"மிகப்பெரிய தேவனுடைய மனிதன்" — யார்?
*உங்கள் சிந்தனைக்கு.*
*Who is the great man of God .*
"மிகப்பெரிய தேவனுடைய மனிதன்" — யார்?
இன்றைய கிறிஸ்தவ சமுதாயத்தில் நாம் அடிக்கடி கேள்விப்படும் வார்த்தைகள்:
"இவர் தேவனால் பயன்படுத்தப்பட்ட மிகப்பெரிய மனிதர்."
" *He was mightily used by God."*
"இவர் மிகப்பெரிய தேவனுடைய மனிதர்."
" *He was a great man of God."*
இப்படிப்பட்ட வார்த்தைகள் பெரும்பாலும் முழுநேர ஊழியர்களைக் குறித்தே சொல்லப்படுகின்றன.
இந்த வார்த்தைகளை நான் கேட்கும் போதெல்லாம் எனக்கு இரண்டு கேள்விகள் எழுகின்றன.
*முதலாவது, இப்படிப்பட்ட பட்டங்கள் முழுநேர ஊழியர்களுக்கு மட்டும்தான் உரியதா? ஏன் சாதாரண* *விசுவாசிகளைக் குறித்து இப்படிப்பட்ட சாட்சிகளை* *நாம் கூறுவதில்லை?*
இரண்டாவது, *புதிய ஏற்பாட்டில் யாரையாவது குறிப்பிட்டு, "இவரே மிகப்பெரிய தேவனுடைய மனிதர்* " *என்று ஒரு சிறப்புப் பட்டம் வழங்கப்பட்டிருக்கிறதா?*
இந்தக் கேள்விகளை வேதத்தின் வெளிச்சத்தில் சற்று தியானிப்போம்.
*முழுநேர ஊழியர்களை மட்டும் குறிவைத்து இப்படிப்பட்ட பட்டங்களை வழங்குவது வேதத்தின்* *சமநிலையான போதனையாகத் தெரியவில்லை* .
தேவன்* ஒருவரை முழுநேர ஊழியத்திற்கும், மற்றொருவரை வேறு அழைப்பிற்கும் அழைக்கலாம். ஆனால் அழைப்பின் தன்மையில் பெருமை இல்லை;
அழைத்தவருக்குக் கீழ்ப்படிவதில்தான் மகிமை இருக்கிறது.
ஒரு விசுவாசியோ, ஒரு முழுநேர ஊழியரோ—இருவரையும் தேவன் ஒரே அளவுகோலின்படியே மதிப்பிடுகிறார்.
அவர் தேவனுடைய சித்தத்தை எந்த அளவுக்கு நிறைவேற்றுகிறார்?
அவருக்குக் கொடுக்கப்பட்ட தாலந்துகளையும் கிருபைகளையும் எந்த அளவுக்கு உண்மையோடு பயன்படுத்துகிறார்?
தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக எவ்வளவு தியாகமாகவும், பரிசுத்தமாகவும், அர்ப்பணிப்போடும் வாழ்கிறார்?
இவைகளின் அடிப்படையிலேயே தேவன் ஒரு மனிதனின் மகத்துவத்தை மதிப்பிடுகிறார்.
உண்மையில், இந்தப் பட்டத்தைப் பெற *அனைவரும் ஒரே ஆவிக்குரிய ஓட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இதில் முழுநேர ஊழியர்களுக்கு என்று தனி track ஒன்றும் இல்லை. எல்லோரும் ஒரே* *track-ல்தான் ஓடுகிறார்கள்* .
எனவே, ஆவிக்குரிய தலைவர்கள் சிலரை மட்டும் "இவர் மிகப்பெரிய தேவனுடைய மனிதர்" என்று உயர்த்திப் பேசுவதன் மூலம், அந்த மகத்துவத்திற்கான ஓட்டத்தில் மற்ற விசுவாசிகள் இல்லை என்ற எண்ணத்தை உருவாக்கிவிடக் கூடாது. இப்படிப்பட்ட அணுகுமுறை அறியாமலேயே ஒரு ஆவிக்குரிய பாகுபாட்டை உருவாக்கிவிடும்.
*மேலும், எந்த முழுநேர ஊழியரிடமாவது, "நான் சாதாரண விசுவாசியை விட ஒரு படி உயர்ந்தவன்" என்ற எண்ணம் அணு அளவுக்குக் கூட இருந்தால், அந்த மனப்பான்மை கிறிஸ்துவின் சரீரத்தில் தேவையற்ற பிரிவினை மனப்பான்மையை உருவாக்கும்.*
இது ஒரு ஆவிக்குரிய தீண்டாமை.
*உண்மையில், எண்ணற்ற * விசுவாசிகள் தேவனுடைய பரிபூரண சித்தத்தை உண்மையோடு நிறைவேற்றி, தங்களுடைய ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்திருக்கிறார்கள்.*
*ஆனால் அவர்களை "மிகப்பெரிய தேவனுடைய மனிதர்" என்று நாம் அரிதாகவே சாட்சியப்படுத்துகிறோம்*
. " *நல்ல விசுவாசி" என்ற ஒரு குறுகிய வட்டத்திற்குள் அவர்களை வைத்துவிட்டு, அவர்களுக்குரிய* *மதிப்பை வழங்காமல் விடுகிறோம்.*
இதை முழுநேர ஊழியர்களும், சபைகளும் கவனமாகத் தவிர்க்க வேண்டும்.
புதிய ஏற்பாட்டின் பார்வை.
புதிய ஏற்பாட்டில் எந்த ஒரு தனிநபருக்கும் "இவரே மிகப்பெரிய தேவனுடைய மனிதர்" என்று ஒரு சிறப்புப் பட்டம் வழங்கப்படவில்லை.
மாறாக, வேதம் ஒரு மனிதனின் மகத்துவத்தை அவனுடைய புகழால், பதவியால், வரங்களால், அற்புதங்களால் அல்லது மக்கள் கூட்டத்தால் அளவிடவில்லை.
அவன் தேவனுடைய சித்தத்தை எந்த அளவுக்கு நிறைவேற்றினான் என்பதாலேயே அவன் தேவனுடைய பார்வையில் மதிப்பிடப்படுகிறான்.
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையின் மையம் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவதே. அதனால் அவருடைய சீஷர்களும் அதே பாதையில் நடக்க அழைக்கப்பட்டார்கள்.
ஒருவனுக்கு ஐந்து தாலந்துகள் கொடுக்கப்பட்டிருந்தாலும், இன்னொருவனுக்கு இரண்டு தாலந்துகள் மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தாலும், தேவன் எதிர்பார்ப்பது ஒப்பீடு அல்ல; உண்மையுள்ள நிர்வாகம் (மத்தேயு 25:14–30).
தேவன் ஒரு மனிதனுக்குக் கொடுத்த கிருபை, வரம், வாய்ப்பு, அறிவு, செல்வாக்கு ஆகியவற்றை அவன் எந்த அளவுக்கு முழுமையாகப் பயன்படுத்தி, தியாகமுள்ள வாழ்க்கையால் தேவனுடைய ராஜ்யத்திற்காக செலவழித்தான் என்பதே முக்கியம்.
அப்போஸ்தலனாகிய பவுல்,
"தேவனுடைய கிருபையை வீணாகப் பெறவில்லை; அவர்களெல்லாரையும் பார்க்கிலும் அதிகமாய் பிரயாசப்பட்டேன்; ஆனாலும் நான் அல்ல, என்னோடிருக்கிற தேவனுடைய கிருபையே."
(1 கொரிந்தியர் 15:10)
என்று கூறுகிறார்.
அவர் தன்னை உயர்த்தவில்லை; தேவனுடைய கிருபையை உண்மையோடு பயன்படுத்தியதையே சுட்டிக்காட்டுகிறார்.
தேவனுடைய ராஜ்யத்தில் மகத்துவத்தின் அளவுகோல் முற்றிலும் வேறுபட்டது.
கர்த்தராகிய இயேசு,
"உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்." (மத்தேயு 20:26)
என்று கூறினார்.
இங்கே மகத்துவம் அதிகாரத்தினால் அல்ல; ஊழியத்தினால் அளவிடப்படுகிறது.
ஆகவே, தேவனுடைய பார்வையில் மகத்துவத்தின் அளவுகோல்கள்
தேவனுடைய சித்தத்தை எந்த அளவுக்கு நிறைவேற்றுகிறான்?
தேவன் கொடுத்த தாலந்துகளையும் கிருபைகளையும் எந்த அளவுக்கு உண்மையோடு பயன்படுத்துகிறான்?
அவனுடைய வாழ்க்கை எவ்வளவு பரிசுத்தமாகவும், தியாகமாகவும், அர்ப்பணிப்பாகவும் இருக்கிறது?
இந்த மதிப்பீட்டை முழுமையாகச் செய்யத் தகுதியானவர் தேவன் ஒருவரே.
இறுதியாக...
2 தீமோத்தேயு 3:16–17-ல்,
"தேவனுடைய மனிதன் எல்லா நற்கிரியைக்கும் தகுதியுள்ளவனாக முழுமையாக ஆயத்தப்படும்படி."
என்று கூறப்படுகிறது.
இந்த வசனம் உடனடியான சூழலில் தீமோத்தேயு போன்ற தேவனுடைய ஊழியக்காரனை நோக்கிச் சொல்லப்பட்டிருந்தாலும், தேவனுடைய வார்த்தையால் ஆயத்தப்பட வேண்டிய இந்தக் கொள்கை எல்லா விசுவாசிகளுக்கும் பொருந்துகிறது.
எனவே, தேவனுடைய சித்தத்தை உண்மையோடும் முழுமையோடும் நிறைவேற்றி, தனக்குக் கொடுக்கப்பட்ட தாலந்துகளையும் கிருபையையும் முழுமையாகப் பயன்படுத்தி, இறுதிவரை உண்மையோடு நிலைத்திருக்கும் ஒவ்வொரு விசுவாசியும் தேவனுடைய பார்வையில் மகத்துவமுள்ள தேவனுடைய மனிதனே.
முடிவுரை
தேவனுடைய ராஜ்யத்தில் மகத்துவத்தின் அளவுகோல்:
எவ்வளவு பேர் நம்மை அறிந்திருக்கிறார்கள் என்பது அல்ல.
எவ்வளவு15:10 பெரிய சபையை நடத்துகிறோம் என்பது அல்ல.
எத்தனை அற்புதங்களைச் செய்தோம் என்பது அல்ல.
எத்தனை பட்டங்களைப் பெற்றிருக்கிறோம் என்பது அல்ல.
மாறாக,
தேவனுடைய சித்தத்தை எந்த அளவுக்கு நிறைவேற்றினோம்?
நமக்குக் கொடுக்கப்பட்ட தாலந்துகளை எந்த அளவுக்கு உண்மையோடு பயன்படுத்தினோம்?
நமக்குக் கொடுக்கப்பட்ட கிருபையை வீணாக்காமல் வாழ்ந்தோமா?
தியாக வாழ்க்கையால் கிறிஸ்துவை மகிமைப்படுத்தினோமா?
இவைகளே தேவனுடைய பார்வையில் உண்மையான மகத்துவத்தின் அளவுகோல்கள்.
எனவே, புதிய ஏற்பாட்டின் பார்வையில் "பெரிய தேவனுடைய மனிதன்" என்பது ஒரு பட்டம் அல்ல; தேவனுடைய சித்தத்தை உண்மையோடு நிறைவேற்றி, இறுதிவரை நிலைத்திருக்கும் வாழ்க்கைக்குக் தேவன் அளிக்கும் மதிப்பீடாகும்.