Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

புதிய தலைமையும் பழைய ஊழியர்களும் யோசு 1:16–17.
உங்கள் சிந்தனைக்கு.

புதிய தலைமையும் பழைய ஊழியர்களும்
யோசு 1:16–17.

யோசுவா, மோசேயிடமிருந்து இஸ்ரவேல் ஜனங்களை கானான் தேசத்துக்கு வழிநடத்தும் பொறுப்பை பெற்றுக்கொண்டபோது, அதுவரை மோசேயின் கீழ் பணிபுரிந்த படைத்தலைவர்கள் கூறிய வார்த்தைகளை கவனியுங்கள்:

“ நீர் எங்களுக்குக் கட்டளையிடுகிறதையெல்லாம் செய்வோம் ;
நீர் எங்களை அனுப்பும் இடமெங்கும் போவோம்.
நாங்கள் மோசேக்குச் செவிகொடுத்ததுபோல் உமக்கும் செவிகொடுப்போம்.”
யோசுவா 1:16–17

இவர்கள் அதுவரை மோசேயின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து, அவருக்குக் கீழ்ப்படிந்து செயல்பட்டவர்கள். ஆனால் யோசுவா தலைமைப் பொறுப்பை ஏற்றவுடன், உடனடியாக புதிய தலைவருக்கு முழுமையாக கீழ்ப்படிந்தார்கள்.

யோசுவாவை விட மோசேயை உயர்ந்தவராகக் கருதி, மோசேயின் மேல் தனிப்பட்ட விசுவாசத்தை வெளிப்படுத்தவில்லை. அவர்கள் முழுமையாக தேவனுக்குக் கீழ்ப்படிந்திருந்ததால், தேவன் முன்குறித்தவருக்கு கீழ்ப்படிந்தார்கள்.

அவர்களின் விசுவாசம் மனிதருக்கல்ல; தேவனுக்கே.
*
நாம் கற்றுக்கொள்ளும்* பாடங்கள்

தேவனுடைய சித்தத்தின்படி தலைமைப் பொறுப்பு ஏற்கும் எந்த நபருக்கும், விசுவாசிகளும், உடன் ஊழியர்களும், நிர்வாகப் பணியாளர்களும் எந்த குழப்பமும் ஏற்படுத்தாமல் கீழ்ப்படிதல் கர்த்தருடைய சித்தமாகும்.

மறைமுகமான செயல் திட்டங்கள் (No hidden agenda) இருக்கக்கூடாது.

பழைய தலைமைக்கு காட்டிய விசுவாசம், புதிய தலைமைக்கும் காட்டப்பட வேண்டும்.

தனிப்பட்ட நபர்கள் மீது வைத்திருக்கும் அன்பு, பாசம், விசுவாசம் ஆகியவை குழு மனப்பான்மையாக (groupism) மாறக்கூடாது.

யோசுவாவின் வெற்றிக்கு, மோசேயின் கீழ் பணிபுரிந்தவர்கள் முழு மனதோடு யோசுவாவுக்கும் கீழ்ப்படிந்தது முக்கிய காரணமாக இருந்தது.

ஒரு தலைவரிடமிருந்து மற்றொரு தலைவருக்கு தொடர்ச்சி (continuity) இருக்க வேண்டும்;

ஆனால் அவசியமாக ஒரே மாதிரியான ஒற்றுமை (conformity) இருக்க வேண்டியதில்லை.

ஏனெனில் ஒவ்வொரு தலைவரும் தனித்துவம் உடையவர்;
அவர்கள் தனது தனித்துவத்தை நிலைநிறுத்த வேண்டும்.