our status and calling
நாம் மறுபடியும் பிறக்கும்போது சமநிலையில்(with equal status) இருக்கிறோம்.ஆனால் பல்வேறு நிலைகளில(with different calling)அழைக்கப்பட்டிருக்கறோம். அதில் முழு நேரம், பகுதி நேரம் என்கிற பாகுபாடு தேவனிடத்தில் கிடையாது.
தேவனுக்கு முன்பாக நாம் எல்லோரும் வெவ்வேறு நிலைகளில் ஊழியம் செய்ய, கிறிஸ்துவுடன் வாழ அழைக்கப்பட்டு இருக்கிறோம். அழைப்பில் எந்தவித மேன்மையும் இல்லை. அந்த அழைப்பில் நாம் எவ்வாறு செயல்படுகிறோம், எப்படிஉண்மையாக இருக்கிறோம், எப்படி கர்த்தருக்கு பிரியமாய் இருக்கிறோம் என்பதை வைத்து தான் நமக்கு ஆண்டவர் பரிசுகளை வழங்குவார் .முழு நேரஊழியர்களுக்கு ஒரு வித அளவீடும் விசுவாசிகளுக்கு அளவீடும் என்பது கிடையாது.
தேவன் பட்ச பாதம் உள்ளவர் அல்ல. நாம் அழைக்கப்பட்ட அழைப்பில் நாம் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதை பொறுத்துதான் விண்ணுலகில் நமக்குரிய இடங்கள் கிடைக்கும். எனவே விசுவாசிகள் முழு நீள ஊழியத்திற்கு வரவில்லையே என்று மற்றவரை பார்த்து ஏங்க வேண்டிய அவசியம் இல்லை. நம்மை தாழ்வாகவும் நினைக்க அவசியம் இல்லை.
நமது அழைப்பை நாம் சரியாக நிறைவேற்றும் பொழுது நமக்குரிய பரிசை அவர் நிச்சயமாக அளிப்பார். 2ळी 5:10, 13:5-23