The canon of Scripture 1
உங்கள் சிந்தனைக்கு
" The canon of Scripture " என்றால் கர்த்தருடைய வார்த்தைகளை தெரிந்தெடுத்து அங்கீகரிக்க தெரிந்தெடுக்கப்பட்ட வழிமுறைகள் அல்லது சட்டதிட்டங்கள் (RULES AND STANDARD ) என்று பொருள் .
இன்று நமது கையில் புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்கள் எழுதிய மூல பிரதிகள் (ORIGINAL COPY)இல்லை. அவைகளுடைய நகல்கள்தான் இன்று நமது கைகளில் காணப்படுகின்றது. புதிய ஏற்பாடு பொறுத்தவரையில் ஏறக்குறைய 4000 முதல் 5000 வரை கிரேக்க மொழியில் காணப்படுகின்றது( MANUSCRIPTS). இதில் ஆச்சர்யம் என்னவென்றால் 100% எந்த பிரதியும் ஒன்றோடொன்று ஒத்துப்போகவில்லை.
முதல் நூற்றாண்டு சபைகளில் எல்லா சபைகளிலும் புதிய ஏற்பாட்டின் அனைத்து புத்தகங்களும் இருந்ததாக தெரியவில்லை. அக்கால சபைகள் தங்களுக்குளே பிரதிகளை பரிமாறிக்கொண்டார்கள். பிரதிகளுக்கு பிரதிகள் எடுக்கும்பொழுது மொழி பெயர்ப்பில் ஒரு சில தவறுகள் வருவது தவிர்க்க முடியாமல் போய்விட்டது. இன்றைய “ KJV versus NIV “ க்கான விவாதங்களுக்கு இதுவே அடிப்படை காரணம்.
மேலும் அப்போஸ்தலர்கள் எழுதிய நூல்கள், கடிதங்கள் மட்டுமன்றி இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய Clement of Rome,Ignatius of Antioch and Polycarp of Smyrna ோன்றவர்களுடைய எழுத்துக்களையும் அக்காலச் சபைகள் மதித்து சபைகளில் தியானித்து வந்தனர்
. இந்த சூழ்நிலையில்தான் " MARCIÓN" என்பவன் குழப்பங்கள் ஏற்படுத்திய மற்றும் GNOSTICISM போன்ற உபதேசங்களால் பெரும் நெருக்கடி ஏற்பட்டது.
இதை கர்த்தர்தான் அனுமதித்தார் என்று சொல்லவேண்டும். ஏனென்றால் அப்படி ஒரு சம்பவம் நடைபெற்றிருக்காவிடில் தேவாவியினால் அருளப்பட்ட வேத வாக்கியங்கள் இவைகள்தான் என்று நாம் அடையாளம் கண்டிருக்க முடியாது. சபை தலைவர்கள் ஏறக்குறைய 200 ஆண்டுகள் கடுமையாக உழைத்து, தியானித்து, ஜெபித்து பல்வேறு நாடுகளில் உள்ள சபைகளோடு அவைகளின் தலைவர்களோடு ஆலோசித்து எல்லாவற்றிற்கும் மேலாக பரிசுத்த ஆவியின் ஒத்தாசையோடு இந்த காரியத்தை செய்து முடித்தார்கள். ஒவ்வொரு புத்தகத்தையும், கடிதங்களையும் தனித்தனியாக ஆராய்ந்து வேதவாக்யங்களை தெரிந்தெடுத்தார்கள். இது ஒரு மிகப்பெரிய ஆவியானவரின் அதிசயமான கிரியை.
இந்த வார்த்தைகள் மனிதர்களால் எழுதப்பட்டிருந்தாலும் அவைகள் தெய்வீகமானவை. 11பேதுரு 1:21ல் சொல்லப்பட்டபடி பரிசுத்த மனிதர்கள் பரிசுத்தாவியினால் ஏவப்பட்டு எழுதிய வார்த்தைகள் அவை. தேவன் மாத்திரமே பரிசுத்த வார்த்தைகளை உண்டுபண்ண முடியும்.
God alone can create Scripture . 11 தீமோ 3:16ல் சொல்லப்பட்டபடி தேவனுடைய சுவாசத்தினால் உண்டான வார்த்தைகள்.
சபையானது சுயமாக தேவனுடைய வார்த்தைகளை உருவாக்க முடியாது.
The Church can;t make any book or document Scripture.
சபையுடைய கடமை "எது தேவனுடைய வார்த்தைகள், " " எது தேவனுடைய வார்த்தைகள் அல்ல :என்று தேர்ந்தெடுப்பதுதான்.
The church is not to give any authority to the the documents
தேவனுடைய வார்த்தைகளுக்கு அதிகாரம் கொடுப்பது சபையினுடைய வேலையல்ல. தேவவார்த்தைகளுடைய அதிகாரத்தை உணர்ந்து அதற்க்கு கீழ்ப்படிவது சபையினுடைய கடமை.
தேவனுடைய வார்த்தைகளே பிரதானமானது
. சபைகளுடைய முக்கியமான கடமை தேவாவியினால் அருளப்படாத வார்த்தைகளை புறம்பே தள்ளி மெய்யான வார்த்தைகளை சபை மக்களுக்கு உறுதிப்படுத்துவது.பெரிய
கருத்துக்கள் தொடர்ந்து வரும் இதை எழுதிய நான் ஒரு இறையியல் கல்லூரியில் படிக்கவில்லை நான் படித்ததை உங்களோட பகிர்ந்து கொள்கிறேன்