அழைப்பு எல்லோருக்கும் சமமல்ல..
ஏனோக்கும் தேவனோடு சஞ்சரித்து வாழ்ந்து , காணப்படாமற்போனான்.
ஆதியாகமம் 5:24
நோவாவும் தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்தான்.
ஆனால் அவன் 120 ஆண்டுகள் நீதியைப் பிரசங்கித்தான்.எந்த கனிகளையும் காணாமல் நிந்தனை, கேலி , கிண்டல் தனிமை ,ஏமாற்றம் இவற்றை தான் ஊழியத்தின் பிரதபலனாக இந்த உலகத்தில் பெற்றான். தன் குடும்பத்தில் உள்ள எட்டுப்பேரை மட்டுமே காப்பாற்றினான்.
தேவனோடு சஞ்சரித்த எனக்கு பாடுகள் இல்லாமல் எடுத்துக்கொண்டான்
தேவனோடு சஞ்சரித்த நோவா நிந்தனை, கேலி , கிண்டல் தனிமை ,ஏமாற்றம் இவற்றின் வழியாக நடத்தினார் .
இதுதான் தேவனின் இறையாண்மை.இருவருமே விசுவாச வாழ்க்கை நடத்தினாலும் தேவனுடைய அழைப்பு எல்லோருக்கும் சமமல்ல.