Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

எஸ்றா புத்தகம் –* *வேதபாடம் 1* *எஸ்றாவின்* *புத்தகமும் இன்றைய* *அரசியலும்.*
*உங்கள் சிந்தனைக்கு*
*எஸ்றா புத்தகம் –* *வேதபாடம் 1*

*எஸ்றாவின்* *புத்தகமும் இன்றைய* *அரசியலும்.*

கடவுள் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்ற பயன்படுத்தும் பாத்திரம், அவசியம் ஒரு விசுவாசியாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

கடவுள் யாரையும், எவரையும், எந்நேரத்திலும் தம்முடைய திட்டத்திற்காக பயன்படுத்த முடியும்.
“ஒரு விசுவாசியைக் கொண்டு மட்டும்தான் கர்த்தர் இந்த உலகில் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவார்” என்று வேதத்தில் எங்கும் தெளிவான ஆதாரம் இல்லை.

இஸ்ரவேலரின் வரலாற்றை நாம் கவனமாகப் படிக்கும் போது, தேவன் தம்மை அறியாத ஜாதிகளையும், அரசர்களையும் கொண்டு தம்முடைய சித்தத்தை நிறைவேற்றியிருக்கிறார் என்பதை அறிய முடிகிறது.

யூதா கோத்திரத்தைச் சிட்சிக்கவும் தண்டிக்கவும், தேவனை அறியாத பாபிலோனிய அரசன் *நேபுகாத்நேச்சாரை
“ *என்னுடைய* **ஊழியக்காரன்* ”
( *My Servant )* என்று தேவன் அழைத்தார். *(எரேமியா 25:9).*

தாம் தேர்ந்தெடுத்த யூதா கோத்திரத்தையும், சாலொமோன் கட்டிய ஆலயத்தையும் கூட, தேவன் அவனுடைய கைகளில் ஒப்புக்கொடுத்தார்.

ஆனால் அந்த பாபிலோனிய அரசாங்கம் தேவனுடைய இறையாண்மையை மதிக்காமல் தங்களை உயர்த்திக் கொண்ட போது, அவற்றை அழிக்க தேவன்,
“நான் வடக்கிலிருந்து ஒருவனை எழுப்பினேன்” என்று கூறினார்.

அந்த வடக்கிலிருந்து எழுப்பப்பட்ட அரசன் தான் கோரேஷ்.

தேவன் அவனை
*“என் மேய்ப்பன்” (My* *Shepherd* ) என்று அழைத்தார் *(ஏசாயா*44:28).*

அந்த அரசன் தான்:
யூதா கோத்திரத்தை பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து விடுதலையாக்கினான்.

அவர்களை எருசலேமுக்குத் திரும்ப அனுமதித்தான்.

ஆலயத்தை மீண்டும் கட்ட உதவி செய்தான். *(எஸ்றா* *1:1–4)*

பழைய ஏற்பாட்டுக் காலத்தில், எந்த அரசனை, எந்த நேரத்தில், எந்த நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டும் என்பதை தேவன் தாமே தீர்மானித்தார்.

அதுபோலவே, இன்றைக்கும்,
நமது தேசத்தில் எந்த அரசியல் கட்சியை எப்படி பயன்படுத்த வேண்டும்
எந்த ஆட்சியைக் கொண்டு யாரை அதிகாரத்தில் அமர வைக்க வேண்டும்
எந்த அரசாட்சியின் மூலம் தம்முடைய ஜனங்களுக்கு நீண்டகால பாதுகாப்பை அளிக்க வேண்டும்
தேவனுக்கு விரோதமாக கிரியை செய்யும் ஆட்சியை எவ்வாறு தவிர்க்க வேண்டும்
என்பதெல்லாம் முழுமையாக தேவனுடைய இறையாண்மையில் உள்ள காரியங்கள்.

இவற்றை மனித புத்தியால் யூகிக்க முடியாது.
எவ்வளவு பெரிய ஊழியக்காரனாலும் இதை முன்கூட்டியே கணித்து தீர்க்கதரிசனம் சொல்ல முடியாது.

இந்த உலகம் சாத்தானின் அதிகாரத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருந்தாலும்,
அதற்கு மேல் ஆட்சி செய்யக்கூடிய முழு வல்லமையும் நம்முடைய இறைவனுக்கே உண்டு.

ஆகையால், விசுவாசிகள்
சமநிலையோடு,
சார்பில்லாமல்
விவாதங்களில் சிக்காமல்
முன் கணிப்புகள் செய்யாமல்
தங்கள் விருப்பப்படி தீர்க்கதரிசனம் சொல்லாமல்
தேவனை நோக்கி விண்ணப்பம் செய்வதே நமக்கு ஏற்ற காரியம்.

தேர்தல்களைப் பற்றி கணக்குகள் அறிவிப்பதும், ஆதரிப்பதும், தீர்ப்புகளைச் சொல்லுவதும் —
பல நேரங்களில் தேவனுடைய இறையாண்மையில் தலையிடுவது போல மாறிவிடும் என்பதை நாம் மறக்கக் கூடாது.

எனவே இந்த கட்சி நல்ல கட்சி. அந்தக் கட்சி நமக்கு எதிரான கட்சி என்று மேலோட்டமாக எதையும் முடிவு செய்ய நம்மால் முடியாது.

ஒவ்வொரு கட்சியையும் மேலாண்மை செய்கிறவர் நமது இறைவன்.

எந்தக் கட்சியை எப்பொழுது ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும், எந்தக் கட்சியை எப்பொழுது பதிவியிலிருந்து இறக்க வேண்டும் என்பதெல்லாம் இறைவன் முடிவு செய்யக்கூடிய காரியங்கள்.

நம்முடைய சிற்றறிவின் மூலம் ஓரளவுக்கு யூகித்து நாம் ஜெபிக்க வேண்டும். அது
நம்முடைய கடமை.

எனவே எந்தக் கட்சியையும் அளவுக்கு மீறி ஆதரிப்பதும் அளவுக்கு மீறி கேவலமாக பேசுவதும் விசுவாசிகளுக்கும் ஊழியக்காரர்களுக்கும் அழகல்ல.

ஆட்சிக்கு வந்த பிறகு அவருடைய செயல்பாட்டை பற்றி விமர்சிக்க நமக்கு உரிமை உண்டு.

ஆனால் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே ஒரு கட்சியையும் அளவுக்கு மீறி ஆதரிப்பதும் எதிர்ப்பதும் நம்முடைய கடமை அல்ல .

அவருடைய கர்த்தத்துவமே நித்திய கர்த்தத்துவம்,

அவருடைய ராஜ்யமே தலைமுறை தலைமுறையாக நிற்கும்.
*தானியேல் 4:34*

பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள். அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார். அவருடைய கையைத் தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன்.
*தானியேல் 4:35*