1நாளாகமம் அல்லது குறிப்பேடு புத்தகம் *வேத பாடம் 3*
*உங்கள் சிந்தனைக்கு.*
1நாளாகமம் அல்லது குறிப்பேடு புத்தகம்
*வேத பாடம் 3*
படிக்க அதிகாரம் 5:1
இந்த ஒரு வாக்கியத்தில் கடவுள் பல உண்மைகளைப் புதைத்து வைத்திருக்கிறார்.
தேவனுடைய இறையாண்மையை இந்த ஒரு வசனம் தெளிவாக உணர்த்துகிறது.
இஸ்ரவேலுக்கு தலைமகன் ரூபன்.
அவன் தலைமகனாய் இருந்தும் தம் தந்தையின் மஞ்சத்தைத் தீட்டுப்படுத்தியதால் அவனது பிறப்புரிமையை இஸ்ரவேலின் இன்னொரு மகன் யோசேப்பின் புதல்வர்களுக்கு வழங்கப்பட்டது. எனவே தலைமுறை அட்டவணையில் அவன் தலைமகனாய்க் கருதப்படவில்லை.
குடும்பத்தின் மூத்த மகனாக
இருப்பவர்களுக்குக் குடும்ப சொத்துக்களை பிரிக்கும்போது அவர்களுக்கு இரண்டு பங்கு வழங்கப்படும்.
குடும்ப உறவுகளில் அவனுக்குச் சிறப்பான ஒரு மதிப்பு உண்டு.
இறுதிக் காலத்தில் தன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கும்போது ரூபன் தன் வைப்பாட்டி பிள்ளைகளுடன் உறவு கொண்டதை ஞாபகப்படுத்தி அவன் மேன்மையடையமாட்டான் என்று தீர்க்கதரிசினம் சொல்லிவிட்டான்.
ஆதியாகமம் 35:22
அதே வேளையில் யூதாவைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது
செங்கோலுக்குரியவர் வரும்வரை
செங்கோல் யூதாவைவிட்டு நீங்காது,
ஆளுநரின் கோல் அவனுடைய பாதங்களைவிட்டு விலகாது என்றும் இஸ்ரவேலின் ஆளுகை யூதாவினுடையது என்றும், மேசியா வரும் காலம்வரைக்கும் ஆளுகை யூதாவுக்குரியது என்று யாக்கோபு தீர்க்கதரிசனமாகச் சொல்லிவிட்டான். ஆனால் அதற்கு முன்பாகவே யாக்கோபு யோசேப்பின் இரண்டு மகன்களான எப்பிராயீம் மனாசே இவர்களைத் தன்னுடைய பிள்ளைகளாக அங்கீகரித்து
பின்னால் இஸ்ரவேலர் அடையப்போகிற கானான் தேசத்தில் அவர்களுக்கு குடும்பத்தின் மூத்த மகனுக்குரிய பிறப்புரிமையை கொடுத்துவிட்டான்.
இதில் நாம் உணர்ந்து கொள்ளக்கூடிய காரியம் என்னவென்றால் குடும்பத் தலைவனுக்குரிய
பிறப்புரிமையை பொறுத்தளவில் இஸ்ரவேல் ஜனங்கள் அடையப் போகிற கானான் தேசத்தில் யோசேப்பின் புதல்வர்களுக்கும் இரண்டு பங்கு நிலங்களும் இஸ்ரவேலுக்கு உரிய ஆளுகையை பொறுத்த அளவில் யூதாவுக்கும் யாக்கோபு பிரித்துக் கொடுத்துவிட்டார்.
The double portion of land due the firstborn went to Joseph (through Ephraim and Manasseh), and the double portion as far as leadership was concerned went to Judah.
முதற்பேறானவனுக்கு கொடுக்கப்படும் இரட்டைப் பங்கான நிலம் யோசேப்பிற்கே (எப்பிராயீம் மனாசே மூலம்) சென்றது; ஆனால் தலைமைக்குரிய இரட்டைப் பங்கு யூதாவிற்கே சென்றது.
இந்த வாக்கியத்தின் மூலமாக நாம் உணர்ந்து கொள்ளும் பாடங்கள்.
யாருக்கு எந்த ஆசீர்வாதத்தை கொடுக்க வேண்டும் என்பது தேவனது இறையாண்மை. ஒரு சிலருக்கு உலக நன்மைகளை வாரி வழங்கலாம். ஒரு சிலருக்கு ஆன்மீக ஆசீர்வாதங்களை கொடுத்து மகிழலாம். ஒரு சிலருக்கு தலைமை பொறுப்பை வழங்கலாம்.
சிலருக்கு, தலைவர்களுக்கு உடன் ஊழியம் செய்யக்கூடிய பணியைக் கொடுக்கலாம்.
எல்லா ஆசீர்வாதத்தையும் எல்லோருக்கும் தேவன் வழங்கமாட்டார்.
வரங்களைப் பொறுத்த அளவிலும் அப்படித்தான். யோசேப்பு எகிப்தின் அதிபதி பார்வனுக்கு அடுத்த இடத்திலிருந்து ஆளுகை செய்தான்.
ஆளுகை செய்யக்கூடிய திறமை யோசேப்பிடம் இருந்தாலும் அவனுடைய சந்ததிகளுக்குச் சிங்காசனத்தை ஆளக்கூடிய வாய்ப்பைத் தேவன் தரவில்லை.
இந்த வாய்ப்பு யூதாவுக்குத்தான் கிடைத்தது.
கடவுள் தமது ஆதீனத்தில் தீர்மானித்த காரியங்களை மனிதன் தன் சொந்த மூளையினால் புரிந்து கொள்ள முடியாது.
கடவுள் நம்மை அழைத்த அழைப்பில் நிலைத்திருந்து நமது ஓட்டத்தை முடிக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். மற்றவர்களை ஏன் அப்படி பயன்படுத்துகிறார்? என்று ஆராய்ச்சி செய்ய வேண்டிய வேலை நமக்கு இல்லை.
நம்முடைய ஊழியத்தில் கடவுள் அழைத்த அழைப்பில் திருப்தியாக ஓடிச் சித்தத்தை நிறைவேற்ற அழைக்கப்பட்டிருக்கிறோம்.