Expository commentary on the book of Nehemiah . நெகேமியாவின் புத்தகம் — வேதபாடம் 18
*உங்கள் சிந்தனைக்கு* .
*
Expository commentary on the book of Nehemiah .
நெகேமியாவின் புத்தகம் — வேதபாடம் 18
நெகேமியா 9-ம் அதிகாரம்:
இஸ்ரவேல் மக்களின் தேசிய மன்றாட்டு ஜெபம்.
நெகேமியா புத்தகம் ஒன்பதாவது அதிகாரத்தில் எழுதப்பட்டுள்ள ஜெபம் என்பது இஸ்ரவேல் மக்கள் அனைவருக்காகவும் ஏறெடுக்கப்பட்ட ஒரு ஜெபம்.
வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல நீளமான ஜெபங்களில் இதுவும் ஒன்று.
இந்த ஜெபத்தை ஏறெடுத்தவர்கள் யாரெனில் — யெசுவா, பானி, கத்மியேல், செபனியா, புன்னி, செரெபியா, பானி, கெனானி ஆகிய லேவியர்கள். இவர்கள் தங்கள் ஜனங்களுக்காக பொது பாவ அறிக்கை ஜெபம் ஏறெடுத்தார்கள்.
இந்த ஜெபத்தை பல வகைகளிலும் ஒரு முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்:
1. தேவனை உயர்த்தி துதித்தார்கள் (Praise & Adoration)
2. தங்களுடைய பழைய வரலாற்றை நினைவுகூர்ந்தார்கள் (Historical Review)
3. மனந்திரும்புதல் — பாவ அறிக்கை (Confession of Sins)
தங்கள் பாவங்களையும் முன்னோர்களின் பாவங்களையும் ஒப்புக்கொண்டார்கள்.
4. தேவனின் கிருபையை உணர்தல்
தங்களுடைய அகங்காரத்தையே பொறுத்துக்கொண்டு வனாந்தரத்தில் தங்களைக் கைவிடாத தேவனுடைய உண்மையையும் கிருபையையும் உணர்ந்தார்கள்.
5. தற்போதைய நிலையை ஒப்புக்கொள்ளல்.
ஒரு நாட்டிற்காக மன்றாடும் ஜெபம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த ஜெபம் ஒரு சிறந்த உதாரணம். நம் தேசத்திற்காக ஆண்டவரிடம் இப்படிப்பட்ட ஜெபம் ஏறெடுத்தால், அது நம்மிலும் நம் ஜனங்களிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் இன்றைக்கு அப்படிப்பட்ட ஜெபங்கள் சபைகளில் ஏறெடுக்கப்படுவதில்லை என்பது வருந்தத்தக்கது.
*அகங்காரம், அல்லது அகந்தை என்கிற வார்த்தை இந்த அதிகாரத்தில்* *இரண்டு இடங்களில் வருகிறது.*
இந்த ஜெபத்தில் இஸ்ரவேல் ஜனங்களின் மனநிலையை குறிக்கும் ஒரு வார்த்தை — நெகேமியா 9:16 மற்றும் 9:29.
தேவனால் அழைக்கப்பட்டு, ஆசீர்வதிக்கப்பட்டு, தேவனுடைய கற்பனைகளைப் பெற்றுக்கொண்ட, *ஒரு காலத்தில் எகிப்திலே அடிமையாக இருந்த அந்த ஜனங்கள், கடவுளிடம் அகங்காரமாய் நடந்துகொண்டார்கள். எகிப்திய அரசு தங்களிடம்* *எவ்வாறு அகந்தையாய் நடந்துகொண்டது என்பதையும், அதிலிருந்து கர்த்தர் தங்களை* *விடுவித்து சுதந்திரக் காற்றை சுவாசிக்கச் செய்தது என்பதையும் மறந்து, நன்மைகள் செய்த ஆண்டவரிடமே* *அகங்காரமாய் நடந்துகொண்டார்கள்.*
"அவர்கள் வனாந்தரத்தில் அகந்தையும் பிடிவாதமும் உள்ளவர்களாய்ப் கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல், தங்களுக்கு ஒரு தலைவனை ஏற்படுத்தி கடவுளுக்கு எதிர்த்து நின்றார்கள்."
— நெகேமியா 9:16
தேவனுடைய ஐந்து அருமையான குணங்கள் — நெகேமியா 9:17ல் பார்க்கலாம்.
இந்த பாவங்களுக்கு மத்தியிலும் தேவன் அவர்களைக் கைவிடவில்லை. ஏனெனில் அவர்:
"மன்னிக்கிறவரும், கிருபையுள்ளவரும், கருணையுள்ளவரும், கோபிப்பதற்குத் தாமதிப்பவரும், நேர்மையான அன்பில் நிறைந்தவருமாயிருந்தார்."
— நெகேமியா 9:17
இந்த வார்த்தைகளைப் படிக்கும்போது தேவனுடைய அன்பை உணராமல் இருக்க முடியாது.
*மன்னிக்கிற தேவன்*
**கிருபை நிறைந்ததேவன்
இரக்கமுள்ள தேவன்
விரைவில்* கோபப்படாத தேவன்
நேர்மையான அன்பு நிறைந்த தேவன்
இப்படிப்பட்ட தேவன் யூதர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் பிதாவாக இருக்கிறார்.
கானான் நாட்டிலும் தொடர்ந்த அகங்காரம்
தேவன் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குறுதியின்படி கானான் நாட்டை அடைந்த பிறகும் இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுடைய கற்பனைகளையும் பிரமாணங்களையும் மீறி விக்கிரகங்களை வழிபட்டு, தேவனுக்குத் துரோகம் செய்து, தேவன்முன்பாக அகங்காரமாய் நடந்துகொண்டார்கள் (நெகேமியா 9:29).
அகங்காரத்தின் வளர்ச்சி நிலைகள்:
கீழ்ப்படியாமை → அகங்காரம் → கலகம்
வனாந்தரத்தில் மட்டும் ஐந்து தடவை தேவனுக்கு விரோதமாக கலகம் செய்தார்கள்:
யாத்திராகமம் 14–16
யாத்திராகமம் 16–17
யாத்திராகமம் 32
எண்ணாகமம் 13–14
எண்ணாகமம் 16
கானானை அடைந்த பிறகும் தொடர்ச்சியாக தேவனை மறந்து விக்கிரகங்களை வழிபட்டு, தீர்க்கதரிசிகளைக் கொலை செய்து, கடைசியில் தேவன் அவர்களைக் கைவிடக்கூடிய நிலைக்கு சென்றுவிட்டார்கள்.
*விளைவு: தங்களுடைய அரசை இழந்து, சுமார் 2000 ஆண்டுகள் நாடில்லாமல் சுற்றித் திரிந்து,* *இன்றைக்கும் உண்மையான மேசியாவைக் கண்டடைய முடியாமல் தவிக்கிறார்கள்* .
இந்த அதிகாரத்தில் நம் வாழ்வுக்கான எச்சரிக்கை.
*அகங்காரம் என்பது சாதாரண ஒரு பாவமல்ல — அது* *முரட்டாட்டம், கலகம். இது* ஆரம்பத்திலேயே நம் வாழ்வில் கிள்ளி எறியாவிட்டால், நமக்குள்ளே வளர்ந்து, ஏதோ ஒரு காலகட்டத்தில் நாமே தேவனுடைய தீர்மானத்திற்கு விரோதமாக கலகம் செய்கிறவர்களாக மாறிவிடுவோம்.
இது வெளியே உள்ளவர்களுக்குத் தெரியாது. ஆவிக்குரிய போர்வையில் இருக்கின்ற பலர் இம்மாதிரியான கலக மனநிலையுடன் ( *Rebel Mindset) காணப்படுகின்றார்கள்* .
ஒரு விசுவாசி தேவனுடைய சித்தத்தை அறிந்தும், அதை நிறைவேற்ற மறுத்து தன் நோக்கத்தை செயல்படுத்த ஆரம்பிக்கும்போது, *அவன் மனதில் அகந்தை ஏற்படுகிறது. அதை வளர விட்டுவிட்டால், அது நமக்குள்ளே* கிரியை செய்து நம்மை ஒரு கலககாரனாக மாற்றிவிடும்.
மனிதர்களிடம் நாம் அகங்காரமாய் நடப்பதையே தேவன் வெறுக்கும்போது, நம்மை இரட்சித்த ஆண்டவருக்கே நாம் அகங்காரமாய் நடந்துகொள்ளும்போது, இஸ்ரவேல் ஜனங்களுக்கு நடந்த அதே நிலைமைதான் இறுதியில் நமக்கும் ஏற்படும். இந்த அழிவை மற்றவர்கள் காண மாட்டார்கள் — அதை நாம் மட்டுமே உணர முடியும். ஆவிக்குரிய போர்வையில் வாழ்ந்துகொண்டே தேவனுக்கு மனதளவில் கலகம் செய்கிறவர்களாக நம்மை நாமே வளர்த்துக்கொள்வோம்.
அகங்காரத்தை தவிர்ப்போம். தேவ சித்தத்தை அறிவோம். அதை நிறைவேற்றுவோம்.
" *The idea that God will pardon a rebel who has not given up his rebellion is contrary* *both to the Scriptures and to common sense."* A.W.Tozer
" *கலகத்தை விட்டுவிடாத ஒரு கலககாரனை தேவன் மன்னிப்பார் என்று நினைப்பது வேதத்திற்கும் விரோதம், பொது* *அறிவிற்கும் விரோதம்."*