தேவனுடைய திட்டத்தை தன் கையில் எடுத்த ரெபேக்காள்.
உங்கள் சிந்தனைக்கு:
தேவனுடைய திட்டத்தை தன் கையில் எடுத்த ரெபேக்காள்.
குழந்தைகள் வயிற்றில் இருக்கும் போதே அவர்களைப் பற்றி தேவனிடம் விசாரித்து தெளிவான வெளிப்பாட்டை பெற்றுக் கொண்டவள் இந்த ரெபேக்காள். *இளையவன் மூத்தவனை ஆண்டு கொள்வான்* *என்பதை தெளிவாக அறிந்தவள்.*
ஆனால் அந்த காலம் வரை காத்திருக்காமல் ஈசாக்கு ஈசாவை ஆசீர்வதிக்க போகிறான் என்பது அறிந்து யாக்கோபை வற்புறுத்தி, பொய் சொல்ல வைத்து, தன் கணவனை ஏமாற்றி, அதற்குரிய முழு பழியையும் தான் ஏற்றுக் கொள்வதாக சொல்லி, தேவனுடைய காலத்திற்கு முந்தி யாக்கோபை Promote செய்ய முயற்சி *செய்தாள்.விளைவு அந்த முன்னேற்றத்தை கண்ணால் கூட பார்க்க முடியவில்லை.*
யாக்கோபை வெளியேற்றின *பிறகு தன் அன்பு மகனை தான் மரிக்கு மட்டும் பார்க்கவில்லை.*
தேவனுடைய சித்தத்தை அறிந்திருப்பது மட்டும் போதாது; அதை தேவனுடைய நேரத்திலும், தேவனுடைய வழியிலும் நிறைவேற அனுமதிக்க வேண்டும்.
நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள்.
1. தேவனுடைய வாக்குறுதிகளுக்கு மனித தந்திரம் தேவையில்லை.
தேவன் சொன்னதை நிறைவேற்றுவதற்கு பொய், சூழ்ச்சி, அல்லது மனித முயற்சிகள் அவசியமில்லை. தேவன் தமது காலத்தில் தமது வார்த்தையை நிறைவேற்றுவார்.
2. *நல்ல நோக்கம் இருந்தாலும் தவறான வழிமுறைகள்* *சரியாகாது.ரெபேக்காளின்* *நோக்கம் யாக்கோபுக்கு ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொடுப்பதாக இருந்தாலும்,* *அவள் பயன்படுத்திய வழிமுறைகள்* *ஏமாற்றமும் பொய்யும் நிறைந்தவையாக இருந்தன.*
3. *தேவனுக்கு முன்பாக ஓடுவது வேதனையை உண்டாக்கும்.*
யாக்கோபு ஆசீர்வாதத்தைப் பெற்றான்; ஆனால் உடனே வீட்டை விட்டு ஓடிப்போக வேண்டியதாயிற்று. ரெபேக்காள் தனது அன்பு மகனை மீண்டும் பார்த்ததாக வேதம் எங்கும் குறிப்பிடவில்லை.
உதவுவது நமது பொறுப்பு; உயர்த்துவது தேவனுடைய வேலை.
ஒருவருக்கு ஆதரவாக நிற்கலாம், ஊக்கப்படுத்தலாம், வழிகாட்டலாம். ஆனால் அவர்களை உயர்த்தி, அவர்களுக்கான கதவுகளைத் திறந்து, அவர்களுடைய எதிர்காலத்தை அமைப்பது தேவனுடைய அதிகாரம்.
“கர்த்தர் ஏழையாக்குகிறார், செல்வந்தனாக்குகிறார்; தாழ்த்துகிறார், உயர்த்துகிறார்.” (1 சாமுவேல் 2:7)
“உயர்வு கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் வராது... தேவனே நியாயாதிபதி; ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார்.” (சங்கீதம்
75:6-7)
சுருக்கமான சிந்தனை.
*நாம் உதவி செய்யலாம்; ஆனால் முன்னேற்றம் கொடுக்க* *முடியாது* .
நாம் விதைக்கலாம்; ஆனால் வளர்ச்சியைக் கொடுப்பது தேவன்.
நாம் கதவைத் தட்டலாம்; ஆனால் கதவைத் திறப்பது தேவன்.
“We can help others, but promotion comes from God alone.”