Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

யோவான் 4:1,2 விளக்கம்
உங்கள் சிந்தனைக்கு .

தியானிக்க வேண்டிய வேத . பகுதி
யோவான் 4:1,2

யோவானைவிட இயேசு அநேகம் பேரைச் சீடராக்கி, அவர்களுக்கு திருமுழுக்கு கொடுக்கிறார் எனப் பரிசேயர் கேள்விப்பட்டார்கள்.

ஆனால் திருமுழுக்கு கொடுத்தது இயேசு அல்ல, அவருடைய சீடரே அதைச் செய்தார்கள். பரிசேயர் கேள்விப்பட்டதைக் கர்த்தர் அறிந்தபோது, அவர் யூதேயாவைவிட்டுப் புறப்பட்டுத் திரும்பவும் கலிலேயாவுக்குச் சென்றார்.
யோவான் 4:1-3.

இயேசு கிறிஸ்து ஏன் யூதேயாவைவிட்டுப் புறப்பட்டுத் திரும்பவும் கலிலேயாவுக்குச் சென்றார்?

யூதர்களுக்கு பயந்து சென்றாரா?
அல்லது தப்பித்து ஓடினாரா?
இயேசுகிறிஸ்து யாருக்கும் ஞானஸ்தானம் கொடுக்கவில்லை என்பதை தெரிந்தி ருந்தும், யூதருடைய குற்றச்சாட்டு பொய்யானது என்று அறிந்திருந்தும் ஏன் அதை சமாளிக்க முடியாமல் கலிலியாவுக்கு சென்றார்?

இந்த பகுதியை ஆழ்ந்து தியானிக்கும் பொழுது பலவிதமான ஆவிக்குரிய கருத்துக்கள் நமக்கு புலப்படும்.

உலகத்தினுடைய பாவத்தை போக்கும் பலியாக தன்னை ஒப்புக் கொடுப்பதற்காகத் தான் பிதாவானவர் இந்த உலகத்திற்கு தன்னை அனுப்பினார் என்று அறிந்திருந்தார்‌.

ஆனால் அப்படி அறிந்திருந்தும் ஏன் அவர் யூதர்களுக்கு பயந்து செல்ல வேண்டும்.

இந்த நிகழ்வில் மட்டுமல்ல‌ இன்னும் பல நிகழ்வுகளில் அவர் யூதர்களுடைய‌ கண்களுக்கு மறைத்து தன்னை காப்பாற்றிக் கொண்டார் என்று வேதம் குறிப்பிடுகிறது.

அந்த நிகழ்வுகளை இப்பொழுது பார்க்கலாம். ‌
(1)யோவான் 8:59 ல்

"மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்கு சொல்கிறேன், ஆபிரகாம் பிறப்பதற்கு முன்னமே இருக்கிறவர் நானே”
*(I AM ) என்று கடவுளாக அறிவித்தபோது யூதர்கள் அவர்மேல் எறியும்படி கற்களை எடுத்துக்கொண்டார்கள்.

ஆனால் இயேசுவோ அவர்கள் நடுவே கடந்து ஆலயப் பகுதியை விட்டு வெளியே போய்விட்டார்.
யோவான் 8:58-59.

( 2 ) லூக் 4:28–30.

நாசரேத் சபையில்
இயேசு போதித்தபோது மக்கள் கோபமடைந்து, அவரை மலை உச்சிக்குக் கொண்டு சென்று தள்ளி கொல்ல முயன்றார்கள்.
அவரோ மக்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.
லூக்கா 4:30

(3) யோவான்.7:30

திருவிழா காலத்தில்
யூதர்கள் அவரைப் பிடிக்க முயன்றார்கள்.
அவருடைய நேரம் இன்னும் வராதபடியால், எவரும் அவர்மேல் கை வைக்கவில்லை.

சிலுவைக்கு முன்பு குறைந்தது நான்கு முக்கியமான முறை இயேசு வெளிப்படையாக தப்பித்து சென்றதாக வேதத்தில் பதிவு உள்ளது..

அவர் பயந்ததால் அல்ல. அவருடைய தந்தையினால் நிர்ணயிக்கப்பட்ட நேரம் இன்னும் வராததால் அதை அவர் அறிந்து தன்னை காத்துக் கொண்டார்.

அதே நேரத்தில் “மனுஷகுமாரன் மகிமைப்படும் நேரம் வந்தது என்று உணர்ந்தபோது அவர் தாமாகவே சிலுவையை ஏற்றார்
யோவான் 12:23.

பயத்தினால் அல்ல
தன்னுடைய ஊழியத்தின் நேரம் முழுமையடைய வேண்டும் என்பதற்காக
தேவனுடைய திட்டப்படி கடவுளுடைய அந்த கால அட்டவணையை அவர் அறிந்து அதற்கு ஏற்றபடி செயல்பட்டார்.

இதன் மூலம் நமக்கு வேதம் வெளிப்படுத்தும் பாடங்கள் என்னவென்றால்

சில நேரங்களில் நாம் ஆபத்துகளில் தப்பித்துக் கொள்ள தான் வேண்டும். தப்பித்துக் கொள்வது கோழைத்தனம் ஆகாது.

சூழ்நிலைகளை புரிந்து கொண்டு புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும்.
"
ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல , இதோ, நான் உங்களை அனுப்புகிறேன் , ஆகையால் , சர்ப்பங்களைப்போலவினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள் "
என்று இயேசுகிறிஸ்து தன் அனுபவத்தின் மூலமாக சொன்ன வார்த்தைகளையும் நாம் கவனிக்க வேண்டும்.
மத்தேயு 10:16.

காலத்திற்கு முன்பு நாம் "Adventure " என்று நினைத்து நம்மை நாமே பாடுகளுக்கும் மரணத்திற்கும் ஒப்புக் கொடுக்கக் கூடாது.

கடவுள் நமக்கு முன் குறித்த, வரையறுத்த, கால அட்டவணையை அறிந்து கொண்டு அவருடைய இறையாண்மைக்கு ஒப்புக்கொடுத்து வாழ்வதே நமக்கு சிறந்த பாதுகாப்பாகும்.