Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Practical Application

வேதத்தில் முதல் காதல் தம்பதி

உங்கள் சிந்தனைக்கு: வேதத்தில் முதல் காதல் தம்பதி வேதத்தில் முதல் காதல் தம்பதி யாரென்றால் யாக்கோபும் ராகேலும்தான். அந்த உறவு ஒரு உணர்ச்சிகரமான அன்பு நிறைந்த, அதே வேளையில்‌ சோகம் நிறைந்த உறவாகும். ஆபிரகாம் தன் மகனுக்குப் பெண் தேட தன் வேலைக்காரனை அனுப்பி ரெபேக்காளை தேர்ந்தெடுத்தான். ஆனால் யாக்கோபு தன் மனைவியைத் தேடி தன் மாமன் வீட்டுக்குப் போகும்போது மாமன் மகளை முதல் முதலாக அவன் சந்தித்தான். முதல் சந்திப்பிலேயே அவளை முத்தம் செய்து அழுது தான், அவளுடைய தகப்பனுடைய மருமகன் என்று அறிமுகம் செய்தான். "Love at first sight". அன்று ஆரம்பித்த அந்த அன்பு கடைசி மட்டும் யாக்கோபை விட்டு நீங்கவே இல்லை. லேயாள் நிர்பந்தத்தின் நிமித்தமாக அவனுக்குக் கொடுக்கப்பட்டாள் . ஆனாலும் தான் காதலித்த ராகேலுக்காக இரவும் பகலும் 7 வருடங்கள் உழைத்தான். யாக்கோபின் பார்வையில் ராகேல் தான் முதல் மனைவி. அதனால்தான் என்னவோ யோசேப்பின் இரண்டு பிள்ளைகளில் ஒன்றான எப்பீராயிமுக்கு குடும்பத்தின் பிறப்புரிமை கொடுத்தான் போலும்‌. திருமண சடங்குகள் முறையில் வேண்டுமானால் அவள் இரண்டாவது மனைவியாக இருக்கலாம். அவளைத் தன் மனதளவில் முதல் மனைவியாக ‌ உள்ளத்தில் ஏற்றுக்கொண்டான். ஆனாலும் லேயாளை அவன் வெறுக்கவில்லை. ஆனால் அவளைக் காட்டிலும் ராகேல் மீது அதிக அன்பு கொண்டான். அதில் எந்தத் தவறும் கிடையாது. யாக்கோபுக்கு 3 பெண்கள் மூலமாகக் குழந்தைகள் பிறந்தாலும் தன் அன்பு மனைவி ராகேல் மூலம் ஒரு குழந்தையும் பெறவில்லை என்கிற ஒரு ஏக்கம் இருந்தது. இறுதியில் மற்றவர்கள் மூலமாக 11 குழந்தைகள் பெற்ற பிறகு கடைசி இரண்டு குழந்தைகள் ராகேல் மூலமாக யாக்கோபுக்கு கிடைத்தது. ஆனால் அதிலும் ஒரு சோகம் இரண்டாவது மகன் பென்யமீன் பிறக்கும்போது அவள் பிரசவத்திலேயே மரித்துப் போனாள். அந்தச் சோகத்தை அவன் கடைசி வரைக்கும் மறக்கவே இல்லை. அதனால் தான் கடைசி இரண்டு பிள்ளைகள்மீது அவனுக்கு அவ்வளவு பாசம். குறிப்பாக யோசேப்பு மீது. ஆனாலும் யோசேப்பு மிருகத்தினால் கொல்லப்பட்டான் என்று சொல்லப்பட்டபோது அவன் அடைந்த வருத்தத்தை ஆதியாகமம் புத்தகம் 37 :33-35ல் தெளிவாகப் பார்க்கலாம். அதற்குப் பிறகு அவனுடைய பாசம், தான் நேசித்த மனைவியின் இரண்டாவது மகனான பென்யமீன் மீது ஏற்பட்டது. யோசேப்பு அவனை எகிப்து தேசத்திற்கு வரவழைக்க முயன்றபோது அவன் யோசேப்பை இழந்தது போல இவனையும் இழக்கவில்லை என்று சொன்ன காட்சி ஆதி 42 36 -38 ல்பார்க்கலாம். அவனுக்கு 12 ஆண் குழந்தைகள் இருந்தாலும் தன் அன்பு மனைவி ராகேல் மூலமாகப் பெற்றெடுத்த அந்த இரண்டு பிள்ளைகள்மீது அவ்வளவு பாசம். இதேப்போல் அன்பு மனைவியின் மீதும் பிள்ளைகள்மீதும் உள்ள நிகழ்வுகளை வேதத்தில் காண்பது மிக அரிது. அவனுக்கு ராகேல் மீதும் அவளுடைய குழந்தைகள்மீதும் உள்ள பாசத்தை விவரிக்க முடியாது. யாக்கோபு ராகேல் உறவு இன்றைய விசுவாசிகளுக்கு ஒரு சிறந்த மாதிரி. காதலித்த‌ மனைவிக்காக வாழ்ந்த யாக்கோபின் உறவும், வாழ்க்கையும், இரண்டாவது மனைவியாக வாழ்க்கையை தொடங்கி தன் கணவன்மீது காட்டின ராகேலினுடைய அன்பும் கணவன் மனைவி உறவுக்கு நாம் பின்பற்ற வேண்டிய நல்ல மாதிரி.

யோசேப்பின் ஆடைகள் களையப்பட்ட இரண்டு நிகழ்வுகள்

உங்கள் சிந்தனைக்கு: யோசேப்பின் ஆடைகள் களையப்பட்ட இரண்டு நிகழ்வுகள் யோசேப்பின் வாழ்க்கையில் இரண்டு நிகழ்வுகள் மிக முக்கியமானது. அந்த இரண்டு நிகழ்வுகளும் அவனுடைய‌ உயர்வோடு சம்பந்தப்பட்ட நிகழ்வுகள். யோசேப்பு தன் தகப்பனுடைய வயதான காலத்தில்(91) அவனுடைய அன்பு மனைவியான ராகேல் மூலமாகப் பிறந்தவன். வயதான காலத்தில் பிறந்த காரணத்தால் என்னவோ அவனுக்குப் பலவிதமான வர்ணங்களை உடைய ஆடைகளை அணிவித்து அழகு பார்த்தான் யாக்கோபு. இது அவனுடைய மற்ற பிள்ளைகளுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் பொறாமை கொண்டு அவனுடைய ஆடைகளைக் களைந்து அதில் ஆட்டின் இரத்தத்தைதெளித்து தகப்பனுக்கு அனுப்பி அவன் மிருகங்களால் கொலை செய்யப்பட்டதாக நம்பச் செய்தார்கள். இது, அவர் ஆடையை இழந்தது முதல் நிகழ்வு. அதற்குப் பிறகு போத்திபார்‌‌ வீட்டில் நல்ல உயர்ந்த நிலையில் இருக்கும்போது அவனுடைய மனைவியின் ஆசைக்கு யேசேப்பு இணங்கிப் போகாததால் அவளுடைய சூழ்ச்சியால்‌ அவனுடைய ஆடையைப் பிடுங்கிக் கொண்டாள். விளைவுச் சிறைச்சாலை. இரண்டு தடவை தன் ஆடைகளை இழந்தான். இரண்டு தடவையும் படுகுழியிலும், சிறைச்சாலையிலும் தள்ளப்பட்டான். ஆனால் அந்தச் சிறைச்சாலையில் இருந்துதான் அவனுக்கு மிகப்பெரிய உயர்வு வந்தது. ஆம் பார்வோனுக்கு அடுத்த இடம் அவனுக்கு அளிக்கப்பட்டது. அவனுக்கு மென்பட்டு உடை அணிவிக்கப்பட்டது. அவனுக்கு ராஜாவால் உயர்ந்த ஆடை கொடுக்கப்பட்டது. நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள். எந்த வகையில்‌ நாம் அவமானப்படுத்தப்படுகிறோமோ அதே வழியில் கடவுள் நம்மை உயர்த்துவார். எப்போதுமே தேவன் நம்மை அவமானப்படுத்தி சிறுமைப்படுத்துகிறவர் அல்ல. நாம் எவற்றை இழக்கிறோமோ, அதற்கு ஈடாக எதிர்பாராத ஒரு மிகப்பெரிய உயர்வைத் தேவன் நமக்கு அளிப்பார். இரண்டு தடவை உடைகளை இழந்தாலும் யோசேப்பு தன் உத்தமத்தை இழக்கவில்லை. பரிசுத்தத்தை இழக்கவில்லை. கர்த்தரை இழக்கவில்லை. விளைவு இறுதியாக அவனுக்கு ராஜாவினால் ஆடை‌ அணிவிக்கப்பட்டது. இது தேவன் செய்யும் காரியம். நாம் எதை இழக்கிறோமோ அவைகள் ஆசீர்வாதத்திற்கான கருவிகளாய் ‌மாறும். நமக்கு மிகப்பெரிய இலாபத்தைத் தேவன் கொடுப்பார். தேவனுக்காக இழக்கின்ற கஷ்டங்கள் பின்னால் சிறந்த ஆசீர்வாதங்களாக மாறும். நம்முடைய தற்காலிக இழப்புகள் பின்நாட்களில் நிரந்தர ஆசீர்வாதங்களாக மாறும். எசேக்கியல் சண்முகவேல்

நாம் எதை விதைக்கிறோமோ அதை அறுப்போம்

உங்கள் சிந்தனைக்கு: நாம் எதை விதைக்கிறோமோ அதை அறுப்போம் யூதர்களுடைய வரலாற்றில் யாக்கோபு மிக முக்கியமானவன். அவன் தான் இஸ்ரவேல் என்றுபெயர் மாற்றம் செய்யப்பட்டவன். யாக்கோபின் வம்சத்தில் தான் இயேசு கிறிஸ்து பிறந்தார். இவ்வளவுஆசீர்வாதங்களைபெற்றிருந்தாலும் அவன் செய்த அநீதிக்கு தேவன்அவனை தண்டிக்காமல் விடவில்லை. எந்த வழிமுறையின் மூலமாக ஏசாவை ஏமாற்றினானோ அதே வழிமுறையின் மூலமாக லபான் மூலமாக அவன் ஏமாற்றப்பட்டான். ஆள்மாறாட்டம் என்கிற ஒரு கருவியைப் பயன்படுத்தி தன் தகப்பனுடைய ஆசீர்வாதத்தை அவன் பெற்றுக்கொண்டான். அதே ஆழ்மாறாட்டத்தின் மூலமாகத்தான் யாக்கோபுக்கு ராகேலுக்கு பதிலாக லேயாள் கொடுக்கப்பட்டாள். தாயும் மகனும் சேர்ந்து தகப்பனையும் மூத்த சகோதரனையும் வஞ்சித்தார்கள். ஆனால் யாக்கோபு லாபான் லேயாள் ராகேல் ஆகிய மூன்றுபேர் இணைந்து நடத்தியநாடகத்தால் வஞ்சிக்கப்பட்டான். யாக்கோபு லேயாள் திருமணத்தில் ராகேலுக்கும், லேயாளுக்கும் பங்கு இல்லை என்று நாம் நிராகரித்து விட முடியாது. They might be mute and silent spectators of the drama enacted byLaban தேவன் நீதியை சரி கட்டுகிற தேவன். எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் எவ்வளவாகத் தேவனால் பயன்படுத்தப்பட்டாலும் அவர்கள் செய்த அநீதிக்கு இந்த உலகத்திலேயே அவர்களுக்குத் தேவன் தண்டனையைக் கொடுப்பார். தேவனுடைய நீதி பரிபாலனத்தில் எல்லோரும் சமமே. புதிய ஏற்பாடு விசுவாசிகளுக்கு நாம் செய்த தவறுகளுக்குப் பாவங்களுக்குத் தண்டனை வழங்கப்பட விட்டாலும் சிட்ச்சை வழங்கப்படும்.(Chastening) மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். கலாத்தியர் 6:7. நமக்குக் கொடுக்கப்பட்ட கிருபையை அற்பமாக எண்ணாமல் அவமதிக்காமல் அதைப் பயன்படுத்தி பரிசுத்தத்தில் வளர வேண்டுமேயல்லாமல் கிருபையை பாவம் செய்வதற்கான அனுமதியாகக் கருதி வாழ்கின்ற எவரும் எந்த விசுவாசியும் அதற்கு ஏற்றத் தேவனுடைய சிட்ச்சையை தவிர்க்க முடியாது. அதுவும் பரிசுத்தத்தை போதிக்கின்ற தலைவர்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்

ஆண்டவரை அறிந்த ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும் இணைப்பதற்கான முக்கிய நோக்கம்:

உங்கள் சிந்தனைக்கு: ஆண்டவரை அறிந்த ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும் இணைப்பதற்கான முக்கிய நோக்கம்: அவர்கள் தங்கள் வாழ்வில் ஒரு பக்தியுள்ள அடுத்த சந்ததியை உருவாக்குவது தான். இதுதான் தேவனுடைய பார்வையில் மிக மிக முக்கியமான நோக்கம். இந்த நோக்கத்தில் கிறிஸ்தவ குடும்பங்கள் தவறும்போது அவர்களைத் தேவன் இணைத்த நோக்கம் ஒருபோதும் நிறைவேறாமல் போய்விடும். ஆபிரகாமை மிகப்பெரிய வாக்குத்தத்தங்களோடு தேவன் அழைத்தார். அதற்காக அவர் சும்மா இருக்கவில்லை. அதே வேளையில் தன்னுடைய மகன் ஈசாக்குக்கு, தேவனுக்கு சித்தமான இடத்தில் பெண் எடுக்க அவர் முயற்சி செய்து அதில் வெற்றி கண்டார். அந்த ஆவிக்குரிய தொடர் ஓட்டத்தில் இவருடைய பணி மிக முக்கியமானது. அதேபோல ஈசாக்கும் ரெபேக்காளும், யாக்கோபுக்கு தேவனுக்கு சித்தமான இடத்தில் பெண் கொள்ளும்படியாக அவனை லாபான் வீட்டுக்கு அனுப்பிய காரியம் மிக முக்கியமானது. ஏசாவைப் போல் வழி விலகிப் போய் விடாமல் கர்த்தருக்கு சித்தமான ஒரு இடத்தில் யாக்கோபை அனுப்பிய அந்தச் செயல் அவர்கள் இந்த ஆவிக்குரிய தொடர் ஓட்டத்தில் தங்களுடைய பங்கை நிறைவேற்றினார்கள். பெற்றோர்களுடைய கடமை என்னவென்றால், பிள்ளைகளுக்கு ஆவிக்குரிய சத்தியங்களை சொல்லிக் கொடுக்கலாம். தங்களுடைய ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை அவர்களுக்குக் கடத்தலாம். ஆனால் மிக முக்கிய கடமை என்னவென்றால் அவர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்குக் கர்த்தருக்கு சித்தமான இடத்தில் திருமணம் முடித்துக் கொடுக்க முயற்சி செய்ய வேண்டும். "இது பிள்ளைகளுடைய விருப்பம்" என்று சொல்லித் தங்கள் கடமைகளைத் தட்டி கழிக்க முடியாது. அடுத்த சந்ததியை உருவாக்குவதில் திருமண காரியம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் பெற்றோர்களுடைய கடமை மிக முக்கியமானது. எசேக்கியல் சண்முகவேல்

மற்றவருடைய உபதேசங்களை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

உங்கள் சிந்தனைக்கு: மற்றவருடைய உபதேசங்களை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். எந்த ஒரு உபதேசத்திற்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. இயேசு கிறிஸ்து சபைக்காக மட்டும் மரித்தாரா முழு உலகத்துக்கும் மரித்தாரா? நரகம் என்பது அவிசுவாசிகளுக்கான நித்திய தண்டனையா? அவர்களை நித்தியத்தில் கடவுள் அழித்து விடுவாரா? இயேசு கிறிஸ்து வருகை என்பது இரகசிய வருகை மற்றும் பகிரங்க வருகை என்று இரண்டும் சேர்ந்ததா? அல்லது ஒரே ஒரு வருகையா? ஒரே ஒரு நியாயத்தீர்ப்பா அல்லது இரண்டு நியாயத்தீர்ப்பா? ஆயிரம் அரசாட்சி எழுத்தின்படி நடக்குமா அல்லது நடக்காதா? ஆயிரம் வருடம்அரசாட்சி எப்பொழுது நடக்கும்? மகா உபத்திரவ காலம் ரகசிய வருகைக்கு முன்பாக நடக்குமா அல்லது பின்பு நடக்குமா? விசுவாசி தன்னுடைய இரட்சிப்பை இழக்க முடியுமா முடியாதா? சபைகளில் தலைமை பொறுப்பைப் பெண்கள் ஏற்கலாமா ஏற்க கூடாதா? சபையில் பெண்கள் ஆண்களுக்கும் போதிக்கலாமா? விசுவாசிகள் மற்றவர்களுக்குத் திருமுழுக்கு கொடுக்கலாமா கொடுக்கக் கூடாதா? முழு நேர பணியாளர்கள் விசுவாசிகள் என்ற பாகுபாடு வேதத்தின் படி சரியா? இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இதைப் பற்றி எல்லாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் விவாதித்து விவாதித்து அலுத்து போய்விட்டது‌. அவரவர்கள் தங்கள் நிலையில் இறுதியாக இருக்கிறார்கள். ஒருவர் மற்றொருவரை எதனுடைய அடிப்படையில் அன்பு கூறுகிறார்கள் அல்லது நேசிக்கிறார்கள் அல்லது நிராகரிக்கிறார்கள்? நான் நம்புவது இயேசு கிறிஸ்து என் பாவங்களுக்காக மரித்தார், நான் மறுபடியும் பிறந்தவன். நான் அவருடைய வசனத்தில் வளர்ந்து பரிசுத்தத்தில் ‌ வளர்ச்சி அடைந்து ஊழியம் செய்து‌ ஆண்டவருடைய வருகைக்காகக் காத்திருக்க வேண்டும் அவ்வளவுதான். உபதேசங்களை அறிந்து கொள்வதில் தவறில்லை அதில் நமக்குச் சமநிலை வேண்டும் அதில் அடித்துக் கொள்ளக் கூடாது. நான் சரி, நீ தவறு என்கிற மனப்பான்மை ஒழித்து விட்டு மற்றவர் கருத்தை மதித்து அவர்களை நேசிக்க வேண்டும் ‌. என் கருத்து வேறாக இருந்தாலும் அவர்களின் உணர்வை நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இதுதான் ஆவிக்குரிய முதிர்ச்சி என்பேன். ஏனென்றால் அவர்களும் இயேசுவின் இரத்தத்தால் என்னைப் போல மீட்டெடுக்கப்பட்டவர்கள். இயேசு கிறிஸ்து அவர்களையும் என்னைப் போலவே தம்முடைய பிள்ளைகளாக மாற்றி இருக்கிறார் என்கிற புரிதல் அவசியம். அடிப்படை உபதேசங்களில் சமரசம் கூடாது. மற்ற காரியங்களில் அனுசரணை தேவை. இதுதான் சமநிலை கிறிஸ்தவம்.

Extra luggage in our spiritual life

Mount Sinai was where the people of Israel stayed for many days after they left Egypt. They stayed at this place for about a year. This is where the Tabernacle was created. The duties of the Levitical priests were defined  Manna fell from heaven, and the people of Israel ate it. They rested comfortably in the protection of God. The events of their journey after this are narrated in Numbers 10:11 to 12:16. When the Israelites left Egypt, about 2 million people went. The Jews grumbled for water on the third day of their departure from Egypt. Now they grumbled for meat on the third day of their departure towards Canaan. They lusted for the food they ate in Egypt. They longed for the fish, cucumber, and garlic they had eaten in Egypt. They ignored the manna that God had showered from the sky and stood at the tent door crying for food. This is the reason A group of non-Jews came with them from Egypt. (A mixed multitude). We do not know why they left with the Jews. But they were a great stumbling block to the Israelites. These are the ones who have developed a grudge against the manna that the Lord has given them. As a result, the Jews ignored the manna that God had showered from heaven and stood at the tent door crying for food. Seeing this, Moses said, "Have I conceived all these people? Have I begotten them, that thou shouldest say unto me, Carry them in thy bosom, as a nursing father beareth the sucking child, unto the land which thou swarest unto their fathers?" Moses had reached the height of despair. Seeing this, the Lord sent a wind that struck the quails in the sea and filled the entire camp. Before the Jews could devour the quails, God's anger was kindled and a deadly pestilence struck them. It was the non-Jews who came along with the Jews who laid the foundation for such a great impact. What lessons do these events convey in our spiritual lives? These events It reminds us of our Lord's words about weeds in Matthew 13:24-30, 36-43. The devil will always sow weeds and crops in the churches. These weeds also look like crops. They are like converted believers in every way. The devil will use them when the time comes. These are false brothers. Galatians 2:4, 2 Corinthians 11:26. These are false ministers who pretend to be ministers. 2Cor 11:13. These weeds are always brought from congregations. We have to be vigilant in our spiritual life. Another important note to note. These people were unwanted people in the sight of God. They will make us deviate from God's will. They will stop us from carrying out the Lord's will for us. Sometimes they lead directly to sins. So we must be wary of those who travel with us on our spiritual journey. We cannot assume that all human beings are our spiritual helpers. In the same way that there are weeds in it when Abraham went to Egypt against God's will, Hagar, the servant girl who came as a reward from Pharaoh, produced an unwanted offspring. So in our spiritual life, it is necessary to pray that "Lord, remove unnecessary friendships, relationships, and associations from my life." Read Exodus 12:38, the 11th chapter of Numbers. Genesis 12:15,16

எல்லாம் தெய்வ மகிமைக்கே

உங்கள் சிந்தனைக்கு: தகப்பனான ஆபிரகாமும் மகனான ஈசாக்கும் ஒரே வகையான(Same Type) இரண்டு பிரச்சனைகளை சந்தித்தார்கள். ஆபிரகாமும் ஈசாக்கும் பஞ்சத்தை சந்தித்தார்கள். ஆபிரகாம் ஈசாக்கும் தங்களுடைய மனைவி அழகுள்ளவர்களாக இருப்பதினால் தங்களுக்கு வந்த ஆபத்தை சந்தித்தார்கள். ஆனால் இரண்டு பேரும் இரண்டு வகையில் அந்த பிரச்சினைகளை சந்தித்தார்கள். தேவனும் அவர்களை இரண்டு வகையில் அவர்களோடு இடைப்பட்டார். ஆபிரகாம் பஞ்சத்திற்கு பயந்து எகிப்துக்கு போவதை தேவன் தடுக்கவில்லை. ஆனால் ஈசாக்கை தடுத்தார்.தங்கள் மனைவி அழகுள்ளவர்களாக இருப்பதினால் தங்களை மனைவியினுடைய சகோதரர்கள் என்று இருவருமே அடையாளப்படுத்திக் கொண்டார்கள். இவர்கள் இரண்டு பேருமே இந்தப் பிரச்சினையை சந்தித்த விதங்கள் வேறு .இந்த காரியங்களில் தேவன் அவர்களை நடத்தின விதமும் வேறு .எனவேதேவன் எல்லோரையும் ஒரே மாதிரி, ஒரே விதத்தில் நடத்த மாட்டார் . அவர்களுடையஆவிக்குரிய அனுபவம், முதிர்ச்சி இவைகளின் அடிப்படையில் தான் அவர்களை தேவன் நடத்துவார், .எனவே தேவனை நோக்கி ஏன் ஆண்டவரே இந்தப் பிரச்சனையில் என்ன இப்படி நடத்தினீர்,? அவர்களை ஏன் அப்படி நடத்த வேண்டும்! என்று கேள்வி கேட்க நமக்கு உரிமை இல்லை. எல்லாம் தெய்வ மகிமைக்கே

ஆபிரகாம் ஒரு நல்ல குடும்பத் தலைவன்

ஆபிரகாம் ஒரு நல்ல குடும்பத் தலைவன் . இதற்கு இரண்டு காரியங்களை குறிப்பிடலாம். ஒன்று தன்னுடைய மகன் ஈசாக்குக்கு கர்த்தரின் சித்தத்தின்படி தேவனுக்கு பயந்து தன்னுடைய இனத்தில் இருந்து மணப்பெண்ணை தெரிந்து கொள்ள அவன் முயற்சி எடுத்து அதில் வெற்றி கண்டான். இதனால் மேசியா வருவதற்கான ஒரு சரியான இணைப்பை உண்டு பண்ணினான்.இதை ஒரு மிகப்பெரிய காரியமாக பார்க்கிறேன். ஈசாக்கு அவன் தன் வழியே சென்று தனக்கு இஷ்டமான பெண்ணை தெரிந்து கொள்ளாதபடிக்கு ஆபிரகாம் செய்த இந்த காரியம் தடுத்தது. அடுத்தபடியாக தான் இறக்கும் முன்பாகவே ஈசாக்குக்கும் தனது மறுமனையாட்டியான கேத்தூராள் மூலமாக பிறந்த குழந்தைகளுக்கும் சொத்தை பகிர்ந்து கொடுப்பதில் அவன் தெளிவாக இருந்து யாருக்கு சொத்தை கொடுக்க வேண்டுமோ அவர்களுக்கு சொத்தை கொடுத்து யாருக்கு வெகுமதிகளை கொடுக்க வேண்டுமோஅவர்களுக்கு வெகுமதிகளை கொடுத்து ஒரு சமாதானமான தீர்வை கொடுத்து ஒரு நிம்மதியான வாழ்க்கையை முடித்தான்.ஆதி25:5,6 3000 ஆண்டுகளுக்கு முன்பாகவே சகோதரர்களுக்கிடையில் சொத்து பிரச்சனை வராதபடி பார்த்துக் கொண்ட முதல் குடும்பத் தலைவன் ஆபிராகாம். இந்த வழியை தகப்பன்மார்கள் சரியாகப் புரிந்து கொண்டு குடும்பத்தில் பிரிவினைகள் வராதபடி பார்த்துக் கொள்ள வேண்டும் . எவ்வளவுதான் ஆவிக்குரிய மனிதர்களாக ஊழியம் செய்பவர்களாக காணப்பட்டாலும் குடும்பத் தலைவன் என்கிற பொறுப்பில் இருந்து ஒரு தகப்பன் தன் கடமையை சரியான முறையில், நியாயமான முறையில் செய்ய அழைக்கப்பட்டிருக்கிறான். திருமண காரியங்களில் சொத்துக்களை பிரிப்பதில் ஒரு தகப்பன் தேவனுடைய சித்தத்தை அறிந்து செயல்பட தேவன் விரும்புகிறார். அதில் தவறும் போது தலைமுறை தலைமுறையாக பாதிப்புகள் ஏற்படும். ஆபிரகாம் நமக்கு நல்ல உதாரணம் . EZEKIEL SHANMUGAVEL

இறையியல் எல்லோருக்கும் அவசியமா ?

உங்கள் சிந்தனைக்கு! இறையியல் எல்லோருக்கும் அவசியமா ? I don't like anything without theology. I want theology in everything, because I cannot understand anything apart from God's revelation.- John MacArthur இன்றய கடைசி காலங்களில், சபைகளில் நடனங்கள் , ஆடல் பாடல்கள் ,நவீன இசைகள், மனதை கவரும் ராகங்கள் இவைக ளில் வாலிபர்கள் கவரப்பட்டு வார்த்தையாக வெளிப்பட்ட இயேசுவை முழுமையாக அறிவதற்கு மனமில்லாமல் போய்விடுகிறது. இறையியல் என்பது இறைவனை பற்றி அறிகிற அறிவு. மறுபடியும் பிறந்த எல்லோருக்கும் நமது ஆண்டவரை பற்றிய அறிவு மிக அவசியம். இறையியல் என்பது ஏதோ போதகர், மேய்ப்பர், தீர்க்கதரிசிகள் அவர்களுக்கு தான் தேவை ,நமக்கு தேவை இல்லை'என்கிற தவறான கண்ணோட்டம் இன்று சபைகளில் அநேகரை கிருஸ்துவத்தின் அடிப்படை உபதேசங்களை அறிய விடாமல் தடுத்து, அதிக முக்கியமில்லாத காரியங்களில் ஈடுபடசெய்துவிட்டது. இது மிக ஆபத்தான காரியம் . கிறிஸ்துவத்தின் வல்லமை, தேவன் தன் குமரன் மூலமாக தம்மை வெளிப்படுத்தினr ரட்சிப்பு, பாவமன்னிப்பு, பரிசுத்த மாகுதல், உயிர்தெழுதல் இவற்றை சார்ந்து உள்ளது. இவற்றை பற்றிய அடிப்படை அறிவில்லாமல் சபை இரண்டம் தரமான காரியங்களில் விசுவாசிகளை ஈடுபட வைப்பது மிக மிக அபத்ததானது. சபை சத்தியத்தினால் கட்டப்பட வேண்டும். கிறிஸ்துவின் வசனம் நமக்குள் சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வசமாயிருக்க வேண்டும். எனவே சபை தலைவர்கள் தங்கள் சபை மக்களுக்கு அடிப்படை கிருஸ்துவ இறையியலை தங்கள் சபை மக்களுக்கு,குறிப்பாக வாலிபர்களுக்கு போதிக்க வேண்டும். இந்த வாலிபர்கள்தான் அடுத்த தலைமுறைக்கு ஆதாரம் .எனவே வாலிபர்களுக்கு இரட்சிப்பு , திருமுழுக்கு,.பரிசுத்தமாகுதல், அபிஷேகம், கிறிஸ்துவுக்குள் நமது நிலை(our stand status in Christ) விசுவாசம் , நீதிமானாக்கப்படுதல், பரிசுத்த ஆவியானவரை பற்றிய விளக்கம் , சபையின் மேன்மை போன்ற காரியங்களை தெளிவுபடுத்தவேண்டும். எல்லா விசுவாசிகளும் இறையியல் மாணவர்கள்தான் இதுதான் சபைக்கு பாதுகாப்பு பாடல்களுக்கு முன்னுரிமை அளித்து பணத்தை வாரியிறைக்கும் தலைவர்களுக்கு சபை கொடுக்கும் மதிப்பு வேதத்தின் மகத்துவங்களை பேசும் உண்மையான மக்களுக்கு தருவதில்லை. வேதத்தின் மகத்துவங்களை பேசும் ஊழியர்களை வரங்கள் இல்லாத ஊழியர்களை போல் நடத்துவது சபைக்கு ஆரோக்கியமான காரியம் அல்ல . பவுல் எங்கு சென்றாலும் வேதத்தின் மூலமாகத்தான் இயசு கிறிஸ்துவை குறித்து பேசினான்"அவன் காலமே தொடங்கி சாயங்காலமட்டும் மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் இருந்து இயேசுவுக்கடுத்த விசேஷங்களை அவர்களுக்குப் போதித்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துச் சாட்சிகொடுத்து விஸ்தரித்துப் பேசினான்". பவுலின் போதனைகள் மணிக்கணக்காக இருந்தது" அவன் காலமே தொடங்கி சாயங்காலமட்டும் ". என்ற வார்த்தையை கவனித்து பாருங்கள் . மேலும் "பவுல் நெடுநேரம் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருக்கையில்,: என்ற வார்த்தைகளையும் பார்க்கும்போது பவுலின் BIBLE STUDY என்பது எவ்வளவு ஆழமாக சோர்வடையச்செய்யாமல் இருந்தது என்பதை பார்க்க முடிகிறது. சபைகளில் BIBLE STUDY நடத்தி சபையை பாதுகாக்க வேண்டியது காலத்தின் அவசியம். வேத பாடங்கள் என்பது மணிக்கணக்கில் தேவ சமூகத்தை அனுபவிக்கும் ஒரு காரியம்.ஆதி திருச்சபை அப்படிப்பட்ட அனுபவத்தில் வந்த காரணத்தில்தான் பாடுகளை சகிக்க முடிந்தது . எந்த சபையில் அடிப்படையான வேத படங்கள் இல்லையோ, எந்த சபையில் வேத பாடங்களுக்கு வரவேற்பு இல்லையோ,எந்த சபையில் வேத படங்கள் புறக்கணிக்க படுகிறதோ அந்த சபை தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு,சத்தியத்துக்குச்செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்து போகும் நிலைக்கு வரும் என்பது உண்மை . . நீண்ட நேர ஆராதனை எவ்வளவு முக்கியமோ அந்த அளவு வேத தியானிப்பும் மிக அவசியம்.

Spiritual Blessings vs Material Blessings

Spiritual Blessings vs Material Blessings Matthew 5:45 “…….for he makes his sun rise on the evil and on the good, and sends rain on the just and on the unjust.“ God often blessed evil monarchs: Pharaoh of Egypt; Nebuchadnezzar, king of Babylon; Cyrus, king of Persia, et cetera. All of these were referred to as “my servants” or “mine anointed“. Did God approve of their religious convictions? Is this why He blessed them with wealth and power? Read Romans 9:15-24 and then the rest of the story from 2 Chron. 36:22-23 and Jer. 27:5-7.

படைப்பாளிக்கும் படைப்புக்கும் உள்ள வித்தியாசம்

உங்கள் சிந்தனைக்கு: படைப்பாளிக்கும் படைப்புக்கும் உள்ள வித்தியாசம். தேவன், கடவுள் இல்லாத பொருள்களிலிருந்து, இல்லாதவைகளில் இருந்து ஒன்றை உருவாக்கும் வல்லமை படைத்ததவர், ஆனால் படைப்புகள், படைக்கப்பட்டவர்கள் தேவன் அளித்த கொடையிலிருந்துதான் ஏதோ ஒன்றை உருவாக்க ,அல்லது திருத்தம் செய்ய முடியும். இல்லாத ஒன்றிலிருந்து ஏதோ ஒன்றை உருவாக்க மனிதனால் முடியாது. தேவன் கையளிக்காத எதையும் மனிதன் நிர்வகிக்க, கையாள முடியாது “Man can alter and rearrange . He can make things out of already existing materials. . There is nothing a man can handle which God has not

என் கருவில் பாதுகாத்த தேவன்

என் கருவில் பாதுகாத்த தேவன் தாயின் கருவில் என் உறுப்புகளை உருவாக்கி ஒவ்வொன்றாக பக்குவமாக இணைத்து, இமைப்பொழுதும் தூங்காமல் என் உறுப்புகளை கண்காணித்து தேவையான வளர்ச்சிகளை கொடுத்து ஒரு சேதமும் வராமல் பாதுகாத்து முழு வடிவமாக தாயின் வயிற்றில் இருந்த என்னை வெளியில் கொண்டு வந்த என் தேவன் இந்த உலகிலும் என் சரீர பாதுகாப்பிற்கு அவர் போதுமானவர் . கருவறையில் பாதுகாத்த தேவன் கல்லறை வரையில் சரீர பாதுகாப்புக்காக போதுமானவர். அவருடைய படைப்பின் கிரியையின் சிறந்த வெளிப்பாடு கருவறையில் நான் உருவாகி, வளர்ந்து, வெளியில் வந்த இந்த நிகழ்வு என்றால் அது மிகையாகாது.சங்கீ139:13-16

என்னத்தை குடிப்போம்? என்னத்தை புசிப்போம்?

உங்கள் சிந்தனைக்கு: என்னத்தை குடிப்போம்? என்னத்தை புசிப்போம்? "What shall we eat?" 'What shall we drink?" இந்தக் கேள்விதான் இஸ்ரவேல் ஜனங்களை அவர்களது இலக்கான கானானை அடைய முடியாமல் செய்தது. 400 ஆண்டுகளாக அடிமைத்தனத்திலிருந்து ஓங்கிய புயத்தினாலும் பலத்த கரத்தினாலும் பார்வோன் கையிலிருந்து தங்களை விடுதலையாக்கின தேவன் அவர்களுடைய அடிப்படையான உலக தேவைகளை சந்திப்பார் என்ற நம்பிக்கை இல்லாமல் போனதுதான் அவர்களுடைய வீழ்ச்சிக்கு காரணம். இந்தத் தேவைகளுக்காக அவர்கள் விண்ணப்பித்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் அவர்களுடைய விண்ணப்பத்தில் தேவன் பிரியமாக இருந்து பதில் கொடுத்திருப்பார். ஆனால் அதற்கு மாறாக அவர்கள் முறுமுறுத்து கலகம் செய்ய ஆரம்பித்தார்கள். தேவன் தம்முடைய பிள்ளைகளுடைய அடிப்படைத் தேவைகளை சந்திப்பதற்கு கடமைப்பட்டிருக்கிறார். அவைகளை நிறைவேற்ற அவர் ஆயத்தமாக இருக்கிறார். ஆனால் அதற்கு மாறாக அவர்கள் முறுமுறுப்பு என்கிற ஆயுதத்தை கையில் எடுத்தார்கள். விளைவு வனாந்தரத்தில் மடிந்து போனார்கள். அதுபோல நாமும் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையை தொடங்கும் பொழுது என்ன்த்தை குடிப்போம்? என்னத்தை உடுத்துவோம்? என்னத்தை உண்போம்? போன்ற கவலைகளை உதறி வைத்துவிட்டு தேவன் பார்த்துக் கொள்வார் என்கிற விசுவாசத்தோடு தேவனுடைய நீதியையும் அவருடைய ராஜ்ய விரிவாக்கத்தையும்‌ விரும்பி அதில் ஈடுபடும் போது நமக்குத் தேவையான ஆசீர்வாதங்கள் நம்மை தேடி ஓடிவரும். நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் உலக தேவைகளை முன்னிறுத்தி அவைகளுக்காக நாம் இயேசுவை பின்பற்றுவோம் என்றால் நம்மை போல பரிதாபமான மனிதர்கள் வேறு எவரும் இந்த உலகில் இருக்க முடியாது. 1980ம் ஆண்டு இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்ட காரணத்திற்காக என் பெற்றோர் என்னை வீட்டை விட்டு விரட்டி விட்ட போது வேதத்தோடும் ஒரு பெட்டியோடும் கிளம்பினேன். என்னத்தைக் குடிப்போம் என்னத்தை புசிப்போம் என்கிற சிந்தனை இல்லாமல் தேவனுடைய நீதியை மட்டும் தேடின காரணத்தால் இந்த நாள் வரையிலும் என்னுடைய அடிப்படை தேவைகளை சந்திப்பதற்கு அவர் போதுமானவராய் இருந்தார் என்பதற்கு நானும் ஒரு சாட்சி. கர்த்தர் மகிமைப்படுவாராக. படிக்க,யாத் 17:1-7, எண்ணா20:2,13, 21:6

குமாரர்கள் மூலம் ஆரோன் அடைந்த நிந்தனை.

குமாரர்கள் மூலம் ஆரோன் அடைந்த நிந்தனை. கடவுள் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தில் இருந்து வெளியே கொண்டுவர ‌ஆரோனை பயன்படுத்தினார். இவன்தான் மோசேயினுடைய வாயாகத் திகழ்ந்தான். மோசேயோடு கூட பார்வோனோடு  பேச்சுவார்த்தை நடத்தியவன் இவன்தான் . இஸ்ரவேல் ஜனங்களுடைய முதல் பிரதான ஆசாரியன். ஆசரிப்பு கூடாரம் உருவாக்கப்பட்ட பிறகு இவன்தான் முதன்முதலாக இஸ்ரவேல் ஜனங்களுக்காக பலியை செலுத்தியவன். ஆசரிப்புக் கூடாரத்தில் அத்தனை பொருட்களும் பரிசுத்தமாக்கப்பட்டு முதல் முதல் தேவனுக்கு பலிகளை செலுத்திய போது தேவனுடைய மகிமை ஆசரிப்புக் கூடாரத்தில் வெளிப்பட்டது. கர்த்தருடைய சந்நிதியிலிருந்து அக்கினி புறப்பட்டு, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியையும் கொழுப்பையும் எரித்துவிட்டது; ஜனங்களெல்லாரும் அதைக் கண்டபோது ஆரவாரித்து முகங்குப்புற விழுந்தார்கள். லேவியராகமம் 9:24 அந்த நாள் ஆரோனுக்கு மிகவும் மகிழ்ச்சியான நாளாக முடிந்திருக்க வேண்டியது. மற்ற ஜனங்களோடு சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளக்கூடிய நாளாக இருந்திருக்க வேண்டியது. ஆனால் அந்த நாளில் தான் ‌ஆரோனின் இரண்டு குமாரர்களும் கர்த்தருடைய சந்நிதியில் மடிந்து போனார்கள். தேவன் கட்டளையிடாத வேறொரு  நெருப்பை கர்த்தருக்கு செலுத்தினபடியினால் கர்த்தரின் சன்னிதானத்தில் இருந்து புறப்பட்ட நெருப்பு அவர்களை எரித்து போட்டது. இந்த நிகழ்வை பார்த்து ஆரோன் பேசாமல் மௌனம் காத்தான். லேவி10:3 லட்சக்கணக்கான தன் ஜனங்கள் முன்பாக தன்னுடைய இரண்டு குமாரர்களும்  கர்த்தரால் தண்டிக்கப்பட்ட நிகழ்வு அவனுக்கு எவ்வளவு பெரிய அவமானத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியாது. தன்னுடைய குமாரர்களின் தவறுக்கு, மீறுதலுக்கு அவன் எவ்வளவேனும் பொறுப்பானவன் அல்ல. அவர்கள் பாவத்திற்கு ஆரோனை எந்த விதத்திலும் பொறுப்பாக்க முடியாது. ஆனாலும் மோசேக்கு அடுத்தபடியாக தலைவனாக இருந்த அவனுக்கு இவ்வளவு பெரிய அவமானம் அவனுடைய  குமாரர்களால் ஏற்பட்டது. அதுமாத்திரமல்ல திரும்பப்பெற முடியாத இழப்பை சந்தித்தான். தன் குமாரர்களுடைய மறைவு எவ்வளவு வலியை ஏற்படுத்தி இருக்கும். இன்றைக்கும் தேவனால் பயன்படுத்தப்படுகின்ற, தேவனுக்காக உண்மையாக வாழ்கின்ற ஊழியக்காரர்கள், விசுவாசிகள் மத்தியில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஏற்படுகின்றன. அவர்கள் அடிக்கடி தேவனை நோக்கி கேட்கின்ற கேள்வி "ஏன் ஆண்டவரே" என்பதுதான். "நான் உமக்கு  உண்மையாக வாழ்ந்தேனே, ஊழியம் செய்கிறேனே என் குடும்பத்தில் ஏன் பிள்ளைகளால் இவ்வளவு பெரிய அவமானம்?, ஏன் இந்த இழப்பு?"என்று அவர்கள் கேட்காத நாளே இருக்க முடியாது. ஆனால் அதற்கான பதில் இந்த உலகத்தில் அவர்களுக்கு ஒருபோதும் கிடைக்காது. அந்த பதிலை நித்தியத்தில் தான் அவர்கள் பெற முடியும். கிறிஸ்தவ சமுதாயத்தில் தங்கள் பிள்ளைகளால் தங்களுக்கு ஏற்படுகின்ற நிந்தனைகள் யாரால் புரிந்து கொள்ள முடியும்? அன்றைக்கு ஆரோன் சபை முன்பாக மௌனம் காத்தது போல் இந்த வகைப் பாடுகளை அனுபவிக்கும் தேவனுடைய பிள்ளைகள் மௌனம் காப்பதை தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.

ஆரோனின்குமாரர்கள் மரித்ததற்கு என்ன காரணம்?

ஆரோனின்குமாரர்கள் மரித்ததற்கு என்ன காரணம்? ஆரோனின் குமாரராகிய நாதாபும் அபியூவும் கர்த்தருடைய சன்னிதானத்தில் எரிந்து போனதற்கு என்ன காரணம்? ஆசரிப்புக் கூடாரத்தில் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட முதல் நாளிலேயே ஆரோனின் மகன்களை கர்த்தருடைய சன்னிதானத்தில் இருந்து புறப்பட்ட நெருப்பு அவர்களை எரித்து போட்டது லேவியராகமம் 10:1,2. இதற்கு ஐந்து காரணங்களை மிகச்சிறந்த வேத அறிஞர் W.W.Wiersbe சுட்டிக்காட்டுகிறார். அதில் இரண்டு காரணங்களையும் அது உணர்த்தும் பாடங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம். 1.Wrong people தங்களுக்கு சம்பந்தமில்லாத பணியில் தலையிட்டது. அவர்கள் செய்த பணி என்பது பிரதான ஆசாரியனுக்கு மட்டும் உரியது யாத்30:7-10. தன் தகப்பன் செய்ய வேண்டிய வேலையை இவர்கள் செய்தது. ஆசாரியர்கள் பிரதான ஆசாரியர்களின் வேலையை செய்யக்கூடாது. ஆவிக்குரிய வாழ்க்கையில் கூட நம்முடைய அழைப்பு, நமக்கு தேவன் அளித்த ஊழியம், பொறுப்பு இவைகளை தாண்டி மற்றவர்களுடைய பணியில் கர்த்தருடைய அனுமதி இல்லாமல் தலையிடுவது வேதத்தின் படி சரியல்ல. ஆரோனுடைய மகன்களாக இருந்தாலும் அவர்கள் தங்களுடைய எல்லையை மீறி, தேவன் அனுமதித்த கட்டளைகளை மீறி செயல்பட்டபோது மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. உசியா ராஜா இதே மாதிரி தேவனின் சன்னிதானத்தில் தூபம் காட்டுவதற்காக நுழைந்த பொழுது குஷ்ட வியாதியினால் பாதிக்கப்பட்டான். தேவன் நமக்கு நியமிக்காத வேலையை நாமே எடுத்துக் கொள்வது சரியல்ல. 2.Wrong authority ஆரோனுடைய மகன்கள் தேவனால் அனுமதிக்கப்படாத நெருப்பை‌ (unauthorised fire) தூப கிண்ணங்களில் போட்டு அதை தேவனுக்கு செலுத்தினார்கள். தாங்கள் செய்யப் போகிற காரியத்தை குறித்து தன் தகப்பனிடமோ, மோசேயிடமோ கலந்தாலோசிக்காமல் தேவனால் அனுமதிக்கப்படாத ஒரு காரியத்தை செயல்படுத்தினார்கள். நாம் கூட தேவனுடைய ஊழியமாக இருந்தாலும் கர்த்தருடைய அனுமதி இல்லாமல் எந்த ஒரு காரியத்தையும் செய்யக்கூடாது. சிறிய ஊழியமோ பெரிய ஊழியமோ ஊழியக்காரர்களோ விசுவாசிகளோ யாராக இருந்தாலும் ஊழியத்தில் தேவனுடைய சித்தம் செய்ய வேண்டும். தேவனுடைய ஆளுகைக்குள் நாம் அடங்கி இருக்க வேண்டும்.. தேவன் நமக்கு கொடுக்காத அதிகாரத்தை நாம் கையில் எடுக்கக் கூடாது. பவுல் சொல்லுகிற வார்த்தையை நாம் கவனிக்க வேண்டும். "நாங்கள் அளவுக்கு மிஞ்சி மேன்மைபாராட்டாமல், தேவன் எங்களுக்கு அளந்து பகிர்ந்த அளவுப்பிரமாணத்தின்படியே மேன்மைபாராட்டுகிறோம். 2 கொரிந்தியர் 10:13. தேவன் நமக்கு கொடுத்த வரையறையை மீறி நாம் எதையும் செய்யாதபடி இருக்க கர்த்தர் கிருபை தருவாராக.

பெலன், பலவீனம் Strength and weakness

உங்கள் சிந்தனைக்கு: பெலன், பலவீனம் Strength and weakness மோசேயினுடைய பெலன் அவனுடைய தாழ்மை.எண்12:3 Meekness தாவீதின் பெலன் அவனுடைய உத்தமம். Integrity 2 இராஜா12:9 ஆபிரகாமின் பெலன் அவனுடைய விசுவாசம் . ரோம4:21 Faith பேதுருவின் சிறப்பு குணம் அவனுடைய தைரியம். Courage காதேசிலே இஸ்ரவேல் ஜனங்கள் தண்ணீருக்காக கலகம் செய்த போது ஆண்டவர் மோசேயை நோக்கி கோலை எடுத்துக் கொண்டு கன்மலை நோக்கி பேசச்சொன்னார். அதுவரைக்கும் இஸ்ரவேல் ஜனங்களின் கலகத்தை பொறுமையோடு சகித்த மோசே இந்த நிகழ்வில் பொறுமை இழந்து கன்மலையோடு பேசுவதற்கு பதிலாக அதை இரண்டு தடவை அடித்தான். விளைவு 40 வருடம் பொறுமையாக வழிநடத்தி கானானுக்கு செல்ல வேண்டிய இறுதி காலகட்டத்தில் அந்த வாய்ப்பை இழந்தான். அவனுடைய தாழ்மை என்னும் பெலன் அவனுக்கு கை கொடுக்கவில்லை. ஆபிரகாம் விசுவாசத்தில் வல்லவனாக இருந்தாலும் இடையில் தன் மனைவி சொல் கேட்டு ஆகாரை திருமணம் செய்து கொண்டு தன் விசுவாசத்தில் பலவீனம் அடைந்தான். தாவீது தன் உத்தமத்தை பத்சேபாள் விஷயத்தில் இழந்தான். தைரியசாலியாக தோற்றம் அளித்த பேதுரு பெண்ணிடமும், வேலைக்காரியிடமும் பயந்து ஆண்டவரை மறுதலித்தான். சாத்தான் நம்முடைய பெலன் எங்கே இருக்கிறது அறிந்து அதிலே நம்மை தோல்வியைக்காண செய்வதில் வல்லவன். நாமும் நம்முடைய பெலத்தில் சார்ந்து இருக்கக் கூடாது. இதைத்தான் பவுல் இப்படி சொல்கிறார் "கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்." கொரிந்தியர் 12:9 நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் அனேக நேரங்களில் நம்முடைய பலவீனங்கள் மூலமாகத்தான் தேவன் மகிமைப்படுவார். நம்முடைய பெலன் பல வேலைகளில் நம்மை ஏமாற்றிவிடும். நம்முடைய பெலமாக கருதுகிற நம்முடைய உத்தமம், வைராக்கியம் , நேர்மை தைரியம் ,திறமைகள் நம்மை பல நேரங்களில் ஏமாற்றி விடும். தேவனுடைய கிருபையை சார்ந்து நம்முடைய பலவீனங்களில் நாம் மேன்மை பாராட்டும் பொழுது நாம் ஒருபோதும் வீழ்ந்து போவதில்லை. கர்த்தர் மகிமைப்படுவாராக.

குடியினால் விழுந்த ஆரோனின் குமாரர்கள்.

உங்கள் சிந்தனைக்கு: குடியினால் விழுந்த ஆரோனின் குமாரர்கள். "நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் சாகாதிருக்கவேண்டுமானால், ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கிறபோது, திராட்சரசத்தையும் மதுவையும் குடிக்கவேண்டாம்" லேவியராகமம் 10:9 லேவியராகம புத்தகத்தில் கர்த்தர் மோசேயிடம் மட்டும்தான் ஆசரிப்புக் கூடாரத்தினுடைய பணிகளைப் பற்றியும் உணவு முறைகளைப் பற்றியும் பலவித கட்டளைகளை சொல்லி இருக்கிறார். ஆனால் இந்த ஒரு இடத்தில் மட்டும் தான் ஆரோனோடு தேவன் பேசியிருக்கிறார். அதுவும் எப்போது என்றால் அவருடைய இரண்டு மகன்களும் தேவன் அங்கீகரிக்காத நெருப்பை பலிபீடத்தில் கொண்டு‌ தூபம் காட்டின பொழுது, கர்த்தருடைய சன்னிதானத்தில் இருந்து புறப்பட்ட நெருப்பு அவர்களை சுட்டெரித்த போது இந்த வார்த்தைகளை சொன்னார். இதன் மூலம் நாம் யூகிக்கக்கூடிய காரியம் என்னவென்றால் அன்றைய தினத்தில் அவர்கள் மது  அருந்தின காரணத்தினால்  தேவன் அங்கீகரிக்காத அந்த அக்கினியை தேவ சமூகத்திற்கு கொண்டு வந்தார்கள் என்று நாம் அறிந்து கொள்ளலாம். எனவே தான் இந்தக் கட்டளையை ஆரோனுக்கு  அவனுக்கு பின்னால் தலைமை பொறுப்பை ஏற்கக்கூடிய  பிள்ளைகளை குறித்து இந்த வார்த்தைகளை சொன்னார். காரணம் இந்த நாதாபும் அபியூவும்  யார் என்றால் இவர்கள் தேவனை தரிசித்தவர்கள். சாதாரண ஆட்கள் அல்ல. யாத் 24:1-14 தேவனை தரிசித்தவர்களே  மது போதையினால்( Under the influence of liquor)தேவனுக்குப்  பிரியம் இல்லாத காரியத்தை செய்தார்கள் என்றால் எவ்வளவு தேவனை குறித்து பயமில்லாமல் அவர்கள் இருந்திருப்பார்கள். நாம் உணர்ந்து கொள்ளக்கூடிய எச்சரிப்பு என்னவென்றால் நிற்கிற எவனும் விழாதபடிக்கு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 1 கொரி10:12. எப்பொழுதும் எபே 5:18 ஐ பின்பற்ற வேண்டும் துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து காணப்பட வேண்டும். மிகப்பெரிய ஆவிக்குரிய உயர்ந்த அனுபவங்கள், தரிசனங்களை நாம் பெற்றிருந்தாலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் பரிசுத்தத்தைக் காத்துக் கொள்ள நம்மால் முயன்றதை செய்ய வேண்டும். இதுவே தேவன் ‌நம்மிடம்  எதிர்பார்க்கும் காரியம். நாம் பெற்ற அனுபவங்கள் நம்மை பரலோகத்திற்கு கொண்டு செல்லாது . நாம் வாழ்ந்த வாழ்க்கை தான் நம்மை விண்ணகத்திற்கு அழைத்து செல்லும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஆரோனின் மௌனமும் மோசேயின் அமைதியும்

ஆரோனின் மௌனமும் மோசேயின் அமைதியும் படிக்க லேவியராகம் 10வது அதிகாரம். ஆரோன் பேசாதிருந்தான். லேவியராகமம் 10:3 மோசே அதைக் கேட்டபோது அமைதலாயிருந்தான். லேவியராகமம் 10:20 ஆசரிப்புக் கூடாரம் உருவாக்கப்பட்டு முதல் பிரதான ஆசாரியன் ஆரோன் தனக்காகவும் ,தன் ஜனங்களுக்காகவும் பலிகளை செலுத்தி அந்த பலிகளை ஆண்டவர் ஏற்றுக்கொண்டு அதன் நிமித்தம் ஆரோன் ஜனங்களை ஆசீர்வதித்தான். அந்த நிகழ்வு மிகப்பெரிய ஒரு துவக்கத்தின் ஆரம்பம். கர்த்தரிடமிருந்து நெருப்பு புறப்பட்டு பலிபீடத்தில் இருந்த தகன காணிக்கைகளையும் கொழுப்பான பாகங்களையும் பட்சித்தது . மக்கள் மகிழ்ச்சியினால் ஆர்ப்பரித்தார்கள். மிகப்பெரிய சந்தோசத்தோடு முடிந்திருக்க வேண்டிய அந்த நாள் ஆனால் அடுத்த சில நொடிகளில் ஆரோனுடைய மகன்களான நாதாபும் அபியூவும் கர்த்தரால் அனுமதிக்க படாத நெருப்பை கர்த்தருக்கு செலுத்திய படியினால் கர்த்தருடைய சன்னிதானத்தில் இருந்து புறப்பட்ட நெருப்பு அவர்களை எரித்து போட்டது. தன்னுடைய இரண்டு மகன்கள் இறந்த அந்த வேளையில் தான் ஆரோன் பேசாமல் இருந்ததாக பார்க்கலாம். ஆரோன் பிரதான ஆசாரியனாக இருந்த காரணத்தினால் அவன் மகன்கள் இறந்த துக்கத்தை வெளிப்படுத்த அவனுக்கு அனுமதி இல்லை.லேவி 10:7 மகன்களுடைய பிணத்தை கூட அவனுடைய உறவினர்கள்தான் எடுத்துச் சென்றார்கள். ஆரோன் தன் உணர்வுகளை எல்லாம் அடக்கி தன் துக்கத்தை வெளிப்படுத்தவில்லை. காரணம் அது தேவனுடய கட்டளை. Aaron was not allowed to mourn the death‌ of his sons. அதே வேளையில் அந்த நாளில் இன்னொரு நிகழ்வும் நடந்தது. பாவ நிவாரண பலிக்காக கொண்டுவரப்படும் ஆடு பலியிடப்பட்டு அதனுடைய இரத்தம் பரிசுத்த ஸ்தலத்திற்குள் கொண்டுவரப்படாவிட்டால் அதை ஆசாரியன் பரிசுத்த ஸ்தலத்தில் சாப்பிட வேண்டும். அதே வேளையில் எந்தப் பாவநிவாரணபலியின் இரத்தத்தில் கொஞ்சம் பரிசுத்த ஸ்தலத்தில் பாவநிவிர்த்தியின்பொருட்டு ஆசரிப்புக்கூடாரத்திற்குள்ளே கொண்டுவரப்பட்டதோ, அந்தப் பலி புசிக்கப்படலாகாது, அது அக்கினியிலே தகனிக்கப்படவேண்டும் லேவியராகமம் 6:26,30 ஆனால் மோசே பாவ நிவாரண பலிக்காக கொண்டுவரப்பட்ட ஆடு பலியிடப்பட்டு அந்த ரத்தம் பரிசுத்த ஸ்தலத்திற்கு கொண்டுவரப்படாமல் எரிக்கப்பட்ட நிலையிலே இருந்ததை பார்த்தான். அதை ஆரோனும் அவனுடைய குமாரர்களும் சாப்பிட்டிருக்க வேண்டும் ஆனால் அவர்கள் அதை சாப்பிடவில்லை. லேவி10:16-30 இதனால்மோசே ஆரோன் மீது கோபம் கொண்டான் "பாவநிவாரணபலியை நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தில் புசியாமற்போனதென்ன? அது மகா பரிசுத்தமாயிருக்கிறதே, சபையின் அக்கிரமத்தைச் சுமந்துதீர்பதற்குக் கர்த்தருடைய சந்நிதியில் அவர்களுக்காகப் பாவ நிவிர்த்தி செய்யும்பொருட்டு, அதை உங்களுக்குக் கொடுத்தாரே என்று மோசே கூறினார். லேவியராகமம் 10:17 அதற்கு ஆரோன்கொடுத்த பதில் "அவர்கள் தங்கள் பாவநிவாரண பலியையும், தங்கள் சர்வாங்க தகனபலியையும் கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தின இன்றுதானே எனக்கு இப்படி நேரிட்டதே, பாவநிவாரணபலியை இன்று நான் புசித்தேனானால் அது கர்த்தரின் பார்வைக்கு நன்றாய் இருக்குமோ" லேவியராகமம் 10:19 இந்த பதிலைகேட்டு தான் மோசே அமைதியாக இருந்தான்.‌ இதன் மூலம் நாம் அறியக்கூடிய சத்தியங்கள். தேவனுடைய ஆசரிப்பு கூடாரத்தில் (Anointing) தேவனுடைய அருட்பொழிவு அவன் மீது இருந்த காரணத்தினால் தன் குமாரர்களின் மரணத்திற்காக தேவனின் கட்டளைப்படி அழவில்லை. ஆனால் அதே வேளையில். பாவ நிவாரண பலியை சாப்பிடாமல் இருந்தது அவனுடைய துக்கத்தை உணர்த்துவதாக இருந்தது. அந்த உணர்வை தேவன் புரிந்து கொண்டார். அந்த துக்க நேரத்தில் அவன் எப்படி சாப்பிட முடியும்.? சாப்பிடாமல் இருந்தது தேவனுடைய கட்டளையை மீறிய செயல் அல்ல. இயந்திரமாக(mechanically) எந்த ஒரு ஊழியத்தையும் செய்ய தேவன் அனுமதிப்பதில்லை. நம்முடைய தேவன் உணர்வுகளின் தேவன். எனவேதான் மோசே இந்த பதிலைக் கேட்டு திருப்தி அடைந்து அமைதலாக இருந்தான். Our god is a God of human feeling. எனவேதான் அவர் மனிதனாக இந்த உலகத்தில் அவதரித்தார்..

தேவனுடைய திட்டத்தை தன் கையில் எடுத்த ரெபேக்காள்.

தேவனுடைய திட்டத்தை தன் கையில் எடுத்த ரெபேக்காள். குழந்தைகள் வயிற்றில் இருக்கும் போதே அவர்களைப் பற்றி தேவனிடம் விசாரித்து தெளிவான வெளிப்பாட்டை பெற்றுக் கொண்டவள் இந்த ரெபேக்காள். இளையவன் மூத்தவனை ஆண்டு கொள்வான் என்பதை தெளிவாக அறிந்தவள். ஆனால் அந்த காலம் வரும் வரை காத்திருக்காமல் ஈசாக்கு ஈசாவை ஆசீர்வதிக்க போகிறான் என்பது அறிந்து யாக்கோபை வற்புறுத்தி, பொய் சொல்ல வைத்து, தன் கணவனை ஏமாற்றி, அதற்குரிய முழு பழியையும் தான் ஏற்றுக் கொள்வதாக சொல்லி, தேவனுடைய காலத்திற்கு முந்தி யாக்கோபை Promote செய்ய முயற்சி செய்தாள் . விளைவு அந்த முன்னேற்றத்தை கண்ணால் கூட பார்க்க முடியவில்லை. யாக்கோபை வெளியேற்றின பிறகு தன் அன்பு மகனை தான் மரிக்கு மட்டும் பார்க்கவில்லை. கற்றுக் கொள்ளக்கூடிய காரியம். மனித ஞானத்தின் படி மனித உணர்வின் அடிப்படையில் நாம் யாருக்காவது உதவி செய்தால் அது நமக்கு பாதகத்தை ஏற்படுத்தி விடும். இரண்டு நாம் அவர்களுக்கு செய்யும் உதவியின் பலனை அனேக நேரங்களில் நாம் பார்க்க முடியாமல் போய் விடும். உதவி,(Help,) செய்வது என்பது வேறு ,ஒருவனை மனித ஞானத்தின் படி முன்னேற்றுவது என்பது வேறு. உதவி செய்வது நம்முடைய கடமை. மற்றவர்களை முன்னேற்றுவது தேவனுடைய உரிமை. We can only help other.But it is God who can promote us.

யாக்கோபின் மிகப்பெரிய தவறு .

உங்கள் சிந்தனைக்கு: யாக்கோபின் மிகப்பெரிய தவறு . யாக்கோபு தன் அண்ணனுடைய பிறப்புரிமையை தந்திரமாக பெற்றது தவறு. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவன் தாயின் சொல்லைக் கேட்டு, தாயினுடைய வற்புறுத்தலுக்கு அடிபணிந்து, தவறான வழிகளை பின்பற்றி, தன் தகப்பனையே ஏமாற்றி, தன்னுடைய அடையாளத்தை மாற்றி, ,பொய்களுக்கு கடவுளின் பெயரை இழுத்து, கடவுளின் பயம் இல்லாமல் தகப்பனின் ஆசிர்வாதத்தை பெற்றதுதான் மிகப்பெரிய தவறு. தாய் சொல்கிற காரியம் மிகப்பெரிய ஏமாற்று வேலை என்று தெரிந்தும், அதை தடுத்து, நிறைவேற்றாமல் இருக்க மனமில்லாமல் ஆசிர்வாதத்திற்காக கடவுளின் நேரத்திற்காக காத்திராமல் காலத்திற்கு முந்தி மனித முயற்சியில் தகப்பனின் ஆசிர்வாதத்தை பெற முயற்சித்தது அவனுடைய மிகப்பெரிய வீழ்ச்சி. கற்றுக் கொள்ளக் கூடிய ஒரு காரியம் என்னவென்றால் எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும், ஆவிக்குரிய தகப்பன்மார்கள் என்று சொல்லிக் கொண்டாலும், தாயாக இருந்தாலும், தந்தையாக இருந்தாலும் வேதத்திற்கு புறம்பாக, சட்டங்களுக்கு மாறாக செயல்பட நிர்பந்திக்கும் எந்த செயலையும் நாம் எதிர்த்து நிற்க தயாராக இருக்க மன தைரியம் வேண்டும். இல்லை என்றால் நாமும் எப்படி யாக்கோபு லாபான் மூலமாக ஏமாற்றப்பட்டனோஅதற்கு பன்மடங்கு நாமும் ஏமாற்றப்படுவோம். கர்த்தர் நீதியுள்ளவர் . யாக்கோபு தன் அண்ணனுடைய பிறப்புரிமையை தந்திரமாக பெற்றது தவறு. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவன் தாயின் சொல்லைக் கேட்டு, தாயினுடைய வற்புறுத்தலுக்கு அடிபணிந்து, தவறான வழிகளை பின்பற்றி, தன் தகப்பனையே ஏமாற்றி, தன்னுடைய அடையாளத்தை மாற்றி, ,பொய்களுக்கு கடவுளின் பெயரை இழுத்து, கடவுளின் பயம் இல்லாமல் தகப்பனின் ஆசிர்வாதத்தை பெற்றதுதான் மிகப்பெரிய தவறு. தாய் சொல்கிற காரியம் மிகப்பெரிய ஏமாற்று வேலை என்று தெரிந்தும், அதை தடுத்து, நிறைவேற்றாமல் இருக்க மனமில்லாமல் ஆசிர்வாதத்திற்காக கடவுளின் நேரத்திற்காக காத்திராமல் காலத்திற்கு முந்தி மனித முயற்சியில் தகப்பனின் ஆசிர்வாதத்தை பெற முயற்சித்தது அவனுடைய மிகப்பெரிய வீழ்ச்சி. கற்றுக் கொள்ளக் கூடிய ஒரு காரியம் என்னவென்றால் எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும், ஆவிக்குரிய தகப்பன்மார்கள் என்று சொல்லிக் கொண்டாலும், தாயாக இருந்தாலும், தந்தையாக இருந்தாலும் வேதத்திற்கு புறம்பாக, சட்டங்களுக்கு மாறாக செயல்பட நிர்பந்திக்கும் எந்த செயலையும் நாம் எதிர்த்து நிற்க தயாராக இருக்க மன தைரியம் வேண்டும். இல்லை என்றால் நாமும் எப்படி யாக்கோபு லாபான் மூலமாக ஏமாற்றப்பட்டனோஅதற்கு பன்மடங்கு நாமும் ஏமாற்றப்படுவோம். கர்த்தர் நீதியுள்ளவர்

Our faith  should not be selective.

விசுவாசத்தினால் வராத எதுவும் பாவமே .ரோம14:23 ஆபேலின் விசுவாசம் ஆராதனையில் காணப்பட்டது. ஏனோக்கின் விசுவாசம் தேவனுடைய உறவில் வெளிப்பட்டது. நோவாவின் விசுவாசமோ முழுமையான கீழ்ப்படிதலில் காணப்பட்டது. விசுவாசம் என்பது நம்முடைய கஷ்ட நேரங்களில், ஆபத்துகளில், ஊழியக்காரியங்களில், நாம் நோய்வாய்ப்பட்டிருக்கும் நேரங்களில் ,நம்முடைய வறுமையில் மட்டும் வெளிப்படுகிற காரியமாக இருக்கக் கூடாது. நம்முடைய விசுவாசம் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் 'அ 'முதல் 'ஃ‌' வரை இருக்க வேண்டும். விசுவாசத்தினால் வராத எதுவும் பாவமே .ரோம14:23 ‌அப்படி என்றால் என்ன அர்த்தம்? 100% தேவன் மீதும் தேவனுடைய வார்த்தையின் மீதும் ‌நம்பிக்கை வைக்காமல் ,விசுவாசம் வைக்காமல் நாம் செய்கின்ற எந்த வேலையும், எந்த ஊழியமும், எந்த உறவு முறைகளும், எந்த நட்பும், நாம் எதிர்பார்க்கும் எந்த முன்னேற்றமும் வளர்ச்சியும் பாவமே. எப்படி அன்பு  ஒரு முழு பரிமாணத்துடன் செயல்பட வேண்டுமோ அதுபோல் விசுவாச வாழ்க்கையும் ஒரு முழுமையான பரிமாணத்துடன் நம் வாழ்க்கையில் காணப்பட வேண்டும். Our faith  should not be selective.

கீழ்படிதல்

: கீழ்படிதல் இஸ்ரவேல் ஜனங்கள் கானானை சென்றடைவதற்கு கர்த்தர் வழிநடத்தின விதத்தை எண்ணாகமம் புத்தகம் ஒன்பதாவது அதிகாரத்தில் பார்க்கலாம் இஸ்ரவேல் ஜனங்கள் கானன் சென்றடையும் வரைக்கும் அவர்கள் வனாந்திர வாழ்க்கை வாழ்ந்தார்கள். தேவன் வாக்குத்தத்தம் பண்ணின இடத்தை அடைவதற்கு ஏறக்குறைய 40 ஆண்டுகள் எடுத்துக் கொண்டார்கள். அவர்களுடைய கீழ்ப்படியாமையினாலே தேவன் அவர்களை இந்த வாழ்க்கைக்கு ஒப்புக்கொடுத்தார். ஆனாலும் அந்த வாழ்க்கையிலே தேவன் அவர்களை நடத்தினார். பொதுவாக பகலிலே மேகமானது சாட்சியின் கூடாரமாகிய வாசஸ்தலத்தை மூடிக்கொண்டிருக்கும். சாயங்காலமானபோது, வாசஸ்தலத்தின்மேல் அக்கினிமயமான ஒரு தோற்றம் உண்டாகும். அது விடியற்காலமட்டும் இருக்கும். எண்ணாகமம் 9:15 இப்படி நித்தமும் இருக்கும். பகலில் மேகமும், இரவில் அக்கினித்தோற்றமும் அதை மூடிக்கொண்டிருக்கும் எண்ணாகமம் 9:16 அதே வேளையில் மேகம் கூடாரத்திலிருந்து மேலே எழும்பும்போது இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணுவார்கள். மேகம் தங்குமிடத்தில் இஸ்ரவேல் புத்திரர் பாளயமிறங்குவார்கள். எண்ணாகமம் 9:17 மேகம் என்பது கர்த்தருடைய வழிநடத்துதலை காண்பிக்கும். இஸ்ரவேல் மக்கள் கர்த்தருடைய வழிநடத்துதலின்படி கானானுக்குள் சென்றார்கள். நாமும் கூட இந்த ஆவிக்குரிய கூடார பயணத்தில் கர்த்தருடைய வழி நடத்துதல் இன்றி நாம் பரம கானானை அடைய முடியாது. அவர்கள் அந்த வழி நடத்துதலுக்கு கீழ்ப்படிந்த காரணத்தினால் இலக்கை அடைய முடிந்தது. இன்றைக்கு நமக்கு பரிசுத்த ஆவியானவர் வழிகாட்டியாக இருக்கிறார். ரோம் 8:26,27 பரிசுத்த வேத வார்த்தைகள் நமக்கு வெளிச்சமாக இருக்கிறது.சங் 119:105 நமக்காக பரிந்து பேசுகிற பிரதான ஆசாரியராக இயேசு கிறிஸ்து இருக்கிறார். இஸ்ரவேல் மக்கள் தரிசித்து நடந்தார்கள். ஆனால் நாம் விசுவாசித்து நடக்கிறோம். நமக்கு வெளிச்சமாய் இருக்கிற வேத வார்த்தைகள் ஆண்டவரை அறியாத மக்களுக்கு இருளாக காணப்படும். வனாந்தரத்தில் இதுதான் நடந்தது. இஸ்ரவேல் மக்களுக்கு உண்டானவெளிச்சம் எகிப்தியர்களுக்கு இருளாக காணப்பட்டது.யாத் 14:29,30. நாம் எந்த அளவுக்கு அவருடைய சத்தத்திற்கு, வார்த்தைக்கு, கீழ்ப்படிந்து நடக்கிறமோ, விசுவாசித்து வாழ்கிறோமோ அந்த அளவுக்கு நம்முடைய வாழ்க்கை வெற்றியுள்ள வாழ்க்கையாக மாறும். இந்த அதிகாரத்தில் காணப்படும் ‌முக்கியமான ஒரு குறிப்பு என்னவென்றால், அது எண்ணா 9:21ம் 23ம் தான். " பகலிலாகிலும் இரவிலாகிலும் மேகம் எழும்பும்போது பிரயாணப்படுவார்கள். " எண்ணாகமம் 9:21 கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்குவார்கள். கர்த்தருடைய கட்டளையின்படியே பிரயாணம்பண்ணுவார்கள், எண்ணாகமம் 9:23 கர்த்தருடைய கட்டளைக்கு கீழ்ப்படிவதற்கு நேரம் காலம் என்று எதுவும் கிடையாது. கீழ்ப்படிதலை ஒத்தி வைக்கவும் கூடாது. கர்த்தருடைய கட்டளைக்கு கீழ்ப்படிய நமக்கு திறமைகள் தேவையில்லை . அவருடைய கட்டளைக்கு நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும். "It is not our ability .it is our availability." It is not our offering. It is our commitment and sacrifice. பலிகளை பார்க்கிலும் கீழ்ப்படிதலே முக்கியம். இந்த வனாந்திர வாழ்க்கையில் நமது கையில் உள்ள முக்கியமான திறவுகோல் கீழ்ப்படிதல் என்பது. தேவனுக்கு,தேவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிதல் என்கிற திறவுகோல் மூலமாக நாம் வெற்றி பயணத்தை சுலபமாக மேற்கொள்ளலாம். கர்த்தர் மகிமைப்படுவாராக

காலம் தாழ்த்திய கீழ்படிதலும் அதன் விளைவுகளும்

காலம் தாழ்த்திய கீழ்படிதலும் அதன் விளைவுகளும் காலம் தாழ்த்தி  கர்த்தருடைய கட்டளைக்கு கீழ்ப்படிந்த யாக்கோபும் அதனால் அடைந்த அவமானங்களும் . தேவன் யாக்கோபை நோக்கி பெத்தேலுக்கு  புறப்படு என்று சொன்ன போதும் அதை அவன் காலம் தாழ்த்தி நிறைவேற்றினான். ஆதி31:3ல் சொல்லப்பட்ட கட்டளைக்கு பிறகு ஏறக்குறைய 10 ஆண்டுகள் கழித்து ஆதி 35:1ல் தேவன் மறுபடியும் சொன்ன போதுதான் நிறைவேற்றினான். ‌ தன்னுடைய குற்றங்களை பெருந்தன்மையாக மன்னித்த ஏசாவை ஏமாற்றி அவனுடைய ஊருக்கு செல்லாமல் இடமாறி சுக்கோத்துக்கும் ,சீகோம் பட்டணத்திற்கும் சென்று பத்து வருடங்கள் காலங்கடத்தினான். விளைவு அவன்  மகள் தீனாள் அவமானப்பட்டாள். அதன் விளைவாக சிமியோன், லேவி அந்த பட்டணத்தில் ஆண்களை வஞ்சகத்தினால் கொலை செய்த பழிக்கும் ஆளானார்கள். ஆதி34ம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட நிகழ்வுகள் அனைத்தும் யாக்கோபின் உடனடி கீழ்படியாமையினால் நடந்த காரியங்கள். சுக்கோத் ,சீகோம் இடங்களின் செழிப்பு யாக்கோபின் தரிசனத்தை மாற்றியது.  தேவனுடைய கட்டளைக்கு உடனடியாக கீழ்ப்படியாமல் உடனடி தேவைகளை நிறைவேற்றும் படியாக  காலம் தாழ்த்தி பின்பு அவைகளினால் வரும் விளைவுகளை பார்த்து கீழ்ப்படிகிற காரியம் நம்முடைய வாழ்க்கையிலும் காணப்படுகிறது. ஆனாலும் தேவன் யாக்கோபின் மீது கொண்டிருந்த அனாதிதீர்மானத்தை தேவன் நிறைவேற்றியது போல நம்முடைய வாழ்க்கையிலும் நிறைவேற்றுவாராக. அழைத்தவர் உண்மையுள்ளவர். தியானிக்க. ஆதி28:3,33:17,18. மற்றும் 34 வது அதிகாரம்.

ஆவிக்குரிய வாழ்க்கையில் தேவையில்லாத உறவுகள்

உங்கள் சிந்தனைக்கு: ஆவிக்குரிய வாழ்க்கையில் தேவையில்லாத உறவுகள் இஸ்ரவேலர் எகிப்தை விட்டு புறப்பட்டபோது ஏறக்குறைய 20 லட்சம் பேர் சென்றனர். இவர்களோடு இஸ்ரவேலர் அல்லாத ஒரு கூட்டமும் சென்றது(A mixed multitude). இவர்கள் எதற்காக இஸ்ரவேலரோடு புறப்பட்டு வந்தார்கள் என்று நமக்கு தெரியாது. ஆனால் அவர்கள் இஸ்ரவேலருக்கு மிகப்பெரிய இடறலாக காணப்பட்டார்கள். எப்படி என்றால் ஆண்டவர் அவர்களுக்கு ‌அளித்த மன்னாவின் மீது ஒரு வெறுப்பை உண்டாக்கியவர்கள் இவர்கள்தான். இவர்கள் எகிப்தில் தாங்கள் உண்ட உணவை குறித்து இச்சை கொண்டார்கள். இதையே இஸ்ரவேலரும் பின் பாட்டு பாடி எகிப்தில் சாப்பிட்ட மீன், வெள்ளரிக்காய் வெள்ளைப் பூண்டு இவற்றை நினைத்து ஏங்கினார்கள். தேவன் வானத்திலிருந்து அளித்த மன்னாவை அலட்சியம் பண்ணி உணவுக்காக கூடார வாசலில் நின்று கதறினார்கள். இதைப் பார்த்து மோசே ஆண்டவரிடம் "நான் இவர்களைப் பெற்றேனா? என்னை கொன்றுவிடும் இந்த பாரத்தை என்னால் சுமக்க முடியாது "என்று விரக்தியில் ஆண்டவரிடம் புலம்பியதை பார்க்கலாம்‌. விரக்தியின் உச்ச கட்டத்திற்கே மோசே சென்று விட்டான். இதைப் பார்த்து ஆண்டவர் ஒரு காற்றை அனுப்பி கடலில் இருந்த காடை பறவைகளை அடித்து முகாம் முழுவதும் நிரப்பினார். அந்த காடைகளை இஸ்ரவேலர் விழுங்குவதற்கு முன்பாக கர்த்தருடைய கோபம் மூண்டு கொடிய கொள்ளை நோயினால் பாதிப்பை ஏற்படுத்தினார். இவ்வளவு பெரிய பாதிப்புக்கு அடித்தளமிட்டவர்கள் இஸ்ரவேலரோடு இணைந்து வந்த இஸ்ரவேலர் அல்லாத மக்கள்தான். . எப்பொழுதுமே நம்முடைய ஆவிக்குரிய பயணத்தில் கர்த்தருக்கு சித்தம் இல்லாதவர்கள், தேவையில்லாதவர்கள் நம்மோடு பயணிக்கும் போது அவர்கள் பல நேரங்களில் நமக்கு இடறலாக மாறிவிடுவார்கள். நம்மை தேவனுடைய சித்தத்தை விட்டு வழி விலக செய்து விடுவார்கள். நம்மை கொண்டு கர்த்தர் கொண்டிருக்கும் சித்தத்தை செயல்படுத்த விடாமல் தடுத்து விடுவார்கள் . சில நேரங்களில் பாவங்களுக்கு நேராக வழி நடத்துவார்கள். எனவே நம்மோடு ஆவிக்குரிய பயணத்தில் நம்மோடு பயணம் செய்பவர்களை குறித்து நாம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் . எல்லா மனிதர்களும் நமக்கு ஆவிக்குரிய உதவி செய்பவர்கள் என்று எண்ணிவிட முடியாது . அதில் களைகளும் இருக்கும் இதே போல் தான் ஆபிரகாம் கர்த்தருக்கு சித்தம் இல்லாமல் எகிப்துக்கு சென்ற போது பார்வோன் அளித்த வெகுமதியில் வந்த வேலைக்கார பெண் ஆகார் மூலமாக தேவை இல்லாத சந்ததி உருவாயிற்று. எனவே நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் "ஆண்டவரே என் வாழ்க்கையில் தேவையில்லாத நட்புகளை, உறவுகளை, ஐக்கியங்களை அகற்றி விடும் "என்று ஜெபிப்பது அவசியமான ஒன்று. படிக்க யாத்12:38, எண்ணாகமம் 11வது அதிகாரம், ஆதி12:15,16

மன்னிப்பு

உங்கள் சிந்தனைக்கு: மன்னிப்பு கேட்பதில் இரண்டு வகைகள். சில பேர் மற்றவர்கள் தங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் இவர்கள் தவறு செய்யும் போது ஒருபோதும் மற்றவரிடம் மன்னிப்பு கேட்க மாட்டார்கள். இது பெருமையின் உச்சகட்டம் . மற்றொரு வகை சிலர் யாரிடம் தங்களுக்கு சலுகை கிடைக்குமோ,   உதவிகள்  கிடைக்குமோ, அவர்களிடம் மன்னிப்பு கேட்பார்கள். சிலர் பெரிய மனிதர்களிடம் தங்களை ஒரு தாழ்மையுள்ள மனிதர்கள் என்று  காட்டிக் கொள்வதற்காக அவர்களிடம் சென்று மன்னிப்பு எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்பார்கள். அவர்களோடு ஒப்புரவு அவார்கள். இது மிக பெரிய போலித்தனமான தாழ்மை. இவர்கள் காரியங்களை சாதிப்பதற்காக தாழ்மை என்ற முகமூடி அணிபவர்கள். ஆனால் இவர்கள் எவ்வளவு பெரிய தவறு செய்திருந்தாலும் அதனால் பாதிக்கப்பட்டவர்களிடம் தன்னைவிட, தன் நிலையை விட   எளிய மக்களிடம் அல்லது தங்களுக்கு உபயோகமில்லாத  மற்றவரிடம் ஒரு போதும் மன்னிப்பு கேட்க மாட்டார்கள். மன்னிப்பு என்பது மனதளவில் உணர்ந்து யாராயிருந்தாலும்  எந்த நிலையில் இருந்தாலும் தவறு என்று உணர்ந்தால் மன்னிப்பு கேட்பதுதான்  உண்மையான தேவனுடைய மனிதன். அவன்தான் உண்மையான தாழ்மையுள்ள மனிதன்.

மன்னிப்பு

உங்கள் சிந்தனைக்கு: மன்னிப்பு கேட்பதில் இரண்டு வகைகள். சில பேர் மற்றவர்கள் தங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் இவர்கள் தவறு செய்யும் போது ஒருபோதும் மற்றவரிடம் மன்னிப்பு கேட்க மாட்டார்கள். இது பெருமையின் உச்சகட்டம் . மற்றொரு வகை சிலர் யாரிடம் தங்களுக்கு சலுகை கிடைக்குமோ,   உதவிகள்  கிடைக்குமோ, அவர்களிடம் மன்னிப்பு கேட்பார்கள். சிலர் பெரிய மனிதர்களிடம் தங்களை ஒரு தாழ்மையுள்ள மனிதர்கள் என்று  காட்டிக் கொள்வதற்காக அவர்களிடம் சென்று மன்னிப்பு எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்பார்கள். அவர்களோடு ஒப்புரவு அவார்கள். இது மிக பெரிய போலித்தனமான தாழ்மை. இவர்கள் காரியங்களை சாதிப்பதற்காக தாழ்மை என்ற முகமூடி அணிபவர்கள். ஆனால் இவர்கள் எவ்வளவு பெரிய தவறு செய்திருந்தாலும் அதனால் பாதிக்கப்பட்டவர்களிடம் தன்னைவிட, தன் நிலையை விட   எளிய மக்களிடம் அல்லது தங்களுக்கு உபயோகமில்லாத  மற்றவரிடம் ஒரு போதும் மன்னிப்பு கேட்க மாட்டார்கள். மன்னிப்பு என்பது மனதளவில் உணர்ந்து யாராயிருந்தாலும்  எந்த நிலையில் இருந்தாலும் தவறு என்று உணர்ந்தால் மன்னிப்பு கேட்பதுதான்  உண்மையான தேவனுடைய மனிதன். அவன்தான் உண்மையான தாழ்மையுள்ள மனிதன்.

மன்னிப்பு

உங்கள் சிந்தனைக்கு: மன்னிப்பு கேட்பதில் இரண்டு வகைகள். சில பேர் மற்றவர்கள் தங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் இவர்கள் தவறு செய்யும் போது ஒருபோதும் மற்றவரிடம் மன்னிப்பு கேட்க மாட்டார்கள். இது பெருமையின் உச்சகட்டம் . மற்றொரு வகை சிலர் யாரிடம் தங்களுக்கு சலுகை கிடைக்குமோ,   உதவிகள்  கிடைக்குமோ, அவர்களிடம் மன்னிப்பு கேட்பார்கள். சிலர் பெரிய மனிதர்களிடம் தங்களை ஒரு தாழ்மையுள்ள மனிதர்கள் என்று  காட்டிக் கொள்வதற்காக அவர்களிடம் சென்று மன்னிப்பு எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்பார்கள். அவர்களோடு ஒப்புரவு அவார்கள். இது மிக பெரிய போலித்தனமான தாழ்மை. இவர்கள் காரியங்களை சாதிப்பதற்காக தாழ்மை என்ற முகமூடி அணிபவர்கள். ஆனால் இவர்கள் எவ்வளவு பெரிய தவறு செய்திருந்தாலும் அதனால் பாதிக்கப்பட்டவர்களிடம் தன்னைவிட, தன் நிலையை விட   எளிய மக்களிடம் அல்லது தங்களுக்கு உபயோகமில்லாத  மற்றவரிடம் ஒரு போதும் மன்னிப்பு கேட்க மாட்டார்கள். மன்னிப்பு என்பது மனதளவில் உணர்ந்து யாராயிருந்தாலும்  எந்த நிலையில் இருந்தாலும் தவறு என்று உணர்ந்தால் மன்னிப்பு கேட்பதுதான்  உண்மையான தேவனுடைய மனிதன். அவன்தான் உண்மையான தாழ்மையுள்ள மனிதன்.

மன்னாவின் மீது ஏற்பட்ட சலிப்பு

உங்கள் சிந்தனைக்கு: மன்னாவின் மீது ஏற்பட்ட சலிப்பினால் ஏற்பட்டகொள்ளை நோய் உணர்த்தும் பாடம்‌ என்ன ? இஸ்ரவேல் ஜனங்களுக்கு 40 வருட வனாந்திர வாழ்க்கையில் அவர்களுடைய சரீர உணவுக்காக கடவுள் வானத்திலிருந்து மன்னாவை பொழியப் பண்ணினார். அந்த மன்னாவை அவர்கள் அதிகாலையில் தேட வேண்டும். நேரம் கழித்து தேடினால் அந்த மன்னா  வெயிலினால் உருகிப் போய்விடும். இஸ்ரவேல் மக்கள் எகிப்தில் இருந்து விடுதலையாக்கப்பட்டு கானானைநோக்கி புறப்பட்ட  இரண்டு வருடங்களுக்குள்ளாகவே அவர்களுக்கு மன்னாவை குறித்து சலிப்புத் தட்டியது. மன்னா மூலம் பெற்றுக்கொண்ட சரீர பலத்தை  அலட்சியம் செய்து அவர்களோடு பயணம் செய்த இஸ்ரவேலர் அல்லாத அடிமைகளின் பேச்சைக் கேட்டு தங்களுக்கு இறைச்சி வேண்டும் என்று கேட்டார்கள். எண்ணா11:4 அவர்கள் இறைச்சியை இச்சித்தது கூட தவறு என்று கூட சொல்ல முடியாது . ஆனால் மன்னாவை மட்டம் தட்டி அதன் மேல் சலிப்பு ஏற்பட்டு இறைச்சியை கேட்டது தான் தவறு. இஸ்ரவேலர் எகிப்திலிருந்து விடுதலையாக்கப்பட்ட  நிகழ்வு விசுவாசிகள் பாவத்திலிருந்து விடுதலை ஆக்கப்பட்டு தேவனுடைய பிள்ளைகளாகமாறின நிகழ்வுக்கு அடையாளமாக இருக்கிறது. மன்னா என்பது புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து   வானத்திலிருந்து இறங்கி உலகத்திற்கு ஜீவனை கொடுத்த அப்பத்திற்கு அடையாளமாக இருக்கிறது .யோவா 6:33 அந்த ஜீவ அப்பம் இன்று வார்த்தையாக ,வேதமாக நம்முடைய கைகளில் இருக்கிறது. அன்றைக்கு இஸ்ரவேல் ஜனங்கள் மன்னாவின் மீது சலிப்பு ஏற்பட்டு இறைச்சியை கேட்டது போல இன்று நாம் வேதம் போதிக்கும் ஆரோக்கிய உபதேசங்களை கேட்பதற்கு மனதில்லாமல், வேதத்தை ஒதுக்கி வைத்துவிட்டு நம் செவிகளுக்கு தேவையான வினோதமான காரியங்களை நோக்கி ஓடுகிறோம் . நாம் இரட்சிக்கப்பட்ட மக்களாக இருக்கலாம். ஆவியின் அபிஷேகத்தை பெற்றுக் கொண்ட மக்களாக இருக்கலாம். ஆனால் வேதத்தை  தேடாமல், வேதத்தை தினமும் ஆராய்ந்து பார்க்காமல், அதை நேசிக்காமல் நாம் இருப்போம் என்றால்  இஸ்ரவேல் மக்கள் இறைச்சியை நோக்கி ஓடினது போல நாமும் வேறுவிதமான உபதேசங்களுக்கு நேராக நடத்தப்பட்டு விடுவோம். வேதத்தை தியானிக்காத, நேசிக்காத, அதன்படி நடக்காத எவரும்  தங்களுக்கு தேவன் வைத்த இலக்கை அடைய முடியாது. இஸ்ரவேலர் தேவனால் முன் குறிக்கப்பட்டவர்கள் . ஆனால் அவர்கள் மன்னாவின் மீது சலிப்படைந்து அவர்களோடு இணைந்து வந்த  அடிமைகள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு அவர்கள் பாணியில் இறைச்சியை கேட்டார்கள். அதுபோல நாமும்  வேதத்தை புறந்தள்ளிவிட்டு உலக மக்கள் விரும்புகின்ற காரியங்களை, ஆசீர்வாதங்களை இச்சைகளை நிறைவேற்றுகிற மக்களாக காணப்படக் கூடாது . அன்றைக்கு அந்த இஸ்ரவேலர் மன்னாவை புறக்கணித்த காரணத்தினால் கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்டார்கள். இன்றைக்கு வேதத்தை மறந்த திருச்சபை ஆவிக்குரிய கொள்ளை நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளது . செழிப்பின் உபதேசம், கிருபையை மட்டுப்படுத்தி கிரியை மேன்மை படுத்துகின்ற உபதேசங்கள், விசுவாசிகளை பரவசத்திற்கு நேராக நடத்தும் காரியங்கள், ஆன்மீகத்தோடு அரசியலை இணைக்கும் உபதேசங்கள், அரசியல் அதிகாரங்களை இச்சிக்கும் உபதேசங்கள் போன்ற கொள்ளை நோய்கள் சபைகளை பாழாக்கி கொண்டிருக்கிறது. இந்த ஆசிர்வாதங்களை உலக மக்கள் தேடுவதில் தவறில்லை. ஆனால் ஒளியின் ராஜ்யத்திற்கு சொந்தமான மக்கள் இருளின் ஆதிக்கத்திற்கு சொந்தமானவற்றை இச்சிப்பதுதான் பாவம் .

தேவனுடைய வார்த்தையை சந்தேகப்படுவது அவிசுவாசத்தின் முதல் படி..

உங்கள் சிந்தனைக்கு: தேவனுடைய வார்த்தையை சந்தேகப்படுவது அவிசுவாசத்தின் முதல் படி.. Unbelief is serious because it challenges the character of God and rebels against the will of God.W W.Wiersbe அவிசுவாசமென்பது மிகவும் ஆபத்தானது. ஏனென்றால் அது தேவனுடைய குணாதிசயங்களுக்கு சவால் விடுகிறது. அது தேவனுடைய சித்தத்தை நாம் செய்யவிடாமல் தடுத்துவிடும். கடவுள் தம்மைத் தேடுகிறவர்களுக்கு உண்மை உள்ளவராக இருக்கிறார் என்பது தேவனுடைய அடிப்படை குணங்களில் ஒன்று. God is faithful தம்மை நம்புகிற மக்களை அவர் கைவிடுவதில்லை என்பது அதனுடைய விளக்கம். ஆனால் அவிசுவாசம் என்பது தேவனுடைய குணாதிசயத்திற்கு சவால் விடுகிறது. நாம் பிரச்சனைகளை சந்திக்கும் போதும், நெருக்கடிகளை சந்திக்கும் போதும், ஆபத்துகளை எதிர்நோக்கி இருக்கும்போதும், எல்லோராலும் கைவிட்ட நிலையில் இருக்கும் போதும் இறைவன் நம்மை கைவிட்டு விட்டார் என்று நமக்கு எதிராளியான சாத்தான் சொல்லுவான். இதற்கு மேல் முன்னேற்றம் இல்லை என்று சொல்லுவான். நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை இத்தோடு முடிந்து விட்டது என்று பயமுறுத்துவான். ஆனால் நாம் தேவன் உண்மையுள்ளவர் என்கிற அந்த அடிப்படை பண்பை, குணாதிசயத்தை உறுதியாக நம்பும்போது நம்மில் அவிசுவாசம் ஒருபோதும் தோன்றாது. இஸ்ரவேல் ஜனங்கள் 6,03,548 பேர் மடிந்தது இந்த அவிசுவாசத்தினால்தான். தேவன் நம்மை கானானுக்கு அழைத்துச் செல்வார் என்கிற அவருடைய உண்மையை அவர்கள் நம்பவில்லை. அவர்கள் முதலில் தேவனுடைய வாக்குறுதியை சந்தேகித்தார்கள். அது அவர்கள் வீழ்ச்சிக்கு முதல் ஆரம்பம். ‌ அவர்களின் இனத்தலைவர்கள் பத்து பேர் சொன்னதை முழுமையாக அவர்கள் நம்பினதால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய கானானை மயிரிழையில் தவற விட்டு விட்டார்கள். தேவனுடைய வாக்குறுதியை, கடந்த கால தேவனுடைய பாதுகாப்பை விசுவாசித்து நடக்காமல் கானானுக்கு நேரில் பார்த்து வந்த காட்சிகளை கண்டு பயந்து அவிசுவாசித்தினால் தேவனுக்கு விரோதமாக கலகம் செய்தார்கள். விளைவு 40 வருட வனாந்தர‌ வாழ்க்கை யில் கலகம் செய்த அத்தனை பேரும் மடிந்து போனார்கள். அடுத்தது அவிசுவாசமென்பது தேவசித்தம் செய்யாமல் நம்மை தடுத்துவிடும். யூதர்கள் தேவன் சொன்ன வாக்குறுதியை சந்தேகப்படாமல் நம்பி இருந்தால் அவர்கள் தேவ சித்தம் செய்து கானானை அடைந்திருப்பார்கள். அந்த அவிசுவாசம் அவர்களை தேவனுடைய சித்தம் செய்யாமல் தடுத்து விட்டது. அதுபோல்தான் நம்முடைய வாழ்க்கையில் காண்கிற காட்சிகளைக் அடிப்படையாக வைத்து ‌தேவனை நம்பாமல் இருக்கும் பொழுது அனேக வேளைகளில் தேவ சித்தத்தை விட்டு விலகி தேவதிட்டத்தை நம்முடைய வாழ்க்கையில் நிறைவேற்ற தவறவிடுகிறோம். வேதம் சொல்லுகிறது போல விசுவாசம் இல்லாமல் தேவனுக்கு பிரியமாக இருப்பது இயலாத காரியம். முதலில் சந்தேகம் அவிசுவாசமாக மாறும் . அவிசுவாசம் இறுதியில் தேவனுக்கு விரோதமான கலகமாக மாறும். எனவே சந்தேகம் என்கிற நச்சு விதையை முளையிலேயே கிள்ளி எறிந்தால் விசுவாச வாழ்க்கை செழிக்கும்.

ஆரோன் தண்டிக்கப்படாதது ஏன்?

உங்கள் சிந்தனைக்கு: ஆரோன் தண்டிக்கப்படாதது ஏன்? இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து மீட்டுக் கொண்டு வர தேவன் பயன்படுத்திய நபர்கள் மூன்று பேர் . ஆரோன் ,மிரியாம் மற்றும் மோசே ஆகிய இவர்களே இந்த மிரியாம் மோசேயை பார்வோனுடைய அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு காரணமாக இருந்தவள். இவள் தீர்க்கதரிசியாக காணப்பட்டாள். பார்வோனோடு பேசுகின்ற எல்லா சூழ்நிலைகளிலும் மோசேயின்  வாயாக திகழ்ந்தவன் ஆரோன். பின்னால் இவன் பிரதான மத குருவாக தெரிந்தெடுக்கப்பட்டான். இப்படி தேவனால் பயன்படுத்தப்பட்ட குடும்பத்தில் பொறாமை என்கிற காரியம் புகுந்து தேவனை மிகுந்த கோபத்திற்கு உள்ளாக்கியது. இதைப் பற்றிய சம்பவம் எண்ணாகமம் புத்தகம் 12 வது அதிகாரத்தில் காணப்படுகிறது. இவர்கள் மோசே மீது  சுமத்திய குற்றச்சாட்டை மேலோட்டமாக பார்க்கும் பொழுது அது சரியாக இருந்தாலும்,அது தவறு என்று சற்று ஆராய்ந்து பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். ஆனால் பிரச்சனை அதுவல்ல‌. ஆரோனும், மிரியாமும் பொறாமையின் அடிப்படையிலேயே மோசேக்கு விரோதமாக எழும்பினார்கள் என்பதுதான் நாம்  தெரிந்து கொள்ளக்கூடிய காரியம். அவர்கள் சொன்ன வார்த்தையை பாருங்கள் "கர்த்தர் மோசேயைக் கொண்டுமாத்திரம் பேசினாரோ, எங்களைக்கொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள். கர்த்தர் அதைக் கேட்டார்." எண்ணாகமம் 12:2 சடுதியிலே கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் மிரியாமையும் ஆசரிப்புக் கூடாரத்துக்கு அழைத்தார். "நீங்கள் என் தாசனாகிய மோசேக்கு விரோதமாய்ப் பேச, உங்களுக்குப் பயமில்லாமற்போனதென்ன" என்று சொல்லி அவர்களை கண்டித்தார். கர்த்தருடைய கோபம் அவர்கள்மேல் மூண்டது. விளைவு மிரியாம் உறைந்த மழையின் வெண்மைபோன்ற குஷ்டரோகியானாள். இந்த கலகத்தில்ஆரோன் தண்டிக்கப்படவில்லை. என்னதான்  இந்த கலகத்திற்கு மிரியாம் முக்கிய காரணமாக இருந்தாலும் இந்த  கலகத்திற்குஆரோனும் பொறுப்பாளிதான் அவன் சொன்னதை பார்ப்போம் “ஆரோன் மோசேயை நோக்கி: ஆ, என் ஆண்டவனே, நாங்கள் புத்தியீனமாய்ச் செய்த இந்தப் பாவத்தை எங்கள்மேல் சுமத்தாதிரும்.” இங்கு அவன் "நாங்கள்" என்று சொன்ன வார்த்தையை கவனிக்கவும். அவன் தண்டிக்கப்படாததற்கு காரணம் அவன் வகித்த பொறுப்பு அல்லது உழியம் என்று பல வேத பண்டிதர்கள் கூறுகிறார்கள். His position might have saved him from the humiliation that Miriam had to go through-. Believer's Bible commentary மிரியாமை போல குஷ்டரோகியாக மாறியிருந்தால் அவனுடய குருத்துவபணி பாதிக்கப்பட்டிருக்கும். அது இஸ்ரவேல் மக்களுக்கு மிகப்பெரிய இடறலாக மாறி இருக்கும். அதை தேவன் விரும்பவில்லை. இன்றைக்கும் நம்மில்  பலரை தேவன் கண்டிக்காமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் . நாம் வகிக்கிற ஊழியம், ஒரு வேளை இந்த பாதுகாப்பை அளிக்கலாம். நம்மை தண்டிப்பதின் மூலம் அவமானத்திற்கு உட்படுத்துவதன் மூலமாக நாம் செய்கின்ற ஒரு சில ஊழியங்கள் சில வேளை பாதிக்கப்படும் என்பதற்காக நமக்கு அளிக்கப்படும் தண்டனைகளை தவிர்த்து இருக்கலாம். அதனால் நாம் பெருமை அடையக் கூடாது. என்னதான் ஆரோன் குருத்துவ பணி செய்து தன் ஜனங்களுக்காக மன்றாட்டு ஜெபம் செய்தாலும், மக்களுக்காக கடவுளிடம் பரிந்து பேசும் ஊழியத்தைப் பெற்றாலும் அவன் இறுதியாக மோசேயிடம்  தனக்காக இறைவனிடம் மன்றாடும் படி கேட்டுக் கொண்ட‌ காரியம் தேவன் கொடுத்த தண்டனையாக எடுத்துக் கொள்ளலாம்.