Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

அடைக்கலப்பட்டணம் நமக்கும் யூதர்களுக்கும் சொல்லும் செய்தி என்ன.?
உங்கள் சிந்தனைக்கு:
அடைக்கலப்பட்டணம் நமக்கும் யூதர்களுக்கும் சொல்லும் செய்தி என்ன.?

பழைய ஏற்பாட்டில் லேவியர்களுக்கென்று தனியாக உரிமை சொத்து ஒதுக்கப்படவில்லை.

ஆனால் அவர்கள் இஸ்ரவேல் தேசம் எங்கும் பரவி இருப்பதற்காக அவர்களுக்கு 48 நகரங்கள் கொடுக்கப்பட்டது.

அந்த 48 நகரங்களில் அவர்கள் வாழ முடியும். அதில் ஆறு நகரங்கள் அடைக்கலபட்டினமாக ஒதுக்கப்பட்டது.

இந்த அடைக்கலம் பட்டினம் எதற்க்கு என்றால் யூதர்களில் யாராவது ஒருவன் தற்செயலாக, காரணம் ஏதும் இல்லாமல் ஒருவனை கொலை செய்தால் அவன் இந்த பட்டினத்திற்குள் ஒளிந்து கொள்ளலாம். .
பின்பு நியாயவிசாரணை நடக்கும் பொழுது அவன் குற்றம் அற்றவனாக கண்டுபிடிக்கப்பட்டால் அவன் அந்த பட்டணத்தில் பிரதான ஆசாரியன் அல்லது மதகுரு மரிக்கும் வரை அங்கே தங்கி இருக்கலாம் .
பிரதான குரு மரித்த பிறகு அவன் அந்த பட்டணத்தை விட்டு வெளிவந்து சுதந்திரமாக வாழலாம்.
அவன் சிந்திய இரத்தத்திற்கு நியாம் கேட்க பாதிக்கப்பட்ட உறவினர்கள் உரிமை கோர முடியாது. காரணத்தோடு ஒருவன் கொலை செய்யப்பட்டால் கொலை செய்யப்பட்டவனுடைய ரத்தத்திற்கு பதிலாக கொலை செய்தவன் ரத்தம் சிந்தப்படவேண்டும்.

இன்று இவைகள் நமக்கு உணர்த்தும் பாடம் என்ன?

யூதர்களைப் பொறுத்த அளவில் யூதர்கள் இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தாலும் அவர்கள் தாங்கள் செய்வது என்னவென்று அறியாமல் செய்ததாக இயேசு கிறிஸ்துவே சொன்னபடியினால் கொலை செய்த யூதன் தன் இடத்தை விட்டு வெளியேற்றப்படுவதைபோல யூதர்கள் காணப்படுகிறார்கள்.They have been living in exile. எதுவரைக்கும் என்றால் மகா பிரதான ஆசாரியராகிய இயேசு கிறிஸ்து மறுபடியும் திரும்ப வருகின்ற காலம் வரை.
The Nation's complete restoration to its position will take place not at the death of the Great High Priest ( for He can never die) but when he comes to rule.WILLIAM MACDONALD
.
புதிய ஏற்பாட்டை பொறுத்த அளவில் நம்முடைய பாவங்களுக்காக தம்முடைய இரத்தத்தை சிந்திய மகா பிரதான ஆசாரியரின் புண்ணியத்தை நம்பி எந்த ஒரு பாவியும் அவரிடத்தில் வரும்போது அவர்களுக்கு மீட்பு கிடைக்கிறது. பாவிகளுக்கு அடைக்கல பட்டணமாக பிரதான ஆசாரியராக இயேசு கிறிஸ்து காணப்படுகிறார்.
படிக்க எண்ணாகமம் 35 வது அதிகாரம்.
EZEKIEL SHANMUGAVEL