Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

எஸ்றாவின் புத்தகம். வேத பாடம் 2. யார் இந்த சேஸ்பாத்சார்?
உங்கள் சிந்தனைக்கு .

எஸ்றாவின் புத்தகம்.
வேத பாடம் 2.

யார் இந்த சேஸ்பாத்சார்?

வேத புத்தகத்தில் சில நபர்கள் முக்கியமான பணிகளை செய்தி ருந்தாலும் அவர்களைப் பற்றி நாம் அதிகம் தியானிக்காமல் கடந்து விடுகிறோம்‌.

அப்படிப்பட்ட ஒரு நபர் தான் இந்த சேஸ்பாத்சார். இவர் யார் என்றால் பெர்சியா அரசன் கோரோசு (Cyrus) காலத்தில் வாழ்ந்த ஒரு முக்கியமான யூத தலைவன்.

பாபிலோன் சிறைவாசத்துக்குப் பிறகு, எருசலேமுக்குத் திரும்பிய முதல் யூதக் குழுவின் தலைவராக வேதாகமம் அவரைக் குறிப்பிடுகிறது.

சேஸ்பாத்சார் பற்றி நேரடியாக குறிப்பிடப்படும் வசனங்கள்:
எஸ்றா 1:8–11
எஸ்றா 5:14–16
இதைத் தவிர வேறு எந்த இடங்களிலும் இவரைப் பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை.

கோரோசு அரசனால் நியமிக்கப்பட்ட ஆளுநர் இவர்.

வேதாகமத்தில் அவர்
“யூதாவின் அரசகுமாரன்” (Ezra 1:8) “ஆளுநர் (Governor)” (Ezra 5:14)
என்று அழைக்கப்படுகிறார்.

நேபுகாத்நேச்சார் எருசலேமில் இருந்து பாபிலோனுக்குக் கொண்டு சென்ற
பொன், வெள்ளி பாத்திரங்களை
கோரோசு அரசன் சேஸ்பாத்சாரிடம் ஒப்படைத்தார்.
அவற்றை அவர் எருசலேமுக்கு மீண்டும் கொண்டு வந்தார்.
எஸ்றா 5:16 படி,
எருசலேம் தேவாலயத்தின் சீர்திருத்த பணிகளுக்கு முக்கியமானவராக இருந்தவர்
சேஸ்பாத்சார்.

சேஸ்பாத்சாரும் செருபாபேலும் ஒன்று என்று சொல்லக்கூடிய வேத பண்டிதர்களும் இருக்கிறார்கள்.

பல வேத அறிஞர்கள் கருதுவது:
சேஸ்பாத்சார் என்பது அவரது பெர்சிய/பாபிலோனிய பெயர்.

செருபாபேல் என்பது அவரது எபிரேய பெயர் என்று கூறுகிற அறிஞர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் இது உறுதிப்படுத்த முடியவில்லை. இவரது பணியின் சிறப்பை எப்படி புரிந்து கொள்ள வேண்டும்?
தேவனுடைய ஆலயத்தை கட்ட
பெர்சிய அரசன் கோரேஸின் மூலம் பெர்சிய அரசனின் இருதயத்தை கடவுள் ஏவினார்.
எஸ்றா 1:1.

இது கடவுளுடைய கிரியை‌.
என்னதான் கடவுள் தன் கிரியையை நடப்பிக்க முயன்றாலும் அதை நிறைவேற்றுவதற்கு தலைவர்கள் தேவை. அப்படி தேவன் தெரிந்து கொண்ட நபர் தான் இந்த சேஸ்பாத்சார்.
இவர்தான் முதல் முதலில் தேவனுடைய ஆலயத்தை கட்ட வேண்டுமென்கிற ஒரு பொறுப்பை பெற்றுக்கொண்டு விடுதலையாகி எருசலேமுக்கு சென்றவர்.

நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குக் கொண்டு சென்ற
பொன், வெள்ளி பாத்திரங்களை
கோரோசு அரசன் சேஸ்பாத்சாரிடம் ஒப்படைத்தான்.


பொருட்களின் பட்டியல் இதுவே:
தங்கத்தினாலான 30 தட்டுகள்,
வெள்ளியினாலான 1,000 தட்டுகள்,
வெள்ளியினாலான 29 கிண்ணங்கள்,
தங்கத்தினாலான 30 கிண்ணங்கள்,
வெள்ளியினாலான 410 கிண்ணங்கள்,
மற்றவை 1,000 பாத்திரங்கள்.
மொத்தம் 5,400
தங்கத்தினாலும் வெள்ளியினாலும் செய்யப்பட்ட பாத்திரங்களாகும். இவ்வளவு பெரிய செல்வத்தை பத்திரமாக எருசலேம் கொண்டு வந்தவர் இவர்

எஸ்றா 1:8-11.

எஸ்றா செருபாபேல் இவர்களின் பணிகளுக்கு முன்னோடியாக இருந்தவர்
இந்த சேஸ்பாத்சார்.

பாழடைந்து போன தேவாலயத்தை புதுப்பிக்க தேவன் கொடுத்த விருப்பத்தை தன்னில் பெற்றுக் கொண்டு தைரியமாக ஒரு பெரும் கூட்டத்தோடு எருசலேமுக்கு வந்த அந்த துணிச்சல் பாராட்டத்திற்குரியது.

முதல் படியை எடுத்து வைத்தவர் இவர்தான்.

ஏறக்குறைய 50000 நபர்களுடன் எருசலேமுக்கு சென்று எருசலேம் தேவாலயத்தை புதுப்பிக்கிற பணியில் முன்னோடியாக இருந்தார்.

எஸ்றா செருபாபேல்,யோசுவா‌, நெகேமியா ஆகிய இவர்களின் பணி எவ்வளவு முக்கியமானதோ அந்த அளவுக்கு முதல் படியை எடுத்து வைத்த இவருடைய பணியும் முக்கியமானது‌‌.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் சேஸ்பாத்சாரின் பணி என்பது நிர்வாகம் சம்பந்தமானது.

எஸ்றா செருபாபேல் யோசுவா‌ இவர்களின் பணி ஆவிக்குரிய காரியங்களுக்கு அடுத்தது என்று புரிந்து கொள்ளலாம்.

யாரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது தேவனுக்கு தெரியும். எவரும் உயர்ந்தவர் அல்ல.

எனவே எஸ்றாவை தியானிக்கும் அதே வேளையில் சேஸ்பாத்சாரையும் நாம் மறந்து விடக்கூடாது.