால் வெறுப்படைந்து இஸ்ரேல் ஜனங்கள் எங்களுக்கு இந்த முறைமை வேண்டாம் எங்களுக்கு அரசனை தாருங்கள் என்று சொல்லக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தினார்கள். They did not want a theocracy. They insisted on a monacracy. ஆரோனுடைய குமாரர்கள் தேவப் பணியில் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் கர்த்தருடைய கட்டளைகளை அசட்டை பண்ணி கோபாக்கினையை வருவித்துக் கொண்டார்கள். ஏலியின் குமாரர்கள் அதனை பாடமாக கற்றுக் கொள்ளாமல் தேவனுடைய தண்டனையை பெற்றுக் கொண்டார்கள். இதற்கு. ஏலியின் பங்கும் முக்கியமானது.  ஆனால் சாமுவேல் உத்தமமாக நடந்தாலும் நேர்மையாக வாழ்ந்தாலும் அவனுடைய குமாரர்கள் இறுதியில் அவனுக்கு அவமானத்தைதான் ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.  இது ஒரு சோகமான நிகழ்வு. புதிய ஏற்பாட்டு காலத்தில் பெற்றோர்கள் பக்தியுள்ள சந்ததியை உருவாக்க அழைக்கப்பட்டிருந்தாலும் சில நேரங்களில் இப்படிப்பட்ட காரியங்கள் கிறிஸ்தவ குடும்பங்களில் ஊழியர்களுடைய வாழ்க்கையில் நிகழ்ந்து விடுகிறது. இதை ஏன் கர்த்தர் அனுமதித்தார், ஏன் நடந்தது, தவறு யாருடையது என்பதை எல்லாம் நாம் மேலெழுந்த வாரியாக யாரையும் குறை சொல்ல முடியாது நித்தியத்தில் மட்டுமே அதற்கு விடை கிடைக்கும். ஆனாலும் புதிய ஏற்பாட்டின் வாக்குத்தத்தங்களின்படி குடும்பத்தின் இரட்சிப்புக்காக போராடும்பொழுது பிள்ளைகளுடைய இரட்சிப்பை பெற்றோர்கள் போராடி பெற்றுக்கொள்ள முடியும். ஊழியக்காரர்களுடைய பிள்ளைகளுடைய தற்போதைய பின்மாற்றத்தை குறித்து காலத்திற்கு முன்பு பதில் சொல்லக்கூடாது. முடிவு தான் முக்கியம்.  நாம் ஆரோனாக இருந்தாலும் சாமுவேலாக இருந்தாலும் நமது குடும்பத்தில் இது மாதிரி நிகழ்வுகள் நடைபெறும்போது சோர்வடையாமல் போராடி ஜெபிக்கும் போது நிச்சயமாக கர்த்தர் நம் ஜெபத்தை கேட்டு மகிமையான காரியங்களை அவர்களுடைய பிள்ளைகளின் குடும்பத்தில் நிறைவேற்றுவார். எசேக்கியேல் சண்முகவேல்

எல்க்கானா அவளிடம், “அன்னாளே, ஏன் அழுகிறாய்?

1 சாமுவேல் வேத பாடம் 7 எல்க்கானா அவளிடம், “அன்னாளே, ஏன் அழுகிறாய்? ஏன் சாப்பிடாமல் இருக்கிறாய்? ஏன் கவலைப்படுகிறாய்? பத்து மகன்களைப் பார்க்கிலும் நான் உனக்கு மேலானவன் அல்லவா”என்றா ன். 1 சாமுவேல் 1:8 கணவன் மனைவியினிடையே உள்ள அன்பை, உறவை மிக அருமையாக விவரிக்கின்ற வேதப் பகுதிகளில் இதுவும் ஒன்று. கணவன் மனைவி மீது காட்டக்கூடிய அன்பை விவரிக்கிற முதல் இடம், வேதத்தில் இந்த இடம் தான். தாயின் அன்பு சிறந்ததுதான் மாற்று கருத்து இல்லை. ஆனால் ஒரு மனைவி மனைவியாகவும் அதே வேளையில் தாயாகவும் மாற முடியும். அதைப் போல கணவன் என்பவன் ஏதோ மனைவிக்கு சரீர சுகத்தை கொடுப்பவனாகவோ அதன் மூலம் பிள்ளைகளை அவளுக்கு அளித்து அவளை சந்தோஷப்படுத்துகிற நபராகவோ அல்லது கடைசி வரை பாதுகாக்கின்ற நபராக மட்டும் காணப்படக் கூடாது. மனைவி என்பவளை ஒரு தனி நபராக பிரித்துப் பார்க்கக் கூடாது. ஆதாமின் விலா எலும்பிலிருந்து ஏவாள் தோன்றினபடியினால் அவனுடைய சரீரத்தின் ஒரு பகுதியாகவே அவளை நினைக்க வேண்டும். என்றைக்கு இறைவனின் சன்னதி முன்பாக வாக்குறுதி கொடுத்து கைப்பிடித்தார்களோ அந்த வாக்குறுதிகளை இருவரும் நிறைவேற்ற வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டவர்கள். அந்த வாக்குறுதியை அவர்கள் சரியாக நிறைவேற்றும் பொழுது கடவுள், வேதத்தில் குடும்பத்திற்கு சொல்லப்படும் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற கடமைப்பட்டிருக்கிறார். ஒரு கணவனோ ஒரு மனைவியோ திருமண ஒப்பந்தத்தை மீறும்பொழுது அந்தக் குடும்பம் தேவனுடைய பாதுகாப்பை இழந்து விடுகிறது. இந்தப் பகுதியில் எல்க்கானா சொல்லிய வார்த்தைகளை மனைவிகள் கூர்ந்து கவனிக்க வேண்டும். ஒரு மனைவிக்கு, கடவுளுக்கு அடுத்தபடியாக தனிப்பட்ட முறையில் உறவாக, முதலில் வருபவன் கணவன்தான். அதற்குப் பிறகுதான் அவளுடைய வாழ்க்கையில் அவளுக்கு கடவுள் கொடுக்கும் பிள்ளைகள்‌. குடும்பத்தில் முதலில் கடவுள். இரண்டாவது குடும்பம். மூன்றாவது ஊழியம் என்கிற வரிசை எவ்வளவு முக்கியமோ அதேபோல மனைவிகளை பொறுத்த அளவில் முதலில் கடவுள். அடுத்தது கணவன். அதற்குப் பிறகுதான் பிள்ளைகள். இந்த வரிசையை மாற்றக்கூடாது. இன்றைக்கு அநேக குடும்பங்களில் கடவுள் குழந்தைகள் இறுதியாக கணவன் என்ற வரிசை காணப்படுகின்றது. அதைத்தான் எல்க்கானா இப்படி கூறுகிறார். "பத்து மகன்களைப் பார்க்கிலும் நான் உனக்கு மேலானவன் அல்லவா?” ஆம் ஒரு மனைவிக்கு பத்து பிள்ளைகள் இருந்தாலும் அவர்களிலும் முதல் பிள்ளையாக அல்லது 10 பிள்ளைகளை விட மேலானவனாகத்தான் கணவனை மனைவி கருத வேண்டும். இதுதான் மனைவியைக் குறித்த தேவனின் சித்தம் என்று கருதுகிறேன். எல்க்கானா, அன்னாள் குழந்தை பெறவில்லை என்கிற காரணத்திற்காக அவளை புறக்கணிக்கவில்லை. அதற்கு மாறாக அவளை ஆறுதல்படுத்தி நான் உனக்கு குழந்தைளைவிட மேலானவன் என்று சொல்லி தைரியப் படுத்துகிறான். இதில் கணவனுடைய அன்பு விளங்குகிறது. இன்னொரு வார்த்தையை சொல்ல வேண்டுமானால் நீ எனக்கு பிள்ளைகளைப் பெறாவிட்டாலும் பத்து பிள்ளைகளை விட நீ மேலானவள் என்று சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இந்த வார்த்தையை போல ஆறுதல் தரக்கூடிய வார்த்தை வேதத்தில் வேறு எங்கும் இல்லை. அதற்காகவே தேவன் இதை எழுதி வைத்திருக்கிறார். குழந்தை இல்லாத தம்பதியர் ஒருவரை ஒருவர் குழந்தையாக நேசித்தால் குடும்பத்தில் வருத்தங்கள் ஏற்படாது. ஒரு மனைவி தன் பிள்ளைகளை கணவனுக்கு அடுத்தபடியாக தான் வைக்க வேண்டும். இதுதான் மனைவியைக் குறித்து தேவனுடைய திட்டம். குடும்பத்தின் தலைவன் கணவனே. கிறிஸ்தவ குடும்பங்களில் மனைவிகள் தங்கள் கணவர்களுக்கு கர்த்தர் வைத்திருக்கும் இடத்தை கொடுக்க வேண்டும். அந்த இடத்தை பிள்ளைகளுக்கு கொடுத்து விடக்கூடாது. மனைவியின் வாழ்க்கையில் பிள்ளைகளுக்கு உரிய இடம் வேறு, கணவனுக்கு உரிய இடம் வேறு. இவை இரண்டையும் சம அளவில் பார்க்க வேண்டும். பிள்ளைகளுக்காக கணவனை உதாசீனம் பண்ணுவதோ புறக்கணிப்பதோ அதுவும் வயதான காலங்களில் கணவனை விட பிள்ளைகளை மிகவும் அதிகமாக கனம் பண்ணி நேசிப்பது ஏற்றதல்ல. வேதம் அனுமதித்த, அவரவர்களுக்கு உரிய இடத்தை கொடுப்பது கணவனுக்கும் மனைவிக்கும் நல்லது. வயதான காலங்களில் இந்த புரிதல் மிகவும் அவசியம். இது கணவன் மனைவி பற்றிய வேதத்தின் அடிப்படையில் நான் புரிந்து கொண்ட காரியங்கள். எசேக்கியல் சண்முகவேல்

ஏலியின் மறுபக்கம்.

1 சாமுவேல் புத்தகம் வேத பாடம் 6. ஏலியின் மறுபக்கம். ஏலி வாழ்ந்த காலம் 98 ஆண்டுகள். ஏலி வாழ்ந்த காலம் இதுதான். அந்நாட்களிலே கர்த்தருடைய வசனம் அபூர்வமாயிருந்தது பிரத்தியட்சமான தரிசனம் இருந்ததில்லை. (1.சாமுவேல் 3:1) இஸ்ரவேல் தேசத்தில் பிரதான ஆசாரியர்களின் வரலாற்றை பார்க்கும்பொழுது முதல் முதலாக ஏலிதான் கடவுளுடைய கோபாக்கினை யை சந்தித்தவன். காரணம் கடவுளை அதிகமாக நேசிக்காமல், கனம் பண்ணாமல் தன்னுடைய குமாரர்களை அதிகமாக நேசித்து அவர்களுடைய பாவங்களை கண்டும் காணாமல் இருந்ததுதான். ஆசரிப்புக் கூடாரத்துக்கு அடுத்த காரியங்களில் அவனுடைய மகன்களுடைய பாவங்கள் கர்த்தரை கோபப்படுத்தியது. அதன் விளைவு ஒரே நாளில் தன்னுடைய இரு குமாரர்களையும் பெலிஸ்தியர்களுக்கு எதிரான போரில் பறி கொடுத்தான். தேவனுடைய பெட்டி எதிரிகளால் கைப்பற்றப்பட்டு விட்டது.4:11. இந்தக் காரியங்கள் எல்லாம் அவனைப் பற்றிய தான ஒரு பக்க பார்வை. அதே வேளையில் அவனுடைய இன்னொரு பக்கத்தை பார்க்கலாம். சாமுவேல் ஆசரி ப்புக் கூடாரத்துக்கு வந்தபோது அவனுக்கு வயது மூன்று இருக்கும். அந்த நாள் முதல் அவனை பராமரித் தது, வழி நடத்தியதெல்லாம் ஏலிதான். ஆசரிப்புக் கூடாரப் பணிகளில் அவனை ஈடுபடுத்தி தேவனைப் பற்றிய வழிகளில் நடத்தியது ஏலிதான். அவனை எந்த விதத்திலும் கடுமையாக நடத்தியதாக வேதத்தில் சொல்லப்படவில்லை. 1. சாமுவேலை அற்பமாகவோ கனவீனமாகவோ நடத்தவில் லை. 2. கடவுளை கண்டடையக் கூடிய வழியை சொல்லிக் கொடுத்தான். 3. சாமுவேலிடம், கடவுள் தன் குடும்பத்திற்கு வரக்கூடிய அழிவை சொல்லியதைக்குறித்து அவன் மீது பொறாமைப் படவில்லை. 4.அன்னாளை யும் அவளது அர்ப்பணிப்பையு ம் புரிந்து கொண்டு சாமுவேலை நடத்தினான். 5. சாமுவேலை ஒரு மகனைப் போல் நடத்தினான். ஏலி என்னதான் தன் பிள்ளைகளை கண்டிக்காமல் போனாலும் சாமுவேலின் காரியங்களில் நேர்மையாக உத்தமமாக நடந்து கொண்டான். இதன் மூலம் நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள். 1. நம்மை ஆவிக்குரிய வழிகளில் வழிநடத்தக் கூடியவர்கள், மற்றவர்கள் பார்வையில் எப்படி இருந்தாலும் பரவாயில்லை நம்மை அவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பது தான் முக்கியம். 2. தேவன் நம்மை யாரிடத்தில் ஒப்படைக்கிறாரோ யாரிடத்திற்க்கு வழிநடத்தினாரோ அவரிடம் பொறுமையாக அவருடைய அனுபவங்களை ஆவிக்குரிய பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டியது நம்முடைய கடமை. 3. கடவுள் அனுமதிக்கும் காலம் வரை அவரிடம் நாம் பெற வேண்டிய அனைத்து அனுபவங்களையும் பெற வேண்டும்‌. 4. மற்றவர்கள் அவர்களை பொருட்படுத்தாமல் போனாலும் நாம் அவரை மதிக்க வேண்டும். 5. ஏற்ற நேரத்தில் நம்மை பிரிக்கும் வரை கடவுள் சொல்லுகின்ற காலம் வரை கடவுள் நம்மை உயர்த்தும் வரை அவரிடத்தில் அடங்கி இருக்க வேண்டும் 6. காலத்திற்கு முன் கர்த்தர் நம் வாழ்வில் அனுமதித்த ஆவிக்குரிய தலைவரை விட்டுப் பிரிந்து வருவது நல்லதல்ல. 7. உலகத்தின் பார்வையில் சிறப்பான தலைவர்கள் நம்முடைய வாழ்க்கையில் ஆவிக்குரிய பாதையில் சரியாக நம்மை நடத்த முடியாமல் போகலாம். அதே வேளையில் கர்த்தர் அனுமதிக்கிற தலைவர்கள் மற்றொரு பார்வையில் சரியில்லாமல் இருந்தாலும் நம்முடைய வாழ்வில் கர்த்தருடைய நோக்கத்தை நிறைவேற்ற அவர்கள் பயன்படுவார்கள்.எசேக்கியல் சண்முகவேல்

ஏலியின் வாழ்க்கை சபைக்கு உணர்த்தும் எச்சரிக்கை என்ன?

1 சாமுவேல் புத்தகம் வேத பாடம் 5. ஏலியின் வாழ்க்கை சபைக்கு உணர்த்தும் எச்சரிக்கை என்ன? கண்காணிப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை. (1 தீமோத்தேயு 3:1) யாராவது திருச்சபையின் மேற்பார்வையாளனாக இருக்க விரும்பினால், அவன் நல்ல பணியை விரும்புகிறான். அது உண்மையான நம்பத்தகுந்த வாக்கு. (1 தீமோத்தேயு 3:1) இது இலகு மொழிபெயர்ப்பு. கடவுள் சபைக்கு ஐந்து வகை ஊழியங்களை வரங்களாக கொடுத்திருக்கிறார். இவற்றில் சபைக்கு மேய்ப்பராக அல்லது கண்காணிப்பாளராக ஒருவன் இருக்க விரும்பினால் அது நல்லது என்று வேதம் சொல்லுகிறது. இப்படிப்பட்ட ஒரு சிறப்பை ஐந்து ஊழியங்களில் வேறு எந்த ஊழியத்திற்கும் தேவன் அளிக்கவில்லை. அப்படிப்பட்ட சிறப்பான கனமான ஊழியம் தான் சபைக்குத் தலைவராக இருக்கக்கூடிய ஊழியம். தலைமைப் பண்பு என்பது தேவன் அளிக்கக்கூடிய ஒரு கிருபை. அதை சரியாக கையாள முடியாவிட்டால் அல்லது தேவன் கொடுத்த அந்த வரத்தை தவறாக பயன்படுத்தினால் வரக்கூடிய நஷ்டங்கள், இழப்புகள், தண்டனைகள் அதிகம். ஏலியின் வாழ்க்கையை நாம் சற்று ஆராய்ந்து பார்ப்போமென்றால் சபைத் தலைவர்கள் அறிந்து கொள்ளக்கூடிய மிகப்பெரிய எச்சரிப்பை நாம் பார்க்கலாம். வேதத்தில் ஏலியைப் பற்றி தேவன் கூறிய வார்த்தைகளை பாருங்கள். என் வாசஸ்தலத்திலே செலுத்தும்படி நான் கட்டளையிட்ட என் பலியையும், என் காணிக்கையையும், நீங்கள் உதைப்பானேன்? என் ஜனமாகிய இஸ்ரவேலின் காணிக்கைகளி லெல்லாம் பிரதானமானவைகளைக் கொண்டு உங்களைக் கொழுக்கப்பண்ணும்படிக்கு, நீ என்னைப்பார்க்கிலும் உன் குமாரரை மதிப்பானேன் என்கிறார். (1.சாமுவேல் 2:29) அவன் குமாரர் தங்கள்மேல் சாபத்தை வரப்பண்ணுகிறதை அவன் அறிந்திருந்தும், அவர்களை அடக்காமற்போன பாவத்தினிமித்தம், நான் அவன் குடும்பத்துக்கு என்றும் நீங்காத நியாயத்தீர்ப்புச் செய்வேன் என்று அவனுக்கு அறிவித்தேன். (1சாமுவேல் 3:13) "அதினிமித்தம் ஏலியின் குடும்பத்தார் செய்த அக்கிரமம் ஒருபோதும் பலியினாலாவது காணிக்கையினாலாவது நிவிர்த்தியாவ தில்லை என்று ஏலியின் குடும்பத்தைக் குறித்து ஆணையிட்டிருக்கிறேன் என்றார். (1சாமுவேல் 3:14) இவ்வளவு கோபத்துடன் எந்த பிரதான ஆசாரியனுடன் தேவன் பேசியதாக வேதத்தில் நான் பார்க்கவில்லை. அதேபோல் தேவன் ஏலிக்கும் ஏலியின் குடும்பத்திற்கும் அளித்த தண்டனையையும் பார்க்க வேண்டும். அப்பொழுது என் உறைவிடத்தில் நீ துன்பத்தைக் காண்பாய். இஸ்ரவேலருக்கு நன்மை செய்யப்பட்டாலும், உன் குடும்பத்தில் முதியவன் ஒருவனும் ஒருபோதும் இருக்கமாட்டான். (1சாமுவேல் 2:32) ‘உன் மகன்களான ஓப்னிக்கும், பினெகாசுக்கும் நேரிடுவது உனக்கு ஒரு அடையாளமாயிருக்கும். அவர்கள் இருவரும் ஒரே நாளில் சாவார்கள். (1சாமுவேல் 2:34) அதுமாத்திரம் அல்ல அவனுடைய சந்ததியும் அப்பத்திற்காகவும் பணத்திற்காகவும் கெஞ்சி நிற்கும் சூழ்நிலை ஏற் படும் என்று தேவன் எச்சரிக்கிறார். இத்தகைய எச்சரிப்பையும் தண்டனையும் ஏலி ஏன் பெற்றான், ஒரே ஒரு முக்கிய காரணம் தான். தன்னுடைய பிள்ளைகளை தன்னுடைய ஊழியத்தில் தலையிட்டு தேவனுடைய நாமத்தை கன வீனப் பண்ணின காரியத்தை கண்டிக்காமல் விட்ட காரணம் தான். தேவன் தங்கும் ஆசரிப்புக் கூடாரத்தை அவமாக்கியதும் தங்கள் இச்சைகளை நிறைவேற்றிய இடமாக மாற்றியதும்தான். Ministerial immorality வேதத்தில் இந்த இடத்தில் தான் முதல் முதல் வருகிறது.2: 22 கடவுள் தம்மை ஒருபோதும் பரிகாசம் பண்ண அனுமதிக்க மாட்டார். இதைப் போல, புதிய ஏற்பாட்டிலும் சபையின் ஆரம்ப காலங்களில், தேவனின் நேரடியான சந்திப்பு வெளிப்பட்டதை பார்க்கலாம். கிருபையின் காலமாக இருந்தாலும் அனனியா சப்பீ ராள் இவர்கள் அடைந்த தண்டனையை நாம் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும். தேவனிடத்திலும் பரிசுத்த ஆவியினிட த்திலும் பொய் சொன்னதாக அவர்களைப் பற்றி பேதுரு குற்றம் சாட்டுகிறார் (‌அப்போ5:3,4) சபையை கண்காணிப்பவர்கள் வேறுவிதமாய் நடக்கும்போது அவர்களைக் குறித்து பவுல் சொன்ன வார்த்தைகளை நாம் கவனித்துப் பார்க்க வேண்டும். (தீத்து.1:9-12 மற்றும் 1 தீமோ 3:4,5) எனவே சபைத் தலைவர்கள் தங்கள் ஊழியங்களில் தம்முடைய பிள்ளைகளை முன்னிறுத்துவதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதில் கர்த்தருடைய சித்தத்தை செய்ய வேண்டும். தற்காலிக உலக நன்மைகளுக்காக சொத்துக்களை காப்பாற்றுவதற்காக தம்முடைய வாரிசுகளை முதன்மைப்படுத்தினால் நிச்சயமாக கர்த்தருடைய கோபாக்கினை யை சந்திக்க நேரிடும் என்பதை வேதம் உணர்த்துகிறது. ஏலியின் காரியத்தில் தேவன் பொறுமை காத்தார். சாமுவேலுக்கு தேவன் தம்முடைய வார்த்தையால் வெளிப்படுத்தும் வரை ஏலிக்கு வரவேண்டிய தண்டனையை நிறுத்தி வைத்திருந்தார், (3:21, மற்றும் 4:1) ஒருவேளை நம்முடைய தீர்மானங்களை நிறைவேற்றுவ தற்காக பொறுமையாக இருக்கலாம். அந்த பொறுமையை கிறிஸ்தவ தலைவர்கள் தங்களுக்கு சாதகமாக கருதக்கூடாது.மற்ற தனிப்பட்ட பாவங்களை விட தேவன் கொடுத்த ஊழியங்களில் கடவுளுடைய ஆளுகை நிராகரித்து தங்கள் அளுகையை நிலை நிறுத்துவது என்பது மிகவும் ஆபத்தானது. எசேக்கியேல் சண்முகவேல்

ஏலியும் அவனுக்கு குமாரர்களும் இன்று சபைக்கு சொல்லும் பாடங்கள் என்ன?

1 சாமுவேல் புத்தகம் வேத பாடம் 4 ஏலியும் அவனுக்கு குமாரர்களும் இன்று சபைக்கு சொல்லும் பாடங்கள் என்ன? பிரதான ஆசாரியன் ஏலியின் வரலாறு, ஆசரிப்புக் கூடாரத்தின் வரலாற்றில் முக்கியமான பகுதியாகும். அதுபோல் ஏலியின் குமாரர்களும் வரலாற்றிலிருந்து எந்தப் படிப்பினையும் கற்றுக் கொள்ளாதவர்கள். இதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். யார் இந்த எலி. ! ஆரோனின் முதல் இரண்டு குமாரர்கள் ஆசிரிப்புக் கூடார ஆரம்ப நிகழ்ச்சியில் கர்த்தர் அங்கீகரிக்காத வேறு ஒரு நெருப்பைக் கொண்டு வந்து கர்த்தருடைய சன்னிதானத்தில் தூபம் காட்ட முன்வந்தபடியினால் அவர்கள் கர்த்தரின் கர்த்தருடைய சன்னிதானத்தில் இருந்து புறப்பட்ட நெருப்பு அவர்களை அழித்தது. அதற்குப் பிறகு பிரதான ஆசாரியர் பட்டம் ஆரோனின் மூன்றாவது குமாரனான எலெயாசாருக்கு வழங்கப்பட்டது. பின்பு ஏதோ ஒரு காரணத்துக்காக அந்த பதவி ஆரோனின் நான்காவது குமாரான இத்தாமார் குடும்பத்திற்கு சென்று விட்டது. இந்தக் குடும்பத்தில் இருந்து வந்தவன் தான் இந்த ஏலி. இந்த ஏலி நாதாப், அபியூ மரணத்தின் மூலமாக மூலமாக எந்த பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை. அப்படி அறிந்திருந்தால் தன் பிள்ளைகளை கண்டித்து வளர்த்திருப்பான் . தன் பிள்ளைகளை விட தேவனை அதிகமாக நேசிக்காத காரணத்தால் பிள்ளைகளை கண்டிக்கவில்லை.. இவனுடைய காலத்தில்தான் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டி இஸ்ரவேல் ஜனங்களை விட்டு விட்டு புற இனத்தாரின் கைகளில் சிக்கிக் கொண்டது. தேவ மகிமை இஸ்ரேல் ஜனங்களை விட்டு கடந்து சென்றது. தன்னுடைய இந்தத் தவறுகளால் பிரதான ஆசாரிய பதவி மறுபடியுமாக‌ஆரோனின் மூன்றாவது மகனான எலெயாசார் வம்சத்திற்கு மறுபடியும் சென்றுவிட்டது.‌ இவன் செய்த தவறால் ஆசாரிய பட்டம் இன்னொரு சந்ததிக்கு சென்று விட்டது. அடுத்தது ஏலியின் மகன்கள் செய்த தவறுகள் . 1 இவர்கள் ஏலியின் மகன்களாக இருந்தாலும் பிரதான ஆசாரியர்களாக நியமிக்கப்படவில்லை. ஆனால் இவர்கள் பிரதான ஆசாரியர்களின் உடைய மகன்களாக இருந்த காரணத்தினால் தங்களை பிரதான ஆசாரியர்களாக தங்களை எண்ணிக் கொண்டார்கள் ‌ 2. ஏலியின் குமாரர் பேலியாளின் மக்களாயிருந்தார்கள். அவர்கள் கர்த்தரை அறியவில்லை. 1 சாமுவேல் 2:12. 3. அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டங்கூடுகிற ஸ்திரீகளோடே தகாத உறவில் ஈடு விட்டார்கள் 1 சாமுவேல் 2:22 4. பலியிட்ட பொருள்களில் தேவனுக்குரியதை தங்களுக்கு என்று எடுத்துக் கொண்டார்கள்2:14 5. இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருடைய காணிக்கையை அருவருக்கம்படியான அந்த சூழ்நிலை ஏற்படுத்தினார்கள். இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளும் காரியங்கள். 1. ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை விட தேவனை அதிகமாக நேசிக்க வேண்டும். (குறிப்பாக ஊழியத்துக்கு அடுத்த காரியங்களில் குடும்ப உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது) 2. ஊழியருடைய பிள்ளைகள் தங்களுடைய தகப்பன்கள் ஊழியக்காரர்களாக காணப்பட்டாலும் தாங்கள் தேவனால் அழைக்க பட்டால் ஒழிய மாமிசத்தில் அந்த அழைப்பு நிறைவேற்றக்கூடாது 3. ஊழியருடைய பிள்ளைகள் தேவனை அறிந்தவர்களாக இருக்க வேண்டும். 4. தேவனுக்குரிய காரியங்களை மாமிசத்தில் தேவனுடைய பிள்ளைகள் அடைய முயற்சிக்கக் கூடாது. . 5. ஊழியத்தில் உதவிக்காக வரும் பெண்களோடு எந்த விதத்திலும் ஊழியக்காரருடைய பிள்ளைகள் தவறான உறவு வைத்துக் கொள்ளக் கூடாது‌‌. 6. காணிக்கைகளையும் தசம பாவங்களையும் ஏன் ஆலயத்திற்கு கொடுக்கிறோம் என்கிற எண்ணத்தை ஊழியக்காரருடைய பிள்ளைகள் தங்களுடைய ஆடம்பரத்தினாலும் செயல்களினாலும் விசுவாசிகள் மத்தியில் உருவாக்கக் கூடாது. 7. ஊழியக்கார்களுடைய பிள்ளைகள் தேவனுக்கு அடுத்த காரியங்களில் பயபக்தியுடன் நடந்து கொள்ள வேண்டும். *பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட சம்பவங்கள் அடிப்படையில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களில் *ஏலியும் அவனுடைய பிள்ளைகளும் நமக்கு அளிக்கும் பாடமும் முக்கியமானது.* சபைகளில் வாரிசுகளை முதன்மைப்படுத்துபவர்கள் இந்த பாடத்தை புரிந்து கொண்டால் நல்லது. எசேக்கியேல் சண்முகவேல்

The Book of 1 Samuel Bible Study 3

The Book of 1 Samuel Bible Study 3 Hannah's prayer with much spiritual importance. Although many prayers are found in the scriptures, it cannot be denied that this prayer has had the greatest impact on believers. We can see in the Christian world that countless parents have committed their children to the Lord based on this prayer and those children have done extraordinary things in the kingdom of God. God hears the prayers of devoted parents and exalt their children by calling them to ministry at the right time. No other prayer in the scriptures has such an impact This praising was also a basis for Mary's prayer. Luke 1:46-55. Bible scholar Wiersbe compares this prayer to the song that David sang when the Lord delivered David from the hands of all his enemies and the hands of Saul. 2 Sam.22cpt The greatness of this song lies in the time when she sang it even though she was singing the praises of God's grace to her who did not deserve it. She sang this song at the time when he (baby Samuel) forgot to drink milk and she took him with her and went to Jehovah's temple in Shiloh and dedicated him to Jehovah God. 1 Samuel 1:24. We should approach this song from a mother's mindset. There was a huge pressure that she was going to dedicate the child , she looked after for three years to God, but the joy that the child was being dedicated to God overcame the sadness and grief . At that moment she emotionally sang praises to God who removed her reproach. This is the highlight of this song. ‌ No man or woman in the scriptures is said to have sung such a wonderful song in such circumstances. That is why the prayers offered by parents today based on this song are so powerful. Her husband Elkanah's role in this dedication is also important. Knowing Hannah' s vow he did not object to it. He respected his wife's commitment even though he had the right to object. (Number 30 chapter). So her husband's role was commendable in Hannah's fulfilling her vow "There is no-one holy like the Lord; there is no-one besides you; there is no Rock like our God." The above lines in this song describe God's holiness and His incomparable nature. (His Holiness and uniqueness). It also became a prophetic song. " Those who were full hire themselves out for food, but those who were hungry are hungry no more. She who was barren has borne seven children, but she who has had many sons pines away." 1 Samuel 2:5 These lines are a prophetic promise that God will bless Hannah with more children In this, the word "seven" refers to perfection. No doubt Hannah's prayer has gained a permanent place among the believers. Ezekiel Shanmugavel

The Book of 1 Samuel Bible Study 3

The Book of 1 Samuel Bible Study 3 Hannah's prayer with much spiritual importance. Although many prayers are found in the scriptures, it cannot be denied that this prayer has had the greatest impact on believers. We can see in the Christian world that countless parents have committed their children to the Lord based on this prayer and those children have done extraordinary things in the kingdom of God. God hears the prayers of devoted parents and exalt their children by calling them to ministry at the right time. No other prayer in the scriptures has such an impact This praising was also a basis for Mary's prayer. Luke 1:46-55. Bible scholar Wiersbe compares this prayer to the song that David sang when the Lord delivered David from the hands of all his enemies and the hands of Saul. 2 Sam.22cpt The greatness of this song lies in the time when she sang it even though she was singing the praises of God's grace to her who did not deserve it. She sang this song at the time when he (baby Samuel) forgot to drink milk and she took him with her and went to Jehovah's temple in Shiloh and dedicated him to Jehovah God. 1 Samuel 1:24. We should approach this song from a mother's mindset. There was a huge pressure that she was going to dedicate the child , she looked after for three years to God, but the joy that the child was being dedicated to God overcame the sadness and grief . At that moment she emotionally sang praises to God who removed her reproach. This is the highlight of this song. ‌ No man or woman in the scriptures is said to have sung such a wonderful song in such circumstances. That is why the prayers offered by parents today based on this song are so powerful. Her husband Elkanah's role in this dedication is also important. Knowing Hannah' s vow he did not object to it. He respected his wife's commitment even though he had the right to object. (Number 30 chapter). So her husband's role was commendable in Hannah's fulfilling her vow "There is no-one holy like the Lord; there is no-one besides you; there is no Rock like our God." The above lines in this song describe God's holiness and His incomparable nature. (His Holiness and uniqueness). It also became a prophetic song. " Those who were full hire themselves out for food, but those who were hungry are hungry no more. She who was barren has borne seven children, but she who has had many sons pines away." 1 Samuel 2:5 These lines are a prophetic promise that God will bless Hannah with more children In this, the word "seven" refers to perfection. No doubt Hannah's prayer has gained a permanent place among the believers. Ezekiel Shanmugavel

1 சாமுவேல் புத்தகம் வேத பாடம் 3

1 சாமுவேல் புத்தகம் வேத பாடம் 3 பற்பல சிறப்புகளைக் கொண்ட அன்னாளின் ஜெபம். வேதத்தில் எத்தனையோ ஜெபங்கள் காணப்பட்டாலும் இந்த ஜெபம் விசுவாசிகள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று சொன்னால் அதை மறுப்பதற்கு இல்லை. இந்த ஜெபத்தை அடிப்படையாகக் கொண்டு எண்ணிலடங்காத பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆண்டவருக்கு ஒப்புக் கொடுத்து அந்தப் பிள்ளைகள் தேவனுடைய இராஜ்ஜியத்தில் அசாதாரணமான காரியங்கள் செய்ததை கிறிஸ்தவ உலகத்தில் நாம் பார்க்கலாம். அர்ப்பணிப்புள்ள பெற்றோர்களின் ஜெபத்தை தேவன் கேட்டு அவர்களின் பிள்ளைகளை ஏற்ற நேரத்தில் ஊழியத்திற்கு அழைத்து அவர்களை மகிமைப்படுத்தி இருக்கிறார். இத்தகைய சிறப்பு வேதத்தில் வேறு எந்த ஜெபத்திற்கும் கிடையாது. மரியாளின் ஜெபத்திற்கும் இந்த விண்ணப்பம் ஒரு அடிப்படையாக இருந்தது என்று சொன்னாலும் தவறில்லை. லூக்கா 1:46-55. வியர்ஸ்பி‌ என்கிற வேதப் பண்டிதர் இந்த ஜெபத்தை யேகோவா, தாவீதை எல்லாப் பகைவரின் கைகளிலிருந்தும்,சவுலின் கையிலிருந்தும் விடுவித்தபோது பாடிய பாடலோடு ஒப்பிடுகிறார். 2 சாமு.22 இந்தப் பாடலின் பெரும் பகுதிகள் தன் கணவனின் இரண்டாவது மனைவியை குறித்து சொல்லிய காரியங்களாக இருப்பதை பார்க்கலாம். தகுதி இல்லாத தனக்கு தேவன் அளித்த கிருபையை போற்றி‌ப் பாடியதாக இருந்தாலும் அவள் எந்த நேரத்தில் இந்தப் பாடலை  பாடினாள் என்பதில்தான் இந்தப் பாடலின் சிறப்பு அடங்கியுள்ளது. அவன்(குழந்தை  சாமுவேல்)பால்குடிப்பதை மறந்தபின் அவன், குழந்தையாய் இருந்தும் அவனைத் தன்னுடன் கூட்டிக்கொண்டு, சீலோவிலுள்ள யேகோவாவின் ஆலயத்துக்கு சென்று யேகோவா கடவுளிடம் ஒப்புக்கொடுத்த அந்த நேரத்தில்தான் இந்தப் பாடலை பாடினாள். 1 சாமுவேல் 1:24. ஒரு தாயின் மனநிலையில் இருந்து இந்தப் பாடலை நாம் அணுக வேண்டும். ஒரு பக்கம், மூன்று வருடம் வளர்த்த குழந்தையை இறைவனிடத்தில் அர்ப்பணிக்கப் போகிறோம் என்கிற ஒரு மிகப்பெரிய அழுத்தம் இருந்தாலும் அது தேவனுக்காக அர்ப்பணிக்கப்படுகிறது என்கிற சந்தோஷம் அந்தத் துக்கத்தை மறைத்தது. அந்த நேரத்தில் தான் இந்த பாடலை பாடினாள். அந்த நேரத்தில் தன்னுடைய நிந்தையை அகற்றிய தேவனை உணர்வுப் பூர்வமாக போற்றிப் பாடினாள். இதுதான் இந்தப் பாடலின் உச்சகட்ட சிறப்பு. ‌ இப்படிப்பட்ட சிறப்பான பாடலை இப்படிப்பட்ட சூழ்நிலையில் வேதத்தில் எந்த ஒரு நபரோ பெண்மணியோ தேவனை துதித்து பாடியதாக சொல்லப்படவில்லை. அதனால்தான் அந்தப் பாடலை அடிப்படையாகக் கொண்டு இன்றைக்கு பெற்றோர்கள் ஏறெடுக்கும் ஜெபங்கள் அவ்வளவு வல்லமை உள்ளதாக காணப்படுகிறது. இந்த ஜெபத்தில் அவளது கணவன் எல்க்கானாவின் பங்கும் முக்கியமானது. அன்னாளின் நேர்த்திக் கடனை அறிந்து அவன் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எதிர்ப்பு தெரிவிக்க வேதத்தில் அவனுக்கு அனுமதி இருந்தும் மனைவியினுடைய அர்ப்பணிப்பை அவன் மதித்தான்‌.(எண்ணா 30 வது அதிகாரம்). எனவே அன் னாளின் அர்ப்பணிப்பில் அவளுடைய கணவனின் பங்கும் இணைந்து இருக்கிறது. கர்த்தரைப் போலப் பரிசுத்தமுள்ளவர் இல்லை. உம்மையல்லாமல் வேறொருவரும் இல்லை. எங்கள் தேவனைப்போல ஒரு கன்மலையும் இல்லை. இந்தப் பாடலின் வரிகள் தேவனின் பரிசுத்தத்தையும் அவரது ஒப்பில்லாத தன்மையையும் விளக்குகிறது.(His Holiness and uniqueness). இது ஒரு தீர்க்கதரிசன பாடலாகவும் மாறியது. பசியாயிருந்தவர்களோ இனிப் பசியாயிரார்கள். மலடியாயிருந்தவள் ஏழு பெற்றாள். 1 சாமுவேல் 2:5 இந்த வரிகள் தனக்கு தேவன் பின்னால் அளிக்கப் போகிற குழந்தைகளை பற்றிய தீர்க்க தரிசனம். இதில் ஏழு என்கிற வார்த்தை பூரணத்தை குறிப்பதாக உள்ளது. இப்படி அநேக சிறப்புகளைப் பற்றி அன்னாளின் ஜெபம், விசுவாசிகள் மத்தியில் நீங்காத இடம் பெற்றுள்ளது. எசேக்கியேல் சண்முகவேல்

கிறிஸ்துவும் இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.

"கிறிஸ்துவும் இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார். " எபி 9:28 இந்த வார்த்தையின் உண்மையான அர்த்தம் என்ன? அப்படியென்றால் முதல் தடவை பாவத்தோடு தோன்றினாரா என்ற கேள்வி எழக்கூடும். இந்த வார்த்தையை தவறாக, பவர் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். இது பலவிதமான தவறான வியாக்கியானங்களுக்கு வழிவகுத்துவிட்டது. சரியான மொழிபெயர்ப்பு இதுதான். "அதைப்போலவே கிறிஸ்துவும் எல்லாருடைய பாவங்களையும் சுமந்து போக்கும்படி ஒரே முறை பலியாக படைக்கப்பட்டார். அவர் மீண்டும் ஒருமுறை தோன்றுவார். ஆனால் பாவத்தின் பொருட்டன்று. தமக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மீட்பை அருளும் பொருட்டே தோன்றுவார். இது ராஜரிகம் அவர்கள் மொழிபெயர்ப்பு. அவ்விதமாக அநேக மக்களுடைய பாவங்களை நீக்கிப்போடும்படி, கிறிஸ்துவும் ஒருமுறை பலியாகச் செலுத்தப்பட்டார்; ஆனால் பாவத்தைச் சுமக்கும்படியாக அல்ல, அவருக்காகக் காத்திருப்போருக்கு இரட்சிப்பைக் கொண்டுவருவதற்காகவே அவர் இரண்டாம் முறையாக வருவார். எபிரேயர் 9:28 இது இலங்கை இலகு மொழிபெயர்ப்பு. எனவே "கிறிஸ்துவும் இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்" என்பது தவறான மொழிபெயர்ப்பு. முதல் தடவை அவர் தேவனுடைய குமாரனாக அவதரித்தபோது பாவத்தை சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டியாக வெளிப்பட்டார். அதாவது நம்முடைய பாவத்தை மீட்க உலகத்தின் பாவத்தை தன் மேல் சுமந்து தீர்த்தவராக வெளிப்பட்டார். ஆனால் இரண்டாம் தரம் வெளிப்படும்போது அவர் தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி , அவர்களை மீட்க,பாவத்தை சுமந்து தீர்க்க அவசியம் இல்லாதவராக வெளிப்படுவார். இதுதான், அவர் பாவம் இல்லாதவராக இரண்டாம் தரம் வெளிப்படுவார் என்பதன் அர்த்தம். முதல் தடவை நம்முடைய பாவத்தைப் போக்குவதற்காக ,சுமப்பதற்காக அவர் வெளிப்பட்டார். இரண்டாம் முறை அவர் நமக்கு இரட்சிப்பை அருளும்படி தரிசனமாவார். JESUS CHRIST WILL ‘’appear not for expiation but for salvation’’. JOHN BROWN

1 சாமுவேல் புத்தகம் வேத பாடம் 2.

1 சாமுவேல் புத்தகம் வேத பாடம் 2. ஏலியும் எல்க்கானாவும். *ஒரு தேசத்தினுடைய ஆவிக்குரிய வீழ்ச்சி எங்கே ஆரம்பிக்கிறது என்றால் அந்த நாட்டில் வாழ்கிற ஆவிக்குரிய மக்களுடைய வீடுகளில் இருந்து ஆரம்பிக்கிறது* . " *The ruin of a nation begins in the homes of its people"-* An African proverb *எங்கே பெற்றோர்கள் தங்கள் குடும்பங்களில் ஆவிக்குரிய சந்ததியை எழுப்பத் தவறுகிறார்களோ* *அங்கேயிருந்து அந்த நாட்டினுடைய ஆவிக்குரிய* *வீழ்ச்சி தொடங்குகிறது. இதற்கு* சரியான உதாரணம் ஏலியின் குடும்பம். ஏலியின் மகன்கள் பொல்லாதவர்களாயிருந்தார்கள். அவர்கள் யேகோவாவுக்கு மதிப்பு கொடுக்கவில்லை. 1 சாமுவேல் 2:12 ஏலியின் மகன்களின் இந்த பாவம் யேகோவாவின் பார்வையில் கொடியதாயிருந்தது. ஏனெனில் அவர்கள் யேகோவாவின் காணிக்கையை கேவலமாய் எண்ணினார்கள். 1 சாமுவேல் 2:17 எனவேதான் இவனுடைய காலத்தில் தேவனுடைய பெட்டி ‌ பெலிஸ்தியர்களால் கைப்பற்றப்பட்டது. தேவ மகிமை இஸ்ரவேல் ஜனங்களை விட்டு கடந்து போனது. அதே வேளையில் பெற்றோரால் தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட குடும்பத்தின் மூலமாக அல்லது அந்த குழந்தையின் மூலமாக அந்த தேசம் ஆவிக்குரிய வளர்ச்சியை அடையும் என்பதும் வேதத்தில் காணக்கூடிய உண்மை. *Never underestimate the power of the home or the power of a little child dedicated to God.Wiersbe* ஆவிக்குரிய வளர்ச்சியின் விளிம்பில் இருந்த, தேவ மகிமை இழந்த அந்த இஸ்ரவேல் மக்களை ஆவிக்குரிய அழிவில் இருந்து காப்பாற்றியது எல்க்கானாவும் அன்னாளின் அர்ப்பணிப்பின் விளைவாக தேவன் கொடுத்த குழந்தை சாமுவேல் தான். இந்த ஒரு குடும்பத்தின் அர்ப்பணிப்பு இஸ்ரவேல் தேசத்தின் ஆவிக்குரிய சூழ்நிலையை மாற்றி விட்டது. சாமுவேல் எல்லாவித அடையாளங்களோடும் யூத தேசத்தின் முதல் தீர்க்கதரிசியாக மாறினார். தேவனால் அடையாளம் காட்டப்பட்ட இரண்டு மன்னர்களை அபிஷேகம் பண்ணினான். ஒரு மிகப்பெரிய தீர்க்கதரிசிகள் வட்டாரத்தை எழுப்பினான். தான் இருந்த காலம் முழுவதும் பிழையில்லாமல் நேர்மையாக கறை படாமல் பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதல்தான் முக்கியம் என்பதற்கு அடையாளமாக திகழ்ந்தான்.1 சாமு 15:22 இதற்கெல்லாம் காரணம் அன்னாளின் அர்ப்பணிப்புள்ள ஜெபம். *அன்னாளின் ஜெபத்தில் அவளுடைய* *இருதயம் தேவனோடு பேசியது. வார்த்தைகள் பேசவில்லை. ஜெபத்தில் வார்த்தைகள் பேசுவதை விட* இருதயங்கள் தேவனோடு* *பேச வேண்டும் என்பதற்கு* அன்னாள் ஒரு சிறந்த உதாரணம். 1:13 அன்னாளின் ஜெபத்தின் வேதனைகளை, பாரங்களை, உணர்வுகளை புரிந்து கொள்ளாதவனாகத்தான் பிரதான ஆசாரியன் ஏலி காணப்பட்டான். *ஒரு மேய்ப்பனுடைய மிகப்பெரிய தகுதி தன்னுடைய விசுவாசிகளின் கவலைகளை கரிசனையோடு அக்கறையோடு முதலில் கேட்கின்ற நபராக* *இருக்க வேண்டும்.* ஏலி அன்னாளைப் பற்றிக் கூறிய தவறான வார்த்தைக்கு வருத்தப்படவே இல்லை. அதைப் பற்றி விசாரிக்கவும் இல்லை. ஆனாலும் அந்த தகுதி இல்லாத பிரதான ஆசாரியன் மூலமாக தேவன் அன்னாளோடு பேசி அவளை உற்சாகப்படுத்தினார்.1:17 *எனவே கிறிஸ்தவ குடும்பங்கள் அடுத்த தலைமுறையைப் பற்றி அக்கறையோடு அணுக வேண்டும். எந்த அளவுக்கு உலகத்தின் ஆசீர்வாதங்களை தங்கள் பிள்ளைகள் பெறும்படியாக உழைக்கிறார்களோ அதைவிட பன்மடங்கு தங்கள் பிள்ளைகள் ஆவிக்குரிய வாழ்க்கையில் சிறந்து விளங்க தங்களுக்குள்ள அனைத்தையும் இழக்க தயாராக இருக்க வேண்டும். தேவன் இந்த கடைசி காலங்களில் நம்மிடம் எதிர்பார்க்கும் காரியம் இதுவே.* எசேக்கியேல் சண்முகவேல்

1 சாமுவேல் புத்தகம் வேத பாடம் ஒன்று.

1 சாமுவேல் புத்தகம் வேத பாடம் ஒன்று. ஆரம்ப நாட்களில் 1சாமுவேல்,2. சாமுவேல் 1,2 இராஜாக்கள் ஆகிய புத்தகங்கள், இராஜாக்கள் புத்தகம் என்று அழைக்கப்பட்டது. 1,2 சாமுவேல் புத்தகங்கள் ஒரே புத்தகமாகத்தான் யூதர்களுடைய வேத புத்தகத்தில் காணப்படடது. ஆனால் அவைகள் பெரிய புத்தகமாக இருந்தபடியினால் இரண்டாக பிரிக்கப்பட்டது. நியாயாதிபதிகள் புத்தகத்தில் சிம்சோன் கடைசியாக இஸ்ரவேல் ஜனங்களை நியாயம் விசாரித்ததாக சொல்லப்பட்டாலும், கடைசி நியாயாதிபதியாக சாமுவேலைத்தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் சாமுவேல் தன் வாழ்நாள் முழுவதும் இஸ்ரவேலருக்குத் தொடர்ந்து நீதிபதியாயிருந்தான். 1 சாமுவேல் 7:15 இந்த இரண்டு புத்தகங்களின் காலக்கட்டம் ஏறக்குறைய 150 ஆண்டுகள். நியாயாதிபதி காலத்தில் அரசியல் அதிகாரமும் கிடையாது‌, அரசனும் கிடையாது. யூதர்களுக்கென்று எந்த ஒரு அரசனும் ஏற்படுத்தப்படவில்லை. ஆசாரியத்துவம் கறைபடிந்து காணப்பட்டது. ஆனால் இந்தப் புத்தகத்தின் காலக்கட்டத்தில் தான் ஆசரிப்புக் கூடாரம் எருசலேம் நகருக்கு கொண்டுவரப்பட்டு ஒருங்கிணைந்த வழிபாடு ஏற்படுத்தப்பட்டது. *இந்த புத்தகங்களின் காலக் கட்டத்தில்தான்* *அரசர்கள் நியமிக்கப்பட்டு அரசாங்கம் உருவாக்கப்பட்டது.* எருசலேமில் ஆசரிப்பு கூடாரம் கொண்டு வரப்பட்டது. தாவீது ஆலயம் கட்டுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும், ஆயத்தங்களையும் செய்தான். இந்த காலக்கட்டத்தில்தான் எருசலேம் யூதர்களுடைய தலைநகரமாக மாறியது. இந்த புத்தகத்தில் தான் தாவீதோடு தேவன் உடன்படிக்கை பண்ணினார்.2சாமு 7:1-17. இவன்தான் இஸ்ரவேலின் முதல் ‌ தீர்க்கதரிசியாக அறியப்படுகிறார். (Professional prophet ). அதாவது தீர்க்கதரிசிகளுக்குரிய முழு அடையாளங்களோடு காணப்பட்டவன். இவன்தான் முதல் இரண்டு அரசர்களை அடையாளம் காட்டி அபிஷேகம் பண்ணினான். *He was first king maker in the history ancient Israel .* பல தீர்க்கதரிசிகளை உருவாக்கினான். சிதறிக் கிடந்த யூதர்களை இணைத்து ஒரு அரசாங்கத்தை உருவாக்குவதற்கு பாலமாக திகழ்ந்தான். *இவன் ஆரோன் குடும்பத்தில் பிறக்காத லேவியன். ஆனாலும் இவன் ஆசாரியனாக கர்த்தருடைய அனுமதியோடு ஆசாரிய ஊழியத்தை* *நிறைவேற்றினான்.* *சேனைகளின் கர்த்தர்* ( *Lord of hosts)என்கிற* வார்த்தை 300 தடவை வேதத்தில் வருகிறது.1 சாமுவேல் ‌ புத்தகத்தில் தான் இந்த வார்த்தை முதல் முதல் வருகிறது.1:3. *The books of 1 and 2 Samuel are part of Christian history.* *Jesus was king of the Jews in the past, he is king of the Church today, and he will be king of the world in the future, when he* will reign in justice and righteousness, and the kingdom will finally be restored to Israel. David Pawson

நியாயாதிபதிகள் புத்தகம் வேத பாடம் ஏழு.

*நியாயாதிபதிகள் புத்தகம் வேத பாடம் ஏழு.* நியாயாதிபதிகள் புத்தகத்தில் தேவன் நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்களில் மிக முக்கியமான பாடம் எதுவென்றால் தேவன் வரலாற்றை எழுதுகிறார் என்பதே. According to Dr A.T Pierson *History is His story.* உலகத்தின் காரியங்களையும் நிகழ்வுகளையும் அவர் தீர்மானம் பண்ணுகிறார். அவர் எல்லா நிகழ்வுகளையும் இயக்குகிறார் என்பதை இந்த புத்தகத்தின் மூலமாக நாம் அறிந்து கொள்ளலாம். *God directs history.* நியாயாதிபதிகள் காலம் அவனவன் தன் விருப்பப்படி வாழ்ந்த காலம். அரசர்கள் இல்லாத காலம். "அந்நாட்களில் இஸ்ரவேலில் அரசன் இருக்கவில்லை. ஒவ்வொருவனும் தன் பார்வைக்குச் சரியானதையே செய்து வந்தான்." நியாயாதிபதிகள் 17:6. மேலும்படிக்க 18:1,19:1,21:25 யோசுவாவின் காலத்தைப் போல யூதர்களுக்கென்று ஒரு ஒருங்கிணைந்த தனி இராணுவப்படை அந்தக் காலகட்டத்தில் இருக்கவில்லை. யூதர்களுக்கான ஒருங்கிணைந்த ஒரு தலைவர் காணப்படவில்லை. மக்கள் சிதறி கிடந்த காலம். யூத ஜனங்களுக்குள் எந்த ஒற்றுமையும் இல்லாத காலம். கர்த்தர் எழுப்பின நியாயாதிபதிகளும் அவரவர்கள் வாழ்ந்த இடங்களின்தான் நியாயம் விசாரித்தார்கள். ஆட்சி செய்தார்கள். இராணுவத்தின் தலைவர்களாக காணப்பட்டார்கள். அவர்கள் அந்தந்த இடம் சார்ந்த மக்களுக்கு நியாயாதிபதிகளாகவும் இராணுவத் தலைவர்களாகவும் காணப்பட்டார்கள்! எந்த ஒரு நியாயாதிபதியும் ஒருங்கிணைந்த மக்களுக்கு நியாயம் விசாரிக்க வில்லை. ‌ அப்படிப்பட்ட ஒரு இருண்ட காலம். ஆனாலும் அந்த இருண்ட காலத்திலும் தேவனுடைய கிரியை தடைபடவில்லை. *கடவுள் உலகத் தோற்றத்திற்கு முன்பாக தீர்மானித்திருந்த அந்த நோக்கத்தை* *அந்த இருண்ட காலத்திலும் செயல்படுத்திக் கொண்டே இருந்தார்.* நியாயாதிபதிகள் காலத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகள் எதுவும் தேவனை கட்டுப்படுத்தவில்லை. இந்த ஒழுங்கற்ற காலக்கட்டத்தில் தான் தேவனுடைய திட்டத்தின்படி மோவாபிய பெண்ணான ரூத்தை தேவன், தான் முன் குறித்த யூதர்களோடு இணைத்தார். போவாஸ் ரூத் மூலமாக ஓபேத் பிறந்தான். ஓபேத் ஈசாயின் தகப்பன், ஈசாய் தாவீதின் தகப்பன். இந்த தாவீதின் வம்சத்தில் உலகத்தின் இரட்சகர் இயேசு கிறிஸ்து பிறந்தார். இதன் மூலம் நாம் அறிந்து கொள்ள கூடிய பாடங்கள். 1.இந்த உலகத்திலோ, நமது தேசத்திலோ என்ன காரியங்கள் நடந்தாலும் சாதகமற்ற சூழ்நிலைகள் தோன்றினாலும் *அந்த சூழ்நிலைகள் மத்தியிலும் தேவன் தம்முடைய கிரியைகளை தொடர்ந்து கொண்டே இருக்கிறார்.* 2. *அவருடைய அனுமதி இல்லாமல் இந்த உலகத்தில் எந்த காரியமும் நடைபெறாது. அவர் முன் குறித்த* நோக்கத்தை உலக நிகழ்வுகள் எதுவும் தடை செய்ய முடியாது. 3 *இறைவன் மனிதனுடைய அரசுகளின்மேல் ஆளுபவர் என்பதையும், அவர்* விரும்பியவனுக்கே அதைக் கொடுப்பார். தானி.4:25 4.நம்முடைய பார்வையில் இருண்ட காலமாக இருக்கலாம் ஆனால் தேவனுக்கு முன்பாக எல்லாம் வெளியுரங்கமாக இருக்கிறது. 5.அதுபோல கடவுளுடைய சித்தத்தை நிறைவேற்றுகிற விசுவாசிகளின் வாழ்க்கையில் அவர்கள் கண்களுக்குத் தோன்றுகிற இருண்ட காலங்கள் தேவனுடைய திட்டத்தை தடை செய்ய முடியாது. 6.அந்த இருண்ட காலங்களின் மத்தியிலும் தேவன் தான் முன் குறித்த பிள்ளைகளுடைய வாழ்க்கையில் தம்முடைய திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டுதான்‌ இருக்கிறார். 7 *இந்த உலகம் எப்பொழுதும் தேவனுடைய கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கிறது.* கடவுளுடைய அனுமதியின்றி எந்த அணுவும் அசையாது. நமக்கு சாதகம் இல்லாத சூழ்நிலையும் இருளான நேரங்களும் அவர் பார்வையில் ஒன்றும் இல்லை. *God is always in control.* எசேக்கியல் சண்முகவேல்

கடவுள் குடும்பங்களையும் முன்குறித்திருக்கிறார்.

*கடவுள் குடும்பங்களையும் முன்குறித்திருக்கிறார்.* யோசுவாவின் புத்தகத்தில் ராகாப் என்கிற கானானியப பெண்‌ இஸ்ரவேல் ஜனங்களோடே இணைக்கப்படுகிறாள். நியாயாதிபதிகள் காலத்தில் ரூத் என்கிற மோவாபிய பெண் இணைக்கப்படுகிறாள்‌. இந்த இரண்டு நிகழ்வுகளும் தேவனுடைய திட்டத்தில் உள்ளவைகள். கடவுள் உலக மக்கள் அனைவரையும் நேசிக்கிறார் என்பதையும் தம்மை அண்டி வருகிற எவரையும் புறம்பே தள்ளுவதில்லை என்பதையும் உலகத்திற்கு உணர்த்த இந்த நிகழ்வுகள் நமக்கு சுட்டிக்காட்டுகிறது. ராகாபின்‌ மகன் போவாஸ் ரூத்தின் மகன் ஓபேத். அவன் தாவீதின் தகப்பனான ஈசாயின் தகப்பன். இந்த நிகழ்வுகளை பார்க்கும்போது அடுத்தடுத்து, தேவன் புறயின பெண்களை இணைத்து உருவான சந்ததி, உலகத்தின் இரட்சகன் பிறப்பதற்கு வழிவகுத்து, நகோமியின் கணவன் மக்லோனின் பெயர் மறைந்து பெத்லகேமில் போவாஸ், ஓபேத் ஈசாயின் பெயர்கள், யூதர்கள் வரலாற்றில் இடம் பெற்று விட்டன. வேதம் இதன் மூலம் நமக்கு உணர்த்தும் பாடங்கள். *கடவுள் நம்மை மட்டும் அழைக்கவில்லை,முன் குறிக்கவில்லை* . 1.நமது குழந்தைகள் மூலமாகவும் ஒரு திட்டத்தை இந்த உலகத்தில் வைத்திருக்கிறார் என்கிற சிந்தனை பெற்றோர்களுக்கு அவசியம். 2. நம்முடைய குழந்தைகளை நமக்கு அடுத்த சந்ததியில் தேவனுடைய திட்டத்தில் பங்கு வகிக்கிற பிள்ளைகளாக மாற்றுவதும் ஒரு மிக சிறந்த ஊழியம். 3. தாவீதின் வரலாற்றைப் பார்க்கும் பொழுது அவன் தன்னுடைய காலத்தில் அநேக வெற்றிகளை சம்பாதித்திருக்கிறார். அனேக சங்கீதங்களை எழுதி இருக்கிறார். இஸ்ரவேல் தேசத்திற்க்கென்று ஒரு மிகப்பெரிய ராஜ்ஜியத்தை உருவாக்கினார். தன் வாழ்நாள் முழுவதும், தேவனுடைய ஆலயத்தை கட்டுவதற்காக எல்லா முயற்சிகளையும் கைக்கொண்டு ஆலயம் கட்டுவதற்கான செல்வத்தையும் சேர்த்து வைத்தார். இந்த காரியங்கள் எல்லாம் மிகச்சிறந்த காரியங்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதையெல்லாம் அவன் தேவனுக்காக செய்தான். ஆனால் தேவன் அவனுக்கு யாருக்கும் கொடுக்காத ஒரு ஆசீர்வாதத்தை கட்டளையிட்டார். மேசியா யூத கோத்திரத்திலிருந்து வருவார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் அந்த யூத கோத்திரத்தில் அநேக குடும்பங்கள் இருந்தாலும் கடவுள் தாவீதின் குடும்பத்தை தேர்ந்தெடுத்து அந்த வம்சத்தில் உலகத்தின் இரட்சகராக பிறந்தார் . இது கடவுள் தாவீதுக்கு கொடுத்த மிகப்பெரிய ஆசீர்வாதம். நாம் புரிந்து கொள்ளக்கூடிய காரியம் என்னவென்றால் *நாம் தேவனுடைய பரிபூரண சித்தத்தை‌ இந்த உலகத்தில் நிறைவேற்றும்* *பொழுது நிச்சயமாக நமது குடும்பத்தை குறித்து* *அவர் கொண்டிருக்கும் அனாதி தீர்மானங்கள்* நிறைவேறும். நாம் *தனி ஒரு மனிதனாக ஆவிக்குரிய ஓட்டத்தை ஓட அழைக்கவில்லை* . *குடும்பமாக தொடர் ஓட்டத்தை ஓட அழைக்கப்பட்டிருக்கிறோம்* . நான் மட்டும் முன் குறிக்கப்பட்ட நபராக காணப்படாமல் என்னுடைய குடும்பமும் முன்குறிக்கப்பட்ட குடும்பமாக காணப்பட வேண்டும். இந்த சிந்தையை விசுவாச குடும்பத்தாருக்கு தேவன் தருவாராக. எசேக்கியேல் சண்முகவேல் The greatest thing God did for David was not to give him victory over his enemies or wealth for the building of the temple. The greatest privilege God gave him was that of being the ancestor of the Messiah. David wanted to build a house for God, but God told him He would build a house (family) for David (2 Sam. 7). David knew that the Messiah would come from the kingly tribe of Judah (Gen. 49:8–10), but nobody knew which family in Judah would be chosen. God chose David’s family, and the Redeemer would be known as “the son of David” (Matt. 1:1). Wiersbe

இறைவனின் காலப்பகுப்பு ஆட்சி முறை ஏன் அவசியம்?

*இறைவனின் காலப்பகுப்பு ஆட்சி முறை ஏன் அவசியம்?* *Why Dispensationalism should be preached in the church?* லேவியராகமம் புத்தகம் 11 முதல் 15 வரை உள்ள அதிகாரத்தில் எவைகள் தீட்டுள்ள காரியங்கள், எவைகள் அசுத்தமானவைகள், எவைகளை உட்கொள்ளலாம் எவைகளை உட்கொள்ளக்கூடாது என்பது பற்றிய பல காரியங்களை இந்தப் பகுதியில் பார்க்கலாம். இந்தப் பகுதியில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படையான மூன்று காரியங்கள். 1. *இந்த இடத்தில் ஆண்டவர் சொன்ன கட்டளைகள் யூதர்களுக்கு* *மட்டுமே பொருந்தும்.* 2. இவைகளை நாம் கடைபிடிப்பதன் மூலம் நம்முடைய பரிசுத்த வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பது அர்த்தமல்ல. இவைகளை கடைபிடிப்பதினால் நாம் பரிசுத்த முள்ளவர்களாக தேவனுக்கு முன்பாக காணப்பட முடியாது 3. ஆண்டவரின் சிலுவை மரணத்திற்ப் பிறகு இந்தக் கட்டுப்பாடுகள் காலாவதியாகிவிட்டது. இவைகள் கிருபையின் காலத்திற்கு எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல. 1கொரி8:8 ன்படி ‌ உணவு முறைகள் நம்மை ஒருபோதும் தேவனுக்கு முன்பாக உத்தமர்களாக மாற்ற முடியாது. தீட்டு என்பதைப் பற்றியுள்ள பழைய ஏற்பாட்டு சத்தியங்கள் புதிய ஏற்பாட்டுக்கு ஒருபோதும் ஒத்து வராது. மாற்கு 7:15 இதில் நாம் கற்றுக் கொள்ளக் கூடிய காரியங்கள். யூதர்களுக்கு சொல்லப்பட்ட அனைத்து காரியங்களும் புதிய ஏற்பாட்டு சபைக்கு பொருந்தும் என்று சொல்வது அபத்தமான காரியம். இவைகள் மாத்திரமல்ல, தசமபாகம், ஆசாரியத்துவம் போன்ற உபதேசங்கள் காலாவதியான உபதேசங்கள். ஆசாரியத்துவம் மாற்றப்பட்டுவிட்டது. புதிய ஆசாரியத்துவம் உருவாக்கப்பட்டு விட்டது. *ஒவ்வொரு காலக் கட்டத்திலும் தேவன் தம்முடைய நிர்வாகத்தை, ஜனங்களை நடத்திய* *விதத்தை நாம் சரியாகப் புரிந்து கொண்டால்* *தான் எவைகளை எடுத்துக் கொள்ள வேண்டும், எவைகளை* *எடுத்துக் கொள்ளக் கூடாது என்கிற தெளிவு நமக்கு கிடைக்கும்.* " *உலகத்தை நிரப்புங்கள்" என்று சொன்ன ஆண்டவர் அதே காலக்கட்டத்தில்* *குடும்பத்திற்க்குள் திருமணம் செய்து கொள்வதையும் அனுமதித்தார்* . *அதன்படி யார் யாரையும் திருமணம் செய்து கொள்ளலாம்* இந்த அனுமதியை குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு மட்டுமே தேவன் கொடுத்தார். ஆனால் நோவாவினுடைய பெருவெள்ளத்திற்கு பிறகு இந்த அனுமதி கிடையாது. இதே போல்தான் நாம் வேதத்தை பகுத்தாய்வு செய்து *எந்த ஆசீர்வாதம் நமக்கு பொருந்தும், எவைகள் பொருந்தாது என்பதை* *உணர்ந்தால் நம்முடைய வாழ்க்கையில் ஆவிக்குரிய சிக்கல்கள் ஒருபோதும் ஏற்படாது* . *இந்தக் காரியங்களை புரிந்து கொள்ள Dispensational theologyஐ பற்றிய ஒரு அடிப்படை அறிவு நமக்கு தேவை.* யுகங்களின் அடிப்படையில் வேதத்தை பகுப்பாய்வு செய்தால் மட்டுமே வேதத்தை நாம் நிதானித்து போதிக்கிற போதகராகவோ மேய்ப்பராகவோ விசுவாசியாகவோ கூட இருக்கலாம். *Dispensationalists சொல்லுகிற அனைத்தையும் நாம்* *ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற அவசியம் இல்லை* . *ஆனால் அவற்றின் அடிப்படை காரியங்களை நாம் உணர்ந்து கொள்வது அவசியம்.* *Dispensational theologyஐ இந்த சபைகளில் அதிகமாக போதிக்கப்படுவதில்லை. சபை செழிப்பின் உபதேசத்திற்குள்* *சென்றதற்கு இதுவும் ஒரு காரணம் என்பதை* *நாம் மறக்கவோ மறுக்கவோ முடியாது.* *நாம் வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப்* *போதிக்கிறவனாயும் நம்மை தேவனுக்கு முன்பாக உத்தமனாக* *நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிருக்க* *அழைக்கப்பட்டிருக்கிறோம்* *என்பதை மட்டும் வேத* *வசனத்தை போதிக்கிறவர்கள் ஒருபோதும் மறக்க கூடாது* 2 தீமோத்தேயு 2:14. எசேக்கியல் சண்முகவேல்

இயேசு கிறிஸ்துவின் மீட்பின் பயனை யாரெல்லாம் பெறுவார்கள் ?

இயேசு கிறிஸ்துவின் மீட்பின் பயனை யாரெல்லாம் பெறுவார்கள் ? கீழ்க்கண்ட வசனங்களை கவனமாக வாசிக்கவும். “ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்தி செய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நித்திய சுதந்திரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்.” எபி 9:15 ஆகையால் அழைக்கப்பட்டவர்கள் எல்லோருக்கும் இறைவனால் வாக்குப்பண்ணப்பட்ட நித்தியமான உரிமைச் சொத்தைப் பெற்றுக்கொள்ளும்படியாக கிறிஸ்து புதிய உடன்படிக்கையின் நடுவராக இருக்கிறார். ஏனெனில், முதலாவது உடன்படிக்கையின்கீழ், மக்கள் செய்த பாவங்களிலிருந்து, அவர்களை மீட்கும்படியாகவே அவர் மரித்தார். எபிரேயர் 9:15 இது இலங்கை மொழிபெயர்ப்பு. For this reason Christ is the mediator of a new covenant, that those who are called may receive the promised eternal inheritance – now that he has died as a ransom to set them free from the sins committed under the first covenant. Heb. 9:15,NIV. இதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால் முதலாம் உடன்படிக்கையின் கீழ் பாவம் செய்தவர்களை மன்னிக்கும்படியாகவும் இயேசு கிறிஸ்து மரித்தார் என்பதுதான். WILLIAM BARCLAY என்கிற மிகப்பெரிய வேதப்பண்டிதர் இதைப் பற்றி எழுதும்பொழுது இந்த வார்த்தை எபிரேய நிருபத்தில் உள்ள மிக முக்கியமான பகுதி. அதுவும் மிகவும் கடினமான, விளங்கிக் கொள்ள முடியாத பகுதி என்று குறிப்பிட்டு இருக்கிறார். உண்மையிலேயே இதனுடைய அர்த்தம் என்ன? நாம் அனைவரும் எண்ணுகிற மாதிரி இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணம் பாடுகள் அவரை, விசுவாசிக்கிறவர்களுக்கு(புதிய உடன்படிக்கையின் கீழ்) மட்டும்தான் நித்திய சுதந்திரத்தை வழங்கும் என்று எண்ணுகிறோம். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை வைக்கிற புதிய ஏற்பாட்டு விசுவாசிகள் மட்டுமே நித்திய ஜீவனை பெற்றுக் கொள்வார்கள் என்பது நாம் சாதாரணமாக நம்புகிற ஒரு காரியம். ஆனால் இது முழு உண்மை அல்ல. இதைப்பற்றி WARREN WIERSBE என்கிற மிகப்பெரிய Bible commentator இவ்வாறு எழுதுகிறார். “There was no final and complete redemption under OT Covenant. Their transgression were covered by the blood of animals , but not cleansed until the sacrifice of Christ on the cross". ( பழைய உடன்படிக்கையின்படி யூதர்களுக்கு கிடைத்தது முழுமையான மீட்பு இல்லை. அவர்களின் மீறுதல்கள் விலங்குகளின் இரத்தத்தால் மூடப்பட்டிருப்பதே அல்லாமல் , அவர்கள் பாவங்கள் சிலுவையில் கிறிஸ்து பலியிடப்படும் வரை கழுவப்படவில்லை.) “The efficacy of Christ ‘s atonement was retrospective as well as prospective “R .W . PINK அதாவது R.W.Pink கருத்துப்படி இயேசு கிறிஸ்துவின் மீட்பின் பயன் முன்தேதியிட்டு அல்லது கிறிஸ்து அளிக்கும் பலனை எதிர்நோக்கி யூதர்களுக்கும் குறிப்பாக தெரிந்து கொள்ளப்பட்ட யூதர்களுக்கும் வழங்கப்படுகிறது கீழ்க்காணும் வேத வாக்கியங்கள் மூலம் இதை புரிந்து கொள்ள முடியும். (2 பேதுரு 1:19,20, எபி 4:21, 1கொரி  10:3,4, ரோம 3:25.) எனவே பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களும் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால்தான் மீட்கப்படுவார்கள் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். it was just as efficacious in taking away the transgressions of the believers before it was actually shed, as it is of cleansing believers today, nineteen centuries after it was shed. R.W .PINK மேலும் எபி 11:40 ல் இதை தெளிவாக அறிந்து கொள்ளலாம். "இறைவனோ நமக்காக அதிலும் மேன்மையான ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார். இதனால் அவர்களும்(அதாவது யூதர்களும்), நம்முடன் ஒன்று சேர்ந்துதான் நிறைவு பெறமுடியும்." எபிரேயர் 11:40. (இலங்கை மொழிபெயர்ப்பு) The efficacy of Christ‘s atonement was retrospective as well as prospective.. R .W . PINK –Heb 9:15. எனவே இயேசு கிறிஸ்துவினால் மீட்பின் பயன் நமக்கு மட்டுமல்ல தெரிந்து கொள்ளப்பட்ட யூதர்களுக்கும் பொருந்தும் என்பதுதான்.

இயேசு கிறிஸ்துவும் ஏழைகளும்

*இயேசு கிறிஸ்துவும் ஏழைகளும்* . ஒரு ஸ்திரீ கர்ப்பவதியாகி ஆண்பிள்ளையைப் பெற்றால், ஏழுநாள் தீட்டாயிருப்பாள். எட்டாம் நாளிலே அந்தப் பிள்ளையினுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும் பின்பு அவளுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறினபின்பு, அவள் ஒரு வயதான ஆட்டுக்குட்டியை சர்வாங்க தகனபலியாகவும், ஒரு புறாக்குஞ்சையாவது காட்டுப்புறாவையாவது பாவநிவாரண பலியாக செலுத்த வேண்டும் செலுத்த வேண்டும். ஒருவேளை ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர *அவளுக்குச் சக்தியில்லாதிருந்தால், இரண்டு காட்டுப்புறாக்களையாவது* , *இரண்டு புறாக்குஞ்சுகளையாவது* , *ஒன்றைச் சர்வாங்க தகனபலியாகவும் மற்றொன்றைப் பாவநிவாரணபலியாகவும் செலுத்த வேண்டும்* லேவியராகமம் 12:4-8 ஆண்டவர் ஏழைகளை கருத்தில் கொண்டு இந்த விதிவிலக்கை அவர்களுக்கு கட்டளையாக கொடுத்திருக்கிறார். உலகத்தை படைத்த தேவ குமாரன் மரியாளின் வயிற்றில் பிறந்த போது மரியாளும் இந்த ஏழைகளுக்கு அனுமதிக்கப்பட்ட‌ இரண்டு புறா குஞ்சுகளைத்தான் பலியாக மரியாள் செலுத்தினாள்.லூக்2:24 *அந்த அளவுக்கு இயேசு கிறிஸ்து மிகவும் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார்* நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சத்தியம். . *அவர் ஏழையாகவே பிறந்தார். ஏழையாகவே* வாழ்ந்தார். ஏழையாகவே மரித்தார். ஊழியத்தின் பணத்தைக் கூட தன் கையிலேகூட தொடாமல் தன்னால் காட்டிக் கொடுக்கப்பட்ட யூதாஸ் கையிலேதான் கொடுத்தார். அவர் ஒருபோது செல்வந்தர்களோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. *செல்வந்தர்களை தன் சீசர்களாக கூட சேர்த்துக் கொள்ளவில்லை.* *செல்வந்தர்களை புகழ்ந்ததில்லை.* *பணக்காரர்களுக்கு* *உயர்ந்த பொறுப்புக்களை வழங்கியதில்லை.* *செல்வந்தர்களோடு தன் வாழ்நாள் முழுவதும் தன்னை* *அடையாளப்படுத்திக்* கொள்ளவில்லை. மாறாக அவர் சொன்ன வார்த்தைகளை கவனியுங்கள். *ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும்* , *ஒட்டகமானது ஊசியின் காதிலே* *நுழைவது எளிதாயிருக்கும் என்றார்.* லூக்கா 18:25 செல்வங்கள் எப்பொழுதும் சாத்தானோடு அடையாளப்படுத்திக் கொள்ளப்படும் காரியம். அதனால்தான் சாத்தான் செல்வங்கள் எல்லாம் தனக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டதாக சொல்லுகிறான்.லூக் 4:6 இயேசு கிறிஸ்து அவருடைய பிள்ளைகளுக்கு வைத்துள்ள மிக‌ சிறந்த மாதிரி இதுதான். நாம் செல்வந்தராக பிறப்பதில் தவறில்லை. செல்வத்தை சம்பாதிப்பதிலும் தவறில்லை. ஆனால் நம்முடைய சிந்தையில் எளிமை காணப்படவேண்டும். *ஏழைகளைப் பற்றிய பார்வை மாற வேண்டும் .* ஏழைகள் என்றாலே கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படாதவர்கள் என்கிற சிந்தனை அகற்றப்பட வேண்டும் . வீடு இல்லாதவர்கள் ,இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் இல்லாதவர்களை பற்றிய நமது பார்வை மாற வேண்டும். *நம்முடைய அணுகு முறையில், செயல்பாட்டில், பொறுப்புக்களை* *வழங்குவதில் உறவு முறைகளில், உதவிகள்* *செய்வதில், நாம் ஏழைகளை எப்படி நடத்துகிறோம் என்பது தான் முக்கியம். *பரலோகத்தில் ஏழைகள் *அதிகமாக காணப்பட்டால் அதில் எந்த ஆச்சரியமும் இல்லை.** Ezekiel Shanmugavel

ரூத்தின் புத்தகம் வேத பாடம் 5.

*ரூத்தின் புத்தகம்* வேத பாடம் 5. *நகோமியின் இரண்டு பக்கங்கள்.* நகோமியின் வாழ்க்கையை இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம். *முதல் பகுதி.* பஞ்சத்திற்கு பயந்து அந்நிய தேசத்திற்கு சென்ற நாள் முதல் தன் மருமகள் ரூத் வயல்வெளிகளில் சிதறி கிடக்கும் கதிர்களை பொறுக்குவதற்காக போவாசின் வயலுக்கு தற்செயலாக சென்ற அந்த நிகழ்வு வரை ஒரு பகுதியாக பார்க்கலாம். *இரண்டாவது பகுதி.* போவாசு ரூத்தை வயல்வெளியில் சந்தித்த நிகழ்விலிருந்து தொடங்குகிறது. நகோமியினுடைய முதல் பகுதி கசப்பான அனுபவங்களும், ஏமாற்றங்களும், வறுமையும், இழப்புகளும், மரணங்களும் கொண்டது. இரண்டாவது பகுதி யேகோவா தேவன் தன்னுடைய குடும்பத்தில் கிரியயை ஆரம்பித்ததை உணர்ந்த பகுதி. நகோமியின் வரலாற்றை ஆராய்ந்து பார்க்கும் பொழுது பலர், அவளை அவிசுவாசமுள்ள பெண்ணாகவும் தன்னுடைய மருமகள் இருவரும் ஆண்டவரை அறிய தடையாக இருந்த பெண்ணாகவும், ஆண்டவர் மீது மிகவும் வருத்தத்துடன் இருந்த பெண்மணியாகவும் சித்தரிக்கிறார்கள் . இது தவறு . எல்லா விசுவாசிகளைப் போல அவளும் பல வித கலக்கங்களுக்கும் புலம்பல்களுக்கும் ஆட்பட்ட பெண்மணியாக காணப்பட்டாள். தாங்கள் வாழ்கின்ற இடத்தில் வறுமை காணப்பட்டபடியால் புறதேசத்திற்கு சென்றது அவளது பிழை அல்ல. தன்னுடைய கணவன் அழைத்துச் சென்றபடியினால் அவள் சென்றாள். தேவன் வெறுக்கிற ஒரு நாட்டிற்கு சென்றது அவளுடைய தவறல்ல. தன்னுடைய கணவனையும் இரண்டு மகன்களையும் இழந்ததினால் தேவன் மீது வருத்தம் அடைந்ததில் எந்த தவறும் இல்லை. பெரிய தீர்க்கதரிசியான எரேமியாவே தன்னுடைய ஊழியம் அங்கீகரிக்கப்படமால் அவமானப்பட்டதை உணர்ந்து "தான் பிறந்த நாள் சபிக்கப்படுவதாக" (எரோ 20:14) *என்று புலம்பிய காட்சியை இந்த இடத்தில் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.* *அப்படிப்பட்ட தீர்க்கதரிசியே தேவன் மேல் சலித்துக் கொள்ளும் போது* *சாதாரண பெண்மணி நகோமி கடவுள் மேல்* *வருத்தப்பட்டதில் எந்த தவறும் இல்லை என நான் கருதுகிறேன்.* தன் குடும்பத்தின் மீது தேவனுடைய தயவுள்ள கரம் இல்லை என்று நினைத்து எனது இரண்டு மருமகள்களையும் தன்னோடு கூட தன் தேசத்திற்கு திரும்பி வருவதை விரும்பாமல் இருந்திருக்கலாம்.( 1:13) She was a practical woman. கடவுளின் கரம் தனக்கு சாதகமாக இல்லாததை உணர்ந்திருக்கும் பொழுது ஏன் தேவையில்லாமல் இரண்டு பெண்களை அழைத்து அவர்களையும் கஷ்டப்படுத்த வேண்டும் என்று நியாயமான உணர்வுடன் சொல்லி இருக்கக் கூடும். *எனவே தேவன் மீது வருத்தப்பட்டதிலும் இரண்டு மருமகள்களும்* *தன்னோடு வருவதை விரும்பாமல் இருந்ததிலும் எந்த* *தவறும் இல்லை என்று* நான் நினைக்கிறேன். ஆனால் ரூத் பிடிவாதமாக, “நான் உங்களைவிட்டுப் போகவோ, திரும்பவும் என் வீட்டிற்குப் போகவோ என்னை வற்புறுத்த வேண்டாம்; ஏனெனில் நீங்கள் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீங்கள் தங்கும் இடத்தில் நானும் தங்குவேன்; உங்கள் மக்களே எனது மக்களாயிருப்பார்கள். உங்கள் இறைவனே என் இறைவனாயிருப்பார்.” (ரூத் 1:16 ) என்று சொன்ன பிறகு அதற்கு மேல் அவளை வற்புறுத்த வில்லை. இது நகோமினுடைய முதல் பகுதி. அடுத்த பகுதி ரூத் போவாசின் நிலத்திற்கு தற்செயலாக சென்றதையும் போவாஸ் அவள் சந்தித்ததையும் அறிந்த பிறகு தேவனுடைய கரம் தனது குடும்பத்தின் மீது சாதகமாய் இருப்பதை உணர்ந்து கொண்டாள். பின்பு அவளுடைய மனநிலை மாறியது. அவளுக்கு சரியான ஆலோசனைகள சொல்லி போவாஸ் ,ரூத் திருமணத்திற்கு அடித்தளம் அமைத்து கொடுத்தாள். பின்பு போவாஸ் *ரூத்துக்கு பிறந்த ஓபேத்தை தன் மடியில் எடுத்து வளர்த்து ஒரு நல்ல* *பாட்டியாகவும் தாயாகவும்* *மாறினாள். 4:16* நகோமியின் ஆரம்பம் வறுமையாலும், இழப்புகளாலும் மரணத்தாலும் சூழப்பட்டிருந்தாலும் முடிவு மகிழ்ச்சியலும் சந்தோஷத்தினாலும் முடிந்தது. நகோமியும் கடவுளின் திட்டத்தில் ஒரு பங்கு என்பதை மறந்து விடக்கூடாது. *நம்முடைய வாழ்க்கையிலும் இரண்டு பகுதிகள் உண்டு.* ஆவிக்குரிய ஆரம்ப வாழ்க்கை போராட்டங்கள், இழப்புகள் இவைகளால் சூழப்பட்டிருந்தாலும் கர்த்தர் ஏற்ற நேரத்தில் அவர்களை மாற்றி நாம் அடைந்த துன்பத்திற்கும் பாடுகளுக்கும் பதிலாக இரட்டத்தனையான சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் தருவார் என்பதே நம்முடைய நம்பிக்கை. நம்முடைய தேவன் எந்நாளும் நம்மை வருத்தத்துக்கு நேராக நடத்த மாட்டார் . பாடுகள் அனுபவிக்க, ஒரு காலத்தை தீர்மானித்திருக் கும் பொழுது அதற்கு சமமாக மகிழ்ச்சியான காலங்களையும் குறித்து வைத்திருக்கிறார். அதைக் கடவுள்நமது வாழ்க்கையில் தருவார். *அவர் நம்முடைய சக்திக்கு மேலாக ஒரு நாளும் சோதிக்க மாட்டார். நகோமியின் வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பு இறுதி நாட்களில் மகிழ்ச்சியாக மாறியது.* நம்முடைய வாழ்க்கையில் ஏற்படும் கசப்பான அனுபவங்களையும் தேவன் நிச்சயமாக மகிழ்ச்சியாக மாற்றுவார். அந்த நம்பிக்கையோடு கூட‌ இந்த ஆவிக்குரிய ஓ ட்டத்தை ஓட நமக்கு தேவன் கிருபை செய்வாராக. எசேக்கியேல் சண்முகவேல்

ரூத்தின் புத்தகம்

*ரூத்தின் புத்தகம்* *வேத பாடம் மூன்று.* *நமது வாழ்க்கையில் நடப்பதெல்லாம் தற்செயலாக நடப்பது அல்ல.* நாம் இதுவரை கடந்து வந்த பாதைகளை பார்க்கும்பொழுது அவைகள் *எல்லாம் தற்செயலாகவோ அல்லது ஒரு விபத்தாகவோ நடப்பதில்லை.* *They are not mere accidents . They are God's appointments.* நமது வாழ்க்கையில் நடைபெறும் எந்த சந்திப்பும், எந்த அறிமுகமும், எந்த நட்பும், எந்த இழப்பும், எந்த இணைப்பும், *எந்த பிரிவும் ஏதோ தற்செயலாக நடந்தது* *இல்லை* . அவைகள் *எல்லாம் தேவனுடைய திட்டத்தில் முன் குறிக்கப்பட்ட காரியங்கள்.* இந்த நிகழ்வுகளை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ளும்பொழுது, நாம் இறைவனின் திட்டத்தை நிறைவேற்றுகிறோம் அல்லது தேவனுடைய சித்தத்தில் இருக்கிறோம் என்று அர்த்தம். நமக்கு பின் நாட்களில் மிகப்பெரிய உதவியாக இருப்பவர்களை ஆரம்ப நாட்களில் அவர்களை தற்செயலாக சந்தித்து இருப்போம். ஆனால் அந்த நட்பு நமக்கு பிறகு மிகப்பெரிய ஆசீர்வாதமாக மாறிவிடும். *சிறிய அறிமுகங்கள் பின் நாட்களில் மிகப்பெரிய மாற்றங்களை* *நமது வாழ்க்கையில் ஏற்படுத்திவிடும்.* ஒரு மிகச் சிறிய *சந்திப்பு நம்மை இரட்சிப்புக்கு நேராக நடத்தி‌விடும்* . ஒருவர் கொடுக்கும் ஒரு சிறிய புத்தகம் நம்முடைய வாழ்க்கையை மாற்றிவிடும். ஒருவர் கொடுக்கும் சிறிய அறிவுரை மிகப்பெரிய ஆவிக்குரிய மாற்றத்தை நம் வாழ்க்கையில் ஏற்படுத்திவிடும். இப்படி சொல்லிக் கொண்டே . போகலாம். *இப்படித்தான்* *ரூத்தின் வாழ்க்கை அமைந்தது.* ரூத் மக்லோனை திருமணம் செய்து கொண்டது, அப்பொழுது ரூத்துக்கு தற்செயலாக நடந்திருக்கலாம். (ரூத் 4:10) ஆனால் அந்தத் திருமணம் தேவனால் முன் குறிக்கப்பட்ட திருமணம் என்பதை அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இஸ்ரவேல் மக்கள் கடவுளுடைய பார்வையில் இந்த திருமணம் தேவனுடைய கட்டளைக்கு மாறாக உள்ளது என்று ஒரு வேளை எண்ணி இருப்பார்கள். ஆனால் இந்தத் திருமணம் கடவுள் தீர்மானித்த ஒன்று. *sometimes God will overrule His own commandments for His divine purpose* அவளுடைய கணவனுடைய மரணம், தன் மாமியாருடன் இஸ்ரவேல் தேசத்திற்கு திரும்பின காரியம்,போவாசின் வயல்வெளிக்கு சென்றது, அவனுடைய கண்களில் ரூத் தென்பட்டது, போவாஸ் அவளைப் பார்த்தது, பேசியது இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இவைகள் எல்லாம் தற்செயலாக நடந்ததாக நமக்கு தோன்றலாம். ஆனால் இவைகள் அனைத்தும் தேவனுடைய பார்வையில் முன் குறிக்கப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் வம்சாவளியில் ரூத்தை இணைப்பது தேவனுடைய சித்தம். அந்தத் திட்டத்தின் அடிப்படையில் எல்லாவற்றையும் தேவன் முன் குறித்து அதை நிறைவேற்றுகிறார்‌. "இறைவனின் நோக்கத்தின்படியே அழைக்கப்பட்டு, அவரில் அன்பாயிருக்கிறவர்களுக்கு அவர் எல்லாக் காரியங்களிலும் நன்மையுண்டாகும்படியே செயலாற்றுகிறார்" என்கிற வேத வசனம் நம்மை உற்சாகப்படுத்துகிறது. (ரோமர் 8:28.) நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை என்பது பலவித புதிய திருப்பங்களால் நிறைந்திருக்கிறது. புதிய ஆரம்பங்களால் தேவனுடைய சித்தம் நிறைவேற்றப்படுகிறது. தேவன் தாமே நமக்கு இப்படிப்பட்ட புரிதலைத் தருவாராக. அதே வேளையில் சில நேரங்களில் சாத்தானும் சில தவறான உறவுகளையும், நிகழ்வுகளையும் ஏற்படுத்தி நம்மை திசை மாறச் செய்வான் அதற்கும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எசேக்கியேல் சண்முகவேல்

மகன்கள் மூலம் ஆரோன் அடைந்த நிந்தனையும் அவர்களின் இழப்பும்

*மகன்கள் மூலம் ஆரோன் அடைந்த நிந்தனையும் அவர்களின் இழப்பும்* . கடவுள் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவர ‌ஆரோனை பயன்படுத்தினார். இவன்தான் மோசேயினுடைய வாயாகத் திகழ்ந்தான். *மோசேயோடு கூட பார்வோனோடு பேச்சுவார்த்தை நடத்தியவன்* இவன்தான் . *இஸ்ரவேல் ஜனங்களுடைய முதல் பிரதான ஆசாரியன்* . ஆசரிப்பு கூடாரம் உருவாக்கப்பட்ட பிறகு இவன்தான் முதன்முதலாக இஸ்ரவேல் ஜனங்களுக்காக பலியை செலுத்தியவன். ஆசரிப்புக் கூடாரத்தில் அத்தனை பொருட்களும் பரிசுத்தமாக்கப்பட்டு முதல் முதல் தேவனுக்கு பலிகளை செலுத்தியபோது தேவனுடைய மகிமை ஆசரிப்புக் கூடாரத்தில் வெளிப்பட்டது. கர்த்தருடைய சந்நிதியிலிருந்து அக்கினி புறப்பட்டு, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியையும் கொழுப்பையும் எரித்துவிட்டது; ஜனங்களெல்லாரும் அதைக் கண்டபோது ஆரவாரித்து முகங்குப்புற விழுந்தார்கள். (லேவியராகமம் 9:24) அந்த நாள் ஆரோனுக்கு மிகவும் மகிழ்ச்சியான நாளாக முடிந்திருக்க வேண்டியது. மற்ற ஜனங்களோடு சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளக்கூடிய நாளாக இருந்திருக்க வேண்டியது. ஆனால் அந்த நாளில் தான் ‌ஆரோனின் இரண்டு குமாரர்களும் கர்த்தருடைய சன்னதியில் மடிந்து போனார்கள். தேவன் கட்டளையிடாத வேறொரு நெருப்பை கர்த்தருக்கு செலுத்தினபடியினால் கர்த்தரின் சன்னிதானத்திலி ருந்து புறப்பட்ட நெருப்பு அவர்களை எரித்து போட்டது. இந்த நிகழ்வை பார்த்து ஆரோன் பேசாமல் மௌனம் காத்தான். (லேவி10:3) லட்சக்கணக்கான தன் ஜனங்களுக்கு முன்பாக தன்னுடைய இரண்டு குமாரர்களும் கர்த்தரால் தண்டிக்கப்பட்ட நிகழ்வு அவனுக்கு எவ்வளவு பெரிய அவமானத்தை ஏற்படுத்தியி ருக்கும் என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியாது. *தன்னுடைய குமாரர்களின் தவறுக்கு, மீறுதலுக்கு அவன் எவ்வளவேனும் பொறுப்பானவன் அல்ல.* அவர்கள் பாவத்திற்கு ஆரோனை எந்த விதத்திலும் பொறுப்பாக்க முடியாது. ஆனாலும் மோசேக்கு அடுத்தபடியாக தலைவனாக இருந்த அவனுக்கு *இவ்வளவு பெரிய அவமானம்* அவனுடைய குமாரர்களால் ஏற்பட்டது. அதுமாத்திரமல்ல திரும்பப் பெற முடியாத இழப்பை சந்தித்தான். தன் குமாரர்களுடைய மறைவு எவ்வளவு வலியை ஏற்படுத்தி இருக்கும். *இன்றைக்கும் தேவனால் பயன்படுத்தப்படுகின்ற, தேவனுக்காக உண்மையாக வாழ்கின்ற ஊழியக்காரர்கள்,விசுவாசிகள் மத்தியில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஏற்படுகின்றன.* அவர்கள் அடிக்கடி தேவனை நோக்கி கேட்கின்ற கேள்வி "ஏன் ஆண்டவரே" என்பதுதான். "நான் உமக்கு உண்மையாக வாழ்ந்தேனே, ஊழியம் செய்கிறேனே என் குடும்பத்தில் ஏன் பிள்ளைகளால் இவ்வளவு பெரிய அவமானம். ஏன் *இந்த இழப்பு "என்று அவர்கள் கேட்காத நாளே இருக்க முடியாது.* ஆனால் அதற்கான பதில் இந்த உலகத்தில் அவர்களுக்கு ஒருபோதும் கிடைக்காது. *அந்த பதிலை நித்தியத்தில் தான் அவர்கள் பெற முடியும்.* *கிறிஸ்தவ சமுதாயத்தில் தங்கள் பிள்ளைகளால் தங்களுக்கு ஏற்படுகின்ற நிந்தனைகள் யாரால் புரிந்து கொள்ள முடியும்?* *அன்றைக்கு ஆரோன் சபை முன்பாக மௌனம் காத்தது போல் இந்த வகையான பாடுகளை அனுபவிக்கும் தேவனுடைய பிள்ளைகள் மௌனம் காப்பதை தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.*

ஓர்பாள்,ரூத் ஒரு ஒப்பீடு.

*ஓர்பாள்,ரூத் ஒரு ஒப்பீடு.* *இருவருமே மோவாப் நாட்டை சேர்ந்த பெண்மணிகள்.* *இருவருமே யூத தேசத்து ஆண்களை திருமணம் செய்து கொண்டவர்கள்* . *இருவருமே கணவனை இழந்த ‌கைம்பெண்கள்.* *இருவருமே நகோமியோடு யூத தேசத்திற்கு திரும்பிப்போக முதல் படியை‌‌ எடுத்து வைத்தவர்கள்.* *ஆனால் ஓர்பாள்‌, நகோமி கொடுத்த அழுத்தத்தை மேற்கொள்ள‌முடியாமல்* *பின்வாங்கி, தன் தேவர்களிடமே திரும்பி சென்று விட்டாள்* . (ரூத் 1:14,15) ஆனால் ரூத் பிடிவாதமாக யூதா தேசத்திற்கு போக முடிவு செய்தாள். நகோமி கொடுத்த அழுத்தத்தை‌ மேற்கொண்டு வரக்கூடிய விளைவுகளை பொருட்படுத்தாமல் இஸ்ரவேலின் தேவனை நம்பி *தன்னுடைய தீர்மானத்தில் உறுதியாக இருந்தாள்.* *நகோமி மூன்று தடவை வற்புறுத்தியும் அவளுடைய வற்புறுத்தலுக்கு இணங்கவில்லை.* *வேதத்தில் எந்த புற இனத்து பெண்மணியும் சொல்லாத ஒரு ஆழமான வார்த்தைகளை சொன்னாள்.* , “நான் உங்களைவிட்டுப் போகவோ, திரும்பவும் என் வீட்டிற்குப் போகவோ என்னை வற்புறுத்த வேண்டாம்; ஏனெனில் நீங்கள் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீங்கள் தங்கும் இடத்தில் நானும் தங்குவேன்; உங்கள் மக்களே எனது மக்களாயிருப்பார்கள். உங்கள் இறைவனே என் இறைவனாயிருப்பார்.”(ரூத் 1:16.) நகோமி கொடுத்த அழுத்தத்திற்கு *இல்லை என்கிற பதிலை அளித்தாள்.* She said no to the pressure of Naomi. ரூத் ,யூத தேசத்திற்கு இந்த நகோமியுடன் செல்வதற்கு எந்த சாதகமான சூழ்நிலையும் காணப்படவில்லை. 1. மோவாபிய பெண்ணான ரூத், யூதனை திருமணம் செய்து கொண்டதால் யூத தேசத்தில் ஏற்படக்கூடிய சாதகமற்ற சூழ்நிலையைப்பற்றி கவலைப்படவில்லை. 2. யூத தேசத்திற்கு செல்வதன் மூலம் தனக்கு மறுபடியும் திருமண வாழ்க்கை கிடைத்து அதன் மூலம் சந்ததியை பெறக்கூடிய வாய்ப்பு கிடையாது. 3. ரூத் விக்கிரகத்தை வழிபட்ட பெண்மணி. 4. தன்னுடைய கணவனும் மாமனாரும் இல்லாத சூழ்நிலையில் வாழ்க்கையை நடத்துவதற்கு ஏதும் இல்லாத சூழ்நிலை காணப்பட்டது. 5. மாமியார் நகோமியும், தான் யூத தேசத்திற்கு வருவதில் ஆதரவாக இல்லை. *இத்தகைய சாதகமற்ற பல சூழ்நிலைகள் இருந்தாலும் அவள் நம்பினது இஸ்ரவேலின் தேவனாகிய யெ கோவாவை மட்டுமே* . நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள்: இந்த சூழ்நிலையை புறயினத்தை சேர்ந்த ஒருவன் முதன்முதலாக ஆண்டவரை தேடுகின்ற சூழ்நிலைக்கு ஒப்பிடுகிறேன். புற இனத்தை சேர்ந்த ஒருவன் முதன்முதலாக ஆண்டவரை பின்பற்ற முற்படும்போது அவன் சந்திக்க வேண்டிய சூழ்நிலைகள். 1. குடும்பத்தில் காணப்படுகின்ற எதிர்ப்பு. 2. சமுதாய புறக்கணிப்பு 3. தான் நம்பிப் போகும் கிறிஸ்தவ மார்க்கத்தில் அவனுக்கு கிடைக்கும் ஆதரவின்மை. 4. *தனக்கு வழி காட்ட வேண்டிய தலைவர்களே இடறலாக மாறக்கூடிய* *சூழ்நிலைகள்* . ‌ இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். *ரூத்தைப்போல சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும்* *இயேசுவை மெய்யான தேவன் என்று அறிந்து கொண்டவன் ஒரு நாளும் இந்த இடர்பாடுகளை பொருட்படுத்த மாட்டான்.* தனிமை, வறுமை, புறக்கணிப்பு ஆதரவற்ற நிலைமை எதுவாக இருந்தாலும் கலப்பையின் மீது கை வைத்துவிட்டு பின்னிட்டு பார்க்க மாட்டான். யெகோவாவை மற்றவர்கள் சொன்னதன் மூலமாகத்தான் உறுதியாக பற்றிக் கொண்டவள் ரூத். *தேவன் அவளை வெகுவாக கனம் பண்ணி அவளுடைய* *சந்ததியில் நம்முடைய குமாரனை பிறக்கச் செய்தார்.* சந்ததி உருவாகு வதற்கே வாய்ப்பு இல்லாத அவளுக்கு மிகப்பெரிய கனத்தை அளித்தார். அதுபோல் *ஆண்டவரை பின்பற்ற முற்படுகின்ற யாராக இருந்தாலும் புறயினத்தவராக இருந்தாலும் மற்ற எவராக இருந்தாலும் அவர்கள் உறுதியாக தேவனை பிடித்துக் கொள்ளும் பொழுது நிச்சயமாக கடவுள் அவர்களை கைவிட மாட்டார்.* பத்து தலைமுறையானாலும் யெகோவாவின் சபைக்குள் வரக்கூடாது என்று கட்டளையிட்ட யெகோவா தேவனே தன் தீர்மானத்தை மாற்றி ரூத் என்கிற மோவாபிய பெண்ணின் சந்ததியில் தனது குமாரனை பிறக்கச் செய்தார்‌. ரூத்தின் உறுதியான விசுவாசத்திற்கு இதைவிட வேறு சிறப்பான வெகுமதி என்ன இருக்க முடியும். *அதுபோல தேவனுக்காக வைராக்கியமாக இருக்கிற எவரையும்* *தேவன் இந்த உலகிலும் வருகின்ற உலகிலும்* *வெறுமையாக* *நடத்துவதில்லை..* Law excludes us from God's family, but grace includes us if we put our faith in Christ..W.W.Wiersbe Ezekiel Shanmugavel

யாரிடம் விசுவாசிகள் உதவி கோரக்கூடாது?

*யாரிடம் விசுவாசிகள் உதவி கோரக்கூடாது?* இந்த உலக வாழ்க்கையில் சில வேளைகளில் சில மனிதர்களிடம் நாம் உதவி கேட்கக் கூடிய சூழ்நிலைகள் வரும். உதவிகள் கேட்பதை தவறு என்று சொல்ல முடியாது. அவர்கள் நமக்கு உதவி செய்யும்போது அதை மனித தயவாக எடுத்துக் கொள்ளலாம். *ஆனாலும் யாரிடம் உதவி கேட்க வேண்டும் என்கிற ஒரு புரிதல் நமக்கு* *மிகவும்* *அவசியம்.யாரிடம்* *விசுவாசிகள் உதவிகள்* *கேட்கக் கூடாது என்கிற உறுதியும் நமக்கு தேவை.* ஆபிரகாமும் , எலிமெலேக்கு அவன் மனைவி நகோமியும் இந்த தவறை செய்தார்கள். தேவன் வாக்குறுதி கொடுத்த கானான் தேசத்தில் பஞ்சம் வந்தபோது அந்த இடத்தில் கடவுளை சார்ந்து நின்று அந்தப் போராட்டத்தில் வெற்றி கொள்ள முடியாமல் எகிப்து தேசத்திற்கு ஆபிரகாம் பசியை போக்க சென்றார். அங்கே அவர் அடைந்த அவமானங்கள் அநேகம். அதேபோல் நகோமியும் அவள் கணவனும் அப்பத்தின் வீடாகிய பெத்தலகேமில் வறுமை ஏற்பட்ட பொழுது கர்த்தரை சார்ந்து நிற்காமல் மோவாபியதேசத்திற்கு சென்றார்கள் .. வேதத்தில் யார் இந்த மோவாபியர் என்று பார்க்க வேண்டும் “ *மோவாப் என் கழுவும் பாத்திரம்* " சங்கீதம் 60:8 மோவாபியரின் ஆணவம் பெரிதே! அகந்தையும், பெருமையும், இறுமாப்பும் உடையவர்கள்; அவர்களுடைய தற்புகழ்ச்சிகள் எல்லாம் வெறுமையானவையே. ஏசாயா 16:6 அம்மோனியராவது மோவாபியராவது பத்தாம் தலைமுறைவரைக்கும் உள்ள அவர்களுடைய சந்ததிகளாவது யெகோவாவின், சபைக்குள் வரக்கூடாது. உபாகமம் 23:3 *இப்படி கடவுள் வெறுக்கிற கடவுளால் தண்டிக்கப்பட்ட மக்களிடம் நகோமியும் அவளது குடும்பமும் தஞ்சமடைந்து..* *அதனால் அந்த குடும்பம் அடைந்த இழப்புகள்தான் அதிகம்.* தன் கணவனையும் இரண்டு பிள்ளைகளையும் அந்த தேசத்தில் பறி கொடுத்தாள். எந்த இனத்தோடு பெண் எடுக்கக் கூடாது என்று கடவுள் கட்டளையிட்டாரோ அந்த இன பெண்களை தங்களுடைய இரு மகன்களுக்கும் திருமணம் செய்து கொடுத்தார்கள். உபா7:1-11 விளைவு அந்தப் பெண்களும் விதவையானார்கள். எண்ணாகமம் 25 வது அதிகாரத்தில் மோவாபிய பெண்களோடு இஸ்ரவேல் மக்களின் ஆண்கள் இணைந்ததின் விளைவாக 24000 நபர்கள் அழிந்து போனதை இங்கே நாம் நினைவு கூற வேண்டும். பஞ்சத்திலிருந்துஉயிர் தப்பி பிழைக்க மோவாபியர்களின் தேசத்திற்கு சென்றார்களோ அங்கே நகோமி தன் கணவனையும் இரண்டு பிள்ளைகளையும் பறி கொடுத்தாள் நகோமி. எவ்வளவு பெரிய இழப்பு *சோதனையான காலகட்டத்தில் கர்த்தர் வாக்குறுதி கொடுத்து கொண்டு வந்த தேசத்தில் நிலத்து* *நிற்காமல் கடவுளால் தண்டிக்கப்பட்ட* *தேசத்தில் தஞ்சமடைந்தார்கள்* . விசுவாசிகளாகிய நாம் கற்றுக் கொள்ளும் பாடம். இந்த ஆவிக்குரிய வாழ்க்கையில் தேவனை அறிந்த பிள்ளைகளுக்கு கடவுளைப் பற்றியஒரு வைராக்கியம் வேண்டும். *நாம் ஒருபோதும் நமது மார்க்கத்தை மதிக்காத, எதிர்க்கிற, அழிக்க* *நினைக்கிற எந்த ஒரு தனி மனிதரிடமோ, இயக்கத்திடமுமோ* உதவி *கூறக்கூடாது. அதில் கடவுள் பிரியப்படுவதில்லை.* பசியோ, பட்டினியோ தனிமையோ, பிரிவுகளோ, எந்த சூழ்நிலைகள் இருந்தாலும் நாம் ஒருபோதும் நமது ஆண்டவரை புறக்கணிக்கிற வெறுக்கிற நபர்களிடமோ அல்லது தவறான உபதேசத்தை போதிக்கிற போலி விசுவாசிகளிடமோ ஊழியக்காரர்களிடமும் ஒருபோதும் தஞ்சமடைய கூடாது. அதைவிட ஆண்டவருக்கு அவமானத்தை தேடி கொடுக்கக்கூடிய காரியம் ஒன்றும் இல்லை. *சோதனைகள் நடுவில் தேவன் வைத்த இடத்தில் தரித்து நிற்பதே வெற்றியின் இரகசியம்.* *நமக்கு கர்த்தரை பற்றி உள்ள ஒரு வைராக்கியம் கட்டாயம்* தேவை. இப்படிப்பட்ட கிருபையை நமக்கு தேவன் தருவாராக எசேக்கியல் சண்முகவேல் . When trouble comes to our lives, we can do one of three things: endure it, escape it, or enlist it. If we only endure our trials, then trials become our master, and we have a tendency to become hard and bitter. If *we try to escape our trials, then we will prob ably miss the purposes God wants to achieve in our* lives. But if we learn to enlist our trials, they will become our servants instead of our masters and work for us; and God will work all things together for our good and His glory (Rom. 8:28. WIERSBE

யாக்கோபின் சஞ்சல நாட்கள்.

"நான். பரதேசியாய் சஞ்சரித்த நாட்கள் நூற்றுமுப்பது வருஷம், என் ஆயுசுநாட்கள் கொஞ்சமும் சஞ்சலமுள்ளதுமாயிருக்கிறது," ஆதியாகமம் 47:9 இந்த வார்த்தைகள். உலக வரலாற்றில் தவிர்க்க முடியாத இஸ்ரவேல் கோத்திரத்தின் பிதாவாகிய யாக்கோபின் வார்த்தைகள். உலகத்தின் இரட்சகர் இயேசு கிறிஸ்து யூத குலத்தில் இருந்து தான் தோன்றினார். இத்தனை பெருமைக்குரிய யாக்கோபு தன் தாய் தகப்பனை விட்டு ஆராமை நோக்கி புறப்பட்டபோது அவனுக்கு வயது 70. இரண்டு மனைவிகளுக்காக லாபன் கையில்வாழ்ந்த காலம் 20வருடங்கள். கானான் தேசத்தில் வாழ்ந்த காலம்37 வருடங்கள். தன் வாழ்வில் கடைசி 17 வருடங்களை எகிப்து தேசத்தில் கழித்தான். இதுதான் யாக்கோபின் வாழ்க்கை பயணம். பலருடைய ஆவிக்குரிய பயணம் என்பது ஒரே இடத்தில் தொடங்கி ஒரே இடத்தில் முடிவதாக இருக்காது. அது சஞ்சலங்கள் நிறைந்த வாழ்க்கையாக இருந்தாலும், பல்வேறு நிலைகளைக் கொண்டதாகும். பாதைகள் எப்படியாக இருந்தாலும் பயணங்கள் துயரங்களால் நிறைந்திருந்தாலும் கர்த்தருடைய சித்தத்தை நாம் எப்படி நிறைவேற்றுகிறோம் என்பதில் தான் நம் நம்முடைய வாழ்க்கையில் வெற்றி அடங்கி இருக்கிறது. எசேக்கியல் சண்முகவேல்

ஏன் இந்த நியாயாதிபதிகள் புத்தகம்?

*ஏன் இந்த நியாயாதிபதிகள் புத்தகம்?* . கடவுள் ஒவ்வொரு புத்தகத்தையும் வேத புத்தகமாக இணைத்து வைத்திருப்பதற்கு ஒரு காரணம் உண்டு. அந்தக் காரணத்தை நாம் ஆழ்ந்து கவனித்தால்தான் அந்த புத்தகத்தை படிப்பதற்கான பயனை அடைய முடியும். இல்லை என்றால் ஒரு கதையைப் போல, ஒரு சரித்திர நிகழ்வை போல படித்து அதை நாம் கடந்து போய் விடுவோம். *எந்தவித நோக்கமும் இல்லாமல் ஒரு புத்தகத்தை தேவன் இணைத்திருக்க* *மாட்டார்* . நியாயாதிபதகள்‌ புத்தகத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் ஆண்டவரை விட்டு வழி விலகிப் போவதும், அதன் காரணமாக அவர்களை கடவுள் புறயின அரசர்களிடம் ஒப்புக் கொடுப்பதும், பின்பு இஸ்ரவேல் ஜனங்கள் மன்னிப்பு கோர்வதும் அதன் நிமித்தம் அவர்கள் விடுதலை பெறுவதுமான இந்த நிகழ்ச்சிகள் ஒரு சுழற்சி போல வரும். நியாயாதிபதிகள் காலம் என்பது *ஏறக்குறைய 335 ஆண்டுகள்* . அந்நாட்களில் "இஸ்ரயேலில் அரசன் இருக்கவில்லை. ஒவ்வொருவனும் தன் பார்வைக்குச் சரியானதையே செய்து வந்தான்" இந்த காலகட்டத்தில் தான் கடவுள் 12 நியாயாதிபதிகளை எழுப்பினார். இந்த புத்தகம் மூலமாக தேவன் நமக்கு உணர்த்தும் பாடங்கள் சில 1. *எந்த வகையான இருண்ட கால கட்டத்திலும் தேவனால்* *முன் குறிக்கப்பட்டவர்கள் இருக்கத்தான்* *செய்வார்கள்* . அப்படி முன்குறிக்கப்பட்டவர்கள் தான் இந்த 12 நியாதிபதிகள். இன்றைக்கும் சபைகள், தலைவர்கள் இருக்கின்ற அலங்கோலங்களை பார்க்கும் பொழுது நாம் அதைரியப்படவேண்டியது இல்லை. இந்த காலத்திலும் தேவனால் முன் குறிக்க பட்ட பிள்ளைகள் இருக்கத்தான் செய்கிறார்கள். தேவன் அவர்களைக் கொண்டு கிரியை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார். 2. எப்படிப்பட்ட சாதகமற்ற சூழ்நிலை காணப்பட்டாலும் கடவுள் எல்லாவற்றையும் தம் கட்டுப்பாட்டுக்குள்தான் வைத்திருக்கிறார். *God is always in control.* 3. *கடவுள் எப்பொழுதும் தம் ஜனங்களை கை விடுவதில்லை. எத்தனை தடவை நாம் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டாலும் அத்தனை தடவையும் மன்னிப்பதற்கு அவர் இரக்கம் உள்ள* *தகப்பனாக இருக்கிறார்.* 4. *கடவுளுடைய பிள்ளைகள் கர்த்தரை விட்டு வழி விலகிபோகும்போது* *அந்த தேசம் எதிரிகளின் கையில் ஒப்புக்கொடுக்கப்படும்* . எனவே தேசம் எதிரிகளின் கையில் சிக்கித் தவிக்கும் பொழுது எதிரிகளை குற்றம் சுமத்துவதில் எந்த நியாயமும் இல்லை. 5. *கடவுள் பயன்படுத்திய மனிதர்கள் திறமைசாலிகளாகவோ* *தலைமைப் பண்பு பெற்றவர்களாகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை.எகூத் இடக்கைப் பழக்கம் உள்ளவன். கிதியோன், சம்கார் போன்றவர்கள்* *விவசாயிகள். இவர்களை* தேவன் பயன்படுத்தியிருக்கிறார். 6 *கடவுள் எல்லா காலத்திலும் கிரியை செய்து கொண்டு தான் இருக்கிறார்* . நம்முடைய பார்வைக்கு இருண்ட காலமாக இருக்கலாம். காலங்கள் அவரை தடை செய்ய முடியாது. 7 *இறுதியாக அவருடைய கிரிகைகள் தொடர்ந்து கொண்டே* *இருக்கும்* . அவருடைய கிரியைகள் இன்னும் முடிந்துவிடவில்லை. இந்த புத்தகத்தை நாம் ஒரு கதையாக வரலாற்று நிகழ்வாக படிக்காமல் அந்த வரலாறுகள் மூலம் தேவன் நமக்கு கற்பிக்கும் பாடத்தை புரிந்து கொண்டால் நம்முடைய மனக்கண்கள் பிரகாசம் அடையும். Ezekiel Shanmugavel

Four stages of apostasy

*Four stages of apostasy*. 1.A *looking back* Lk 9.62 . பின்னோக்கி அல்லது பின்னே திரும்புதல். ஆண்டவரை  விட்டு  விலகி  உலகத்தை நோக்கி  பின்னிட்டு பார்த்தல். கலப்பையில் கையை வைத்துவிட்டு, பின்னே திரும்பிப் பார்க்கிற எவரும், இறைவனுடைய அரசின் பணிக்குத் தகுதியற்றவர்கள் லூக்கா 9:62 2. A *drawing back* Heb 10:38 பின்வாங்கிபோதல். விசுவாசத்தினாலே பிழைக்காமல் விசுவாசத்தை விட்டு பின்வாங்கி போதல். எபிரெயர் 10:38 3. A *turning back Jn 6* :66 இயேசு கிறிஸ்துவினுடைய போதனைகளை கடினமானதாக கருதி பின்பற்ற மனமில்லாமல் இயேசுவை விட்டு விலகிப் போதல். யோவா6:66 4. A *falling back Isa*  28:13 இறுதியாக பின்புறமாய் விழுந்து சாத்தானால் சிறைப்பட்டு போவார்கள் மேலே குறிப்பிட்ட நான்கு நிலைகளில் காணப்பட்டவர்கள் ஆரம்பத்தில் நன்றாகத்தான் தம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையை தொடங்கினார்கள். ஆனால் அவர்கள் முடிவு ஆரம்பத்தை போல சிறப்பாக இல்லை *நல்ல ஆரம்பம் நல்ல முடிவுக்கு உத்திரவாதம் அல்ல.* சவுல்,  அகித்தோப்பேல், அப்சலோம், யூதாஸ், போன்றவர்கள் நன்றாகத்தான்  ஆவிக்குரிய ஓட்டத்தை   ஆரம்பித்தார்கள். அதே வேளையில் ஆண்டவரை மறுதலித்த பேதுரு, சபையை பாழாக்கின  சவுல், சந்தேகித்த தோமா இவர்களுடைய ஆரம்பம் தடுமாற்றத்துடன் ஆரம்பித்தாலும் முடிவு சிறப்பாக இருந்தது ஆரம்பத்தை பார்க்கிலும் அவர்களுடைய  முடிவு மகிமையாக முடிவடைந்தது *நல்ல ஆரம்பத்தை பார்த்து ஏமாறவும் வேண்டாம்.* *நல்ல முடிவை பார்த்து  ஆச்சரியமடையவும்*   *வேண்டாம்* . ஆரம்பத்தில் நன்றாக  ஓடிய பலர் இன்று உலகத்திலும் பாவத்திலும் உலக கவர்ச்சியிலும் விழுந்து, அழைப்பை இழந்து நிற்பதை பார்க்கும் போது ஆரம்பத்தை போல் முடிவும் எவ்வளவு முக்கியம் என்பதை உணரலாம்.. எசேக்கியேல் சண்முகவேல்.

இரண்டு வகையான பயங்கள்

*இரண்டு வகையான* *பயங்கள்* . *Courage isn’t necessarily the absence of fear; it’s the overcoming of fear by transforming it into power* *விசுவாசிகள் பயப்படலாமா?.* இதைப் பற்றி விசுவாசிகள் மத்தியில் ஒரு தவறான கண்ணோட்டம் காணப்படுகிறது என்று நான் கருதுகிறேன். *பயப்படுகிறவனை கோழை என்றும், கர்த்தரை நம்பாதவன்* என்றும் கர்த்தரோடு இல்லாதவன் என்றும் பட்டம் கட்டி விடுவார்கள்.* விசுவாசி என்றாலே பயப்படாமல் இருப்பான், தைரியமாக இருப்பான், அஞ்சாமல் இருப்பான் என்று விசுவாசிகள் மத்தியில் பேசப்படுகிறது. நடைமுறையில் பார்க்கும் பொழுது பயம் எல்லோருக்கும் வரும். ஏன் இயேசு கிறிஸ்துவுக்கு பின்பு மிகப்பெரிய அப்போஸ்தலனாக கருதப்படுகிற பவுலும் பயந்ததாக பார்க்கலாம் . அவர் கூறிய வார்த்தைகளை பாருங்கள். "நாங்கள் மக்கெதோனியாவை வந்துசேர்ந்த போதும், எங்கள் உடலுக்கு எவ்வித ஆறுதலும் இல்லாதிருந்தது. எல்லாப் பக்கங்களிலும் கஷ்டங்களே எங்களைச் சூழ்ந்திருந்தன; வெளியே முரண்பாடுகளும், உள்ளே *பயங்களும்* ஆட்கொண்டிருந்தன". 2 கொரிந்தியர் 7:5. கிதியோனும் அதுபோல்தான். அவன் கர்த்தருடைய அழைப்பை நடுக்கத்துடன் ஏற்றுக் கொண்டான். காரணம் அவன் மேற்கொள்ள போகும் மீதியானியர்கள் பெருந்திரளானவர்கள். போர்க்களப்பயிற்சி பெற்றவர்கள். அவர்களுடைய படையில் திரளான ஒட்டகங்கள் காணப்பட்டது. கிதியோனோ போர் வீரன் அல்ல .ஒரு விவசாயி. எனவே இந்த விவசாயி அப்படிப்பட்ட மீதியானியர்களோடு போராடுவதற்கு கடவுள் தன்னை அழைத்த போது அதை ஏற்றுக்கொள்ள தயங்கியதில் எந்த தவறும் இல்லை. எனவேதான் ஆண்டவர் அவனுக்கு பல அடையாளங்களை காண்பித்து அவனை பலப்படுத்தினார் எனவே பயம் எல்லோருக்கும் வரும். ஆனால் அந்த பயத்தை நாம் எப்படி சந்திக்கிறோம் என்பதுதான் முக்கியம். இரண்டு வகையான பயங்கள் உண்டு. ஒன்று நம்மையும் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையையும் முடக்கிவிடும். இன்னொன்று நாம் அதை மேற்கொண்டுஅந்த பயத்தை வெற்றி கொள்ளை செய்யும். There is a fear that paralyzes and a fear that energizes. பயம் கண்ணீர் எல்லாம் மனித இயல்புகள். எல்லோருடைய வாழ்க்கையிலும் இவைகள் வரத்தான் செய்யும். கண்ணீர் சிந்தாத மனிதர்களையும் பயப்படாத மனிதர்களையும் இந்த உலகில் காண்பது மிக அரிது. நமக்கு பயம் வரும்போது அது எப்படி மேற்கொள்கிறோம்? எப்படி சமாளிக்கிறோம் என்பதில்தான் நாம் விசுவாசியாக இருக்கிறோமா அவிசுவாசியாக இருக்கிறோமா என்பது தெரியும். *பயங்கள் வரும்போது அதை கர்த்தருடைய சமூகத்தில் எடுத்து சென்று கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுத்து வசனத்தினால் நம்மை தேற்றிக்கொண்டு ஆவிக்குரிய வாழ்க்கையில் முன்னேறி செல்கிறவனே உண்மையான விசுவாசி.* பயங்கள் நம்மை நெருக்கும் பொழுது அதற்கு அடிமையாகி வசனத்தை மறந்து ஆண்டவரே மறந்து ஆண்டவரை விட்டு வழி விலகி போகிறவன்தான் பயமுள்ள விசுவாசி. எனவே பயங்கள் அச்சங்கள் வரும்போது அதைக் கண்டு நாம் கவலைப்படாமல் தேவன் ஆளுகை செய்கிறவர், எல்லாம் அவருடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது ,அவருடைய அனுமதி இல்லாமல் எந்த காரியமும் நம் வாழ்க்கையில் நடைபெறாது என்று நம்பிக்கையோடு பிரச்சனைகளை சமாளிக்க தேவன் நமக்கு கிருபை தருவாராக Safety is not found in the absence of danger, but in the presence of God.எசேக்கியேல் சண்முகவேல்

விசுவாச வீரர்கள் பட்டியலில் சிம்சோனின் பெயர் எப்படி, ஏன்இடம்பெற்றது.

*விசுவாச வீரர்கள் பட்டியலில் சிம்சோனின் பெயர் எப்படி, ஏன்இடம்பெற்றது.* நியாயாதிபதிகள் புத்தகத்தில் ஏறக்குறைய 12 பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் இஸ்ரேல் ஜனங்களை நியாயம் விசாரித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அவற்றில் கிதியோன், பாராக் சிம்சோன், யெப்தா ஆகிய பெயர்கள் மட்டும்தான் எபிரேயருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் உள்ள விசுவாச வீரர்கள் பட்டியில் இடம்பெற்றிருக்கிறது‌ ஏன் தெபோராள் பெயர்கூட இடம் பெறவில்லை. *இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட நியாதிபதிகளில் மிகவும் மாமிச பலவீனத்தை வெளிப்படுத்தியவன் சிம்சோன் .* கடவுளுக்கு பிரியம் இல்லாத வகையில் புறயின பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவளோடு வாழ்க்கை வாழ்ந்தவன். பெற்றோர்களுக்கு கீழ்படியாதவன். தன்னுடைய கண்கள் இச்சித்ததை அடைய முற்பட்டவன். இவனுடைய பெயர் விசுவாச வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பது பலருக்கு ஒரு சந்தேகத்தை எழுப்புகின்றது. ஏன் அவனுடைய பெயர் இடம் பெற்றது என்று பார்க்கும் பொழுது சில உண்மைகள் நம்முடைய கண்களுக்கு புலப்படும். மூன்று காரணங்கள் அவனுடைய பெயர் விசுவாச வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றதற்கு காரணமாக இருக்கலாம். 1.நம்முடைய பார்வை வேறு தேவனுடைய பார்வை வேறு. நாம் சிம்சோன் உடைய வெளித்தோற்றத்தை, செயல்பாடுகளை பார்த்து முடிவு செய்து விடுகிறோம். கடவுள் அவனது உள்ளத்தில் சிந்தித்த காரியங்களை நோக்கிப் பார்க்கிறார். அவற்றை நாம் நோக்கிப் பார்க்க முடியாது. "*So if we see people instead of God in that portion of His Word, we miss the point, even though the example of faithful believers can also be* a *blessing to us.* " *மனிதனுடைய பாவங்களை அளவீடாக வைத்து நாம் எந்த* *ஒரு காரியத்தையும் முடிவு செய்ய வேண்டும் என்றால், தாவீதுடைய குற்றங்களை கடவுள் மன்னித்தாலும்* *அவனுக்கு தேவனுடைய இதயத்தில் கிடைத்த இடத்தை* *மனித சித்தாந்தத்தின்படி ,மனித அளவீடுகளின்படி* *ஏற்றுக்கொள்ள முடியாது.* ஆனாலும் அவன் கடவுளின் இருதயத்திற்கு ஏற்றவனாக மாறிவிட்டான். அது போல்தான் சிம்சோன். 2. *சிம்சோன் ஜனங்களை 20 ஆண்டுகள் நியாயம் விசாரித்ததாக பார்க்கலாம்* அந்த இருபது ஆண்டுகளில் அவனைப் பற்றிய தவறான தகவல்கள் சொல்லப்படவில்லை. 3.. எப்படி திருமுழுக்குநர் யோவான், இறைமகன் ஆகிய இயேசு இவர்களது பிறப்பு தேவ தூதர்கள் மூலமாக முன்னறிவிப்பின் படி நடந்ததோ *சிம்சோனின் பிறப்பும் ‌ கர்த்தருடைய தூதனானவரின்* *முன்னறிவிப்பின் படி நடந்தது. இதுபோன்ற* ஒரு *பிறப்பு இந்த மூவரைத் தவிர யாருக்கும் நேரிடவில்லை. அந்த அளவுக்கு தேவனுடைய திட்டத்தில் பங்கு பெற்றவன் சிம்சோன்.* *மேலும் கர்த்தருடைய ஆவி சிம்சோன் மேல் பலமாய் இறங்கியதாக இரண்டு இடங்களில் பார்க்கிறோம்.. யம். 14:19,15:7,8,15* . இதன் மூலம் முதலில் 100 பெலிஸ்தியர்களை அழித்ததாக பார்க்கலாம். பின்பு அநேக எதிரிகளை அழித்ததாக பார்க்கலாம் இறுதியில் அவன் ஜெபத்தை கடவுள் கேட்டுஆயிரத்துக்கு மேலான பெலிஸ்தியர்களை கொன்று தானும் மடிந்ததாக பார்க்கலாம். *மரிக்கும் இறுதி காலத்தில் அவனுடைய ஜெபத்தை* *கேட்டிருக்கும் பொழுது அவனுடைய பெயர்* *விசுவாச வீரர்கள் பட்டியலில் வருவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.* தேவன் அழைத்த நோக்கத்தை முழுமையாக நிறைவேற்ற முடியாவிட்டாலும் அவன் மூலமாக கர்த்தர் தம்முடைய கிரியையை நிறைவேற்றினார். நம்முடைய தேவன் நம்முடைய மூச்சு முடிகின்ற இறுதிக்காலம் வரைக்கும் நம்முடைய ஜெபத்தை கேட்டு அதற்கு பதில் அளிக்கிற கிருபை உள்ள தேவன். நாம் கற்றுக் கொள்ளக்கூடிய காரியம் *வெளியரங்கமான சூழ்நிலைகளை தோற்றங்களை மனதில் வைத்துக்* *கொண்டு ஒரு விசுவாசியின் மீது மதிப்பெண்கள் போடுவதை தவிர்ப்பது நலம்.* காலங்கள் சூழ்நிலைகளை வெளிப்படுத்துவதற்கு முன்பாக மற்றவர்களை நியாயத்தீர்ப்பு செய்வது நமக்கு நல்லதல்ல‌. Ezekiel Shanmugavel.

மோசேயின் முகத்திரை நமக்கு உணர்த்தும் பாடம் என்ன?

*மோசேயின் முகத்திரை நமக்கு உணர்த்தும் பாடம் என்ன?* படிக்க யாத் 34:29-35,2 கொரி 3:13-18 மோசே 80 நாட்கள் தேவனுடைய சமூகத்தில் இருந்து கடவுளோடு பேசியதால் அவன் முகத்தோற்றம் ஒளிமயமாய் இருந்தது. ஆனால் மோசே அதை அறியவில்லை. ஆரோனும் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் மோசேயைப் பார்த்தபோது, அவன் முகத்தோற்றம் ஒளிமயமாய் இருந்ததைக் கண்டு அவனை அணுகிச் செல்ல அஞ்சினார்கள். ஆனால் மோசே அவர்களைக் கூப்பிட்டபடியினால்ஆரோனும் மக்கள்கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவரும் அவரை நோக்கி வந்தனர். மோசேயும் அவர்களிடம் பேசினார். மோசே அவர்களோடு பேசி முடித்தபின் தன் முகத்தின் மேல் ஒரு முக்காடு போட்டுக் கொள்வார். அதே வேளையில் எப்பொழுதெல்லாம் *மோசே ஆண்டவரோடு உரையாடும்படி சமூகத்திற்கு செல்வாரோ அப்பொழுதெல்லாம் முக்காடு* *இல்லாமல் தேவ சமூகத்திற்கு செல்வார்.* ஆனால் *இஸ்ரவேலின் தலைவரோடு பேசும் போது முக்காடு போட்டுக் கொள்வார்.* இதை ஏன் மோசே இப்படி செய்தார்.? *தேவ சமூகத்திற்கு செல்லும் போது அவர் முகம் ஒளிமயமாய் தோன்றியது* . காலம் செல்ல செல்ல அந்த முகத்தின் ஒளி மயம் மறைந்துவிடும் . ஒருவேளை தனது முகப்பிரகாசம் மறைவதை தலைவர்கள் கண்டால் அது அவர்களுக்கு இடறலாக இருக்கும் என்று இப்படி செய்தார். இதைத்தான் *பவுல் 2 கொரி‌3:13-18 தெளிவாக விளக்குகிறார்* . " *நாம் எல்லோரும் முக்காடு இடப்படாத முகங்களுடன்,* *கர்த்தருடைய மகிமையைப் பிரதிபலிக்கிறோம். இவ்விதமாக* மகிமையான நிலையிலிருந்து, மகிமையின்மேல் மகிமையை அடைந்து, அவருடைய சாயலாக மாற்றமடைகிறோம். இது கர்த்தரிடமிருந்தே வருகிறது. அவரே ஆவியானவர்." 2 கொரிந்தியர் 3:18. *மறைந்து போகும் ஒளிமயத்தை மோசே மறைத்தது போல் நாங்கள் மறைக்கவில்லை* *என்று சொல்லுகிறார்* . இதன் மூலம் கற்றுக்கொள்ளும் பாடம் என்ன? இரண்டு பாடங்கள். 1.நியாயப்பிரமாணத்தை கற்றுக் கொள்வதன் மூலமாக கிடைக்கக்கூடிய மகிமை கடந்து போகக் கூடிய ஒன்று. ஆனால் நம்முடைய பாவங்களுக்காக மரித்த இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும் பொழுது அவர் மகிமை பொருந்தியவராய் நம்மில் தங்கி இருக்கிறார் .இந்த மகிமை அழியாத மகிமை. இன்னொரு காரியம் என்னவென்றால் *கடந்த காலங்களில் மகிமையாய் கர்த்தருடைய கரத்தில் பயன்பட்ட ஊழியர்கள் அந்த* *மகிமையை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் கர்த்தருக்கு தூரமாக இருக்கின்ற வேளைகளில், கடந்த காலங்களில் தேவன் தங்களை* *பயன்படுத்திய* அந்தப் பெருமையை ,புகழ்ச்சியை சொல்லி, சொல்லி* *தற்பொழுது ஒரு முகமூடியை அணிந்து கொண்டு போலி* *வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.* மோசே அன்றைக்கு மறைந்து போகின்ற மகிமையை மறைத்து தலைவர்கள் முன்பாக முகமூடி அணிந்தது போல *ஒரு காலத்தில் பிரகாசித்து பின்வாங்கி போன* *ஊழியர்கள், விசுவாசிகள் தற்போது முகமூடி அணிந்த வாழ்க்கை* *வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.* 2.அதே வேளையில் இன்னொரு கருத்தையும் பதிவு செய்ய விரும்புகிறேன். இன்றைக்கு அநேகர் நான் *இயேசு கிறிஸ்துவை‌ தரிசித்தேன். தேவ தூதர்களை பார்த்தேன்* . *தினமும் என்னோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்பவருடைய* *முகம் அன்றைக்கு மோசேயின் முகம் ஒளிமயமாக காணப்பட்டது போல்* *இவர்கள் முகம் ஒளிமயமாக காணப்படுகிறதா என்கிற‌ கேள்வியை உங்களிடமே விட்டுவிடுகிறேன்* . *முகப்பிரகாசம் என்பது* *வெளித்தோற்றம் .* ஆனால் வசனத்தின் மூலமாக நாம் ஆவியில் மறுரூபமாகும் அனுபவம் அதைவிட உன்னதமானது‌. Ezekiel Shanmugavel

சிம்சோனின் பெற்றோர் கற்றுக் கொடுக்கும் பாடம் என்ன?

*சிம்சோனின் பெற்றோர் கற்றுக் கொடுக்கும் பாடம் என்ன?* வேதத்தில் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று கடவுளிடத்தில் கேட்டு வளர்த்த முதல் குடும்பம் மனோவாவின் குடும்பம். *அதுமாத்திரமல்ல பெற்றோர்களாகிய தாங்களும் எப்படி இருக்க வேண்டும்* *என்கிற கட்டளையை கடவுளிடத்தில் பெற்றுக் கொண்ட* *முதல் குடும்பமும் மனோவாவின் குடும்பம் தான்.* *இப்படி கர்த்தருடைய கட்டளைகளின்படி குழந்தைகளை வளர்த்து தாங்களும் ஆண்டவர் கூறிய* *அறிவுரைகளின் படி நடந்து உருவாக்கப்பட்ட குழந்தை தான் சிம்சோன்‌‌* . பெற்றோர் தங்கள் கடமைகளை செய்து முடித்து விட்டார்கள். ஆனால் சிம்சோன் கர்த்தருடைய சித்தத்தை, கர்த்தருடைய ஆவியானவர் அவன் மேல் இறங்கின‌ நோக்கத்தை வீணடித்து விட்டான். அதற்கான காரணங்கள். 1.கடவுளுடைய கற்பனைகளை அறிந்து அதன்படி நடக்கவில்லை. அப்படி அறிந்திருந்தால் புறயின மக்களோடு திருமண உறவை வைத்துக்கொள்ள விருப்பப்பட்டி ருக்க மாட்டான். புறயினத்தோடு‌ திருமண உறவு செய்து கொள்வதை கடவுள் அங்கீகரிக்கவில்லை. யாத்34:12-16, உபா7:1-3 சிம்சோன் அதையும் மீறி பெலிஸ்திய பெண்ணே தனக்கு பொருத்தமானவள் என்று அவனே தீர்மானித்து விட்டான். மனைவியை தேடக்கூடிய உரிமையை தேவனிடம் விட்டு விடாமல் அந்த முடிவைத் தானே தன் கையில் எடுத்துக் கொண்டான். இது அவன் செய்த முதல் ஆரம்ப தவறு. 2.பெற்றோர்களுடைய விருப்பத்தை நிறைவேற்றவில்லை. பெலிஸ்திய பெண்ணோடு உறவு கொள்வது கடவுளுக்கு விருப்பமில்லாத காரியம் என்று சொன்ன அவனது பெற்றோர்களுடைய விருப்பத்தை நிராகரித்தான். 3. கர்த்தர் எதையெல்லாம் தொடக்கூடாது, புசிக்கக் கூடாது, குடிக்கக் கூடாது என்று கட்டளையிட்டாரோ அந்தக் கட்டளையை மீறினான். திராட்சத் தோட்டம் வழியாக சென்றான்.எண்ணா.6:1-4 இறந்து போன சிங்கத்தினுடைய சரீரத்தை தொட்டான். இறைவனுடைய கட்டளைப்படி இறந்து போன மிருகத்தினுடைய சரீரத்தை தொடக்கூடாது. இறந்து போன சிங்கத்தின் சரீரத் திலிருந்து கிடைத்த தேனை அவன் சாப்பிட்டான். இது தீட்டான காரியம். 4.பெலிஸ்தியரோடு ஏற்பட்ட விரோதத்தை தனிப்பட்ட காரியமாக கருதினான். அதை ஒரு குழுவாக இணைத்து அவர்களோடு போராடவில்லை. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். சிம்சோனுடைய இத்தகைய காரியங்கள் அவனுடைய பெற்றோருக்கு எவ்வளவு மன வருத்தத்தை கொடுத்திருக்கும் என்பதை நம்மால் யூகிக்க முடியும். *பெற்றோர்கள் தங்கள் கடமைகளை சரியாக செய்தாலும்* *பிள்ளைகள் அதை சரியாக புரிந்து கொள்ளாமல் கர்த்தருடைய சித்தத்தை நிறைவேற்றாமல்* *இருக்கிற காரியம் பெற்றோர்களை* *மிகவும் பாதிக்கின்ற ஒன்று.* கர்த்தருடைய சித்தத்தின்படி வளர்க்கப்பட்ட பிள்ளைகள் பின்னாட்களில் அதைப் புரிந்து கொள்ளாமல் கர்த்தருக்கு தூரமாக இருப்பதும், கர்த்தருடைய சித்தத்தை செய்யாமல் இருப்பதும் போன்ற காரியங்கள் பெற்றோர்களுக்கு கொடுக்கின்ற மிகப்பெரிய அநீதிகளில் மிகவும் கொடியது. பெற்றோர்களுக்கு உள்ள ஒரே திருப்தி தங்கள் கடமைகளை முடித்து விட்டோம் என்பதுதான். அதுபோல இன்றைக்கும் சில *கிறிஸ்தவ குடும்பங்களில் பெற்றோர்கள் என்னதான் கர்த்தருக்குள் பிள்ளைகளை வளர்த்தாலும் பின்னாட்களில் அவர்கள் கர்த்தரை விட்டு விலகிப் போவதும், கர்த்தருக்கு தூரமாக இருப்பதும் போன்ற காரியங்களை கண்கூடாக பார்க்கலாம்.* *அனேக நேரங்களில் நாம் மேலேழந்த வாரியாக பெற்றோர்களை குறை சொல்லி அவர்களுடைய அர்ப்பணிப்பை தியாகத்தை மட்டம்* *தட்டி பேசி விடுகிறோம்.* ஏதேன் தோட்டத்தில் கூட ஆதாம் ஏவாளை மிகப்பெரிய நோக்கத்தோடு கடவுள் அவர்களை படைத்தார். ஆனால் அவர்கள் கர்த்தரை விட்டு வழி விலகிப் போகவில்லையா? அதற்காக ஆண்டவரை குறை சொல்ல முடியுமா? இன்றைக்கும் மனோவாவின் குடும்பத்தைப் போல பல குடும்பங்கள் சபைகளில் காணப்படுகின்றன. அவர்களது வலியை வேதனையை புரிந்து கொள்ளாமல் பெற்றோர்களை நாம் ஒரு போதும் பரிகாசம் பண்ணக்கூடாது. *சிம்சோனின் பெற்றோரைப் போல நாமும் நம்முடைய கடமைகளை உத்தமமாக, நேர்மையாக செய்வோம். விளைவுகளை கர்த்தரிடத்தில் ஒப்புக் கொடுப்போம். தெய்வீக சமாதானம் கர்த்தர்* *நமக்குத் தருவாராக.*. Ezekiel Shanmugavel

நம்முடைய பாரங்கள், வருத்தங்கள், கவலைகள் இரண்டு வகைப்படும்.

*நம்முடைய பாரங்கள், வருத்தங்கள், கவலைகள்* *இரண்டு வகைப்படும்.* ஒன்று மற்றவரிடம் அந்த பாரங்களை பகிர்ந்து கொண்டு நம்முடைய மனசோர்வை கொஞ்சம் நீக்‌கி கொள்ளலாம். அல்லது அவர்களிடம் நம்முடைய பாடுகளுக்காக விண்ணப்பம் பண்ண கேட்டுக் கொள்ளலாம். இந்த பாரங்கள் தனிப்பட்ட காரியங்களுக்காகவும், ஊழியங்களுக்காகவும் இருக்கலாம். இப்படிப்பட்ட பாரங்களை நாம் நம்பும் நபர்களிடம் சொல்லும் போது அதை அவர்கள் ஓரளவுக்கு புரிந்து கொண்டு உணர்ந்து கொண்டு அதற்காக ஜெபிக்கக்கூடும் இதில் எந்தத் தவறும் இல்லை. இப்படிப்பட்ட கவலைகளை மற்றவர்களிடம் சொல்லுவதினால் எந்த விதத்திலும் நம்முடைய மதிப்பு தாழ்ந்து விடாது. அதே வேளையில் சில பாரங்கள் ,கவலைகள் நாம் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத காரியங்களாக இருக்கும். இந்த பாரத்தின் வலியை, ஆழத்தை மற்றவர்கள் உணர்ந்து கொள்ள முடியாது. மேலும் அவர்களிடம் சொல்லுவதன் மூலம் நமக்கு எந்த பலனும் கிடைக்காது. அது சில நேரங்களில் ஆபத்தாக முடிந்து விடும். இந்த ஆவிக்குரிய உலகத்தில் யாரையும் நம்பி அப்படிப்பட்ட பாரங்களை மற்றவரிடம் சொல்லி நாம் ஆறுதல் அடைய கூடாது. ஏனென்றால் அவர்கள் இதனுடைய வலியை ஆழத்தை உணர்வை புரிந்து கொள்ள முடியாது. இதை நாம் மட்டுமே சுமக்க வேண்டும் அதுதான் கர்த்தர் விரும்புகிறார். பாரங்களை ஏன் நம்முடைய குடும்ப உறுப்பினர்களும் குறிப்பாக நம்முடைய மனைவியோ கணவனோ கூட அதை சரியாக உணர்வுபூர்வமாக புரிந்து கொள்ள முடியாது. இப்படிப்பட்ட நேரங்களில் நாம் கர்த்தரிடம் சொல்லி மன்றாடுவதை தவிர வேறு வழி இல்லை. இந்த பாரங்களை மற்றவரிடம் சொல்லும்போது சில நேரங்களில் அது நம்முடைய ஆவிக்குரிய தரத்தை குறைத்து விடுவதாக இருக்கும் அந்த வலியினுடைய ஆழத்தை அவர்கள் புரிந்து கொள்ளாமல் நம்மை அற்பமாக நினைக்க கூடிய சூழ்நிலைகளும் ஏற்படலாம். இயேசு கிறிஸ்து கல்வாரியில் சுமந்த பாரங்கள் வேதனைகள் அவர் மட்டுமே சுமந்தார். யாரிடமும் பங்கிட்டு கொடுக்கவில்லை. வெளிப்படையாகவும் முழுவதுமாக சொல்லவில்லை. கெத்சமனே தோட்டத்தில் கூட சீசர்களை ஜெபிக்க அழைத்து சென்றாரே தவிர அவர்களிடம் தான் சந்திக்கப் போகிற வேதனையை அணு அளவாவது சொல்லி ஜெபிக்க கேட்டுக்கொள்ளவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலைகளை விசுவாசிகள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் தேவன் அனுமதிப்பார் . அப்படிப்பட்ட நேரத்தில் நாம் யாரிடமும் சொல்ல முடியாத சூழ்நிலைகள் இருக்கும் அதைக் குறித்து நாம் கவலைப்பட வேண்டாம். அவர் நம்முடைய பாரங்களை விசாரிக்கிறவர் என்று வசனம் சொல்லுகிறது. விசாரிக்கிற கடவுளிடம் நாம் சொல்லும் போது தான் நமக்கு விடிவு காலம் கிடைக்கும். நம்முடைய காரியங்களை விசாரிக்கிற பலர் அதற்காக ஜெபிப்பதற்கு பதிலாக நம்முடைய பாடுகளை பரப்புகிற செயலாளராக அனேக நேரங்களில் மாறிவிடுவார்கள். இயேசுவைப் போல மாற வேண்டும் என்றால் இந்த வழியிலும் விசுவாசிகளை அழைப்பார். நம்மை அழைத்தவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே. அவரே நம்முடைய உணர்வுகளை வலிகளை பாரங்களை முழுவதுமாக அறிந்தவர் அவர் நமது பட்சத்தில் இருக்கிறபடியால் அவர் நம்பத்தகுந்தவர். நமக்கு விடுதலை கொடுக்கிறவர். .அப்படி இருக்க நிலையில்லாத மனிதர்களிடம் சொல்லி எந்த பயனும் இல்லை. இப்படி மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாதவர்களுக்கு முன்னோடியாக இருப்பவர் நம்ம இரட்சகன் இயேசு கிறிஸ்து இருக்கிறார். அவருடைய பாடுகளுக்கு பங்குள்ளவர்களாக மாறிவிடுகிறோம் . எனவே எல்லோரிடமும் எல்லாவித கவலைகளையும் சொல்லி நாம் நம்முடைய தனித்துவத்தை இழக்க வேண்டாம். எசேக்கியேல் சண்முகவேல்

Men fall in private long before they fall in public.

Men fall in private long before they fall in public.” “Doctrine is useless if it is not accompanied by a holy life. It is worse than useless; it does positive harm. Something of ‘the image of Christ’ must be seen and observed by others in our private life, and habits, and character, and doings.”   J. C. Ryle: உபதேசத்தை அதிகமாய்  போதிப்பவர்களுக்கு இந்த வார்த்தை ஒரு மிகப் பெரிய எச்சரிப்பு. *சாட்சி இல்லாதவர்களின் உபதேசத்தினால் கிறிஸ்தவத்திற்கு எந்த பயனும் இல்லை.* இதைப் பற்றிபவுல் எழுதின எச்சரிப்பை நோக்கி பார்க்க வேண்டும். ஒரு மூப்பர் அல்லது இன்றைய வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் போதகர் அல்லது மேய்ப்பர் இவர்களுக்குள்ள தகுதிகளில் மிக முக்கியமானதாக இதை பவுல் குறிப்பிடுகிறார் " ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும், எதிர்பேசுகிறவர்களை கண்டனம்பண்ணவும் வல்லவனாயிருக்கும்படி, தான் போதிக்கப்பட்டதற்கேற்ற *உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக்கொள்ளுகிறவனுமாயிருக்கவேண்டும்."* *தீத்து* 1:9 தான் போதிக்கிற போதனைக்கேற்றபடி வசனத்தை கை கொள்ளாவிட்டால் அந்த மேய்ப்பரை போல் மாய் மாலமான மனிதன் உலகத்தில் யாரும் இருக்க முடியாது. இவர்கள் வெள்ளடிக்கப்பட்ட கல்லரைகள் எத்தகைய ஆரோக்கிய உபதேசங்களை போதித்தாலும் அவர்களின் ஆவிக்குரிய வாழ்க்கை ஆரோக்கியம் அற்றிருந்தால் அந்த ஊழியத்தில் கர்த்தர் எப்படி மகிமைப்படுவார்? *நாம் பேசும் உபதேசமும் நாம் வாழும் வாழ்க்கையும் ஒத்துப் போகாவிட்டால் அந்த வாழ்க்கை ஒரு இடறலான வாழ்க்கை. கடவுள்* தாமே *நம்முடைய தேசத்தில் சொல்லும் செயலும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க கூடிய* *போதகர்களை தருவாராக.* யாரும் பார்க்க முடியாத நேரத்தில் கடவுள் மட்டுமே பார்க்கக்கூடிய நேரத்தில் நாம் எப்படி வாழ்கிறோம் என்பதே பரிசுத்தத்தின் சரியான அளவு. எசேக்கியல் சண்முகவேல்

Belivers have the right to know the basic christian theology

*Belivers have the right to know the basic christian theology .இது விசுவாசிகளின்* *உரிமை* . ஆதி திருச்சபையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று அவர்கள் அப்போஸ்தலர்களுடய உபதேசத்தில் தரித்திருந்தது. (அப்போ 2:42) அதாவது அவர்கள் *புதிய ஏற்பாடு உபதேசத்தில் உறுதியாக இருந்தார்கள்.பழைய* *ஏற்பாடு வார்த்தைகளை ஒப்பிட்டு புதிய* *ஏற்பாடு அப்போஸ்தல உபதேசங்களை* *புரிந்து கொண்டார்கள்.* * வேதத்தின் அடிப்படையான உபதேசங்களை கற்று கொள்வது என்பது எல்லா விசுவாசிகளுக்கும் உள்ள உரிமையாகும். *இறையியல் அறிவு என்பது எதோ போதகர்கள், தலைவர்கள் என்று இவர்களுக்கு மட்டும் உள்ள தனிப்பட்ட சொத்து* *அல்ல* . *ஒவ்வொரு விசுவாசியும் ஒரு இறையியல் மாணவன்தான்* . எனவே தங்களிடம் உள்ள விவாசிகளுக்கு அடிப்படை இறையியலை போதிக்க ஒவ்வொரு* போதகரும், ஆயரும் கடமைப்பட்டுள்ளனர் . *Every pastor is obligated to teach the basic Christian theology to his congregation and every believer has the* *right to get such teachings from his pastor.* While the believer is _supporting the pastor financially the pastor inturn is. bound to give what he learnt from the Bible college._ II கொரி 11:3 இல் பவுல் பயந்த காரியங்கள் இன்று நடந்து கொண்டிருக்கிறது. இறையியல் இருளுக்குள் விசுவாசிகளை தள்ளி அவர்கள் பின்னாளில் எது தவறு ,எது சரி என்று புரிந்து கொள்ள முடியமால் கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகள் போல் உபதேச குழப்படிக்குள் சிக்கி தவிக்க போதகர்கள் காரணமாகிவிடுகிறார்கள். இன்றைய விசுவாசிகள் சத்தியத்துக்கு விலகி கட்டுக்கதைகளுக்கு செவிசாய்க்க கிறிஸ்துவ தலைவர்கள்தான் காரணம். தவறான உபதேசங்கள் வெள்ளம் போல் வரும் போது அதை சபை தலைவர்கள் கண்டுகொள்ளாமல் விடுவது மிகவும் ஆபத்தானது. ஆதி திருச்சபைகளில் ‘GNOSTICISM'போன்ற உபதேசங்கள் எழும்பினபோதும் சரி , புதிய ஏற்பாட்டு நூல்கள் தொகுக்கப்பட்ட காலத்தில் 'MARCION' போன்ற மிகவும் வஞ்சகமான சாத்தானின் கூலியாள் தோன்றினபோதும் சரி அப்போது உள்ள அப்போஸ்தலர்கள், தலைவர்கள் ஒன்றுகூடி எதிர்த்து தங்களுக்கு போதிக்கப்பட்ட அப்போஸ்த்தல உபதேசங்களை பாதுகாத்தார்கள். பின்பு மார்ட்டின் லூதர் போன்றவர்களும் அதை உயர்த்தி பிடித்தார்கள். இன்று நிலைமை அவ்வாறு இல்லை,ஆனால் ஆயர்கள் போதகர்கள் தங்களிடம் உள்ள ஆத்துமாக்களுக்காவது போதித்து அவர்களை பாதுகாத்து கொள்ளவேண்டும். சரியான சத்தியங்களை விசுவாசிகளுக்கு போதித்தால் மட்டுமே எதிர்காலத்தில் சபையினுடைய வீழ்ச்சியை பாதுகாக்க முடியும். அடிப்படை சத்தியங்களை போதிக்காமல் செழிப்பின் உபதேசத்தை வலியுறுத்தி போதித்த காரணத்தினால் தான் மேற்கத்திய நாடுகளில் கிறிஸ்தவம் வீழ்ச்சி அடைவதற்கு முக்கிய காரணம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. *எல்லா விசுவாசியும் இறையியலின் ஆனா, ஆவன்னா* *THEOLOGY பாடத்தை கற்று கொள்ள முயற்சிக்க* *வேண்டும்* . * இறையியல் என்பது இந்துக்கள் சொல்வது போல சிதம்பர ரகசியம் அல்ல. Knowledge of theology is not luxury. It is a dire necessity for every born again Christian. விசுவாசிகளும் அடிப்படை அப்போஸ்தல உபதேசங்களை போதிக்க, போதகர்களை ஆயர்களை வேண்டிக்கொள்ளவேண்டும். சாதாரண விசுவாசிக்கும் உரிய மதிப்பளித்து அவர்களை இறையியல் பாடத்தில் பண்டிதராக்குங்கள். இறையியல் பாடத்தை மகிழ்ச்சிகரமாக மாற்றுங்கள். .இந்த இடத்தில் WILLIAM BARCLAY என்ற வேத பண்டிதர் சொன்ன வார்த்தைகளை குறிப்பிட விரும்புகிறேன் ‘I *decided I must dedicate my life to making scholarship available for the laymen ,so that he may know better his Bible ,his God and his* *Saviour* . அவரின் விருப்பத்தை போல் எல்லா போதகர்களும் ஆயர்களும் விரும்பி செயல் பட்டால் அதுதான் திருச்சபைகளின் விடுதலை நாள் . அந்நாள் எந்நாளோ? Ezekiel shanmugavel

கிதியோனும் தன் ஜனங்களுக்கு இடறல் உண்டாக்கிய ஏபோத்தும்.

*கிதியோனும் தன் ஜனங்களுக்கு இடறல் உண்டாக்கிய ஏபோத்தும்.* இவர் 40 ஆண்டு காலம் இஸ்ரவேலின் ராணுவ பொறுப்பை ஏற்றுக் கொண்டு வழி நடத்தினார். ஆண்டவருடைய அழைப்பை மிகுந்த தயக்கத்துடன் ஏற்றுக் கொண்டார். தன்னுடைய அழைப்பை பல்வேறு அடையாளங்கள் மூலமாக உறுதி செய்து கொண்டார். இஸ்ரவேல் ஜனங்கள் தங்களை ஆளும்படியாக கிதியோனை அழைத்த பொழுது அந்த சிங்காசனத்தை மறுதலித்தார். இவைகள் எல்லாம் அவருடைய நல்ல செயல்களுக்கு அடையாளம். இவர் இறுதிக் காலத்தில் செய்த ஒரு தவறான காரியம் இஸ்ரேல் ஜனங்களை விக்கிரக ஆராதனைக்கு நேராக வழி நடத்தியது.. *He refused the crown but accepted the gold.* ஆளுகையை மறுதலித்த கிதியோன் அதற்குப் பதிலாக தங்கத்தினாலான கடுக்கன்களை கேட்டார் . மீதியானியர்கள் தங்கள் காதுகளிலும் மூக்குகளிலும் நகைகளை அணிந்திருப்பார்கள். ஆதி24:47 மீதியானவர்களை வெற்றி பெற்ற யூதர்கள் அந்த தங்கத்திலான அணிகலன்களை கொள்ளையடித்திருப்பார்கள். *எனவே தான் செய்த பணிக்கு ஊதியமாக கொள்ளையிட்ட* *அந்தத் தங்கத்தில் பங்கு கேட்டார் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.* கிதியோன் அதன் மூலம் பெற்ற தங்கத்தை உருக்கி அதைக் கொண்டு ஆசாரியர்கள் அணியக்கூடிய ஏபோத் மேலாடையை உருவாக்கினார். *Whether this ephod was an embellished version of* the garment used by the *high priest (28:6), or some* *kind of standing idol (* *see Judg. 17:5; 18* :14, 17), we can’t tell, but it was used in worship and became a snare to Gideon and the people.Wiersbe *இந்தஏபோத் தங்கத்திலான மேலாடையாகவும் இருக்கலாம் அல்லது சிலையாகவும்* *இருக்கலாம்..* *மேலாடை என்று பார்த்தால்* இந்த ஆடை *பிரதான ஆசாரியர் மட்டுமே அணியக்கூடிய* மேலாடை.* சிலை என்று பார்த்தால் அது உருவ வழிபாடாக மாறிவிடுகிறது ".அவர்கள் கொடுத்த தங்கத்தைக் கொண்டு கிதியோன் ஒரு ஏபோத்தைச் செய்து தனது பட்டணமான ஒப்ராவிலே வைத்தான். ஆனால் மிகவிரைவில் இஸ்ரயேலர் எல்லோரும் ஏபோத்தை வணங்கி வேசித்தனம் பண்ணினார்கள். இது கிதியோனுக்கும், அவன் குடும்பத்திற்கும் கண்ணியாய் இருந்தது. நியாயாதிபதிகள் 8:27 *தேசத்தில் ஆவிக்குரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டிய *கிதியோன் கொள்ளையிட்ட பணத்தில் தான் செய்த பணிக்கு கூலியை கேட்டு திருப்தி அடைந்து விட்டான். ராணுவ தலைவராக இருந்த 40 ஆண்டுகள் காலத்தில் எந்தவித ஆவிக்குரிய முயற்சிகளையும் தன்னுடைய ஜனங்களுக்காக கிதியோன் எடுக்கவில்லை..* *அதற்குப் பதிலாக தனது ஜனங்களுக்கு இடறலாக* *ஏபோத்தை உருவாக்கி பல தலை முறைகளுக்கு இடறலை உண்டு பண்ணினார்.* இன்றைக்கும் நம்முடைய சபைகளில் அனேக தலைவர்கள் இந்த மனநிலையில்தான் காணப்படுகிறார்கள். உலகத் தேவைகளுக்காக மார்க்க பணிகளை செய்து அதற்கேற்ற‌ ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு அவர்களது ஆவிக்குரிய வளர்ச்சியை பற்றி அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள். *இவர்கள் இக்கால கிதியோன்கள்.* *விசுவாசிகளிடம் உலக நன்மைகளை செல்வங்களை பெற்றுக்கொண்டு* *அதற்கு பிரதீபலனாக எந்த ஆவிக்குரிய வளர்ச்சியையும் தங்களுடைய ஜனங்களுக்கு வழங்காமல் இருக்கிறார்கள்.* கடவுள் கிதியோனை மீதியானியரை மேற்கொள்ள பயன்படுத்தினாலும் அவனுடைய இறுதி அவ்வளவு பிரகாசமாக இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. *நம்முடைய ஆரம்ப ஓட்டம் அல்ல நாம் அதை எப்படி முடிக்கிறோம் என்பதே முக்கியமானது.* எசக்கியேல் சண்முகவேல்

Misapplication of Isaiah 45:4

*Misapplication of Isaiah 45:4* *ஏசாயா 45:4 ன்.சரியான விளக்கம்* *வேதத்தை தவறாக கையாளுகிற மூன்று முறைகள்.* 1. *Misinterpretation of the scripture* *தவறான வியாக்கியானம்* 2. *Misapplication of the scripture* ஒருவருக்குசொல்லப்பட்ட வசனத்தை இன்னொருவருக்கு பொருத்திப் பார்ப்பது. 3 *.Dislocation of the scripture* ஓரிடத்தில் சொல்லப்பட்ட நிகழ்வை இன்னொரு இடத்தில் பொருத்திப் பார்ப்பது‌ இதில் கிறிஸ்தவ உலகத்தில் " *Misapplication of the scripture " தான் மிக* *அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.* *அப்படி தவறாக பயன்படுத்தப்பட ஒன்றுதான் ஏசாயா 45:4.* இந்த வசனத்தை புதுவருட வாக்குத்தத்தமாக பயன்படுத்தாத சபைகளே கிடையாது. "வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்; நான் என் தாசனாகிய யாக்கோபினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலினிமித்தமும், நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும் உனக்கு நாமம் தரித்தேன்" ஏசாயா 45:4 இந்த வாக்குத்தத்தம் பாபிலோனிய மன்னனான கோரேசுக்கு கொடுக்கப்பட்டது. இந்த மன்னன் பிறப்பதற்கு 210 ஆண்டுகளுக்கு முன்பாகவே தேவனால் உரைக்கப்பட்ட வார்த்தை இது. இன்னும் சொல்ல போனால் சாலமோன் கட்டின ஆலயம் இடிக்கப்படுவதற்கு 140 ஆண்டுகளுக்கு முன்பாக சொல்லப்பட்ட வசனம். எதற்காக இந்த வாக்கு இந்த மன்னனுக்கு கொடுக்கப்பட்டது என்றால் இவன் பாபிலோனில் சிறைப்பட்டிருக்கிற யூதர்களை யூத தேசத்திற்கு அனுப்பவும், இடிக்கப்பட்ட எருசலேம் ஆலயத்தை கட்டுவதற்கு பொருளுதவி செய்வதற்கும் இந்த ஒரு வாக்குத்தத்ததை தேவன் கொடுக்கிறார். . தன்னைப் பற்றி ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன இந்த வசனத்தை கோரேசு இராஜா கேட்டு ஆச்சரியப்பட்டு இஸ்ரேல் ஜனங்களை அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கி இடிந்து போன தேவாலயம் கட்டுவதற்கான எல்லா பொருளாதார உதவிகளையும் செய்தான் . எனவே ஏசாயா 45:4ல் சொல்லப்பட்டது என்பது குறிப்பிட்ட ஒரு புறயின அரசனுக்காக கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம் .ஆனால் இதை யூதர்களோ, ஏன் கிறிஸ்தவர்களோ அதை பயன்படுத்தி தேவனிடத்தில் உரிமை கோர முடியாது. அது அவர்களுக்கு பொருந்தாது. *இன்னும் சரியாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஏசையா 44 :28 இல் இருந்து தான் இந்த சம்பவம் தொடங்குகின்றது.* *ஏசைய45:4 ஐ படிப்பதற்கு முன்பாக 44 :28 யும்* *சேர்த்து படிக்க வேண்டும்‌.* இப்படி பகுத்தாய்வு செய்து வியாக்கியானம் பண்ணுவது தான் சரியான முறை என்பது என் கருத்து. தேவன் தம்முடையபிள்ளைகளை ஆசீர்வதிப்பார் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால் தேவையில்லாத வசனங்களை எடுத்து நமக்கு என்றுசொந்தம் பாராட்டுவது தான் தவறு. அதுவும் ஆன்மீக ஆசிர்வாதங்களை அதிக முக்கியத்துவ படுத்துகின்ற தேவனுடைய சபைக்கு இப்படிப்பட்ட உலக ஆசீர்வாதங்களை சொல்லி போதிப்பது சரிதானா என்பது கேள்விக்குறி. இதோடு சம்மந்தப்பட்ட இன்னொரு காரியம் *சாதாரணமாக வேதத்தை (Plain Bible) ஐ படிக்கும் போது இவைகள் நமக்கு புரியாது.* சரியான commentary, study Bible மூலமாக இப்படிப்பட்ட காரியங்களை விளக்கிக் கொள்ளலாம். எனவே விசுவாசிகள் வெறும் வேதத்தை(Plain Bible )மட்டும் படிக்கக்கூடாது. அதை புரிந்துகொள்ள ஒவ்வொரு விசுவாசிக்கும் ஒரு விளக்க உரையும் வேத ஆராய்ச்சி வேதமும்மிகவும் அவசியமென்பது என்னுடைய தாழ்மையான கருத்து. *ஒரு விசுவாசிக்கு வேதத்தை சரியான முறையில் புரிந்து கொள்ள அவசியம் தேவையானது மூன்று* 1 . *ஆராய்ச்சி வேதம்.Study Bible* 2. *சிறந்த ஏதாவது ஒரு வேத வியாக்கியான* *நூல்.Bible commentary* 3. *Bible dictionary. வேதாகம அகராதி.* இந்த மூன்றையும் ஒரு விசுவாசி ஆரம்ப நிலையிலேயே பயன்படுத்த ஆரம்பித்தால் பின் நாட்களில் அவர் பயனுள்ள பாத்திரமாக மற்றவர்களுக்கு வேதத்தை போதிக்கின்ற கருவியாக மாறுவார் எந்த சந்தேகமும் கிடையாது. இந்த அறிவு போதகருக்கு போட்டியாக அல்ல சபைக்கு பயனுள்ளதாக காணப்படும். இதை எங்களுக்கு சொல்லிக் கொடுத்தவர் BYM .R . Stanley அவர்கள். இந்த ஆலோசனையை நான் பயன்படுத்தி வருகிறேன் . எசேக்கியேல் சண்முகவேல்

விசுவாசியை சாத்தானுக்கு ஒப்புக்கொடுத்தல் என்றால் என்ன?

"கிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன்" 1கொரி 5:5 *ஒரு விசுவாசி 1 கொரிந் 5:1 சொல்லப்பட்ட தேவனை அறியாத ஜனங்களும் வெட்கப்பட கூடிய பெரிய பாவத்தில் விழும்* *போது* *அவனை முதலாவதாக சபையில் இருந்து விலக்கி வைக்கவேண்டும்.* *அப்போது கர்த்தர் சபையின் மூலமாக அவனுக்கு அளிக்கும் பாதுகாப்பு விலக்கப்படும்.* ஆண்டவர் அவனை தண்டிக்க சாத்தானுக்கு அனுமதி அளிப்பார்( *God will allow Satan to attack the offender's body).* *அவன் சாத்தானின் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும்* . *அந்த பாடுகளின் மூலமாக மறுபடியும் மனம்திரும்பி ஆண்டவரோடு* ஒப்புரவாகமுடியும். இதுதான் 1 கொரி 5:5 ன் விளக்கம். ( *அத்தகைய, இந்த மனிதனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுங்கள். அத்தகைய, இந்த* *மனிதனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுங்கள். அப்பொழுது அவனுடைய மாம்சம் அழிந்துபோனாலும். கர்த்தரின் நாளிலே அவனது* *ஆவியோ இரட்சிக்கப்படும். அவனுடைய மாம்சம் அழிந்துபோனாலும். கர்த்தரின் நாளிலே அவனது* *ஆவியோ இரட்சிக்கப்படும்).* இதன் மூலம் வேதம் உணர்த்தும் பாடம் என்னவென்றால் மிகப்பெரிய விபச்சார பாவத்தில் எல்லோரும் அறியும்படியாக ஈடுபடுகின்ற ஒரு சகோதரனை சபையில் இருந்து விலக்கி வைக்க கூடிய அதிகாரம் சபைக்கு இருக்கிறது. *The church has the power to excommunicate such believer.* இப்படிப்பட்ட அதிகாரத்தை சபைகள் நடைமுறைப்படுத்துமா என்றால் சந்தேகமே. ஆனால் குறைந்தபட்சம் அந்த நபரை தனிப்பட்ட முறையில் அழைத்து கண்டிக்கவாவது செய்யலாம். இப்படிப்பட்ட பாவத்தில் ஈடுபடுகிறவன் எவ்வளவு பெரிய உயர்வான இடத்தில் இருந்தாலும், எவ்வளவு உயர்வான ஆவிக்குரிய வரங்களை பெற்றிருந்தாலும் ,சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் காணப்பட்டாலும், எவ்வளவு அதிகமாக தேவனால் பயன்படுத்தப்பட்ட மனிதனாக இருந்தாலும், அவர்களை கண்டித்து சபையை விட்டு, ஐக்கியத்தை விட்டு ஒதுக்கி வைக்கக் கூடிய ஆவிக்குரிய தைரியம் உள்ள தலைவர்களை இன்று சபைகளில் காண்பது மிகவும் அரிது. பின் எப்படி ஆதி திருசபையினுடைய எழுப்புதல் நம் காலத்தில் வரும்? சபை தனக்கு கொடுத்த அதிகாரத்தை பயன்படுத்தாமல் இருக்கும் போது சாத்தான் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி சபையை பாழாக்கி விடுவான். இப்படி பலமுள்ள அதிகாரம் உள்ள சபைத் தலைவர்கள் எழும்ப ஜெபிப்பது நமது கடமை ‌‌. அப்படிப்பட்ட தலைவர்கள் கடினமான முடிவுகளை எடுக்கும்போது அவர்களை ஆதரிப்பது விசுவாசிகளுடைய கடமை. எசேக்கியேல் சண்முகவேல் ‌.

மாறாதவைகளே

*தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும்* *மாறாதவைகளே.* ரோமர் 11:29 *இந்த வாக்குத்தத்தம் யாருக்கு பொருந்தியதோ இல்லையோ ஆரோனுக்கு முழுமையாக பொருந்தி விட்டது* . ஆரோன்‌ மோசேயின் அண்ணன். தேவன் இஸ்ரவேல் ஜனங்களை மீட்பதற்காக‌ மோசேயை அழைத்த பொழுது அவன் பலவித சாக்குப் போக்குகளை சொல்ல ஆரம்பித்தான். வேறு வழி இல்லாமல் தேவன் அவனுக்கு உதவியாக‌ ஆரோனை தெரிந்தெடுத்தார். ஆரோன் மோசேக்கு வாயாக மாறினான். மோசே ஆரோனுக்கு தேவனாய் மாறினான். கர்த்தர் மோசேக்கு சொன்ன வார்த்தைகளை மோசே ஆரோனுக்கு சொல்லி, அந்த வார்த்தைகளை ஆரோன் பார்வோனுக்கு சொன்னான். இவ்விதமாக இஸ்ரவேல் ஜனங்களை மீட்கும் பணியில் ஒரு மிகப்பெரிய பொறுப்பு ஆரோனுக்கு கிடைத்தது. அதற்குப் பிறகு ஆசாரிய ஊழியம் செய்யும்படியாக ஆரோனை தேவன் தெரிந்து கொண்டார். அவன் இஸ்ரவேலின் முதல் ஆசாரியனாக ‌ மாறக்கூடிய அழைப்பை பெற்றான். இவ்வளவு கனத்தையும் மகிமையும் தேவனிடத்தில் இருந்து பெற்றவன்தான் இந்த ஆரோன். ஆனால் மோசே 40 நாள் தேவனோடு சஞ்சரித்து தேவன் எழுதின கற்பலகைகளை பெற்று திரும்பி வருவதற்குள் இஸ்ரவேல் ஜனங்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களை வழிநடத்ததக்கதாக தெய்வங்களை உண்டு பண்ணுவதற்கு இஸ்ரவேல் பெண்களின் நகைகளை கொண்டுவருமாறு சொன்னவன்தான் இந்த ஆரோன் . அப்படி கொண்டு வந்த நகைகளை கொண்டு ஒரு கன்றுக்குட்டியை உருவாக்கினான். அந்தக் கன்று குட்டிக்கு இஸ்ரவேல் ஜனங்கள் பலிபீடம் கட்டி ஆராதித்தார்கள். யாத்32:1-8 *இந்த இடத்தில் ஆரோன் செய்த மிகப்பெரிய பாவத்தை பார்ப்போம்* . *இஸ்ரவேல் ஜனங்கள் மோசே* *வருவதற்கு* *தாமதமான போது, எங்களை வழிநடத்த தெய்வங்கள் வேண்டும் என்று கேட்ட பொழுது ஆரோன் அவர்களை தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும்.* ஏனென்றால் மோசே இல்லாத அந்த நேரத்தில் மோசேக்கு பதிலாக இருந்தவன் இந்த ஆரோன். தேவனுடைய எல்லா வல்லமைகளையும் அற்புதங்களையும் நேராக கண்டவன் . அப்படிப்பட்டவன் அவர்களை கண்டித்து திருத்துவதற்கு பதிலாக‌ அவர்களுடைய இச்சைக்கு ஏற்றபடி செயல்பட ஆரம்பித்தான். இது எவ்வளவு பெரிய தவறு என்று பாருங்கள். அவர்களைக் கண்டித்து திருத்த வேண்டிய ஆரோன் இச்சைகளை நிறைவேற்றிய ஊழியக்காரனாக மாறிவிட்டான். பத்து கட்டளைகளில் முதல் இரண்டு மற்றும் ஏழாம் கற்பனைகளை இஸ்ரவேல் ஜனங்கள் மீறுவதற்கு காரணமாகி விட்டான். இந்தக் காரியத்தில் தேவன் உணர்த்தும் இரண்டு சத்தியங்கள். 1. மோசே சொன்னது போல மிகப் பெரிய பாவத்திற்கு காரணமாக இருந்தாலும் தேவன் அதை‌ மறந்து, பொருட்படுத்தாமல், தேவன் ஏற்கனவே அவனை ஆசாரியனாக ஏற்படுத்திய நியமனத்தை ரத்து செய்யவில்லை. தேவன் ஒருவனுக்கு கொடுத்த கிருபை வரங்களையும் அழைப்பையும்ஒருபோதும் திரும்ப பெற்றது இல்லை என்பதற்கு இது ஒரு உதாரணம். மிகப்பெரிய‌ இடறலுக்கு காரணமான அந்த ஆரோனை தண்டிக்காமல் அவனுக்கு முன் குறித்த உயர்வை ரத்து செய்யாமல் இருந்தது தேவனுடைய பண்பு.(Divine attributes) 2. எப்படி இந்த கடைசி காலங்களில் விசுவாசிகள் தங்கள் சுய இச்சைகளுக்கு ஏற்ற போதகர்களை திரளாக சேர்த்துக் கொள்வது போல அந்த காலத்திலும் இஸ்ரவேல் மக்கள் ஆசைகளை நிறைவேற்ற ஒரு ஆரோனை தெரிந்து கொண்டார்கள் என்பதுதான் உண்மை.2,தீமோ 4:3 எந்தத் தலைவர்கள் விசுவாசிகளுக்கு ஏற்றபடி ,அவர்களை பிரியப்படுத்தும்படி, அவருடைய இச்சைகளை நிறைவேற்றும் படியான செய்திகளை பேசுகிறார்களோ அவர்கள் நிராகரிக்கப்பட வேண்டியவர்கள். *அதே வேளையில் கடவுள் தான் அழைத்த காரணத்தினாலும் ஊழியக்காரனுடைய தவறுக்காக கடவுள் அவரை தண்டிக்காத நேரத்திலும் அவருடைய ஊழியத்தை அவரிடம் இருந்து எடுக்காத காலகட்டத்திலும் அவர் பேசுவதெல்லாம் உண்மை என்று நம்பி அவரை பின்பற்றி விடக்கூடாது.* எசேக்கியல் சண்முகவேல்

We need the model of the Church at Ephesus of the 1st century

முதலாம் நூற்றாண்டு எபேசு பட்டிணத்து சபையே இன்றைய காலக் கட்டத்தின் முக்கிய ஆவிக்குரிய தேவை. எபேசு பட்டணத்து சபையின் சிறப்பு என்னவென்றால் உபதேசங்களை சீர்தூக்கிப் பார்த்து அதை போதிப்பவர்கள் சரியானவர்களா என்று புரிந்து போலிகளை நிராகரித்த செயல்தான். *இன்றைய காலக் கட்டத்தின் முக்கிய ஆவிக்குரிய தேவை என்னவென்றால்* *எபேசு சபை பின்பற்றின அந்த முன்மாதிரி தான்.* எந்த சபை அடிப்படை உபதேசங்களை பாதுகாக்கிறதோ, துர் உபதேசங்களுக்கு எதிராக எதிர்த்து நிற்கிறதோ அந்த சபை கால வரலாற்றில் நீடித்து நிற்கும். *அடிப்படை உபதேசம் இல்லாமல் கட்டப்பட்ட எந்த* *சபையும் துர் உபதேசங்களுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிடும்.* இதற்கு உதாரணம்க்ஷ வரலாற்றில் பல உண்டு. ஆதி திருச்சபை வரலாற்றில் எபேசு சபை இதற்கு ஒரு நல்ல உதாரணம். இந்த எபேசு சபை கட்டப்படுவதற்கு காரணமாயிருந்தவர் மிஷனரி பவுல். *ஏறக்குறைய இரண்டரை ஆண்டுகள் இந்த இடத்தில் தங்கி இந்த சபையை ஸ்தாபித்தார் .* அதற்குப் பிறகு அந்தப் பொறுப்பை தீ மோத்துவிடம் ஒப்புவித்தார். அதற்குப் பிறகு அப்போஸ்தலர் யோவான் சபையின் வளர்ச்சியில் பங்கு பெற்றதாக அறியமுடிகிறது. *இப்படி பவுல், யோவான், போன்ற மிகப்பெரிய பரிசுத்தவான்களால் கட்டப்பட்ட சபை* *எபேசு சபை.* *அது அடிப்படை உபதேசத்தில் மிகவும் ஆழமாக கட்டப்பட்டது.* இந்த சபையை குறித்து தான் ஆண்டவர் வெளிப்படுத்தின விசேஷத்தில் மிகவும் பாராட்டி இருக்கிறார். ' நீ எவ்வளவு உழைத்திருக்கிறாய், எவ்வளவு மனவுறுதி காட்டியிருக்கிறாய் என்பதை அறிவேன். தீயவர்களின் போக்கை நீ சகிக்கிறதில்லை என்பதும் எனக்குத் தெரியும், அப்போஸ்தலர்களாய் இல்லாதிருந்தும் சிலர் தங்களை அப்போஸ்தலர்களாக்கிக்கொண்டார்கள். அவர்களைப் பரிசோதித்து, அவர்கள் பொய்யர்கள் என்று கண்டறிந்தாய். மனவுறுதியோடும் நீ விளங்குகிறாய். என் பெயரின் பொருட்டு எவ்வளவோ தாங்கிக் கொண்டாய். ஆயினும் தளர்ச்சியுறவில்லை." வெளி 2:2-3 I know thy works, and thy labour, and thy patience, and how thou can not bear them which are evil: and thou hast tried them which say they are apostles, and are not, and hast found them liars: And hast borne, and hast patience, and for my name's sake hast laboured, and hast not fainted. பல வருடங்கள் கடந்த பிறகு கூட இந்த சபையை குறித்து St. Ignatius of Antioch என்பவர் பாராட்டி எழுதி இருப்பதாக வரலாற்று குறிப்புகள் சொல்கிறது. “You all live according to truth, and no heresy has a home among you: indeed, you do not so much as listen to anyone if they speak of anything except concerning Jesus Christ in truth” ( *நீங்கள் அனைவரும் சத்தியத்தின்படி வாழ்கிறீர்கள், உங்களுக்குள்* *எந்த தவறான உபதேசமும் இல்லை: உண்மையில், உண்மையாக* *இயேசு கிறிஸ்துவின் போதனைகளை தவிர வேறு எதையும் பேசினால்* *நீங்கள் கேட்கும் நிலையில் இல்லை.)* என்ன அருமையான சாட்சிபாருங்கள். இப்படிப்பட்ட சாட்சியை இன்றைய சபைகளை குறித்து நாம் சொல்ல முடியுமா ? சபையின் உபதேச கோளாறுகள் வெட்கக்கேடாக இருக்கிறது. துர் உபதேசங்களை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்து இருந்தால் இந்த அளவுக்கு துர் உபதேசங்கள் பெருகி இருக்காது. முளையிலேயே கிள்ளி எறியக் கூடிய தைரியமுள்ள தலைவர்கள் நம்ம் மத்தியில் காணப்படாதது கொடுமையிலும் கொடுமை. *இன்றைக்கு சபைகள் 10 ஆண்டுகள் 20 ஆண்டுகள் கூட தாக்குப் பிடிப்பதில்லை.* *கட்டப்படுகின்ற சபைகள் ஒரு தலைமுறையை தாண்டி* *போவதில்லை.* அடுத்த தலைமுறை வருவதற்குள்ளாகவே பலவித குழப்பங்கள் பிரச்சனைகளால் சூழ்ந்து *கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறது* . முக்கிய காரணம் உபதேச கேடுகள். தகப்பனார் எந்த போதனையை சொல்லி ஆரம்பித்தாரோ அந்த போதகத்தை பின்னால் வருகிற அவருடைய பிள்ளைகள் போதிப்பதில்லை. பின் அவரது பேரன்கள் தாத்தா, தகப்பன் போதித்த போதனையை ஆதரிப்பதில்லை. இப்படி தலைமுறைக்கு தலைமுறை சபையில் உபதேசங்கள் மாறி கொண்டிருந்தால் அந்த சபை எப்படி நிலைத்து நிற்கும்? இந்த சிந்தனைகளை மிகுந்த பாரத்தோடுஉங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். *எந்த சபைகள் உபதேசத்தால் கட்டப்படுகிறதோ அந்த சபைகள் காலத்தால் ஓரளவுக்கு நிலைத்து நிற்கும்.* *இன்றைய வாலிபர்களுக்கு அடிப்படை கிறிஸ்தவ உபதேசங்களை, கோட்பாடுகளை, போதிப்பதற்கு பதிலாக அவர்களை நடனமாடுவதற்கும், ஆடுவதற்கும் ஆராதனை என்ற பெயரில் பயிற்சி கொடுப்பது மிகவும் ஆபத்தான காரியம். எசக்கியேல் சண்முகவேல்*

The Alter of Incense and the ministry of the High Priest .

*ஆசாரியப்பணியும், தூப பீடமும்.* * ஆசாரியப் பணியில் தூபபீடம் மிக முக்கியமானது. ஆசரிப்பு கூடாரத்தில் தூபபீடம் பரிசுத்த ஸ்தலத்தில் காணப்படும். அங்கு காணப்படும் பொருட்களில் மிகவும் பெரிய பொருள் இதுதான். இந்த தூபபீடத்தில் ஆசாரியன் காலையிலும் மாலையிலும் நறுமணத்தூளை எரித்து தூபம் காட்ட வேண்டும். இந்த தூப பீடத்திற்கான நெருப்பு தணல் பலிபீடத்திலிருந்து எடுக்கப்பட்டு அந்த நெருப்பின் மூலமாக தூபபீடத்தில் நறுமணத்தூள் எரிக்கப்பட வேண்டும். இந்த தூப பீடத்தில் நறுமணத்தூள் எரிக்கப்படுவது என்பது எதைக் குறிக்கிறது என்றால் நம்முடைய ஜெப வாழ்க்கையை குறிப்பதாகும். சங்கீதம் 141:2 தாவீது இப்படி எழுதுகிறார். "என் விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும், என் கையெடுப்பு அந்திப்பலியாகவும் இருக்கக்கடவது." அப்படி தூபம் காட்டும்பொழுது யூதர்கள் வெளியில் ஜெபித்துக் கொண்டிருப்பார்கள் .லூக்1:10 வெளி 5:8,8:3 ல் பரலோகத்தில் உள்ள பலிபீடத்தில் செலுத்தப்படும் தூபங்கள் பரிசுத்தவான்களின் ஜெபம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய ஏற்பாட்டில் விசுவாசிகள் அனைவருமே ஆசாரியர்கள். இந்த ஆசாரிய பணியை நிறைவாக நிறைவேற்ற நாம் காலையிலும் மாலையிலும் நம்மை ‌ பலிபீடத்தில் ஒப்புக்கொடுத்து அந்த அர்ப்பணிப்பின் மூலமாக ஜெபமாகிய தூப வர்க்கத்தை காலையிலும் மாலையிலும் மட்டுமல்ல எப்பொழுதும் இடைவிடாமல் கர்த்தருக்கு முன்பு செலுத்த பணிக்கப்பட்டு இருக்கிறோம். 1தெச 5:17 மேலும் இந்த தூபபீடம் மகா பரிசுத்தமானது. இந்த தூப பீடத்தில் உள்ள நறுமணத்தூள் இரவும் பகலும் தொடர்ந்து எரிந்துகொண்டிருக்க வேண்டும். எனவே நம்முடைய ஜெப வாழ்க்கை என்பது ஏதோ வாரத்தில் ஒரு நாள் சபையில் ஜெபிப்பதோ, அல்லது பெரிய ஜெப கூட்டத்தில் கலந்து கொள்வதோ, அல்லது எப்பொழுதாவது ஜெபிப்பதோ, அல்லது நேரம் கிடைக்கும் போது ஜெபிப்பதோ, அல்லது நமக்கு சோதனைகள் கஷ்டங்கள் வரும் போது தேவனை தேடுவதும், ஜெபிப்பதோ அல்ல. அது ஒவ்வொரு நாளும் கடைபிடிக்க வேண்டிய முக்கிய ஆவிக்குரிய பணியாகும். *நம்முடைய வேதவாசிப்பு வேத தியானம்* *எவ்வளவு முக்கியமானதோ அதுபோல ஜெப வாழ்க்கையும்* *அவ்வளவு முக்கியமானது* . *வேத தியானத்தையும் ,ஜெப வாழ்க்கையும்* *நாம் சமநிலைப்படுத்தி ஆவிக்குரிய வாழ்க்கையை நடத்தினால் உண்மையாகவே நாம் வெற்றியுள்ள* *வாழ்க்கை வாழ முடியும்.* படிக்க: யாத்30:1-10,34,லேவி16:12,13.

நமக்குத் தேவை ஒரு நன்றியுள்ள இருதயம்.

படிக்க‌ நியா‌ 8:,35 கிதியோன் என்னும் யெருபாகால் இஸ்ரவேலுக்குச் செய்த சகல நன்மைக்குந்தக்க தயவை அவன் வீட்டாருக்குப் பாராட்டாமலும் போனார்கள். நியாயாதிபதிகள் 8:35 ஒரு மனிதன் எந்த அளவுக்கு தேவன் தனக்கு அளித்த ஆவிக்குரிய நன்மைகளுக்காக ஆண்டவரிடத்தில் உண்மையாக, அன்பாக, விசுவாசமாக இருக்கிறானோ *அந்த அளவுக்கு அந்த ஆசீ ர்வாதங்களை தனக்கு வழங்க காரணமானவர்களையும் அந்த ஆசீர்வாதங்களை தனக்கு கொடுப்பதற்காக தேவன் பயன்படுத்திய மனிதர்களையும் என்றென்றைக்கும் நினைவு கூர்ந்து நன்றி உள்ளவனாக இருப்பான்.* தேவனுக்கு உண்மையாக இருக்கிறேன் என்று சொல்லுகிறவன் மனிதனுக்கும் உண்மையாக இருப்பான். .நான் தேவனுக்கு மட்டும் விசுவாசமாக, நன்றி உள்ளவனாக இருக்கிறேன் என்று சொல்லி மனிதர்கள் தங்களுக்கு செய்த ஆவிக்குரிய நன்மைகளை மறக்கிறவன் உண்மையான விசுவாசியாக இருக்க முடியாது. எந்த ஒரு ஆவிக்குரிய நன்மையும் இறைவன் வானத்திலிருந்து நேராக கொடுப்பதில்லை. அவற்றைக் கொடுப்பதற்கு ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு கருவியை ஒரு மனிதனை பாத்திரமாக பயன்படுத்தி தான் நமக்கு கொடுப்பார் . அப்படி இருக்கும் பொழுது தேவன் பயன்படுத்திய அந்தப் பாத்திரத்தையும் நாம் நன்றி உள்ளவர்வர்களாக நினைவு கூற வேண்டும். அதுதான் வேதம் போதிக்கின்ற காரியம். மேலே குறிப்பிட்ட அந்த வசனங்களில் இஸ்ரவேல் ஜனங்கள் தங்களை எதிரிகளிடமி ருந்து காப்பாற்றிய தேவனை மறந்து நினையாமல் போனார்கள் . அதேபோல் கிதியோன் அந்த தேசத்திற்கு செய்த நன்மைகளை மறந்து அவன் வீட்டிற்கு நன்மைகளை திருப்பி செய்ய மனமில்லாமல் போனார்கள். *நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒரு சிறு உதவியை செய்தவர்களைக்* *கூட நாம் ஒருநாளும் மறந்து விடக்கூடாது. நமக்கு* *எப்பொழுதும் ஒரு நன்றியுள்ள இரு தயம் வேண்டும்.* இன்றைக்கு நாம் எவ்வளவோ ஆவிக்குள்ளாக வளர்ந்து இருக்கலாம். படித்திருக்கலாம். ஆனால் ஆரம்ப காலங்களில் நமக்கு இந்த ஆவிக்குரிய சத்தியங்களை, அனுபவங்களை சொல்லிக் கொடுத்தவர்களை நாம் மறக்கக்கூடாது. என்னதான் நாம் உயர்கல்வி படித்தாலும் நமக்கு ஆரம்ப நாட்களில் ஆனா ஆவன்னா கற்றுக் கொடுத்த ஆசிரியர்களை மறக்க முடியுமா? அது போலதான் *நாம் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் ஆவிக்குரிய ஆனா ஆவன்னா பாடத்தை கற்றுக் கொடுத்த உறவுகளை என்றென்றைக்கும் நாம் மனதில் நிறுத்தி அவர்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும்.* இன்றைக்கு வளர்ந்து விட்டோம் என்பதற்காக அவர்களை அற்பமாக, அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று புறந்தள்ள கூடாது. ஆண்டவர் எல்லாவற்றையும் கவனிக்கிறார். எசேக்கியல் சண்முகவேல்

யாக்கோபு 1:13-15 ன் உண்மையான விளக்கம்

சோதனை என்று தமிழ் வேதாகமத்தில் சொல்லப்படும் வார்த்தை’' Peirasmos'’ என்ற கிரேக்க மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்று வேத அறிஞர்கள் சொல்கிறார்கள். ஆனால் அந்த வார்த்தைக்கு Trial and Temptation என்ற இரு அர்த்தங்கள் உண்டு. யாக்கோபு1:12 ல் சொல்லப்படும் வார்த்தை "சோதனை "(Trails). இந்த இடத்தில் சரியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் 1:13-15ல் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. "சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக. தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும். யாக்கோபு 1:13-15 யாக்கோபு 1:13-15 ல் சொல்லப்படும் இடத்தில் Temptation என்கிற அர்த்தத்தில் தான் சொல்லப்படுகிறது. "சோதனை" என்கிற வார்த்தை வரக்கூடாது. "Temptation'' என்று புரிந்து கொண்டால்தான் அந்த பகுதியை விளங்கி கொள்ள முடியும். “Temptation” என்பதற்கு சரியான அர்த்தம் “பாவம் செய்யத் தூண்டுதல்” என்பதாகும்{ராஜரிகம் அவர்கள் மொழிபெயர்ப்பு} 1:13-15 ல் “சோதனை”(Trial or Test) என்று எடுத்துகொண்டால் தவறான அர்த்தங்களை உண்டாக்கும். சோதனையை நாம் எதிர்நோக்க வேண்டும். *Temptation ஐ எதிர்க்கவேண்டும்.* *நமக்குள் இருந்து வருவது "Temptation".* *வெளியில் இருந்து வருவது (பரீட்சை,சோதனை,Trial)* *சோதனை(Trials) விசுவாசத்தின் பயிற்சியில் நம்மை உறுதிப்படுத்தும்.* *சோதனை,பரீட்சை தேவனிடத்தில் இருந்து அல்லது தேவனின் அனுமதியோடு வரும்.* *Temptation ஐ சாத்தான் கொண்டுவருவான்* . *Temptations should be resisted, but trails are to be welcomed.* *Temptation is an enticement to sin which arises from within.* *Trail is a testing of faith ‌ which is from some external circumstance such as persecutions.** *Trail is an outside enemy, whereas temptation is an internal enemy.* எசேக்கியேல் சண்முகவேல்

ஆரோனை போல்

"ஆரோனை போல்” அழைக்கப்பட்டு ஊழியத்திற்கு வந்திருக்கிறேன் என்று* *புதிய ஏற்பாட்டு முழு நேர ஊழியர்கள் அல்லது மேய்ப்பர்கள் சொல்லலாமா?* பல போதகர்கள்  நான் “ஆரோனை போல்” அழைக்கப்பட்டு ஊழியத்திற்கு வந்திருக்கிறேன் என்று சொல்வார்கள். *இந்த வார்த்தை வேதத்தின்படி சரியில்லை* புதிய ஏற்பாட்டில்  அப்படிப்பட்ட ஆரோன் வழி அழைப்பு என்பதெல்லாம் கிடையாது . *No Levitical priesthood in New Testament.* The Levitical priesthood   என்கிற வார்த்தை புதிய ஏற்பாட்டில்   காலாவதியான  வார்த்தை. மறுபடியும் பிறந்த எல்லோரும் மெல்கிசேதேக்கின்  முறைமையின்படியான  ஆசாரியர்களே . பழைய ஏற்பாட்டில் லேவியர்கள் 30 முதல் 50 வயது வரைதான் அவர்கள் நேராக ஆசரிப்புக் கூடாரத்துக்குள் வேலை செய்ய முடியும். ( எண்ணா  4:3, 8:24-26)   *50வயதில் அவர்களுக்கு ஓய்வு  கொடுக்கப்பட்ட* பிறகு ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் வேலைசெய்யாமல் திருப்பணி சேனையை விட்டு,ஆசரிப்புக் கூடாரத்தின் காவலைக் காக்கிறதற்குத் தங்கள் சகோதரரோடே ஊழியஞ்செய்வதேயன்றி, வேறொரு சேவகமும் செய்யவேண்டியதில்லை. *ஆரோன் வழிப்படி  ஊழியத்திற்கு   வந்தவர்கள் என்று சொல்பவர்கள்  இந்த 50 வயது கால வரண்முறைக்குள்*  *வருவார்களா* ?   மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான ஆசாரியத்துவம்  அப்படியல்ல. மறுபடியும் பிறந்த எவரும் ஆசாரியரே. மறுபடியும் பிறந்த நாள் முதல் ஆண்டவர் எடுத்துக்கொள்ளும் நாள் வரை ஆசாரியப் பணியைத் தொடரலாம். *பழைய ஏற்பாட்டில் எல்லா ஆசாரியர்களும்  லேவியர்களே.* *ஆனால் எல்லா  லேவியர்களும்  ஆசாரியர்கள்  அல்ல. இதைபுரிந்து கொள்ள வேண்டும்* பழைய ஏற்பாட்டில் யூதர்களின் சிறப்பு  அவர்களின் ஆரோன் வழி ஆசாரியத்துவம்.   ஆனால்புதிய ஏற்பாட்டில் கிறிஸ்தவர்களின் மேன்மையே மெல்கிசேதேக்கின்  முறைமையின்படியான ஆசாரியத்துவம்தான். *ஆரோன் வழி ஆசாரியத்துவம் மாற்றப்பட்டுவிட்டது.* ஆனால் மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான ஆசாரியத்துவம் இன்றும் உயிருடன் இருக்கிறது. அது முதன்மையானது, நிரந்தரமானது *ஆரோன் வழி ஆசாரியத்துவம் வாரிசு வழி  ஊழியத்தை அடிப்படையாகக்கொண்டது* ஆரோன் வழி ஆசாரியத்துவத்தை  போதிப்பவர்கள் வாரிசு வழி ஊழியத்தைப் வலியுறுத்தி சொல்பவர்களாக இருப்பார்கள். அது வேதத்தின்படி சரியல்ல எனவே *போதகர்கள்  “ஆரோனை போல்” அழைக்கப்பட்டு வந்திருக்கிறேன் என்று* *சொல்வதை விட்டுவிட்டு மெல்கிசேதேக்கின்* *முறைமையின்படி  அழைக்கப்பட்டு ஊழியத்திற்கு வந்திருக்கிறேன்* என்று சொன்னால்அதுவே புதிய ஏற்பாட்டு சத்தியத்திற்கு உகந்ததாக இருக்கும். யாரையும் குற்றம்  சொல்வதற்காக  சொல்லவில்லை. இயேசு கிறிஸ்து, எப்படி  மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான  நம்முடைய பிரதான ஆசாரியராக இருக்கிறார் எனகிற சத்தியத்தை நீர்த்துப்போக  பண்ணுகிற எந்த வார்த்தையும் ,உபதேசத்தையும் நாம் கட்டாயம் எதிர்க்க வெண்டும். எசேக்கியேல் சண்முகவேல்

எலியாவின் தேவன்

எலியாவின் தேவன் எங்கே என்று தேவனை நோக்கி கேட்கின்ற கேள்விகளும் பாடல்களும் இன்று அதிகமாக காணப்படுகின்றன. எலியாவின் தேவன் எங்கும் நிறைந்தவராய் எல்லாம் அறிந்தவராய் சர்வ வல்லமை உடையவராய் இன்றைக்கும் இருக்கிறார். கேள்வி அதுவாக இருக்கக்கூடாது. நாம் கேட்க வேண்டிய கேள்வி ஏன் எலியாக்கள் உருவாகவில்லை? என்பதுதான் . நாம் ஏன் சரியான தலைவராக உருவாகவில்லை.? எலியாக்கள்என்பவர்கள் வானத்திலிருந்து குதித்து வருபவர்கள் அல்ல. ஒவ்வொரு விசுவாசியும் தாங்கள் இருக்கின்ற இடங்களில் ,வேலை பார்க்க இடங்களில் எலியாக்களாக மாற முடியும் . அதை தேவன் விரும்புகிறார் . நாம் இருக்கிற இடங்களில் எப்படி எலியாக்களாக மாற முடியும்? நாம் வேலை பார்க்கிற அலுவலகங்களில் நேர்மையாக இருக்க வேண்டும் . கையூட்டு வாங்காமல் இருக்க வேண்டும். வேலையில் கடமை உணர்ச்சியோடு இருக்க வேண்டும். மறுபாலரோடு பேசும் போது கண்ணியமாக நடக்க வேண்டும். பரிசுத்த சிந்தையோடு இருக்க வேண்டும். ஜாதி இன வேறுபாட்டை நம்முடைய பணியில் காட்டக் கூடாது. அலுவலகங்களில் கொண்டாடப்படும் புறமார்க்க பண்டிகைகளில் நாம் கலந்து கொள்ளக் கூடாது. அதிகாரிகளுக்கு கீழ்ப்படிய வேண்டும் . நேரத்தோடு பணிக்கு செல்ல வேண்டும் . அலுவலகப் பொருட்களை வீட்டிற்கு எடுத்து வரக்கூடாது . அலுவலக நேரத்தை நாம் திருடக்கூடாது . அலுவலக பண விஷயங்களில் நம்முடைய கைகள் சுத்தமாக இருக்க வேண்டும். இப்படி நாம் வாழும் பொழுது நாமே நம்முடைய இடத்தில் எலியாக்களாக மாறி விடுவோம். கர்த்தருக்காக வைராக்கியமாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும். சக ஊழியரோடு அன்பாக பழக வேண்டும் . ஆனால் அவர்களுடைய பழக்க வழக்கங்களில் நாம் ஈடுபடுத்தி சமரசம் செய்து கொள்ளக் கூடாது. இதை எழுதுகிற நான் 33 ஆண்டுகள் அரசு பணியில் வேலை செய்திருக்கிறேன். என்னுடைய மேஜையில் வேதம் எப்பொழுதும் காணப்படும். வேலையை தொடங்கும் பொழுது நான் ஜெபிப்பதை மற்ற அலுவலர்ககள் பார்ப்பார்கள். நான் கிறிஸ்தவன் என்பதை அடையாளப்படுத்திக் கொள்ள தவறுவதில்லை. புறம் மார்க்கத்தார் விழாக்களில் முழு அலுவலகமே கலந்து கொண்டாலும் நான் ஒரு நாளும் கலந்து கொண்டதில்லை. . ஒரு நயா பைசா கூட கையூட்டு வாங்கினது இல்லை. அதற்காக நான் இழந்தது அநேகம். என்னைப் பொறுத்த அளவில் 33 ஆண்டுகள் என்னுடைய அலுவலகத்தில் ஆண்டவருடைய முழு நேர பணியாளராக நான் பணியாற்றினேன் என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்ள முடியும். முழு நேரப் பணி என்பது ஆலயத்தில் மட்டுமல்ல நாம் வேலை பார்க்கும் அலுவலகத்திலும் அது இருக்க வேண்டும். எலியாக்களாக மாறுவோம் எலியாவின் தேவனை வேண்டிக் கொள்வோம். எசேக்கியல் சமூகமவேல்

நாம் முன் குறிக்கப்பட்டு இருந்தால் கடவுள் தம்முடைய சித்தத்தை நம் வாழ்க்கையில் நிச்சயம் நிறைவேற்றுவார்.

தயக்கத்துடன் தன்னுடைய இயலாமையை சுட்டிக்காட்டி தேவனுடைய அழைப்பைநிராகரித்த தேவனால் முன் குறிக்கப்பட்ட நபர்கள் யார் என்றால் மோசே மற்றும் கிதியோன் . இவர்களும் எரேமியாவை போல இயலாமையை அறிக்கையிட்டார்கள் கிதியோன் தான் மனாசே கோத்திரத்தில் வலு குறைந்த குடும்பத்தை சேர்ந்தவன் என்றும் சிறியவனாயிருக்கிறேன் என்று சொல்லி தான் எப்படி‌‌ இஸ்ரயேலரைக் காப்பாற்ற முடியும்?” என்று கேட்டார். நியாயாதிபதிகள் 6:15. உலகத்தை படைத்த தேவன் அவரை பலசாலி என்று அழைத்த பிறகும், இருக்கிற பலத்தோடு செல் என்று தேவன் கட்டளை பிறப்பித்த பின்னும் யெகோவா, “நான் உன்னுடனே இருப்பேன்; மீதியானியர் எல்லோரையும் ஒரு மனிதனை முறியடிப்பதுபோலவே நீ முறியடிப்பாய்” என்று சொன்ன பிறகும் தேவனிடத்தில் அடையாளங்களை கேட்டார். *தேவன் தான் தெரிந்து கொண்ட மக்களை எப்படியும் ஊழியத்திற்கு அழைத்து* *தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவார்* ஏன்று சொல்லும் கால்வின் உபதேசம் கிதியோன் வாழ்க்கையில் பரிபூரணமாக நிறைவேறியது. தேவன் தான் முன் குறித்த மக்களை எப்படியும் தன்னுடைய வழிக்குள் கொண்டு வந்து உலக தோற்றத்திற்கு முன்பாக தான் தெரிந்து கொண்ட நோக்கத்தை நிறைவேற்றுவார். It is not our ability but our availability. Gods *commandments are God's enablements* *தேவனுடைய அழைப்பே நம்முடைய ஊழியத்தை சாத்தியமாக்கும் முக்கிய ஆயுதம் ஆகும்.* மீதியானியர்களை தோற்கடிப்பதற்கு ஏதாவது தன்னிடமும் ஒரு பலம் வேண்டுமென்று‌ கிதியோன் நினைத்தார். அது தவறு என்றும் வெற்றியை தருகிறவர் கடவுள் மட்டுமே என்பது உணர்த்துவதற்காக தான் *வெறுமனே முந்நூறு பேரைக் கொண்டு ஒரு லட்சத்து 35 ஆயிரம் படை வீரர்கள் கொண்ட மீதியானவர்களை* *கிதியோனைக் கொண்டு கர்த்தர் தோற்கடித்தார்.* *ஒட்டகங்களை கொண்ட மாபெரும் படையை தீபந்தங்கள், பானை, எக்காளம்* *என்று போர்க்களத்தில் ஆயுதங்களாக பயன்படுத்த* *முடியாததை கொண்டு தேவன் வெற்றி கண்டார்.* நியா 8:10,7:12 அதனால்தான் அந்த வெற்றியை பற்றி சங்கீதத்திலும், ஏசாயா தீர்க்கதரிசன புத்தகத்திலும் சொல்லப்பட்டிருப்பதை நாம் பார்க்கலாம் சங்கீ 83:12, ஏசாயா 9;4,10:26. . . “Give me a hundred men who fear nothing but sin and love nothing but God, and I will shake the gates of hell!”. John Wesley *பாவத்தை தவிர வேறு எதற்கும் பயப்படாத மற்றும் தேவனைத் தவிர வேறு யாரையும் அதிகமாக நேசிக்காத 100 பேரை என்னிடம் தாருங்கள் அவர்களைக் கொண்டு சாத்தானின் வாசல்களை அசைப்பேன்.John Wesley.* எசேக்கியல் சண்முகவேல்

WILLIAM TYNDALE

*கர்த்தர் எனக்கு ஆயுசு நாட்களை கூட்டித்தருவாரென்றால் நான் இந்த தேசத்தில் ஏர் ஓட்டுகின்ற சிறுவன்* கூட *உங்களை (priest) விட  வேதத்தை  அதிகம்  தெரிந்தவர்களாக  மாற்றமுடியும்* ”  If God spare my life ere many years, I will cause a boy that driveth the plough, shall know more of the scriptures than thou dost (priest).-Tyndale இங்கிலாந்து  தேசத்தை சேர்ந்த WILLIAM TYNDALE வேதத்தை தன்னுடைய தாய் மொழியான  ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ததற்க்காக அப்போதைய பாதிரியார்கள்  இவரை தீயிட்டு கொளுத்தினார்கள். காரணம் அந்த காலத்தில் வேதம் என்பது போதகர்கள், மேய்ப்பர்கள் இறையியல் படித்தவர்கள் கைகளில் மட்டுமே காணப்பட்டது. ‌ வேத புத்தகங்கள் இலத்தின் மொழியில் எழுதப்பட்ட வேத புத்தகங்கள்தான் பழக்கத்தில் இருந்தது . இன்றைக்கு ஆங்கிலம் எப்படி கருதப்படுகிறதுதோ அதுபோல் இலத்தின் மொழி உயர்தர மக்களின் மொழியாக கருதப்பட்டது. வேதத்தை படிப்பது என்பது பாமர, எளிய மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்தது. சாதாரண எளிய மக்கள் பேசுகின்ற ஆங்கில மொழியில் வேத மொழியாக்கம் செய்யப்படவில்லை. வேதத்தை பாமர மக்கள் படித்தால் எங்கே தாங்கள் போதிக்கிற தவறான உபதேசங்களை, பழக்கவழக்கங்களை, சம்பிரதாயங்களை சாதாரண பாமர மக்கள் அறிந்து கொள்வார்களோ என்கிற பயம் அன்றைய மத குருமார்கள் *மத்தியில் காணப்பட்டது‌. எனவே அன்றைய மத குருமார்கள் வேதத்தை சாதாரண பாமர* *மக்கள் பேசும் ஆங்கில மொழியில் மொழிபெயர்ப்பதை எதிர்த்தார்கள். அதன் விளைவு டிண்டேல் எரித்துக்* *கொல்லப்ப்பட்டார்.* அதற்கு அவர்கள் கூறிய காரணம் வேதம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால் கறை பட்டு விடும், மொழியாக்கம் சரியாக இருக்காது என்கிற வாதத்தை வைத்தார்கள் ஆனால் இன்று நமது கைகளில்  வேதாகமம்  தவழ்கிறது. ஆனால் இன்றைய சபைகளில் காணப்படுகின்ற இன்னொரு மாறுபட்ட சூழ்நிலை என்னவென்றால் போதகர்கள் தாங்கள் கற்றுக் கொள்கிற அரிய சத்தியங்களை, இலக்கியங்களை, வேத விளக்க உரைகளை, ஆராய்ச்சி நூல்களை, ஆராய்ச்சி வேத புத்தகங்களை விசுவாசிகளுக்கு அறிமுகம் செய்து வைக்க மாட்டார்கள். Plain Bible ஐ தவிர வேறு எதையும் அறிமுகப்படுத்த மாட்டார்கள். ‌ விசுவாசிகள் தாங்களாகவே முயற்சி செய்து பிற நண்பர்கள் மூலம் இந்த தகவல்களை பெற்றால் ஒழிய அவர்களுக்கு இதைப் பற்றியுள்ள எந்த தகவலும் கிடைப்பதில்லை. தமிழில் இப்பொழுது மிக சிறந்த Study Bible Bibles, Commentaries வெளிவந்துவிட்டன. அவைகளை சபை மேய்ப்பர்கள் விசுவாசிகளுக்கு கட்டாயம் அறிமுகப்படுத்த வேண்டும். அவர்களை படிக்க ஊக்குவிக்க வேண்டும். எங்கே விசுவாசிகள் படித்தால் தங்களை விட அதிகம் கற்றுக் கொள்வார்களோ என்கிற ஒரு insecurity மேய்பர்கள் போதகர்கள் மத்தியில் பரவலாக காணப்படுகின்றது. இப்போது  உள்ள  போதகர்கள் வேதத்தில் சொல்லப்படும் அடிப்படையான சத்தியங்களை  கூட   விசுவாசிகள் தெரிந்துகொள்ள விடாமல் வளரவிடாமல் தங்கள்  போதகத்தை  மட்டும் கேட்டால்  போதும்  என்று கூறி  அவைகளைப் படிக்க விடாமல் தடுத்து விடுகிறார்கள்  . *இவர்கள் Tyndale   காலத்து  போதகர்களை  விட வித்தியாசமானவர்களோ மாறுபட்டவர்களோ* *அல்ல. சபைகளில் இந்த சூழ்நிலை மாற நாம்* *பாரத்தோடு ஜெபிக்க வேண்டும். .* விசுவாசிகளும் கர்த்தருடைய சரீரமாகிய சபையில் உறுப்பினர்கள் என்கிற சிந்தனை வரவேண்டும் சண்முகவேல் எசேக்கியேல்

தொழுகை வீரனின்

*சரீரத்துக்கு யாருக்கும் கிடைக்காத அரசு* *மரியாதை* .    வேதத்தில் யாக்கோபின் சரீரத்துக்கு கிடைத்த அரசு மரியாதையைப் போல, அதுவும் புற ஜாதி அரசாங்கத்தால் கிடைத்த மரியாதையை போல  வேறு யாருக்கும் கிடைத்ததாக  பார்க்க முடியாது. மிகப்பெரிய எகிப்திய சாம்ராஜ்யம் யாக்கோபின் மரணத்திற்காக 70 நாட்கள் துக்கம் கொண்டாடியது. *அவனுடைய அடக்க ஊர்வலத்தில் எகிப்து சாம்ராஜ்யத்தின் தேர்களும், குதிரை வீரர்களும்* *கொண்ட மிகப்பெரிய கூட்டம் காணப்பட்டது‌.* *எகிப்திய மக்களால் அருவருக்கப்பட்ட மேய்ப்பர் குலத்தை சேர்ந்த ஒருவனுக்கு இப்படிப்பட்ட மரியாதையை கர்த்தர் பார்வோன்* *மூலமாக வழங்கினார்.* தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட யூத குலத்தின் தகப்பனான யாக்கோபுக்கு கர்த்தர் கொடுத்த அங்கீகாரமாக இதை பார்க்கலாம். யாக்கோபும் தன்னுடைய இறுதி காலத்தை எகிப்தில் கழித்திருந்தாலும், தன்னுடைய சரீரம் தன்னுடைய முற்பிதாக்களின் கல்லறையில் வைத்து அடக்கம் செய்யப்படுவதை அவன் விரும்பினார் . தேவன் தன் முன்னோர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின அந்த கானானில் தன் சரீரம் அடக்கம் பண்ணப்பட வேண்டும் என்பதில் அவன் மிக உறுதியாக இருந்தார் . அதை தன் பிள்ளைகளிடம் ஒப்படைத்து. அதை நிறைவேற்றும் பொறுப்பை யோசேப்பிடம் ஒப்படைத்தார்.என்னதான் எகிப்தில் வசதியாக வாழ்ந்தாலும் அவன் இருதயம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானானை நோக்கியே இருந்தது  தன் சரீரம் தன் முன்னோர்கள் கல்லறையோடு அடக்கம் பண்ண வேண்டும் என்பதில் அக்கறையோடு இருந்தான். கர்த்தரும் அந்த ஆசையை பூர்த்தி செய்து அவருடைய சரீரத்திற்கு மிகப்பெரிய ஒரு அங்கீகாரத்தை கொடுத்தார். நாம் என்னதான் இந்த உலகத்தில் செழிப்பு உள்ளவர்களாக இருந்தாலும் நம்முடைய இருதயம் எப்பொழுதும் பரம கானானை, அதாவது நித்தியத்தை நோக்கியே இருக்க வேண்டும். யாக்கோபு தன்னுடைய வாழ்க்கையில் பலவிதமான தோல்விகள், ஏமாற்றங்கள், விரக்திகள் துன்பங்களை சகித்து இருந்தாலும், தன் அண்ணன் ஏசாவைப்போல் வழி விலகி கர்த்தருடைய சித்தத்தை விட்டு விலகாமல் தேவனுடைய அழைப்பில் உறுதியாக இருந்து அதை நிறைவேற்றிய மிகப்பெரிய விசுவாச வீரன் . அது மாத்திரமல்ல என் சரீரம் அங்கேயே புதைக்கப் பட்டாலும்.. தேவன். தன் சந்ததியை.திரும்ப  கானானுக்கு  திரும்பகொண்டு வருவார் என்று உறுதியாக நம்பினான் விசுவாச வீரர்கள் பட்டியலில் இவன் மட்டும்தான்   தொழுது கொண்டு மரித்தான்‌ என்றுப்படுகிறது.சொல்லப்படுகிறது..எபி11:21 இப்படிப்பட்ட தொழுகை வீரனுக்கு இந்த உலகத்தில்தேவன் கொடுத்த மரியாதை தான் அந்த அரசு மரியாதை என்று நான் கருதுகிறேன். எசேக்கியேல் சண்முகவேல்.

நியாயாதிபதிகள் புத்தகம் ஐந்தாவது அதிகாரம்.

*தெபோராள், பாராக்கு பாடிய பாடலின் சிறப்புகள்.* 1. *கர்த்தரை புகழ்ந்து பாடிய இந்தப் பாடலில் இரண்டு தாய்மார்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.* ஒன்று தேவனுடைய வழிகளில் நடந்த இஸ்ரவேலின் தாயாக சொல்லப்பட்ட தெபோராளை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேல் ஜனங்களின் தீர்க்கதரிசியாக இருந்து அவள் நடப்பித்த செயல்களை ப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.5: 7,12 தெபோராள், பாராக்கை குறித்து சொன்ன கர்த்தருடைய வார்த்தை எப்படி நிறைவேறியதுஎன்பதையும் இந்த பாடலில் பார்க்கலாம் 5:19-22 மற்றொன்று தேவனுடைய பிள்ளைகளுக்கு விரோதமாக கிரியை செய்த *சிசெராவின் தாய் தன்* மகனின் முடிவை குறித்த புலம்பலையும் இங்கு பார்க்கலாம் 5:28-31 கடவுளுக்கு பயந்த *இஸ்ரவேல் ஜனங்களுடைய தாய் தெபோராள்* மற்றும் *கடவுளுடைய பிள்ளைகளுக்கு விரோதமாக செயல்பட்ட சிசெராவின்* *தாய்* . இவர்களை ஒப்பிட்டு இந்தப் பாடல் பாடப்பட்டுள்ளது 2. பாராக்கு அவிசுவாசத்தினால் செய்ய முடியாத காரியத்தை யாகேல் என்னும் பெண்மணி செய்து முடித்து பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்டவளாக குறிப்பிடப்படுகிறாள்.5:24. *இயேசு கிறிஸ்துவை தன் வயிற்றில் சுமந்த மரியாள் மட்டுமே பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று பாராட்டப்படுகிற இன்னொரு பெண்மணி.* லூக் 1:42 *எவ்வளவு மகிமையான காரியம் பாருஙநாகேஷ் *வேதத்தில் பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்ட இரண்டு பெண்மணிகளில் யாகேல் இருப்பது ஆம் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்ட காரியம்.* 3. இன்னொரு முக்கியமான குறிப்பு என்னவென்றால் இஸ்ரவேல் ஜனங்களில் உள்ள 12 கோத்திரங்களில் இக்கட்டான காலகட்டங்களில் கடவுளுடைய பிள்ளைகளுக்கு விரோதமாக எழுந்த கானான் தேசத்துக் குடிகளுக்கு எதிராக நடந்த போர்க்களத்தில் எந்த கோத்திரங்கள் ஆதரவாக இருந்தது எந்த கோத்திரங்கள் அந்தப் போர்க்களத்தில் கலந்து கொள்ளவில்லை என்கிற தகவல்களும்இந்த பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.5:14-18 *ஆறு கோத்திரங்கள் இந்த போர்க்களத்தில்* *இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஆதரவாக இருந்தார்கள்* பென்யமின்,செபுலோன், இசக்கார்,எப்பிராயிம், நப்தலி,மனாசே கோத்திரங்கள் போர்க்களத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். ஆனால் ரூபன்,தான்ஆசேர். கிலேயாத் ஆகிய நான்கு கோத்திரங்கள் *கடவுளுடைய பிள்ளைகளோடு இணைந்து நிற்கவில்லை* இந்தக் குறிப்பு சாதாரணமாக காணப்பட்டாலும் *கடவுள் எல்லா காரியங்களையும் மனதில் வைத்து குறிப்பிடுகிறார் என்பதை மறந்து போகக்கூடாது.* நம்முடைய சபையிலோ இயக்கத்திலோ அல்லது கடவுளுடைய பிள்ளைகளுக்கு ஆபத்து வரும் பொழுது தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு அவர்களுக்காக போராடுகிற மக்களை கடவுள் ஒருபோதும் மறப்பதில்லை. 1கொரி 3:10-15 ஐ இந்த இடத்தில் நாம் தியானிக்க வேண்டியது அவசியம். நம்முடைய ஊழியங்கள் சேவைகள் தேவனால் சோதிக்கப்படும் பொழுது நாம் எப்படியாக இருப்போம். ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான். அவனோ இரட்சிக்கப்படுவான். அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினதுபோலிருக்கும். 1 கொரிந்தியர் 3:15 இறுதியாக *பழைய ஏற்பாட்டு நிகழ்வுகளை ஒரு கதையாக படிக்க கூடாது.* *நம்முடைய எச்சரிப்புக்காக, ஆலோசனைக்காக, படிப்பினைக்காக எழுதப்பட்டுள்ளது என்பதை உணரும்* *பொழுது நாம் பழைய ஏற்பாட்டில் உள்ள ஒவ்வொரு பக்கத்தையும் சாதாரணமாக கடந்து போக மாட்டோம்.* எந்த ஒரு அதிகாரத்தையும் ஏனோ தானோ என்று படிப்பதை விட்டுவிட்டு நேரமெடுத்து நாம் வேத வசனங்களை தியானிக்கும் போது அவர் நம்முடைய மன கண்களை திறப்பார். இவைகளெல்லாம் (. பழைய ஏற்பாடு)திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது. உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது. 1 கொரிந்தியர் 10:11 எசேக்கியேல் சண்முகவேல்

பணியை முடித்து பலனை இழந்த பாராக்கு.

படிக்க நியாயாதிபதிகள் புத்தகம் நான்காவது அதிகாரம் . இந்த அதிகாரத்தில் பாராக் *தேவனுடைய அழைப்பை தயக்கத்துடன் ஏற்றுக்* *கொண்டார்* . *முழுமையாக  தேவனுடைய திட்டத்தை நம்பவில்லை* . தேவனுடைய திட்டம் என்னவென்றால் “நான் யாபீனின் படைத்தளபதி சிசெராவையும், அவனுடைய இரதங்களையும், அவனுடைய படையையும் கீசோன் ஆற்றண்டையில் வரும்படி தூண்டி உன்னுடைய கையில் ஒப்படைப்பேன்"என்பதாகும் நியாயாதிபதிகள் 4:7. *ஆனால் இந்த வாக்குறுதியை அவன் முழுமையாக விசுவாசிக்காமல்* தெபோராளை உதவிக்கு அழைத்தார். அப்பொழுது தெபோராள் சொன்ன தீர்க்கதரிசனம் “ நான் உன்னோடேகூட நிச்சயமாய் வருவேன். ஆனாலும் நீ போகிற பிரயாணத்தில் உண்டாகிற மேன்மை உனக்குக் கிடையாது. கர்த்தர் சிரெசாவை ஒரு ஸ்திரீயின் கையில் ஒப்புக்கொடுப்பார்". என்பதாகும். நியாயாதிபதிகள் 4:9 இந்த தீர்க்கதரிசனத்தின் படி பாராக் சிசெராவின் படைகளை தோற்கடித்தான். சிரெசா கால்நடையாய் தப்பி ஓடி கேனியனான ஏபேரின் மனைவி யாகேலுடைய கூடாரத்திற்கு ஓடிவந்தான். அந்த நேரத்தில் சிரேசாவின் ராஜாவான யாபீனுக்கும் கேனியனான ஏபேரின் வீட்டுக்கும் நல்ல உறவு இருந்தது. நியாயாதிபதிகள் 4:17 இதுவே சிசெரா யாகேல் தன்னைக் காப்பாற்றுவாள் என்று நம்பி அவளிடம் அடைக்கலம் புகுந்தான். அவளும் முதலில் அவனைக் காப்பாற்ற நினைத்தாள், ஆனால் சிசேரா சொன்ன இந்த வார்த்தை அவள் மனதை மாற்றியது. சிசெரா அவளிடம், " நீ கூடாரவாசலில் நின்றுகொள். யாராவது வந்து, ‘இங்கு யாரேனும் இருக்கிறார்களா?’ சொல்" என்கிற இந்த வார்த்தை அவன் தோல்வி முகத்தில் இருக்கிறான் என்பதை உணர்த்தியது. எனவே அவனை காப்பாற்றினால் யூதர்களை பகைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணி தேவனுடைய தீர்க்கதரிசன நிறைவேறும்படியாக அவளே அவனை கொன்றாள். நியாயாதிபதிகள் 4:20. *பாராக் செய்ய வேண்டிய வேலையை யாகேல் செய்து விட்டாள்.* பாராக் அரை மனதோடு தயக்கத்தோடு தேவனுடைய வார்த்தையின் மீது முழுமையான விசுவாசம் வைக்காமல் தேவனுடைய பணியில் ஈடுபட்டான். அவன் பணியை முடித்தான் ஆனால் பலன் கிடைக்கவில்லை. சிசெராவை கொன்ற புகழை அவனால் பெற முடியவில்லை. *நாமும் கூட அநேக நேரங்களில் தேவனுடைய பணிகளை அரை மனதோடு, தேவன்* மீது *முழு விசுவாசம் வைக்காமல் ஏதோ கடமைக்காக செய்யும்போது பணியை முடித்து விடுவோம் .ஆனால் அதற்கான பலனை வேறு யாரோ பெற்று விடுவார்கள்.* மன மகிழ்ச்சியோடு விசுவாசத்தோடு, நம்பிக்கையோடு தேவனுடைய பணியை நாம் நிறைவேற்றும் பொழுது அதனுடைய முழுமையானபலனை நாம் பெற முடியும். இல்லையென்றால் பாரக்கை போல பணியை செய்வோம் பலனை இழந்து விடுவோம்.. நாமும் நமக்கு அழைக்கப்பட்ட பணியை சிறிதானதோ பெரிதானதோ மனமகிழ்ச்சியோடு செய்ய, தேவன் மீது முழு நம்பிக்கையோடு செய்ய கர்த்தர் நமக்கு கிருபை தருவாராக. எசேக்கியேல் சண்முகவேல்

எது தேவனுடைய கையில் உள்ள பலமுள்ள ஆயுதம்?

ஆனாத்தின் குமாரன் சம்கார் எழும்பினான். அவன் பெலிஸ்தரின் அறுநூறுபேரை ஒரு தாற்றுக்கோலால் முறிய அடித்தான்( *மாட்டை அடிக்கும் கம்பினால்).* அவனும் இஸ்ரவேலை இரட்சித்தான். நியாயாதிபதிகள் 3:31 ஏகூத் *இடது கை பழக்கம் உள்ளவன்* அவன் மோவாப் அரசன் எக்லோனை தன் வாளால் வெட்டி சாய்த்தான் .‌ *இந்த தேவனுடைய வார்த்தைகள் வரங்களே இல்லை என்று தவறாக எண்ணிக்கொள்ளும்* *விசுவாசிகளுக்கு மிகவும் உற்சாகமான* *வார்த்தைகள்* . கத்தி, வாள் ,ஈட்டி, குதிரைகள் என்று பலவிதமான கருவிகளை தங்களது வலது கையால் யுத்தத்தில் பயன்படுத்தயவர்கள்தான் பெரிய வீரராக கணித்த காலம் அது. ஆனால் இந்த *சம்கார்* *சாதாரண விவசாயி பயன்படுத்தும் மாட்டை அடிக்கும் கம்பினால் எதிரிகள் 600 பேரை கொன்றான் இந்த வேதம் சொல்லுகிறது. விசுவாசிகளுக்கும் . ஏதாவது ஒரு வரத்தை* *தேவன் கொடுத்திருக்கிறார். அந்த வரத்தை உணர்ந்து அது சிறிய* *வரமோ பெரிய வரமோ அதை பயன்படுத்தும் பொழுது தேவன்* *நம்மில் பிரியப்படுகிறார்* . *நமக்கு ஒன்றும் இல்லை என்று விசுவாசிகள் முடங்கி* *கிடக்க கூடாது. விசுவாசிகள் தங்களுக்கு எதில் ஆர்வம்* *இருக்கிறதோ அந்த காரியத்தில் ஏதாவது ஒரு ஒன்றை ஆண்டவருக்காக செய்ய வேண்டும். மோசேயும் பவுலும் நன்கு கற்று அறிந்திருந்தாலும் அவர்கள் நாவன்மை உடையவர்கள் அல்ல* ஆனாலும் அவர்கள் தேவ சித்தத்துக்கு தன்னை ஒப்புக்கொடுத்த போது தேவன் அவர்களை பயன்படுத்தினார். *நம்முடைய கைக்கு எது வாய்க்கிறதோ அதை* *முதலில் செய்ய பழக வேண்டும்.* *தலைவர்கள் ஊழியர்கள் நம்மை தூக்கி விடுவார்கள் என்று கனவில் நினைக்க வேண்டாம்.* நாம் எதையும் எதிர்பாராமல் கர்த்தரை நம்பி நாம் செய்கிற ஊழியம் சிறிய ஊழியமாக இருந்தாலும் நம்முடைய நோக்கங்கள் சரியாக இருந்தால் கடவுள் அதை நிச்சயமாக பெருக பண்ணுவார். *உலகத்தின் பார்வையில் பலவீனமான பாத்திரம் கருவி என்று* *கருதப்படுகிறவைகள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர்கள் கரங்களில் கூர்மையான பலமான ஆயுதமாக* மாறும் என்பது இந்த நிகழ்வின் மூலம் நாம் கற்றுக் கொள்ளலாம். *நம்மிடம் ஒன்றும் இல்லை என்று சொல்லி ஒன்றும் செய்யாமல்* *இருப்பதை காட்டிலும் நம்மிடம் உள்ளதை தேவன் கொடுத்ததாக* *நினைத்துக் கொண்டு ஆண்டவருக்காக செயல்படும்போது அந்த* *காரியத்தை தேவன் நமக்கு அந்த ஊழியத்தை வாய்க்கப்* *பண்ணுவார்* . சம்காரைப் பற்றி வேதத்தில் ஒரே ஒரு வசனம் தான் இருக்கிறது. நியா 3:31 ஆனால் அது நமக்கு போதிக்கும் பாடங்கள் பல. “ *Give whatever tools you have to the Lord, stand your ground courageously* and trust *Godto use what’s in your hand to accomplish great* *hings* for *His glory* . .charles spurgen* .. ஒவ்வொரு விசுவாசியும் ஒரு சம்காராக ஏகூத்தாக மாற எந்த தடையும் இல்லை. The world is looking for better methods, but God is looking for better men and women who understand the basics: the power of the Holy Spirit, wise strategy, and steadfast courage..EM Bound. Ezekiel Shanmugavel

பவுலும் பிலிப்பி பட்டணத்து சபையும்

பவுலும் பிலிப்பு சபையும் ஊழியரும் விசுவாசிகளும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பவுலும் பிலிப்பி பட்டணத்து சபையும் ஒரு முன்மாதிரி. பவுல் தன் வாழ்நாளில் 14 க்கும் மேலாக சபைகளை நிறுவியதாக சொல்லப்படுகிறது. 2ஆண்டுகளுக்கும் மேலாக எபேசு சபையில் மட்டும் தங்கி ஊழியம் செய்தார். ஆனால் பவுலின் மனதிலும், இதயத்திலும். ஜெபத்திலும் இடம் பிடித்த ஒரே சபை பிலிப்பி பட்டணத்து சபை மட்டும்தான். எந்த அளவிற்கு விசுவாசிகளும் பவுல் மீது அன்பையும் ஆதரவையும் பொழிந்தார்களோ அதே அளவிற்கு பவுலும் அந்த விசுவாசிகள் மீது ஒரு தனி பாசத்துடன் உறவு கொண்டுருந்தார். அந்த அன்பின் வெளிப்பாடு அவரது நிரூபங்களில் வெளியரங்கமாக தெரிகிறது . எனவேதான் இந்த நிருபத்தை “ *Loveliest letter of Paul” or “ The epistle of Excellent Things” என்று அழைக்கிறார்கள்.* *பிலிப்பு பட்டணத்து சபை பவுல் மீது காட்டிய அன்பு.* பவுல் விசாரனை கைதியாக ரோமாபுரி பட்டிணத்தில் house arrestல் இருக்கும் போதுஒருவரும், ஏன் எந்த சபையும் பவுலோடு அடியாளப்படுத்திக்கொள்ள தயங்கிய வேளையில் எப்பாப்பிரோதீத்துவை வெகுமதிகளோடு பவுலிடத்திற்கு அனுப்பி அவரை மகிழ்வித்த சபைச இந்த நகரத்து சபை.( பிலி 2:25-28,4:18) *பவுலின் பொருளாதார கஷ்டங்களில் ** *பிலிப்பு பட்டணத்து சபையை போல வேறு எந்த சபையும் பவுலுக்கு உதவி** *செய்ததில்லை.* பவுல் எழுதிய வார்த்தைகளை பாருங்கள் "ஆகிலும் நீங்கள் என் உபத்திரவத்தில் என்னோடே உடன்பட்டது நலமாயிருக்கிறது. மேலும், பிலிப்பியரே, சுவிசேஷத்தின் ஆரம்பத்திலே நான் மக்கெதோனியாவிலிருந்து புறப்பட்டபோது, கொடுக்கல் வாங்கல் காரியத்தில் நீங்கள்மாத்திரம் எனக்கு உடன்பட்டதேயல்லாமல், வேறொரு சபையும் உடன்படவில்லை என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் நான் தெசலோனிக்கேயிலிருந்தபோதும், என் குறைச்சலை நீக்கும்படி நீங்கள் இரண்டொருதரம் அனுப்பினீர்கள்”...( பிலி4:14-15) இப்படியாக பிலிப்பு பட்டணத்து சபை பவுலை விசாரித்த சபை, ஆதரித்த சபை, பாடுகளில் பங்கு பெற்ற சபை. *பவுலும் பிலிப்பு பட்டணத்து சபையை நேசித்த விதம்.* பிலிப்பு பட்டணத்து சபையை மனதில் பவுல் வைத்திருந்தார். பிலிப்பு பட்டணத்துசபைக்காக மகிழ்ச்சியுடன் வேண்டுதல் செய்தார். (“நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்போதும் சந்தோஷத்தோடே விண்ணப்பம்பண்ணி,” நான் உங்களை நினைக்கிறபொழுது என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். என் கட்டுகளிலும் --, நீங்கள் பங்குள்ளவர்களானதால்,” .( பிலி1:1-11) பிலிப்பு பட்டணத்து சபை பவுலுக்கு சந்தோஷமும் கிரீடமுமான சபை. .( பிலி4:1) இப்படியாக ஒவ்வொரு சபையும் விசுவாசிகளும் பிலிப்பிய பட்டணத்து சபையும் பவுலும் போல இருக்கவேண்டும். எசேக்கியல் சண்முகவேல்

He took flesh for an official purpose

" *அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை* மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து", எபி 5:6 *இந்த வாக்கியத்தில் "அவர் மாம்சத்திலிருந்த நாட்களில்* , " *என்கிற பதத்தை முக்கியப்படுத்தி வேண்டுகிறேன்.* அவர் தேவனுடைய குமாரனாகிய இருந்தும்  நம்முடைய பாவங்களுக்காக மாமிச சரீரத்தை ஏற்றுக்கொண்டார். *He took flesh for an official purpose.* அதனால் மாமிசத்தில் ஏற்படக்கூடிய தாகம் பசி களைப்பு தூக்கம் எல்லாம் அவருக்கு ஏற்பட்டது  அந்த பெலவீன மாமிச சரீரத்தில்,அவர்  கெத்சமனே தோட்டத்திலும்  கல்வாரியிலும்  அடைந்த வேதனை, பாடுகளில் வெளிப்பட்ட  ஜெபங்களை, விண்ணப்பங்களை  மாத்திரம் கணக்கில் கொள்ளாமல் அவர் வாழ்ந்த *காலம் முழுவதிலும் அவர்*  *கண்ணீரோடும் சத்தத்தோடு ஏறெடுத்த அத்தனை  ஜெபங்கள், விண்ணப்பங்கள்* , *கதறல்கள்  அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.* It *means the whole time of His humiliation* மார்க் 1:35 மத்தேயு 14:23,25 லூக் 6:12,22:39-42  இவைகளை தியானிக்க வேண்டுகிறேன்.1:35 இயேசுகிறிஸ்து வாழ்நாள் முழுவதும் பாடுகள் நிறைந்த மனிதராக மாத்திரம் காணப்படவில்லை, அவர் வாழ்நாள் முழுவதும்   கண்ணீரோடும், பலத்த சத்தத்தோடும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் ஏறெடுத்த  தேவ குமாரனாக காணப்பட்டார். அவர்  வாழ்ந்த நாட்கள் முழுவதும் இது அவருடைய  ஊழியத்தின் செயல்பாடாக காணப்பட்டது. அதுபோல் நாமும் நம்முடைய கஷ்ட நேரங்களில், இக்கட்டு நேரங்களில் தேவனை  நோக்கி பாரத்தோடும், கண்ணீரோடும், பலத்த சத்தத்தோடும்,   தேவ  சித்தத்தின்  மத்தியில் ஏறெடுக்கும்  எந்த ஜெபத்திற்கும் நிச்சயமாக பதில் உண்டு. இன்றைக்கு மக்கள் மத்தியில் காணப்படும் ஆராதனை, துதி பற்றிய கருத்துக்கள்  ஜெப சிந்தனையை நீர்த்து போகப் பண்ணாமல் அவைகளை  உற்சாகப்படுத்தும்  முறையில் இருக்க வேண்டும். துதிகள் ஆரவாரங்கள் அவசியம் தான். ஆனால் அதை விட மக்களுக்காக, தேசத்திற்காக நாம்  கண்ணீரோடும் சத்தத்தோடும் ஏறெடுக்கக்கூடிய ஜெபங்கள் மிகுந்த பயனுள்ளது. கண்ணீரோடு விதைக்கிற  மனிதன்தான் கெம்பீரமாய்  அறுவடை செய்ய முடியும். இயேசுகிறிஸ்து நமக்கு வைத்த முன்மாதிரி இதுதான். எசேக்கியல் சண்முகவேல்

பவுலின் நிருபங்களும் அப்போஸ்தலருடைய அதிகாரமும்.

பொதுவாக பவுல் தன்னுடைய நிருபங்களில் தன்னை அப்போஸ்தலனாக அறிமுகப்படுத்திக்கொண்டு சபைகளுக்கு எழுதுவதை பார்க்கலாம். பிலிப்பியருக்கும் தெசலோனிக்கியருக்கும் பிலேமோனுக்கும் எழுதிய நிருபங்களை தவிர மற்ற எல்லா நிரூபங்களிலும் தன்னை அப்போஸ்தலனாக அடையாளப்படுத்திக்கொள்கிறார். தான் நிறுவிய சபைகளிலே பவுலுக்கு பிடித்தமான அவருடைய இதயத்தில் இடம் பிடித்த ஒரே சபை பிலிப்பிய பட்டணத்து சபைதான் (2 கொரி 11:9,பிலி 4:1,16) மேலும் இங்கு அறிவுரை கூற வேண்டிய சூழ்நிலை இல்லை. அவர்கள் தானாகவே மிகுந்த அன்புடன் அவரின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள கூடியவர்கள். தெசலோனிக்கிய சபையை பொறுத்தவரையில் காலத்திய, கொரிந்து ,ரோமாபுரி, கொலோசிய சபைகளை போல பற்றிஎரியும், சரி செய்ய வேண்டிய காரியங்கள் ஒன்றும் இங்கில்லை. எனவே தெசலோனிக்கிய சபையைலும் அப்போஸ்தல அதிகாரத்தை பயன் படுத்த வேண்டிய தேவை எழவில்லை. *ஆனால் மற்ற ** *எல்லா இடங்களிலும், ஏன் தான் நிறுவிய கலாத்திய* *கொரிந்து* , *எபேசிய சபைகளில்* *கூட தன்னை அப்போஸ்தலன்என்று* *அறிமுகப்படுத்தி தன் அதிகாரத்தை பயன்படுத்தி கிறிஸ்துவ உபதேசத்தை நிலைநிறுத்துகிறார்.* அந்த சபைகளின் சூழ்நிலைகள், உபதேச குழப்படிகள் இவைகளை சரி செய்ய தனக்கு தேவன் அளித்த அப்போஸ்தல அதிகாரத்தை பயன்படுத்துகிறார். *எங்கே அதிகாரத்தை பயன்படுத்த வேண்டுமோ அங்கே பயன்படுத்துகிறார். எங்கே தேவை இல்லையோ அங்கே அவர் சாதாரணமாக தன்னை அடிமையாகவே அடையாள . படுத்திகொள்கிறார்.* *தன் அதிகாரத்தை ஒருபோதும் இறுமாப்பாக பவுல் பயன்படுத்தவில்லை.* *Right application of authority in right place is the need of the hour for ministers* of God *today* . மிக பெரிய அப்போஸ்தல அதிகாரத்தை நிரூபங்களில் கூட தேவை இல்லாமல் பயன்படுத்த விரும்பாத பவுலையும் இன்று உள்ள நிலையையும் ஒப்பிட விரும்புகிறேன். தங்களுக்கு தேவன் கொடுத்த ஊழிய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகிறதை நாம் கண்ணால் பார்க்கமுடிகிறது ஆவிக்குரிய பெருமை, இறுமாப்பு விவாசிகளிடம் காணப்படுவதை விட பன்மடங்கு நட்சத்திர பிரசங்கிகளிடம் காணப்படுகிறது. . லூசிபர் சாத்தனாக மாற காரணம் பெருமை தான் என்பதை மறந்து விடகூடாது “ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன், ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச் செய்தது”1கொரி 15:10 Ezekiel Shanmugavel

சாத்தானுக்கு நாம் தினசரி சொல்ல வேண்டிய செய்தி

அவனிடம்(எக்லோனிடம்) ஏகூத் கிட்டவந்து, “என்னிடம், *உமக்குக் கொடுக்கவேண்டிய இறைவனிடமிருந்து* *பெற்ற ஒரு செய்தி இருக்கிறது"* ”Ehud ,, approached him and said, ‘I *have a message from God* for you. இந்த வார்த்தை ஏகூத் எக்லோனை பட்டயத்தால் கொல்வதற்கு முன்பாக சொன்ன வார்த்தை. சாத்தான் எப்போதுமே நம்மை ஒரு பலவீனமான போர் வீரனாக காண்பிப்பான் தோல்விகளையே சந்திக்கிற மனிதனாக உலகத்துக்கு அறிமுகப்படுத்துவான். நம்முடைய பாடுகள் சோர்வுகள் இழப்புகள் இவைகளையே சுட்டிக்காட்டிக் கொண்டிருப்பான். எனவே அவனுக்கு நாம் சொல்ல வேண்டிய செய்தி என்னவென்றால், சாத்தானே நீ உன் பெருமையினால் பரலோகத்தில் இருந்து தள்ளப்பட்டு விட்டாய். நீ மேன்மையை இழந்தவன் அழிவுக்கென்று முன் குறிக்கப்பட்டவன். சாத்தானே உன்னை தேவ குமாரனாகிய கிறிஸ்து கல்வாரியில் வெற்றி கொண்டு விட்டார். சாத்தானே நீ தோற்கடிக்கப்பட்டவன் உன்னுடைய நாட்கள் எண்ணப்பட்டு கொண்டிருக்கிறது. உனக்கென்று ஒரு நரகம் ஆயத்தமாக இருக்கிறது. உன்னால் இரத்த சாட்சியாக மரித்த‌ தேவப் பிள்ளைகளின் குரல் உனக்கு எதிராக பரலோகத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. தேவனால் முன் குறிக்கப்பட்டவர்களை நீ பறிக்க முடியாது. நான் சபையாக உலக தோற்றத்திற்கு முன்பாக முன் குறிக்கப்பட்டவன். தேவன் எனக்கு அளித்த இரட்சிப்பு நித்தியமானது மாறாதது அழியாதது. அவர் என்னை வழுவாதபடி பாதுகாக்க வல்லவர். தேவன் என் மீது வைத்த அன்பை நீ பிரிக்க முடியாது தோற்கடிக்கப்பட்ட நீ தேவன் என் மீது கொண்டிருக்கும் நோக்கத்தை தோற்கடிக்க முடியாது.. *_You are a defeated foe.* *You cannot defeat God's purpose in my life* நான் கிறிஸ்துவின் சரீரத்தில் ஒரு உறுப்பாக இணைக்கப்பட்டுள்ளேன். என்னுடைய பணியை நீ தடுக்க முடியாது. இறைவன் எனக்கென்று ஒரு இடத்தை பரலோகத்தில் ஆயத்தம் பண்ணிக் கொண்டிருக்கிறார். சாத்தானே நித்தியத்தில் நீ நரகத்தில் இருப்பாய். நானோ மிகப்பெரிய பரிசுகளோடு கடவுளோடு நீடித்த நாட்களாக வாழ்வேன். இந்த பூமியில் நான் வாழும் கொஞ்ச காலத்தில் தேவன் என் மீது வைத்த அநாதி திட்டத்தை நீ தடுக்க முடியாது. நான் இந்த உலகத்தில் மறுபடியும் பரிசுத்த ஆவியினால் பிறந்தவன் . எனவே எனக்கு இந்த பூமியில் ஆவிக்குரிய மரணம் இனி எனக்கு கிடையாது தேவகுமாரனுடைய பிள்ளையாக‌ பிதாவினுடைய குடும்பத்தில் நான் காணப்படுவேன். உன்னுடைய முடிவு அப்படி அல்ல. இப்படி நாம் சாத்தானை பார்த்து சொல்லக்கூடிய செய்திகள் அநேகம். இந்த காரியங்களை சாத்தானை நோக்கி சொல்லிக் கொண்டே இருங்கள் . அப்பொழுதுநமக்குள் ஒரு புதிய வல்லமை, வெளிப்படுத்தல், ஒரு சந்தோசம் ஒரு மகிழ்ச்சி ஏற்படும். அன்றைக்கு ஏகூத் எக்லோனை பட்டயத்தாள் குத்தின மாதிரி தினமும் நாம் தேவனுடைய வசனமாகிய பட்டயத்தால் அவனை குத்திக் கொண்டே இருப்போம். Ezekiel Shanmugavel.

"அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம்பண்ணினார்கள். முதல்முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று."

"அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம்பண்ணினார்கள். முதல்முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று." *ஏன் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற* *பேர் வழங்கிற்று.?* *எருசலேம் சபை  இந்த பெருமையை ஏன் பெறவில்லை .?* உலக சபைகளின் வரைபடத்தில் முதலில் இடம் பிடித்தது எருசலேம் சபைதான். எருசலேம் சபை பல பல சிறப்புகளை கொண்டது. இயேசுவின் பிரதான கட்டளையை நேரிடையாக பெற்று கொண்டவர்களைத் தலைவர்களாக கொண்ட சபை. பரிசுத்த ஆவியின் அருள்மாரியை பெற்ற முதல் திருச்சபை. இயேசுவை மறுதலித்த பேதுரு பரிசுத்த ஆவியின் பலத்தினால் பேசின போது 3000 பேர்கள் சபையில் சேர்ந்த வரலாறு கொண்ட சபை, அடையாளங்கள், அற்புதங்கள், அற்புத சுகம் ஆகியவற்றை நடப்பித்த சபை. உபத்திரவங்களை சகித்த சபை, அனனியா, சப்பீராள் விவகாரத்தில் தேவனுடைய நேரடியான சந்திப்பை பார்த்த சபை. அதற்கு பின் அந்த வகையான தேவனுடைய தெய்வீக தண்டனையை( Divine punishment) வேறு எந்த ‌சபையும் பார்த்தது இல்லை. அப்போஸ்தல நடபடிகளின் புத்தகத்தில் முதல் அதிகாரத்திலிருந்து 6:7 வரை உள்ள நிகழ்வுகளை பார்க்கும் போது சபையின் பிரமாண்ட வளர்ச்சி தேவனுடைய கிரியையினால் ஏற்பட்டது என்று அறிந்து கொள்ளலாம். (Acts 2:41,4:4,5:14 and 6:7) வேத அறிஞர்கள் சொல்லுகிறபடி அப்போஸ்தல நடபடிகளின் புத்தகத்தில் 1 வது அதிகாரம் முதல் 6:7 வரை உள்ள நிகழ்வுகள் சுமார் 10 ஆண்டு கால இடைவெளியில் நடந்திருக்கலாம்.. இவ்வளவு ஆசீர்வாதங்களை பெற்ற சபை சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் ஏன்  வழங்கப்படவில்லை? எதோ தற்செயலாக நடந்த காரியம் இல்லை . ஆனால் அந்தியோகியா சபைதான் முதல் முதலாக எல்லா தரப்பட்ட மக்களையும் உள்ளடக்கிய  சபை  (யூதர்கள்  கிரேக்கர்கள்) இந்தஅந்தியோகியா   சபை எருசலேம் சபையால் ஆரம்பிக்கப்பட்ட சபையும் அல்ல. 12  அப்போஸ்தலர்களால் ஆரம்பிக்க பட்டதும் அல்ல ஆனால் அதே வேலையில்    பவுலையும் , பர்னபாவையும் உலகத்தின் பல இடங்களுக்கு அனுப்பியது இந்த சபைதான் . இந்த அந்தியோகியா சபையில் இருந்துதான் தேவ அரசு பூமியின் கடைசிபரியந்தமும் பரவியது.  " நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள் ' என்ற   தேவனுடைய  கட்டளையை   தரிசனமாக கொண்ட சபை பெயர் குறிப்பிடப்படாத   ஒரு சில தேவ பிள்ளைகளால் உண்டாக்கப்பட்டது. .அப்11:20 இந்த சபை மொழி சாதி இனங்களுக்கு அப்பாற்பட்ட சபை, ர இந்த சபைதான் பஞ்சத்தில் வாடிய யூத மக்களுக்கு உதவி செய்தது.(Acts 11:29). தேவனுடைய பிரதான கட்டளையை நிறைவேற்ற முடியாமல் எல்லா அப்போஸ்தலர்களும் எருசலேமில் முடங்கி கிடந்த போது அந்தியோகியா திருசபை புற இனத்தார்க்கு சுவிசேஷத்தை கொண்டு சென்று. புரட்சியை சரித்திரத்தில் உண்டாக்கியது.அப் 13:1-3 உலகளாவிய சிந்தையை உள்வாங்கிய சபை. எந்த சபை மொழி,  வட்டார, சாதி நிர்பந்தங்களுக்கு அடிபணிந்து பிரதான கட்டளையை புறக்கணிக்கின்றதோ அவர்கள்  "கிறிஸ்தவர்கள்" என்று அழைக்கபட தகுதி இழந்தவர்கள் ஆகி விடுகிறார்கள். எவ்ளவு பெரிய காரியங்களை சாதித்தாலும், எவ்வளவு பெரிய சபையாய் இருந்தாலும். தேவனின் பிரதான கட்டளையை நிறைவேற்ற தவறினால் தேவன் அந்த சபைகளை எருசலேம்  சபையை போல் கடந்து போய் விடுவார் . இது உண்மை . தமிழக திருச்சபை வரலாற்றில் பல உதாரணங்கள் உண்டு. Ezekiel Shanmugavel.

அங்கீகாரம் என்னும் சிலை வழிபாடு

"அன்பான பிள்ளைகளே உங்கள் இருதயங்களில் இறைவனின் இடத்தைப் பிடித்துக் கொள்ளும் விக்கிரக வழிபாட்டில் இருந்து உங்களை விலக்கிக் கொள்ளுங்கள்" இது யோவான் 5:21‌ன் சரியான மொழிபெயர்ப்பு. *இறைவனுக்கு கொடுக்க வேண்டிய இடத்தை எடுத்துக்* *கொள்ளும் எதுவுமே சிலை வழிபாடு தான்.* அது பண ஆசையாக இருக்கலாம், பெண்ணாசையாக இருக்கலாம், மண்ணாசையாக இருக்கலாம், வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையாக இருக்கலாம், புகழாசையாக இருக்கலாம், சில வேளைகளில் நம்மை மற்றவர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்கிற ஆசையாகக்கூட இருக்கலாம். நாம் மற்றவர்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று எண்ணுவது தவறல்ல. ஆனால் அது ஆண்டவருடைய ஊழியத்தில் அந்த சிந்தை மரமாகி வளரும்போது நம்முடைய நோக்கம் ஆண்டவருக்கு ஊழியம் செய்கிறோம் என்கிற சிந்தனையை தாண்டி பிறருடைய அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்கிற மிகப்பெரிய ஒரு ஆசை அல்லது வெறி நம் உள்ளத்தில் தோன்றும். இதுவும் ஒரு உருவ வழிபாடு தான் . நம்முடைய உள்ளத்தில் தேவன் குடியிருப்பதற்கு பதிலாக அங்கீகாரம் பெற வேண்டும் என்ற சிலை ஆட்கொண்டு விடும். இவ்வளவு உழைத்தும் நமக்கு அங்கீகாரம் இல்லையே, இவ்வளவு தியாகம் பண்ணியும் நம் தியாகங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லையே, நம்முடைய பரிசுத்தம் , ஒழுக்கம் கவனிக்கப்படவில்லையே, நம்முடைய ஊழியங்களை மற்றவர்கள் ஒரு பொருட்டாக கருதவில்லையே, நாம் இயக்கத்திற்கும் தலைவருக்கும் காட்டிய விசுவாசத்திற்கு ஏற்ற அங்கீகாரம் நமக்கு இல்லையே என்கிற பல ஆதங்கங்கள் உழைக்கின்ற ஒவ்வொரு விசுவாசிக்கும் ஏற்படும். இது இயற்கை. ஏனென்றால் பணம், ஜாதி, குடும்பம் இவற்றை முதலீடாக வைத்து முன்னேறுபவர்கள் ஒரு சிலர். வேலையே செய்யாமல் மற்றவர்களை காக்கா பிடித்து முன்னேறுபவர்கள் இன்னொருபகுதி. திறமை இல்லாதவர்கள், வேத அறிவு இல்லாதவர்கள் ,சரியான உபதேசத்தை போதிக்காதவர்கள், பண ஆசையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவர்கள் ‌ சபை தலைவர்களால் அங்கீகரிக்கப்படும் பொழுது நம்மை அறியாமலேயே அங்கீகாரம் என்கிற சிலைக்கு ஆராதனை செய்ய தூண்டும் சாத்தானுடைய வலையில் விழுந்து விடுகிறோம். *தேவனுக்கு ஊழியம் செய்ய வேண்டும் , என்கிற சிந்தனை* *மறைந்து நாம் மற்றவர்களால் அங்கீகாரம் பெற வேண்டும் என்ற சிந்தனை* *வளரும் பொழுது அது மிகப்பெரிய ஒரு சிலை வழிபாடாக* *மாறிவிடுகிறது.* இது ஒரு சிலை வழிபாடு என்பதை புரியாமல் நாம் அதில் மூழ்கி இருக்கிறோம். My எனவே அங்கீகாரம் என்கிற சிலையை நம் இதயத்தில் இருந்து எடுத்துவிட்டு கிறிஸ்துவில் உள்ள சிந்தை நம்மில் வளர தேவன் நமக்கு கிருபை தருவாராக *யோவான் சபைக்கு சொல்லும் இறுதி எச்சரிப்பு இதுதான் "விக்ரகங்களுக்கு* *விலகி இருங்கள்.* எசேக்கியல் சண்முகவேல்

நமது வேத அறிவு  மற்றவர்களுடைய ஆவிக்குரிய கண்களை திறக்கட்டும்

நாம்(விசுவாசிகள்) எத்தனை ஆராய்ச்சி வேதங்களைப் (Study Bible)படித்தோம், எவ்வளவு வேத வியாக்கியானங்களை (commentaries)படித்தோம், எத்தனை ஆராய்ச்சிக் கட்டுரைகளை படித்தோம், எவ்வளவு பெரிய ஆசிரியர்களின் கருத்துக்களை படித்தோம்  என்பதல்ல முக்கியம். நாம்(விசுவாசிகள்) அறிந்த சத்தியத்தை, விவரங்களை, கருத்துக்களை எந்த அளவுக்கு மற்றவர்களுக்கு கடத்தி அவர்களின் ஆவிக்குரிய சிந்தனைகளை   வளர்த்தோம் , அவர்களின் ஆவிக்குறிய கண்களை திறந்தோம் என்பதுதான் கர்த்தருடைய பார்வையில் முக்கியம். நாம் படித்த சிறந்த புத்தகங்களை ஆராய்ச்சி நூல்களை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தோமா ?அவர்களை அதை படிக்க ஊக்குவித்தோமா? பொருளாதாரத்தில் பலவீனமானவர்களுக்கு அதை வாங்கிக் கொடுத்தோமா ?இவைகள் தான் கர்த்தருடைய பார்வையில் சிறந்த ஊழியங்கள். நாம் (விசுவாசிகள்)எந்த அளவுக்கு நம்முடைய ஆவிக்குரிய அனுபவங்களை, அறிவை மற்றவருடைய வளர்ச்சிக்கு   பயன்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு  தேவன் நமக்கு கொடுத்த கிருபைகள்  வளரும் . நம்முடைய செல்வங்களை வறியவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பது போல, உதவி செய்வது போல, ஆவிக்குரிய தரித்திரத்தில் இருக்கும் விசுவாசிகளுக்கு நம்மால் முடிந்த அளவு நம்முடைய ஞானத்தை,  தேவன் கற்றுக்கொடுத்த அறிவை, நாம் அறிந்த தகவல்களை, வேத விளக்கங்களை புரியாத சத்தியங்களை புரிய வைக்கக் கூடிய காரியங்களை, செய்யும்போது அதில் தேவன் மிகவும் பிரியப்படுகிறார். ஆவிக்குரிய செல்வத்தை பகிர்ந்து கொடுப்பது என்பது ஒரு மிகப்பெரிய ஊழியம். அது சிறிய அளவில் இருந்தாலும் பெரிய அளவில் இருந்தாலும், நம்முடைய திராணிக்கு ஏற்ப நம்முடைய கைகளுக்கு எது வாய்க்கிறதோ, அதை செய்யும் பொழுது தேவனுடைய நாமம் மகிமைப்படும். இந்த ஊழியங்களை முழு நேரப் பணியாளர்கள் தான் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. இது முழு நேர பணியாளருக்கு போட்டியும் அல்ல. மற்றவருக்கு போதிக்கும் சத்தியங்கள் சரியாக, வேத வசனத்தின் படி இருக்கிறது என்று நாம் உறுதியாக நம்பும் பட்சத்தில் எதிர்ப்பை குறித்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை . நாம் பெற்ற இரட்சிப்பை அடக்கி மற்றவர்களுக்கு அறிவிக்காமல் இருப்பது எவ்வளவு தவறோ அதுபோல நாம் அறிந்த சத்தியங்களை ,தகவல்களை நம்மோடு பழகுகின்ற கிறிஸ்தவ நண்பர்களுக்கும் விசுவாசிகளுக்கும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதும் பாவம். தேவன் நம்மோடு இருக்கிறார். I கொரிந்தியர் 12 அதிகாரத்தை தியானிக்கவும். எசேக்கியல் சண்முகவேல்

Testing and training

கானான் தேசத்தில் நடந்த சகல யுத்தங்களையும் அறியாதிருந்த இஸ்ரவேலராகிய அனைவரையும் சோதிப்பதற்காகவும், இஸ்ரவேல் புத்திரரின் சந்ததியாரும் அதற்குமுன் யுத்தஞ்செய்ய அறியாதிருந்தவர்களும் அவைகளை அறியும்படி பழக்குவிப்பதற்காகவும், கர்த்தர் விட்டுவைத்த ஜாதிகள் யாரென்றால்: நியாயாதிபதிகள் 3:1&2 நாம் மறுபடியும் பிறக்கும்போது ஆவிக்குரிய குழந்தைகளாக இருக்கிறோம். . இந்த ஆவிக்குரிய குழந்தைகள் புருஷர்களாக வளர்வதற்கு தேவன் இரண்டு முறைகளை கையாளுகிறார்.. முதலாவதாக தேவன் கையாளும் முறை அவர் நம்மை சோதிப்பார். ,God will test us நாம் அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிகிறோமா, அவரை உண்மையிலேயே நேசிக்கிறோமா என்பதை அறிய நம்மை பாடுகளுக்குள்ளாக எதிர்ப்புகளுக்கு நேராக நடத்தி நம்மை சோதிப்பார். அதனால்தான் நாம் மறுபடியும் பிறந்தவுடன் நம்முடைய எல்லா பிரச்சினைகளும் முடிவுக்கு வந்து விடாது. சில பிரச்சனைகளின் வழியாக செல்ல நம்மை அனுமதிப்பார் . அந்த சோதனைகள்‌ நம் பின்னே தொடர்ந்து வரும். நாம் எவ்வளவு ஜெபித்தாலும் சில பாடுகளுக்கு சில வேளைகளில் பதில் உடனடியாக கிடைப்பதில்லை‌ காரணம் இதுதான். அடுத்தது பயிற்சி. ( **Training* ) *God will train us** இப்படி சோதிப்பதின் மூலம் தேவன் நம்மை ஆவிக்குரிய யுத்தத்திற்கு பயிற்சி கொடுக்கிறார். பிற்காலங்களில் ஆவிக்குரிய போர்க்களத்தில் சிறந்த வீரர்களாக காணப்பட இந்த ஆரம்ப பயிற்சி நமக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே சோதனைகளும் பயிற்சிகளும் நம்முடைய வாழ்க்கையில் பிரிக்க முடியாத தேவனுடைய திட்டங்களாக இருக்கிறது. இந்ததிட்டங்களை தேவன் ஆதி முதல் செயல்படுத்தி வருகிறார். யோசுவா கானான் தேசத்தில் எல்லா இனங்களையும் விரட்டி விடவில்லை.. ஏழு இனங்களை கானான் தேசத்திற்கு உள்ளாகவே தேவன் வைத்திருந்து இஸ்ரேல் ஜனங்கள் தமக்கு கீழ்ப்படிந்து அந்த ஜனங்களோடு கலக்காமல் இருக்கிறார்களா என்பதை அறிய விரும்பினார்..(யோசு 3:10,24:11) மேலும் ,யூத ஜனங்கள் போர்ப்பயிற்சி இல்லாத ஜனங்களாக காணப்பட்டார்கள். பின் நாட்களில் இவர்கள் வலிமையுள்ள போர் வீரரர்களாக காணப்பட இவர்களுக்கு போர் பயிற்சி அவசியம். எனவே புற ஜனங்களோடு போர் புரிந்து அவர்களை வெற்றி கொண்டு பின் நாட்களில் சிறந்த வீரர்களாக உருவாக தேவன் அந்த புற இனங்களை அவர்கள் அருகிலேயே வைத்திருந்தார். யூத ஜனங்கள் இந்த மக்களோடு போரிட்டு பின்னாட்களில் சிறந்த போர்வீரரர்களாக மாறுவதற்கு இந்த பயிற்சி தேவைப்பட்டது. தாவீது சாலோமன் போன்றவர்கள் பின் நாட்களில் யூத சாம்ராஜ்யத்தை உருவாக்குவதற்கு இப்படிப்பட்ட போர் வீரர்களை கொண்ட மக்கள் அவசியம். எனவே தேவன் அந்த ஏழு இன குழுக்களை அவர்கள் மத்தியில் வைத்திருந்தார். இதன் மூலம் தேவன் நமக்கு சொல்லும் பாடம். சோதனைகள், பாடுகள், வேதனைகள் இவைகள் நாம் தேவனை உண்மையாக பின்பற்றுகிறோமா என்பதை உணர்த்தும் கருவிகளாக நாம் பார்க்க வேண்டும். அடுத்தது இந்தப் பாடுகள் நம்மை ஒரு சிறந்த ஆவிக்குரிய போர் வீரராக மாற்ற பயன்படும். சோதனைகளே இல்லை என்ற சூழ்நிலைக்கு நம்முடைய வாழ்க்கையில் ஒரு நாளும் இடமில்லை. நம்முடைய ஒவ்வொரு காலகட்டத்திலும் தேவன் தமது திட்டத்தின் படி வாழ்க்கையில் சோதனைகளும் பாடுகளும் தொடர்ந்து கொண்டே இருக்கும். பாடுகளுடைய தன்மை, அதனுடைய காலம், அதனுடைய வேதனை எல்லா விசுவாசிகளுக்கும் ஒரே மாதிரி இருக்காது. இதை சரியாக புரிந்து கொண்டால் நம் வாழ்க்கையில் ஏற்படும் போராட்டங்களை பற்றி நமக்கு சலிப்பு ஏற்படாது. எசேக்கியே சண்முகவேல்

Testing and training

கானான் தேசத்தில் நடந்த சகல யுத்தங்களையும் அறியாதிருந்த இஸ்ரவேலராகிய அனைவரையும் சோதிப்பதற்காகவும், இஸ்ரவேல் புத்திரரின் சந்ததியாரும் அதற்குமுன் யுத்தஞ்செய்ய அறியாதிருந்தவர்களும் அவைகளை அறியும்படி பழக்குவிப்பதற்காகவும், கர்த்தர் விட்டுவைத்த ஜாதிகள் யாரென்றால்: நியாயாதிபதிகள் 3:1&2 நாம் மறுபடியும் பிறக்கும்போது ஆவிக்குரிய குழந்தைகளாக இருக்கிறோம். . இந்த ஆவிக்குரிய குழந்தைகள் புருஷர்களாக வளர்வதற்கு தேவன் இரண்டு முறைகளை கையாளுகிறார்.. முதலாவதாக தேவன் கையாளும் முறை அவர் நம்மை சோதிப்பார். ,God will test us நாம் அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிகிறோமா, அவரை உண்மையிலேயே நேசிக்கிறோமா என்பதை அறிய நம்மை பாடுகளுக்குள்ளாக எதிர்ப்புகளுக்கு நேராக நடத்தி நம்மை சோதிப்பார். அதனால்தான் நாம் மறுபடியும் பிறந்தவுடன் நம்முடைய எல்லா பிரச்சினைகளும் முடிவுக்கு வந்து விடாது. சில பிரச்சனைகளின் வழியாக செல்ல நம்மை அனுமதிப்பார் . அந்த சோதனைகள்‌ நம் பின்னே தொடர்ந்து வரும். நாம் எவ்வளவு ஜெபித்தாலும் சில பாடுகளுக்கு சில வேளைகளில் பதில் உடனடியாக கிடைப்பதில்லை‌ காரணம் இதுதான். அடுத்தது பயிற்சி. ( **Training* ) *God will train us** இப்படி சோதிப்பதின் மூலம் தேவன் நம்மை ஆவிக்குரிய யுத்தத்திற்கு பயிற்சி கொடுக்கிறார். பிற்காலங்களில் ஆவிக்குரிய போர்க்களத்தில் சிறந்த வீரர்களாக காணப்பட இந்த ஆரம்ப பயிற்சி நமக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே சோதனைகளும் பயிற்சிகளும் நம்முடைய வாழ்க்கையில் பிரிக்க முடியாத தேவனுடைய திட்டங்களாக இருக்கிறது. இந்ததிட்டங்களை தேவன் ஆதி முதல் செயல்படுத்தி வருகிறார். யோசுவா கானான் தேசத்தில் எல்லா இனங்களையும் விரட்டி விடவில்லை.. ஏழு இனங்களை கானான் தேசத்திற்கு உள்ளாகவே தேவன் வைத்திருந்து இஸ்ரேல் ஜனங்கள் தமக்கு கீழ்ப்படிந்து அந்த ஜனங்களோடு கலக்காமல் இருக்கிறார்களா என்பதை அறிய விரும்பினார்..(யோசு 3:10,24:11) மேலும் ,யூத ஜனங்கள் போர்ப்பயிற்சி இல்லாத ஜனங்களாக காணப்பட்டார்கள். பின் நாட்களில் இவர்கள் வலிமையுள்ள போர் வீரரர்களாக காணப்பட இவர்களுக்கு போர் பயிற்சி அவசியம். எனவே புற ஜனங்களோடு போர் புரிந்து அவர்களை வெற்றி கொண்டு பின் நாட்களில் சிறந்த வீரர்களாக உருவாக தேவன் அந்த புற இனங்களை அவர்கள் அருகிலேயே வைத்திருந்தார். யூத ஜனங்கள் இந்த மக்களோடு போரிட்டு பின்னாட்களில் சிறந்த போர்வீரரர்களாக மாறுவதற்கு இந்த பயிற்சி தேவைப்பட்டது. தாவீது சாலோமன் போன்றவர்கள் பின் நாட்களில் யூத சாம்ராஜ்யத்தை உருவாக்குவதற்கு இப்படிப்பட்ட போர் வீரர்களை கொண்ட மக்கள் அவசியம். எனவே தேவன் அந்த ஏழு இன குழுக்களை அவர்கள் மத்தியில் வைத்திருந்தார். இதன் மூலம் தேவன் நமக்கு சொல்லும் பாடம். சோதனைகள், பாடுகள், வேதனைகள் இவைகள் நாம் தேவனை உண்மையாக பின்பற்றுகிறோமா என்பதை உணர்த்தும் கருவிகளாக நாம் பார்க்க வேண்டும். அடுத்தது இந்தப் பாடுகள் நம்மை ஒரு சிறந்த ஆவிக்குரிய போர் வீரராக மாற்ற பயன்படும். சோதனைகளே இல்லை என்ற சூழ்நிலைக்கு நம்முடைய வாழ்க்கையில் ஒரு நாளும் இடமில்லை. நம்முடைய ஒவ்வொரு காலகட்டத்திலும் தேவன் தமது திட்டத்தின் படி வாழ்க்கையில் சோதனைகளும் பாடுகளும் தொடர்ந்து கொண்டே இருக்கும். பாடுகளுடைய தன்மை, அதனுடைய காலம், அதனுடைய வேதனை எல்லா விசுவாசிகளுக்கும் ஒரே மாதிரி இருக்காது. இதை சரியாக புரிந்து கொண்டால் நம் வாழ்க்கையில் ஏற்படும் போராட்டங்களை பற்றி நமக்கு சலிப்பு ஏற்படாது. எசேக்கியே சண்முகவேல்

தொழுகை வீரனின்

*சரீரத்துக்கு யாருக்கும் கிடைக்காத அரசு* *மரியாதை* .    வேதத்தில் யாக்கோபின் சரீரத்துக்கு கிடைத்த அரசு மரியாதையைப் போல, அதுவும் புற ஜாதி அரசாங்கத்தால் கிடைத்த மரியாதையை போல  வேறு யாருக்கும் கிடைத்ததாக  பார்க்க முடியாது. மிகப்பெரிய எகிப்திய சாம்ராஜ்யம் யாக்கோபின் மரணத்திற்காக 70 நாட்கள் துக்கம் கொண்டாடியது. *அவனுடைய அடக்க ஊர்வலத்தில் எகிப்து சாம்ராஜ்யத்தின் தேர்களும், குதிரை வீரர்களும்* *கொண்ட மிகப்பெரிய கூட்டம் காணப்பட்டது‌.* *எகிப்திய மக்களால் அருவருக்கப்பட்ட மேய்ப்பர் குலத்தை சேர்ந்த ஒருவனுக்கு இப்படிப்பட்ட மரியாதையை கர்த்தர் பார்வோன்* *மூலமாக வழங்கினார்.* தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட யூத குலத்தின் தகப்பனான யாக்கோபுக்கு கர்த்தர் கொடுத்த அங்கீகாரமாக இதை பார்க்கலாம். யாக்கோபும் தன்னுடைய இறுதி காலத்தை எகிப்தில் கழித்திருந்தாலும், தன்னுடைய சரீரம் தன்னுடைய முற்பிதாக்களின் கல்லறையில் வைத்து அடக்கம் செய்யப்படுவதை அவன் விரும்பினார் . தேவன் தன் முன்னோர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின அந்த கானானில் தன் சரீரம் அடக்கம் பண்ணப்பட வேண்டும் என்பதில் அவன் மிக உறுதியாக இருந்தார் . அதை தன் பிள்ளைகளிடம் ஒப்படைத்து. அதை நிறைவேற்றும் பொறுப்பை யோசேப்பிடம் ஒப்படைத்தார்.என்னதான் எகிப்தில் வசதியாக வாழ்ந்தாலும் அவன் இருதயம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானானை நோக்கியே இருந்தது  தன் சரீரம் தன் முன்னோர்கள் கல்லறையோடு அடக்கம் பண்ண வேண்டும் என்பதில் அக்கறையோடு இருந்தான். கர்த்தரும் அந்த ஆசையை பூர்த்தி செய்து அவருடைய சரீரத்திற்கு மிகப்பெரிய ஒரு அங்கீகாரத்தை கொடுத்தார். நாம் என்னதான் இந்த உலகத்தில் செழிப்பு உள்ளவர்களாக இருந்தாலும் நம்முடைய இருதயம் எப்பொழுதும் பரம கானானை, அதாவது நித்தியத்தை நோக்கியே இருக்க வேண்டும். யாக்கோபு தன்னுடைய வாழ்க்கையில் பலவிதமான தோல்விகள், ஏமாற்றங்கள், விரக்திகள் துன்பங்களை சகித்து இருந்தாலும், தன் அண்ணன் ஏசாவைப்போல் வழி விலகி கர்த்தருடைய சித்தத்தை விட்டு விலகாமல் தேவனுடைய அழைப்பில் உறுதியாக இருந்து அதை நிறைவேற்றிய மிகப்பெரிய விசுவாச வீரன் . அது மாத்திரமல்ல என் சரீரம் அங்கேயே புதைக்கப் பட்டாலும்.. தேவன். தன் சந்ததியை.திரும்ப  கானானுக்கு  திரும்பகொண்டு வருவார் என்று உறுதியாக நம்பினான் விசுவாச வீரர்கள் பட்டியலில் இவன் மட்டும்தான்   தொழுது கொண்டு மரித்தான்‌ என்றுப்படுகிறது.சொல்லப்படுகிறது..எபி11:21 இப்படிப்பட்ட தொழுகை வீரனுக்கு இந்த உலகத்தில்தேவன் கொடுத்த மரியாதை தான் அந்த அரசு மரியாதை என்று நான் கருதுகிறேன். எசேக்கியேல் சண்முகவேல்.

நியாயாதிபதிகள் புத்தகம் ஒரு பார்வை

யோசுவா உயிரோடு இருந்த நாட்களில் கானான் தேசத்தில் உள்ள எல்லா இடங்களையும் கைப்பற்றவில்லை. யோசுவா மறைந்த பிறகு மீதம் உள்ள மற்ற இடங்களை இஸ்ரவேல் ஜனங்கள் கைப்பற்றி அங்கே உள்ள மக்களை வெளியேற்றி அவர்களோடு இஸ்ரவேல் மக்கள் கலக்காமல் இருக்க வேண்டும் என்பதே தேவனுடைய சித்தம். எனவே யோசுவா மறைந்த பிறகு கானானில் உள்ள கைப்பற்றப்படாத இடத்தை இவர்கள் கைப்பற்றியிருக்க வேண்டும். ஆனால் இவர்கள் அதற்கு பதிலாக அங்குள்ள மக்களோடு இணைந்து கலந்த காரணத்தினால் அவர்களை சத்துருக்கள் கையில் தேவன் ஒப்புக்கொடுத்தார். அப்பொழுது அவர்கள் தேவனை நோக்கி கூப்பிட்ட போது இந்த நீதிபதிகளை எழுப்பினார். இந்த புத்தகத்தின் பின்னணி இதுதான். இந்த புத்தகத்தில் சொல்லப்பட் 12 நியாயாதிபதிகளின் செயல்பாட்டை பார்க்கும் பொழுது அவர்களது பணி என்பது நியாயாதிபதிகள் என்பதை விட ராணுவ தலைவர்களாக இருந்தார்கள் என்பதைபுத்தகத்தை படிக்கும் போது நாம் இதை அறிந்து கொள்ளலாம் ‌ They were military leaders rather than simply jurists. 12 நீதிபதிகளுக்கு தேவன் கொடுத்த வல்லமையின் படி கானான் தேசத்தில் உள்ள பிற இன மக்களை வெற்றிகொண்டு தேவனுடைய நீதி சட்டங்களை செயல்படுத்தினார்கள். இராஜாக்கள்புத்தகத்தில் சொல்லப்பட்டஇராஜாக்களுக்கும் இங்கு சொல்லப்பட்ட நீதிபதிகளுக்கும் என்ன வித்தியாசம் என்றால் இந்த நீதிபதிகள் உள்ளூர் தலைவர்களாக காணப்பட்டார்கள் (. Local leaders or tribal leaders)யூத தேசம் முழுமைக்கும் அவர்கள் தலைவர்களாக காணப்படவில்லை. எந்த ஒரு நீதிபதியும் முழுமையாக இஸ்ரவேல் தேசத்தை ஆண்ட தாக குறிப்பு இல்லை. .இவர்களுருடைய காலம் 325 ஆண்டுகள் இந்தப் புத்தகத்தில் 12 நீதிபதிகளை பற்றி குறிப்பிடப்பட்டிருந்தாலும் முக்கியமான நீதிபதிகள் கிதியோனும் சிம்சோனும்தான். கிதியோன் ஒரு பலவீனமான பயந்த நீதிபதி. தேவன் அவரை பராக்ரமசாலி என்று அழைத்தாலும் விசுவாசத்தில் வல்லவனாக காணப்படவில்லை. சிம்சோன் தேவன் கொடுத்த வரத்தை தவறாக பயன்படுத்தியவர்.. இந்த நீதிபதிகள் தங்கள் ஜனங்களின் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பெரிதாக எதையும் செய்து விட்டதாக குறிப்புகள் இல்லை. ஆனாலும் இவர்கள் பெயர்கள் விசுவாச வீரர்கள் பட்டியலில் காணப்படுகிறது. எபி 11:32 இந்த 325 ஆண்டு கால வரலாற்றை பார்க்கும்பொழுது தேவன் எதிர்பார்த்த ஆவிக்குரிய வளர்ச்சி இவர்களிடம் காணப்படவில்லை. யோசுவா மறைந்த பிறகு இவர்கள் மீதியுள்ள கானான் தேசத்தை கைப்பற்ற வேண்டும் என்பதுதான் தேவனுடைய நோக்கம். ஆனால் இதை இவர்கள் செய்யத் தவறி விட்டார்கள். இதற்கான காரணத்தை பற்றி ஒரு சில வேத பண்டிதர்கள் சொல்லுகின்ற கருத்து என்னவென்றால் இந்த யூத ஜனங்கள் 400 ஆண்டுகால எகிப்தின் அடிமைத்தனத்திலும் 40 ஆண்டு கால வனாந்தரத்திலும் வாழ்ந்த காரணத்தால் இவர்கள் கானான் தேசத்தில் வாழ்ந்த மக்களை விட ‌போர்யுக்தியிலும், ராணுவ தளவாடங்களிலும், இலக்கியத்திலும், நிர்வாகஅமைப்பிலும், பொருளாதார வளர்ச்சியிலும் இவர்கள் பின்தங்கி காணப்பட்டார்கள். எனவே இது அவர்களை சோதனைக்குt(Tempt) உட்படுத்தி அவர்களுடைய வழிகளைப் பின்பற்றி அவர்களோடு சமரசமாகி அவர்கள் தேவனை பின்பற்ற ஆரம்பித்து விட்டார்கள்என்று சொல்கிறார்கள்.. தங்கள் தேவன் தங்களை எப்படி அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கி கானானுக்கு அழைத்து வந்த மாபெரும் செயலை இவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. கர்த்தரை விட்டு விலகி அவரை மறுதலித்து பின்வாங்கிப் போனார்கள். 16 ஆவது அதிகாரத்திற்கு பிறகு சொல்லப்பட்ட நிகழ்வுகள் ஒரு தனிப்பட்ட நிகழ்வுகளாக தான் காணப்படுகின்றன. இவைகள் இந்த புத்தகத்தில் 16ஆவது அதிகாரத்திற்கு முற்பட்ட காலத்தில்தான் நடந்ததாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வேத பண்டிதர்கள் சொல்லுகிறார்கள். இந்த புத்தகத்தில் நாம் கற்றுக் கொள்ளக்கூடிய சத்தியம் என்னவென்றால் என்றைக்கு தேவன் நமக்கு வைத்திருக்கும் திட்டத்தை புரிந்து கொள்ளாமல் உலகத்தோடு சமரசமாக்கிக் கொள்கிறோமோ, என்றைக்கு இருக்கிற ஆவிக்குரிய நிலைமையே போதும் என்று நினைக்கிறோமோ அன்றைக்கு நாம் நம்மையும் அறியாமல் பிசாசின் வலையில் விழுந்து விடுவோம். அனேக விசுவாசிகளின் வாழ்க்கையில் இரட்சிப்பிற்குப் பிறகு தேக்க நிலை தான் காணப்படுகின்றது. salvation then next stagnationவாழ்க்கையில் முன்னேறி செல்லாமல் இருப்பதே பின்மாற்றத்திற்கான அறிகுறி. விசுவாசிகள் எந்த ஊழியம் செய்தாலும் They should go up Judges 1:1 விசுவாசிகளை தேவன் silent spectator ஆக சபையில் இருக்கஅழைக்கவில்லை. அவர்களுடைய செயல்பாட்டின் vibiration எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டும். அப்படி ஒவ்வொரு விசுவாசியும் தாங்கள் இருக்கிற இடங்களில் செயல்பட்டால் நிச்சயமாக சரீரமாகிய சபையின் உறுப்புகள் அனைத்தும் வேலை செய்யும் தேவனுடைய இராஜ்ஜியம் விரைவாக விருத்தி அடையும். இதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது . நியாயாதிபதிகள் புத்தகம் நமக்கு சொல்லும் பாடம் இந்த வேத குறிப்புகளுக்கு நான் பயன்படுத்த புத்தகங்கள் Willmington’s Bible Handbook The Bible Exposition commentary W.W.Wiersbe ESV Study Bible South Asia Bible commentary Dovotional commentray By Lawrence O Richards The Nelson Study Bible Bilievers Bible Commenray Ezekiel shanmugavel

மனுசனாகிய கிறிஸ்து எபி 5;1-4

பிரதான ஆசாரியனாய் இருப்பதற்கான  . தகுதிகள். 1முதலில் அவன் மனிதரில் தெரிந்துகொள்ள பட்டவனாய் இருக்க வேண்டும். He must be taken among men. 2மனுஷருக்காக தேவகாரியங்களை செயல்படுத்த நியமிக்கப்படவேண்டும் He must be ordained for men. 3 பாவங்களுக்காகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்துகிறவனாய் இருக்கவேண்டும் He must offer both gifts and sacrifices for sins.   ,4.. He must not exempt from infirmity. எப்படி என்றால் பிரதான ஆசாரியன் பலவீனமுள்ளவனானபடியினாலே  ஜனங்களுடைய பாவங்களுக்காகப் பலியிடவேண்டியதுபோல, தன்னுடைய பாவங்களுக்காகவும் பலியிட வேண்டும். ஆனால் இயேசு கிறிஸ்துவுக்கு அந்த நிபந்தனை அவசியம் இல்லை இந்த தகுதிகளை  குமாரனாகிய இயேசு கிறிஸ்து எவ்வாறு நிறைவேற்றினார் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம். முதலாவதாக அவர் மனிதரில் இருந்து தெரிந்து கொள்ளப்பட வேண்டும்,அதாவது மனிதனாக இருக்க வேண்டும். இந்த தகுதியை உடையவராக   மாறுவதற்குத்தான்  குமாரனாகிய தேவன் மனிதனாக அவதரித்தார் . .ஒரு பிரதான ஆசாரியன் எப்படி மனிதனாக இருந்து தேவனுடைய காரியங்களுக்காக பலிகளை செலுத்தினாரோ அதுபோல் தேவகுமாரன் மனிதனாய் அவதரித்து பாவங்களுக்காக தன்னையே ஒரே பலியாக   செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து இருக்கிறார். எபி 10:12 . *மனிதனாக  பிறந்து மனிதரில் தெரிந்து கொள்ளப்பட்டவராக இருக்காவிட்டால் தேவனுடைய குமாரனாக இருந்தாலும் பிரதான* *ஆசாரியனாக தன்னை தகுதிப்படுத்திக்* *கொள்ள முடியாது.* *காரணம் மனிதரால் தெரிந்து கொள்ளப்பட்ட பிரதான* *ஆசாரியனை தவிர வேறு யாரும் தேவனினை நெருங்க முடியாது.* If the son of god had never become man, He could not have officiated as priest.  He could never have offered that sacrifice for the Sins of His people which divine justice required required. It was necessary for Christ to become a real man. .A.W.PINK தொடரும். EZEKIEL 9444447744

நியாயாதிபதிகளின் புத்தகம் ஒரு முன்னுரை

உலகம் பொருட்டாகக் கருதுபவற்றை அவமாக்கும்படி, உலகத்தில் தாழ்ந்தவற்றையும், மக்களால் கீழ்த்தரமாக எண்ணப்பட்டவைகளையும், உலகத்தில் ஒன்றும் இல்லாதவைகளையும் அவர் தெரிந்துகொண்டார். இதனால், அவருக்கு முன்பாக ஒருவராலும் பெருமைபாராட்ட முடியாது. 1 கொரிந்தியர் 1:28-29. வேதத்தில் உள்ள 66 புத்தகங்களில் இந்த வசனத்திற்கு பொருத்தமான ஒரே புத்தகம் நியாயாதிபதிகள் புத்தகம்தான். இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டவர்ளை நாம் கவனித்துப் பார்த்தால் இது நமக்கு நன்றாக புரியும் . அற்பமானவர்களை எளியவர்களை பலவீனமானவர்களை பெயர்கூட அறியப்படாதவர்களை தேவன் எப்படி பயன்படுத்தினார் என்பதற்கு இந்த புத்தகம் ஒரு சிறந்த உதாரணம்.. 1.ஏகூத் இடது கை பழக்கம் உள்ளவன். அவன் இந்த இடது கையை பயன்படுத்திதான் மோவாபின் அரசனான எக்லோனை கொலை செய்தான் நியா 2:21 2.சம்கார் அவன் மாட்டை அடிக்கும் கம்பினால் அறுநூறு பெலிஸ்தியரை அடித்து வீழ்த்தினான். அவனும் இஸ்ரயேலைக் காப்பாற்றினான். நியாயாதிபதிகள் 3:31 3 பலவீனமான பாத்திரம் என்று கருதப்படும் பெண்மணியான தெபொராள் இஸ்ரேல் ஜனங்களை நியாயம் விசாரித்தாள்‌ 4 பாராக் பத்தாயிரம் காலாட் படைகளை வைத்துக்கொண்டு சீசெராவின் 900 இரும்பு ரதங்களைக் கொண்ட படையை தோற்கடித்தான் 5.ஏபேரின் மனைவி யாகேல் சிசெரா களைத்துப்போய் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும்போது, ஒரு கூடார முளையையும், சுத்தியலையும் எடுத்துக்கொண்டு சத்தமில்லாமல் சென்று அவனுடைய நெற்றியில் முளையை வைத்து அடித்தாள். அது அவனுடைய மூளையைத் துளைத்துக்கொண்டு தரைவரை சென்றது. எனவே அவன் இறந்தான். நியாயாதிபதிகள் 4:21 6. கிதியோன் 300 நபர்களைக் கொண்டு மீதியானியரை தோற்கடித்தான் . 7.ஒரு பெண் திரிகைக்கல்லை அபிமெலெக்கு தலைக்குமேல் எறிய அவனுடைய மண்டையோடு வெடித்தது. நியாயாதிபதிகள் 9:53 8. பெயர் குறிப்பிடப்படாத மனோவாவின் மனைவி பெற்றெடுத்த பிள்ளை சிம்சோன் ஆயிரம் பெலிஸ்தயரை கொன்றான். நம்மில் மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை. ஆனால் ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் நம்மை போன்ற பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்.. பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமான நம்மை தெரிந்துகொண்டார். மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார். 1 கொரிந்தியர் 1:29 எனவே நம்முடைய அடையாளம் இயேசு கிறிஸ்து மட்டுமே. ஜாதி இனம் மொழி பணம் கல்வி. குலப் பெருமை ஊர் பெருமை ஆகியவைகளை கொண்டு தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறவன் தன் வாழ்க்கையில் ஒருபோதும் தேவனுடைய திட்டத்தை நிறைவேற்ற மாட்டான். *இந்தப் பதிவின் மையக்கருத்து Believer's Bible commentary.ஐ தழுவி* *எழுதப்பட்டது* எசேக்கியல் சண்முகவேல் .

Our race and ministry

நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையில் இரண்டு பகுதிகள் உண்டு ஒன்று நம்முடைய ஆவிக்குரிய தனிப்பட்ட ஓட்டம்.(Race) மற்றொன்று நாம் தேவனிடம் பெற்ற ஊழியம்.(Ministry) நாம் மரிக்கும் போது இந்த இரண்டையும் மகிழ்ச்சியாக முடிக்க வேண்டும். இதுதான் பவுலடியாரின் விருப்பம் 'என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்." அப்போ 20:24 முழுநேர ஊழியர்கள் இந்த இரண்டையும் நிறைவேற்றும் பாக்கியம் பெற்றவர்கள். ஆனால் விசுவாசிகளுக்கு தங்களுக்கென்று ஒரு ஊழியத்தை தேவன் வைத்திருக்கிறார் என்ற எண்ணம் துளி கூட இல்லை. . நாம் கிறிஸ்துவினுடைய சரீரமாகிய சபையில் அங்கமாக இருக்கிறோம். ஒவ்வொரு அங்கத்திற்கும் சரீரத்தில் ஒரு வேலை (Function) உண்டு. நாம் சரீரமாகிய சபையில் நாம் என்னவாய் இருக்க அழைக்கபட்டிருக்கிறோம் என்பதை முதலில் உணரவேண்டும். கட்டிடங்களை தாண்டி யோசிக்க வேண்டும். நம்முடைய அழைப்பு 4 சுவருக்குள் இருக்கும் கட்டிடத்திற்குள்ளேதான் இருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. எனவே முதலில் தன்னுடைய அழைப்பை உணர்ந்து அதன்படி தேவனிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவேண்டும். ஓட்டத்தை நிறைவேற்ற நாம் செல்லும் சபை அவசியம். *VISIBLE CHURCH* *அதைபோல்* ஊழியத்தை நிறைவேற்ற *சரீரமாகிய சபையை (Invisible Church)பற்றிய ஒரு வெளிப்பாடு அவசியம்.* நம்முடைய ஓட்டமும் தேவன் நமக்கு தரும் ஊழியமும் ஆகிய இரண்டும், இரண்டு கண்கள் போன்றது. *ஓட்டத்தையும், ஊழியத்தையும் ஒன்றுசேர நிறைவேற்றுகிறவனே வெற்றியுள்ள விசுவாசி.* நமது தேவன் பட்சபாதம் உள்ளவரல்ல .மறுபடியும் பிறந்த எல்லோருமே ஓட்டத்தையும் ஊழியத்தையும் ஒருசேர நிறைவேற்ற அழைக்க பட்டிருக்கிறோம். எனவே விசுவாசிகள் தங்கள் ஆவிக்குரிய ஓட்டத்தில், தங்களுக்கு தேவன் அளிக்கும் ஊழியம் என்ன என்பதை அறிந்துகொள்ள ,தேவ சித்தம் தங்கள் அழைப்பில் நிறைவேற கருத்தாய் இருக்க வேண்டும் .அனுதின வேத தியானமும், ஜெபமும் தேவன் நமக்கு வைத்திருக்கும் ஊழியத்தை தெரிந்து கொள்ள உதவும் . *தசமபாகம் கொடுப்பதும் ஞாயிறு ஆராதனைக்கு செல்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் ஊழியத்தில் தன்னை குறித்த தேவ சித்தம் என்ன என்பதை விசுவாசிகள் கட்டாயம் அறிந்து செயல் படவேண்டும். வெறுமனே தன் *ஆவிக்குரிய ஓட்டத்தை மாத்திரம் ஓட தேவன்* *விசுவாசிகளை அழைக்கவில்லை.* தேவனுடைய ஊழியத்தையும் சேர்த்தே ஓட விசுவாசிகளை முன் குறித்திருக்கிறார். . மிகுந்த பலனுக்கேதுவான ஓட்டத்தை வீணடிக்க வேண்டாம் EZEKIEL SHANMUGAVEL

யோசேப்பின் எலும்புகள் சொல்லும் பாடம் என்ன?

மோசே இஸ்ரவேல் ஜனங்களோடு எகிப்து தேசத்தை விட்டு புறப்பட்ட அந்த நேரத்தில் யோசேப்பின் எலும்புகளையும் எடுத்து சென்றான் என்று பார்க்கிறோம் . யாத் 13:19 யோசேப்பு மரிக்கும் பொழுது தன் சகோதரர்களிடம் தேவன் முற்பிதாக்களுக்கு அளித்த வாக்குத்தத்தின்படி அவர்களை கானான் தேசத்திற்கு நிச்சயமாக அழைத்துச் செல்வார். அப்படி அழைத்துச் செல்லும்போது தன்னுடைய எலும்புகளையும் கொண்டு செல்லுங்கள் என்று வேண்டிக் கொண்டான்.ஆதி50:24-25 இதுதான் யோசேப்புனுடைய வாழ்கையில் விசுவாசத்தினுடைய சிறந்த பகுதி என்று எபிரேய நிருபத்தில் பார்க்கலாம் .எபி11:22 . இது யோசேப்பின் விசுவாச வாழ்க்கையின் ஒரு சிறப்பான பகுதி தான். அதில் எந்த மாற்றமும் இல்லை . ஆனால் அதைப்போல வேறொரு சிறந்த பகுதி என்னவென்றால் எகிப்து தேசத்தை விட்டு புறப்படுகின்ற அந்த நெருக்கடியான அந்த நேரத்திலும் கூட மோசே மறவாமல் யோசேப்பின் எலும்புகளை எடுத்துச் சென்ற அந்த காரியம் தான். மோசே அரண்மனையில் வளர்ந்ததாக இருந்தாலும் அவனை குறிப்பிட்ட காலம் வரை வளர்த்தது அவனுடைய தாய் .அவன் தன் தாயின் மூலமாக தன் இனத்தினுடைய வரலாற்றை அறிந்து கொண்டு தங்களுடைய முற்பிதாக்களுக்கு தேவன் அளித்த வாக்குத்தத்தங்களை புரிந்து கொண்டான். யோசேப்பு மறைத்து 400 ஆண்டுகள் கடந்த பிறகும் கூட தேவன் தங்களை சந்திப்பார் என்கிற விசுவாசம் அந்த யூத மக்களுக்கு தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டதுதான் மிக சிறப்பான ஒரு காரியம். மிக நெருக்கடியான நேரத்திலும், அடிமைத்தனத்திலும் ,கஷ்டப்பட்ட நேரத்திலும் யோசேப்பு சொன்னது போல தங்களை தேவன் சந்திப்பார், தங்களுக்கு உதவி செய்வார் ,யோசேப்பின் எலும்புகள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்கிற விசுவாசத்தோடு அந்த ஜனங்கள் காத்திருந்த அந்த காரியம் உண்மையிலேயே ஆச்சரியப்படத்தக்க காரியம். நாமும் கூட நம்முடைய அடுத்த தலைமுறைக்கு கர்த்தருடைய மகத்துவங்களை, நமக்கு செய்த அதிசயங்களை, கடத்த கடமைப்பட்டிருக்கிறோம். நமக்கு ஒப்புவிக்கப்பட்ட சிறந்த சத்தியங்களை நம்முடைய தலைமுறைக்கு கடத்த நாம்‌ கடனாளிகளாய் இருக்கிறோம். அப்படிபட்ட‌ ஒரு காரியத்தை நாம் செய்யத் தவறினால் அடுத்த தலைமுறை கிறிஸ்தவத்தை நாம் உருவாக்க முடியாது . யூத மக்கள் அவ்வளவு நெருக்கத்திலும் அடிமைத்தனத்திலும் தங்கள் தலைமுறைக்கு அந்த விசுவாசத்தை கடத்தினார்கள். அதை மோசேயும் பற்றிக் கொண்டு தவறாமல் ,மறந்து விடாமல் யோசேப்பின் எலும்பை கானானுக்கு எடுத்துச் சென்றான். யோசேப்பின் சரீரம் புதைக்கப்படாமல் கல்லறைக்குள் வைக்கப்பட்டு 400 ஆண்டுகள் பாதுகாக்கப்பட்டது தேவனுடைய அதிசயம். யோசேப்பின் எலும்புகளை பாதுகாத்து தேவன் யோசேப்பின் விசுவாசத்தை கனம் பண்ணினார். சரியான சத்தியங்கள் போதிக்கப்படாத இந்த காலகட்டத்தில் நாமும் நாம் அறிந்த சத்தியங்களை, உயர்ந்த கருத்துக்களை, போதனைகளை நம்முடைய குழந்தைகளுக்கு போதித்து அவர்களை அடுத்த தலைமுறைக்கு வளர்க்க நாம் கடமைப்பட்டவர்களாக , இருக்கிறோம். இதுவே குடும்பம் என்கிற முறையில் பெற்றவர்கள் செய்கின்ற மிகப்பெரிய ஊழியம் எசேக்கியல் சண்முகவேல்

தகுதியற்ற முறையில் திருவிருந்தில் பங்கு பெறுவது என்றால் என்ன?

ஆனபடியால், யாராவது தகுதியற்ற விதத்தில் அப்பத்தைச் சாப்பிட்டாலோ, கர்த்தருடைய பாத்திரத்தைக் குடித்தாலோ, அவன் கர்த்தருடைய உடலுக்கும், அவருடைய இரத்தத்திற்கும் எதிராகப் பாவஞ்செய்யும் குற்றவாளியாகின்றான். 1 கொரிந்தியர் 11:27 இதனாலேயே உங்களில் பலர் பலவீனத்திற்கு உள்ளாகி வியாதிப்பட்டும் இருக்கிறனர். உங்களில் சிலர் மரண நித்திரைக்கும் உள்ளானார்கள். 1 கொரிந்தியர் 11:30 இந்தக் கருத்தை தியானிப்பதற்கு முன்பாக இந்த வார்த்தையை எதற்காக பவுல் பயன்படுத்துகிறார்? அதனுடைய சூழ்நிலை என்ன என்பதை நாம் முதலில் பார்க்க வேண்டும். . கொரிந்து நகரத்து சபை ஆவிக்குரிய வரங்களை பெற்று ஜொலித்த சபையாக இருந்தாலும் அந்த சபை மகிமை இழந்த கறை படிந்த பிளவுகள் நிறைந்த சபையாகும். உலக மக்களும் செய்ய தயங்குகிற விபச்சார பாவங்கள் நிறைந்த சபையாக காணப்பட்டது. சபைக்குத் தலைவராக காணப்படுகின்ற இயேசுவை பின்பற்றாமல் விசுவாசிகள் சபைத் தலைவர்கள், அப்போஸ்தலர்கள் இவர்களோடு தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்களாக காணப்பட்டார்கள். இல்லாதவர்களை சிறுமைப்படுத்தி பிரிவினையோடு காணப்பட்ட சபை. இப்படிப்பட்ட சபையில் தான் திருவிருந்தில் எப்படி பங்கு கொள்ள வேண்டும் என்று பவுல் இந்த இடத்தில் குறிப்பிடுகிறார். அதுவும் குறிப்பாக 11 வது அதிகாரத்தில் அவர் சொல்லிய வார்த்தைகளை கவனிக்கவும் "சாப்பிடவும் குடிக்கவும் உங்களுக்கு வீடுகள் இல்லையோ? நீங்கள் இறைவனுடைய திருச்சபையை அவமதித்து, எளியவர்களை வெட்கப்படுத்துகிறீர்கள்.." 1 கொரிந்தியர் 11:22 இந்த வார்த்தைகளை சொல்லிவிட்டுதான் அவர் திரு விருந்தைப் பற்றி குறிப்பிடுகிறார் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் பவுல் கூறியதை பார்க்கலாம் எனவே, ஒவ்வொருவனும் அப்பத்தைச் சாப்பிட்டு, பாத்திரத்திலிருந்து குடிக்குமுன், தன்னை ஆராய்ந்து பார்க்கவேண்டும். 1 கொரிந்தியர் 11:28 ஒருவன் கர்த்தருடைய உடல் என்ற உணர்வு இல்லாமல், இதைச் சாப்பிட்டு குடித்தால், அவன் தன்மேல் நியாயத்தீர்ப்பை வருவித்துக்கொள்வதற்காகவே சாப்பிட்டுக் குடிக்கிறான். 1 கொரிந்தியர் 11:28-29 சபை என்பது தேவனுடைய சரீரம். நம்மை அந்த சபையின் உறுப்புகளாக பகுதிகளாக நம்மை கடவுள் இணைத்து இருக்கிறார். சபை கிறிஸ்துவின் சரீரம் என்பதையும் நாம் அதன் உறுப்புகள் என்பதையும் கொஞ்சம் கூட சிந்திக்காமல் தேவன் இணைத்த நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் அதற்கு மாறான செயல்களில் ஈடுபட்டுக் கொண்டே திரு விருந்தில் பங்கு பெறுகிறவன் தேவனுடைய சரீரத்தை பற்றி அக்கறை இல்லாமல் பங்கு பெறுவது என்பது தகுதி இல்லாமல் பங்கு பெறுவதற்கு சமம்.. இந்த இடத்தில் பவுல் வலியுறுத்தி சொல்கிற இரண்டு பாவங்கள் 1. பிரிவினைகள் . இனத்தின் அடிப்படையிலோ, மொழியின் அடிப்படையில் சமூக அந்தஸ்தின் அடிப்படையிலோ எப்படிப்பட்ட பிரிவினையாக இருந்தாலும் அந்தப் பிரிவினைக்கு காரணமானவர்கள் தங்களை உணராமல் திருவிருந்தில் பங்கு கொள்வதுதான் தகுதியற்ற பங்கேற்பு என்று நான் கருதுகிறேன். இந்த இடத்தில் இதே கடிதத்தில் மூன்றாவது அதிகாரத்தில் பவுல் சொல்லிய வார்த்தைகளை நாம் நினைவு கூற வேண்டும்.சபையில் காணப்படுகின்ற பிரிவினைகளை சுட்டிக்காட்டிவிட்டு இறுதியில் பவுல் இப்படி எழுதுகிறார் "யாராகிலும் ஒருவன் இறைவனுடைய ஆலயத்தை அழித்தால், இறைவன் அவனை அழித்துப்போடுவார். ஏனெனில், இறைவனின் ஆலயம் பரிசுத்தமானது; நீங்களே அந்த ஆலயம்'. 1 கொரிந்தியர் 3:17 தேவனுடைய சரீரமாகிய ஆலயத்தை கெடுப்பவர்களை தேவன் அழித்து விடுவார் என்று சொல்கிறார். எனவே சபைக்குள் பிரிவினையை உண்டாக்குபவர்கள் அடையப் போகிற தண்டனை என்பது மிகவும் கொடியது. பிரிவினை என்பது மொழி, இன, வர்க்க பேதங்களின் அடிப்படையில் அல்லது எந்த வகையில் இருந்தாலும் அது வேதத்தின்படி தவறு. தேவன் இந்த உலகத்தில் பிரித்தெடுத்து அவர்களை ஒரே சரீரமாக்கிய நோக்கத்தை இந்த பிரிவினைகள் கெடுத்து விடுகிற காரணத்தால் தேவன் இதை கடுமையாக இவர்களை நடத்துவார். 2. அடுத்தது பாவம் உலக மக்களும் வெறுக்கக்கூடிய பாவங்களை தொடர்ந்து செய்து கொண்டு நாம் தேவனுடைய சரீரத்தில் அங்கமாக உறுப்புகளாக இருக்கிறோம் என்கிற ஒரு பயமில்லாமல் கவனயீனமாக பொறுப்பற்ற முறையில் தேவனுடைய சரீரத்தை கணவீனம் பண்ணுகிற விதத்தில் அவருடைய சரீரத்தையும் அவருடைய இரத்தத்தையும் அலட்சியம் பண்ணி திருவிருந்தில் பங்கு பெறுபவர்கள் சரீர மரணத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்என்பதும் இங்கு சொல்லப்படக்கூடிய முக்கியமான கருத்து. 1கொரி 5:1-5 சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால்இந்த இடத்தில் தகுதி இல்லாமல் பங்கெடுப்பது என்று பவுல் சொல்லுவது சமூக அந்தஸ்தின் அடிப்படையில் பிரிவினைகளை ஏற்படுத்துவதையும் அஞ்ஞானிகளும் செய்ய நடுங்கும் பாவங்களை துணிகரமாக செய்வதையும் ஆகிய இரண்டு பாவங்கள் செய்து கொண்டு திருவருந்தில் பங்கெடுப்பதையுமே ஆகும். இதைக் குறித்து மூன்று வேத அறிஞர்களின் கருத்தை இங்கே பதிவிடுகிறேன். According to William MacDonald Whoever eats this bread or drinks this cup of the Lord in an unworthy manner will be guilty of the body and blood of the Lord. We are all unworthy to partake of this solemn Supper. In that sense, we are unworthy of any of the Lord's mercy or kindness to us. But that is not the subject here. The apostle is not speaking of our own personal unworthiness. Cleansed by the blood of Christ, we can approach God in all the worthiness of His own beloved Son. But Paul is speak- ing here of the disgraceful conduct which characterized the Corinthians as they gathered together for the Lord's Supper. They were guilty of careless, ir- reverent behavior. To act thus is to be guilty of the body and blood of the Lord. According to William Barclay (i) It may mean that the man who eats and drinks unworthily does not realize what the sacred symbols mean. It may mean that he eats and drinks with no reverence and no sense of the love that these symbols stand for or the obligation that is laid upon him. (ii) It may also mean this. The phrase the body of Christ again and again stands for the Church; it does so, as we shall see, in 1Cor.12. Paul has just been rebuking those who with their divisions and their class distinctions divide the Church; so this may mean that he eats and drinks unworthily who has never realized that the whole Church is the body of Christ but is at variance with his brother. Every man in whose heart there is hatred, bitterness, contempt against his brother man, as he comes to the Table of our Lord, eats and drinks unworthily. So then to eat and drink unworthily is to do so with no sense of the greatness of the thing we do, and to do so while we are at variance with the brother for whom also Christ died. According to W.W.Wiersbe The Supper should be a demonstration of the unity of the church—but there was not much unity in the Corinthian church. In fact, their celebration of the Lord’s Supper was only a demonstration of their disunity. The Lord’s Supper is a family meal, and the Lord oft he family desires that His children love one another and care for one another. It is impossible for a true Christian to get closer to his Lord while at the same time he is separated from his fellow believers. How can we remember the Lord’s death and not love one another? “Beloved, if God so loved us, we ought also to love one another” (1 John 4:11) Ezekiel shanmugavel

ஈசாக்கு, யாக்கோபின் இறுதிக்கால வேதனைகள்.

வயதான பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகளினால் ஏற்படக்கூடிய அவமானம் அல்லது பிள்ளைகளின் பிரிவு என்பது அவர்கள் அதுவரை அனுபவித்த கஷ்டங்கள் எல்லாவற்றிலும் மிகவும் கொடுமையானது. இப்படிப்பட்ட பாடுகளை முதலில் அனுபவித்தவன் யார் என்றால் ஈசாக்கு தான். நேசித்த மகனுக்கு தான் விரும்பிய வண்ணம் ஆசீர்வதிக்க முடியாமல் தன் இளைய மகன் யாக்கோபினால் வெள்ளாட்டுத் தோலினால் ஏமாற்றப்பட்டான் .இதன் நிமித்தம் ஏசா தகப்பனை விட்டு வேறு இடத்திற்கு புறப்பட்டு சென்று விட்டான்.அதற்குப் பிறகு ஈசாக்கை ஏசா சந்தித்ததாக இல்லை. கடைசியாகஏசாவும் யாக்கோபும் தன் தகப்பனை அடக்கம் செய்ததாக பார்க்கலாம். அப்படி என்றால் ஈசாக்கின் வேதனை எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்பதை நாம் உணரலாம். அதே வேதனையைத்தான் யாக்கோபு அனுபவித்தான். எப்படி தன் தகப்பனை ஆட்டு தோல் மூலமாக ஏமாற்றினானோ அதேபோல் தன்னுடைய பிள்ளைகள் ஆட்டு ரத்தத்தின் மூலமாக தான் பிரியமாக நேசித்த யோசேப்பு இறந்து விட்டதாக சொல்லி அவனை ஏமாற்றி மிகுந்த துக்கத்துக்குள் ஆளாக்கினார்கள். தான் நேசித்த ரேச்சலின் மூத்த மகனை அவள் மறைவுக்கு பின்பு அவன் அதிகமாக நேசித்தான். ஆனால் அவன் மரிதத்ததாக சொல்லப்பட்ட நிகழ்வு அவனை மிகவும் பாதித்தது. தான் தன் தகப்பனை எப்படி ஏமாற்றினானோ அதேபோல் தன்னுடைய பிள்ளைகள் தன்னை ஏமாற்றியதை அறிந்து அவன் எப்படி மனம் வருந்தி இருப்பான்? நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் 1.வயதான காலத்தில் பெற்றோர்களை சந்தோஷப்படுத்த வேண்டிய பொறுப்பு பிள்ளைகளுக்கு உண்டு. 2.அதேபோல் நாம் மற்றவர்களுக்கு எந்த துன்பத்தை தெரிந்தே கொடுக்கிறோமோ அதே துன்பத்தை நாமும் பின் நாட்களில் நிச்சயமாக சந்திப்போம், ஆதி37:33-35,35:29,36:6 எசேக்கியேல் சண்முகவேல்

ஓட்டத்தை ஜெயமாக முடித்த யேசுவா.

நான் ஆவிக்குரிய போராட்டத்தை நன்றாகப் போராடினேன். எனக்கு ஒப்புவிக்கப்பட்ட ஓட்டத்தை ஓடி முடித்தேன். என் விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். 2 தீமோத்தேயு 4:7. இப்படி பவுலைப் போல பழைய ஏற்பாட்டில் தேவன் கொடுத்த பணியை முழுவதுமாக நிறைவேற்றிய ஒரு சில தேவனுடைய மனிதர்களில் யோசுவாவும் ஒருவர். எகிப்தில் அடிமையாக பிறந்து பின்பு மோசேயின் வேலைக்காரனாக இருந்து அதற்குப் பிறகு மோசே மரித்த பிறகு தலைமை பொறுப்பை ஏற்று லட்சக்கணக்கான யூதர்களை வழிநடத்தி யோர்தானை கடந்து கானான் பிரதேசத்தில் அநேக இடங்களை வெற்றிகொண்டு அவர்களுக்கு தேவனுடைய சித்தத்தின் படி இடங்களை பிரித்துக் கொடுத்து தன்னுடைய ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்தவர் இந்த யோசுவா. He was a god's prepared servant for a prepared place. ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு மேலாக மோசேயின் கீழ் பணிபுரிந்து மோசேனுடைய தலைமைத்துவ பண்புகளை அனைத்தும் கற்றுக் கொண்டு அதற்குப் பிறகு இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தக்கூடிய கிருபையை தேவனிடத்தில் இருந்து பெற்ற ஒரு மனிதர். யோசுவாவிடம் காணப்பட்ட சில முக்கிய குணங்கள். 1. தாழ்மையுள்ள மனிதன். கடைசி மட்டும் மோசேக்கு உண்மை உள்ள வேலைக்காரனாக, கீழ்ப்படிதல் உள்ளவராக தேவன் தன்னை உயர்த்தும் வரைக்கும் கீழ்ப்படிந்த மனிதர். மிகப் பிரம்மாண்டமான வெற்றிகளை கண்டாலும் பெருமை கொள்ளாமல் இறுதி மட்டும் கர்த்தருடைய சித்தத்திற்கு அடிபணிந்து வாழ்ந்த மனிதர் 2. விசுவாசம் உள்ள மனிதர். 12 பேர்களை கானான் தேசத்தை வேறு பார்க்க அனுப்பிய போது அவர்கள் திரும்பி வந்து அவர்களில் பத்து பேர்கள் கூறிய அவிசுவாச வார்த்தைகளினால் ஜனங்கள் கலக்கமடைந்த போது அதை எதிர்த்து நின்ற 2 மனிதர்களில் யோசுவாவும் ஒருவர். யெகோவா எங்களில் பிரியமாயிருந்தால், பாலும் தேனும் வழிந்தோடும் அந்த நாட்டிற்கு எங்களை வழிநடத்தி அதை எங்களுக்குத் தருவார் என்று விசுவாசத்தோடு காலேபோடு சொன்னவர் (எண்ணாகமம் 14:8).. விசுவாசத்தை செயலில் காட்டியவர். 3. இவர் சிறந்த தைரியம் உள்ள போர் தளபதி. இவர் அமலேக்கோடு நடத்திய முதல் போரிலேயே வெற்றி பெற்றவர். பின்பு போர் பயிற்சி எதுவும் பெறாத அடிமைகளான யூதர்களை கொண்டு கர்த்தர் துணையோடு கானானில் உள்ள புற இன மக்களை துரத்தினார். ,லட்சக்கணக்கான யூதர்கள் இவருடைய தலைமையில் யோர்தானைக் கடந்தார்கள். எரிகோவின் மதில்கள் விழுந்தது. இவருடைய விண்ணப்பத்திற்கு தேவன்செவி கொடுத்து சூரியனும் சந்திரனும் நடுவானத்தில் தரித்து நின்றது.. இதுபோல் ஒரு நிகழ்வை இதற்குப் பிறகு இந்த உலகம் கண்டதில்லை. 4 தோல்விகள் வரும்போது பிழைகளை ஒப்புக்கொண்டு முன்னேறிய மனிதர். ஆயி பட்டணத்தில் ஏற்பட்ட தோல்வியிலும், கிபியோனின் குடிகளோடு தேவனுக்கு சித்தமில்லாமல் சமாதான உடன்படிக்கை செய்த காரியத்திலும் தன் தவறை ஒத்துக் கொண்டு பயணத்தை தொடங்கியவர் He didn't quit... யோசுவா சிறந்த நிர்வாகி. யோர்தானுக்கு அப்புறம் உள்ள இடங்களை ரூபன், காத், மனசேயின் பாதி கோத்திரத்துக்கும் பிரித்துக் கொடுத்தார். கானான் தேசத்தில் கைப்பற்றிய இடங்களை லேவி கோத்திரத்தை தவிர‌ மற்ற கோத்திரங்களுக்கும், லேவி கோத்திரத்துக்கு‌ 48 பட்டினங்களையும் குழப்பம் இல்லாமல் பிரித்துக் கொடுத்தார். பலவித கிருபைகளைக் பெற்ற யோசுவா தேவன் தன்னை அழைத்த அழைப்பில நின்று ஓட்டத்தை ஜெயமாக முடித்தார்.. எகிப்தில் அடிமையாக வாழ்க்கையை ஆரம்பித்த யோசுவா இவ்வளவு மிகப்பெரிய சாதனையை பெற்றார் என்றால் அது தேவனுடைய கிருபை When God ordains our service He is morally obligated to see us throughm. Oswald Sanders. Ezekiel Shanmugavel

போலியான பாவ அறிக்கை . போலிகளை குறித்து எச்சரிக்கையாக இருங்கள்

" அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: நான் இந்த முறை பாவம் செய்தேன். " யாத்திராகமம் 9:27 இப்படி பார்வோனைப் போல் "நான் பாவம் செய்தேன்" என்று சொல்லியவர்கள் பிலேயாம், ஆகான், சவுல், யூதாஸ், மற்றும் தாவீது. எண்ணா22:34(பிலேயாம்),யோசு7.20(ஆகான்)1சாமு15:24,30,26:11,2சாமு19:20,மத்27:4. ஆகிய இந்த வசனங்களை தியானிக்கவும். ஆனால் இப்படி சொன்னவர்களில் தாவீதைத் தவிர மற்றவர்கள் உண்மையான மனம் திரும்புதலோடு(True repentance)இந்த வார்த்தையை சொல்லவில்லை. அவர்களுடைய பாவ அறிக்கையும், அதற்கு பின்னால் அவர்களுடைய‌வாழ்க்கையும் நேர்கோட்டில் பயணிக்கவில்லை. பார்வோன் இறுதி வரை மனம் திரும்பவே இல்லை. யூதஸ் தற்கொலை பண்ணிக் கொண்டான்.பிலேயாம் கொலை செய்யப்பட்டான்.ஆகான். கல்லெறிந்து கொல்லப்பட்டான். ஆனால் தாவீது மட்டும் உண்மையான மனம் திரும்பதலோடு கர்த்தரோடு ஒப்புரவாகி புது வாழ்வு பெற்றான். நம்முடைய பாவ அறிக்கைகள்‌ போலியாக, மாய் மாலமாக வெளி வேசத்திற்காக இருக்க கூடாது. உண்மையான மனந்திரும்புதல் பரிசுத்த ஆவியானவரின் கிரியை. போலியான மனம் திரும்புதல் சாத்தானின் செயல்பாடு. போலியான மனந்திரும்புதல், *போலியான அர்ப்பணிப்பு போலியான மன்னிப்பு போலியான* *பாராட்டுக்கள் மற்றவர்களின் ஆவிக்குரியவாழ்க்கைக்கு இடறலாக இருக்கும்.* *போலிகள் சாத்தானின் வேலையாட்கள்* . அவர்கள் விசுவாசிகளாகவும் இருக்கலாம், முழு நேர பணியாளர்களாகவும் இருக்கலாம். இவர்களை அவ்வளவு எளிதாக அடையாளம் கண்டு கொள்ள முடியாது. இன்றைய காலகட்டங்களில் இந்த போலிகள் தலைமை மட்டத்தில் அதிகமாக காணப்படுகின்றது. உண்மை என்கிற ஆயுதம் மிகச் சிறந்த ஆயுதம். என்ன செய்வது இப்பொழுது உள்ள ஆவிக்குரிய உலகம் போலிகளை தான் அதிகமாக நம்பி இருக்கிறது. ஒரு சில நேரங்களில் இவர்கள் கடைசி வரைக்கும் மற்றவர்களால் அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் போய்விடுவார்கள். இவர்களின் போதித்தனம் நியாயத்தீர்ப்பின் நாளில் தான் வெளிப்படும். இப்படி போலியான மனந்திரும்புதலை உடைய நபர்களால் நம் வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்க கர்த்தர் நம்மை பாதுகாத்துக் கொள்வாராக. சகோ.எசேக்கியல் சண்முகவேல்

கானான்-நில பகிர்வு-யோசேப்பின் குமாரரின் முறையீடு-காலேபின் விசுவாசம்-ஒரு ஒப்பீடு.

படிக்க யோசுவா 17வது அதிகாரம். யூதா கோத்திரத்திற்கு நிலம் பிரித்துக் கொடுக்கப்பட்ட பிறகு அடுத்தது யோசேப்பின் புத்திர்களுக்கு பிரித்தளிக்கப்பட்டது. ரூபன் மூத்த மகன் என்கிற உரிமையை இழந்த காரணத்தினால் அந்த உரிமையை யாக்கோபு யோசேப்புக்கு அளித்தார். யோசேப்பின் இரண்டு பிள்ளைகளையும் தன்னுடைய பிள்ளைகளாக தத்தெடுத்துக் கொண்டார். இப்பொழுது சீட்டு போட்டு யோசேப்பின் பிள்ளைகளுக்கு கொடுக்கப்பட்ட நிலத்தில் அவர்கள் திருப்தி அடையவில்லை. அவருடைய வாதம் என்னவென்றால் எங்களுடைய மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்றபடி நிலம் வழங்கப்படவில்லை என்பது .17-14-18. மேலும் அந்த இடம் மலைகளால் சூழப்பட்ட இடம். அதே சமயத்தில் சமவெளியில் வாழ்கின்ற மற்ற இனத்தார் இரும்பு இரதங்களை கொண்டிருக்கிறார்கள் என்பதாகும். அவர்கள் வைத்த வாதம் 'நாங்கள் மலை தேசத்தை பயன்படுத்திக் கொள்ள மாட்டோம். அதே சமயத்தில் சமவெளியில் வாழ்கின்றவர்கள் இரதங்களை வைத்திருக்கப்படியால் அவர்களை மேற்கொள்ள எங்களால் முடியாது, எனவே எங்களுக்கு கூடுதலான இடத்தை கொடுங்கள்' என்று கேட்டார்கள். அதற்கு யோசுவா சரியான பதிலை 17:15,17,18.ல் பார்க்கலாம். அதாவது மலைநாட்டை வெட்டி பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள்மக்கள் பெருக்கத்தை கொண்டு இரதங்களை வைத்துள்ள அவர்களை மேற்கொள்ள உங்களால் முடியும் என்று சொல்லி அவர்கள் கோரிக்கையை நிராகரித்து விட்டான். இந்த இடத்தில் காலேபின் விருப்பத்தையும் யோசேப்பின் குமாரரின் முறையீட்டையும் ஒத்துப் பார்க்க வேண்டும். ஏனாக்கின் வம்சத்தில் வந்த ராட்சதர்களை மேற்கொள்ள மலை தேசமான எபிரோனை எனக்குத் தாருங்கள் என்று இன்று சவாலிட்ட காலேபு எங்கே? பெருங்கூட்ட ஜனமாக இருந்தாலும் இரதங்களை வைத்துள்ள புற இனத்தாரை வெற்றி கொள்ள முடியாது என்கிற அவிசுவாச வார்த்தைகள் கூறும் இவர்கள்எங்கே? காலேபு கர்த்தருக்கு இதயசுத்தியோடு உத்தமமாக நடந்தான் என்று வேதத்தில் ஆறு தடவை வருகிறது. அவன் வித்தியாசமான ஆவி உடையவனாக காணப்பட்டான்.எண்ணா14:24. உலகத்தோடு சமரசம் செய்து கொள்ளாமல் உலகம் பார்க்கின்றபடி பார்க்காமல் தேவனுக்கு உத்தமமாய் நடந்து வேறு ஆவி உடையவர்களாக வாழ்கின்ற விசுவாசிகளே இந்த உலகத்தில் மக்கள் முன்பாக ஒரு பாதிப்பை ஏற்படுத்த முடியும். "Those who talk the most accomplish the least"Wiersbe . Practical man says," Seeing is believing!". But the man of faith replies, "Believing is seeing!” நாமும் எந்த நிலையில் இருந்தாலும் நம்முடைய நிலையில் தேவனுக்கு உண்மையாக நடந்து உலகத்தின் ஆவியை பெறாமல் வேறு ஆவியை உடைய மக்களாக மாறும் பொழுது நாமும் ஒரு காலேபாக மாற முடியும் சகோ.எசேக்கியல் சண்முகவேல்

பவுலும்கொரிந்து சபையும் (1)

பவுல் உண்டாக்கிய சபைகளிலேயே அவருக்கு மிகவும் சவாலாக இருந்தது கொரிந்து சபைதான். சபையை ஆரம்பித்ததிலிருந்து அதை நிலைநிறுத்தியது வரை அவர் சமாளித்த சவால்கள் ஏராளம் ஏராளம். இங்கு சபையை உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. கொரிந்து பட்டிணம் ஒரு மிக பெரிய வணிக நகரம். .கடற்கரை நகரமும் கூட.செல்வ செழிப்பில் ஊறின நகரம்.அதே வேளையில் விபச்சாரம் வேசித்தனம் குடி போதை போன்ற பாவங்களில் உச்சத்தை தொட்ட நகரம். சரீரத்தில் செய்யும் எந்த பாவமும் ஆவிக்குரிய காரியங்களை கட்டுப்படுத்தாது என்கிற கிரேக்க தத்துவத்தை பின்பற்றுகிற நகரம். This worst aspect of thinking of separation of the physical and spititual was prevalent in Corinth city. இதன் விளைவாகத்தான் பவுல் "உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? என்று கூறுகிறார். மேலும் இந்த நகரத்தில் ‘Aphroite” என்கிற கோயில் இருந்தது . அதில் உள்ள 1000கும் மேலான கோவிலிலுள்ள (தேவதாசிகள்) sacred prostitutes தினமும் மலை நேரங்களில் விபசாரத்திற்காக வருகின்ற நிகழ்வுகளும் உண்டு. "Paul would be forgiven for wondering if people so busy woud ever have time to listen to the Gospel." இந்த சவாலான நகரத்தில் தேவனுடைய சபையை பவுல் உருவாக்கினதே ஒரு மிக பெரிய தேவனுடைய கிரியை. கொரிந்து நகரத்தை சந்தித்த தேவன் எந்த நகரத்தையும் சந்திக்க வல்லமையுள்ள தேவனாயிருக்கிறார். இந்த நகரத்தில் 18 மாதங்கள் தங்கி ஊழியம் செய்து பலதரப்பட்ட மக்களை மந்தைக்குள் கொண்டுவந்தார் . ஆனல் அவர் போன பிறகு சில ஆண்டுகளுக்குள் அந்த சபை பிரிந்து கறைபட்டு மகிமை இழந்த சபையாக மாறிவிட்டது. It became divided, defiled, and disgraced Chruch. தான் வளர்த்த, ஆதரித்த, இடைவிடாமல் ஜெபித்த அந்த சபை, தன்னுடைய தோற்றத்தை,பேச்சை, அப்போஸ்தல அதிகாரத்தை நேர்மையை கேள்விக்குள்ளாக்கியது. நாம் 2 கொரிந்தியார் அதிகாரம் 10 முதல் 13 வரை படித்தால் பவுலுடைய கதறலை படிக்கலாம். வேறு எந்த சபையிலும் அவர் இங்கு போல் வேறு எங்கும் இவ்வாறு அவமானப்பட்டு மனம் உடைந்தது இல்லை . இதில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடத்தை அடுத்த பதிவில் பார்க்கலாம் எசேக்கியேல் சண்முகவேல்

மோசேயை ஆண்டவர் அழைத்த போது அந்த அழைப்புக்கு கீழ்ப்படியாமல் அவன் சொன்ன காரணங்கள்.

1 தனக்கு திறமை இல்லை.Lack of capability‌ "நான் எம்மாத்திரம் " யாத்3:11 2.தன்னிடம் இஸ்ரவேலுக்கு சொல்ல வேண்டிய செய்தி ஒன்றும்  இல்லை. Lack of messages "நான் என்ன சொல்லுவேன்"    யாத்  3:13 3..தனக்கு அதிகாரம் இல்லை . Lack of authority யாத் 4:1 4.பேச்சில் வல்லவன் இல்லை. Lack of eloquence. “நான் வாக்கு வல்லவன் அல்ல”    யாத்  4:10 5. பழைய தோல்வி Lack previous success 6:12 என்று சொல்லி  தேவனின் அழைப்பை நிராகரிக்கிறான். இது மேலெழுந்த வாரியாக பார்த்தால் மோசேயின் மீது நமக்கு ஒரு எரிச்சல் வரும். ஆனாலும் அவன்  மறுத்த காரணங்களில் அர்த்தங்கள் இல்லாமல் இல்லை. அவனுடைய வாழ்க்கையை நாம் சற்று கவனித்துப் பார்ப்போம் என்றால் இது புரியும். பார்வோனுடைய அரண்மனையில் இருந்தாலும் அவனுடைய பாரம் தன் சொந்த ஜனங்களை பற்றியதாக இருந்தது. எவ்வளவு பாரம் உள்ளவனாய் இருந்திருந்தால்  எகிப்தியரோடு போராடி அவர்களை கொலை செய்திருப்பான். சொந்த ஜனங்கள் அன்றைக்கு அவனை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் அவனுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை . தான்  யூதர்களோடு பேசி அவர்களை சம்மதிக்க வைக்க கூடிய வார்த்தை அல்லது அதிகாரம்தன்னிடம் இல்லையே என்கிற ஒரு வருத்தம். தான் எவ்வளவுதான் மிகப்பெரிய இடத்திலிருந்து வந்தாலும் அதை யூதர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததால், அவனை அங்கீகரிக்க மறுத்த காரியம். யூதர்களின் புறக்கணிப்பு. பார்வோன் அவனைப் பிடிக்க வந்தபோது  மீதியான் தேசத்திற்கு தப்பி ஓடிய காரியம் . 40 வருடங்கள் வனாந்தரத்தில் வெறுமையாக வாழ்ந்த காலங்களில் . வசதி வாய்ப்புகளை இழந்து ஜனங்களுக்காக வைராக்கியமாக இருந்தாலும் அவர்கள்  தன்னை    ஏற்றுக் கொள்ளவில்லையே என்கின்ற வருத்தம். இந்த விரக்தியின் அடிப்படையில் தான் அவன் இந்த மாதிரி ஒரு காரணங்களை சொல்லி அழைப்பை  மறுத்திருக்கிறான். தன்னை முழுமையாக அறிந்திருந்தான். எனவே மோசேயின் மீது நாம் மேலிருந்து வாரியாக குற்றம் சுமத்த‌ முடியாது. அதையும் ஆண்டவர் உணர்ந்திருந்த காரணத்தினால் தான் அவனை அப்படியே புறந்தள்ளி விடாமல், கோபம் கொண்டாலும் அவனுடைய வாயாகஆரோனை நியமித்தார் .அவனைக் கொண்டு தேவன் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றினார் J.Oswald  Sanders என்கிற தேவ மனிதர் இந்த ஒரு தாழ்மைதான் மோசேயை கர்த்தர் தேர்ந்தெடுக்க காரணம் என்று சொல்லுகிறார். ஆம் உண்மையாகவே தன்னை முழுவதுமாக உணர்ந்த, தன் நிலைமை அறிந்த தாழ்மையுள்ள மனிதனை இன்றும் தேவன் தேடிக் கொண்டிருக்கிறார். எசேக்கியல் சண்முகவேல்

சாத்தான் மிகவும் அதிகமாக வெறுக்கிற இரண்டு புத்தகங்கள்.

ஒன்று ஆதியாகம புத்தகம். இரண்டு யோவானுக்குவெளிப்படுத்தின விசேஷம். ஆதியாகம புத்தகத்தில் முதல் இரண்டு அதிகாரங்களை தேவனே எழுதினார் என்று நம்பப்படுகின்றது. வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தில் யோவான் தான்கண்ட தரிசனங்களை மட்டுமே எழுதினார். இந்த இரண்டு புத்தகங்களும் மிகவும் மற்றவர்களால் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்ட புத்தகங்கள். ஆதியாகம புத்தகத்தில் சாத்தானுடைய முடிவு நிர்ணயிக்கப்படுகிறது. வெளிப்படுத்தின விசேஷத்தில் அந்த முடிவுஅமல்படுத்தப்படுகிறது. ஆதியாகம புத்தகத்தை புரிந்து கொள்ளாமல் கல்வாரியை புரிந்துகொள்ள முடியாது. மற்ற எல்லா புத்தகங்களைவிட இந்த புத்தகங்களை பற்றிய தெளிவான அறிவு முழு வேதத்தை முழுமையாக புரிந்து கொள்ள உதவும். Main inspiration from “unlocking the Bible” by David Pawson. எசேக்கியேல் சண்முகவேல்

“One great brotherhood”

“பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே “எபி 3:1 நம்முடைய அழைப்பு என்பது, விண்ணக அல்லது பரலோக அழைப்பு. யூதருடைய அழைப்பு இந்த மண்ணை சார்ந்தது. ஆனால் நம்முடைய அழைப்பு, பரத்திலிருந்து வந்த அழைப்பு. தேவனுடையஅழைப்பின் அடிப்படையில் நாம் தேவனுடைய பிள்ளைகளாய் மாறி இருக்கிறோம். மனந்திரும்பி, ஆவியானவருடைய அனுக்கிரகத்தால் அவருடைய பிள்ளைகளாய் நாம் மாறும்பொழுது இந்த அழைப்பில் பங்கு பெறுகிறோம். இந்த அழைப்பில் பங்கு பெறுகிற எவரும், எல்லோரும் சகோதர, சகோதரிகளே. இந்த சகோதரத்துவ அழைப்பு, கிறிஸ்தவத்தின் அடிப்படை உபதேசம். யாரெல்லாம் ஆண்டவருடைய இரத்தத்தினாலும் அவருடைய வார்த்தைகளினாலும்‌ சுத்திகரிக்கப்பட்டு தேவனுடைய பிள்ளைகளாக மாறுகிறார்களோ அவர்கள் எல்லோரும் தேவனுடைய சகோதர சகோதரிகளே. ஏனென்றால் வேதத்தில் " *பரிசுத்தஞ்செய்கிறவரும் பரிசுத்தஞ்செய்யப்படுகிறவர்களுமாகிய* *யாவரும் ஒருவரால் உண்டாயிருக்கிறார்கள்;* *இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்"* என்று எபிரேய நிருபத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. . எபி2:11 *அதாவது குமாரனும் அவர் பரிசுத்தம் பண்ணுகிற பிள்ளைகளும் பிதாவினால் உண்டாயிருக்கிறபடி அவர்கள் சகோதரர்கள் என* *கருதப்படுவார்கள் என்று அர்த்தம்.* இப்படியிருக்க நாம் எல்லோரும் சகோதர சகோதரிகளாக இருக்கிறோம். இதில் எந்த சமரசமும் செய்து கொள்ளக்கூடாது. மத்தேயு எழுதின சுவிசேஷத்தில் இவ்வாறாக இயேசு கிறிஸ்து கூறுவதை பார்க்கலாம். “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார்”. மத்தே12:50 கட்டிடங்களோ, சபை உபதேசங்களோ வேதம் போதிக்கும் “One great brotherhood” ஐ நீர்த்துப்போகப் பண்ணக்கூடாது. இந்த சகோதரத்துவம் மொழி, ஜாதி, இன எல்லைகளைக் கடந்தது. வர்க்கங்களை கடந்தது. ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், திறமை உள்ளவன், திறமை இல்லாதவன், அழகு உள்ளவன், அழகு இல்லாதவன் , ஞானி, அறிவில்லாதவன், படித்தவன், படிக்காதவன் என்கிற எல்லைகள் எல்லாம் கடந்து இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு, மறுபடியும் பிறந்த எவரும் அவருடைய மிகப்பெரிய சகோதரர் குடும்பத்தில் அங்கமாய் இருக்கிறோம்.(Great brotherhood) இதை நாம் மறந்து விடக்கூடாது. நம்முடைய சபை பிரிவுகள், கட்டடங்கள், உபதேச கோட்பாடுகள், நம்மை இந்த ஒரு பெரிய சகோதரத்துவ கோட்பாட்டை விட்டு விலகிச் சென்றுவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். CSI, TPM, PENTICOST, AG,BROTHERN போன்ற சபை பிரிவினைகள், “நாம் சகோதரர்கள்” என்கிற அடித்தளத்தை அசைக்கக் கூடாது. ஆண்டவர் சொல்லுகிற அந்த வார்த்தைகளே நமக்கு முக்கியம். அவருடைய விருப்பத்தின்படி, சித்தத்தின்படி செய்கிற எவனும் அவருடைய பிள்ளைகள். அதன் அடிப்படையில் நாம் எல்லோரும் சகோதரர்கள். நம்முடைய சகோதரத்துவத்தை ஒரு குறிப்பிட்ட ஜாதி, நாடு, இனம் ,மொழி என்கிற குறுகிய வட்டத்திற்குள் சுருக்கி விடக்கூடாது. இது தேவனுடைய சித்தம் அல்ல. தேவன் இணைத்த இந்த சகோதரத்துவத்தை பிரிக்க வேண்டாம். இது உயர்ந்த கிறிஸ்தவ பண்பாடு. தேவனுடைய இரட்சிப்பாகிய இந்த பரம அழைப்பில் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் அனைவரும் நம் சகோதரரே. உபதேசங்களின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுவது அல்ல இந்த நம்முடைய சகோதரத்துவ உறவு. ஒருவன் எந்த அளவுக்கு தேவனுடைய சித்தத்தை செய்கிறான் என்பதை வைத்துதான் அவன் நம்முடைய சகோதரனா, இல்லையா என்பதை முடிவு செய்யவேண்டும். இந்த உபதேசத்தை பின்பற்றினால் இவன் என்னுடைய சகோதரன். இல்லையென்றால் இவன் எனக்கு சகோதரன் அல்ல என்று கூறுவது வேதத்திற்கு முரணானது . ஆவியில் வளர்ந்து விட்டோம் என்று சொல்கிறவர்கள் இந்த கோட்பாட்டை பின்பற்றி அதினடிப்படையில் நம்முடைய சகோதரர்கள் யார் என்பதை முடிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் இந்த உபதேசத்தின் அடிப்படையில் கட்டப்பட வேண்டிய சகோதரத்துவ உறவு, கிறிஸ்தவ சகோதரத்துவ உறவு இன்று அல்லாடிக் கொண்டிருக்கிறது. தேவன் தாமே இதைப்பற்றிய ஒரு சரியான புரிதலை நமக்கு தருவாராக. EZEKIEL Shanmugavel

இஸ்ரவேல் ஜனங்களின் போர்‌யுக்தி.

யோசுவாவின் புத்தகத்தில் பத்தாவது அதிகாரத்தில் இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராக கானான் தேசத்தின் தெற்கு பகுதியில் இருந்து 5 ராஜாக்கள் ஒன்று கூடி யுத்தம் செய்தார்கள். அதேபோல் 11 ஆவது அதிகாரத்தில் கானான் பிரதேசத்தின் வடக்கில் உள்ள அரசர்கள் ஒன்று சேர்ந்து போரிட வந்தார்கள். இவர்கள் பெரும் கூட்டமாக வந்தார்கள். யோசபாஸ் (Josephus)என்கிற வரலாற்று ஆசிரியர் இதைப்பற்றி எழுதும்போது ஏறக்குறைய மூன்று லட்சம் காலட்படைகளும், 20 ஆயிரம் ரதங்களும், 10 ஆயிரம் குதிரை படைகளும் இணைந்து இஸ்ரேல் ஜனங்களுக்கு எதிராக வந்ததாக எழுதுகிறார். இந்த இரண்டு இடங்களிலும் இஸ்ரேல் ஜனங்கள் ஒரு போர் யுக்தியை கடைப்பிடித்தார்கள். இந்த இரண்டு போர்க்களத்திலும் அவர்கள் எதிரிகளை அவர்கள் எதிர்பாராத நேரத்தில் திடீரென்று தாக்கியதாக பார்க்கலாம்.யோசு10;10,11:7 ஆங்கிலத்தில் suddenly என்கிற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு ஆங்கிலத்தில் இன்னொரு பெயர் Ambush. இந்த போர்க்கள யுக்திக்கு இஸ்ரவேல் ஜனங்கள் இந்நாள் வரைக்கும் பெயர் பெற்றவர்கள். ஏன் இந்த யுக்தியை அவர்கள் பயன்படுத்த வேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் 40 ஆண்டுகள் வனாந்தரத்திலேயே கழித்து விட்ட காரணத்தினால் அவர்களுக்கு குதிரைப்படை என்பது கிடையாது. ஆனால் எதிராளியான அரசர்கள் இந்தப் படைகளை உடையவர்களாக இருந்தார்கள்.இஸ்ரவேல் ஜனங்களிடம் காலாட்படைகள் மட்டுமே இருந்தது. எனவே குதிரை படைகள் இஸ்ரவேல் ஜனங்களை தாக்குவதற்கு முன்பாக குதிரைப்படைகளை செயல்படாமல் தடுப்பதற்காக இஸ்ரவேல் ஜனங்கள் இந்த திடீர் தாக்குதலை பயன்படுத்தினார்கள். இஸ்ரவேல் ராணுவத்தில் சாலமோன் அரசன் தான் குதிரை படைகளையும் இரதங்களையும் இணைத்ததாக பார்க்கலாம் (1 இராஜா4:26,10:26)‌ எனவே தான் ஆண்டவர் இந்த இடத்தில் ஒரு குறிப்பிட்ட காரியத்தை இஸ்ரவேல் ஜனங்கள் செய்ய சொல்கிறார். அது என்னவென்றால் "நீ அவர்கள் குதிரைகளின் குதிக்கால் நரம்புகளை அறுத்து, அவர்கள் இரதங்களை அக்கினியால் சுட்டெரிக்கக்கடவாய் என்றார். " என்பதுதான் யோசுவா 11:6 காரணம் குதிரைகளை செயலிழக்கச் செய்தால் மறுபடியுமாக அவர்கள் இஸ்ரவேலரை தாக்குவது கடினம். நமது ஆண்டவர் நம்மை விட நம்முடைய பலத்தையும் எதிரியின் பலத்தை நன்கு அறிந்தவர். அவர் யோசனையில் பெரியவர். யுத்தத்தில் வல்லவர். நமக்காக யுத்தம் செய்பவர். இந்த புத்தகத்தில் பத்தாவது அதிகாரத்தில் இயற்கைக்கு அப்பாற்பட்ட இரண்டு அதிசயங்களை செய்து தம்முடைய ஜனங்களுக்கு வெற்றியை கொடுத்தார். ஆனால் பதினோராவது அதிகாரத்தில் முழுக்க முழுக்க இஸ்ரவேல் ஜனங்களுக்கு போர் யுக்தியை கற்றுக் கொடுத்து எதிரிகள் மீது வெற்றி சிறக்க செய்தார். கானான்தேசத்தில் குடியிருந்தவர்களை வெளியேற்ற இஸ்ரேல் ஜனங்களுக்கு தேவன் பல்வேறு வழிகளை கற்றுக் கொடுத்தார். எரிகோ பட்டணம் கைப்பற்றப்பட்ட விதம் வேறு. ஆயி பட்டினத்தை கைப்பற்றிய விதம் வேறு. தெற்கு பகுதியில் உள்ள அரசர்களை வெற்றி கொண்ட விதம் வேறு. வடக்கில் உள்ள பெரும் சேனையை தோற்கடித்த விதம் வேறு. நம்முடைய வாழ்க்கையிலும் தேவன் நம்முடைய விரல்களை யுத்தத்துக்கு பயிற்றுவிக்கும் தேவனாய் இருக்கிறார். என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம். சங்கீதம் 144:1 அவருக்கு முழுமையாக கீழ்ப்படியும் பொழுது வெற்றி நமக்கு முழுமையாக சொந்தமாகும். இந்த செய்திக்கு நான் பயன்படுத்திய நூல்கள். 1. Devotional commentary by Lawrence O. Richard 2. Believer's commentary By William McDonald 3.South Asia Bible commentary 4. The Bible exposition commentary.Wiersbe எசேக்கியல் சண்முகவேல்

விசுவாசத்தை செயலில் காண்பித்த யோசுவாவும் காலேபும்.

மோசே கானான் தேசத்தை வேவு பார்க்க 12 நபர்களை அனுப்பிய போது அவர்களில் 10 பேர் கானான் தேசத்தில் வாழ்ந்த ஏனாக்கியரை பார்த்து பயந்தார்கள். அவர்கள் இராட்சதர்கள். அவர்கள் முன்பு இஸ்ரவேல் ஜனங்கள் வெட்டுக்கிளியை போல் இருப்பார்கள், என்று சொல்லி இஸ்ரவேல் ஜனங்களை பயமுறுத்தி முழு இஸ்ரவேல் ஜனங்களையும் தேவனுக்கு நேராக கலகம் செய்ய தூண்டி விட்டார்கள்‌. அதன்விளைவு அவர்கள் கானானை நெருங்கி வந்த போதிலும் கானானுக்குள் நுழைய முடியாமல் போய்விட்டது. ஆனால் அந்தப் 12 பேரில் காலேபும் யோசுவாவும் மட்டும்" கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார்." என்றார்கள். எண்ணாகமம் 14:8. அந்த விசுவாச வார்த்தைகளை அவர்கள் தங்கள் வாழ்க்கையில் செயல்படுத்தினார்கள். 40 வருட வனாந்தர வாழ்க்கைக்குப் பிறகு யோசுவா கானானில் வாழ்ந்த எல்லா மக்களையும் (கிபியோனியரை தவிற) விரட்டி அப்புறப்படுத்தினான். அப்படி யோசுவா விரட்டிய ஜனங்களில் எந்த மக்களை பார்த்து இஸ்ரவேல் ஜனங்கள் பயந்து நடுங்கினார்களோ அந்த மக்களான ராட்சதகர்களான ஏனாக்கியரும் அடங்கும்.யோசே 11:21-22. அதே போல் காலேபும் தனக்கு வழங்கப்பட்ட மலைப் பிரதேசமான எபிரோனில் வாழ்ந்த ஏனாக்கியரை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.யோசு 14:11-26. 40 வருடங்களுக்கு முன்பு சொன்ன விசுவாச வார்த்தைகளை தங்கள் வாழ்க்கையில் நிறைவேற்றி காட்டியவர்கள்தான் யோசுவாவும் காலேபும். தேவன் நமது பட்சத்தில் இருக்கும் பொழுது காலங்கள் எவ்வளவு கடந்தாலும் நாம் சொன்ன விசுவாச வார்த்தைகளை நமக்கு வாய்க்கப் பண்ணுவார். விசுவாச வார்த்தைகளை பேசினால் மட்டும் போதாது அவர்களை செயல்படுத்த நாம் கர்த்தரோடு வாழ்கின்ற வாழ்க்கையும் அவசியம். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கும் விசுவாசம். இந்த செய்திக்கு நான் பயன்படுத்திய நூல் 1. The Bible explosition commentary .W.W.Wiersbe. எசேக்கியல் சண்முகவேல்

எது உண்மையான வீரம்

சாத்தானின் எதிர்ப்புகள், ஆபத்துகள், நாச மோசங்கள் வரும் என்று அறிந்த பின்னும் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற முனைவதும், தேவனுக்கடுத்த காரியங்களில் ஈடுபடுவதும்தான் வீரத்தின் உச்சக்கட்டம். இயேசு கிறிஸ்துவும் பவுலும் எருசலேமுக்கு போனால் ஆபத்துகள் நாசமோசங்கள் இழப்புகள் வரும் என்று அறிந்தும் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற எருசலேமுக்கு தைரியமாக சென்றார்கள்,பாடுகள் அனுபவித்தார்கள் (அப்போஸ் 21:8-13,லூக்கா 9:51). தைரியம் அல்லது வீரம் என்பது அதிகமாக சத்தமிட்டு பேசுவதனாலோ கூச்சலிடுவதினாலோ, நடனமிடுவதினாலோ நாம் வீரமுள்ள நபர்களாக மாறிவிட முடியாது. முக்கியமான காலகட்டங்களில் நெருக்கமான நேரங்களில் எல்லாமே இழக்க வேண்டிய நேரங்கள் சூழ்நிலைகள் வந்தாலும் ஆண்டவரை மறுதலிக்காமல் ஆண்டவருக்காக சாட்சியாக வைராக்கியமாக இருப்பதே வீரம். இமைப்பொழுது மறுதலிப்பு நம்மை சாத்தான் உயர்ந்த இடத்தில் கொண்டுவந்து உயர்த்தி வைத்து விடும். இமைப்பொழுதும் ஆண்டவரை மறுதலிக்காமல் இருந்தால் நாமே கிறிஸ்துவுக்குள் வெற்றி வீரராக விண்ணகத்தில் காணப்படுவோம். தேவனுடைய பிள்ளைகளாகிய நாமும்கூட இயேசுவைப்போல,பவுலை,போலஅதே தைரியம் ,வீரம் உடைய மக்களாக காணப்படுவோம். *The man who has peace of God in his heart can meet all life’s perils unafraid*.. எசேக்கியல் சண்முகவேல்*

நமது கானான் பயணம்

"அப்படியே யோசுவா, கர்த்தர் மோசேயினிடத்தில் சொன்னபடியெல்லாம் தேசமனைத்தையும் பிடித்து, அதை இஸ்ரவேலருக்கு, அவர்கள் கோத்திரங்களுடைய பங்குகளின்படியே, சுதந்தரமாகக் கொடுத்தான்; யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாயிருந்தது." யோசுவா 11:23. இந்த தேவனுடைய வார்த்தையை நாம் சாதாரணமாக கடந்து போக முடியாது. கானானை நோக்கிய இந்த பயணம்ஆதி12:1ல் ஆரம்பித்து யோசு 12:23 ல் முடிவடைகிறது. ஆபிரகாமை தான் முன் குறித்த கானான்தேசத்திற்கு அழைத்த போது அவன் கீழ்படிந்து தேவன் காட்டின தேசத்திற்கு சென்றான். அந்த தேசத்தை அவனுடைய சந்ததிக்கு தருவேன் என்று வாக்களித்தார். அதற்குப் பிறகு அந்த பயணம் ஈசாக்கு, யாக்கோபு ,அவருடைய 12 குழந்தைகள் என்று இந்தப் பயணம் கடந்து சென்றது. அவர்கள் இறுதியில் 400 ஆண்டுகள் எகிப்து தேசத்தில் அடிமைகளாக இருந்தார்கள். பின்பு அவர்கள் மோசேயின் தலைமையில் எகிப்துவிட்டு கானானை நோக்கி புறப்பட்டார்கள். எகிப்து தேசத்தில் அடிமையாய் இருந்த இந்த ஜனங்களை தேவன் தம்முடைய ஓங்கிய புயத்தினாலும் பலத்த கரத்தினாலும் அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்து அவர்களை வெளியேற்றினார். பின்பு அவர்கள் செங்கடலைக் கடந்தார்கள் கானானை நெருங்கி சேர வேண்டிய இறுதி காலகட்டத்தில் தேவனுக்கு விரோதமாக கலகம் செய்து தேவனுடைய தண்டனைக்கு ஆளானார்கள் அதன் விளைவாக எகிப்திலிருந்து புறப்பட்ட லட்சக்கானக்கான யுத்த புருஷர்கள் அனைவரும் வனாந்தரத்தில் மடிந்து போனார்கள். யோசுவாவும் காலேபும் இதற்கு விதிவிலக்கு. பின்பு மடிந்து போன இவர்களின் சந்தததி யோர்தானை அடைந்தார்கள். இந்த நிகழ்வு இஸ்ரேல் ஜனங்கள் எகிப்தில் இருந்து புறப்பட்ட 40 வருடங்களுக்குப் பிறகு நடந்தது. யோர்தானை கடந்த பின்பு எரிகோவை கைப்பற்றினார்கள் ஆய் பட்டணத்தை கைப்பற்றினார்கள். இப்படியாக ஏழு வருடங்கள் கானானில் குடியிருந்த அத்தனை ஜனங்களையும் வெளியேற்றி பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகஆபிராமுக்கு தேவன் வாக்குத்தத்தம் பண்ணின இந்த கானானை கைப்பற்றினார்கள்‌. இஸ்ரவேல் ஜனங்கள் ‌ கானானை கைப்பற்றிய நிகழ்வு என்பது நம்முடைய இந்த ஆவிக்குரிய வாழ்க்கைக்கு நிழலாக இருக்கிறது. ஆவிக்குரிய கானான் போன்ற வாழ்க்கையில் தேவன் நமக்கு வைத்திருக்கும் இலக்குகள் நோக்கங்கள்போதும் அழைப்புகள் இவைகளை நிறைவேற்ற பல்வேறு நிலைகளைக் கடந்து செல்ல வேண்டும். அதற்கு நீடிய பொறுமை வேண்டும். நமக்கென்று நியமிக்கப்பட்ட ஓட்டம் என்று ஒன்று உண்டு. அதில் தான் நாம் ஓட முடியும். நமக்கென்று ஒரு செங்கடல் ஒரு யோர்தான் ஒரு எரிகோ ஒரு ஆய்வு பட்டணம் மற்றும் பல்வேறு எதிரிகள் உண்டு இவைகளை மேற்கொள்ள நாம் அழைக்கப்பட்டு இருக்கிறோம். நம்முடைய வாழ்க்கையில் காணப்படும் செங்கடல் காதேஸ்பர்னேயா யோர்தான் எரிகோ ஆயி பட்டணங்கள் மற்றொரு வாழ்க்கையில் காணப்பட முடியாது. அவர்களுடையயோர்தான் வேறு நம்முடைய யோர்தான் வேறு. மற்றவர்களின் வெற்றிகளையோ தோல்விகளையோ ஆசிர்வாதங்களையோ நம்முடைய தோல்விகளோடு ஆசீர்வாதங்களோடு ஒப்பிட முடியாது. நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில்ஒப்பீடு செய்து முன்னேற வேண்டும் என்று எண்ணுகிறவர்கள் ஒருபோதும் நமக்கு தேவன் வைத்திருக்கும்இலக்கை அடைய முடியாது. We have individual race and calling. நம்முடைய வெற்றி தோல்வியை தீர்மானம் செய்து மதிப்பீடு செய்யக்கூடிய இடம் பரலோகம் மட்டுமே. நம்மை சூழ்ந்து இருப்பவர்களோ, நம்முடைய சபையோ, நம்முடைய தலைவர்களோ, நம்முடைய குடும்ப உறவினர்களோ நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் செயல்பாட்டை உண்மையாக நேர்மையாகமதிப்பிட முடியாது. நமக்கென்று தனிப்பட்ட முறையில் ஒரு அழைப்பையும் ஒரு ஓட்டத்தையும் ஒரு ஊழியத்தையும் வைத்திருக்கிறார். அதை அறிந்து கொண்டு அதன் வழியில் நடந்து இந்த உலகத்தில் கானானை அடைவது தான் சிறந்த பாக்கியம். ஏறக்குறைய 600 ஆண்டுகள் கடந்த பிறகு தான் தேவன் வாக்குறுதி கொடுக்க கானானை ஆபிரகாமின் சந்ததி அடைய முடிந்தது. நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை என்பது மிக நீடிய பயணம். ஆயி பட்டணத்து தோல்விகளும் வரும். காதேஸ்பர்னேய போன்ற தண்டனைகளும் வரும். எரிகோ பட்டணத்து வெற்றிகளும் கிடைக்கும். யோர்தான் செங்கடல் போன்ற தேவனுடைய அதிசயங்களையும் பார்க்கலாம். கிபியோனியர் போன்ற ஏமாற்றுகின்ற நிகழ்வுகளையும் பார்க்கலாம்.. இறுதியில் நம்மை அழைத்தவர் நம்முடைய அழைப்பை நிறைவேற்றுவார் இதுவே நம்முடைய நம்பிக்கை. எசேக்கியேல் சண்முகவேல்

பர்னபா, பவுல் பிரிவினை..

நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் புதிய ஏற்பாட்டில் ஒரு பிரிக்கமுடியாத இணையாக இருந்தவர்கள் பர்னபாவும் பவுலும் தான். பர்னபா இல்லை என்றால் பவுல் இல்லை. பவுலின் ஆவிக்குரிய முன்னேற்றத்திற்கு அஸ்திபாரம் இட்டவர் பர்னபா. பவுலின் அழைப்பை சரியாக புரிந்துகொண்டு அவரை தேடி கண்டுபிடித்து அந்தியோகியா சபைக்கு கொண்டு வந்து உலகுக்கு அடையாளம் காட்டியவர் பர்னபா. முதலாவது மிஷினரி பயணத்தில் இருவரும் இணைந்து பணி செய்தனர். அந்த அளவுக்கு எந்தவித ego இல்லாமல் பயணம் செய்தனர். ஆனால் அவர்களுக்கிடையில் ஒரு சிறிய மனக்கசப்பு அந்தியோகியா சபையில் பேதுரு வந்தபோது நிகழ்ந்தது. அதை இருவரும் அப்போதே சமரசமாயிருக்கவேண்டும் என்று சில வேத அறிஞர்கள் கூறுகிறார்கள். அப்படி இல்லையென்றால் இரண்டாவது மிஷினரி பயணத்தில் யாரை கூட்டிக்கொண்டு போகலாம் என்கிற பிரச்சனை எழுந்தபோது அவர்களுக்குள் இவ்வளவு பெரிய வாக்குவாதங்கள், அதுவும் பிரிந்து போகக்கூடிய அளவுக்கு நிகழ்ந்திருக்காது என்று கூறுகிறார்கள் இதுபற்றி F F BRUCE என்கிற வேத பண்டிதர் இவ்விதமாக எழுதுகிறார் Some Bible teachers maintains that Luke misrepresents the real cause of quarrel: that it actually arose out the incident at Antioch when Barnabas was inclined to follow Peter’s example of “Play –acting” to Paul’s great indignation (Gal.2”13). It may be that on present occasion the friction between the two would not have been so sharp if it not had been for that earlier difference. We cannot say” . F.F Bruce Some bitterness, if is not buried in time may lead to affect the great plan of God in our life. (பவுல் கலாத்திய சபைக்கு எழுதிய கடிதத்தில் இரண்டாம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட நிகழ்வே இதற்கு அடிப்படை காரணம். இந்த நிகழ்வில் பேதுருவினுடைய வெளி வேடத்தை பர்னபா ஆதரித்தான் .கலா2:13. இதனால் ஏற்பட்ட மன வருத்தத்தை இருவரும் சமரசம் செய்து கொண்டிருந்தால் இரண்டாவது மிஷினரி பயணத்தில் இந்த பிரிவினை வந்திருக்காது என்பது இவருடைய கருத்து) பவுலும் பர்னபாவும் பிரிந்திருக்கக் கூடாது என்று பலரும் கருதலாம். ஆனாலும் தேவனுடைய அநாதி தீர்மானத்தின்படி அந்த பிரிவினையையும் தேவன் தம்முடைய நோக்கத்திற்காக பயன்படுத்தினார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பிரியக்கூடாதவர்கள் பிரிந்துவிட்டர்கள். ஒருவேளை அந்த நேரத்தில் திருச்சபைகள் இதை சபைக்கு பெரிய இழப்பாக கருதியிருக்கலாம். ஆனால் அப்படி நிகழவில்லை என்றால் யாரை பவுல் வேண்டாம் என்று நிராகரித்தாரோ பின்னாளில் அவன் (மார்க்) பவுலுக்கு பயன் உள்ளவனாக மாறினார் என்பது சபை சரித்திரம். அந்த மார்க்கு தான் ஒரு அருமையான சுவிசேஷத்தை எழுதினார் என்பதையும் மறக்க முடியாது. இதுபற்றி WARREN W .WIERSBE என்கிற இவ்வாறாக எழுதுகிறார் ’God changes His workmen, but his work goes right on. If God had to depend on perfect people to accomplish His work, He would never ever get anything done. Our limitations and imperfections are good reasons for us to depend on the grace of God, for our sufficiency is from Him alone ‘’. (கடவுள் தம்முடைய வேலையாட்களை மாற்றிக் கொண்டே இருப்பார். ஆனால் அவரது வேலை தொடர்ந்து கொண்டே இருக்கும். தேவன் பூரண பட்ட மனிதரை தான் பயன்படுத்துவார் என்றால் தேவனுடைய ஊழியம் ஒரு காலம் இந்த பூமியில் நிறைவேறாது) என்ன ஒரு அருமையான பாடம் தேவனுடைய ராஜ்யத்தில் Setback என்பதே கிடையாது எல்லாவற்றையும் தம்முடைய திருவுள சித்தத்தின்படி நன்மைக்கு ஏதுவாகவே செய்துமுடிக்கிற தேவன் நம் தேவன். இப்படி வேதத்தில் பல நிகழ்வுகளையும் பார்க்கலாம். யூதர்கள் கிபியோனியர்களோடு செய்த உடன்படிக்கையும் இப்படித்தான். Read Acts 15 cpt Gal 2:11-18, 2 Tim 4:11 எசேக்கியேல் சண்முகவேல்

பர்னபா, பவுல் பிரிவினை..

நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் புதிய ஏற்பாட்டில் ஒரு பிரிக்கமுடியாத இணையாக இருந்தவர்கள் பர்னபாவும் பவுலும் தான். பர்னபா இல்லை என்றால் பவுல் இல்லை. பவுலின் ஆவிக்குரிய முன்னேற்றத்திற்கு அஸ்திபாரம் இட்டவர் பர்னபா. பவுலின் அழைப்பை சரியாக புரிந்துகொண்டு அவரை தேடி கண்டுபிடித்து அந்தியோகியா சபைக்கு கொண்டு வந்து உலகுக்கு அடையாளம் காட்டியவர் பர்னபா. முதலாவது மிஷினரி பயணத்தில் இருவரும் இணைந்து பணி செய்தனர். அந்த அளவுக்கு எந்தவித ego இல்லாமல் பயணம் செய்தனர். ஆனால் அவர்களுக்கிடையில் ஒரு சிறிய மனக்கசப்பு அந்தியோகியா சபையில் பேதுரு வந்தபோது நிகழ்ந்தது. அதை இருவரும் அப்போதே சமரசமாயிருக்கவேண்டும் என்று சில வேத அறிஞர்கள் கூறுகிறார்கள். அப்படி இல்லையென்றால் இரண்டாவது மிஷினரி பயணத்தில் யாரை கூட்டிக்கொண்டு போகலாம் என்கிற பிரச்சனை எழுந்தபோது அவர்களுக்குள் இவ்வளவு பெரிய வாக்குவாதங்கள், அதுவும் பிரிந்து போகக்கூடிய அளவுக்கு நிகழ்ந்திருக்காது என்று கூறுகிறார்கள் இதுபற்றி F F BRUCE என்கிற வேத பண்டிதர் இவ்விதமாக எழுதுகிறார் Some Bible teachers maintains that Luke misrepresents the real cause of quarrel: that it actually arose out the incident at Antioch when Barnabas was inclined to follow Peter’s example of “Play –acting” to Paul’s great indignation (Gal.2”13). It may be that on present occasion the friction between the two would not have been so sharp if it not had been for that earlier difference. We cannot say” . F.F Bruce Some bitterness, if is not buried in time may lead to affect the great plan of God in our life. (பவுல் கலாத்திய சபைக்கு எழுதிய கடிதத்தில் இரண்டாம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட நிகழ்வே இதற்கு அடிப்படை காரணம். இந்த நிகழ்வில் பேதுருவினுடைய வெளி வேடத்தை பர்னபா ஆதரித்தான் .கலா2:13. இதனால் ஏற்பட்ட மன வருத்தத்தை இருவரும் சமரசம் செய்து கொண்டிருந்தால் இரண்டாவது மிஷினரி பயணத்தில் இந்த பிரிவினை வந்திருக்காது என்பது இவருடைய கருத்து) பவுலும் பர்னபாவும் பிரிந்திருக்கக் கூடாது என்று பலரும் கருதலாம். ஆனாலும் தேவனுடைய அநாதி தீர்மானத்தின்படி அந்த பிரிவினையையும் தேவன் தம்முடைய நோக்கத்திற்காக பயன்படுத்தினார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பிரியக்கூடாதவர்கள் பிரிந்துவிட்டர்கள். ஒருவேளை அந்த நேரத்தில் திருச்சபைகள் இதை சபைக்கு பெரிய இழப்பாக கருதியிருக்கலாம். ஆனால் அப்படி நிகழவில்லை என்றால் யாரை பவுல் வேண்டாம் என்று நிராகரித்தாரோ பின்னாளில் அவன் (மார்க்) பவுலுக்கு பயன் உள்ளவனாக மாறினார் என்பது சபை சரித்திரம். அந்த மார்க்கு தான் ஒரு அருமையான சுவிசேஷத்தை எழுதினார் என்பதையும் மறக்க முடியாது. இதுபற்றி WARREN W .WIERSBE என்கிற இவ்வாறாக எழுதுகிறார் ’God changes His workmen, but his work goes right on. If God had to depend on perfect people to accomplish His work, He would never ever get anything done. Our limitations and imperfections are good reasons for us to depend on the grace of God, for our sufficiency is from Him alone ‘’. (கடவுள் தம்முடைய வேலையாட்களை மாற்றிக் கொண்டே இருப்பார். ஆனால் அவரது வேலை தொடர்ந்து கொண்டே இருக்கும். தேவன் பூரண பட்ட மனிதரை தான் பயன்படுத்துவார் என்றால் தேவனுடைய ஊழியம் ஒரு காலம் இந்த பூமியில் நிறைவேறாது) என்ன ஒரு அருமையான பாடம் தேவனுடைய ராஜ்யத்தில் Setback என்பதே கிடையாது எல்லாவற்றையும் தம்முடைய திருவுள சித்தத்தின்படி நன்மைக்கு ஏதுவாகவே செய்துமுடிக்கிற தேவன் நம் தேவன். இப்படி வேதத்தில் பல நிகழ்வுகளையும் பார்க்கலாம். யூதர்கள் கிபியோனியர்களோடு செய்த உடன்படிக்கையும் இப்படித்தான். Read Acts 15 cpt Gal 2:11-18, 2 Tim 4:11 எசேக்கியேல் சண்முகவேல்

பர்னபா, பவுல் பிரிவினை..

நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் புதிய ஏற்பாட்டில் ஒரு பிரிக்கமுடியாத இணையாக இருந்தவர்கள் பர்னபாவும் பவுலும் தான். பர்னபா இல்லை என்றால் பவுல் இல்லை. பவுலின் ஆவிக்குரிய முன்னேற்றத்திற்கு அஸ்திபாரம் இட்டவர் பர்னபா. பவுலின் அழைப்பை சரியாக புரிந்துகொண்டு அவரை தேடி கண்டுபிடித்து அந்தியோகியா சபைக்கு கொண்டு வந்து உலகுக்கு அடையாளம் காட்டியவர் பர்னபா. முதலாவது மிஷினரி பயணத்தில் இருவரும் இணைந்து பணி செய்தனர். அந்த அளவுக்கு எந்தவித ego இல்லாமல் பயணம் செய்தனர். ஆனால் அவர்களுக்கிடையில் ஒரு சிறிய மனக்கசப்பு அந்தியோகியா சபையில் பேதுரு வந்தபோது நிகழ்ந்தது. அதை இருவரும் அப்போதே சமரசமாயிருக்கவேண்டும் என்று சில வேத அறிஞர்கள் கூறுகிறார்கள். அப்படி இல்லையென்றால் இரண்டாவது மிஷினரி பயணத்தில் யாரை கூட்டிக்கொண்டு போகலாம் என்கிற பிரச்சனை எழுந்தபோது அவர்களுக்குள் இவ்வளவு பெரிய வாக்குவாதங்கள், அதுவும் பிரிந்து போகக்கூடிய அளவுக்கு நிகழ்ந்திருக்காது என்று கூறுகிறார்கள் இதுபற்றி F F BRUCE என்கிற வேத பண்டிதர் இவ்விதமாக எழுதுகிறார் Some Bible teachers maintains that Luke misrepresents the real cause of quarrel: that it actually arose out the incident at Antioch when Barnabas was inclined to follow Peter’s example of “Play –acting” to Paul’s great indignation (Gal.2”13). It may be that on present occasion the friction between the two would not have been so sharp if it not had been for that earlier difference. We cannot say” . F.F Bruce Some bitterness, if is not buried in time may lead to affect the great plan of God in our life. (பவுல் கலாத்திய சபைக்கு எழுதிய கடிதத்தில் இரண்டாம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட நிகழ்வே இதற்கு அடிப்படை காரணம். இந்த நிகழ்வில் பேதுருவினுடைய வெளி வேடத்தை பர்னபா ஆதரித்தான் .கலா2:13. இதனால் ஏற்பட்ட மன வருத்தத்தை இருவரும் சமரசம் செய்து கொண்டிருந்தால் இரண்டாவது மிஷினரி பயணத்தில் இந்த பிரிவினை வந்திருக்காது என்பது இவருடைய கருத்து) பவுலும் பர்னபாவும் பிரிந்திருக்கக் கூடாது என்று பலரும் கருதலாம். ஆனாலும் தேவனுடைய அநாதி தீர்மானத்தின்படி அந்த பிரிவினையையும் தேவன் தம்முடைய நோக்கத்திற்காக பயன்படுத்தினார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பிரியக்கூடாதவர்கள் பிரிந்துவிட்டர்கள். ஒருவேளை அந்த நேரத்தில் திருச்சபைகள் இதை சபைக்கு பெரிய இழப்பாக கருதியிருக்கலாம். ஆனால் அப்படி நிகழவில்லை என்றால் யாரை பவுல் வேண்டாம் என்று நிராகரித்தாரோ பின்னாளில் அவன் (மார்க்) பவுலுக்கு பயன் உள்ளவனாக மாறினார் என்பது சபை சரித்திரம். அந்த மார்க்கு தான் ஒரு அருமையான சுவிசேஷத்தை எழுதினார் என்பதையும் மறக்க முடியாது. இதுபற்றி WARREN W .WIERSBE என்கிற இவ்வாறாக எழுதுகிறார் ’God changes His workmen, but his work goes right on. If God had to depend on perfect people to accomplish His work, He would never ever get anything done. Our limitations and imperfections are good reasons for us to depend on the grace of God, for our sufficiency is from Him alone ‘’. (கடவுள் தம்முடைய வேலையாட்களை மாற்றிக் கொண்டே இருப்பார். ஆனால் அவரது வேலை தொடர்ந்து கொண்டே இருக்கும். தேவன் பூரண பட்ட மனிதரை தான் பயன்படுத்துவார் என்றால் தேவனுடைய ஊழியம் ஒரு காலம் இந்த பூமியில் நிறைவேறாது) என்ன ஒரு அருமையான பாடம் தேவனுடைய ராஜ்யத்தில் Setback என்பதே கிடையாது எல்லாவற்றையும் தம்முடைய திருவுள சித்தத்தின்படி நன்மைக்கு ஏதுவாகவே செய்துமுடிக்கிற தேவன் நம் தேவன். இப்படி வேதத்தில் பல நிகழ்வுகளையும் பார்க்கலாம். யூதர்கள் கிபியோனியர்களோடு செய்த உடன்படிக்கையும் இப்படித்தான். Read Acts 15 cpt Gal 2:11-18, 2 Tim 4:11 எசேக்கியேல் சண்முகவேல்

நம்முடைய பலவீனங்களையும் தோல்விகளையும்கூட தம்முடைய நோக்கத்திற்காக தேவன் பயன்படுத்துவார்.

யோசுவாவும், இஸ்ரவேலின் தலைவர்களும் தேவனுடைய சித்தத்தை அறியாமல் கானானில் வாழ்ந்த கிபியோனியரோடு அவர்கள் சொன்ன வார்த்தையை நம்பி சமாதான உடன்படிக்கை செய்து கொண்டார்கள். ஆனால் நம் தேவன் அதையும் தம்முடைய நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொண்டார். எரிகோ பட்டணத்தையும், ஆயி பட்டினத்தையும் தனித்தனியாக போரிட்டு இஸ்ரேல் ஜனங்கள் வெற்றி கண்டார்கள். கிபியோனியர் வாழ்ந்த பட்டினத்தை அருகில் உள்ள மற்ற எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக், எபிரோனின் ராஜாவாகிய ஓகாமுக், யர்மூத் ராஜாவாகிய பீராமுக் லாகீசீன் ராஜாவாகிய யப்பியாவு, எக்லோனின் ராஜாவாகிய தெபீரு ஆகிய ஐந்து அரசர்கள் ஒன்று சேர்ந்து இஸ்ரவேல் ஜனங்களுக்கு விரோதமாக போரிட முன்வந்தார்கள். வனாந்தரத்தில் 40 வருடங்கள் சுற்றித்திரிந்து எந்த போர் அனுபவம் இல்லாத ஜனங்கள். இவர்கள் எரிகோவை போரிடாமலே ஜெயித்தார்கள். ஆயி பட்டினத்தை தேவன் கொடுத்த போர் யுக்தியினால் ஜெயித்தார்கள். கிபியோனியர் இஸ்ரேல் ஜனங்களோடு சமாதான உடன்படிக்கைக்கு வராமல் இருந்திருந்தால் இந்த அரசர்கள் ஒன்று சேர்ந்து போரிட வந்திருக்க மாட்டார்கள். தனித்தனியாக போரிட முன் வந்திருப்பார்கள். ஆனால் புதிய அரசியல் சூழ்நிலை இந்த ஐந்து அரசர்களை ஒன்று சேர வைத்தது. இந்தப் போரில் தேவன் தம்முடைய ஜனங்களை காக்க இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமைகளை வெளிப்படுத்தி தம்முடைய ஜனத்தை பாதுகாத்தார். ஐந்து அரசர்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டார்கள். நம்முடைய வாழ்க்கையிலும் நமக்கு ஏற்படும் தோல்விகள் பலவீனங்கள் கீழ்ப்படியாமைகள் இவைகளையும் தேவன் சில நேரங்களில் தம்முடைய நீண்ட கால திட்டத்திற்காக பயன்படுத்துவார். God Instead of having todefeat these five city-states one by one, He would help Joshua conquer them all at one time! Just as God used the defeat at Ai to form a battle plan for victory over Ai (Josh. 8), so also He used Joshua’s mistake with the Gibeonites to protect Gibeon and accelerate the conquest of Canaan. *The mistakes we make embarrass us, especially* those mistakes that are caused by our running ahead of *the Lord and not seeking His will. But we need to* *remember that no mistake is final for the dedicated* *Christian* . God can use even our blunders to accom plish His purposes. W.W.Wiersbe. எசேக்கியேல் சண்முகவேல்

பாராட்டுகளும் கஞ்சத்தனமும்.

ஒரு விசுவாசிக்கு உண்மையான பாராட்டு உற்சாகத்தைத் தரும். மனமகிழ்ச்சியை தரும். அவனை ஊக்குவிக்கும். அவனை வளர்க்கும். பாராட்டுகளே இல்லாத விசுவாசி, உற்சாகப்படுத்த படாத விசுவாசி அநேக நேரங்களில் சோர்வின் எல்லைக்கே சென்று விடுவான். ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் அவனை உற்சாகப்படுத்தி, நிலைநிறுத்துவது வளர்ந்த போதகர்களின் கடமை ஆகும். ஆனால் நடைமுறையில் பார்க்கும்போது உயர்ந்த, பெரிய கர்த்தரால் உயர்த்தப்பட்ட, ஆசீர்வதிக்கப்பட்ட பல தலைவர்கள் தங்கள் கீழ் வேலை பார்க்கும் ஊழியர்களை, தங்களை ஆதரிக்கும் விசுவாசிகளை பாராட்ட தயங்குவது ஏனென்று புரியவில்லை. பாராட்டுக்கு தகுதியான விசுவாசிகளை பாராட்ட வேண்டிய இடத்தில், பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்ட வேண்டும். எந்த இடத்தில், எந்த நேரத்தில் அவர்களுக்கு அளிக்கும் பாராட்டு அவர்களுக்கு தேவைப்படுமோ, அவர்களை உயர்த்துமோ அந்த இடத்தில் தலைவர்கள் அவர்களை பாராட்ட வேண்டும். முகஸ்துதி என்பது வேறு பாராட்டு என்பது வேறு. பிறரிடம் காரியம் சாதிப்பதற்காக முகஸ்துதி செய்பவர்கள் நேர்மையாக உழைப்பவர்களை பாராட்ட மறுப்பது ஏன். பவுல் தன்னுடைய தன்னுடைய கடிதங்களில் பாராட்ட வேண்டியவர்களை பாராட்டியிருக்கிறார். துரோகிகளை துரோகிகள் என்று இனம் காட்டியிருக்கிறார். பவுல் ரோமாபுரியில் உள்ள சபைக்கு எழுதிய நிருபத்தில் கடைசி அதிகாரத்தை படிக்கும்போது அவர் எத்தனை நபர்களை பாராட்டி இருக்கிறார் என்று எண்ணும்போதும்,அவர் எந்த அளவுக்கு தகுதியானவர்களை‌ பாராட்டினார் என்று எண்ணும்பொழுது நமக்கு மிகுந்த சந்தோசம் ஏற்படுகிறது. சில தலைவர்கள் கீழுள்ள விசுவாசிகளை சம்பந்தமில்லாத இடத்தில் புகழ்வார்கள். அந்த புகழ்ச்சியால் அந்த விசுவாசிக்கு எந்த நன்மையும் கிடைக்காது. பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்ட மாட்டார்கள். உற்சாகப்படுத்த வேண்டிய நேரத்தில் உற்சாகப்படுத்த மாட்டார்கள். அப்படியே உற்சாகப்படுத்தினால் அளந்து அளந்து பாராட்டுவார்கள் .பாராட்டுவதில் கஞ்சத்தனம் காட்டுவார்கள் ஆனால் முகஸ்துதி செய்யும் போது மட்டும் அளவுக்கு அதிகமாக செய்வார்கள். எவ்வளவு முரண்பாடு பாருங்கள். இன்று உற்சாகத்திற்காக ஏங்கி நிற்கும் எத்தனையோ விசுவாசிகள் உண்டு . அவர்களை அடையாளங்கண்டு அவர்களை உயர்த்தி வையுங்கள். *தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை ஒரே நொடியில் உச்சத்திற்கு கொண்டுபோகும்* *தலைவர்கள் ஆண்டுகளாக தங்கள் காலடியில் தவமிருக்கும் உண்மை விசுவாசிகளை கண்டுகொள்வது* *எப்போது* ? கேட்டால் கர்த்தர் உயர்த்தும் வரைக்கும் அவரது பலத்த கரத்திற்குள் அடங்கி இருங்கள் என்பார்கள். ஆனால் தங்களுக்கு வேண்டியவர்களை உயர்த்துவதற்கு மட்டும் கர்த்தர் உயர்த்தும் வரை காத்திருக்க மாட்டார்கள். ஒரு பர்னபா இல்லையென்றால் பவுல் இல்லை. ஒரு பவுல் இல்லை என்றால் தீத்து இல்லை. பர்னபா பவுலை தேடி கண்டுபிடித்து அந்தியோகியா சபைக்கு கொண்டு வந்தார் என்பதை மறக்கக்கூடாது. இயேசு கிறிஸ்து தன்னை யூதாஸ் காட்டிக் கொடுப்பான் முன்னரே அறிந்தும் அவனுக்கு பண பொறுப்பை வழங்கினார். அந்த அளவுக்கு தலைவர்கள் இறங்கி வராவிட்டாலும் ஓரளவுக்காவது தங்கள் கீழுள்ள தாலந்து உள்ள, கிருபை உள்ள விசுவாசிகளை பயன்படுத்துங்கள் உயர்த்துங்கள். *தயவுசெய்து தலைவர்களே தகுதியான விசுவாசிகளை பாராட்டுவதில் கஞ்சத்தனம் பண்ணாதீர்கள்.* எசேக்கியல் சண்முகவேல்.

நம்முடைய தேவன் ஈசாக்கின் தேவனும் கூட.

யூத வம்சம் என்பது ஆபிரகாமில் இருந்து தொடங்குகிறது. அது ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ,யோசேப்பு என்று தொடரோட்டமாக சென்றது. ஆபிரகாமை எடுத்துக் கொண்டால் அவன்தான் விசுவாசத்தின் தகப்பன். ஆனாலும் அவனிடத்தில் பலவீனங்கள் தோல்விகள் இல்லாமல் இல்லை. கர்த்தருக்கு சித்தம் இல்லாமல் எகிப்துக்கு சென்று, அதன் விளைவாக ஆகாரை திருமணம் செய்து கொண்டது, தன் மனைவியை சகோதரி என்று சொல்லச் சொன்னது என்று பலவித பலவீனங்கள் கொண்டிருந்தாலும் இறுதியில் அந்த தொடர் ஓட்டத்தின் முடிவில் தன் மகனுக்கு ரெபேக்காளை திருமணம் செய்து வைத்து ஓட்டத்தை முடித்தான். ஈசாக்கை எடுத்துக் கொண்டால் அவனுடைய ஆரம்ப ஓட்டம் பிரம்மாண்டமாக இருந்தது. ரெபேக்காளை திருமணம் செய்து கொண்டது, பின்பு குடும்பத்திற்காக ஜெபித்தது என்று பிரகாசமாக சென்று கொண்டிருந்தது. ஆனால் முடிவில் தேவனுடைய சித்தத்தை அறியாமல் உணவிற்காக ஏசாவை ஆசீர்வதிக்க நினைத்தது, ஒரு மிகப்பெரிய ஆவிக்குரிய வீழ்ச்சி. *நீண்ட நாட்கள் வாழ்ந்திருந்தாலும் அவனைப் பற்றிய குறிப்புகள்** *மிகவும் குறைவு.* யாக்கோபை எடுத்துக் கொண்டால் தகப்பனையும் சகோதரனையும் ஏமாற்றியவன். வெகுமதிகள் மூலமாக எதையும் சாதிக்கலாம் என்று முயற்சித்தவன். பெனியேலில் தேவன் சந்திக்கும் வரை அவனுடைய வாழ்க்கை மேடு பள்ளங்கள் உள்ள வாழ்க்கை. ஆனால் அதற்குப் பிறகு சீரான வாழ்க்கை. ஓட்டத்தை ஜெயமாக முடித்தான். யோசேப்பை பொறுத்த அளவில் மிகவும் வெற்றிகரமான ஒரு ஆவிக்குரிய வாழ்க்கை . வெளிப்படையான பாவங்கள் எதுவும் காணப்படாமல் ஓட்டத்தை ஜெயத்தோடு முடித்தவன். *இப்படி ஆபிரகாம், ஈசாக்கு, இந்த யாக்கோபு ,* *யோசேப்பு என்று நான்கு பேரும் ஒவ்வொரு* *நிலைகளில் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றினார்கள்* . ஈசாக்கிடம் பலவீனங்கள் காணப்பட்டாலும் அவனும் தன்னுடைய பங்கிற்கு தேவ சித்தத்தை நிறைவேற்றினான். எல்லோரும் யோசேப்பை போல் பிரகாசமாக ஆவிக்குரிய ஓட்டத்தை முடிப்பார்கள் என்று சொல்ல முடியாது .ஆண்டவர் தன்னை ஆபிராமின் தேவன் என்று மட்டும் சொல்லவில்லை தன்னை ஈசாக்கின் தேவன் என்றும் யாக்கோபின் தேவன் என்றும் அடையாளப்படுத்திக் கொள்கிறார். அதே போல் தான் நம்முடைய சபைகளிலும் யாக்கோபுகளும் உண்டு யோசேப்புகளும் உண்டு. ஆபரகாம்களும் உண்டு. ஈசாக்குகளும் உண்டு. எல்லா விசுவாசிகளும் ஒரே நிலையில் ,ஒரே ஆவிக்குரிய முதிர்ச்சியில் இருக்க மாட்டார்கள். இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களும் பல்வேறு தரப்பு நிலைகளை சார்ந்தவர்கள். அவர்களை வைத்துதான் தேவன் இந்த உலகத்தை கலக்கினார். இந்த ஆவிக்குரிய சத்தியத்தை நாம் புரிந்து கொண்டால் ஆவிக்குரிய வாழ்க்கையில் *வெற்றி பெற்றவர்களை நாம் அதிகமாக கொண்டாடவும் மாட்டோம்.பலவீனமான விசுவாசிளை அற்பமாக எண்ணவும் மாட்டோம்.* *ஒருவனுடைய ஓட்டம் சிறந்ததா சிறப்பில்லாததா என்பதை நாம் அறிய முடியாது.* உலகம் கொடுக்கும் மதிப்பெண்கள் பல நேரங்களில் தவறாக போய்விடும். இந்த உலகத்தில் தம்முடைய திட்டத்தை நிறைவேற்றுவதற்கு கடவுளுக்கு ஆபிரகாமும், தேவை ஈசாக்கும் தேவை. இந்த செய்திக்கு நான் பயன்படுத்திய நூல்கள் 1.W.W.Wiersbe 's The Bible Exposition commentary 2. Believer's Bible commentary William McDonald Ezekiel Shanmugavel.

ராகாப், கிபியோனியர் ஒரு ஒப்பீடு.

ராகாப் எரிகோ பட்டணத்தில் வாழ்ந்த ஒருன் விலை மகள். ஆனால் இஸ்ரவேலின் தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு செய்த அதிசயங்களை கேள்விப்பட்டு அந்த கடவுள் மீது நம்பிக்கை வைத்து அவர்களின் தேவனே உண்மையான தேவன் என்று நம்பி அந்த மக்களோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு தங்கள் நாட்டை வேவு வாக்கு வந்த இஸ்ரவேலர்களை தன் உயிரை பணயம் வைத்து பாதுகாத்து அனுப்பினாள். (யோசுவாவின்2 வது அதிகாரம்) அதனால் அவள் பாதுகாக்கப்பட்டாள். அவள் இஸ்ரவேல் ஜனங்களோடு இணைக்கப்பட்டாள் இயேசு கிறிஸ்துவம்ச வரலாற்றில் அவள் பெயர் காணப்படுகின்றது.மத் 1:5 கிபியோனியர் இஸ்ரவேலின் தேவனின் வல்லமையை நம்பினார்கள். ஆனால் தங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ள தந்திரமாக தங்கள் அந்நிய தேசத்திலிருந்து வந்தவர்கள் போல் அடையாளப்படுத்திக் கொண்டு இஸ்ரவேல் ஜனங்களோடு உடன்படிக்கை செய்து கொண்டார்கள். இவர்கள் இதயபூர்வமாக இஸ்ரவேலின் தேவனை தங்கள் இதயத்தில் கடவுளாக ஏற்றுக் கொள்ளவில்லை. தங்கள் உயிருக்காக மட்டும் தந்திரமாக இஸ்ரேல் மக்களோடு இணைந்து கொண்டார்கள். யோசு 9:24 அந்தத் தந்திரம் வெளிப்பட்டபோது அவர்களுக்கு தங்கள் தவறுக்கு வருந்தினார்கள்.. ஆனாலும் அவருடைய தந்திரமான செயலுக்காக தண்டனையாக வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு அடிமைகளாக வாழ்ந்தார்கள். ராகாபை போல் இஸ்ரவேல் ஜனங்களோடு சுதந்திரமாக இணைக்கப்படவில்லை. இருவருமே உயிர் பாதுகாப்புக்காக இஸ்ரவேல் தேவனிடம் அண்டினாலும் ராகாப் கர்த்தர் மீது வைத்த விசுவாசம் உண்மையானது. இது போல்தான் இன்றைக்கும் இயேசு கிறிஸ்துவை இரண்டு தரப்பட்ட மக்கள் அணுகி வருகிறார்கள். ஒரு கூட்ட மக்கள் உண்மையான இரட்சிப்புக்காக, ஆன்மீகத் தேவைகளுக்காக வருகிறார்கள். இன்னொரு கூட்டம் உலக நன்மைகளுக்காக ஆசிர்வாதங்களுக்காக சரீர பாதுகாப்புக்காக தேவனிடம் வருகிறார்கள். முதல் கூட்டம் தேவனுடைய பிள்ளைகளாக மாறிவிடுகிறார்கள். இரண்டாவது கூட்டம் உலக நன்மைகளைப் பெற்று வாழ்நாள் இறுதிவரை அவருடைய பிள்ளைகளாக மாறாமல் பிசாசின் அடிமைகளாகவே வாழ்ந்து விடுகிறார்கள். நாம் என்ன நோக்கத்திற்காக இயேசு கிறிஸ்துவை பின்பற்றுகிறோம் என்பது தான் முக்கியம். கீழ்காணும் வேத பகுதிகள் நமக்கு ஒரு மிகப்பெரிய எச்சரிப்பை தருகின்றன. "இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்." 1 கொரிந்தியர் 15:19 அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பிக்க வேண்டும் யோவான் 6:27 இந்த செய்திக்கு நான் பயன்படுத்திய நூல்கள் 1. Devotional commentary by Lawrence O. Richard 2. Believer's commentary By William McDonald 3.South Asia Bible commentary 4.The Bible exposition commentary.W.W.Wiersbe. எசேக்கியல் சண்முகவேல்

பழைய ஏற்பாட்டை எப்படி தியானிக்க வேண்டும்.

பழைய ஏற்பாட்டை நாம் தியானம் செய்வதற்கும் புதிய ஏற்பாட்டை தியானம் செய்வதற்கும் ஒரு மிகப்பெரிய வித்தியாசம் உண்டு என்று நான் கருதுகிறேன். புதிய ஏற்பாட்டை பொறுத்த அளவில் அவைகள் அனைத்தும் இயேசு கிறிஸ்தவின் பாடுகள் மரணத்தோடு நேரடியாக சம்பந்தப்படுத்தி எழுதி இருப்பதால் விசுவாசிகளா கிய நமக்கு அதை புரிந்து கொள்ள ஓரளவுக்கு தேவனுடைய வெளிச்சம் இருந்தால் போதும். ஆனால் பழைய ஏற்பாட்டை பொருத்த அளவில் அதில் சொல்லப்பட்ட காரியங்களை வெறும் சரித்திர குறிப்புகளாக, நிகழ்வுகளாக ஒரு கதையை போல் படிப்பதனால் நமக்கு எந்த ஆவிக்குரிய பயனும் கிடையாது. அல்லது அந்த நிகழ்வுகளை அறிந்து கொள்ள வேண்டும் அதில் சொல்லப்பட்ட ஆறுதலான வார்த்தைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை மையமாக வைத்து படித்தாலும் கூட தேவன் அவைகளை எழுதி வைத்த நோக்கத்தை நாம் புரிந்து கொள்ள முடியாது. பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்ட பல நிகழ்வுகளுக்கும் ஒரு ஆவிக்குரிய அர்த்தம்,பார்வை உண்டு. அவைகள் உணர்த்தும் ஆவிக்குரிய அர்த்தத்தை இன்றைய வாழ்க்கையோடு நாம் இணைத்து பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் ஆவியானவர் அவைகளை எழுதி பாதுகாத்து வைத்த நோக்கம் நமக்குள் நிறைவேறும். கடமைக்காக ஒரு நாளைக்கு இவ்வளவு அதிகாரம் படிக்க வேண்டும் என்கிற ஒரு கட்டுப்பாட்டோடு நாம் பழைய ஏற்பாட்டை படித்தால் அந்த நிகழ்வுகள் மூலமாக தேவன் நமக்கு சொல்ல விரும்பும் சத்தியங்கள் நம்முடைய கண்களுக்கு மறைந்துவிடும். இதுதான் அநேக விசுவாசிகளின் வாழ்க்கையில் நடக்கிறது. தேவன் ஒரு காரணம் நோக்கம் இல்லாமல் இந்த நிகழ்வுகளையும் பிழைகள் இல்லாமல் நமக்கு எழுதி வைத்திருக்கிறமாட்டார் அவைகளைப் படிக்கும் போது அவைகளை புதிய ஏற்பாட்டுடன் நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அந்த சரித்திர நிகழ்வுகள் நமக்கு கொடுக்கும் எச்சரிக்கை என்ன! அறிவுரை என்ன? ஆறுதல் என்ன? என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அப்படி தியானித்தால் மட்டுமே பழைய ஏற்பாட்டை தேவன் எழுதி வைத்து, பாதுகாத்த நோக்கம் நம்முடைய வாழ்க்கையில் நிறைவேறும். வெறும் கதை புத்தகமாக நாம் படித்தால் அதனால் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு எந்த பயனும் கிடைக்காது. புதிய ஏற்பாட்டை கருத்துடன் படிப்பது போல பழைய ஏற்பாட்டு நூல்களையும் ஏனோதானோ என்று படிக்காதபடி அக்கறையோடு சிரமம் எடுத்து கவனத்தோடு பல்வேறு வேத விளக்கவுரைகளோடு ஒப்பிட்டு பார்த்து அவைகள் என்னுடைய வாழ்க்கைக்கு அந்த நிகழ்வு என்ன சொல்ல வருகிறது என்கிற உணர்வோடு படிக்க வேண்டும். பழைய பாட்டை இந்த சிந்தனையோடு படிக்கும் போது தான் அவைகள் நமக்கு பயனுள்ளதாக இருக்கும் இல்லையென்றால் வெறும் ஆறுதலான வசனங்களை மட்டுமே படித்து அவைகளை நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டால் நாம் திருப்பி போடாத அப்பத்தை போலிருப்போம். இறுதியான ஒரு வேண்டுகோள் அன்பு சகோதரர்களே பழைய ஏற்பாட்டை ஒரு கதையாக நிகழ்வாக படிக்க வேண்டாம் அவைகளை புதிய ஏற்பாட்டு நிகழ்வோடு ஒப்பிட்டு இன்றைக்கு பழைய ஏற்பாட்டு வீரர்கள் நமக்கு என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை கண்டு கொள்ள வேண்டும். எசேக்கியேல் சண்முகவேல்

Religious lies

*உங்கள் சிந்தனைக்கு:* *Tamil Bible study.* *படிக்க. யோசுவாவின் புத்தகம் ஒன்பதாவது அதிகாரம்..* *கிபியோனியரின் பொய்கள்.* Religious lies நம்முடைய வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் தோல்வி அடைகிற இடம் எதுவென்றால் ஆவிக்குரிய பொய்களை அடையாளம் காண முடியாமல் அவைகளை உண்மை என்று நம்புகிற இடம்தான் . கிபியோனியரின் உண்மையைப் போல் தோன்றுகின்ற 4 பொய்களினால் ஏமாற்றப்பட்டது யாரென்றால் யோசுவாவும் அவனுடைய படைத் தளபதிகளும்தான். கானான் தேசத்தை வேவு பார்க்க அனுப்பிய 12 பேரில் 10 பேர் சொன்ன பொய்யான அறிக்கையை நம்பாதவர்களில் யோசுவாவும் ஒருவன். அப்படிப்பட்ட யோசுவா இந்த இடத்தில் ஏமாற்றப்பட்டு விட்டான். உபா20:10-20 வரை உள்ள வசனங்களில் இஸ்ரவேல் ஜனங்கள் யாரோடு உடன்படிக்கை செய்து கொள்ள வேண்டும், யாரை அழிக்க வேண்டும் என்பதை பற்றி தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. 20:16ல் தேவன் வாக்குறுதி கொடுத்த கானான் தேசத்தில் உள்ள மக்களை முழுவதுமாக அழிக்க வேண்டும் என்பது தேவனுடைய கட்டளை. கானான் தேசத்திற்கு வெளியே உள்ள மக்களோடு அவர்கள் விரும்பினால் சமாதான உடன்படிக்கை செய்து கொள்ளலாம் . இதை அறிந்து தான் கிபியோனியர் கனானுக்கு அப்பால் உள்ள தேசியத்திலிருந்து வந்ததாக பொய்யை சொல்லி ஏமாற்றினார்கள். இந்தப் பொய்யை யோசுவா நம்பி ஏமாந்தான். இதே போல் நம்முடைய வாழ்க்கையிலும் இந்த கிபியோனியர் போன்றவர்கள் பலவிதமான பொய்களை சொல்லுவார்கள். இவைகளை *Religious lies என்று அழைக்கலாம்* . ஆறுதல் ,உபதேசம், உதவி ஐக்கியம் என்கிற பல பெயர்களில் இவர்கள் நம்மை சில நேரங்களில் தேவனுடைய சித்தத்தை விட்டு வழி விலக செய்து விடுவார்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் அதைப்பற்றியுள்ள உண்மை நிலையை நாம் அறிந்து கொள்ள முடியும். அதற்குள்பல இழப்புகளை நாம் சந்திக்க நேரிடும். எனவே நம்முடைய வாழ்க்கையில் இந்த கிபியோனியர்களை குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் நல்லவைகள் போல தோன்றுகின்ற எந்த காரியமாக இருந்தாலும் நாம் முதலில் அவைகள் தேவனுக்கு சித்தமானதா என்பதை நம்மால் முடிந்த அளவுக்கு அறிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அந்த விருப்பம் நம்மிடத்தில் காணப்பட வேண்டும். மற்றவைகளை தேவன் பார்த்துக்கொள்வார். நூற்றுக்கு நூறு தேவனுடைய சித்தத்தை அறிந்து கொள்ள அறிய முடியாவிட்டாலும் அந்த சிந்தனையோடு இருக்கும் பொழுது தேவன் நம்மை சாத்தானுடைய தந்திரத்தில் இருந்து காத்துக் கொள்வார். "We don’t seek God’s will like customers who look at options but like servants who listen for orders. “If any of you really determines to do God’s will, then you will certainly know” (John 7:17 tlb) is a basic principle for victorious Christian living." W.W.WIERSBE இந்த செய்திக்கு நான் பயன்படுத்திய நூல்கள் 1. Devotional commentary by Lawrence O. Richard 2. Believer's commentary By William McDonald 3.South Asia Bible commentary 4. The Bible exposition commentary.W.W.Wiersbe எசேக்கியேல் சண்முகவேல்

யோவா 1:1-5 விளக்கம் பாகம்3

யோவா 1:1-5 விளக்கம் பாகம்3 இந்தப் பகுதியில் முதலாம் வசனத்தின் கடைசிப் பகுதியை பற்றி தியானிக்கலாம். "அந்த வார்த்தை தேவனாய் இருந்தது" (பவர் மொழிபெயர்ப்பு) "அந்த வாக்கு கடவுளாய் இருந்தார்" (ராஜரிகம் அவர்கள் மொழிபெயர்ப்பு) திரித்துவத்தின் இரண்டாவது நபரான குமாரன்(வார்த்தை) கடவுளாக இருந்தார். வார்த்தை தேவனாக அல்லது இறைவனாக அல்லது கடவுளாக இருந்தது என்றால் என்ன அர்த்தம்? அப்படி என்றால் அவர் கடவுளுக்கு சமமாக இருந்தார் என்பதுதான் அதன் உண்மையான அர்த்தம். இறைவனான பிதாவை போலவே குமாரனும் நித்தியமானவர்.They are co-equal ,co-eternal. பிதாவுக்கு குறைவானவர் அல்ல. There is no inferiority in the Word to the God the Father. தேவனாக அந்த வார்த்தை இருந்தது என்பதற்கு பதிலாக ‌ இந்த வார்த்தை தேவனாக இருந்தது என்று ஆவியானவர் எழுதி இருக்கிறார். இதற்குக் காரணம் கிறிஸ்துவினுடைய தெய்வீகத்தை வலியுறுத்தி சொல்வதுதான். The predicate in the original precedes the subject. அடுத்ததாக நான் சிந்திக்க கூடிய பகுதி "அந்த வார்த்தை தேவனாக இருந்து" என்பதுதான். இதில் முக்கியமான பதம் "அந்த"என்கிற சொல். ஆங்கிலத்தில்"The Word "என்கிற சொல். . இதனுடைய அர்த்தம் என்னவென்றால் "அந்த" வார்த்தையாகிய தேவன் உலகத்தை படைத்த கடவுள் என்பதாகும். "அந்த" வார்த்தை ஆதியிலே இருந்தது. உலகம் உருவாக்கப்பட்ட பொழுது "அந்த வார்த்தை"இறைவனோடு இருந்தது. "அந்த வார்த்தை" இறைவனாக இருக்கிறது. மிகவும் கருத்தாழம் பொருந்திய இந்த வார்த்தைகளை மிகுந்த கவனத்தோடு தியானிக்கும் போது பலவித ஆவிக்குரிய சத்தியங்கள் நமக்கு புரியும். இந்த பகுதிகளை சிறந்த வேத விளக்க நூல்களோடு , இணைத்து( Bible commentaries )படித்தால் நமக்கு இன்னும் நன்றாக புரியும் . கர்த்தராமே இந்த வசனத்தைப் பற்றி உள்ள வெளிச்சத்தை நமக்கு தருவாராக. தொடரும் எசேக்கியேல் சண்முகவேல் Expository thoughts on The Gospels.By John charles Ryle 2. New testament commentary The gospel of John. By William Hendrickson 3.  Believer's  Bible commentary By William McDonald 4. Unlocking the Bible.David Pawson

யோவா 1:1-5 விளக்கம் பாகம்3

உங்கள் சிந்தனைக்கு. யோவா 1:1-5 விளக்கம் பாகம்3 யோவான் இந்த நற்செய்தி நூலில் ஏன் குமாரன் என்று குறிப்பிடாமல் வார்த்தை என்று குமாரனை அழைக்கிறார்? இதற்கான வரலாற்று பின்னணியை பார்க்க வேண்டும். ஆதித் திருச்சபையில் முதலில் யூதர்கள்தான் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டார்கள். அதற்குப் பிறகு கிரேக்கர்கள் பெருந்திரளில் ஆண்டவரை ஏற்றுக் கொண்டார்கள்.   அவர்களுக்கு மற்ற நற்செய்தி நூல்களில் சொல்லப்பட்டபடி நற்செய்தியை சொன்னால் விளங்காது. அவர்களுக்கு மேசியா, பழைய ஏற்பாடு பஸ்கா போன்ற யூதர்களுடைய நிகழ்வுகளை குறித்து சொன்னால் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் கிரேக்கர்கள் ஏற்றுக் கொள்கிறபடி ஆண்டவருடைய வார்த்தைகளை சொல்ல வேண்டும். இதற்காகத்தான் குமாரன் அல்லது இயேசு என்பதற்கு பதிலாக கிரேக்க வார்த்தையான Logos என்கிற பதத்தை யோவான் பயன்படுத்துகிறார். இந்த லோகோஸ் என்கிற சொல்லுக்கு  reason speech, principle why என்கிற பல அர்த்தங்கள் உண்டு. கிரேக்கர்கள் தர்க்கத்தில் சிறந்தவர்கள். உலகத்தில் நடக்கின்ற நிகழ்வுகள் எல்லாமே எதோ ஒரு நோக்கத்தோடும், காரணத்தோடும் இருப்பதாக எண்ணுகிறவர்கள். . "logos is ‘the reason why’. John, realizing that Jesus is the ultimate reason ‘why’ everything happened, took up this idea and called Jesus the logos, ‘the Word".David Pawson எனவே யோவான் கிரேக்க மொழியில் "ஏன்" அல்லது "காரணம் "என்கிற அர்த்தமுடைய லோகோஸ்( Logos ) என்கிற சொல்லை குமாரன் அல்லது இயேசு என்கிற வார்த்தைக்கு பதிலாக இங்கு பயன்படுத்தினார். அது மாத்திரமல்ல பழைய ஏற்பாட்டை கிரேக்க மொழியில் மொழிபெயர்க்கும் பொழுது யூத மதத்தை சேர்ந்த மொழிபெயர்ப்பாளர்கள் இந்த லோகோஸ் என்ற வார்த்தையை நூற்றுக்கணக்கான இடங்களில் பயன்படுத்தியதாக சொல்லப்படுகிறது. (.Septuagiant verson.) எபிரேய  மொழியில் தேவனுடைய வார்த்தையை  குறிக்கக்கூடிய "davar"என்கிற பதம் வருகின்ற பல இடங்களில் கிரேக்க மொழிபெயர்ப்பில் லோகோஸ் என்கிற வார்த்தையை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த லோகோஸ் என்ற கிரேக்க வார்த்தை தான் ஆங்கிலத்தில் Word  என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதனுடைய அடிப்படையில் பார்க்கும் பொழுது யோவான் "குமாரன்" என்கிற சொல்லுக்கு பதிலாக "வார்த்தை" என்கிற சொல்லை  பயன்படுத்தியதற்கான காரணங்கள். 1. லோகோஸ் என்கிற சொல் ஏற்கனவே கிரேக்க மொழியில் "வார்த்தை" "ஏன்"என்கிற அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்பட்டது. 2.எனவே தேவகுமாரன் என்ற வார்த்தைக்கு பதிலாக லோகோஸ் என்கிற கிரேக்க வார்த்தையை பயன்படுத்தினால் கடவுளைப் பற்றி கிரேக்கர்கள் எளிதாகப் புரிந்து கொள்வார்கள் என்று யோவான் கருதினார் 3. பழைய ஏற்பாட்டு கிரேக்க மொழிபெயர்ப்பில்  தேவனுடைய வார்த்தை என்று வருகிற பல இடங்களில் லோகோஸ் என்கிற  சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. எண்11:23,உபா13:14, 32:45-46 "In examining the Septuagint we find that the Greek word “logos” was a commonly used word, used hundreds of times, and was translated from the Hebrew “davar”. It is often translated “word” in our English versions: And Jehovah said unto Moses, Is Jehovah’s hand waxed short? now shalt thou see whether my word (logos) shall come to pass unto thee or not. (Numbers 11:23) then shalt thou inquire, and make search, and ask diligently; and, behold, if it be truth (logos), and the thing certain, that such abomination is wrought in the midst of thee, (Deuteronomy 13:14) And Moses made an end of speaking all these words to all Israel; And he said unto them, Set your heart unto all the words (logous) which I testify unto you this day, which ye shall command your children to observe to do, even all the words of this law. (Deuteronomy 32:45-46)" 4. ஆதி1:3ல் உலகம் தேவனுடைய வார்த்தையினாலே உருவாக்கப்பட்டது என்கிற கருத்தையும் இங்கே இணைத்து இருக்கிறார். இந்த நான்கு காரணங்களின் அடிப்படையில்தான் யோவான் "குமாரன்" அல்லது இயேசு என்கிற வார்த்தைக்கு பதிலாக Logos  என்கிற கிரேக்க வார்த்தையை பயன்படுத்தினார் . இந்த கிரேக்க வார்த்தை தான் ஆங்கிலத்தில் Word என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த Word  என்கிற ஆங்கிலச் சொல் தமிழில் "வார்த்தை" என்று மொழியாக்கம் பண்ணப்பட்டுள்ளது. சுருக்கமாக செல்ல வேண்டுமென்றால் Logos. இது வார்த்தையைக் குறிக்க கூடிய கிரேக்கச்சொல். இது ஆங்கிலத்தில் Word  மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இது தமிழில் "வார்த்தை" என்கிற சொல்லாக மாறி உள்ளது.. Ref1. Expository thoughts on The Gospels.By John charles Ryle 2. New testament commentary The gospel of John. By William Hendrickson 3.  Believer's  Bible commentary By William McDonald 4. Unlocking the Bible.David Pawson.

Divine cure

Prayer is the divine cure for all fear, anxiety and undue concern of soul, all of which are closely akin to doubt and unbelief. This is the divine prescription for securing the peace .-E.M.Bounds

Holy Spirit

Sealing with the Holy Spirit in the body is objective.The dwelling of Christ in the heart by faith is subjective.

நமது சரீரங்கள் தேவன் பயன்படுத்தும் ஆயுதங்கள்

நமது சரீரங்கள் தேவன் பயன்படுத்தும் ஆயுதங்கள் ரோம 6:13,16,19. “உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்” “பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமைகளாக "ஒப்புக்கொடுங்கள்’ நம்முடைய சரீரங்கள் நாம் இந்த உலகில் வாழ்வதற்காக மட்டும் தேவன் நமக்கு தரவில்லை . தேவன் தம்முடைய திட்டத்திற்கு, சாத்தானுக்கு விரோதமாக பயன்படுத்தும் ஆயுதங்களாக தேவன் அதை வைத்திருக்கிறார். நம்முடைய சரீரம் தேவனுடைய ஆலயம் மட்டுமல்ல அது ஒரு ஆயுத கிடங்கு . அல்லேலுயா! நம்முடைய கண்கள், வாய், கால்கள், முழங்கால்கள், உதடுகள், கைகள் போன்ற சரீரத்தின் பகுதிகள் தேவன் பயன் படுத்தும் ஆயுதங்கள், மட்டுமல்ல, நாம் ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கபட வேண்டியவைகள். அவைகள் நீதிக்குரிய ஆயுதங்கள் . ஜெபத்திற்கு, துதிகளுக்கு வேத வாசிப்பிற்கு, , தேவ வார்த்தைகளை போதிக்க, அறிவிக்க தேவனுக்காக திட்டமிட என்று நம்முடையஒவ்வரு அங்கத்தையும் தேவனுக்கு ஒப்புக்கொடுக்கும்போது தேவன் அவைகளை ஆயுதங்களாக மாற்றுவார். இந்த இடத்தில் 2 கொரிந் 6:7 ல் சொல்லப்பட்ட பவுலடியாரின் வார்த்தைகளை குறிப்பிட விரும்புகிறேன் "சத்தியவசனத்திலும், திவ்விய பலத்திலும்; நீதியாகிய வலதிடதுபக்கத்து ஆயுதங்களைத் தரித்திருக்கிறதிலும்,"என்ற பவுலடியாரின் வார்த்தைகள் பவுலடியார் சரீரத்தை முழுமையாக அர்ப்பணித்து அதை தேவன் பயன் படுத்த விளங்கப்பண்ணுகிறார். இம்மைக்காக நமக்கு கொடுக்கப்பட்ட அவையங்களை நித்திய மகிமைக்கென்று பயன்படுத்த நம்மை அர்பணிப்போம் . நம்முடைய மனக்கண்களை தேவன் திறப்பாராக. நம்முடைய சரீர அர்ப்பணிப்பு ஆவிக்குரிய வாழ்க்கையின் முதல்படி.

யோவான் 1:1-5 ன் விளக்கம் பாகம் 2

உங்கள் சிந்தனைக்கு: யோவான் 1:1-5 ன் விளக்கம் பாகம் 2 "ஆரம்பத்தில் வார்த்தையே இருந்தது. அந்த வார்த்தை இறைவனுடன் இருந்தது. அந்த வார்த்தை இறைவனாய் இருந்தது. அவர் ஆரம்பத்திலேயே இறைவனுடன் இருந்தார்." யோவா1:1. இது இலகு இலங்கை தமிழ் மொழிபெயர்ப்பு. ஆதியிலே ( In the beginning)என்கிற வார்த்தை எதோடு சம்பந்தப்படுத்தி பார்க்க வேண்டும் என்றால் ஆதி 1:1 உடன் இணைத்து பார்க்க வேண்டும். அதாவது பிதாவாகிய இறைவன் உலகத்தை படைத்த நிகழ்விலே குமாரனாகிய தேவன், வார்த்தையாகிய தேவன் உடன் இருந்தார் என்பதுதான் அர்த்தம். அடுத்ததாக "இருந்தது" (Was) என்கிற வார்த்தையை குறித்து தியானிக்கலாம். "இருந்தது "என்கிற பதம் முதல் இரண்டு வசனங்களில் நான்கு தடவை வருகிறது. உலகம் படைக்கப்பட்ட நாளில் வார்த்தை உருவாக்கப்பட்டது என்று சொல்லப்படவில்லை. It is not said "The word was made"but but the Word was" வார்த்தை இருந்தது என்று சொல்லப்பட்டிருக்கிறது இது அவருடைய நித்தியத்தை குறிப்பதாக எடுத்துக்கொள்ள வேண்டும். "ஆதியிலே" "இருந்தது "என்கிற இரண்டு வார்த்தைகள் மிகவும் அர்த்தம் பொருந்திய வார்த்தைகள். வேதத்தில் மூன்று இடங்களில் மட்டுமே இயேசு கிறிஸ்து வார்த்தையாக அடையாளப்படுத்தப்படுகிறார். யோவா1:1,14, 1யோவா1:1 மற்றும் வெளி19:13. விண்ணகத்தில் குமாரன் வார்த்தையாகத்தான் குறிப்பிடப்படுகிறார். அடுத்தது ஏன் குமாரனை வார்த்தை என்று அடையாளப்படுத்த வேண்டும்.? பழைய ஏற்பாட்டில் சங்கீ33:6ல் வார்த்தை கடவுளோடு இணைத்து சொல்லப்படுகிறது. “கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும் அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது. By the word of the LORD were the heavens made; and all the host of them by the breath of his mouth” . அடுத்தது இயேசு கிறிஸ்து பிதாவினுடைய சிந்தையை, மனதை பிரதிபலிக்கிறவராக இருக்கிறார். அதே வேளையில் அவருடைய சிந்தையை மனுக்குலத்திற்கு வெளிப்படுத்துகிற தேவனாகவும் இருக்கிறார். He expresses the mind of God and also reveals it to man.. எனவே அவர் வார்த்தையாக அறியப்படுகிறார் கருத்து. இன்னொரு வகையில் சொல்ல போனால் அவர் பிதாவினுடைய சித்தத்தை பேசுகிற தேவனாகவும் அதை விளக்குகிற தேவன் ஆகவும் இருக்கிறார். He is speaker ,utterer and interpreter of God the Father's will. இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; Hath in these last days spoken unto us by his Son,எபி1:2. அவர் பேசுகின்ற தேவனாய் இருக்கிறபடியால் அவரை வார்த்தையாக கருத்தில் கொள்ள வேண்டும். தொடரும். எசேக்கியேல் சண்முகவேல். Ref1. Expository thoughts on The Gospels.By John charles Ryle 2. New testament commentary The gospel of John. By William Hendrickson 3. Believer's Bible commentary By William McDonald

யோவான் 1:1-5 (1)

உங்கள் சிந்தனைக்கு: யோவான் 1:1-5 வேதத்தில் மிகவும் அர்த்தம் பொதிந்த, ஆழமான கருத்துக்கள் உள்ள வார்த்தைகளில் இதுவும் ஒன்று. இந்த வார்த்தையில் உள்ள அர்த்தங்களை ஒன்றன்பின் ஒன்றாக பார்க்கலாம். யோவான் 1:1 யோவான் இந்த இடத்தில் வார்த்தை என்று சொல்லிவிட்டு அந்த வார்த்தை யாரென்றோ என்ன வார்த்தை என்றோ சொல்லவில்லை. He does not explain at first Who and what the Word is. வார்த்தை என்பது பொதுவாக ஒரு பேச்சைக் குறிப்பதாக இருக்கும். யோவான் இந்த இடத்தில் வார்த்தையை ஒரு பேச்சாக (Speach) இதை குறிப்பிடவில்லை. வார்த்தையை ஒரு நபராக குறிப்பிடுகிறார். எனவேதான்மறை திரு. அறிவர் தே. ராஜரீகம் என்பவர் இவ்வாறாக மொழிபெயர்த்துள்ளார். "ஆதியிலே திருவாக்கு இருந்தார். அந்த வாக்கு கடவுளோடு இருந்தார். அந்த வாக்கு கடவுளாய் இருந்தார்." ராஜரிகம் அவர்கள் வார்த்தையை ஒரு நபராக குறிப்பிடுகிறார். இந்த முதல் வார்த்தையில் குமாரனுடைய நித்தியத்தை பற்றிய காரியத்தையும்(Eternality) அவருடைய ஆள் தத்துவத்தை பற்றிய காரியத்தையும்(Personality), அவருடைய தெய்வீகத்தைப் பற்றிய காரியமும் (Deity) சொல்லப்பட்டிருக்கிறது. "அவர் ஆதியிலே இருந்தார்" என்கிற வார்த்தை அவர் நித்திய நித்தியமாக இருக்கிறார் என்பதற்கான அர்த்தம். "அவர் கடவுளோடு இருந்தார்" என்கிற வார்த்தை அவருடையPersonality ஐ குறிப்பதாகும். "அவர் தேவனாய் அல்லது கடவுளாய் இருந்தார்‌"என்பது‌ அவருடைய தெய்வீகத்தை குறிப்பதாக உள்ளது. அது மாத்திரம் அல்ல திருவாக்காய் வெளிப்பட்ட தேவகுமாரன் பிதா அல்ல என்று அறிந்து கொள்ளலாம். "Jesus Christ is a person distinct from God the Father and yet one with Him "John Charles Ryle. மேலும் அவர் கடவுளாகவே காணப்பட்டார். Jesus Christ is very God. தொடரும் எசேக்கியேல் சண்முகவேல்

"பரிசுத்தம் பண்ணிக் கொள்ளுங்கள்" என்பதற்கு பழைய ஏற்பாட்டில் என்ன அர்த்தம்?

உங்கள் சிந்தனைக்கு: "பரிசுத்தம் பண்ணிக் கொள்ளுங்கள்" என்பதற்கு பழைய ஏற்பாட்டில் என்ன அர்த்தம்? What is the meaning for consecration in the Old Testament? யோசுவா ஜனங்களை நோக்கி: உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள். (Consecrate) “நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்றான். “ யோசுவா 3:5 இந்த இடத்தில் சொல்லப்பட்ட பரிசுத்தம்பண்ணிக் கொள்ளுங்கள் என்பதின் உண்மையான அர்த்தம் என்ன? பலர் இதை ஆத்தூமாவில் பரிசுத்தம்பண்ணி ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கிற நிகழ்வாக கருதுகிறார்கள். ஆனால் உண்மையான அர்த்தம் என்னவென்றால் உங்கள் சரீரத்தை பரிசுத்தம் பண்ணிக் கொண்டு அதாவது குளித்து ஆடைகளை சுத்தம் பண்ணிக் கொண்டு ஒரு புதிய ஆரம்பத்திற்கு தயாராகுங்கள் என்பது தான் இந்த இடத்தில் சொல்லப்பட்ட அர்த்தம். இந்த இடத்தில் நடக்கப் போகும் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் பொழுது இதுதான் உண்மையான அர்த்தம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இதைத்தான் Wiersbe மற்றும் Dake போன்ற‌ வேத அறிஞர்கள் விளக்குகிறார்கள்.. It was in ceremonial sense, by washing their bodies and their clothes, and abstaining from their wives; and in a moral sense. யாக்கோபை பெத்தேலை‌ நோக்கி போகச்சொன்ன போது அவன் தன் குடும்பத்தாரை நோக்கி "உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டு, உங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, உங்கள் வஸ்திரங்களை மாற்றுங்கள்"என்று கூறினார் ஆதியாகமம் 35:2 தாவீதின் பாவத்தை நாத்தான் சுட்டி காட்டிய போது தாவீது பாவ அறிக்கையிட்டு “தாவீது தரையைவிட்டு எழுந்து, ஸ்நானம்பண்ணி, எண்ணெய் பூசிக் கொண்டு, தன் வஸ்திரங்களை மாற்றி, கர்த்தருடைய ஆலயத்திலே பிரவேசித்து, பணிந்துகொண்டு, தன் வீட்டுக்கு வந்து, போஜனம் கேட்டான். அவன் முன்னே அதை வைத்தபோது புசித்தான்'' என‌படிக்கிறோம் 2 சாமுவேல் 12:20 மேலும் யாத்19:10ஐ அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் பொழுது பரிசுத்தப்படுத்துதல் என்றால் கழுவுதல் என்று அர்த்தம். வேதத்தில் குளிப்பதும் புதிய ஆடைகளை உடுத்துவதும் ஒரு புதிய ஆரம்பத்திற்கு அறிகுறியாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் அந்தக் காலகட்டங்களில் தினமும் குளிப்பது என்பது ஒரு ஆடம்பரமாக கருதப்பட்ட காலம். குளித்துவிட்டு உடைகளை மாற்றுவது என்பது சில முக்கியமான நிகழ்வுகளில் ஒரு புதிய தொடக்க நிகழ்வுகளில் நடக்கும் நிகழ்ச்சி. ஆனால் புதிய ஏற்பாட்டில் இது ஆன்மீக சுத்திகரிப்பாக சொல்லப்படுகிறது.2கொரி7:1 எனவே யோசுவா 3:5 ன் அர்த்தம் ' நாளை நடைபெறப் போகும் அதிசயங்களுக்கு உங்கள் சரீரங்களை சுத்தப்படுத்தி புதிய ஆடைகளை உடுத்திக் கொள்ளுங்கள் என்பதுதான்'. ஆனால் நாம் இதற்கு ஆவிக்குரிய அர்த்தத்தை(ஆவிக்குரிய அர்ப்பணிப்பு) கற்பித்தாலும் அது தவறல்ல. இதைப் பற்றிய W.Wiersbe அவர்களின் விளக்கத்தை கீழே சமர்ப்பிக்கிறேன். அடுத்து சமநிலையோடு பார்க்க வேண்டுகிறேன். இது கத்தோலிக்க.மொழிபெயர்ப்பு If the experience of Israel at Mount Sinai was the pattern (Ex. 19:9–15), “sanctify yourselves” meant that everybody bathed and changed their clothes and that the married couples devoted themselves wholly to the Lord (1 Cor. 7:1–6). In the Near East, however, water was a luxury that wasn’t used too often for personal hygiene. In our modern world we’re accustomed to comfortable bathing facilities, but these were unknown to most of the people in Bible times. In the Bible the imagery of washing one’s body and changing clothes symbolized making a new beginning with the Lord. Since sin is pictured as defilement (Ps.51:2, 7), God has to cleanse us before we can truly follow Him. When Jacob made a new beginning with the Lord and returned to Bethel, he and his family washed themselves and changed their garments (Gen. 35:1–3). After King David confessed his sin, he bathed, changed clothes, and worshipped the Lord (2 Sam. 12:20). The imagery is carried over into the New Testament in 2 Corinthians 6:14—7:1; Ephesians 4:26–27, and Colossians 3:8–14.. \

12 கற்களை கொண்ட நினைவுத்தூண்கள் ஒன்றா இரண்டா?

உங்கள் சிந்தனைக்கு: 12 கற்களை கொண்ட நினைவுத்தூண்கள் ஒன்றா இரண்டா? யோசு 4:3,9 இஸ்ரவேல் ஜனங்கள் யோர்தான் நதியை கடக்கும் பொழுது ஆசாரியர்கள் யோர்தான் நதியில் கால் வைத்த இடத்திலிருந்து பன்னிரண்டு கற்களை எடுத்து அதை கீழ்காலிலே நாட்டும்படியாக கர்த்தர் கட்டளையிட்டார். இந்த அதிகாரத்தினுடைய ஒன்பதாம் வசனத்தில் யோர்தான் நதியில் ஆசாரியர்கள் கால் பதித்த அந்த இடத்தில் யோசுவா 12 கற்களை நாட்டியதாக பார்க்கலாம் . ஆனால் சில மொழிபெயர்ப்பில் இது தனி ஒரு நிகழ்வாக சொல்லப்படவில்லை.‌ மூன்றாம் வசனத்தில் சொல்லப்பட்ட நிகழ்வின் தொடர்ச்சியாக கூறப்பட்டிருக்கிறது.(Repetition ) . காரணம் யோர்தான் நதியின் உள்ளே 12 கற்களை தேவன் நாட்டச் சொல்லி யோசுவாக்கு கட்டளையிடவில்லை. எனவே 12 கற்களை கொண்ட தூண்கள் கால்காலில் மட்டும்தான் நாட்டப்பட்டதாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் இந்த கருத்தை அனேக வேத பண்டிதர்கள் மறுக்கிறார்கள் . இவர்கள் கருத்துப்படி இரண்டு இடங்களில் 12 கற்கள் கொண்ட நினைவுத் தூண்கள் நாட்டப்பட்டது. ஒன்று கீழ்காலிலும் மற்றொன்று யோர்தான் நதியிலும் நாட்டப்பட்டது‌ இந்த நிகழ்வை புதிய ஏற்பாட்டின் இரட்சிப்பின் நிகழ்வோடு பொருத்திப் பார்க்க வேண்டும் என்று கருதுகிறார்கள். 12 கற்கள் யோர்தான் நதியில் நாட்டப்பட்டது நாம் இயேசுவோடு அவரது மரணத்தில் அடக்கம் செய்யப்படுவதற்கு நிழலாக இருக்கிறது என்றும் கீல்காலில் நாட்டப்பட்ட 12 கற்கள் நாம் அவருடைய உயிர்த்தெழுதில் பங்கு பெறுவதற்கு அடையாளமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். The monument at Gilgal reminded the Jews that God had opened the Jordan River and brought them safely across into the Promised Land. They had made a break with the past and were never to think of going back. The monument in the depths of the river reminded them that their old life was buried and they were now to “walk in newness of life” (Rom. 6:1–4) W.W.Wiersbe. தேவஆவியானவர் எதையும் தேவையில்லாமல் இணைத்திருக்க மாட்டார். எனவே இரண்டு இடங்களில் 12 கற்கள் கொண்ட நினைவுதாண்கள் நாட்டபட்டதாக அறிந்து கொள்ளலாம்.

நினைவுச் சின்னங்கள் நமக்கு உணர்த்தும் பாடங்கள் என்ன?

நினைவுச் சின்னங்கள் நமக்கு உணர்த்தும் பாடங்கள் என்ன? பழைய ஏற்பாட்டில் பல இடங்களில் நினைவுத்தூண்களை நாட்டும்படியாக கர்த்தர் கட்டளை பிறப்பித்தார். யோர்தான் நதியை கர்த்தர் பிரித்து இஸ்ரவேல் ஜனங்கள் கடந்து சென்றதற்கு அடையாளமாக 12 கற்களை கொண்ட தூண்களை கில்காலில் நாட்டச் சொன்னார்.யோசு 4:19 உபாகமம் புத்தகத்தில் 27வது அதிகாரத்தில் சாபம், ஆசீர்வாதம் இவைகளுக்கு அடையாளமாக ஏபால், கெரிசீம் மலைகளில் இரண்டு பெரிய கற்களை நாட்டச் சொன்னார். அதேபோல் ஆகோர் பள்ளத்தாக்கில் ஆகான் செய்த பாவத்திற்காக அவன் மேல் கல்லெறிந்து அந்த இடத்தில் பெரிய கற்குவியலை குவித்தார்கள்.இதுவும் ஒரு நினைவுச்சின்னம் தான். யோசு 7:25,26 அதுபோல மோசே கட்டளையிட்டப்படியே ரூபன்,காத்‌ மற்றும் ‌மனாசேயின் பாதி கோத்திரத்தாரும் மீதமுள்ள இஸ்ரவேலர் கானான் தேசத்தை முழுவதுமாக கைப்பற்றுவதற்கு உதவி செய்த பிறகு தங்கள் இடத்திற்கு திரும்பிய வேளையில் யோர்தான் அருகே ஒரு பெரிய பலிபீடத்தைக் கட்டினார்கள். காரணம் என்னவென்றால் தாங்கள் வாழும் இடம் கானான் தேசத்தின்‌ ஒரு பகுதியின் அடையாளம் என்பதற்காகத்தான். யோசு 22:10 இந்த நினைவுத்தூண்களை ஆண்டவர் எழுப்ப சொன்னதற்கான காரணங்கள் 1.தேவன் அவர்களுக்கு செய்த அதிசயங்கள், நடத்தின வழிகள் இவைகளை மறக்காமல் இருப்பதற்காக. 2.தங்களுடைய தலைமுறைக்கு இவைகளை சொல்லி அவர்களை கர்த்தருக்குள் நிலைப்படுத்துவதற்கு. வருகின்ற தலைமுறைகள் தங்கள் முன்னோர்களுக்கு‌ தேவன் செய்த நன்மைகளை மறக்கக்கூடாது என்பதற்காக இவைகளை நிறுவும்படி தேவன் கட்டளையிடார்.யோசு 4:20-24 நினைவுச் சின்னங்களை எழுப்புவதில் தவறில்லை. ஆனால் அவைகள் உருவ வழிபாட்டுக்கு நேராக நம்மை நடத்தி விடக்கூடாது. புதிய ஏற்பாட்டில் கிறிஸ்தவர்களாகிய நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள். 1. தேவன் நம்முடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ,அழிக்க முடியாத செய்த அற்புதங்களையும் நடத்தின வழிகளையும் நாம் எப்பொழுதும் நினைவு சின்னங்களாக நம் உள்ளத்தில் வைத்திருக்க வேண்டும். 2. அவற்றை நம்முடைய பிள்ளைகளுக்கும், நம்முடைய தலைமுறைக்கும் அவர்களை நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுது அவர்கள் தங்கள் குடும்பத்திற்கு தேவன் செய்த நன்மைகளை தலைமுறை தலைமுறையாக மறக்க மாட்டார்கள். மனதில் எழுப்பப்படும் நினைவுச்சின்னங்கள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படும் பொழுது அடுத்த தலைமுறை கிறிஸ்தவ உறுதிப்படும். எசேக்கியேல் சண்முகவேல்.

Preparation for the battle of Jericho

Preparation for the battle of Jericho . இஸ்ரவேல் ஜனங்கள் யோர்தானை கடந்து கானானை அடைந்த பொழுது அவர்கள் சந்திக்க வேண்டிய முதல் எதிரி பட்டணம் எரிகோ. யோர்தானைக் கடந்த உடனே அவர்கள் உடனடியாக எரிகோவை சந்திக்கவில்லை. ஏறக்குறைய இரண்டு வாரங்கள் கழித்த பிறகுதான் அவர்கள் எரிகோ பட்டிணத்தை எதிர்கொண்டார்கள். இந்த இரண்டு வார கால இடைவெளியில் கர்த்தர் ஒரு மிகப்பெரிய ஆயத்தத்தை செய்தார். அதைப் பற்றி இப்பொழுது விவரமாக பார்க்கலாம். விருத்தசேதனம் என்பது தேவன் ஆபிராகாமோடும் அவனுடைய சந்ததியோடும் பண்ணின உடன்படிக்கைக்கு சரீரப்பிரகாரமான அடையாளமாகும்.( Physical sign).ஆதி 17;9-14. விருத்தசேதனம் பெறாதவர்கள் இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் அறுப்புண்டு போவார்கள். காதேஸ் பர்னேயா என்கிற இடத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுடைய வாக்குறுதியை விசுவாசியாமல் 10 வேவுக்காரர்கள் சொன்ன அறிக்கையை நம்பி கானானுக்குப் போக விரும்பாமல் கலகம் செய்தார்கள். அதன் விளைவாக கலகம் செய்த அனைத்து இஸ்ரவேல் ஜனங்களும் கானானுக்குள் பிரவேசிக்கமாட்டார்கள் என்று கட்டளையிட்டார். அவர்களுடைய சந்ததிதான் கானானுக்கு செல்வார்கள் என்றும் ஆணையிட்டார். கலகம் செய்த அந்த ஜனங்கள் அனைவரும் மரிப்பதற்கு 38 ஆண்டுகள் ஆகிவிட்டது.. இந்த 38 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய தலைமுறை இஸ்ரவேல் ஜனங்கள் யோர்தானை கடந்து கானானை அடைந்தார்கள். ஆனால் இந்த ஜனங்களில் ஆண்கள் அனைவரும் அந்த 38 ஆண்டுகால வனாந்தர வாழ்க்கையில் விருத்தசேதனத்தை பெறவில்லை. இந்த புதிய தலைமுறை இஸ்ரவேல் ஜனங்களில் உள்ள ஆண்கள் விருத்தசேதனத்தை பெறாமலே யோர்தானைக் கடந்து வந்து விட்டார்கள். எனவே இந்த ஜனங்கள் தேவனுடைய கட்டளையின்படி அவர்கள் விருத்தசேதனத்தை திரும்பவும் பெறுவது அவசியம். அப்பொழுதுதான் அவர்கள் உடன்படிக்கையின் பிள்ளைகளாக மாறுவார்கள். ஆபிரகாமோடு பண்ணின அந்த உடன்படிக்கை மறுபடியும் புதுப்பிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. எனவேதான் கானான் தேசத்தை அடைந்த உடனே இந்த கட்டளையை தேவன் ஜனங்களுக்கு பிறப்பித்தார்.யோசு 5:2-8. "அக்காலத்திலே கர்த்தர் யோசுவாவை நோக்கி: நீ கருக்கான கத்திகளை உண்டாக்கி, திரும்ப இரண்டாம்விசை இஸ்ரவேல் புத்திரரை விருத்தசேதனம்பண்ணு என்றார். " யோசுவா 5:2 இந்தக் கட்டளையை நிறைவேற்றி முடிப்பதற்கு ஏறக்குறைய 10 நாட்கள் தேவைப்படும் என்று வரலாற்று ஆசரியர்கள் சொல்லுகிறார்கள். சாதாரணமாக செயலை கவனித்துப் பார்க்கும் பொழுது இதை"Most unmilitary acts"என்று கருதலாம். ஏனென்றால் இஸ்ரவேல் போர்வீரர்கள் இப்படிப்பட்ட அறுவை சிகிச்சையை செய்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் எதிரி படைகள் தாக்க முன்வந்தால் அது மிகப் பெரிய தோல்வியாக மாறி இருக்கும். ஆனாலும் தேவன் அதை அனுமதித்தார் . அவர் எல்லாம் அறிந்தவர். யுத்தம் அவருடைய யுத்தம். இரதங்களைக் கொண்டோ, குதிரைகளை கொண்டோ ஜெயித்தை கொடுப்பவர் அல்ல.‌ எனவே அடுத்து வருகின்ற மிகப்பெரிய போர்க்களங்களை இஸ்ரவேல் ஜனங்கள் வெற்றிக்கொள்ள முதலில் அந்த ஜனங்களை தன்னுடைய உடன்படிக்கையின் கீழ் கொண்டு வந்தார். அதற்கு அடையாளமாக ஒரு மிகப்பெரிய விருத்தசேதனம் என்கிற அறுவை சிகிச்சையை காலங்கடந்து அனுமதித்தார். விசுவாசிகளாகிய நாம் கற்றுக் கொள்ளக்கூடிய பாடம் முதலில் நாம் எப்பொழுதும் அவருடைய பிள்ளைகளாக இருக்கிறோம் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். புதிய உடன்பாட்டின் பிள்ளைகளாக நாம் காணப்பட வேண்டும் . இறைவன் நமக்குள் வாழ வேண்டும். அந்த ஒரு ஆயத்தத்தை ‌கடவுள் நம் வாழ்க்கையில் அனுமதித்த பிறகு தான் நாம் ஆவிக்குரிய போர்க்களங்களை வெற்றிகொள்ள தேவன் அனுமதிப்பார். God's people must be prepared before they can be trusted with victory.

Judas Iscariot

Just for your thoughts Do you know that Judas Iscariot was the only non-Galilean in Jesus Christ's disciples? Judas Iscariot is the only one of the apostles whom the Bible (potentially) identifies by his town of origin. Some scholars have linked his surname "Iscariot," to Queriot (or Kerioth), a town located south of Jerusalem in Judea. "One of the things that might set Judas apart from the rest of Jesus's disciples is that Judas is not from Galilee," says Robert Cargill, assistant professor of classics and religious studies at the University of lowa and editor of Biblical Archaeology Review. "Jesus is from the northern part of Israel, or Roman Palestine. But [Judas's] surname might be evidence that he's from the southern part of the country, meaning he may be a little bit of an outsider." The north-south division or cast division today has driven many great servants of God to apostasy and heresy .Satan is using north-south division or cast division suffocation to his evil design. Many may not accept it. But it is a bitter truth

நமக்குத் தேவை பரிசுத்தத்தில் தூய்மை, இன,சாதி தூய்மை அல்ல

உங்கள் சிந்தனைக்கு : நமக்குத் தேவை பரிசுத்தத்தில் தூய்மை, இன,சாதி தூய்மை அல்ல ஆதியாகம் புத்தகம் 38வது அதிகாரம் உணர்த்தும் ஆவிக்குரிய சத்தியம் என்ன? ஆதியாகம் புத்தகம் 37-வது அதிகாரம் முதல் ஐம்பதாவது அதிகாரம் வரை யோசேப்பின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை கொண்டு எழுதப்பட்டது. ஆனால் 38 வது அதிகாரத்தில் யூதாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை தேவ ஆவியானவர் எழுதி வைத்திருக்கிறார். சம்பந்தமில்லாமல் இந்த ஒரு அதிகாரம் இடையில் ஏன் எழுதப்பட்டது என்பதை அறிந்தால் ஒரு மிகப்பெரிய ஆவிக்குரிய புரிதல் நமக்கு ஏற்படும். வேதம் என்பது மீட்பின் திட்டத்தையும் மீட்பின் திட்டத்தில் நடு நாயகமாக விளங்கும் இயேசு கிறிஸ்து பற்றியும் சம்பவங்கள் அடக்கியது. உலகத்தின் இரட்சகர் யூதா கோத்திரத்திலி ந்து தோன்றியவர். இந்த 38 வது அதிகாரத்தில் இந்த ‌யூதா‌‌ தடம் மாறிப் போய் கானானிய பெண்ணை திருமணம் செய்து கொண்டதையும் அதனால் முதல் முதல் யூத கோத்திரம் புற ஜாதிகளால் கறைபட்டதையும் பார்க்கலாம் . ஆனால் அடுத்த அதிகாரத்தில் தடம் புரளாத யோசேப்பை குறித்தும் பார்க்கலாம். இந்த 38 வது அதிகாரத்தினுடைய முக்கிய குறிப்பு என்னவென்றால் யூதா ‌தாமாரினிடத்தில் பாரோசை பெற்றான் என்பது தான். அதில் யார் இந்த தாமார் என்றால் இவள் யாக்கோபினுடைய முதல் மகனான ஏர் என்பவனின் மனைவி. இவன் கொடுமையான மனிதனாக இருந்த காரணத்தினால் தேவன் அவனை சாகடித்தார் .இதனால் அவளுக்கு வாரிசு இல்லாமல் போய்விட்டது. அவளுக்கு வாரிசு கொடுக்கும்படியாக அடுத்த பையன் ஓனானை யூதா கேட்டுக் கொண்டான் .அது நிறைவேறாமல் போகவே மூன்றாவது மகன் கல்யாண பருவத்துக்கு வரும் வரை காத்திருக்க சொன்னான். தாமார் காலம் விரைந்து ஓடுவதை பொறுக்காமல் வேசியின் வேடம் அணிந்து தன் மாமனாரோடு உறவு கொண்டு பெற்ற குழந்தை தான் பாரேஸ்.. வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் மாமனாருக்கும் மருமகளுக்கும் நடந்த தவறான உறவு முறையில் பிறந்தவன் தான் இந்த பாரேஸ். இந்த பாரேஸ் இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில் இடம் பெறுகிறான். அதாவது இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில் தவறான உறவு முறையில் பிறந்த பாரேசும் இணைக்கப்படுகிறான் என்பதுதான் நாம் அறிய வேண்டிய சத்தியம். Christ's lineage included this illegitimate child. நாம் அறிய வேண்டிய சத்தியம். இங்கு நாம் பேசுகின்ற இனத்தூய்மை, ஜாதி தூய்மை எல்லாம் கிறிஸ்துவத்திற்கு ஏற்றதல்ல. புறஜாதிகளோடு கலக்கக்கூடாது என்பது தான் தேவனுடைய சித்தம். ஆனால் இப்படிப்பட்ட தவறான உறவு முறைகள் மூலமாகவும், ராகாப் போன்ற விலை மாந்தர்‌ மூலமாகவும், பத்சேபாள் மூலமாகவும் உலகத்தில் பிறந்தவர்தான் உலகத்தின் மீட்பர் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. இந்த நிகழ்வுகளின் ஆவிக்குரிய அர்த்தத்தை உண்மையாக புரிந்து கொள்ள கொண்டால் நாம் ஜாதிப் பெருமையை ஒருக்காலும் ஒரு நிமிடம் கூட ஒரு வினாடி கூட மேன்மை பாராட்ட மாட்டோம். யூதர்களுக்கு வேண்டுமானால் இனத்தூய்மை முக்கியமாக இருக்கலாம். ஆனால் இரட்சகருக்கோ இரட்சகரின் பிள்ளைகளான நமக்கோ பரிசுத்தம் என்கிற தூய்மையைத் தவிர வேறு எந்த தூய்மையும் நமக்கு அவசியமும் இல்லை. முக்கியமுமல்ல. இந்த உண்மையை கிறிஸ்தவர்கள் சரியாகப் பின்பற்றி இருந்தால், புரிந்து இருந்தால், தலைவர்கள் சரியாகப் போதித்திருந்து அதன்படி நடந்திருந்தால், கிறிஸ்துவ மதத்தில் காணப்படும் சகோதரத்துவம் இஸ்லாத்தில் காணப்படுகின்றன சமத்துவத்தை காட்டிலும் எவ்வளவு மேன்மையானது என்பதை இந்த உலகம் அறிந்திருக்கும். என்ன பரிதாபம் அது நடக்கவில்லை. எசேக்கியேல் சண்முகவேல்

Purity in holiness is more important than purity in caste creed and sect. -

உங்கள் சிந்தனைக்கு: Purity in holiness is more important than purity in caste creed and sect. இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில் 5 பெண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. தாமார்,ராகாப்,ரூத்,பத்சேபாள் மற்றும் மரியாள். இதில் தாமார் கானான் தேசத்தை சேர்ந்தவள். ராகாப் எரிகோ பட்டணத்தை சேர்ந்தவள். ரூத் மோவாபிய தேசத்தை சேர்ந்தவள். பத்சேபாள் தாவிதோடு விபச்சாரம் செய்தவள். ராகப் ஒரு விலைமாது. தாமார் தன்னை விலைமாதாக அடையாளப்படுத்தி தன் கணவனுடைய தகப்பனோடு (யூதா)உடலுறவு கொண்டவள். யாக்கோபின் 12 குமாரர்களில் முதலில் தடம் மாறி யூதர் அல்லாத பெண்ணோடு உறவு கொண்டவன் யூதா. ஆதியாகம புத்தகம் 38 வது அதிகாரத்தை படிக்கவும். பொதுவாக யூதர்கள் தங்கள் வம்ச வரலாற்றை எழுதும்போது பெண்களை குறிப்பிடுவதில்லை . அதற்கு மாறாக மத்தேயு தைரியமாக இந்த பெண்களை இயேசுவின் வம்ச வரலாற்றில் சேர்த்திருக்கிறார் Christ's lineage included this illegitimate child. உலகத்தினுடைய இரட்சகர் இயேசு கிறிஸ்தவின் வம்ச வரலாற்றில் இவர்கள் மூவரும் காணப்படுகிறார்கள். பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு உலகத்திற்கு வந்தார் என்கிற செய்தி இதன் மூலம் உறுதிப்படுகிறது. தேவகுமாரன் இந்தப் பெண்களோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். இயேசு கிறிஸ்துவின் அருட்செய்தி ஜாதி மதம் இனம் இவைகளை தாண்டி மனிதராய் பிறந்த எல்லோரும் பாவத்தோடு பிறக்கிறார்கள்‌ அவர்களுக்கு ஒரு மீட்பர் அவசியம் என்பதை இந்த வம்ச வரலாறு நமக்கு உணர்த்துகிறது. இதன் மூலம் நாம் அறிய வேண்டிய சத்தியம். 1.இங்கு நாம் பேசுகின்ற இனத்தூய்மை, ஜாதி தூய்மை  கிறிஸ்துவத்திற்கு ஏற்றதல்ல. 2.புறஜாதிகளோடு கலக்கக்கூடாது என்பது தான் தேவனுடைய சித்தம். ஆனால் ராகாப்,தாமார், பத்சேபாள் போன்றவர்களின் வம்சத்தில் இருந்து இந்த உலகத்தில் பிறந்தவர்தான் உலகத்தின் மீட்பர் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.  3.இந்த நிகழ்வுகளின் ஆவிக்குரிய அர்த்தத்தை உண்மையாக புரிந்து கொண்டால் நாம் ஜாதிப் பெருமையை ஒருக்காலும் ஒரு நிமிடம் கூட ஒரு வினாடி கூட மேன்மை பாராட்ட மாட்டோம். 4.யூதர்களுக்கு வேண்டுமானால் இனத்தூய்மை முக்கியமாக இருக்கலாம். ஆனால் இரட்சகருக்கோ இரட்சகரின் பிள்ளைகளான நமக்கோ பரிசுத்தம் என்கிற தூய்மையைத் தவிர வேறு எந்த தூய்மையும் நமக்கு அவசியமும் இல்லை. முக்கியமும்மல்ல. இந்த உண்மையை கிறிஸ்தவர்கள் சரியாகப் பின்பற்றி இருந்தால், புரிந்து இருந்தால், தலைவர்கள் சரியாகப் போதித்திருந்து அதன்படி நடந்திருந்தால், கிறிஸ்துவ மதத்தில் காணப்படும் சகோதரத்துவம் இஸ்லாத்தில் காணப்படுகின்றன சமத்துவத்தை காட்டிலும் எவ்வளவு மேன்மையானது என்பதை இந்த உலகம் அறிந்திருக்கும் . என்ன பரிதாபம் அது நடக்கவில்லை அடுத்த பதிவில் ராகப் தாமார் இவர்களை குறித்து விவரமாக பார்க்கலாம்.

தாமார் ராகாப் ஒரு ஒப்பீடு

தாமார் ராகாப் ஒரு ஒப்பீடு ஆதியாகம் புத்தகம் 37-வது அதிகாரம் முதல் ஐம்பதாவது அதிகாரம் வரை யோசேப்பின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. ஆனால் 38 வது அதிகாரத்தில் யூதாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை தேவ ஆவியானவர் எழுதி வைத்திருக்கிறார். சம்பந்தமில்லாமல் இந்த ஒரு அதிகாரம் இடையில் ஏன் எழுதப்பட்டு இணைக்கப்பட்டது என்பதை அறிந்தால் ஒரு மிகப்பெரிய  ஆவிக்குரிய சத்தியம் நமக்கு வெளிப்படும் . வேதம்  என்பது மீட்பின் திட்டத்தையும் மீட்பின் திட்டத்தில் நடு நாயகமாக விளங்கும் இயேசு கிறிஸ்து பற்றியும் சம்பவங்கள் அடக்கியது. உலகத்தின் இரட்சகர் யூதா கோத்திரத்திலிருந்து தோன்றியவர். இந்த 38 வது அதிகாரத்தில் இந்த ‌யூதா‌‌ தடம் மாறிப் போய் கானானிய பெண்ணை திருமணம் செய்து கொண்டதையும் அதனால் முதல் முதல் யூத கோத்திரம் புற ஜாதிகளால் கறைபட்டதையும் பார்க்கலாம் . ஆனால் அடுத்த அதிகாரத்தில் தடம் புரளாத யோசேப்பை குறித்தும் பார்க்கலாம். இந்த 38 வது அதிகாரத்தினுடைய முக்கிய குறிப்பு என்னவென்றால் யூதா ‌தாமாரினிடத்தில் பாரோசை பெற்றான் என்பது தான். அதில் யார் இந்த தாமார் என்றால் இவள் யூதாவின் முதல் மகனான ஏர் என்பவனின் மனைவி. இவன் கொடுமையான மனிதனாக இருந்த காரணத்தினால் தேவன் அவனை சாகடித்தார் .இதனால் அவளுக்கு வாரிசு இல்லாமல் போய்விட்டது. அவளுக்கு வாரிசு  கொடுக்கும்படியாக அடுத்த பையன் ஓனானை  யூதா கேட்டுக் கொண்டான் .அது நிறைவேறாமல் போகவே மூன்றாவது மகன் கல்யாண பருவத்துக்கு  வரும் வரை காத்திருக்க சொன்னான். தாமார் காலம் விரைந்து ஓடுவதை பொறுக்காமல்ிய வேசியின் வேடம் அணிந்து தன் மாமனாரோடு உறவு கொண்டு பெற்ற குழந்தை தான்  பாரேஸ்.. வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் மாமனாருக்கும் மருமகளுக்கும் நடந்த தவறான உறவு முறையில் பிறந்தவன் தான்  இந்த பாரேஸ்.  இந்த பாரேஸ் இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில் இடம் பெறுகிறான். அதாவது இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில் தவறான உறவு முறையில் பிறந்த பாரேசும் இணைக்கப்படுகிறான் என்பதுதான் நாம் அறிய வேண்டிய சத்தியம். Christ lineage included this illegitimate child. இயேசு கிறிஸ்துவின் வரலாற்றில் முதல் முதல் புற இனத்து பெண் இணைக்கப்பட்டது இந்த இடத்தில்தான். அடுத்தது எரிகோபட்டினத்தை சேர்ந்த ராகப் இணைக்கப்படுகிறாள்‌. ராகாபை பற்றி யோசுவாவின் புத்தகம் இரண்டாவது அதிகாரத்தில் நாம் பார்க்கலாம். ராகப் இஸ்ரவேலின் தேவனே மேலே வானத்திலும் கீழே பூமியிலும் உயர்ந்தவர் என்று விசுவாசித்தாள். இரண்டு வேவுக்காரர்களை தைரியமாக காப்பாற்றி அனுப்பி வைத்தவள். ஆனால் இந்த தாமார் அப்படி எந்தவிதமான விசுவாசத்தையும் நம்பிக்கையும் வெளிப்படுத்தவில்லை. ஆனாலும் அவள் இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில் இடம் பெறுகிறாள். அவளைப் பற்றி நாம் பார்க்கிற ஒரே சாட்சி யூதா அவளைப் பற்றி சொன்ன காரியம்தான். யூதா அவளை தன்னைவிட நீதிமான் என்று அழைக்கிறார். யூதாவுக்கு மூன்று ஆண் குழந்தைகள் இருந்தாலும் தாமார் மூலம் பிறந்த இரண்டு குழந்தைகளில் முதலில் வெளிவந்த பாரேஸ் இயேசு கிறிஸ்துவின் சந்ததியில் இணைக்கப்பட்டார் . ஒட்டுமொத்தமாக பார்க்கும் பொழுது தேவனுடைய தெரிந்து கொள்ளுதல், அழைப்பை போன்றவைகள் அவருடையஇறையாண்மையை சார்ந்தது புரிந்து கொள்ளலாம். Matthew is sharing his faith with us. He sees God working through Tamars seduction of her father-in-law, through the collusion of Rahab the harlot with Israel's spies, through Ruth the Moabites unexpected union with Boaz the Jew, through David and Bathshebas adultery. தேவனுடைய எந்த செயலிலும் கடவுளுடைய மறைமுகத் திட்டம் ஒன்று‌ இருக்கிறது என்பதுதான் காலம் நமக்கு சொல்லும் பாடம். படிக்க மத்தேயு முதல்‌ அதிகாரம், மற்றும் ஆதியாகமம் 38வது அதிகாரம். எசேக்கியேல் சண்முகவேல்

Joys of our Christian life

JUST FOR YOUR THOUGHT: One of the joys of my Christian life has been the study of Christian biography, the lives of the men and women whom God has used—and is using—to challenge the church and change the world. The Christians I’ve read about were all different in their backgrounds, their training, their personalities, and their ways of serving God; but they had one thing in common: They all believed God’s promises and did what He told them to do. They were men and women of faith, and God honoured them because they believed His Word. God hasn’t changed, and the principle of faith hasn’t changed. What seems to have changed is the attitude of God’s people: We no longer believe God and act by faith in His promises. His promises never fail (Josh. 21:45; 23:14; 1 Kings 8:56), but we can fail to live by the grace of God and not enter into all that He has promised for us (Heb. 3:7–19; 12:15). God has “brought us out that He might bring us in,” but too often we fail to “enter in because of unbelief” (Heb. 3:19).W.W.WIERSBE

"பரிசுத்தம் பண்ணிக் கொள்ளுங்கள்" என்பதற்கு பழைய ஏற்பாட்டில் என்ன அர்த்தம்?

உங்கள் சிந்தனைக்கு: "பரிசுத்தம் பண்ணிக் கொள்ளுங்கள்" என்பதற்கு பழைய ஏற்பாட்டில் என்ன அர்த்தம்? What is the meaning of consecration in the Old Testament? யோசுவா ஜனங்களை நோக்கி: உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள். (Consecrate) “நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்றான். “ யோசுவா 3:5 இந்த இடத்தில் சொல்லப்பட்ட பரிசுத்தம்பண்ணிக் கொள்ளுங்கள் என்பதின் உண்மையான அர்த்தம் என்ன? பலர் இதை ஆத்தூமாவில் பரிசுத்தம்பண்ணி ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கிற நிகழ்வாக கருதுகிறார்கள். ஆனால் உண்மையான அர்த்தம் என்னவென்றால் உங்கள் சரீரத்தை பரிசுத்தம் பண்ணிக் கொண்டு அதாவது குளித்து ஆடைகளை சுத்தம் பண்ணிக் கொண்டு ஒரு புதிய ஆரம்பத்திற்கு தயாராகுங்கள் என்பது தான் இந்த இடத்தில் சொல்லப்பட்ட அர்த்தம். இந்த இடத்தில் நடக்கப் போகும் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் பொழுது இதுதான் உண்மையான அர்த்தம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இதைத்தான் Wiersbe மற்றும் Dake போன்ற‌ வேத அறிஞர்கள் விளக்குகிறார்கள்.. It was in ceremonial sense, by washing their bodies and their clothes, and abstaining from their wives; and in a moral sense. யாக்கோபை பெத்தேலை‌ நோக்கி போகச்சொன்ன போது அவன் தன் குடும்பத்தாரை நோக்கி "உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டு, உங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, உங்கள் வஸ்திரங்களை மாற்றுங்கள்"என்று கூறினார் ஆதியாகமம் 35:2 தாவீதின் பாவத்தை நாத்தான் சுட்டி காட்டிய போது தாவீது பாவ அறிக்கையிட்டு “தாவீது தரையைவிட்டு எழுந்து, ஸ்நானம்பண்ணி, எண்ணெய் பூசிக் கொண்டு, தன் வஸ்திரங்களை மாற்றி, கர்த்தருடைய ஆலயத்திலே பிரவேசித்து, பணிந்துகொண்டு, தன் வீட்டுக்கு வந்து, போஜனம் கேட்டான். அவன் முன்னே அதை வைத்தபோது புசித்தான்'' என‌படிக்கிறோம் 2 சாமுவேல் 12:20 மேலும் யாத்19:10ஐ அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் பொழுது பரிசுத்தப்படுத்துதல் என்றால் கழுவுதல் என்று அர்த்தம். வேதத்தில் குளிப்பதும் புதிய ஆடைகளை உடுத்துவதும் ஒரு புதிய ஆரம்பத்திற்கு அறிகுறியாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் அந்தக் காலகட்டங்களில் தினமும் குளிப்பது என்பது ஒரு ஆடம்பரமாக கருதப்பட்ட காலம். குளித்துவிட்டு உடைகளை மாற்றுவது என்பது சில முக்கியமான நிகழ்வுகளில் ஒரு புதிய தொடக்க நிகழ்வுகளில் நடக்கும் நிகழ்ச்சி. ஆனால் புதிய ஏற்பாட்டில் இது ஆன்மீக சுத்திகரிப்பாக சொல்லப்படுகிறது.2கொரி7:1 எனவே யோசுவா 3:5 ன் அர்த்தம் ' நாளை நடைபெறப் போகும் அதிசயங்களுக்கு உங்கள் சரீரங்களை சுத்தப்படுத்தி புதிய ஆடைகளை உடுத்திக் கொள்ளுங்கள் என்பதுதான்'. ஆனால் நாம் இதற்கு ஆவிக்குரிய அர்த்தத்தை(ஆவிக்குரிய அர்ப்பணிப்பு) கற்பித்தாலும் அது தவறல்ல. இதைப் பற்றிய W.Wiersbe அவர்களின் விளக்கத்தை கீழே சமர்ப்பிக்கிறேன். அடுத்து சமநிலையோடு பார்க்க வேண்டுகிறேன். இது கத்தோலிக்க.மொழிபெயர்ப்பு If the experience of Israel at Mount Sinai was the pattern (Ex. 19:9–15), “sanctify yourselves” meant that everybody bathed and changed their clothes and that the married couples devoted themselves wholly to the Lord (1 Cor. 7:1–6). In the Near East, however, water was a luxury that wasn’t used too often for personal hygiene. In our modern world, we’re accustomed to comfortable bathing facilities, but these were unknown to most of the people in Bible times. In the Bible the imagery of washing one’s body and changing clothes symbolised making a new beginning with the Lord. Since sin is pictured as defilement (Ps.51:2, 7), God has to cleanse us before we can truly follow Him. When Jacob made a new beginning with the Lord and returned to Bethel, he and his family washed themselves and changed their garments (Gen. 35:1–3). After King David confessed his sin, he bathed, changed clothes, and worshipped the Lord (2 Sam. 12:20). The imagery is carried over into the New Testament in 2 Corinthians 6:14—7:1; Ephesians 4:26–27, and Colossians 3:8–14.. \

"பரிசுத்தம் பண்ணிக் கொள்ளுங்கள்" என்பதற்கு பழைய ஏற்பாட்டில் என்ன அர்த்தம்?

உங்கள் சிந்தனைக்கு: "பரிசுத்தம் பண்ணிக் கொள்ளுங்கள்" என்பதற்கு பழைய ஏற்பாட்டில் என்ன அர்த்தம்? What is the meaning of consecration in the Old Testament? யோசுவா ஜனங்களை நோக்கி: உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள். (Consecrate) “நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்றான். “ யோசுவா 3:5 இந்த இடத்தில் சொல்லப்பட்ட பரிசுத்தம்பண்ணிக் கொள்ளுங்கள் என்பதின் உண்மையான அர்த்தம் என்ன? பலர் இதை ஆத்தூமாவில் பரிசுத்தம்பண்ணி ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கிற நிகழ்வாக கருதுகிறார்கள். ஆனால் உண்மையான அர்த்தம் என்னவென்றால் உங்கள் சரீரத்தை பரிசுத்தம் பண்ணிக் கொண்டு அதாவது குளித்து ஆடைகளை சுத்தம் பண்ணிக் கொண்டு ஒரு புதிய ஆரம்பத்திற்கு தயாராகுங்கள் என்பது தான் இந்த இடத்தில் சொல்லப்பட்ட அர்த்தம். இந்த இடத்தில் நடக்கப் போகும் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் பொழுது இதுதான் உண்மையான அர்த்தம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இதைத்தான் Wiersbe மற்றும் Dake போன்ற‌ வேத அறிஞர்கள் விளக்குகிறார்கள்.. It was in ceremonial sense, by washing their bodies and their clothes, and abstaining from their wives; and in a moral sense. யாக்கோபை பெத்தேலை‌ நோக்கி போகச்சொன்ன போது அவன் தன் குடும்பத்தாரை நோக்கி "உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டு, உங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, உங்கள் வஸ்திரங்களை மாற்றுங்கள்"என்று கூறினார் ஆதியாகமம் 35:2 தாவீதின் பாவத்தை நாத்தான் சுட்டி காட்டிய போது தாவீது பாவ அறிக்கையிட்டு “தாவீது தரையைவிட்டு எழுந்து, ஸ்நானம்பண்ணி, எண்ணெய் பூசிக் கொண்டு, தன் வஸ்திரங்களை மாற்றி, கர்த்தருடைய ஆலயத்திலே பிரவேசித்து, பணிந்துகொண்டு, தன் வீட்டுக்கு வந்து, போஜனம் கேட்டான். அவன் முன்னே அதை வைத்தபோது புசித்தான்'' என‌படிக்கிறோம் 2 சாமுவேல் 12:20 மேலும் யாத்19:10ஐ அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் பொழுது பரிசுத்தப்படுத்துதல் என்றால் கழுவுதல் என்று அர்த்தம். வேதத்தில் குளிப்பதும் புதிய ஆடைகளை உடுத்துவதும் ஒரு புதிய ஆரம்பத்திற்கு அறிகுறியாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் அந்தக் காலகட்டங்களில் தினமும் குளிப்பது என்பது ஒரு ஆடம்பரமாக கருதப்பட்ட காலம். குளித்துவிட்டு உடைகளை மாற்றுவது என்பது சில முக்கியமான நிகழ்வுகளில் ஒரு புதிய தொடக்க நிகழ்வுகளில் நடக்கும் நிகழ்ச்சி. ஆனால் புதிய ஏற்பாட்டில் இது ஆன்மீக சுத்திகரிப்பாக சொல்லப்படுகிறது.2கொரி7:1 எனவே யோசுவா 3:5 ன் அர்த்தம் ' நாளை நடைபெறப் போகும் அதிசயங்களுக்கு உங்கள் சரீரங்களை சுத்தப்படுத்தி புதிய ஆடைகளை உடுத்திக் கொள்ளுங்கள் என்பதுதான்'. ஆனால் நாம் இதற்கு ஆவிக்குரிய அர்த்தத்தை(ஆவிக்குரிய அர்ப்பணிப்பு) கற்பித்தாலும் அது தவறல்ல. இதைப் பற்றிய W.Wiersbe அவர்களின் விளக்கத்தை கீழே சமர்ப்பிக்கிறேன். அடுத்து சமநிலையோடு பார்க்க வேண்டுகிறேன். இது கத்தோலிக்க.மொழிபெயர்ப்பு If the experience of Israel at Mount Sinai was the pattern (Ex. 19:9–15), “sanctify yourselves” meant that everybody bathed and changed their clothes and that the married couples devoted themselves wholly to the Lord (1 Cor. 7:1–6). In the Near East, however, water was a luxury that wasn’t used too often for personal hygiene. In our modern world, we’re accustomed to comfortable bathing facilities, but these were unknown to most of the people in Bible times. In the Bible the imagery of washing one’s body and changing clothes symbolised making a new beginning with the Lord. Since sin is pictured as defilement (Ps.51:2, 7), God has to cleanse us before we can truly follow Him. When Jacob made a new beginning with the Lord and returned to Bethel, he and his family washed themselves and changed their garments (Gen. 35:1–3). After King David confessed his sin, he bathed, changed clothes, and worshipped the Lord (2 Sam. 12:20). The imagery is carried over into the New Testament in 2 Corinthians 6:14—7:1; Ephesians 4:26–27, and Colossians 3:8–14.. \

12 கற்களை கொண்ட நினைவுத்தூண்கள் ஒன்றா இரண்டா?

உங்கள் சிந்தனைக்கு: 12 கற்களை கொண்ட நினைவுத்தூண்கள் ஒன்றா இரண்டா? யோசு 4:3,9 Whether one or two heaps of stones were set up as a memorial in Joshua 4th chapter. இஸ்ரவேல் ஜனங்கள் யோர்தான் நதியை கடக்கும் பொழுது ஆசாரியர்கள் யோர்தான் நதியில் கால் வைத்த இடத்திலிருந்து பன்னிரண்டு கற்களை எடுத்து அதை கில்காலிலே நாட்டும்படியாக கர்த்தர் கட்டளையிட்டார். இந்த அதிகாரத்தினுடைய ஒன்பதாம் வசனத்தில் யோர்தான் நதியில் ஆசாரியர்கள் கால் பதித்த அந்த இடத்தில் யோசுவா 12 கற்களை நாட்டியதாக பார்க்கலாம் . ஆனால் சில மொழிபெயர்ப்பில் இது தனி ஒரு நிகழ்வாக சொல்லப்படவில்லை.‌ மூன்றாம் வசனத்தில் சொல்லப்பட்ட நிகழ்வின் தொடர்ச்சியாக கூறப்பட்டிருக்கிறது.(Repetition ) . காரணம் யோர்தான் நதியின் உள்ளே 12 கற்களை தேவன் நாட்டச் சொல்லி யோசுவாக்கு கட்டளையிடவில்லை. எனவே 12 கற்களை கொண்ட தூண்கள் கால்காலில் மட்டும்தான் நாட்டப்பட்டதாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் இந்த கருத்தை அனேக வேத பண்டிதர்கள் மறுக்கிறார்கள் . இவர்கள் கருத்துப்படி இரண்டு இடங்களில் 12 கற்கள் கொண்ட நினைவுத் தூண்கள் நாட்டப்பட்டது. ஒன்று கீழ்காலிலும் மற்றொன்று யோர்தான் நதியிலும் நாட்டப்பட்டது‌ இந்த நிகழ்வை புதிய ஏற்பாட்டின் இரட்சிப்பின் நிகழ்வோடு பொருத்திப் பார்க்க வேண்டும் என்று கருதுகிறார்கள். 12 கற்கள் யோர்தான் நதியில் நாட்டப்பட்டது நாம் இயேசுவோடு அவரது மரணத்தில் அடக்கம் செய்யப்படுவதற்கு நிழலாக இருக்கிறது என்றும் கில்காலில் நாட்டப்பட்ட 12 கற்கள் நாம் அவருடைய உயிர்த்தெழுதில் பங்கு பெறுவதற்கு அடையாளமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். The monument at Gilgal reminded the Jews that God had opened the Jordan River and brought them safely across into the Promised Land. They had made a break with the past and were never to think of going back. The monument in the depths of the river reminded them that their old life was buried and they were now to “walk in newness of life” (Rom. 6:1–4) W.W.Wiersbe. தேவஆவியானவர் எதையும் தேவையில்லாமல் இணைத்திருக்க மாட்டார். எனவே இரண்டு இடங்களில் 12 கற்கள் கொண்ட நினைவுதாண்கள் நாட்டபட்டதாக அறிந்து கொள்ளலாம்.

The real fear of Paul

Just for your thought: The real fear of Paul As a Christian, there are things more dangerous than pain and death. Sin is one such example. In 2 Timothy 4:18, Paul expressed his certainty that the Lord would release him from "every work" and transport him to the celestial realm. Paul's greatest fear was not death, but rather the possibility of denial. It is important not to degrade God's name or disrespect His Lordship. Paul believed that the time had come for his permanent departure (2 Tim. 4:6). He wished to end his life peacefully and without defiance. Main inspiration from WILLIAM BARCLAY COMMENTARY COMPILED BY EZEKIEL SHANMUGAVEL

who is Judas Iscariot?

Do you know that Judas Iscariot was the only non-Galilean in Jesus Christ's disciples? Judas Iscariot is the only one of the apostles whom the Bible (potentially) identifies by his town of origin. Some scholars have linked his surname "Iscariot," to Queriot (or Kerioth), a town located south of Jerusalem in Judea. "One of the things that might set Judas apart from the rest of Jesus's disciples is that Judas is not from Galilee," says Robert Cargill, assistant professor of classics and religious studies at the University of lowa and editor of Biblical Archaeology Review. "Jesus is from the northern part of Israel, or Roman Palestine. But [Judas's] surname might be evidence that he's from the southern part of the country, meaning he may be a little bit of an outsider." The north-south division or cast division today has driven many great servants of God to apostasy and heresy .Satan is using north-south division or cast division suffocation to his evil design. Many may not accept it. But it is a bitter truth

தேவன் நம்மீதுவைத்துள்ள அன்பு

உங்கள் சிந்தனைக்கு: தப்பியோடிய யாக்கோவை லாபான் சந்தித்த பொழுது அவனை நோக்கி பொங்கி எழுந்து யாக்கோபு சொன்ன வார்த்தை "ஆபிரகாமின் கடவுளும் ஈசாக்கின் அச்சமுமான என் தi;தையின கடவுள் என்னோடு இருந்திராவிடில் உண்மையாகவே நீர் என்னை வெறுங்கையனாய் அனுப்பியிருப்பீர்." என்பதே "தேவன் மட்டும் நம்மோடு இல்லாதிருந்தால்" என்கிற வார்த்தை மிகவும் சிந்திக்க தூண்டக்கூடிய ஒரு வார்த்தை. இப்படி நாம் ஆபத்து நேரத்தில் சிந்திக்கும் போதெல்லாம் கடந்த காலத்தில் நம்மை வழிநடத்தின ஆண்டவரை நன்றி சொல்லாமல் இருக்க முடியாது. அவர் மட்டும் நம்மோடு இல்லாதிருந்தால் இந்த உயர்வு, இந்த வசதி, வாய்ப்புகள், விபத்துகள் நாசமோசங்களை கடந்து வந்த காரியங்கள், பிள்ளைகளுடைய ஆசீர்வாதம் இவைகளை நாம் பெற்றிருப்போமா? இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். தேவன் மட்டும் நம்மோடு இல்லாதிருந்தால் இவைகளை ஒன்றையும் நாம் பெற்றிருக்க முடியாது. நாம் அடிக்கடி தியானிக்க வேண்டிய ஒரு வார்த்தை "தேவன் மட்டும் நம்மோடு இல்லாத இருந்தால்"என்பதே லாபனோடு யாக்கோபு வாழ்ந்த 20 வருட வாழ்க்கையில் தேவன் அவனை பாதுகாத்தார். யாக்கோபோடு தேவன் இல்லாதிருந்தால் அவன் வெறுமையாய் திரும்பி இருப்பான். அதுபோல் நம்முடைய வாழ்க்கையிலும் தேவன் இல்லாதிருந்தால் அந்த வாழ்க்கையை நாம் எண்ணி கூட பார்க்க முடியாது. தேவன் நம்மீதுவைத்துள்ள அன்பு எவ்வளவு உயர்ந்தது.

Lesson from Korah's mutiny and church administration

Just for your thought: Lesson from Korah's mutiny and church administration The Bible frequently discusses the desire for status and power. For instance, Adonijah's ascent to the throne, Korah's defiance of Moses and Aaron, and Absalom's revolt against his father are just a few examples. In 2 John 9-10, Diotrephes' ambition for control over the local church is described, while in Luke 22:44, the disciples are seen squabbling about who among them was the greatest. However, we must always remember that the most important role in the Christian life is the one that God has chosen for us. Therefore, we should strive to obey God and carry out the tasks He has given us. As part of Christ's body, every church member has a spiritual gift that can be used to help others. Hence, every member has an important role to play in serving God and others. It is not about seeking recognition or fame, but about being obedient to God's will and using our gifts to help others. By using our spiritual gifts, we can make a valuable contribution to the community and help to build up the body of Christ Therefore, it is important to recognize the significance of each member and work together in harmony and unity for the glory of God. The role of every member is important .Leader who refuses to recognise this principle is not a leader at all. He is an autocrat. Main inspiration from W.W.WIERSBE EZEKIEL SHANMUGAVEL

ஜெப வாழ்கை

உங்கள் சிந்தனைக்கு ஜெப வாழ்கை நம்மை எப்போதும் தைரியசாலியாய் மாற்றுமே தவிர ஒருபோதும் கோழையாக மாற்றாது

2 தீமோ 2::22-25 சரியான விளக்கம்.

2 தீமோ 2::22-25 சரியான விளக்கம். வேத வாக்கியங்களை சரியாக கையாள தெரிந்த போதகனே தேவனுடைய சபையில் உள்ள பொன், வெள்ளிக் கலன்கள். இவர்கள் தேவனுடைய பார்வையில் மதிப்புடையவர்கள். தவறாக போதிக்கிறவன் மண் மற்றும் மரத்தாலான கலன்கள். இவர்கள் உலகில்,சபையில் எவ்வளவு செல்வாக்கு உள்ளவர்களாக(Popular,and dominant ) காணப்பட்டாலும் தேவனுடைய பார்வையில் மதிப்பற்றவர்கள். எனவே விசுவாசிகள் இவர்களை அடையாளம் கண்டு அவர்களை விட்டுவிலகி தங்களை சுத்திகரித்துக்கொள்ளவேண்டும்

ஒரு தலைவருக்கு இரண்டு தகுதிகளும் வேண்டும்.

உங்கள் சிந்தனைக்கு: ஆபிரகாமும், ஈசாக்கும் தனிப்பட்ட முறையில் தேவனிடமிருந்து வாக்குறுதிகளை பெற்றிருந்தாலும் அவர்கள் பிரச்சனைகளை சமாளித்த விதம் வித்தியாசமானது. ஆபிரகாம் பிரச்சனைகளை துரிதமாக தீர்த்து வைப்பதில் திறமைசாலியாக இருந்தான். He was a man of quick decision. லோத்துடன் ஏற்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் சரி ஆகார்- இஸ்மவேல் பிரச்சனையாக இருந்தாலும் சரி, உள்ளூர் அரசர்களோடு ஏற்பட்ட போராட்டமாக இருந்தால் சரி பிரச்சனைகளை நேரடியாக சமாளித்து அது வெற்றி கண்டான். He will not prolong the issue. ஆனால் அவன் மகன் ஈசாக்கு அப்படி அல்ல. அபிமெலேக்கு ஈசாக்கு ஆசீர்வதிக்கப்பட்டதை பார்த்து பொறாமைப்பட்டுஅந்த இடத்தை விட்டு புறப்பட்டு போகச் சொன்னபோது உடனே புறப்பட்டு வேறு இடம் சென்றான். கேராரில் உள்ள மேய்ப்பர்களோடு ஏற்பட்ட பிரச்சனையில் உடனே அந்த இடத்தை விட்டு வேறு இடம் சென்றான். . இவனுடைய வழிமுறை என்பது "கூடுமானால் யாவரோடும் சமாதானமாக இருக்க வேண்டும்" என்பதுதான். ஒரு தலைவருக்கு இந்த இரண்டு தகுதிகளும் வேண்டும். பிரச்சனைகளை ஊற போட்டு அதை நீர்த்துப் போக பண்ண கூடாது. அதேநேரத்தில் யாரோடும் சமாதானமாகவும் இருக்கவும் முயற்சி செய்ய வேண்டும். wait and watch policy was his approach தகப்பனும் மகனாக இருந்தாலும் ஆபிராமும் ஈசாக்கும் வெவ்வேறு ஆவிக்குரிய குணங்களை உடையவர்கள். பிரச்சனைகளை தலைவர்கள் ஒரே விதமாக அணுகுவார்கள் என்பது தவறான கருத்து. அவர்களை தேவன் எப்படி நடத்துகிறாரோ அப்படித்தான் அவர்கள் நடந்து கொள்வார்கள். ஆதி 26:14-22, 13:5-18,21:9

First successful man in the Bible

First successful man in the Bible எல்லோரும் வெற்றியுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் என்று விரும்புகிறார்கள். எது வெற்றி என்பது பற்றி உலகத்தினுடைய வரன்முறை வேறு. வேதத்தின் பார்வைவேறு . உலகத்தின் பார்வையில் காணப்படுகின்ற வெற்றி எல்லாம் வேதத்தின் பார்வையில் அநேக நேரங்களில் குப்பையாக கருதப்படும் . வேதம் போதிக்கின்ற வெற்றியை இந்த உலகம் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் குழப்பம் எங்கே வருகிறது என்றால் உலகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வெற்றியை வேதம் அங்கீகரிக்கின்ற வெற்றியாக கிறிஸ்தவர்கள் கருதுவதுதான். வெற்றியுள்ள வாழ்க்கைக்கு இரண்டு அடிப்படைத் தகுதிகள் வேண்டும். ஒன்று ஒரு மனிதனோடு கடவுள் இருக்க வேண்டும் இரண்டு தேவனுடைய பரிபூரண சித்தத்தை இந்த உலகத்தில் அந்த மனிதன் நிறைவேற்ற வேண்டும். வேதத்தில் வெற்றியுள்ள மனிதன் என்று முதலில் குறிப்பிடப்படுவது யோசேப்பைத்தான். The Lord was with Joseph .He became a successful man.ESV ஆதியாகமம் 39 ம் மட்டும் அதிகாரத்தில் மூன்று முறை "Lord was with him"என்கிற வார்த்தை வருகிறது. . தேவன் அவனோடு இருந்தபடியினால் அவர் செய்த காரியங்கள் எல்லாம் வாய்த்தது. பார்வோனுக்கு அடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்டார். அடுத்தது யோசேப்பு தேவனுடைய நோக்கத்தை தன் வாழ்க்கையில் பரிபூரணமாக‌ நிறைவேற்றினார். யோசேப்பு‌ எந்த நோக்கத்திற்காக எகிப்து தேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டாரோ அந்த நோக்கத்தை தேவனோடு வாழ்ந்து பரிபூரணமாக நிறைவேற்றினார். தேவன் நம்மோடு இருப்பது என்பது வேறு நாம் அவரோடு இருப்பது என்பது வேறு. நாம் அவரோடு இருப்பதாக நாம் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் அவர் நம்மோடு இருப்பதை நாம் உறுதி செய்து நாம் செயல்படும்‌போதுதான் நாம் வெற்றி உள்ள வாழ்க்கை வாழ முடியும் நாம் கற்றுக்கொள்ளக்கூடிய காரியம், நம்முடைய வாழ்க்கையில் எதை உறுதி செய்கிறோமோ இல்லையோ தேவன் நம்மோடு இருக்கிறாரா என்பதை மட்டும் அனுதினமும் உறுதி செய்தால் நம்மை விட வெற்றி உள்ள மனிதன் வேறு யாரும் இருக்க முடியாது. ஒரு மனிதனோடு கடவுள் கூட இருந்து தேவனுடைய சித்தத்தை முழுமையாக நிறைவேற்றுகிற மனிதனே வெற்றிகரமான மனிதன்

உடன்படிக்கைப் பெட்டியும் இன்றைய சபைகளும்

உடன்படிக்கைப் பெட்டியும் இன்றைய சபைகளும் தேவனுடைய உடன்படிக்கை பெட்டி என்பது அவருடைய சமூகத்தை குறிக்கக்கூடிய காரியம். ஆசரிப்பு கூடாரத்திலும், சரி சாலமோன் கட்டின ஆலயத்திலும் சரி உடன்படிக்கைப் பெட்டி மகா பரிசுத்த ஸ்தலத்தில் வைக்கப்பட்டது. எரிகோவை சுற்றி வரும் பொழுது இஸ்ரவேல் ஜனங்கள் இந்த உடன்படிக்கை பெட்டியை எடுத்துக்கொண்டு சுற்றி வந்தார்கள். சவுல் போர்க்களத்தில் உடன்படிக்கைப் பெட்டியை கொண்டு வர கட்டளையிட்டதாக பார்க்கலாம். ஏலியின் காலத்தில் பெலிஸ்தியர் இந்த உடன்படிக்கைப் பெட்டியை எடுத்து சென்றபோது தேவ மகிமை இஸ்ரவேலை விட்டு கடந்து போனதாக பார்க்கலாம். ஆனால் சாலமோன் கட்டின ஆலயம் இடிக்கப்பட்ட பிறகு புதுப்பிக்கப்பட்ட இரண்டாவது தேவாலயத்தில் இந்த உடன்படிக்கை பெட்டி‌இல்லை. இந்த உடன்படிக்கை பெட்டி இல்லாமல் இஸ்ரவேலர் 480 ஆண்டுகள் தேவனை ஆராதித்தார்கள். இரண்டாவது ஆலயம் இடிக்கப்படும் வரை உடன்படிக்கை பெட்டி ஆலயத்தில் கொண்டுவரப்படவே இல்லை அது காணாமல் போய்விட்டது. அதுபோல்தான் இன்று பல சபைகளில் தேவ மகிமை இல்லாமல் தேவனை ஆராதிக்கிறார்கள். தேவனுடைய சமூகமாகிய உடன்படிக்கை பெட்டியின்றி ஆலயங்களில் சடங்காச்சாரங்களாக ஆராதனை காணப்படுகிறது. ஏதோ கடமைக்காக சபைக்கு வர வேண்டும், காணிக்கை செலுத்த வேண்டும், நடனத்தோடு பாட வேண்டும், செயற்கையாக உருவாக்கப்படும் தேவ சமூகத்தை அனுபவிக்க வேண்டும் என்கிற நிலைதான் அநேக சபைகளில் காணப்படுகிறது.

Romans 1:17-32

DAILY QUOTE Read -Romans 1:17-32 In these above verses, there are 4 revelations of God. 1.Revelation of His Glory v -19-20 2.Revelation of His wrath v- 18 3.Revelation of His righteousness v- 17 4.Revelation of His power in believers by saving them V-16 What a beautiful combination of God’s working for all mankind whether Jews or Gentile! Stage 1 Revelation of His Glory God revealed Himself to man through creation, the things He made. From the world around him man knew that there was a God who had the wisdom to plan and the power to create. He should have realized that the God is eternal. “The heavens declare the glory of God; and the firmament showeth his handiwork.”Ps 19:1 Stage 2 Revelation of His wrath But men did not allow the truth about God to work in their life. They suppressed it in order that they might live their own lives and not to be convicted by God’ truth. They turned the truth in to lie and abandoned the truth and became like beasts in their thinking and in living. Stage 3 Revelation of His righteousness. In the death of Christ God revealed His righteousness by punishing sins and in the resurrection of Christ, God revealed His righteousness by making salvation available to the believing sinners. Through the death and resurrection Christ, God is seen to both “Just and Justifier”.(Rom 3:26) Stage 4 Revelation of His power in believers by saving the V16. God revealed His power which produces salvation for everyone who believes. This gospel has transformed the life Greek known for philosophy and subdued the military might of Rome and conquered the whole world . This gospel is sufficient for India ‘s salvation also . Amen. Compiled from the commentary By Warren W. Wiersbe, William Barclay and John R.W.Stott ON THIS DAY

நமது மீட்பில் உள்ள நிலைகள்

நமது மீட்பில் உள்ள நிலைகள் 1.காலங்களை கடந்த கிறிஸ்துவுக்குள் முன்குறித்த தீர்மானம் தேவனுடைய தீர்மானம். 2. அந்த நோக்கத்தின் அடிப்படையில் இந்த உலகில் குமாரனாகிய தேவன் மனிதனாக இயேசு என்கிற நாமத்தில் பிறந்து சிலுவையில் பாடுபட்டு மரித்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த வரலாற்று நிகழ்வு . 3.சுவிசேஷத்தின் மூலம் பாவிகள் மீட்புப்பெற அவர் விடுக்கும் அழைப்பு. 4.அந்த அழைப்பு ஏற்றுக்கொள்ளும் விசுவாசிகள் பரிசுத்த ஆவியின் மூலமாக மறுபடியும் பிறந்து பரிசுத்தமாகி அவருக்கு ஒப்பாகுதல். 5.இயேசு மறுபடியும் இந்த உலகிற்கு வந்து தம்முடையவர்களை மறுரூபமாக்கி நித்திய அழியாத வாழ்விற்கு அழைத்து செல்லுதல். மறுபடியம் பிறந்த தேவ பிள்ளைகள், அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக பெற்றவர்கள் . We received immortal life from God நம்முடைய மீட்பின் தொடக்க நாளை ,நிகழ்வை கிறிஸ்துவுக்குள் முன்குறித்த தீர்மானம் தேவனுடைய தீர்மான த்தை யார் யூகிக்க முடியும். “It traces it from a past eternity through a historical outworking in Jesus Christ and in Christian to an ultimate destiny with Christ and like Christ in a future immortality” JOHN R W STOTT நாம் முன்குறிக்க பட்டவர்கள் .இதுவே நம்முடைய மிக பெரிய அடையாளம். 2 தீமோ 1:9,10

Mystery of incarnation

உங்கள் சிந்தனைக்கு! Mystery of incarnation "அந்த வார்த்தை மாம்சமாகி" 'அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,' ''தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்." வேதத்தில் திரித்துவத்தை போலவே நம்முடைய மனித ஞானத்தால் முழுமையாக புரிந்து கொள்ள இயலாத ஒரு நிகழ்வு "வார்த்தை மாமிசமானது " ஆதியிலே வார்த்தையாய் இருந்தவர், தேவனோடு இருந்தவர், தேவனாய் இருந்தவர் ,மாமிசமாய் மாறினார் . தேவனுடைய ரூபமாய் இருந்தவர்,தேவனுக்கு சமமாய் இருந்தவர், தம்மைத்தாமே வெறுமையாக்கி மனுஷர் சாயலானார்." இந்த நிகழ்வு திரித்துவத்தை போலவே ஒரு ரகசியம்(Mystery) Jesus Christ was 100% divine and at the same time He was 100% human. It is the union of two natures in our Lord Jesus Christ’s person. These two natures remained perfect and distinct. தெய்வீகமும் மனுஷீகமும் இணைந்து கிறிஸ்துவில் காணப்படுகிறது. இயேசு கிறிஸ்து தேவனாய் இருந்தும், மாமிசமான நாள் முதல் பாவமில்லாத மனிதனாகவும் காணப்பட்டார். அவர் இன்றும் பிரதான ஆசாரியராய் தேவனுடைய வலதுபாரிசத்தில் மனிதனாகவும் தேவனாகவும் காணப்படுகிறார். அப்போ 7:55-56,எபே 1:20 கொலோ 3:1எபி 4:14 “Though perfect God, Christ has always been perfect man from the very first moment of His incarnation” .Though perfect man ,Christ never ceased to perfect God” (அவர் மனிதனாய் அவதரித்தபோதும் தேவன் என்கிற நிலையை இழக்கவில்லை . அதே வேளையில்பரிபூரணமான கடவுள் என்றாலும், கிறிஸ்து அவதாரத்தின் முதல் கணத்திலிருந்தே எப்போதும் பரிபூரண மனிதராக வும் இருந்தார் ) இந்த தேவனுடைய செயல் நம்முடைய புரிதலுக்கும் ஞானத்திற்கும் அப்பாற்பட்ட செயல். இதை மிகுந்த பயத்துடன் வேதம் சொல்லுகின்ற இந்த செயலை ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த சத்தியத்தின் அடிப்படியில் தான் முழு கிறிஸ்தவமே சார்ந்திருக்கிறது. இந்த சத்தியத்தில் எதையாவது ஒன்றை நீர்த்துபோகப்பண்ணினாலும் அது பலவித உபதேசசீர்கேடுகளை உண்டாக்கிவிடும் . “Though He became flesh in the fullest sense, when He was born of the Virgin Mary ,He never at any point of period ceased to the Eternal God”-John Charles Ryle John Charles Ryle அவரது கூற்றுப்படி வார்த்தை மாமிசமானது என்பதுதான் சரியான மொழிபெயர்ப்பு. He did not become a man like Adam before the fall, with a nature free from all infirmity . அவர் ஆதாமின் வீழ்ச்சிக்கு முந்தய நிலையில் உள்ள மனித சாயலை அவர் தரித்துக்கொள்ளவில்லை ஆனால் பாவ சுபாவத்தை தவிர விழுந்து போன ஆதாமின் பிள்ளைகளுடைய எல்லா மனித சுபாவத்தோடு பிறந்தார். He became a man like any one of Adam’s children ,with a nature liable to everything that fallen humanity is liable to except sin. அவர் உலகத்தில் வந்தபோது தெய்வீக சாயலோடு பாவமில்லாத மனித சாயலையும் இணைத்துக்கொண்டார். Jesus was still God while He was here upon the earth. However He took upon Himself an additional nature - that of a human. Jesus had a body like other men except it was without sin. Finally He did not assume the nature of any one family or class or people but that nature which is common to all Adam ‘s children அவர் எந்த ஒரு இனத்தின் அல்லது ஜாதியின் அல்லது பிரிவின் சுபாவத்தை தரித்து கொள்ளாமல் விழுந்து போன ஆதாமின் பிள்ளைகளுடைய எல்லா மனித சுபாவத்தோடு பிறந்தார். So He came to be savior for “all flesh” and so was made “flesh” “தேவனே இதை புரிந்து கொள்ள எங்களுக்கு கிருபை தரும்” Selected from “ Expository thoughts on the Gospels” by John Charles Ryle and “The Daily Daily Bible “by William Barclay

இரட்சிப்பு

இரட்சிப்பு ‘ என்கிற வார்த்தையை 'பாவ மன்னிப்பு என்கிற அர்த்தத்தில் அடக்கி விட கூடாது. ‘இரட்சிப்பு’ என்பது கம்பீரமான வார்த்தையாகும், இது கடவுளின் விரிவான நோக்கத்தை குறிக்கிறது, இதன் மூலம் அவர் தனது மக்களை, நீதிமானாக்குகிறார் பரிசுத்தப்படுத்துகிறார், மகிமைப்படுத்துகிறார்.

அழியா வாழ்வை அறிவிப்பதே நற்செய்தி

அழியா வாழ்வை அறிவிப்பதே நற்செய்தி.அழியும் செல்வத்தை நற்செய்தியாக அறிவிப்பது வேறு ஒரு நற்செய்தி.2தீமோ 1:10

தேவனின் திட்டம் ற்ற

ஆண்டவர் ஆபிரகாமை அழைத்த போது அவனுக்குள் பூமியில் உள்ள வம்சங்கள் எல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்றார் . அதேபோல்இஸ்மவேலை புறம் தள்ளி ஈசாக்கிடம் அவனுக்குள் பூமியின் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றார். அதேபோல் ஈசாக்குக்கு இரண்டு குமாரர்கள் இருந்தாலும் ஏசாவை புறந்தள்ளிவிட்டு யாக்கோபிடம் நோக்கி அதே வாக்கை ஞாபகப்படுத்தி ஆசீர்வதித்தார். என்னதான் தலைவர்கள் கர்த்தருக்கு பிரியமாக நடந்தாலும் அவர்களுடைய ஆசீர்வாதம் அவர்களுடையபிள்ளைகளுக்கு தானாக வந்து பலிக்காது அது தேவன் சித்தத்தின்படி, தீர்மானத்தின்படி அந்த பிள்ளைகள் தேவனுடைய வழியில் நடக்கும் போது தான் பலிக்கும் அதே போல் தான் எவ்வளவு பெரிய ஆவிக்குரிய தகப்பன்மார்களாக தகப்பனுடைய ஆசிர்வாதங்கள் தானாக ஒருபோதும் அவர்களுடைய பிள்ளைகளுக்கு வந்து சேராது அதில் தேவனுடைய சித்தம் பிள்ளைகளின் வாழ்க்கை இவற்றை சார்ந்தது . ஆதி12:3, 26:5, ,28:14 எசேக்கியேல் சண்முகவேல்

Life is a journey

DAILY QUOTE Life is a journey, not a home; a road, not a city of habitation; and the enjoyments and blessings we have are but little inns on the roadside of life, where we may be refreshed for a moment, that we may with new strength press on to the end - to the rest that remaineth for the people of God.- Horatius Bonar

vision of missionary movement

If the vision of missionary movement is not updated to the changing scenario,it will be outdated in the course of time

ஆபிரகாமின் ஆவிக்குரிய வாழ்க்கை நூறு வருடங்கள்.

ஆபிரகாமின் ஆவிக்குரிய வாழ்க்கை நூறு வருடங்கள். ஆதி 25:8ன் உண்மையான அர்த்தம் அவன் தன் வாழ்க்கையைகுறித்து திருப்தி அடைந்தவனாய் மரித்தான் என்பதுதான்.(Satisfied with the life) உண்மையும் அதுதான் முக்கியமான காலகட்டங்களில் அவன் தன்னை அழைத்த தேவனை ஏமாற்றி விடவில்லை தேவன் அழைத்தபோதும், இஸ்மவேலை அனுப்பிய போதும், ஈசாக்கை பலியிட முன்வந்த போதும் அவன் தேவனுடைய கட்டளைக்கு முழுமையாக கீழ்ப்படிந்தான். அவன் மரிக்கும் போது தன்னுடைய கடந்த கால வாழ்க்கை குறித்து எந்தவிதமான வருத்தமோ, ஏமாற்றமோ இல்லாமல், செய்யத் தவறி விட்டுமே என்கிற துக்கம் இல்லாமல் தேவன் அளித்த வாழ்க்கையை முழுமையாக நிறைவேற்றிய மனிதனாக மரித்தான். நாமும் கூட நாம் மரிக்கும்போது இப்படிப்பட்ட ஆபிரகாமின் மனநிலையோடு மரிக்கும் ஒரு பாக்கியம் தேவன் நமக்கு அளிக்க கிருபை தருவாராக.

வேதத்தில் இயேசு கிறிஸ்துவுக்கு அடுத்தபடியாக மிக முக்கியமான நபர் யார்

உங்கள் சிந்தனைக்கு: வேதத்தில் இயேசு கிறிஸ்துவுக்கு அடுத்தபடியாக மிக முக்கியமான நபர் யார் என்றால் அது ஆபிரகாம் தான். இவன் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட முதல் நபர். பிதாவுடைய உலக மீட்பின் திட்டத்தில் தேவன் பயன்படுத்திய முதல் நபர் இவன்தான். பிரமாணங்கள் சடங்காச்சாரங்கள் வருவதற்கு முன்பாகவே தேவனோடு இணைந்து வாழ அவர் மீது வைக்கும் விசுவாசம்தான் பிரதானம் என்று வாழ்ந்து காட்டியவன். .பிதாவாகிய தேவன் யூதர்களுக்கு தன்னை அடையாளப்படுத்தும் போது "நான் ஆபிரகாமின் தேவன்" என்றுதான் அநேக நேரங்களில் தேவன் சொல்கிறார். வேதத்தில் முதல் முதல் இயேசு கிறிஸ்துவை விசுவாசத்தில் கண்டவன். தான்சென்ற இடமெல்லாம் கூடாரம் அமைத்து பலிபீடம் கட்டி தன்னுடைய தேவனை புற இன மக்களுக்கு பலிகள் மூலம் ஆராதித்து உலகத்திற்கு தேவனோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட முதல் ஆராதனை வீரன் இவன்தான். நாமும் கூட தேவனுடைய மீட்பின் திட்டத்தில் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டு, அதில் பங்கு பெற்று, ஆவியினாலே ஆராதனை செய்கிற நாமும் ஆபிரகாமின் சந்ததி என்று சொல்வதில் எந்த தவறும் இல்லை.

conversion

In conversion you are not attached primarily to an order, nor to an institution, nor a movement, nor a set of beliefs, nor a code of action - you are attached primarily to a Person, and secondarily to these other things.E. Stanley Jones

Our suffering

Our suffering persecution as Christian in some shape or form is the proof of our discipleship.

இனப்பெருமையு ஒழிப்போம்

" நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்" "அவர் சகல ஜாதிகளையும், அவர்களுக்குள் இயேசுகிறிஸ்துவினால் அழைக்கப்பட்டவர்களாகிய உங்களையும்"கிரேக்கருக்கும், மற்ற அ ந்நியர்களுக்கும், ஞானிகளுக்கும், மூடருக்கும் நான் கடனாளியாயிருக்கிறேன்." மேற்கொண்ட தேவ வார்த்தைகளை கவனமாக படிக்க வேண்டுகிறேன். "அவர் சகல ஜாதிகளையும்" "நான் கடனாளியாயிருக்கிறேன்." என்கிற இந்த வார்த்தைகள் நாம் எப்படிபட்ட விசுவாசிகளாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும். இந்த வார்த்தைகள்தான் உலகில் உள்ள பல இன மக்களோடு பேசி இந்தியாவுக்கு ஊழியம் செய்ய மிஷினரியாக அனுப்பியது. மறுபடியும் பிறந்த கிருஸ்தவன் ஜாதி, இன, மொழி இவைகளுக்கு அப்பாற்பட்டவனாக இருக்கவேண்டும் ஜாதி வெறி எவ்வளவு மோசமானதோ அதே அளவுக்கு இன, மொழி வெறியும் மோசமானது, "நான் தமிழன் "நான் மலையாளி " நான் தெலுங்கன் என்று மார்தட்டுவது வேதத்தின் படி சரியல்ல .பவுலுடைய யூத இன பாசம் ஆவிக்குரியது.தங்கள் இனத்தின் மீது ஆவிக்குரிய பாரம் கொள்ளலாம் ஆனல் மொழி இன வெறி கொள்ளகூடாது. இன்றய சபைகளில் ஜாதி வெறி காணப்படுவது போல சில சபைகளில் மொழிவெறி, இனவெறி, காணப்படுகிறது. ஒரு உண்மையான கிறிஸ்தவன் ஜாதி இனம் மொழி இவைகளுக்கு அப்பாற்பட்டவனாக காணப்படவேண்டும்.நம்முடைய குடும்பம் உலகளாவிய ஓன்று. .எல்லா இன மொழி ஜாதி மக்களையும் கர்த்தருக்குள் நேசிக்க கடமைப்பட்டிருக்கிறோம் தேவன் தம்முடைய தியாகத்தால் உருவாக்கின சபைமக்களை இனத்தால், ஜாதியால், மொழியால் பிரிப்பது, பாரபட்சம் காட்டுவது, புறக்கணிப்பது ஏசுகிருஸ்துவின் பாடுகளை அவமதிப்பதற்கு ஒப்பாகும் . இனப்பெருமை மொழிபெருமை தமிழக கிறுஸ்தவர்களை சமீப காலங்களில் ஆட்சி செய்வது வேதனைக்குரியது. நம்முடைய பெருமை எல்லாம் சிலுவை அல்லாமல் வேறொன்றும் இல்லை ஜாதி பெருமையும் ஒழிப்போம் இனப்பெருமையும் ஒழிப்போம் . மொழிபெருமையும் ஒழிப்போம் .ஏசுவின் மேன்மையை மட்டுமே நமக்கு போதும்

தேசத்தின் எழுப்புதலில் விசுவாசிகளின் பங்கு.

உங்கள் சிந்தனைக்கு! தேசத்தின் எழுப்புதலில் விசுவாசிகளின் பங்கு. இன்றய சூழ்நிலையில் சபைகள், சங்கங்கள், பெரிய தலைவர்கள்‌ மட்டும்தான் ஆண்டவருக்காக பெரிய சாதிப்பார்கள் என்கிற சிந்தையை புறம்பே தள்ளிவிட்டு ஒவ்வொரு விசுவாசியும் ஆண்டவருக்காக தங்கள் நிலையில், தங்கள் வாழும் இடத்தில், தேவன் தங்களை அழைத்த அழைப்பில், சாட்சியோடு உள்ள வாழ்க்கையில் என்ன சாதிக்க முடியும் என்று எண்ணி செயல் பட ஆரம்பித்தால் அதுதான் எழுப்புதலின் முதல் படி. நமது தேசத்தின் எழுப்புதலில் விசுவாசிகளுக்கும் பெரும் பங்கு இருப்பதை உணர்ந்து கொள்வதே எழுப்பதில் ஆரம்பம் புள்ளி. விசுவாசிகளின் பங்கு இல்லாமல், அவர்களின் ஜெபம் இல்லாமல், அவர்களின் உழைப்பு இல்லாமல், அவர்களின் தியாகம் இல்லாமல் நம் தேசத்தில் மட்டுமல்ல எந்த நாட்டிலும்எழுப்புதல் என்பது சாத்தியமில்லாத காரியம். எழுப்புதலில் தலைவர்களுக்கு எவ்வளவு பெரிய பங்கு இருக்கிறதோ அதற்கு சமமான பங்கும் விசுவாசிகளிடம் இருக்கிறது . தேவன் அதை விசுவாசிகளிடமிருந்து எதிர்பார்க்கிறார். காது உள்ளவன் கேட்கக் கடவன். கர்த்தர் மகிமைப்படுவாராக.

எது முக்கியம்

இழந்து போனவர்களை மீட்டெடுப்பது எவ்வளவு முக்கியமோ அதைப்போல மீட்கப்பட்டவர்களை நிலைநிற்கசெய்வதும் முக்கியம்.

நம்முடைய பிள்ளைகளுக்கு கொடுக்கப் போவது சொத்தா வெகுமதிகளா?

நம்முடைய பிள்ளைகளுக்கு கொடுக்கப் போவது சொத்தா வெகுமதிகளா? ஆபிரகாம் தனக்கு உண்டான யாவற்றையும் ஈசாக்குக்குக் கொடுத்தான். ஆதியாகமம் 25:5 ஆபிரகாம் ஈசாக்க்கு கொடுத்த மிகச்சிறந்த சொத்து எதுவென்றால் அது உடன்படிக்கையின் வாக்குத்தத்தம் (Covenant promise)ஒரு தகப்பன் தன் குழந்தைக்கு அளிக்கும் மிகப்பெரிய சொத்து அவன் வாழ்ந்த வாழ்க்கை, அதன் மூலம் கிடைக்கும் ஆசீர்வாதம்தான் ஆபிரகாமுக்கு இருந்த மறுமனையாட்டிகளின் பிள்ளைகளுக்கோ ஆபிரகாம் நன்கொடைகளைக் கொடுத்து தான் உயிரோடிருக்கும்போதே அவர்களைத் தன் குமாரனாகிய ஈசாக்கைவிட்டுக் கிழக்கே போகக் கீழ்தேசத்துக்கு அனுப்பிவிட்டான். ஆதியாகமம் 25:6 தேவனுக்கு பிரியமில்லாத வாழ்க்கை வாழ்ந்து தன் பிள்ளைகளுக்கு அளிக்கும் வெகுமதிகள் ஆபிரகாம் தன் வைப்பாட்டியின் பிள்ளைகளுக்கு அளிக்கும் வெகுமதிகளை போன்றது. நாம் எப்படிப்பட்ட வெகுமதிகளை அல்லது சொத்தை நம் பிள்ளைகளுக்கு அளிக்கிறோம் என்பது நம்முடைய வாழ்க்கையை பொறுத்து இருக்கிறது. நாம் தேவனுக்காக வாழ்கின்ற வாழ்க்கை ,தியாகம் அர்ப்பணிப்பு போன்றவைகள் தான் நாம் நம் பிள்ளைகளுக்கு அளிக்கும் மிகப்பெரிய சொத்து ON THIS DAY

மோசே ஒப்பிட முடியாத மன்றாட்டு வீரன்.

உங்கள் சிந்தனைக்கு: மோசே ஒப்பிட முடியாத மன்றாட்டு வீரன். வேதத்தில் எத்தனையோ மன்றாட்டு வீரர்களை பார்த்திருக்கிறோம். ஆபிரகாம் ,நோவா தானியேல் என்று பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டில் பவுல் ,எப்பாப்பிரா போன்ற மன்றாட்டு வீரர்கள் அநேகர் காணப்பட்டாலும், மோசே ஒரு ஒப்புவமை இல்லாத மிகச்சிறந்த மன்றாட்டு வீரன். எந்த ஜனங்களுக்காக எகிப்தின் செல்வத்தை உதறித் தள்ளி விட்டு அதனுடைய மேன்மையை குப்பையாக கருதி தன் மக்களோடு அடையாளப்படுத்திக் கொண்டானோ அந்த நாள் முதல் தன் இறுதிக் காலம் வரைக்கும் அந்த மக்களுக்காக வாழ்ந்த மோசே ஒரு மிகச்சிறந்த தலைவர் மட்டுமல்ல, ஒரு மன்றாட்டு வீரனும்கூட. 40 நாட்கள் இரவும் பகலும் மலையில் தங்கி அப்பம் பூசியாமலும் தண்ணீர் குடிக்காமலும் தேவனுடைய விரலினால் எழுதியிருந்த இரண்டு கற்பலகைகளை பெற்றுக் பெற்றுக் கொண்டு சந்தோசத்தோடு திரும்பி வந்தார்.அந்த சந்தோசம் ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. மலையை விட்டு கீழே மோசே 40 நாட்கள் வராததால் இஸ்ரவேல் பொன்னிலான கன்றுக்குட்டியை செய்து அதை வழிபடத் தொடங்கினார்கள். அதற்கு ஆரோனும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. கோபத்தினால் அந்த கற்பலகைகளை மோசே உடைத்துப் போட்டார். அப்பொழுது கடவுள் இஸ்ரவேல் ஜனங்களை தவிர்த்து மோசேயை பெரிய ஜாதியாக்குவேன் என்றார். ஆனால் மோசே அந்த உயர்வை நிராகரித்தார். நிராகரித்தது மட்டுமல்ல அந்த ஜனங்களுக்காக தேவ சமூகத்தில் மறுபடியும் 40 நாட்கள் புசிக்காமலும் குடிக்காமலும் இருந்து தேவனிடத்தில் மன்றாடி இஸ்ரவேல் மேல் உள்ள கடவுளின் கோபத்தை தடுத்தார். ஆரோனுக்காகவும் தேவ சமூகத்தில் மன்றாடினார். இதுதான் அவனுடைய மன்றாட்டின் உயர்ந்த நிலை. எந்த ஜனங்களுக்காக எகிப்தினுடைய பொக்கிஷத்தை இழந்து வந்தானோ அந்த ஜனத்தின் மீது தேவனுடைய கோபத்தை தன்னுடைய மன்றாட்டு ஜெபத்தினால் தடுத்து நிறுத்தினார் . அதே வேளையில் தனக்கு தேவன் அளிக்க முன்வந்த அந்த உயர்வை நிராகரித்தார். ஒரு முறை அல்ல இரண்டு முறை இதே போன்ற சூழ்நிலைகளில் தேவன் அளிக்க வந்த உயர்வை மோசே நிராகரித்தார்.எண்14:12. Moses reasoned with God and argued first of all that His glory would be tarnished if Israel were destroyed. The nations had heard what God did in Egypt, but they would no longer fear Him if Israel were destroyed. The nations would say, “He brought Israel out of Egypt but wasn’t able to bring them into the land. This means that the gods சட்ட of the land of Canaan are stronger than Jehovah!” The great concern of Moses was that God be glorified before the nations.W.W.Wiersbe மோசே தன்னுடைய அழைப்பில் ,அர்ப்பணிப்பில், நோக்கத்தில் மிக உறுதியாக இருந்தார். தன் ஜனத்தின் மீது அவருக்கு இருந்த உயர்ந்த பாசம் அன்பு இவைகளை அளவிட முடியாது. இதே போல்தான் பவுலும் புதிய ஏற்பாட்டில் தன் ஜனங்களுக்காக தானே சபிக்கப்பட்டவனாக மாற விரும்புவதாக கூறியிருக்கிறார்.ரோம 9:3. இப்படிப்பட்ட மனநிலை நம்முடைய தேசத்தை குறித்தும் தமிழ்நாட்டைக் குறித்தும் மனம் திரும்பிய ஒவ்வொரு விசுவாசிகளிடம் காணப்படுகின்ற காலம் வரும் வரைக்கும் நம்முடைய தேசத்தில் எழுப்புதல் என்பது கானல் நீரே. நம்முடைய தேசத்திற்காக, இனத்திற்காக உண்மையான பாரதத்தோடு ஜெபிக்க, மன்றாட நம் ஒவ்வொருவருக்கும் தேவன் சிறப்பான கிருபைகள் தர வேண்டும். அப்படி நாம் நம் தேசத்திற்காக மோசேயைப் போல மன்றாட நம்மை அர்ப்பணிக்கும் பொழுது நம் தேசத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். நாம் அடிப்படையிலேயே மன்றாட்டு வீரனாக, ஆசாரியனாக அழைக்கப்பட்டு இருக்கிறோம் என்கிற சிந்தனை நமக்குள் வர வேண்டும். பிரதான மத குருவாக நியமிக்கப்பட்ட ஆரோன் தன் ஜனங்களுக்காக மன்றாட வேண்டிய தன்னுடைய கடமையில் தவறி விட்டான் தன் சகோதரன் மோசேயின் நம்பிக்கை இழந்துவிட்டார். ஆனால் மோசே எந்த தரிசனத்தோடு எகிப்தைவிட்டு புறப்பட்டானோ தன் ஜீவன் முடியும் வரை அந்த தரிசனத்தை காத்துக் கொண்டார். நமக்கும் மோசே போன்ற ஒரு அழைப்பின் தரிசனத்தை தருவாராக. படிக்க உபா 9 வது அதிகாரம்.

கடமை தவறிய ஈசாக்கும் ரெபேக்காளும்.

கடமை தவறிய ஈசாக்கும் ரெபேக்காளும். யாக்கோபு எத்தனாக மாறுவதற்கும்,ஏசா பழிவாங்கும் சிந்தியுள்ளவனாக மாறுவதற்கும் காரணம் அவர்களுடைய பெற்றோர்களே. அவர்கள் இருவரும் தங்கள் குடும்பத்தில் தேவனின் சித்தத்தை முழுமையாக செயல்படுத்த தவறினார்கள். ஏசா மூத்த மகன். அவன் பிறப்புரிமையை அவமதித்ததையும் பொருட்படுத்தாமல், இளையவன்தான் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவன் என்பதை தெரிந்தும் ஏசாவை அளவுக்கு மீறி ஆசீர்வதிக்க நினைத்தது ஈசாக்கின் பெரிய தவறு. ரெபேக்காளை பொருத்த அளவில் தேவனுடைய திட்டத்தை தனிப்பட்ட முறையில் அறிந்தும், இரண்டு பிள்ளைகளை சமமாக பாவிக்காமல் இருந்தது முதல் தவறு. அடுத்தது தேவனே யாக்கோபு ஏசாவைஆளுவான் என்று சொல்லி இருந்தும் அதை அவர் செய்வதற்கு முன்பாக ரெபேக்காள் திட்டம் தீட்டி அந்த நோக்கத்தை தன் கையில் எடுத்து தவறான வழி முறைகளை சொல்லி யாக்கோபை எத்தனாக்கியது ரெபேக்காளின் இரண்டாவது தவறு. பெற்றோர்கள் தங்கள் குடும்பத்தில் தேவனுடைய சித்தத்தை சரியாக புரிந்து இருந்தால் இந்த பிரச்சனைகளை சரி செய்து இருக்கலாம் .இருந்தாலும் தேவனுடைய இறையாண்மை மறந்துவிட முடியாது. மாற்றவும் முடியாது.

God's sovereignty is above all Genesis

God called Abraham and brought him to Canaan and promised him to give the land to his descendants. Isaac was born according to God's promise. He had chosen Jacob instead of Esau. Therefore, Jacob's 12 children were entitled to the promise. But the thing that happened was that these 12 children were not born in the Canaan that God had promised. They were born in a place beyond Canaan. But the 12 children born to Jacob's brother Esau were born in Canaan. God did not give Canaan to those who were born in Canaan. He allowed them to go to another land and settle in a place called Seir and ordered a different blessing for them. The lesson is that when we can work hard in one place and try to be blessed in that place. But God will prepare another place for us and bless us there. It is God's sovereign right to bless whom and where and how. We cannot claim any rights from God on the basis of our work, birth and merit. God's eternal decision is the main thing. God gave a different place to the sons of Esua who were born in Canaan. The sons of the soil did not get what the world standard determined. God gave Canaan to those who were not born in that land. God's sovereignty is above all Genesis 36:6 Main ispiration is from DAKE' reference Bible.

பவுலின் கடைசி நாட்கள்

உங்கள் சிந்தனைக்கு: பவுலின் கடைசி நாட்கள் (படிக்க 2 தீமோ 4 வது அதிகாரம் ) பவுல் கடைசியாக எழுதிய நிருபம் தீமோதேயுவுக்கு எழுதிய இரண்டாவது நிருபம். தன் ஆயுட்காலம் முழுவதும் தனக்கு உத்தமமாய் இருந்த பிரியமுள்ள குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு அவர் எழுதிய இந்த கடிதம் மிகவும் நெஞ்சை பிளக்கும் உருக்கமான, நாம் கண்ணீரோடு படிக்கவேண்டிய ஒரு கடிதம். நீரோ மன்னன் அளிக்கவிருக்கும் மரண தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் அவர் தன் பிரியமுள்ள குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு, கடைசி நாட்களில் நடைபெற போகும் நிகழ்வுகளை குறித்து எழுதிய கடிதம் இது. அது மட்டுமல்ல தனக்கு இறுதி காலத்தில் நேரிட்ட நிகழ்வுகளை குறித்து மிகவும் இதய பாரத்தோடு பகிர்ந்து கொள்கிறார். "கன்னானாகிய அலெக்சந்தர் எனக்கு வெகு தீமைசெய்தான்; அவனுடைய செய்கைக்குத்தக்கதாகக் கர்த்தர் அவனுக்குப் பதிலளிப்பாராக” “நான் முதல்விசை உத்தரவுசொல்ல நிற்கையில் ஒருவனும் என்னோடேகூட இருக்கவில்லை, எல்லாரும் என்னைக்கைவிட்டார்கள்;" " தேமா இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப்பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்குப் போய்விட்டான்” ரோமாபுரியில் நடந்த ஆரம்ப விசாரணையில் தனக்கு ஆதரவாக யாரும் பேச முன்வரவில்லை என்பதை குறிக்கும் வகையில்தான் "நான் முதல்விசை உத்தரவுசொல்ல நிற்கையில் ஒருவனும் என்னோடேகூட இருக்கவில்லை" என்று கூறுகிறார் முதல் தடவை ரோமாபுரியில் வீட்டு காவலில் வைக்கப்பட்டபோது அவருக்கு உதவியாக அநேக மக்கள் இருந்தனர். விசுவாசிகளை பார்க்கவும் யூதர்களோடு வேதத்தை விவாதிக்கவும் அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ("நாங்கள் ரோமாபுரியில் சேர்ந்தபோது, நூற்றுக்கு அதிபதி தன் காவலிலிருந்தவர்களைச் சேனாபதியினிடத்தில் ஒப்புக்கொடுத்தான்; அப்பொழுது பவுல் தன்னைக் காத்திருக்கிற சேவகனுடனே தனித்துக் குடியிருக்கும்படி உத்தரவு பெற்றுக்கொண்டான்." "அதற்காக அவர்கள் ஒரு நாளைக்குறித்து, அநேகம்பேர் அவன் தங்கியிருந்த வீட்டிற்கு அவனிடத்தில் வந்தார்கள். அவன் காலமே தொடங்கி சாயங்காலமட்டும் மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் இருந்து இயேசுவுக்கடுத்த விசேஷங்களை அவர்களுக்குப் போதித்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துச் சாட்சிகொடுத்து விஸ்தரித்துப் பேசினான்". "பவுல் தனக்காக வாடகைக்கு வாங்கியிருந்த வீட்டிலே இரண்டு வருஷமுழுதும் தங்கி, தன்னிடத்தில் வந்த யாவரையும் ஏற்றுக்கொண்டு,") வேத பண்டிதர்களின் கருத்துப்படி கி பி 61-63 வரை ரோம கட்டுப்பாட்டில் இருந்து பின்பு விடுதலையாக்கப்பட்டார். ஆனால் இந்த முறை சூழ் நிலைகள் தலைகீழாக மாறி போய்விட்டது. இந்த முறை ரோம சாம்ராச்சியத்தை ஆட்சி செய்தவன் கொடுங்கோல் நீரோ மன்னன். கிறிஸ்தவர்களுக்கு விரோதமான ஆட்சியை நடத்தியவன். எனவே அவனை பகைத்து பவுலுக்கு ஆதரவாக சாட்சி சொல்ல யாரும் முன்வரவில்லை எனவேதான் பவுல் எல்லாரும் 'என்னைக்கைவிட்டார்கள்;" என்று கதறுகிறார். மேலும் அவர் கூறுகிறார் "லூக்கா மாத்திரம் என்னோடே இருக்கிறான். மாற்குவை உன்னோடே கூட்டிக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்." "நீ சீக்கிரமாய் என்னிடத்தில் வரும்படி ஜாக்கிரதைப்படு" இதில் ஆச்சரியமான காரியம் என்னவென்றால் எந்த மாற்குவை இரண்டாவது பிரயாணத்தில் வேண்டாம் என்று பர்னபாவோடு விவாதம் பண்ணினாரோ அதே மாற்குவை ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன் என்று கூறுகிறார். எப்போதுமே ஆரம்பம் அல்ல முடிவுதான் முக்கியம் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். பவுல் மிகப்பெரிய அப்போஸ்தலர்.தேவனுடைய சபையை குறித்த மிக முக்கியமான ரகசியங்களை தேவனிடத்தில் பெற்றவன் ,புற இனத்தார் மத்தியில் ரோம சாம்ராட்சியத்தின் எல்லையெங்கும் சபைகளை நிறுவியவன். புதிய ஏற்பாட்டு நிரூபங்களில் 13 நிரூபங்களை எழுதியவன் சபைக்காக மிகவும் பாடுபட்டவன்.சபை சரித்திரத்தில் மறக்கமுடியாத தேவனால் மிகவும் பயன் படுத்தப்பட்ட மனிதன் . ஆனால் அவனுடைய இறுதிக்காலம் மிகவம் வேதனையானது. எல்லோரும் கைவிடப்பட்ட நிலை . நமது ஆண்டவரை போல் "என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் "என்று அவரும் சொல்லும் நிலைக்கு ஆளாக்கப்பட்டார். ரோமாபுரியில் அவரால் ஆவிக்குரிய நன்மைகளை பெற்ற அனேகர் இருந்தபோதிலும்,ரோமாபுரியிலுள்ள தேவப்பிரியரும் பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களுமாகிய அனைவருக்கும் நிருபத்தை எழுதிய அவருக்காக நீரோ மன்னனை பகைத்து இவருக்கு ஆதரவாக யாரும் இல்லை. இதுதான் கிறிஸ்த கிறிஸ்தவ உலகம் .இனி வருங்காலங்களில் எந்த ஊழியத்தையும் எந்த ஊழியரும் காப்பாற்ற முடியாத சூழ் நிலைக்கு தள்ளப்படும் காலம் வந்துவிட்டது எல்லோரும் கைவிடப்பட்ட நிலையில் நாம் இருந்தாலும் பவுலை போல நாமும் “கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியார் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்” என்று சொல்லி நமக்கு கொடுக்கப்பட்ட ஊழியத்தை நிறைவேற்றவும் “ நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்." என்று சொல்லி நமது ஓட்டத்தை நிறைவேற்றவும் அழைக்கப்பட்டிருக்கிறோம். சிறிய ஊழியமோ, பெரிய ஊழியமோ ஊழியம் கர்த்தருடைய சித்தத்தின் மத்தியில் இருக்குமானால் அதை நிறைவேற்ற நாம் தனியாகத்தான் போராடவேண்டும்.

Last days of Paul

Just for your thought: Last days of Paul Paul’s second letter to Timothy is a very moving human document. It was written when Paul was languishing in some dark dungeon in Rome from which there is no way to escape but death. Paul’s first imprisonment in Rome from approximately 61 to 63 had been less severe. It seems then he was under a kind of house arrest and could receive visitors, had access to the Scriptures and could freely teach (Acts 28:16, 23, 30-31). Apparently Paul was then released from prison and continued travelling and teaching, since his later letters mention travels that were not recorded in the book of Acts. But as the years moved along and Paul’s fame spread, Paul was again put in prison in Rome, perhaps from 66 to 68. This time he did not expect to be released. It was a time of unrest for many reasons. In A.D. 64 Nero had allegedly burned sections of Rome and blamed the Christians. In 66 the Jewish wars began. Paul probably wrote his first letter to Timothy between 63 and 65. This second letter to Timothy was probably written in 66 or 67 Imperial persecution was on those who followed the Christian way of life, and no doubt such a renowned figure as Paul was closely guarded. He wrote his second letter to Timothy realizing that his personal end was nearing 2 Timothy is written by Paul from Prison, in difficult circumstances (2 Tim 1:8, 1:12, 1:16, 2:3, 2:9). 2 Timothy was definitely written after the other prison letters of Colossians and Ephesians. Luke and Demas are with Paul in Col 4:14, but in 2 Tim 4:10-11 Demas "has forsaken" Paul and only Luke remains with him only Luke was with him.. Everyone in the Province of Asia deserted Paul including Phygelus and Hermogenes. Moreover Alexander the metalworker also did Paul a great deal of harm. Paul's outlook for his own life has darkened considerably from his earlier prison letters, and he doesn't expect to live much longer (2 Tim 4:6-8). This may have been due to an unfavourable first legal hearing (2 Tim 4:16) occurring in between the earlier prison letters and this one. In the preliminary trial in Rome nobody stood with him. Nobody from the Church in Rome was ready to be identified with him fearing persecution from the Roman Empire. Please imagine the situation Paul underwent. Desertion, betrayal, imminent death penalty, solitary prison confinement and loneliness surrounded him but Paul is not carried away by any of such situations. He thundered “I know whom I have believed, and am convinced that he is able to guard what I have entrusted to him until that day.”. What great faith ! The man who wrote 13 books out of 27 books on New Testament, the man who put 30 sacrificial years of series to the Kingdom of God, the one who turned the world upside down, the one won the invincible Greek culture and Roman Empire for God, the one established first generation Gentile Churches around the world and the one who witnessed Lord Jesus Christ before Emperor Nero died like his Master Jesus Christ who cried “ Eli, Eli, lama sabachthani? that is to say, My God, my God, why hast thou forsaken me” End of Paul According to the early church writer Tertullian, an elder in a church in Turkey Paul was brought before Nero when the Christians were being killed en masse. Nero noted that the other Christian prisoners treated Paul deferentially; so Nero determined that Paul was a leader among them. Nero orders Paul beheaded. The Acts of Paul reports, “Then Paul stood with his face to the east and lifted up his hands unto heaven and prayed a long time, and in his prayer he conversed in the Hebrew tongue with the fathers, and then stretched forth his neck without speaking.” The Acts then record that the executioner “struck off his head.”

Last days of Paul

Just for your thought: Last days of Paul Paul’s second letter to Timothy is a very moving human document. It was written when Paul was languishing in some dark dungeon in Rome from which there is no way to escape but death. Paul’s first imprisonment in Rome from approximately 61 to 63 had been less severe. It seems then he was under a kind of house arrest and could receive visitors, had access to the Scriptures and could freely teach (Acts 28:16, 23, 30-31). Apparently Paul was then released from prison and continued travelling and teaching, since his later letters mention travels that were not recorded in the book of Acts. But as the years moved along and Paul’s fame spread, Paul was again put in prison in Rome, perhaps from 66 to 68. This time he did not expect to be released. It was a time of unrest for many reasons. In A.D. 64 Nero had allegedly burned sections of Rome and blamed the Christians. In 66 the Jewish wars began. Paul probably wrote his first letter to Timothy between 63 and 65. This second letter to Timothy was probably written in 66 or 67 Imperial persecution was on those who followed the Christian way of life, and no doubt such a renowned figure as Paul was closely guarded. He wrote his second letter to Timothy realizing that his personal end was nearing 2 Timothy is written by Paul from Prison, in difficult circumstances (2 Tim 1:8, 1:12, 1:16, 2:3, 2:9). 2 Timothy was definitely written after the other prison letters of Colossians and Ephesians. Luke and Demas are with Paul in Col 4:14, but in 2 Tim 4:10-11 Demas "has forsaken" Paul and only Luke remains with him only Luke was with him.. Everyone in the Province of Asia deserted Paul including Phygelus and Hermogenes. Moreover Alexander the metalworker also did Paul a great deal of harm. Paul's outlook for his own life has darkened considerably from his earlier prison letters, and he doesn't expect to live much longer (2 Tim 4:6-8). This may have been due to an unfavourable first legal hearing (2 Tim 4:16) occurring in between the earlier prison letters and this one. In the preliminary trial in Rome nobody stood with him. Nobody from the Church in Rome was ready to be identified with him fearing persecution from the Roman Empire. Please imagine the situation Paul underwent. Desertion, betrayal, imminent death penalty, solitary prison confinement and loneliness surrounded him but Paul is not carried away by any of such situations. He thundered “I know whom I have believed, and am convinced that he is able to guard what I have entrusted to him until that day.”. What great faith ! The man who wrote 13 books out of 27 books on New Testament, the man who put 30 sacrificial years of series to the Kingdom of God, the one who turned the world upside down, the one won the invincible Greek culture and Roman Empire for God, the one established first generation Gentile Churches around the world and the one who witnessed Lord Jesus Christ before Emperor Nero died like his Master Jesus Christ who cried “ Eli, Eli, lama sabachthani? that is to say, My God, my God, why hast thou forsaken me” End of Paul According to the early church writer Tertullian, an elder in a church in Turkey Paul was brought before Nero when the Christians were being killed en masse. Nero noted that the other Christian prisoners treated Paul deferentially; so Nero determined that Paul was a leader among them. Nero orders Paul beheaded. The Acts of Paul reports, “Then Paul stood with his face to the east and lifted up his hands unto heaven and prayed a long time, and in his prayer he conversed in the Hebrew tongue with the fathers, and then stretched forth his neck without speaking.” The Acts then record that the executioner “struck off his head.”

பவுலின் கடைசி நாட்கள்

உங்கள் சிந்தனைக்கு பவுலின் கடைசி நாட்கள்(படிக்க 2 தீமோ 4 வது அதிகாரம் ) பவுல் கடைசியாக எழுதிய நிருபம் தீமோதோயுவுக்கு எழுதிய இரண்டாவது நிருபம். தன் ஆயுட்காலம் முழுவதும் தனக்கு உத்தமமாய் இருந்த பிரியமுள்ள குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு அவர் எழுதிய இந்த கடிதம் மிகவும் நெஞ்சை பிளக்கும் உருக்கமான, நாம் கண்ணீரோடு படிக்கவேண்டிய ஒரு கடிதம் . நீரோ மன்னன் அளிக்கவிருக்கும் மரண தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் அவர் தன் பிரியமுள்ள குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு, கடைசி நாட்களில் நடைபெற போகும் நிகழ்வுகளை குறித்து எழுதிய கடிதம் இது. அது மட்டுமல்ல தனக்கு இறுதி காலத்தில் நேரிட்ட நிகழ்வுகளை குறித்து மிகவும் இதய பாரத்தோடு பகிர்ந்து கொள்கிறார். "கன்னானாகிய அலெக்சந்தர் எனக்கு வெகு தீமைசெய்தான்; அவனுடைய செய்கைக்குத்தக்கதாகக் கர்த்தர் அவனுக்குப் பதிலளிப்பாராக” “நான் முதல்விசை உத்தரவுசொல்ல நிற்கையில் ஒருவனும் என்னோடேகூட இருக்கவில்லை, எல்லாரும் என்னைக்கைவிட்டார்கள்;" " தேமா இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப்பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்குப் போய்விட்டான்” ரோமாபுரியில் நடந்த ஆரம்ப விசாரணையில் தனக்கு ஆதரவாக யாரும் பேச முன்வரவில்லை என்பதை குறிக்கும் வகையில்தான் "நான் முதல்விசை உத்தரவுசொல்ல நிற்கையில் ஒருவனும் என்னோடேகூட இருக்கவில்லை" என்று கூறுகிறார் முதல் தடவை ரோமாபுரியில் வீட்டு காவலில் வைக்கப்பட்டபோது அவருக்கு உதவியாக அநேக மக்கள் இருந்தனர். விசுவாசிகளை பார்க்கவும் யூதர்களோடு வேதத்தை விவாதிக்கவும் அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ("நாங்கள் ரோமாபுரியில் சேர்ந்தபோது, நூற்றுக்கு அதிபதி தன் காவலிலிருந்தவர்களைச் சேனாபதியினிடத்தில் ஒப்புக்கொடுத்தான்; அப்பொழுது பவுல் தன்னைக் காத்திருக்கிற சேவகனுடனே தனித்துக் குடியிருக்கும்படி உத்தரவு பெற்றுக்கொண்டான்." "அதற்காக அவர்கள் ஒரு நாளைக்குறித்து, அநேகம்பேர் அவன் தங்கியிருந்த வீட்டிற்கு அவனிடத்தில் வந்தார்கள். அவன் காலமே தொடங்கி சாயங்காலமட்டும் மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் இருந்து இயேசுவுக்கடுத்த விசேஷங்களை அவர்களுக்குப் போதித்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துச் சாட்சிகொடுத்து விஸ்தரித்துப் பேசினான்". "பவுல் தனக்காக வாடகைக்கு வாங்கியிருந்த வீட்டிலே இரண்டு வருஷமுழுதும் தங்கி, தன்னிடத்தில் வந்த யாவரையும் ஏற்றுக்கொண்டு,") வேத பண்டிதர்களின் கருத்துப்படி கி பி 61-63 வரை ரோம கட்டுப்பாட்டில் இருந்து பின்பு விடுதலையாக்கப்பட்டார். ஆனால் இந்த முறை சூழ் நிலைகள் தலைகீழாக மாறி போய்விட்டது.இந்த முறை ரோம சாம்ராச்சியத்தை ஆட்சி செய்தவன் கொடுங்கோல் நீரோ மன்னன். கிறிஸ்தவர்களுக்கு விரோதமான ஆட்சியை நடத்தியவன் ,எனவே அவனை பகைத்து பவுலுக்கு ஆதரவாக சாட்சி சொல்ல யாரும் முன்வரவில்லை எனவேதான் பவுல் எல்லாரும் 'என்னைக்கைவிட்டார்கள்;" என்று கதறுகிறார் மேலும் அவர் கூறுகிறார் "லூக்கா மாத்திரம் என்னோடே இருக்கிறான். மாற்குவை உன்னோடே கூட்டிக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்." "நீ சீக்கிரமாய் என்னிடத்தில் வரும்படி ஜாக்கிரதைப்படு" இதில் ஆச்சரியமான காரியம் என்னவென்றால் எந்த மாற்குவை இரண்டாவது பிரயாணத்தில் வேண்டாம் என்று பர்னபாவோடு விவாதம் பண்ணினாரோ அதே மாற்குவை ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன் என்று கூறுகிறார். எப்போதுமே ஆரம்பம் அல்ல முடிவுதான் முக்கியம் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். பவுல் மிகப்பெரிய அப்போஸ்தலர்.தேவனுடைய சபையை குறித்த மிக முக்கியமான ரகசியங்களை தேவனிடத்தில் பெற்றவன் ,புற இனத்தார் மத்தியில் ரோம சாம்ராட்சியத்தின் எல்லையெங்கும் சபைகளை நிறுவியவன். புதிய ஏற்பாட்டு நிரூபங்களில் 13 நிரூபங்களை எழுதியவன் சபைக்காக மிகவும் பாடுபட்டவன்.சபை சரித்திரத்தில் மறக்கமுடியாத தேவனால் மிகவும் பயன் படுத்தப்பட்ட மனிதன் . ஆனால் அவனுடைய இறுதிக்காலம் மிகவம் வேதனையானது எல்லோரும் கைவிடப்பட்ட நிலை . நமது ஆண்டவரை போல் "என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் "என்று அவரும் சொல்லும் நிலைக்கு ஆளாக்கப்பட்டார். ரோமாபுரியில் அவரால் ஆவிக்குரிய நன்மைகளை பெற்ற அனேகர் இருந்தபோதிலும்,ரோமாபுரியிலுள்ள தேவப்பிரியரும் பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களுமாகிய அனைவருக்கும் நிருபத்தை எழுதிய அவருக்காக நீரோ மன்னனை பகைத்து இவருக்கு ஆதரவாக யாரும் இல்லை. எல்லோரும் கைவிடப்பட்ட நிலையில் நாம் இருந்தாலும் பவுலை போல நாமும் “கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியார் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்” என்று சொல்லி நமக்கு கொடுக்கப்பட்ட ஊழியத்தை நிறைவேற்றவும் “ நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்." என்று சொல்லி நமது ஓட்டத்தை நிறைவேற்றவும் அழைக்கப்பட்டிருக்கிறோம்

Spiritual Blessings vs Material Blessings

Spiritual Blessings vs Material Blessings Matthew 5:45 “…….for he makes his sun rise on the evil and on the good, and sends rain on the just and on the unjust.“ God often blessed evil monarchs: Pharaoh of Egypt; Nebuchadnezzar, king of Babylon; Cyrus, king of Persia, et cetera. All of these were referred to as “my servants” or “mine anointed“. Did God approve of their religious convictions? Is this why He blessed them with wealth and power? Read Romans 9:15-24 and then the rest of the story from 2 Chron. 36:22-23 and Jer. 27:5-7. The bible teaches that spiritual blessings were never promised to evil people but rather to those who obeyed God’s word; these spiritual blessings were purposed to come through Christ. Understand that material blessings for the “vessels of wrath” were only for the purpose of “making known the riches of God’s glory for “vessels of mercy” which were prepared prior to the Creation.” Rom. 9:15-24 So likewise today, don’t be deceived by material blessings as evidence of approval from God. Rain is sent upon the unjust as well as the just. Spiritual blessings are only from obedience to Christ’s commands! Acts 3:26 – God raised up Jesus to bless us by “turning everyone…from your iniquities.” This occurs as we hear and obey TRUTH.(selected)

கிறிஸ்தவம் மறந்த வேத வார்த்தை

உங்கள் சிந்தனைக்கு! கிறிஸ்தவம் மறந்த வேத வார்த்தைகள் " நான் உங்கள் நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் மாம்சத்தில் நிறைவேற்றுகிறேன்"( கொலோ 1:24) புதிய ஏற்பாட்டில் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட பல வேத வார்த்தைகளில் இதுவும் ஓன்று. மேலெழுந்தவாரியாக இந்த வார்த்தையை பார்த்தால் கிறிஸ்துவின் பாடுகளில் குறையிருப்பதை போலவும், அதை பவுல் தன் பாடுகளினால் பூரண படுத்துவதாக பொருள் கொள்ளலாம். ஆனால் அது அப்படியல்ல பவுல் சொல்லும் இந்த பாடுகள் இயேசுகிறிஸ்து நமக்காக சிலுவையில் அறையப்பட்ட பாடுகளோடு சம்மந்த பட்டது அல்ல. உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்த்த தேவ ஆட்டுக்குட்டி இயேசு கிறிஸ்து மட்டுமே. இயேசு கிறிஸ்து சபையாயிருக்கிற சரீரத்திற்கு தலையாயிருக்கிறார். இந்த சரீரமாயிருக்கிற சபை தன் வளர்ச்சிக்காக . பாடுகளை சகிக்க வேண்டும் . எப்படி இயேசு கிறிஸ்து பாடுகளின் மூலமாக வும், தம்முடைய சுயரத்தத்தினாலேயும் சபையை சம்பாதித்து கொண்டாரோ சபையும் பாடுகள், உபத்திரவங்கள் மூலமாக சபையை கட்ட வேண்டும். அதற்கு பவுல் தன் பங்கை பாடுகள் மூலமாக சரிக்கட்டுகிறார் . இதுதான் அதன் உண்மையான அர்த்தம். கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடு படவேண்டும். அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும் நாம் படுபடவேண்டியது அவசியமாயிருக்கிறது. கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியாய் இருப்பது அவசியம். இதை புரிந்து கொண்ட புதிய ஏற்பாட்டு விசுவாசிகள்அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமான பட்டத்தை பாத்திரராக எண்ணினார்கள் எனவே பாடுகள் இல்லாத விசுவாச வாழ்கை தன்னில் தாமே முரண்பட்டது. (Self contradictory ) புதிய ஆண்டில் ஆசீர்வாத கனவுகளோடு அடியெடுத்து வைக்கும் நாம் பாடுகளையும் எதிர்நோக்கி( விசுவாசத்தோடு ) வாழ்வதுதான் சமநிலை கிறிஸ்தவம். ஆசீர்வாத செய்திகளை மட்டும் புதிய ஆண்டின் முதல் நாளில் பேசுவது சம நிலை பிரமாணம் அல்ல படிக்க ரோம 8:17 ,5:3, 2 கொரி1:5, 2 தீமோ 2:11, பிலி 3:10, 1 பேது 5:1 ON THIS DAY

நம்முடைய தேவன் நம்முடைய பிதாவாக இருக்கிறார்

நம்முடைய தேவன் நம்முடைய இரட்சகர் என்பது பற்றிய புரிதல் எல்லோருக்கும் உண்டு. அதே போல் நம்முடைய தேவன் வரங்களை அளித்து நம்மை பலப்படுத்துகிற பரிசுத்த ஆவியாய் இருக்கிறார் என்கிற புரிதலும் உண்டு. ஆனால் நம்முடைய தேவன் நம்முடைய பிதாவாக இருக்கிறார் என்கிற சத்தியம் சபையில் அதிகம் போதிக்கப்படாத ஒரு சத்தியம். என் தேவன் எனக்கு தகப்பன் .அவரேஎல்லா ஆசீர்வாதத்திற்கும் ஊற்றுக்கண். யாக்கோ 1:17 இந்த வெளிப்படுதல் நமது ஆவிக்குரிய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். வெறும் வாயினால் பிதா என்று சொல்வதைவிட அனுபவபூர்வமாக என் தேவன் என் இரட்சகர் மாத்திரமல்ல, அந்த இரட்சகரை அனுப்பிய அந்த தேவன் எனக்கு பிதாவாக இருக்கிறார் 'நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது'. 1 யோவான் 1:3

கிறிஸ்தவர்களும் அரசியலும்

கிறிஸ்தவர்களும் அரசியலும் Fear God .Honour the Kings கடவுளுக்கு அஞ்சுங்கள்; அரசருக்கு மதிப்புக் கொடுங்கள் 1 பேது 2:17 நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்; நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.1 திமோ 2:1,2 தேவனனுடைய பிள்ளைகளுக்கு அரசியல் அறிவு மிக மிக அவசியம். அரசியலை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதில் எந்த வித மாற்றுக்கருத்தும் எனக்கு இல்லை ஆனால் எங்கு நான் மாறுபடுகிறேன் என்றால் விசுவாசிகள் அதிலும் முழுநேர பணி செய்யும் ஊழியர்கள் அரசியல்வாதிகளை போல சமூக வலைதளங்களில் எழுதுவதும் முகநூல்களில் கருத்துக்களில் பகிர்வதும் அதுவும் ஆளுகையில் உள்ள தலைவர்களை கனவீனம் செய்வதும், கேலி கிண்டல் செய்வதும் வேத வசனத்திற்கு ஏற்புடையதா?. சிந்திக்க வேண்டும். கிறிஸ்தவம் மிக கொடுமையான பாடுகளுக்கும் சித்திரவதைகளுக்கும் உட்பட்ட நீரோ மன்னனுடைய காலத்தில் கூட சபை, அதிகாரத்தில் உள்ளவர்களுக்காக விண்ணப்பிக்க தவறவில்லை. சமூக வலைதளங்களில் நம்முடைய தலைவர்கள் அதிகாரத்தில் உள்ளவர்களை குறித்து நாகரீகமான விமர்சனம் செய்தல் அது நல்ல கிருஸ்தவ பண்பாடாகும். எனவே அதிகாரத்தில் உள்ளவர்களை , ஆளுகை செய்பவர்களை மதிப்பு கொடுக்க கற்றுக்கொள்வோம். .இன்றைக்கு ஆளுகை செய்பவர்களும் தேவனுடைய நீண்ட கால திட்டத்தில்(Master Plan) ஒரு பகுதி என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். எனவே 1 பேது 2:17 மற்றும் 1 திமோ 2:1,2 பற்றிய தெளிவான புரிதலை தேவன் நமக்கு தருவராக .அப்படி செய்யும் போதுதான் தேவன் தேசத்தை குறித்து நாம்செய்யும் விண்ணப்பத்திற்கு பதில் அளிப்பார்.

புதிய உடன்படிக்கையின் சிறப்பு‌.

உங்கள் சிந்தனைக்கு: புதிய உடன்படிக்கையின் சிறப்பு‌. பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேல் ஜனங்கள் கானான் தேசத்தை உரிமையாக்கி கொண்டார்கள். இது அவர்களால் சம்பாதித்த காரியம் அல்ல . அவர்கள் தங்கள் திறமையினாலோ, ராணுவ பலத்தினாலோ அங்குள்ள மக்களை விரட்டி கானான் தேசத்தை கைப்பற்றவில்லை. இது முழுக்க முழுக்க பிதாவாகிய தேவன் இஸ்ரவேல் ஜனங்களின் முற்பிதாக்களாகிய ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு இவர்களோடு பண்ணின உடன்படிக்கையின் அடிப்படையில் இந்த தேசத்தை அவர்கள் சொந்தமாக்கிக் கொண்டார்கள். உபா1:8,21,35 "இதோ, இந்த தேசத்தை உங்களுக்கு முன்பாக வைத்தேன்,; நீங்கள் போய், கர்த்தர் உங்கள் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் அவர்களுக்குப் பின்வரும் அவர்கள் சந்ததிக்கும் ஆணையிட்டுக் கொடுத்த அந்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள் என்றார்." உபாகமம் 1:8 வாக்குறுதி கொடுத்த தேவனுக்கு அவர்கள் கீழ்ப்படிந்த போது தேவன் அந்த வாக்குறுதியை நிறைவேற்றினார். அதுபோல புதிய ஏற்பாட்டில் விசுவாசிகளாகிய நமக்கு கிடைக்கும் எல்லா ஆவிக்குரிய ஆசீர்வாதங்களும் பிதாவாகிய தேவன் குமாரனாகிய கிறிஸ்துவோடு பண்ணின நித்திய உடன்படிக்கையினாலும் குமாரனாகிய தேவன் தம்முடைய ரத்தத்தினாலே நம்மோடு பண்ணின உடன்படிக்கையினாலும் இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்கிறோம். எபி 13:20,லூக் 22:20 மற்றும் 1கொரி11:25. பழைய ஏற்பாட்டு ஆசீர்வாதம் உலகத்திற்கடுத்தது. (Material blessings)அது பிதா இஸ்ரவேல் மக்களின் முற்பிதாக்களோடு பண்ணின உடன்படிக்கையின் ‌மூலம் கிடைப்பது ஆனால் நமக்கு கிடைக்கும் ஆவிக்குரியஆசீர்வாதங்கள் (Spiritual blessings) பல வகைகளில் சிறப்பு வாய்ந்தது. இது பிதாவுக்கும் குமாரனுக்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கையின் மூலம் மட்டுமல்ல, குமாரன் தம்முடைய இரத்தத்தை சிந்தி நம்மோடு ஏற்படுத்தின அந்த உடன்படிக்கை நிமித்தமும் பெற்றுக்கொள்கிறோம். எனவே புதிய ஏற்பாட்டு உடன்படிக்கை என்பது எல்லா வகையிலும் மேம்பட்ட ஒன்று.

இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதலில் திரித்துவம்

உங்கள் சிந்தனைக்கு! இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதலில் திரித்துவம் இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதல் என்பது திருத்துவத்தின் ஒரு நபர் சார்ந்த காரியம் இல்லை. The act of raising Jesus from the dead was not the operation merely of one person within the Trinity but was a cooperative act done by the power of the divine substance. திருத்துவத்தின் 3 பேரும் இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதலில் பங்கு பெறுகின்றனர். All three members of the Trinity - God the Father, God the Son, and God the Holy Spirit were involved in the resurrection of Jesus. The resurrection is individually ascribed to each one of them. 1கிறிஸ்துவின் உயிர்தெழுதலில் பிதாவாகிய தேவன் “பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, “ரோம 6:4 , இயேசுகிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின பிதாவாகிய தேவனாலும், கலா 1:1 2 கிறிஸ்துவின் உயிர்தெழுதலில் குமாரனாகிய தேவன். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார். அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம்சென்றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள். அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துப் பேசினார். யோவான் 2:19-21 "ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன். அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரமுண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்." யோவான்10:15,18 3 கிறிஸ்துவின் உயிர்தெழுதலில் பரிசுத்த ஆவியாகிய தேவன். இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார். ரோம 8:11 , கிறிஸ்துவும் ----; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். 1 பேது :18 4 கிறிஸ்துவின் உயிர்தெழுதலில் தேவன் தேவன் என்கிற வார்த்தை திரித்துவத்திற்கு பொதுவான வார்த்தை , பிதாவை மாத்திரம் குறிக்கக்கூடிய வார்த்தை. அல்ல. எபி 1:8 அப்போ 5:3,,4 "தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்" அப்போ 2:24 "மூன்றாம் நாளிலே தேவன் அவரை எழுப்பிப் பிரத்தியட்சமாய்க் காணும்படிசெய்தார்." அப்போ 10:40 God is not a person but a title given to divine nature. There is only God. எனவே உயிர்தெழுதலிலும் திரித்துவம் காணப்படுகிறது.

புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்களுக்கு எவைகள் தேவன் அளிக்கும் ஆசீர்வாதங்கள்.?

உங்கள் சிந்தனைக்கு: புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்களுக்கு எவைகள் தேவன் அளிக்கும் ஆசீர்வாதங்கள்.? தேவனுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும்,அவருடைய கட்டளைகளை மீறக்கூடாது என்பது பொதுவான விதி. ஆனால் இந்தக் தேவனுடைய கட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படியும்போது உபாகமம் புத்தகம் 27 முதல் 30 வரை உள்ள அதிகாரங்களில் சொல்லப்பட்ட அனைத்து ஆசீர்வாதங்களும் அல்லது லேவியராகம புத்தகத்தில் 26 வது அதிகாரத்தில் சொல்லப்பட்ட ஆசீர்வாதங்களும் நமக்கு சொந்தமாகும் என்பது அர்த்தமல்ல. அவைகள் இஸ்ரவேல் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்கள், ஆசீர்வாதங்கள் . புதிய ஏற்பாட்டில் நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது ஆவிக்குரிய ஆசீர்வாதம். தேவன் நம்மை ஆவிக்குரிய நன்மைகளினால் நிறைத்திருக்கிறார் என்பது தான் (எபே1:3) புதிய ஏற்பாட்டில் நாம் அறிந்து கொள்ளும் சத்தியம். உலகத்த்திற்கடுத்த ஆசீர்வாதங்களை மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்களுக்கு வாக்குதத்தங்களாக கொடுக்கவில்லை. மத்தேயுஎழுதின நற்செய்தி நூலில் ஐந்தாவது அதிகாரம் ஒன்று முதல் 12 வரை உள்ள வசனங்களை பார்க்கும் பொழுது இந்த சத்தியம் இன்னும் தெளிவாக புரியும். ஆவியில் எளிமை உள்ளவர்கள், துயரப்படுபவர்கள், சாந்தகுணம் உள்ளம் உள்ளவர்கள், நீதியையும் நேர்மையையும் நிலைநாட்ட தாகம் உள்ளவர்கள் , இரக்கம் உள்ளவர்கள், உள்ளத்தில் தூய்மை உள்ளவர்கள், சமாதானம் செய்கிறவர்கள், நேர்மையினிமித்தம் பாடுபடுகிறவர்கள் இவர்கள்தான் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தெளிவாக சொல்லியிருக்கிறார். உலக செல்வத்தை உடையவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்று நமது ஆண்டவர் ஒருபோதும் சொன்னதில்லை. கடவுளுடைய பார்வையில் இவைகள்தான் உண்மையான ஆசீர்வாதம் என்று சொல்லியிருக்க யூதர்களுக்கு பழைய ஏற்பாட்டில் தேவன் அளித்த இந்த மண்ணுக்குரிய ஆசீர்வாதங்களை நாம் உரிமை பாராட்டி கேட்பதற்கு நமக்கு வேதத்தில் அனுமதி இல்லை. தேவன் நமக்கு கொடுத்த ஆசீர்வாதங்களில் திருப்தியாக வாழ்வதே வேதம் நமக்கு போதிக்கும் பாடம். நம்முடைய தேவைகள் எவை என்று அறிந்த தேவன் அவைகளை ஏற்ற காலத்தில் நமக்கு அளித்து நம்மை மகிழ்ச்சியாக்குவார். நம்முடைய கடமை தேவனை தேடுவது மட்டும்தான் யாருக்கு எந்தெந்த ஆசீர்வாதங்களை கொடுக்க வேண்டும் என்பது அவருடைய உரிமை . நாம் சண்டை போட்டுக் கொண்டு போராடி எந்த ஒரு உலக நன்மைகளையும் பெற முயற்சிப்பது தேவனுடைய வசனத்தின் பார்வையில் சரியில்ல. We must not read into this an assurance that obedient saints today will automatically experience all the special blessings mentioned in God’s covenant with Israel, such as freedom from sickness, guaranteed material wealth, and a long peaceful life . No such benefits are promised under the new covenant, for our wealth is primarily spiritual and not material.W.W.Wiersbe

Joyless Christian

DAILY QUOTE The joyless Christian reveals himself by having negative thoughts and talk about others, in a lack of concern for others welfare, and a failure to intercede on others behalf. Joyless believers are self-centred, selfish, proud, and often vengeful and their self-centeredness inevitably manifests itself in prayerlessness. JOHN MACARTHUR

PREDISTINATION

DAILY QUOTE The word 'predestination' refers primarily to what does for saved people.Nobody is predestined to hell .WIERSBE

விசுவாசத்தின் தகப்பன் ஆபிரகாம் இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமையை இரண்டு காரியங்களில் நம்பினான்

உங்கள் சிந்தனைக்கு: Abraham believed not only the Supernatural birth of his son ( Rom 4:18-21) but also supernatural resurrection of his son. Heb 11:17-29 விசுவாசத்தின் தகப்பன் ஆபிரகாம் இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமையை இரண்டு காரியங்களில் நம்பினான். கர்ப்பம் செத்துப் போன நிலையிலுள்ள சாராள் மூலமாக தனக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்று அந்த சாத்தியத்திற்கு அப்பாற்ப்பட்ட வல்லமையை நம்பினான். அடுத்தது ஈசாக்கு மரித்துப் போனாலும் தேவன் அவனை உயிரோடு எழுப்ப வல்லவர் என்றும் அவன் நம்பினான். அப்படியே ஒரு விசுவாசியும் தன்னுடைய வாழ்க்கையில் இரண்டு வகையான இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமைகளை நம்ப வேண்டும். ஒன்று அவனுடைய மறு பிறப்பு . அதிசயங்களில் எல்லாம் மிகப்பெரிய அதிசயம் எதுவென்றால் ஒரு பாவி மறு பிறப்படைகிற அந்த நிகழ்ச்சிதான். . இருளின் இராஜ்யத்தில் இருந்து ஒளியின் அரசாங்கத்திற்கு மாறுகின்ற அந்த மிகப்பெரிய நிகழ்வு தான் அதிசயங்களில் எல்லாம் மிகப்பெரிய அதிசயம், அற்புதம். தன்னுடைய மறுபிறப்பு தேவன் தன் வாழ்க்கையில் செய்த அதிசயங்கள் எல்லாவற்றிலும் மிகப்பெரிய, இயற்கைக்கு அப்பாற்பட்ட அதிசயம் என்று ஒரு விசுவாசி முதலில் நம்ப வேண்டும். மற்றொன்று தன்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் இயற்கைக்கு அப்பாற்பட்ட இயேசுவின் உயிர்த்தெழுதலின் வல்லமையை நம்ப வேண்டும். விசுவாசிக்க வேண்டும். அப்படி ஒருவன் நம்பும் போது தான், அவனுடைய வாழ்க்கையில் இயற்கைக்கு அப்பாற்பட்ட இயேசுவின் உயிர்த்தெழுந்த வல்லமை செயல்பட முடியும். இயேசுவின் உயிர்த்தெழுந்த வல்லமையை விசுவாசிக்கிறவன் ஒருபோதும் அற்புதங்களை தேடி ஓட மாட்டான். அவன் வாழ்க்கையே அற்புதங்களால் நிறைந்திருக்கும். வாழ்க்கையை தேவனுடய சித்தத்தின்படி அமைத்துக்கொள்பவனுடைய வாழ்க்கையில் அற்புதங்கள் அவனைத் தேடி வரும். பாவத்தின் மீது அதிகாரம் ,உலகத்தின் மீது வெறுப்பு, சாட்சியாய் வாழ்கின்ற காரியங்கள், ஆண்டவருடைய வருகையில் எடுத்துக் கொள்ளக்கூடிய காரியங்கள் இவற்றில் இயேசுவின் உயிர்த்தெழுந்த வல்லமையை ஒரு விசுவாசி நம்ப வேண்டும். தன்னுடைய மறுபிறப்பில் இயற்கைக்கு அப்பாற்பட்டவல்லமையை, அதிசயத்தை நம்பாதவன் தன்னுடைய வாழ்க்கையின் பிற ஆவிக்குரிய காரியங்களில் அப்படிப்பட்ட வல்லமையை உணர முடியாது . ஆபிரகாமுடைய விசுவாசபிள்ளைகள் என்றால் இந்த இரண்டு இயற்கை அப்பாற்பட்ட வல்லமைகளை நாம் நம்ப வேண்டும். அப்படி நம்பும்போது தான் நாம் உண்மையான ஆபிராமுடைய சந்ததியாக காணப்பட முடியும்.

பிரமிக்கத்தக்க ஆபிரகாமின் அர்ப்பணிப்பு

உங்களசிந்தனைக்கு: பிரமிக்கத்தக்க ஆபிரகாமின் அர்ப்பணிப்ப.ஆதி 12:1 1.ஆண்டவருக்காக தேசத்தை விட்டான் ஆதி 12:1 2.ஆண்டவருக்காக இனத்தை விட்டான். ஆதி 12:1 3ஆண்டவருக்காக தகப்பன் வீட்டை விட்டு பிரிந்தான்.ஆதி 12:1 4 தேவ சித்தம் செய்ய லோத்தை வீட்டு பிரிந்தான்.ஆதி 13:5-18 5 தேவனுடைய சொல்லுக்கு கீழ்படிந்து தன் முதல் மகன் இஸ்மவேலை பிரிந்தான்ஆதி 21:12-14 6. ஆகாரை பிரிந்தான். 7.இறுதியில் ஈசாக்கை பலியிட அர்பணித்தான். நம்முடைய விசுவாசத்தின் தகப்பன் என்று அழைப்பதற்கு முழு தகுதியும் பெற்றவன் ஆபிரகாம். இன்றைக்கு ஆவிக்குரிய தகப்பன் என்று அழைப்பதற்கான தகுதியை பெற்றுக்கொள்ள ஆபிரகாமின் வாழ்க்கை ஒரு மிகப்பெரிய பாடமாக அமைகிறது. ஆவிக்குரிய தகப்பன் என்று அழைக்கப்படுவதற்கு ஒரு மிகப்பெரிய தியாகம், அர்ப்பணிப்பு, அவசியம் தேவை. . தகப்பன் என்கிற வார்த்தை மிகவும் ஆழமான அர்த்தமுள்ள பாசமுள்ள உறவு. அதை தகுதியோடு அழைக்க, அழைக்கப்பட முயற்சிக்க வேண்டும். கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார் அநேகர் உங்களுக்கு இல்லையே; என்கிற பவுலின் கூக்குரல் இன்றும் சபையில் ஒலித்துகொண்டே இருக்கிறது 1 கொரிந்தியர் 4:15

பவுலை தவிர்க்க முடியாத கிறிஸ்தவம்

உங்கள் சிந்தனைக்கு: பவுலை தவிர்க்க முடியாத கிறிஸ்தவம். Paul was the first and greatest Christian theologian. From the perspective of subsequent generations, Paul is undoubtedly the first Christian theologian.A.B.Bruce பவுலை போல புதிய ஏற்பாட்டின் ஆரம்ப கால சரித்திரத்தில் எல்லா வகையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் வேறு யாரும் இருக்க முடியாது. அவருடைய சிந்தை, கல்வி, சுபாவம் இவை அனைத்துமே கிறிஸ்துவின் உபதேசத்தை கூர்மையாக்கி எந்த தவறான உபதேசத்தையும் மேற்கொள்ள‌ பயன்பட்டது. இதைப் பற்றி A B. Bruce என்பவர் கீழ்க்கண்டவாறு பதிவிடுகிறார் He defined his convictions sharply,cherished them intensely, and carried them out consistently in action. His mind, by nature and education conscientious and religious, was especially adapted to define the characteristic truths of Christianity, defend them from the errors which threatened to corrupt them, and give them currency and prevalence in the christian world. ஆனால் இந்தப் பவுலை அடையாளம் கண்டு அந்தியோகியா சபைக்கு கொண்டுவர ஒரு பர்னபாவை தேவன் பயன்படுத்தினார். அதற்கு 13 ஆண்டுகள் தேவைப்பட்டது. ஒருவேளை அது மனித தவறுகளாக இருக்கலாம் ,அல்லது தேவன் நியமித்த காலமாகவும் இருக்கலாம். ஆனால் பர்னபா, பவுலின் புத்தி கூர்மையையும் அவருடைய திறமையையும் அவருடைய ,கிரேக்க மொழியின் புலமையையும்,பழைய ஏற்பாட்டு வேதங்களை குறித்து உள்ள அவருக்குரிய ஆழமான சிந்தனைகளையும், புரிதல்களையையும் புற இனங்களை பற்றிய தரிசனத்தையும் சரியாகப் புரிந்து கொண்டு அவர் இருக்க வேண்டிய இடத்தில் அவரைக் கொண்டு சேர்த்தார். அவர் ஒருபோதும் பவுலின் இடத்தை அடைய ஆசைப்படவில்லை. இறுதி வரை தன் அழைப்பில் பர்னபாவாகத்தான் காணப்பட்டார். இன்று சபைகளில் பவுல்கள் உருவாக பர்னபாக்கள் தேவை . அவரவர் தங்கள் அழைப்பை உணர்ந்து ஊழியம் செய்வது தேவனுடைய இராஜ்ய விருத்திக்கு பயனுள்ளதாக இருக்கும். நாம் மற்றவரைப்போல் மாற வேண்டும் என்று நினைப்பதும் நம்முடைய அழைப்பை உயர்வாக கருதாமல் மற்றொரு அழைப்பை உயர்வாக கருதி அதை காப்பி அடிப்பதும் தேவனுடைய ராஜ்ஜியத்திற்கு எந்த பயனும் தராது. சிறு ஊழியமாக இருந்தாலும் அவர்கள் தங்கள் அழைப்பில் நிலைத்திருந்து ஊழியம் செய்தால் நிலையான பலனை பரலோகத்தில் பெற்று கொள்ளலாம் .இது நிச்சயம். பவுல் எழதிய‌ கடிதங்கள் வேத வார்த்தைகளாக சேர்க்கப்படாமல் இருந்திருந்தால் கிறிஸ்துவினுடைய பாடுகள், மரணம், உயிர்த்தெழுதல் இவைகளைப் பற்றி உள்ள முழுமையான வெளிப்படுத்தல் நமக்கு கிடைக்காமல் போயிருக்கும். நாம் எந்த அளவுக்கு நிருபங்களை குறிப்பாக பவுலுடைய நிருபங்களை அதிகமாக தியானிக்கிறோமோ, அந்த அளவுக்குத்தான் புதிய ஏற்பாட்டின் முழுமையான சத்தியம் நமக்கு கிடைக்கும். நல்ல போதகர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள் அவரோடு இணைந்து சத்தியங்களை கற்றுக் கொள்ளுங்கள் . அது உங்களுக்கு பாதுகாப்பு. Ezekiel Shanmugavel

ஏசா ஈசாக்குக்கு கொடுத்த நிந்தனை.

உங்கள் சிந்தனைக்கு: ஏசா ஈசாக்குக்கு கொடுத்த நிந்தனை. ஒரு ஆவிக்குரிய தகப்பனது மிகப்பெரிய வேதனை எதுவென்றால் தான் பெற்ற ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை,(spiritual heritage) கிருபைகளை, நன்மையான காரியங்களை தான் நேசிக்கும் மகன் அதனை வெறுத்து, அதனை விரும்பாமல் உலகத்தை நோக்கி ஓடுகின்ற காரியங்கள்தான். தகப்பன் எவ்வளவோ ஆவிக்குரிய வெற்றிகளை, ஆசிர்வாதங்களை பெற்றிருந்தாலும், மற்றவர்களுக்கு வழங்கியிருந்தாலும் தான் பெற்ற மகன் அந்த ஆசீர்வாதங்களை பெற முடியாமல் உலகத்தோடு கலந்து விடுகின்ற காரியம் ஒரு தகப்பனை பாதிக்கிறது போல் வேறு எதுவும் பாதிக்க முடியாது. இப்படிப்பட்ட சோதனை தான் ஈசாக்குக்கு ஏற்பட்டது. ஈசாக்கு நேசித்த மகன் ஏசா.ஆனால் அந்த பிறப்புரிமையை அலட்சியப்படுத்தி பின்னால் தான் கொடுக்க விரும்பிய ஆசீர்வாதத்தை யாக்கோபு ஏமாற்றி பெற்றதை அறிந்தபோது ஈசாக்கு அடைந்த அந்த வேதனையை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. நம்மில் யாருக்கும் அப்படிப்பட்ட வேதனை வரக்கூடாது. நாம் ஆயிரம் ஆத்துமாக்களை சம்பாதித்து இருந்தாலும் நாம் பெற்ற மகன் அதை இழந்து நிற்பதை பார்க்கின்ற நிர்பாக்கியம் ஒருவருக்கும் ஏற்படக்கூடாது. படிக்க ஆதி 27:2-4,33 25:32-34 வதுஅதிகாரம். எசேக்கியேல் சண்முகவேல்

Incarnation

DAILY QUOTE And in the Incarnation the whole human race recovers the dignity of the image of God. Henceforth, any attack even on the least of men is an attack on Christ, who took the form of man, and in his own Person restored the image of God in all that bears a human form. Through fellowship and communion with the incarnate Lord, we recover our true humanity, and at the same time we are delivered from that individualism which is the consequence of sin, and retrieve our solidarity with the whole human race. By being partakers of Christ incarnate, we are partakers in the whole humanity which he bore. We now know that we have been taken up and borne in the humanity of Jesus, and therefore that new nature we now enjoy means that we too must bear the sins and sorrows of others. The incarnate Lord makes his followers the brothers of all mankind. ― Dietrich Bonhoeffer, The Cost of Discipleship

தேவனின் அழைப்பு

உங்கள் சிந்தனைக்கு! தேவனின் அழைப்பு தேவன் தம்முடைய பிள்ளைகளை ஊழியத்திற்கு தெரிந்துகொள்ளும் விதத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியாது .பவுலுடைய வாழ்கையை பார்க்கும் போது அவர் எட்டாம் நாளில் விருத்தசேதனமடைந்தவன், இஸ்ரவேல் வம்சத்தான், பென்யமீன் கோத்திரத்தான், எபிரெயரில் பிறந்த எபிரெயன், நியாயப்பிரமாணத்தின்படி பரிசேயன்; யூதன், சிலிசியா நாட்டிலுள்ள தர்சுபட்டணத்திலே பிறந்து கமாலியேலின் பாதத்தருகே வளர்ந்து, முன்னோர்களுடைய வேதப்பிரமாணத்தின்படியே திட்டமாய்ப் போதிக்கப்பட்டவன், தேவனைக்குறித்து வைராக்கியமுள்ளவனாயிருந்த வன் பிற மார்க்கத்தாராகிய புருஷரையும் ஸ்திரீகளையும் கட்டி, சிறைச்சாலைகளில்ஒப்புவித்து,மரணபரியந்தம் துன்பப்படுத்தின வன். பக்திவைராக்கியத்தின்படி சபையைத் துன்பப்படுத்தினவன், நியாயப்பிரமாணத்திற்குரிய நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவன். ஆனால் அதே வேளையில் ஆண்டவர் அவரை சந்தித்த போது இஸ்ரவேலர் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே அவரது இருதயத்தின் விருப்பமும் தேவனை நோக்கிச்செய்யும் விண்ணப்பமுமாயிருந்து. மாம்சத்தின்படி தன் இனத்தாராகிய தன் சகோதரருக்குப் பதிலாக தானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாகவேண்டுமென்றுவிரும்பினவன், வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்து அவர்களுடனே சம்பாஷித்து கிறிஸ்து பாடுபடவும் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவும் வேண்டியதென்றும், இயேசுவே கிறிஸ்து என்றும் காண்பித்து, திருஷ்டாந்தப்படுத் த கிருபை பெற்றவன் இந்த பின்புலத்தில் இருந்து பார்க்கும்போது பவுல் யூதர்களுக்கு அப்போஸ்தலனாக இருக்க எல்லா தகுதியும் பெற்றவனாக காணப்படுகிறான். ஆனால் அவனை ஆண்டவர் யூதர்களுக்கான அப்போஸ்தலனாக அழைக்கவில்லை. அவனை புறஜாதிகளுக்கும்., ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் அவருடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக தெரிந்துகொண்டார். தாயின் வயிற்றிலிருந்தது முதல் அவரை பிரித்தெடுத்து தம்முடைய கிருபையினால் அழைத் தார். அவருடைய குமாரனை புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கும்பொருட்டாக, அவரை தெரிந்துகொண்டார் ஆனால் பேதுருவை பொறுத்தளவில் பிரதான கட்டளையை நேரடியாக பெற்றுக்கொண்ட மக்களில் ஒருவன் ." உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்" என்ற ஆண்டவரது கட்டளையை பெற்றவர்களில் ஒருவன் " நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாயிருக்கிறாய், இந்தக்கல்லின் மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை." என்று ஆண்டவர் சொன்னதை நாம் எண்ணி பார்க்கவேண்டும் ஆனால்யாக்கோபும்,கேபாவும்,யோவானும், விருத்தசேதனமுள்ளவர்களுக்கும்,பவுலை புறஜாதிகளுக்கும் பிரசங்கிக்கும்படி, தேவன் தெரிந்துகொண்டார் , இது தேவனுடைய ELECTION ,CALLING AND PREDESTINATION நம்முடைய வாழ்வில் கூட நாம் விரும்பும் ஊழியம் நம்முடைய திறமைகள் வரங்கள்.அனுபவங்கள் இவைகளை சார்ந்து தேவன் கொடுப்பதில்லை .அவருடைய அனாதி தீர்மானத்தின் படி ஊழியங்களை தேவன் நமக்கு தருகிறார். தேவன் நமக்கு கொடுத்த ஊழியத்தில் முழுமனதோடு நிறைவேற்றுவோம், தேவன் நமக்கு கொடுக்காத ஊழியத்தை எண்ணி, எண்ணி ஏங்குவதைவிட பெற்ற ஊழியத்தை சிறியதாக இருந்தாலும் மனமகிழ்ச்சியோடு செய்ய ஆண்டவர் கிருபை செய்வாராக

ஆபிரகாம் சந்தித்த ஏழு சோதனைகள்

உங்கள் சிந்தனைக்கு : ஆபிரகாம் சந்தித்த ஏழு சோதனைகள் கிறிஸ்தவ வாழ்க்கை என்பது முழுக்க முழுக்க விசுவாசத்தால் நிறைந்த போராட்டங்களை கொண்டது . நாம் ஆண்டவரை ஏற்றுக்கொண்ட நாளிலிருந்து நம்மை ஆண்டவர் எடுத்துக்கொள்ளும் நாள் வரைக்கும் அந்த வாழ்க்கை முழுக்க முழுக்க விசுவாச போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும். வயதாகிவிட்டதே, முதிர்ச்சி அடைந்து விட்டோமே என்று விசுவாச போராட்டங்கள் நம்மை விட்டு விடாது. அந்த போராட்டங்களை தேவன் அனுமதித்துக்கொண்டே இருப்பார். போராட்டங்கள் இருந்தால்தான் ஆவிக்குரிய வாழ்க்கை உயிர்த்துடிப்பு உள்ளதாக இருக்கும். இல்லாவிட்டால் அது ஒரு மந்த நிலைக்கு சென்றுவிடும் . எனவே போராட்டங்களை கண்டு நாம் பயப்படக்கூடாது. நாம் போராட்டங்களை சந்தித்து தான் ஆக வேண்டும் . அது தேவன்நமக்கு நியமித்த ஓட்டம் ஆபிரகாமின் வாழ்க்கையை எடுத்துக்கொண்டால் 75 வயதில் ஆண்டவர் அவனை அழைத்தார். அவனது ஆவிக்குரிய வாழ்க்கை வெற்றிகளையும் தோல்விகளையும் கொண்ட மிகப் பெரிய ஒரு போராட்ட வாழ்க்கை ஆகும். அவன் சந்தித்த 7 மிகப்பெரிய போராட்டங்களை இப்பொழுது பார்க்கலாம். 1.FAMILY TEST ஆதி 12;1 தேவனின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து தன் இனத்தையும், நாட்டையும், தன் வீட்டையும் விசுவாசத்தினாலே பிரிந்து தேவன் சொன்ன இடத்திற்கு புறப்பட்டுப் போனன். இது அவனின் முதல் விசுவாச பரிட்சை. இதில் ஆபிரகாம் நூற்றுக்கு நூறு வெற்றி பெற்றுவிட்டான் 2.FAMINE TEST ஆதி12:10 தேவன் அழைத்து வந்த கானான் தேசத்தில் பஞ்சம் வந்தபோது பஞ்சத்தில் தேவன் தன்னைக் காப்பாற்றுவார் என்று நம்பாமல் போராட்டத்தை சமாளிக்க முடியாமல் எகிப்துக்கு ஓடிப் போனன். இதில் முழுக்க முழுக்க இந்த சோதனையில் ஆபிரகாம் தோல்வி அடைந்தான் 3.Fellowship Test ஆதி12:8-10 லோத்துவுக்கும் ஆபிரகாமுக்கும் பிரச்சினை ஏற்பட்டபோது விசுவாசத்தினாலே, லோத்து தான் விரும்பிய இடத்துக்கு போகலாம் என்று அனுமதித்த போது தேவன் தன்னை ஆசீர்வதிப்பார் என்று முழுக்க முழுக்க நம்பியிருந்தான். இதில் ஆபிரகாம் நூறு சதவீதம் வெற்றி பெற்றான 4.Fight test ஆதி14:14-16 தன் வழியில்சென்ற லோத்து வாழ்ந்த சோதோம் நகரத்தை நான்கு அரசர்கள் கைப்பற்றிய போது அவர்களோடு போராடி லோத்துவை மீட்டெடுத்தான். இந்த காரியத்தில் ஆபிரகாம் முழுமையான வெற்றி பெற்றான் 5.Fatherhood test தேவன் குறித்த காலம் வரைக்கும் காத்திராமல் சாராளின் பேச்சைக் கேட்டு ஆகாருடன் உறவு கொண்டு இஸ்மவேலை பெற்றெடுத்த அந்த காரியத்தில் விசுவாச பரீட்சையில்மிகப்பெரிய தோல்வியை சந்தித்தான். 6.Farwell Test முதல் மகனான இஸ்மவேலை தேவனுக்குக் கீழ்ப்படிந்து அவனை அனுப்பி புறம்பே தள்ளிய அந்த காரியத்தில் தேவனுடைய சித்தம் செய்து விசுவாச சோதனையில் பெற்றான் 7. Final Test தேவன் வாக்குத்தத்தம் பண்ணின ஈசாக்கை பலியிட சொன்னபோது அதற்குக் கீழ்ப்படிந்து அதை நிறைவேற்ற முயற்சித்தபோது விசுவாசபரிட்சையில்100% வெற்றி அடைந்தான். இப்படியாக ஆபிரகாம் சில தோல்விகளை சந்தித்தாலும் முக்கியமான விசுவாச பரிட்சைகளில் அவன் முழுமையாக தேவ சித்தத்தை செய்து இருக்கின்றான் என்பதுதான் நாம் அறிந்துகொள்ளக் கூடிய ஒரு காரியம். நம்முடைய வாழ்க்கையிலும் சில சில தோல்விகள் தேவன் தம்மில் வைத்திருக்கும் திட்டத்தை ஒருபோதும் தடை செய்ய முடியாது. தேவன் நம்மேல் கொண்ட நோக்கத்தை நிறைவேற்ற முடியாமல் தடுக்கும் சக்தி உலகத்தில் எங்கும் கிடையாது. தேவன் நினைத்த காரியம் நம்முடைய வாழ்க்கையில் ஒரு போதும் தடைபடாது. எனவே தோல்விகளைக் கண்டு பின் வாங்காமல் வெற்றி பயணத்தை நோக்கி தொடர நமக்கு தேவன் கிருபை தருவாராக

CHRISTMAS QUOTE:

CHRISTMAS QUOTE: The spirit of Christmas needs to be superseded by the Spirit of Christ. The spirit of Christmas is annual; the Spirit of Christ is eternal. The spirit of Christmas is sentimental; the Spirit of Christ is supernatural. The spirit of Christmas is a human product; the Spirit of Christ is a divine person. That makes all the difference in the world.- Stuart Briscoe

WILL OF GOD

DAILY QUOTE: Human destiny is, settled not by the "will of man" but by the "will of God". If God' s purpose is eternal ,His policy will be not shaped today.A.W.Pink

வேதத்திற்கு சபை கட்டுபட்டதா அல்லது சபைக்கு வேதம் கட்டுப்பட்டதா?

உங்கள் சிந்தனைக்கு: Whether the Church is under the authority of the Scripture or the Scripture is under influence of the Church? வேதத்திற்கு சபை கட்டுபட்டதா அல்லது சபைக்கு வேதம் கட்டுப்பட்டதா? இதைப் பற்றிய விவாதத்தில் எது சரி என்று பார்க்கும் பொழுது சபை வேதத்திற்கு கட்டுப்பட்டது என்பதுதான் உண்மை. சபை வேதத்திற்கு கட்டுப்பட்டு இருக்கும்பொழுது உபதேசங்கள் வேதத்தின்படி சரியாக இருக்கும். ஆனால் இன்றைக்கு காணப்படும் காரியம் என்னவென்றால் வேதம் சபைக்கு கட்டுப்பட்ட மாதிரி பலவிதமான உபதேசங்கள்,வேதத்திற்குப் புறம்பான சிந்தனைகள், இதுவரை முன்னோர்கள் சொல்லி வந்த அடிப்படை உபதேசங்களை திரித்து அதன் கருத்துக்களை தவறு என்று சொல்லி ,மனிதர்கள் தங்கள் அனுபவத்தை, கனவில் கண்ட காரியங்களை, முக்கியமில்லாத உபதேசங்களை முக்கியப்படுத்தி, அதைசபையின் உபதேசம் என்று சொல்லி தேவன் அருளிய வேதத்தை சபை என்கிற கட்டிடத்துக்குள் அடக்கி வைப்பதை பார்க்கிறோம். வேதமே நமக்கு பிரதானம் . அந்த வேதம் நமக்கு போதும் என்பதை மறந்து வேதம் சபைக்கு கட்டுப்பட்டது என்று தலைவர்கள் சொல்லாமல் சொல்கிறார்கள். .இன்று சபைக்கென்று தனிப்பட்ட அதிகாரம் எதுவும் கிடையாது. வேதமே சபையின் அதிகாரம். இன்றைக்கு தனிநபர்களை மேன்மை பாராட்டி ,அவர்கள் சொல்வது தான் வேதம் , அவர்கள் போதிப்பது தான் உபதேசம், என்று மாறிவிட்டது. அவர்கள் காண்கிற காட்சி, எழுதுகின்ற எழுத்து, அவர்கள் பேசும்பேச்சு இன்று எழுதப்படாத வேதமாக காணப்படுகிறது. விவாசிகளுக்கு எது அடிப்படை உபதேசம் ,எது முக்கியத்துவம் இல்லாத உபதேசம் என்கிற வேறுபாட்டை புரிந்து கொள்கிற வரை இந்த அவலங்கள் தொடரும். இந்த நிலைமை சபைக்கு ஒரு ஆபத்தான நிலைமை. வேதம் என்றைக்கு தனிநபர்களின் உபதேசங்களுக்கு பின்னாக தள்ளப்பட்டு விட்டதோ அன்றைக்கு சபை சாத்தானின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது என்பதில்எந்த சந்தேகமும் கிடையாது. “The church does not possess an authority of itself; rather, the church is under the authority of Scripture, and we ought only to go as far as the Bible in determining what is essential to the Gospel.”

பவுல் தன்னுடைய கடிதத்தை ஏன் கர்த்தரின் மேல் ஆணையிட்டு விசுவாசிகளை படிக்க சொன்னார்

உங்கள் சிந்தனைக்கு ! பவுல் தன்னுடைய கடிதத்தை ஏன் கர்த்தரின் மேல் ஆணையிட்டு விசுவாசிகளை படிக்க சொன்னார்? "இந்த நிருபம் பரிசுத்தமான சகோதரர் யாவருக்கும் வ செய்யவேண்டுமென்று கர்த்தர்பேரில் ஆணையிட்டு உங்களுக்குச் சொல்லுகிறேன்" 1 தெச .5:27 "அவர்கள் எல்லாருக்கும் இத்திருமுகத்தை வாசித்துக்காட்ட வேண்டுமென்று ஆண்டவர் பெயரால் ஆணையிடுகிறேன்." 1 தெசலோனிக்கர் 5:27. இது கத்தோலிக்க மொழிபெயர்ப்பு. இது தெசலோனிக்கேயரின் சபைக்கு அவர் விடுக்கும் கட்டளை இதே விருப்பத்தை கொலோசிய சபைக்கும் தெரிவித்திருக்கிறார். “இந்த நிருபம் உங்களிடத்தில்ஞ வாசிக்கப்பட்டபின்பு இது லவோதிக்கேயா சபையிலும் வாசிக்கப்படும்படி செய்யுங்கள், லவோதிக்கேயாவிலிருந்து வரும் நிருபத்தை நீங்களும் வாசியுங்கள்.” கொலோ 4:16 "இத்திருமுகத்தை நீங்கள் வாசித்தபின்பு லவோதிக்கேயா திருச்சபையிலும் வாசிக்க ஏற்பாடு செய்யுங்கள். அவ்வாறே லவோதிக்கேயா திருச்சபையிலிருந்து வரும் திருமுகத்தையும் நீங்கள் வாசியுங்கள். " கொலோசையர் 4:16 இது கத்தோலிக்க மொழிபெயர்ப்பு. பவுலடியார் தன் நிருபத்தை வாசிக்கும்படி ஆணையிட்டு ஒரு கருத்தை ஏன் மிகவும் வலியுறுத்தி கூறுகிறார் ? இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு 1. யார் இந்த பவுல்? ஆண்டவரை ஏற்றுக் கொள்வதற்கு முன்பாக யூத மார்க்கத்தின் மீது தீவிர பற்று கொண்டவர். சபையை பாழாக்கியவர். இயேசு கிறிஸ்துவை சந்தித்த பிறகு அவன் மனம் மாறினார். இவர் அப்போஸ்தலனாக இருந்தாலும் இவர் இயேசு கிறிஸ்துவை முகமுகமாக சந்தித்து பேசினது கிடையாது. இயேசு கிறிஸ்து தெரிந்தெடுத்த 12 அப்போஸ்தலர்களில் இவர் கிடையாது. ஆரம்ப நாட்களில் எருசலேம் சபையின் அங்கீகரிப்பும் இவருக்குகிடையாது. பல சபைகளில் இவருடைய அப்போஸ்தல அதிகாரத்தை கேள்விக்குறியாக்கின காரியங்களும் காணப்படுகிறது. ஆனால் இவர் தான் புதிய ஏற்பாட்டில் உள்ள புத்தகங்களில் 13 கடிதங்களை எழுதியிருக்கிறார். புற இனத்தார் மத்தியில் நற்செய்தியை தீவிரமாக பரப்பியவர். சபையை குறித்தும், நற்செய்தியை குறித்தும் மற்ற அப்போஸ்தலர்களை காட்டிலும் மிக அதிகமான வெளிப்படுத்தலை தேவனிடத்தில் இருந்து பெற்றவர்.கலா2;11,12, எபே 3;8-11,2கொரி11:6 எனவேதான் தன்னுடைய அப்போஸ்தல அதிகாரத்தை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது இந்த வார்த்தையின் ஆழத்தை சரியாக புரிந்து கொண்டால் புதிய ஏற்பாடு நூல்கள் எவ்வாறு வரைமுறை செய்ய பட்டது என்பதை அறிந்து கொள்ளலாம். இன்னொரு காரணம். ஆதி திருச்சபைகளில் முதலில் பழைய ஏற்பாடு நூல்கள்தான் வாசிக்கப்பட்டு வந்தது. பவுல்தான் செல்லும் எல்லா இடங்களிலும் அங்குள்ள யூதர்களுடைய தேவாலயத்தில் சென்று பழைய ஏற்பாட்டில் உள்ள நூல்களில், மேசியாவாகிய கிறிஸ்து எவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறார் என்பதை விவரித்து நற்செய்தியை அறிவிப்பது வழக்கம். அதனால் புற இனத்தாரும் தேவனுடைய அரசில் இணைந்தனர் . அதன் பிறகு பழைய ஏற்பாடு நூல்களோடு அப்போஸ்தலர்களின் நிரூபங்களும் சபைகளில் சத்தமாக வாசிக்கப்பட்டது. According to John Stott “this was the origin of the tradition of having both an old and a New Testament lesson in Church.The clear implication is that these apostolic documents were to b regarded as being on a level with the Old Testament Scriptures” இந்த பழக்கம்தான் பின்னாட்களில் புதிய ஏற்பாடு நூல்கள் தெரிந்துகொள்ளப் படுவதற்கும் தொகுக்கப்படுவதற்கும் ஆதாரமாகிவிட்டது. This tradition enabled the Church fathers to complete the “Canon of Scripture” ஒரு மனித தேவையை ஏற்படுத்தி அதன் மூலம் தேவன் தமது திட்டத்தை நிறைவேற்றினார்.

தேவனின் பரிபூரண சித்தமும் அனுமதிக்கப்பட்ட விருப்பமும்

உங்கள் சிந்தனைக்கு: தேவனின் பரிபூரண சித்தமும் அனுமதிக்கப்பட்ட விருப்பமும் God's perfect will and permissive will. நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய பரிபூரண சித்தம் நிறைவேற ஒப்புக் கொடுக்க வேண்டும் . ஏதோ ஒரு காரியத்தில் தேவனோடு வம்பு கட்டி ,போராடி நாம் விரும்பிய காரியத்தை கேட்கும் போதும் அவர் சில நேரங்களில் அதை அனுமதித்து விடுவார். .இது தான் அனுமதிக்கப்பட்ட தேவ சித்தம் என்று சொல்லுவார்கள். இதைத்தான் இஸ்ரவேல் மக்களின்வாழ்க்கையில் ஆரம்பகாலத்தில் பார்க்கலாம் . ஆபிரகாமை தேவன் அழைத்தபோது அவருடைய சந்ததிக்கு கானான் தேசத்தை வாக்குத்தத்தம் பண்ணியிருந்தார். யாக்கோபுக்கு பிறந்த 12 பிள்ளைகளுக்கு அந்த தேசம் முன்குறிக்கப்பட்டது. ஆனால் கானானுக்கு செல்வதற்கு முன்பாக யோர்தானை கடந்து அடுத்தது கானானுக்கு செல்ல வேண்டிய அந்த நேரத்தில் 12 கோத்திரத்தில் ரூபன்,காத் புத்திரர்கள் ‌ யோர்தானுக்கு இக்கரையில் யூதர்கள் கைப்பற்றிய அதரோத், தீபோன், யாசேர், நிம்ரா, எஸ்போன், எலெயாலெ, சேபாம், நேபோ, பெயோன் என்னும் பட்டணங்கள் தங்கள் ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடமாக இருப்பதால் அதை தங்களுக்கு பிரித்துக் கொடுக்குமாறு கேட்டார்கள். அதேபோல மனசேயின் ஒரு கோத்திரத்தாரும் தங்களுக்கும் யோர்தானுக்கு இக்கரையில் உள்ள இடத்தை கேட்டனர். இதற்கு மோசே முதலில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தாலும் பின்னால் அவர்கள் கானானை கைப்பற்றும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வோம் என்கிற வாக்குறுதி கொடுத்தபடியினாலே அவர்களுக்கு கானானுக்கு வெளியே யோர்தானுக்கு இக்கரையில் உள்ள இடங்களை பிரித்துக் கொடுத்தார்‌ மோசே . இந்தக் காரியத்தை கர்த்தர் அனுமதித்தாரா என்பது நமக்கு தெரியாது. ஆனாலும் மோசேஅவர்களின் விருப்பத்தின்படி பிரித்துக் கொடுத்தார். கர்த்தருடைய பரிபூரண சித்தம் ஆபிரகாமின் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட சந்ததி அனைவரும் கானானில் குடியிருக்க வேண்டும் என்பதே. அவர்கள் யோர்தானுக்கு அக்கறை ஒருபுறமும் இக்கரை ஒருபுறமும் பிரிந்து இருப்பது தேவனுடைய சித்தம் இல்லை. சில வேத பண்டிதர்கள் சொல்லுகின்ற காரியம் என்னவென்றால் எதிரிகளின் தாக்குதலில் முதலில் இவர்கள் தான் பாதிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். நாம் கற்றுக் கொள்ளும் பாடம் என்னவென்றால் தேவனுடைய பரிபூரண சித்தத்தில் வாழ்வதுதான் நமக்கு பாதுகாப்பு.. ஒருவேளை நம்முடைய போராட்டத்தின் மூலம் நாம் விரும்பியதை தேவன் அனுமதித்தாலும் அதில் பரிபூரண பாதுகாப்பு இருக்காது என்பது தான் உண்மை. இப்படி யாக்கோபின் இரண்டு புத்திரர்களும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானானை விரும்பாமல் உலக பார்வையின்படி தங்கள் கால்நடைகளுக்காக யோர்தானின் இக்கரையில்உள்ள இடத்தை தெரிந்து கொண்டார்கள். இதுவும் ஒரு ஆவிக்குரிய சறுக்கல்தான்.. நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய பரிபூரண சித்தத்தை செயல்படுத்த நமக்கு தேவன் கிருபை தருவாராக . கர்த்தர் மகிமைப்படுவாராக. படிக்க எண்ணாகம் 32 வது அதிகாரம்

தேவனின் பரிபூரண சித்தமும் அனுமதிக்கப்பட்ட விருப்பமும்

உங்கள் சிந்தனைக்கு: தேவனின் பரிபூரண சித்தமும் அனுமதிக்கப்பட்ட விருப்பமும் God's perfect will and permissive will. நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய பரிபூரண சித்தம் நிறைவேற ஒப்புக் கொடுக்க வேண்டும் . ஏதோ ஒரு காரியத்தில் தேவனோடு வம்பு கட்டி ,போராடி நாம் விரும்பிய காரியத்தை கேட்கும் போதும் அவர் சில நேரங்களில் அதை அனுமதித்து விடுவார். .இது தான் அனுமதிக்கப்பட்ட தேவ சித்தம் என்று சொல்லுவார்கள். இதைத்தான் இஸ்ரவேல் மக்களின்வாழ்க்கையில் ஆரம்பகாலத்தில் பார்க்கலாம் . ஆபிரகாமை தேவன் அழைத்தபோது அவருடைய சந்ததிக்கு கானான் தேசத்தை வாக்குத்தத்தம் பண்ணியிருந்தார். யாக்கோபுக்கு பிறந்த 12 பிள்ளைகளுக்கு அந்த தேசம் முன்குறிக்கப்பட்டது. ஆனால் கானானுக்கு செல்வதற்கு முன்பாக யோர்தானை கடந்து அடுத்தது கானானுக்கு செல்ல வேண்டிய அந்த நேரத்தில் 12 கோத்திரத்தில் ரூபன்,காத் புத்திரர்கள் ‌ யோர்தானுக்கு இக்கரையில் யூதர்கள் கைப்பற்றிய அதரோத், தீபோன், யாசேர், நிம்ரா, எஸ்போன், எலெயாலெ, சேபாம், நேபோ, பெயோன் என்னும் பட்டணங்கள் தங்கள் ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடமாக இருப்பதால் அதை தங்களுக்கு பிரித்துக் கொடுக்குமாறு கேட்டார்கள். அதேபோல மனசேயின் ஒரு கோத்திரத்தாரும் தங்களுக்கும் யோர்தானுக்கு இக்கரையில் உள்ள இடத்தை கேட்டனர். இதற்கு மோசே முதலில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தாலும் பின்னால் அவர்கள் கானானை கைப்பற்றும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வோம் என்கிற வாக்குறுதி கொடுத்தபடியினாலே அவர்களுக்கு கானானுக்கு வெளியே யோர்தானுக்கு இக்கரையில் உள்ள இடங்களை பிரித்துக் கொடுத்தார்‌ மோசே . இந்தக் காரியத்தை கர்த்தர் அனுமதித்தாரா என்பது நமக்கு தெரியாது. ஆனாலும் மோசேஅவர்களின் விருப்பத்தின்படி பிரித்துக் கொடுத்தார். கர்த்தருடைய பரிபூரண சித்தம் ஆபிரகாமின் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட சந்ததி அனைவரும் கானானில் குடியிருக்க வேண்டும் என்பதே. அவர்கள் யோர்தானுக்கு அக்கறை ஒருபுறமும் இக்கரை ஒருபுறமும் பிரிந்து இருப்பது தேவனுடைய சித்தம் இல்லை. சில வேத பண்டிதர்கள் சொல்லுகின்ற காரியம் என்னவென்றால் எதிரிகளின் தாக்குதலில் முதலில் இவர்கள் தான் பாதிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். நாம் கற்றுக் கொள்ளும் பாடம் என்னவென்றால் தேவனுடைய பரிபூரண சித்தத்தில் வாழ்வதுதான் நமக்கு பாதுகாப்பு.. ஒருவேளை நம்முடைய போராட்டத்தின் மூலம் நாம் விரும்பியதை தேவன் அனுமதித்தாலும் அதில் பரிபூரண பாதுகாப்பு இருக்காது என்பது தான் உண்மை. இப்படி யாக்கோபின் இரண்டு புத்திரர்களும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானானை விரும்பாமல் உலக பார்வையின்படி தங்கள் கால்நடைகளுக்காக யோர்தானின் இக்கரையில்உள்ள இடத்தை தெரிந்து கொண்டார்கள். இதுவும் ஒரு ஆவிக்குரிய சறுக்கல்தான்.. நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய பரிபூரண சித்தத்தை செயல்படுத்த நமக்கு தேவன் கிருபை தருவாராக . கர்த்தர் மகிமைப்படுவாராக. படிக்க எண்ணாகம் 32 வது அதிகாரம்

அடைக்கலப்பட்டணம் நமக்கும் யூதர்களுக்கும் சொல்லும் செய்தி என்ன.?

உங்கள் சிந்தனைக்கு: அடைக்கலப்பட்டணம் நமக்கும் யூதர்களுக்கும் சொல்லும் செய்தி என்ன.? பழைய ஏற்பாட்டில் லேவியர்களுக்கென்று தனியாக உரிமை சொத்து ஒதுக்கப்படவில்லை. ஆனால் அவர்கள் இஸ்ரவேல் தேசம் எங்கும் பரவி இருப்பதற்காக அவர்களுக்கு 48 நகரங்கள் கொடுக்கப்பட்டது. அந்த 48 நகரங்களில் அவர்கள் வாழ முடியும். அதில் ஆறு நகரங்கள் அடைக்கலபட்டினமாக ஒதுக்கப்பட்டது. இந்த அடைக்கலம் பட்டினம் எதற்க்கு என்றால் யூதர்களில் யாராவது ஒருவன் தற்செயலாக, காரணம் ஏதும் இல்லாமல் ஒருவனை கொலை செய்தால் அவன் இந்த பட்டினத்திற்குள் ஒளிந்து கொள்ளலாம். . பின்பு நியாயவிசாரணை நடக்கும் பொழுது அவன் குற்றம் அற்றவனாக கண்டுபிடிக்கப்பட்டால் அவன் அந்த பட்டணத்தில் பிரதான ஆசாரியன் அல்லது மதகுரு மரிக்கும் வரை அங்கே தங்கி இருக்கலாம் . பிரதான குரு மரித்த பிறகு அவன் அந்த பட்டணத்தை விட்டு வெளிவந்து சுதந்திரமாக வாழலாம். அவன் சிந்திய இரத்தத்திற்கு நியாம் கேட்க பாதிக்கப்பட்ட உறவினர்கள் உரிமை கோர முடியாது. காரணத்தோடு ஒருவன் கொலை செய்யப்பட்டால் கொலை செய்யப்பட்டவனுடைய ரத்தத்திற்கு பதிலாக கொலை செய்தவன் ரத்தம் சிந்தப்படவேண்டும். இன்று இவைகள் நமக்கு உணர்த்தும் பாடம் என்ன? யூதர்களைப் பொறுத்த அளவில் யூதர்கள் இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தாலும் அவர்கள் தாங்கள் செய்வது என்னவென்று அறியாமல் செய்ததாக இயேசு கிறிஸ்துவே சொன்னபடியினால் கொலை செய்த யூதன் தன் இடத்தை விட்டு வெளியேற்றப்படுவதைபோல யூதர்கள் காணப்படுகிறார்கள்.They have been living in exile. எதுவரைக்கும் என்றால் மகா பிரதான ஆசாரியராகிய இயேசு கிறிஸ்து மறுபடியும் திரும்ப வருகின்ற காலம் வரை. The Nation's complete restoration to its position will take place not at the death of the Great High Priest ( for He can never die) but when he comes to rule.WILLIAM MACDONALD . புதிய ஏற்பாட்டை பொறுத்த அளவில் நம்முடைய பாவங்களுக்காக தம்முடைய இரத்தத்தை சிந்திய மகா பிரதான ஆசாரியரின் புண்ணியத்தை நம்பி எந்த ஒரு பாவியும் அவரிடத்தில் வரும்போது அவர்களுக்கு மீட்பு கிடைக்கிறது. பாவிகளுக்கு அடைக்கல பட்டணமாக பிரதான ஆசாரியராக இயேசு கிறிஸ்து காணப்படுகிறார். படிக்க எண்ணாகமம் 35 வது அதிகாரம்.Ezekiel Shanmugavel

ஆகாரையை ஏன் புறம்பே தள்ளவேண்டும்

உங்கள் சிந்தனைக்கு! “ ஆகாரையும் இஸ்மவேலையும் புறம் தள்ளுகிற” சபையே உண்மையான புதிய ஏற்பாட்டு சபை சில விளக்கங்கள் கலாத்தியர்க்கு பவுல் எழுதின நிருபம், பவுல் எழுதின நிரூபங்களிலேயே மிக முக்கியமான நிருபம். மார்ட்டின் லூத்தரின் சீர்திருத்த கருத்துக்களுக்கு அந்த நிருபம் மிகமுக்கிய பங்கு வகித்தது. Martin Luther once told “This is my epistle .I am married to it " விசுவாசிகளுடைய" சுயாதீனம் " என்பதுதான் இந்த நிருபத்தின் முக்கிய கருத்து. இந்த நிருபத்தில் புரிந்து கொள்ள மிகவும் கடினமான பகுதி4:21-31 தான். இங்கு பவுல் எழுதும் அனைத்தும் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட நிகழ்வுகளை உருவமாக(Allegorical argument ) பதிய ஏற்பாட்டு சத்தியத்தோடு இணைத்து எழுதுகிறார். ஆபிரகாம், மோசே, ஈசாக்கு, இஸ்மவேல், சாராள் , ஆகார், அடிமை , சுயாதீனம், சினாய் மலை, அரபு தேசம், மேலான எருசலேம், மாமிசத்தின் படி பிறந்தவன் , வாக்குத்தத்தின்படி பிறந்தவன் என்று சொல்லப்பட்ட வார்த்தைகள் எல்லாம் ஞான அர்த்தமுள்ளவைகள். ஞான அர்த்தங்கள். Abraham had two sons born of two mothers. Hagar, slave, stands for Old covenant. Sarah free women, stands for New covenant. இஸ்மவேல் பிறப்பு சாதாரண (பாவத்தில்) மாமிசத்தில் பிறக்கும் பிறப்பை குறிக்கும்.(Physical) ஈசாக்கின் பிறப்பு ஆவிக்குரிய பிறப்பை குறிக்கும் Supernatural birth (Gal 4: 28, 29 Heb 11:11) ஈசாக்கு வாக்குத்தத்தின்படி பிறந்தவன். ஆகார் பழைய ஏற்பாடு பிரமாணங்களை குறிப்பதாகும். Hugar vs Sara =Law vs Grace Ishmael vs Isaac= flesh vs Spirit Sarah the freewoman vs Hugar slave சாராள் கிருபையை குறிப்பதாகும் சாராள் ஆபிரகாமின் முதல் மனைவி ஆகார் 2 வது மனைவி முதலில் வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்கு கொடுக்கப்பட்டது. பின்புதான் கட்டளைகள் மற்றும் பிராமணங்கள் மோசேக்கு கொடுக்கப்பட்டது. ஆதாமுக்கு தேவன் மீட்பிற்கான கட்டளையை கொடுக்கவில்லை வாக்குத்தத்தை தான் கொடுத்தார். Gen (3:15) ஆகார் ஆபிரகாமோடு இணைக்கப்பட்டதுபோல பிராமணங்கள் இணைக்கப்பட்டதுGal 3:19). ஆகார் என்பவள் பிரமாணங்களை குறிப்பதாகும். .இஸ்மவேல் மாமிசத்தை குறிப்பதாகும் எனவே இவைகள் சபையை விட்டு விலக்கப்படவேண்டும் Hagar performed a function temporarily, and then moved off the scene, just as the Law performed a special function and then it was taken away. As Hagar refers to the Law it should be cast out. Ishmael refers to flesh it should be cast out. ஆகார் மறுமணம் செய்துகொள்ளவில்லை .அதாவது தேவன் பிரமாணங்களை வேறு யாருக்கும் திரும்ப கொடுக்கவில்லை. God never gave the Law to any other nation or people including His Church. உண்மையான ஆபிரகாமின் சந்ததி, மாமிசத்தை படி வந்த யூதர்கள் அல்ல. வாக்குத்தத்தின்படி மறுபடியும் பிறந்த கிருஸ்தவர்கள்தான். The true fulfilment of the Old Testament promises is not literal but spiritual Like Issac we are the “children of promise” (Gal 4:28) free woman,(Gal4:31) citizen of true Jerusalem,” Jerusalem from above” ( Gal 4:26, Heb 12:22, Rev 3:12),true circumcision(Phi3:3). We need not take literally the name of Hagar and Ismael but spiritually. சபையில் போலி விசுவாசிகளையும் கிருபையை சாராமல் கிரியைகளை மேன்மை படுத்தும் உபதேசங்களையும் புறம்பே தள்ளுங்கள் Selected from commentaries of W.WIERSBE, WILLIAM BARCLAY, and JOHN STOTT Ezekiel shanmugavel

ஆகாரையை ஏன் புறம்பே தள்ளவேண்டும்

உங்கள் சிந்தனைக்கு! “ ஆகாரையும் இஸ்மவேலையும் புறம் தள்ளுகிற” சபையே உண்மையான புதிய ஏற்பாட்டு சபை சில விளக்கங்கள் கலாத்தியர்க்கு பவுல் எழுதின நிருபம், பவுல் எழுதின நிரூபங்களிலேயே மிக முக்கியமான நிருபம். மார்ட்டின் லூத்தரின் சீர்திருத்த கருத்துக்களுக்கு அந்த நிருபம் மிகமுக்கிய பங்கு வகித்தது. Martin Luther once told “This is my epistle .I am married to it " விசுவாசிகளுடைய" சுயாதீனம் " என்பதுதான் இந்த நிருபத்தின் முக்கிய கருத்து. இந்த நிருபத்தில் புரிந்து கொள்ள மிகவும் கடினமான பகுதி4:21-31 தான். இங்கு பவுல் எழுதும் அனைத்தும் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட நிகழ்வுகளை உருவமாக(Allegorical argument ) பதிய ஏற்பாட்டு சத்தியத்தோடு இணைத்து எழுதுகிறார். ஆபிரகாம், மோசே, ஈசாக்கு, இஸ்மவேல், சாராள் , ஆகார், அடிமை , சுயாதீனம், சினாய் மலை, அரபு தேசம், மேலான எருசலேம், மாமிசத்தின் படி பிறந்தவன் , வாக்குத்தத்தின்படி பிறந்தவன் என்று சொல்லப்பட்ட வார்த்தைகள் எல்லாம் ஞான அர்த்தமுள்ளவைகள். ஞான அர்த்தங்கள். Abraham had two sons born of two mothers. Hagar, slave, stands for Old covenant. Sarah free women, stands for New covenant. இஸ்மவேல் பிறப்பு சாதாரண (பாவத்தில்) மாமிசத்தில் பிறக்கும் பிறப்பை குறிக்கும்.(Physical) ஈசாக்கின் பிறப்பு ஆவிக்குரிய பிறப்பை குறிக்கும் Supernatural birth (Gal 4: 28, 29 Heb 11:11) ஈசாக்கு வாக்குத்தத்தின்படி பிறந்தவன். ஆகார் பழைய ஏற்பாடு பிரமாணங்களை குறிப்பதாகும். Hugar vs Sara =Law vs Grace Ishmael vs Isaac= flesh vs Spirit Sarah the freewoman vs Hugar slave சாராள் கிருபையை குறிப்பதாகும் சாராள் ஆபிரகாமின் முதல் மனைவி ஆகார் 2 வது மனைவி முதலில் வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்கு கொடுக்கப்பட்டது. பின்புதான் கட்டளைகள் மற்றும் பிராமணங்கள் மோசேக்கு கொடுக்கப்பட்டது. ஆதாமுக்கு தேவன் மீட்பிற்கான கட்டளையை கொடுக்கவில்லை வாக்குத்தத்தை தான் கொடுத்தார். Gen (3:15) ஆகார் ஆபிரகாமோடு இணைக்கப்பட்டதுபோல பிராமணங்கள் இணைக்கப்பட்டதுGal 3:19). ஆகார் என்பவள் பிரமாணங்களை குறிப்பதாகும். .இஸ்மவேல் மாமிசத்தை குறிப்பதாகும் எனவே இவைகள் சபையை விட்டு விலக்கப்படவேண்டும் Hagar performed a function temporarily, and then moved off the scene, just as the Law performed a special function and then it was taken away. As Hagar refers to the Law it should be cast out. Ishmael refers to flesh it should be cast out. ஆகார் மறுமணம் செய்துகொள்ளவில்லை .அதாவது தேவன் பிரமாணங்களை வேறு யாருக்கும் திரும்ப கொடுக்கவில்லை. God never gave the Law to any other nation or people including His Church. உண்மையான ஆபிரகாமின் சந்ததி, மாமிசத்தை படி வந்த யூதர்கள் அல்ல. வாக்குத்தத்தின்படி மறுபடியும் பிறந்த கிருஸ்தவர்கள்தான். The true fulfilment of the Old Testament promises is not literal but spiritual Like Issac we are the “children of promise” (Gal 4:28) free woman,(Gal4:31) citizen of true Jerusalem,” Jerusalem from above” ( Gal 4:26, Heb 12:22, Rev 3:12),true circumcision(Phi3:3). We need not take literally the name of Hagar and Ismael but spiritually. சபையில் போலி விசுவாசிகளையும் கிருபையை சாராமல் கிரியைகளை மேன்மை படுத்தும் உபதேசங்களையும் புறம்பே தள்ளுங்கள் Selected from commentaries of W.WIERSBE, WILLIAM BARCLAY, and JOHN STOTT Ezekiel shanmugavel

For your thought

FOR YOUR THOUGHT: No book is more contemporary than the Bible, and each new generation has to learn this important lesson. WIERSBE வேத புத்தகத்தை விட வேறு எந்த புத்தகமும் சம காலத்தவை அல்ல, ஒவ்வொரு புதிய தலைமுறையும் இந்த புத்தகத்தின் இந்த முக்கியமான பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

காலம் கடந்த கீழ்படிதல்

உங்கள் சிந்தனைக்கு: Delayed obedience amounts to no obedience. கடவுள் இஸ்ரவேல் ஜனங்களை 400 ஆண்டுகால எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கி அவர்களை ஆபிரகாமுக்கு‌‌ கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் படியாக அவர்களை வனாந்தரத்தில் நடத்தினார் . சீனாய் மலையில் அவர்களுக்கு கட்டளைகளையும் பிரமாணங்களையும் கொடுத்து ஆசரிப்பு கூடாரத்தை உருவாக்கி லேவியர்களையும், குருமார்களையும்‌ நியமித்து‌ அங்கே தமது மகிமையை வெளிப்படுத்தினார். அங்கே இஸ்ரவேல் ஜனங்கள் ஒரு வருட காலம் தங்கி இருந்தார்கள். ஆனாலும் அங்கே அதிகம் காலம் அவர்களை இருக்க வைக்காமல் கானானுக்கு வழிநடத்தினார். அந்த காலகட்டங்களில்தான் அவர்கள் பல முறை தேவனுக்கு விரோதமாக கலகம் செய்தார்கள். தேவன் அளித்த மன்னாவின் மீது திருப்தியற்று‌ தங்களுக்கு விருப்பமான உணவை கேட்டார்கள். கானானுக்கு முந்திய இடமான காதேஸ் பர்னேயா வந்தடைந்த போது. தேவன் வாக்களித்த இடத்தை விசுவாசத்தோடு கடந்து வெற்றி பெறுவோம் என்று நம்பாமல் அங்கு சென்று வேவு பார்க்க விரும்பினார்கள். வேவுபார்த்து திரும்பின வர்களில் 10 பேர் அந்த இடத்தை நம்மால் அடைய முடியாது என்று புலம்பினார்கள். மடிந்து போய் விடுவோம் என்றுபெரும் கலகம் பண்ணினார்கள்.. "நாங்கள் போகமாட்டோம்" என்று தேவனாகிய கர்த்தருடைய கட்டளைக்கு விரோதமாக எதிர்த்து, தங்களது கூடாரங்களில் முறுமுறுத்தார்கள்: கர்த்தர் நம்மை வெறுத்து, நம்மை அழிக்கும்பொருட்டாக நம்மை எமோரியரின் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, நம்மை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினார். என்று புலம்பினார்கள் உபாகமம் 1:26,28 அதனால் கர்த்தர் கோபங்கொண்டு அவர்கள் கானானுக்குள் பிரவேசிப்பதில்லை என்றும் கொள்ளையாவார்கள் என்று அவர்கள் சொன்ன அவர்கள் குழந்தைகளும், அந்நாளிலே நன்மை தீமை அறியாத அவர்கள் பிள்ளைகளும் அதில் பிரவேசிப்பார்கள் என்று தேவன் கட்டளையிட்டார் உபாகமம் 1:39. ஆனால் பின்னால் தங்கள் தவறை உணர்ந்து "கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம், நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் நாங்கள் போய் யுத்தம்பண்ணுவோம் என்று சொல்லி' யாவரும் ஆயுதங்களைத் தரித்துக்கொண்டு, மலையின்மேல் ஏறினார்கள் உபாகமம் 1:41. அந்த செயலை தேவன் அங்கீகரிக்கவில்லை. அவர்களுடைய மனித முயற்சியை ஏற்கவில்லை. தேவன் மீது விசுவாசம் வைக்காமல் தேவனுக்கு விரோதமாக கலகம் செய்த பிறகு அவர்களின் இந்த செயல் தேவனை பிரியப்படுத்தவில்லை. இது ஒரு காலம் கடந்த கீழ்ப்படிதல். எனவேஅந்த மலையிலே குடியிருந்த எமோரியர் யூதர்களை தேனீக்கள் துரத்துகிறதுபோல உங்களைத் துரத்தி,‌முறிய அடித்தார்கள். உபாகமம் 1:44 இதன் மூலம் தேவன் நமக்கு உணர்த்தும் பாடம்‌ 1.காலம் தாழ்த்தின கீழ்படிதல் தேவனை பிரியப்படுத்தாது. அவர்கள் வீணாக 38 வருடங்கள் வனாந்தரத்தில் அலைந்து திரிந்து மடிந்ததைத் தவிர வேறு ஒன்றையும் பெற்றுக்கொள்ள முடியாமல் போய்விட்டார்கள். 2.தேவனுடைய துணை இல்லாமல், தேவன் மீது விசுவாசம் வைக்காமல் அவரை சார்ந்திராமல் நாம் நம்முடைய சுய முயற்சியால் செய்ய நினைக்கும் எந்த காரியமும் தோல்வியில் முடிவது மட்டுமல்ல நமக்கு மிகப்பெரிய இழப்பையும் ஏற்படுத்தும். Surely we must know that the "will of God would not lead us where the grace and power of God could not keep us ". Wiersbe

நமது குடியிருப்பின் எல்லைகள்

உங்கள் சிந்தனைக்கு: நம்முடைய குடியிருப்பின் எல்லைகளை தேவன் முன் குறித்திருக்கிறார். நான் எங்கே இருக்க வேண்டும்? எது வரை இருக்கும் வேண்டும் என்பதை தேவன் மட்டுமே முடிவு செய்ய முடியும். கடவுள் ஆபிராமுக்கு என்று கானான் தேசத்தை வாக்குத்தத்தம் பண்ணியிருந்தார். அந்த தேசத்தை அடைய வேண்டிய இறுதி காலகட்டத்தில் அவர்கள் தேவனுக்கு விரோதமாக கலகம் செய்தபடியினால் கலகம் செய்த அத்தனை நபர்களும் வனாந்தரத்தில் மடியும் மட்டும் 38 ஆண்டுகள் அவர்களை தேவன் வனாந்தரத்தில் அலைக்கழித்தார். மோசேயை தவிர கலகம் செய்த அனைவரும் வனாந்தரத்தில் மரித்த பிறகு மறுபடியுமாக அவர்கள் கானானுக்குள் புதிய தலைமுறை பிரவேசிக்க வேண்டும். அப்படி அவர்கள் பிரவேசிக்கும் பொழுது அவர்கள் ஏசாவின் சந்ததிக்கு சொந்தமான சேயீர் தேசத்தையும், லோத்தின் சந்ததிக்கு சொந்தமான ஆர் என்னும் பிரதேசத்தையும் கடந்து கானானுக்கு செல்ல வேண்டும் . அப்படி யூத ஜனங்கள் கடந்து போகும்போது அந்த லோத்தின் உறவினர்களையும் ஏசாவின் உறவினர்களையும் போருக்கு தூண்டவோ, அவர்களோடு யுத்தம் செய்யவோ கூடாது என்று தேவன் கட்டளையிட்டார். போரிட்டு அந்த இடங்களை யூதர்கள் கைப்பற்ற கூடாது என்பது மறைமுகமான அர்த்தம். அந்த இடங்களை தானே அவர்களுக்கும் கொடுத்ததாக தேவன் சொல்கிறார். அவர்களுக்குஅந்த 38 வருடங்கள் அவர்களை நடத்தின தான் அவர்களுக்கு போதுமானவர் என்று சொன்னார்.உபா 2:1-23 இதன் மூலம் நாம் கற்றுக்கொள்ளும் ஆவிக்குரிய பாடங்கள் என்ன? .1. தேவன்‌‌ ஒவ்வொருக்கென்று உலகின் நன்மைகளையும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் வைத்திருக்கிறார். நமக்கு வைத்திருக்கும் ஆசீர்வாதங்கள் மட்டும்தான் நாம் பெற்றுக் கொள்ள முடியும். பிறருடைய ஆசீர்வாதங்களயோ மற்ற சகோதரர்களுக்கு தேவன் முன்குறித்த ஆசீர்வாதங்களையோ நாம்‌இச்சிக்க கூடாது. அது ஒரு பேராசை அதுபோல தேவன் நமக்கு கொடுத்திருக்கும் ஆவிக்குரிய வரங்களில் திருப்தி அடைந்து அதை தேவ மகிமைக்காக பயன்படுத்த வேண்டும். தேவன் மற்ற சகோதரர்களுக்கு அளித்திருக்கும் பிற கவர்ச்சிக்குரிய வரங்களை நாம் பெறவில்லையே என்று ஆதங்கப்பட்டு அதை இச்சிக்க கூடாது. தேவ நமக்கு கொடுத்திருக்கும் இம்மைக்குரிய, ஆவிக்குரிய நன்மைகளில் வரங்களில் திருப்தி அடைய வேண்டும். அப்படி இருக்கும்போது மற்றவர்களின் மீது பொறாமைபடாமல் இருக்கவும் நாம் திருப்தி உள்ள வாழ்க்கை வாழவும் நம்மை வழிவகுக்கும். 2.மேலும் ஒவ்வொரு இனமும் எந்தெந்த இடங்களில் வாழ வேண்டும் என்று தேவன் தம்முடைய அனாதி தீர்மானத்தில் குறித்திருக்கிறார் அதை ஒருவராலும் மாற்றக்கூடாது. God is supreme over all nations and assigns their territories according to His sovereign will.W.W.Wiersbe (Acts 17:26–28; 2 Chron. 20:6).

நமது குடியிருப்பின் எல்லைகள்

உங்கள் சிந்தனைக்கு: நம்முடைய குடியிருப்பின் எல்லைகளை தேவன் முன் குறித்திருக்கிறார். நான் எங்கே இருக்க வேண்டும்? எது வரை இருக்கும் வேண்டும் என்பதை தேவன் மட்டுமே முடிவு செய்ய முடியும். கடவுள் ஆபிராமுக்கு என்று கானான் தேசத்தை வாக்குத்தத்தம் பண்ணியிருந்தார். அந்த தேசத்தை அடைய வேண்டிய இறுதி காலகட்டத்தில் அவர்கள் தேவனுக்கு விரோதமாக கலகம் செய்தபடியினால் கலகம் செய்த அத்தனை நபர்களும் வனாந்தரத்தில் மடியும் மட்டும் 38 ஆண்டுகள் அவர்களை தேவன் வனாந்தரத்தில் அலைக்கழித்தார். மோசேயை தவிர கலகம் செய்த அனைவரும் வனாந்தரத்தில் மரித்த பிறகு மறுபடியுமாக அவர்கள் கானானுக்குள் புதிய தலைமுறை பிரவேசிக்க வேண்டும். அப்படி அவர்கள் பிரவேசிக்கும் பொழுது அவர்கள் ஏசாவின் சந்ததிக்கு சொந்தமான சேயீர் தேசத்தையும், லோத்தின் சந்ததிக்கு சொந்தமான ஆர் என்னும் பிரதேசத்தையும் கடந்து கானானுக்கு செல்ல வேண்டும் . அப்படி யூத ஜனங்கள் கடந்து போகும்போது அந்த லோத்தின் உறவினர்களையும் ஏசாவின் உறவினர்களையும் போருக்கு தூண்டவோ, அவர்களோடு யுத்தம் செய்யவோ கூடாது என்று தேவன் கட்டளையிட்டார். போரிட்டு அந்த இடங்களை யூதர்கள் கைப்பற்ற கூடாது என்பது மறைமுகமான அர்த்தம். அந்த இடங்களை தானே அவர்களுக்கும் கொடுத்ததாக தேவன் சொல்கிறார். அவர்களுக்குஅந்த 38 வருடங்கள் அவர்களை நடத்தின தான் அவர்களுக்கு போதுமானவர் என்று சொன்னார்.உபா 2:1-23 இதன் மூலம் நாம் கற்றுக்கொள்ளும் ஆவிக்குரிய பாடங்கள் என்ன? .1. தேவன்‌‌ ஒவ்வொருக்கென்று உலகின் நன்மைகளையும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் வைத்திருக்கிறார். நமக்கு வைத்திருக்கும் ஆசீர்வாதங்கள் மட்டும்தான் நாம் பெற்றுக் கொள்ள முடியும். பிறருடைய ஆசீர்வாதங்களயோ மற்ற சகோதரர்களுக்கு தேவன் முன்குறித்த ஆசீர்வாதங்களையோ நாம்‌இச்சிக்க கூடாது. அது ஒரு பேராசை அதுபோல தேவன் நமக்கு கொடுத்திருக்கும் ஆவிக்குரிய வரங்களில் திருப்தி அடைந்து அதை தேவ மகிமைக்காக பயன்படுத்த வேண்டும். தேவன் மற்ற சகோதரர்களுக்கு அளித்திருக்கும் பிற கவர்ச்சிக்குரிய வரங்களை நாம் பெறவில்லையே என்று ஆதங்கப்பட்டு அதை இச்சிக்க கூடாது. தேவ நமக்கு கொடுத்திருக்கும் இம்மைக்குரிய, ஆவிக்குரிய நன்மைகளில் வரங்களில் திருப்தி அடைய வேண்டும். அப்படி இருக்கும்போது மற்றவர்களின் மீது பொறாமைபடாமல் இருக்கவும் நாம் திருப்தி உள்ள வாழ்க்கை வாழவும் நம்மை வழிவகுக்கும். 2.மேலும் ஒவ்வொரு இனமும் எந்தெந்த இடங்களில் வாழ வேண்டும் என்று தேவன் தம்முடைய அனாதி தீர்மானத்தில் குறித்திருக்கிறார் அதை ஒருவராலும் மாற்றக்கூடாது. God is supreme over all nations and assigns their territories according to His sovereign will.W.W.Wiersbe (Acts 17:26–28; 2 Chron. 20:6).

நமது குடியிருப்பின் எல்லைகள்

உங்கள் சிந்தனைக்கு: நம்முடைய குடியிருப்பின் எல்லைகளை தேவன் முன் குறித்திருக்கிறார். நான் எங்கே இருக்க வேண்டும்? எது வரை இருக்கும் வேண்டும் என்பதை தேவன் மட்டுமே முடிவு செய்ய முடியும். கடவுள் ஆபிராமுக்கு என்று கானான் தேசத்தை வாக்குத்தத்தம் பண்ணியிருந்தார். அந்த தேசத்தை அடைய வேண்டிய இறுதி காலகட்டத்தில் அவர்கள் தேவனுக்கு விரோதமாக கலகம் செய்தபடியினால் கலகம் செய்த அத்தனை நபர்களும் வனாந்தரத்தில் மடியும் மட்டும் 38 ஆண்டுகள் அவர்களை தேவன் வனாந்தரத்தில் அலைக்கழித்தார். மோசேயை தவிர கலகம் செய்த அனைவரும் வனாந்தரத்தில் மரித்த பிறகு மறுபடியுமாக அவர்கள் கானானுக்குள் புதிய தலைமுறை பிரவேசிக்க வேண்டும். அப்படி அவர்கள் பிரவேசிக்கும் பொழுது அவர்கள் ஏசாவின் சந்ததிக்கு சொந்தமான சேயீர் தேசத்தையும், லோத்தின் சந்ததிக்கு சொந்தமான ஆர் என்னும் பிரதேசத்தையும் கடந்து கானானுக்கு செல்ல வேண்டும் . அப்படி யூத ஜனங்கள் கடந்து போகும்போது அந்த லோத்தின் உறவினர்களையும் ஏசாவின் உறவினர்களையும் போருக்கு தூண்டவோ, அவர்களோடு யுத்தம் செய்யவோ கூடாது என்று தேவன் கட்டளையிட்டார். போரிட்டு அந்த இடங்களை யூதர்கள் கைப்பற்ற கூடாது என்பது மறைமுகமான அர்த்தம். அந்த இடங்களை தானே அவர்களுக்கும் கொடுத்ததாக தேவன் சொல்கிறார். அவர்களுக்குஅந்த 38 வருடங்கள் அவர்களை நடத்தின தான் அவர்களுக்கு போதுமானவர் என்று சொன்னார்.உபா 2:1-23 இதன் மூலம் நாம் கற்றுக்கொள்ளும் ஆவிக்குரிய பாடங்கள் என்ன? .1. தேவன்‌‌ ஒவ்வொருக்கென்று உலகின் நன்மைகளையும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் வைத்திருக்கிறார். நமக்கு வைத்திருக்கும் ஆசீர்வாதங்கள் மட்டும்தான் நாம் பெற்றுக் கொள்ள முடியும். பிறருடைய ஆசீர்வாதங்களயோ மற்ற சகோதரர்களுக்கு தேவன் முன்குறித்த ஆசீர்வாதங்களையோ நாம்‌இச்சிக்க கூடாது. அது ஒரு பேராசை அதுபோல தேவன் நமக்கு கொடுத்திருக்கும் ஆவிக்குரிய வரங்களில் திருப்தி அடைந்து அதை தேவ மகிமைக்காக பயன்படுத்த வேண்டும். தேவன் மற்ற சகோதரர்களுக்கு அளித்திருக்கும் பிற கவர்ச்சிக்குரிய வரங்களை நாம் பெறவில்லையே என்று ஆதங்கப்பட்டு அதை இச்சிக்க கூடாது. தேவ நமக்கு கொடுத்திருக்கும் இம்மைக்குரிய, ஆவிக்குரிய நன்மைகளில் வரங்களில் திருப்தி அடைய வேண்டும். அப்படி இருக்கும்போது மற்றவர்களின் மீது பொறாமைபடாமல் இருக்கவும் நாம் திருப்தி உள்ள வாழ்க்கை வாழவும் நம்மை வழிவகுக்கும். 2.மேலும் ஒவ்வொரு இனமும் எந்தெந்த இடங்களில் வாழ வேண்டும் என்று தேவன் தம்முடைய அனாதி தீர்மானத்தில் குறித்திருக்கிறார் அதை ஒருவராலும் மாற்றக்கூடாது. God is supreme over all nations and assigns their territories according to His sovereign will.W.W.Wiersbe (Acts 17:26–28; 2 Chron. 20:6).

மிகப்பெரிய ஆசீர்வாதம்

உங்கள் சிந்தனைக்கு; இறைவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் திருச்சபைக்கும் கொடுத்திருக்கும் மிகப்பெரிய ஆசீர்வாதம் என்பது அவர் நமக்கு சமீபமாக இருக்கிறார் என்பதும் நாம் அவருக்கு சமீபமாக இருக்கிறோம் என்பதுதான். God is near to us and we are near to Him. இந்த மிகப்பெரிய ஆசீர்வாதத்தை பெற்றவர்கள் நம்மை போல் வேறு யாரும் இந்த உலகில்கிடையாது. ஆசிர்வாதத்தை இஸ்ரவேல் ஜனங்களுக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்பாகவே அளித்தார். உபா 2:4,7 வசனங்களை படித்து பார்த்தால் நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம் அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதுபோல, தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது? இந்நாளில் நான் உங்களுக்கு விதிக்கிற இந்த நியாப்பிரமாணம் முழுமைக்கும் ஒத்த இவ்வளவு நீதியுள்ள கட்டளைகளையும் நியாங்களையும் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதியும் எது? உபாகமம் 4:7,8 இந்த ஆசீர்வாதம் புதிய ஏற்பாட்டில் அவருடைய பிள்ளைகளாகிய நமக்கும் கிடைத்திருக்கிறது இரண்டு வகையில் நாம் அவரை நெருங்க முடியும் அவரும் நம்மை நெருங்கி வர முடியும். 1. நம்முடைய ஆராதனைகள் ஜெபங்கள் மூலமாக நாமும் அவரை நெருங்க முடியும் அவரும் நமக்கு சமீபமாக இருப்பார். 2. அதுபோல அவர் நமக்கு கொடுத்த தேவனுடைய சுவாசத்திலிருந்து வெளிப்பட்ட அழியாத அவருடைய வார்த்தைகள் மூலமும் அவற்றை தியானிப்பதன் மூலமும் அவைகளுக்கு‌ கீழ்ப்படிவதன் மூலமும்நாமும் அவரை நெருங்க முடியும் கடவுளும் நமக்கு சமீபமாக இருக்கிறார். இந்த ஆசீர்வாதத்தை அனுதினமும் பெற்றுக் கொள்கிற மனிதன்தான் உலகத்திலேயே மிகவும் ஆசிர்வதிக்கப்பட்ட மனிதன். இந்த உறவின் மூலமாக அவன் எந்த ஒரு காரியத்தையும், தேவனுக்கு சித்தமான யாவற்றையும் தேவனிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். இந்த ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்கிற மனிதன் ஆவிக்குரிய உலகத்தில் யாரையும், எந்த சூழ்நிலையிலும் சார்ந்து இருக்க மாட்டான். அவன் தனக்கு நெருக்கமாய் இருக்கிற தேவனை மட்டுமே சார்ந்து இருப்பான். இதுதான் இரட்சிப்பின் முதல் படிகள் இந்த ஆரம்பப் பாடத்தை சபைகள் போதிக்க வேண்டும். ஒவ்வொரு விசுவாசிக்கும் தேவன் அளிக்கும் உரிமைச் சொத்து.. நம்முடைய நிலங்கள் வீடுகள் பொருள்கள் உலக ஆசீர்வாதங்களை எவ்வளவு பத்திரமாக பாதுகாக்கிறோமோ அதை விட பன்மடங்கு ஆவிக்குரிய சொத்தை ஏசாவை போல் விலைக்கு விற்று விடாமல், கலாத்திய சபை விசுவாசிகள் போல கிருபையை சாராமல் பிரமாணங்களையும், மனித கற்பனைகளையும் பின்பற்றாமல் இருக்க தேவன் நமக்கு கிருபை தருவாராக.Draw near to God and He will draw near to you” (James 4:8). We don’t come fear fully to a stormy mountain but confidently to a glorious heavenly city where our names are written down as citizens of heaven (Heb. 12:18–24)

உருவத்தைக் காண முயற்சிக்க வேண்டாம்.

உங்கள் சிந்தனைக்கு: உருவத்தைக் காண முயற்சிக்க வேண்டாம். அந்த அக்கினியின் நடுவிலிருந்து கர்த்தர் உங்களோடே பேசினார், வார்த்தைகளின் சத்தத்தை நீங்கள் கேட்டீர்கள்,; அந்தச் சத்தத்தை நீங்கள் கேட்டதேயன்றி, ஒரு உருவத்தையும் காணவில்லை. உபாகமம் 4:12 தேவனுடைய சத்தத்தை கேட்க முயற்சி செய்யுங்கள். உருவத்தைக் காண முயற்சிக்கு வேண்டாம். சத்தத்தை கேட்டவர்கள் ஒருபோதும் மற்றவர்களை வஞ்சிக்க மாட்டார்கள். எதோ ஒரு உருவத்தை பார்த்தவர்கள் அனேகரை வஞ்சகத்தில் நடத்தி விட்டார்கள். தேவனுடைய சத்தம் நமக்கு பாதுகாப்பானது . தேவனுடைய உருவத்தை பார்க்க முடியாது. மோசே தேவனுடைய சத்தத்தை கேட்டார். பவுலும் கடவுளின் சத்தத்தை கேட்டார். தேவனின் சத்தத்தை கேட்கும் பொழுது நாம் தாழ்மையுள்ள மனிதர்களாக மாறி விடுகிறோம். உருவத்தை பார்க்கமுயற்சி செய்து பிறகு வேறு எதையாவது பார்த்து‌பெருமை அடைந்து விழுந்து போனார்கள். ஒளியின் வேடத்தை அணிந்த சாத்தானும் தோன்றுவான். அதை பகுத்துப் பார்ப்பது நமக்கு முடியாத காரியம். பரவசத்தை விட பாதுகாப்பு முக்கியம். நாம் வேதத்தை சார்ந்த மக்களாக இருக்க வேண்டும் என்பது தேவனின் கட்டளை. நாம் வேதத்தை தியானிக்கும் போது தேவன் நம்மோடு இடைபடுகிற, நம்மோடு பேசுகிற ,மெல்லிய சத்தத்தை கேட்காதவன்தான் உருவத்தைக் காண முயற்சிப்பான். நாம் தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடக்கிறோம். வார்த்தைகள் ‌மூலமாக தேவனுடைய சத்தத்தை கேட்பது மிகவும் ஒரு பாதுகாப்பான அனுபவம். அதைத்தான் ஆண்டவர் விரும்புகிறார். அதை விட்டு ஆர்ப்பாட்டம், பரவசம், கொண்டாட்டம் இவைகள் மூலம் தேவன் ஒரு நாளும் வெளிப்பட மாட்டார். தியானத்தின் மூலம் வெளிப்படும் ஆண்டவர் பக்தி விருத்திக்கு நேராக, பரிசுத்தத்திற்கு நேராக, ஆன்மிக விடுதலைக்கு நேராக ,உலகத்தில் நாம் இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதிகளாக வெளிப்பட நம்மை வழி நடத்துவார். இன்றைய வாலிபர்களை பரவசம் என்னும் மாயையில் இருந்து விடுதலை ஆக்க நாம் பெரும் முயற்சி எடுக்க வேண்டும். மிகுந்த பாரத்தோடு ஜெபிக்க வேண்டும் . இல்லை என்றால் அடுத்த தலைமுறையை நாம் கிறிஸ்துவுக்குள் உருவாக்க முடியாது. போலி பரவசத்தை நம்மால் முடிந்த அளவுக்கு எதிர்த்து நிற்போம். பொருள் சார்ந்த விவாதத்தை ஏறெடுப்போம். நமக்கு தனிப்பட்ட மனிதர்கள் விரோதி அல்ல. போலிகள் அல்ல போலிகளை உற்பத்தி பண்ணுகிறவனே நமக்கு விரோதி. வசன வெளிச்சத்தை காட்டுவோம் . இருளை அகற்றுவோம். போலிகளை அடையாளம் காட்ட நம்மால் முடிந்தது எல்லாம் செய்வோம். போலிகள் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் அவர்களை அடையாளம் காட்ட தயங்க கூடாது.

The fear of the Lord.

உங்கள் சிந்தனைக்கு: The fear of the Lord. கடவுளுக்கு பயப்படுகிற பயம் என்பது, அவர் என்னவாக இருக்கிறார் ?யாராக இருக்கிறார்?அவர் நமக்கு செய்த செயல்கள் என்ன? அவர் உரைத்த வார்த்தைகள் என்ன? என்கிற புரிதலின் அடிப்படையில் இருக்க வேண்டும். அவர் நம்மை படைத்தவர். நாம் உருவாக்கப்பட்டவர்கள் . அவர் நம்முடைய முதலாளி .நாம் அவருடைய வேலைக்காரன். அவர் நமது தகப்பன் . நாம் அவருடைய பிள்ளைகள். நாம் ஒருபோதும் படைப்பாளியாக மாற முடியாது .ஒருபோதும் அவருக்கு எஜமானனாக மாற முடியாது. அவருக்கு கட்டளையிட முடியாது. நாம் கடைசி மட்டும் அவருடைய பிள்ளைகளாகத்தான் இருக்க முடியும். அவருடைய வார்த்தையை கேட்பதற்குதான் அவர் நம்மை உருவாக்கினர். அவர்தான் நம்முடைய ஆலோசனை கர்த்தர். நாம் அவருக்கு ஆலோசனை சொல்ல முடியாது. அவரே நம்முடைய நீதி. நமது நீதியான செயல்கள் அனைத்தும் மாதவிடாய் துணியை போன்றது. இப்படிப்பட்ட சிந்தனை நம்மிடத்தில் இருக்கும்போது அவருக்கு பயப்படுகிற பயம் உண்மையாகவே நமக்கு ஆசீர்வாதத்தை கொடுக்கக்கூடிய காரியமாக இருக்கும். To fear the Lord means to respect who He is, what He is, and what He says, and by our submission and obedience show Him that we love Him.W.W.WIERSBE. கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள், அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை. சங்கீதம் 34:9

கடவுளின் இறையாண்மையும் நமது பொறுப்பும் .

உங்கள் சிந்தனைக்கு: கடவுளின் இறையாண்மையும் நமது பொறுப்பும் . இவைகள் இரண்டும் நம்முடைய ஆவிக்குரிய பாதுகாப்பின் இரண்டு அம்சங்களாகும். கடவுள் இறையாண்மை உடையவர், அதே வேளையில் மனிதன் பொறுப்புள்ள உயிரினம். இந்த இரண்டிற்கும் இடையில் சத்தியத்தின் சமநிலை பாதுகாக்கப்படுவதால் மட்டுமே நாம் உபதேச பிழையிலிருந்து விடுவிக்கப்பட முடியும். ஒரு முறை இரட்சிக்கப்பட்டால் நித்திய பாதுகாப்பு( once saved always saved ) என்பது வேதத்தின் படியான கருத்து அல்ல. இது ஒரு போலியான பாதுகாப்பை விசுவாசிக்கு கொடுத்துவிடும். It gives a false security to the believers. விசுவாசி இரட்சிப்பு நிறைவேற பிரயாசப்பட வேண்டும். கிரியை செய்ய வேண்டும். இதற்கு வேதத்தில் பல உதாரணங்கள் உண்டு. தேவனுடைய இறையாண்மையும் மனிதனுடைய பொறுப்பும் இணைந்து செயல்பட்டால்தான் நம்முடைய இரட்சிப்பு பூரணம் அடையமுடியும். . இது இயேசு கிறிஸ்துவின் வார்த்தை. “முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்” மத்தேயு. 24:13 முதல் யூதரல்லாத சபைக்கு பர்னபா கொடுத்த ஆலோசனை என்னவென்றால் . சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில் மனநிர்ணயமாய் நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும் புத்திசொன்னான். அப்போ. 11:23 ‘நிலைத்திருக்கும்படி .புத்தி சொன்னான்’ என்கிற வார்த்தையை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பல சபைகளிலிருந்து இரட்சிக்கப்பட்ட விசுவாசிகளுக்கு பவுல் கூறிய ஆலோசனை, “ நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்.” இது பிலிப்பி பட்டணத்து சபைக்கு பவுலின் ஆலோசனை ‘'ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்". பிலி2:12 எனவே இரட்சிப்பில் தேவனுடைய பகுதி மட்டுமல்ல, நம்முடைய பங்களிப்பும் இரட்சிப்பு நிறைவேறுவதில் முக்கிய பங்கு வகிக்கும். நம்முடைய முயற்சிக்கு வேண்டிய கிருபைகளை தேவன் அளிப்பார். எனவே நம்முடைய பங்களிப்பும், செயல்பாடும், தீர்மானங்களும், விருப்பங்களும் இல்லாமல் நம்முடைய இரட்சிப்பு நிறைவேற முடியாது. அது ஒரு தேக்க நிலையில் கொண்டு வந்துவிடும். ஒரு தவறான பாதுகாப்பு நமக்கு அளித்து இறுதியில் நம்மை ஏமாற்றி விடும். எனவே நம்முடைய பகுதியை நாம் செய்ய வேண்டும். தேவனுடைய பகுதியை அவர் செய்வார். இறுதியாக எபிரேயருக்கு நிருபத்தை எழுதியவரின் வார்த்தைகளை பார்க்கலாம் '‘நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப்பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்’'. எபி 3;14 God's Sovereignty and human responsibility are the two sides of Christian security. God is sovereign, and the man is responsible creature: and it is only as the balance of truth is preserved between these two that we are delivered from error ARTHUR W.PINK

எபி 11:13 ன் உண்மையான அர்த்தம் என்ன?

உங்கள் சிந்தனைக்கு: எபி 11:13 ன் உண்மையான அர்த்தம் என்ன? தேவன் ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் பண்ணி ஆணையிட்டுக் கொடுத்த ஆசீர்வாதம் என்றால் என்ன? "இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள்'” தேவன் ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் பண்ணி ஆணையிட்டுக் கொடுத்த ஆசீர்வாதம் என்றால் என்ன? இதை புரிந்து கொள்ள ஆதி. 22:16-18 மற்றும் கலா. 3:16 ஆகிய இந்த இரண்டு வார்த்தைகளையும் இணைத்து நீங்கள் பார்க்க வேண்டும். இதில் சொல்லப்பட்ட மூன்று பதங்களை கவனிக்கவேண்டும். 1.உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன். 2. உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும். 3.என்பேரில் ஆணையிட்டேன். உன் சந்ததி என்று சொல்லப்படுவது இயேசுவினுடைய சந்ததியை குறிப்பதாகும். இதுகுறித்து பவுல் கலாத்தியருக்கு எழுதிய நிருபத்தில்(3:16) தெளிவாக விளக்குகிறார். "ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள் பண்ணப்பட்டன. சந்ததிகளுக்கு என்று அநேகரைக் குறித்துச் சொல்லாமல், உன் சந்ததிக்கு என்று ஒருவனைக்குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்தச் சந்ததி கிறிஸ்துவே." கலாத்தியர் 3:16 இது கிறிஸ்துவின் மூலமாக பிறக்கும் ஒரு புதிய ஆவிக்குரிய சந்ததி. ஆபிரகாமின் சந்ததியில் திரித்துவத்தின் இரண்டாவது நபரான தேவகுமாரன் மனிதனாக பிறந்தார். இதற்கு பிறகுதான் ஆதி 17:8 ல் சொல்லப்பட்ட" நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்தரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன் என்கிற வாக்குத்தத்தத்தை பார்க்கவேண்டும். இந்த கானான்தேசத்தை ஆபிரகாம். ஈசாக்கு ,யாக்கோபு , மற்றும் அவனுடய பிள்ளைகள் யாரும் அவர்கள் இருக்கும் வரை சொந்தமாக கொள்ளவில்லை. சுமார் 500 ஆண்டுகள் கழித்துதான் ஆபிரகாமுக்கு பின்வந்த சந்ததி கானான் தேசத்தை சொந்தமாக்கி கொண்டார்கள். எபி 11:13 என்பது எதை குறிப்பது என்றால் அவர்களுடைய சந்ததி பெறப் போகிற கானான் தேசத்தை பற்றியது அல்ல. தன்னுடைய வம்சத்தில் தேவன் தன்னுடைய குமாரனை உலகத்திற்கு அனுப்பி அவர் சந்ததியில் பிறப்பார். அதன் மூலம் உலகத்திற்கு மிகப்பெரிய இரட்சிப்பு வரும் என்பதைதான் அவர்கள் தூரத்திலிருந்தே கண்டு அணைத்து அதை நம்பி விசுவாசத்தில் மரித்தார்கள் . இது முழுக்க முழுக்க ஆவிக்குரிய ஆசீர்வாதத்தை குறிக்கிறது. இதைத்தான் இயேசுகிறிஸ்து யூதர்களுக்கு "உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார். மோசேயும் இந்த ஆசிர்வாதத்தை தான் (இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து,) எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான். உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களை எதிர் நோக்கி அவைகளை தூரத்திலே கண்டு அணைத்து அவர்கள் விசுவாசத்தில் மரிக்கவில்லை . நம் தேவன் ஆபிரகாமுக்கு கொடுத்த ஆவிக்குரிய ஆசிர்வாதத்தை உலக ஆசிர்வாதத்தோடு இணைத்து கொச்சை படுத்தக்கூடாது. Ref – 1.THE DAILY STUDY BIBLE. THE LETTER TO THE HEBREWS” BY W.BARCLAY 2 AN EXPOSITION OF HEBREWS A.W.PINK 3.AN EXPOSITION OF THE EPISTLE TO THE HEBREWS-JOHN BROWN

புற‌இனத்து குழந்தைகளை கொலை செய்ய தேவன் ஏன் அனுமதித்தார்?

உங்கள் சிந்தனைக்கு: யூதர்கள் தங்கள் படையெடுப்பில் ஏன் புற இனத்து குழந்தைகளை கொலை செய்தார்கள்? புற‌இனத்து குழந்தைகளை கொலை செய்ய தேவன் ஏன் அனுமதித்தார்? "அவைகளையும் சங்காரம்பண்ணினோம், நாம் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனுக்குச் செய்ததுபோல, அந்த எல்லாப் பட்டணங்களிலுமுள்ள புருஷரையும் ஸ்திரீகளையும் பிள்ளைகளையும் சங்காரம்பண்ணினோம்." உபாகமம் 3:6 "அக்காலத்தில் அவன் பட்டணங்களையெல்லாம் பிடித்து, சகல பட்டணங்களிலும் இருந்த ஸ்திரீ புருஷரையும், பிள்ளைகளையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் சங்காரம்பண்ணினோம்." உபாகமம் 2:34 ஆண்டவர் ஏன் ஒன்றும் அறியாத பிள்ளைகளை சங்காரம் செய்ய அனுமதிக்க வேண்டும்.? கடவுள் இரக்கம் இல்லாதவரா?, கருணை இல்லாதவரா? இப்படி கேள்விகளை உலக மக்கள் எழுப்பலாம். இதற்கு வேத பண்டிதர்கள் சொல்லுகின்ற காரணம் என்னவென்றால் சங்காரம் செய்யப்பட்ட, கொலை செய்யப்பட்ட அந்த மக்கள் மிகவும் கொடுமையான பாவத்தில் உள்ள மக்கள் . தங்கள் பிள்ளைகளை தங்கள் தெய்வங்களுக்கு பலிகளை செலுத்துவது வழக்கமாகக் கொண்டவர்கள். அந்த தேசத்தில் ஆண் விபச்சாரிகளும் பெண் விபச்சாரிகளும் ஆலயத்தில் சேவை செய்வார்கள். விபச்சார பாவம் உச்ச கட்டத்தில் காணப்பட்டது. கொடூர மனம் படைத்தவர்கள்தான் இந்த மக்கள். இப்படிப்பட்ட மனநிலையைக் கொண்டவர்கள்தான் கானான் தேசத்தில் உள்ள மக்கள். அது மாத்திரம் அல்ல பாவத்தின் உச்சக்கட்டத்தில் இருந்த சோதோம் கொமோரா மக்களுக்கு நேர்ந்த காரியங்களை எல்லாம் அவர்கள் அறிந்திருந்தார்கள். எகிப்து தேசத்ததிற்கு தேவன் அளித்த‌‌ தண்டனையையும் அறிந்திருப்பார்கள். அதேபோல கானான் தேசத்தில் தேவனுக்கு பயந்து வாழ்ந்த ஆபிரகாம் யாக்கோபு போன்ற வாழ்க்கையையும் மறந்திருக்க மாட்டார்கள்.எனவே அவர்கள் போக்கு சொல்ல இடமில்லை ரோம1:18. அது மட்டுமல்ல அந்த கொடூர மனம் படைத்த அந்த மக்களை கானான் தேசத்திலிருந்து விரட்டா விட்டால் தேவன் தெரிந்து கொண்ட யூத ஜனங்கள் அங்கே குடியிருக்க முடியாது. அந்த சந்ததி அங்கே தொடர்ந்து இருந்திருந்தால் யூத மக்கள் அவர்களோடு கலந்து யூதருடையபரிசுத்த சந்ததி கறைபட்டு போயிருக்கும் . உலகத்தின் இரட்சகர்தோன்றுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போய் இருக்கும். ஆனால் இப்பொழுது நாம் கிருபையின் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு காலகட்டத்திலும் தேவன் இந்த உலகத்தை நியாயம் தீர்க்க வெவ்வேறு அளவீடுகளை வைத்திருந்தார். இதன் அடிப்படையிலே ‌ இந்த நிகழ்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். The knowledge of dispensational theology is a must to understand God's administration. இதைப் பற்றி W.W.Wiersbe அவர்களின் விளக்கத்தை ஆங்கிலத்தில் பகிர்ந்து கொள்கிறேன் விருப்பமுள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளலாம். The nations Israel encountered east of the Jordan and in Canaan itself was indescribably wicked. They were brutal people who sacrificed their own children to the false gods that they worshipped. Male and female prostitutes served in their temples and sexual intercourse was an important part of the Canaanite religion. These people were not left without a witness from God in creation (Rom. 1:18ff.) as well as through the lives of Abraham, Isaac, and Jacob who had lived in Canaan. Furthermore, the news of the destruction of Sodom and Gomorrah, the plagues of Egypt, andIsrael’s deliverance through the Red Sea (Josh. 2:8–11) came to the ears of these people and bore witness that Jehovah alone is the true God. God had been long - suffering with these wicked nations even in Abraham’s day, but now their time had run out and their judgment had come (Gen. 15:16). If these evil civilizations had not been exterminated, Israel would have been in constant danger of being tempted by pagan idolatry. In fact, that’s what did happen during the period of the judges, and God had to chasten His people to bring them back to the true God. Israel had important work to do on earth in producing the written Scriptures and bringing the Savior into the world, and imitating the pagan nations would have polluted Israel and threatened God’s great plan of salvation for mankind.

உருவத்தைக் காண முயற்சிக்க வேண்டாம்

உங்கள் சிந்தனைக்கு: உருவத்தைக் காண முயற்சிக்க வேண்டாம். அந்த அக்கினியின் நடுவிலிருந்து கர்த்தர் உங்களோடே பேசினார், வார்த்தைகளின் சத்தத்தை நீங்கள் கேட்டீர்கள்,; அந்தச் சத்தத்தை நீங்கள் கேட்டதேயன்றி, ஒரு உருவத்தையும் காணவில்லை. உபாகமம் 4:12 தேவனுடைய சத்தத்தை கேட்க முயற்சி செய்யுங்கள். உருவத்தைக் காண முயற்சிக்கு வேண்டாம். சத்தத்தை கேட்டவர்கள் ஒருபோதும் மற்றவர்களை வஞ்சிக்க மாட்டார்கள். எதோ ஒரு உருவத்தை பார்த்தவர்கள் அனேகரை வஞ்சகத்தில் நடத்தி விட்டார்கள். தேவனுடைய சத்தம் நமக்கு பாதுகாப்பானது . தேவனுடைய உருவத்தை பார்க்க முடியாது. மோசே தேவனுடைய சத்தத்தை கேட்டார். பவுலும் கடவுளின் சத்தத்தை கேட்டார். தேவனின் சத்தத்தை கேட்கும் பொழுது நாம் தாழ்மையுள்ள மனிதர்களாக மாறி விடுகிறோம். உருவத்தை பார்க்கமுயற்சி செய்து பிறகு வேறு எதையாவது பார்த்து‌பெருமை அடைந்து விழுந்து போனார்கள். ஒளியின் வேடத்தை அணிந்த சாத்தானும் தோன்றுவான். அதை பகுத்துப் பார்ப்பது நமக்கு முடியாத காரியம். பரவசத்தை விட பாதுகாப்பு முக்கியம். நாம் வேதத்தை சார்ந்த மக்களாக இருக்க வேண்டும் என்பது தேவனின் கட்டளை. நாம் வேதத்தை தியானிக்கும் போது தேவன் நம்மோடு இடைபடுகிற, நம்மோடு பேசுகிற ,மெல்லிய சத்தத்தை கேட்காதவன்தான் உருவத்தைக் காண முயற்சிப்பான். நாம் தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடக்கிறோம். வார்த்தைகள் ‌மூலமாக தேவனுடைய சத்தத்தை கேட்பது மிகவும் ஒரு பாதுகாப்பான அனுபவம். அதைத்தான் ஆண்டவர் விரும்புகிறார். அதை விட்டு ஆர்ப்பாட்டம், பரவசம், கொண்டாட்டம் இவைகள் மூலம் தேவன் ஒரு நாளும் வெளிப்பட மாட்டார். தியானத்தின் மூலம் வெளிப்படும் ஆண்டவர் பக்தி விருத்திக்கு நேராக, பரிசுத்தத்திற்கு நேராக, ஆன்மிக விடுதலைக்கு நேராக ,உலகத்தில் நாம் இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதிகளாக வெளிப்பட நம்மை வழி நடத்துவார். இன்றைய வாலிபர்களை பரவசம் என்னும் மாயையில் இருந்து விடுதலை ஆக்க நாம் பெரும் முயற்சி எடுக்க வேண்டும். மிகுந்த பாரத்தோடு ஜெபிக்க வேண்டும் . இல்லை என்றால் அடுத்த தலைமுறையை நாம் கிறிஸ்துவுக்குள் உருவாக்க முடியாது. போலி பரவசத்தை நம்மால் முடிந்த அளவுக்கு எதிர்த்து நிற்போம். பொருள் சார்ந்த விவாதத்தை ஏறெடுப்போம். நமக்கு தனிப்பட்ட மனிதர்கள் விரோதி அல்ல. போலிகள் அல்ல போலிகளை உற்பத்தி பண்ணுகிறவனே நமக்கு விரோதி. வசன வெளிச்சத்தை காட்டுவோம் . இருளை அகற்றுவோம். போலிகளை அடையாளம் காட்ட நம்மால் முடிந்தது எல்லாம் செய்வோம். போலிகள் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் அவர்களை அடையாளம் காட்ட தயங்க கூடாது.

நம்முடைய குடியிருப்பின் எல்லைகளை தேவன் முன் குறித்திருக்கிறார்.

உங்கள் சிந்தனைக்கு: நம்முடைய குடியிருப்பின் எல்லைகளை தேவன் முன் குறித்திருக்கிறார். நான் எங்கே இருக்க வேண்டும்? எது வரை இருக்கும் வேண்டும் என்பதை தேவன் மட்டுமே முடிவு செய்ய முடியும். கடவுள் ஆபிராமுக்கு என்று கானான் தேசத்தை வாக்குத்தத்தம் பண்ணியிருந்தார். அந்த தேசத்தை அடைய வேண்டிய இறுதி காலகட்டத்தில் அவர்கள் தேவனுக்கு விரோதமாக கலகம் செய்தபடியினால் கலகம் செய்த அத்தனை நபர்களும் வனாந்தரத்தில் மடியும் மட்டும் 38 ஆண்டுகள் அவர்களை தேவன் வனாந்தரத்தில் அலைக்கழித்தார். மோசேயை தவிர கலகம் செய்த அனைவரும் வனாந்தரத்தில் மரித்த பிறகு மறுபடியுமாக அவர்கள் கானானுக்குள் புதிய தலைமுறை பிரவேசிக்க வேண்டும். அப்படி அவர்கள் பிரவேசிக்கும் பொழுது அவர்கள் ஏசாவின் சந்ததிக்கு சொந்தமான சேயீர் தேசத்தையும், லோத்தின் சந்ததிக்கு சொந்தமான ஆர் என்னும் பிரதேசத்தையும் கடந்து கானானுக்கு செல்ல வேண்டும் . அப்படி யூத ஜனங்கள் கடந்து போகும்போது அந்த லோத்தின் உறவினர்களையும் ஏசாவின் உறவினர்களையும் போருக்கு தூண்டவோ, அவர்களோடு யுத்தம் செய்யவோ கூடாது என்று தேவன் கட்டளையிட்டார். போரிட்டு அந்த இடங்களை யூதர்கள் கைப்பற்ற கூடாது என்பது மறைமுகமான அர்த்தம். அந்த இடங்களை தானே அவர்களுக்கும் கொடுத்ததாக தேவன் சொல்கிறார். அவர்களுக்குஅந்த 38 வருடங்கள் அவர்களை நடத்தின தான் அவர்களுக்கு போதுமானவர் என்று சொன்னார்.உபா 2:1-23 இதன் மூலம் நாம் கற்றுக்கொள்ளும் ஆவிக்குரிய பாடங்கள் என்ன? .1. தேவன்‌‌ ஒவ்வொருக்கென்று உலகின் நன்மைகளையும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் வைத்திருக்கிறார். நமக்கு வைத்திருக்கும் ஆசீர்வாதங்கள் மட்டும்தான் நாம் பெற்றுக் கொள்ள முடியும். பிறருடைய ஆசீர்வாதங்களயோ மற்ற சகோதரர்களுக்கு தேவன் முன்குறித்த ஆசீர்வாதங்களையோ நாம்‌இச்சிக்க கூடாது. அது ஒரு பேராசை அதுபோல தேவன் நமக்கு கொடுத்திருக்கும் ஆவிக்குரிய வரங்களில் திருப்தி அடைந்து அதை தேவ மகிமைக்காக பயன்படுத்த வேண்டும். தேவன் மற்ற சகோதரர்களுக்கு அளித்திருக்கும் பிற கவர்ச்சிக்குரிய வரங்களை நாம் பெறவில்லையே என்று ஆதங்கப்பட்டு அதை இச்சிக்க கூடாது. தேவ நமக்கு கொடுத்திருக்கும் இம்மைக்குரிய, ஆவிக்குரிய நன்மைகளில் வரங்களில் திருப்தி அடைய வேண்டும். அப்படி இருக்கும்போது மற்றவர்களின் மீது பொறாமைபடாமல் இருக்கவும் நாம் திருப்தி உள்ள வாழ்க்கை வாழவும் நம்மை வழிவகுக்கும். 2.மேலும் ஒவ்வொரு இனமும் எந்தெந்த இடங்களில் வாழ வேண்டும் என்று தேவன் தம்முடைய அனாதி தீர்மானத்தில் குறித்திருக்கிறார் அதை ஒருவராலும் மாற்றக்கூடாது. God is supreme over all nations and assigns their territories according to His sovereign will.W.W.Wiersbe (Acts 17:26–28; 2 Chron. 20:6).

Delayed obedience amounts to no obedience.

உங்கள் சிந்தனைக்கு: Delayed obedience amounts to no obedience. கடவுள் இஸ்ரவேல் ஜனங்களை 400 ஆண்டுகால எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கி அவர்களை ஆபிரகாமுக்கு‌‌ கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் படியாக அவர்களை வனாந்தரத்தில் நடத்தினார் . சீனாய் மலையில் அவர்களுக்கு கட்டளைகளையும் பிரமாணங்களையும் கொடுத்து ஆசரிப்பு கூடாரத்தை உருவாக்கி லேவியர்களையும், குருமார்களையும்‌ நியமித்து‌ அங்கே தமது மகிமையை வெளிப்படுத்தினார். அங்கே இஸ்ரவேல் ஜனங்கள் ஒரு வருட காலம் தங்கி இருந்தார்கள். ஆனாலும் அங்கே அதிகம் காலம் அவர்களை இருக்க வைக்காமல் கானானுக்கு வழிநடத்தினார். அந்த காலகட்டங்களில்தான் அவர்கள் பல முறை தேவனுக்கு விரோதமாக கலகம் செய்தார்கள். தேவன் அளித்த மன்னாவின் மீது திருப்தியற்று‌ தங்களுக்கு விருப்பமான உணவை கேட்டார்கள். கானானுக்கு முந்திய இடமான காதேஸ் பர்னேயா வந்தடைந்த போது. தேவன் வாக்களித்த இடத்தை விசுவாசத்தோடு கடந்து வெற்றி பெறுவோம் என்று நம்பாமல் அங்கு சென்று வேவு பார்க்க விரும்பினார்கள். வேவுபார்த்து திரும்பின வர்களில் 10 பேர் அந்த இடத்தை நம்மால் அடைய முடியாது என்று புலம்பினார்கள். மடிந்து போய் விடுவோம் என்றுபெரும் கலகம் பண்ணினார்கள்.. "நாங்கள் போகமாட்டோம்" என்று தேவனாகிய கர்த்தருடைய கட்டளைக்கு விரோதமாக எதிர்த்து, தங்களது கூடாரங்களில் முறுமுறுத்தார்கள்: கர்த்தர் நம்மை வெறுத்து, நம்மை அழிக்கும்பொருட்டாக நம்மை எமோரியரின் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, நம்மை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினார். என்று புலம்பினார்கள் உபாகமம் 1:26,28 அதனால் கர்த்தர் கோபங்கொண்டு அவர்கள் கானானுக்குள் பிரவேசிப்பதில்லை என்றும் கொள்ளையாவார்கள் என்று அவர்கள் சொன்ன அவர்கள் குழந்தைகளும், அந்நாளிலே நன்மை தீமை அறியாத அவர்கள் பிள்ளைகளும் அதில் பிரவேசிப்பார்கள் என்று தேவன் கட்டளையிட்டார் உபாகமம் 1:39. ஆனால் பின்னால் தங்கள் தவறை உணர்ந்து "கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம், நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் நாங்கள் போய் யுத்தம்பண்ணுவோம் என்று சொல்லி' யாவரும் ஆயுதங்களைத் தரித்துக்கொண்டு, மலையின்மேல் ஏறினார்கள் உபாகமம் 1:41. அந்த செயலை தேவன் அங்கீகரிக்கவில்லை. அவர்களுடைய மனித முயற்சியை ஏற்கவில்லை. தேவன் மீது விசுவாசம் வைக்காமல் தேவனுக்கு விரோதமாக கலகம் செய்த பிறகு அவர்களின் இந்த செயல் தேவனை பிரியப்படுத்தவில்லை. இது ஒரு காலம் கடந்த கீழ்ப்படிதல். எனவேஅந்த மலையிலே குடியிருந்த எமோரியர் யூதர்களை தேனீக்கள் துரத்துகிறதுபோல உங்களைத் துரத்தி,‌முறிய அடித்தார்கள். உபாகமம் 1:44 இதன் மூலம் தேவன் நமக்கு உணர்த்தும் பாடம்‌ 1.காலம் தாழ்த்தின கீழ்படிதல் தேவனை பிரியப்படுத்தாது. அவர்கள் வீணாக 38 வருடங்கள் வனாந்தரத்தில் அலைந்து திரிந்து மடிந்ததைத் தவிர வேறு ஒன்றையும் பெற்றுக்கொள்ள முடியாமல் போய்விட்டார்கள். 2.தேவனுடைய துணை இல்லாமல், தேவன் மீது விசுவாசம் வைக்காமல் அவரை சார்ந்திராமல் நாம் நம்முடைய சுய முயற்சியால் செய்ய நினைக்கும் எந்த காரியமும் தோல்வியில் முடிவது மட்டுமல்ல நமக்கு மிகப்பெரிய இழப்பையும் ஏற்படுத்தும். Surely we must know that the "will of God would not lead us where the grace and power of God could not keep us ". Wiersbe

Delayed obedience amounts to no obedience.

உங்கள் சிந்தனைக்கு: Delayed obedience amounts to no obedience. கடவுள் இஸ்ரவேல் ஜனங்களை 400 ஆண்டுகால எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கி அவர்களை ஆபிரகாமுக்கு‌‌ கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் படியாக அவர்களை வனாந்தரத்தில் நடத்தினார் . சீனாய் மலையில் அவர்களுக்கு கட்டளைகளையும் பிரமாணங்களையும் கொடுத்து ஆசரிப்பு கூடாரத்தை உருவாக்கி லேவியர்களையும், குருமார்களையும்‌ நியமித்து‌ அங்கே தமது மகிமையை வெளிப்படுத்தினார். அங்கே இஸ்ரவேல் ஜனங்கள் ஒரு வருட காலம் தங்கி இருந்தார்கள். ஆனாலும் அங்கே அதிகம் காலம் அவர்களை இருக்க வைக்காமல் கானானுக்கு வழிநடத்தினார். அந்த காலகட்டங்களில்தான் அவர்கள் பல முறை தேவனுக்கு விரோதமாக கலகம் செய்தார்கள். தேவன் அளித்த மன்னாவின் மீது திருப்தியற்று‌ தங்களுக்கு விருப்பமான உணவை கேட்டார்கள். கானானுக்கு முந்திய இடமான காதேஸ் பர்னேயா வந்தடைந்த போது. தேவன் வாக்களித்த இடத்தை விசுவாசத்தோடு கடந்து வெற்றி பெறுவோம் என்று நம்பாமல் அங்கு சென்று வேவு பார்க்க விரும்பினார்கள். வேவுபார்த்து திரும்பின வர்களில் 10 பேர் அந்த இடத்தை நம்மால் அடைய முடியாது என்று புலம்பினார்கள். மடிந்து போய் விடுவோம் என்றுபெரும் கலகம் பண்ணினார்கள்.. "நாங்கள் போகமாட்டோம்" என்று தேவனாகிய கர்த்தருடைய கட்டளைக்கு விரோதமாக எதிர்த்து, தங்களது கூடாரங்களில் முறுமுறுத்தார்கள்: கர்த்தர் நம்மை வெறுத்து, நம்மை அழிக்கும்பொருட்டாக நம்மை எமோரியரின் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, நம்மை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினார். என்று புலம்பினார்கள் உபாகமம் 1:26,28 அதனால் கர்த்தர் கோபங்கொண்டு அவர்கள் கானானுக்குள் பிரவேசிப்பதில்லை என்றும் கொள்ளையாவார்கள் என்று அவர்கள் சொன்ன அவர்கள் குழந்தைகளும், அந்நாளிலே நன்மை தீமை அறியாத அவர்கள் பிள்ளைகளும் அதில் பிரவேசிப்பார்கள் என்று தேவன் கட்டளையிட்டார் உபாகமம் 1:39. ஆனால் பின்னால் தங்கள் தவறை உணர்ந்து "கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம், நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் நாங்கள் போய் யுத்தம்பண்ணுவோம் என்று சொல்லி' யாவரும் ஆயுதங்களைத் தரித்துக்கொண்டு, மலையின்மேல் ஏறினார்கள் உபாகமம் 1:41. அந்த செயலை தேவன் அங்கீகரிக்கவில்லை. அவர்களுடைய மனித முயற்சியை ஏற்கவில்லை. தேவன் மீது விசுவாசம் வைக்காமல் தேவனுக்கு விரோதமாக கலகம் செய்த பிறகு அவர்களின் இந்த செயல் தேவனை பிரியப்படுத்தவில்லை. இது ஒரு காலம் கடந்த கீழ்ப்படிதல். எனவேஅந்த மலையிலே குடியிருந்த எமோரியர் யூதர்களை தேனீக்கள் துரத்துகிறதுபோல உங்களைத் துரத்தி,‌முறிய அடித்தார்கள். உபாகமம் 1:44 இதன் மூலம் தேவன் நமக்கு உணர்த்தும் பாடம்‌ 1.காலம் தாழ்த்தின கீழ்படிதல் தேவனை பிரியப்படுத்தாது. அவர்கள் வீணாக 38 வருடங்கள் வனாந்தரத்தில் அலைந்து திரிந்து மடிந்ததைத் தவிர வேறு ஒன்றையும் பெற்றுக்கொள்ள முடியாமல் போய்விட்டார்கள். 2.தேவனுடைய துணை இல்லாமல், தேவன் மீது விசுவாசம் வைக்காமல் அவரை சார்ந்திராமல் நாம் நம்முடைய சுய முயற்சியால் செய்ய நினைக்கும் எந்த காரியமும் தோல்வியில் முடிவது மட்டுமல்ல நமக்கு மிகப்பெரிய இழப்பையும் ஏற்படுத்தும். Surely we must know that the "will of God would not lead us where the grace and power of God could not keep us ". Wiersbe

Theologians

உங்கள் சிந்தனைக்கு: All the theologians will not be spiritual.All the spiritual Christians need not be a theologian. இறையியல் படித்தவர்கள் எல்லோரும் ஆவிக்குரிய மனிதர்கள் அல்ல. ஆவிக்குரிய மனிதர்கள் எல்லோரும் இறையியல் படித்தவர்களாக இருக்கவேண்டிய அவசியமும் இல்லை. இதைப்பற்றிய விழிப்புணர்வு சபைக்கு மிக அவசியம்.

அடைக்கலப்பட்டணம் நமக்கும் யூதர்களுக்கும் சொல்லும் செய்தி என்ன.?

உங்கள் சிந்தனைக்கு: அடைக்கலப்பட்டணம் நமக்கும் யூதர்களுக்கும் சொல்லும் செய்தி என்ன.? பழைய ஏற்பாட்டில் லேவியர்களுக்கென்று தனியாக உரிமை சொத்து ஒதுக்கப்படவில்லை. ஆனால் அவர்கள் இஸ்ரவேல் தேசம் எங்கும் பரவி இருப்பதற்காக அவர்களுக்கு 48 நகரங்கள் கொடுக்கப்பட்டது. அந்த 48 நகரங்களில் அவர்கள் வாழ முடியும். அதில் ஆறு நகரங்கள் அடைக்கலபட்டினமாக ஒதுக்கப்பட்டது. இந்த அடைக்கலம் பட்டினம் எதற்க்கு என்றால் யூதர்களில் யாராவது ஒருவன் தற்செயலாக, காரணம் ஏதும் இல்லாமல் ஒருவனை கொலை செய்தால் அவன் இந்த பட்டினத்திற்குள் ஒளிந்து கொள்ளலாம். . பின்பு நியாயவிசாரணை நடக்கும் பொழுது அவன் குற்றம் அற்றவனாக கண்டுபிடிக்கப்பட்டால் அவன் அந்த பட்டணத்தில் பிரதான ஆசாரியன் அல்லது மதகுரு மரிக்கும் வரை அங்கே தங்கி இருக்கலாம் . பிரதான குரு மரித்த பிறகு அவன் அந்த பட்டணத்தை விட்டு வெளிவந்து சுதந்திரமாக வாழலாம். அவன் சிந்திய இரத்தத்திற்கு நியாம் கேட்க பாதிக்கப்பட்ட உறவினர்கள் உரிமை கோர முடியாது. காரணத்தோடு ஒருவன் கொலை செய்யப்பட்டால் கொலை செய்யப்பட்டவனுடைய ரத்தத்திற்கு பதிலாக கொலை செய்தவன் ரத்தம் சிந்தப்படவேண்டும். இன்று இவைகள் நமக்கு உணர்த்தும் பாடம் என்ன? யூதர்களைப் பொறுத்த அளவில் யூதர்கள் இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தாலும் அவர்கள் தாங்கள் செய்வது என்னவென்று அறியாமல் செய்ததாக இயேசு கிறிஸ்துவே சொன்னபடியினால் கொலை செய்த யூதன் தன் இடத்தை விட்டு வெளியேற்றப்படுவதைபோல யூதர்கள் காணப்படுகிறார்கள்.They have been living in exile. எதுவரைக்கும் என்றால் மகா பிரதான ஆசாரியராகிய இயேசு கிறிஸ்து மறுபடியும் திரும்ப வருகின்ற காலம் வரை. The Nation's complete restoration to its position will take place not at the death of the Great High Priest ( for He can never die) but when he comes to rule.WILLIAM MACDONALD . புதிய ஏற்பாட்டை பொறுத்த அளவில் நம்முடைய பாவங்களுக்காக தம்முடைய இரத்தத்தை சிந்திய மகா பிரதான ஆசாரியரின் புண்ணியத்தை நம்பி எந்த ஒரு பாவியும் அவரிடத்தில் வரும்போது அவர்களுக்கு மீட்பு கிடைக்கிறது. பாவிகளுக்கு அடைக்கல பட்டணமாக பிரதான ஆசாரியராக இயேசு கிறிஸ்து காணப்படுகிறார். படிக்க எண்ணாகமம் 35 வது அதிகாரம். EZEKIEL SHANMUGAVEL

The canon of Scripture 1

உங்கள் சிந்தனைக்கு " The canon of Scripture " என்றால் கர்த்தருடைய வார்த்தைகளை தெரிந்தெடுத்து அங்கீகரிக்க தெரிந்தெடுக்கப்பட்ட வழிமுறைகள் அல்லது சட்டதிட்டங்கள் (RULES AND STANDARD ) என்று பொருள் . இன்று நமது கையில் புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்கள் எழுதிய மூல பிரதிகள் (ORIGINAL COPY)இல்லை. அவைகளுடைய நகல்கள்தான் இன்று நமது கைகளில் காணப்படுகின்றது. புதிய ஏற்பாடு பொறுத்தவரையில் ஏறக்குறைய 4000 முதல் 5000 வரை கிரேக்க மொழியில் காணப்படுகின்றது( MANUSCRIPTS). இதில் ஆச்சர்யம் என்னவென்றால் 100% எந்த பிரதியும் ஒன்றோடொன்று ஒத்துப்போகவில்லை. முதல் நூற்றாண்டு சபைகளில் எல்லா சபைகளிலும் புதிய ஏற்பாட்டின் அனைத்து புத்தகங்களும் இருந்ததாக தெரியவில்லை. அக்கால சபைகள் தங்களுக்குளே பிரதிகளை பரிமாறிக்கொண்டார்கள். பிரதிகளுக்கு பிரதிகள் எடுக்கும்பொழுது மொழி பெயர்ப்பில் ஒரு சில தவறுகள் வருவது தவிர்க்க முடியாமல் போய்விட்டது. இன்றைய “ KJV versus NIV “ க்கான விவாதங்களுக்கு இதுவே அடிப்படை காரணம். மேலும் அப்போஸ்தலர்கள் எழுதிய நூல்கள், கடிதங்கள் மட்டுமன்றி இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய Clement of Rome,Ignatius of Antioch and Polycarp of Smyrna ோன்றவர்களுடைய எழுத்துக்களையும் அக்காலச் சபைகள் மதித்து சபைகளில் தியானித்து வந்தனர் . இந்த சூழ்நிலையில்தான் " MARCIÓN" என்பவன் குழப்பங்கள் ஏற்படுத்திய மற்றும் GNOSTICISM போன்ற உபதேசங்களால் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இதை கர்த்தர்தான் அனுமதித்தார் என்று சொல்லவேண்டும். ஏனென்றால் அப்படி ஒரு சம்பவம் நடைபெற்றிருக்காவிடில் தேவாவியினால் அருளப்பட்ட வேத வாக்கியங்கள் இவைகள்தான் என்று நாம் அடையாளம் கண்டிருக்க முடியாது. சபை தலைவர்கள் ஏறக்குறைய 200 ஆண்டுகள் கடுமையாக உழைத்து, தியானித்து, ஜெபித்து பல்வேறு நாடுகளில் உள்ள சபைகளோடு அவைகளின் தலைவர்களோடு ஆலோசித்து எல்லாவற்றிற்கும் மேலாக பரிசுத்த ஆவியின் ஒத்தாசையோடு இந்த காரியத்தை செய்து முடித்தார்கள். ஒவ்வொரு புத்தகத்தையும், கடிதங்களையும் தனித்தனியாக ஆராய்ந்து வேதவாக்யங்களை தெரிந்தெடுத்தார்கள். இது ஒரு மிகப்பெரிய ஆவியானவரின் அதிசயமான கிரியை. இந்த வார்த்தைகள் மனிதர்களால் எழுதப்பட்டிருந்தாலும் அவைகள் தெய்வீகமானவை. 11பேதுரு 1:21ல் சொல்லப்பட்டபடி பரிசுத்த மனிதர்கள் பரிசுத்தாவியினால் ஏவப்பட்டு எழுதிய வார்த்தைகள் அவை. தேவன் மாத்திரமே பரிசுத்த வார்த்தைகளை உண்டுபண்ண முடியும். God alone can create Scripture . 11 தீமோ 3:16ல் சொல்லப்பட்டபடி தேவனுடைய சுவாசத்தினால் உண்டான வார்த்தைகள். சபையானது சுயமாக தேவனுடைய வார்த்தைகளை உருவாக்க முடியாது. The Church can;t make any book or document Scripture. சபையுடைய கடமை "எது தேவனுடைய வார்த்தைகள், " " எது தேவனுடைய வார்த்தைகள் அல்ல :என்று தேர்ந்தெடுப்பதுதான். The church is not to give any authority to the the documents தேவனுடைய வார்த்தைகளுக்கு அதிகாரம் கொடுப்பது சபையினுடைய வேலையல்ல. தேவவார்த்தைகளுடைய அதிகாரத்தை உணர்ந்து அதற்க்கு கீழ்ப்படிவது சபையினுடைய கடமை. தேவனுடைய வார்த்தைகளே பிரதானமானது . சபைகளுடைய முக்கியமான கடமை தேவாவியினால் அருளப்படாத வார்த்தைகளை புறம்பே தள்ளி மெய்யான வார்த்தைகளை சபை மக்களுக்கு உறுதிப்படுத்துவது.பெரிய கருத்துக்கள் தொடர்ந்து வரும் இதை எழுதிய நான் ஒரு இறையியல் கல்லூரியில் படிக்கவில்லை நான் படித்ததை உங்களோட பகிர்ந்து கொள்கிறேன்

கானான் தேசத்தில் லேவி கோத்திரத்திற்கு ஏன் நிலம் பங்கிட்டு தரப்படவில்லை?

உங்கள் சிந்தனைக்கு: கானான் தேசத்தில் லேவி கோத்திரத்திற்கு ஏன் நிலம் பங்கிட்டு தரப்படவில்லை? யோசுவா கானான் தேசத்தை யாக்கோபின் பிள்ளைகளுக்கு பகிர்ந்து கொடுக்கும் பொழுது லேவி கோத்திரத்திற்கென்று தனியாக எந்த ஒரு நிலப்பரப்பையும் பிரித்து கொடுக்கவில்லை .இதற்கு இரண்டு காரணங்களை வேத‌ அறிஞர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். 1.ஆதியாகம புத்தகம் 34 ஆவது அதிகாரத்தில் சொல்லப்பட்ட நிகழ்வில் லேவி, சிமியோன் செய்த காரியங்களை நியாயமானதாக யாக்கோபு கருதவில்லை. சிகேம் ,தீனாள் விவகாரத்தில் சிமியோனும் ,லேவியும்‌ கானான் தேசத்திலே கானானியரிடத்திலும் பெரிசியரிடத்திலும் தன்னுடைய வாசனையை கெடுத்ததாக யாக்கோபு குற்றம் சுமத்தினான் ஆதியாகமம் 34:30. அதன் விளைவாக தன்னுடைய இறுதி நாளில் இவர்களைக் குறித்து யாக்கோபு சொன்ன வார்த்தைகளை நாம் கவனிக்க வேண்டும். "சிமியோனும், லேவியும் ஏக சகோதரர்கள். அவர்களுடைய பட்டயங்கள் கொடுமையின் கருவிகள். உக்கிரமான அவர்கள் கோபமும் கொடுமையான அவர்கள் மூர்க்கமும் சபிக்கப்படக்கடவது: யாக்கோபிலே அவர்கள் பிரியவும், இஸ்ரவேலிலே அவர்களைச் சிதறவும் பண்ணுவேன். ஆதியாகமம் 49:7. அதன்படி லேவி கோத்திரத்திற்கு தனியாக எந்த நிலப்பரப்பும் அளிக்கப்படவில்லை . ஆனால் அவர்கள் 48 பட்டணங்களில் முழு கானன் தேசத்திலும் சிதறி வாழ்ந்தார்கள். அதுபோல சிமியோன் கோத்திரத்திற்கு அளிக்கப்பட்ட சுதந்தரம் யூதா சுதந்தரத்தின் நடுவிலே காணப்பட்டது. அவர்கள் தனித்து வாழாமல் யூதர்களுக்கு இணைந்து காணப்பட்டார்கள் யோசுவா 19: ஆக லேவி கோத்திரமும் சிமியோன் கோத்திரமும் இணைந்து வாழ முடியாமல் யாக்கோபு சொன்ன தீர்க்கதரிசனம் நிறைவேறியது. 2. லேவி கோத்திரம் கானான் தேசம் முழுவதுமாக பரந்து காணப்பட்டதால் அதுஅவர்கள் வேதத்தை எல்லா மக்களுக்கும் போதிக்க வசதியாக காணப்பட்டது.லேவி10:11 3. லேவியருக்கு கர்த்தரே சுதந்திரமாக இருக்கிறார். எண்26:62.. லேவி கோத்திரத்தை நம்முடைய பணிக்கென்று அவர்களைத் தேர்ந்தெடுத்தார். ஆசாரியர்களுக்கு உதவி செய்யும்படியாக நியமிக்கப்பட்டார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுக்கு கொடுக்கின்ற தசமபாகம் காணிக்கைகளில் அவர்களுக்கு பங்கும் கிடைத்தது. கர்த்தர் உணர்த்தும் பாடம் என்னவென்றால் லேவியருக்கு தண்டனையாக காணப்பட்ட காரியம் இறுதியில் அதை இறைவன் அவர்களுக்கு ஆசீர்வாதமாக மாற்றினார் .தேவனே அவர்களுக்கு சுதந்திரமாக இருப்பது எவ்வளவு மகிமையான காரியம். நம்முடைய வாழ்க்கையில் கூட தேவன் நம்முடைய தவறுகளுக்காக தண்டிக்கின்ற அதே வேளையில் அந்த தண்டனைகள் மூலமாக பின்னாட்களில் ஒரு மிகப்பெரிய ஆசீர்வாதத்தை நமக்கு வைத்திருப்பார். இதை நீங்கள் வாழ்க்கையில் அனுபவபூர்வமாக உணர்ந்து கொள்ளலாம். தேவன் மகிமைப்படுவாராக.

யோசுவா மோசேயை போல தனக்கு பின்னால் ஏன் ஒரு தலைவனை அறிமுகப்படுத்தவில்லை?

உங்கள் சிந்தனைக்கு: யோசுவா மோசேயை போல தனக்கு பின்னால் ஏன் ஒரு தலைவனை அறிமுகப்படுத்தவில்லை.? அல்லது ஏன் உருவாகவில்லை? மோசயைப் போல யோசுவா மரிக்கும் போது தனக்குப் பின்னால் ஒரு தலைவனை இஸ்ரவேலரை வழி நடத்தும் படியாக உருவாக்கவில்லை. இதற்கான காரணங்களை நாம் ஆராய்ந்து பார்க்கலாம். மோசே இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தும்படியாக தேவனால் முன் குறிக்கப்பட்டவன் ஏறக்குறைய 20 லட்சம் அடிமைகளை அவன்  கானானுக்கு செல்வதற்கு முந்திய நிலை வரைக்கும் அவர்களை வழிநடத்தினான். யோசுவா மோசேயோடு பல நிலைகளில் இணைந்து செயல்பட்டவன். அமேலேக்கியரோடு நடந்த போரில் இஸ்ரவேல் ஜனங்களை வழி நடத்தியவன். யாத் 17:8-16 .மோசேயின் ஊழியக்காரனாக செயல்பட்டவன். தேவன் கொடுத்த கற்பனைகளை மோசே பெறுவதற்காக சீனாய் மலைக்கு சென்ற போது அவனோடு உடன் சென்றவன். கானானை வேவுபார்க்க  பார்க்க சென்றவர்களில் இவனும் ஒருவன். இப்படி இவனைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். இறுதியில் மோசேயல்ல தேவனே மோசேக்கு பிறகு ஜனங்களை வழிநடத்த யோசுவாவை நியமித்தார். காரணம் அடிமைகளாய் இருந்த அந்த ஜனங்கள் தங்களை தானே ஆளுவதற்கு அனுபவம் இல்லாதவர்களாக காணப்பட்டார்கள். அவர்களுக்கு இன்னும் கானானை  ஆட்சி செய்திட தங்களை நிலைநிறுத்திக் கொள்ள ஒரு தலைவன் தேவைப்பட்டான். 40 வருடங்களாக வனாந்தரத்தில் இருந்த அவர்கள் முழுமையான ஒரு பக்குவம் இல்லாமல் இருந்தார்கள்‌ . ஆனால் யோசுவா மரிக்கும்போது சூழ்நிலை அப்படி இல்லை.  12 கோத்திரங்கள் கானானில் தேவன் தங்களுக்கு அளித்த இடங்களில் தங்களை  தலைவர்களாக நிலை நிறுத்திக் கொண்டார்கள். அவர்களுக்கென்று ஆசாரியர்கள், ஆசரிப்பு கூடாரம் எல்லாம் உருவாக்கப்பட்டு விட்டது. அவர்களுக்கு தேவன் அரசனாகவும் அவர்களை வழிநடத்த கற்பனைகளும் இருந்தது‌. எனவே யோசுவா மரிக்கும் பொழுது அவர்களை வழிநடத்த தலைவர்கள் உருவாகியிருந்தார்கள். எனவே  யோசுவா தனக்கு பின்னால் ஒரு தலைவனை நியமிக்கவுமில்லை. அதற்கு தேவன் கட்டளை இடவும் இல்லை. இஸ்ரவேல் ஜனங்களுடைய வீழ்ச்சிக்கு காரணம் யோசுவாக்கு பின் வந்த இரண்டாம் தலைமுறை மக்கள் ஆண்டவருடைய கற்பனைகளுக்கு கீழ்ப்படியாத காரணத்தினால் அவர்கள் வழி விலகிப் போனார்கள். தலைவர்கள் இல்லாத காரணத்தினால் அல்ல. கீழ்ப்படியாமையே காரணம். இதைப் பற்றி விளக்கத்தை நியாயாதிபதிகள் 2:7-11ல் தெளிவாக பார்க்கலாம். இன்றைக்கு விசுவாசிகள் யோசுவா காலத்தில் உள்ள தலைவர்களை போல காணப்பட வேண்டுமேயல்லாமல் மோசே‌காலத்தில் உள்ள அடிமைகளை போல் நாம் காணப்படக்கூடாது. கர்த்தர் மகிமைப்படுவாராக.

பவுல் தன்னுடைய கடிதத்தை ஏன் கர்த்தரின் மேல் ஆணையிட்டு விசுவாசிகளை படிக்க சொன்னார்?

உங்கள் சிந்தனைக்கு ! பவுல் தன்னுடைய கடிதத்தை ஏன் கர்த்தரின் மேல் ஆணையிட்டு விசுவாசிகளை படிக்க சொன்னார்? "இந்த நிருபம் பரிசுத்தமான சகோதரர் யாவருக்கும் வாசிக்கப்படும்படி செய்யவேண்டுமென்று கர்த்தர்பேரில் ஆணையிட்டு உங்களுக்குச் சொல்லுகிறேன்" 1 தெச .5:27 "அவர்கள் எல்லாருக்கும் இத்திருமுகத்தை வாசித்துக்காட்ட வேண்டுமென்று ஆண்டவர் பெயரால் ஆணையிடுகிறேன்." 1 தெசலோனிக்கர் 5:27. இது கத்தோலிக்க மொழிபெயர்ப்பு. இது தெசலோனிக்கேயரின் சபைக்கு அவர் விடுக்கும் கட்டளை இதே விருப்பத்தை கொலோசிய சபைக்கும் தெரிவித்திருக்கிறார். “இந்த நிருபம் உங்களிடத்தில்ஞ வாசிக்கப்பட்டபின்பு இது லவோதிக்கேயா சபையிலும் வாசிக்கப்படும்படி செய்யுங்கள், லவோதிக்கேயாவிலிருந்து வரும் நிருபத்தை நீங்களும் வாசியுங்கள்.” கொலோ 4:16 "இத்திருமுகத்தை நீங்கள் வாசித்தபின்பு லவோதிக்கேயா திருச்சபையிலும் வாசிக்க ஏற்பாடு செய்யுங்கள். அவ்வாறே லவோதிக்கேயா திருச்சபையிலிருந்து வரும் திருமுகத்தையும் நீங்கள் வாசியுங்கள். " கொலோசையர் 4:16 இது கத்தோலிக்க மொழிபெயர்ப்பு. பவுலடியார் தன் நிருபத்தை வாசிக்கும்படி ஆணையிட்டு ஒரு கருத்தை ஏன் மிகவும் வலியுறுத்தி கூறுகிறார் ? இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு 1. யார் இந்த பவுல்? ஆண்டவரை ஏற்றுக் கொள்வதற்கு முன்பாக யூத மார்க்கத்தின் மீது தீவிர பற்று கொண்டவர். சபையை பாழாக்கியவர். இயேசு கிறிஸ்துவை சந்தித்த பிறகு அவன் மனம் மாறினார். இவர் அப்போஸ்தலனாக  இருந்தாலும் இவர் இயேசு கிறிஸ்துவை  முகமுகமாக சந்தித்து பேசினது கிடையாது. இயேசு கிறிஸ்து தெரிந்தெடுத்த 12 அப்போஸ்தலர்களில் இவர் கிடையாது. ஆரம்ப நாட்களில் எருசலேம் சபையின்  அங்கீகரிப்பும் இவருக்குகிடையாது. பல சபைகளில் இவருடைய அப்போஸ்தல அதிகாரத்தை கேள்விக்குறியாக்கின காரியங்களும் காணப்படுகிறது. ஆனால் இவர் தான் புதிய ஏற்பாட்டில் உள்ள புத்தகங்களில் 13 கடிதங்களை எழுதியிருக்கிறார். புற இனத்தார் மத்தியில் நற்செய்தியை தீவிரமாக பரப்பியவர். சபையை குறித்தும், நற்செய்தியை குறித்தும் மற்ற அப்போஸ்தலர்களை காட்டிலும் மிக அதிகமான வெளிப்படுத்தலை தேவனிடத்தில் இருந்து பெற்றவர்.கலா2;11,12, எபே 3;8-11,2கொரி11:6 எனவேதான் தன்னுடைய அப்போஸ்தல அதிகாரத்தை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது இந்த வார்த்தையின் ஆழத்தை சரியாக புரிந்து கொண்டால் புதிய ஏற்பாடு நூல்கள் எவ்வாறு வரைமுறை செய்ய பட்டது என்பதை அறிந்து கொள்ளலாம். இன்னொரு காரணம். ஆதி திருச்சபைகளில் முதலில் பழைய ஏற்பாடு நூல்கள்தான் வாசிக்கப்பட்டு வந்தது. பவுல்தான் செல்லும் எல்லா இடங்களிலும் அங்குள்ள யூதர்களுடைய தேவாலயத்தில் சென்று பழைய ஏற்பாட்டில் உள்ள நூல்களில், மேசியாவாகிய கிறிஸ்து எவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறார் என்பதை விவரித்து நற்செய்தியை அறிவிப்பது வழக்கம். அதனால் புற இனத்தாரும் தேவனுடைய அரசில் இணைந்தனர் . அதன் பிறகு பழைய ஏற்பாடு நூல்களோடு அப்போஸ்தலர்களின் நிரூபங்களும் சபைகளில் சத்தமாக வாசிக்கப்பட்டது. According to John Stott “this was the origin of the tradition of having both an old and a New Testament lesson in Church.The clear implication is that these apostolic documents were to b regarded as being on a level with the Old Testament Scriptures” இந்த பழக்கம்தான் பின்னாட்களில் புதிய ஏற்பாடு நூல்கள் தெரிந்துகொள்ளப் படுவதற்கும் தொகுக்கப்படுவதற்கும் ஆதாரமாகிவிட்டது. This tradition enabled the Church fathers to complete the “Canon of Scripture” ஒரு மனித தேவையை ஏற்படுத்தி அதன் மூலம் தேவன் தமது திட்டத்தை நிறைவேற்றினார்.

தேவனின் பரிபூரண சித்தமும் அனுமதிக்கப்பட்ட சித்தமும்

உங்கள் சிந்தனைக்கு: தேவனின் பரிபூரண சித்தமும் அனுமதிக்கப்பட்ட சித்தமும் God's perfect will and permissive will. நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய பரிபூரண சித்தம் நிறைவேற ஒப்புக் கொடுக்க வேண்டும் . ஏதோ ஒரு காரியத்தில் தேவனோடு வம்பு கட்டி ,போராடி நாம் விரும்பிய காரியத்தை கேட்கும் போதும் அவர் சில நேரங்களில் அதை அனுமதித்து விடுவார். .இது தான் அனுமதிக்கப்பட்ட தேவ சித்தம் என்று சொல்லுவார்கள். இதைத்தான் இஸ்ரவேல் மக்களின்வாழ்க்கையில் ஆரம்பகாலத்தில் பார்க்கலாம் . ஆபிரகாமை தேவன் அழைத்தபோது அவருடைய சந்ததிக்கு கானான் தேசத்தை வாக்குத்தத்தம் பண்ணியிருந்தார். யாக்கோபுக்கு பிறந்த 12 பிள்ளைகளுக்கு அந்த தேசம் முன்குறிக்கப்பட்டது. ஆனால் கானானுக்கு செல்வதற்கு முன்பாக யோர்தானை கடந்து அடுத்தது கானானுக்கு செல்ல வேண்டிய அந்த நேரத்தில் 12 கோத்திரத்தில் ரூபன்,காத் புத்திரர்கள் ‌ யோர்தானுக்கு இக்கரையில் யூதர்கள் கைப்பற்றிய அதரோத், தீபோன், யாசேர், நிம்ரா, எஸ்போன், எலெயாலெ, சேபாம், நேபோ, பெயோன் என்னும் பட்டணங்கள் தங்கள் ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடமாக இருப்பதால் அதை தங்களுக்கு பிரித்துக் கொடுக்குமாறு கேட்டார்கள். அதேபோல மனசேயின் ஒரு கோத்திரத்தாரும் தங்களுக்கும் யோர்தானுக்கு இக்கரையில் உள்ள இடத்தை கேட்டனர். இதற்கு மோசே முதலில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தாலும் பின்னால் அவர்கள் கானானை கைப்பற்றும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வோம் என்கிற வாக்குறுதி கொடுத்த படியினாலே அவர்களுக்கு கானானுக்கு வெளியே யோர்தானுக்கு இக்கரையில் உள்ள இடங்களை பிரித்துக் கொடுத்தார்‌ மோசே . இந்தக் காரியத்தை கர்த்தர் அனுமதித்தாரா என்பது நமக்கு தெரியாது. ஆனாலும் மோசேஅவர்களின் விருப்பத்தின்படி பிரித்துக் கொடுத்தார். கர்த்தருடைய பரிபூரண சித்தம் ஆபிரகாமின் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட சந்ததி அனைவரும் கானானில் குடியிருக்க வேண்டும் என்பதே. அவர்கள் யோர்தானுக்கு அக்கறை ஒருபுறமும் இக்கரை ஒருபுறமும் பிரிந்து இருப்பது தேவனுடைய சித்தம் இல்லை. சில வேத பண்டிதர்கள் சொல்லுகின்ற காரியம் என்னவென்றால் எதிரிகளின் தாக்குதலில் முதலில் இவர்கள் தான் பாதிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். நாம் கற்றுக் கொள்ளும் பாடம் என்னவென்றால் தேவனுடைய பரிபூரண சித்தத்தில் வாழ்வதுதான் நமக்கு பாதுகாப்பு.. ஒருவேளை நம்முடைய போராட்டத்தின் மூலம் நாம் விரும்பியதை தேவன் அனுமதித்தாலும் அதில் பரிபூரண பாதுகாப்பு இருக்காது என்பது தான் உண்மை. இப்படி யாக்கோபின் இரண்டு புத்திரர்களும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானானை விரும்பாமல் உலக பார்வையின்படி தங்கள் கால்நடைகளுக்காக யோர்தானின் இக்கரையில்உள்ள இடத்தை தெரிந்து கொண்டார்கள். இதுவும் ஒரு ஆவிக்குரிய சறுக்கல்தான்.. நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய பரிபூரண சித்தத்தை செயல்படுத்த நமக்கு தேவன் கிருபை தருவாராக . கர்த்தர் மகிமைப்படுவாராக. படிக்க எண்ணாகம் 32 வது அதிகாரம்

யோசுவா மோசேயை போல தனக்கு பின்னால் ஏன் ஒரு தலைவனை அறிமுகப்படுத்தவில்லை.?

உங்கள் சிந்தனைக்கு: யோசுவா மோசேயை போல தனக்கு பின்னால் ஏன் ஒரு தலைவனை அறிமுகப்படுத்தவில்லை.? அல்லது ஏன் உருவாகவில்லை? மோசேயைப் போலயோசுவா மரிக்கும் போது தனக்குப் பின்னால் ஒரு தலைவனை இஸ்ரவேலரை வழி நடத்தும் படியாக உருவாக்கவில்லை. இதற்கான காரணங்களை நாம் ஆராய்ந்து பார்க்கலாம். மோசே இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தும்படியாக தேவனால் முன் குறிக்கப்பட்டவன். ஏறக்குறைய 20 லட்சம் அடிமைகளை அவன் கானானுக்கு செல்வதற்கு முந்திய நிலை வரைக்கும் அவர்களை வழிநடத்தினான். Moses was the lawgiver who built a great nation out of a collection of slaves, but Joshua was the general who led that nation in conquering the land and claiming the inheritance. W.W.WIERSBE யோசுவா மோசேயோடு பல நிலைகளில் இணைந்து செயல்பட்டவன். அமேலேக்கியரோடு நடந்த போரில் இஸ்ரவேல் ஜனங்களை வழி நடத்தியவன். யாத் 17:8-16 .மோசேயின் ஊழியக்காரனாக செயல்பட்டவன். தேவன் கொடுத்த கற்பனைகளை மோசே பெறுவதற்காக சீனாய் மலைக்கு சென்ற போது அவனோடு உடன் சென்றவன். கானானை வேவுபார்க்க பார்க்க சென்றவர்களில் இவனும் ஒருவன். இப்படி இவனைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். இறுதியில் மோசேயல்ல தேவனே மோசேக்கு பிறகு ஜனங்களை வழிநடத்த யோசுவாவை நியமித்தார். காரணம் அடிமைகளாய் இருந்த அந்த ஜனங்கள் தங்களை தானே ஆளுவதற்கு அனுபவம் இல்லாதவர்களாக காணப்பட்டார்கள். அவர்களுக்கு இன்னும் கானானை ஆட்சி செய்திட தங்களை நிலைநிறுத்திக் கொள்ள ஒரு தலைவன் தேவைப்பட்டான். 40 வருடங்களாக வனாந்தரத்தில் இருந்த அவர்கள் முழுமையான ஒரு பக்குவம் இல்லாமல் இருந்தார்கள்‌ . ஆனால் யோசுவா மரிக்கும்போது சூழ்நிலை அப்படி இல்லை. 12 கோத்திரங்கள் கானானில் தேவன் தங்களுக்கு அளித்த இடங்களில் தங்களை தலைவர்களாக நிலை நிறுத்திக் கொண்டார்கள். அவர்களுக்கென்று ஆசாரியர்கள், ஆசரிப்பு கூடாரம் எல்லாம் உருவாக்கப்பட்டு விட்டது. அவர்களுக்கு தேவன் அரசனாகவும் அவர்களை வழிநடத்த கற்பனைகளும் இருந்தது‌. After the conquest of Canaan, the twelve tribes were established in their God Appointed territories, each with its own officers and judges, and the tabernacle and priesthood were in place. The people knew that God was their King, and they had His law to guide them.W.W.WIERSBE எனவே யோசுவா மரிக்கும் பொழுது அவர்களை வழிநடத்த தலைவர்கள் உருவாகியிருந்தார்கள். எனவே யோசுவா தனக்கு பின்னால் ஒரு தலைவனை நியமிக்கவுமில்லை. அதற்கு தேவன் கட்டளை இடவும் இல்லை. இஸ்ரவேல் ஜனங்களுடைய வீழ்ச்சிக்கு காரணம் யோசுவாக்கு பின் வந்த இரண்டாம் தலைமுறை மக்கள் ஆண்டவருடைய கற்பனைகளுக்கு கீழ்ப்படியாத காரணத்தினால் அவர்கள் வழி விலகிப் போனார்கள். தலைவர்கள் இல்லாத காரணத்தினால் அல்ல. கீழ்ப்படியாமையே காரணம். இதைப் பற்றி விளக்கத்தை நியாயாதிபதிகள் 2:7-11ல் தெளிவாக பார்க்கலாம். . It was a spiritual failure, not organisational or political. The people had failed to obey the word of God இன்றைக்கு விசுவாசிகள் யோசுவா காலத்தில் உள்ள தலைவர்களை போல காணப்பட வேண்டுமேயல்லாமல் மோசே‌காலத்தில் உள்ள அடிமைகளை போல் நாம் காணப்படக்கூடாது. கர்த்தர் மகிமைப்படுவாராக.

அவிசுவாசம்

உங்கள் சிந்தனைக்கு: பரலோகத்தில் இருந்து தேவனே இறங்கி வந்து ஆபிரகாமிடம் அடுத்த வருடம் இதே நாளில் சாராளுக்கு குழந்தை பிறக்கும் என்று சொன்ன செய்தியை சாராள் நம்பாமல் சிரித்தாள். ஆனாலும் அவளுடைய அவநம்பிக்கையை தேவாதி தேவன் பொருட்படுத்தாமல் அவள் மூலமாக சந்ததியை உருவாக்கி தேவன் தம்முடைய திட்டத்தை நிறைவேற்றினார். சில வேளைகளில் நம்முடைய அவிசுவாசத்தை பொருட்படுத்த மாட்டார். தேவன் எதை செய்ய நினைத்தாரோ அதை நம்முடைய அவிசுவாசம் ஒரு காலம் தடை செய்யாது. எல்லாவற்றுக்கும் மேலாக உயர்ந்து நிற்பது தேவனுடைய இறையாண்மையே.. பல நேரங்களில் விசுவாசம் ஜெயித்தை கொடுத்தாலும் அவைகள் தேவனுடைய இறையாண்மைக்கு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிட முடியாது. தேவன் நினைத்த காரியத்தை நம்முடைய விசுவாசம் மாற்றவும் முடியாது நம்முடைய அவிசுவாசம் தடை செய்யவும் முடியாது‌. இறுதியில் அதே சாராள் கற்பந்தரிக்க பெலனடைந்து குழந்தை பெற்றாள் என்று பார்க்கிறோம். அதுபோல் சில நேரங்களில் நாம் உதிர்க்கும் அவிசுவாச வார்த்தைகள் தேவனை பொருட்படுத்தாது. இறுதியில் நிலை நிற்பது தேவனுடைய செயலே, சித்தமே ,திட்டமே.

கானான் தேசத்தில் லேவி கோத்திரத்திற்கு ஏன் நிலம் பங்கிட்டு தரப்படவில்லை?

உங்கள் சிந்தனைக்கு: கானான் தேசத்தில் லேவி கோத்திரத்திற்கு ஏன் நிலம் பங்கிட்டு தரப்படவில்லை? யோசுவா கானான் தேசத்தை யாக்கோபின் பிள்ளைகளுக்கு பகிர்ந்து கொடுக்கும் பொழுது லேவி கோத்திரத்திற்கென்று தனியாக எந்த ஒரு நிலப்பரப்பையும் பிரித்து கொடுக்கவில்லை .இதற்கு இரண்டு காரணங்களை வேத‌ அறிஞர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். 1.ஆதியாகம புத்தகம் 34 ஆவது அதிகாரத்தில் சொல்லப்பட்ட நிகழ்வில் லேவி, சிமியோன் செய்த காரியங்களை நியாயமானதாக யாக்கோபு கருதவில்லை. சிகேம் ,தீனாள் விவகாரத்தில் சிமியோனும் ,லேவியும்‌ கானான் தேசத்திலே கானானியரிடத்திலும் பெரிசியரிடத்திலும் தன்னுடைய வாசனையை கெடுத்ததாக யாக்கோபு குற்றம் சுமத்தினான் ஆதியாகமம் 34:30. அதன் விளைவாக தன்னுடைய இறுதி நாளில் இவர்களைக் குறித்து யாக்கோபு சொன்ன வார்த்தைகளை நாம் கவனிக்க வேண்டும். "சிமியோனும், லேவியும் ஏக சகோதரர்கள். அவர்களுடைய பட்டயங்கள் கொடுமையின் கருவிகள். உக்கிரமான அவர்கள் கோபமும் கொடுமையான அவர்கள் மூர்க்கமும் சபிக்கப்படக்கடவது: யாக்கோபிலே அவர்கள் பிரியவும், இஸ்ரவேலிலே அவர்களைச் சிதறவும் பண்ணுவேன். ஆதியாகமம் 49:7. அதன்படி லேவி கோத்திரத்திற்கு தனியாக எந்த நிலப்பரப்பும் அளிக்கப்படவில்லை . ஆனால் அவர்கள் 48 பட்டணங்களில் முழு கானன் தேசத்திலும் சிதறி வாழ்ந்தார்கள். அதுபோல சிமியோன் கோத்திரத்திற்கு அளிக்கப்பட்ட சுதந்தரம் யூதா சுதந்தரத்தின் நடுவிலே காணப்பட்டது. அவர்கள் தனித்து வாழாமல் யூதர்களுக்கு இணைந்து காணப்பட்டார்கள் யோசுவா 19: ஆக லேவி கோத்திரமும் சிமியோன் கோத்திரமும் இணைந்து வாழ முடியாமல் யாக்கோபு சொன்ன தீர்க்கதரிசனம் நிறைவேறியது. 2.லேவி கோத்திரம் கானான் தேசம் முழுவதுமாக பரந்து காணப்பட்டதால் அதுஅவர்கள் வேதத்தை எல்லா மக்களுக்கும் போதிக்க வசதியாக காணப்பட்டது.லேவி10:11 3. லேவியருக்கு கர்த்தரே சுதந்திரமாக இருக்கிறார். எண்26:62.. லேவி கோத்திரத்தை நம்முடைய பணிக்கென்று அவர்களைத் தேர்ந்தெடுத்தார். ஆசாரியர்களுக்கு உதவி செய்யும்படியாக நியமிக்கப்பட்டார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுக்கு கொடுக்கின்ற தசமபாகம் காணிக்கைகளில் அவர்களுக்கு பங்கும் கிடைத்தது. கர்த்தர் உணர்த்தும் பாடம் என்னவென்றால் லேவியருக்கு தண்டனையாக காணப்பட்ட காரியம் இறுதியில் அதை இறைவன் அவர்களுக்கு ஆசீர்வாதமாக மாற்றினார் .தேவனே அவர்களுக்கு சுதந்திரமாக இருப்பது எவ்வளவு மகிமையான காரியம். நம்முடைய வாழ்க்கையில் கூட தேவன் நம்முடைய தவறுகளுக்காக தண்டிக்கின்ற அதே வேளையில் அந்த தண்டனைகள் மூலமாக பின்னாட்களில் ஒரு மிகப்பெரிய ஆசீர்வாதத்தை நமக்கு வைத்திருப்பார். இதை நீங்கள் வாழ்க்கையில் அனுபவபூர்வமாக உணர்ந்து கொள்ளலாம். தேவன் மகிமைப்படுவாராக.

good works t

DAILY QUOTE To add good works to the works of christ for salvation is an offence to His finished work.

Justification is a one time act of God.

உங்கள் சிந்தனைக்கு! நாம் மறுபடியும் பிறக்கும் போது குழந்தையாயிருக்கிறோம். ஆனால் பரிசுத்தமாகும்போதுதான் வளர்கிறோம். சில விளக்கங்கள் Justification is a one time act of God.but sanctification is a life long process. Till our death this continues . ‘’He that is unjust, let him be unjust still: and he which is filthy, let him be filthy still: and he that is righteous, let him be righteous still: and he that is holy, let him be holy still.’’Rev 22:1 When we are born again by the word and the spirit of God .God covered us with His righteousness. It is our position before God By that act of God we became a children of God. but we are child or a new born baby in spiritual activity. The fact that we have been redeemed by the precious blood of Jesus Christ and born again does not eliminate all sin from the heart and life of the new believer. We have been delivered from its power and defilement, but we are not yet sinless and will not be until we see Jesus face to face in heaven. Progressive sanctification has as its goal the elimination of all sin and complete transformation of our lives to the image of Jesus Christ. In this life the Christian does not attain absolute Christ likeness. Sin remains in humanity until death and therefore spiritual perfection is impossible in this life. However, the goal toward which the devout Christian should strive is to appear before God without spot or blemish even though we will never reach that goal until the sinful body is laid to rest. Sanctification is not a sudden miraculous gift. There are no shortcuts to sanctification. It is the ongoing process of being conformed to the character and likeness of Christ. Though sanctification is never complete in this life ( 1 John 1:8-10 ), it is not an optional extra tacked on to justification. When we are born again we connected to the Christ (head of the Chruch) , we are parts in the body of Christ. Please read Colosians 2nd chapter with some best commentaries (2:9.10) . Through His sufficiency we can draw any spiritual need help, power, grace and gift for our sanctification by daily walk with God by reading and meditating the word of God. “We are born complete in Christ. “Our spiritual growth is not by addition but by nutrition..He grows from the inside out. We are born complete in Christ “ W.W .WIERSBE please read the following verses நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, *திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்*. 1. நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல், அன்புடன் சத்தியத்தைக் கைகொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார். தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும்,

ஆபிரகாமின் தோல்வியும் தேவனின் அழைப்பும்

உங்கள் சிந்தனைக்கு: ஆபிரகாமின் தோல்வியும் தேவனின் அழைப்பும் ஆபிரகாம்,பார்வோன் ,அபிமெலேக்கு ஆகிய இந்த மூவரில் ஆபிரகாம் எந்த வகையிலும் உலக நடைமுறையின்படியும், உலக சட்டதிட்டங்களின்படியும் மேம்பட்டவன் அல்ல. பார்வோன், அபிமெலேக்கு இவர்கள் இருவரும் கர்த்தருடைய கட்டளைக்கு உடனடியாக கீழ்ப்படிந்தவர்கள். சாராளிடம் மாமிச இச்சையின்படி அத்துமீறாமல் பெருந்தன்மையாக நடந்தார்கள். மாமிச பலவீனங்களை சாக்குப்போக்கு சொல்லி, தேவனுடய கட்டளையை மீறாமல் அவர்களுக்கு கிடைத்த வெளிச்சத்தின்படி தேவனுக்கு உண்மையாக இருந்தவர்கள். ஆனால் ஆபிரகாம் அப்படியல்ல. தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவன். ஆதி12:1 அவரை அறிந்தவன். அவனுக்கு தேவனுடைய வார்த்தை வெளிப்பட்டது. . . ஆதி15:1 தேவனை தரிசித்தவன்.ஆதி:18:1 இப்படி பல அனுபவங்களை பெற்று இருந்தாலும், தன் மனைவியை மற்றவரிடம் தன் சகோதரி என்று சொல்லி தன்னுடைய பாதுகாப்பை அவளுடைய அழகின் மீது நம்பிக்கை வைத்தவன். பாதி உண்மையை சொல்லி அவன் உயிருக்கு பயந்தவன். ஒருமுறை அல்ல, இருமுறை தேவனுடைய வல்லமையை நம்பாதவன். சாக்குப்போக்கு சொன்னவன். ஆனாலும் இப்படிப்பட்ட ஆபிராமை மன்னித்து மறந்து தான் அழைத்த நோக்கத்தை நிறைவேற்றினார். காரணம் என்னவென்றால் அவரின் அழைப்பு அவனை நீதிமானாக கருதி அவனை பாதுகாத்தது. இந்த உலகில் அவன் செய்த பலவீனங்கள் நிமித்தமாக அவன் செய்த காரியங்கள்தேவனிடதில்அவனுக்குரிய இடத்தை பறிக்கவில்லை தேவனுக்கு முன்பாக அவன் பெற்றுள்ள நீதியை இந்த உலகில் அவன் செய்த செயல்களால் இழக்கவில்லை His actions on the earth did not alter God’s justification . இதே போலத்தான் நாம் நம்முடைய பயணத்தில் நம்மை நீதிமானாக்கின தேவனுடய செயலை நம்முடைய பலவீனங்களை தோல்விகளும் மாற்ற முடியாது. Our position in Christ (Justification)t will not be altered by our practice on the earth (sanctification).W.Wiersbe ஏனென்றால் நாம் தேவனின் தண்டனையில் இருந்து விடுதலை பெற்றவர்கள். We are accepted before God. அதேவேளையில் பார்வோன், அபிமெலேக்கு தேவனின் தண்டனைக்குஉட்பட்டவர்கள். They were rejected and condemned. உலக மக்கள் எவ்வளவு தான் நன்மை விட மேன்மையான மக்களாக இருந்தாலும், அவர்கள் தேவன் நியாயத்தீர்ப்புக்கு தப்பிவிட முடியாது. அவர்களின் உலக நீதி, உண்மை, பரிசுத்தம் தேவன் நம்மை நீதிமானாகிய காரியத்துக்கு சமமாகாது. இதுதான் தேவன் நமக்கு கொடுத்த மறு பிறப்பின் மூலமாக, நாம் அடைந்த மிகப்பெரிய சிலாக்கியம். இவ்வளவு பெரிதான இரட்சிப்பு என்பது நம்முடைய வாழ்க்கையில், சிந்தனையில் மிகப்பெரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டால் இரட்சிப்பை பெற்றுக் கொண்டதில் எந்த அர்த்தமும் இல்லை.

sanctification

உங்கள் சிந்தனைக்கு! நாம் மறுபடியும் பிறக்கும் போது குழந்தையாயிருக்கிறோம். ஆனால் பரிசுத்தமாகும்போதுதான் வளர்கிறோம். சில விளக்கங்கள் Justification is a one time act of God,but sanctification is a lifelong process till our death . ‘’He that is unjust, let him be unjust still: and he which is filthy, let him be filthy still: and he that is righteous, let him be righteous still: and he that is holy, let him be holy still.’’Rev 22:1 When we are born again by the word and the spirit of God .God covered us with His righteousness. It is our position before God By that act of God we became children of God. but we are child or a new born baby in spiritual activity. The fact that we have been redeemed by the precious blood of Jesus Christ and born again does not eliminate all sin from the heart and life of the new believer. We have been delivered from its power and defilement, but we are not yet sinless and will not be until we see Jesus face to face in heaven. Progressive sanctification has as its goal, the elimination of all sin and complete transformation of our lives to the image of Jesus Christ. In this life the Christian does not attain absolute Christlikeness. Sin remains in humanity until death and therefore spiritual perfection is impossible in this life. However, the goal toward which the devout Christian should strive is to appear before God without spot or blemish even though we will never reach that goal until the sinful body is laid to rest. Sanctification is not a sudden miraculous gift. There are no shortcuts to sanctification. It is the ongoing process of being conformed to the character and likeness of Christ. Though sanctification is never complete in this life ( 1 John 1:8-10 ), it is not an optional extra tacked on to justification. When we are born again we are connected to Christ (head of the Church) , we are parts in the body of Christ. Please read Colosians 2nd chapter with some best commentaries (2:9.10) . Through His sufficiency we can draw any spiritual need, help, power, grace and gift for our sanctification by daily walk with God by reading and meditating the word of God. “We are born complete in Christ. “Our spiritual growth is not by addition but by nutrition..He grows from the inside out. We are born complete in Christ “ W.W .WIERSBE please read the following verses நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, *திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள் 1. நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல், அன்புடன் சத்தியத்தைக் கைகொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார். தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும்”

The second oracle of Balaam

For your thought: The second oracle of Balaam The second time God used Balaam to prophesy to the people of Israel and God's church. Then the Lord met Balaam, and put a word in his mouth, and said, “Go back to Balak, and thus you shall speak.” Numbers 23:16 These are the words of Balaam. 1.“He(God) has not observed iniquity in Jacob, Nor has He seen wickedness in Israel. The Lord his God is with him, And the shout of a King is among them. 2.he hath as it were the strength of an unicorn Numbers 23:22 3.For there is no sorcery against Jacob, Nor any divination against Israel. 4.He(Balaam) said, "That people rises like a lioness, And lifts itself like a lion; It shall not lie down until it devours the prey, And drinks the blood of the slain.” Numbers 23:21-34 Though prophecy was addressed to the people of Israel but it also speaks to the Church today The spiritual lessons for the Church 1.God will punish us for our sins. But our spiritual life rests on His election before the foundation of the world. We are predestined by God. The church is the people of God, a very special people, saved by His grace. 2.Our spiritual strength cannot be measured. It is the power that God gives us that we can overcome all the powers of Satan. 3. God has delivered us from the power of darkness, and translated us into the kingdom of His dear Son. We are no more under the domain of Satan. Satan cannot possess us through divination and sorcery 4.No power can stop the plan of God in our life. The royal majesty that we are citizens of the kingdom of heaven should be found in every believer. A defeated devil cannot destroy the will of God in our life . Satan can win the battle. But we will win the war. “The church did the most for the world when the church was the least like the world” Campbell Morgan

Oracles of Balaam.

For your thought: Oracles of Balaam. What are the God's prophecies of Balaam? What lesson does it teach us? Although thousands of people are mentioned in the bible, there is one mysterious person who is the most misunderstood, and that is Balaam. There can be no other false prophet in the New Testament who was as harshly criticised by men of God as Balaam. This Balaam was severely criticised by the greatest apostles like Peter, John and Judas. The most mysterious character in the Bible is Balaam. But God took this Balaam in HIs hands and used his mouth to give a great message to the people of Israel and to us. That's why I have recorded it as "Oracles of Balaam"in this article. Let's look at his first oracle. He was not a Jew. He was son of Beor to Pethor on the banks of the Euphrates. Numbers 22:5 He was a soothsayer. Balak hired him to curse Israel. But God used his mouth to prophesy concerning Israel. The Lord put a word in Balaam's mouth and said to him, "Go back to Balak and speak like in this manner " Numbers 23:5 '''I see a people who live apart and do not consider themselves one of the nations” Numbers 23:9 . The people of Israel did not live together with others and lived alone. Yes the people of Israel were God's chosen people but they were a people separated from other ethnic groups. This is their uniqueness and their strength. In the same way, God is pleased with us as long as we, separated by God, preserve our identity so that we do not conform to the world. When we lose our uniqueness we lose our power. We are called to protect our uniqueness whether it is in the church or in our personal lives. While we need to protect our individuality, we should not be isolated from other people. Be separated but not isolated. We should be seen together with the people of the world in matters of common cause while preserving our identity in our worship, holiness, and faith. we should never associate ourselves with politics. We must know about politics but we should avoid political involvement. Compromising with the world is the doctrine of Balaam That is his teaching. Balaam's oracle should be followed. Ignore his teachings. May the Lord be Glorified.

Oracles of Balaam.

For your thought: Oracles of Balaam. What are the God's prophecies of Balaam? What lesson does it teach us? Although thousands of people are mentioned in the bible, there is one mysterious person who is the most misunderstood, and that is Balaam. There can be no other false prophet in the New Testament who was as harshly criticised by men of God as Balaam. This Balaam was severely criticised by the greatest apostles like Peter, John and Judas. The most mysterious character in the Bible is Balaam. But God took this Balaam in HIs hands and used his mouth to give a great message to the people of Israel and to us. That's why I have recorded it as "Oracles of Balaam"in this article. Let's look at his first oracle. He was not a Jew. He was son of Beor to Pethor on the banks of the Euphrates. Numbers 22:5 He was a soothsayer. Balak hired him to curse Israel. But God used his mouth to prophesy concerning Israel. The Lord put a word in Balaam's mouth and said to him, "Go back to Balak and speak like in this manner " Numbers 23:5 '''I see a people who live apart and do not consider themselves one of the nations” Numbers 23:9 . The people of Israel did not live together with others and lived alone. Yes the people of Israel were God's chosen people but they were a people separated from other ethnic groups. This is their uniqueness and their strength. In the same way, God is pleased with us as long as we, separated by God, preserve our identity so that we do not conform to the world. When we lose our uniqueness we lose our power. We are called to protect our uniqueness whether it is in the church or in our personal lives. While we need to protect our individuality, we should not be isolated from other people. Be separated but not isolated. We should be seen together with the people of the world in matters of common cause while preserving our identity in our worship, holiness, and faith. we should never associate ourselves with politics. We must know about politics but we should avoid political involvement. Compromising with the world is the doctrine of Balaam That is his teaching. Balaam's oracle should be followed. Ignore his teachings. May the Lord be Glorified.

பிலேயாம்களை அடையாளம் கண்டு ஒதுக்கி வையுங்கள்

உங்கள் சிந்தனைக்கு: பிலேயாம்களை அடையாளம் கண்டு ஒதுக்கி வையுங்கள். பழைய ஏற்பாட்டில் அநேக போலியான தீர்க்கதரிசிகள் இருந்திருக்கிறார்கள். ஆனால்  புது ஏற்பாட்டு அப்போஸ்தலர்களால் மிகவும் கடினமான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்ட போலி தீர்க்கதரிசி யார் என்றால் பிலேயாம்தான். பேதுரு ,யூதா, யோவான் ஆகிய மூவரும் இவனுடைய செயல்பாட்டை கடிந்து கொண்டிருக்கிறார்கள். 2பேது:15-16,யூதா 11 வெளி2:14 இதனை மூன்று பிரிவாக பிரிக்கலாம். பிலேயாமின் வழி. அவனுடைய பிழை. அவனுடைய உபதேசம். The way of Balaam. The error of Balaam The doctrine of Balaam. பிலேயாம் ஒரு குறி சொல்கிறவன், ஒரு கள்ள தீர்க்கதரிசி. ஆனால் இவனுக்கு உண்மையான தேவனைப் பற்றி ஒரு அறிவு இருந்திருக்கிறது. வேதத்தில் வெளிப்படையாக பார்க்கும் பொழுது இவன் தேவனுடைய கட்டளைக்கு இணங்கி தேவனுடைய பிள்ளைகளுக்கு விரோதமாக சபிக்கவில்லை என்பது போல தோன்றும் ஆனால் எண்ணா 31:16, 2 பேதுரு 2:15ல் உள்ள வசனங்களை அடிப்படையாக வைத்து பார்க்கும் பொழுது இவன் பாலாக்கிடம் பணம் வாங்கி இஸ்ரவேல் மக்களை மோவாபின் பெண்களோடு வேசித்தனம் பண்ணுவதற்கும் இஸ்ரவேல் மக்களை விக்ரக ஆராதனைக்கு நேராக வழி நடத்தி விட்டான். பாலாக்கின் பணத்திற்காக விலைபோன இந்த செயல்தான் பிலேயாமின் வழிகள் என்று பேதுரு சொல்லுகிறார். பிலேயாமின் உபதேசம் எப்படி ஆபத்தானதோ அதேபோல் பிலேயாமின் வழிகளும் அதே அளவுக்கு சபைக்கு பாதிப்பு விளைவிக்க கூடியவைகள். பிலேயாமின் வழிகள் என்றால் என்ன? என்று பார்க்கும் பொழுது சுருக்கமாக சொன்னால் பெற்றுக்கொண்ட வரங்களை வணிக மயமாக்குகின்ற காரியம். பெற்றுக் கொண்ட கிருபைகளை கொண்டு பொருளை சம்பாதித்துக் கொள்வது. தாங்கள் பின்பற்றுகின்ற மார்க்கத்தை இழிவான ஆதாயத் தொழிலாக கருதுவது. எந்த நோக்கத்திற்காக தேவன் வரங்களை கிருபைகளை கொடுத்தாரோ அதை அந்த நோக்கத்திற்காக பயன்படுத்தாமல் தங்களுடைய ராஜ்யத்தை கட்டுவதற்கும், தங்கள் பொருளாதார வசதிகளை விருத்தியாக்கி கொள்வதற்கும் பயன்படுத்துகிற காரியமே பிலேயாமின் வழிகள். பிலேயாமின் வழிகள் என்பது அவர்களின்வாழ்க்கை முறை.(Life style). According to W.W.Wiersbe "His motive was to make money and he used his opportunities, not to serve God and His people, but to satisfy his craving for wealth. In other words, he was a hireling who sold himself to the highest bidder. He used “religion” only to make money and to cover up his sinful cravings. He also used “reliட gion” to entice people to sin." இன்றைக்கும் தேவனுடைய வரங்களைப் பெற்ற ஊழியர்கள் அதுவும் இலவசமாக பெற்ற வரங்களைக் கொண்டு தேவனுடைய இராஜ்யத்தை கட்டாமல் தங்களுடைய இராஜ்யத்தை கட்டுகிறார்கள். பொருளாதாரத்தை தங்களுக்கும் தங்களுடைய பிள்ளைகளுக்கும் பல தலைமுறைகளுக்கு சேர்த்து வைக்கிறார்கள். தேவனிடத்தில் இலவசமாய் பெற்று வரங்களை வியாபாரம் செய்வது தான் இந்த பிலேயாமின் வழிகள். இன்றைக்கு சபைகள் இந்த பிலேயாமின் வழிகளால் நிரம்பி இருக்கிறது. இன்றைக்கு விசுவாசிகள் இந்த பிலேயாம்களை அடையாளம் கண்டு அவர்களை விலக்கி அவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும். இப்படிப்பட்டவர்ளுக்கு நாம் ஒருபோதும் நம்முடைய பணத்தை வாரி இறைக்க கூடாது. அப்படி வாரி இறைப்பதன் மூலம் நமக்கு ஒரு நன்மையும் தேவனிடத்திலிருந்து வராது.

பிலேயாமின் முடிவு சொல்லும பாடம்.

உங்கள் சிந்தனைக்கு: பிலேயாமின் முடிவு சொல்லும பாடம். பேதுரு எழுதிய இரண்டாவது நிருபம் இரண்டாவது அதிகாரம் நாம் கவனத்தோடு படிக்க வேண்டிய ஒரு அதிகாரம். இந்த கடைசி காலங்களில் போலியான தீர்க்கதரிசிகள்,கள்ள‌போதகர்கள் சபையில் எப்படி நுழைவார்கள், அவர்களுடைய வழிமுறைகள், செயல்பாடுகள் என்ன, எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களுக்கு தேவன் வைத்திருக்கும் நியாயத்தீர்ப்பு என்ன? தண்டனை என்ன? என்பதை குறித்து இந்தப் பகுதி தெளிவாக விளக்குகிறது. இதை ஒவ்வொரு விசுவாசியும் கவனத்தோடு படித்து தங்கள் ஆத்துமாக்களை காத்துக் கொண்டு அதோடு கூட தங்கள் பணத்தையும் பாதுகாத்துக் கொள்ள இது உதவும். கள்ளதீர்க்கதரிசிகள், கள்ளபோதகர்கள் பல வகைகளில் வெளிப்படுவார்கள். அவர்கள் சபைக்கு வெளியில் இருந்து வருவதில்லை. சபையின் உள்ளேயே இருப்பார்கள். அவர்கள் தேவனின் திரித்துவத்தை (Trinity of God) மறுதலிப்…

இன்றைய பாலாக்குகள்

உங்கள் சிந்தனைக்கு: இன்றைய பாலாக்குகள். பேதுரு தன்னுடைய இரண்டாவது நிருபத்தில் கள்ள தீர்க்கதரிசிகளையும் போதகர்ளையும் குறித்து சொல்லும் போது பணத்துக்காக, உலக மேன்மைக்காக, சுகபோகங்களுக்காக, கர்த்தர் கொடுத்த வரங்களை விலைக்கு விற்கிறவர்களை   பணத்துக்கு விலை போனவர்களை பழைய ஏற்பாட்டில் உள்ள பிலேயாமோடு  ஒப்பிடுகிறார். அன்றைக்கு பிலேயாம் கர்த்தருடைய கட்டளைக்கு மீறி  பாலாக்கின் பணத்துக்காக இஸ்ரவேல் மக்களை சோரம் போக வழிவகுத்துக் கொடுத்தான். இதன்படி பார்த்தால் இன்றைக்கு உள்ள சோரம் போன‌ ஊழியக்காரர்களை பிலேயாமாக கருதுவோம் என்றால் பாலாக்குகளை யாருக்கு ஒப்பிடலாம் ? அன்றைக்கு பாலாக்கு நேர்மையான முறையில் இஸ்ரவேல் ஜனங்களை வெற்றிகொள்ள முடியாமல் பிலேயாமை விலை பேசி இஸ்ரவேல் ஜனங்களை சபிக்க சொன்னான் அது போல்  இன்றைக்கு விசுவாசிகள் நேரடியாக தேவனை அணுகி தங்களுக்கு தேவையான காரியங்களை பெற்றுக் கொள்வதற்கு பதிலாக வரங்கள் பெற்ற ஊழியக்காரர்களை  விலை பேசி தங்களுக்காக தேவனிடத்தில் ஆசிர்வாதத்தை பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்கிறார்கள். அவர்கள்மூலமாக செல்வங்களை, வெற்றியை பெற முயற்சிக்கிறார்கள். இந்த விலை போன ஊழியக்காரர்களும் இப்படிப்பட்ட விசுவாசிகளின் உண்மையான ஆவிக்குரிய நிலையை அறியாமல் அவர்கள் கொடுக்கிற பணத்திற்காக தேவனை சித்தத்தை அறியாமல் அவர்களுக்காக ஜெபித்து ஆசிர்வாதத்தை பெற்று தருவதாக ஏமாற்றுகிறார்கள்‌. தங்களுக்கு தேவன் கொடுத்த தாலந்தை தேவனுக்கென்று பயன்படுத்தாமல் தங்களுடைய பொருளாதார ஆசீர்வாதங்களுக்காக இந்த நவீன கால பிலேயாம்கள்‌ இயேசு கிறிஸ்துவுக்கு பதிலாக தாங்களே நடுவராக மாறி விடுகிறார்கள்.‌ இந்த மாதிரி வேலையாட்கள் உருவாக பாலாக்குகள் போன்ற விசுவாசிகளே காரணம் . இந்த நவீன கால பாலாக்குகள் கர்த்தருடைய வசனத்தின் படி நடந்தால், வேதத்தின் அடிப்படை சத்தியங்களை தெரிந்திருந்தால் , உண்மையாக தேவனுடைய மகிமைக்காக வாழ வேண்டும் என்கிற எண்ணம் இருக்குமானால் இப்படிப்பட்ட பிலேயாம்களை ஒரு போதும் உருவாக்க மாட்டார்கள்‌. எனவே நவீன கால பிலேயாம்களை  குற்றம் சாட்டுவதை விடுத்து வசனத்தின் மீது கடுகளவு கூட சார்ந்திராமல், அடிப்படை சத்தியங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற சிந்தனை சிறிதளவும் இல்லாத, தேவனைத் தேட வேண்டும் ஜெபிக்க வேண்டும் என்கிற சிந்தனை அணுவ ளவும் இல்லாத இந்த பாலாக்குகள் இருக்கின்ற வரை இந்த மாதிரி பிலேயாம்கள் உருவாகிக் கொண்டுதான் இருப்பார்கள் . அன்றைக்கு சும்மா இருந்த பிலேயாமை அழைத்து  ஐந்து தடவை பணம் கொடுத்து *இறுதியில் அவன் மடிவதற்கு காரணமான பாலாக்கு போல இன்றைக்கு நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் ஊழியக்காரர்களை கூட இந்த பணத்தாசை கொண்ட விசுவாசிகள் கூட்டம் அவர்களை வழிவிலக செய்து கொண்டிருப்பது மிகவும் பரிதாபம் .

இயேசு கிறிஸ்து பிதாவிடமிருந்து பெற்ற முதல் வெளிப்பாடு.

உங்கள் சிந்தனைக்கு: இயேசு கிறிஸ்து பிதாவிடமிருந்து பெற்ற முதல் வெளிப்பாடு. வேதத்தில் காணப்படுகின்ற புத்தகங்களை 40 பேர் எழுதியிருக்கிறார்கள். அந்த 40 நபர்களில் லூக்கா மட்டுமே யூதர் அல்லாதவர். புற இனத்தை சேர்ந்த இவர் இரண்டு நூல்களை எழுதி இருக்கிறார். ஒன்று இயேசுவைப் பற்றிய நற்செய்தி. மற்றொன்று அப்போஸ்தலருடைய நடபடிகள். இந்த இரண்டு புத்தகங்களின் பக்கங்கள் பவுல் எழுதிய 13 நூல்களை விட அதிகமானது. இவருடைய நற்செய்தி நூல் மத்தேயு மாற்க்கு எழுதிய நூல்களை விட வித்தியாசமானது. அதில் சொல்லப்படாத சில முக்கிய தகவல்களை இந்த நற்செய்தியில் பார்க்கலாம். உதாரணத்திற்கு இயேசு கிறிஸ்து பேசிய முதல் வார்த்தையை லூக்கா குறிப்பிடுகிறார். அதுவும் எப்போது என்றால் 12 வயதில் எருசலேம் தேவாலயத்தில் வேத போதகர்களோடு உறவாடிய அந்த நிகழ்வு. இயேசு சொன்ன அந்த முதல் வார்த்தையை கவனியுங்கள். " அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று அறியீர்களா என்றார்'. லூக்கா 2:49 இந்த வார்த்தையை சாதாரணமாக கடந்து போக முடியாது. யூதர்களுடைய பாரம்பரியத்தில் 12 வயது ஆன ஒருவன் பூரணமாக ஆணாக மாறிவிடுகிறான். மரியாள் நானும் உன் தகப்பனும் தேடினோமே என்று சொன்னபோது அவர் யோசேப்பை தன் தகப்பனாக கருதாதபடி தன்னுடைய தகப்பனை பரலோகத்தின் தகப்பனாக சொல்கிறார்.. அதனுடைய அர்த்தம் என்னவென்றால் இனி நான் உங்களுக்கு சொந்தமல்ல நான் பரலோக பிதாவுக்கு சொந்தமானவன் என்பதுதான். இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளக்கூடிய காரியம் என்னவென்றால் நாம் என்றைக்குஆண்டவரை ஏற்றுக் கொள்கிறோமோ அந்த வினாடி முதல் 'நாம் யார்' என்கிற பார்வை நமக்கு வர வேண்டும். நாம் யார், நாம் யாருக்கு சொந்தம், நாம் யாருக்காக வாழ வேண்டும், நம்முடைய இலக்கு என்ன, நம்முடைய சத்ரு யார் போன்ற பல அடிப்படை வெளிப்படுத்தல்களை நாம் பெற்றுக் கொள்ளாத வரை ஆவிக்குரிய வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாது. தேவன் நம்மை அழைத்த நோக்கத்தை ஒருபோதும் இந்த பூமியில் நிறைவேற்ற முடியாது. இயேசு கிறிஸ்து 12 வயதில் இந்த வெளிப்படுத்தலை பெற்றுக்கொண்டு ஏறக்குறைய 21 ஆண்டுகள் தேவன் தன்னை அழைத்த நோக்கத்தை இந்த உலகத்தில் நிறைவேற்றினார். நமக்கும் 'நாம் யார்' என்கிற பார்வையை தேவன் நமக்கு தருவாராக..

இயேசுவின் ஜெப வாழ்க்கை

உங்கள் சிந்தனைக்கு: ஜெபத்திலே ஆரம்பித்து ஜெபத்திலே முடிந்த இயேசு கிறிஸ்துவின் இந்த மண்ணுலக ஆவிக்குரிய வாழ்க்கை. நான்கு நற்செய்தி நூல்களில் மிகவும் அதிகமாக விரும்பி படிக்கப்படுகிற நற்செய்தி நூல் லூக்கா எழுதிய நூலாகும் . அதில் பல சிறப்பு அம்சங்கள் காணப்படுகின்றன. ஏனைய மூன்று நற்செய்தி நூல்களில் சொல்லப்படாத சில முக்கிய தகவல்கள், ஆவிக்குரிய உண்மைகள் இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந நற்செய்தி நூல் மாற்கு எழுதிய நற்செய்தி நூலை தழுவியதாக சொல்லப்பட்டாலும் லூக்கா தன்னுடைய நூலை பவுலோடு பழகிய ஆதாரங்களின் அடிப்படையில் எழுதினார். இந்த நூலில் உள்ள சிறப்பு அம்சங்களில் ஒன்று இயேசு கிறிஸ்துவை பற்றியுள்ள ஜெபக்குறிப்புகள். இந்த நூலில் 9 ஜெபங்களை பிதாவை நோக்கி இயேசு கிறிஸ்து ஏறெடுத்ததாக பார்க்கலாம். அதைத் தவிர இந்த உலகத்தில் குமாரனாகிய தேவன் மனிதனாக தன்னுடைய ஆவிக்குரிய பயணத்தை ஜெபத்தோடு ஆரம்பித்து ஜெபத்தோடு முடிப்பதாக லூக்கா குறிப்பிடுகிறார். மத்தேயு மற்றும் மாற்கு இயேசு கிறிஸ்து அபிஷேகம் பெற்றதாக சொல்லப்படுகிற இடத்தில் லூக்கா சற்று விவரமாக" இயேசு ஜெபம்பண்ணுகையில் வானம் திறக்கப்பட்டு பரிசுத்த ஆவியானவர் புறாவை போல் இறங்கினார் "என்று எழுதுகிறார். அதாவது அவருடைய ஆவிக்குரிய வாழ்க்கை ஜெபத்தோடு ஆரம்பிக்கிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டும் .இன்னும் சொல்லப்போனால் அவருடைய முதல் ஜெபம் கேட்கப்பட்டதாக எடுத்துக் கொள்ளலாம். தன்னுடைய ஆவிக்குரிய இறுதிப் பயணத்தில் பிதாவை நோக்கி "உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்" என்று விண்ணப்பித்து தன் ஜீவனை விட்டார் என்று லூக்கா குறிப்பிடுகிறார். ஆம் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் ஆவிக்குரிய வாழ்க்கை ஜெபத்தில் ஆரம்பித்து ஜெபத்தில் முடித்ததாக ஒரு அருமையான சத்தியத்தை தன்னுடைய நற்செய்தியில் எழுதியுள்ளார். இதுவே நம் எல்லோருக்கும் இயேசு கிறிஸ்து வைத்துள்ள ஒரு முன்மாதிரி. நம்முடைய இறுதி நேரங்கள் ஜெபத்திலே முடியும் என்றால் அதைவிட மிகப்பெரிய சிலாக்கியம் வேறு ஒன்றும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட கிருபையை நம் எல்லோருக்கும் தேவன் தருவாராக. தேவன் மகிமைப்படுவாராக.

இயேசுவின் ஜெப வாழ்க்கை

உங்கள் சிந்தனைக்கு: ஜெபத்திலே ஆரம்பித்து ஜெபத்திலே முடிந்த இயேசு கிறிஸ்துவின் இந்த மண்ணுலக ஆவிக்குரிய வாழ்க்கை. நான்கு நற்செய்தி நூல்களில் மிகவும் அதிகமாக விரும்பி படிக்கப்படுகிற நற்செய்தி நூல் லூக்கா எழுதிய நூலாகும் . அதில் பல சிறப்பு அம்சங்கள் காணப்படுகின்றன. ஏனைய மூன்று நற்செய்தி நூல்களில் சொல்லப்படாத சில முக்கிய தகவல்கள், ஆவிக்குரிய உண்மைகள் இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந நற்செய்தி நூல் மாற்கு எழுதிய நற்செய்தி நூலை தழுவியதாக சொல்லப்பட்டாலும் லூக்கா தன்னுடைய நூலை பவுலோடு பழகிய ஆதாரங்களின் அடிப்படையில் எழுதினார். இந்த நூலில் உள்ள சிறப்பு அம்சங்களில் ஒன்று இயேசு கிறிஸ்துவை பற்றியுள்ள ஜெபக்குறிப்புகள். இந்த நூலில் 9 ஜெபங்களை பிதாவை நோக்கி இயேசு கிறிஸ்து ஏறெடுத்ததாக பார்க்கலாம். அதைத் தவிர இந்த உலகத்தில் குமாரனாகிய தேவன் மனிதனாக தன்னுடைய ஆவிக்குரிய பயணத்தை ஜெபத்தோடு ஆரம்பித்து ஜெபத்தோடு முடிப்பதாக லூக்கா குறிப்பிடுகிறார். மத்தேயு மற்றும் மாற்கு இயேசு கிறிஸ்து அபிஷேகம் பெற்றதாக சொல்லப்படுகிற இடத்தில் லூக்கா சற்று விவரமாக" இயேசு ஜெபம்பண்ணுகையில் வானம் திறக்கப்பட்டு பரிசுத்த ஆவியானவர் புறாவை போல் இறங்கினார் "என்று எழுதுகிறார். அதாவது அவருடைய ஆவிக்குரிய வாழ்க்கை ஜெபத்தோடு ஆரம்பிக்கிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டும் .இன்னும் சொல்லப்போனால் அவருடைய முதல் ஜெபம் கேட்கப்பட்டதாக எடுத்துக் கொள்ளலாம். தன்னுடைய ஆவிக்குரிய இறுதிப் பயணத்தில் பிதாவை நோக்கி "உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்" என்று விண்ணப்பித்து தன் ஜீவனை விட்டார் என்று லூக்கா குறிப்பிடுகிறார். ஆம் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் ஆவிக்குரிய வாழ்க்கை ஜெபத்தில் ஆரம்பித்து ஜெபத்தில் முடித்ததாக ஒரு அருமையான சத்தியத்தை தன்னுடைய நற்செய்தியில் எழுதியுள்ளார். இதுவே நம் எல்லோருக்கும் இயேசு கிறிஸ்து வைத்துள்ள ஒரு முன்மாதிரி. நம்முடைய இறுதி நேரங்கள் ஜெபத்திலே முடியும் என்றால் அதைவிட மிகப்பெரிய சிலாக்கியம் வேறு ஒன்றும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட கிருபையை நம் எல்லோருக்கும் தேவன் தருவாராக. தேவன் மகிமைப்படுவாராக.

பிலேயாமின் தவறு என்றால் என்ன?

உங்கள் சிந்தனைக்கு: பிலேயாமின் தவறு என்றால் என்ன? The error of Balaam. இவர்களுக்குக் கேடு விளைக! ஏனெனில் இவர்கள் காயின் சென்ற வழியில் சென்றார்கள்; கூலிக்காகப் பிலேயாமின் தவற்றைத் துணிந்து செய்தார்கள்.யூதா 1:11 இது கத்தோலிக்க மொழிபெயர்ப்பு. இதில் பிலேயாமின் தவறு என்று குறிப்பிடப்பட்டுள்ளது நம்முடைய பவர் மொழிபெயர்ப்பில் இது தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்திலும்" error of Balaam" என்று தான் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அப்படி என்றால் பிலேயாமின் தவறு என்றால் என்ன? தவறு என்றால் இந்த இடத்தில் தப்பு கணக்கு என்று அர்த்தம். இவனுடைய தப்பு கணக்கு என்னவென்றால் இஸ்ரவேல் மக்கள் புற இனத்தாரோடு கலந்து விட்டால் அவர்கள் தங்களுடைய தனித்துவத்தை இழந்து விடுவார்கள். அதனால் தேவன் அவர்களை கைவிட்டு விடுவார் என்று தவறாக பிலேயாம் கணித்து விட்டான். இஸ்ரவேல் ஜனங்களைப் பற்றிய கடவுளின் ‌நீண்ட காலத்திட்டத்தையோ அவர்கள் மூலமாக இயேசு கிறிஸ்து‌ என்னும் இரட்சகர் தோன்றக்கூடிய காரியத்தையோ அவனால் அறிய முடியவில்லை . அவன் போட்ட கணக்கெல்லாம் இஸ்ரவேல் ஜனங்களின் பாவத்தினிமித்தம் தேவன் அவர்களை கைவிட்டு விடுவார் என்பதுதான். அதுமாத்திரமல்ல தேவனுடைய கட்டளைக்கு மீறி செய்த தன்னுடைய குற்றத்தையும் தேவன் கண் சாடையாக இருந்து விடுவார் என்கிற தவறான கணக்கையும் போட்டு விட்டான். இந்த இரண்டுமே அவன் செய்த பிழைகள். அவன் போட்ட கணக்கு தப்பு கணக்காக மாறிவிட்டது. கடவுள் இஸ்ரவேல் ஜனங்களை தண்டித்தார். ஏறக்குறைய 24 ஆயிரம் பேர் வாதையினால் மடிந்தார்கள் என்பது உண்மைதான். ஆனால் தேவன் அவர்களை கைவிடவில்லை அதே வேளையில் பிலேயாம் பாலாக்கிடம் பெற்ற பணத்தை அனுபவிக்க கூட முடியாமல் அவன் இஸ்ரவேல் ஜனங்களால் படுகொலை செய்யப்பட்டான். தன்னைக்குறித்த தேவனுடைய கணிப்பும் அவனுக்கு தவறாக போய்விட்டது. அதுபோல தான் இன்றைக்கும் தேவனுடைய பிள்ளைகள் தவறு செய்யும்போது தேவன் அவர்களை கைவிட்டு விடுவார் என்கிற தவறான உபதேசத்தை விசுவாசிகள் மத்தியில் சாத்தான் விதைத்து கொண்டே இருக்கிறான். தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட பிள்ளைகளை தேவன் ஒருபோதும் கைவிடுவதில்லை. அவர்களுக்கு சிட்ச்சை உண்டு. ஆனால் அவர்களை கைவிடமாட்டார். தேவனை அறியாத மக்களுக்கோ தண்டனை நிச்சயம் உண்டு. அவர்களை கடவுள் புறக்கணித்து விடுவார். நீதிமான் ஏழு தரம் விழுந்து போனாலும் அவர்கள் மன்னிப்பை‌ கோரும்பொழுது அவர்களை எழுப்ப மன்னிக்க தேவன் உண்மையுள்ளவராய் இருக்கிறார். இது கிருபையின் காலம். வேதத்தில் ஆயிரக்கணக்கான நபர்களை பற்றி சொல்லப்பட்டிருந்தாலும் பிலேயாமைபோல‌ ஒரு மர்மமான நபர் வேதத்தில் யாரும் கிடையாது. (The most mysterious character in the Bible). அவனுக்கு தேவனைப் பற்றிய அறிவு இருந்தது உண்மைதான் ஆனால் அந்த அந்த அறிவு மூளைக்கு சென்றதே தவிர இதயத்திற்கு செல்லவில்லை. அவன் இஸ்ரவேலின் தேவனை உன்னதமானவர் என்றும் சர்வ வல்லவர் என்றும் அறிந்திருந்தாலும் அந்த அறிவு அவனை காப்பாற்றவில்லை.எண்ணா 24:16. தேவனைப் பற்றிய தவறான கணிப்பு அவனை நிர்மூலமாக்கியது. நம்முடைய தேவனைப் பற்றிய அறிவு எப்பொழுதும் மூளையை‌ சார்ந்து இருக்கக் கூடாது .அது இதயத்தை சார்ந்திருக்க வேண்டும் என்பது இவன் மூலமாக கற்றுக் கொள்ளும் பாடம்.

அதேனே பட்டணமும் கொரிந்து பட்டினமும் .

பவுலின் ஊழியம் -அதேனே பட்டணமும் கொரிந்து பட்டினமும் . பவுல் புதிய ஏற்பாட்டின் மிக பெரிய அப்போஸ்தலர்களில் ஒருவர் . சபையின் ரகசியங்களை தேவனிடத்தில் பெற்றவர். புதிய ஏற்பாட்டில் அனேக சபைகளை நிறுவிய தேவ மனிதன் . இப்படி அவரின் பெருமைகளை சொல்லிக்கொண்டு போகலாம். அனாலும் அவர் அதேனே(ATHENS ) பட்டினத்தில் மிக பெரிய காரியங்களை சாதிக்க முடிய வில்லை.அதேனே பட்டிணம் கிரேக்க கலாசாரத்தின் தலைநகரம். Socrates, Aristotle போன்ற தத்துவ ஞானிகளை உருவாக்கிய நகரம் . இந்த பட்டினத்தில் பவுலின் பிரசங்கத்தை கேட்டு சிலர் மட்டும் விசுவாசிகளானார்கள். இங்கு பவுல் அநேக நாட்கள் தாங்கவில்ல. ஏன் ?அந்த நிலம் நல்ல நிலமாக இல்லாமல் இருந்திருக்கலாம்..அல்லது பவுல் அணுகிய முறை, வழக்கமான முறைகளில் இருந்து வேறுபட்ட காரணமாய் இருக்கலாம் ( compare Acts 17:1-3, 16:12-14 with Acts 17:22-30 ) இதில் மிக முக்கிய பாடத்தை நாம் கற்று கொள்ளலாம் . நம்முடைய சுவிசேஷங்களில் தேவ வார்த்தைகளை முக்கிய படுத்த வேண்டும் .புற இன மக்களின் வேதங்களின் காரியங்களோடு வேதத்தை, இயேசுவை ஒப்பிட்டு கிறிஸ்துவை நிலை நிறுத்துகிறோம். இது . . சரியான அணுகுமுறை அல்ல. அது அநேக நேரங்களில் இந்த முறை வார்த்தையில் உள்ள வல்லமையை இழக்க செய்துவிடும் . பவுல் இதை அறிந்த பின்தான் கொரிந்து பட்டினத்தில் கூறியதை1Corin2;1-6 ல் பார்க்கலாம் .நம்முடைய நோக்கம் சிலுவையில் அறையப்பட்ட அவரைமட்டும் நாம் அறிவித்தால் போதும்

Looking at the bucket and forgetting the fountain

Because of our proneness to look at the bucket and forget the fountain, God has frequently to change His means of supply to keep our eyes fixed on the source. –Watchman Nee

Read the Holy Scriptures

My mind now being more open and enlarged, I began to read the Holy Scriptures upon my knees, laying aside all other books and praying over, if possible, every line and word. George Whitefield

Trustworthy leader

A trustworthy leader goes the extra mile to remedy strained relationships, even when it doesn’t appear to be required.- John Maxwell

Character of God

Character of God True faith rests upon the character of God and asks no further proof than the moral perfections of the One who cannot lie.- A.W. Tozer

Prayer

When the devil sees a man or woman who really believes in prayer, who knows how to pray, and who really does pray, and, above all, when he sees a whole church on its face before God in prayer, he trembles as much as he ever did, for he knows that his day in that church or community is at an end.R. A. Torrey

Sex has a God given style

உங்கள் சிந்தனைக்கு! "Sex has a God given style " 1தெசலோனிக்கிய 4:5 ல் சொல்லப்பட்ட சரீரபாண்டம் என்பதற்கு மனைவி என்றும் பொருள் கொள்ளலாம் . R S V மொழிபெயர்ப்பிலும் திருவிவிலியம் புதிய மொழி பெயர்ப்பிலும் இதை காணலாம் . “that each one of you know how to take a wife for himself in holiness and honour, 5not in the passion of lust like heathen who do not know God” RSV version “ உங்களில் ஒவ்வொருவரும் தம் மனைவியைத் தூயவராகக் கருதி, மதிப்புடன் நடத்த அறிந்திருக்க வேண்டும்.” திருவிவிலியம் புதிய மொழிபெயர்ப்பு நாம் பயன் படுத்தும் மொழிபெயர்ப்பு “உங்களில் அவனவன் தன்தன் சரீரபாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து” that each of you should learn to control your own body[a] in a way that is holy and honourable. NIV இதன் அடிப்படை மிக முக்கியமானது. அதாவது மனைவியை வெறும் சரீர சுகம் தரும் பொருளாக பார்க்க கூடாது. கணவன் மனைவி உறவில் எந்த விதமான வன்முறையோ நிர்பந்தமோ கொடுமையோ கற்பழிப்போ இருக்கக்கூடாது. கணவன் தன் மனைவியைத் தூயவராகக் கருதி, மதிப்புடன் நடத்த அறிந்திருக்க வேண்டும். Marriage is not a form of legalised lust. As John R.W.Stott pointed out it is called “God given sex style” There should not be any “sexploitation” இல்லற உறவில் மோகம்(Lust) இருக்கக்கூடாது. அன்பு (Love)காணப்படவேண்டும். “We should not desire to posses more than one should have in any area of life”(sexual trespass ) உலக மக்களை போல அல்லாமல் நாம் கணவன் மனைவி உறவில் God given style (Holiness and honour) காணப்படவேண்டும். ON THIS DAY

Word for God.

Without doubt, the mightiest thought the mind can entertain is the thought of God, and the weigh test word in any language is its word for God.-A.W. Tozer

பலிகள்

உங்கள் சிந்தனைக்கு: இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுக்கு சர்வாங்க தகனபலி, போஜனபலி, சமாதான பலி, பாவ நிவாரண பலி ,குற்ற நிவாரண பலி, பானபலி‌  ஆகிய இந்த ஆறு பலிகளை செலுத்தினார்கள். இதில்  முதல் நான்கு பலிகள் விருப்பப்பட்டு செய்ய வேண்டிய பலிகள் (voluntary). கடைசி இரண்டு பலிகள்  நாம் தவறு செய்யும்போது கட்டாயமாக செய்ய வேண்டிய பலிகள் (compulsory). இந்த பலிகள் புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவோடு சம்பந்தப்பட்ட காரியங்கள். இயேசு கிறிஸ்து நமது பாவங்களுக்காக பலியாக செலுத்தப்பட்ட காரியங்களுக்கு அவைகள் நிழலாக இருக்கிறது.‌ நாமும் இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்கு‌ அழைக்கப்பட்டிருக்கிறோம். 1 பேதுரு 2:5 இந்த பலிகளை செலுத்துவதற்கான முக்கியமான நோக்கங்கள் மூன்று. "Commitment communion and cleansing".W W.Wiersbe நம்மை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கவும், அவரோடு உறவாடுவதற்கும், நாம் பரிசுத்தமாகுவதற்கும்தான் ஆவிக்குரிய பலிகளை நாம் தேவனுக்கு செலுத்த வேண்டும். அது ஆராதனையாக இருந்தாலும் சரி, நம்முடைய துதிகளாக இருந்தாலும் சரி, ஊழியங்களுக்கு கொடுக்கிற காணிக்கையாக இருந்தாலும்‌ சரி ,அவைகள் மேற்கூறிய மூன்று நோக்கத்தை நம் நம்முடைய வாழ்க்கையில் நிறைவேற்றாவிட்டால் நாம் செலுத்துகிற ஆவிக்குரிய பலிகள் அர்த்தமற்றதாகிவிடும். இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய ஆராதனைகளும், துதிகளும் ,வெறுமனே உற்சாகப்படுத்துவதற்காகவோ, entertainmentக்காகவோ இருக்கக் கூடாது. இந்த அடிப்படை சத்தியத்தை புரியாமல் ஆராதனை என்கிற பெயரில், துதி என்கிற பெயரில் நடைபெறுகின்ற காரியங்கள்  கர்த்தருடைய நாமத்தை புறஜாதிகள் மத்தியில் அவமானப்படுத்துவதாக உள்ளது. மிகப்பெரிய ஆவிக்குரிய நோக்கத்திற்காக தேவனுக்கு செலுத்த வேண்டிய ஆவிக்குரிய பலிகள் விளம்பரங்களாக மாறிவிட்டது. ஆலயங்கள் நாடக மன்றங்களாக ஆக்கப்பட்டுவிட்டது.மன மகிழ்ச்சி அரங்கங்களாக மாற்றப்பட்டுவிட்டது. (Recreation club) விசுவாசிகள்‌ லேவியராகமம் புத்தகத்தை வெறுமனே சரித்திர  நிகழ்வுகளாக படிக்காமல் புதிய ஏற்பாட்டு சத்தியத்தோடு பொருத்திப் பார்த்தால் நம்முடைய மனக்கண்கள் திறந்து பலிகளைப் பற்றி உள்ள ஒரு புதிய பார்வை நமக்கு கிடைக்கும். தேவனுடைய வார்த்தையின் மூலம்  கிடைக்கக்கூடிய வெளிச்சம் மிகவும் உன்னதமானது . அவைகள் தரக்கூடிய ஆவிக்குரிய விடுதலை பெரியது. அந்த விடுதலையை வேறு எந்த ஒரு காரியமும் நமக்கு தராது.காது உள்ளவன் கேட்க கடவன்

போஜனபலி

உங்கள் சிந்தனைக்கு; இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுக்கு செலுத்த  வேண்டிய பலிகளில்  சர்வாங்க தகனபலிக்கு அடுத்ததாக போஜனபலி மிகவும் முக்கியமானது. இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய காரியங்கள். இந்த பலியை செலுத்துகிறவன் மெல்லிய மாவையும் எண்ணையும் கொண்டு வர வேண்டும்.    கொண்டுவரப்பட வேண்டிய அந்த மாவு புளிப்பு இல்லாத மாவாக இருக்க வேண்டும். அந்த போஜனபலி உப்பினால் சாரமாக்கப்பட வேண்டும். இந்த போஜன பலி இயேசு கிறிஸ்து "நானே வானத்தில் இருந்து இறங்கி வந்த மெய்யான அப்பம்"  என்று சொன்னதற்கு அடையாளமாய் இருக்கிறது. வார்த்தையாக இந்த அப்பத்தை நாம் அனுதினமும் உட்கொள்ளும் பொழுது அது நமக்கு ஆவிக்குரிய வளர்ச்சியை தரும் . அதே வேளையில் இந்த தானிய காணிக்கை  பலியில்‌ கவனிக்க வேண்டிய மூன்று காரியங்கள். 1. தேவ சமூகத்தில் சமர்ப்பிக்கப்படும் மாவு புளிப்பு இல்லாமல் இருக்க வேண்டும். அதாவது நம்முடைய வாழ்க்கை பொல்லாப்பு, துர்க்குணம் இல்லாத வாழ்க்கையாக இருக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கை மனத் தூய்மையும் உண்மையும் உள்ள வாழ்க்கையாக இருக்க வேண்டும்.1கொரி‌5:8 நம்முடைய வாழ்க்கையில் உண்மை இல்லாமல் ,மனதில் தூய்மை இல்லாமல் ,கொடூர குணத்தோடு, இரக்கம் இல்லாமல் மற்றவர்களை அடிமைகளாக நடத்தி கொடுக்கும் ‌ எந்த காணிக்கையையும் தேவன் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார். அந்த காணிக்கையை ஒருபோதும் அங்கீகரிக்கவும் மாட்டார். வேண்டுமானால் அது விளம்பரத்திற்கும், ஊழியக்காரர்களை பிரியப்படுத்துகிற காரியத்திற்கு மட்டுமே பயன்படும். 2. எந்த போஜன பலியும் உப்பினால் சாரமாக்கப்பட்டதாக இருக்க வேண்டும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொன்னபடி நாம் இந்த உலகத்திற்கு உப்பாக வாழ இயலாவிட்டால் நாம் கொடுக்கிற காணிக்கை எவ்வளவு உயர்ந்த காணிக்கையாக இருந்தாலும்  அது பரலோகத்தில் நம்முடைய கணக்கில் வரவு வைக்கப்படாது. 3.  மாவோடு எண்ணையையும் கொண்டு வர வேண்டும். எண்ணை 'அபிஷேகத்தை' குறிக்க கூடியது. நாம் ஆவியினால் மறுபடியும் பிறவாமல்  மறுப்பிறப்பின் அனுபவம் இல்லாமல் ஆண்டவருக்கு செலுத்துகின்ற எந்த காணிக்கையும் பரலோகத்தின் வாசலைக்கூட எட்டிப் பார்க்காது. இன்றைக்கு காணிக்கைகளைப் பற்றி பேசுகின்ற போதகர்கள், நற்செய்தி பணியாளர்கள், மிஷனரி தலைவர்கள் இந்த அடிப்படை குணாதிசயங்களை போதிக்காமல் விசுவாசிகளிடம் பணத்தை மட்டும் கேட்பது மிகவும் அநியாயம். இப்படிப்பட்ட போதனை கொள்ளை  நோயை போன்றது. போஜனபலியை பற்றிய  காரியங்கள் லேவியராகம புத்தகம் இரண்டாவது அதிகாரத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதை தெளிவாக படித்தால் இன்னும் பல சத்தியங்கள் நமக்கு விளங்கும். காது உள்ளவன் கேட்கக் கடவன்

லோத்தின் மூலம் நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடம்

லோத்தின் மூலம் நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடம். அவன் ஆபிரகாமை விட்டு பிரிந்து தனி வழி சென்றது பெரிய தவறல்ல. ஏனென்றால் எல்லா நிலைகளிலும் இரண்டு பேர் ஒற்றுமையாக செயல்படுவது என்பது முடியாத காரியம். இரண்டு பெரும் தலைவர்கள் பிரிந்து போகிற காரியத்தை வேதம் அனுமதிக்கிறது. பர்னபா பவுலை ஊழியத்துக்கு அறிமுகப்படுத்தினாலும், அந்தியோகியா சபைக்கு கொண்டு வருவதற்கு காரணமாக இருந்தாலும் அவர்கள் கடைசி வரை ஒரே நிலையில் செல்லவில்லை. பேதுரு இயேசுவால் தெரிந்து கொள்ளப்பட்ட அப்போஸ்தலனாக காணப்பட்டாலும் அவரும் பவுலும் எல்லா காரியங்களிலும்ஒத்துப் போகவில்லை. எனவே மிகப் பெரிய இரண்டு பேர் ஒரே வழியில் பயணம் செய்வது என்பது கூடாத காரியம். அது தவறான செயல் அல்ல. லோத்து சோதோம் கொமோராவை தெரிந்தெடுத்த அந்த தெரிவுதான் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுத்தியது. விளைவு தேவனுக்கு விரோதமாக ,இஸ்ரேல் ஜனங்களோடு எப்பொழுதும் போராடுகிற இரண்டு மிகப்பெரிய சந்ததிகளை(அம்மோன், மோவாபியர்கள்) உருவாக்கியது. உலகத்தோடு சமரசம் செய்து சோதோம் கொமோராவை தெரிந்து கொண்ட இந்த செயல் தேவனுக்கு விரோதமாகவே மாறிவிட்டது . சில வேலைகளில் நாம் எடுக்கிற சில தீர்மானங்கள், உலகத்தோடு சமரசம் செய்து கொண்டிருக்கிற காரியங்கள் நமக்கு பாதிப்பு ஏற்படுத்துவதோடு அந்த காரியங்கள் தேவனுடைய இராஜ்ஜியவிருத்திக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது லோத்தின் மூலமாக நாம் கற்றுக் கொள்ளக் கூடிய ஒரு காரியம்

Importance of "Born again" experience.

Importance of "Born again" experience. பழைய ஏற்பாட்டில் தேவனுக்கும், அபிரகாமுக்கும் இடையில் ஏற்பட்ட உடன்படிக்கைக்கு அடையாளமாக விருத்தசேதனம் கொடுக்கப்பட்டது ஆதி 17:11 விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களில் ஆபிராமுக்கு அடுத்தபடியாக இஸ்மவேல்தான் முதலில் விருத்தசேதனம் செய்யப்பட்டான் . ஈசாக்குக்கு முன்பாகவே இஸ்மவேல்தான் விருத்தசேதனம் பண்ணப்பட்டான். ஆனால் அவன் வாக்குத்தத்தத்தின் பிள்ளையாக கருதப்படவில்லை. புதிய ஏற்பாட்டிலும் இதற்கு அடையாளமாக காணப்படுவது திருமுழுக்கு. ஒரு மனிதன் இந்த திருமுழுக்கின் அடிப்படையில் மட்டும் தேவனுடைய காணக்கூடாத சபையில் அங்கமாக முடியாது. வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியினால் உயிர்ப்பிக்கப்பட்டு, மறுபடியும் பிறந்த நபர்கள் மட்டுமே தேவனுடைய ஆவிக்குரிய சபையில் அங்கமாக மாறமுடியும். காணக் கூடிய சபையில் வேண்டுமானால் ஆவியினால் மறுபடியும் பிறக்காமல் ஒருவன் திருமுழுக்குப் பெற்று அங்கமாக மாறலாம் ஆனால் தேவனுடைய காணக்கூடாத சபையில் மறுபடியும் பிறந்த நபர்கள் மட்டுமே புதிய உடன்படிக்கையின் பிள்ளைகளாக கருதப்படுவார்கள். மறுபிறப்பின் அனுபவம் என்பது மிகவும் ஆழமான அடித்தளம். இந்த அடித்தளம் இல்லாமல் கட்டப்படும் கட்டடங்கள், சபைகள் இந்த உலகத்தில் தேவ சித்தத்தை செய்ய முடியாது. மறுபிறப்பின் அனுபவம் இல்லாமல் எண்ணிக்கையை மட்டும் கூட்டிக்கொண்டு, அதிகரித்துக் கொண்டு கட்டப்படும் கட்டடங்கள் எவ்வளவு பெரிய சபைகளாக உலகத்தில் பார்வையில் தோற்றமளித்தாலும் அவர்கள் தேவனுடைய பார்வையில் சபைகளாக கருதப்படமாட்டாது.They are merely buildings.

ஆங்கில அறிவை வளர்க்க வேண்டிய தேவை!

ஆங்கில அறிவை வளர்க்க வேண்டிய தேவை! கிறிஸ்தவ இலக்கிய உலகில் 4  மொழிகளுக்கு  சிறப்பான இடம் உண்டு. 1. பழைய ஏற்பாடு அநேகமாக அனைத்தும் எபிரேய மொழியில் எழுதப்பட்டது 2.புதிய ஏற்பாட்டில் உள்ள  அனைத்து நூல்களும்  கிரேக்க  மொழியில் எழுதப்பட்டது. முதல் 3 நூற்றாண்டுகள்  கிறிஸ்தவத்தில் கிரேக்க  மொழியின் ஆதிக்கம் அதிகமாக  காணப்பட்டது. 3. கிபி  400 ல் ஜெரோம்  என்பவர்  வேதத்தை லத்தின்  மொழியில் மொழி  பெயர்த்தார். அதுமுதல்  லத்தின்  மொழி ஆதிக்கம்  சுமார் 1000 ஆண்டுகள் நீடித்தது . Latin Came to be the Language of Early Christendom. From about 500 to 1500 Latin was the principal language of the church. 4. பின்பு வேதம் ஆங்கில   மொழியில்   மொழிபெயர்க்கப்பட்ட  பின்பு அதின் தாக்கம்  இந்நாள்  வரை உள்ளது. ஆங்கில மொழியில் இன்று நம் கையில் ஆயிரக்கணக்கான   கிறிஸ்தவ இலக்கியங்கள்,  100க்கும்  மேலான  வேதாகம மொழிப்பெயர்ப்புகள்,  விதவிதமான இறையியல் ஆய்வுகள், கட்டுரைகள், வேதாகம வியாக்கியானங்கள்(commentaries )  Bible concordance,  Bible Dictionary  Study Bibles உள்ளன என்று  சொல்லி  கொண்டே  போகலாம். இவைகள்  எல்லாம் 20 ,30 ஆண்டுகள்  தேவசமுகத்தில் இணைந்து தங்களை  தேவனுக்கு  ஒப்புக்கொடுத்து எழுதப்பட்ட,  தேவனிடத்தில்  இருந்து பெறப்பட்ட  முத்துக்கள்.  Dake's Study Bible  ஒரு உதாரணம். . இறையியல்பற்றி ஆயிரக்கணக்கான நூல்கள் உள்ளன. நமது தமிழில் அந்த அளவிற்கு சிறந்த நூல்கள் இறையியல் ஆய்வுகள்,கட்டுரைகள்,வேதாகம வியாக்கியானங்கள்(commentaries ) Bible concordance, Bible Dictionary  Study Bibles என்பவை கிடையாது. இதை தமிழ்  கிறிஸ்தவ  உலகம்  முதலில்  புரிந்து  கொள்ளவேண்டும். எனவே தமிழ்  கிறிஸ்தவ  உலகம்   ஆங்கிலத்தில் உள்ளவைகளை பயன்படுத்திக் கொள்ள  வேண்டும். இதை சாதாரண எளிய  மக்களுக்கு கொண்டு செல்லவேண்டும். இறையியல் அறிவு,   வேதஅறிவு, வியாக்கியானம், போதனைகள் இவைகள் "ஆங்கில படித்த மக்களுக்கு மட்டும்” என்கிற நிலைதான்  காணப்படுகிறது.    இது மாறவேண்டும். நான் அறிந்த வரையில் இறையியல், வேதவியாக்கியானங்களை சாதாரண  மக்களுக்கு கொண்டு சென்றவர்கள் வெகு சிலர்  மட்டுமே. “எனக்கு தமிழ்  மட்டும் போதும்" “என்  மொழி  எனக்கு  போதும்"  "வேறு மொழி  எனக்கு  தேவை  இல்லை" என்று    சொல்பவர்களை என்னவென்று   சொல்லுவது? ஆங்கில மொழியை  படிக்க உற்சாகப்படுத்தி ஆங்கில மொழியில்  உள்ள  முத்துக்களை,   பொக்கிஷங்களை நாம் அறிந்து,   என்  தமிழ்  மக்கள் அறிந்து கொள்ள அதை பயன் படுத்துவதே உண்மையான  பாரம். இன்றைய தமிழ்  கிறிஸ்தவத்தில் சரியான  வேத போதனை(Bible teaching) இல்லாமல் இருப்பதற்கு ஆங்கில இலக்கியங்களை பயன்படுத்தாமல்  இருப்பதும் ஒரு காரணம்.

ஆங்கில அறிவை வளர்க்க வேண்டிய தேவை!

ஆங்கில அறிவை வளர்க்க வேண்டிய தேவை! கிறிஸ்தவ இலக்கிய உலகில் 4  மொழிகளுக்கு  சிறப்பான இடம் உண்டு. 1. பழைய ஏற்பாடு அநேகமாக அனைத்தும் எபிரேய மொழியில் எழுதப்பட்டது 2.புதிய ஏற்பாட்டில் உள்ள  அனைத்து நூல்களும்  கிரேக்க  மொழியில் எழுதப்பட்டது. முதல் 3 நூற்றாண்டுகள்  கிறிஸ்தவத்தில் கிரேக்க  மொழியின் ஆதிக்கம் அதிகமாக  காணப்பட்டது. 3. கிபி  400 ல் ஜெரோம்  என்பவர்  வேதத்தை லத்தின்  மொழியில் மொழி  பெயர்த்தார். அதுமுதல்  லத்தின்  மொழி ஆதிக்கம்  சுமார் 1000 ஆண்டுகள் நீடித்தது . Latin Came to be the Language of Early Christendom. From about 500 to 1500 Latin was the principal language of the church. 4. பின்பு வேதம் ஆங்கில   மொழியில்   மொழிபெயர்க்கப்பட்ட  பின்பு அதின் தாக்கம்  இந்நாள்  வரை உள்ளது. ஆங்கில மொழியில் இன்று நம் கையில் ஆயிரக்கணக்கான   கிறிஸ்தவ இலக்கியங்கள்,  100க்கும்  மேலான  வேதாகம மொழிப்பெயர்ப்புகள்,  விதவிதமான இறையியல் ஆய்வுகள், கட்டுரைகள், வேதாகம வியாக்கியானங்கள்(commentaries )  Bible concordance,  Bible Dictionary  Study Bibles உள்ளன என்று  சொல்லி  கொண்டே  போகலாம். இவைகள்  எல்லாம் 20 ,30 ஆண்டுகள்  தேவசமுகத்தில் இணைந்து தங்களை  தேவனுக்கு  ஒப்புக்கொடுத்து எழுதப்பட்ட,  தேவனிடத்தில்  இருந்து பெறப்பட்ட  முத்துக்கள்.  Dake's Study Bible  ஒரு உதாரணம். . இறையியல்பற்றி ஆயிரக்கணக்கான நூல்கள் உள்ளன. நமது தமிழில் அந்த அளவிற்கு சிறந்த நூல்கள் இறையியல் ஆய்வுகள்,கட்டுரைகள்,வேதாகம வியாக்கியானங்கள்(commentaries ) Bible concordance, Bible Dictionary  Study Bibles என்பவை கிடையாது. இதை தமிழ்  கிறிஸ்தவ  உலகம்  முதலில்  புரிந்து  கொள்ளவேண்டும். எனவே தமிழ்  கிறிஸ்தவ  உலகம்   ஆங்கிலத்தில் உள்ளவைகளை பயன்படுத்திக் கொள்ள  வேண்டும். இதை சாதாரண எளிய  மக்களுக்கு கொண்டு செல்லவேண்டும். இறையியல் அறிவு,   வேதஅறிவு, வியாக்கியானம், போதனைகள் இவைகள் "ஆங்கில படித்த மக்களுக்கு மட்டும்” என்கிற நிலைதான்  காணப்படுகிறது.    இது மாறவேண்டும். நான் அறிந்த வரையில் இறையியல், வேதவியாக்கியானங்களை சாதாரண  மக்களுக்கு கொண்டு சென்றவர்கள் வெகு சிலர்  மட்டுமே. “எனக்கு தமிழ்  மட்டும் போதும்" “என்  மொழி  எனக்கு  போதும்"  "வேறு மொழி  எனக்கு  தேவை  இல்லை" என்று    சொல்பவர்களை என்னவென்று   சொல்லுவது? ஆங்கில மொழியை  படிக்க உற்சாகப்படுத்தி ஆங்கில மொழியில்  உள்ள  முத்துக்களை,   பொக்கிஷங்களை நாம் அறிந்து,   என்  தமிழ்  மக்கள் அறிந்து கொள்ள அதை பயன் படுத்துவதே உண்மையான  பாரம். இன்றைய தமிழ்  கிறிஸ்தவத்தில் சரியான  வேத போதனை(Bible teaching) இல்லாமல் இருப்பதற்கு ஆங்கில இலக்கியங்களை பயன்படுத்தாமல்  இருப்பதும் ஒரு காரணம்.

வெளிப்படுத்தின விசேஷத்தில்அறிந்து கொள்ளக் கூடிய மூன்று சத்தியங்கள்.

வெளிப்படுத்தின விசேஷத்தில் சபைகளுக்கு இயேசுகிறிஸ்து கூறிய  செய்தியிலிருந்து அறிந்து கொள்ளக் கூடிய மூன்று சத்தியங்கள். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக சொன்ன அந்த காரியங்கள் இன்றைக்கும் நமது திருச்சபைகளுக்கு  மிகவும் பொருத்தமாக இருக்கிறது. சபையை பாதிக்கும் மூன்று காரியங்கள் 1. வெளியிலிருந்து வரும் உபத்திரவங்கள், சித்திரவதைகள்.   Persecution 2.  தவறான உபதேசங்கள், வேதத்திற்கு புறம்பான காரியங்களை போதிக்கும் போதனைகள் False doctrines 3. இவைகள் இரண்டையும் சந்திக்க வேண்டிய சபைகள் , சபை தலைவர்கள், விசுவாசிகள் தங்களுடைய சாட்சியை காத்துக் கொள்ள முடியாமல், இந்த மேலே சொல்லப்பட்ட இரண்டு எதிர்ப்புகளையும் சந்திக்க முடியாமல்  தள்ளாடும் சூழ்நிலை . Sin The church is under the threefold attack of persecution, false prophets, and immoral men and women of God. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக சபைகளுக்கு இயேசு கிறிஸ்து  கொடுத்த எச்சரிப்பு இன்றைக்கும் நம்முடைய சபைகளுக்கு பொருத்தமாய் இருக்கிறது. இந்த மும்முனை தாக்குதலை சமாளிக்கக்கூடிய பொறுப்பு சபை தலைவர்களை விட திருச்சபைகளில் பெரும்பான்மையாக இருக்கின்ற விசுவாசிகளுக்கு தான் அதிகம் உண்டு என்பது என்னுடைய கருத்து. இந்தப் பதிவின் மூலக்கருத்து JOHN  STOTT  அவர்களின் “WHAT CHRIST  THINKS OF THE CHURCH “ என்கிற கட்டுரையை  அடிப்படையாகக் கொண்டது

simony என்றால்என்ன?

படிக்க  அப்போ 8:18-24 ஆங்கிலத்தில் “simony”   என்கிற  வார்த்தை உள்ளது. அதற்கு அர்த்தம் என்னவென்றால்  ஆவிக்குரிய  அல்லது  புனிதமான காரியங்களை வாங்குவது அல்லது விற்பனை செய்வது   என்பதாகும்   (Buying or selling of sacred or spiritual things as sacraments or benefices) அப்போ 8:18-24 ல் சீமோன் செய்த, செய்ய விரும்பின அந்த செயலே simony என்று ஆங்கில அகராதியில் இடம் பெற்றுள்ளது. இன்றைக்கும் ஆவிக்குரிய  அமைப்புகளில், சபைகளில், இயக்கங்களில் நிறுவனங்களில் உள்ள பதவிகள், பொறுப்புகள் பணத்திற்கும், மனிதர்களை பிரியப்படுத்துவதின் மூலமாகவும், சாதி அடிப்படையிலும்,  குடும்ப உறவின் அடிப்படையிலும் , இன்னும் சொல்லப்படாத பலவித  நிர்பந்தங்களுக்கும் விலைக்கு விற்கப்படுவதை பார்க்கிறோம். பொறுப்புகள் வழங்கப்படும் பொழுது இவன் இந்த ஊரை சேர்ந்தவனா, இந்த ஜாதியா, நம்ம ஊரு ஆளா, நமது சொந்தங்களா என்கிற அடிப்படையில் பிரித்துப் பார்ப்பது இன்றைய கிறிஸ்தவத்தின் பரிதாபங்கள். உண்மை, உழைப்பு, தியாகம், பரிசுத்தம், அழைப்பு, அர்ப்பணிப்பு, தரிசனம் இவைகளை மண்ணோடு மண்ணாக புதைத்துவிட்டு பதவிகளை, பொறுப்புகளை, ஏலம் விடும் அலங்கோலத்தை ஆவிக்குரிய  அமைப்புகளில், இயக்கங்களில், நிறுவனங்களில்  அரங்கேற்றுவதை  பார்க்கிறோம். என்ன  பரிதாபம்!.  விளைவு- The net result Will be "Movement  will become  a monument" என்ன பரிதாபம்!     இப்படி பதவிகளை, பொறுப்புகளை விலைக்கு விற்பனை செய்கிறவர்களுக்கு  வேதம் சொல்லும் பதில்   “தேவனுடைய வரத்தை  (பொறுப்பை) பணத்தினாலே சம்பாதித்துக் கொள்ளலாமென்று நீ(நீங்கள் ) நினைத்தபடியால் உன்(உங்கள் பணம்………. ) உன்னோடே(உஙகளோடு)கூட நாசமாய்ப் போகக்கடவது." அப்போ 8:20. இது தேவனுடைய வார்த்தை  அல்லது எச்சரிக்கை. பொது சமுகம் பேசும் சமுக நீதி, பாரபட்சமின்மை, சமத்துவம் போன்றவைகள் முதலில் தேவனுடைய வீட்டில் இருந்து துவங்க வேண்டும்.

ஆரோனின் இறுதிக்காலம்

ஆரோனின் இறுதிக்காலம் மோசையைப் போலவே ஆரோனுடைய கடைசி காலங்கள் மிகவும் வேதனை, வாழ்நாள் விருப்பங்கள் நிறைவேறாத காலம். ஏற்கனவே பிரதான ஆசாரியனாக நியமிக்கப்பட்டு ஆசரிப்பு கூடாரத்தில் பணியேற்ற அந்த நாளிலேயே தன்னுடைய இரண்டு குமாரர்களையும் இழந்தான். அது அவனுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு வலியைதந்த நிகழ்வு. இறுதிக் காலத்தில் இஸ்ரவேல் மக்கள் தண்ணீருக்காக கலகம் செய்த போது மோசே ஆத்திரத்தில் கன்மலையை பேசுவதற்கு பதிலாக அடித்த காரணத்தினால் கர்த்தர் மோசே மீதும் ஆரோன் மீதும் கடும் கோபம் கொண்டு அவர்கள் கானானுக்குள் செல்ல அனுமதிக்க வில்லை. ஆரோனின் இறுதி கால நிகழ்வுகளை விவரிக்கும் எண்ணாகம புத்தகம்20:23-29 வரை உள்ள வசனங்களை படிக்கும் போது அது நமக்கு பாடங்களை கற்பிக்கும். மோசே ஆரோனையும் அவன் குமாரனாகிய எலெயாசாரையும் கூட்டிக்கொண்டு, ஓர் என்னும் மலைக்கு‌ தேவன் போகச் சொன்னார் எண்ணாகமம் 20:25 பின்பு தேவன் மோசேயிடம்ஆரோன் உடுத்தியிருக்கிற வஸ்திரங்களைக் கழற்றி, அவைகளை அவன் குமாரனாகிய எலெயாசாருக்கு உடுத்த சொன்னார் . தேவன் கட்டளை இட்டபடியே மோசே செய்தான்.ஆரோன் அங்கேயே மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான். முதலில் தன் அண்ணனுக்கு உடைகளை அணிவித்தவன் இப்பொழுது அண்ணனுடைய மகனுக்கு அணிவிக்கிறான். மூன்று பேராக சென்றவர்கள் இரண்டு பேராக மலையில் இருந்து திரும்பினார்கள். அப்பொழுதுதான் இஸ்ரேல் ஜனங்கள் ஆரோன் மரித்ததை அறிந்தார்கள். ஆனால் ஆரோன் எப்படி மரித்தான் என்று சொல்லப்படவில்லை. வாதையினாலோ வானத்திலிருந்து இறங்கி வந்த அக்கினியினாலோ‌ அவன் மரிக்கவில்லை. இயற்கையாக மரித்தான் என்று அறிந்து கொள்ளலாம். ஆரோனைப் பொறுத்த அளவில் அவன் மோசேயின் வாயாக பார்வோனுக்கு முன்பாக நின்றவன். இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தில் இருந்து மீட்டெடுக்க மோசேக்கு துணையாக நின்றவன். 40 வருட வனாந்திர வாழ்க்கையில் மோசேக்கு அடுத்தபடியாக ஆரோன்தான் தலைவனாக காணப்பட்டான். பிரதான ஆசாரியனாக தேவனுக்கு முன்பாக மக்களுக்காக மன்றாடியவன். இப்படிப்பட்ட சிறப்புகளைக் கொண்டவன் கடைசியில் தான் உயிரோடு இருக்கும்போதே தன் கண் முன்னால் கனத்திற்குரிய ஆசாரிய உடைகளையும் ஆசாரிய இடத்தையும் இழந்தது என்பது மிகவும் வலி நிறைந்த ஒரு அனுபவம். அதை ஆரோன் மன நிறைவோடு ஏற்றுக் கொண்டான் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். மோசேயை‌ போலவே அவனுடைய இறுதி நாட்கள் அவ்வளவு மகிழ்ச்சி உள்ளதாக வசனத்தின் படி காணப்படவில்லை. தேவன் ஆரோனையும் மோசேயையும் இறுதி காலத்தில் நடத்தின விதம் நமக்கு பலவித கேள்விகளை எழுப்பினாலும் அவைகளுக்கு உண்மையான விளக்கம் பரலோகத்தில் மட்டுமே கிடைக்கும். தேவனுடைய சித்தத்துக்கு பரிபூரணமாக தன்னைஒப்புக்கொடுத்தான் ஆரோன்.கர்த்தர் மகிமைப்படுவாராக.

மோசேயின் இறுதி காலம்

மோசேயின் இறுதி காலம் மோசேயின் இறுதி காலம் தனிமையில் கழிந்தது. 40 வருடங்கள் அவனோடு பயணம் செய்த அவனுடைய அக்கா மீரியாம் அந்த வருட ஆரம்பத்தில் மரித்து போனாள். பிறகு அவனுடைய அண்ணன் ஆரோனும் மரித்து போனான். இறுதியில் இவன் மட்டுமே மிஞ்சி இருந்தான். மோசே தேவனால் மிகவும் பயன்படுத்தப்பட்ட ஒரு மனிதன். அவனுடைய அர்ப்பணிப்பு தியாகம், பார்வோனுடைய மகன் என்கிற நிலைமையை உதறித் தள்ளிவிட்டு தன் மக்களோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவன். தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு பதிலாக தன்னை பெரிய ஜாதியாக்க முன்வந்த போது அந்த மிகப்பெரும் அழைப்பை நிராகரித்தவன். தேவனைமுக‌முகமாக தரிசித்தவன் . தேவனிடமிருந்து நேரடியாக தேவனுடைய கற்பனைகளைப் பெற்று இஸ்ரவேல் ஜனங்களுக்கு வழங்கியவன். 40 வருடங்களாக தன் ஜனங்களை வழிநடத்தியவன். ஆனாலும் கானானுக்கு செல்ல வேண்டும் என்கிற இறுதி விருப்பத்தை தேவன் முற்றிலுமாக நிராகரித்து விட்டார். மோசே தன்னுடைய விண்ணப்பத்தை வலியுறுத்தி கெஞ்சிய பிறகும் அதைப்பற்றி பேச வேண்டாம் என்று மோசேயை கடிந்து கொண்டார். இறுதி காலங்களில் அவனோடு கூட 40 வருட பயணத்தை ஆரம்பித்த எவரும் கூட இல்லை. ஆனாலும் மிகுந்த தாழ்மையுடன் தேவன் கொடுத்த பணியை அதற்குப் பிறகும் நிறைவேற்றி கானானை அடைவதற்கு முன்பாக இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தக் கூடிய பொறுப்பை யோசுவாவிடம் ஒப்படைத்து தன் ஊழியத்தை நிறைவாக நிறைவேற்றினான் மோசே. எப்படி தாவீது தேவனுக்கு ஒரு ஆலயத்தை கட்ட வேண்டும் என்று விரும்பி அதற்கான செல்வங்களை எல்லாம் சேர்த்து வைத்த போதிலும் ஆலயத்தை கட்ட கூடிய பொறுப்பை அவனுடைய மகனான சாலமனிடம் ஒப்படைத்தது போல மோசே தன்னுடைய ஊழியத்தின் அடுத்த பகுதியை நிறைவேற்றும் பொறுப்பை யோசுவாவிடம் ஒப்படைத்து தேவனிடமிருந்து பெற்ற பணியை நிறைவாக முடித்தான். எப்படி பவுலும் தன்னுடைய இறுதி நேரத்தில் எல்லோரும் அவரை கைவிட்டாலும் தன்னுடைய ஊழியத்தை நிறைவாக முடித்தானோ அதுபோல மோசேயும் தேவன் தன்னுடைய இறுதி விருப்பத்தை கூட நிறைவேற்றாவிட்டாலும் தேவனிடமிருந்து பெற்ற பணியை மன நிறைவுடன் செய்து முடித்தான் . மேசேயினுடைய வாழ்க்கை நமக்கு ஒரு மிகப்பெரிய பாடம். Moses accepted God's painful discipline with meekness.

spiritual growth

(Colossians 1:19, 2:10) When a person is born again into the family of God, he is born complete in Christ. His spiritual growth is not by addition, but by nutrition. He grows from the inside out. Nothing needs to be added to Christ because He already is the very fullness of God. As the believer draws on Christ’s fullness ,he is filled unto all the fullness of God (Eph.3:19). What more does he need. W.Wiersbe

ஆவிக்குரிய அறியாமை

விசுவாசிகள்தங்கள் ஆவிக்குரிய அறியாமையை நியாப்படுத்தக்கூடாது. அறியாமையை பயன்படுத்துபவர்களுக்கு விலகியிருஙள்.

பவுலடியாரின் அழைப்பும், தேவ கிருபையும்

பவுலடியாரின் அழைப்பும், தேவ கிருபையும் பவுல் ஒரு சிறந்த பேச்சாளர் கிடையாது. கவர்ச்சிகரமான சொல்லாற்றல் அவரிடம் கொஞ்சம் கூட காணப்படவில்லை. கொரிந்து சபைக்கு செல்லும் போதுகூட மிகுந்த நடுக்கத்துடனே சென்றார். மற்றவர்களை ஒப்பிட்டு சொல்லும் போது நான் “பேச்சிலே கல்லாதவனாயிருந்தாலும், அறிவிலே கல்லாதவனல்ல" என்கிறார். இன்னொரு இடத்தில் ,: "தேவனைப்பற்றிய சாட்சியைச் சிறந்த வசனிப்போடாவது ஞானத்தோடாவது அறிவிக்கிறவனாக வரவில்லை" என்று எழுதுகிறார். பவுலடியாருக்கு எடுப்பான தோற்றம் கிடையாது. அவருடைய எதிரிகள் அவருடைய தோற்றத்தை பலவீனமாக கருதினார்கள் என்று எழுதுகிறார். காலத்திய சபைக்கு எழுதும் போது இவ்வாறு குறிப்பிடுகிறார். ".உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நான் சரீர பலவீனத்தோடு முதலாந்தரம் உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தேன். அப்படியிருந்தும் என் சரீரத்தில் உண்டாயிருக்கிற சோதனையை நீங்கள் அசட்டைபண்ணாமலும், அரோசியாமலும், தேவதூதனைப்போலவும், கிறிஸ்து இயேசுவைப்போலவும், என்னை ஏற்றுக்கொண்டீர்கள்.” . அவருடைய சரீர பலவீனம் அவ்வளவு கொடுமையானது. அவர் சிறந்த எழுத்தாளரும் அல்ல. WILLIAM BARCLAY என்கிற வேத பண்டிதர் அவருடைய கடிதங்களையெல்லம் ஆராய்ந்து இவ்வாறு எழுதுகிறார் ”His sentences begin and never finish: his grammar breaks down and the construction becomes involved, He normally did not pen his own letters. He dictated them to a secretary” (Rom 16:22, 1 Cor 16:21 2Thes 3:17 and Col 4:18) எடுப்பான தோற்றம் இல்லாத, சிறந்த வசனிப்பு இல்லாத, மிகுந்த சரீர பலவீனத்தோடு உள்ள மனிதனை தேவன் மிக சிறந்த அப்போஸ்தலனாக்கி மிக பெரிய வெளிப்படுத்தல்களை சபைக்கு கொடுத்து புற ஜாதிகளுக்கு அப்போஸ்தலனாக்கி அவருடைய கைகளினால் “அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்கள் எல்லாவிதமான பொறுமையோடும், அதிசயங்களோடும், அற்புதங்களோடும், வல்லமைகளோடும்” தேவன் நடப்பித்தார். எழுத கூடிய திறமை இல்லாத, அவருடைய கடிதங்களை கர்த்தர் அபிஷேகித்து ஜீவனுள்ள வார்த்தைகளாக மாற்றினார். காரணம் தேவனுடைய அழைப்பும் தேவனது கிருபையுமே. பவுலடியார் வாழ்க்கையின் இறுதி மட்டும் எத்தனையோ எதிர்ப்புகள் வந்தபோதும் தனது அழைப்பை ஒருபோதும் சமரசம் செய்து கொண்டதில்லை. ஏன் பேதுருவும் தன்னை வளர்த்துவிட்ட பர்னபாவும் கூட உபதேச மாயத்திலே இழுப்புண்டு போனாலும் அழைப்பிலே சமரசம் செய்து கொண்டதில்லை. அடுத்தது பவுலடியார் தனக்கு ஆண்டவர் அளித்த கிருபையை ஒருபோதும் விருதாவாக்கினதில்லை தன்னுடைய எல்லா உழைப்புக்கும் பிரயாசத்திற்கும் மேன்மைக்கும் காரணம் கிருபைதான் என்று கிருபையின் மேல் சார்ந்து இருந்தார். " நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன், ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச் செய்தது" என்று எழுதுகிறார். உலகம் எதிர்பார்க்கும் எந்த ஒரு சிறப்பு அம்சங்கள் இல்லாத பவுலை தேவன் பயன்படுத்தும் போது நாம் நம்மை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கும் போது நம்மையும் நம்முடைய அழைப்பிலே பயன் படுத்துவதுவார்

Mystery of incarnation

Mystery of incarnation "அந்த வார்த்தை மாம்சமாகி" 'அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,' தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்." வேதத்தில் திரித்துவத்தை போலவே ஆதியிலே வார்த்தையாய் இருந்தவர், தேவனோடு இருந்தவர், தேவனாய் இருந்தவர் ,மாமிசமாய் மாறின நிகழ்வும் தேவனுடைய ரூபமாய் இருந்தவர்,தேவனுக்கு சமமாய் இருந்தவர், தம்மைத்தாமே வெறுமையாக்கி மனுஷ சாயலான நிகழ்வும் ஒரு இரகசியமே(Mystery) Jesus Christ was 100% divine and 100% human. It is the union of two natures in our Lord Jesus Christ’s person. These two nature two natures remained perfect and distinct. தெய்வீகமும் மனுஷீகமும் இணைந்து கிறிஸ்துவில் காணப்படுகிறது. இயேசு கிறிஸ்து தேவனாய் இருந்தும், மாமிசமான நாள் முதல் பாவமில்லாத மனிதனாகவும் காணப்பட்டார். அவர் இன்றும் பிரதான ஆசாரியராய் தேவனுடைய வலதுபாரிசத்தில் மனிதனாகவும் தேவனாகவும் காணப்படுகிறார். அப்போ 7:55-56,எபே 1:20 கொலோ 3:1எபி 4:14 “Though perfect God, Christ has always been perfect man from the very first moment of His incarnation” .Though perfect man ,Christ never ceased to perfect God” (அவர் மனிதனாய் அவதரித்தபோதும் தேவன் என்கிற நிலையை இழக்கவில்லை) இந்த தேவனுடைய செயல் நம்முடைய புரிதலுக்கும் ஞானத்திற்கும் அப்பாற்பட்ட செயல். இதை மிகுந்த பயத்துடன் வேதம் சொல்லுகின்ற இந்த செயலை ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த சத்தியத்தின் அடிப்படியில் தான் முழு கிறிஸ்தவமே சார்ந்திருக்கிறது. இந்த சத்தியத்தில் எதையாவது ஒன்றை நீர்த்துபோகப்பண்ணினாலும் அது பலவித உபதேசசீர்கேடுகளை உண்டாக்கிவிடும் . “Though He became flesh in the fullest sense, when He was born of the Virgin Mary ,He never at any point of period ceased to the Eternal God”-John Charles Ryle

மோசேக்கு ஏன் அவ்வளவு பெரிய தண்டனை?

மோசேக்கு ஏன் அவ்வளவு பெரிய தண்டனை? மோசே இஸ்ரவேல் ஜனங்களை 40 வருடங்களாக வழி நடத்தி இறுதியில் கானானுக்கு செல்ல வேண்டிய இறுதி கட்டத்தில் அவன் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியவில்லை. தன்னுடைய கோலை வைத்து கன்மலையோடு பேச வேண்டிய மோசே தன் ஜனங்களுடைய கலகக் குரலினால் அதுவரை பொறுமை காத்த மோசே இறுதியில் பொறுமை இழந்து கன்மலையை இரண்டு தடவை அடித்தான். முதல் தடவை கன்மலையை தேவன்அடிக்கச் சொன்னார். இரண்டாம் தடவை கன்மலையோடு பேச சொன்னார் ஆண்டவர். பேசுவதற்கு பதிலாக முன்பு செய்ததைப் போல கன்மலையை அடித்தான். ஒரு தடவை அல்ல இரண்டு தடவை. ஆனாலும் கர்த்தர் மோசேயினுடைய தவறை, குற்றத்தை பார்க்காமல் தண்ணீரை வரவழைத்தார். ஆனால் மோசேயின் வாழ்நாள் விருப்பமாகிய கானானுக்கு அவனால் செல்ல முடியவில்லை. அவன் தன்னுடைய விருப்பத்தை தேவனிடம் தெரிவித்த போதும் இதைக் குறித்து பேச வேண்டாம் என்று என்று சொல்லி அவன் விருப்பத்தை நிராகரித்துவிட்டார். உபா 3:23-29,32:50,51 நம்முடைய பார்வையில் மோசேயின் தோல்விக்கு காரணம் சிறிய பலவீனமாக காணப்படலாம். ஆனால் தேவனுடைய பார்வையில் அது மிகப் பெரிய காரியமாக காணப்பட்டது. பவுல் கன்மலையை இயேசுவுக்கு அடையாளமாக சுட்டிக் காட்டுகிறார். 1 கொரி 10:4 கன்மலையை அடிப்பது என்பது இயேசு கிறிஸ்து சிலுவையில் நமக்காக பாடுபட்டு அடிக்கப்படுகிற அனுபவத்திற்கு அடையாளம்.. இரண்டாவது தடவை கனிமலையை நோக்கி நோக்கி பேசச் சொல்வது என்பது நமக்கு தேவன் நமக்கு அருளும் பரிசுத்த ஆவியை குறிப்பதாகும்.யோவா7:37-39 இயேசு கிறிஸ்து ஒரு தடவைதான் நம்முடைய இரட்சிப்புக்காக அடிக்கப்பட வேண்டும்.எபி 9:26-28. இரண்டாம் தடவை கன்மலையோடு பேசுகிற அனுபவம் என்பது பரிசுத்த ஆவியை நாம் பெற்றுக் கொள்கிற நிகழ்வுக்கு சமம் இதுதான் தேவன் வைத்த திட்டம். அதற்கு நிழலாகத்தான் பவுல் இயேசுவை கன்மலையோடு ஒப்பிடுகிறார்.1கொரி 10:4. மோசே கன்மலையை இரண்டு தரம் அடித்ததன் மூலம் ஜீவத்தண்ணீரை தருகின்ற ஞானக்கன்மலையான , மேசியா தவறாக சித்தரிக்கப்படுகிறார்.என்று W.W .WIERSBE கூறுகிறார் He ruined a type of the Messiah who gives living water to His people.W.W .WIERSBE To smite the rock twice means crucifying Christ afresh. Finis Jennings Dake Dake ன் பார்வையில் இது கிறிஸ்துவை மறுதலிப்பதற்கு சமம் என்று கூறுகிறார். எபி6:4-9,10:26-29 எப்படிப் பார்த்தாலும் தேவனுடைய பார்வையில் மிகப்பெரிய தவறாக காணப்பட்டது. 40 வருடங்களில் இஸ்ரவேலர் கலகம் செய்த போதெல்லாம் ‌ அந்த ஜனங்களை அழித்துவிட்டு மோசேயை பெரிய ஜாதி ஆக்குவேன் என்று கடவுள் சொன்ன போதெல்லாம் அதை தடுத்து தனக்கு வர வேண்டிய மேன்மையை தவிர்த்து அந்த மக்களோடு தன்னை அடையாளப்படுத்தியவன்‌ மோசே.மத்தே 17:1-8 ஆனால் மோசேயின் இந்த சிறு பலவீனம்,அவிசுவாசம் கர்த்தருடைய பார்வையில் மிகப்பெரிய தவறாக காணப்பட்டது. அதற்கு அவன் கொடுத்த விலை மிகவும் பெரியது. 1700 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண்டவர் மறுரூப மலையில் மோசேயை கொண்டு வந்து அவன் விரும்பிய கானானில் அவனுடைய கால்களை பதித்தான்.மத்தே 17:1-8 ஆனாலும் தன் மக்களோடு மக்களாக கானானுக்கு செல்லும் வாய்ப்பை‌இழந்தது அவனுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்தான். அதுபோல நம்முடைய வாழ்க்கையில் நாம் செய்யும் சிறு தவறுகள் ‌ பெரிய பாதிப்புகளை சமுதாயத்தில் சில நேரங்களில் ஏற்படுத்திவிடும். நாம் சிறிய தவறு தானே என்று எண்ணுவோம். ஆனால் அது தேவனுடைய ராஜ்யவிருத்திக்கு, வளர்ச்சிக்கு மிகப்பெரிய பாதகங்களை ஏற்படுத்தும் என்று நம்மால் விளங்கிக் கொள்ள முடியாது. வேதம் சொல்லுகின்ற போதனையை போதிக்காத போதகர்கள்‌, வேதத்திற்கு மாறான உபதேசங்கள், ஒழுக்கம் இல்லாத ஊழியர்களை தாங்கிப் பிடிக்கும் காரியங்கள், போலிகள் என்று அறிந்தும் அவர்களை உலகுக்கு அடையாளம் காட்டாமல் அவர்களோடு தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதுமான பல காரியங்கள் தேவனுடைய ஊழிய வளர்ச்சியை மிகவும் பாதிக்கும் .அது மாத்திரமல்ல நம்மை நம்பிய பலரும் இப்படிப்பட்ட காரியங்களுக்கு துணை போக நாம் ஒரு கருவிகளாய் இருக்கிறோம் என்பதை மறந்து விடுகிறோம். நம்முடைய சிறு தவறுகள் இயேசுவைப் பற்றிய மாதிரியை சிதைத்து விடுகிறது. நாம் தவறு செய்யவில்லை என்று தப்பித்துக் கொள்ள முடியாது. By identifying with this kind of wrong doctrines or preachers or false apostles we give a wrong picture about Jesus Christ to the world and ruin the true type Christ who is saviour of the world தேவன் தாமே இத்தகைய பாவத்திலிருந்து மீட்டுக் கொள்ளநமக்கு கிருபைதருவாராக. கர்த்தர் மகிமைப்படுவாராக இந்தப் பதிவின் மூலக்கருத்து W.W.Wiersbe மற்றும் Dake அவர்களின் விளக்க உரையை தழுவியது

what is holiness ?

Holiness is not something we are called upon to do in order that we may become something; it is something we are to do because of what we already are.- Martyn Lloyd-Jones

prayer is power.

Prayer is not flight, prayer is power. Prayer does not deliver a man from some terrible situation; prayer enables a man to face and to master the situation.William Barclay

என்னுடைய இரட்சிப்பில் திரித்துவம் .

என்னுடைய இரட்சிப்பில் திரித்துவம் . பிதாவை பொறுத்தவரையில்(God the Father) பிதாவாகிய தேவன் என்றைக்கு என்னை உலக தோற்றத்திற்கு முன்பாக தெரிந்து கொண்டாரோ அன்றே நான் இரட்சிக்க பட்டுவிட்டேன். குமாரனாகிய தேவனை( God then Son) பொறுத்தமட்டில் குமாரனாகிய தேவன் என்றைக்கு எனக்காக சிவையில் மரித்தாரோ அன்றைக்கு நான் மறுபடியம் பிறந்து விட்டேன். பரிசுத்த ஆவியாகிய தேவனை(God the Holy Spirit) பொருத்த மட்டில் நான் இந்த உலகில் பரிசுத்த ஆவியானவரால் ஆட்க்கொள்ளப்பட்டு பாவ உணர்வடைந்து இயேசு கிறிஸ்துவை என்னுடைய இரட்சகராக, ஆண்டவராக என் உள்ளத்தில் ஏற்றுக்கொள்கிறேனோ அன்றைக்கு இரட்சிக்க பட்டு நான் தேவனுடைய குடும்பத்தில் இணைக்கபட்டுவிட்டேன் . இதுதான் எனக்கும் பிதாவுக்கும் இடையில் உள்ள அவரது அன்பின் நீளம். அவருக்கும் எனக்கும் உள்ள உறவு, சொந்தம். யுகங்களை கடந்தது. இணை பிரியாத உறவு. மாறாத, எவராலும் அழிக்க முடியாத உறவு. Main thought from W.W.WIERSBE and Martyn Lloyd-Jones

‘You are complete in Him

Colossians 1:19, 2:10) ‘’You are complete in Him’ (Jesus Christ) What a wonderful meaningful declaration by St Paul. I like this declaration more than any statement in the whole Bible. But alas ! This theology is not correctly understood and not preached among the Christian. I am very proud to say that ‘I am complete in Christ’. I need no other additions nor man made doctrines and experiences. I can get whatever I like from Jesus Christ because God was pleased to have all fullness dwell in Him. Amen. His sufficiency is my sufficiency. Any new experience that denies His deity or His humanity or His fullness in Christ or my completeness in Christ is not from God. I pray God to open the eyes of the Church leaders to preach this very vital Christian theology

SACRIFICIAL CHURCH OF ANTIOCH

SACRIFICIAL CHURCH OF ANTIOCH (Acts 13:1-4) The church of Antioch was not only a grateful Church but it was also a sacrificial Church. Barnabas and Paul were eminent and gifted leaders in that church. Barnabas was sent from the church of Jerusalem to monitor and co ordinate the spiritual activities there. Because of him much people were added unto the church. Then Barnabas brought Saul to Antioch and both became pillars in the church of Antioch. They were everything to the church. But when the Holy Spirit directed the church to separate Barnabas and Paul for missionary work, the church immediately yielded to the voice of Holy Spirit. The church was so sensitive to the voice of Holy Spirit. It was ready to sacrifice its two great leaders for the sake of God’s kingdom in other un - reached areas. No wonder their believers were first called “Christians”. What a glorious church! But in Tamil Nadu the church leaders leave no stone un turned to suppress the missionary zeal inspired by the Holy spirit. They never leave the gifted and talented people for missionary work. They never allow missionaries to minister in their Church. They will not contribute liberally to the works in un reached areas. Generally the Church in Tamil Nadu is so insensitive to the voice of Holy spirit and enormous needs of needy people.

இன்றய தேவை

தமிழக மெகா ,மெகா சபையின் போதகர்கள் Oswald J. Smith ஆக மறுப்பது ஏன்? இன்றய தேவை ஒரு Oswald J. Smith

contentment

The claim that “I have a right to be rich “is satanic.”Godliness with contentment” is Biblical

Dispensational theology

உங்கள் சிந்தனைக்கு: லேவியராகம புத்தகம் 11 முதல் 15 வரை உள்ள அதிகாரத்தில்  எவைகள் தீட்டுள்ள காரியங்கள், எவைகள் அசுத்தமானவைகள், எவைகளை உட்கொள்ளலாம், எவைகளை உட்கொள்ளக்கூடாது என்பது பற்றிய  பல காரியங்களை இந்தப் பகுதியில் பார்க்கலாம். இந்தப் பகுதியில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படையான மூன்று காரியங்கள். 1. இந்த இடத்தில்  ஆண்டவர் சொன்ன கட்டளைகள் யூதர்களுக்கு மட்டுமே பொருந்தும். 2. இவைகளை நாம் கடைபிடிப்பதன் மூலம் நம்முடைய பரிசுத்த வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பது அர்த்தமல்ல. இவைகளை கடைபிடிப்பதினால் நாம் பரிசுத்தம் உள்ளவர்களாக   தேவனுக்கு முன்பாக காணப்பட முடியாது. 3. ஆண்டவரின் சிலுவை மரணத்திற்குப் பிறகு இந்தக் கட்டுப்பாடுகள் காலாவதியாகிவிட்டது. இவைகள் கிருபையின் காலத்திற்கு எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல. 1கொரி8:8 ன்படி ‌ உணவு முறைகள் நம்மை ஒருபோதும் தேவனுக்கு முன்பாக உத்தமர்களாக மாற்ற முடியாது. தீட்டு என்பதைப் பற்றியுள்ள பழைய ஏற்பாட்டு சத்தியங்கள் புதிய ஏற்பாட்டுக்கு ஒருபோதும் ஒத்து வராது மாற்கு 7:15 இதில் நாம் கற்றுக் கொள்ளக் கூடிய காரியங்கள். யூதர்களுக்கு சொல்லப்பட்ட அனைத்து காரியங்களும் புதிய ஏற்பாட்டு சபைக்கும் பொருந்தும்  என்று சொல்வது அபத்தமான காரியம். இவைகள் மாத்திரமல்ல, தசமபாகம், ஆசாரியத்துவம் போன்ற உபதேசங்கள் காலாவதியான உபதேசங்கள். ஆசாரியத்துவம் மாற்றப்பட்டுவிட்டது. புதிய ஆசாரியத்துவம் உருவாக்கப்பட்டு விட்டது. ஒவ்வொரு காலகட்டத்திலும் தேவன் தம்முடைய நிர்வாகத்தை, ஜனங்களை நடத்திய விதத்தை நாம் சரியாகப் புரிந்து கொண்டால் தான் எவைகளை எடுத்துக் கொள்ள வேண்டும், எவைகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என்கிற  தெளிவு நமக்கு கிடைக்கும். "உலகத்தை நிரப்புங்கள்"  என்று சொன்ன ஆண்டவர் அதே காலகட்டத்தில் குடும்பத்துக்குள் திருமணம் செய்து கொள்வதையும் அனுமதித்தார். அதன்படி யார் யாரையும் திருமணம் செய்து கொள்ளலாம். இந்த அனுமதியை குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு மட்டும் தேவன்  கொடுத்தார். ஆனால் நோவாவினுடைய பெருவெள்ளத்திற்கு பிறகு இந்த அனுமதி கிடையாது. இதே போல் தான் நாம் வேதத்தை பகுத்தாய்வு செய்து எந்த ஆசீர்வாதம் நமக்கு பொருந்தும், எவைகள் பொருந்தாது என்பதை உணர்ந்தால் நம்முடைய வாழ்க்கையில் ஆவிக்குரிய சிக்கல்கள் ஒருபோதும் ஏற்படாது. இந்த காரியங்களை புரிந்து கொள்ள Dispensational theologyஐ பற்றிய ஒரு அடிப்படை அறிவு நமக்கு தேவை காது உள்ளவன் கேட்கக்கடவன்.

The most thrilling event

The most thrilling event Coming of Christ into the world is the most thrilling ,the most exciting ,the greatest and most glorious thing that has ever happened in history. D M Lloyd .Jones

The reality of the Church

The reality of the Church is not seen in the splendor of its buildings or its beautiful worship or its wealth or even in size of its congregation but in changed life. If there is no changed life in the Church ,the essential element of reality is missing. W.. BARCLAY

Glorious promise in Christ!

Glorious promise in Christ! In Romans we are justified in Christ. In 1 Corinthians we are enriched in Christ. In 2 Corinthians we are comforted in Christ In Galatians we are free in Christ In Ephesians we are quickened in Christ In Philippians we are happy in Christ But in Colossians we are complete in Christ (Colossians 1; 19, 2:9.10) What a glorious promise in Christ!

கடைசி கால எழுப்புதலுக்கு மிகவும் வேண்டிய கடிதம்

கலாத்திய சபைக்கு பவுல் எழுதிய நிருபமானது இந்த கடைசி கால எழுப்புதலுக்கு மிகவும் கட்டாயமாக ஆழ்ந்து தியானிக்க வேண்டிய ஒரு கடிதம். மார்டின் லூத்தர் அவர்களுக்கு இந்த கடிதம் அவருடைய சீர்திருத்த கருத்துகளுக்கு உதவியாக இருந்தது என்று சொன்னால் அதில் எந்த சந்தேகமும் கிடையாது . மார்ட்டின் லூத்தர் இந்த கடிதத்தை படித்துதான் சீர்திருத்த கருத்துகளை மிகவும் ஆழமாக எடுத்துரைத்தார். இந்த கடைசி காலங்களில் சபையில் காணப்படுகின்ற மனித பாரம்பரியங்கள், சட்ட திட்டங்கள் வெளி தோற்றத்தை அடிப்படையாக கொண்டு போதிக்கின்ற உபதேசங்கள், வேதத்தை அடிப்படையாகக் கொண்டிராமல் போதிக்கின்ற கொள்கைகள், பெலனற்ற வெறுமையான வழிபாடுகள் இவற்றை எதிர்த்து களையக்கூடிய ஒரே நிருபம் கலாத்திய சபைக்கு பவுல் எழுதிய இந்த நிருபம் தான். இதைப் பற்றிய ஒரு புரிதல் சபை மேய்ப்பர்களுக்கு என்றைக்கு ஏற்படுகிறதோ அன்றைக்கு தான் அவர்கள் அதை உணர்ந்து சபைகளில் போதிக்க முடியும். இந்த நிருபத்தின் கருப்பொருளை உணர்ந்து அதன் அர்த்தத்தை புரிந்து போதிக்கின்ற போதகர்கள் எழும்பாத வரை சபையில் எழுப்பதல் என்று பேசுவது வெறும் கானல் நீரே. உயிரற்ற சடலத்தை உயிர்ப்பிக்கிற வல்லமை உள்ள இந்த நிரூபத்தில் சொல்லப்பட்ட வார்த்தைகளை உணர்ந்து போதித்தால் மட்டுமே சபையில் மாற்றம் என்பது நிச்சயமாக வரும். .மார்ட்டின் லூத்தருக்கு பயன்பட்ட கலாத்திய நிருபம் இன்றைய ஊழியர்களுக்கு புரியாமல்‌ பயன்படாமல் இருப்பது வேதனைக்குரிய காரியம் "இப்பொழுதோ நீங்கள் தேவனை அறிந்திருக்க, அல்லது தேவனாலே அறியப்பட்டிருக்க, பெலனற்றதும் வெறுமையானதுமான அவ்வழிபாடுகளுக்கு நீங்கள் மறுபடியும் திரும்பி, மறுபடியும் அவைகளுக்கு அடிமைப்படும்படி விரும்புகிறதெப்படி? கலாத்தியர்4:9 நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருஷங்களையும் பார்க்கிறீர்களே. கலாத்தியர்4:10 நான் உங்களுக்காகப் பிரயாசப்பட்டது வீணாய்ப்போயிற்றோ என்று உங்களைக்குறித்துப் பயந்திருக்கிறேன். கலாத்தியர்" "அதைக்குறித்து வேதம் என்னசொல்லுகிறது: அடிமையானவளின் மகன் சுயாதீனமுள்ளவளுடைய குமாரனோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை; ஆகையால் அடிமையானவளையும், அவளுடைய மகனையும் புறம்பே தள்ளு என்று சொல்லுகிறது. " கலாத்தியர் 4:30

தலைமை பதவியும் வெற்றிடமும்

தலைமை பதவியும் வெற்றிடமும் இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தை விட்டுபுறப்பட்ட நாற்பதாவது வருடத்தில் மிகப்பெரியதான மாற்றங்கள் நிகழ்ந்தது. இஸ்ரவேலரின் கலகத்தின் நிமித்தமாக 38 வருட வனாந்திர வாழ்க்கையின முடிவில் மறுபடியுமாக காதேஷ்பர்னேயாவுக்கு திரும்பி வந்தார்கள்.(எண்ணாகம புத்தகம் இருபதாவது அதிகாரம்.) இந்த நாற்பதாவது வருடத்தில் முதல் மாதத்தில் மிரியாம் இறந்து போனாள். ஆரோன் ஐந்தாவது மாதத்தில் இறந்து போனான். எண்ணா33:38. அந்த வருடத்தின் இறுதி நாட்களில் மோசேயும் மரித்துப் போனான். உபா1:3 இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தின அந்த முப்பெரும் தலைவர்கள் ஒரே வருடத்தில் மரித்துப் போனார்கள். மிகப்பெரிய வெற்றிடம் தலைமை தாங்குவதில் காணப்பட்டது. ஆனால் மோசே தேவனுடைய சித்தத்தின்படி தனக்கு பின்னால் யோசுவாவை தலைமை பொறுப்புக்கு ஆய்த்தப்படுத்தி வைத்திருந்தான். எனவே இஸ்ரவேல் ஜனங்களை தலைமை தாங்குவதில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை. மோசேயும் தனக்குப் பின்னால் பொறுப்பேற்க ஒரு நல்ல இளைஞனை ஆயத்தப்படுத்தி தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றினார். புதிய ஏற்பாட்டில் பவுலும் கூட தனக்கு பின்னால் இளைஞர்களான தீமோத்தேயுவையும் தீத்துவையும் உருவாக்கி வைத்திருந்தார். அவர்கள் பவுலிடம் பெற்ற சத்தியங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்தினார்கள். எபேசு சபையை தனக்குப் பிறகு வழிநடத்த தீமோத்தேயுவையை ஆயத்தப்படுத்தி இருந்தார். ஆனால் இன்றைக்கு சபைகளிலும், அமைப்புகளிலும், இயக்கங்களிலும் தேவனுடைய சித்தத்தின் படி அடுத்த தலைமுறையை உருவாக்குவதற்கு‌ பதிலாக குடும்ப உறவுகளின் அடிப்படையிலும் ஜாதி, வட்டார, மொழி கணக்குகளின் அடிப்படையிலும் தலைமைப் பொறுப்புக்கு நபர்களை நியமனம் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பான்மையானவருக்கு முன்னோர்களிடம் காணப்பட்ட தரிசனமோ, பாரமோ அக்கறையோ, வைராக்கியமோ கிடையாது. பவுலை உலகுக்கு அடையாளம் காட்டின பர்னபாக்களை பார்ப்பது மிகவும் அரிதாக உள்ளது. அதுவும் கடைசி இந்த கடைசி 30 ஆண்டுகளில் தலைமைத்துவ பதவி நியமனம் என்பது நியமனம் என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஒரு உண்மையான தலைவனின் வெற்றி எதிலே இருக்கிறது என்றால் தான் பெற்ற தரிசனத்தை மற்றவர்களிடம் சரியான முறையில் கடத்தி அந்தப் பணியை நிறைவேற்றுகிறவரை அடையாளம் கண்டு ஒப்படைப்பதில் இருக்கிறது. இன்றைய தேவை பவுலை அடையாளம் காட்டின பர்னபாக்களும் தீத்து‌‌ தீமோத்தேயுவை வழிநடத்தின ‌பவுல்களுமே.

யூதர்களைப் பற்றி உலகம் பார்க்க வேண்டிய பார்வை

யூதர்களைப் பற்றி உலகம் பார்க்க வேண்டிய பார்வை யூதர்கள் தேவனால் பாதுகாக்கப்பட்ட ஒரு இனம். யூதர்களின் வரலாறு ஆபிரகாமில் இருந்து ஆரம்பிக்கிறது. தேவன் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோர்களின் பிதா என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார் ஈராயிரம் ஆண்டுகளாக அந்த ஜனங்கள் தேவன் வாக்குத்தத்தம் பண்ணின அந்த இடத்தில் குடியிருந்தார்கள். ஆனால் அவர்கள் தேவனுடைய கற்பனைகளுக்கு கீழ்ப்படியாத காரணத்தினால் அவர்கள் தங்கள் நாட்டை விட்டு சிதறடிக்கப்பட்டார்கள். ஏறக்குறைய 2 ஆயிரம் ஆண்டுகளாக நாடோடிகளாக தங்களுக்கென்று ஒரு நாடு இல்லாத மக்களாக தங்கள் நாட்டை இழந்து காணப்பட்டார்கள் . ஆனாலும் அந்த ஜனத்தின் மீது தேவன் கிருபை வைத்து அவர்களுடைய முன்னோர்களுக்கு கொடுத்த வாக்குறுதியின்படி மீண்டுமாக தங்கள் முன்னோர்கள் குடியிருந்த அந்தப் பகுதியை அவர்கள் குடியேற வேண்டிய சூழ்நிலையை தேவன் உருவாக்கினார். அதன்படி இஸ்ரவேல் என்கிற தேசம் May 14, 1948, ல் உருவானது. அன்றைய காலகட்டத்தில் யூதர்கள் மீது ஒரு அனுதாபம் ஏற்பட்டது . ஆனால் பிறகுஅவர்கள் மீது ஒரு வெறுப்புணர்வு உலக சமூகத்தில் ஏற்பட்டது. Anti Zionism மிக தீவிரமாக வளர்ந்தது. யூதர்களைப் போல உலக மக்களால்‌ அதிகமாக சித்திரவதை செய்யப்பட்ட ஜனம் வேறு எந்த ஜனமும் கிடையாது. எல்லா நாடுகளிலுமிருந்து‌அவர்கள் துரத்தடிக்கப்பட்டார்கள். யூதர்களை இன்று உலகம் பார்க்கிற பார்வை என்பது அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக பார்க்கிறது. ஆனால் உலகம் தெரிந்துகொள்ள வேண்டிய அநேக உண்மைகள் இருக்கிறது. உலகத்தில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட யூதர்கள் 12 சதவீத தலைசிறந்த விஞ்ஞானிகளை‌ கொண்டிருக்கிறார்கள். 1901 மற்றும் 2022 க்கு இடையில் 954 தனிப்பட்ட நோபல் பரிசு பெற்றவர்களில், குறைந்தபட்சம் 212 பேர் யூதர்கள் அல்லது குறைந்தபட்சம் ஒரு யூத பெற்றோரைக் கொண்டவர்கள், இது அனைத்து பெறுநர்களில் 22% ஆகும். உலகம் யூதர்களுக்கு பல வகைகளில் கடமைப்பட்டிருக்கிறது. அவர்கள் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகள் உலகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். 1.Lazer கருவியை கண்டுபிடித்தது யூதர்கள்தான். இன்றைக்கு அது மருத்துவத்துறையில் எவ்வளவு பயனுள்ள கருவியாக இருக்கிறது என்பதை உலகம் அறியும். 2.Polio vaccination ஐகண்டுபிடித்தது அவர்கள் தான். இதன் மூலம் குழந்தைகள் paralysis தாக்குதலில் இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். 3.உலகம் ஒரு காலத்தில் பயந்து நடுங்கிய காலராவுக்கு மருந்து கண்டுபிடித்தவர்கள்‌யூதர்கள்தான்.:( Cholera and bubonic plague vaccinations) 4.Pacemaker என்கிற கருவியை கண்டுபிடித்தவர்கள் யூதர்கள். . 5.Stainless steel ஐ பிடித்தவர்கள் யூதர்கள்.இதன் மூலம் துருப்பிடிக்காத உலகத்தை அறிமுகப்படுத்தினார்கள். 6அணு ஆயுதத்தை கண்டுபிடித்தவர்கள் அவர்கள்தான். 7 Google ஐ முதலில் உருவாக்கியவர்கள் யூதர்கள். 8.Genetic engineering காரணமாக இருந்தவர்கள் யூதர்கள்தான். 9.தொலைபேசியை விமானத்தை கண்டுபிடித்தவர்கள் இவர்கள்தான்தான். 10.The Ballpoint Pen ,Instant cameras, Word-processing computer , Camera phone. Video games இவைகள்அனைத்தையும்கண்டுபிடித்தவர்கள் யூதர்கள். Theory of relativityஉருவாக்கியவர் பிரபலமான விஞ்ஞானி Albert Einstein –ஒரு யூதன். கம்யூனிஸ கோட்பாடுகளை உருவாக்கியவன்Karl Marx – ஒரு யூதன் Paul Baran – Internet He is often referred to as the "father of the Internet".இவன் ஒரு யூதன். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். மருத்துவத்துறையிலும் தொழில் வளர்ச்சியிலும், எல்லா வகையான துறைகளிலும் தங்களுடைய சிறப்பான பங்களிப்பை செலுத்தியவர்கள் யூதர்கள். அவர்களுடைய கண்டுபிடிப்பை உலகம் பயன்படுத்தியது என்பது உண்மைதான்.. ஆனால் இவர்களை உலகம் "ஆக்கிரமிப்பாளர்கள் 'என்கிற கருத்தை சொல்வது வருத்தமான காரியம்‌. உலகத்தில் உள்ள மிகச்சிறந்த தொழில்நுட்பம் உள்ள ராணுவப்படை அமெரிக்கா, ரஷ்யா ,சீனாவிற்கு அடுத்தபடியாக யூதர்களிடம் காணப்படுகிறது. இதுவரைக்கும் நடந்த 6 யுத்தங்களில் ஒன்றில் கூட அவர்கள் தோற்றது கிடையாது. ஒரு இனம் 2000 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பவும் தாங்கள் இழந்த இடத்தைப் பெற்ற ஒரு நிகழ்வை யூதர்களால் மட்டுமே செய்து காட்ட முடிந்தது. இந்த காரியம் தேவனாலன்றி சாதித்திருக்க முடியாது. ஆனாலும் இந்த இனம் இன்றைக்கும் தங்களுடைய முற்பிதாக்களின் தேவனை சரியாக அறியவில்லை. தேவனுக்கு தூரமாக இருக்கிறார்கள். ஆனால் இந்த காரியம் சபை புறஜாதிகளால் நிரப்பப்படுகின்ற காலம் வரைக்கும் இப்படித்தான் இருக்கும். இதை ஒரு ரகசியம் என்று பவுல் சொல்லுகிறார். எனவே உலக சமாதானத்திற்காக ஜெபிக்க நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். யூதர்களை வெகுவாக உயர்த்தியும் பேச வேண்டாம் அவர்களை மட்டம் தட்டியும் பேச வேண்டாம் . நமது நோக்கம் உலக சமாதானத்திற்காக ஜெபிப்பது மட்டும்தான். தேவன் இஸ்ரவேலை பொறுத்த அளவில் அவர் அவர்களுடைய முற்பிதாக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் உண்மையாய் இருக்கிறார். அதே வேளையில் அவர்களின் பாவங்களை, குற்றங்களை, தண்டிப்பதிலும் கடுமையாக இருக்கிறார் .நம் தேவன் சமநிலையை கடைபிடிக்கிற‌ தேவன். தேவன்மகிமைப்படுவாராக

இயேசு கிறிஸ்துவின் மீட்பின்  பயனை யாரெல்லாம் பெறுவார்கள் ?

உங்கள் சிந்தனைக்கு: இயேசு கிறிஸ்துவின் மீட்பின்  பயனை யாரெல்லாம் பெறுவார்கள் ? “ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்.” எபி 9:15 இதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால் முதலாம் உடன்படிக்கையின் கீழ் பாவம் செய்தவர்களை மன்னிக்கும்படியாக இயேசு கிறிஸ்து இப்பொழுது மரித்தார் என்பதுதான். WILLIAM BARCLAY என்கிற மிகப்பெரிய வேத பண்டிதர் இதைப் பற்றி எழுதும் பொழுது  "இந்த வார்த்தை எபிரேய  நிருபத்தில்  உள்ள மிக முக்கியமான பகுதி, அதுவும் மிகவும் கடினமான விளங்கிக் கொள்ள முடியாத பகுதி" என்று எழுதி இருக்கிறார். உண்மையிலேயே இதனுடைய அர்த்தம் என்ன? நாம் அனைவரும்  எண்ணுகிறமாதிரி  இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரண பாடுகள் அவரை  விசுவாசிக்கிறவர்களுக்கு (புதிய உடன்படிக்கையின் கீழ்)   மட்டும்  நித்திய சுதந்தரத்தை   வழங்கும்  என்று எண்ணுகிறோம். இந்த உலகில் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்  நடைப்பெற்ற பிறகு  அவருடைய பாடுகள், உயிர்த்தெழுதலில் நம்பிக்கை வைக்கிற எல்லோரும் நித்திய ஜீவனை        பெற்றுக் கொள்கிறோம் என்பது நாம் சாதாரணமாக நம்புகிற ஒரு காரியம். ஆனால் இது முழு உண்மை அல்ல. இதை  பற்றி   WARREN  WIERSBE என்கிற மிகப்பெரிய  Bible commentator  இவ்வாறு  எழுதுகிறார். “There was no final and complete  redemption under OT Covenant. Their transgression were covered by the blood of animals , but  not cleansed  until the sacrifice of Christ on the cross.”.( பழைய உடன்படிக்கையின் கீழ் முழுமையான மீட்பு இல்லை. அவர்களின்   மீறுதல்கள் விலங்குகளின் இரத்தத்தால் மூடப்பட்டிருந்ததேயொழிய ,  அவைகள் சிலுவையில் கிறிஸ்து பலியிடப்படும்வரை  கழுவப்படவில்லை.) “The efficacy of Christ ‘s atonement was retrospective as well as prospective “R .W . PINK இயேசு கிறிஸ்துவின் மீட்பின் பயன் முன்தேதியிட்டு யூதர்களுக்கும் குறிப்பாக தெரிந்து கொள்ளப்பட்ட  யூதர்களுக்கும் வழங்கப்படுகிறது என்பது இந்த வாக்கியத்தின் உண்மையான அர்த்தம். கீழ்க்காணும் வேத வாக்கியங்கள் மூலம் இதை புரிந்து கொள்ள முடியும். அவர் (ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்து) உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, இந்தக் கடைசிக்காலங்களில் வெளிப்பட்டார். கீழ்க்காணும் வேத வாக்கியங்கள் மூலம் இதை புரிந்து கொள்ள முடியும். 1 பேது 1:19,20, 1கொரி  10:3-4, ரோம 3:25. பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களும்  இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டார்கள்  என்பதே ஏற்றுக்கொள்ளக்கூடிய சத்தியம்“. It was just  as  efficacious in taking away the transgressions  of the believers  before it was actually shed,  as it is of cleansing  believers   today,  nineteen  centuries after it was shed. R.W .PINK அவர்கள் (யூதர்கள் ) நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றை தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்.எபி 11:40 The efficacy of Christ‘s atonement was retrospective as well as prospective.. R .W . PINK –Heb 9:15

ஏழைகளைப் பற்றிய பார்வை மாற வேண்டும் .

ஏழைகளைப் பற்றிய பார்வை மாற வேண்டும் . ஒரு ஸ்திரீ கர்ப்பவதியாகி ஆண்பிள்ளையைப் பெற்றால், ஏழுநாள் தீட்டாயிருப்பாள். எட்டாம் நாளிலே அந்தப் பிள்ளையினுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும். பின்பு அவளுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறினபின்பு, அவள் ஒரு வயதான ஆட்டுக்குட்டியை சர்வாங்க தகனபலியாகவும், ஒரு புறாக்குஞ்சையாவது, காட்டுப்புறாவையாவது பாவநிவாரண பலியாக செலுத்த வேண்டும். ஒருவேளை ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவளுக்குச் சக்தியில்லாதிருந்தால், இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்றைச் சர்வாங்க தகனபலியாகவும் மற்றொன்றைப் பாவநிவாரண பலியாகவும் செலுத்த வேண்டும். லேவியராகமம் 12:2-8 ஆண்டவர் ஏழைகளை கருத்தில் கொண்டு இந்த விதிவிலக்கை அவர்களுக்கு கட்டளையாகக் கொடுத்திருக்கிறார். உலகத்தை படைத்த தேவ குமாரன் மரியாளின் வயிற்றில் பிறந்த போது மரியாளும் இந்த ஏழைகளுக்கு அனுமதிக்கப்பட்ட‌ இரண்டு புறா குஞ்சுகளைத்தான் செலுத்தினாள். அந்த அளவுக்கு இயேசு கிறிஸ்து மிகவும் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார் என்பது நாம் அறிந்து கொள்ளக் கூடிய ஒரு காரியம். அவர் ஏழையாகவே பிறந்தார். ஏழையாகவே வாழ்ந்தார். ஏழையாகவே மரித்தார். ஊழியத்தின் பணத்தைக் கூட தன் கையிலேகூட தொடாமல் தன்னால் காட்டிக் கொடுக்கப்பட்ட யூதாஸ் கையிலேதான் கொடுத்தார். அவர் ஒருபோதும் செல்வந்தர்களோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. செல்வந்தர்களை தன் சீஷர்களாக கூட சேர்த்துக் கொள்ளவில்லை. செல்வந்தர்களைப் புகழ்ந்ததில்லை. பணக்காரர்களுக்கு உயர்ந்த பொறுப்புக்களை வழங்கியதில்லை. இயேசு கிறிஸ்து அவருடைய பிள்ளைகளுக்கு வைத்துள்ள மிக‌ச் சிறந்த மாதிரி இது. நாம் செல்வந்தராக பிறப்பதில் தவறில்லை. செல்வத்தை சம்பாதிப்பதிலும் தவறில்லை. ஆனால் நம்முடைய சிந்தையில் எளிமை காணப்படவேண்டும். ஏழைகளைப் பற்றிய பார்வை மாற வேண்டும் . ஏழைகள் என்றாலே கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படாதவர்கள் என்கிற சிந்தனை அகற்றப்பட வேண்டும் . வீடு இல்லாதவர்கள், இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் இல்லாதவர்களைப் பற்றிய நமது பார்வை மாற வேண்டும். நம்முடைய அணுகுமுறையில், செயல்பாட்டில், பொறுப்புக்களை வழங்குவதில், உறவு முறைகளில், உதவிகள் செய்வதில், நாம் ஏழைகளை எப்படி நடத்துகிறோம் என்பது தான் முக்கியம். பரலோகத்தில் ஏழைகள் அதிகமாக காணப்பட்டால் அதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

Two silent periods of God

Two silent periods of God தேவன் எப்பொழுதும் செயல்பட்டுக் கொண்டே இருப்பார் ஆனால் வரலாற்றில் சில நேரங்களில் அவர் அமைதியாக காணப்பட்டார். He was silent. தேவன் இந்த உலகத்தை படைத்த நாளிலிருந்து இரண்டு காலகட்டங்களில் அவர் அமைதியாக இருந்திருக்கிறார் . அந்த காலகட்டங்களில் தேவனுடைய வார்த்தை மனு குலத்திற்குவெளிப்படவில்லை. எந்த தீர்க்கதரிசியும் அந்த காலங்களில் தோன்றவில்லை. ஒரு அமைதியான காலகட்டம். அப்படிப்பட்ட ஒரு காலகட்டம்தான் இஸ்ரவேல் ஜனங்கள் 400 ஆண்டு காலம் எகிப்தில் அடிமையாக இருந்த காலம். அந்தக் காலத்தை குறித்து வேதம் எதுவும் தெளிவாக விளக்கவில்லை. அந்த காலத்தில் தேவனுடைய வார்த்தை இஸ்ரவேல் மக்களுக்கு வெளிப்பட்டதாக வேதத்தில் சொல்லப்படவில்லை. அந்த 400 கால இடைவெளியின் முடிவில் தான் தேவன் இஸ்ரவேல் ஜனங்களின் சத்தத்தை கேட்டார் என்று பார்க்க முடிகிறது.யாத்2:24 அதேபோல் மல்கியா தீர்க்கதரிசியின் காலத்திற்குப் பிறகு 400 ஆண்டுகளாக தேவனுடைய செயல்பாடுகள் பற்றி வேதத்தில் குறிப்பிடவில்லை. அந்த காலகட்டத்தில் எந்த தீர்க்கதரிசியும் தோன்றவில்லை. கர்த்தருடைய வார்த்தையும் வெளிப்படவில்லை. அதற்குப் பிறகு யோவான்ஸ்நானன் பழைய ஏற்பாட்டின் இறுதி தீர்க்கதரிசியாக தோன்றினான். இந்த 400 கால இடைவெளியில் எந்த வேத புத்தகம் எழுதப்பட்டதாக தெரியவில்லை. இந்த நிகழ்வுகள் பழைய ஏற்பாட்டில் சம்பவித்த காரியங்கள் ஆனால் புதிய ஏற்பாட்டில் அப்படி அல்ல. நம்முடைய வாழ்க்கையிலும் சில நேரங்களில் அவர் தலையிடாமல் இருப்பது போல் தோன்றும். அந்த நேரங்களில் நம்முடைய பிரச்சனைகளுக்கு பதில் கிடைக்காதது போல் இருக்கும். தேவன் தூரத்தில் இருப்பது போல் ஒரு சிந்தனை ஏற்படும். தேவன் நம்மிடத்தில் இல்லையோ என்கிற கற்பனை உண்டாகும் ஆனால் அது அப்படி இல்லை.. புதிய ஏற்பாட்டு காலத்தில் நம்மில் வாசம் பண்ணும்பரிசுத்த ஆவியானவரும் தேவன் நமக்கு கொடுத்த வேதமும் இருக்கிறபடியால் அவைகள் நம்மை வழிநடத்தும். ஆவியானவரின் வழிநடத்துதலுக்கும்,வசனத்தின் கீழ்படிதலுக்கும் நம்மை ஒப்புக் கொடுக்கும் பொழுது அவர் நம்மோடு இடைபடுவார். இதுதான் புதிய ஏற்பாட்டிற்க்கும் பழைய ஏற்பாட்டிற்கும் உள்ள வித்தியாசம்.

SILENCE

Silence in the face of evil is itself evil: God will not hold us guiltless. Not to speak is to speak. Not to act is to act.- Bonhoeffer

தரிசனம்

தரிசனங்களின் மூலம் நான் அறியவிரும்பும் தேவனை விட வார்த்தைகளின் மூலம் அறிந்துகொண்ட தேவனே போதுமானவர் . 2 கொரி11:14

இரத்தமும் பாவநிவிர்த்தியும். Atonement and blood.

இரத்தமும் பாவநிவிர்த்தியும். Atonement and blood. வேதத்தில் 460 தடவை "இரத்தம்" என்கிற வார்த்தை காணப்படுகிறது. பழைய ஏற்பாட்டில் மட்டும் 362 இடங்களில் வருகிறது. பாவநிவிர்த்திக்கு(Atonement )அடிப்படையாக  இருப்பது இரத்தமே. இரத்தம் சிந்தப்படாமல் பாவமன்னிப்பு கிடையாது. இரத்தத்தினுடைய சிறப்பை நீர்த்துப் போகப்பண்ணுகிற எந்த இறையியலும் வேதத்தின் படி சரியானது அல்ல. அதற்கு ஆதாரமான வசனம் இதுவே. "மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே. லேவியராகமம் 17:11 எனவே தான் 40 வருட வனாந்திர வாழ்க்கையில்  மிருகங்கள் உணவிற்காக எல்லா இடங்களிலும் கொலை செய்யப்படக்கூடாது, உணவிற்காக கொலை செய்யப்பட வேண்டிய மிருகங்கள் முதலில் ஆசரிப்பு கூடாரத்திற்கு கொண்டுவரப்பட்டு அவைகள் சமாதானபலியாக கர்த்தருடைய சன்னிதானத்தில் கொல்லப்பட வேண்டும் என்று தேவன் கட்டளை இட்டார். ஆனால் இந்த கட்டளைகள் அவர்கள் கானானுக்கு சென்ற பிறகு மாற்றப்பட்டுவிட்டது . உபா 12:15. அந்த அளவிற்கு பலியோடு இரத்தம் சம்பந்தப்பட்டுள்ளது. எப்படி ரத்தம் இல்லாமல் உயிர் இல்லையோ, அதுபோல இரத்தம் இல்லாமல் பாவ நிவிர்த்தி கிடையாது. பாவ நிவிர்த்திக்கு இரத்தமே அடிப்படை. பழைய ஏற்பாட்டில் மிருகங்களின் இரத்தத்தினால் இஸ்ரவேல் ஜனங்களின் பாவங்கள் மூடப்பட்டது. புதிய உடன்படிக்கையில் மீட்பின் திட்டத்திற்கு அடிப்படையாக இருப்பது மனிதகுமாரனாகிய இயேசு கிறிஸ்து நமக்காக சிந்திய இரத்தமே . அவருடைய இரத்தத்தினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு இருக்கிறோம்.ரோம 5:9 அவருடைய இரத்தத்தினால் நமக்கு மீட்பு உண்டு .எபேசி1:7 அவருடைய ரத்தத்தினால் பரிசுத்தமாக்கப்பட்டு வருகிறோம். எபிரே13:12 அவர் இரத்தத்தினால் பாவங்கள் கழுவப்படுகிறது.வெளி1:6 அவருடைய இரத்தம் தெளிக்கப்பட்ட பிள்ளைகளாக பாதுகாக்கப்பட்டு வருகிறோம். 1பேது 1:2 இதுவே நமக்கு அடையாளமாக இருக்கிறது. அன்றைக்கு எகிப்திலே இஸ்ரவேலை பாதுகாத்தது ஆட்டுக்குட்டியின் இரத்தம். இன்றைக்கும் நம்மை அனுதினமும் பாதுகாப்பது அதைவிட மேன்மையான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம். குமாரனுடைய இரத்தத்தினால் பிதாவுக்கு சமீபமாய் இருக்கிறோம். எபே 2:13 நாம் இணைந்து இருக்கின்ற திருச்சபை தேவனுடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்த சபை. அப்20:28. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அவருடைய இரத்தத்தினால் நாம் பெற முடியாத ஆவிக்குரிய ஆசீர்வாதங்களே  இல்லை. நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்கு இயேசு கிறிஸ்துவின்  குருதியை‌ (இரத்தம்) பற்றிய சரியான வெளிப்படுத்தல் நமக்கு தேவை.

"கிறிஸ்துவும் இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்". என்பதின் உண்மையான அர்த்தம்

"கிறிஸ்துவும் இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார். " எபி 9:28 இந்த வார்த்தையின் உண்மையான அர்த்தம் என்ன? அப்படி என்றால் முதல் தடவை பாவத்தோடு தோன்றினாரா என்ற கேள்வி எழக்கூடும்.   இந்த வார்த்தையை தவறாக, பவர் மொழிப்பெயர்ப்பு செய்துள்ளார். இது பலவிதமான தவறான வியாக்கியானங்களுக்கு வழிவகுத்துவிட்டது. சரியான மொழிப்பெயர்ப்பு இதுதான். "அதைப்போலவே கிறிஸ்துவும் எல்லாருடைய பாவங்களையும் சுமந்து போக்கும்படி ஒரே முறை  பலியாக படைக்கப்பட்டார். அவர் மீண்டும் ஒருமுறை தோன்றுவார். ஆனால் பாவத்தின் பொருட்டன்று. தமக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மீட்பை அருளும் பொருட்டே தோன்றுவார். இது ராஜரிகம் அவர்கள் மொழிபெயர்ப்பு. "கிறிஸ்துவும் இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்" என்பது தவறான மொழிபெயர்ப்பு. முதல் தடவை அவர் தேவனுடைய குமாரனாக அவதரித்த  போது  பாவத்தை சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டியாக  வெளிப்பட்டார்.  அதாவது நம்மை பாவத்தினின்று மீட்க உலகத்தின் பாவத்தை தன் மேல் சுமந்து  தீர்த்தவராக  வெளிப்பட்டார். ஆனால்  இரண்டாம் தரம் வெளிப்படும்போது அவர் தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி , அவர்களை மீட்க, பாவத்தை சுமந்து தீர்க்க அவசியம் இல்லாதவராக வெளிப்படுவார். இதுதான் அவர் பாவம் இல்லாதவராக இரண்டாம் தரம் வெளிப்படுவார் என்பதன் அர்த்தம். முதல் தடவை நம்முடைய பாவத்தைப் போக்குவதற்காக , சுமப்பதற்காக அவர் வெளிப்பட்டார். இரண்டாம் முறை அவர் நமக்கு இரட்சிப்பை அருளும்படி  தரிசனமாவார். JESUS CHRIST WILL  ‘’appear not for expiation but for salvation’’. JOHN BROWN

கோராகுவை தண்டித்து பிள்ளைகளை தப்புவித்த தேவன்

கோராகுவை தண்டித்து பிள்ளைகளை தப்புவித்த தேவன். மோசே இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தின அந்த காலகட்டத்தில் அவன் சந்தித்த மிகப்பெரிய சோதனைகளில் கோராகும் அவனை சேர்ந்தவர்களும் தனக்கு எதிராகநடத்தின கலகம் தான் . லேவிக்குப் பிறந்த கோகாத்தின் குமாரனாகிய இத்சேயாரின் மகன் கோராகு என்பவன் ரூபன் வம்சத்திலுள்ள எலியாபின் குமாரனாகிய தாத்தானையும் அபிராமையும் பேலேத்தின் குமாரனாகிய ஓனானையும் இணைத்து மோசேயின் தலைமைக்கு எதிராக நேரடியாக கலகம் செய்தார்கள் எண்ணாகமம் 16:1 விளைவு கோராகுவுடன் தாத்தான்அபிராமின் குடும்பத்தாரும் பூமி தன் வாயை திறந்ததில் இவர்கள் அதில் விழுங்கப்பட்டு மரித்து போனார்கள். கோராகுவுக்கு ஆதரவாக இருந்த 250 நபர்களை நெருப்பு எரித்து போட்டது. இதில் ஆச்சரியமான காரியம் என்னவென்றால் இந்த கலவரத்திற்கு காரணமான கோராகுவின் மகன்கள் இதில் மாட்டிக் கொள்ளவில்லை. இந்த தண்டனையில் அவர்கள் தப்பித்து விட்டார்கள். எண்ணா 26:10,11. இதைவிட ஆச்சரியமான காரியம் என்றால் இந்த கோராகு வம்சத்தில் இருந்து வந்தவன்தான் மோசேக்கு பின்னால் எழும்பிய மிகப்பெரிய தீர்க்கதரிசி சாமுவேல். 1நாளா6:22,23 காரணம் இதுவாக இருக்கலாம். தகப்பனுடைய மோசேக்கு விரோதமான கலகத்தில் அவர்களுக்கு உடன்பாடு இல்லாமல், அதில் கலந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம்‌. எனவே தேவன் அவர்களை தப்புவித்திருக்கலாம். அந்தக் கலவரத்தில் இவர்களுக்கு சம்பந்தம் இருந்திருக்கும் என்றால் இவர்களும் அழிந்திருப்பார்கள். Itஆனால் அப்படி நடக்கவில்லை . தகப்பனாக இருந்தாலும் குடும்பமே இணைந்து தேவனுக்கு விரோதமான காரியங்களில் செயல்பட்டாலும் நீதியின் பக்கம், நியாயத்தின் பக்கம் இருக்கிற மக்களை தேவன் ஆசீர்வதிப்பார். அந்த சந்ததியை தேவன் கனம் பண்ணுவார் என்பது இந்த நிகழ்வின் மூலமாக நாம் அறிந்து கொள்ளலாம். என்னதான் குடும்பமே ஆதரித்தாலும், நாம் நேசிக்கும் தலைவர்கள் அநீதிக்கு ஆதரவாக இருந்தாலும் எப்பொழுதுமே நீதி நியாயம் சத்தியம் உண்மை இவர்களின்பால்‌ நிற்கிற சிறு கூட்டம் என்றைக்கும் தேவனால் கனத்தையும் மகிமையும் பெறுவார்கள் என்பது நிச்சயம்.

ஆலயமும் ஆசாரியத்துவமும்

ஆலயமும் ஆசாரியத்துவமும். யூதர்கள் ஆசாரியர்களையும் லேவியர்கள்  தங்கள்  ஆசாரியத்துவத்தையும்  இழந்து  விட்டார்கள். காரணம்  அவர்களுடைய  தேவாலயம் இடிக்கப்பட்டுவிட்டது. ஆலயம் இருந்தால் தான் ஆசாரியத்துவம் இருக்கும். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். அதுபோல நாமும்  ஆலயமாக  தேவனுடைய பார்வையில் காணப்படும் வரையில்தான் மற்றவர்களுக்கு  லேவியராக,  ஆசாரியராக வாழ முடியும். என்றைக்கு "நாம் தேவனுடைய ஆலயம்" என்கிற நிலையை இழந்து விடுகிறோமோ அன்றைக்கு நாம் உலகிற்கு ஆசாரியர்களாக வாழ தகுதியற்றவர்களாக மாறிவிடுகிறோம். பழைய ஏற்பாட்டில் தேவனுடைய மகிமை இஸ்ரவேலை விட்டு கடந்து போனதற்கு ஆசாரியர்கள் தேவன் கொடுத்த பாதையை விட்டு விலகிப் போனதே காரணம்.புலம் 4:13 இன்றைக்கும் சபை தன் மகிமையை இழந்து புறஜாதிகளால் நிந்திக்கப்படும் நிலைமைக்கு சென்றதற்கு காரணம் நம்முடைய   வாழ்க்கை முறையே. ஆவிக்குரிய போர்வையில்‌உலகத்தை மிஞ்சும் ஆடம்பரமான வாழ்க்கை, சுயநலம் போன்றவைகள் நம்முடைய  ஆலயத்தை கெடுத்து விடுகிறது . சுடர்விடும்  நட்சத்திரங்களைப் போல வாழ வேண்டிய நாம் இக்கபோத்துகளாக (தேவ மகிமை இழந்தவர்களாக) மாறிவிட்டோம். எனவே புதிய ஏற்பாட்டு ஆசாரியர்களாகிய நாம் நம்முடைய  ஆலயத்தை எப்பொழுதும் தேவன் தங்கும் வீடாக பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த உலகத்தில் தேவன் நமக்கு கொடுத்த மிகச் சிறந்தஆசாரியத்துவ பட்டத்தை ஒருபோதும் இழந்து விடக்கூடாது.

ஆலயமும் ஆசாரியத்துவமும்

ஆலயமும் ஆசாரியத்துவமும். யூதர்கள் ஆசாரியர்களையும் லேவியர்கள்  தங்கள்  ஆசாரியத்துவத்தையும்  இழந்து  விட்டார்கள். காரணம்  அவர்களுடைய  தேவாலயம் இடிக்கப்பட்டுவிட்டது. ஆலயம் இருந்தால் தான் ஆசாரியத்துவம் இருக்கும். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். அதுபோல நாமும்  ஆலயமாக  தேவனுடைய பார்வையில் காணப்படும் வரையில்தான் மற்றவர்களுக்கு  லேவியராக,  ஆசாரியராக வாழ முடியும். என்றைக்கு "நாம் தேவனுடைய ஆலயம்" என்கிற நிலையை இழந்து விடுகிறோமோ அன்றைக்கு நாம் உலகிற்கு ஆசாரியர்களாக வாழ தகுதியற்றவர்களாக மாறிவிடுகிறோம். பழைய ஏற்பாட்டில் தேவனுடைய மகிமை இஸ்ரவேலை விட்டு கடந்து போனதற்கு ஆசாரியர்கள் தேவன் கொடுத்த பாதையை விட்டு விலகிப் போனதே காரணம்.புலம் 4:13 இன்றைக்கும் சபை தன் மகிமையை இழந்து புறஜாதிகளால் நிந்திக்கப்படும் நிலைமைக்கு சென்றதற்கு காரணம் நம்முடைய   வாழ்க்கை முறையே. ஆவிக்குரிய போர்வையில்‌உலகத்தை மிஞ்சும் ஆடம்பரமான வாழ்க்கை, சுயநலம் போன்றவைகள் நம்முடைய  ஆலயத்தை கெடுத்து விடுகிறது . சுடர்விடும்  நட்சத்திரங்களைப் போல வாழ வேண்டிய நாம் இக்கபோத்துகளாக (தேவ மகிமை இழந்தவர்களாக) மாறிவிட்டோம். எனவே புதிய ஏற்பாட்டு ஆசாரியர்களாகிய நாம் நம்முடைய  ஆலயத்தை எப்பொழுதும் தேவன் தங்கும் வீடாக பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த உலகத்தில் தேவன் நமக்கு கொடுத்த மிகச் சிறந்தஆசாரியத்துவ பட்டத்தை ஒருபோதும் இழந்து விடக்கூடாது.

நம்முடைய அடையாளங்கள்

நம்முடைய அடையாளங்கள் 1.நம்முடைய பிதா   விண்ணுலகபிதா. 2. நம்முடைய இரட்சகர்  விண்ணுலக மத்தியஸ்தர் 3.நம்முடைய குடியிருப்பு(வீடு)  பரலோக குடியிருப்பு. பிலிப் 3:20 4 .நம்முடைய குடியுரிமை விண்ணக குடியுரிமை. நாம் வாழும் இந்த உலகம் ஒரு கூடாரம் போன்றது. 2 கொரி 5:1 5.எனவே  நம்முடைய பொக்கிஷங்கள்  பரலோகத்தில் தான்  இருக்கவேண்டும். மத்தேயு  6:19 போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம். உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்.1 தீமோ 6:6-8 இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.1 கொரி 15:19. இந்த வார்த்தைகள் எந்த அளவுக்கு நம் இருதயத்தில் பதித்து கிரியை செய்கிறதோ அந்த அளவுக்கு நாம் செழிப்பின் உபதேசத்தில் இருந்து தப்பித்துக் கொள்வோம். அதற்காக நாம் எப்பொழுதும் வறுமையில் வாழ வேண்டும் என்று தேவன் விரும்புகிறவர் அல்ல. ஆனால் நாம் வசனத்தை தேடுவதை விட்டுவிட்டு, ஆத்துமாக்களை தேடுவதை விட்டுவிட்டு, ஆன்மீக காரியங்களை நாடுவதை தவிர்த்து, ஆசீர்வதிக்கும் தேவனை விட அவரின் உலக ஆசீர்வாதங்களை முக்கிய படுத்துவது  ஆவிக்குரிய வீழ்ச்சிக்கு முதல் படியாகும். நம்முடைய ஆவிக்குரிய அடையாளங்கள்  முகவரியை இவற்றை ஒருபோதும் இழக்கக்கூடாது.

ஆலயமும் ஆசாரியத்துவமும்.

உங்கள் சிந்தனைக்கு: ஆலயமும் ஆசாரியத்துவமும். யூதர்கள் ஆசாரியர்களையும் லேவியர்கள்  தங்கள்  ஆசாரியத்துவத்தையும்  இழந்து  விட்டார்கள். காரணம்  அவர்களுடைய  தேவாலயம் இடிக்கப்பட்டுவிட்டது. ஆலயம் இருந்தால் தான் ஆசாரியத்துவம் இருக்கும். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். அதுபோல நாமும்  ஆலயமாக  தேவனுடைய பார்வையில் காணப்படும் வரையில்தான் மற்றவர்களுக்கு  லேவியராக,  ஆசாரியராக வாழ முடியும். என்றைக்கு "நாம் தேவனுடைய ஆலயம்" என்கிற நிலையை இழந்து விடுகிறோமோ அன்றைக்கு நாம் உலகிற்கு ஆசாரியர்களாக வாழ தகுதியற்றவர்களாக மாறிவிடுகிறோம். பழைய ஏற்பாட்டில் தேவனுடைய மகிமை இஸ்ரவேலை விட்டு கடந்து போனதற்கு ஆசாரியர்கள் தேவன் கொடுத்த பாதையை விட்டு விலகிப் போனதே காரணம்.புலம் 4:13 இன்றைக்கும் சபை தன் மகிமையை இழந்து புறஜாதிகளால் நிந்திக்கப்படும் நிலைமைக்கு சென்றதற்கு காரணம் நம்முடைய   வாழ்க்கை முறையே. ஆவிக்குரிய போர்வையில்‌உலகத்தை மிஞ்சும் ஆடம்பரமான வாழ்க்கை, சுயநலம் போன்றவைகள் நம்முடைய  ஆலயத்தை கெடுத்து விடுகிறது . சுடர்விடும்  நட்சத்திரங்களைப் போல வாழ வேண்டிய நாம் இக்கபோத்துகளாக (தேவ மகிமை இழந்தவர்களாக) மாறிவிட்டோம். எனவே புதிய ஏற்பாட்டு ஆசாரியர்களாகிய நாம் நம்முடைய  ஆலயத்தை எப்பொழுதும் தேவன் தங்கும் வீடாக பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த உலகத்தில் தேவன் நமக்கு கொடுத்த மிகச் சிறந்தஆசாரியத்துவ பட்டத்தை ஒருபோதும் இழந்து விடக்கூடாது.

வேதத்தை பகுத்தாய்வு செய்தல்

வேதத்தை பகுத்தாய்வு செய்தல் லேவியராகம் புத்தகம் 19 ,20 அதிகாரங்களை படிக்கும் போது கீழ்க்கண்ட வசனங்கள் என் சிந்தனையைத் தூண்டியது. அதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகி றேன்‌ 1.பழிக்குப்பழி வாங்காமலும், உன் ஜனப்புத்திரர்மேல் பொறாமை கொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக, நான் கர்த்தர். லேவியராகமம் 19:18 ஆண்டவர் இந்தக் கட்டளையை மற்றவர்கள் மீது பழி வாங்காமல் இருக்க வேண்டும் என்று சொல்லுகின்ற வேளையில் செல்கிறார் அதே வேளையில் இந்த கட்டளையை இரண்டாவது பெரிய கட்டளையாக புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து சொல்கிறார். அதாவது உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்கிற‌ பிரதான கற்பனையோடு இந்தக் கட்டளையை இணைத்து இரண்டாவது பெரிய கட்டளையாக சொல்கிறார். "இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே: இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார். மாற்கு 12:31 பழைய ஏற்பாட்டில் "உன்னைப் போல் பிறரையும் நேசி" என்கிற இந்த கட்டளை சொல்லப்பட்டிருந்தாலும் புதிய ஏற்பாட்டில் அதற்கு ஒரு புதிய பரிமாணத்தை இயேசு கிறிஸ்து கொடுக்கிறார். இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்கிறார் மத்தேயு 22:40 "Jesus identified this as one of only two commandments that , if kept, would fulfill all of the Law". The Nelson study Bible 2. அதேபோல ஒருவன் குழந்தை இல்லாமல் மரித்துப் போனால், அவன் மனைவி வேறொருவனுக்கு மனைவியாகதபடிக்கு அவளுடைய புருஷனுடைய சகோதரன் அவளை மறுமணம் செய்து கொள்ள வேண்டும். அவளுக்கு வேண்டிய கடமைகளை செய்ய வேண்டும்.உபா 25:5 இது பழைய ஏற்பாட்டில் உள்ள கட்டளை. ஆனால் இந்த கட்டளை புதிய ஏற்பாட்டுக்கு பொருந்தாது. எனவே பழைய ஏற்பாட்டில் உள்ள எல்லா ஆசீர்வாதங்களும் சட்டங்களும் புதிய ஏற்பாட்டு விசுவாசிகளுக்குப் பொருந்தும் என்ற காரியங்களை யோசித்துப் பார்க்க வேண்டும். இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்த நோக்கம், அவருடைய கற்பனைகள், அவருடைய பார்வையில் நாம் எப்படி இருக்கிறோம், அவர் நம்மை எப்படி பார்க்கிறார், பழைய ஏற்பாட்டில் தேவன் யூதர்களை நடத்தின விதம், யூதர்களுக்கு விரோதமாக எழும்பின மக்களை அவன் நடத்தின விதம், பாவத்தை குறித்து அவருடைய பார்வை, பாவத்தின் தண்டனை இவைகள் அனைத்தையும் நாம் கவனித்து பார்க்க வேண்டும். ஒட்டுமொத்தமாக இவைகளின் அடிப்படையில் தான் பழைய ஏற்பாட்டு ஆசிர்வாதங்களை நாம் பொருத்திப் பார்க்க வேண்டுமே தவிர அதை முழுமையாக நாம் சொந்தம் கொண்டாடுவது வேதத்தின் படி சரியில்லை.

who is God

It is evident, by both scripture and reason, that God is infinitely, eternally, unchangeable, and independently glorious and happy: that He cannot be profited by, or receive anything from, the creature.-Edwards

ஆதாம்,  ஏவாளை  சபிக்காத கர்த்தர் ஏன் காயினை சபித்தார் ?

ஆதாம்,  ஏவாளை  சபிக்காத கர்த்தர் ஏன் காயினை சபித்தார் ? ஆண்டவரால் சபிக்கப்பட்ட முதல் மனிதன்  காயின். கர்த்தர் முதலில் சர்ப்பத்தையும் சாத்தானையும் பின்பு நிலத்தையும் சபித்தார்.(ஆதி 3:14-17). ஆனால்  ஆதாமையும் ஏவாளையும் சபிக்கவில்லை. ஏவாள் வஞ்சிக்கப்பட்டாள் . ஆதாம் அதற்கு உடந்தையாக இருந்தான். அவர்கள் தேவனுக்கு விரோதமாக எதிர்த்து நிற்கவில்லை. ஆனால் காயின் நிலை அப்படியில்லை. கர்த்தரோடு நல்மனசாட்சியோடு வாழ விரும்பவில்லை. காணிக்கையின் மூலம் தேவனை பிரியப்படுத்திவிடலாம்  என்று நினைத்தான். காணிக்கைகளின் தரத்தை  வைத்தோ அல்லது   அதன்  சிறப்பை வைத்தோ ஆண்டவர் எந்த மனிதனின் செயலையும் அங்கீகரிப்பதில்லை.  காணிக்கை செலுத்துபவர்களது ஆவிக்குரிய குணங்களின் அடிப்படையில் கர்த்தர் காணிக்கைகளை அங்கீகரிக்கிறார். காயின் வழி (The ways of Cain)கர்த்தருக்கு பிரியமில்லாத வழிகள்( யூதா 11). ஆண்டவரின் ஆளுகையை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களின் வழி, (ஆதி 4: 5,9.) "நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மை செய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும். அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் "என்கிற ஆலோசனையை நிராகரித்தான். ஆதியாகமம் 4:7 எனவே கர்த்தர் காயினை சபித்தார். கர்த்தருக்கு பிரியமில்லாமல்  போலியான ஆராதனை செய்து, பாவத்தோடு விளையாடி, தேவனுடைய இரக்கத்தை அலட்சியம் செய்யும் மனிதர்களின் எந்த  காணிக்கையையும் கர்த்தர் அங்கீகரிக்க மாட்டார். அவனுடைய சந்ததி முழுவதும் வெள்ளத்தில் அழிந்து போனது. இன்று காணிக்கைகளை பற்றியே பேசும் எல்லோர்க்கும் காயின் வாழ்க்கை மிகப்பெரிய எச்சரிக்கை .

603550-2= 603548

6,03550 2 --------------- 603548 -------------- வேத புத்தகத்தில் எத்தனையோ கணக்குகள் உண்டு. ஆனால் மேலே சொல்லப்பட்ட கணக்கு மிகவும் ஒரு எச்சரிக்கையை நமக்கு அளிக்கின்ற கணக்கு. இஸ்ரவேல் மக்கள் 400 ஆண்டு காலமாக எகிப்து தேசத்திலே அடிமைகளாக வாழ்ந்தார்கள். அங்கே அவர்களுடைய வாழ்க்கை கசப்பாக இருந்தது. அவர்கள் படுகின்ற வேதனையை, கூக்குரலை கேட்ட தேவன் அவர்களை விடுதலை ஆக்கினார் . அவர்கள் தேவன் வாக்களித்த கானான் தேசத்திற்கு புறப்பட்டு வந்தார்கள். அப்பொழுது அந்த திரள் கூட்டத்தில் 603550 பேர் 20 வயதுக்கு மேற்பட்ட அதாவது போர் புரிவதற்கு தகுதியான நபர்கள். ஆனால் இவர்கள் தங்களை விடுதலையாக்கின தேவனுடைய வாக்குறுதியை விசுவாசியாமல் அவருக்கு விரோதமாக கலகம் செய்து அவரை துக்கப்படுத்தினார்கள். வனாந்திரத்தில் தேவனுடைய சத்தத்தை கேட்டு அதன் படி நடக்க மனதில்லாமல் வழி விலகிப் போனார்கள். எனவே யுத்த மனிதரான அந்தச் சந்ததியெல்லாம் அதாவது எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும் நூனின் குமாரனாகிய யோசுவாவும் தவிர, மற்ற அனைவரும் வனாந்தரத்தில் மடிந்து போனார்கள். உபாகமம் 2:14 வனாந்தரத்தில் சாகவே சாவார்கள் என்று கர்த்தர் சொல்லிபடியே, எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும் நூனின் குமாரனாகிய யோசுவாவும் தவிர, வேறொருவரும் அவர்களில் மீதியாயிருக்கவில்லை. எண்ணாகமம் 26:65 அதாவது 603548 பேர்கள் அந்த 38 வருட வனாந்திர வாழ்க்கையில் மடிந்து போனார்கள். எத்தனை கனவுகளோடு மகிழ்ச்சியோடு தேவன் கொடுக்க போகும் கானான் தேசத்தை அடையப் போகிறோம் என்கிற மகிழ்ச்சியோடு புறப்பட்ட சந்ததி அதை அடைய முடியாமல் போனது எவ்வளவு வேதனையானது. இத்தனைக்கும் இந்த மக்கள் தேவனுடைய அதிசயங்களை கண்ணால் கண்டவர்கள். தேவனுடைய பிரசன்னத்தை உணர்ந்தவர்கள். தேவன் பேசியதை கேட்டவர்கள். தேவனுடைய கட்டளைகளை கேட்டு அதன்படி நடக்க தங்களை ஒப்புக்கொடுத்தவர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இவர்கள் தேவனுடைய ஜனங்கள். ஆனால் அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானானுக்குள் செல்ல முடியவில்லை. இது நமக்கு மிகப்பெரிய எச்சரிப்பு. இன்று அவர் நமக்கு கொடுக்கும் எச்சரிப்புகளை அலட்சியம் பண்ணாமல் அவருடைய சத்தத்தைக் கேட்கும் பொழுது, இஸ்ரவேல் மக்கள் வனாந்தரத்தில் கோபம் மூட்டினபோதும், சோதனை நாளிலும் நடந்ததுபோல நாமும் நம்முடைய இருதயத்தை கடினப்படுத்தாமல் இருந்தால் நிச்சயமாக நமது அழைப்பை நாம் நிறைவேற்றுவோம். நிற்கிற எவனும் விழாதபடிக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சங்கீதம் 95:8, 1கொரி 10:12

Instant punishments of God.

Instant punishments of God. தேவன் எல்லா நேரங்களிலும் நாம் செய்யும் பாவங்களுக்கும், குற்றங்களுக்கும், மீறுதல்களுக்கும் உடனடியாக சிட்சைகளை அல்லது தண்டனைகளை வழங்க மாட்டார். அவருடைய அநாதி தீர்மானத்தின் படி, அவருடைய நோக்கத்தின் படி நம்முடைய பக்தி விருத்திக்காக அவருடைய சிட்சைகள் நம்முடைய வாழ்க்கையில் வெளிப்படும். ஆனால் சில நேரங்களில் அவருடைய தண்டனைகளும் சிட்சைகளும் உடனடியாக வெளிப்படும். வேதத்தில் ஏற்பட்ட அப்படிப்பட்ட தருணங்களை இப்பொழுது பார்க்கலாம். 1சோதோம், கொமோரா அழிவு ஆதியாகமம் 19:24 2. ஆரோனின் குமாரராகிய நாதாபும் அபியூவுக்கு தேவனால் அங்கீகரிக்கப்படாதநெருப்பை ஆலயத்திற்கு கொண்டு வந்ததினால் ஏற்பட்ட மரணம் லேவி10:1-2 3. மோசேக்கு விரோதமாக மிரியாம் எழும்பின காரணத்தால் உறைந்த மழையின் வெண்மைபோன்ற குஷ்டரோகியாக மாறிய காரியம். எண்ணாகமம் 12:10 4.கோராகு, தாத்தான்,ஆபிராம் மற்றும் அவரை சேர்ந்தவர்கள் தேவனுக்கு மோசேக்கு விரோதமாக எழும்பினதால் ஏற்பட்ட சடுதியான மரணம். எண்ணா 16வது அதிகாரம். 5 ஆதி திருச்சபையின் ஆரம்ப நாட்களில்.அனினியா,சப்பிராளின் சடுதியான மரணம். இதன் மூலம் நாம் விளங்கிக் கொள்ளும் பாடங்கள். சில நேரங்களில் நாம் செய்யும் தவறுகளுக்காக அவருடைய சிட்சைகள் காலம் தாழ்ந்து வெளிப்படலாம். சில நேரங்களில் அவைகள் உடனடியாக நமக்கு ஏற்படும். காலம் தாழ்த்தி ஏற்படும் பொழுது கர்த்தர் நம்மை தண்டிக்கவில்லை என்றோ, நாம் செய்த காரியங்கள் நியாயமானது என்றோ எண்ணிவிடக்கூடாது. அவருடைய நேரத்தில், அவருடைய வழியில், அவருடைய திட்டத்தின்படி அவருடைய சிட்சைகள் நம்முடைய வாழ்க்கையில் வெளிப்படும். மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்களுக்கு தண்டனை கிடையாது. ஆனால் சிட்சைகள் உண்டு. Punishment is different from discipline or chastening. எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே.எபி12:8

"The man who is separated from sin should be separated to the Scripture

" The man who is separated from sin should be separated to the Scripture " உலகத்தின் பாவங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவன் வேத வசனத்தோடு இணைந்து இருக்க வேண்டும். பாவத்திலிருந்து விடுதலை பெற்றவன் வாழ்க்கை வசனத்திற்கு சிறைப்படும் வாழ்க்கைக்கு நேராக கடந்து செல்ல வேண்டும். அப்படி இல்லை என்றால் அவன் மறுபடியும் பாவ வாழ்க்கைக்கு சிறைப்பட்டு போவான். வேதத்தின் மீது உள்ளஅன்பு ,வேதவாசிப்பு தியானம் இவைகள் மூலமாகத்தான் பாவத்தின் அழுத்தத்தில் இருந்து விடுதலை பெற முடியும். பரிசுத்த ஆவியானவர் மூலமாக நமக்கு கிடைக்கும் வேத வெளிச்சம் நமக்கு கிடைக்கும் மிகப்பெரிய ஆவிக்குரிய ஆயுதம் . அவைகள் மூலமாக நாம் பாவத்தை எளிதாக மேற்கொள்ளலாம். அனுதின வேத வாசிப்பு ,தியானம் ,இவைகள் கிறிஸ்தவ வளர்ச்சிக்கு அடிப்படையான மூலக்கூறுகள். வேதத்தோடு இணைந்த மனிதன் வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும், நேரங்களிலும் மற்றவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் பயனுள்ளவனாக இருப்பான். ஆவிக்குரிய தட்பவெப்ப நிலைகள் ஏற்றத் தாழ்வுகள் சோர்வுகள் ஏமாற்றங்கள் இவைகள் ஒருபோதும் அவன் மற்றவர்களுக்கு பயனுள்ளவனாக இருப்பதை தடை செய்ய முடியாது. இதுதான் முதலாவது சங்கீதம் 1-3 நமக்கு உணர்த்தும் பாடம்.

இயேசு கிறிஸ்துவின் ஜெபத்தை ஏன் பிதா நிராகரித்தார்?

இயேசு கிறிஸ்துவின் இறுதி ஜெபம் நமக்கு உணர்த்தும் பாடம் என்ன? இயேசு கிறிஸ்துவின் ஜெபத்தை ஏன் பிதா நிராகரித்தார்? .தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் கொண்டிருந்த அநாதி தீர்மானத்தின்படியே, எபேசியர் 3:9 பிதாவின் அநாதி தீர்மானங்களுக்கு ஒத்ததாக இல்லாத எந்த ஜெபமும், குமாரனே ஏறெடுத்தாலும் கேட்கப்படாது. குமாரனை பிதா ஒரு நோக்கத்தோடு இந்த பூமிக்குஅனுப்பினார். குமாரனும் அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக பிதாவின் சித்தம் செய்வதற்காக தன்னை ஒப்புக்கொடுத்து மனிதனாக அவதரித்தார். அவர் வாழ்ந்தது முப்பத்தி மூன்று வருடங்கள். ஆனால் அவரது இறுதி மூன்று மணி நேரம் பாடுகள் தான் நமக்கு மீட்பை சம்பாதித்து கொடுத்தது. பிதாவின் மீட்பின் திட்டம் அந்த மூன்று மணி நேர பாடுகளை சார்ந்து இருந்தது. இந்த காரியங்களின் அடிப்படையில்தான் கல்வாரியில் தான் அனுபவிக்க போகும் அந்த உபத்திரவம் அகன்று போக வேண்டும் என்கிற குமாரனின் ஜெபம் நிராகரிக்கப்பட்டது லூக் 22:42,எபே 3:9 இதைப் பற்றி நான் மிகவும் மதிக்கின்ற R.W.Pink இப்படி எழுதுகிறார். ‘ Had God so pleased , he could have accepted the blood of beasts. The only reason why He did not was because He had decreed that Christ should make an atonement.’ R.W . PINK I endorse his view. Please refer Eph 1:11, 3:11 ‘Every thing must be resolved into and traced up to the sovereign pleasure of Him who “works all things after the counsel of His will. This the Son knew , and to it He fully consented’ Eph 1:11 எந்த ஒரு கருத்தையும் தேவனுடைய அநாதி தீர்மானத்தின் அடிப்படையில் தான் பார்க்கவேண்டும். தேவனுடைய அநாதி தீர்மானம் தம்முடைய குமாரன் உலகத்தின் மீட்புக்காக கல்வாரியில் பாடுபட்டு சிலுவையில் அறையப்பட வேண்டும் என்பதே. அதனுடைய அடிப்படையிலேதான் 'இந்த பாத்திரம் என்னை விட்டு நீங்கக் கூடுமானால் எடுத்து விடும்; என்கிற குமாரனின் வேண்டுகோள் தேவனுடைய பார்வையில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. உலகத் தோற்றத்திற்கு முன்பாகவே தீர்மானிக்க பட்ட அந்தத் திட்டம் நிறைவேற வேண்டும் இதைப் பற்றிய சரியான விளக்கம் எபே3;9-11 ல் தெளிவாக பார்க்கலாம் . அவர் இந்த உலகத்திற்கு பிரதான ஆசாரியராக அனுப்பப்பட்டு அந்தப் பணியை நிறைவேற்றும் படியான ஆணையைப்பெற்று இந்த உலகத்திற்கு வந்தார் குமாரனும் விரும்பிதான் தன்னுடைய சரீரத்தை ஒரு பாத்திரமாக கருதி தேவ சித்தத்தை நிறைவேற்றினார்‌ எபி10:1-4 எனவே தேவனுடைய பரந்த நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் இயேசுவின் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மையான சத்தியம். அதையும் குமாரன் அறிந்திருந்தார் என்பது தான் உண்மை. இப்படி இருக்க நாம் கேட்பதெல்லாம், ஜெபிப்பதெல்லாம் கிடைக்கும், எதைக் கேட்டாலும் தேவன் தருவார், தேவனுடைய ஆசிர்வாதத்தில் ஒரு வேதனையும் இருக்காது, நாம் விரும்பியதை எல்லாம் தேவன் செய்வார், நம்முடைய மன விருப்பத்தின்படி நமக்கு செய்வார் என்றெல்லாம் இன்றைக்கு பிரசிங்கமார்கள் விசுவாசிகளை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மை அல்ல. எந்த ஒரு செயலையும் நம்முடைய வாழ்வில் தேவன் தம்முடைய அநாதி தீர்மானத்தின் படி தான் செய்வார். இதுதான் பரிபூரண சத்தியம். காது உள்ளவன் கேட்கக்கடவன்

இரகசியங்கள் (Mysteries)

புதிய ஏற்பாட்டில் 11 இரகசியங்கள் (Mysteries) சொல்லப்பட்டிருக்கிறது‌. இரகசியம் என்றால் ஒரு காலத்தில் மறைக்கப்பட்டு தற்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று அர்த்தம். (Which was kept secret since the world began, but now is made manifest) இந்த 11 இரகசியங்களில் எட்டு இரகசியங்களை பவுல் வெளிப்படுத்தி இருக்கிறார். ஒன்றை இயேசு கிறிஸ்துவும் மற்ற இரண்டையும் அப்போஸ்தலர் யோவான் வெளிப்படுத்தியிருக்கிறார். புதிய ஏற்பாட்டில் வெளிப்படுத்தப்பட்டுள்ள 11 மறைபொருள்கள். 1. தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்டது. 1தீமோ3:16 2. இயேசு கிறிஸ்து நம்மில் தங்கி வாழ்கிறார்‌. கொலோ 1:26-28 3. இஸ்ரவேல் ஜனங்களும் பிற இன மக்களும் இயேசு கிறிஸ்துவின் உடலில் இணைந்து சபையாக காணப்படுகிறார்கள். எபே3:1-11 4. ஏழு நட்சத்திரங்கள், ஏழு குத்து விளக்குகளின் மறை பொருள் வெளி1:12-20 5.. இயேசு கிறிஸ்து வரும் பொழுது நாம் மறுரூபமாக்கப்படுகிறோம். 1கொரி15:51-55 6. பிற இனங்களின் நிறைவும் இஸ்ரவேல் மக்களின் பிடிவாதமும். ரோம 11:25 7. கேட்டின் மகன் அல்லது பாவ மனிதன் வெளிப்படும் நாள்‌. 2தெச 2:1-12 8. மகா நகரமான பாபிலோனின் ரகசியம். 9. கிறிஸ்துவின் மணவாட்டியாகிய சபையை குறித்துள்ள ரகசியம். எபே 5:22-33 10. இயேசு கிறிஸ்துவுக்குள் பூலோகத்தில் உள்ளவைகளும் பரலோகத்தில் உள்ளவைகளும் இணைக்கப்படுகின்ற காரியம்.எபே 1:9-10 11. பரலோக இராஜ்யத்தை பற்றி உள்ள ரகசியம். 1தீமோ 3:16 முழு வேதத்திலும் உள்ள மிகச்சிறந்த பகுதிகளில் இதுவும் ஒன்று. இந்த வேதப் பகுதி யோவான் 3:16 ன் விரிவாக்கம் என எடுத்துக் கொள்ளலாம் (Amplification of John 3:16) இந்தப் பகுதியில் பல அருமையான கருத்துக்கள் இருந்தாலும் மிகவும் சிகரமான கருத்து எது என்றால் இந்த உலகத்தை படைத்த தேவன் மனித உடலை தன்னுடைய கூடாரமாக ஆக்கிக் கொண்டு 33 ஆண்டுகள் இந்த உலகத்தில் வாழ்ந்த அந்த நிகழ்வுதான். பவுலுக்கு வெளிப்படுத்தின அந்த இரகசியத்தை நாம் புரிந்து கொள்ள நமக்கு தேவன் கிருபை செய்திருக்கிறார். இதுதான் கிறிஸ்தவத்தின் அடித்தளம். இது ஒரு பகுதி. இந்த வசனத்தினுடைய இன்னொரு பகுதி நம்முடைய தேவ பக்தி இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, மரணம், உயிர்த்தெழுதல் இவைகளை நாம் புரிந்து கொள்வதில் அடங்கி இருக்கிறது‌. ‌ "Godliness springs from the knowledge of incarnation,death resurrection and ascension of the Lord Jesus Christ .Christ".J.N.Darby இந்த சத்தியங்கள் அனைத்தும் இந்தப் பகுதியில் அடங்கியிருக்கிறது என்பதை நாம் இந்த வசனங்களை தியானித்து பார்த்தால் நமக்கு விளங்கும்.

Obstacle and an opportunity

Obstacle and an opportunity What is the difference between an obstacle and an opportunity? Our attitude toward it. Every opportunity has a difficulty, and every difficulty has an opportunity. J. Sidlow Baxter

Greatness of Barnabas

Greatness of Barnabas and his submission to the will of God. Without his name even being mentioned this verse pays the greatest of all tribute to Barnabas. Writer of Acts Dr Luke did not even mention the name of Barnabas in the list of friends ,the reason unknown to us. when the expedition sets out from Syria, the order is “Barnabas and Saul”:by the time they leave Cyprus it is “ Paul and his company” Paul has assumed the leadership of the expedition. But the Barnabas did not not seem to have resented this. He was the man prepared to take second place so long as God’s work is done. Really I salute Barnabas for this great magnanimity and humility. Playing second fiddle is not very easy . That too in the life Barnabas who had every right to claim everything. Ref Acts 13:13

நிலைத்து நிற்கும் ஆவிக்குரிய நன்மைகள்

நிலைத்து நிற்கும் ஆவிக்குரிய நன்மைகள் யூத ஜனங்களுக்கு தேவன் கொடுத்த ஆசீர்வாதங்கள் பல. அந்த இனத்தை தம்முடைய சொந்த ஜனமாக தெரிந்து கொண்டார்.(His own people) அவர்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை ஆக்கினார். செழிப்பான கானானை அவர்களுக்கு சொந்தமாக கொடுத்தார் . பாலும் தேனும் ஓடுகிற ஒரு இடம் அது . எதிரிகளிடம் இருந்து பாதுகாத்தார். இவைகள் எல்லாம் உலக மேன்மைக்கான காரியங்கள் . ஆனால் இவைகள் தவிர அவர்கள் பெற்ற ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் 1. தேவனுடைய வார்த்தைகள் அவர்களிடம் ஒப்புவிக்கப்பட்டது. " இப்படியானால், யூதனுடைய மேன்மை என்ன? விருத்தசேதனத்தினாலே பிரயோஜனம் என்ன? அது எவ்விதத்திலும் மிகுதியாயிருக்கிறது, தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது விசேஷித்த மேன்மையாமே. ரோமர் 3:1,2 2. அடுத்ததாக உலகத்தின் இரட்சகர் அந்த இனத்திலிருந்து தோன்றினார். இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது.. யோவான் 4:22 மற்றும் ரோமர் 9:1-5 யூதர்களுக்கு தேவன் கொடுத்த உலக ஆசீர்வாதங்கள் ஒரு தலைமுறையோடு ஒரு குறிப்பிட்ட காலத்தோடு முடிந்து விட்டது. ஆனால் அந்த ஜனங்களுக்கு கடவுள் கொடுத்த ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் இன்றைக்கும் தலைமுறை தலைமுறை கடந்து நம்மோடு பேசிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு கொடுத்த உலக மேன்மைகள் அழிந்துவிட்டது. ஆனால் அவர்கள் பெற்ற ஆவிக்குரிய நன்மைகள் உலக மக்களுக்கு மிகப்பெரிய ஆசீர்வாதங்களாக காணப்படுகிறது . அது போல தான் ஒருவனுக்கு தேவன் அளிக்கும் உலக மேன்மைகள் அவனோடு அழிந்து போகும். ஆனால் அவனுக்கு தேவன் அளிக்கும் ஆன்மீக ஆசிர்வாதங்கள் அவனுக்கும்‌,அவனுடைய‌ சந்ததிக்கும், மற்றவர்களுக்கும் மிகப்பெரிய நன்மைகளாக மாறிவிடும். இன்றைக்கு உலக நன்மைகளை மேன்மைப்படுத்தி பேசுபவர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். உலக நன்மைகளை ஆசீர்வாதங்களை வேண்டாம் என்று சொல்லவில்லை. அவைகள் ‌நமக்கு அவசியம் தான் . அவைகள் நமக்குத் தேவைதான். ஆனால் நம்முடைய நோக்கம் ,பார்வை அவைகளை நோக்கி இருக்க கூடாது. நாம் எந்த அளவுக்கு ஆவிக்குரிய மேன்மைகளை பெற்றுக் கொள்கிறோமோ விதைக்கிறோமோ அந்த அளவுக்கு நாம்‌ நமது சந்ததிக்கும், தேசத்திற்கும், திருச்சபைக்கும் பயனுள்ளவர்களாக இருப்போம். When a person trusts the Lord Jesus he immediately becomes a spiritual billionaire , in Christ he possesses inexhaustible treasures. Believer's Bible commentary

REVIVAL

REVIVAL There can be no revival when Mr. Amen and Mr. Wet-Eyes are not found in the audience. Revival comes from heaven when heroic souls enter the conflict determined to win or die-or if need be, to win The kingdom of heaven suffereth violence, and the violent take it by force. Charles Finney

REVIVAL

REVIVAL There can be no revival when Mr. Amen and Mr. Wet-Eyes are not found in the audience. Revival comes from heaven when heroic souls enter the conflict determined to win or die-or if need be, to win The kingdom of heaven suffereth violence, and the violent take it by force. Charles Finney

தேவனுக்கு விரோதமாக கலகம் செய்வது என்றால் என்ன?

உங்கள் சிந்தனைக்கு: தேவனுக்கு விரோதமாக கலகம் செய்வது என்றால் என்ன? காதேஸ்பர்னேயாவில் நடந்தது என்ன? இஸ்ரவேல் மக்கள் கலகம் செய்ததாகசொல்லப்பட்டிருக்கிறது.(எண்ணா14:9) கலகம் என்றால் என்ன? தேவனுடைய சித்தத்தை செய்ய மறுப்பது. தேவனுடைய சித்ததிற்கு எதிராக இருப்பது. தேவனுடைய சித்ததிற்கு மாற்று வழி கண்டுபிடிப்பது. தேவனுடைய சித்தத்தை செய்பவர்களை வழி விலக செய்வது. தேவ சித்தம் செய்பவர்களை தடுத்து அவர்களை தேவனுக்கு விரோதமாக தூண்டி விடுவது. தேவ சித்தம் செய்பவர்களை எதிர்த்து நிற்பது. தேவனுடைய வல்லமையை சந்தேகப்படுவது. தேவன் மீது விசுவாசம் வைப்பவர்களை சோர்வடையச்செய்வது. இதைத்தான் அன்றைக்கு இஸ்ரவேலர் செய்தார்கள். தேவனுடைய வார்த்தையை முதலில் சந்தேகப்பட்டார்கள். உபா1:22 அதற்கு ஆதரவாக இருப்பவர்களை சோர்வடையச்செய்தார்கள். எண்ணா14:1 எகிப்திற்கு திரும்பி போக மாற்று வழியை முயற்சித்தார்கள்.எண்14;3 தங்களுடைய சுய முயற்சியில் கானானுக்குள் பிரவேசிக்க முயற்சி செய்தார்கள். எண்ணா14:40 மிகப்பெரிய ஜனக்கூட்டத்தை திரட்டி தலைவர்களை எதிர்த்தார்கள். எண்ணா15:1 தேவனுடைய வல்லமையை குறைவாக மதிப்பிட்டார்கள். தேவனை நம்பாமல் தாங்கள் கண்ட காட்சிகளின் அடிப்படையில் விசுவாசித்தார்கள். எண்ணா13:32,33 ஒரு மனிதனுடைய வெற்றி எதிலே இருக்கிறது என்றால் அவன் தன் வாழ்வில் எந்த அளவுக்கு தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிறான் என்பதில் தான். இயேசு கிறிஸ்து அவர் செய்த அடையாளங்களினால் அல்ல. அவர் செய்த உபதேசங்களினால் அல்ல. அவர் அனுபவித்த பாடுகளினால் அல்ல. தன்னை அனுப்பின பிதாவின் சித்ததத்தை முழுமையாக நிறைவேற்றிய செயலின் அடிப்படையில் தான் அவருடைய வெற்றி அமைந்தது. நாமும் கூட நம்முடைய செல்வாக்கு ,அந்தஸ்த்து, நாம் செய்கிற ஊழியம், சம்பாதித்த ஆத்மாக்கள், நடத்திய சபைகள் இவைகளின் அடிப்படையில் அல்ல. நம்மை தெரிந்துகொண்ட தேவனுடைய நோக்கத்தை எப்படி நிறைவேற்றினோம் என்பதில்தான் நம்முடைய வெற்றி உள்ளது.தேவ சித்தத்தை நிறைவேற்றாத அதற்கு எதிர்த்து நிற்கிற எந்த ஒரு மனிதனும் ஒரு வழியில் கலகக்காரரே.

NAMELESS PIONEER

NAMELESS PIONEER (Acts 11:19-21) In restrained sentences these few words tell of one of the greatest events in church history. 1. Now for the first time the gospel is deliberately preached to gentiles. Philip preached to the Samaritans (half Jews). Then Peter accepted Cornelius: but it was Cornelius who took the initiative. It was not the Church who sought Cornelius; it was Cornelius who sought the Christian Church. Third in Antioch the Church did not go to the people who were Jews and half Jews nor wait to be approached by Gentiles seeking admission. Yes it preached gospel to the gentiles. Christianity was launched on its worldwide mission by nameless persons. We don’t know the names of the people who took the steps. All we know is that they came from Cyprus and Cyrene. They go down to history as nameless pioneers of Christ. It has always been one of the tragedies of the Church the men have wished to be noticed and named when they did something worthwhile. What the Church has always needed, perhaps more than anything else, is the people who never care who gain the credit for it so long as the work is done. These men may not have written their names in men’s books of history: but they have written them forever in God’s book of Life. William Barclay

Predestination

DAILY QUOTE I am persuaded that the doctrine of predestination is one of the "softest pillows" upon which the Christian can lay his head, and one of the "strongest staffs" upon which he may lean, in his pilgrimage along this rough road.. Charles Spurgeon

Lesson from Kadesh _Barnea

உங்கள் சிந்தனைக்கு: ஒவ்வொரு விசுவாசியும் தங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் தவிர்க்க வேண்டிய ஒரு இடம் காதேஸ்பர்னேயா . இந்த இடத்தில் தான் தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு மிகப்பெரிய தண்டனையை அளித்தார். இஸ்ரவேல் மக்களின் முற்பிதாக்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின கானானை அளிப்பதற்காக இந்த இடத்தில் 38 வருடங்கள் காலம் தாழ்த்தினார். சில வேதப் பண்டிதர்கள் சொல்லுகிறபடி 38 ஆண்டுகளில் 37 ஆண்டுகள் இந்த ஒரே இடத்தில் தங்கினதாக சொல்லப்படுகிறது . இந்த இடத்தில் தான் ஏறக்குறைய 603548 பேரில் பெரும்பான்மையான இஸ்ரவேலர்கள் மரித்துப் போனார்கள். இந்த இடத்தில் தான் வானத்தையும் பூமியையும் படைத்த தேவனுக்கு விரோதமாக, அவர்களை அடிமைத்தனத்திலிருந்து அற்புதங்களினாலும், அடையாளங்களினாலும் மீட்டெடுத்த தேவனுக்கு விரோதமாக மிகப்பெரிய கலவரத்தை உருவாக்கினார்கள். காலேபுக்கும் யோசுவாவுக்கும் விரோதமாக கல் எறிய முன்வந்தார்கள். பத்து நபர்கள் சொல் பேச்சைக் கேட்டு பத்து தடவை சோதித்த‌ ஆண்டவரை மேலும் சோதித்தார்கள். இந்த உலகில் முதன்முதல் Mob psychology என்று சொல்லக்கூடிய காரியம் மிகப்பெரிய அளவில் நடந்த இடம் இங்கு தான். காரணம் பத்து பேர் சொல்ல கேட்டு லட்சக்கணக்கான யூதர்கள் தேவனுக்கு விரோதமான கலகம் செய்தார்கள். இரவெல்லாம் முறுமுறுத்தார்கள். எகிப்துக்கு திரும்பி போக தங்களுக்குள் ஒரு தலைவரை தேர்ந்தெடுக்க முன்வந்தார்கள். இந்த இடத்தில் தான் தேவன் அவர்களுடைய பிதாக்களுக்கு வாக்குறுதி கொடுத்த கானானை இந்த கலககார்களுக்கு தர மாட்டேன் என்று தீர்மானித்தார். இவ்வளவு பெரிய குழப்பத்திற்கு ஆரம்பம் எங்கே என்றால் இஸ்ரவேல் ஜனங்கள் தாங்கள் 400 ஆண்டுகால அடிமைத்தனத்திலிருந்து தங்களை விடுதலை ஆக்கின அந்த மாபெரும் காரியத்தை அவர்கள் அற்பமாக, அலட்சியமாக ,அதற்கு நன்றி உள்ள மனிதர்களாக காணப்படாமல் போன அந்த இடத்தில்தான். அந்த மாபெரும் செயலை மாத்திரம்அவர்கள் நன்றியோடு நினைத்து இருந்தால் இந்த காதேஸ்பர்னேயாவை சந்தித்திருக்க மாட்டார்கள். நாமும் கூட நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் ஏற்படும் சோர்வுகளுக்கும், சந்தேகங்களுக்கும், பின் மாற்றங்களுக்கும், முறுமுறுப்புகளுக்கும் அடிப்படை காரணம் நமக்கு தேவன் அளித்த மிகப்பெரிய இரட்சிப்பை நாம் அவருடைய பிள்ளைகளான மாறின அந்த புண்ணிய காரியத்தை அலட்சியமாக, அதற்கு நன்றி இல்லாதவர்களாக, மிகப்பெரிய பாக்கியமாக கருதாமல் போனதே காரணம். விளைவு சில நேரங்களில் பின் மாற்றத்தை நோக்கி தேவனை மனதளவில் கலகம் செய்து அவரை விட்டு பிரிந்து விட நேரிடும் . சில நேரங்களில் அவர் நமக்கு இந்த உலகத்தில் வைத்திருக்கும் சிறப்பான இடத்தை ஊழியத்தை, ஆசீர்வாதங்களை பெறாமல் செத்துப்போன செல்களாக அவருடைய சபையாகியசரீரத்தில் காணப்பட்டுபரலோகத்தில் எந்த ஆசீர்வாதத்தையும் பெற முடியாத நபர்களாக செல்லக்கூடும் காதேஸ்பர்னேயா நம் வாழ்வில் நடைபெறாமல் இருக்க இவ்வளவு பெரிதான இரட்சிப்பை நாம் கண்ணும் கருத்துமாக பாதுகாத்தால் மிகப்பெரிய ஆவிக்குரிய நஷ்டங்களை முளையிலேயே கிள்ளிவிடலாம். கர்த்தர் மகிமைப்படுவாராக

Doxology

உங்கள் சிந்தனைக்கு: புதிய ஏற்பாட்டில் ஏறக்குறைய 30 இடங்களில் தேவனை புகழ்ந்து பாடும் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இவைகளை Doxology என்றுசொல்வார்கள். இன்றைய தியானத்தில் என்னை கவர்ந்த ஒரு வார்த்தையை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்தப் பாடல் ரோமாபுரி திருச்சபைக்கு பவுல் எழுதிய கடிதத்தில் 11:33-36ல் வருகிறது . இதை இராஜரீகம் அவர்கள் மொழிபெயர்ப்பில் இப்படி மொழியாக்கம் பண்ணப்பட்டுள்ளது. "கடவுளின் அருட்செல்வம் எத்தனை பெரிது! அவருடைய ஞானமும் அறிவும் எவ்வளவு ஆழமானவை. அவருடைய தீர்ப்புகள் அறிவுக்கு எட்டாதவை, அவருடைய வழிகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை." "அவருடைய செயல்முறைகளோ விளங்கிக் கொள்ள முடியாதவை" (இலகு இலங்கை மொழிபெயர்ப்பு) How unsearchable are his judgments and how inscrutable his ways! என்னை சிந்திக்க தூண்டிய வசனம் "அவருடைய செயல்முறைகளோ விளங்கிக் கொள்ள முடியாது "என்கிற தேவனுடைய வார்த்தை தான். நாம் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கும்போது அவருடைய வழிகளை நாம் ஆராய்ச்சி செய்ய முடியாது. விளங்கிக் கொள்ள முடியாது. மனித ஞானத்தினால் அவைகளை அறிந்து கொள்ள முடியாது . நம்முடைய வாழ்க்கையில் நாம் சந்தித்த தோல்விகள், அடைந்த ஏமாற்றங்கள், இழப்புகள், மனிதனுடைய புறக்கணிப்புகள், தலைவர்கள் ஏற்படுத்தின காயங்கள், இயக்கங்கள் ஏற்படுத்திய வலிகள், குடும்பங்கள் பரிசளித்த அநீதிகள், அவமானங்கள் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இவைகளுக்கெல்லாம் காரண காரியங்களை நாம் ஆராய்ந்து பார்த்தால் நமக்கு பதில் கிடைக்காது . இவைகள் தேவன் அனுமதித்து நடந்ததா ?அல்லது நம்முடைய பலவீனத்தால் ,தவறுகளால் அல்லது பாவங்களால் நடந்ததா என்று நம்மால் உறுதியிட்டு கூற முடியாது. அவைகளை நிச்சயமாக மனித ஞானத்தை கொண்டுஆராய்ச்சிக்கு உட்படுத்த முடியாது. அவருடைய செயல்முறைகளை, வழிமுறைகளை அநேக நேரங்களில் நாம் விளங்கிக் கொள்ள முடியாது. ஆனால் ஒன்று மட்டும் உண்மை.அவைகள் கர்த்தருடைய அனுமதி பெற்று நடக்கிறது என்கிற ஒரு நிச்சயம் நமக்கு இருக்கிறது. இத்தனை நிகழ்வுகள் நடந்தாலும் அவர் நம்மை கைவிடவில்லை என்கிற காரியம் "அவருடைய அருட் செல்வம் நமக்கு எவ்வளவு பயன்பட்டது என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். இந்த வார்த்தைகளை எத்தனை தடவை படித்தாலும் அவைகள் நமக்கு புதுப்புது அர்த்தங்களை கொடுத்துக் கொண்டே இருக்கும். இப்படி புதிய ஏற்பாட்டில் உள்ள புகழ் பாடல்களை தியானிக்கும் போது நம்முடைய ஆராதனை புத்தியுள்ள ஆராதனையாக இருக்கும். அப்படிப்பட்ட கிருபைகளை கர்த்தர் நமக்கு தருவாராக. கர்த்தர் மகிமைப்படுவாராக.

The most delightful book in the whole Bible

உங்கள் சிந்தனைக்கு: The most delightful book in the whole Bible எபிரேயருக்கு எழுதப் பட்ட நிருபம். சந்தோஷத்தை உண்டு பண்ணும் ஒரு நூல் என்று பலராலும் சொல்லப்படுகிறது. இந்த நூலில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. 1. It throws more light on Jesus Christ that no other part of the New Testament does. இந்த கடிதம், புதிய ஏற்பாட்டில் உள்ள மற்ற கடிதங்களில் சொல்லப்படாத, விளக்கப்படாத, பல காரியங்களை இந்த புத்தகத்தில் நாம் படிக்கலாம். 2.இந்த நூல் ஐந்தாவது நற்செய்தி நூல் என்றும் சொல்லப்படுகிறது. ஏனென்றால் இந்த நூலில்தான் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தற்போதைய ஊழியத்தைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. இது வேறு எந்த புதிய ஏற்பாட்டு நூலிலும் சொல்லப்படவில்லை. its emphasis on Christ’s present work. 3 மேலும் இந்த நூல் புதிய ஏற்பாட்டையும் பழைய ஏற்பாட்டையும் இணைக்கும் ஒரு பாலமாக திகழ்கிறது. பழைய ஏற்பாட்டில் மையப் பொருள்களாக உள்ள ஆசரிப்பு கூடாரம், பலிகள், தேவாலயம், ஆசாரியத்துவம் போன்றவைகளைப்பற்றி வேறு எந்த நிரூபத்திலும் சொல்லப்படாத கருத்துக்கள் இந்த கடிதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தக்கடிதம் வேதாகமத்தில் சேர்க்கப்படாமல் இருந்திருக்குமானால் இயேசு கிறிஸ்துவின் மகா பிரதான ஆசாரிய ஊழியத்தைப் பற்றிய ஒரு மிக தெளிவான புரிதல் சபைகளுக்கு கிடைத்திருக்காது. 4 மேலும் விசுவாச வீரர்களின் பட்டியலை பற்றிய மிக அழகான ஒரு விளக்கம் வேறு எந்த புதிய ஏற்பாட்டு கடிதங்களிலும், நூல்களிலும், கிடையாது. இதை ஒரு மகிழ்ச்சியான புத்தகமாக நாம் படிக்கும்போது உண்மையாகவே நம் உள்ளத்தில் பழைய ஏற்பாட்டு பற்றிய பல புரிதல்கள் நமக்கு உண்டாகும். 5 It was regarded as the best Greek in NT இந்தக் கடிதம் மிக உயரிய கிரேக்க நடையில் எழுதப்பட்டது. புதிய ஏற்பாட்டில் உள்ள மற்ற அனைத்து நூல்களும் எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் சாதாரண கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. ஆனால் கடிதம் மட்டும் மிக உயர்ந்த கிரேக்க (classical Language )நடையில் எழுதப்பட்டது என்று பலரும் சொல்லுகிறார்கள்.

தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும்

உங்கள் சிந்தனைக்கு: தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே . ரோமர் 11:29 இதனுடைய உண்மையான அர்த்தம் என்ன? அநேகர் இந்த ஒரு வசனத்தை எடுத்துக் கொண்டு ஒருவனுக்கு தேவன் அளித்த கிருபைகள் ஒரு போதும் மாறாதது‌. அவர்கள் எவ்வளவுதான் பின் மாற்றத்தில் விழுந்தாலும், பாவ வாழ்க்கை நடத்தினாலும், கர்த்தருக்கு தூரமாக இருந்தாலும், கர்த்தருடைய வழிகளை விட்டு விலகினாலும், கர்த்தருக்கு சித்தம் இல்லாத காரியங்களை செய்தாலும், கிறிஸ்துவின் அடிப்படை உபதேசத்தை மாற்றினாலும், அவர்களுக்கு கடவுள் முதலில் அளித்த கிருபைகளை, வரங்களை ஒருபோதும் எடுத்துக் கொள்வதில்லை என்று சாதிப்பார்கள். இது சரியா? இது சரியல்ல இது யூதர்களுக்கென்று கொடுக்கப்பட்ட  ஒரு வாக்குறுதி. தேவனுடைய நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் தேவன் கொடுத்த ஒரு உறுதிமொழி. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு போன்ற அவர்களுடைய முன்னோர்களுடன் தேவன் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடிப்படையிலானது. மேலும் பல்வேறு தீர்க்கதரிசிகளுக்கு வேதத்தில் பல்வேறு இடங்களில் யூதர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை அடிப்படையாகக் கொண்டது. ரோம 11:25-32 வரை உள்ள வசனங்களை முழுமையாக படித்து பார்த்தால் இது புரியும். தேவனுடைய திட்டத்தை நிறைவேற்றாத ‌தனிப்பட்ட நபர்களுக்கோ ஊழியக்காரர்களுக்கோ கொடுக்கப்படுகிற உறுதிமொழி அல்ல. ஒரு வசனத்தை மட்டும் எடுத்துக் கொண்டு ஒரு வாக்குறுதியை பொதுவுடமை படுத்தி விடக்கூடாது.

காதேஸ்பர்னேயா அனுபவம்

உங்கள் சிந்தனைக்கு: வேண்டாம் வேண்டாம் காதேஸ்பர்னேயா அனுபவம் வேண்டாம். இஸ்ரவேலருடைய வாழ்க்கையில் காதேஸ் பர்னேயா ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது . இந்த இடம் அவர்களின் வரலாற்றின் போக்கையே மாற்றி விட்டது. இந்த இடத்தில் தான் மயிரிழையில் அவர்கள் தாங்கள் அடைய வேண்டிய இலக்கை,தேவன் வாக்குத்தத்தம் பண்ணின இடத்தை அடையாமல் போனார்கள். It was a just miss. இன்னும் 150 மைல்கள் கடந்து சென்றால் அவர்கள் கானானை அடைந்திருப்பார்கள். ஆனால் பத்து நபர்களுடைய பிழையான, தவறுதலான இறையியல் கோட்பாட்டை நம்பி அவர்கள் லட்சக்கணக்கான யூதர்களை வழி விலகச் செய்து விட்டார்கள். இறையியல் என்றால் என்ன? அது தேவனை பற்றிய அறிவு. தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை விசுவாசத்தோடு கடந்து போக மனம் இல்லாமல் அந்த நாட்டை வேவு பார்க்க அனுமதி கேட்டார்கள். மோசேயும் அதற்கு சம்மதித்தான். அனுப்பப்பட்ட 12 பேரில் 10 பேருடைய இறையியல் பார்வை மனித புரிதலின் அடிப்படையில், மனித ஞானத்தை கொண்டு சூழ்நிலை கொண்டு அமைந்தது. ஆனால் மற்ற இரண்டு பேருடைய இறையியல் பார்வை கர்த்தருடைய வாக்குத்தத்தை அடிப்படையாகக் கொண்டு, விசுவாசத்தின் அடிப்படையில் அமைந்தது. எப்பொழுதுமே பெரும்பான்மையான மக்கள் சொல்கிற கருத்துக்கள் தவறுதலாக இருந்தாலும் அதை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்கிற காரியம்‌ இன்று நேற்றுஅல்ல ஆதி முதல் இருந்திருக்கிறது என்பதற்கு காதேஸ்பர்னேயா நிகழ்வு ஒரு உதாரணம். இஸ்ரவேல் மக்கள் தங்களை தேவன் எகிப்தில் இருந்து மீட்டெடுத்து அதுவரைக்கும் அவர்களை தேவன் நடத்தின அடையாளங்கள் அற்புதங்கள், பாதுகாப்பு இவற்றை மறந்து தேவனுடைய வல்லமையை குறைவாக மதிப்பிட்டு அவருடைய வல்லமையை விசுவாசிக்காமல் தாங்கள் கானானில் நேரில் கண்ட காட்சிகளின் அடிப்படையில் கானானை தங்களால் அடைய முடியாது என்கிற தவறான செய்தியை மக்கள் மத்தியில் பரப்பினார்கள். ஆனால் காலேபு , யோசுவா இவர்களின் கடவுளைப் பற்றிய பார்வை, அவர்களுடைய இறையியல் தேவனுடைய வார்த்தையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. பத்து நபர்களைப் போல உலகத்தின் ஆவியை பெறாமல் வேதத்தின் அடிப்படையிலான வேறு ஆவியை பெற்ற மனிதர்களாய் தேவன் வாக்களித்த கானானை அடைந்தார்கள். இன்னொரு வார்த்தை சொல்லப் போனால் அவர்களுடைய சரியான இறையியல் கோட்பாடு அவர்களுடைய விசுவாசத்தை காப்பாற்றியது. தவறான இறையியல் கோட்பாடு லட்சக்கணக்கான யூதர்களை வனாந்தரத்தில் மடிய செய்தது. இன்றைக்கும் கிறிஸ்தவத்தில் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. அநேக போதகர்கள் வழி விலகி பிழையான உபதேசங்களை போதித்து மக்களை தேவன் இந்த உலகத்தில் அவர்களுக்கு வைத்திருக்கும் இலக்கை அடைய முடியாமல் செய்து விடுகிறார்கள். சிறுபான்மையான‌ போதகர்கள் சரியான உபதேசத்தை போதித்தாலும் அவர்களை இந்த கிறிஸ்தவ உலகம் ஏற்றுக் கொள்வதில்லை. 2/12 என்கிற அளவீடு இன்றைக்கும் பொருத்தமாய் இருக்கிறது. கர்த்தர் மகிமைப்படுவாராக. படிக்க எண்ணாகமம் 14 வது அதிகாரம் மற்றும் உபாயம் 1வது அதிகாரம். இந்த கருத்து Believer's Bible commentaryஐ அடிப்படையாகக் கொண்டது.

ஏசாவை வெறுத்தேன் என்பதன் உண்மையான அர்த்தம் என்ன ? ' அப்படியே, யாக்கோபைச்

உங்கள் சிந்தனைக்கு: ஏசாவை வெறுத்தேன் என்பதன் உண்மையான அர்த்தம் என்ன ? "அப்படியே, யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன் " என்பதின் உண்மையான அர்த்தம் என்ன? ரோம9:13 ராஜரிகம் அவர்கள் மொழிபெயர்ப்பில் " ஏசாவை விரும்பவில்லை" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வகையான வியாக்கியானங்கள் இருந்தாலும் முக்கியமான இரண்டு விளக்கங்களை மட்டும் நான் பகிர்ந்து கொள்கிறேன். உண்மையாகவே இந்தப் பகுதி பலரால் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஒரு பகுதி. தேவன் ஏசாவை ஏன் வெறுக்க வேண்டும் ? அதுவும் பிறப்பதற்கு முன்பாகவே ஏன் ஏசாவை புறக்கணிக்க வேண்டும் ?அப்படிப்பட்ட ஒரு நிலைக்கு தேவன் ஏன் வரவேண்டும். நம் கடவுள் அநீதி உள்ளவரா? அப்படி இருக்க முடியாது. ஏசாவை வெறுத்தேன் என்பதற்கு உண்மையான அர்த்தம் நான் ஏசாவை விட யாக்கோபை அதிகமாக சிநேகித்தேன் என்று அர்த்தம் கொள்ளலாம். ஏனென்றால் இது தேவனுடைய இறையாண்மையை சார்ந்தது இருவருமே ஆதாமின் மீறுதலால் பிறந்தவர்கள். இருவருமே பாவத்தில் பிறந்தவர்கள். இருவரிடதிலும் எந்த தகுதியும், நியாயமும் கிடையாது. அதனால் ஒருவனுடைய நீதியை புறக்கணித்து மற்றவனுக்கு அநீதி செய்திருந்தால் நாம் தேவன் மீது குற்றம் சுமத்த முடியும். ஆனால் இருவருமே பாவத்தில் பிறந்தவர்கள். ஒருவனிடத்தில் அதிகமாக அன்பு கூற தேவன் நினைக்கும் பொழுது அதை நாம் குறை கூற முடியாது. ஏனென்றால் நம்மையும் கூட உலகத்தில் மேன்மையானவர்கள் எவ்வளவோ பேர் இருக்கும் பொழுது நம்மை மாத்திரம் தெரிந்து கொண்ட அந்த காரியம் தேவனுடைய அன்பையும் இறையாண்மையையும் சார்ந்ததது. "தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான். " என்கிற இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளோடு இதை பொருத்தி பார்க்க வேண்டும். அதாவது இயேசு கிறிஸ்து தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளை வெறுக்க சொல்லவில்லை. அவர்களை விட தன்னை அதிகமாக நேசிக்க விரும்பினார் இன்னொரு வியாக்கியானம் அந்த நிகழ்வு உண்டான இடத்தில் இந்த வார்த்தைகள்( ஏசாவை வெறுத்தேன்) சொல்லப்படவில்லை. ஆதி 25:21-27. ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு மல்கியா எழுதிய தீர்க்கதரிசன புத்தகத்தில் தான் இந்த வார்த்தை சொல்லப்படுகிறது. மல்கி 1:2-,3. இதற்கான காரணம் பற்றி பல வேத பண்டிதர்கள் எழுதும்போது ஏசா வழி வந்த சந்ததியினர் (ஏதோமியர்,மோவாபினர் ) இஸ்ரவேல் மக்களுக்கு விரோதமாக செய்த பல காரியங்களின் அடிப்படையில் இவ்வாறு கூறப்பட்டதாக சொல்லப்படுகிறது (எண்ணா24;17,18, எபி12:17 ஏசாயா11:,6,11,1,14). எனவே தேவன் யாரையும் அடிப்படையில் வெறுக்க மாட்டார் என்பதுதான் உண்மையான சத்தியம்.

God has no needs

DAILY QUOTE; God has no needs that I could ever be required to satisfy. God has no deficiencies that I might be required to supply. He is complete in Himself. He is overflowing with happiness in the fellowship of the Trinity.-Piper

Religious substitutes

உங்கள் சிந்தனைக்கு: "Religious substitutes" "எங்களுக்கு வானத்தில் இருந்து பொழியும் மன்னா தேவையில்லை .எங்களுக்கு தேவை இறைச்சி" இதுதான் 400 ஆண்டுகால அடிமைத்தனத்தில் இருந்து விடுதலையான இஸ்ரவேல் மக்களுடைய விருப்பம். எகிப்திலே நடத்தப்பட்ட  கொடுமைகளிலிருந்து விடுதலையாக்கப்பட்ட அந்த தேவனுடைய மகிமையான விடுதலையை நன்றியோடு நினைவு கூறாமல், தேவன் கொடுத்த மன்னாவின் மீது திருப்தி அடையாமல் உடன் இருந்த யூதர் அல்லாத  அடிமைகளின் தூண்டுதலுக்கு உட்பட்டு அவர்கள் இறைச்சியை கேட்டார்கள். They wanted flesh as a substitute for heavenly manna. தேவன் கொடுத்த காரியத்தில் திருப்தி அடையாமல் உலக விருப்பங்களை, ஆசைகளை இச்சைகளை நிறைவேற்ற விரும்பினார்கள். " They craved  substitutes from the world instead of desiring the   heavenly manna of the word  of God."W.W.Wiersbe இன்றைக்கு தேவன் கொடுக்கும் ஆன்மீக நன்மைகளை, ஆன்மீக  ஆசீர்வாதங்களை, தேவன் அளித்த இரட்சிப்பை முக்கியப் படுத்தாமல் பெருங்கூட்ட மக்கள் ஆசைப்படும் செழிப்பு, வசதி, உலக மேன்மைகள் இவைகளை சபைகள் முக்கியப்படுத்தின காரணத்தினால்தான் சபைகள் திரைப்பட அரங்குகளாக மாறிவிட்டது. கேளிக்கை கூடாரமாக மாறிவிட்டது. தேவனுடைய வசனத்தை தியானிக்க வேண்டிய, விசுவாசிகளை வேத வசனத்தால் நிரப்ப வேண்டிய சபைகள் ஆடல் பாடல்களை ரசிக்கத் தொடங்கி விட்டார்கள். சபைத் தலைவர்கள் வேத வசனத்தை ஏதோ ஒரு மூலையில் வைத்து விட்டு விசுவாசிகளை மகிழ்விக்க தொடங்கி விட்டார்கள். பவுல் சொல்வது போல இன்று அநேக போதர்கள் வேறு விதமாக நடக்க ஆரம்பித்து விட்டார்கள். பிலி3:18 பவுல் சொல்வது போல இவர்கள் கிறிஸ்துவுக்கு விரோதிகள். இவர்கள் கூட்டத்தோடு ஒத்து போகும் மனப்பான்மை உடையவர்கள். The present leaders  impose 'religious substitutes" தைரியமாக சத்தியத்தை பாதுகாக்க துணிவு இல்லாத கோழைகள். எனவே நாம் தேவன் கொடுக்கின்ற ஆவிக்குரிய நன்மைகளில் திருப்தி அடைந்து முறுமுறுக்காமல் இருப்போம் என்றால் அதுவே உண்மையான ஆவிக்குரிய வளர்ச்சி‌. அன்றைக்கு சிலர் முறுமுறுத்து, சங்காரக்காரனாலே அழிக்கப்பட்டார்கள். அதுபோல உலகத்தில் இறுதி நாட்களில் முறுமுறுக்காமல் தேவன் கொடுத்த ஆன்மீக ஆசிர்வாதங்களில் திருப்தியாக இருந்து ஆவிக்குரிய ஓட்டத்தை ஓட நமக்கு தேவன் கிருபை செய்வாராக. 1 கொரிந்தியர் 10:10

ABIDE IN CHRIST

DAILY QUOTE: What does it mean to abide John 15:1-11 It means to keep in fellowship with Christ so that His life can work in and trough us to produce fruit. This certainly involves the Word of God and the confession of sin so that nothing hinders our communication with Him. It also involves obeying Him because we love Him. This abiding relationship is natural to the branch and the vine. It is not automatic. Abiding in Christ demands worship, meditation on God’s word, prayer, sacrifice, and service. Once you have begun to cultivate this deeper communion with Christ, you have no desire to return to the shallow life of carless Christian. Our union with Christ will be a loving, living and lasting one. W.W.Wiersbe

இந்த உலகத்தில் நம்முடைய கானான் எது?

உங்கள் சிந்தனைக்கு: இந்த உலகத்தில் நம்முடைய கானான் எது? பலர் நினைப்பதுபோல புதிய உடன்படிக்கை கிறிஸ்தவர்களுக்கு கானான் என்பது பரலோகத்தின் நிழல் அல்ல என்று W.W.Wiersbe என்கிற வேத வல்லுனர் கூறுகிறார். "Canaan is not a picture of heaven. Rather Canaan is a picture of the inheritance God has planned for each of His children today, the work He wants us to do,the places He wants us to occupy " இந்த உலகத்தில் நமக்கு தேவன் முன் குறித்து அழைக்கும் இடம், ஊழியம் இவைகளே இந்த உலகத்தில் நமக்கு கானான். இதை பரலோகத்திற்கான அடையாளம் என்று எடுத்துக்கொள்ள முடியாது. இஸ்ரவேல் ஜனங்கள் கானானை அடைவதற்கு போராடியது போல விண்ணுலகில் எந்தப் போராட்டங்களும் கிடையாது. இந்த உலகத்தில் நம்மை முன் குறித்து அழைத்த இடம்,ஊழியம் இவற்றை நாம் தேவனுக்கு கீழ்ப்படிந்து அவற்றை அடைய வேண்டும் தேவன் என்று விரும்புகிறார். ஒவ்வொரு விசுவாசிக்கும் தேவன் ஒரு இலக்கை,ஒரு நோக்கத்தை,ஒரு அழைப்பை கொடுத்திருக்கிறார். அது ஒரு சபையாக ஒரு இயக்கமாக,ஒரு குழுவாக,அல்லது தனிப்பட்ட முறையில் இருக்கலாம். சரீரமாகிய சபையில் ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு முறையில் ஒவ்வொரு விதத்தில் வேலை உண்டு. எல்லா விசுவாசிகளும் ஒரே மாதிரி ஒரே வேலையை ஒரே விதத்தில் ஒரே இடத்தில் செய்ய முடியாது. இந்த உலகத்தில் நமக்குரிய கானான் எது என்பதை அறிந்து புரிந்து அதை அடைய வேண்டும். இதுதான் புதிய ஏற்பாடு. மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்களுக்கு வேதம் கொடுக்கிற சுதந்திரம்இது. சரீரத்தில் எல்லா உறுப்புகளும் வேலை செய்தால் தான் சரீரம் ஆரோக்கியமாக இருக்கும். இதை தலைவர்கள் சரியாகப் புரிந்து கொண்டு விசுவாசிகளை பயன்படுத்தாத வரை சபை தேவன் எதிர்பார்க்கும் வளர்ச்சியை ஒருக்காலும் பெற முடியாது. ஆசரிப்பு கூடாரத்து பணிகளுக்கு ஆசாரியர்களும் லேவியர்களும் ஆகிய இரண்டு பேருமே தேவை. அதுபோல சபையின் வளர்ச்சிக்கு இருவருமே தேவை. இதை உணர மறுக்கும் தலைவர்களுக்காக ஜெபிப்பதை தவிர வேறு வழியில்லை.