Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

நெகேமியாவின் புத்தகம் – வேதபாடம் 9 Expository Commentary on the Book of Nehemiah
✍️ உங்கள் சிந்தனைக்கு.

நெகேமியாவின் புத்தகம் – வேதபாடம் 9

Expository Commentary on the Book of Nehemiah

நெகேமியா புத்தகத்தின் 13 அதிகாரங்களில் 6ஆம் அதிகாரம் மிகவும் முக்கியமானதாகும்.
இந்த அதிகாரம், ஊழியம் செய்ய விரும்புகிற ஒரு விசுவாசி எப்படி தைரியத்துடனும் தெளிவுடனும் இருக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுக்கிறது.

இந்த அதிகாரத்தில் நெகேமியா கூறிய இரண்டு முக்கியமான தைரியமான வார்த்தைகளை நாம் பார்க்கலாம்:
நெகேமியா 6:3
“நான் பெரிய வேலையைச் செய்கிறேன்; ஆகையால் நான் இறங்கி வரமாட்டேன்.”

"I am doing a great work, so that I cannot come down."

நெகேமியா 6:11

“என்னைப்போன்ற மனிதன் ஓடிப்போவானோ? உயிர் பிழைக்கும்படி தேவாலயத்திற்குள் சென்று பதுங்குவானோ? நான் அப்படிச் செய்யமாட்டேன்.”

"Should such a man as I flee? and who is there, that, being as I am, would go into the temple to save his life? I will not go in."

ஊழியம் செய்ய விரும்பும் ஒவ்வொரு விசுவாசிக்கும் இப்படிப்பட்ட மன உறுதியும் ஆவிக்குரிய தெளிவும் (Determination & Discernment) அவசியம்.

Believers must have such determination and discernment.

? முதல் வார்த்தையின் பின்னணி
வேதாகமத்தின் 66 புத்தகங்களும் எல்லா விசுவாசிகளுக்காகவே எழுதப்பட்டவை. முழுநேர ஊழியர், பகுதி நேர ஊழியர் என்ற வேறுபாடின்றி, எல்லோருக்கும் பொருந்தும்.

நெகேமியா:
தீர்க்கதரிசி அல்ல
ஆசாரியன் அல்ல
அரசனும் அல்ல
அவர் ஒரு அரசாங்க அதிகாரி. பெர்சிய சாம்ராஜ்யத்தின் ராஜாவுக்குப் , பாணங்களைப் பரிமாறுகிறவன் (cupbearer) ஆக உயர்ந்த நிலை வகித்தவர்.
எருசலேம் நகரத்தின் மதில்கள் இடிக்கப்பட்டு அவமானமாக இருந்ததை அறிந்தபோது:
அந்த நிலையை மனதில் ஏற்றுக்கொண்டார்
தேவனின் சித்தத்தை உணர்ந்தார்
தன் உயர்ந்த பதவியை விட்டுவிட்டு
அரசனின் அனுமதியுடன் எருசலேமின் ஆளுநராக வந்து
மதில்களை மறுபடியும் கட்டத் தொடங்கினார்.

எதிர்ப்புகளும் சோதனைகளும்

இந்தப் பெரிய பணியைச் செய்யும்போது:
வெளிப்புற எதிரிகள் (சன்பல்லாத், தொபியா, கேஷேம்)
யூத ஜனங்களுக்குள் இருந்த யூத பிரபுக்கள்
இணைந்து:
பயமுறுத்தினர்
அச்சுறுத்தினர்
பரிகசித்தனர்
சோர்வடையச் செய்தனர்
மதில்கள் கட்டப்பட்டும் வாசல்கள் இன்னும் பொருத்தப்படாத நிலையில், எதிரிகள் நெகேமியாவை ஓனோ சமவெளியில் சந்திக்க அழைத்தனர்.
? இதன் நோக்கம்:
அவரை ஊழியத்திலிருந்து திசைதிருப்புதல்.
அப்பொழுது நெகேமியா சொன்னார்:
“நான் பெரிய வேலையைச் செய்கிறேன்; ஆகையால் நான் வரமாட்டேன்.”
இது வெறும் மறுப்பு அல்ல —
? இது ஆவிக்குரிய விவேகம் (discernment)
அவர்:
அழைப்பின் பின்னால் உள்ள சதியை அறிந்தார்
தேவனுடைய சித்தத்துக்கு எதிரானதை நிராகரித்தார்
? இன்றைய பயன்பாடு
இன்றும் ஒரு விசுவாசி:
தேவனுடைய சித்தத்தில் நடக்க முயற்சிக்கும் போது
பல “ஓனோ சமவெளி” போன்ற திசைதிருப்பல்கள் வரும்.
அவைகள்
நல்லது போல தோன்றும்
ஆனால் ஆவிக்குரிய முன்னேற்றத்தை தடுக்கக்கூடியவைகள்.
அப்பொழுது நாம் சொல்ல வேண்டிய வார்த்தை:
“I will not come down” / “நான் இறங்கி வரமாட்டேன்”

இரண்டாவது சோதனை – உள்ளிருந்து
முதல் தாக்குதல் வெளியில் இருந்து வந்தது.
இரண்டாவது தாக்குதல் உள்ளிருந்து வந்தது.
“செமாயா” என்றவன்:
தீர்க்கதரிசி போல நடித்து
நெகேமியாவை ஆலயத்திற்குள் ஒளியச் சொல்லி
அவனை பயமுறுத்தி அவமானப்படுத்த முயன்றான்
இது ஒரு கண்ணி.
ஏனெனில்:
நெகேமியா ஆசாரியன் அல்ல
ஆலயத்திற்குள் செல்லுவது தவறு
அது அவரது சாட்சியை கெடுக்கும்‌.

இது மட்டும் ஆல்ல
நெகேமியாவை ஆலயத்திற்கு உள்ளாக அடைத்து வைத்து அல்லது அடக்கி வைத்து அதன் மூலம் அவனுடைய ஆளுமைக்கு களங்கம் கற்பிக்க முயற்சிதான்.

அதனால் அவர் சொன்னார்:
“என்னைப்போன்றவன் ஓடிப்போவானோ? நான் போவதில்லை!”
⚡ முக்கியப் பாடம்
ஊழியத்தில்:
வெளிப்புற எதிரிகளுக்கு மட்டுமல்ல
போலியான நட்புகளுக்கும் விழிப்புடன் இருக்க வேண்டும்
சிலர்:
நண்பர் போல நடிப்பார்கள்
ஆனால் ஊழியத்தை கெடுக்க முயல்வார்கள்.

ஒவ்வொரு விசுவாசியும் தன்னுள் சொல்லிக்கொள்ள வேண்டியவை:
“நான் செய்கிற ஊழியத்தை விட்டு இறங்கி வரமாட்டேன்”
“என்னை தவறான இடத்தில் அடைக்க முடியாது”
“என் தரிசனம் தேவனிடமிருந்து வந்தது”
“நான் விலைக்கு வாங்கப்பட்டவன்; விலை போக மாட்டேன்”

"நான் முதலில் சரீரமாகிய சபையில் அங்கமாக இருக்கிறேன்"

இறுதியாக
ஒரு விசுவாசி:
அர்ப்பணிப்புடன்
தெளிவான தரிசனத்துடன்
தேவனுடைய சித்தத்தில் நிலைத்திருக்கும்போது
தேவனுடைய கரம் அவனுடன் இருக்கும்.
ஒவ்வொரு விசுவாசியும்:
தனக்குக் கொடுக்கப்பட்ட தரிசனத்தை
சபையிலும் (local church)
கிறிஸ்துவின் சரீரத்திலும் (Body of Christ)
நிறைவேற்றும்போது,
தேவனுடைய ராஜ்யம் நம்மால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு விருத்தியடையும்..