1, நாளாகமம் அல்லது குறிப்பேடுகள் புத்தகம் வேத பாடம் 9
உங்கள் சிந்தனைக்கு.
1, நாளாகமம் அல்லது குறிப்பேடுகள் புத்தகம் வேத பாடம் 9
தியானிக்க வேண்டிய வேத பகுதி 13;7-36
ஏலி பிரதான ஆசாரியனாக இருந்த காலகட்டத்தில் பெலிஸ்தியரால் கைப்பற்றப்பட்ட தேவனுடைய பெட்டி ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியுமாக எருசலேமுக்கு வந்து கூடாரத்தில் வைக்கப்பட்ட போது
இஸ்ரவேல் ஜனங்கள் இறைவனுக்குமுன் தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் செலுத்தினார்கள்.
1 நாளாகமம் 16:1
அன்றையதினம் தாவீது யெகோவாவுக்கு நன்றி செலுத்தும்படி ஆசாப்பிடமும், அவனுடைய உதவியாளர்களிடமும் முதன்முதலாக கொடுத்த பாடல்தான் இந்த இடத்தில் வருகிறது.
இது ஒரு மிக சிறந்த ஆராதனை பாடல்.
இதுதான் பதிவு செய்யப்பட்ட முதல் சங்கீத ஆராதனை பாடலாகக் கருதப்படுகிறது.
இந்த சங்கீதத்தை ஆங்கிலத்தில்
"Enthronement psalms"என்று அழைக்கப்படுகிறது.
இந்தப் பாடல் மூன்று சங்கீதங்களில் இருந்து தொகுக்கப்பட்டுள்ளது.
96,105, மற்றும் 106
சங்கீதங்களின் வரிகள்
இந்த ஆராதனை பாடலில் வரும்.
தேவனுடைய மகத்துவமான
செயல்களை பற்றி இந்தப் பாடல் குறிப்பிடுகிறது.
உலக மக்கள் தேவனை துதிக்க அழைப்பு விடுக்கின்ற ஒரு
ஆராதனை பாடல்.
தாவுது தான் பெற்ற வெற்றிகளை பற்றி எதுவும் குறிப்பிடாமல்
தேவன் செய்த அதிசயங்கள் அற்புதங்கள் அவருடைய நியாய தீர்ப்பு ஆபிரகாம் ஆபிரகாமோடு செய்த உடன்படிக்கை, அவருடைய வல்லமை, மகிமை கனம், கடவுளுடைய ராஜரீகம், அவருடைய இரட்சிப்பு, அவருடைய பாதுகாப்பு போன்ற பல காரியங்களை குறித்து இந்த சங்கீதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆராதனை பாடலில் இரண்டு முக்கிய வரிகள் என்னைக் கவர்ந்தது.
1.ஜனங்களின் வம்சங்களே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள், கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.
பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குகள்
1 நாளாகமம் 16:28,30
இந்த வரிகள் உலக ஜனங்களுக்கு நம்முடைய கடவுளை துதிக்க ஒரு அழைப்பு விடுகிறது.
Which is the universal call to worship our Lord.
வானத்தையும் பூமியையும் படைத்தவரை உலக மக்கள் ஆராதிக்க இந்தப் பாடல் அழைக்கிறது.
2.
அக்காலத்தில் அவர்கள் கொஞ்சத் தொகைக்குட்பட்ட சொற்பஜனங்களும் பரதேசிகளுமாயிருந்தார்கள்.
1 நாளாகமம் 16:19.
இந்த வரிகளைப் படிக்கும் போது உண்மையாகவே நமது மனம், உள்ளம் நமது தேவன் எவ்வளவு உடன்படிக்கையை பாதுகாக்கின்ற தேவன் என்பதை அறிய முடிகிறது.
ஆபிரகாமோடு செய்த உடன்படிக்கையை இந்த வினாடி வரை பாதுகாக்கின்ற கடவுள் நம்முடைய ஆண்டவர்.
70 நபர்களோடு எகிப்துக்கு சென்ற அந்த ஜனம் இந்த நாள் வரைக்கும் பாதுகாக்கப்பட்டு அசைக்க முடியாத ஒரு சக்தியாக இருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கும் பொழுது அது நம் கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
தான் அபிஷேகம்பண்ணினவர்களை உலகம் அழிக்க முடியவில்லை.
1 நாளாகமம் 16:22
“இஸ்ரேலை வரைபடத்திலிருந்து அழிப்போம்”
“wipe Israel off the map"
இன்று பலர் கூறியபோதிலும் இன்றும் இஸ்ரவேல் உலக வரலாற்றில் நிலைத்து நிற்கிறது..
70 பேரோடு ஆரம்பித்த
அந்த"கொஞ்சத் தொகைக்குட்பட்ட சொற்பஜனங்களை"
இன்றைக்கும் யெகோவா தேவன் பாதுகாத்து வருகிறார் என்பதை எண்ணிப் பார்க்கும் பொழுது நாம் ஆராதிக்கும் தேவன் நம்மோடு பண்ணின உடன்படிக்கையும் அவர் காப்பதற்கு உண்மை உள்ளவர் என்பதை எண்ணிப் பார்க்கிறேன்.
ஆயிரந்தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வாக்கையும், ஆபிரகாமோடே அவர் பண்ணின உடன்படிக்கையையும் அவர் மறக்கவில்லை
1 நாளாகமம் 16:15
நமக்கும்
திருமுழுக்கில் உடன்படிக்கை பண்ணின தேவன் அந்த உடன்படிக்கையை இறுதிவரை காக்க வல்லவர்.
கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுவோம், அவர் சமுகத்தை நித்தமும் தேடுவோம். அவருடைய கிருபையை தினமும் போற்றுவோம்
.
1 நாளாகமம் 16:11.