Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

2 பேதுரு 1:20* ன் உண்மையான விளக்கம் என்ன ‌?.
*உங்கள் சிந்தனைக்கு ‌*
*2 பேதுரு 1:20* ன் உண்மையான விளக்கம் என்ன ‌?.

இந்த வாக்கியத்தைப் பலர் பல்வேறு வகைகளில் வியாக்கியானம் பண்ணுகிறார்கள்.
நாம் பயன்படுத்தும் பவர் மொழிபெயர்ப்பில் கீழ்க்கண்டவாறு மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

"வேதத்தில் உள்ள எந்தத் தீர்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது.
*2 பேதுரு 1:20*

இந்த மொழிபெயர்ப்பு அவ்வளவு சரியாக மொழி பெயர்க்கப்படவில்லை.
KJV மொழிபெயர்ப்பில் இப்படி குறிப்பிடப்பட்டுள்ளது

"Knowing this first, that no prophecy of the scripture is of any private interpretation." .

இந்த மொழிபெயர்ப்பின் படி பார்த்தால்‌ கடவுளுடைய , வார்த்தையை அவனவன் தரும் விளக்கத்திற்கு உட்படுத்த கூடாது என்பதுதான்.

இந்த வார்த்தையை அடிப்படையாகக் கொண்டு கத்தோலிக்க திருச்சபை எந்த ஒரு தனிப்பட்ட நபரும் வேதத்தை தன் இஷ்டப்படி விளக்கங்களை, வியாக்கியானங்களை எழுதக்கூடாது என்று கூறுகிறார்கள்.

கத்தோலிக்க திருச்சபை எதைப் போதிக்கிறதோ அதை அப்படியே விசுவாசிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இது கத்தோலிக்க சபையின் கோட்பாடு. இதைப் போலவே இன்றைக்கும் பல சபைகள் அதிக ஆக்கினையை அடையாதபடிக்கு விசுவாசிகள் போதகர்களாக மாறக் கூடாது என்று தவறாக வியாக்கியானம்  செய்கிறார்கள்.

இந்த வியாக்கியானங்கள் அனைத்தும் தவறு.
இந்த வாக்கியத்தின் உண்மையான அர்த்தம் இதுதான்.

"எல்லாவற்றிற்கும் மேலாக, வேத வசனத்தில் உள்ள எந்த இறைவாக்கும் இறைவாக்கினனுடைய சொந்த விளக்கத்தினால் உண்டானது அல்ல, இதை நீங்கள் அறிந்து
கொள்ள வேண்டும்."
*2 பேதுரு 1:20*

வேத வாக்கியங்கள் அனைத்தும் தேவனிடத்திலிருந்து வந்தது என்பது தான் இந்த அதிகாரத்தைப் படித்துப் பார்க்கும்பொழுது நாம் உணர்ந்து கொள்ளக்கூடிய காரியம்.

வேத வாக்கியங்கள் மனிதரால் எழுதப்பட்டாலும் அவைகள் ஒருபோதும் மனிதர்களின் சித்தப்படி உண்டானது அல்ல, இறைவனுடைய பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டு, இறைவனிடமிருந்து பெற்றுக் கொண்டதையே மனிதர் பேசினார்கள்.
*2 பேதுரு 1:21*

வேத வாக்கியங்களின் மூலம்  (Origin) கடவுள் என்பது தான் இதனுடைய பொருள்.

அதே  ‌ சமயத்தில் ஒவ்வொரு விசுவாசிக்கும் வேதத்தை  ஆராய்ந்து வியாக்கியானம் செய்வதற்கு உரிமை உள்ளது.

பரிசுத்த வேதாகமம் முழு நேர பணியாளர்களுக்கும் மேய்ப்பர்களுக்கும் எல்லா மக்களுக்கும் விசுவாசிகளுக்காகவும் எழுதப்பட்டது.

கடவுளுடைய பிள்ளைகளுக்காக எழுதப்பட்ட வேதத்தைத் தியானிக்க எல்லா உரிமையும் விசுவாசிகளுக்கும் உண்டு.
சபை தலைவர்கள் விசுவாசிகளை வேதத்தைத் தியானிக்க உ வியாக்கியானம் பண்ண அனுமதிக்க வேண்டும். தவறு இருந்தால் அவர்களைத் திருத்த வேண்டும் இப்படி செய்ய வேண்டுமே தவிர விசுவாசிகளை வேத வார்த்தைகளைத் தியானிக்கவே கூடாது வியாக்கியானம் பண்ணவே கூடாது 'நான் சொல்வது தான் சட்டம் "என்று விசுவாசிகளுக்குச் சபைத் தலைவர்கள் கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது அது வேதத்தின் படி சரியல்ல.


சபைகளின் சீர்திருத்த காலத்தில் பிரசங்கிக்கப்பட்ட"the right and duty of private judgement" என்கிற முழக்கம் இன்றைக்கும் எல்லா விசுவாசிகளுக்கும் பொருந்தும்
.
KJV மொழிபெயர்ப்பில் காணப்படும் வியாக்கியானம் அல்லது interpretation என்கிற பதம் தவறானது.

ஒரு தவறான மொழிபெயர்ப்பு தவறான வியாக்கியானங்களுக்கு வழிவகுக்கிறது என்பதற்கு இந்த ஒரு வசனம் முக்கிய ஆதாரம்.