இறையியல் எல்லோருக்கும் அவசியமா ?
உங்கள் சிந்தனைக்கு!
இறையியல் எல்லோருக்கும் அவசியமா ?
I don't like anything without theology. I want theology in everything,
because I cannot understand anything apart from God's revelation.- John MacArthur
இன்றய கடைசி காலங்களில், சபைகளில் நடனங்கள் , ஆடல் பாடல்கள் ,நவீன இசைகள், மனதை கவரும் ராகங்கள் இவைக ளில் வாலிபர்கள் கவரப்பட்டு வார்த்தையாக வெளிப்பட்ட இயேசுவை முழுமையாக அறிவதற்கு மனமில்லாமல் போய்விடுகிறது.
இறையியல் என்பது இறைவனை பற்றி அறிகிற அறிவு.
மறுபடியும் பிறந்த எல்லோருக்கும் நமது ஆண்டவரை பற்றிய அறிவு மிக அவசியம்.
இறையியல் என்பது ஏதோ போதகர், மேய்ப்பர், தீர்க்கதரிசிகள் அவர்களுக்கு தான் தேவை ,நமக்கு தேவை இல்லை'என்கிற தவறான கண்ணோட்டம் இன்று சபைகளில் அநேகரை கிருஸ்துவத்தின் அடிப்படை உபதேசங்களை அறிய விடாமல் தடுத்து, அதிக முக்கியமில்லாத காரியங்களில் ஈடுபடசெய்துவிட்டது. இது மிக ஆபத்தான காரியம் . கிறிஸ்துவத்தின் வல்லமை, தேவன் தன் குமரன் மூலமாக தம்மை வெளிப்படுத்தினr ரட்சிப்பு, பாவமன்னிப்பு, பரிசுத்த மாகுதல், உயிர்தெழுதல் இவற்றை சார்ந்து உள்ளது.
இவற்றை பற்றிய அடிப்படை அறிவில்லாமல் சபை இரண்டம் தரமான காரியங்களில் விசுவாசிகளை ஈடுபட வைப்பது மிக மிக அபத்ததானது.
சபை சத்தியத்தினால் கட்டப்பட வேண்டும்.
கிறிஸ்துவின் வசனம் நமக்குள் சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வசமாயிருக்க வேண்டும்.
எனவே சபை தலைவர்கள் தங்கள் சபை மக்களுக்கு அடிப்படை கிருஸ்துவ இறையியலை தங்கள் சபை மக்களுக்கு,குறிப்பாக வாலிபர்களுக்கு போதிக்க வேண்டும்.
இந்த வாலிபர்கள்தான் அடுத்த தலைமுறைக்கு ஆதாரம் .எனவே வாலிபர்களுக்கு இரட்சிப்பு , திருமுழுக்கு,.பரிசுத்தமாகுதல், அபிஷேகம், கிறிஸ்துவுக்குள் நமது நிலை(our stand status in Christ) விசுவாசம் , நீதிமானாக்கப்படுதல், பரிசுத்த ஆவியானவரை பற்றிய விளக்கம் , சபையின் மேன்மை போன்ற காரியங்களை தெளிவுபடுத்தவேண்டும். எல்லா விசுவாசிகளும் இறையியல் மாணவர்கள்தான் இதுதான் சபைக்கு பாதுகாப்பு
பாடல்களுக்கு முன்னுரிமை அளித்து பணத்தை வாரியிறைக்கும் தலைவர்களுக்கு சபை கொடுக்கும் மதிப்பு வேதத்தின் மகத்துவங்களை பேசும் உண்மையான மக்களுக்கு தருவதில்லை.
வேதத்தின் மகத்துவங்களை பேசும் ஊழியர்களை வரங்கள் இல்லாத ஊழியர்களை போல் நடத்துவது சபைக்கு ஆரோக்கியமான காரியம் அல்ல .
பவுல் எங்கு சென்றாலும் வேதத்தின் மூலமாகத்தான் இயசு கிறிஸ்துவை குறித்து பேசினான்"அவன் காலமே தொடங்கி சாயங்காலமட்டும் மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் இருந்து இயேசுவுக்கடுத்த விசேஷங்களை அவர்களுக்குப் போதித்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துச் சாட்சிகொடுத்து விஸ்தரித்துப் பேசினான்". பவுலின் போதனைகள் மணிக்கணக்காக இருந்தது" அவன் காலமே தொடங்கி சாயங்காலமட்டும் ". என்ற வார்த்தையை கவனித்து பாருங்கள் . மேலும் "பவுல் நெடுநேரம் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருக்கையில்,: என்ற வார்த்தைகளையும் பார்க்கும்போது பவுலின் BIBLE STUDY என்பது எவ்வளவு ஆழமாக சோர்வடையச்செய்யாமல் இருந்தது என்பதை பார்க்க முடிகிறது.
சபைகளில் BIBLE STUDY நடத்தி சபையை பாதுகாக்க வேண்டியது காலத்தின் அவசியம்.
வேத பாடங்கள் என்பது மணிக்கணக்கில் தேவ சமூகத்தை அனுபவிக்கும் ஒரு காரியம்.ஆதி திருச்சபை அப்படிப்பட்ட அனுபவத்தில் வந்த காரணத்தில்தான் பாடுகளை சகிக்க முடிந்தது .
எந்த சபையில் அடிப்படையான வேத படங்கள் இல்லையோ, எந்த சபையில் வேத பாடங்களுக்கு வரவேற்பு இல்லையோ,எந்த சபையில் வேத படங்கள் புறக்கணிக்க படுகிறதோ
அந்த சபை தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு,சத்தியத்துக்குச்செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்து போகும் நிலைக்கு வரும் என்பது உண்மை . .
நீண்ட நேர ஆராதனை எவ்வளவு முக்கியமோ அந்த அளவு வேத தியானிப்பும் மிக அவசியம்.