Delayed obedience amounts to no obedience.
உங்கள் சிந்தனைக்கு:
Delayed obedience amounts to no obedience.
கடவுள் இஸ்ரவேல் ஜனங்களை 400 ஆண்டுகால எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கி அவர்களை ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் படியாக அவர்களை வனாந்தரத்தில் நடத்தினார் .
சீனாய் மலையில் அவர்களுக்கு கட்டளைகளையும் பிரமாணங்களையும் கொடுத்து ஆசரிப்பு கூடாரத்தை உருவாக்கி லேவியர்களையும், குருமார்களையும் நியமித்து அங்கே தமது மகிமையை வெளிப்படுத்தினார்.
அங்கே இஸ்ரவேல் ஜனங்கள் ஒரு வருட காலம் தங்கி இருந்தார்கள். ஆனாலும் அங்கே அதிகம் காலம் அவர்களை இருக்க வைக்காமல் கானானுக்கு வழிநடத்தினார்.
அந்த காலகட்டங்களில்தான் அவர்கள் பல முறை தேவனுக்கு விரோதமாக கலகம் செய்தார்கள்.
தேவன் அளித்த மன்னாவின் மீது திருப்தியற்று தங்களுக்கு விருப்பமான உணவை கேட்டார்கள்.
கானானுக்கு முந்திய இடமான காதேஸ் பர்னேயா வந்தடைந்த போது. தேவன் வாக்களித்த இடத்தை விசுவாசத்தோடு கடந்து வெற்றி பெறுவோம் என்று நம்பாமல் அங்கு சென்று வேவு பார்க்க விரும்பினார்கள். வேவுபார்த்து திரும்பின வர்களில் 10 பேர் அந்த இடத்தை நம்மால் அடைய முடியாது என்று புலம்பினார்கள்.
மடிந்து போய் விடுவோம் என்றுபெரும் கலகம் பண்ணினார்கள்..
"நாங்கள் போகமாட்டோம்" என்று தேவனாகிய கர்த்தருடைய கட்டளைக்கு விரோதமாக எதிர்த்து,
தங்களது கூடாரங்களில் முறுமுறுத்தார்கள்: கர்த்தர் நம்மை வெறுத்து, நம்மை அழிக்கும்பொருட்டாக நம்மை எமோரியரின் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, நம்மை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினார். என்று புலம்பினார்கள்
உபாகமம் 1:26,28
அதனால் கர்த்தர் கோபங்கொண்டு அவர்கள் கானானுக்குள் பிரவேசிப்பதில்லை என்றும்
கொள்ளையாவார்கள் என்று அவர்கள் சொன்ன அவர்கள் குழந்தைகளும், அந்நாளிலே நன்மை தீமை அறியாத அவர்கள் பிள்ளைகளும் அதில் பிரவேசிப்பார்கள் என்று தேவன் கட்டளையிட்டார்
உபாகமம் 1:39.
ஆனால் பின்னால் தங்கள் தவறை உணர்ந்து "கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம், நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் நாங்கள் போய் யுத்தம்பண்ணுவோம் என்று சொல்லி' யாவரும் ஆயுதங்களைத் தரித்துக்கொண்டு, மலையின்மேல் ஏறினார்கள்
உபாகமம் 1:41.
அந்த செயலை தேவன் அங்கீகரிக்கவில்லை.
அவர்களுடைய மனித முயற்சியை ஏற்கவில்லை.
தேவன் மீது விசுவாசம் வைக்காமல் தேவனுக்கு விரோதமாக கலகம் செய்த பிறகு அவர்களின் இந்த செயல் தேவனை பிரியப்படுத்தவில்லை.
இது ஒரு காலம் கடந்த கீழ்ப்படிதல்.
எனவேஅந்த மலையிலே குடியிருந்த எமோரியர் யூதர்களை தேனீக்கள் துரத்துகிறதுபோல உங்களைத் துரத்தி,முறிய அடித்தார்கள்.
உபாகமம் 1:44
இதன் மூலம்
தேவன் நமக்கு உணர்த்தும் பாடம்
1.காலம் தாழ்த்தின கீழ்படிதல் தேவனை பிரியப்படுத்தாது.
அவர்கள் வீணாக 38 வருடங்கள் வனாந்தரத்தில் அலைந்து திரிந்து மடிந்ததைத் தவிர வேறு ஒன்றையும் பெற்றுக்கொள்ள முடியாமல் போய்விட்டார்கள்.
2.தேவனுடைய துணை இல்லாமல், தேவன் மீது விசுவாசம் வைக்காமல் அவரை சார்ந்திராமல் நாம் நம்முடைய சுய முயற்சியால் செய்ய நினைக்கும் எந்த காரியமும் தோல்வியில் முடிவது மட்டுமல்ல நமக்கு மிகப்பெரிய இழப்பையும் ஏற்படுத்தும்.
Surely we must know that the "will of God would not lead us where
the grace and power of God could not keep us ". Wiersbe