Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

யோபு புத்தகம்*– *Expository Commentary on the Book of Job.
*உங்கள் சிந்தனைக்கு.*

*யோபு புத்தகம்* –
*Expository Commentary on the Book of Job.*

*வேதபாடம் – 3*

யோபு வாழ்ந்த காலம்:
கிமு 2100–1800 காலப்பகுதிக்குள் இருக்கலாம் என்று பல அறிஞர்கள் கருதுகின்றனர். *அவன் வாழ்ந்த காலத்தில் கடவுளை தரிசித்ததாகவோ, கடவுளுடைய வார்த்தைகளைக் கேட்டதாகவோ, கடவுளை கனவில் கண்டதாகவோ எந்த* *குறிப்புகளும் காணப்படவில்லை.* அவனுக்கு மோசேயின் நியாயப்பிரமாணமோ, எழுத்துப்பூர்வமான வேதாகம வெளிப்பாடோ கிடைக்கவில்லை. *ஆனாலும் அவன் மனசாட்சியின் அடிப்படையில் கடவுளை விசுவாசித்தான்* . *ஆபிரகாம் போல கடவுளுடைய தரிசனத்தை பெற்றவனும் அல்ல* . இருந்தபோதிலும், கடவுள் ஒருவர் இருக்கிறார்; அவர் யார், எப்படிப்பட்டவர், என்னவாக இருக்கிறார் என்பதை சரியாகப் புரிந்து கொண்ட மனிதன்தான் யோபு.
தேவனைப் பற்றிய இந்த ஆழமான புரிதலைக் கொண்டிருந்த யோபு, கடுமையான பாடுகளின் நடுவிலும் தன் விசுவாசத்தில் நிலைத்திருந்ததால், வேதாகமத்தில் பாடுகளின் மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறான். அந்த யோபு தனது உத்தமத்தில் கடைசி மட்டும் நிலைத்திருந்தான்.
அவன் வாழ்ந்த நகரத்தில் மிகப்பெரிய சிறப்புமிக்க செல்வந்தராக காணப்பட்டான். அவன் குற்றமில்லாதவனும், நேர்மையானவனுமாய் இருந்தான். அவன் இறைவனுக்குப் பயந்து தீமையைவிட்டு விலகி நடந்த மனிதன். ஆனால் தேவன் சாத்தானுக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரத்தை அனுமதித்து யோபுவைச் சோதிக்க இடமளித்தார்.
J. Sidlow Baxter என்கிற மிகச்சிறந்த வேத அறிஞர் யோபு அனுபவித்த இழப்புகளை பின்வருமாறு சுருக்கமாகக் குறிப்பிடுகிறார்:
1.அவருடைய செல்வம்
2.அவருடைய பிள்ளைகள்
3.அவருடைய உடல்நலம்
4.அவருடைய மனைவியின் 5.ஐக்கியமும் ஆதரவும்
6.அவருடைய நண்பர்களின் அனுதாபமும் ஆறுதலும்
7.அவருடைய சுயமதிப்பும் கண்ணிய உணர்வும்
தேவனுடனான ஐக்கிய உணர்வும்
8.தேவனுடைய ஆட்சியின் நன்மை மற்றும் நீதியின் மீதான அவரது புரிதலும் பாராட்டும்
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், *யோபு தனது சோதனைகளில் இழந்தவை வெறும் செல்வமும் பிள்ளைகளும் மட்டுமல்ல. அவர் தனது உடல்நலத்தையும்,* *மனைவியின் ஆதரவையும், நண்பர்களின் அனுதாபத்தையும்,* *சுயமரியாதையையும், தேவனுடனான நெருக்கத்தின் உணர்வையும், மேலும் தேவனுடைய* *ஆட்சியின் நன்மை மற்றும் நீதியின் மீதான தனது புரிதலையும்* *இழந்தார்* .
வேதத்தில் எவ்வளவோ மனிதர்கள் பாடுபட்டு இருக்கலாம். ஆனால் *அவர்கள் பாடுகளுக்கும் யோபுவின் பாடுகளுக்கும் ஒரு மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.* *அவர்கள் பாடுகளின் காலம் ஒரு நீண்ட இடைவெளியாக இருக்கும்.* *வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டவர்களில், மிகக் குறுகிய காலத்தில் இவ்வளவு* *பலவிதமான இழப்புகளைச் சந்தித்தவர்களில் யோபு தனித்துவமானவராகத் தோன்றுகிறார்* .
இயேசு கிறிஸ்துவைத் தவிர வேதாகமத்தில் பாடுகளின் முன்மாதிரியாக யாரைக் குறிப்பிட வேண்டுமானாலும், யோபுவே முதன்மையான உதாரணமாக இருக்கிறார். அவரது பாடுகளின் ஆழமும், காரணம் தெரியாமல் அதைச் சகித்த பொறுமையும், வேதாகமத்தில் மிகவும் தனித்துவமானவை.
இன்றைக்கு நாம் வாழும் இந்த காலத்தில் நம்முடைய கைகளில் வேதாகமம் இருக்கிறது. இந்த வருடத்தின் 365 நாட்களும் கடவுளைப் பற்றிய தெளிவும் புரிதலும் நமக்கு வழங்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. நமக்குள் நம்மை வழிநடத்த பரிசுத்த ஆவியானவர் நம்முடைய உள்ளத்தில் ஊற்றப்பட்டு இருக்கிறார். அவர் நம்மோடு வசனங்கள் மூலமாக பேசிக் கொண்டிருக்கிறார். சில நேரங்களில் சிலருக்கு கனவுகள், தரிசனங்கள் மூலமாகவும் தம்மை வெளிப்படுத்துகிறார். நமக்கு ஆறுதல் சொல்ல சபை ஐக்கியம் இருக்கிறது.
இவ்வளவு இருந்தும் நாம் பாடுகளை சகிக்கும் போது நாம் எப்படி சகிக்கிறோம் என்பது நமக்கும் கடவுளுக்கும் தான் தெரியும். நாம் பாடுகளை எப்படி, எந்த மனநிலையில் ஏற்றுக்கொள்கிறோம் என்பதை கடவுளுக்கு மட்டுமே முழுமையாக வெளிச்சம்.
நாம் அனுபவிக்கும் பாடுகளில் பொறுமை, சகிப்புத்தன்மை, கர்த்தரைத் துதித்தல், அவருடைய இறையாண்மையை ஏற்றுக்கொள்கிற தன்மை, கர்த்தரிடம் நேர்மையாகக் கேள்விகளை முன்வைத்தாலும் அவரை விட்டுவிடாத தன்மை, மனதளவில் அவரிடமிருந்து தூரம் போகாத நிலைமை போன்ற காரியங்கள் நம்மிடத்தில் காணப்படுகிறதா என்பதை நாம் தான் உணர்ந்து கொண்டு வாழ வேண்டும்.
எந்தத் தெளிவான தேவ வெளிப்பாட்டையும், வேதாகம சத்தியத்தையும் பெற்றுக்கொள்ளாத அதே நேரத்தில் தன்னுடைய மனசாட்சியின் படி கடவுளை அறிந்த அந்த யோபு, தன்னுடைய பாடுகளை சகித்த விதம் உண்மையிலேயே மிகவும் உன்னதமானது. அவர் ஏன் என்று பல கேள்விகள் கேட்டாலும், தேவன் அவரை நிராகரிக்கவில்லை என்பதை நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
நமக்கு எல்லாமும் எல்லா காலத்திலும் கிடைக்க வேண்டும் என்கிற ஒரு வசதியான இடத்துக்குள் (Comfort Zone) இருக்க நினைக்கிறோம். யோபு புத்தகத்தை ஒரு கதையாக, ஒரு வரலாற்று நிகழ்வாக படிப்பதை விடுத்து, பாடுகளை எப்படி சகித்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான ஒரு " *Manual* " ஆக அதைப் பார்க்க நாம் எல்லோருக்கும் கடவுள் கிருபை தருவாராக.
ஒவ்வொருவருடைய பாடுகளும் வித்தியாசமானது. பாடுகளின் தன்மையை அளவிட முடியாது. *நாம் எவ்வளவு பாடுகள் அனுபவித்தோம் என்பதை உலகிற்கு உணர்த்த வேண்டிய* *அவசியமில்லை. விளம்பரம்* *செய்ய வேண்டிய அவசியம் இல்லை.*
*பாடுகளை வெளியே சொல்லாமல், விளம்பரப்படுத்தாமல், தனக்குத்தானே அனுபவித்துக்* *கொள்வதும் யோபுவின் வாழ்க்கை மூலம் நான் கற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பாடம். அவனுடைய நண்பர்கள் அவனை* *அணுகிய காரணத்தினால் தான் தனது பாடுகளை வெளிப்படுத்த வேண்டிய அவசியம்* *ஏற்பட்டது* . இல்லாவிட்டால் அவன் நகரத்தின் ஓரத்தில் தன்னை மறைத்துக்கொண்டு, கடவுள் தன்னை விடுவிக்கும் வரை அமைதியாகக் காத்திருப்பான் என்று நான் எண்ணுகிறேன்.
அதே நேரத்தில், வேதாகமத்தில் தாவீது, எரேமியா, பவுல் போன்றவர்கள் தங்களுடைய பாடுகளை வெளிப்படுத்தியதையும் நாம் காண்கிறோம். எனவே பாடுகளை பகிர்வது தவறு அல்ல. ஆனால் பாடுகளை விளம்பரப்படுத்தி சுய அனுதாபத்தை நாடாமல் இருப்பது ஒரு நல்ல பண்பாகும்.
பாடுகளை சிறப்பாக கையாளுவதும் ஒரு முறை. பாடுகளை விளம்பரப்படுத்தாமல் சுய அனுதாபத்தை நாடாமல் இருப்பதும் ஒரு முறை.

– எசேக்கியல் சண்முகவேல்