1 சாமுவேல் வேதபாடம் 11
உங்கள் சிந்தனைக்கு:
1 சாமுவேல் வேதபாடம் 11
கடவுள் அமலேக்கியரை அழிப்பதற்கு முன்பாகச் சாமுவேல் மூலமாகச் சவுலுக்கு இட்ட கட்டளை இதுதான்
"இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அவர்களை அமலேக்கியர் வழிமறித்த செயலுக் காக நான் அவர்களைத் தண்டிக்கப் போகிறேன்.
நீ போய் அமலேக்கியரைத் தாக்கி அவர்களின் உடைமைகள் அனைத்தையும் முழுவதும் அழித்துவிடு. அவர்களைத் தப்பவிடாதே.
ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், குழந்தைகள், மாடுகள், செம்மறியாடுகள், ஒட்டகங்கள், கழுதைகள் அனைத்தையும் கொன்றுவிடு”
அதே வேளையில் கேனியரிடம் அமலேக்கியருடன் சேர்ந்துஅவர்களையும் அழிக்காதபடி அவர்களைத் தப்பவிட்டு விட்டடான். ஏனெனில் இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வெளியே வந்தபோது அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களுக்கு இரக்கம் காட்டினார்கள்.
இந்த இடத்தில் சவுலுடைய ஒரு நல்ல பண்பை நான் பார்க்கிறேன். தங்கள் முன்னோர்களுக்கு ஒரு காலத்தில் கேனியர்கள் செய்த உதவியை நினைவுகூர்ந்து அவர்களை அழிக்க நினைக்காமல் அவர்களைத் தப்ப விட்ட காரியம் மிகவும் சிறப்பானது.
இதேபோல் ஆண்டவராய் இயேசு கிறிஸ்து உயிரோடு வாழ்ந்த நாட்களில் ஒரு நூற்றுக்கு அதிபதியின் வேலைக்காரன் நோய் வாய் பட்டபோது அவனைச் சுகமாக்க மூப்பர்கள் இயேசுவிடம் வந்தபோது
அவர்கள் சொன்ன வார்த்தை இதுதான்
"அவன் நம்முடைய ஜனத்தை நேசிக்கிறான், நமக்கு ஒரு ஜெபஆலயத்தையும் கட்டினான்"
லுூக்கா 7:5
ஆம் நமக்கு உதவி செய்தவர்கள் ஆண்டவரை அறியாதவர்களாகக் கூட இருக்கலாம்.
ஆனால் ஆண்டவர் எல்லாவற்றிற்கும் கணக்கு வைக்கிற தேவன். அவர்களுக்கும் தேவையான நேரத்தில் தேவன் உதவி செய்வார்.
அவர்களைக் காப்பாற்றுவார், அவர்களை உயர்த்துவார், அவர்களைக் கணம் பண்ணுவார்
இது மாதிரிக் காரியங்கள் அரசியலிலும், உலக காரியங்களிலும் நடந்ததற்கு பல சம்பவங்கள் உண்டு உண்டு.
ஆண்டவர் ஆபிராமுக்கு கொடுத்த ஆசிர்வாதங்களில் ஒன்று “உன்னை ஆசீர்வதிப்பவர்களை நான் ஆசீர்வதிப்பேன்” என்பது.
சவுல் செய்த இந்தக் காரியத்தில் ஆண்டவர் குற்றம் கண்டுபிடிக்கவில்லை.
அமேலக்கியரின்அரசனை கொல்லாததற்கும்
மிருகங்களில் சிறந்த எடுத்துக் கொண்டிருக்கும் சவுலை கடிந்து கொண்ட தேவன் இந்தக் காரியத்தில் ஒன்று சொல்லவில்லை என்பதை நாம் நினைவு படுத்த வேண்டும்.
தேவன் யாருக்கும் கடனாளி அல்ல. நமக்கு மட்டுமல்ல
அவருடைய நாமத்தின் நிமித்தம் நமக்குச் செய்த அவரைஅறியாத மக்களுக்கும் அவர் கடனாளியாக இருக்க மாட்டார்.ezekiel shanmugavel
M No 9444447744