Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

2 நாளாகமம் அல்லதுகுறிப்பேடுகள்* புத்தகம். வேத பாடம்12
*உங்கள் சிந்தனைக்கு.*

*2 நாளாகமம் அல்லது* *குறிப்பேடுகள்* புத்தகம்.
*வேத பாடம்12*

அரைகுறை மனதோடு
கர்த்தரை பின்பற்றிய யூத அரசன் அமத்சியா.

?*படிக்க*
2 இராஜாக்கள் 14:1–20
2 நாளாகமம் 25:1–28.

இவன் 25 வயதில் அரசனையில் அமர்ந்தான்.
29 ஆண்டுகள் ஆட்சி செய்தான்.

ஆரம்ப நாட்களில் இவன் யெகோவாவின் பார்வையில் சரியானதையே செய்தான். ஆனால் முழுமனதுடன் செய்யவில்லை.
*2 நாளாகமம் 25:2*

ஆரம்பத்தில் கடவுளுடைய வார்த்தைகளின்படி நடக்க தீர்மானித்து ஒரு சில வெற்றிகளைப் பெற்றான். பின் நாட்களில்
கடவுளுடைய வழிகளை விட்டு விலகி, தான் தோற்கடித்த அந்த சேயீர்‌ மக்கள் வழிபட்ட தெய்வங்களையே வழிபட ஆரம்பித்தான்.
இறுதியில் எதிரிகளின் சதியினால் கொலை செய்யப்பட்டான்.

இவனது வாழ்க்கையின் சிறப்பான பக்கங்கள்.
1. தனது தகப்பனாகிய அரசனைக் கொன்ற அதிகாரிகளைக் கொன்று போட்டான்.
*2 நாளாகமம் 25:3*

எனினும் அவன் அவர்களுடைய மகன்களைக் கொலை செய்யவில்லை.

“பிள்ளைகளுடைய பாவங்களுக்காகப் பெற்றோரோ, பெற்றோரின் பாவங்களுக்காகப் பிள்ளைகளோ கொல்லப்படக் கூடாது; ஒவ்வொருவரும் தனது சொந்தப் பாவங்களுக்காகவே சாக வேண்டும்” என்கிற‌ மோசேயின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தான்.
*2 நாளாகமம் 25:3-4*

2. இவன் ஏதோமியரோடு போராடுவதற்காக
இஸ்ரயேலில்
இருந்து 1,00,000
இராணுவ
வீரர்களை நூறு
தாலந்து வெள்ளி
கொடுத்து
கூலிக்கு
அமர்த்தினான்.
*2 நாளாகமம் 25:6*

இஸ்ரவேலின் சேனைகளோடு கடவுள் இல்லை என்ற காரணத்திற்காக அவர்களோடு போராடக் கூடாது என்கிற‌ கடவுளுடைய எச்சரிக்கைக்குக் கீழ்ப்படிந்து,
தான் கூலிக்கு கொடுத்த பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தான்.

இஸ்ரவேல் ஜனங்களைத் தன் படைகளோடு இணைப்பதற்காகத் தான் கொடுத்த பணத்தைப் பற்றி கவலைப்படாமல் இழந்ததைப் பார்க்கிலும் அதிகமாக கடவுள் தனக்கு தருவார் என்று விசுவாசித்தான்.
இதனால் மிகப் பெரிய வெற்றியை சம்பாதித்தான்.

ஆனால் ‌அந்த வெற்றியை கர்த்தருக்கு அர்ப்பணிக்காமல் தான் வெற்றி பெற்ற அந்த கடவுளுக்கு அர்ப்பணித்தான்.
இது அவனுடைய வாழ்க்கையின் கருப்பு பகுதி.

அதன் விளைவாக அவனுடைய வீழ்ச்சி ஆரம்பமாகியது. இறுதியில் சதிகாரர்களால் கொலை செய்யப்பட்டான்.

இவனுடைய வரலாற்றின் மூலம் தேவன் நமக்கு உணர்த்தும் பாடங்கள்.
1. எந்த ஒரு காரியமாக இருந்தாலும் ஊழியமாக இருந்தாலும், வேலையாக இருந்தாலும் கர்த்தரை முழுமையாக திருப்திப்படுத்தும் வகையில் செய்ய வேண்டும்.
அரைகுறை மனதோடு எந்த ஒரு ஊழியத்தையும் நாம் கடவுளுக்காக செய்யக்கூடாது.
2. கர்த்தரோடு சமாதானம் இல்லாத அல்லது கர்த்தருக்கு விரோதமாக உள்ள மனிதர்களோடு எந்த தொடர்பையும் வைத்துக் கொள்ளக்கூடாது . அவர்களோடு உறவு அல்லது சம்பந்தம் வைத்துக் கொள்ளக் கூடாது. அதற்காக நாம் எந்த இழப்பையும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் ‌.
நாம் சந்திக்கும் இழப்பை பார்க்கிலும் கடவுள் நமக்கு அளிக்கும் ஆசீர்வாதம் அதிகமாக இருக்கும்.
*25:9*

3. கர்த்தருக்கு பிரியம் இல்லாத அல்லது கர்த்தருக்கு விரோதமாக உள்ள மனிதர்கள் அளிக்கின்ற ஆதரவைப் பார்க்கிலும் தேவன் நமக்கு அளிக்கும் ஆதரவு உயர்ந்தது.

நாம் கடவுளுக்காக காரியத்தை நடத்தும் பொழுது, கடவுளே நம்முடைய சத்துருக்களை விழப் பண்ணுவார்.
ஒத்தாசை செய்யவும் விழப்பண்ணவும் தேவனாலே கூடும் என்றான்.
*2 நாளாகமம் 25:8*

3. அதே வேளையில் நம்முடைய வெற்றியை கடவுளுக்கு அர்ப்பணிக்காமல், கடவுளுக்கு மகிமை செலுத்தாமல் அந்த வெற்றியை விக்கிரகங்களுக்கோ அல்லது மனிதர்களுக்கோ சமர்ப்பிப்போமென்றால் அதே எதிரிகளால் நாம் வீழ்ச்சி அடைந்து அவமானப்படுவோம்.

முழு மனதோடு தேவனை பின்பற்ற நாம் அழைக்கப்பட்டு இருக்கிறோம்.