Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

1நாளாகமம் அல்லது குறிப்பேடுகள் புத்தகம். வேத பாடம் 22.


1 நாளாகமம் அல்லது குறிப்பேடுகள் புத்தகம்.
வேத பாடம் 22.

தியானிக்க வேண்டிய வேத பகுதி. 23:1-5.

ஆராதனையில் புரட்சி ஏற்படுத்தியவன் தாவீது.

ஆசரிப்பக்கூடாரம் உருவாக்கப்பட்ட‌ நாளிலிருந்து பலிகள் மூலமாக தேவனை இஸ்ரவேல் ஜனங்கள் ஆராதித்து வந்தார்கள்.

பலவிதமான மிருகங்களை பலி செலுத்தி தேவனை ஆராதிக்கும் பழக்கம் இருந்து வந்தது.


மோசே காலத்தில்
ஆசரிப்பு கூடாரம்” (Tabernacle) இருந்தது; அது இசைக்கருவிகளால் துதிக்கும் இடம் அல்ல, மாறாக பலி,வேத  வாசிப்பு ஆகியவற்றுக்கான இடமாக இருந்தது..

லேவியர்கள் கூடாரத்தை சுமந்தனர், ஆனால் இசைக் கருவிகளோடு தேவனைத் துதித்தல் என்ற முறை இருந்ததில்லை.

இப்படியாக  இந்த முறைகள் 450 ஆண்டுகள்
தொடர்ந்தது

ஆனால் இந்த முறையில் மிகப்  பெரிய மாற்றத்தை‌ தாவீது ஏற்படுத்தினான்.

இதைப் பற்றிய விவரங்களை இந்த புத்தகத்தின் 23 வது அதிகாரம் 1முதல்  4 வரை உள்ள வசனங்களை படித்துப் பார்த்தால் தெரியும்.

30 வயதுக்கு மேற்பட்ட 30000 லேவியர்களின் பணிகளை பிரித்து அதில்
நாலாயிரம் பேர்களை யெகோவாவைத் துதிப்பதற்கென தான் செய்துவைத்திருந்த இசைக்கருவிகளுடன் யெகோவாவைத் துதிக்கவும் வேண்டும் என்று வகை செய்தான்.
1 *நாளாகமம் 23:5*

தேவனை பாடல்கள் மூலம் துதிப்பதற்கு 4000 நபர்களை பிரித்தெ டுத்தான்.

அந்த 4000 லேவியர்களுக்கும் தானே
இசைக் கருவியை உருவாக்கி அவர்களுக்கு கொடுத்து தேவனை துதிக்க வைத்தான்.

இதை படிப்பதற்கே மகத்துவமாக இருக்கிறது.
பாடல்கள் மூலம் தேவனை துதிக்க வேண்டும் என்கிற ஒரு மிகப்பெரிய புரட்சியை முதல் முதலில் உருவாக்கியவன் இந்த தாவீது என்றால் அதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை.

அதுவரைக்கும் பலிகள் மூலமாக ஆராதிக்க இஸ்ரவேல் ஜனங்கள் அது முதற்கொண்டு பாடல்கள் மூலமாகவும் தேவனை ஆராதிக்க தொடங்கினார்கள்.

இந்தப் பழக்கம் எருசலேம் தேவாலயம் இடிக்கப்படுகின்ற காலம் வரை தொடர்ந்தது.

அதே பழக்கம் ஆதி திருச்சபையிலும் தொடர்ந்தது.

மோசேயினால்
கட்டளையிடப்படாத ஒரு பழக்கத்தை தாவீது ஆசரிப்பு கூடாரத்தில் உருவாக்கினான்.

அவன் தன்னுடைய மாமிச சிந்தனையில் இந்த புரட்சியை செய்யவில்லை. ஆவியானவரின் வழி நடத்துதலின்படி செய்ததாக தெரிகிறது‌.

28:11-13,19 ,2 நாளாக 29:25 ஆகிய வசனங்களை படித்துப் பார்த்தால் ‌ தாவீது இந்த சீர்திருத்தங்களை கடவுளுடைய சித்தத்தின்படி செய்தான் என்று விளங்கிக் கொள்ளலாம்.

கடவுளுடைய ஆலயத்தை கட்டாவிட்டாலும் அதற்கான முழு திட்டத்தையும் வழி வகுத்தவன் தாவீது.

பாரம்பரியங்களை தொடர வேண்டும் என்கிற சிந்தனை அவசியம் தான். தேவனுடைய சித்தத்தின் படி காலத்துக்கேற்ப மாறுவதிலும் எந்தத் தவறும் இல்லை.

எது எப்படியோ ஆராதனையில் மிகப்பெரிய புரட்சியை செய்தவன் தாவீது.

இன்றைக்கு நாம் சபைகளில் பாடல்கள் மூலம் தேவனை ஆராதிப்பதற்கு முன்னோடியாக திகழ்ந்தவன் தாவீது.
எனவே நம்முடைய தனிப்பட்ட ஆராதனைகளில் பாடல்கள் மூலம் எவ்வாறு தேவனை ஆராதிக்கிறோம் என்பதை இந்த நேரத்தில் நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
பாடல்கள் மூலம் தேவனை ஆராதிப்பதில் பெற்றுக் கொள்ளும் மகிழ்ச்சி ஒரு தனி மகிழ்ச்சி.
கடவுளுக்கு புது பாடல் பாடி அவரை தினமும் ஆராதிப்போம்.