Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

1 *நாளாகமம் புத்தகம் அல்லது 1 *குறிப்பேடுகள்* *புத்தகம்* *வேதபாடம்1.*

*உங்கள் சிந்தனைக்கு:*

1 *நாளாகமம் புத்தகம் அல்லது
1 *குறிப்பேடுகள்* *புத்தகம்*

*வேதபாடம்1.*

நாளாகமம் புத்தகங்களின் அறிமுகம்.
இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாகவே பழைய ஏற்பாட்டின் நூல்கள் கிரேக்க மொழியில் மொழிபெயர்க்கப்பட்டபொழுது இந்தப் புத்தகங்களுக்கு அளிக்கப்பட்ட பெயர் ஆங்கில மொழியில்
"Things left over or things left out" or" omissions" என்றும்
தமிழ் மொழியில்
"விடப்பட்ட காரியங்கள் அல்லது எஞ்சிய‌ மீதமுள்ள காரியங்கள்" என்கிற அர்த்தத்தில் புத்தகங்களுக்குத் தலைப்புகள் கொடுக்கப்பட்டன.

ஆனால் எபிரேய மொழியில் இந்தப் புத்தகங்களுக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு
ஆங்கிலத்தில் "Journals"என்கிற அர்த்தத்தில் அழைக்கப்படுகிறது.

இந்தப் புத்தகத்துக்கான சிறந்த கத்தோலிக்க மொழிபெயர்ப்பு "குறிப்பேடுகள்" என்பதாகும்.
எபிரேயர்களுடைய வேதாகமத்தில் இந்தப் புத்தகங்கள்தான் கடைசி புத்தகங்கள்.

இந்தப் புத்தகங்கள் யூத சாம்ராஜ்யம் பாபிலோனியர்களால் கைப்பற்றப்பட்டு பாபிலோனில் யூதர்கள் அடிமைகளாக வாழ்ந்த காலத்தில் எழுதப்பட்டது

1நாளாகமம் புத்தகத்தில் ஒன்று முதல் 9 வரை உள்ள அதிகாரங்களில் சொல்லப்பட்ட வம்ச வரலாறுகளைத் தவிர இந்த இரண்டு புத்தகங்களில் கூறப்பட்ட அனைத்து சம்பவங்களும் அரசர்களின் புத்தகம் மற்றும் 2 வது சாமுவேல் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஒன்று மற்றும் இரண்டு சாமுவேல் புத்தகங்களில் சொல்லப்பட்ட நிகழ்வுகள் பெரும்பான்மையானவை ஒன்று நாளாகமம் புத்தகத்திலும், அதேபோல் ஒன்று மற்றும் இரண்டு அரசர்கள் புத்தகத்தில் சொல்லப்பட்ட நிகழ்வுகள் இரண்டு நாளாகம புத்தகத்திலும் சொல்லப்பட்டுள்ளது.


ஆனால் மிகப் பெரிய வித்தியாசம் என்னவென்றால் ராஜாக்களின் புத்தகங்கள் மற்றும் ஒன்று மற்றும் இரண்டு சாமுவேல் புத்தகங்களில் சொல்லப்பட்ட நிகழ்வுகள் அனைத்தும் அரசியல் சம்பந்தமான‌ அல்லது வரலாற்று சம்பந்தமானகாரியங்கள். (Political or historical side)

ஆனால் இந்தக் குறிப்பேடுகள் புத்தகங்களில் யூதர்களின் மத சம்பந்தமான காரியங்களைப் பற்றி அதிகமாகக் குறிப்பிட குறிப்பப்பட்டுள்ளது.
குறிப்பாகத் தேவனுடைய ஆலயம் எருசலேமில் கட்டப்பட்ட காரியம், ஆசாரியர்கள் இவர்களுடைய பணிகள் இவைகளைப் பற்றி அதிகமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
(Religious and spiritual side)

இந்தப் புத்தகத்தில் இஸ்ரவேல் ராஜ்யத்தைக் குறித்து ஒரு சில குறிப்புகளே காணப்படுகின்றன.
எருசலேம் தேவாலயம்
கட்டப்படுகிற காரியங்களைக் குறித்தும், தாவீதின் வம்சத்தை குறித்துதான் அதிகமாக இந்தப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.யூத சாம்ராஜ்யத்தை குறித்தே அதிகம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவைகள் மாத்திரம் அல்ல,அம்மோன், அப்சலோம், அதோனியா இவர்களின் பரிதாப முடிவைக் குறித்தும், சாலொமோன் அரசனின் பின்மாற்றத்தைக் குறித்தும் அதிகமாக இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பழைய ஏற்பாட்டில் உள்ள மற்ற எந்தப் புத்தகத்தையும் விட நாளாகமம் நீண்ட வரலாற்றைக் கூறுகிறது.

முதல் ஒன்பது அதிகாரத்தில் கூறப்பட்ட வம்சாவளி தகவல்கள்
அது லூக்கா சுவிசேஷத்தில்
நற்செய்தி நூலில் சொல்லப்பட்டது போல ஆதாமிலிருந்து ஆரம்பிக்கிறது.
லூக்காவும் படைப்பிலிருந்து தன் காலம்வரை மனித வரலாற்றைச் சொல்கிறான்,

இந்த இரண்டு குறிப்புப் புத்தகங்கள் ‌ எருசலேமில் ஆலயம் கட்டப்பட்ட காரியங்கள், உடன்படிக்கைப் பெட்டியைத் திரும்பவும் எருசலேமுக்கு கொண்டு வந்த‌ நிகழ்வுகள் ஆராதனை பாடல்கள்,
திரும்பிய சிறைவாசிகள், மோசேயின் நியாயப்பிரமாணப்படி ஆராதனையை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்ற விருப்பம் ,இறுதியாகத் தாவீதின் வம்சத்தின் சிறப்பு போன்ற காரியங்களைக்‌ குறித்து புத்தகங்கள் அதிகமாக வலியுறுத்துகிறது.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், வேதாகமத்தில் ஆன்மீக செல்வம் நிறைய இருக்கும் புத்தகங்களில் நாளாகமமும் உள்ளது என்று Dr constable எழுதுகிற வார்த்தைகள் உண்மையானது.

வேதாகமத்தில் தேவன் 66 புத்தகங்களைக் குறித்து ஒரு நோக்கத்தை வைத்திருக்கிறார். அந்த அடிப்படையில்தான் அதன் நூலாசிரியர் அதை எழுதி இருக்கிறார்.
வேதத்தைத் தியானிக்கிற எந்த ஒரு விசுவாசியும் அந்த நோக்கத்தைச் சரியான முறையில் புரிந்து கொண்டால் அவன் அந்தப் புத்தகத்தில் காணப்படும் கடவுளுடைய வெளிப்படுத்தலை சரியான முறையில் அறிந்து கொள்வான்.
உதாரணமாக நான்கு சுவிசேஷங்களும் வெவ்வேறு நோக்கத்திற்காக எழுதப்பட்டுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே வரலாற்று புத்தகங்களைப் படிக்கும்பொழுது அந்தப் புத்தகங்கள் எழுதப்பட்ட அடிப்படை நோக்கங்களை நாம் சரியான முறையில் புரிந்து கொண்டால் நாம் சிறந்த ஒரு வேத வியாக்கியான வல்லுனராக மாற முடியும்.

Ezekiel, [9/22/2025 8:38 PM]
வேத புத்தகம் என்பது எந்த ஒரு விசுவாசிக்கும் ஒரு மூடு மந்திரம் அல்ல. ஒரு புத்தகத்தினுடைய சாவியை திறவுகோலை சரியான முறையில் பயன்படுத்தி அந்தப் புத்தகத்தைத் திறந்தால் அந்தப் புத்தகத்தில் உள்ளே உள்ள ொக்கிஷங்களை நாம் அறிந்து கொள்ள முடியும்.