Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

கிறிஸ்தவர்களும் கையூட்டும்‌*
*உங்கள் சிந்தனைக்கு.*
*
யோபுவின் புத்தகம்.

*கிறிஸ்தவர்களும் கையூட்டும்‌*

*Expository Commentary on the Book of Job‌*

வேதபாடம் – 17
யோபுவின் புத்தகம் தான் முதல் முதலாக எழுதப்பட்ட புத்தகமாக பல வேத அறிஞர்களால் கருதப்படுகிறது. ஆனால் புத்தக வரிசையின் படி அது 18-ஆவது இடத்தில் வருகிறது.
கடவுள் மோசேக்கு பிரமாணங்களைக் கொடுப்பதற்கு முன்பாகவே, இந்தப் புத்தகத்தில் பல பாவங்களைக் குறித்து சொல்லப்பட்டிருப்பதை நாம் பார்க்கலாம். அவற்றில் ஒன்று லஞ்சம் (கையூட்டு, பரிதானம்).
யோபு வாழ்ந்த காலம் கி.மு. சுமார் 2100–1800 என்று வேத அறிஞர்கள் கருதுகிறார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், *லஞ்சத்தைப் பற்றி சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பாகவே வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது* .
"இலஞ்சத்தை நாடுவோரின் கூடாரங்களை நெருப்பு பட்சிக்கும்."
இந்த வார்த்தையை எலிப்பாஸ் யோபுவைக் குறித்து சொல்கிறார். எலிப்பாஸ் யோபுவைக் குறித்து கூறிய குற்றச்சாட்டு சரியானதல்ல. ஆனால், லஞ்சத்தை தேவன் வெறுக்கிறார் என்ற இந்த நெறிமுறை வேதாகமத்தின் பல பகுதிகளிலும் உறுதிப்படுத்தப்படுகிறது.
லஞ்சம் வாங்குவது இன்றைக்கு மட்டும் கொடிய பாவம் அல்ல; அது ஆதி முதலே தேவனுடைய பார்வையில் மிகப்பெரிய கொடிய பாவமாகக் கருதப்பட்டது.
எனவே தான் கடவுள் மோசேக்குக் கொடுத்த கட்டளைகளில் இவ்வாறு சொல்லியிருக்கிறார்.
உபாகமம் 16:19 – "நீதியைப் புரட்டாதே; முகதாட்சணியம் பாராதே; லஞ்சம் வாங்காதே."
உபாகமம் 27:25 – "நிரபராதியின் இரத்தத்தைச் சிந்தும்படி லஞ்சம் வாங்குகிறவன் சபிக்கப்பட்டவன்."
"ஆட்சியில் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் இலஞ்சத்தை விரும்பி, வெகுமதியை நாடி விரைகிறார்கள்; அநாதைகளுக்கு நியாயம் செய்யாதிருக்கிறார்கள்; விதவையின் வழக்கை எடுத்துப் பேசாதிருக்கிறார்கள்."

(ஏசாயா 1:23)
"தலைவர்கள் இலஞ்சத்திற்காக நியாயந்தீர்க்கின்றார்கள்."

(மீகா 3:11)
கையூட்டு என்பது மக்களை வஞ்சிக்கின்ற, மக்களுடைய நியாயத்தைப் புரட்டிப் போடுகின்ற, ஏழைகளின் நீதியை மறுக்கின்ற, தேவனுடைய நீதியை நிராகரிக்கின்ற ஒரு கொடுமையான செயல்.
கையூட்டு என்பது அநியாயமான ஆதாயத்தைப் பெறுவதற்காகக் கொடுக்கப்படும் அல்லது பெறப்படும் பரிசு அல்லது பலன்.
லஞ்சம் கொடுப்பவருடைய பார்வையில், ஒன்றைக் கொடுத்துவிட்டு இன்னொரு காரியத்தைப் பெற்றுக்கொள்வது. லஞ்சம் வாங்குபவருடைய பார்வையில், ஒன்றை வாங்கிக்கொண்டு இன்னொரு காரியத்தைச் செய்து கொடுப்பது.
இன்றைக்கு சமுதாயத்தில், அரசியலில், ஆன்மீகத்தில், கிறிஸ்தவத்திலும் லஞ்சம் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது. இந்த ஆதிக்கத்திற்கு எதிர்த்து நிற்பவர்கள், அதன் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் வெகு சிலரே.
கிறிஸ்தவர்கள் லஞ்சம் என்பது எந்த வகையில் இருந்தாலும், எந்த வடிவில் இருந்தாலும், எந்தக் கோணத்தில் இருந்தாலும், அது யார் செய்தாலும் அதை எதிர்க்கக் கடமைப்பட்டவர்கள்.
*இன்றைக்கு லஞ்சத்தைப் பற்றிய சரியான புரிதல் பல விசுவாசிகளுக்கு கடுகளவும் இல்லை.*
ஓட்டுக்கு லஞ்சம் வாங்குவதும், லஞ்சப் பேர்வழிகளை அரசியலில் ஆதரிப்பதும் ஒரு கிறிஸ்தவனுக்கு தூரமாக இருக்கக்கடவது. ஊழலும் லஞ்சமும் மனித சமுதாயத்தைச் சுரண்டக்கூடிய மிகப்பெரிய அநீதி.
இது கிறிஸ்தவத்திலும் பல பரிமாணங்களில் காணப்படுகிறது.
வரதட்சணை பல சந்தர்ப்பங்களில் பணத்தின் மூலம் நடைபெறும் அநியாயமான பரிமாற்றமாக மாறுகிறது. *அந்த வகையில் வரதட்சணையும் லஞ்ச மனப்பான்மையை* *ஒத்த ஒரு கொடிய சமூகத் தீமையாகும்.*
*பெண்ணைக் கொடுப்பவர்கள் வரதட்சணை என்ற பெயரில் பணத்தைக்* *(கையூட்டு)கொடுத்து தங்கள் பெண்ணை கரையேற்றுகிறார்கள்* . *பெற்றுக்கொள்பவர்கள் அதைப்(கையூட்டை) பெற்றுக்கொண்டு* *தங்கள் மகனுக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள்* . இதை கிறிஸ்தவர்கள் வேதாகமத்தின் வெளிச்சத்தில் ஆராய்ந்து நிராகரிக்க வேண்டும்.
அரசு அலுவலகங்களில் சில விசுவாசிகள் லஞ்சத்தை வாயினால் கேட்க மாட்டார்கள்; ஆனால் கொடுத்தால் வாங்கிக்கொள்வார்கள். அந்த லஞ்சப் பணத்தில் தசமபாகமும் கொடுப்பார்கள்.
கிறிஸ்தவ நிறுவனங்களில் வருமான வரித்துறை நடவடிக்கை மேற்கொண்டால், அதைச் சமாளிப்பதற்காக அதிகாரிகளுக்குப் பணம் கொடுத்து காரியத்தைச் சரிசெய்வார்கள். இதுவும் ஒரு வகையில் லஞ்சமே.
இந்த ஆன்மீகப் போர்வையுள்ளவர்கள் லஞ்சத்தை வாங்கவில்லை; *ஆனால் லஞ்சத்தை கொடுக்கிறார்கள்* .
கையூட்டு கொடுப்பதும் தவறு. லஞ்சம் வாங்குவதும் தவறு.
கையூட்டு வாங்குபவர்களுக்கு கடவுள் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா?
"இலஞ்சத்தை நாடுவோரின் கூடாரங்களை நெருப்பு பட்சிக்கும்."
இந்த வார்த்தை எலிப்பாஸ் கூறிய வார்த்தையாக இருந்தாலும், லஞ்சத்தை தேவன் நியாயத்தீர்ப்புக்குரிய பாவமாகக் கருதுகிறார் என்பதை வேதாகமத்தின் மற்ற பகுதிகள் தெளிவாக உறுதிப்படுத்துகின்றன.

அதன் விளைவு உடனடியாக நடைபெறாவிட்டாலும், அதன் பலனை அவர்கள் தங்கள் வாழ்க்கையில் காண்பார்கள்.

*நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக லஞ்சத்தைப் பற்றிய இந்த எச்சரிப்பு இவ்வளவு* *தெளிவாக இருக்கும்போது* , *இன்று லஞ்சம் தலைவிரித்தாடுகின்ற இந்தக் காலகட்டத்தில்* *நாம், அதாவது கிறிஸ்தவர்கள், எவ்வளவு விழிப்பாக* *இருக்க வேண்டும்*
!
லஞ்சம் வாங்கக் கூடாது.

லஞ்சம் கொடுக்கக் கூடாது.

*லஞ்சத்தில் ஊறித் திளைப்பவர்களை எந்த காரணத்துக்காகவும் எந்த சூழ்நிலையிலும்* *ஆதரிக்கக் கூடாது*
வரதட்சணை என்ற பெயரில் நடைபெறும் அநியாயமான பணப் பரிமாற்றங்களையும் கிறிஸ்தவர்கள் வேதாகமத்தின் வெளிச்சத்தில் ஆராய்ந்து நிராகரிக்க வேண்டும்.
நீதியின் தேவனைப் பின்பற்றுகிறவர்கள், நீதியின் பக்கமே நிற்க வேண்டும்.
*கிறிஸ்தவர்களுக்கு கையூட்டை பற்றி தெளிவான புரிதல் இல்லாத காரணத்தினால் லஞ்சம் கையூட்டு அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே* *தெரியவில்லை என்பது வருத்தமான காரியம்.*