கணவனால் அதிகமாக அன்பு காட்டப்படாதவள்; ஆனால்* *தேவனால் இரக்கம் பெற்றவள் லேயாள்.
*உங்கள் சிந்தனைக்கு.*
*கணவனால் அதிகமாக அன்பு காட்டப்படாதவள்; ஆனால்* *தேவனால் இரக்கம் பெற்றவள் லேயாள்.*
இவள் பார்வை மங்கிய கண்களை உடையவள். ஆனால் அவளுடைய சகோதரி ராகேல் நல்ல உடலமைப்பும் அழகும் உடையவள். ராகேல் தன் கணவன் யாக்கோபால் அதிகமாக விரும்பப்பட்டு நேசிக்கப்பட்டவள். அவளுக்காகக் காத்திருந்த ஏழு ஆண்டுகள் யாக்கோபுக்கு ஏழு நாட்களைப் போலத் தோன்றின.
லேயாளின் வருத்தம் எவ்வளவு ஆழமாக இருந்தது என்றால், தன் தங்கையான ராகேலை நோக்கி, “என் கணவனையும் பறித்துக்கொண்டாயா?” என்று குற்றம் சாட்டும் அளவுக்கு அது வளர்ந்திருந்தது.
ஆனால் தேவனுடைய பார்வை லேயாளின் மேல் இருந்தது. அவள் ஆறு பிள்ளைகளைப் பெற்ற பிறகுதான் கர்த்தர் ராகேலை நினைத்து அவளுக்குப் பிள்ளைகளை அருளினார். அதுவும், இரண்டாவது பிரசவத்தின் போது ராகேல் மரித்துப்போனாள்.
கணவனால் குறைவாக நேசிக்கப்பட்ட லேயாள்தான் தன் கணவனோடு அதிக காலம் வாழ்ந்தாள். மனிதர்களால் நாம் புறக்கணிக்கப்படும்போதோ அல்லது குறைவாக மதிக்கப்படும்போதோ, தேவனுடைய9444447744 பார்வை நம்மேல் இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. *பல நேரங்களில், மனிதர்களின் புறக்கணிப்பே தேவன் நம்மை* *ஆசீர்வதிக்கும் வழியாக மாறுகிறது.*
மேலும், லேயாள் பெற்றெடுத்த யூதாவின் வம்சத்திலிருந்துதான் நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து பிறந்தார்.
எனவே, மனிதர்கள் நம்மை நேசிக்கிறார்களா என்பதைக் காட்டிலும், தேவன் நம்மை நேசிக்கிறாரா என்பதே முக்கியமானது.
*மேலும், சில நேரங்களில் தேவன் நமக்கு ஒரு குறையை அனுமதிக்கும்போது, அதை ஈடுசெய்யும் விதமாக வேறு சில சிறப்பான ஆசீர்வாதங்களையும் அருளுகிறார்* என்பதையும் லேயாளின் வாழ்க்கை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.