எஸ்றாவின் புத்தகம். ?வேத பாடம் 3
உங்கள் சிந்தனைக்கு.
எஸ்றாவின் புத்தகம்.
?வேத பாடம் 3
இவர்கள் தங்கள் குடும்ப அட்டவணையைத் தேடினார்கள்; ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அவர்கள் ஆசாரியப் பணியிலிருந்து அசுத்தமானவர்கள் எனத் தள்ளி வைக்கப்பட்டார்கள்.
எஸ்றா 2:62
இந்த வார்த்தை நமக்கு உணர்த்தும் பாடங்கள் என்ன?
பெர்சிய அரசன் கோரேசு, பாபிலோனில் கைதிகளாக இருந்த யூத ஜனங்களை நாடு திரும்ப அனுமதித்தார். அதன்படி ஏறக்குறைய 50000 யூதா குலத்தை . சேர்ந்தவர்கள் தலைமையில் எருசலேமுக்கு சேஸ்பாத்சார் தலைமையில் திரும்பினார்கள்.
அவர்களில் ஆசாரியர்கள்
4,289 லேவியர்கள் 47
பாடகர்கள்128
வாசல் காப்பாளர்கள் 139 பேர்கள்.
இதில் குறிப்பிடத்தக்க காரியம் என்னவென்றால்
லேவியர்களுடைய எண்ணிக்கை மிகக் குறைவு.
இந்த காரியத்தில் ஒரு குறிப்பிடத்தக்க கர்த்தருடைய வசனம் நம்முடைய கவனத்தை ஈர்க்கிறது. (2:61)
தங்களை ஆசாரியர்கள் என்று நிரூபிக்க முடியாதவர்கள் 652 பேர்கள் என்று இந்த வாக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த 652 பேர் மூன்று குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்:
ஹபாயாவின் சந்ததி
கொக்கோஸின் சந்ததி.
பார்சில்லாயின் சந்ததி.
(பார்சில்லாய் ஒரு கீலேயாத்தியனின் மகளை மணந்தவன்).
இவர்கள் ஆசாரியப் பணியிலிருந்து விலக்கப்பட்டார்கள். காரணம் இவர்கள் தங்கள் குடும்ப அட்டவணையைத் தேடினார்கள்;
ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அவர்கள் ஆசாரியப் பணியிலிருந்து அசுத்தமானவர்கள் எனத் தள்ளி வைக்கப்பட்டார்கள்.
எஸ்றா 2:62
இவர்கள் எருசலேமுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டார்கள்.
ஆனால் புதுப்பிக்கப்படப் போகும் ஆலயத்தில் பணி செய்ய அனுமதி இல்லை.
இதன் மூலம் கர்த்தர் நமக்கு உணர்த்தும் பாடம் என்ன.
மோசேயின் பிரமாணத்தின்படி
ஆரோன் குடும்பத்தை சேர்ந்தவர் மட்டுமே ஆசாரிய பணியில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்பட்ட வர்கள்.
மற்றவர்களுக்கு அந்தப் பணியை செய்ய அனுமதி கிடையாது.
ஆசாரியர்கள் அல்லாதவர்கள் தேவாலயத்தில் பலிகளை செலுத்துவதோ தூபம் காட்டுவதோ அனுமதிக்கபடாத ஊழியம்.
அரசனாக இருந்தாலும்
உசியா ராஜா தன் வரம்பை மீறினபடியினால் அவன் குஷ்டரோகத்தை தண்டனையாக பெற்றுக் கொண்டான்.
அதனால் தான் தாங்கள் ஆரோன் கோத்திரத்தின் வம்சத்தில் வந்தவர்கள் என்று தெரிவிக்க முடியாதவர்களை ஆசாரியர்களாக பணியில் அமர்த்த முடியாத நிலை ஏற்பட்டது.
எருசலேம் தேவாலயம் தீக்கிரையாக்கப்பட்டு மறுபடியும் புதுப்பிக்கப்படுகிற அந்த நேரத்திலும் மோசேயின் பிரமாணத்தை 100% முழுமையாக கடைபிடிக்க தீர்மானிக்கப்பட்டது.
அவர்கள் ஆர்வமுள்ளவர்களாக இருந்தாலும் கடவுள் மோசேக்கு கொடுத்த பிரமாணத்தை கடைபிடிப்பதில் எந்த கவனக் குறைவு ஏற்படாதபடி பார்த்துக் கொள்ளப்பட்டது.
கடவுளுடைய அழைப்பை உறுதி செய்வதில் கவனமாக இருந்தார்கள்.
ஆசாரியர்களுக்கு நியமிக்கப்பட்ட பணியில் மற்ற எவரும் நுழையக்கூடாது என்பது அவர்கள் நோக்கமாக இருந்தது.
இது புதிய ஏற்பாட்டு சத்தியத்தோடு ஒப்பிட்டு பார்ப்போமென்றால் ஒவ்வொரு விசுவாசியும் தேவன் நியமித்த ஓட்டத்தில் ஓட வேண்டும்.
மற்றவருடைய ஓட்டத்தில், அழைப்பில் நாம் புகுந்து ஊழியம் செய்ய நமக்கு அனுமதி இல்லை.
“தேவனுடைய பணியில் எண்ணிக்கையைவிட, உறுதியான அழைப்பே முக்கியம்.”
நமது விருப்பத்தை விட தேவனுடைய தீர்மானம் முக்கியமானது.
நம்மைக் குறித்து தேவனுடைய தீர்மானத்தை அறிந்துகொண்டு அதை பின்பற்றுவது தான் தேவனுடைய சித்தம்.
தேவன் நமக்கு அளிக்காத ஓட்டத்தில் ஓட நமக்கு அனுமதி இல்லை என்பதை இந்த வசனம் நமக்கு உணர்த்தும் பாடம்.
எசேக்கியேல் சண்முகவேல்