Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

For Your Thoughts

தேவனுடைய நீதி பரிபாலனத்தில் எல்லோரும் சமமே.
உங்கள் சிந்தனைக்கு:
யூதர்களுடைய வரலாற்றில் யாக்கோபு மிக முக்கியமானவன். அவன் தான் இஸ்ரவேல் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டவன் யாக்கோபின் வம்சத்தில் தான் இயேசு கிறிஸ்து பின்னாளில் பிறந்தார். இவ்வளவு ஆசீர்வாதங்களை பெற்றிருந்தாலும் அவன் செய்த அநீதிக்கு தேவன் அவனை தண்டிக்காமல் விடவில்லை. எந்த வழிமுறையின் மூலமாக ஏசாவை ஏமாற்றினானோ அதே வழிமுறையின் மூலமாக லபான் மூலமாக அவன் ஏமாற்றப்பட்டான். ஆள் மாறாட்டம் என்கிற ஒரு கருவியை பயன்படுத்தி தன் தகப்பனுடைய ஆசீர்வாதத்தை அவன் பெற்றுக் கொண்டான்.அதே ஆழ்மாறட்டத்தின் மூலமாகத்தான் யாக்கோபுக்கு ராகேலுக்கு பதிலாக லேயாள் கொடுக்கப்பட்டாள். தாயும் மகனும் சேர்ந்து தகப்பனையும் மூத்த சகோதரனையும் வஞ்சித்தார்கள். ஆனால் யாக்கோபு லாபான் லேயாள் ராகேல் ஆகிய மூன்றுபேர் இணைந்து நடத்திய நாடகத்தால் வஞ்சிக்கப்பட்டான். யாக்கோபு லேயாள் திருமணத்தில் ராகேலுக்கும்,லேயாளுக்கும் பங்கு இல்லை என்று நாம் நிராகரித்து விட முடியாது. They might be mute and silent spectators of the drama enacted by by Laban தேவன் நீதியை சரி கட்டுகிற தேவன் .எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் எவ்வளவாக தேவனால் பயன்படுத்தப்பட்டாலும் அவர்கள் செய்த அநீதிக்கு இந்த உலகத்திலேயே அவர்களுக்கு தேவன் தண்டனையை கொடுப்பார். தேவனுடைய நீதி பரிபாலனத்தில் எல்லோரும் சமமே.