ஒன்று நாளாகமம் அல்லது குறிப்பேடுகள் புத்தகம் வேத பாடம் 12
வேத பாடம் 12.
உங்கள் சிந்தனைக்கு.
ஒன்று நாளாகமம் அல்லது குறிப்பேடுகள் புத்தகம்
வேத பாடம் 12.
தியானிக்க வேண்டிய வேத பகுதி ,அதி 17:7-14 வரை.
இந்தப் பகுதியில் கர்த்தர் தாவீதோடு
ஒரு உடன்படிக்கை பண்ணுகிறார்.
அந்த உடன்படிக்கை என்னவென்றால்
"நான் உனக்குப் பின்பு உன் புத்திரரில் ஒருவனாகிய உன் சந்ததியை எழும்பப்பண்ணி, அவன் ராஜ்யத்தை நிலைப்படுத்துவேன். அவன் எனக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்.
என்பதே.
1 நாளாகமம் 17:11-12
வேதத்தில் ஏழு வகையான உடன்படிக்கைகளை நாம் பார்க்கலாம். ஏதேன் தோட்டத்தில் சாத்தானிடம் அவனுடைய தலையைப் பெண்ணின் வித்து நசுக்குவார் என்று சொன்ன அந்தத் தீர்க்கதரிசனத்தை தொடர்ந்து கடவுள் ஆறு வகையான உடன்படிக்கைகளை செய்திருக்கிறார்.
? சுருக்கமாக:
1️⃣ ஆதாமோடு தேவன் பண்ணின உடன்படிக்கை
இந்த உடன்படிக்கை ஆதாம் ஏவாளின் பாவத்தின் வீழ்ச்சிக்கு முன் நடைபெற்ற காரியம்.
2️⃣ நோவாவோடு கடவுள் பண்ணின உடன்படிக்கை
3️⃣ ஆபிரகாமோடு கடவுள்
பண்ணின உடன்படிக்கை
4️⃣ மோசேயுடன் உடன்படிக்கை
5️⃣ ஆசாரியன் ஆரோனோடு உடன்படிக்கை
6️⃣ தாவீதோடு கடவுளின் உடன்படிக்கை
7️⃣ புதிய ஏற்பாடுஉடன்படிக்கை.
ஒவ்வொரு உடன்படிக்கைகளும் சிறப்பானவைகள்தான், ஆனாலும் தாவீதோடு பண்ணின உடன்படிக்கையில் தான் உலகத்தின் இரட்சகர் இயேசுவினுடைய அரசாட்சியைப் பற்றிச் சொல்லப்பட்டு இருக்கிறது.
மேசியா வருகின்ற அந்தச் சந்ததியைப் பற்றி நாம் தியானிக்கும்போது ஆபிராமுக்கு அடுத்தபடியாக யாக்கோபு சிறப்பான இடத்தைப் பெறுகிறான்.
இந்த யாக்கோபுக்கு 12 மகன்கள் இருந்தாலும் மேசியா வரக்கூடிய அந்தச் சந்ததி யூதா வம்சத்திலிருந்து வரும் என்று யாக்கோபு தீர்க்கதரிசனம் உரைக்கிறார்
"செங்கோலுக்குரியவர் வரும்வரை
செங்கோல் யூதாவைவிட்டு நீங்காது,
ஆளுநரின் கோல் அவனுடைய பாதங்களைவிட்டு விலகாது;
நாடுகளின் கீழ்ப்படிதல் அவருக்கே உரியது."
ஆதியாகமம் 49:10
இந்த இடத்தில் செங்கோலுக்கு உரியவர் என்றால் மேசியாவை குறிக்கும்.
அப்படி என்றால் மேசியாவாக வரக்கூடியவர் யூதா கோத்திரத்திலிருந்து வர வேண்டும்l.
யூதர்களின் அரசன் சவுல்.
இவன் பெஞ்சமின் பிரிவைச் சேர்ந்தவன்
பிறகு தேவனுடைய இறையாண்மையின்படி அரசாட்சி கை மாறியது.
அதற்குப் பிறகு அரசாட்சிக்கு வந்தவன் தாவீது.
இவன் யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவன்.
தாவீதுக்கு பிறகு அரசாட்சிக்கு வந்த சாலமோன் பல தவறுகளைச் செய்து இறுதியில் பின்மாற்றத்தில் விழுந்தான். சாலமோனுக்கு பிறகு அவனுடைய குமாரன் ரெகொபெயாம் ஆட்சிக்கு வந்தான். ஆனால் இவன் வாலிபர்களின் பேச்சைக் கேட்டு முதியவர்களின் ஆலோசனையைக் கேளாமல்
செய்த செய்கையினால் ஒருமித்த யூத தேசம் இரண்டாகப் பிரிந்தது.
பத்து கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் இஸ்ரவேல் என்று தனியாகவும், யூதா தனியாகவும் பிரிந்து இரண்டு தேசங்களாகப் பிளவு பட்டது.
அதற்குக் காரணம் தாவீதின் வம்சத்தில் வந்த ரெகொபெயாமின் தவறுகளால்தான்.
ஆனால் நடந்தது என்னவென்றால் 10 கோத்திரங்களாகப் பிரிந்த இஸ்ரவேல் தேசம் பின் நாட்களில் அசிரியரால் கைப்பற்றப்பட்டு ஜாதிகளோடு இணைந்து, கலந்து தங்கள் தனித்தன்மை இழந்து விட்டார்கள்.
ஒருமைப்பட்ட இஸ்ரவேல் தேசம் இரண்டாகப் பிரிவதற்கு காரணமான தாவீதின் வம்சமான யூத தேசமோ நிலைத்து நின்று அந்த வம்சத்தில் உலகத்தின் இரட்சகர் மேசியா தோன்றினார்.
இது மனித சித்தாந்தத்தால் அறிந்து புரிந்து கொள்ள முடியாது.
இதற்குக் காரணம் ஆண்டவருடைய தீர்மானம்.
1 அரசர்கள் புத்தகம் 11:13 ன் படி
ஆடுகளின் பின்னே தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்ட தாவீதை தேர்ந்தெடுத்து ராஜ்யத்தை கொடுத்து அவனுடைய மகன்
சாலமோன் மூலமாக ஆலயத்தைக் கட்ட உதவி செய்து அவனுடைய சந்ததியைப் பாதுகாத்து அவனுடைய அரசாங்கம்
அரசாங்கம் என்றைக்கும் நிலைத்து நிற்கும் என்று சொல்லித் தாவீதை ஆசிர்வதித்தார்.
மேசியாவின் சந்ததி,
ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்று தொடர்ந்து பின் தாவீது சாலமோன் வழியாக இயேசு கிறிஸ்துவில் முடிவடைந்தது.
இதுதான் தேவனுடைய இறையாண்மை.
இது தாவீதுக்கும் அவனுடைய சந்ததிக்கும் கிடைத்த மிகப்பெரிய கிருபை.
கடவுளுடைய இறையாண்மையை எந்த ஒரு மனிதனும் ,எந்த ஒரு தலைவனும், தேவனால் பயன்படுத்தப்பட்ட பெரிய ஊழியரும் புரிந்து கொள்ளவோ காரணம் கற்பிக்கவோ முடியாது.
தேவனுடைய இறையாண்மையை கேள்வி கேட்பதற்கு மனிதனாகப் பிறந்த எவருக்கும் அனுமதியோ, தகுதியோ கிடையாது .
வேதத்தில் தேவனுடைய இறையாண்மை விளக்குகின்ற இந்த வசனத்தைப் போல் வேறு எந்த வசனம் வேதத்தில் நான் பார்க்கவில்லை
"பிள்ளைகள் இன்னும் பிறவாமலும், நல்வினை தீவினை ஒன்றும் செய்யாமலுமிருக்கையில், தேவனுடைய தெரிந்து கொள்ளுதலின்படியிருக்கிற அவருடைய தீர்மானம் கிரியைகளினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கிறது
ரோமர் 9:11
கடவுளின்அழைப்பு என்பது அவரது இறையாண்மையை சார்ந்தது.
எனவே தேவனுடைய இறையாண்மையை மதிப்போம் அதற்குக் கீழ்படிவோம். அழைப்பு பெற்ற மனிதர்களை அளவுக்கு மீறிப் புகழாமல் அழைப்பபை
கொடுத்த தேவனுடைய இறையாண்மையை நாம் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.