Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

*2 நாளாகமம் அல்லது* *குறிப்பேடுகள்* *புத்தகம்.* யூதா அரசன் ஆகாஷ் உணர்த்தும் பாடம் என்ன?
Ezekiel, [1/10/2026 10:40 PM]
.*உங்கள் சிந்தனைக்கு.*
*2 நாளாகமம் அல்லது* *குறிப்பேடுகள்* *புத்தகம்.*

*வேதபாடம் 13*
*அதிகாரம் 28*

யூதா அரசன் ஆகாஷ் உணர்த்தும் பாடம் என்ன?

நாம் இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டு  அவருடைய பிள்ளைகளாக இருக்கிறோம். உலகங்கள் படைப்பதற்கு முன்பாக அவருடைய‌  தீர்மானத்தின்படி நாம் அவருடைய விண்ணக அரசில் இணைக்கப்பட்டு இருக்கிறோம்.

இந்த மண்ணில் வாழ்கின்ற காலக்கட்டங்களில் நாம் அவருடைய வழிகளை விட்டு விலகிப் போகும் போதும் அவருடைய சித்தத்தை செய்யத் தவறும் போதும் கடவுள் அவ்வப்போது நமக்குச் சிட்சைகளைக் அளிப்பார்.

அப்படிப்பட்ட நேரங்களில் அவரோடு நாம் கொண்டிருக்கும் உறவு  பாதிக்கப்படலாம். ஆனால் ஒருபோதும் துண்டிக்கப்படாது.

அப்படி உறவுகள் பாதிக்கப்பட்ட நேரங்களில் அந்த உறவுகள் சீர்பட நம் வாழ்க்கையில் வரும் சிட்சைகளை சரியான முறையில் கையாள வேண்டும்.

அப்பொழுது
நாம் அவருடைய அன்பை உணர்ந்து அந்தச் சிட்சையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு அவரை விட்டு வழி விலகாமல் இருக்க வேண்டும்

அந்தக் காலக்கட்டங்களில் நாம் தேவனுக்கு விரோதமாகக் கலகம் செய்து அவரோடு நமக்குள்ள உறவை  நிரந்தரமாகத் துண்டித்து விடக் கூடாது. இதற்கு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அவ்வாறு நாம் அந்தச் சர்ச்சைகளின் நோக்கத்துக்கு எதிராகச் செயல்பட  முற்படும்பொழுது மிகுந்த கேட்டை நமக்கு நாமே வரவழைத்துக் கொள்வோம்.

தேவன் அனுமதித்த சிட்சை நம்மில் எந்தப் பலனையும் நமக்கு அளிக்காமல் போய்விடும்.
இப்படிப்பட்ட‌ ஒரு
நிகழ்வைத் தான் இந்த அதிகாரத்தில் பார்க்கலாம்.

யார் இந்த ஆகாஷ்
இவனுடைய தந்தையின் பெயர் யோதாம்
தாவீதின் வம்சத்தை சேர்ந்தவன்.
16 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான்.

தியானிக்க வேண்டிய வேத பகுதிகள்
2 இராஜாக்கள் 16
2 நாளாகமம் 28
ஏசாயா 7; 8; 14:28.

*இவன் கடந்து வந்த* *பாதைகள்.*
1.கர்த்தருக்குப் பிரியமில்லாத அரசனாக வாழ்ந்தான்.
அவன்  கர்த்தரை விட்டுப் பின்வாங்கிய இஸ்ரவேல் அரசர்களின் வழிகளில் நடந்தான்.
— 2 இராஜாக்கள் 16:3

தாவீதின் வழியில் நடக்கவில்லை.
பாகாலின் வழிபாட்டை ஊக்குவித்தான்.
தன் மகனையே தீயில் கிடத்தினான். (மோலேக் வழிபாடு)

2.தேவாலயத்தை அவமதித்தல்
கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளை மூடினான்.
பலிபீடங்களையும் பரிசுத்தப் பொருட்களையும் மாற்றினான்.
— 2 நாளாகமம் 28:24


எனவே யெகோவா அவனைச் சீரிய அரசர்களின் கையில் ஒப்புக்கொடுத்தார்.

சீரியர் அவனை முறியடித்து அவனுடைய மக்களில் அநேகரை கைதிகளாகச் சிறைப்பிடித்து, தமஸ்குவுக்குக் கொண்டுபோனார்கள்

அதே வேளையில் அவன் இஸ்ரயேல் அரசனின் கையிலும் ஒப்புக்கொடுக்கப்பட்டான்.

இஸ்ரயேலின் அரசன் இவன்மேல் பலத்த சேதங்களை ஏற்படுத்தினான்.
2 நாளாகமம் 28:5

எனவே அவனுடைய இறைவனாகிய யெகோவா அவனைச் சீரிய அரசர்களின் கையில் ஒப்புக்கொடுத்தார். . அவன் இஸ்ரயேல் அரசனின் கையிலும் ஒப்புக்கொடுக்கப்பட்டான்.

இஸ்ரயேலின் அரசன் இவன்மேல் பலத்த சேதங்களை ஏற்படுத்தினான்.
2 நாளாகமம் 28:5

இப்படி மாறி மாறிச் சீரியர்கள் கையிலும் இஸ்ரவேல் கையிலும் பாடுகளை அனுபவித்தான்.

இதனுடைய முழு விவரங்களை இந்த அதிகாரத்தில் ஒன்று முதல் 21 வரை உள்ள வசனங்களில் நாம் காணலாம்.

ஆனாலும் ஆகாஷ் மன்னன் துன்பத்தின் வழியாகச் சென்றாலும் கடவுளைச் சேரவில்லை. அதற்கு மாறாகக் கடவுளுக்கு எதிராக  நின்றான்.

ஆகாஷ் தனது கஷ்ட காலத்திலும் இன்னும் யெகோவாவுக்கு அதிக உண்மையற்றவனாகவே இருந்தான். அவன் தன்னைத் தோற்கடித்த தமஸ்குவின் தெய்வங்களுக்குப் பலியிட்டான்;

ஏனெனில்  “சீரிய அரசர்களின் தெய்வங்கள் அவனுக்கு உதவி செய்தன. நான் அவற்றிற்கு பலி செலுத்துவேன். அப்பொழுது அவை எனக்கும் உதவும்” என நினைத்தான். ஆனால் அவைகள் அவனுடைய வீழ்ச்சிக்கும், எல்லா இஸ்ரயேலின் வீழ்ச்சிக்கும் காரணமாயின.
2 நாளாகமம் 28:22-23.

கடவுள் தன் வாழ்க்கையில் அனுமதித்த பாடுகளின் மூலமாகப் பாடங்களைக் கற்றுக் கொள்ளவில்லை. கடவுளை நெருங்கிச் சேரவில்லை.

மாறாக ஜீவனுள்ள கடவுளை விட்டு விட்டு விக்கிரகங்களைத் தேடி ஓடினான். கடவுளுக்குக் கோபத்தை உண்டு பண்ணினான்.

ஏசாயா தீர்க்கதரிசி     எச்சரித்தும் அதற்கு இவன் செவி சாய்க்கவில்லை. ஏசாயா. 7:10-12

இறுதியில் கடவுளை நெருங்காமலே மரித்துப் போனான்.

இன்றைக்கும் விசுவாசிகள் நேரடியாக விக்கிரகங்களைத் தேடி ஓடாவிட்டாலும் துன்பமான வேளைகளில் கடவுள் வழி வகுத்த திட்டங்களின் மீது, பாதைகளின் மேல் நம்பிக்கை வைக்காமல் உலகத்திற்கு அடுத்த வழிமுறைகளை, கலாச்சாரங்களை, விதிமுறைகளை, உலகத்திற்கடுத்த சித்தாந்தங்களை பின்பற்றித் தேவனை மறுதலிக்கிறார்கள்.

வேதம் போதிக்கின்ற அடிப்படை கூறுகளை நிராகரிக்கிறார்கள்.
இதுவும் ஒரு வகையான பிசாசைப் பின்பற்றிச் சாத்தானை  ஆராதிக்கிற ஒரு முறை.

கர்த்தர் போதிக்கின்ற அடிப்படை உபதேசங்களை நீதிகளை, உண்மைகளை, சமரசம் செய்து கொள்வதும் ஒரு வகையில் கடவுளை மறுதலிப்பதாகும்.


இறுதியில் தங்களை தானே உருவ குத்தி கொள்கிறார்கள்.
பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட நிகழ்வுகள் ஒரு கதைகளாக இல்லாமல் நம் வாழ்க்கைக்கு ஒரு பாடமாக அமைந்திருக்கிறது.
எனவே பழைய ஏற்பாட்டை நாம் உலக ஆசீர்வாதத்தை‌ மையப்படுத்தி படிப்பதை தவிர்ப்பது நல்லது.