? எஸ்றாவின் புத்தகம் – வேதபாடம் 4
உங்கள் சிந்தனைக்கு…
? எஸ்றாவின் புத்தகம் –
வேதபாடம் 4
தகவல் இல்லாத முக்கிய பயணங்கள்.
பெர்சியாவின் அரசன் கோரேசு, இஸ்ரவேல் ஜனங்களை எருசலேம் நகருக்குச் செல்ல அனுமதித்த போது, அந்தப் பயணம் சுமார் நான்கு மாதங்கள் எடுத்தது.
அந்தப் பயணத்தின் தூரம் ஏறக்குறைய 900 மைல்கள்.
மிகப்பெரிய பொருட்களுடன் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயணம் குறித்து எஸ்றா எந்த விவரங்களையும் குறிப்பிடவில்லை.
அதுபோல அர்தக்செர்சேஸ் காலத்தில், எஸ்றா பாபிலோனை விட்டு எருசலேமுக்கு வருவதற்கும் அதேபோன்ற கால அளவையே எடுத்துக் கொண்டான்.
அந்தப் பயணத்தில் அவர்கள் அடைந்த பாடுகள், கஷ்டங்கள் குறித்து வேதத்தில் எந்தச் சொல்லும் இல்லை.
அதேபோல ஆபிரகாம் தன் நாட்டை விட்டு கானான் தேசத்தை அடைந்த அந்த மிகப்பெரிய பயணம் பற்றியும் வேதம் விரிவாகச் சொல்லவில்லை.
அந்தத் தூரம் ஏறக்குறைய 1600 முதல் 2000 கிலோமீட்டர் இருக்கும் என்று வேத அறிஞர்கள் கருதுகிறார்கள்.
ஆபிரகாம் தன் இடத்தை விட்டு கானானுக்கு சென்றடைய எவ்வளவு காலம் எடுத்துக் கொண்டான் என்பதைப் பற்றி வேதத்தில் தெளிவான தகவல்கள் இல்லை.
ஒரே ஒரு குறிப்பே உள்ளது:
அவன் போகும் இடம் இன்னதென்று அறியாமல் விசுவாசத்தால் பயணம் செய்தான் என்பதுதான்.
அதேபோல யோசேப்பு, குழியிலிருந்து எகிப்துக்குச் சென்ற பயணம் எவ்வளவு காலம் எடுத்தது, எப்படி சென்றான் என்பதற்கான குறிப்புகளும் இல்லை.
அந்தத் தூரம் சுமார் 300 முதல் 400 கிலோமீட்டர் இருக்கும் என்று கூறப்படுகிறது.
அந்தப் பயணத்தில் யோசேப்பு அடைந்த பாடுகள், கஷ்டங்கள் குறித்து வேதம் எதையும் சொல்லவில்லை.
அதுபோல யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கின் கட்டளைபடி லாபான் வீட்டுக்கு செல்வதற்காக புறப்பட்டான்.
அவன் பெயெர்செபா என்ற இடத்திற்கு வருகின்ற வரை அந்த நிகழ்வைப் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை.
பயணம் என்பது 750 கிலோமீட்டர்.
ஆனால் அந்தப் பயணத்தில் ஒரே ஒரு இரவில் நடந்த நிகழ்வை மட்டும் வேதம் குறிப்பிடுகிறது.
அந்த நீடிய பயணத்தில் நடந்த வேறு எதைப் பற்றியும் வேதம் குறிப்பிடவில்லை.
அதுபோல இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையில் அவரது இளமைக் காலம் முதல் 30 வயது வரை என்ன நடந்தது என்று சொல்லப்படவில்லை.
இந்த நிகழ்வுகளை எல்லாம் பார்க்கும் பொழுது ஒரு சில சத்தியங்கள் நமக்கு புலப்படுகிறது.
1. விசுவாசிகளுக்கு எது அவசியமோ தேவையோ அவைகளை மட்டுமே வேதம் குறிப்பிடுகிறது என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.
2. பயணத்தின் கால அளவு முக்கியமல்ல பயணத்தின் நோக்கமே முக்கியம்.
3. அந்தப் பயணத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் எந்த அளவுக்கு கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்தார்கள் என்பது தான் முக்கியம்.
யாக்கோபு 800 கி.மீ நடந்தான் என்று வேதம் சொல்லவில்லை;
ஆனால் ஒரு கல்லில் தலை வைத்து படுத்த இடம், தேவனுடைய வீட்டாக மாறியது என்று சொல்கிறது.
ஆபிரகாம் எவ்வளவு தூரம் நடந்தான் என்று சொல்லப்படவில்லை ஆனால் அவன் எப்படி கீழ்ப்படிந்து கானானுக்கு சென்றான் என்பது பற்றி இருக்கிறது.
யோசேப்பு எகிப்துக்கு சென்ற காலத்தில் என்ன நிலையில் இருந்தான் என்று சொல்லப்படவில்லை. ஆனால் அவனோடு கர்த்தர் இருந்தார் என்பது மட்டும் நமக்கு புறப்படுகிறது.
எந்த காரியங்களை கடவுள் நமக்கு அவசியம் இல்லை என்று மறைத்திருக்கிறாரோ அவைகள் மறைக்கப்பட்டதாகவே கருதப்பட வேண்டும்.
பயணம் செய்தவர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதை விட எவ்வாறு தேவனுடைய திட்டத்தை அவர்கள் நிறைவேற்றினார்கள் என்பது தான் முக்கியம்.