உருவத்தைக் காண முயற்சிக்க வேண்டாம்
உங்கள் சிந்தனைக்கு:
உருவத்தைக் காண முயற்சிக்க வேண்டாம்.
அந்த அக்கினியின் நடுவிலிருந்து கர்த்தர் உங்களோடே பேசினார், வார்த்தைகளின் சத்தத்தை நீங்கள் கேட்டீர்கள்,; அந்தச் சத்தத்தை நீங்கள் கேட்டதேயன்றி, ஒரு உருவத்தையும் காணவில்லை.
உபாகமம் 4:12
தேவனுடைய சத்தத்தை கேட்க முயற்சி செய்யுங்கள். உருவத்தைக் காண
முயற்சிக்கு வேண்டாம்.
சத்தத்தை கேட்டவர்கள் ஒருபோதும் மற்றவர்களை வஞ்சிக்க மாட்டார்கள்.
எதோ ஒரு உருவத்தை பார்த்தவர்கள் அனேகரை வஞ்சகத்தில் நடத்தி விட்டார்கள்.
தேவனுடைய சத்தம் நமக்கு பாதுகாப்பானது
. தேவனுடைய உருவத்தை பார்க்க முடியாது. மோசே தேவனுடைய சத்தத்தை கேட்டார். பவுலும் கடவுளின் சத்தத்தை கேட்டார். தேவனின் சத்தத்தை கேட்கும் பொழுது நாம் தாழ்மையுள்ள மனிதர்களாக மாறி விடுகிறோம்.
உருவத்தை பார்க்கமுயற்சி செய்து பிறகு வேறு எதையாவது பார்த்துபெருமை அடைந்து விழுந்து போனார்கள்.
ஒளியின் வேடத்தை அணிந்த சாத்தானும் தோன்றுவான். அதை பகுத்துப் பார்ப்பது நமக்கு முடியாத காரியம். பரவசத்தை விட பாதுகாப்பு முக்கியம்.
நாம் வேதத்தை சார்ந்த மக்களாக இருக்க வேண்டும் என்பது தேவனின் கட்டளை.
நாம் வேதத்தை தியானிக்கும் போது தேவன் நம்மோடு இடைபடுகிற, நம்மோடு பேசுகிற ,மெல்லிய சத்தத்தை கேட்காதவன்தான் உருவத்தைக் காண முயற்சிப்பான். நாம் தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடக்கிறோம்.
வார்த்தைகள் மூலமாக தேவனுடைய சத்தத்தை கேட்பது மிகவும் ஒரு பாதுகாப்பான அனுபவம். அதைத்தான் ஆண்டவர் விரும்புகிறார்.
அதை விட்டு ஆர்ப்பாட்டம், பரவசம், கொண்டாட்டம் இவைகள் மூலம் தேவன் ஒரு நாளும் வெளிப்பட மாட்டார்.
தியானத்தின் மூலம் வெளிப்படும் ஆண்டவர் பக்தி விருத்திக்கு நேராக, பரிசுத்தத்திற்கு நேராக, ஆன்மிக விடுதலைக்கு நேராக ,உலகத்தில் நாம் இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதிகளாக வெளிப்பட நம்மை வழி நடத்துவார். இன்றைய வாலிபர்களை பரவசம் என்னும் மாயையில் இருந்து விடுதலை ஆக்க நாம் பெரும் முயற்சி எடுக்க வேண்டும்.
மிகுந்த பாரத்தோடு ஜெபிக்க வேண்டும் .
இல்லை என்றால் அடுத்த தலைமுறையை நாம் கிறிஸ்துவுக்குள் உருவாக்க முடியாது. போலி பரவசத்தை நம்மால் முடிந்த அளவுக்கு எதிர்த்து நிற்போம். பொருள் சார்ந்த விவாதத்தை ஏறெடுப்போம். நமக்கு தனிப்பட்ட மனிதர்கள் விரோதி அல்ல.
போலிகள் அல்ல போலிகளை உற்பத்தி பண்ணுகிறவனே நமக்கு விரோதி.
வசன வெளிச்சத்தை காட்டுவோம் .
இருளை அகற்றுவோம். போலிகளை அடையாளம் காட்ட நம்மால் முடிந்தது எல்லாம் செய்வோம். போலிகள் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் அவர்களை அடையாளம் காட்ட தயங்க கூடாது.