Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Voice of the Laity

போலியான பாராட்டுகள்
உங்கள் சிந்தனைக்கு :

*நமக்கு கிடைக்கும் போலியான பாராட்டுகள், எதையோ எதிர்பார்த்து செய்யப்படும் உதவிகள், ஆதரவு மற்றும் வெகுமதிகள் — இவற்றால் நம் மனம் பெருமிதம் கொள்ளுவது ஆவிக்குரிய வளர்ச்சியின் அடையாளம் அல்ல.
ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இன்றி, உண்மையான அக்கறையுடன், கர்த்தருக்குள் பிறர் நம்மீது காட்டும் ஆவிக்குரிய கரிசனை, ஆலோசனை, ஜெப ஆதரவு ஆகியவற்றால் நாம் மனம் மகிழ்ந்தால், அதில் கர்த்தர் பிரியப்படுகிறார்.

உலகப்பிரகாரமான உதவிகளையும் வெகுமதிகளையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையைவிட,
ஆவிக்குரிய உதவிகளையும், தேவனால் உந்தப்பட்ட ஆலோசனைகளையும் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்ளும் மனமும்,
அவற்றை நல்மனத்துடன் வழங்கும் எளியவர்களை மதிக்கும் பண்பும் — இன்றைய கிருஸ்தவ வாழ்வில் அரிதாகிப் போயுள்ளது.
உலகின் பார்வையும் பொருளாசையும், ஆவிக்குரிய சிந்தையை மழுங்கடித்து, விசுவாசத்தை வணிகமாக மாற்றும் நிலைக்கு கொண்டு வந்துவிட்டது.
இதைத்தான் அப்போஸ்தலன் பவுல் 1 தீமோத்தேயு 6:3–10 இல் எச்சரிக்கையாக எடுத்துரைக்கிறார் —
பக்தியை லாபமாகக் கருதும் மனப்பான்மை விசுவாசத்திலிருந்து விலகச் செய்து, பலவிதமான துக்கங்களுக்குள் மனிதனை தள்ளிவிடும்