Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

நெகேமியாவின் புத்தகம் வேதபாடம் 10
உங்கள் சிந்தனைக்கு.

நெகேமியாவின் புத்தகம் வேதபாடம் 10

Expository commentary on the book நெகேமியா நான்கு வகையான எதிர்ப்புகளை சந்தித்தார்.
1. பரிகாசம், கேலி, கிண்டல்கள்
நெகேமியா:4:2-4
நெகேமியா கட்டுகிற மதில்கள் ஒரு நரி ஏறிப்போனால் கூட அவைகள் இடிந்து போகும் என்று இளக்காரம் செய்தார்கள்.
2. பயமுறுத்தல்கள்.
எதிரிகள்
யூத ஜனங்கள் மீது போர் தொடுக்க முன் வந்தார்கள்.
4:7-9
3. சோர்வடையச் செய்தார்கள்.அதனால்
யூதர்களுடைய பலம் குறைந்து போனது
4. பயம்
கொன்று விடுவோம் என்று மிரட்டினார்கள் 4:11
இதையெல்லாம் பார்த்து நெகேமியா பயப்படாமல் கட்டப்பட்ட ஆலயத்தையும் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற மதில்களையும் பாதுகாக்க ஒரு சிறந்த பாதுகாப்பு வழிமுறைகளை ஏற்படுத்தினார்.

அது என்னவென்றால் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறவர்களில் பாதி நபர்களை பாதுகாப்பிற்கும் பாதி நபர்களை மட்டும் கட்டுமான வேலைகளுக்கு ஈடுபடுத்தினான். ‌ கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறவர்கள் கூட ஒரு கையில் ஆயுதத்தையும் மற்றொரு கையினாலே மதில்களை கட்டுகிற வேலையை செய்தார்கள்.
தியானிக்க நெகேமியா 4:16,17
அது தவிர எதிரிகளின் வரவை உடனுக்குடன் அறிவிக்க எக்காளம் ஊதுகிறவர்களையும் அருகில் வைத்தான்‌.
இப்படியாக மதில்களை கட்டுவதிலும் அக்கறை செலுத்தினான் பணிகளை தடுக்க முயற்சி செய்யும் எதிரிகளை பாதுகாக்கவும் பாதுகாப்பு வழிமுறைகள் ஏற்படுத்தினான்.
இதன் மூலம் தேவன் நமக்கு உணர்த்தும் பாடங்கள்.
நாம் ஆரம்பிக்கும் ஊழியங்களை வளர்ப்பதும் முன்னேற்றுவதும் எவ்வளவு அவசியமோ அது போல் நாம் வளர்த்து வருகிற ஊழியங்களை பாதுகாப்பதும் முக்கியம்.
சத்துரு நமது ஊழியங்களை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிவதற்கு முயற்சிகளை எடுப்பான்.
பிசாசு வெறுக்கிற மிக முக்கியமான ஒரு காரியம் என்னவென்றால் அவன் விசுவாசிகளை செயல்பட விடாமல் தடுப்பான். ஏனென்றால் அதிகமான விசுவாசிகள் தேவனுடைய பணியை ஈடுபடும் பொழுது அது அவனுடைய ராஜ்ய விருத்தியை பாதிக்கும். தலைவர்களது ஊழியம் எப்படி அவனுக்கு பாதிப்பு ஏற்படுத்துமோ அதை போல் உற்சாகமான விசுவாசிகளுடைய ஊழியமும் அவனுக்கு மிகப்பெரிய பாதிப்பை இழப்பை ஏற்படுத்தும்.
இதை சபைத் தலைவர்கள் உணர்ந்தால் நன்று. விசுவாசிகளை எந்த அளவுக்கு அதிகமாக ஒரு ஊழியன் ஊழியத்தில் பயன்படுத்துகிறானோ அவனே சிறந்த தலைவன்.
எனவே விசுவாசிகள் தங்களுடைய ஊழியத்தை பாதுகாக்கின்ற காரியத்திலும் விழிப்பாக இருக்க வேண்டும்.

ஊழியத்தை கட்டுவதும், அதை பாதுகாப்பதும் ஊழியத்தினுடைய வெற்றியின் இரண்டு பக்கங்கள். வெறுமனே ஊழியங்களை ஆரம்பிப்பதோடு முடித்து விடக்கூடாது அதை கண்ணும் கருத்துமாக பாதுகாக்க வேண்டியது விசுவாசிகளுடைய கடமை.

ஒரு விசுவாசி எனக்கு ஊழியுமே கிடையாது என்று எதையும் செய்யாமல் இருந்துவிடக் கூடாது.
கடவுள் கொடுத்த தரிசனத்தை நிறைவேற்றுகிற ஒரு ஊழியத்தை ஒவ்வொரு விசுவாசியும் பெற வேண்டும். அதற்காக உழைக்க வேண்டும். அதை பாதுகாக்க வேண்டும். இந்த சத்தியம் எல்லாருக்கும் பொதுவானது.
இறுதியாக ஒரு விசுவாசிக்கு வேலை செய்யக்கூடிய மனம் வேண்டும்‌.
ஜெபிக்க கூடிய இதயம் வேண்டும்‌.
விழிப்பாக இருக்கக்கூடிய கண்கள் வேண்டும். கேட்கக்கூடிய செவிகள் வேண்டும். எல்லாவற்றுக்கு மேலாக ஊழியத்திற்கு அர்ப்பணிக்க கூடிய ஒரு சரீரம் அவனுக்கு தேவை. A believer must have a mind to work, a heart to pray, and an eye to watch and an ear to hear God's Word..

எசேக்கியேல் ‌சண்முகவேல்.