நெகேமியாவின் புத்தகம் – வேதபாடம் 5
✍️ *உங்கள் சிந்தனைக்கு* .
நெகேமியாவின் புத்தகம் – வேதபாடம் 5
*Expository Commentary on the Book of Nehemiah*
நெகேமியா பெர்சிய அரசாங்கத்தில் உயர்ந்த பதவியில் இருந்தவன். அவன் அரசனின் அனுமதியுடன் எருசலேமுக்கு ஆளுநராக அனுப்பப்பட்டான்.
சாலமோன் கட்டியிருந்த பிரம்மாண்டமான ஆலயம் கிமு 586 ஆம் ஆண்டில் பாபிலோனியரால் அழிக்கப்பட்டது. பின்னர், தேவனுடைய கிருபையால் அந்த ஆலயம் மீண்டும் கட்டப்பட்டது. அது சாலமோன் கட்டிய ஆலயத்தின் மகத்துவத்தை எட்டாதபோதிலும், அதே இடத்தில் தேவனுக்காக எழுப்பப்பட்டது.
ஆனால், எருசலேம் நகரத்தின் மதில்கள் நீண்ட காலம் சீரமைக்கப்படாமல் இருந்தன. அவை இடிந்து விழுந்து மண்மேடுகளாக கிடந்தன. ஒரு நகரத்திற்கு பாதுகாப்பு அதன் மதில்களே ஆகும். ஆகையால், மதில்கள் இல்லாததால் நகரமும், அதில் இருந்த ஆலயமும் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தது.
இந்த நிலையை அறிந்த நெகேமியா, தேவனுடைய பாரத்தை மனதில் கொண்டு, அரசனிடம் அனுமதி பெற்று எருசலேமுக்கு வந்து மதில்களை மீண்டும் கட்டத் திட்டமிட்டான்.
அவன் இந்தப் பணியை ஆரம்பித்தவுடன் அவன் சந்தித்த முதல் எதிர்ப்பு பரிகாசம், கேலி, கிண்டல் என்பவையே.
⚔️ நெகேமியா சந்தித்த பரிகாசங்கள்
1. சன்பல்லாத் (சமாரியாவின் ஆளுநர்)
“இந்த பலவீனமான யூதர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் மதிலை மீண்டும் கட்டுவார்களா? ஒரே நாளில் முடிப்பார்களா? இடிபாடுகளில் இருந்த கற்களை உயிர்ப்பிப்பார்களா?”
(நெகேமியா 4:2)
2. தோபியா (அம்மோனியன்)
“அவர்கள் கட்டுகிற மதிலில் ஒரு நரி ஏறினாலும் அது உடைந்து போய்விடும்!”
(நெகேமியா 4:3)
3. கெஷேம் (அரேபியன்)
“நீங்கள் அரசனுக்கு விரோதமாகக் கலகம் செய்கிறீர்களா?”
இவ்வாறு, பலவிதமான பரிகாசங்களால் நெகேமியாவை சோர்வடையச் செய்யவும், பயமுறுத்தவும் முயன்றார்கள்.
“யூதர்கள் பலவீனமானவர்கள்”, “அவர்களால் முடியாது”, “அவர்கள் செய்கிற பணி நிலைக்காது” என்று தொடர்ந்து அவமதித்தார்கள்.
? நெகேமியாவின் பதில்
ஆனால், நெகேமியா அவர்களுடன் விவாதிக்கவில்லை. வார்த்தைகளால் போராடவில்லை.
அவர் அமைதியாக இருந்தார்
*தேவன் தன்னோடு இருப்பதை உறுதியாக நம்பினார்*
எதிரிகளின் பரிகாசங்களை தேவனிடம் எடுத்துச் சென்றார்
தன் செயல்களின் மூலம் தேவனுடைய கரம் தன் மேல் இருப்பதை நிரூபித்தார்
அவர் பேச்சால் அல்ல, செயலால் தேவனை மகிமைப்படுத்தினார்.
? ஆன்மீகப் பாடங்கள்
இந்த நிகழ்வின் மூலம் நாம் அறியக்கூடிய முக்கியமான உண்மைகள்:
*ஒரு விசுவாசி தேவனிடமிருந்து ஒரு பாரம், தரிசனம் அல்லது திட்டத்தைப் பெறும் போது*
*அவர் சந்திக்கும் முதல் எதிர்ப்பு பெரும்பாலும் பரிகாசம் தான்.*
“இது உன்னால் முடியாது”,
“இது உன் அழைப்பு அல்ல”,
“இது நிலைக்காது”
போன்ற வார்த்தைகள் எழலாம்.
ஆனால், விசுவாசி மனம் தளராமல்
தேவனை நோக்கி நிலைத்திருந்தால்
தேவன் தன் காரியத்தை நிறைவேற்றுவார்.
?️ வரலாற்று உண்மை
எருசலேமின் மதில்கள் சுமார் 140 ஆண்டுகள் இடிந்த நிலையில் இருந்தன.
ஆனால், நெகேமியா இன்னும் ஒரு பெர்சிய அரசாங்கத்தின் ஊழியன் அதை 52 நாட்களில் கட்டி முடித்தான்!
இது மனிதனால் அல்ல, தேவனுடைய உதவியால் நடந்த அதிசயம்.
? நிறைவுச் சிந்தனை
*ஒவ்வொரு* *விசுவாசிக்கும் தேவன் ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார்.*
அதை உணர்ந்து செயல்பட வேண்டியது நமது பொறுப்பு.
வேதத்தை அறிந்து, தேவன் பேசுவதை கேட்டு, அதன்படி நடந்தால்
நம்முடைய அழைப்பை நிறைவேற்ற முடியும்.
இன்றைய காலத்திலும்,
ஒவ்வொரு விசுவாசியும் தங்கள் சபைகளில் “நெகேமியாவாக” நிற்க அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
நாம் சொல்ல வேண்டிய ஒன்று:
“நான் பெரிய பணியில் இருக்கிறேன்; அதை விட்டு கீழே இறங்கி வரமாட்டேன்!” (நெகேமியா 6:3)
செருபாவில் ஒரு ராஜ வம்சத்தை சேர்ந்தவன்
எஸ்ரா ஒரு ஆசாரியன்.
நெகேமியா ஆசாரியன் அல்லாதவன்.
எனவே ஒரு தேவாலயம் கட்டப்பட்டு அதை சுற்றியுள்ள நகரத்தின் மதில்கள் கட்டப்படுவதற்கு இந்த மூன்று நபர்களும் அவசியம்.
*அதுபோல சபைகள் படுவதற்கும் அது பாதுகாக்கப்படுவதற்கும் தலைவர்களும் அவசியம் முழு நேர பணியாளர்களும்* *அவசியம்* *விசுவாசிகளும் அவசியம்.*
இந்த சத்தியத்தை சபைகள் என்று புரிந்து கொள்ளுமோ அன்றுதான் சபையில் உண்மையான மறுமலர்ச்சி ஏற்படும் முன்னேற்றம் உண்டாகும்.