Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

2 நாளாகமம்  அல்லது குறிப்பேடுகள் புத்தகம் வேதபாடம் 15 யார் இந்த எசேக்கியா அரசன்
ekiel:
உங்கள் சிந்தனைக்கு.

2 நாளாகமம்  அல்லது குறிப்பேடுகள் புத்தகம்

வேதபாடம் 15

யார் இந்த எசேக்கியா அரசன்

            பாகம்.2

யூத அரசன் எசேக்கியா – ஆன்மீக மறுமலர்ச்சியின்  அடையாளம்..

தியானிக்க வேண்டிய வேத பகுதிகள்
(2 இராஜாக்கள் 18–20; 2 நாளாகமம் 29–32)

எசேக்கியா மற்ற அரசர்களை விட வித்தியாசமாக காணப்பட்டதற்கான காரணங்கள்.

அவனுக்கு முன் ஆட்சி செய்த அவனுடைய தகப்பன் ஆகாஸ் அரசன் தீய வழிகளில் கடவுளை மறுதலித்து நடந்தபோதிலும், எசேக்கியா தகப்பனுடைய வழியை பின்பற்றவில்லை.

சூழ்நிலையும், குடும்ப பின்னணியும் ஆன்மீக வாழ்வை நிர்ணயிக்க வேண்டியதில்லை என்பதை அவனுடைய வாழ்க்கை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

தகப்பனுடைய வழியைப் பார்க்கிலும் தேவனுடைய வழியை பின்பற்றினான்.

இந்த வேதப் பாடத்தில், எசேக்கியா யூத தேசத்தை ஆண்ட மற்ற எல்லா அரசர்களை விட எப்படி வித்தியாசமானவன் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

1. கர்த்தரையே முழுமையாக நம்பிய விசுவாச‌ அரசன்.
“இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரையே அவன் நம்பினான்; அவனைப் போல யூதாவின் அரசர்களில் அவனுக்கு முன்பும் பின்பும் ஒருவனும் இல்லை.”
( 2 இராஜாக்கள் 18:5)

கடவுளை
முழுமையாக நம்பினான்.
சுயநலத்திற்காக அல்ல,
நெருக்கடி நேரத்தில் மட்டும் அல்ல
எல்லாக் காலங்களிலும் நம்பினான்.

உண்மையான ஆன்மீக வாழ்க்கை என்பது,
தேவனை “ஒரு தேர்வாக” அல்ல,
“ஒரு ஆதாரமாக” ஏற்றுக்கொள்வதே.


2. விக்கிரக வழிபாட்டில் சமரசமில்லாத நிலை.
(2 இராஜாக்கள் 18:4)

எசேக்கியா:
உயர்ந்த ஸ்தலங்களை இடித்தான்.
விக்கிரகத் தூண்களை உடைத்தான்.
தேவனால் பயன்படுத்தப்பட்ட வெண்கல பாம்பையும் (நெகுஸ்தான்) உடைத்தான்.

இது மிக முக்கியமான ஆன்மீக முடிவு.
தேவன் ஒருகாலத்தில் பயன்படுத்திய ஆனாலும், அது தேவனுக்குப் பதிலாக மாறியபோது, அதை அகற்ற அவன் தயங்கவில்லை.

தேவனை விட முக்கியமாக மாறும் எதுவும்
எவ்வளவு “ஆன்மீகமாக” தெரிந்தாலும்,
அது விக்கிரகமே.

பாரம்பரியங்களை முழு மூச்சோடு அகற்றியதில் இவனுக்கு இணை இவனே.

3. ஆலய சுத்திகரிப்பும் ஆராதனை மீட்பும்
(2 நாளாகமம் 29)

எசேக்கியா ஆட்சியைத் தொடங்கியதும் செய்த முதல் காரியம்:
அரசியல் சீர்திருத்தம் அல்ல,
இராணுவத் திட்டம் அல்ல,
ஆலயத்தைத் திறந்து, ஆராதனையை மீட்டெடுத்தது
அவன்:
ஆசாரியர்களையும் லேவியர்களையும் பரிசுத்தப்படுத்தினான்.

கர்த்தருடைய ஆலயத்தை சுத்திகரித்தான்.
தேவ ஆராதனையை மையமாக வைத்தான்.

தேவனுடைய ஆராதனை சீராகும் போது, தேசத்தின் வாழ்க்கையும் சீராகும்.
தன் வாழ்க்கையில் கடவுளுடைய பணியை முதலிடம் வைத்ததில் இவன் சிறந்து காணப்பட்டான்.

4.சாலொமோனுடைய காலத்திற்குப் பிறகு ஏறக்குறைய 250 ஆண்டுகளுக்குப் பிறகு பஸ்கா பண்டிகை மிகச் சிறப்பாக ஜனங்களை ஆசரிக்க வழி நடத்தினார்.

5. தேசமெங்கும் மனந்திரும்புதலுக்கான அழைப்பை
(2 நாளாகமம் 30)
யூதாவுக்கு மட்டுமல்ல
அசீரியர்களால் சிதறியிருந்த வட இஸ்ரவேலருக்கும் அழைப்பு விடுத்தான்.

பலர் பரிகசித்தாலும், சிலர் மனந்திரும்பி வந்தார்கள்.
அவன் நோக்கம்:
அரசியல் ஒற்றுமை அல்ல.
ஆன்மீக திரும்புதல்.


6. தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியும் வாழ்க்கை.
“கர்த்தருக்குப் பிரியமானதையும், நேர்மையானதையும், உண்மையானதையும் செய்தான்.”
(2 நாளாகமம் 31:20)

எசேக்கியா:
தேவனுடைய நியமத்தை அறிந்தான்.
அதை நடைமுறைப்படுத்தினான்.
தன் விருப்பங்களை விட தேவனுடைய சித்தத்தை உயர்த்தினான்.
இதன் விளைவாக:
“அவன் செய்த எல்லாவற்றிலும் வெற்றியடைந்தான்.”

கீழ்ப்படிதல் இல்லாத விசுவாசம்
வேதாகம விசுவாசம் அல்ல.
7. நெருக்கடியில் ஜெபத்தை நாடிய அரசன்.
(2 இராஜாக்கள் 19)

அசீரிய மன்னன் சனகரீப் பயமுறுத்தியபோது:
எசேக்கியா ஒப்பந்தம் செய்யவில்லை.
பயத்தில் சரிந்து விடவில்லை.
கர்த்தருடைய ஆலயத்தில் ஜெபம் செய்தான்.
தேவன் ஒரே இரவில் எதிரிகளை அழித்தார்.
வேதப் பாடம்:
மனிதர்களால் முடியாத இடத்தில்,
ஜெபம் தேவனுடைய செயலுக்கு வழி திறக்கிறது.

7. தனிப்பட்ட வாழ்க்கையிலும் தேவனை சார்ந்தவன்.
(2 இராஜாக்கள் 20)
மரண நோயில் விழுந்தபோது:
அரச அதிகாரத்தை அல்ல
மருத்துவ அறிவை மட்டுமல்ல
தேவனை நோக்கி அழுதான்.
தேவன் அவனுக்கு 15 ஆண்டுகள் வாழ்நாளைக் கூட்டினார்.
வேதப் பாடம்:
பொதுவாழ்க்கையில் தேவனை நம்புவது மட்டும் போதாது;
தனிப்பட்ட வாழ்க்கையிலும் தேவனை சார்ந்து வாழ வேண்டும்.
இறுதியாக யார் இந்த எசேக்கியா என்றால்

தேவனை முழுமையாக நம்பி வாழ்க்கையை அமைத்துக் கொண்டவன்.
சமரசமற்ற பரிசுத்தம்
ஆராதனையை மையமாகக் கொண்ட விசுவாசத்தை உடையவன்.

ஜெபத்தை முதன்மையாக வைத்ததினால் நெருக்கடி வாழ்க்கையை மேற்கொண்டவன்.

பாரம்பரியங்களை,  வழிபாடுகளை எந்த சமரசமின்றி அகற்றியவன்.
தேவன் தேடும் மனிதன்.
குறையில்லாதவன் அல்ல,
முழு மனதுடன் அவரை நாடுகிறவனே.
இன்றைய விசுவாசிகளுக்கும், ஊழியர்களுக்கும், குடும்பத் தலைவர்களுக்கும்
எசேக்கியா ஒரு உயிருள்ள வேதப் பாடம். ஒரு தேசத்தை ஒரு மாபெரும் ஆவிக்குரிய அழிவிலிருந்து காப்பாற்றுவதற்கு தேவன் பயன்படுத்திய மனிதன் தான் இந்த எசேக்கியா ராஜா.
இந்த கடைசி காலத்தில் சபைகளுடைய ஆவிக்குரிய வீழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கிற நாம் ஒவ்வொருவரும் நம்முடைய நிலையில், நம்முடைய இடத்தில், நம்முடைய ஊழியங்களில் ஒரு எசேக்கியா ராஜாவாக மாறுவதற்கு தேவன் திருவை தர வேண்டும். பழைய ஏற்பாட்டில் ஒரு எசேக்கியா ராஜா. சபைகளின் இருண்ட காலங்களில் ஒரு மார்ட்டின் லூத்தர். இவைகள் கடந்த கால வரலாறு. சபையில் புதிய வரலாற்றை படைப்பிக்க நாம் ஒவ்வொருவரும் ஒரு எசேக்கியா ராஜாவாக, மார்ட்டின் லூத்தராக மாற கடவுள் விசுவாசிகளை எதிர்பார்க்கிறார்.