Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

1 சாமுவேல் புத்தகம் வேத பாடம் 16
உங்கள் சிந்தனைக்கு:

1 சாமுவேல் புத்தகம் வேத பாடம் 16

தாவீதின் வெற்றிக்கு வெளிப்படையான மூன்று காரணங்கள்.

1. தாவீதின் அசாத்திய தைரியம் துணிச்சல், பயமின்மை.ணணணண்ணண்ண
2.தாவீதின் தீவிரமான கடவுளைப் பற்றிய வைராக்கியம்.

3. விவரிக்க இயலாத விசுவாசம்.

போர் பயிற்சி எதுவும் இல்லாத 20 வயதே ஆன இளைஞன் தாவீது ஒன்பது அடிக்கும் மேலே உயரமுள்ள, இளமை முதல் போர் வீரனாய் இருந்த கோலியாத் என்னும் மாவீரனை ஒரே ஒருகூழாங்கல்லினால் வீழ்த்தினான் என்றால் நம்ப முடியுமா.?
இந்தத் தாவீது மேசியாவுக்கு அடையாளமாக இருக்கிறான்.

இவனுடைய ஆட்சிக் காலத்தில் தான் யூத தேசம் ஒரு முழுமையான நாடாக மாறியது.

தன்னுடைய ஆட்சி காலத்தில் தன்னுடைய ராஜ்யத்தை 10 மடம் மடங்கு விரிவாக்கினான் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
எருசலேம் நகரத்தை யூதர்களின் ஆன்மிக, அரசியல் தலைநகராகவும் மாற்றிய பெருமை தாவீதுக்கு உண்டு.
மிக உயர்ந்த ஆவிக்குரிய அர்த்தங்கள் புதைந்த சங்கீதங்களை இயற்றியவன்.
மிகவும் தாழ்மையான‌ சிந்தை உடையவன்.

இந்தக் காரியங்களைக் கர்த்தரின் உதவியாயால் சாதிப்பதற்கு
அவனிடம் காணப்பட்ட பயமின்மை, தேவ வைராக்கியம், இறைவனிடம் கொண்டிருந்த நம்பிக்கை விசுவாசம் போன்ற காரியங்கள் அடிப்படையாக அமைந்தது.

தாவீது கோலிகோலியாத்தைஒரு மனிதனாகப் பார்க்கவில்லை. அவனை ஒரு மிருகமாகத்தான் பார்த்தான்.17:37.
அவன் தேவன் மீது வைத்திருந்த வைராக்கியத்திற்கு அவன் சொன்ன இந்த வார்த்தைகளே அடையாளம்.

"நானோ, நீ எதிர்த்த இஸ்ரயேல் படைகளின் இறைவனான சேனைகளின் யெகோவாவின் பெயரிலேயே உன்னை எதிர்த்து வருகிறேன்."


அவனுடைய விவரிக்க இயலாதவிசுவாசத்திற்கு
கீழ் கண்ட வார்த்தைகளே போதுமானது

"இன்று யெகோவா உன்னை என் கையில் ஒப்படைப்பார். நான் உன்னை அடித்து வீழ்த்தி, உன் தலையை வெட்டிப்போடுவேன்"

20 வயதேஆன தாவீதின் அசாத்திய தைரியம் பயமின்மைக்கு இந்த வார்த்தைகளே சாட்சி.
"தாவீது சவுலிடம், அந்தப் பெலிஸ்தியனான கோலியாத்தைக் கண்டு ஒருவரும் கலங்க வேண்டாம். உமது அடியவனாகிய நான் போய் அவனோடு சண்டையிடுவேன்” என்றான்."


1 சாமுயேல் 17:32
தாவீது மூலமாக வேதம் நமக்குக் கற்றுக் கொடுக்கும் பாடங்கள்.
1கோலியாத்தை போலச் சவால்கள் நிறைந்த காரியங்கள் நம்மை எதிர் நோக்கும்பொழுது சவுலைப் போலப் பயப்படாமல் தாவீதை போலத் தைரியமாகத் துளி அளவு பயம் இல்லாமல் எதிர்த்து நிற்க வேண்டும். நாம் சாத்தானை எதிர்த்து நிற்கும்போது தான் அவன் விலகி ஓடுவான்.
யாக்கோ4;7

2. நாம் சந்திக்கும் பிரச்சனைகளிலிருந்து தேவன் நமக்கு விடுதலை தருவார் என்கிற ஒரு விசுவாசம், தேவன் மீது வைத்துள்ள நம்பிக்கை, நமக்கு அவசியம். தேவனை தேடுகின்ற நமக்கு அவர் பலனளிப்பார் என்று நம்பிக்கை விசுவாசம் வேண்டும்.எபி 11:6

3. தேவன் மீது அளவில்லாத பக்தி வைராக்கியம் நமக்கு வேண்டும்.

நமது பக்தி வைராக்கியத்தை நிச்சயமாக அவர் கனம் பண்ணுவார்.

ஜீவனுள்ள தேவனை ஆராதிக்கிற ,வழிபடுகிற பின்பற்றுகிற, அவருக்காய் உழைக்கின்ற, உண்மையாக வாழ்கின்ற நம்மை ஒருபோதும் வெட்கப்படுத்த மாட்டார். நம்முடைய பக்தி வைராக்கியம் ஒருபோதும் வெளிவேசமாகக் காணப்படாது.

அதைத் தேவன் பகிரங்கமாக உலக மக்களுக்கு நம்மை வெளிப்படுத்துவார்.


நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தேவனை
வெளிப்படுத்துகிற நபராக இருப்போம் என்றால் நிச்சயமாக நம் மூலமாக அவர் அதை உலகத்திற்கு வெளிப்படுத்துவார்.

தனிப்பட்ட வாழ்க்கையில் சிங்கத்தையும் கரடியையும் வெற்றி கொண்ட தாவீதைத் தான் மாவீரன் வீரனான கோலியத்தை வெற்றி கொள்வதற்கு தேவன் பயன்படுத்தினார்.
First, we should prove God in our private life.

சின்ன சின்னக் காரியங்களில் தேவனுக்காக நாம் வைராக்கியம் பாராட்ட வேண்டும்.

தேவ வைராக்கியம் என்பது ஒவ்வொரு விசுவாசிகளிடம் காணப்பட வேண்டிய தவிர்க்க முடியாத ஒரு குணாதிசயம்.

தாவீதின் வெற்றிக்கு அவன் தேவன் மீது காட்டிய பக்தி வைராக்கியமும் ஒரு முக்கிய காரணம்.

தேவனுக்காக வைராக்கியம் காட்டும்பொழுது நம்மிடத்தில் பயமின்மை, அசாதாரமான விசுவாசம் நம்மிடத்தில் உருவாகும்.
அது நம்மை வெற்றியுள்ள ஒரு கிறிஸ்தவனாக வாழச் செய்யும்.