2 நாளாகமம் / குறிப்பேடுகள் புத்தகம் வேதப் பாடம் – 21. தீர்க்கதரிசிகளின் எச்சரிக்கைகளை புறம்பே தள்ளிய யூதா அரசு
*உங்கள் சிந்தனைக்கு.
*
2 நாளாகமம் / குறிப்பேடுகள் புத்தகம்
வேதப் பாடம் – 21.
தீர்க்கதரிசிகளின் எச்சரிக்கைகளை புறம்பே தள்ளிய யூதா அரசு
. தேவனுடைய வாக்குத்தத்தமும் யூதா வம்சமும்
உலகத்தின் ரட்சகர் தாவீதின் வம்சத்தில் தோன்றுவது தேவனுடைய சித்தம்.
“செங்கோல் யூதாவைவிட்டு நீங்காது; சமாதானகர்த்தர் வருமளவும்”
(ஆதியாகமம் 49:10)
ஆனால் யூதாவை ஆளுவதற்காக கொடுக்கப்பட்ட இந்த ஆளுகையை
தாவீதின் வம்சாவழியினர் தங்கள் கீழ்ப்படியாமையால் இழந்தார்கள்.
யூதாவின் வீழ்ச்சி – ஒரே நாளில் அல்ல
யூதா அரசின் சிறைபிடிப்பு திடீரென்று நிகழவில்லை.
மூன்று நிலைகளில் வீழ்ச்சி ஆரம்பமானது.
அந்த மூன்று நிலைகளில் ஏதாவது ஒரு கட்டத்திலாவது மனம் திரும்பியிருந்தால்
அவர்களுடைய அரசாட்சி தொடர்ந்திருக்க வாய்ப்பு இருந்தது.
ஆனால் அவர்கள் இறுதிவரை தீர்க்கதரிசிகளின் எச்சரிக்கைகளை புறக்கணித்தார்கள்.
முதல் முற்றுகை – கி.மு. 605
ஆட்சி காலம் : யோயாக்கீம் (Jehoiakim)
நேபுகாத்நேசர் மூலம்
எருசலேம் சிறைபிடிக்கப்பட்டது
ஆலயத்தின் பரிசுத்த பொருட்கள் பாபிலோனுக்கு கொண்டு செல்லப்பட்டன
தானியேல் உள்ளிட்டோர் சிறைபிடிக்கப்பட்டனர் (தானி. 1:1)
தீர்க்கதரிசிகள் :
எரேமியா (முக்கியமானவர்)
உரியா
எரேமியா எச்சரிக்கை:
“இந்த நகரத்தை சாபமாக்குவேன்” (எரே. 26:6)
யோயாக்கீம்:
எரேமியாவைத் துன்புறுத்தினான்
தேவனுடைய வார்த்தையுள்ள
சுருளையும் எரித்தான் (எரே. 36)
முதலாவது முற்றுகை முடிந்த பிறகும் யூத மக்கள் தங்கள் வழிகளை விட்டு மனம் திரும்பவில்லை.
இரண்டாவது முற்றுகை – கி.மு. 597
யூதாவின் அரசன்: யோயாக்கீன் (Jehoiachin)
? 2 ராஜாக்கள் 24:10–12.
எருசலேம் மீண்டும் முற்றுகையிடப்பட்டது
யோயாக்கீன் சரணடைந்தான்
எசேக்கியேல் சிறைபிடிக்கப்பட்டார்
⚠️ இருந்தும் ஜனங்கள் மனம் திரும்பவில்லை.
இரண்டாம் முற்றுகைக்கும் கடைசி முற்றுகைக்கு உள்ள கால இடைவெளி 9
*வருடங்கள்.
இந்த கால இடைவெளியிலும்* யூத மக்கள் கர்த்தரிடம் திரும்பவில்லை.
இறுதி முற்றுகை – கி.மு. 586
அரசாட்சி செய்தவன் சிதேக்கியா (Zedekiah)
(யோசியாவின் மகன்)
? 2 நாளாகமம் 36:12–1
இவனுடைய ஆட்சி காலத்திலும் மக்கள் மனம் திரும்பவில்லை
இதைப் பற்றி காரியங்களை 2 நாளாகமம் 36:13-16 வரை உள்ள வசனங்களில் நாம் பார்க்கலாம்.
“அவன் கர்த்தருடைய வாக்கை உரைத்த எரேமியாவுக்கு முன்பாக
தன்னைத் தாழ்த்தவில்லை.”
? 2 ராஜாக்கள் 25:1, 8–9
இறுதி முற்றுகையில்
எருசலேம் முழுமையாக அழிக்கப்பட்டது.
தேவனுடைய ஆலயம் தீக்கிரையாக்கப்பட்டது
யூதா அரசாட்சி முடிவுக்கு வந்தது.
இந்த மூன்று முற்றுகைகளையும் நடத்தியவன்
பாபிலோன் ராஜா நேபுகாத்நேசர்.
அப்பொழுது இழந்த அரசாட்சியயை யூதா வம்சம் மீண்டும் பெறவில்லை.
யூதா வம்சம்:
*தேவனுடைய இரக்கத்தை அலட்சியம் செய்தது
கிருபையை புறம்பே தள்ளியது*
அரசாட்சியை நிரந்தரமாக இழந்தது.
*நமக்கான ஆவிக்குரிய பாடம்
தேவன் இன்று கூட:
பல்வேறு தருணங்களில்
பல்வேறு முறைகளில்
பல்வேறு எச்சரிக்கைகளின் மூலம்
நம்மைத் திரும்ப அழைக்கிறார்.
ஆனால் நாம்:
முரட்டாட்டம் செய்யக்கூடாது
கிருபையை அலட்சியம் செய்யக்கூடாது
? எபிரேயர் 10:29
“கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன்
எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான்!”
? தேவனுடைய
முன்னறிவு என்பது உண்மைதான்
? *அதை காத்துக் கொள்ளும் பொறுப்பு நம்மிடமும் உள்ளது
✨ முடிவுச் சிந்தனை
எச்சரிக்கை = அழிவு அல்ல*
எச்சரிக்கை = திரும்புவதற்கான கடைசி கிருபை
? *யூதா அதை தவற *விட்டது போல
? நாம் தவற விடக்கூடாது.**
எசக்கியேல் சண்முகவேல்* .