வேதத்தை பகுத்தாய்வு செய்தல்
வேதத்தை பகுத்தாய்வு செய்தல்
லேவியராகம் புத்தகம் 19 ,20 அதிகாரங்களை படிக்கும் போது கீழ்க்கண்ட வசனங்கள் என் சிந்தனையைத் தூண்டியது. அதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகி றேன்
1.பழிக்குப்பழி வாங்காமலும், உன் ஜனப்புத்திரர்மேல் பொறாமை கொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக, நான் கர்த்தர்.
லேவியராகமம் 19:18
ஆண்டவர் இந்தக் கட்டளையை மற்றவர்கள் மீது பழி வாங்காமல் இருக்க வேண்டும் என்று சொல்லுகின்ற வேளையில் செல்கிறார்
அதே வேளையில் இந்த கட்டளையை இரண்டாவது பெரிய கட்டளையாக புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து சொல்கிறார்.
அதாவது
உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்கிற பிரதான கற்பனையோடு இந்தக் கட்டளையை இணைத்து இரண்டாவது பெரிய கட்டளையாக சொல்கிறார்.
"இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே: இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார்.
மாற்கு 12:31
பழைய ஏற்பாட்டில் "உன்னைப் போல் பிறரையும் நேசி" என்கிற இந்த கட்டளை சொல்லப்பட்டிருந்தாலும் புதிய ஏற்பாட்டில் அதற்கு ஒரு புதிய பரிமாணத்தை இயேசு கிறிஸ்து கொடுக்கிறார்.
இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்கிறார்
மத்தேயு 22:40
"Jesus identified this as one of only two commandments that , if kept, would fulfill all of the Law". The Nelson study Bible
2. அதேபோல ஒருவன் குழந்தை இல்லாமல் மரித்துப் போனால், அவன் மனைவி வேறொருவனுக்கு மனைவியாகதபடிக்கு அவளுடைய புருஷனுடைய சகோதரன் அவளை மறுமணம் செய்து கொள்ள வேண்டும்.
அவளுக்கு வேண்டிய கடமைகளை செய்ய வேண்டும்.உபா 25:5
இது பழைய ஏற்பாட்டில் உள்ள கட்டளை. ஆனால் இந்த கட்டளை புதிய ஏற்பாட்டுக்கு பொருந்தாது.
எனவே பழைய ஏற்பாட்டில் உள்ள எல்லா ஆசீர்வாதங்களும் சட்டங்களும் புதிய ஏற்பாட்டு விசுவாசிகளுக்குப் பொருந்தும் என்ற காரியங்களை யோசித்துப் பார்க்க வேண்டும்.
இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்த நோக்கம், அவருடைய கற்பனைகள், அவருடைய பார்வையில் நாம் எப்படி இருக்கிறோம், அவர் நம்மை எப்படி பார்க்கிறார்,
பழைய ஏற்பாட்டில் தேவன் யூதர்களை நடத்தின விதம், யூதர்களுக்கு விரோதமாக எழும்பின மக்களை அவன் நடத்தின விதம், பாவத்தை குறித்து அவருடைய பார்வை, பாவத்தின் தண்டனை இவைகள் அனைத்தையும் நாம் கவனித்து பார்க்க வேண்டும்.
ஒட்டுமொத்தமாக இவைகளின் அடிப்படையில் தான் பழைய ஏற்பாட்டு ஆசிர்வாதங்களை நாம் பொருத்திப் பார்க்க வேண்டுமே தவிர அதை முழுமையாக நாம் சொந்தம் கொண்டாடுவது வேதத்தின் படி சரியில்லை.