“One great brotherhood”
“பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே “எபி 3:1
நம்முடைய அழைப்பு என்பது, விண்ணக அல்லது பரலோக அழைப்பு.
யூதருடைய அழைப்பு இந்த மண்ணை சார்ந்தது.
ஆனால் நம்முடைய அழைப்பு, பரத்திலிருந்து வந்த அழைப்பு.
தேவனுடையஅழைப்பின் அடிப்படையில் நாம் தேவனுடைய பிள்ளைகளாய் மாறி இருக்கிறோம்.
மனந்திரும்பி, ஆவியானவருடைய அனுக்கிரகத்தால் அவருடைய பிள்ளைகளாய் நாம் மாறும்பொழுது இந்த அழைப்பில் பங்கு பெறுகிறோம்.
இந்த அழைப்பில் பங்கு பெறுகிற எவரும், எல்லோரும் சகோதர, சகோதரிகளே.
இந்த சகோதரத்துவ அழைப்பு, கிறிஸ்தவத்தின் அடிப்படை உபதேசம்.
யாரெல்லாம் ஆண்டவருடைய இரத்தத்தினாலும் அவருடைய வார்த்தைகளினாலும் சுத்திகரிக்கப்பட்டு தேவனுடைய பிள்ளைகளாக மாறுகிறார்களோ அவர்கள் எல்லோரும் தேவனுடைய சகோதர சகோதரிகளே.
ஏனென்றால் வேதத்தில்
" *பரிசுத்தஞ்செய்கிறவரும் பரிசுத்தஞ்செய்யப்படுகிறவர்களுமாகிய* *யாவரும் ஒருவரால் உண்டாயிருக்கிறார்கள்;* *இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்"* என்று எபிரேய நிருபத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. .
எபி2:11
*அதாவது குமாரனும் அவர் பரிசுத்தம் பண்ணுகிற பிள்ளைகளும் பிதாவினால் உண்டாயிருக்கிறபடி அவர்கள் சகோதரர்கள் என* *கருதப்படுவார்கள் என்று அர்த்தம்.*
இப்படியிருக்க நாம் எல்லோரும் சகோதர சகோதரிகளாக இருக்கிறோம்.
இதில் எந்த சமரசமும் செய்து கொள்ளக்கூடாது.
மத்தேயு எழுதின சுவிசேஷத்தில் இவ்வாறாக இயேசு கிறிஸ்து கூறுவதை பார்க்கலாம்.
“பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார்”. மத்தே12:50
கட்டிடங்களோ, சபை உபதேசங்களோ வேதம் போதிக்கும் “One great brotherhood” ஐ நீர்த்துப்போகப் பண்ணக்கூடாது.
இந்த சகோதரத்துவம் மொழி, ஜாதி, இன எல்லைகளைக் கடந்தது.
வர்க்கங்களை கடந்தது.
ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், திறமை உள்ளவன், திறமை இல்லாதவன், அழகு உள்ளவன், அழகு இல்லாதவன் , ஞானி, அறிவில்லாதவன், படித்தவன், படிக்காதவன் என்கிற எல்லைகள் எல்லாம் கடந்து இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு, மறுபடியும் பிறந்த எவரும் அவருடைய மிகப்பெரிய சகோதரர் குடும்பத்தில் அங்கமாய் இருக்கிறோம்.(Great brotherhood)
இதை நாம் மறந்து விடக்கூடாது. நம்முடைய சபை பிரிவுகள், கட்டடங்கள், உபதேச கோட்பாடுகள், நம்மை இந்த ஒரு பெரிய சகோதரத்துவ கோட்பாட்டை விட்டு விலகிச் சென்றுவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
CSI, TPM, PENTICOST, AG,BROTHERN போன்ற சபை பிரிவினைகள், “நாம் சகோதரர்கள்” என்கிற அடித்தளத்தை அசைக்கக் கூடாது.
ஆண்டவர் சொல்லுகிற அந்த வார்த்தைகளே நமக்கு முக்கியம். அவருடைய விருப்பத்தின்படி, சித்தத்தின்படி செய்கிற எவனும் அவருடைய பிள்ளைகள். அதன் அடிப்படையில் நாம் எல்லோரும் சகோதரர்கள்.
நம்முடைய சகோதரத்துவத்தை ஒரு குறிப்பிட்ட ஜாதி, நாடு, இனம் ,மொழி என்கிற குறுகிய வட்டத்திற்குள் சுருக்கி விடக்கூடாது.
இது தேவனுடைய சித்தம் அல்ல.
தேவன் இணைத்த இந்த சகோதரத்துவத்தை பிரிக்க வேண்டாம்.
இது உயர்ந்த கிறிஸ்தவ பண்பாடு.
தேவனுடைய இரட்சிப்பாகிய இந்த பரம அழைப்பில் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் அனைவரும் நம் சகோதரரே.
உபதேசங்களின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுவது அல்ல இந்த நம்முடைய சகோதரத்துவ உறவு.
ஒருவன் எந்த அளவுக்கு தேவனுடைய சித்தத்தை செய்கிறான் என்பதை வைத்துதான் அவன் நம்முடைய சகோதரனா, இல்லையா என்பதை முடிவு செய்யவேண்டும்.
இந்த உபதேசத்தை பின்பற்றினால் இவன் என்னுடைய சகோதரன். இல்லையென்றால் இவன் எனக்கு சகோதரன் அல்ல என்று கூறுவது வேதத்திற்கு முரணானது .
ஆவியில் வளர்ந்து விட்டோம் என்று சொல்கிறவர்கள்
இந்த கோட்பாட்டை பின்பற்றி அதினடிப்படையில் நம்முடைய சகோதரர்கள் யார் என்பதை முடிவு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் இந்த உபதேசத்தின் அடிப்படையில் கட்டப்பட வேண்டிய சகோதரத்துவ உறவு, கிறிஸ்தவ சகோதரத்துவ உறவு இன்று அல்லாடிக் கொண்டிருக்கிறது.
தேவன் தாமே இதைப்பற்றிய ஒரு சரியான புரிதலை நமக்கு தருவாராக.
EZEKIEL Shanmugavel