Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

*நெகேமியாவின் புத்தகம் – வேதபாடம் 12* *Expository Commentary on the Book of Nehemiah.*
✍️ **உங்கள் சிந்தனைக்கு* .
*
*நெகேமியாவின் புத்தகம் – வேதபாடம் 12*

*Expository Commentary on the Book of Nehemiah.*

நெகேமியாவின் புத்தகத்தில் 8ஆம் அதிகாரம் மிகவும் முக்கியமானதாகும்.

7ஆம் அதிகாரம் வரை, நெகேமியா தனது சுயசரிதை போல நடந்த நிகழ்வுகளை பதிவு செய்துள்ளார்.
ஆனால் 8ஆம் அதிகாரத்திலிருந்து 13:30 வரை, எஸ்ரா செய்த ஆன்மீக ஊழியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
7ஆம் அதிகாரத்திற்குப் பிறகு, 13:31ல் தான் நெகேமியா மீண்டும் தன்னைப் பற்றி தனிப்பட்ட முறையில் குறிப்பிடுகிறார்.

எருசலேம் ஆலயம் மீண்டும் கட்டப்பட்டது, மற்றும் நகரின் மதில்கள் புதுப்பிக்கப்பட்டது போன்ற நிகழ்வுகளை முழுமையாக புரிந்துகொள்ள, எஸ்ரா மற்றும் நெகேமியா புத்தகங்களை இணைத்து பார்க்க வேண்டும்.

*எஸ்ரா இல்லாமல் நெகேமியா முழுமையில்லை; நெகேமியா இல்லாமல் எஸ்ரா* *நிறைவடையாது.*

? முக்கிய வரலாற்றுக் காலவரிசை
யூதர்கள் திரும்பி வந்த ஆண்டு – கி.மு. 538
பெர்சிய அரசன் கோரேசு உத்தரவின்படி, செருபாபேல் தலைமையில் முதல் திரும்புதல் நடந்தது.
இரண்டாம் ஆலயம் கட்டி முடிக்கப்பட்ட ஆண்டு – கி.மு. 516
(எஸ்ரா 6:15)

எஸ்ரா எருசலேம் வந்த ஆண்டு – கி.மு. 458
(எஸ்ரா 7ஆம் அதிகாரம்)
இதன் மூலம் ஆன்மீக சீர்திருத்தம் ஆரம்பமானது.

நெகேமியா எருசலேம் வந்த ஆண்டு – கி.மு. 445
(நெகேமியா 2ஆம் அதிகாரம்)
மதில் கட்டும் பணி தொடங்கி, 52 நாட்களில் நிறைவடைந்தது.

? வேதாகமக் கருத்தரங்கு (Bible Conference)

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, நெகேமியா ஒரு பெரிய கூட்டத்தை ஏற்பாடு செய்தார். *இது ஒரு வேதாகம கருத்தரங்கம் (Bible Conference) என வியர்ஸ்பி என்கிற வேத அறிஞர் கூறுகிறார்.*
இந்தக் கூட்டத்தில் எஸ்ரா அழைக்கப்பட்டார். பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்களான தோரா (Torah) சுருள்கள் கொண்டுவரப்பட்டன. குறிப்பாக உபாகமம் புத்தகத்தில் உள்ள வசனங்கள் விளக்கப்பட்டதாகக் காணப்படுகிறது.
எஸ்ரா தேவனுடைய வார்த்தையை விளக்கியபோது, மக்கள் அனைவரும் அழுதார்கள். இது தேவனுடைய வார்த்தை அவர்களின் இருதயங்களை ஆழமாகத் தொட்டதைக் காட்டுகிறது.

*நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சத்தியங்கள்*

1 . அழைப்பை அறிந்த பணிவு
நெகேமியா தனது அழைப்பை அறிந்து, *வேதத்தை விளக்குவது தன் பொறுப்பு அல்ல என்பதை* *உணர்ந்து, அந்தப் பொறுப்பை எஸ்ராவிடம் ஒப்படைத்தார்.*
2.அவர் உசியா அரசனைப் போல தன் எல்லையை மீறவில்லை.

இரண்டாம் நிலை பணிவுடன் சேவை.

3.இந்தப் புத்தகத்தின் இறுதி வரை, எஸ்ராவின் ஊழியத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
(He played a second fiddle) – அவர் பின்னணியில் இருந்து பணிவுடன் சேவை செய்தார்.
ஒன்றிணைந்த ஊழியத்தின் அவசியம்
தேவனுடைய ராஜ்ய வளர்ச்சிக்கு அனைவரின் பங்களிப்பும் அவசியம் என்பதை நெகேமியா உணர்ந்திருந்தார்.
4.அதிகாரத்தில் இருந்தாலும் கீழ்படிந்திருந்தாரா
ஆளுநராக இருந்தாலும், தேவனுடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து நடந்தார்.
? நடைமுறைப் பாடம்
*இன்றைய சபைகளில், ஒவ்வொருவரும் தங்களுடைய அழைப்புக்குள் தங்களை மட்டுப்படுத்தி ஊழியம் செய்தால்:*
*பொறாமை வராது*
போட்டி உருவாகாது
ஏமாற்றம் ஏற்படாது
ஒவ்வொருவரும் தங்களுடைய ஆவிக்குரிய அழைப்பையும் தேவனுடைய திட்டத்தையும் அறிந்து அதன்படி செயல்பட்டால், ஊழியம் சமாதானமாகவும் ஆசீர்வாதமாகவும் இருக்கும்.