சமநிலையான தேவ ஊழியன் யார்
உங்கள் சிந்தனைக்கு!
“ சமநிலையான தேவ ஊழியன் யார் ?”
( Who is the * Balanced Minister of* God?)
? வாசிக்க: 2 தீமோத்தேயு 3:16–17
வேதத்தின் பயன்பாடுகளைப் பற்றி பவுல் அப்போஸ்தலர் இவ்வாறு எழுதுகிறார்:
“எல்லா மறைநூலும் தேவனாலே உந்தப்பட்டதாயிருக்கிறது; அது கற்பிப்பதற்கும், கண்டிப்பதற்கும், சீர்திருத்துவதற்கும், நீதியில் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளதாகும்.”
அதாவது, மறைநூல்
*உபதேசத்திற்கும்,
*கண்டிப்பிற்கும்,
சீர்திருத்தத்திற்கும்,*
*நீதியான வாழ்க்கைக்கான பயிற்சிக்கும்
பயனுள்ளதாக இருக்கிறது* .
இந்த நான்கு தேவைகளுக்காகத்தான் நமக்கு மறைநூல் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு ஊழியக்காரன் வேதத்தை எதற்காக மட்டும் பயன்படுத்தக் கூடாது?
1️⃣ வேதத்தை விசுவாசிகளின் ஆறுதலுக்காக மட்டும் பயன்படுத்தக் கூடாது.
2️⃣ கண்டிப்பான பிரசங்கங்களைத் தவிர்த்து, அவற்றை போதிக்காமல் இருக்கக் கூடாது.
3️⃣ விசுவாசிகளின் பக்தி வளர்ச்சிக்கான செய்திகளை ஆயத்தப்படுத்த வேதத்தை பயன்படுத்தத் தவறக் கூடாது.
4️⃣ இறைபற்றை ஒரு ஆதாயமாக அல்லது முதலீடாக கருதி, விசுவாசிகளின் சுய இச்சைகளுக்கும் விருப்பங்களுக்கும் ஏற்ப வேதத்தை மாற்றிப் பயன்படுத்தக் கூடாது.
? 2 தீமோத்தேயு 4:3
முடிவுரை
வேதத்தின் இந்த நான்கு வகையான பயன்பாடுகளையும் சமநிலையாக கையாளுகிறவனே
ஒரு உண்மையான சமநிலை ஊழியன்.