Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

ஜாதியும் வரதட்சணையும்.
*உங்கள் சிந்தனைக்கு.*

*ஜாதியும் வரதட்சணையும்.*

*ஒருவன் உண்மையாகவே மனந்திரும்பிய கிறிஸ்துவனாக இருக்கிறான் என்பதற்கு இரண்டு* *அடிப்படைப் பரிட்சைகள் (Tests) உள்ளன. பல பரிட்சைகள் இருந்தாலும், மிகவும்* *அடிப்படையான பரிட்சை இதுதான்.*
1. *உன்னுடைய திருமணத்தில் நீ ஜாதி பார்க்கிறாயா* ?
நீ உன் இனம் பார்த்து, ஊர் பார்த்து திருமணம் செய்து கொண்டால், நீ நிச்சயமாக மனந்திரும்பிய கிறிஸ்தவனாக இருக்க முடியாது. இந்தப் பரிட்சையில் நீ வெற்றி பெற்றால்தான் கிறிஸ்தவத்தின் அடுத்த நிலைக்குச் செல்ல முடியும். இல்லாவிட்டால், நீ மனந்திரும்பிய கிறிஸ்தவன் என்பதை வேதம் ஏற்றுக்கொள்ளாது.
உலகம் அனைத்தையும் தன்னுடைய சொந்த இரத்தத்தால் இணைத்த கர்த்தருடைய சபையில் நீ ஒருக்காலும் இணைய முடியாது.
2. *அடுத்த பரிட்சை: நீ திருமணத்திற்கு வரதட்சணை அல்லது* *பணம் வாங்குவாயா?*
நகை அணிகின்ற பெண்ணாக இருந்தால் நகைகளையோ, நகைகள் அணியாத பெண்ணாக இருந்தால் பணத்தையோ, திருமணம் செய்வதற்கான அடிப்படைத் தேவை என்று நீ கருதி ஒரு பெண்ணை நீ முடிவு செய்வாயென்றால், *அந்தச் செயல்பாடு வேதத்தின் படியும் சரியல்ல; அரசாங்கச் சட்டத்தின் படியும் சரியல்ல.*
*இந்த இரண்டின் படியும் நீ மன்னிக்க முடியாத குற்றவாளியாக மாறிவிடுகிறாய்.*

*கடவுளுடைய சித்தத்தை மையப்படுத்தாத எந்த திருமணமும் வேதத்தால் அங்கீகரிக்கப்பட்ட* **திருமணமாக கருத முடியாது.*

*வரதட்சணை கேட்கின்ற ஒரு விசுவாசியைப் போல கேடுகெட்ட விசுவாசி யாரும் இருக்க முடியாது.*
ஜாதி பற்றினாலும், வரதட்சணையினாலும் கிறிஸ்தவம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.
இந்த இரண்டு கொடிய பாவங்களைச் செய்கிறவர்கள் எப்படிப்பட்ட ஊழியக்காரர்களாக இருந்தாலும் சரி, ஊழியத்திற்கு அதிகமான காணிக்கை கொடுக்கிறவர்களாக இருந்தாலும் சரி, வட இந்தியப் பணிகளுக்குப் பணம் கொடுக்கிறவர்களாக இருந்தாலும் சரி, அல்லது *ஏன் மிஷனரி தலைவராகவே இருப்பவராக* *இருந்தாலும் சரி, அவர்கள் ஒருபோதும் தேவனுடைய ராஜ்யத்திற்குள் செல்ல முடியாது.*
எசேக்கியல் சண்முகவேல்