வேத தியானம்: ஆவிக்குரிய ஆடம்பரமா அல்லது அடிப்படை தேவையா?
உங்கள் சிந்தனைக்கு
வேத தியானம்: ஆவிக்குரிய ஆடம்பரமா அல்லது அடிப்படை தேவையா?
இன்றைய சபைகளில் வேத தியானம் என்பது மேய்ப்பர்கள், போதகர்கள், இறையியல் கல்வியாளர்கள் போன்றவர்களின் உரிமையான உயர்மட்டமான ஆவிக்குரிய செயலாகவே (spiritual luxury) விசுவாசிகள் பார்வையில் பார்க்கப்படுகிறது. இது ஒரு ஆபத்தான தவறான புரிதலாகும். ஏனெனில் வேதத் தியானம் ஒரே ஒரு குழுவுக்கே உரியதாக அல்ல — அது ஒவ்வொரு விசுவாசிக்கும் அத்தியாவசியமானது (spiritual necessity).
கிறிஸ்தவ வாழ்க்கை வேதத்தின் அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட வேண்டும். வேத தியானம் சபையின் அனைத்து நிலைகளிலும் எடுத்துச் செல்லப்படவேண்டும். விசுவாசிகள் அதை ஒரு நாளந்தோறும் நடைமுறைபடுத்தும் வாழ்வியல் பாடமாகக் கொள்ள வேண்டும். இப்படிச் செய்யப்படாவிட்டால், கிறிஸ்தவம் அடுத்த தலைமுறையை நோக்கி வளர முடியாது.
இது உண்மை. உண்மை. உண்மை. கிறிஸ்தவம் வேதத்தின் அடிப்படையில்தான் உள்ளது.
Ezekiel Shanmugavel